Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற இந்தியர் ஹஜ் செய்ய இந்தியாவில் இருந்து தான் செல்ல வேண்டுமா?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள்

ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வரக்கூடியவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களை இஹ்ராம் கட்டுவதற்காக நிர்ணயம் செய்துள்ளனர். அந்த இடங்களை அடைந்ததும் இஹ்ராம் கட்ட வேண்டும்.

  • மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபா என்ற இடத்தையும்,

(துல்ஹுலைஃபா என்ற இடம் மக்காவுக்குத் தெற்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. )

  • ஷாம் (சிரியா) வாசிகளுக்கு ஜுஹ்ஃபா என்ற இடத்தையும்,

(ஜுஹ்ஃபா என்ற இடம் மக்காவுக்கு வடக்கில் 187 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. )

  •  நஜ்துவாசிகளுக்கு கர்னுல் மனாஸில் என்ற இடத்தையும்,

(கர்ன் அல்மனாஸில் என்பது மக்காவுக்குக் கிழக்கில் உள்ள ஒரு மலையின் பெயராகும். மக்காவிலிருந்து 94 கிலோ மீட்டர் தொலைவில் அது அமைந்துள்ளது. )

  • யமன்வாசிகளுக்கு யலம்லம் (இப்போதைய ஸஃதியா) என்ற இடத்தையும்

(யலம்லம் என்பது மக்காவுக்கு வடக்கே உள்ள ஒரு மலையாகும். இது மக்காவிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. )

இஹ்ராம் கட்டும் இடங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள்.

  • இந்த எல்லைகள் இந்த இடங்களில் உள்ளவர்களுக்கும், இந்த இடங்களில் வசிக்காமல் இந்த இடங்கள் வழியாக ஹஜ், உம்ராவை நாடி வரக்கூடியவர்களுக்கும் இஹ்ராம் கட்டும் இடங்களாகும்.

இந்த எல்லைகளுக்கு உட்பட்டு வசிப்பவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடமே எல்லையாகும்.

மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்ட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1524, 1526, 1529, 1530, 1845.

இந்தியாவிலிருந்து செல்பவர்கள் யலம்லம் வழியாகச் செல்வதால் அங்கே இஹ்ராம் கட்ட வேண்டும்.

ஆடை அணிவதற்குப் பெயர் இஹ்ராம் அல்ல என்பதை நாம் குறிப்பிட்டுள்ளோம். விமானம், கப்பல், போன்றவற்றில் புறப்படுபவர்கள் முன்பே ஆடையை அணிந்து விட்டாலும், அந்த இடத்தை அடையும் போது தல்பியா கூறி இஹ்ராம் கட்ட வேண்டும்.

இஹ்ராம் பற்றிய விளக்கம்

"இஹ்ராம்' என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும்.

ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும், உம்ராவையும் செய்ய நாடினால் "லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்'' (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூற வேண்டும்.

ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் "லப்பைக்க ஹஜ்ஜன்'' என்று கூற வேண்டும்.

உம்ராவை மட்டும் செய்ய நாடினால் "லப்பைக்க உம்ரதன்'' என்று கூற வேண்டும்.

இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும்.

صحيح مسلم

3054 – وَحَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ حَدَّثَنَا هُشَيْمٌ حَدَّثَنَا حُمَيْدٌ عَنْ بَكْرٍ عَنْ أَنَسٍ – رضى الله عنه – قَالَ سَمِعْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- يُلَبِّى بِالْحَجِّ وَالْعُمْرَةِ جَمِيعًا. قَالَ بَكْرٌ فَحَدَّثْتُ بِذَلِكَ ابْنَ عُمَرَ فَقَالَ لَبَّى بِالْحَجِّ وَحْدَهُ. فَلَقِيتُ أَنَسًا فَحَدَّثْتُهُ بِقَوْلِ ابْنِ عُمَرَ فَقَالَ أَنَسٌ مَا تَعُدُّونَنَا إِلاَّ صِبْيَانًا سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « لَبَّيْكَ عُمْرَةً وَحَجًّا ».

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "லப்பைக்க உம்ரதன் வஹஜ்ஜன்'' என்று கூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம்

கேள்வி
ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் போது தவாப் செய்வதை நாம் அறிந்திருக்கிறோம்.. ஹஜ் உம்ரா இல்லாமல், இஹ்ராம் உடை அணியாமல் மக்காவில் இருக்கும் போது தவாப் மட்டும் செய்யலாமா?
என்.ஹஸ்ஸான், தொண்டி

பதில்
ஹஜ் உம்ராவில் மட்டுமின்றி சாதாரண நேரத்திலும் சாதாரண நிலையிலும் வெறும் தவாப் மட்டும் செய்யலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது ஹஜ் உம்ரா செய்யவில்லை. இஹ்ராம் இல்லாமல் தான் மக்காவில் பிரவேசித்தார்கள்.

صحيح البخاري
1846 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَامَ الفَتْحِ، وَعَلَى رَأْسِهِ المِغْفَرُ، فَلَمَّا نَزَعَهُ جَاءَ رَجُلٌ فَقَالَ: إِنَّ ابْنَ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الكَعْبَةِ فَقَالَ «اقْتُلُوهُ»

1846 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றிய போது ஒரு மனிதர் வந்து, இப்னு கத்தல் என்பவன் கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறான்! எனக் கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவனைக் கொன்றுவிடுங்கள்! என்று உத்தரவிட்டார்கள்.

நூல் : புகாரி 1846


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலையை மறைக்காமல் மக்காவுக்குள் நுழைந்துள்ளதால் அவர்கள் இஹ்ராம் அணியவில்லை என்பது உறுதி. இஹ்ராம் அணிந்திருந்தால் தலையை தொப்பி மூலம் மறைத்திருக்க மாட்டார்கள்.


மக்காவை வெற்றி கொண்டு கஅபாவுக்குள் வந்த போது அவர்கள் தவாப் செய்துள்ளார்கள்.


صحيح مسلم
وَأَقْبَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَقْبَلَ إِلَى الْحَجَرِ، فَاسْتَلَمَهُ ثُمَّ طَافَ بِالْبَيْتِ، قَالَ: فَأَتَى عَلَى صَنَمٍ إِلَى جَنْبِ الْبَيْتِ كَانُوا يَعْبُدُونَهُ، قَالَ: وَفِي يَدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَوْسٌ وَهُوَ آخِذٌ بِسِيَةِ الْقَوْسِ، فَلَمَّا أَتَى عَلَى الصَّنَمِ جَعَلَ يَطْعُنُهُ فِي عَيْنِهِ، وَيَقُولُ: {جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ} [الإسراء: 81]، فَلَمَّا فَرَغَ مِنْ طَوَافِهِ أَتَى الصَّفَا، فَعَلَا عَلَيْهِ حَتَّى نَظَرَ إِلَى الْبَيْتِ، وَرَفَعَ يَدَيْهِ فَجَعَلَ يَحْمَدُ اللهَ وَيَدْعُو بِمَا شَاءَ أَنْ يَدْعُوَ،


பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதை நோக்கி அதை முத்தமிட்டார்கள். பின்னர் கஅபாவை தவாப் செய்தார்கள். பின்னர் காஃபிர்கள் வணங்கிக் கொண்டு இருந்த கஅபாவில் ஒரு பக்கம் வந்தார்கள் அதை தம்மிடம் இருந்த வில் மூலம் குத்தினார்கள். உண்மை வந்தது என்ற 17:81 வசனத்தையும் ஓதினார்கள். தவாப் செய்து முடித்த பின் சபா குன்றில் ஏறினார்கள்
நூல் : முஸ்லிம்


சாதாரணமாக தவாப் மட்டும் செய்யலாம் என்பதை இதன் மூலம் அறியலாம்.


தவாப் செய்வோருக்காக எனது இல்லத்தை இருவரும் தூய்மையாக்குங்கள் என்று அல்லாஹ் இப்ராஹீம் நபிக்கும் இஸ்மாயீல் நபிக்கும் கட்டளையிட்டான். இதை 2:125, 22:26 ஆகிய வசனங்களில் காணலாம்.


கஅபாவை கட்டும் போதே தவாப் செய்பவர்களுக்காக என்று அல்லாஹ் கூறுகிறான். அப்போது ஹஜ்ஜோ உம்ராவோ இருக்கவில்லை. கஅபா கட்டி முடித்த பின்னர் தான் இப்ராஹீம் நபியை ஹஜ்ஜுக்கு அழைக்க சொல்கிறான்.


இதிலிருந்தும் சாதாரணமாக தவாப் செய்யலாம் என்பதை அறியலாம்;


مسند أحمد
4462 - حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ عَبْدِ اللهِ (1) بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، أَنَّهُ سَمِعَ أَبَاهُ يَقُولُ لِابْنِ عُمَرَ مَا لِي لَا أَرَاكَ تَسْتَلِمُ إِلَّا هَذَيْنِ الرُّكْنَيْنِ الْحَجَرَ الْأَسْوَدَ، وَالرُّكْنَ الْيَمَانِيَ، فَقَالَ ابْنُ عُمَرَ: إِنْ أَفْعَلْ فَقَدْ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " إِنَّ اسْتِلَامَهُمَا يَحُطُّ الْخَطَايَا "قَالَ: وَسَمِعْتُهُ يَقُولُ: " مَنْ طَافَ أُسْبُوعًا  يُحْصِيهِ، وَصَلَّى رَكْعَتَيْنِ كَانَ لَهُ كَعِدْلِ رَقَبَةٍ " قَالَ: وَسَمِعْتُهُ يَقُولُ: " مَا رَفَعَ رَجُلٌ قَدَمًا، وَلَا وَضَعَهَا إِلَّاكُتِبَتْ لَهُ عَشْرُ حَسَنَاتٍ، وَحُطَّ عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ، وَرُفِعَ لَهُ عَشْرُ دَرَجَاتٍ " 


ஏழு முறை தவாப் செய்து இரு ரக்அத் ஒருவர் தொழுதால் ஒரு அடிமையை விடுதலை செய்த நன்மையை அடைவார் என் நபிகள் நாயகம் (ஸ;ல்) அவர்கள் கூறியுள்ளனர்
நூல் : அஹ்மத்

ஒருவர் தன் உறவினரிடம் கடனாகவோ தானமாகவோ பொருளாதாரம் பெற்று ஹஜ் செய்யலாமா? அவருக்கு பொருளாதார உதவி செய்யலாமா?

More Articles …