Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

இரத்தத் துளிகளில் வளர்ந்த ஏகத்துவக் கொள்கை

எம். ஷம்சுல்லுஹா

மதுரை ஷரீஅத் மாநாடு

நம்மைத் திட்டித் தீர்ப்பதற்காகக் கூட்டிய மாநாடுகளில் நம்மால் மறக்க முடியாத மாநாடு மதுரையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஷரீஅத் மாநாடு.

1991ம் ஆண்டு, ஜூலை மாதம் 6, 7 ஆகிய திகதிகளில் இம்மாநாடு நடைபெற்றது.

அம்மாநாட்டின் தலைமைப் பேச்சாளர் கலீல் அஹ்மத் கீரானூரி, தலைப்பு, தராவிஹ் 20 ரக்அத்கள்.

அப்போது அவர் பேசிய வெறிப் பேச்சை இப்போது கொஞ்சம் ஒலிபரப்புகிறோம்.

மூலையிலே வண்ணார் பள்ளியிலே (இன்றைய மஸ்ஜிதுல் முபாரக்) ஒளிந்து இருந்து கொண்டு நீ எங்களைப் பார்த்துப் பேசுகிறாயா? ஷரீஅத் மாநாடு எதற்காக? மதுவை ஒழிக்கவா? விபச்சாரத்தைத் தடுக்கவா? வரதட்சணையைக் கண்டிக்கவா? சாராயக் கடைகளை மூடுவதற்காகவா? என்றெல்லாம் கேட்டிருக்கிறாயா! இதைக் கேட்பதற்கு உனக்கு என்ன அருகதை இருக்கின்றது. நீ முதலில் இதையெல்லாம் செய்! அப்புறம் எங்களைப் பார்த்துக் கேள் நீ!

கப்ரு அனாச்சாரத்தை நாங்கள் போய் தடுக்க வேண்டுமாம்! இவர் (பி.ஜே.) ஒரு சந்திலே ஒதுங்கியிருந்து வெளியே வராமல் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருப்பாராம்.. ஏன்? நீ போய் தடுக்க வேண்டியது தானே! எப்போதாவது தடுத்திருக்கின்றாயா? தடுக்க முயன்று இருக்கின்றாயா? அப்போது நீ வெட்டப்பட்டாயா? யாரிடம் வந்து கதை சொல்கின்றாயா?

இது கீரனூரியார் மதுரை தமுக்கம் மைதானத்தில் நின்று கொண்டு பி.ஜே.வை நோக்கிப் பேசிய பேச்சாகும். பேசுகின்ற நாள் 07.07.1991 பேசுகின்ற நேரம் இரவு சுமார் 10 மணி.

தமுக்கம் மைதானத்தில் கீரானூரியார் இவ்வாறு கொதித்தெழுந்து, கொந்தளித்து, நெருப்பு வார்த்தைகளைக் கக்கிக் கொண்டிருந்த அதே வேளையில்...

மேலப்பாளையத்தில் மோத்தை மீறாப்பிள்ளை தெருவில் சிப்கத்துல்லாஹ் என்பவரது வீட்டு வாசலில், கர்பலா என்ற தலைப்பில் பரேலவிஸத்தை எதிர்த்து பி.ஜே. உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.

முதலில் தெருவில் தான் மேடை அமைக்கப்பட்டது. மழைக்காலம்! அதனால் தூறல் விழுந்து கொண்டிருந்தது. ஒலிபெருக்கி உரிமையாளர் வந்து மைக் மழையில் நனையும், அதனால் வீட்டு வாசலில் மைக்கை வைப்போம் என்று சொல்லவே நடுத் தெருவில் நின்ற மைக் வீட்டு வாசலுக்கு வருகின்றது.

அதனால் வீதியில் நின்ற பி.ஜே. வீட்டு வாசலுக்கு வருகின்றார். வீடு கிழக்குத் திசையில் மேற்கு நோக்கி அமைந்திருந்தது. அதனால் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நின்று பேசிக் கொண்டிருந்தார். மழை தூறிக் கொண்டிருந்ததால் வீட்டு வாசலுக்கு முன்னால் யாரும் அமரவில்லை.

எதிர் வீடுகளில் உள்ள திண்ணைகளில் தான் ஆட்கள் உட்கார்ந்து பேச்சை கேட்டுக் கொண்டிருந்தனர். எதிர் வீட்டுத் திண்ணையில் உள்ளவர்கள் மட்டும் பி.ஜேவைப் பார்க்க முடிந்தது. தெற்கு வடக்குப் பக்கம் உள்ளவர்களால் அவரைப் பார்க்க முடியவில்லை.

அவர் பேசிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு ஆள் சென்று வரும் இடைவெளி இருந்தது. அப்போது நான் வாசலுக்கு முன்னால் உள்ள ஒரு சிறிய திண்டில் வடக்கு நோக்கி அமர்ந்திருந்தேன்.

எதிர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தவர்கள், கடுமையான குளிர் என்பதால் அரைத் தூக்கத்தில் அமர்ந்திருந்தனர். இந்நேரத்தில் வடக்கில் உள்ள ஒரு சந்திலிருந்து ஒருவர், ஒரு கையில்லாதவர் தோளில் துண்டு போட்டுக் கொண்டு வருவது போல் வந்தார்.

வித்தியாசமான அவரை சற்று வியப்புடன் நான் உற்று நோக்கிப் கொண்டிருக்கும் வேளையில் ஒரு நொடிப் பொழுதில் வீட்டு வாசலுக்கு வந்து, ஒரு வீச்சரிவாளை எடுத்து பி.ஜே.யின் கையில் வீசுகின்றார்.

அதே வேளையில் எனக்கு அருகில் நின்ற இன்னொருவர் மற்றொரு அரிவாளைத் திருப்பிப் பிடித்து என் இடது கையை தாக்குகின்றார். இவ்வாறு அவர் என்னை தாக்குவதற்குக் காரணம், பி.ஜே.வை வெட்ட வந்த முதலாமவரை நான் தடுத்து விடக் கூடாது என்பதற்காகத் தான். அரிவாளின் மறுபக்கத்தால் என் கையை தாக்கியதால் என் கை வீக்கத்தில் அப்படியே உப்பி விடுகின்றது.

மேலப்பாளையத்தில் பீஜே வெட்டப்படும் போது லுஹாவும் வெட்டப்பட்டதாக இந்தக் கட்டுரையில் லுஹா குறிப்பிட்டுள்ளார். இது உண்மையில்லை என்று ஆரம்பண்ணை இப்ராஹீம் கூறுகிறார். இவர் தான் பீஜே வெட்டப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது பீஜேக்கு துணையாக இருந்தவர்.

சகோதரர் பீஜே மேலப்பாளையத்தில் தாக்கப்பட்டு வெட்டப்பட்ட சம்பவத்தின் உண்மை நிலை என்ன? என்று அறிந்துகொள்ளும் நோக்கத்தோடு, அந்தச் சம்பவம் நடந்த நேரத்தில் உடன் இருந்து பீஜே வுக்கு அனைத்து உதவிகளையும் செய்த சகோதரர் ஆறாம்பண்ணை இப்ராஹிம் அவர்களை தொடர்பு கொண்டு கருத்து கேட்டோம். லுஹா வெட்டப்பட்டதாகக் கூறுவது பச்சைப் பொய் என்று அவர் உறுதிபடக் கூறுகிறார்.

அவர் சொன்ன செய்திகளை இங்கே சுருக்கமாக பதிவு செய்கிறோம்.

பீஜே கர்பலாவைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார். சிறிய மழை தூறல் இருந்ததால் மேடையிலும் மழை நீர் சொட்டத் தொடங்கியது. மைக் போன்ற உபகரணங்கள் பாதித்து விட கூடாது என்பதற்காக பக்கத்து வீட்டுத் திண்ணையில் சகோதரர் பிஜே மாற்றப்பட்டார் அது சிறிய இடம். அங்கே ஒரு ஆள் மட்டும் தான் நிற்க முடியும்.

பிஜே பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது ஒரு மர்ம நபர் மேலே டவல் மட்டும் போர்த்தியவராக வந்தார். சகோதரர் பிஜே அருகில் வந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டத் தொடங்கினார். பிஜே மைக்கை எடுத்து தடுத்தார். இருந்தாலும் இரண்டு வெட்டுக்கள் விழுந்துவிட்டன. சரியான காயம். .இரத்த வெள்ளத்தில் இருந்த பிஜே வை உடனே நான் மற்றும் சில சகோதரர்களின் உதவியுடன் குறிப்பாக சகோதரர் ஃபஸூலுல் இலாஹி ஆகியோரின் உதவியுடன் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தோம்.

வெட்டுக்காயம் பட்டது சகோதரர் பிஜேவுக்கு மட்டும் தானே தவிர ஷம்சுல்லுஹா எங்கே இருந்தார் என்று கூட தெரியவில்லை. பீஜே வை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும் நேரத்தில் அங்கே நின்று கொண்டிருந்த சம்சுல் லுஹாவை சகோதர இலாஹி நீங்களும் ஏறிக் கொள்ளுங்கள் என்று சொன்ன பிறகு தான் காரில் ஏறினார். ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்த பிறகு லுஹா மற்றும் மற்றவர்களெல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை இலாஹி எர்ணாகுளம் வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி இருந்ததால் அவராலும் பிஜே உடன் தங்க முடியவில்லை.

நானும் வேறொரு சகோதரரும் பிஜே க்கு பாதுகாப்பாக உதவிக்காக இரவில் ஆஸ்பத்திரியில் தங்கினோம்.

இன்னும் சொல்லப்போனால் ஆஸ்பத்திரியில் வைத்து பிஜேயைக் கொலை செய்வதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டது. அதற்கான சில மர்ம நபர்கள் கூட வந்தார்கள் அவருடைய பார்வையும் செயல்பாடுகளும் சந்தேகம் அளிக்கும் விதமாக இருந்தது. யாரையும் உள்ளே அனுமதிக்காமல் பாதுகாப்பாக உயிரைப் பணயம் வைத்து நானும் அந்த சகோதரரும் மட்டும் தான் இருந்தோம் ஷம்சுல்லுஹா தாக்கப்படவில்லை. வெட்டு காயம் இல்லை. எங்கே போனார் என்று தெரியவில்லை , லுஹா தாக்கப்பட்டார் என்று சொல்வது பச்சை பொய் என்று சகோதரர் ஆறாம்பண்ணை இப்ராஹிம் அவர்கள் சொல்லியிருக்கிறார். 

ஆராம்பண்ணை இப்ராஹீம் கூறும் மற்றொரு நபர் அய்யுப் அலி பைஜி ஆவார். இவர் தற்போது ஜாக் இயக்கத்தில் இருக்கிறார். - பீஜே

பி.ஜே.யின் இடது கையில் வெட்டிய பிறகு, அவரது கழுத்தை நோக்கி மீண்டும் அரிவாளை வீசுகின்ற போது, பி.ஜே. தன் வலது கையால் மைக்கின் கம்பியைத் தூக்கி தடுக்கின்றார். மைக் ஸ்டாண்டின் மீது அரிவாள் பட்டவுடன் ஒரு சப்தம் எழுகிறது.

அப்போது தான் அதுவரை என்ன நடக்கின்றது என்பதை அறியாதவர்கள், அரைத் தூக்கத்தில் இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு வருவதற்குள்ளாக வந்த இருவரும் ஓட்டமெடுக்கிறார்கள். ஒரு சிலர் அவர்களைத் துரத்திக் கொண்டு பின் தொடர்ந்து ஓடுகின்றார்கள். ஆனால், அவர்கள் தப்பி விடுகின்றார்கள்.

அல்லாஹ் ஒருவரைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து விட்டால் அதை யார் தடுக்க முடியும்? தெருவின் மத்தியில் போட்ட மேடையில் பேசவிருந்த பி.ஜே. தூறல் விழுந்த காரணத்தால் வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டு உரையாறிறனார். அது தான் அவருக்குப் பாதுகாப்பானது. அதாவது வெட்டுக் கையுடன் நின்றது. அரிவாளை கழுத்தை நோக்கி லாவகமாக வீசுவதற்கு வழியில்லாமல் அந்த இடம் குறுகிய இடமாக அமைந்து விட்டது. அதனால் வந்தவர்கள் சாதிக்க முடியாமல் போனது. ஆனால் அவர் தெருவில் நின்று கொண்டு பேசியிருந்தால் வந்தவர்கள் கனகச்சிதமாக தலையைக் கையோடு கொண்டு சென்றிருப்பார்கள். அல்லாஹ்வின் அற்புதக் காவல், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது போல், கழுத்துக்கு வந்தது கையோடு போனது.

கையில் இரத்தம் பீறிட்டவாறு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பி.ஜே. அனுமதிக்கப்படுகின்றார். மரத்துப் போவதற்காக ஊசிகள் ஒன்றுக்கு இரண்டு போட்டும் காயத்தின் ஆழம் காரணமாக வேதனையில் அவர் விடிய விடியத் தூங்கவில்லை.

இந்தக் கொலை முயற்சி பற்றி காவல்துறையில் நான் புகார் தெரிவித்தேன். முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

புகார் கொடுக்க லுஹா மறுத்து விட்டார் என்று இலாஹி சாட்சி கூறுகிறார் - பீஜே

ஆனால் ஆள் தான் பிடிபடவில்லை. நான் சாட்சி சொல்லி விடக் கூடாது என்பதற்காக எனக்கு ஒரு மொட்டைக் கடிதமும் வந்தது. அதில், உலகத்தில் நீ எந்தப் பகுதியில் இருந்தாலும் உன்னை வெட்டாமல் விட மாட்டேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே பி.ஜே.யும் சிகிச்சை முடிந்து தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஆனால் குற்றவாளிகள் பிடிபடவில்லை. பரேலவிகளின் செல்வாக்கு! பலமான பின்னணி!

இந்தக் கொலை வெறித் தாக்குதலின் இயக்குனராகச் செயல்பட்டவர் அடுத்த ஆண்டு அதே ஜூலை 7ஆம் திகதி அவரது எதிர்க் கோஷ்டியினரால் கொல்லப்பட்டார்.

இதை இங்கே குறிப்படக் காரணம், பரேலவிஸத்தின் வேகத்தையும், வீரியத்தையும், அதன் விஷத் தன்மையையும் விவரிப்பதற்காகத் தான்.

அந்தப் பரேலவிஸம், அதன் ஆதரவாளர்கள் மேலப்பாளையத்தில் பி.ஜே.யைக் கொன்று தீர்த்து விட வேண்டும் என்று கொடுவாளைத் தூக்கி வீசும் போது தான் கீரனூரியார் தமுக்கம் மைதானத்தில்,

வெட்டப்பட்டாயா? கொல்லப்பட்டாயா?... என்ற வசனங்களைப் பேசிக் கொண்டிருந்தார்.

அவர் கேட்டது போல் கப்ரு அனாச்சாரங்களை எதிர்த்து வெறும் சத்தம் மட்டும் போடாமல் இரத்தமும் சிந்திக் கொண்டிருந்தார்.

இது போன்று இந்த ஏகத்துவத்தல் இணைந்த எத்தனையோ சகோதரர்கள் இரத்தம் சிந்திக் கொண்டும், பொருள் இழப்பைச் சந்தித்துக் கொண்டும் இருக்கின்றனர். இந்தப் பரேலவிஸ எதிர்ப்புப் போராட்டத்தல் சிறைவாசம் அனுபவித்தவர்கள், ஊர் நீக்கம் செய்யப்பட்டவர்கள், காவல்துறையின் சித்ரவதைக்கு ஆளானவர்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

அல்லாஹ்வின் பள்ளிவாசலில் கூட இது வரை, இன்று வரை எத்தனையோ ஊர்களில் ஏகத்துவ சகோதரர்கள் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பவர்கள் கலீல் அஹ்மத் கீரனூரி போன்றவர்கள் தான்.

மேலப்பாளயத்தில் பி.ஜே. வெட்டப்பட்ட பிறகு தான் நமது ஜமாஅத்திற்கென்று தனிப் பள்ளிவாசல் மஸ்ஜிதுர்ரஹ்மான் என்ற பெயரில் கண்டோம். இன்று அந்த தவ்ஹீத் ஜமாஅத்தினர் பெருநாள் தொழுகை நடத்தும் போது சாதாரணமாக 10,000 பேர் கலந்து கொள்கின்றார்கள். 2,000 பெண்கள் கலந்து கொள்கின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்! திருநெல்வேலி மாவட்டத்திலேயே அதிகமான ஆண்களும் பெண்களும் பங்கெடுக்கும் பெருநாள் தொழுகை இது தான் என்று பத்திரிக்கைகள் வர்ணிக்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது. அதுபோல் நமது பிரச்சாரக் கூட்டங்களிலும் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிகின்றது.

அன்று திடலில் நின்று பேசிய கீரனூரி போன்றோர் இன்று பள்ளி வாசல் வளாகத்திற்குள் மட்டும் பேசி விட்டுச் செல்லும் நிலை! ஆனால் இன்னும், இன்றும் இந்த ஊரில் பரேலவிஸத்தை எதிர்த்துப் பேசவில்லை. இவ்வாறு நாம் குறிப்பிட்டுக் கூறுவதற்கான காரணம், இங்க அவரை வைத்துக் கூட்டம் நடத்துபவர்கள் பக்கா பரேலவிகள், முரீது ஏஜெண்டுகள்.

பரேலவிஸத்தை எதிர்த்து நடக்கும் இந்த யுத்தத்தில் இப்போதாவது இவர்கள் மூச்சு விட ஆரம்பித்துள்ளார்களே! அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

05.08.2009. 5:09 AM

முன்னர் ஜிஹாதை ஆதரித்து பின்னர் மாற்றிக் கொண்டீர்களா?

முன்னர் ஜிஹாதை நீங்கள் ஆதரித்ததாகவும் பின்னர் ஜிஹாத் கூடாது என்று உங்கள் நிலையை மாற்றிக் கொண்டதாகவும் உங்களால் தான் பலர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு சிறை சென்றதாகவும் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது பற்றிய உண்மை நிலை என்ன?

பதில்

இப்படி ஒரு பிரச்சாரம் சிலரால் செய்யப்பட்டு வருகின்றது. பல்வேறு அரங்குகளில் இது குறித்து நான் விளக்கம் கொடுத்து இருக்கிறேன். எழுத்து வடிவில் இப்போது தான் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. எழுத்து மூலமாக விளக்கம் அளிக்கும் வாய்ப்பு உங்களால் கிடைத்துள்ளது.

பயங்கரவாதம் வேறு ஜிஹாத் வேறு

எனக்கு விபரம் தெரிந்த காலம் முதல் இன்றைய தேதி வரை ஜிஹாத் என்ற பெயரில் அப்பாவிகளைக் கொலை செய்வதை நான் ஆதரித்ததே இல்லை.

உதாரணமாக கோவை குண்டு வெடிப்பில் பொது மக்களும், சிறுவர்களும் அதிக அளவில் பலியானார்கள். இந்தச் செயலை நான் எந்த ஒரு காலத்திலும் ஆதரிக்கவில்லை. எனவே குண்டு வைத்தவர்கள் என்னுடைய போதனையைக் கேட்டு அதைச் செய்தார்கள் என்பது கடுகளவும் உண்மை இல்லாததாகும்.

தற்காப்பு போர்

முஸ்லிம்கள் சங்பரிவாரத்தால் திட்டமிட்டு தாக்கப்படுகின்றனர். இது போல் தாக்கப்படும் போது பின்வாங்கி ஓட்டம் எடுக்காமல் துணிவுடன் எதிர்த்து நிற்க வேண்டும். தக்க பதிலடி கொடுக்க வேண்டும். ஓட்டம் பிடித்தால் சேதம் தான் அதிகமாகும். எதிர்த்து நின்றால் சேதம் குறைவாகவே இருக்கும் என்று நான் அன்றும் கூறினேன். இன்றும் கூறுகிறேன். இதை மேடை போட்டும் பேசியுள்ளேன். தன்னையும், தனது உடமைகளையும் காத்துக் கொள்வதற்காக போரிட்டு உயிர் துறந்தால் ஷஹீத் என்பதற்கு ஆதாரம் உள்ளது. இந்த நிலையை நான் மாற்றிக் கொள்ளவில்லை.

படை திரட்டுவது

சண்டை வரும் போது அல்லாமல் முன் கூட்டியே ஒரு படை திரட்டுவதும் பயிற்சி அளிப்பதும் அவசியம் என்ற நிலையில் நான் முன்னர் இருந்தேன்.

அதைத் தான் நான் மாற்றிக் கொண்டுள்ளேன்.

அது போல் இஸ்லாத்தின் எதிரிகளைக் குறி வைத்து தாக்குவது தவறல்ல என்றும் முன்னர் நான் கூறினேன்.

அந்தக் கருத்தையும் நான் மாற்றிக் கொண்டேன்.

யாருக்கும் பயந்தோ, விளைவுகளுக்கு அஞ்சியோ நான் மாற்றிக் கொள்ளவில்லை.

மாறாக திருக்குர்ஆனிலும் நபிவழியிலும் இதற்கு ஆதாரம் இல்லை என்பது தெரிய வந்ததால் இதை மாற்றிக் கொண்டேன். இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் பல இடங்களில் நான் விளக்கியுள்ளேன்.

எனது இந்தக் கருத்து தவறு என்று ஆதாரத்துடன் எடுத்துக் காட்டினால் நான் எனது நிலையை மாற்றிக் கொள்வேன்.

பாஜக உடன் கூட்டணியில் உள்ள கேப்டன் டிவியில் நிகழ்ச்சி நடத்தலாமா?

19/07/2020 வாட்ஸ் அப் கேள்வி பதில்

கருணை பாலம் திட்டத்தை உதவி செய்பவர்களுக்கு விளக்கி கூறி உதவி செய்ய சொல்லுங்கள்.

12/07/2020 வாட்ஸ் அப் கேள்வி பதில்

ரஹ்மத் இதழின் குதர்க்க வாதம்

ரஹ்மத் ஜூன் 1988 இதழில் நபித் தோழர்கள் விண்மீன்களைப் போன்றவர்கள் என்ற ஹதீஸை நிலைநாட்டவும் நமது வாதங்களை மறுக்கவும் முற்பட்டு அர்த்தமற்ற வாதங்களை எடுத்து வைத்துள்ளது. புதிய ஆசிரியர் காலம் சென்ற பழைய ஆசிரியரின் பெயரால் அதை வெளியிட்டிருக்கிறார். அது பற்றிய உண்மைகளை நாம் விளக்கியாக வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

ரஹ்மத் வாதம் 1

முதலாவதாக அதில் கூறப்பட்டுள்ள உவமை சரியில்லையாம். வானத்திலுள்ள எல்லா நட்சத்திரங்களும் வழிகாட்டுவதில்லை. எனவே இப்படி பொருந்தாத உவமையை நபி ஸல் அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என வாதிடுகிறார். அன்னுஜூம் என்று அல் வைத்து குறிப்பிட்டு கூறியிருப்பதிலேயே வழிகாட்டும் நட்சத்திரங்களளையே நபி ஸல் கருதியுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்கின்ற இல்க்கண ஆற்றல் இல்லாத இவருக்கு இந்த உவமை பொருந்தாததாக இருப்பதில் வியப்பில்லை தான்.

நமது விளக்கம். 1

அல் என்ற இடைச் சொல் பெயற் சொற்களின் ஆரம்பத்தில் சில சமயங்களில் பயன்படுத்தப்படும். அல் என்ற சொல் பயன்படுத்தப்படும் போது அதற்கு இரண்டு விதமான பொருள் உண்டு.

உதாரணமாக கிதாப் என்றால் புத்தகம்.

அதன் ஆரம்பித்தில் அல் இணைத்து அல்கிதாப் என்றால் அந்த புத்தகம் என்று பொருள்.

the என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக அல் பயன்படுத்தப்படுகிறது. இதே அல் என்ற சொல்லுக்,கு இன்னொரு பொருளும் உண்டு. இன்ஸான் என்றால் மனிதன் அல் இன்ஸான் என்றால் மனிதன் ஒவ்வொருவரும் என்ற பொருளும் உண்டு. இந்த அடிப்படையிலேயே ஹம்து என்ற வார்த்தையுடன் அல் இணைத்து அல்ஹம்து என்று ஆனதும் எல்லாப் புகழும் என்று பொருள் செய்யப்படுகிறது.

ரஹ்மத் இதழ் அல் என்ற சொல்லுக்கு முதல் அர்த்தம் மட்டுமே உள்ளது என்று கருதிவிட்டது போலும் அன்னுஜூமு என்றால் குறிப்பிட்ட சில நட்சத்திரங்கள் என்று பொருள் கொள்ள முடியும் என்பது போலவே அனைத்து நட்சத்திரங்கள் என்றும் பொருள் கொள்ள முடியும். இரண்டு பொருளுக்கும் அந்த வார்த்தை இடம் தரும். இந்த இரண்டில் எந்த பொருளையாவது குறிப்பாக நாம் முடிவு செய்வதென்றால் அது பயன்படுத்தப்படும் வாக்கியத்தில் அதை உணர்த்தக்கூடிய கரு அமைத்திருக்கும். அரபி இலக்கியத்தில் இதை கரீனா என்பர்.

குறிப்பிட்ட வழிகாட்டும் நட்சத்திரங்கள் என்ற பொருளை நாம் கொள்ளாமல் அனைத்து நட்சத்திரங்கள் என்ற பொதுவான பொருளை நாம் ஏன் தேர்வு செய்தோம் என்றால் அதற்கான கரு அந்த வாக்கியத்திலேயே உள்ளதால் தான்.

எவரைப் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள் என்பதே அந்த கரு.

எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடைய முடியும் என்றே அங்கே உவமை கூறப்படுகின்றது. எனவே இலக்கண இலக்கிய அடிப்படையில் நாம் செய்த பொருளே சரியானது. ரஹ்மத் நுனிப்புல் மேய்ந்துள்ளது.

(இதை எழுதியவர் காலம் சென்று விட்டதால் அவர் பதில் சொல்ல மாட்டார். அவரது பொறுப்பை ஏற்றுள்ள இப்போதைய ஆசிரியர் இலக்கண இலக்கிய அடிப்படையில் சர்ச்சை செய்ய முன்வந்தால் அதற்கும் நாம் தயாராகவே இருக்கிறோம்.

ரஹ்மத் வாதம் 2

மேற்கூறிய ஹதீஸ் ரஸீன் நூலில் உள்ளது. அதை மிஷ்காத்தில் பதிவு செய்துள்ளனர். உமர் ரலி அவர்கள் அதை அறிவித்துள்ளனர். என்கிறது ரஹ்மத்.

நமது விளக்கம் 2

இது பற்றி வருகின்ற எல்லா ஹதீஸ்களுமே இட்டுக் கட்டப்பட்டது என்பதை நாம் முன்பே குறிப்பிட்டுள்ளோம். அந்த இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களில் ஒன்றைத் தான் ரஹ்மத் எடுத்து வைக்கின்றது. அது எடுத்து வைத்த ஹதீஸில் எந்தக் குறைபாடும் இல்லை என்பது போல் சித்தரிக்க முற்படுகின்றது. புதிதாக இப்போது எடுத்து வைத்திருக்கும் ஹதீஸின் தரத்தையும் அலசுவோம்.

அதன் அறிவிப்பாளர் வரிசையில் நயீம் இப்னு ஹம்மாத் இடம் பெறுகிறார். அவர் பெருமளவு தவறாகக் கூறுபவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜ்ர் (ரஹ்மத்தும் ஒப்புக் கொண்ட அறிஞர்) கூறுகிறார்கள். இதில் இடம் பெறுகின்ற அப்துர் ரஹீம் இப்னு ஸைது என்பவன் பெரும் பொய்யன் என்கிறார்கள். இப்னு மயீன், ஹாபிழ் தஹபீ ஆகியோர் இதுதவறான ஹதீஸ் என்கிறார்கள். நயீம் என்பவர் குறை கூறப்பட்டவர் என இப்னுல் ஜவ்ஸி அவர்கள் இலல் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

ரஹ்மத் ஒப்புக் கொண்ட அறிஞர்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களைக் குறை கூறிய பின்னரும் இதை ஏன் ரஹ்மத் நியாயப்படுத்துகிறதோ தெரியவில்லை.

ரஹ்மத் வாதம் 3

ஹதீஸ் கலைத்துறையில் திறமைமிக்க ஷைகுல் ஹதீஸ்கள் பலரும் இதைக் கையாண்டுள்ளனர் என்கிறது.

நமது விளக்கம் 3

மேலே இதைக் கடுமையாக விமர்சனம் செய்தவர்களை விட எந்த மேதையும் இதைக் கையாளவில்லை. கப்ரிலிருந்து கை வெளியே வந்தது, கப்ரில் பதில் ஸலாம் வந்தது, 27ல் லைலத்துல் கத்ர் இறங்கியதைப் பெரியார்கள் பார்த்துள்ளனர். என்பது போன்ற அனேக பொய்களை அரங்கேற்றிய இந்தியாவின் ஷைகுல் ஹதீஸ் ஒருவரைத் தவிர வேறு எந்த மேதைகளும் இதைக் கையாளவில்லை. ஷைகுல் ஹதீஸ்கள் பலர் கையாண்டதாக வைத்துக் கொண்டாலும் தக்க சான்றுகளுடன் சுட்டிக் காட்டப்படும் விமர்சனங்களுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதை ரஹ்மத் மறுக்காது என்றே எண்ணுகிறோம். மறுத்தால் அவர்கள் ஏற்றுக் கொண்ட நூல்களிலிருந்தே சான்றுகள் தருவோம்.

ரஹ்மத் விளக்கம் 4.

நாம் தான் புதிதாக குழப்பம் விளைவிக்கிறோம் என்று இதுவரை சொல்லி வந்ததை ரஹ்மத் இப்போது மறுத்து விட்டது.அந்த காலத்திலேயே குழப்பவாதிகள் இருந்தார்களாம். அந்த ஹதீஸ் ஆதாரமற்றது என்பதற்கு எவர்களுடைய கூற்றுகளை நாம் எடுத்து வைத்தோம் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகின்றோம்.

அஹ்மத் இப்னு ஹம்பல், இப்னு ஹிப்பான் இப்னு ஹர்ராஷ், இப்னு ஹஸ்ம, இப்னு அப்துல் பர் ஆகிய அறிஞர் பெருமக்களின் விமர்சனங்களை சான்றாக சமர்ப்பித்தோம்.

அஹ்மது இப்னு ஹம்பல் உள்பட அந்த அறிஞர்களை எல்லாம் அந்தக் கால குதர்க்கவாதிகள் என்கிறது ரஹ்மத், இமாம் அஹ்மது இப்னு ஹம்பலையே குதர்க்கவாதிகள் என்பவர்கள் தான் இமாம்களை மதிப்பவர்களா? இந்தியாவி;ல் முரீது வியாபாரம் செய்தவர்களுக்கு ஷெய்குல் ஹதீஸ் பட்டமாம். அஹ்மது இப்னு ஹம்பல் குதர்க்கவாதியாம். அவர்கள் குதர்க்கவாதி என்றால் நாங்களும் குதர்க்கவாதியாகவே இருந்து விட்டுப் போகிறோம்.

ஹ்மத் வாதம்5

இவர்களது வாதங்களை எல்லாம் அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி அவர்கள் தோலூரித்துக் காட்டிவிட்டார்கள்.

நமது விளக்கம் 5

அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி எப்படி தோலுரித்துக் காட்டினார் என்று ரஹ்மத் குறிப்பிடவில்லை. அதை நாம் நமது முதல் இதழிலிலேயே குறிப்பிட்டுள்ளோம். (கஷ்பி மூலம் இந்த ஹதீஸ் சரி காணப்பட்டுள்ளது என்பது தான் ஷஃரானியின் தோலுரிப்பு கஷ்பு என்பது மெஞ்ஞானம்) இதைத் தவிர வேறு என்ன தோலை ஷஃரானி உரித்து விட்டார். ரஹ்மத் சொல்லுமா? தயவு செய்து ஷஃரானி புராணத்தை ரஹ்மத் சொல்லுமா? தயவு செய்து ஷஃரானி புராணத்தை ரஹ்மத் பாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். அந்த தபகாத் நூலில் உள்ள கஷ்பு ஆபாசம் எல்லாம் வெளிவரும்.

ஷஃரானியின் தபகாத் நூலில் இருந்து சாம்பிள் பார்க்க

கஷ்பு என்ற பெயரால் இவர் கூறியருக்கும் ஆபாசக் கதைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இவரது ஷைகு கழுதையுடன் உடலுறவு கொண்டதெல்லாம் அதில் உண்டு. அதையும் கஷ்பு என்வர் தானே இந்த ஷஃரானி. இவரது நூலைக் குப்பை கிதாபு என்று கூறாமல் வேறு எப்படிக் கூறுவதாம்?

ஸஹாபாக்களுக்கு உள்ள சிறப்புக்களை நாம் மறுக்கவில்லை. சிறப்பு என்பது வேறு. எதைப் பின்பற்ற வேண்டும் என்பது வேறு. இதை நாம் முன்பே தெளிவாக்கி விட்டோம்.

ரஹ்மத் ஆசிரியர் காலம் சென்று விட்ட ஒரே காரணத்தினாலேயே சுருக்கமான விளக்கம். பதில் சொல்லும் பொறுப்பை புதிய ஆசிரியர் ஏற்றால் விரிவான விளக்கம் தருவோம்.

 

தவ்ஹீத் பிரச்சாரம் கடந்து வந்த பாதை

தமுமுகவில் இருந்து விலகிய பின் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாநாடு பற்றி பீஜே அவர்கள் உணர்வில் எழுதிய தலையங்கம். இதில் கடந்து பாதையைத் தெளிவாக விளக்குகிறார். இன்று தமிழ்நடு தவ்ஹீத் ஜமாஅத் ஏன் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது என்பதற்கும் இதில் விடை உள்ளது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய முஸ்லிம்களுக்கான உரிமை மாநாடும் பேரணியும் தமிழக வரலாறு காணாத அளவிலும், ஒட்டு மொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்ட கழிசடைகள் தவிர மற்ற இயக்கத்தினர் இந்த மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளதை ஒப்புக் கொள்கின்றனர்.

இந்த மகத்தான வெற்றிக்கு என்ன காரணம்? இதை மற்றவர்கள் சிந்திக்க மறுத்தாலும் தவ்ஹீத் சகோதரர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

திருக்குர்ஆனும், நபிவழியும் மட்டுமே மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் என்ற கொள்கைக்காகவும்,

தீமைக்கும் தீயவர்களுக்கும் எதிராக நமது ஜமாஅத்தின் உறுதியான நிலைபாட்டுக்காகவும்,

சுய ஆதாயத்துக்கு ஜமாஅத்தைப் பயன்படுத்தாமல் மக்களுக்குச் சேவை செய்வதை மட்டுமே கொள்கையாகக் கொண்டதற்காகவும்

அல்லாஹ்வின் அளப்பரிய அருள் இந்த ஜமாஅத்தின் மீது இருந்ததே இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம்.

இந்த ஜமாஅத்தின் கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் ஒவ்வொரு பிரச்சனயின் போதும் மனிதர்களின் கணிப்பைப் பொய்யாக்கி அல்லாஹ் மகத்தான அருள் புரிந்திருப்பதை நாம் காண முடியும்.

(தவ்ஹீத் ஜமாஅத் என்று நாம் குறிப்பிடுவது பெயரைப் பற்றி அல்ல. மேலே நாம் எடுத்துக் காட்டிய கொள்கையில் இருந்தவர்களையே தவ்ஹீத் ஜமாஅத் என்று குறிப்பிடுகிறோம்)

நாம் மேற்கண்ட கொள்கையிலும், நிலைபாட்டிலும் உறுதி கொண்டு பிரச்சாரத்தை மேற்கொண்ட போது அந்நஜாத் என்ற மாத இதழை உருவாக்கினோம். அது மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தப் பத்திரிகையின் காரணமாக நம்மை நஜாத்காரர்கள் என்று சொல்லும் அளவுக்கு அது மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பதிப்பாளராக நியமிக்கப்பட்ட அபூ அப்துல்லா என்பவர் அதை தனது சொந்தப் பத்திரிகையாகப் பதிவு செய்து கொண்டது தெரிய வந்ததால் அந்த அநியாயத்தைக் கண்டித்து அதில் இருந்து நாம் வெளியேறினோம்.

தம்மிடம் பத்திரிகை இருப்பதால் அதன் மூலம் தவ்ஹீத் சகோதரர்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அபூ அப்துல்லாவுடன் இருந்தவர்கள் கணக்குப்போட்டனர்.

பத்திரிகை பலம் இல்லாமல் நம் நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி உண்மையைப் புரிய வைக்க எந்த வழியும் இல்லாமல் நிராயுதபாணிகளாகக் களத்தில் நின்றோம். அந்தப் பத்திரிகை மூலம் நம் மீது தொடர்ந்து சேறு வாரி இறைத்தும் கூட அல்லாஹ்வின் உதவி கொள்கைச் சகோதரர்கள் பக்கமே இருந்தது. தங்களிடம் இருந்த பண பலத்தாலும், பத்திரிகை பலத்தாலும் அவர்கள் மக்கள் மத்தியில் எடுபட முடியவில்லை. இருந்த இடம் தெரியாமல் அல்லாஹ் அவர்களைத் துடைத்தெறிந்து விட்டான்.

இதன் பின்னர் அல்ஜன்னத் என்ற பத்திரிகையை ஆரம்பித்தோம். ஜம்மிய்யது அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் இயக்கத்தை ஆரம்பித்து அதன் மூலம் பிரச்சாரத்தைத் துவக்கினோம்.

இந்தப் பத்திரிகையும், இந்த இயக்கமும் மாபெரும் வளர்ச்சி அடைந்தது. பல்வேறு ஊர்களில் மர்கஸ்கள் அமைந்தன. அனாதை நிலையங்கள், மாதரஸாக்கள் உருவாயின. நாகூர், கோட்டார், மதுரை, விழுப்புரம், பரங்கிப்பேட்டை ஆகிய நகரங்களில் மாபெரும் மாநாடுகள் நடத்தப்பட்டன. பல்வேறு ஊர்களில் தவ்ஹீத் சகோதரர்கள் தாக்கப்பட்டாலும் ஜாக் இயக்கம் அபூ அப்துல்லாவைப் பின்னுக்குத் தள்ளி விட்டு மாபெரும் வளர்ச்சியை நோக்கிப் பயணித்தது.

மக்களிடம் பிரபலமாகி விட்ட ஒரு பத்திரிகையை வைத்திருந்து அதை இழந்து நிற்பவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்பது மனிதர்களின் கணிப்பு. அதைப் பொய்யாக்கி அல்லாஹ் ஜாக் இயக்கத்துக்கு வெற்றியைத் தந்தான்.

ஜாக் இயக்கத்தின் தலைவராக இருந்த பீஜே, பிரச்சாரம் செய்ய அந்தப் பொறுப்பு தடங்கலை ஏற்படுத்துகிறது என்பதால் அந்தப் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டு கமாலுத்தீன் மதனியைத் தலைவராக்கினார்.

ஆரம்பத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த ஜாக் தலைமை அபாரமான வளர்ச்சி கண்ட பின் நிறைய சமரசங்களைச் செய்து கொண்டது.

பாலியல் மற்றும் பண மோசடியில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பீஜே ஆதாரத்துடன் கூறிய போது அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

நிர்வாகக் குழுவில் கணக்கு வைக்கப்படுவது நிறுத்தப்பட்டது.

பணக்காரர்களின் ஆடம்பரத் திருமணங்களில் கலந்து கொள்ளும் அளவுக்கு கொள்கை நீர்த்துப் போனது. இந்த நிலையை மாற்ற உள்ளிருந்து நடத்திய போராட்டம் தோல்வியில் முடிந்தது.

இனியும் இந்தக் கொள்கையற்றவர்களுடன் இருக்க முடியாது என்பதால் அதில் இருந்தும் வெளியேறினோம்.

எல்லா மர்கஸ்களும் ஜாக் வசம் இருந்தன. அல்ஜன்னத் பத்திரிகையும் அவர்களிடம் இருந்தது.

கொள்கைக்காக வெளியேறியவர்களிடம் கொள்கை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.

கூடிப் பேசுவதற்கு ஒரு ஆபீஸ் கூட இல்லை.

ஆனாலும் ஜாக் இயக்கத்தினருக்கு அல்லாஹ்வின் அருள் கிட்டவில்லை. கொள்கைவாதிகளுக்கே அல்லாஹ் வெற்றியைத் தந்தான். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு என்ற பெயரில் கொள்கையில் சமரசம் இல்லாமல் உறுதியாக நம் பயணத்தைத் தொடர்ந்தோம்.

இந்தக் காலகட்டத்தில் தான் மக்களின் உரிமைக்காகப் போராட தமுமுகவை ஆரம்பித்தோம். இதில் பலர் முன்னிலைப்படுத்தப்பட்டாலும் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு எனும் மக்கள் சக்தியே இதன் அடித்தளமாக அமைந்தது. அதன் இப்போதைய தலைவர்கள் யாரும் சமுதாயத்தால் அறியப்பட்டவர்களாகக் கூட இருக்கவில்லை. சிறைச்சாலைகள் அடக்குமுறைகளுக்கு ஆளான போது தவ்ஹீத் சகோதரர்கள் தான் ஆளானார்கள். பொருளுதவி செய்தவர்களும் அவர்கள் தான். ஊர் ஊராகச் சென்று தமுமுகவுக்கு அறிமுகத்தை ஏற்படுத்தியதும் தவ்ஹீத் பிரச்சாரகர்கள் தான்.

தவ்ஹீத்வாதிகளின் உழைப்பால் இயக்கம் வளர்ந்த பின் பீஜே இனி நான் பொறுப்பில் இருக்க அவசியம் இல்லை. இயக்கம் வளர வேண்டிய அளவுக்கு வளர்ந்து விட்டது எனக் கூறி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். அப்போது அமைப்பாளர் பொறுப்பு தான் முதல் நிலை பொறுப்பாகும்.

தமுமுக வளர்ந்த பின் அதில் ஏறி சவாரி செய்வதற்காக சுயநலவாதிகளும் கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகளும் நுழைந்து கொண்டனர். அரசியல் ஆசை ஊட்டினார்கள். இதற்கு பிஜேயும், தவ்ஹீத் பிரச்சாரகர்களும் முட்டுக்கட்டையாக உள்ளனர் என்று சதி ஆலோசனை செய்தனர்.

முடிவில் நாங்கள் அனைத்து மக்களின் ஆதரவைப் பெறப்போகிறோம். எனவே நீங்கள் தவ்ஹீத் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று நேருக்கு நேராகவே தெரிவித்தனர். இவர்களின் பதவி ஆசை கண்ணை மறைக்கிறது. அல்லாஹ்வை மறந்து இவர்கள் கணக்குப் போடுகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு தமுமுகவில் இருந்து தவ்ஹீத் பிரச்சாரகர்கள் அனைவரும் கொள்கைக்காக வெளியோறினோம்.

தமுமுக என்ற பெயர் அவர்களிடம் இருந்தது. அதன் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கள் அவர்களிடம் இருந்தன. அனைத்து கிளைகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால் நாம் வெறுங்கையுடன் வெளியேறினோம்.

தவ்ஹீத் சகோதரர்கள் வெளியேறிய பின் தவ்ஹீதை எதிர்க்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக தமுமுகவில் சேர்வார்கள் என்றும், தவ்ஹீத்வாதிகள் அடையாளம் தெரியாமல் போவார்கள் என்றும் தமுமுகவினர் கணக்குக் போட்டனர்.

மேலும் தவ்ஹீத் பிரச்சாரகர்களுக்கு எதிராக மொட்டைப் பிரசுரம், கள்ள வெப்சைட்டுகள், கள்ள முகவரியில் இருந்து அவதூறுகள் என்று தங்களின் அனைத்து சக்தியையும் நிராயுதபாணிகளான நமக்கு எதிராகப் பயன்படுத்தினார்கள். ஆளும் கட்சியுடன் கூட்டணி ஏற்பட்ட பின் அந்த உறவையும் நமக்கு எதிராகப் பயன்படுத்தினார்கள். நம்முடைய பிரச்சாரக் கூட்டங்களுக்கு சுன்னத் ஜமாஅத்துடன் சேர்ந்து கொண்டு இடையூறுகளை ஏற்படுத்தினார்கள்.

ஆனால் ஆயுதம் இல்லாமல் களத்தில் நின்ற தவ்ஹீத் சகோதர்களுக்குத் தான் அல்லாஹ்வின் உதவி கிடைத்தது.

ஜீரோவில் இருந்து 2004ல் பயணம் தொடங்கியது. கொள்கைக்கு ஒரு இயக்கம், சமுதாயப் பிரச்சனைக்கு ஒரு இயக்கம் என்ற நிலை இனி வேண்டாம். இரண்டு பணிகளையும் ஒரே இயக்கத்தின் மூலமே செய்வோம் என்ற முடிவுக்கு வந்து கும்பகோனத்தில் பத்து லட்சம் மக்கள் கொண்ட மாநாட்டை நடத்தினோம்.

தவ்ஹீத் என்று நம்மைக் காட்டிக் கொண்டால் மக்கள் வர மாட்டார்கள் என்று தமுமுக கூறிய காரணத்தை அல்லாஹ் பொய்யாக்கினான். தொடர்ந்து எடுத்த காரியம் அனைத்திலும் அல்லாஹ் வெற்றியை அளித்து வருகிறான்.

தவ்ஹீத் சகோதரர்கள் பிரிந்த பின் தமுமுக ஒரு மாநில மாநாட்டையும் நடத்தவில்லை.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் ஆறு வருடங்களில் மூன்று மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இரு நூறுக்கும் மேற்பட்ட ஊர்களில் சொந்தமான இடத்தில் அலுவலகம்

அனாதை இல்லம்

முதியோர் இல்லம்

இஸ்லாத்தில் இணையும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பயிற்சி மையங்கள்

ஆண்களும் பெண்களும் மார்க்க அறிஞராக தனித்தனிக் கல்விக் கூடங்கள்

சொந்த இடத்தில் பல பள்ளிக் கூடங்கள்

என ஆறே ஆண்டுகளில் இந்த ஜமாஅத்துக்கு அல்லாஹ் செய்த அருள் எண்ணிப்பார்க்க முடியாததாகும்.

இதற்குக் காரணம் முன்னர் நாம் சொன்ன கொள்கையும் அதில் சமரசம் செய்து கொள்ளாத உறுதியும் தான்.

மனிதக் கணக்குப்படி தவ்ஹீத் ஜமாஅத் அழிந்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு அனைத்தையும் விட்டு விட்டு தவ்ஹீத் ஜமாஅத் வெளியேறியது. தமுமுக தனது ஆதரவுத் தளத்தைப் பெருக்கிக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் அனைத்து வசதிகளையும் அது தன் வசம் வைத்துக் கொண்டிருந்தது.

ஆனால் அப்படி நடக்கவில்லை. மமக என்ற கட்சியை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு சுன்னத் ஜமாஅத்தினரும் இவர்களை ஆதரிக்கத் தயாராக இல்லை என்பதை இவர்களே நிரூபித்துக் காட்டி விட்டனர்.

கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து சுய நலன் இல்லாமல் செயல்படுவோருக்கு அல்லாஹ் மகத்தான உதவியைத் தருவான் என்பதன் மற்றொரு எடுத்துக் காட்டு தான் இந்த மாநாட்டின் மாபெரும் வெற்றி.

இந்த மாநாட்டைப் பொருத்தவரை அனைத்து சகோதரர்களும் நிதி உதவி செய்தார்கள் என்றாலும் மக்களால் அறியப்பட்ட முஸ்லிம் கோடீஸ்வரர்கள், தொழில் அதிபர்கள், கல்விக்கூடங்கள் நடத்துவோர் என யாரும் உதவவில்லை. தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேராத செல்வந்தர்களில் ஒரே ஒரு சகோதரர் தானாக முன் வந்து அளித்த ஐம்பதினாயிரம் தான் தாயகத்தில் கிடைத்த பெரிய தொகை எனலாம். சாமான்ய சாதாரண மக்களும் பாலைவனத்தில் பரிதவிக்கும் எழை உழைப்பாளிகளும் அளித்த சிறு சிறு தொகை மூலம் தான் இந்த மாநாடு இவ்வளவு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

ஞ்சை வல்லத்தில் மாநாடு நடத்தப்பட்ட போது திறமை மிக்க பலர் நம்மோடு இருந்தனர். என்ன காரணத்தாலோ அல்லாஹ்வின் உதவி இல்லாமல் போய் மாநாட்டுக்கு வந்த அனைவரும் அதிருப்தியோடும் கடும் கோபத்துடனும் சென்றார்கள். அந்த அளவுக்கு மக்கள் கஷ்டப்பட்டார்கள்.

மாநாடு முடிந்த இரவு நடந்த நிர்வாகக் கூட்டத்தில் நமக்குத் தகுதி இல்லை. நாம் அனைவரும் ராஜினாமாச் செய்ய வேண்டும் என்று பீஜே வலியுறுத்தினார். அந்த அளவுக்குக் குறைபாடுகள் இருந்தன.

ஆனால் அனுபவம் குறைவான மக்கள் இந்த மாநாட்டுக்குப் பொறுப்பு ஏற்று நடத்திய போதும் யாரும் எந்தக் குறையும் சொல்லாமல் சிறப்பாக நடந்துள்ளது என்றால் அது அல்லாஹ்வின் பேரருளால் தான்.

ஏற்கனவே தஞ்சை மாநாட்டைச் சரியாக நடத்தவில்லை என்று கெட்ட பெயர் வாங்கியிருந்தும் மக்கள் நம்மை நம்பினார்கள் என்றால் நமது நல்ல எண்ணத்துக்காக அல்லாஹ் செய்த அருள் தான்.

அனைவருடனும் சமரசம் செய்து கொண்டு தீமையைத் தடுக்காமல் இருந்தால் தான் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று மக்கள் கருதிக் கொண்டு நிலையில் தயவு தாட்சயமில்லாத தனது போக்கால் அனைது இயக்கங்களின் வெறுப்பைச் சம்பாதித்துள்ள தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்புக்கு மக்கள் செவி சாய்க்கிறார்கள் என்றால் இது அல்லாஹ் செய்து காட்டிய அற்புதம் இல்லாமல் வேறு என்ன?

தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவராக இருந்து கொண்டு அதன் கொள்கைக்கு எதிராக ரகசிய செயல் திட்டத்தில் ஈடுபட்டு அதற்காகக் கைது செய்யப்பட்டு ஜமாஅத்துக்கு ஹாமித் பக்ரி துரோகம் செய்தார். தலை சிறந்த பேச்சாளராக இருந்ததால் அவரால் ஜமாஅத் நலிவடையும் என்று பலரும் எதிர்பார்த்தனர். புதிதாக ஒருவர் கிளம்பும் போது என்ன சொல்கிறார் என்று பார்ப்பதற்காக மக்கள் கூடுவார்கள். அப்படி ஹாமித் பக்ரிக்கும் கூடினார்கள். ஆனால் அது நீடிக்கவில்லை. ஒரு சகோதரன் கூட அவரை நம்பவில்லை. இந்த வாரம் அவர் தனது தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்ததற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டு விட்டு சுன்னத் ஜமாஅத்தில் சேர்ந்து விட்டார்.

பாலியல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுக்காக பாக்கரும் அவருக்குத் துணை நின்றவர்களும் நீக்கப்பட்டனர். அவர்கள் இல்லாமல் மாநாடு நடத்த முடியுமா? என்று சிலர் நினைத்தனர். மேலும் பத்திரிகை தொடர்பை கையில் வைத்திருந்த ஜாம்பவான்களும்(?) இல்லாமல் நடத்தப்படும் இந்த மாநாடு பிசுபிசுத்து விடும் என்று கணக்குப் போட்டனர்.

ஆனால் தவறு செய்தவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அவர்களைத் தூக்கி எறிந்தது அனைவர் மத்தியிலும் நற்பெயரை அதிகமாக்கியது.

தஞ்சை மாநாட்டின் போது நம்மோடு பத்திரிக்கையாளர்களுடன் தொடர்புடையவர்கள் இருந்தனர். அவர்கள் நம்மோடு இருந்தும் தஞ்சை மாநாடு பற்றி ஸ்டாம்ப் ஸைஸ் செய்தி கூட வர வைக்க முடியவில்லை. டீவிக்களிலும் வரவில்லை. ஆனால் மாணவர்கள் அணி பொறுப்பாளர்களிடம் பத்திரிகை தொடர்பு பொறுப்பு கொடுக்கப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மீடியாக்களிலும் பிரதமரின் கவனத்துக்குச் செல்லும் அளவுக்கும் அவர்கள் மூலம் அல்லாஹ் இந்த சாதனையை நிகழ்த்தினான்.

நாம் கொள்கையில் உறுதியாகவும், சுயநலன் இல்லாமலும். ஆளுக்குத் தக்கவாறு வளைந்து கொடுக்காமலும் நம் பயணத்தைத் தொடரும் வரை அல்லாஹ்வின் உதவி நம் மீது இருந்து கொண்டே இருக்கும்.

தவ்ஹீத் ஜமாஅத் கடந்து வந்த பாதையை ஒருவர் திரும்பிப் பார்த்தால் இதோடு இவர்கள் அழிந்தார்கள் என்று எதிரிகள் ஆனந்தத் தாண்டவமாடும் அளவுக்கு இருந்தது. ஒவ்வொரு பிரிவுக்குப் பிறகும் அனைத்தையும் இழந்து விட்டு வந்த பின்பும் தமிழக முஸ்லிம் இயக்கங்களில் முதல் இயக்கமாக இந்த ஜமாஅத் திகழ்ந்து வருவது நம்ப முடியாத அதிசயமாகவே உள்ளது.

கொண்ட கொள்கையில் உறுதி, இந்த ஜமாஅத்தின் மூலம் எந்தப் பயனையும் அடையாத தலைமை எந்த நிலையிலும் நிலை மாறாத தன்மை காரணமாகத் தான் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அல்லாஹ் அருள் புரிந்து வருகிறான். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே

இந்தக் கூட்டத்தைக் கண்ட பின் இதை தங்கள் சுயநலனுக்கு பயன் படுத்த தவ்ஹீத் ஜமாஅத் எண்ணினால் கொள்கையில் வளைந்து கொடுக்க முயன்றால் மற்றவர்கள் அடைந்த கதியைத் தான் இந்த ஜமாஅத்தும் அடையும். இதை உணர்ந்து மேலும் தூய்மையாக நடக்கும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கிட அவனிடமே இறைஞ்சுகிறோம்.

09.09.2011. 5:19 AM

More Articles …

Subcategories