Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

நீதி செத்தது

பள்ளிவாசல் நிலத்தை மூன்று பங்கு வைத்து இடித்தவனுக்கு இரண்டு, இழந்தவனுக்கு ஒன்று என்ற 2010 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்ட போதும் அதற்கு முன்னரும் பீஜே எழுதிய கண்டனப்பதிவு இப்போது உள்ள தீர்ப்புக்கும் பொருந்துவதால் அதை மீண்டும் வெளியிடுகிறோம்.

பாபர் மசூதி வழக்கில் இப்போது வழங்கப்பட்டது போன்ற சட்டத்துக்கும்,  தர்மத்துக்கும்  எதிரான  தீர்ப்பு   உலக வரலாற்றில்  இதற்கு  முன்  எப்போதும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அலஹாபாத் நீதிமன்றம் நீதியை அப்பட்டமாகக் குழி தோண்டிப் புதைத்து சமாதி கட்டி விட்டது.

முஸ்லிம்கள் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பார்கள் என்றால் அதன் பொருள் அத்தீர்ப்பு சட்டப்படி வழங்கப்பட்ட வேண்டும் என்பது தான்.

இந்தத் தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை.

ராமர் அங்கு தான் பிறந்தார் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதைக் கண்டு உலகமே காரித் துப்புகிறது.

கோடனு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒருவர் இந்த இடத்தில் தான் பிறந்தார் என்று ஒருவன் கூறினால் அவன் மன நோயாளியாகத் தான் இருப்பானே தவிர அறிவு நிரம்பிய நீதிபதியாக இருக்க மாட்டான்.

ராமர் அங்கே பிறந்தார் என்பதைச் சட்டப்படி இவர்கள் நிரூபிக்க முடியுமா? அப்படியே அவர் அங்கே பிறந்திருந்தால் அதனால் அந்த இடத்திற்கு அவர் உரிமையாளராகி விடுவாரா? இப்படித் தான் இனி மேல் சிவில் வழக்குகளுக்கு இந்த நாட்டில் தீர்ப்பு அளிக்கப்படுமா?

அண்ணன் தம்பிகளுக்கு இடையில் சண்டை வந்தால் இது இவனுக்கு அது அவனுக்கு என்று தீர்ப்பு அளிப்பதில் அர்த்தம் இருக்கிறது.

பங்காளிகளாக இல்லாத இருவர் ஒரு சொத்து குறித்து வழக்கு கொண்டு வந்தால் ஆக்ரமித்தவனுக்கு இரண்டு ஆகரமிக்கப்பட்டவனுக்கு ஒன்று எனத் தீர்ப்பு அளிப்பதில் என்ன சட்ட அம்சம் இருக்கிறது? தாதாக்களின் கட்டப் பஞ்சாயத்து இதை விட சிறப்பானதாக இருக்கும்.

எட்டப்பன் போன்றவர்களுக்கு வரலாற்றில் ஒரு இடம் உண்டு. அது போல் சட்டத்தை மீறி அப்பட்டமாக அநீதி இழைத்த நீதிபதிகள் என்ற பெயர் இந்த நீதிபதிகளுக்கு வரலாற்றில் கிடைப்பது உறுதி.

பள்ளிவாசல் முஸ்லிம்களிடம் இருந்ததையும், அது அப்பட்டமாக இடிக்கப்பட்டதையும் உலகமே பார்த்துக் கொண்டிருந்தது. அந்த உலகம் இந்தியாவின் மீதும் இந்த தீர்ப்பை வழங்கியவர்கள் மீதும் காரித்துப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

நாங்கள் நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட மாட்டோம் என்று கூறி வந்த சங்பரிவாரம் இத்தீர்ப்புக்கு முன்னர் அமைதி காக்க வேண்டும் என்று கூறியதும், எங்களுக்குச் சாதகமாகத் தான் தீர்ப்பு வரும் என்று கூறியதும் இது பேசி வைக்கப்பட்ட தீர்ப்பு என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் விருப்பம் சட்ட விரோதமாக இருந்தாலும் அது சட்டத்தின்படி அங்கீகரிக்கப்படும். முஸ்லிம்களின் சட்டப்படியான உரிமைகளாக இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் அதை விரும்பாவிட்டால் அது சட்ட விரோதமானதாகக் கருதப்படும் என்ற செய்தி சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் முஸ்லிம்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது.

இனிமேல் முஸ்லிம்கள் இது போன்ற பிரச்சனைகள் வந்தால் நீதிமன்றம் சென்று முறையிடலாம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நீதிமன்றம் சென்று பல ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி கடைசியில் நம் தலையில் நாம் மண்ணை அள்ளிப்போட வேண்டுமா என்ற முடிவுக்கு முஸ்லிம்கள் நிச்சயம் வந்திருப்பார்கள்.

இத்தீர்ப்பு மூலம் முஸ்லிம்களின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்து விட்டது.

இனி மேல் நாம் ஏன் விசுவாசமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படுமானால் அதற்கு அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள். இந்த நீதிபதிகளே பொறுப்பாவார்கள்.

நீதிமன்றங்களில் முஸ்லிம்கள் எப்போதே நம்பிக்கை இழந்து விட்டனர் என்பதையும் இது போல் காவித் தீர்ப்பு தான் வரும் என்பதையும் சென்ற மாதம் உணர்வு தலையங்கத்தில் நான் சுட்டிக் காட்டினேன்.

அது தான் இப்போது நடந்துள்ளது.

அந்தத் தலையங்கம் இது தான்

பாபர் மசூதி வழக்கு நீதி கிடைக்குமா?

பாபர் மசூதி நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு விசாரணை முழுமை பெற்று விட்டது. அனேகமாக இந்த மாதம் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரம் கருதுகிறது.

தீர்ப்பு அளிக்கப்பட்ட உடன் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்காக அமைச்சரைவையில் ஆலோசனை நடக்கிறது. அனைத்து மாநிலங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. உளவுத்துறை மூலம் இந்துக்களின் மனநிலை முஸ்லிம்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று தகவல்கள் திரட்டப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள சிவில் சட்டப்படி தீர்ப்பளிப்பதாக இருந்தால் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க ஒரு மாத காலமே போதுமானதாகும். ஆதாரங்கள் அவ்வளவு தெளிவாக உள்ளன. ஆனால் நீதிமன்றங்கள் இந்த வழக்கில் சரியான நீதி வழங்கும் என்ற நம்பிக்கையை முஸ்லிம்கள் என்றோ இழந்து இழந்து விட்டனர்.

ஏராளமான நீதிபதிகள் சட்டத்தின் படி தீர்ப்பளிக்காமல் தாங்கள் சார்ந்துள்ள மத உணர்வுக்கும், இன உணர்வுக்கும் ஏற்றவாறு தான் தீர்ப்பு அளிப்பதை நாம் காண்கிறோம்.

இதற்கு ஒன்றல்ல இரண்டல்ல; ஆயிரக்கணக்கில் உதாரணங்கள் உள்ளன.

பாபர் மஸ்ஜிதில் நள்ளிரவில் சிலை வைக்கப்பட்டது. அதைக் காரணம் காட்டி பள்ளிவாசலுக்கு பூட்டு போட்டது நமது நாட்டு நீதியரசர்கள் உத்தரவின் படி தான்.

பூட்டப்பட்ட பள்ளிவாசலில் வைக்கப்பட்ட சிலைகளுக்கு பூஜை நடத்துவதற்காக அதைத் திறந்து விட வேண்டும் என்று தீர்ப்பு அளித்தவர்களும் நமது நாட்டின் நீதியரசர்கள் தான்.

நீதிமன்ற உத்தரவை மீறி பள்ளிவாசலை இடித்த அத்வானியின் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோர்ட் கலையும் வரை சிறைத் தண்டனை வழங்கி நீதியைக் கட்டிக் காத்ததும் நமது நீதிமான்கள் தான்.

பாபர் மசூதி வழக்கில் மட்டும் அல்ல. எண்ணற்ற வழக்குகளில் தங்களின் ஒரு தலைப்பட்சமான போக்கை நமது நாட்டு நீதிபதிகள் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளனர்.

இந்துத்துவா என்பது அரசாங்கத்தின் கொள்கையாக இருக்க முடியாது என்று பாஜக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.

இந்துத்துவா என்பது மதத்தைக் குறிக்கும் சொல் அல்ல; அனைத்து மதத்துக்கும் பொதுவான சொல் தான் என்று தீர்ப்பளித்த காவிபதிகள் நமது நாட்டு நீதிபதிகளாக உள்ளனர்.

ஒரு முஸ்லிம் குடும்பத்தின் விவாகரத்து வழக்கு வந்த போது அந்த வழக்குக்குச் சம்மந்தமில்லாமலும், சட்ட விரோதமாகவும் பொதுசிவில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டவர்களும் நீதிமான்களாக உள்ளனர்.

ஒரு குற்றவாளி கொடுத்த வாக்கு மூலத்தைக் காரணம் காட்டி ஊணமுற்ற அப்துல் நாசர் மதானியைக் கைது செய்யச் சொல்வதும், நாட்டில் ஏராளமான பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்திய இன்னும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற பால் தாக்கரே, ராஜ்தாக்கரே, முத்தாலிக் போன்றவர்களை நோக்கிச் சுண்டு விரலைக் கூட நீட்ட வக்கற்றவர்களாக இருப்பதும் நமது நீதிபதிகள் தான்.

12  ஆண்டுகள், 14 ஆண்டுகள் வெறும் விசாரணைக் கைதிகளாக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களின் வழக்கில் தொடர்ந்து ஜாமீன் மறுத்து உலக அரங்கில் மதவறி பிடித்த நாடாக அடையாளம் காட்டியதும் நமது நீதிபதிகள் தான்.

உலகில் எந்த நாட்டிலும் குற்றம் நிரூபிக்காமல் இவ்வளவு காலம் யாரும் சிறை வைக்கப்பட்டதில்லை. சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த முஸ்லிம்களைத் தவிர வேறு எந்த இயக்கத்தினருக்கும் நீதிமன்றங்கள் இத்தனை ஆண்டுகள் ஜாமீன் வழங்க மறுத்ததில்லை.

அன்ஸாரி ஆஃதாப் அஹ்மது என்பவர் இந்திய விமானப்படை ஊழியராவார். அவர் இஸ்லாம் கூறும் மதச் சட்டப்படி தாடி வைக்க அனுமதி மறுக்கப்பட்டார். இராணுவத்தில் மத அடையாளம் கூடாது என்பது இதற்குச் சொல்லப்பட்ட காரணம்.

இதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தை அணுகினார். சீக்கியர்கள் மட்டும் மத அடையாளத்துடன் இராணுவத்தில் இருக்கலாம் என்றால் முஸ்லிம்களுக்கு மறுப்பது என்ன நீதி? என்று அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார். சீக்கியர்களுக்கு உள்ள அந்த உரிமையை முஸ்லிம்களுக்கு வழங்க நீதிமன்றம் மறுத்து மதச் சார்பின்மையைப் பேணிக்காத்தது.

மத்தியப் பிரதேசத்தில் ஸலீம் என்ற மாணவர் தாடியுடன் பள்ளிக் கூடம் சென்ற போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிலுவை அணிந்து கொண்டும், நெற்றியில் பொட்டு, திரு நீறு இட்டுக் கொண்டும் வரலாம் என்றால் தாடி வைத்துக் கொண்டு வருவதைத் தடுப்பது என்ன நீதி என்று கருதி அவர் நீதிமன்றத்தை அணுகினார். இஸ்லாம் மார்க்கத்தை பேணுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. இதைத் தடுக்க அரசுக்கு உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார். அவரது மத உரிமைக்கு எதிராகவே உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டது.

அது மட்டுமின்றி தாடி வைப்பது பர்தா அணிவது போன்ற தாலிபானிசத்தை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று மத துவேசத்துடன் உச்ச நீதி மன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு தீர்ப்பின் போது குறிப்பிட்டார். இவர் கூறியதற்கு எந்தச் சட்ட ஆதாரமும் இல்லை.

இஸ்லாத்துக்கு எதிராக இவர்கள் உள்ளத்தில் எத்தகைய விஷம் ஊற்றப்பட்டுள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாக உள்ளது.

பின்னர் இதற்காக மார்கண்டேய கட்ஜு மன்னிப்பு கேட்டார்.

உலக நாடுகளில் இவரது நச்சுக் கருத்துக்கு எதிரான பிரச்சாரம் இல்லாதிருந்தால் இதற்காக இவர் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டார்.

சென்னையில் ஒட்டகம் குர்பானி கொடுக்க ஒரு நீதிபதி தடை விதித்தார். தடையை மீறி ஒட்டகம் குர்பானி கொடுக்கப்படும் என்று நாம் அறிவித்ததால் மறுநாள் தீர்ப்பு மாற்றிக் கூறப்பட்டதை நாம் மறந்து விட முடியாது.

கற்பழிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த முதியவர் ஒருவரை முன்னதாகவே நீதிமன்றம் விடுதலை செய்தது. அதோடு நிறுத்திக் கொள்வதை விட்டு விட்டு இனி மேல் ஒழுங்காக சாமி கும்பிட வேண்டும். பூஜை செய்ய வேண்டும் என்று தனது மத நம்பிக்கையை இதில் நீதிபதி நுழைக்கிறார். பூஜை செய்பவர்கள் தான் அதிகம் குற்றம் புரிகிறார்கள் என்பது கூட இவருக்குத் தெரியவில்லை என்பது கூடுதல் விபரம்.

சென்னையில் முக்கிய பிரமுகர் வீட்டு விவாகரத்து வழக்கில் தீர்ப்பளிக்கும் போது காஞ்சி சங்கராச்சாரியார் அறிவுரைகளைக் கேட்டு தம்பதிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளிக்கிறார்.

சட்டத்தை விட இவர்களின் மத வெறியே இவர்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது. ஆனால் இவர் இவ்வாறு கூறிய சில மாதங்களில் சங்கராச்சாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டது தனி விஷயம்.

ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு அற்பமான அளவுக்குத் தனி இட ஒதுக்கீடு அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது சட்ட விரோதம் என்று ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடும் என்றும், மத அடிப்படையில் கூடாது என்றும் கூறுவதற்கு எந்தச் சட்ட நியாயமும் இல்லை. சாதி என்பதே மதத்தின் ஒரு அங்கம் தான். ஆனாலும் முஸ்லிம்கள் என்பதால் நீதிபதிகளுக்கு மூளையும் வரண்டு விடுகிறது.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவருக்குக் கூட ஜாமீன் வழங்காத நீதிமன்றங்கள் அதற்கு முன் 19 முஸ்லிம்களைக் கொன்று, குண்டு வெடிப்புக்குத் தூண்டிய அனைவருக்கும் உடனே ஜாமீன் வழங்கி நீதியை நிலை நாட்டின.

நாட்டில் நடக்கும் காதல் கள்ளக் காதல் ஆகியவற்றுக்கு ஆதரவாகவே நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து வருகின்றன. ஆனால் கேரளாவில் முஸ்லிம் இளைஞனைக் காதலித்த இந்துப் பெண் முஸ்லிமானாள். இதை விசாரித்த கேரள நீதி மன்றம் லவ் ஜிஹாத் என்ற பெயரில் ஒரு கும்பல் செயல்படுகிறது என்றும், கட்டாய மத மாற்றத்தைத் தடை செய்ய வேண்டும் எனவும் மத வெறித் தீர்ப்பை அளித்தது.

வட்டியில்லா கடனை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய வங்கியை கேரள அரசு துவக்க இருந்த போது அதில் தலையிட்டு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

தடை செய்யப்பட்ட சங்பரிவாரத்தின் ஆர் எஸ் எஸ் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட  தடையை நீக்கிய நீதி மன்றங்கள் சிமி என்ற இயக்கத்திற்கு மட்டும் பாரபட்சமான நீதியை வழங்கியது.

குஷ்புவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதிகள் பகவான் கிருஷ்னரும், ராதையும் திருமணம் செய்யாமல் வாழ்ந்துள்ளதால் குஷ்பு கூறியது தவறில்லை என்று கூறினார்கள். சட்டத்தை மட்டும் சொல்லி தீர்ப்பளிக்காமல் புராணத்தை மேற்கோள் காட்டுவது தான் மதச் சார்பின்மையா?

இப்படி பட்டியல் நீள்கிறது. இது போல் தான் பாபர் மசூதி வழக்கையும் நீதிமன்றம் கையாளுமோ என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு உள்ளது.

ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதை விசாரிக்க ஆவணமும், அனுபவ பாத்தியதையும் தான் தேவை. ஆனால் அகழ்வாராய்ச்சி செய்து அந்த இடத்தில் ஏதாவது ஒரு காலத்தில் கோவில் இருந்ததா என்று விசாரிக்க நீதி மன்றம் உத்தரவிட்ட போதே தனது நேர்மையை சந்தேகத்துக்கு உள்ளாக்கி விட்டது.

ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்பது சட்ட விரோதமானது. எந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தாலும் ஏதாவது கிடைக்கத் தான் செய்யும். கடுகளவு அறிவு உள்ளவன் கூட செய்யத் தயங்குவதை நீதிமன்றம் செய்தது. இப்படி எல்லா சிவில் வழக்குகளிலும் குழி தோண்டிப்பார்க்கும் படி தீர்ப்பளிப்பது நீதிபதிகள் தீர்ப்பளீப்பது இல்லை.

எனவே பாபர் மசூதி வழக்கில் நீதிமன்றம் சட்டத்தின் படி தீர்ப்பளிக்குமா? தனது உணர்வுக்கு ஏற்பத் தீர்ப்பளிக்குமா என்பது தீர்ப்பு வந்தால் தான் தெரியும்.

நீதிபதிகளிடம் காவிச் சிந்தனையும், மதவெறியும் உள்ளதாகக் கூறுவது அனைத்து நீதிபதிகளைப் பற்றிய பொதுவான கருத்து அல்ல. நியாயத் தராசை சரியாகப் பிடிக்கும் நீதிபதிகள் பலர் உள்ளனர். அது போல் நாம் சுட்டிக்காட்டியது போல் மதத்துவேஷம் உள்ளவர்களும் கனிசமாக உள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

முஸ்லிம்களுக்கு உரிய நியாயம் நீதிமன்றத்தில் கிடைத்தாலும் அதைச் செயல் படுத்தும் திராணி மத்திய அரசுக்கு நிச்சயம் இருக்காது. ஏதாவது சாக்கு போக்கு சொல்லி இழுத்தடிக்கவும் மேல் முறையீடு என்ற பெயரில் இன்னும் காலம் கடத்தவும் மத்திய அரசு திட்டமிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆட்சி செய்பவர்களும் சரி இல்லை. நிதிபதிகளிலும் காவிகள் மலிந்து விட்டனர். இந்த நிலையில் இம்மாதம் அளிக்கப்படும் தீர்ப்பின் காரணமாக ஒரு பிரயோஜனமும் முஸ்லிம்களுக்கு ஏற்படாது என்ற சந்தேகத்தை அரசும் நீதித் துறையும் நீக்குமா?

Published on: October 1, 2010, 4:55 PM

 

சிறைவாசிகளுடன் விவாதிக்கத் தயாரா?

அஸ்ஸலாமு அலைக்கும்! அன்புள்ள சகோதரர் பி.ஜே.அவர்களுக்கு, தங்களின் ஆன்லைன்-ல் சிறைவாசிகளால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் என ஒரு பொய்யான தகவலை வெளியிட்டு, பொது மக்களிடம் திருவிடைச்சேரி சம்பவத்தால் ஏற்பட்ட அவப் பெயரை மறைத்து போலியான அனுதாபம் பெறவும், அல்லது மேற்கண்ட படுகொலை சம்மந்தமாக தாங்கள் பழி தீர்க்கபடலாம் என அஞ்சி அதற்கென போலீஸ் பாதுகாப்பு பெற முடிவு செய்து நீங்கள் நடத்தும்

நாடகம் தான் என தங்களை நன்கரிந்தவர்களுக்கு தெரியும்..

இதற்கு ஏன் சிறைவாசிகளை வம்புக்கு இழுக்கின்றீர்கள்? உங்களால் உசுப்பேற்றபட்டு, அதன் பலனால் பல வருடம் சிறை வாசத்தில் நொந்து போயிருக்கும் எங்களை ஏன் மீண்டும் நொம்பலப்படுத்துகிறீர்கள்! உங்களைப்போல் முஸ்லிம்களை கொல்ல நாங்கள் முட்டாள்கள் இல்லை! மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து துரோகி என அறியப்பட வேண்டுமே தவிர தியாகி என மரணித்து விட கூடாது.

நபிகள் நாயகம் வாழ்ந்த காலம் வரை அவர்களின் எந்த தோழரும் அவர்களை விட்டுப் பிரிந்து செல்லவில்லை! நீங்கள் வாழும் போதே உங்களுக்காக உயிரை கொடுக்கத் தயாராக இருந்த தோழர்கள் அனைவரும் வெளியேறி விட்ட அவல நிலை! இது தொடரும்! இன்று உங்களோடு அறியாமல் உள்ள சகோதர்களும் விரைவில் உங்களை பற்றி புரிந்து வெளியேறும் நிலை இன்ஷா அல்லாஹ் வரும்.

அன்று உங்களின் செயல்களுக்காக வருந்தி அழும் காலம் வரை நீங்கள் வாழ வேண்டும்! அனைத்திற்கும் காரணமான நீங்கள் உத்தமர் போல் தங்களைக் காட்டிக் கொள்வதேன்? உங்களுக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால் அனைத்து பிரச்சனைகளையும் நேரடியாக விவாதிக்கத் தயாரா? நீங்கள் விவாதம் செய்வதில் வல்லவராக இருக்கலாம்! ஆனால் எங்களிடம் சத்தியம் உள்ளது! இன்ஷா அல்லாஹ் அந்த பொது விவாதத்தில் நீங்கள் சமுதயாத்திற்கு செய்த துரோகத்தையும் சிறைவாசிகளுக்கு இழைத்ததை விவாதிக்க நாங்கள் தயார்! நீங்கள் தயாரா?

இப்படிக்கு-தடா.அப்துர்ரஹீம் ,ஏர்வாடி.காசிம், அலி அப்துல்லாஹ்.

இதற்கு உங்கள் பதில் என்ன ?

இப்படி ஒரு செய்தியை அனுப்பி ரபீக் என்ற சகோதரர் விளக்கம் கேட்டுள்ளார்.

இதில் உள்ள அலி அப்துல்லாவும், தடா ரஹீம் என்பவரும் ஆரம்பம் முதலே எனக்கு எதிரிகளாகத் தான் தெரியும். அவர்களுடன் இணக்கமான எந்த உறவும் எனக்கு இருந்ததில்லை. ஏர்வாடி காசிம் மட்டும் தான் எனக்கு எதிரியாக இல்லாமல் இருந்தவர்.

நாம் யாருடனும் எது குறித்தும் விவாதிக்கத் தயார். அதற்கான காரணம் இருக்க வேண்டும். நான் காட்டிக் கொடுத்தேன் என்று புலம்பக் கூடியவர்கள் அதற்கான ஆதாரத்தை வெளியிட்டு அதற்குப் பதில் சொல்லும் நிலை ஏற்படுத்தினால் தான் விவாதம் செய்யும் தேவை ஏற்படும்.

இன்னின்ன துரோகம் செய்தாய்! அதற்கான ஆதாரம் இது என்று தெளிவுபடுத்தி விட்டுத் தான் விவாத அழைப்பு விட வேண்டும். மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான் என்று போகிற போக்கில் உளறக் கூடியவர்கள் விவாதத்துக்கு அழைக்கவில்லை. மாறாக ஸ்டண்ட் அடிக்கின்றனர். முதுகெலும்பு உள்ளவர்களாக இருந்து என்னை நிஜமாகவே விவாதத்துக்கு அழைப்பதாக இருந்தால் எது குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை விரிவாக பட்டியல் போட்டுச் சொல்ல வேண்டும்.

பீஜே காட்டிக் கொடுத்தார் என்றால் யாரைக் காட்டிக் கொடுத்தார்? என்பதையும் சொல்ல வேண்டும்.

காட்டிக் கொடுத்ததை நிரூபிக்க நான் தயார் என்றும் கூற வேண்டும்.

இப்படி விபரமாகப் பட்டியலை வெளியிட்டு ஒவொன்றையும் நிரூபிப்பதாகப் பொறுப்பேற்றுக் கொண்டு அழைப்பு விட வேண்டும்.

சிறைவாசிகளுக்குத் துரோகம் செய்தேன் என்று குற்றம் சாட்டினால் என்ன துரோகம்? யார் யாருக்கு செய்த துரோகம் என்று பட்டியல் போட்டு விட்டு விவாதிக்கத் தயாரா என்று அழைக்க வேண்டும்.

அது தான் விவாதத்துக்கு அழைக்கும் முறை.

அது போல் இவர்கள் செய்த கட்டப் பஞ்சாயத்து, பண வசூல் போன்றவைகளையும் ஒரு தலைப்பாகச் சேர்க்க வேண்டும். அபோது தான் இவர்களைப் பற்றி நான் அம்பலப்படுத்தும் நிலை ஏற்படும். எனவே இதற்கேற்றவாறு விவாத அழைப்பை விடட்டும்.

அனைத்தையும் ஒன்று விடாமல் விவாதிக்க நான் தயார்.

பணம் திரட்டுவதற்காக இப்போது இவர்கள் எடுத்துள்ள புது அவதாரம் உள்ளிட்ட அனைத்தையும் அமபலப்படுத்தும் வாய்ப்பாக இது அமையும்.

என் பக்கம் சத்தியம் இருக்கிறது. இதிலும் இவர்கள் தான் தோற்பார்கள். இன்ஷா அல்லாஹ்

இது தான் எனது பதில்.

சிறைவாசிகள் குறித்த முழு விபரம் அறிய

Published on: September 23, 2010, 9:56 PM

நாத்திகரின் கேள்வியும் நமது பதிலும்

நாத்திகர்களின் கேள்விகள் சிலவற்றை ஒரு இனிமை என்ற சகோதரர் நம்க்கு அனுப்பி பதில் கேட்டுள்ளார். அந்தக் கேள்விகலூம் அதற்கான பதில்களும் கீழே

அஸ்ஸலாமு அலைக்கும் அருண்ராஜ் என்பவர் செங்கொடியின் தளத்தில் சில கேள்விகளை கேட்டு பின்னூட்டமிட்டிருந்தார்.

அவைகள் கீழே,

//1.இபிலீஸை ஏன் அல்லாவால் அழிக்க முடியவில்லை!?

2.எல்லாம் தெரிந்த கடவுளுக்கு ஏன் ஒரே வேத புத்தகத்தில் விசயத்தைச் சொல்ல முடியவில்லை!?

3.சகல சக்தி வாய்ந்த கடவுளுக்கு உலகைப் படைக்க ஏன் ஏழு நாட்கள் ஆயிற்று!?

4.இந்த உலகைப் படைத்தது கடவுள் என்றால், அந்த கடவுளைப் படைத்தது யார்!?

5.கடவுள் தான் தோன்றி என்றால் இந்த உலகம் ஏன் தான் தோன்றியாக இருக்கக் கூடாது!?

இதுல அஞ்சு கேள்வி இருக்கு, பதில் சொல்லுங்க, வரிசையா கேட்டுகிட்டே இருக்கேன்!

என்று கேட்டுள்ளார்.

இதற்கு நேரடி விவாதத்திற்கு அவரையும் அவரைச் சேர்ந்தவங்களையும் அழைத்து வரச் சொன்னதற்கு TNTJ தலைமையகத்தை தொடர்பு கொள்ளச் சொல்லி முகவரியையும் கொடுத்ததற்கு நான் எந்த இயக்கத்தை சேர்ந்தவனும் இல்லை தனி ஒருவனாக வருகிறேன் என்று தன்னுடைய பெயரையும், மொபைல் நம்பர் 9994500540 யும் தந்து

//ஈரோட்டுக்கு வந்து போன் செய்தால் பொது இடத்தில் சந்திக்கலாம்!, அல்லது ஈரோட்டில் இருக்கும் உங்கள் ஜமாத்தில் கூட!

வீட்டில் தான் விவாதிக்க வேண்டும் என கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன்! என்று பதில் தந்துள்ளார்.

இது தங்கள் மேலான பார்வைக்கு.

நமது பதில்

நாத்திகர்கள் அனைவரின் கோளாறும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்பது இதில் இருந்து தெரிகிறது. அதாவது எதையும் அரை குறையாகப் புரிந்து கொள்வது தான் அந்தக் கோளாறு.

மேற்கண்ட கேள்விகள் அனைத்திலும் அது தான் தெரிகிறது.

இப்லீஸை அழிக்கவில்லை என்பதற்கும், அழிக்க இயலவில்லை என்பதற்கும் அவருக்கு வித்தியாசம் தெரியவில்லை.

நமக்கு இயலுமான அனைத்தையும் நாம் செய்ய மாட்டோம். நமக்கு இயலுமான விஷயத்தில் நமக்கு எது விருப்பமோ அதைத் தான் செய்வோம். இப்லீஸை அல்லாஹ்வுக்கு அழிக்க முடியவில்லை என்று குர்ஆன் எந்த வசனத்தில் கூறி இருக்கிறது என்பதற்கு அவரிடம் ஆதாரம் கேளுங்கள்.

நம்மால் ஒழிக்க முடிந்தாலும் சிலரை நாம் விட்டுப் பிடித்தால் ஒழிக்க முடியவில்லை என்று எப்படி அர்த்தமாகும்? அதைத் தான் அரைகுறை என்கிறோம்.

இரண்டாவது கேள்வியும் இதே அரைவேக்கட்டுத் தனத்துடன் தான் உள்ளது. ஒரே வேதப்புத்தகத்தில் என்னால் சொல்ல முடியாததால் பல வேதங்களில் சொல்லி இருக்கிறேன் என்று அல்லாஹ் கூறினால் தான் இப்படி கேட்க முடியும்.

இவர் ஐந்து கேள்விகள் மட்டும் கேட்கிறார்? அவரிடம் உள்ள எல்லாக் கேள்விகளையும் ஒரே மூச்சில் ஏன் கேட்கவில்லை?

மக்கள் மனதில் நன்றாகப் பதிய வேண்டும் என்பதற்காக வாரம் ஒரு கேள்விக்குப் பதில் சொன்னால் ஐந்துக்கும் ஒரே நேரத்தில் பதில் சொல்ல முடியவில்லை என்று ஆகுமா? அதை நான் விரும்பவில்லை என்று ஆகுமா?

இங்கேயும் அதே அறைகுறை தான் வெளிப்படுகிறது.

நமக்கு ஐம்பது கிலோ எடையுள்ள பொருளைத் தூக்க முடியும். ஆனால் தேவைக்கேற்ப சிறிது சிறிதாகத் தூக்கினால் நமக்கு ஐம்பது கிலோ எடையை நமக்குத் தூக்க முடியவில்லை என்று அர்த்தமா? ஐம்பது கிலோ தூக்க உனக்கு சக்தி இருந்தால் ஏன் கொஞ்சம் கொஞ்சமாகத் தூக்க வேண்டும்? என்று எந்த மனிதரிடமாவது இவர் கேட்பாரா?

நாலாவது மற்றும் ஐந்தாவது கேள்விகளுக்குத் தான் நாத்திகர்களுடன் நடந்த விவாதத்தில் நிரூபித்துள்ளோம். அதை பார்க்கச் சொல்லவும்.

நாத்திகர்களுடன் விவாதம்

அதில் நாம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லச் சொல்லவும்.

கடவுள் உலகைப் படைக்கவில்லை என்று கூறும் இவர்களும் ஒரு இடத்தில் நிறுத்தி விடுகிறார்கள்.

ஒரு அணு வெடித்து இந்த உலகம் உண்டானது என்று நாத்திகர்கள் கூறுகிறார்கள்.

அந்த அணு எப்படி உண்டானது என்று கேட்டால் திரு திருவென முழிக்கிறார்கள்.

ஒரு அணு தான் அனைத்துக்கும் மூலம் என்று முடித்துக் கொள்வதை விட மாபெரும் ஆற்றல் மிக்கவன் படைத்தான் என்று முடிப்பது தான் அறிவுப்பூர்வமானது.

எந்த ஒன்றையும் ஒரு இடத்தில் முடிப்பது தான் பகுத்தறிவு. இது கூட விளங்காமல் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார்.

அவர் தனி நபராக இருந்தாலும் அவர் நம்மை தொட்ரபு கொண்டு அவர் கேட்ட ஐந்து கேள்விகள் குறித்து முதலில் விவாதிக்க வரச் சொல்லுங்கள். நாம் தயாராக இருக்கிறோம்.

Published on: January 23, 2010, 4:08 AM

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பயன்படுத்தி புத்தகம் விற்கலாமா

கேள்வி : தவ்ஹீத் ஜமாஅத் பெயரைப் பயன்படுத்தி பீ.ஜே. தனது நூல்களையும் சி.டி.களையும் விற்கிறார். அதன் லாபத்தை ஜமாஅத்துக்குத் தராமல் அவரே எடுத்துக் கொள்கிறார் என்று தமுமுகவினர் சிலர் என்னிடம் கேட்கிறார்கள்.

அஷ்ஃபாக், தொண்டி

பதில் : என்னுடைய நூல்கள் எதையும் தவ்ஹீத் ஜமாஅத் பெயரைப் பயன்படுத்தி நான் விற்பதில்லை. என் பெயரை மட்டுமே பயன்படுத்துகிறேன். தவ்ஹீத் ஜமாஅத் என்ற இயக்கம் இல்லாத காலகட்டத்திலும் நூல்களை எழுதியுள்ளேன். அப்போது தான் அதிக நூல்களை எழுதியுள்ளேன். கடந்த மூன்றாண்டுகளாக தவ்ஹீத் ஜமாஅத்தின் பொறுப்பு மற்றவர்களிடம் இருந்த போதும் நூல் எழுதி வெளியிட்டு உள்ளேன். என்னுடைய எழுத்தினை வாசிக்க ஆசைப்படும் சகோதரர்கள் என்னுடைய பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டு அதை வாங்கிச் செல்கிறார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் இந்த நூலை வெளியிடுகிறது எனவே இதை வாங்குங்கள் என்று நான் கூறுவதில்லை. வாங்கும் மக்களும் அப்படிப் பார்ப்பதில்லை. நான் எந்த நூலுக்கும் யாருடைய மதிப்புரையையும் கூட வாங்குவதில்லை. இது தவ்ஹீத் ஜமாஅத்தின் அங்கீகாரம் பெற்றது எனவும் நான் எந்த நூலிலும் குறிப்பிடுவதும் இல்லை.

மேலும் சி.டி.யைப் பொறுத்தவரை நான் அந்த விற்பனையில் என்றும் இறங்கியதில்லை. என்னுடைய சிடிகளை யார் வேண்டுமானாலும் விற்கலாம் என்று பொது அனுமதி நீண்ட காலத்துக்கு முன்பே கொடுத்துள்ளேன். அதில் கிடைக்கும் ஆதாயம் அதை விற்பனை செய்தவர்களைச் சேருமே தவிர எனக்கு எதுவும் சேராது. அந்த வகையில் என்னுடைய சிடிகளை தவ்ஹீத் ஜமாஅத்தும் விற்பனை செய்வதால் அதன் லாபம் ஜமாஅத்துக்குக் கிடைக்கிறது. ஜமாஅத்தினால் எனக்கு ஆதாயம் எதுவும் இல்லை. இது குறித்து எனது இணையதளத்தில் மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதியுள்ளேன்.

20.10.2011. 8:14 AM

ஒத்துழையாமையும் நமது நிலையும்

ஒத்துழையாமை குறித்து நமது நிலைபாடு என்னவாக இருந்தது?

NRC எனும் குடியுரிமைப் பதிவேட்டுக்காக ஒரு முஸ்லிம் கூட எந்த ஆவணத்தையும் கொடுக்க மாட்டோம் என்று முடிவு செய்யுங்கள் என்று பீஜே முஸ்லிம் சமுதாயத்துக்கு வேண்டுகோள் விட்டார்.

இதற்கு சமுதாயத்தில் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கம் இது தவறு என்றும், ஜனநாயக நாட்டில் இந்தப் போராட்டம் கூடாது என்றும் கூறி மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்து வருகிறது.

ஆனால் ஒத்துழையாமை இயக்கமும் ஜனநாயக போராட்ட வழிமுறையில் ஒன்று என்பது தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையாக இதற்கு முன்னர் இருந்து வந்தது. இது குறித்து முன்னரே நாம் விளக்கியுள்ளதை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி உண்ர்வு இதழில் பீஜேயிடம் ஒத்துழையாமை குறித்து கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பீஜே பதில் அளித்து உணர்வு இதழில் வெளியிடப்பட்டது.

இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திலும் வெளியிடப்பட்டது.

நேற்று (26-12-2019) அன்று அதை நீக்கி விட்டனர்.

பிறை குறித்த ஹதீஸை வெளியிட்டு விட்டு அந்த ஹதீஸ் இவர்களின் பெருநாள் அறிவிப்புக்கு எதிராக இருந்த காரணத்தால் ஹதீஸையே நீக்கி அறிக்கையைத் திருத்தியவர்களுக்கு இது சாதாரண விஷயம் தான்.

அந்த கேள்வி பதில் இதோ:

உ.பி. படுகொலையைக் கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் பி.ஜே. பேசும் போது முஸ்லிம்களுக்கு எதிராக இதே நிலை தொடர்ந்தால் முஸ்லிம்கள் மீண்டும் ஒரு ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவார்கள் என்று கருத்துப்பட பேசினார். இந்தக் கருத்து சரிதானா? இந்தியாவில் இந்த நிலை சாத்தியமா? இது நடைமுறைக்கு ஒத்துவராத முறைபோல் உள்ளதே? ஒருவேளை இந்த நிலை ஏற்பட்டால் முஸ்லிம்கள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வார்களா? இதைத் தக்க காரணங்களுடன் விளக்கவும்.

-சாலிஹ், நெல்லை.

இன்றைய நிலையில் இருந்து யோசித்தால் ஒத்துழையாமை என்பது சாத்தியமில்லை. ஆனால் இன்று இருப்பதை விட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து, உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு தாங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் அப்போது இது சாத்தியமாகும்.

அந்த நேரத்தில் தங்களையும், தங்கள் உரிமைகளையும் காத்துக் கொள்ள எப்படிப்பட்ட போராட்ட வழிமுறைகளையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

அப்படிப்பட்ட நிலை வரும்போது தான் நாமும் அந்த அறிவிப்பை வெளியிடுவோம்.

இட ஒதுக்கீடு போராட்டத்தை நாம் துவக்கிய நேரத்தில் இது சாத்தியமற்ற கோரிக்கை என சகலராலும் விமர்சிக்கப்பட்டது. அந்த விமர்சனங்கள் எதையும் கண்டு கொள்ளாமல் வீதிகள் தோறும் விளக்கக் கூட்டங்கள் நடத்தினோம். அரசின் புறக்கணிப்பால் நேர்ந்த அவலங்களைப் புரிய வைத்தோம். இறைவனின் கிருபையால் எதிர்த்தவர்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டார்கள்.

அரசும் அதை அங்கீகரித்தது. ஒட்டுமொத்த சமுதாயமும் இப்போது அதன் பின்னே ஓடிக் கொண்டிருக்கிறது.

அவ்வளவு ஏன்? விடுதலைப் போராட்ட காலத்தில் ஒத்துழையாமை இயக்கம் வெற்றி பெற்றது எப்படி? அந்தக் காலத்து மக்களுக்கு ஆங்கில அரசு கொடுத்த நெருக்கடிகள் தானே அதற்குக் காரணம். அந்தக் கஷ்டங்கள் தானே அதை நோக்கி அவர்களைத் தள்ளியது.

அதுபோலத் தான் முஸ்லிம்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாகும் நிலை வந்தால் ஒத்துழையாமையைக் கையிலெடுப்போம். மக்களும் அதை வழிமொழிவார்கள்.

இன்ஷா அல்லாஹ்.

இதுதான் முன்னரே நாம் கொண்டிருந்த நிலைபாடு. அதற்கான நேரம் வந்து விட்டதால் உரிய நேரத்தில் பீஜே அறிவித்தார்.

நீங்கள் அரபுநாட்டு உதவி பெற்றதில்லையா?

அரபு நாட்டில் இருந்து எந்த நிதி உதவியும் பெறுவதில்லை எனக் கூறும் நீங்கள் திர்மிதி ஹதீஸ் நூலை மொழிபெயர்த்து வெளியிட்ட போது அதன் முன்னுரையில் அரபு மொழியில் பலரிடம் மதிப்புரை வாங்கி வெளியிட்டது அரபு நாட்டு பணத்துக்காகவா? மேலும் குவைத்துக்கு சில தாயிக்களை அனுப்பி அரபு நாட்டு உதவிபெற நீங்கள் முயற்சித்தது எதற்காக என்று தமுமுகவினர் சிலர் என்னிடம் கேட்கின்றனர். இது பற்றி நான் எவ்வாறு அவர்களுக்கு விளக்கம் கொடுப்பது?

- முஸம்மில், கோவை

இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. அரபு நாட்டில் அரபுகளிடம் வசூல் செய்ய நான் ஆட்களை அனுப்பி வைத்தேன் என்பது ஒன்று. திர்மிதி எனும் நூலில் அரபு மொழியில் மதிப்புரையும், முன்னுரையும் வாங்கி வெளியிட்டேன் என்பது இரண்டாவது குற்றச்சாட்டு. இந்த இரண்டுமே புளித்துப் போனதும் முன்னரே பதிலளித்ததுமான குற்றச்சாட்டுக்களாகும்.

அரபிகளிடம் நிதி திரட்ட நான் ஆட்களை அனுப்பினேன் என்ற குற்றச்சாட்டுக்கு பல முறை நான் பதில் கூறியுள்ளேன். இஸ்மாயீல் சலபி என்பவர் இந்தக் குற்றச் சாட்டைச் சுமத்தி இணைய தளங்கள் வழியாக பரப்பிய போது அதற்கு எனது இணையதளத்தில் 5-10-2009 அன்று விளக்கம் அளித்துள்ளேன். அதுவே இந்தக் கேள்விக்கு போதுமான பதிலாக அமைந்திருக்கும்.

பின்வருமாறு இஸ்மாயீல் சலபி கேள்வி எழுப்பி இருந்தார்.

அடுத்து, அனைத்துத் தவ்ஹீத் கூட்டமைப்பு என்ற பெயரில் இவர்கள் இயங்கிய போது, இவர்களது அப்போதைய தலைவரும், அதற்கடுத்த தலைவராகச் செயல்பட்ட, தற்போதும் இவரது அமைப்பில் உள்ள ஒரு ஆலிமும் 1999களில் குவைத்திலுள்ள லுஜினதுல் காரதில் ஹிந்திய்யா என்ற அமைப்பிடம் நிதி உதவி பெற முயற்சி செய்து முடியாமல் போனது. இது குறித்து நான் தங்கியிருந்த அறையில் இருந்துதான் அவர்கள் பேசித் திட்டங்கள் பலவும் தீட்டினார்கள். அரபுப் பணம் கிடைக்காதவர்கள் உள்நாட்டு வசூலை இலக்காகக் கொண்டு, சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்று நரி நாடகமாடுகின்றனர். இதுதான் உண்மையாகும்.

இப்படி அவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு நான் அளித்த பதில் இது தான்.

சொல்வதைத் தெளிவாகச் சொல்ல உங்களுக்குத் திராணி இல்லை. ஏனெனில் அவர்களில் ஒருவர் ஹாமித் பக்ரியாவார். இன்னொருவர் நமது ஜமாஅத்தில் இருக்கிறார் என்கிறார். (அவர் பெயர் சைஃபுல்லா ஹாஜா) எங்களிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை. எனவே அவர்கள் யார் என்பதையும் அது பற்றிய விபரங்களையும் நாமே உடைத்துச் சொல்வோம்.

நமது ஜமாஅத் சார்பில் வெளிநாட்டு உதவி வாங்குவதில்லை என்று முடிவு எடுத்தது முதல் அந்த நிலைபாட்டில் எங்களிடம் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் ஜமாஅத் சார்பில் அரபு நாட்டுப் பணத்துக்கு முயற்சித்து அது கிடைக்கவில்லை என்பதற்காக வெளிநாட்டு உதவி பெறும் நிலைபாட்டை நாங்கள் மாற்றிக் கொள்ளவும் இல்லை.

ஹாமித் பக்ரி அவர்கள் காயல்பட்டிணத்தில் இஸ்லாமியக் கல்விச் சங்கம் என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தினார். அது தவ்ஹீத் ஜமாஅத்தின் கீழுள்ள நிறுவனம் அல்ல. அதில் சைஃபுல்லாஹ் ஹாஜாவும் அங்கமாக இருந்தார். அதில் நான் அங்கம் வகிக்கவில்லை. இந்த நிலையில் அந்தக் கல்விச் சங்கத்தினர் ஆலோசனை செய்து தவ்ஹீத் ஜமாஅத் தான் வெளிநாடுகளில் உதவி வாங்காது. நாம் சுயேட்சையான நிறுவனம் தானே? நாம் உதவி வாங்கினால் என்ன என்று ஆலோசித்து அதற்கான முயற்சியில் இறங்கினர். அதனடிப்படையில் வெளிநாடுகளுக்குக் கடிதங்கள் அனுப்பினார்கள். இலங்கை சென்ற போது ஜம்மியத்து அன்ஸாரிஸ் ஸுன்னா, ஷபாப் ஆகிய நிறுவனங்களிடம் பரிந்துரைக் கடிதம் கேட்டனர். இதில் எனக்கும் சம்மந்தமில்லை. தவ்ஹீத் ஜமா அத்துக்கும் சம்மந்தம் இல்லை.

இந்த விபரங்கள் சில நிர்வாகிகளுக்குத் தெரிந்த போது தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகக் குழுவில் விவாதித்தோம். அப்போது அனைவரும் இது சரியான நடைமுறை அல்ல என்று சுட்டிக் காட்டினர்கள். தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளாக உள்ளவர்கள் வேறு பெயரிலும் இது போன்ற உதவிகளைப் பெறக் கூடாது என்று முடிவு செய்தோம்.

இதன் பின் அம்முயற்சியைக் கைவிட்டு விட்டனர். இதைத் தான் பயங்கரமான விஷயம் போல் காட்டி எட்டாத பழம் புளிக்கும் என்பதால் அரபு நாட்டுப் பணத்தை வெறுத்ததாகக் கூறுகிறார். எட்டிய பழத்தையே நாங்கள் வேண்டாம் என்று சொன்னவர்கள்.

இதற்கு ஏராளமான நிகழ்வுகள் ஆதாரமாக உள்ளன. உங்களின் இந்த வாதமும் உருப்படியானதில்லை.

இன்னொன்றையும் இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். வெளிநாட்டில் உதவி வாங்கக் கூடாது என்பது ஆரம்பம் முதலே நான் கடைப்பிடித்த கொள்கை அல்ல. (ஜமாஅத்தின் கொள்கையும் ஆரம்பம் முதலே இப்படி இருக்கவில்லை.) ஆரம்பத்தில் நான் ஜாக் இயக்கத்தில் இருந்த போது அந்த இயக்கம் வெளிநாடுகளில் உதவி பெற்ற நிலையிலும் அதில் இருந்தேன். நான் அத்தகைய உதவிகளை மறுத்தேனே தவிர அந்த இயக்கம் உதவி பெற்றதை துவக்கத்தில் எதிர்க்கவில்லை. அதன் அடிப்படையில் தான் இஸ்மாயீல் சலபி கூட்டத்தினரின் அழைப்பை ஏற்று இலங்கையில் நடத்தப்பட்ட பல நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டேன்.

நாளடைவில் பணமே குறிக்கோளாகக் கொண்டு இவர்கள் செயல்படுவதைக் கண்டு வெறுத்த நான் அதன் பிறகு தான் இதை வெறுக்கலானேன். கஷ்டப்படும் சிலருக்காக நானே அந்தக் காலகட்டத்தில் ஏதாவது உதவி வாங்கிக் கொடுங்கள் என்று பலமுறை சொல்லி இருக்கிறேன், எழுதியும் இருக்கிறேன். பீஜே எழுதிய கடிதம் இருக்கிறது என்றெல்லாம் பயம் காட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். மற்றவர்களுக்காக நான் உதவி கேட்டு எழுதிய கடிதங்கள் நிறையவே உள்ளன. கமாலுத்தீன் மதனியிடம் கேட்டால் தருவார்.

இது தான் நான் அப்போது எழுதிய பதில்.

இப்படி பதில் எழுதி ஆண்டுகள் மூன்று ஆகப்போகிறது. இதுவரை இதற்கு எந்த மறுப்பும் யாரும் சொல்லவில்லை. வெளிநாட்டில் பணம் வசூலிப்பதற்காக ஹாமித் பக்ரியும், சைஃபுல்லாவும் உருவாக்கிக் கொண்ட இஸ்லாமியக் கல்விச் சங்கம் என்ற லட்டர்பேட் சங்கத்தில் நான் உறுப்பினராகவும் இருந்ததில்லை. அதை ஆதரிப்பவனாகவும் இருந்ததில்லை. என் கவனத்துக்கு வரும் போதெல்லாம் இதை நான் வன்மையாகக் கண்டித்துள்ளேன். என்மீது குற்றம் சுமத்துவோர் எனக்கு இதில் உடன்பாடோ, சம்மந்தமோ உண்டு என்று நிரூபிக்க வேண்டும்.

அடுத்ததாக திர்மிதி என்ற ஹதீஸ் நூலை வெளியிட்டது குறித்த கேள்விக்கு வருகிறேன்.

இதற்குப் பெரிய வரலாறே உள்ளது.

ஹாமித் பக்ரியும், சைஃபுல்லா ஹாஜாவும் அரபு நாடுகளுக்குச் சென்றனர். அவ்வாறு சென்ற போது அங்குள்ள மக்களிடம் ஒரு திட்டத்தை முன்வைத்தனர். அதாவது நாங்கள் ஹதீஸ் நூல்களைத் தமிழாக்கம் செய்து வெளியிடப் போகிறோம். அதில் நீங்கள் ஷேர் சேர்ந்தால் நல்ல இலாபத்துடன் முதலீட்டை திரும்பத் தருவோம் என்று அங்குள்ள மக்களிடம் இவர்கள் இருவரும் நிதி திரட்டினார்கள். அவர்கள் இருவரும் தவ்ஹீத் ஜமாஅத்தின் முதன்மை நிர்வாகிகளாக இருந்தாலும் மற்ற நிர்வாகிகளிடமோ, மூத்த அறிஞர்களிடமோ அவர்கள் இதற்காக எந்த ஒப்புதலும் பெறவில்லை. மேலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரில் அதை வெளியிடப் போவதாகவும் அவர்கள் சொல்லவில்லை. இஸ்லாமியக் கல்விச் சங்கத்தின் பெயரால் வெளியிடப் போவதாக மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி நிதிகளைத் திரட்டி வந்தனர்.

இப்படி பங்கு சேர்ந்தவர்களில் அதிகமானவர்கள் அற்பமான ஊதியத்தில் பணி புரியும் ஏழை ஊழியர்கள் தான். இப்படி பங்கு சேர்த்து விட்டு வந்து பல மாதங்கள் ஆன பின்னரும் நூல் வெளியிடும் எந்த முயற்சியிலும் அவர்கள் இறங்கவில்லை. பங்கு சேர்ந்தவர்கள் என்னிடமும் லுஹாவிடமும் தொலைபேசி வழியாக முறையிட்டனர். எழுத்து மூலம் புகார் அனுப்புங்கள். விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று நாம் சொன்னதால் பணம் கொடுத்த பலரும் புகார்களை அனுப்பினார்கள்.

அவர்கள் திரட்டிய தொகை சில லட்சங்களாகும். அது இப்போது எனக்கு நினைவில் இல்லை.

புகார்கள் வந்த பின்னர் உடனடியாக நிர்வாகக் குழுவைக் கூட்ட வற்புறுத்தி நிர்வாகக் குழுவும் கூட்டப்பட்டது. அனைவரும் ஹாமித் பக்ரியிடமும் சைஃபுல்லாவிடமும் விளக்கம் கேட்டோம். யாரைக் கேட்டு ஷேர் சேர்த்தீர்கள்? நீங்கள் ஜமாஅத்தின் தலைவர் மற்றும் செயலாளர் பொறுப்பில் இருந்து கொண்டு இப்படி திரட்டியது ஜமாஅத்தின் செயலாகப் பார்க்கப்படாதா? சரி! பணம் திரட்டி வந்து பல மாதங்கள் கடந்த பின்னரும் எந்த நூலையும் வெளியிட ஒரு முயற்சியும் செய்யாமல் இருப்பது ஏன்? உடனே அனைவருக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று நான் வற்புறுத்தினேன்.

இன்னும் ஒரு நிர்வாகியும் அவ்வாறு வற்புறுத்தியதாக நினைவு. ஆனால் அதிகமான நிர்வாகிகள் பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டாம். உடனே ஹதீஸ் நூலை வெளியிட்டு இவ்விருவரும் கொடுத்த வாக்கை அனைவரும் சேர்ந்து காப்பாற்றுவோம் என்று கூறினார்கள். இவ்வாறே முடிவு எடுக்கப்பட்டது.

இவர்கள் சொன்னபடி அபூதாவூதை வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. லுஹா அவர்கள் 300 ஹதீஸ்கள் மொழிபெயர்த்து வைத்து இருந்தார். மேலும் 700 ஹதீஸ்கள் மொழி பெயர்த்து 1000 ஹதீஸாக வெளியிட எவ்வளவு நாட்கள் தேவைப்படும் என்று லுஹாவிடம் கேட்ட போது தனக்கு ஆறு மாதங்களாவது தேவைப்படும் என்று கூறி விட்டார்.

அப்படியானால் இன்னும் தாமதமாகி விடும். மக்களிடம் இன்னும் பேர் கெட்டுவிடும் என்று அனைவரும் கருதினார்கள். நான் திர்மிதி நூலை மொழி பெயர்த்து சொந்தமாக வெளியிட திட்டமிட்டு தயார் நிலையில் வைத்து இருந்தேன். பல மாதங்கள் கடுமையாக உழைத்து தயார் செய்து வைத்ததை எங்களிடம் தாருங்கள். நாங்கள் வெளியிடுகிறோம் என்று மேற்படி இருவரும் கேட்டனர். மற்ற நிர்வாகிகளும் இதை வற்புறுத்தினார்கள்.

அனைவரும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் நான் அவர்களுக்கு அதை வழங்கினேன்.

மேலும் திர்மிதியை வெளியிட்டு அதை முழுமையாக ஜமாஅத்தில் ஒப்படைத்து விட வேண்டும். அவை விற்பனையாவதற்கு ஏற்ப பணம் போட்டவர்களுக்கு ஜமாஅத் திரும்பக் கொடுக்கும். பணம் திரட்டியவர்கள் பட்டியலை ஜமாஅத்தில் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்தோம். அதன் படி திர்மிதி நூலை இஸ்லாமியக் கல்விச் சங்கம் தான் வெளியிட்டது.

இது குறித்து இஸ்மாயீல் சலபி என்பவர் கேட்ட போது பின்வருமாறு நான் பதில் அளித்தேன்.

இஸ்மாயீல் ஸலஃபி வாதம்:

அடுத்ததாக, நீங்கள் திர்மிதி நூலை மொழி பெயர்த்தீர்கள். அதை இஸ்லாமியக் கல்விச் சங்கம் வெளியிட்டது. அதன் பதிப்புரிமை உங்களுடையது. அதில் அன்ஸாரிஸ் சுன்னா, ஷபாப், மிமிஸிளி நிறுவனங்களின் அரபு அணிந்துரைகள் பெறப்பட்டுள்ளன. எதற்காக அரபு அணிந்துரைகள்? உங்கள் பாஷையில் சொல்வதானால், அரபியிடம் காட்டிச் சல்லி அடிப்பதைத் தவிர வேறு காரணம் கூற முடியுமா?

எனது பதில் :

திர்மிதி நூலை ஹாமித் பக்ரியின் கல்விச் சங்கம் தான் வெளியிட்டது; அதில் எனக்குச் சம்மந்தம் இல்லை என்று உங்களைப் போல் நான் கூற மாட்டேன். எனது மொழி பெயர்ப்பு என்பதாலும், என் பெயர் பயன்படுத்தப்பட்டதாலும் அதில் எனக்கும் சம்மந்தம் உண்டு.

அரபு மொழியில் அணிந்துரை சம்மந்தமாக நாங்கள் ஆலோசித்துத் தான் முடிவு செய்தோம். இந்த நூலை பெரும்பாலும் அரபு நாடுகளில் உள்ள தமிழ் கூறும் முஸ்லிம்கள் தான் அதிகம் வாங்குவார்கள். அந்த நூல் அரபு நாடுகளுக்கு தணிக்கை பிரச்சனை இல்லாமல் அனுமதிக்கப்படுவதற்கு அரபு மொழியில் அணிந்துரைகள் இருந்தால் நல்லது என்று ஹாமித் பக்ரி சொன்ன யோசனை எங்களுக்குச் சரியாகப் பட்டது. அதனால் அதற்கு அனுமதி அளித்தோம். அதைக் காட்டி ஹாமித் பக்ரி அரபுகளிடம் பணம் பெற்றதாகவோ பணம் பெற முயற்சித்ததாகவோ தெரியவில்லை. அப்படி ஏதும் ஆதாரம் இருந்தால் எடுத்துக் காட்டலாம்.???

இவ்வாறு 5-10-2009 அன்று நாம் ஆன்லைன்பீஜே இணையதளத்தில் எழுதினோம்.

இந்த நூலை விற்பனை செய்யும் உரிமை சாஜிதா புக் சென்டர் வசம் இருந்தது. அவர் விற்று பணம் தரும் போதெல்லாம் பங்கு சேர்ந்தவர்களுக்கு உரிய தொகையை நாங்கள் கொடுத்து வந்தோம்.

ஆனால் திர்மிதி நூல் வெளியாகி சில நாட்களில் ஹாமித் பக்ரி ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார். உடனே சாஜிதா புத்தக வியாபாரியிடம் சென்று மீதி புத்தகத்தின் பணத்தை என்னிடம் தர வேண்டும். ஜமாஅத்தில் கொடுக்கக் கூடாது என்று கூறி அதன் படி அந்தப் பணத்தைச் சாப்பிட ஆரம்பித்தார். பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டால் தவ்ஹீத் ஜமாஅத்தில் எல்லா பணத்தையும் கொடுத்து விட்டேன் என்று கூறி விரட்டியடித்தார். அவர்கள் ஜமாஅத்தில் வந்து பணம் கேட்டனர். திர்மிதி நூலை விற்று அந்த தொகையை உங்களிடம் தருவதாகத் தான் ஹாமித் பக்ரியிடம் பேசப்பட்டது. ஆனால் பல ஆயிரம் பிரதிகளை அவர் தன் கைவசம் எடுத்துக் கொண்டார். எனவே யாரிடம் பணம் கொடுத்தீர்களோ அவர்களிடமே கேளுங்கள் எனக் கூறி விட்டோம்.

பல நூறு ஏழை மக்கள் இவரிடம் கொடுத்த பணத்தை இன்னும் திரும்பப் பெறவில்லை. அவர்களின் சாபமும் பத்துவாவும் அவர் மீது உள்ளது.

இதில் எனக்கு என்ன ரோல் உள்ளது? என்ற கேள்விதான் இதற்கான பதிலாகும்.

இது குறித்து பீஜே நூல்களுக்கு அரபு நாட்டில் தடையா என்ற கட்டுரை எனது இணைய தளத்தில் 30-9-2009 அன்று நான் வெளியிட்டுள்ளேன். அதில் சிறு பகுதியை மட்டும் இங்கே எடுத்துக் காட்டுகிறேன்.

எந்த ஒரு கால கட்டத்திலும் நான் எந்த அரபு நாட்டு அரசிடமிருந்தோ அல்லது நிறுவனங்களிடமிருந்தோ பணமோ, பொருளோ, அன்பளிப்போ பெற்றதில்லை. சில நேரங்களில் அரபு நாடுகளில் பணி புரிவோர் இலவசமாக வழங்கப்படும் கிதாப்களை வாங்கி அனுப்பும் போது பெற்றுக் கொண்டதைத் தவிர வேறு எதனையும் நான் பெற்றுக் கொண்டதில்லை.

என்னுடைய நூல்கள் பலவற்றை சவூதியில் வெளியிட ஜாலியாத் மூலம் அனுமதி கேட்ட போது நான் அனுமதியளித்துள்ளேன்.

சில மதனிகள் நூல்கள் எழுதி அதை இலவசமாக வெளியிடப் போகிறோம் என்று கூறி உதவி அளிக்கும் நிறுவனத்துக்கு தவறான தகவல் தந்து லட்சங்களைக் கறப்பார்கள். ஒரு நூல் வெளியிட்டு பெரிய சொத்து வாங்கியவரை நான் அறிவேன்.

எனது நூல்களை வெளியிட அனுமதி கேட்கும் போது அதற்கான ராயல்டி இவ்வளவு வேண்டும் என்றால் அதைத் தருவதில் சவூதி நிறுவனங்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்காது. அப்படி இருந்தும் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் இலவசமாக வெளியிட அனுமதித்தேன். இந்த அனுமதிக்காக மற்றவர்கள் அடைகின்ற ஆதாயமும் எனக்கு இல்லை. இலவசமாக அவர்கள் வெளியிடும் போது அந்த நூலின் விற்பனை பெரிதும் பாதிக்கப்படும். ஏற்கனவே நான் அச்சிட்டு வைத்திருந்த நூல்கள் தேங்கும் என்ற வகையிலும் எனக்கு இழப்பு ஏற்படும். செய்திகள் மக்களைச் சென்றடைந்தால் சரி என்று தான் நினைத்தேனே தவிர அரபு நாட்டுப் பணத்துக்கு பல்லிளிக்கவில்லை.

அவ்வாறு பல நூல்கள் சவூதி அரசால் வெளியிடப்பட்டுள்ளன. செய்திகள் மக்களைச் சென்றடைவதற்கு நம்மால் ஏற்படும் சிரமம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதால் தான் நான் அனுமதியளித்தேன்.

இதை சுயதம்பட்டம் அடிப்பதற்காகக் குறிப்பிடவில்லை. அரபு நாடுகள் தடை விதித்தால் அதனால் எனக்கு எந்த நட்டமும் இல்லை என்பதற்காகவும், சவூதி அரசு மூலம் வெளியிடப்படும் எனது இலவச நூல்களைக் காண்பவர்கள் பீஜேக்கு இதன் மூலம் பெருந்தொகை கிடைத்திருக்கும் என்று சொல்லி விடக் கூடாது என்பதற்காகவும் இதைக் குறிப்பிடுகிறேன்.

இது தான் பைபிள்

இயேசு இறைமகனா?

பித்அத் ஓர் ஆய்வு

திருமறையின் தோற்றுவாய்

நோன்பு

அர்த்தமுள்ள இஸ்லாம்

மாமனிதர் நபிகள் நாயகம் இன்னும் பல நூல்களையும் சவூதியில் வெளியிட்டனர்.           ராயல்டி எதுவும் வாங்காமல் சவூதியில் உள்ள ஜாலியாத் கள் எனது நூலை வெள்யிட அனும்தி கோரிய கடிதங்கள்      

ஜமாஅத்தைக் குறித்தும் என்னைக் குறித்தும் சொல்லப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஏன் உணர்வில் பதிலளிக்க வேண்டும் என்று சிலர் கேட்கின்றனர். முழு விபரம் அறிந்த நான் தான் இதற்குப் பதிலளிக்க முடியும். எனக்குப் பின் இது போன்ற கேள்விகளைச் சந்திக்கும் சகோதாரர்களும் தக்க பதில் அளிப்பதற்காக இது போன்ற கேள்விகளையும் எடுத்துக் கொள்ளும் அவசியம் ஏற்படுகிறது.

20.03.2012. 12:40 PM

பீஜே பெயருடன் பட்டம் போடாதது ஏன்?

அல்முபீன் அல்ஜன்னத் ஆசிரியராக தாங்கள் இருந்தபோது ஜைனுல்ஆபிதீன் உலவி என்று போட்டுள்ளீர்கள், தற்போது உலவி என்று போடுவதில்லையே ஏன் ?

- அபு ஜாசிம், ஷார்ஜாஹ்

பதில் :

? ஆரம்ப காலத்தில் மவ்லவி என்றும் உலவி என்றும் என் பெயருடன் சேர்த்துக் குறிப்பிடுவதை நான் ஆட்சேபிக்காமல் இருந்தேன். அடையாளத்துக்காக பெயருடன் பட்டங்களையும் பதவிகளையும் ஒருவர் குறிப்பிட விரும்பினால் அது தவறல்ல.

ஆனால் நான் தனிப்பட்ட முறையில் பெயரை மட்டுமே பயன்படுத்துவது என்றும், பட்டமும் பதவிகளும், அடைமொழிகளும் வேண்டாம் என்றும் முடிவு செய்து சில ஆண்டுகளாக இதைக் கண்டிப்புடன் கடைப்பிடித்து வருகிறேன்.

நான் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் என் பெயருடன் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் என்றோ மவ்லவி, உலவி என்றோ, அறிஞர் என்றோ வேறு எந்த அடைமொழியுமோ பயன்படுத்தக் கூடாது என்பதில் கண்டிப்புடன் இருக்கிறேன். இது என்னளவில் நான் எடுத்துக் கொண்ட முடிவு தான். எனக்குப் பிடிக்கவில்லை என்பது தான் இதற்குக் காரணம்.

உணர்வு 16:24

21.02.2012. 13:06 PM

“திருக்குர்ஆன் இறைவேதமே நிரூபித்த விவாதம்

 திருக்குர்-ஆன் இறைவேதமே!

- அடுக்கடுக்கான சான்றுகளை வைத்து நிரூபித்த டிஎன் டிஜே! திக்குமுக்காடிய கிறித்தவ போதகர்கள்!!

என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27:46). மேற்கண்ட வார்த்தைகள் ஏசு சிலுவையில் அறையப்பட்ட போது கடைசியாகப் புலம்பிய வார்த்தைகள். இதே வார்த்தைகளைத் தான் திருக்குர்ஆன் இறைவேதமே! என்ற தலைப்பில் விவாதிக்க வந்த கிறித்தவ போதகர்கள் விவாதத்தின் இறுதியில் சொல்லி புலம்பிக் கொண்டு சென்றிருப்பார்கள் என்று நினைக்கின்றோம்.

அந்த அளவிற்கு அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் திருக்குர்ஆன் இறைவேதமே!

என்ற தலைப்பில் கிறித்தவ போதகர்களுடனான விவாதம் சிறப்பாக நடந்து முடிந்தது.

கடந்த 28, மற்றும் 29 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையிலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைமயகத்தில் வைத்து நடைபெற்ற விவாதத்தில் பீஜே தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுவினர் கிறித்தவ போதகர் ஜெர்ரி தாமஸ் குழுவினரோடு விவாதித்தனர். தரப்புக்கு தலா 25 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக சான் தரப்பினர் ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் நம்முடன் இந்தத் தலைப்பில் விவாதிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு, விவாதத்திற்கு முந்தைய நாள் நள்ளிரவு 1.40க்கு விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்தால் நாங்கள் வரமாட்டோம் என்று கூறி விவாதத்திலிருந்து நழுவி ஓடினர். விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்யமாட்டோம் என்று நாம் ஒப்புக் கொண்டால் தான் விவாதத்திற்கு வருவோம் என்று விடாப்பிடியாக அவர்கள் இருந்ததால், இவர்களுடன் இந்தத் தலைப்பில் விவாதித்தே ஆக வேண்டும். இவர்களை விட்டுவிடக்கூடாது என்று முடிவெடுத்து நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்ற அவர்களது நிபந்தனையையும் ஏற்று இந்த விவாதத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது தவ்ஹீத் ஜமாஅத்.

ஆரம்பமே அதிர்ச்சி:

ஜனவரி 21, 22 ஆகிய நாட்களில் நடைபெற்ற பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பிலான விவாதத்தில் அவர்களுக்கு நாம் வைத்த அந்த விஷப்பரீட்சை அதிர்ச்சியிலிருந்து அவர்கள் இதுவரை இன்னும் மீளவில்லை என்பது இந்த வாதத்திலும் நமக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

சென்ற வாதத்தில், பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் விவாதிக்க வந்த கிறித்தவ போதகர்கள் பைபிள் இறைவேதம் தான் என்பதற்கு ஒரு சான்றைக்கூட எடுத்து வைக்கவில்லை. மாறாக நாம் பைபிளிலிருந்து காட்டிய ஆபாசங்களுக்கும், கேவலங்களுக்கும், உளறல்களுக்கும் விளக்கம் சொல்ல முடியாமல் திணறிப்போய் பைபிளைப் போலவே தாங்களும் உளற ஆரம்பித்தனர்.

ஆனால், திருக்குர்ஆன் இறைவேதமே! என்ற இந்தத் தலைப்பில், இந்த வேதம் படைத்த இறைவனிடத்திலிருந்துதான் வந்தது என்பதையும், இது அவனுடைய வேதம் தான் என்பதையும் நிரூபிக்கும் வகையில் அடுக்கடுக்கான சான்றுகள் எடுத்து வைக்கப்பட்டன.

எதிர்த்தரப்பினரை ஆட்டம் காண வைத்த அடுக்கடுக்கான சான்றுகள் :

- இது போன்றதொரு குர்ஆனை கொண்டு வரமுடியுமா? என்ற திருக்குர்ஆனின் அறைகூவல்

- குறைந்த வார்த்தையில் அதிகப் பொருள் தரக்கூடிய திருமறையின் நடை

- சிந்தித்துப் பார்க்கச் சொல்லி சிந்தனையைத் தூண்டக்கூடிய வான்மறையின் வழிகாட்டல்

- எளியநடையில் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ள திருக்குர்ஆனின் நடை

- முஹம்மது நபிக்கு இந்த வேதத்தில் பங்கு இல்லை என்ற தெளிவான, திட்டவட்டமான அறிவிப்பு

- தீமையைத் தூண்டாத தெளிவான வழிகாட்டுதல்கள்

- இறைவனது இலக்கணக்கங்களைத் தெளிவுபடுத்தும் வேதம்

என்று தர்க்க ரீதியாக இது இறைவனுடைய வேதம் தான் என்பதை நிரூபிக்கும் வகையிலான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதிசயிக்க வைத்த அறிவியல் சான்றுகள் :

1400 ஆண்டுகளுக்கு முன் அருளப்பட்ட இந்த வேதத்தில், எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டிய இவ்வேதத்தில், இந்த நூற்றாண்டு மனுதனுக்குக்கூட தெரியாத எண்ணற்ற அறிவியல் சான்றுகள் உள்ளனவே? இது எப்படி முஹம்மது என்ற எழுதப்படிக்கத் தெரியாத மனிதனுக்குத் தெரியும்? படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியக்கூடிய பற்பல அறிவியல் உண்மைகளை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்லுகிறார்கள் என்றால் இது படைத்த இறைவனிடம் இருந்துதான் வந்துள்ளது என்பது நிரூபணமாகின்றது என்று கூறி அடுக்கடுக்கான அறிவியல் சான்றுகள் அள்ளிவைக்கப்பட்டன.

காட்டப்பட்ட அறிவியல் சான்றுகளில் சில:

- வேதனையை உணரும் நரம்புகள் மனிதனது தோல்களில் தான் உள்ளன

- தேனியின் வயிற்றிலிருந்து தான் தேன் உருவாகின்றது என்ற அதிசயம்

- மலைகளை முளைகளாக ஆக்கியுள்ளோம் என்ற அறிவியல் உண்மை

- மனிதனது மூளையில் முன்னெற்றி பாகம் தான் பொய் சொல்லத் தூண்டுகின்றது என்பதற்கான சான்று

- கால்நடைகளில் பால் உற்பத்தியைப் பற்றி குர்ஆன் தத்ரூபமாக விளக்கும் அதிசயம்

- மலையின் உச்சி அளவுக்கு மனிதன் பூமிக்கு அடியில் போக முடியாது என்று திருக்குர்ஆன் விடுக்கும் சவால்

- விந்து வெளியேறும் இடத்தை விவரிக்கும் திருமறையின் அற்புதம்

- பூமியைக் கடந்து செல்ல முடியும்; அதற்கு ஆற்றல் தேவை என்ற திருமறையின் வழிகாட்டல்

- விண்வெளிப் பயணத்தின் போது இதயம் சுருங்கும் என்று சொல்லும் திருமறையின் அதிசயம்

- குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஆண் தான் தீர்மானிக்கின்றான் என்ற அறிவியல் உண்மை

- திருக்குர்ஆன் விவரிக்கும் பெருவெடிப்புக் கொள்கை

- இரும்பு விண்ணிலிருந்துதான் இறக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம்

இப்படி அடுக்கடுக்கான அறிவியல் ஆதாரங்களை நாம் அள்ளிப்போட்டவுடன் செய்வதறியாது திகைத்த கிறித்தவ போதகர்கள் ஏதேதோ சொல்லி சமாளித்துப் பார்த்தனர். முடியவில்லை.

தங்களை அறியாமல் ஒப்புக் கொண்ட எதிர்த்தரப்பினர் :

இறுதியில் இவைகளை மறுக்க வழியில்லாமல், விஞ்ஞான உண்மைகள் இருந்தால் அது இறைவனுடைய வேதமாக ஆகிவிடுமா? என்று அறிவுஜீவிகளைப் போல கேள்வி கேட்டனர். மேலும், மேற்கண்ட அறிவியல் உண்மைகளையெல்லாம் முஹம்மது என்ற எழுதப்படிக்கத் தெரியாத மனிதருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கின்றோம். வேறு ஏதோ ஒரு சக்திதான் அவருக்கு இதைச் சொல்லிக் கொடுத்துள்ளது. அது கெட்ட ஆவியாகத்தான் இருக்கும் என்று உளற ஆரம்பித்து விட்டனர்.

அப்படியானால், கெட்ட ஆவிக்கு எப்படி இவ்வளவு அறிவியல் உண்மைகளும் தெரியும்? என்று நாம் கேட்க அவர்களுக்கு எந்தப் பதிலும் சொல்ல இயலவில்லை.

கடவுளை மகிமைப்படுத்துவது கடவுளுடைய வேதமா?

அவரைக் கேவலப்படுத்துவது கடவுளுடைய வேதமா? :

மேலும், இறைவனுடைய வேதம் என்றால் அதைப் படித்தாலே இது கடவுளிடத்திலிருந்து தான் வந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும். திருமறைக்குர்ஆன் அவ்வாறுதான் உள்ளது. இந்த அற்புத வேதத்தில்,

- உளறல் இல்லை

- முரண்பாடுகள் இல்லை

- ஆபாசங்கள் இல்லை

- அசிங்கங்கள் இல்லை

- தரங்கெட்ட வார்த்தைகள் இல்லை

- அருவறுப்பு இல்லை

- இறைவனைக் கேவலப்படுத்துதல் இல்லை

- கேவலமான சட்டங்கள் இல்லை

- பொய்கள் இல்லை

என்று மேற்கண்ட செய்திகளை நிறுவியதுடன் கிறித்தவ போதகர்களுக்கு உரைக்கும் வண்ணமும், ஏற்கனவே அவர்கள் பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் திருக்குர்ஆனை இழுத்ததன் காரணமாகவும் மேற்கூறிய அத்தனை அபத்தங்களும், ஆபாசங்களும் நிறைந்து காணப்படும் பைபிள் எப்படி இறைவேதமாக இருக்க முடியும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டு கீழ்க்கண்ட கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன.

யாக்கோபுடன் கர்த்தர் சண்டை போட்டு தொடைச்சந்துக்குள் கையைவிட்டு யாக்கோபின் மர்ம உறுப்பை கர்த்தர் பிடித்தது நியாயமா? தந்தையே தான் பெற்ற மகளை திருமணம் முடிக்கலாம் என்ற கேவலத்தை சட்டமாக பைபிள் சொல்லலாமா? உடலுறவு கொண்ட பின்பு தனது மனைவி கன்னிதானா என்பதை சோதிக்க பாதிரியாரிடம் கூட்டிக்கொண்டு போகச் சொல்லி பைபிள் சொல்லும் சட்டம் சரிதானா? அடிமைப்பெண்களுடன் உடலுறவு வைக்கலாம் என்று அல்லாஹ் கூறும் சட்டத்தை விமர்சிக்கும் நீங்கள் உங்களது வேதத்தில் அண்ணன் பொண்டாட்டியை தம்பி அனுபவிக்கலாம் என்று எழுதி வைத்துள்ளீர்களே இது நியாயமா? உங்களது பைபிளில் புருஷசம்யோகத்தை அறியாத இளசுகளாகப் பார்த்து உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இது சரியா? ஒருவன் செய்த தவறுக்காக அவன் பொண்டாட்டியை அடுத்தவன் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லி சாபம் போடும் கர்த்தரின் சாபம் சரிதானா? ஊனமுற்றவனும், கூனனும், குருடனும், ஆணுறுப்பு அறுக்கப்பட்டவனும், விதை நசுங்கியவனும் கர்த்தருடைய சபைக்குள் வரக்கூடாது என்று சொல்லி அநீதியிழைக்கும் கர்த்தரின் சட்டம் சரியா? இறந்த சிங்கத்தின் உடலுக்குள் தேனீ கூடுகட்டுவதாக பைபிளில் சொல்லப்பட்டுள்ளதே! இது நடக்குமா? இராஜாக்களின் முலைப்பாலை குடிக்கச் சொல்லி பைபிள் போடும் கட்டளையை எப்படி நிறைவேற்றுவீர்கள்? சிம்சோன் என்ற நல்லவர்(?) செய்த சில்மிஷங்களின் பட்டியல்களுக்கு பதில் என்ன? ஒரு வயது போன தாத்தாவை வளைத்துப் போட தனது மருமகளுக்கு வழிகாட்டிய மாமியாரின் மன்மத லீலைகளுக்கு பதில் என்ன? வீட்டுக்கு குஷ்டரோகம், ஆடைக்கு குஷ்டரோகம் என்று பைபிள் சொல்லும் அதிசய குஷ்டரோகத்திற்கு உங்களது பதில் என்ன? மாதவிடாய்ப் பெண்களைத் தொட்டால் தீட்டு, அவள் உட்கார்ந்த இடத்தைத் தொட்டால் தீட்டு, தொட்டவனைத் தொட்டால் தீட்டு என்று கொடுமையான சட்டத்தை பைபிள் சொல்லக் காரணம் என்ன? சபையில் பெண்கள் பேசக்கூடாது என்று சொல்லி பெண்ணுரிமையை(?) பைபிள் பேணக்கூடிய லட்சணம் என்ன? ஸ்தீரியிடத்தில் பிறந்தவன் சுத்தமாவதில்லை என்ற பைபிள் கூற்றுப்படி ஏசு அசுத்தமானவரா? விருத்தசேதனம் செய்யாதவன் ஜெருசலத்திற்குள் வரமாட்டான் என்று பைபிள் சொல்லும் முன்னறிவிப்பு பொய்யாகி விட்டதே! சிரங்கு வந்த மொட்டைத்தலையனோ அரை மொட்டையனோ தீட்டு, தீட்டு என்று கத்தினால் சொறி, சிரங்கு போய்விடும் என்று பைபிள் சொல்லும் அற்புதச் சட்டத்தின் விளக்கம் என்ன? பைபிளில் சொல்லிக் காட்டியுள்ளபடி கர்த்தர் அம்மணமாகத்தான் ஓடுவாரா? பைபிளில் சொல்வது போல கர்த்தர் ஆந்தையைப் போல அலறி, நரியைப் போல ஊளையிடுவாரா? கர்த்தர் மனஸ்தாபப்பட்டு இளைத்துப் போவாரா? நான் ஒரு லூசு என்று பவுல் பைபிளில் தன்னைப்பற்றி சுய அறிமுகம் செய்கிறாரே! அந்த பைத்தியம் எழுதி வைத்தவை எப்படி வேதமாக முடியும்? இது எனது அபிப்பிராயம் என்று பவுல் சொல்லுவதெல்லாம் வேதமா? நான் விசாரித்து அறிந்ததை சொல்லுகின்றேன் என்று லூக்கா சொல்லுவது உங்களுக்கு வேதமா? ஏசுவுக்கு முத்தம் கொடுத்து அதுவும் ஓயாது முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்து காலில் தைலம் பூசிவிட்டாளே! அந்தப் பெண்ணை ஏசு தடுக்காமல் காலைக் காட்டிக் கொண்டிருந்ததேன்? விதவையையும், விவாகரத்தான பெண்ணையும் திருமணம் முடிக்கக்கூடாது என்பதுதான் கர்த்தர் சொல்லும் அற்புதச் சட்டமா? ஓணான் என்பவன் தனது விந்தை தனது அண்ணன் பொண்டாட்டியோடு உடலுறவு கொள்ளும் போது தரையில் விட்டதற்காக அவனை தண்டித்த கர்த்தர், அவளோடு விபச்சாரம் செய்ததைக் கண்டிக்காதது ஏன்? ஏசுவை கெட்ட நட்த்தை உள்ளவர் என்று பைபிளை ஆங்கிலத்தில் வெளியிட்ட கிங் ஜேம்ஸ் என்ற மன்னர் சொல்லியுள்ளாரே! அதுக்கு உங்கள் பதில் என்ன? திருக்குர்ஆன் மறுமையில் கிடைக்கும் பேறுகளைக் குறிப்பிட்டு சொல்லும் வசனங்களைக் கொச்சையாகச் சொல்லுகின்றீர்களே, ஒரு மனைவியை விட்டவனுக்கு அது போல நூறு மனைவி கிடைக்கும் என்று சொல்லித்தானே ஏசு உங்களையும் ஊழியம் செய்யக் கூப்பிடுகின்றார். உங்களுக்கு மட்டும் அது நியாயமா? ஒருவனை சபிக்கின்றோம் என்ற பெயரில் கூறுகெட்டதனமாக கர்த்தர் சபிப்பதாக பைபிளில் உள்ளதே! அது சரியா? கடவுளைத் துதிப்பதாக வரும் இடங்களில் கூட மச்சங்களே! ஆழங்களே! கிழவிகளே! குமரிகளே! பெரியோர்களே! தாய்மார்களே! என்ற ரீதியில் பைபிள் வழ வழா என்று பேசுகின்றதே! இதுதான் இறைவேதமா?

இது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நாம் கேட்க, ஆடிப்போன சான் தரப்பினர் திருக்குர்ஆனுக்கு முன்னால் சரண்டர் ஆகிவிட்டனர்.

சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை :

மேற்கண்ட பழமொழி இவர்களுக்கு கனகச்சிதமாக பொருந்திப்போகும். காரணமென்னவென்றால், முதலில் திருக்குர்ஆன் அனைத்து விஷயத்திற்கும் தீர்வு சொல்லும் வேதம் என்கின்றீர்களே! அப்படியானால், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற வணக்கங்கள் குறித்து முழுமையாக குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? என்ற ரீதியில் தான் முக்கால் வாசி கேள்விகளை எழுப்பினர்.

அதற்குரிய விளக்கமும் குர்ஆனிலேயே உள்ளது. நபியவர்கள் வசனங்களை ஓதிக்காட்டிய பிறகு, தான் ஓதிக்காட்டிய வசனங்களுக்கு விளக்கம் சொல்லுவதற்காகத்தான் அல்லாஹ் தனது நபியை அனுப்பியதாக கூறுகின்றான். அவர்களது விளக்கத்தில் இதற்கான விபரங்கள் உள்ளன என்று பீஜே சொல்லச் சொல்ல திரும்பத் திரும்ப கேட்ட அதே கேள்வியையே சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்பது போல ஜெர்ரி தாமஸ் கேட்டுக் கொண்டே இருந்தது மிகவும் கேலிக்குரியதாக இருந்தது.

குர்ஆனில் முரண்பாடு என்று சொல்லிக் கொண்டு அவர்கள் வைத்த வாதங்கள் சிறுபிள்ளைத்தனமாக அமைந்திருந்தன.

குர்ஆனில் எழுத்துக்கள் மாறியுள்ளனவே! அவைகளை ஒரு சில நபித்தோழர்கள் மாற்றி ஓதியுள்ளனரே! என்று பெரிய பட்டியல் வாசிக்க, அவை எதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஏனெனில் அவை ஓரிருவர் அறிவிக்கக்கூடிய செய்திகள்; திருக்குர்ஆன் என்பது கல்வியாளர்களின் உள்ளங்களில் பாதுகாக்கப்படும் என்று இறைவன் சொல்லியுள்ளான். தற்போது கோடிக்கணக்கான மக்கள் மனனம் செய்து வைத்துள்ள மூலப்பிரதிகளுக்கு மாற்றமாக உள்ள இந்தச் செய்திகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொன்னவுடன் அவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் விழிபிதுங்கினர்.

விவாதத் துளிகள் :

- விவாதத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்யக்கூடாது என்றும், அவ்வாறு ஒளிபரப்பு செய்தால் நாங்கள் விவாதிக்க வரமாட்டோம் என்றும் சொல்லி அதை ஒரு நிபந்தனையாக்கியதால், இணையதளத்தில் நாம் ஒளிபரப்பு செய்ய முடியவில்லை

- ஆனால், தமிழகம் மற்றும் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மாநிலத் தலைமையகத்தை தொடர்பு கொண்ட நமது சகோதரர்கள் ஆவலோடு அவ்வப்போது விவாதத்தின் நிலவரங்களைக் கேட்டறிந்து கொண்டனர்.

- உலகத்தின் பல பகுதிகளிலிருந்துமுள்ள நமது சாகோதரர்கள் வைத்த வேண்டுகோளுக்கிணங்க விவாதம் முடிந்த மறுநாள், 30.04.12 திங்கள் மற்றும் 01.05.12 செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள், ஆன்லைன் பீஜே இணையதளத்தில் விவாதத்தை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

- இதற்கு பிறகு தான், பல நாடுகளிலிருந்துமுள்ள இணையதள நேயர்களின் அன்புத் தொல்லை கொஞ்சம் குறைந்தது.

- பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் நடைபெற்ற விவாத டிவிடிக்களில் ஒளிப்பதிவு செய்யும் போது நாம் எந்தக் கூடுதல் குறைவும் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு பிரேமிலும் நேரத்தை குறிப்பிட்டு ஒளிப்பதிவு செய்திருந்தோம்.

- ஆனால், ஒப்பந்தத்திலும் இவ்வாறு தான் நேரத்தோடு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று இருக்கும் நிலையில் சான் தரப்பினர் தங்களது இணையதளத்தில் யூ ட்யூப் இல் வெளியிட்ட வீடியோவில் நேரம் பதிவு செய்யப்படாமல் இருந்ததை சுட்டிக்காட்டி இந்த விவாதத்திலாவது ஒப்பந்த அடிப்படையில் நேரப்பதிவோடு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது.

- நமது தலைமையகத்தில் இந்த விவாதம் நடைபெற்றதால் நம் இடத்திற்கு வருகை தந்திருந்த கிறித்தவ தரப்பு விவாதக் குழுவினர், நல்ல முறையில் நாம் உபசரித்ததற்காக நமக்கு விவாத இறுதியில் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

- விவாதத்தில் ஒரு நபரை அழைத்து வந்திருந்தனர். அவர் திருக்குர்ஆன் வசனங்களை அரபியில் ஓதிக் காட்டினார். அதற்காகவே அவரைத் தேடிப்பிடித்து அழைத்து வந்திருந்தனர் போலும். அவர் குர்ஆன் வசனங்களையும் அரபி உச்சரிப்புகளையும் கொலை செய்தார்

- அவரை வைத்து ஒரு சில பைபிள் வசனங்களை அரபியில் வாசித்துக் காட்டிவிட்டு திருக்குர்ஆனைப் போல நாங்களும் கொண்டு வந்து விட்டோம் என்று ஜெர்ரி அவர்கள் காமெடி பண்ண, அதற்கு பீஜே இவர் அரபியில் வாசித்த லட்சணத்தை அரபி படித்தவர்களிடம் போய்க் கேளுங்கள். இவரைக்கொண்டு போய் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தான் சேர்க்கச் சொல்லுவார்கள் என்று சொல்ல சபையில் ஒரே சிரிப்பலை.

- விவாதம் செய்யும் போது எதிர்த்தரப்பில் விவாதித்த ஒரு நபர் கொஞ்சம் அதிகப் பிரசிங்கித்தனமாக தண்ணியடித்துவிட்டு வந்து உளறும் மனிதரைப்போல பேசிக் கொண்டு எழுந்து நின்று வரம்பு மீறினார். இது போன்ற போதையில் உளறும் ஆட்களையெல்லாம் இனிமேல் விவாதிக்க அழைத்து வரவேண்டாம் என்று பீஜே சொல்ல, ஜெர்ரியும் சபையிலேயே அந்த போதை பார்ட்டியைக் கண்டித்தார்.

- கிறுக்குத்தனமாகவும்,ஏட்டிக்குப் போட்டியாகவும் குர்ஆன் வசனங்களைக்காட்டி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சகோதரர் பீஜே அவர்கள் ஒவ்வொரு குர்ஆன் வசனங்களாக மேற்கோள்காட்டியும், லாஜிக்காகவும், பைபிள் வசனங்களை இணைத்தும் சொன்ன பதில்கள் ஆக்கப்பூர்வமாகவும், அறிவிப்பூர்வமாகவும் இருந்தன.

- கர்த்தர் தொடைக்குள் கையை விட்டு யாக்கோபின் மர்ம உறுப்பைத்தான் பிடித்தார் என்று கலீல் ரசூல் சொல்ல, அதற்கு ஆதாரம் கேட்ட எதிர்தரப்பினருக்கு கிரேக்க மொழியில் ஆணுறுப்பைத்தான் கர்த்தர் பிடித்தார் என்று வரும் ஆதாரத்தை எடுத்துக்காட்டியவுடன் கேட்டவர் கப்சிப்.

- தேனீக்கள் பூக்களில் உண்பதோடு மட்டுமல்லாமல், கனிகளிலும் உண்கின்றது என்று சொல்லும் குர்ஆன் வசனம் பொய் என்று ஜெர்ரி சொல்ல மறு அமர்விலேயே அதற்கான ஆதாரத்தை அள்ளிப்போட்டவுடன் ஜெர்ரியும் கப்சிப். இந்த நூற்றாண்டில் கூட இவர்கள் அறிந்து கொள்ளாத உண்மைகளையும் 1400 வருடத்திற்கு முன்பாக போகிற போக்கில் திருக்குர்ஆன் சொல்லியுள்ளது என்பதை நினைக்கும் போது இது அல்லாஹ்வுடைய வேதம் தான் என்பது மறுபடியும் நிரூபணமாகின்றது.

விவாதத்தில் பீஜே சொன்னதை உண்மைப்படுதிய கிறித்தவ தரப்பு பார்வையாளர்கள் :

விவாத டிவிடிக்களை வெளியிட வெட்கப்பட்ட கிறித்தவ போதகர்கள்:

வாதத்தை துவக்கிய பீஜே அவர்கள் தனது முன்னுரையில் பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பிலான விவாதத்தில் பைபிள் இறைவேதமில்லை என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபித்தோம். எந்த அளவிற்கென்றால், பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பிலான விவாத டிவிடிக்களை நீங்கள் வெளியிட வெக்கப்படுகின்ற அளவிற்கு உங்களை அந்த விவாதம் தள்ளியுள்ளது என்ற உண்மையை தனது துவக்க உரையிலேயே போட்டு உடைத்தார்.

அதற்கு பதிலளித்த சான் தரப்பினர் நாங்களும் டிவிடிக்களை வெளியிட்டுள்ளோம் என்று சப்பைக்கட்டு பதிலை கொடுத்தனர். ஆனால், அவர்களது இந்த மழுப்பல் சில மணி நேரத்திலேயே வெளியானது. உணவு இடைவேளையின் போது நம்மைச் சந்தித்த கிறித்தவ தரப்பிலிருந்து பார்வையாளர்களாக வந்து அமர்ந்திருந்த கிறித்தவ சகோதரர்கள் நம்மிடம் பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பிலான விவாத டிவிடிக்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. உங்களால் தர இயலுமா? என்று நம்மிடம் கேட்க, விவாத அரங்கத்திற்குள் ஒப்பந்தப் பிரகாரம் எதுவும் கொடுக்கக்கூடாது என்று இருப்பதால் அருகில் உள்ள எங்களது அலுவலகத்தில் டிவிடிக்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று பதிலளித்தனர். இந்த விஷயத்தை பீஜே அவர்கள் தனது உரையில் விவாதத்தின் இரண்டாவது அமர்வில் சுட்டிக்காட்டியவுடன் சான் தரப்பினர் முகம் சுருங்கிவிட்டது.

முதல் நாள் விவாதத்தின் இறுதியிலும், மறுநாள் விவாதம் முடிந்த பிறகும் பல கிறித்தவ சகோதரர்கள் நமது அலுவலகத்திற்கு வந்து விவாத டிவிடிக்களை வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

வரும்! ஆனா வராது! :

ஆரம்பத்தில் பீஜே அவர்கள், தனது உரையில் இறைவனுடைய இலக்கணத்தை சொல்லக்கூடிய வேதத்தில் இப்படி கிறுக்குத்தனங்கள் இருக்கலாமா? என்று கேட்டு பைபிளில் உள்ள சில உளறல்களை பட்டியலிட்டார்.

அதற்கு ஆவேசமாக பதிலளித்த ஜெர்ரி அவர்கள், பைபிள் குறித்து கேட்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் நாங்கள் பதிலளிப்போம் என்று ஒரு வேகத்தில் கூறிவிட்டார். பைபிளில் உள்ள கேவலங்களாஇயும், ஆபாசங்களையும், அசிங்கங்களையும், உளறல்களையும் அள்ளிப்போட்டப் போட செய்வதறியாது திகைத்தவர்கள், இதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லமாட்டோம் என்று கூறி அந்தர்பல்டி அடித்தனர்.

பெண்ணுரிமை பேணும் லட்சணம் இதுதானா?:

பெண்களை இஸ்லாம் அடிக்கச் சொல்கின்றது. பெண்களிடம் இஸ்லாம் தனது இஷ்டத்திற்கு அவர்களது கணவனை உடலுறவு கொள்ளச் சொல்லி அனுமதி வழங்குகின்றது. இது சரியா? என்று ஏதோ பெண்கள் மேல் ரொம்ப அக்கறையுள்ளவர்கள் போல கேள்விகளைக் கேட்டனர்.

அதற்கு விளக்கமும் அளித்துவிட்டு, இதைக் கேட்க உங்களுக்கென்ன அருகதை இருக்கின்றது என்று கேட்டு, கர்த்தர் அடுத்தவன் மனைவியை எடுத்து இன்னொருவனுக்கு கையளித்தாரே! இது தான் பெண்களுக்கு நீதி செலுத்தும் லட்சணமா? பாதிரியாரிடம் அழைத்து சென்று கன்னிப்பரிசோதனை செய்யச் சொல்லுவதும், விபச்சாரம் செய்துவிட்டாளா? இல்லையா? என்பதற்கு மனைவியை நாற்றமெடுத்த தண்ணீரை குடிக்கச் சொல்லுவதும், சபைகளில் பெண்கள் பேசக்கூடாது என்று சொல்லுவதும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களை பாடாய்ப்படுத்தி எடுப்பதும் தான் பெண்ணுரிமை பேணும் லட்சணமா? என்று கேட்க கடைசி வரைக்கும் வாய்திறக்கவில்லை.

விளக்கம் கொடுப்பது ஒப்புக் கொள்வதா?:

 முத்ஆ திருமணம் செய்வது சரியா?, அடைமைப் பெண்களுடன் உறவு வைக்கலாமா? என்ற ரீதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருக்குர்-ஆன் என்பது, சிறுகச் சிறுக 23ஆண்டுகள் இறக்கப்பட்ட வேதம். ஆரம்பத்தில் அந்த மக்களிடத்தில் அறியாமைக்காலத்திலிருந்த பழக்க வழக்கங்களை ஒவ்வொன்றாகத்தான் இறைவன் தனது வேத அறிவிப்பின் மூலம் தடை செய்தான். அந்த அடிப்படையில் ஆரம்பகட்டத்தில் எப்படி வட்டி, மது போன்ற விஷயங்கள் அனுமதிக்கப்பட்டு, பிறகு தடை செய்யப்பட்டதோ அதைப் போல மேற்கண்ட பழக்க வழக்கங்களும் அந்த மக்களிடத்திலிருந்த நிலையில், பின்னர் வேத அறிவிப்பின் மூலம் தடுக்கப்பட்டுவிட்டது என்று கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல பீஜே விளக்கமளித்தார். அனைத்தையும் கேட்டுவிட்டு தாங்கள் சொன்ன குற்றச்சாட்டுக்களை பீஜே ஒப்புக் கொண்டுவிட்டார் என்று சொன்னார்களே! பார்க்கலாம். இவர்களது சிந்தனைத்திறன் இவ்வளவு தான் என்பதை அங்கே தெளிவாக அறியமுடிந்தது.

விசித்திரமான விவாதம் :

ஒரு மாணவனுக்கு தான் பரீட்சை எழுதப் போவதற்கு பல மாதங்களுக்கு முன்பே அவனது தேர்வு வினாத்தாளை கொடுத்தால் எப்படியிருக்குமோ அதைப்போலத் தான் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி இவர்கள் ஓட்டமெடுத்த நாள் அன்றே, இப்போது வைக்கப்பட்ட விவாதத்தில் பெரும்பகுதி வைக்கப்பட்ட ஆதாரத்தையும், வாதங்களையும் நாம் வைத்துவிட்டோம். அந்த விவாதத்தை நாம் நேரடியாக ஆன்லைன்பீஜே இணையதளத்திலும் ஒளிபரப்பு செய்தோம். அதை நாம் நேரடி ஒளிபரப்பு செய்ததை பார்த்துவிட்டு வந்திருந்த இவர்களுக்கு அந்த வாதங்களுக்கு பதில் சொல்ல இயலவில்லை என்றால் உண்மையிலேயே இது ஒரு விசித்திரமான விவாதம் தான் என்று பீஜே தனது இறுதி உரையில் குறிப்பிட்டார்.

பீஜே தர்காவிற்கு போனது ஆதாரமாகுமா? :

1986 ஆம் ஆண்டு பீஜே தனது பத்திரிகையில் சூனியம் உண்டு என்று சொன்னாராம். அதை நாங்கள் ஆதாரமாகத் தருகின்றோம் என்று கூறி சில ஆதாரங்களை மேற்கோள்காட்டினார்கள். நாங்கள் அறியாமல் இருந்த போது செய்த தவறை ஆதாரமாகக் காட்டுகின்றீர்கள். 1986 அல்ல அதற்கு இன்னும் சில வருடங்களுக்கு முன்னால் சென்று தேடிப்பார்த்தால் தர்கா தட்டு தகடு தாயத்தை நான் ஆதரித்ததற்கும் உங்களுக்கு ஆதாரம் கிடைக்கும். இதுவெல்லாம் ஒரு ஆதாரமா? என்று கேட்க அந்த கேள்வி அதோடு சப்பையாகிவிட்டது.

புளித்துப்போன பழைய கஞ்சி :

பரவலாக குர்-ஆனின் மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு, சல்மான் ருஷ்டி என்ற கிறுக்கன் எழுதிய சாத்தானிய வேதம் என்ற நூலில் அவன் வைக்கும் குற்றச்சாட்டு என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். அதை குடித்துவிட்டு வந்தது போல வந்து பேசிக் கொண்டிருந்த சான் தரப்பு சகோதரர் ஒருவர், ஏதோ மிகப்பெரிய ஆதாரத்தை எடுத்து வைப்பது போல எடுத்து வைக்க, இதற்கு 1990ஆம் வருடத்திலேயே, வேதம் ஓதும் சாத்தான்கள் என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டு பதில் கொடுத்துவிட்டோம் என்று பதிலையும் பிரிண்ட் அவுட் எடுத்துக்காட்ட அந்த வாதம் புஷ் என்று போகிவிட்டது. இது புளித்துப்போன பழைய கஞ்சி என்பது அவருக்கு தெரியவில்லை போலும்.

தேவதூதர்களுக்கு எதுவும் பத்தாதா? :

சுவனத்தில் அழகிய பெண்களை மணமுடித்து வைப்போம் என்று அல்லாஹ் சொல்லிக்காட்டும் வசனங்களை மேற்கோள்காட்டி இப்படித்தான் உங்கள் வேதம் உங்களை அழைக்கிறது என்று குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

அனைவரும் மரித்தவுடன் வானுலகத்தில் தேவ தூதர்களாக வாழ்வார்கள் என்பது கிறித்தவ நம்பிக்கை. அப்படியானால், வானிலுள்ள தேவ தூதர்கள் கீழுலகத்திற்கு இறங்கி வந்து இங்குள்ள பெண்களோடு உடலுறவு கொண்டார்கள் என்று ஆதியாகமத்தில் உள்ளதே. தேவதூதர்களுக்கு அங்கே கிடைப்பது போதவில்லை என்று தானே இங்கே இறங்கி வருகிறார்கள் என்றும், ஒரு

மனைவியை தியாகம் செய்தால் உனக்கு நூறு மனைவி கிடைப்பாள் என்று சொல்லித்தானே ஏசுவும் உங்களை ஊழியம் செய்யக் கூப்பிடுகின்றார் என்றும் பீஜே கேட்க அமைதியானார்கள் ஊழியக்காரர்கள்.

01.05.2012. 13:52 PM

More Articles …

Subcategories