Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

நாம்ஸ்ட்ர டாமஸ் மோடி பற்றி முன்னறிவிப்பு செய்தாரா?

தினமலர் நாளேட்டின் புளுகு மூட்டை

மோடி பிரதமரானதும் இது பற்றி தினமலர் நாளேடு பின்வருமாறு புளுகி இருந்தது.

450 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லப்பட்ட மோடியின் வெற்றி!

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ள நிலையில்,  21ம் நூற்றாண்டில் இந்திய அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும். நரேந்திர மோடி என்ற நபரின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும்  என, 450 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரெஞ்சு கணிப்பாளர், தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரெஞ்ச் நாட்டை சேர்ந்தவர், மைக்கேல் டி நாம்ஸ்ட்ரடாமஸ். 1500களில் வாழ்ந்த இவர், எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை தன் யூகத்தால் கணித்து முன்கூட்டியே எடுத்துரைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். நாம்ஸ்ட்ரடாமஸ் லத்தீன் மொழியில் எழுதிய,  தி புரோபெசீஸ் என்ற புத்தகத்தில், உலகில் பல நாடுகளிலும் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி முன்கூட்டியே எழுதி வைத்துள்ளார். இந்த புத்தகத்தில் முதல் பதிப்பு, 1555ல் வெளியாகியுள்ளன. இந்த புத்தகத்தை மகாராஷ்டிராவை சேர்ந்த ராமச்சந்திர ஜோஷி மராத்தி மொழியில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்.

இந்திய அரசியல் மாற்றங்கள் குறித்து நாம்ஸ்ட்ரடாமஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்திய அரசியலில், 21ம் நூற்றாண்டில் பெரும் மாற்றம் நிகழும். நரேந்திர மோடி என்ற நபரின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும்; காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும். வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி என்ற நபர்களால் பாரதிய ஜனதா கட்சி எழுச்சி பெறும். வாஜ்பாய் நீண்ட நாட்கள் ஆட்சியில் இருக்க மாட்டார். அத்வானி, கட்சியை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பார். நரேந்திர மோடி நீண்ட நாட்கள் பதவியில் இருப்பார். சிறந்த இரும்பு மனிதரான அவர், தன் சாதனைகளை எடுத்துக் கூறி மக்களின் மனதில் இடம் பிடிப்பார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். இது தவிர, பிரெஞ்சு புரட்சி, ஹிட்லர், பல்வேறு அணு ஆயுதச் சோதனைகள் மற்றும் 2001ல் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஆகிய சம்பவங்களும் இவரின் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி தினமலர் புளுகிய போது இது கட்டுக்கதை. இப்படி எந்த மனிதனாலும் சொல்ல முடியாது. மேற்கண்ட நூலின் பிரஞ்ச் வடிவத்தையும் அதன் நேரடி மொழிபெயர்ப்பையும் தினமலர் வெளியிடத் தயாரா என்று நாம் சவால் விட்டோம்.

இது குறித்து உணர்வு ஏட்டிலும் பின்வருமாறு கேள்வி எழுப்பி இருந்தோம்.

இந்தச் சம்பவம் உண்மையாயிருந்தால் உலகில்  நடக்கவுள்ள அனைத்துப் பிரச்சனைகளும் நாஸ்டர்டாமுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

இவர் தனது புத்தகத்தில் மாயமான மலேசிய விமானம் தற்போது எங்கே உள்ளது என்பதைப் பற்றி விளக்கியுள்ளாரா என்பதை தினமலர் விளக்குமா?

மோடி ஆட்சிக்கு வருவார் என்பது பற்றி எழுதிய பிரெஞ்சு கணிப்பாளர் அவர் இராஜபக்சேவை இந்தியாவிற்கு அழைத்து அசிங்கப்படுவார் என்பது குறித்து எதுவும் எழுதி வைத்துள்ளாரா என்பதை விளக்குமா?

பின்னர் நடக்கவிருக்கும் செய்திகள் என்பவை மறைவான ஞானத்தில் உள்ளவை. படைத்த இறைவனைத் தவிர வேறு யாரும் அதை அறிந்து கொள்ள முடியாது என்ற ஒரு அடிப்படையான அறிவு கூட இல்லாமல் இப்படி பிரெஞ்சு கணிப்பாளர் அதைக் கணித்தார்; இதைக் கணித்தார் என்று 1500 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னார் என்று பொய்களை அவிழ்த்துவிட்டுள்ளது தினமலர்.

பகிரங்க விவாதத்துக்கும் வராமல், தான் எழுதியதை நிரூபிக்கவும் முன்வராமல், தவறாக இட்டுக்கட்டிக் கூறியதற்கு மன்னிப்பும் கேட்காமல் கள்ள மவுனம் சாதித்த தினமலர் ஒரு ஆண்டு கழித்து அதே விஷயத்தை மேலும் கொஞ்சம் சேர்த்து புதுச் செய்தி போல் வெளியிட்டு தனது அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்திக் கொண்டது.

தினமலர் இப்போது எழுதியதையும், முன்னர் எழுதியதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! முன்னர் சொன்னதை விட மேலும் கூடுதல் பொய்களைச் சேர்த்து தான் ஒரு புளுகு மூட்டை என்பதை பறை சாற்றியுள்ளது.

இன்றய தினமலர் ஏட்டில் அதே பொய்ச்செய்தி இன்று (செப்டம்பர் 20) பின்வருமாறு வெளியிட்டுள்ளது.

புதுடில்லி : 2014ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை மோடி தலைமையில் இந்தியாவில் ஆட்சி நடக்கும். அவரது ஆட்சியில் இந்தியா உலகின் மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கும் என 450 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சு நாட்டு ஜோதிடர் நாஸ்டிராடமஸ் தான் எழுதிய ஜோதிட குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.

பிரெஞ்ச் நாட்டு ஜோதிடர் நாஸ்டிராடமஸ். இவர், 1555ம் ஆண்டு வருங்காலத்தில் உலகில் நடக்கப் போகும் பல முக்கிய நிகழ்வுகள் குறித்து ஜோதிட கணிப்பை எழுதி வைத்துள்ளார். பிரெஞ்ச் மொழியில் எழுதப்பட்ட அந்த ஜோதிட குறிப்பு புத்தகத்தின் 32 மற்றும் 33 ம் பக்கங்களில் இந்தியா குறித்து அவர் எழுதி உள்ளார். நாஸ்டிராடமஸ் எழுதிய ஜோதிட குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

குளோபல் மாஸ்டராக இந்தியா

பொறுத்திருங்கள். ராமராஜ்யம் வரப் போகிறது. நடுத்தர வயதுடைய அதீத ஆற்றல் கொண்டு மனிதர் ஆட்சிக்கு வருவார். அவரது ஆட்சி காலம், இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் பொற்காலமாக திகழும். அவரது சனாதன தர்மத்தால் இந்தியா மிகச் சிறந்த இந்து நாடாக மாறும். துவக்கத்தில் பலரும் அவரை வெறுத்தாலும், பின்பு அவரை தங்களின் தலைவராக ஏற்றுக் கொள்வார்கள். அவரது தலைமையில் இந்தியா குளோபல் மாஸ்டர்  ஆக மட்டுமின்றி, பல நாடுகளுக்கும் இந்தியா புகழிடமாக மாறும் . இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஊழல் காரணமாக 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி வீழ்ச்சி அடையும். 2014 முதல் 2026 வரை மோடி ஆட்சி நடைபெறும். வாஜ்பாய், அத்வானி, மோடி ஆகியோர் பா.ஜ.,வின் 3 தூண்களாக திகழ்வார்கள். அவர்களில் மோடி, மிகப் பெரிய ஆற்றல் வாய்ந்தவராக திகழ்வார். அவரது ஆட்சியில் படிப்படியாக இந்தியாவில் மாற்றங்கள் நிகழும். அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா நாடுகளுடனான பிரச்னை, காஷ்மீர் பிரச்னை ஆகியவற்றையும் தீர்ப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாஸ்டிராடமஸ் தனது ஜோதிட கணிப்பு புத்தகத்தில் ஹிட்லரின் ஆட்சி வீழ்ச்சி அடைவது, ஒபாமா அமெரிக்காவின் அதிபர் ஆவது, அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் செப்டம்பர் 11ம் தேதி இடிக்கப்பட்டது, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல முக்கிய வரலாற்று நிகழ்வுகள் குறித்தும் எழுதி வைத்துள்ளார்.

இந்த இரண்டு கற்பணைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து தினமலரின் பித்தலாட்டங்களை அறிந்து கொள்ளலாம்.

முதலில் வெளியிட்ட புளுகு மூட்டையில் 2014ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை மோடி தலைமையில் இந்தியாவில் ஆட்சி நடக்கும் என்று சொல்லப்படவில்லை என்று நாம் சொல்கிறோம்.

அவரது ஆட்சியில் இந்தியா உலகின் மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்பதும் சொல்லப்படவில்லை என்று நாம் சொல்கிறோம்

அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா நாடுகளுடனான பிரச்னை, காஷ்மீர் பிரச்னை ஆகியவற்றையும் தீர்ப்பார் என்பதும் சொல்லப்படவில்லை என்றும் நாம் சொல்கிறோம்.

தினமலர் கூறியபடி மேற்படி நூலில் காங்கிரஸ், வாஜ்பாய், அத்வானி, மோடி, ஒபாமா, ராகுல் என்ற பெயர் கூட கூறப்படவில்லை என்றும் நாம் சொல்கிறோம்.

 அதை நிரூபிக்க தினமலர் தயாரா?

இந்தியாவில் ராம்ராஜ்ஜியம் வரும் என்று அந்த நூலில் சொல்லப்படவில்லை என்று நாம் சொல்கிறோ. இதை தினமலர் நிரூபிக்குமா?

சீனா பாகிஸ்தான் காஷ்மீர் ஆகிய பிரச்சனைகள் மோடி ஆட்சியில் தீர்க்கப்படும் என்று அந்த நூலில் சொல்லப்படவில்லை என்றும் நாம் சொல்கிறோம்.

 இதை தினமலர் அந்த  நூலில் இருந்து எடுத்துக் காட்டத் தயாரா?

மோடி ஆட்சியில் இந்தியா உலகின் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்று அந்த நூலில் சொல்லப்படவில்லை என்கிறோம்.

அதை எடுத்துக் காட்டி நிரூபிக்க தினமலர் தயாரா?

2026 வரை மோடி ஆட்சியில் இருப்பார் என்று அந்த அந்த நூலில் சொல்லப்படவில்லை என்கிறோம்.

அதை எடுத்துக் காட்ட தினமலர் தயாரா?

செப்டமபர் 11 தாக்குதல் பற்றி அந்த  நூலில் சொல்லப்படவே இல்லை என்கிறோம்.

அதை எடுத்துக் காட்டி நிரூபிக்க தினமலர் தயாரா?

ஒபாமா அமெரிக்க அதிபராவார் என்று அந்த நூலில் சொல்லப்படவே இல்லை என்கிறோம்.

தினமலர் அதை எடுத்துக் காட்டத் தயாரா?

இந்தியா இந்து நாடாக ஆகும் என்று அந்த நூலில் சொல்லப்படவில்லை என்று நாங்கள் சொல்கிறோம்.

தினமலர் அதை எடுத்துக் காட்டுமா?

இந்தியாவில் ராமராஜ்யம் வரப்போகிறது என்றும் அந்த நூலில் சொல்லப்படவே இல்லை என்று நாங்கள் சொல்கிறோம்.

அந்த நூலில் இதை தினமலர் எடுத்துக் காட்டத் தயாரா?

இதில் உள்ள ஒவ்வொன்றையும் அந்த நூலில் இருந்து எடுத்துக் காட்டி நிரூபிக்கும் கடமை தினமலருக்கு உண்டு.

ஒரு தடவை ஒரு பொய்யைச் சொன்னால் தவறுதலாக வெளியிட்டு விட்டதாக எண்ண வழியுண்டு. ஒரு வருடத்துக்கு முன் ஒரு பொய்யை வெளியிட்டு அதை நிரூபிக்குமாறு அறிவுலகம் சவால் விட்ட பின் அதை  நிரூபிக்காமல் அல்லது தவறுக்கு மன்னிப்பும் கேட்காமல் அதே பொய்யை ஒரு வருடம் கழித்து புதுத் தலைப்பில்  வெளியிடுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

இது பீகார் தேர்தலுக்காக புதுடெல்லியில் இருந்து பரப்பப்படுகிறது. அதனால் தான் செய்தியின் சோர்ஸ் பற்றி சொல்லும் போது புது டெல்லி என்று தினமலர் போட்டுள்ளது.

எந்த மனிதனாலும் எதிர்காலத்தில் நடக்கவுள்ளதை அறிய முடியாது என்ற குறைந்த பட்ச அறிவு இல்லாத தினமலர் இனியாவது திருந்துமா?

20.09.2015. 5:45 AM

இனி ஆய்வுகள் மட்டுமே

அன்பிற்குரிய கொள்கைச் சகோதரர்களுக்கு பீ.ஜைனுல் ஆபிதீனுடைய அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த பல ஆண்டுகளாக ஏகத்துவக் கொள்கையை நாம் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தாலும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் சட்ட திட்டங்களில் மக்களுக்கு தெளிவுபடுத்தியவைகளை விட தெளிவுபடுத்த வேண்டியவை அதிகமாக உள்ளன.

சமீபத்தில் நடந்த விவாதத்துக்குப் பின் இது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.

இறைவனுக்கு உருவம் உண்டு என்ற விஷயம் இந்த விவாதத்துக்கு முன்னால் அதிகமான தவ்ஹீத் சகோதரர்களுக்குத் தெரியாமலே இருந்துள்ளது என்பதை இப்போது அறிய முடிகிறது.

இந்த விஷயம் மேலோட்டமாகத் தான் தெரியும்; இவ்வளவு ஆதாரங்களுடன் எங்களுக்குத் தெரியாது என்று சிலரும், இறைவனுக்கு உருவம் இருப்பதே இப்போது தான் தெரிந்தது என்று சிலரும், இறைவனுக்கு உருவம் இல்லை என்பது தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை என்று கருதியிருந்தோம்; இப்போது தான் தெளிவு கிடைத்தது என்று சிலரும் என்னிடம் கூறினார்கள்.

முக்கியமான விஷயங்கள் கூட இவ்வளவு காலம் சென்ற பின்பும் தெளிவுபடுத்தப்படாமல் உள்ளது என்பது இதன் மூலம் உறுதியானது.

இதற்குக் காரணம் நூல் வடிவில் மக்களுக்குப் பல விஷயங்கள் சொல்லப்படவில்லை என்பது தான்.

எனவே அரசியல், சமுதாயப் பிரச்சனைகள், இயக்க நடவடிக்கைகள் ஆகிய அனைத்தில் இருந்தும் ஆறு மாத காலம் முழுமையாக ஒதுங்கி முற்றிலும் மார்க்கம் சம்மந்தமான ஆய்வில் ஈடுபட்டு அனைத்தையும் நூல் வடிவில் மக்கள் மத்தியில் வைப்பது அவசியம் என்று கருதுகிறேன்.

எனவே எந்தப் பிரச்சனைக்காகவும் யாரும் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம்.

எந்தப் பிரச்சனையையும் ஆறு மாத காலத்துக்கு என் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாக்களித்த சில நிகழ்ச்சிகள் மட்டும் உள்ளன. அவற்றை வாக்களித்த படி நிறைவேற்றுவேன். இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்.

26.07.2010. 19:27 PM

குறிப்பு : கொள்கைச் சகோதரர்கள் வாய்ப்பளிக்காததால் இதில் கூறியவாறு நடக்க முடியவில்லை. 

அபுதாபி ஸாலிம் விவாதிக்க அழைத்தாரா

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் தொடர்பாக தங்களை Salem al Aamry (இவர் ஜாகிர் நாய்க், பிலால் பிலிப்ஸ் கூட்டத்தைச் சேர்ந்தவர்) அவர்கள் விவாதத்துக்கு அழைத்ததாகவும், ஆனால் தமிழில் வார்த்தைகளால் விளையாடுவது போல் அரபியில் செய்ய முடியாது என்பதற்காக தாங்கள் பின்வாங்கியதாகவும் அய்யம்பேட்டயை (தஞ்சாவூர் மாவட்டம்) சேர்ந்த பிலால் பிலிப்ஸ் வகையறாக்கள் என்னிடம் சில மாதங்களுக்கு முன்னால் கூறினார்கள். இது உண்மையா?

அப்துல் ஹகீம் பெங்களூர்

பதில்

நான் அமீரகம் சென்றிருந்த போது எனது நிகழ்ச்சிகள் பல தடை செய்யப்பட்டன. அப்போது இந்த அறிஞரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பை அபுதாபி ஹாமின், யூசுப் அலி ஆகியோர் ஏற்படுத்தித் தந்தனர். அவருடன் ஜகாத், குறித்தும், குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் குறித்தும் கலந்துரையாடல் நடத்தினோம். நாம் கூறியதை கவனமாகக் கேட்ட இவர் நீங்கள் சொல்வது சிந்திக்கத் தக்கதாக உள்ளது என்று கூறினார்.

இன்னும் பல அறிஞர்கள் மத்தியிலும் இது பற்றி நான் கலந்து பேசுகிறேன் என்று கூறினார்.

இது தான் நடந்தது. விவாத அழைப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை. இதன் பின்னர் இந்தியாவில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த இவர் என்னை நினைவு வைத்து என்னைச் சந்திக்க விரும்பினார். சென்னையில் அவர் தங்கியிருந்த லாட்ஜில் சந்தித்து பேசிக் கொண்டேன். அவர் எனக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை. எனது நிலைபாடு சரி என்றோ தவறு என்றோ பேசவும் இல்லை. விவாதம் தொடர்பாக எந்தப் பேச்சும் எஙகளுக்குள் நடக்கவில்லை.

20.05.2010. 10:42 AM

வாரியப் பதவி ஆசை வந்துவிட்டதா?

முன்பு தமுமுகவைச் சாடி வந்த நீங்கள், இப்போது கவிஞர் அப்துர் ரஹ்மானைச சாடுகிறீர்கள். இதில் இருந்து வக்ஃப் போர்டு ஆசை உங்களுக்கு வந்துவிட்டது என்ற சந்தேகம் வருகிறது.

ஷேக அப்துல் காதர்

யாருக்கு வேண்டுமானாலும் எந்தச் சந்தேகம் வேண்டுமானாலும் வரலாம். அதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் ஆதாரமும், தக்க காரணமும் இல்லாமல் சந்தேகம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது மன நோயில் கொண்டு போய் விட்டு விடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே நீங்கள் கவனமாக இருப்பது நல்லது.

வக்பு வாரியத் தலைவரை நாம் விமர்சனம் செய்வதால் அந்தப் பதவியை நாம் விரும்புவதாக நீங்கள் கூறுவது போதுமான காரணம் அல்ல.

நாங்கள் பிரதமரையும் விமர்சித்துள்ளோம். முதல்வரையும் விமர்சித்துள்ளோம். இதை ஆதாரமாக வைத்து பிரதமர் பதவி மீது ஆசை வந்து விட்டது; முதல்வர் பதவி மீது ஆசை வந்து விட்டது என்று யாராவது கூறினால் அது அறிவுடைய வாதமா?

இப்போது நீங்கள் எங்களை விமர்சித்துளீர்கள். எனவே ஜமாஅத் தலைவர் பதவி மீது உங்களுக்கு ஆசை வந்து விட்டது என்று நாங்கள் நினைக்கலாமா? அப்படி நினைத்தால் அது சரியானதாக இருக்குமா?

நமக்குத் தவறு என்று படுவதை நாம் விமர்சிப்போம். இதில் எந்த உள் நோக்கமும் கிடையாது.

ஒருவர் வக்ஃபு வாரியத் தலைவர் பதவியை ஆசை வைத்தால் இப்போதைய தலைவரை விமர்சித்தால் அதை அடைய முடியுமா? அதை அடைவதற்கு இது தான் வழிமுறையா?

வாரியத் தலைவர் பதவியை வழங்குமிடத்தில் இருக்கும் முதல்வரைத் துதி பாடினால் தான் அது கிடைக்கும். அப்துர் ரஹ்மானை விட பலமாக முதல்வருக்கு நாங்கள் ஜால்ரா தட்டினால் இப்படி நீங்கள் நினைக்கலாம். ஆனால் முதல்வராக இருந்தாலும், எதிர்க்கட்சிகளாக் இருந்தாலும் அனைவரின் தவறுகளையும் தாட்சண்யமின்றி நாம் எதிர்க்கிறோம். எனவே நாம் விரும்பினாலும் அது கிடைக்காது.

மேலும் இது போன்ற பதவிகளுக்கு ஆசைப்பட்டு கொள்கையை விட்டு விட்டார்கள் என்பதால் தான் நாம் தமுமுகவைக் கை கழுவினோம். நாம் வெறுத்து விமர்சனம் செய்த அதே பதவி வெறிக்கு நாம் எப்படி ஆளாவோம்.

ஒரு காலத்திலும் இது போன்ற பதவிகளைப் பெற மாட்டோம் என்று கூறி ஆண்டுகள் முப்பது ஓடி விட்டன. இன்று வரை அதில் உறுதியாக இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ் இனியுமிருப்போம்.

இது போன்ற பதவிகளைப் பெறுவதால் சிலரை விட மேலான நிலையை அடைய முடியும். ஆனால் சிலருக்கு கால் பிடித்து விடும் அடிமையாக நாம் மாற வேண்டும். இது போன்ற மானம் கெட்ட செயலை நாம் ஒரு போதும் செய்ய மாட்டோம்.

ஆதாரத்தோடு சந்தேகப்பட முயற்சி செய்யுங்கள்.

26.04.2010. 0:56 AM

பீஜே என்ற பட்டப்பெயர் சரியா?

ஜைனுல் ஆபிதீன் என்ற அழகான பெயரை விட்டுவிட்டு பீஜே என்ற அர்த்தமில்லாத பெயரை ஏன் வைத்துக் கொண்டீர்கள்? பட்டப்பெயர் வைக்கக் கூடாது என்று தடை இருப்பதாகக் கேள்விப்படுகிறோமே?

முஹம்மத் இத்ரீஸ்

பதில்

இஸ்லாத்தில் பட்டப் பெயர்கள் முழுவதும் தடை செய்யப்படவில்லை. ஒருவரிடம் உள்ள குறைபாட்டைக் குத்திக்காட்டும் வகையில் அல்லது அவரிடத்தில் இல்லாத குறையை அவருடன் இணைத்துப் பேசும் வகையில் அவருக்குப் பட்டப்பெயர் சூட்டுவதையே மார்க்கம் தடை செய்துள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக்காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது), கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

திருக்குர்ஆன் 49:12

குட்டையாக ஒருவர் இருந்தால் அவரைப் பார்த்து பெரியவர் வருகிறார் என்று கேலி செய்வதும், கொஞ்சம் உயரமாக இருந்தால் பனை மரம் வருகிறது என்று பட்டப் பெயரிட்டு அழைப்பதும் கூடாது. இந்தப் பட்டப் பெயர்கள் மனிதனின் மனதைப் புண்படுத்தும் என்ற காரணத்துக்காக இவை தடை செய்யப்பட்டுள்ளன.

11 حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقُرَشِيُّ قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْإِسْلَامِ أَفْضَلُ قَالَ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ رواه البخاري

அபூமூசா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

இஸ்லாத்தில் சிறந்தது எது, அல்லாஹ்வின் தூதரே? என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எவரது நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்; அவரது செயலே சிறந்தது) என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 11

ஒருவரைப் பாராட்டி அவருக்கு நல்ல பட்டப் பெயர் வைப்பதும், ஒருவரை அறிந்து கொள்வதற்காக அவரை மட்டும் குறிக்கும் வகையில் அடையாளப் பெயர் வைப்பதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. ஏனென்றால் இது போன்ற பெயர்களைக் கூறி அழைப்பதால் அழைக்கப்படுவர் நோவினை அடைய மாட்டார். இதை அவரும் பொருந்திக் கொள்வார்.

நபியவர்கள் காலத்தில் காலித் பின் வலீத் (ரலி) அவர்களுக்கு சைஃபுல்லாஹ் (அல்லாஹ்வின் வாள்) என்று பட்டப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இதை நபியவர்கள் தடை செய்யவில்லை.

அபூஹுரைரா (ரலி) அவர்களின் பெயர் அப்துர் ரஹ்மான் பின் ஸக்ர் என்பதாகும். இது அழகான பெயர் தான். ஆனால் அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பூனையின் தந்தை (அபூ ஹுரைரா) எனச் செல்லமாக அழைத்துள்ளார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் பொருந்திக் கொண்டார்கள்.

எனவே யாருடைய மனதையும் புண்படுத்தாத இது மாதிரியான அடையாளப் பெயர்களைச் சூட்டுவது தவறல்ல.

அர்த்தமுள்ள பெயர் இருக்கும் போது அர்த்தமில்லாத பெயரை ஒருவர் பட்டப் பெயராக வைத்துக் கொண்டால் அவரது பெயர் பறிபோய் விடாது.

பீஜே என்பது அர்த்தமற்ற சொல் இல்லை. பீ.ஜைனுல் ஆபிதீன் என்பதன் சுருக்கம் என்பதால் இதன் அர்த்தமும் ஜைனுல் ஆபிதீன் என்ற அர்த்தமும் ஒன்றுதான்.

நீங்கள் உட்பட அனைவரும் தந்தையின் பெயரை முதல் எழுத்தாகப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் தந்தை பெயர் இப்ராஹீம் என்றால் ஐ என்று இனிஷியல் போட்டுக் கொள்கிறீர்கள். இப்ராஹீம் என்ற அழகான பெயரை விட்டு விட்டு உங்கள் தந்தைக்கு ஐ என்று பட்டப்பெயர் வைத்து விட்டதாக உங்களுக்குத் தோன்றுவதில்லை.

பீ.ஜைனுல் ஆபிதீன் என்று சொன்னாலும், எனது தந்தை பெயரை பீ என்று நான் சுருக்கியவனாக - அதாவது உங்கள் பாஷையில் அர்த்தமற்ற பட்டப் பெயர் வைத்தவனாக - ஆவேனே அது பரவாயில்லையா?

இப்படி உலகில் எல்லோருமே இனிஷியலைப் பயன்படுத்தி தங்கள் தந்தையின் பெயரைச் சுருக்கிக் கொள்கிறார்கள். என்னவோ தெரியவில்லை ஜைனுல் ஆபிதீன் எது செய்தாலும் கேள்வியாகி விடுகிறது. பீஜே செய்வது போல் தாங்களும் செய்து கொண்டே கேள்வியும் கேட்கிறார்கள்.

ஒருவரது பெயர் முஹம்மத் என்றால் மூனா எனவும், சாஹுல் என்றால் சாவன்னா எனவும், அப்துல் காதிர் என்றால் ஆனா காவன்னா எனவும் சொல்லும் வழக்கம் உள்ளது. அதே பெயரைத் தான் சுருக்கிச் சொல்கிறார்களே தவிர பட்டப்பெயர் வைத்து விட்டார்கள் என்று ஆகுமா?

முஹம்மத் என்ற அழகான பெயர் இருக்க புகாரி (புகாரா என்ற ஊர்க்காரர்) என்று பட்டப் பெயருக்குரியவர் தான் புகாரி இமாம்.

முஹம்மத் என்ற அழகான பெயர் இருக்க திர்மிதி (திர்மித் எனும் ஊர்க்காரர்) என்ற பட்டப் பெயருக்கு உரியவர் தான் திர்மிதி இமாம்.

ஆயிரக் கணக்கானவர்களுக்கு இப்படி பெயர்கள் உள்ளன.

22.08.2011. 16:44 PM

முஸ்லிம்களை நீங்கள் கூறுபோட்டது ஏன்?

இஸ்லாத்தில் ஏன் பிரிவினைகளை ஏற்படுத்துகிறீர்கள். உங்களால் பல முகல்லாக்கள் இரண்டுபட்டு விட்டது இது சரியா?

அபு அபீபா. ஈரோடு

பதில்:

தவ்ஹீத் பிரச்சாரத்தால் தமிழகத்தில் ஏற்பட்ட பிரிவினை இஸ்லாத்தில் ஏற்பட்ட பிரிவினை அல்ல. இஸ்லாத்தின் நன்மைக்காக ஏற்பட்ட பிரிவினை.

தவ்ஹீத் வருவதற்கு முன்பு தமிழகத்தில் அனைத்து முகல்லாக்களும் சத்தியத்தில் ஒன்றாய் இருந்து, நாம் வந்த பிறகே அவர்களுக்கிடையே பிரிவினை ஏற்பட்டால் தான் இஸ்லாத்தில் ஒன்றாய் இருந்தவர்களைப் பிரித்து விட்டீர்களே என்று குறை கூற முடியும்.

ஆனால் அந்த நேரத்தில் இப்படிப்பட்ட நிலை இருக்கவில்லை. எல்லா பகுதிகளிலும் ஊர் ஜமாத்தார்கள் மக்களை அசத்தியத்தில் கட்டிப்போட்டு வைத்திருந்தனர். அப்போது மக்கள் இணைவைப்புக் காரியங்களையும், பித்அத்தான அநாச்சாரங்களையும் சமூகத் தீமைகளையும் அரங்கேற்றுவதில் தான் ஒன்றுபட்டு இருந்தனர்.

தவ்ஹீத் பிரச்சாரம் வந்த பிறகு இந்தக் கூட்டத்திலிருந்து கணிசமான மக்கள் தாங்கள் செய்தது தவறு என்பதை உணர்ந்து ஏகத்துவத்தின் பக்கமும், நபிவழியின் பக்கமும் திரும்பினர். இப்படி அவர்கள் பிரிந்து வந்தது நல்லதா? கெட்டதா? என்று யோசித்துப் பாருங்கள்.

இந்தப் பிரிவினை ஏற்பட்டதன் விளைவு முன்பு சமூகத்தில் மிகவும் விமரிசையாக அரங்கேறிய பயங்கரமான தீமைகள் காணாமல் போய்விட்டன. பல இடங்களில் குறைந்து போயுள்ளன. இஸ்லாம் இதைத் தானே எதிர்பார்க்கின்றது.

எனவே தவ்ஹீத் பிரச்சாரம் இஸ்லாத்தில் பிளவை ஏற்படுத்தவில்லை. மாறாக அசத்தியத்திலிருந்து மக்களை நல்வழிப்படுத்தி இஸ்லாத்தை நிலைநிறுத்தியுள்ளது.

நம்முடைய இம்மை, மறுமை வாழ்வு சிறக்க இது அவசியமானது. இந்தப் பிரிவினை அவசியம் என்று குர்ஆனும், நபிமொழியும் வலியுறுத்துகின்றது.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு

ஒற்றுமை எனும் கயிறு

ஒற்றுமையை எதிர்ப்பது ஏன்?

12.08.2011. 15:24 PM

திருக்குர்ஆன் தமிழாக்கத்தை சவூதி உதவியில் இலவசமாக வெளியிடலாமே?

கேள்வி :

உங்கள் தர்ஜுமாவை ஏதாவது மத்திய கிழக்கு நாடு ஒன்றின் அனுசரணையில் இலவசமாக வெளியிட முடியாதா? முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதவர்களுக்கும் தாவா செய்ய மிகவும் உதவியாக இருக்கும். தற்பொழுது சவுதி அரசால் விநியோகிக்கப்படும் தமிழாக்கம் யாருக்கும் விளங்குதில்லை? அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்ய வேண்டும், உங்கள் மொழி பெயர்ப்பை முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் கொடுத்தால் இலகுவாக விளங்கிக் கொள்கிறார்கள். விளக்கங்களும் நல்ல உதவியாக உள்ளது. பலர் உங்கள் தர்ஜுமாவைப் பற்றி வெட்டிப் பேச்சு பேசினாலும், இரண்டு தர்ஜுமாவையும் கொடுத்து அனுபவ ரீதியாகக் கண்டவர்கள் நாங்கள்.

சனீஜ், இலங்கை

பதில்:

இலவசமாக திருக்குர்ஆனை வழங்க வேண்டும் என்ற உங்கள் நோக்கம் நல்லது தான். ஆனால் அரபு நாட்டில் பணம் பெற்றுத் தான் இதைச் செய்ய வேண்டும் என்ற நிலையில் நாம் இல்லை. இப்போதும் பல்லாயிரக்கணக்கில் ஜமாஅத் சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. முஸ்லிம் அல்லாதவர் ஒரு அஞ்சல் அட்டை அனுப்பினால் போதும். உடனே அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன் தமிழாக்கத்தை ஜமாஅத் சார்பில் வழங்கி வருகிறோம்.

ஏராளமான கொள்கைச் சகோதரர்களும், வளகுடா மண்டல அமைப்புகளும் இந்த வகைக்காக தாராளமாக அள்ளித் தருகின்றனர்.

சவூதி அரசாங்கத்தின் மூலம் தமிழாக்கத்தை இலவசமாக வெளியிட நாம் முயற்சித்தால் அதற்காக நாம் பல சமரசங்களைச் செய்ய வேண்டும். அவர்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ள மொழி பெயர்ப்புகளை ஒட்டி இருந்தால் தான் அதை வெளியிடுவார்கள். தவறான முறையில் அவர்கள் செய்துள்ள மொழிபெயர்ப்பின் படி நாமும் மாற்ற வேண்டும். விளக்கம் பகுதியில் உள்ள பல விஷயங்களை நீக்க வேண்டும் என்ற நிர்பந்தம் செய்வார்கள். எனவே இது சாத்தியமில்லை.

இதுதான் பைபிள், இயேசு இறைமகனா?, பித்அத் ஓர் ஆய்வு, திருமறையின் தோற்றுவாய், நோன்பு, அர்த்தமுள்ள இஸ்லாம், மாமனிதர் நபிகள் நாயகம் உள்ளிட்ட பல நூல்களை சவூதி ஜாலியாத் மூலம் வெளியிட்டனர்.

இதற்காக பீஜேயிடம் அனுமதி கேட்டபோது இதற்காக ராயல்டி எதுவும் கேட்காமல் பீஜெ அனுமதி அளித்தார். பணமாகப் பெற்று நாம் வெளியிட்டால் நாம் ஆதாயம் அடைந்ததாக யாரும் கருதுவார்கள் என்பதால் அந்த நூல்களை அவர்களே அச்சிட்டு அவர்களே வினியோகித்துக் கொள்ளும் வகையில் பீஜே அனுமதி அளித்தார். அதை எந்த மாற்றமும் செய்யாமல் வெளியிட்டனர்.

ஆனால் திருக்குர்ஆன் தமிழாக்கத்தை இலவசமாக வெளியிட அவர்கள் அனுமதி கேட்டால் அதற்கு பீஜே அனுமதி அளிக்கத் தயாராக உள்ளார். இதற்காக அவர்கள் எந்த ராயல்டியும் தரத் தேவையில்லை. எந்த மாற்றமும் செய்யாமல் வெளியிட வேண்டும் என்பது மட்டுமே இதற்கான ஒரே நிபந்தனை.

ஆனால் பீஜேயின் தமிழாக்கம் சவூதி அரசின் சில நிலைபாடுகளுக்கு மாற்றமாக உள்ளதால் அவர்கள் வெளியிட மாட்டார்கள் என்றே நாம் கருதுகிறோம்.

இதே அடிப்படையில் இலவசமாக அச்சிட்டு வெளியிட சவூதி அரசு அனுமதி கேட்டால் அனுமதி அளிக்கப்படும்.

பிறமத சகோதரர்களுக்கு வழங்குவதற்கு ஏற்ற வகையில் குறைந்த விலையில் சிறப்பு பதிப்பு அச்சாகிக் கொண்டு இருக்கிறது. திருக்குர்ஆன் அரபு மூலத்திற்கான மொழி பெயர்ப்பு முழுமையாகவும், அதே நேரத்தில் முஸ்லிம்கள் மத்தியில் உள்ள கருத்து வேறுபாடுகள், வணக்க வழிபாட்டின் சட்டங்கள் போன்றவற்றிற்கான விளக்கக் குறிப்புகளை நீக்கியும், முஸ்லிமல்லாத மக்கள் ஆர்வம் காட்டாத விளக்கக் குறிப்புகளை நீக்கியும், அவர்கள் ஆர்வம் காட்டும் விஷயங்களை மட்டும் உள்ளடக்கிய விளக்கக் குறிப்புகளை மட்டும் கொண்டதாகவும் இந்த வெளியீடு அமைந்துள்ளது. ஒரு குர்ஆன் வழங்கும் விலையில் இரு குர்ஆன் பிரதிகள் வழங்கும் வாய்ப்பு இதனால் ஏற்படும். அப்போது இன்னும் அதிகமான மக்களுக்கு இலவசமாக வழங்குவது எளிதாகும்​.

24.10.2015. 2:55 AM

சூனியம் குறித்த ஒப்பந்தம்

இன்று முதல் 01.08.2014 ஆரம்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரும் நிறுவனருமான பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சூனியத்திற்கு எதிராக கடும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

சூனியம் செய்யவே முடியாது, இது மக்களை ஏமாற்றும் செயல் அவ்வாறு செய்ய முடியும் என்பவர்கள் தமக்கு சூனியம் செய்யட்டும்.

அவ்வாறு செய்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன் என்று பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சமீபத்தில் பேசியிருந்தார்.

அவரது பேச்சு தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக காட்டுத்தீப்போல் பரவியது.

இந்நிலையில்….

திருச்சி அரியமங்களம் சர்பநதிக்கரையை சேர்ந்த அகோரி மணிகண்டன் என்பவர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு சூனியம் செய்து சூனியம் செய்ய முடியும் என்பதை தாம் நிரூபிக்க தயார் என்று பகீரங்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

அந்த ஒப்பந்தத்தில் சரியாக 48 நாட்களுக்குள் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு சூனியம் செய்து பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களே சூனியத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வைக்கிறேன்; அல்லது அவரை சூனியத்தின் மூலமாக தற்கொலை செய்ய வைக்கிறேன் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

அகோரி மணிகண்டன் கூறியது போல் 48 நாட்களுக்குள் சூனியம் செய்து வெற்றியடைந்து விட்டால் பி. ஜைனுல் ஆபிதீன் தரப்பினர் 50 லட்சம் ரூபாயை அகோரி மணிகண்டனிடம் ஒப்படைக்க வேண்டும்.

சூனியம் செய்ய முடியாமல் அகோரி மணிகண்டன் தோல்வியை தழுவுவாறேயானால் அகோரி மணிகண்டன் இஸ்லாத்தை ஏற்று சூனியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் அமுலில் ஆகும் நாள் 01.08.2014 ஆரம்பம் ஆகிறது.

சரியாக 48 நாட்கள் கழித்து 18.09.2014 அன்று உண்மையை உலகம் அறிந்து கொள்ள இருக்கிறது.

January 11, 2017

சூனியம் தோற்றதால் மண்ணடியில் பீஜே அவர்கள் இது குறித்து செப்டம்பர் 21 - 2014 அன்று பொதுக்கூட்டத்தில் உரைநிகழ்த்தி பல்லாயிரம் மக்கள் முன்னால் சூனியத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்பதை நிரூபித்தார்.

More Articles …

Subcategories