Sidebar

19
Fri, Jun
சமீபத்திய செய்திகள்

மீண்டும் மீண்டும் நழுவும் சான், விடாமல் துரத்தும் TNTJ!

சான் இயக்கத்துடன் பைபிள் இறைவேதமா என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது. ஆனால் குர் ஆன் இறை வேதமா என்ற தலைப்பில் அடுத்து விவாதிக்க இருந்த நிலையில் சான் குழுவினர் அந்த விவாதத்தை தவிர்கக் பல சால்ஜாப்புகளை சொன்னார்கள்.  அது குறித்த கடிதப் பரிமாற்றங்கள்.

சான் குழுவினர் எப்படியாவது விவாதத்தில் இருந்து நழுவி ஓடும் வகையில் விவாதத்துடன் தொடர்பு இல்லாத விஷயங்களை எழுதி அதைக் காரணமாக்கி ஓட்டம் எடுக்க நினைக்கிறது. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் அந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்காமல் அவர்கள் ஒப்புக் கொண்ட தலைப்பில், ஒப்புக் கொண்ட ஊரில், அவர்கள் ஏற்பாடு செய்யும் மண்டபத்தில் விவாதம் நடத்த தயார் என்று அறிவித்திருப்பது சான் அமைப்பினருக்கு மட்டுமில்லாமல், கிறித்தவ சபைகளுக்கும் அச்சத்தையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முதல் தலைப்பில் கிறித்தவ மக்கள் காரித் துப்பியதும் இந்த விவாத சீடியைப் பார்த்து விட்டு கிறித்தவ மக்கள் கண்ணீர்விட்ட சம்பவங்களும் ஏராளம். ஏற்கனவே குர் ஆன் குறித்த விவாதத்தில் நம் தரப்பு வாதங்களை லைவ் ஆக ஒளிபரப்பிய பின்னரும் அவர்கள் அதற்கான பதிலைத் தயாரித்துக் கொண்டு வர வாய்ப்பு இருந்தும் தவ்ஹீத் ஜமாஅத் அதே தலைப்பில் விவாதிக்க முன் வந்திருக்கிறது. ஏதாவது நொண்டிச் சாக்குகளைச் சொல்லி ஓட நினைத்தாலும் அவர்களை தவ்ஹீத் ஜமாஅத் விடப்போவதில்லை. இதனால் தான் விவாத்துடன் தொடர்பு இல்லாமல் அவர்கள் எழுதும் கிறுக்குத் தனங்கள் எதற்கும் பதில் எழுதாமல் விவாதம் குறித்து மட்டும் எழுதி அவர்கள் விவாதத்துக்கு ஒப்புக் கொண்டே ஆக வேண்டும் என்ற் நிர்பந்தத்தை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியுள்ளது.

அதன் இறுதிக் கட்டமாக நேற்று (3-2-2012) சானுக்கு தவ்ஹீத் ஜமாஅத் எழுதிய கடிதம்

தமிழில்..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்ளாத எல்லாம் வல்ல ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

சான்குழுவினருக்கு,

ஏற்பாடுகளைத் துவங்கிவிட்டோம், மண்டபம் பார்த்துவிட்டோம்,

காவல் துறை அனுமதிக்கு விண்ணப்பித்து விட்டோம்.

இன்னின்ன தேதிகளில் விவாதத்தை வைத்துக் கொள்வோம் என்று உங்களிடம் இருந்து பதில் வரும் என எதிர்பார்த்தோம்.

ஆனால், நீங்கள் அனுப்பிய மார்ச் 2 ம் தேதிய மெயிலில் வழக்கம் போல் வழவழா கொள கொளா என ஏதேதோ எழுதியுள்ளீர்கள். விவாத ஏற்பாடுகளைச் செய்யாமல் சம்பந்தமின்றி எதையாவது எழுதி திசை திருப்புவீர்கள் என்பதால் தான் விவாதத்துடன் சம்மந்தமில்லாத விஷயங்களுக்கு பின்னர் பதில் தருகிறோம், இப்போது ஏற்பாட்டை கவனியுங்கள் என்று சொன்னோம்.

திருக்குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பில் இரண்டாம் தடவை மீண்டும் ஒருமுறை விவாதம் செய்வதற்கும் தயார் என்று நாங்கள் எழுதிய பின்னரும் ஏற்பாடுகளைத் துவங்காமல் நீங்கள் தயங்குவது ஏன்?

பிப்ரவரி 28 மற்றும் பிப்ரவரி 29 ஆகிய தேதிகளில் நாங்கள் அனுப்பிய இரண்டு மெயில்களில் உள்ள கருத்துகளில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

அவற்றில் மாறுதல் இல்லை. நாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முழுமைபடுத்த வேண்டும், எல்லா தலைப்புகளிலும் விவாதிக்க வேண்டும் என்ற காரணத்தால் நாங்கள் கூடுதலான சில நிபந்தனைகளைச் சொன்னோம். அந்த நிபந்தனைகளையே சர்ச்சையாக்கிக் கொண்டு குர்ஆன் தலைப்பில் மீண்டும் விவாதிப்பதற்கு நீங்கள் இழுத்தடிப்பதால் தற்காலிகமாக அவற்றை தளர்த்துகிறோம்.

உங்கள் கொச்சியிலே போலீஸ் அனுமதியைப் பெறுவதற்கு நீங்கள் தனித்தே பொறுப்பேற்றதால் நீங்களே முறையான அனுமதியைப் பெற்று வாருங்கள்.

விவாதம் நடக்கும் தேதிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாக பொறுப்புள்ள ஒரு அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட அதன் நகலை எங்களுக்கு அனுப்பித்தர வேண்டும்.

காவல்துறையில் அனுமதி பெறும் போது முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இந்த தலைப்பில் நடத்தப்படும் விவாதத்துக்கு அனுமதி என்று தெளிவாக இருக்க வேண்டும். தெளிவற்ற முறையில் ஏதோ ஒரு நிகழ்ச்சி என்பது போல் இருக்கக் கூடாது.

போலீஸ் அனுமதியில் தொலைக் காட்சியிலும் இன்டர்நெட்டிலும் நேரடி ஒளிபரப்புச் செய்யலாம் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

ஒப்புக் கொண்டதற்கு ஏற்ற மண்டபமாக இருந்தால் போதும். நாங்கள் பார்வையிடத் தேவையில்லை.

மார்ச்17, 18 அல்லது மார்ச்24, 25 அல்லது மார்ச்31, ஏப்ரல்1 அல்லது ஏப்ரல்7, 8 அல்லது ஏப்ரல்14, 15 அல்லது ஏப்ரல்21, 22 அல்லது ஏப்ரல்28, 29

ஆகிய ஏதாவது தேதிகளில் உங்களுக்கு வசதியான தேதியைத் தேர்வு செய்து எங்களுக்கு தாமத மின்றி தெரிவிக்கவும்.

இப்படிக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

ஆங்கில மொழிபெயர்ப்பு..

In the Name of Allah; the Most Beneficent, the Most Merciful and the Almighty who did not make any

Son for Himself

SAN Friends,

We expected the following reply from you:

 We have started making arrangements, booked the Auditorium, applied for Police permission, will

debate in the so and so dates

But,

As usual, you have hauled unnecessarily, in the mail you sent on March 3rd. Since, you will deviate by writing unnecessary things and evade from debate, we informed you that we will be replying to the things irrelevant to the debate later and asked you to make necessary arrangements for the debate.

Why are you hesitant even after we showed our readiness to you to debate on the topic Is Quran God s word? for the second time?

We are firm on the points outlined in the emails we sent on February 28th and February 29th. There is no change to this.

In order to fulfill the agreements we made and debate on all topics; we put forth certain additional conditions.

Since you are making it as a controversy to evade from debating on the topic Quran, we are postponing those temporarily.

  1. a) As you took sole responsibility to take Police permission, get the necessary permission on your own.
  1. b) You should be sending us the Xerox copy of the permission letter attested by a Responsible officer before 15 days of the date of debate.
  1. c) The Police order should have clear permission for the debate between Muslims and Christians on the so and so topics and not have vague permission for some program .
  1. d) The order should also permit live telecast on TV and internet
  1. e) It is sufficient if the Auditorium is as per our agreement and we don t have to examine
  1. f) Select your convenient dates from the following and respond to us without any delay:

March 17th-18th or March 24th-25th or March 31st- April 1st, or April 7th-8th, or April 14th-15th, or April 21st 22nd or April 28th- 29th.

04.03.2012. 13:52 PM

மீண்டும் மீண்டும் ஓடினாலும் விடமாட்�

விவாதத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை மட்டுமே சான் குழுவினர் கவனத்தில் கொண்டு கடிதம் எழுதுகின்றனர் என்பதற்கு மற்றுமொரு சான்றாக நேற்றையை (29-2-2012) அவர்களது மெயில் அமைந்துள்ளது.

சரி நீங்க சொன்னபடியே உங்க மாநிலத்துக்கு வந்து நீங்க சொன்ன தலைப்புல விவாதம் பன்ன நாங்க ரெடி நீங்க ரெடியாக? எப்பன்னு சொல்லுங்க என தெளிவாக அனுப்பிய மெயிலுக்கு அவர்கள் உண்மையில் விவாதம் செய்ய தயாராக இருந்தால் என்ன பதில் எழுதி இருக்கு வேண்டும் இன்ன தேதியில் வைத்துக் கொள்ளலாம் என எழுதி இருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் அவர்கள் அவ்வாறு எழுதவில்லை.

அவர்களின் மழுப்பல் மெயில்:

Let the name of Yahweh, the only true name of God upon which all the true prophets have called, who in flesh was known by the name Lord Jesus Christ be glorified forever and ever. Amen.

Dear Friends at TNTJ,

We are in receipt of your partial reply dated February 28, 2012 to our email dated February 24, 2012. As you have mentioned that you will be sending another reply to our email dated February 24, 2012, we will wait to receive that as well before we respond to this partial reply.

If you cannot reply by March 3 as we requested, and require more time to respond fully, please take time till March 6. However, if you still require more time, do let us know by when you will be able to fully respond.

Or alternatively, if you have a change of mind and wants us to treat this reply as your full and final response to our email dated February 24, 2012, do let us know and we will respond to your suggestions. If not, we will respond to this partial email along with the response for your full email which is yet to be received.

Looking forward for a debate on Quran.

Thanks and regards,

SAN

இரு சாராரின் கடித போக்குவரத்துக்களைப் படிக்கும் எவரும் சான் குழுவினர் விவாதத்திலிருந்து தப்பிக்க மழுப்பிக் கொண்டே இருக்கின்றனர். இவர்களுக்கு விவாதம் செய்ய திராணி இல்லை என்றே கருதுவார்கள்.

அந்த அவர்களது மழுப்பழுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றுமொரு அதிரடி பதில் மின்னஞ்லை நேற்றே (29-2-2012) அனுப்பியது.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்ளாத எல்லாம் வல்ல ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

சான் குழுவினருக்கு,

உங்களது 24.02.2012 மெயிலில் உள்ள பொய்களுக்கும் புரட்டுகளுக்கும் பதில் சொல்வது அவசியமாகும். எனினும், விவாதம் நடைபெற வேண்டும் என்பது எங்களது முக்கிய நோக்கமாகும். அதனால் தான் விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத விஷயங்களுக்கு பதில் எழுதுவதை தள்ளிவைத்து விட்டு விவாதம் தொடர்பான விஷயங்களை மட்டும் எழுதினோம்.

விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத விஷயத்துக்குப் பதில் எழுதிக் கொண்டு விவாதத்துக்கு வராமல் நீங்கள் திசை திருப்புவதற்கு இடம் தரக்கூடாது என்பதே இதற்குக் காரணமாகும்.

அதனால்தான் உங்களது பொய்யான செய்திகளுக்குப் பதில் சொல்லும் எங்களது உரிமையைச் சற்று தாமதப்படுத்திவிட்டு, விவாதம் செய்வதற்கு நாங்கள் தயார் நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள் என்று விவாதத் தேதிகளையும் குறிப்பிட்டு உங்களுக்கு நேற்று பதில் அனுப்பினோம்.

இதன் பிறகும் விவாத ஏற்பாடுகளைச் செய்யாமல் உங்களுக்கு வசதியான தேதிகளையும் குறிப்பிடாமல் வழக்கம் போல் மழுப்பலான பதிலை அனுப்பியுள்ளீர்கள்.

உங்கள் பொய்களுக்குப் பதிலளிக்கும் உரிமையை நாங்கள் விட்டுத் தரமாட்டோம். விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத விஷயங்களுக்கு விவாதத்தின் போது கூட நாங்கள் பதிலளிக்கலாம். அல்லது விவாதம் முடிந்த பின்னர் கூட நாங்கள் பதிலளிக்கலாம். அது எங்கள் வசதியைப் பொருத்த விஷயம். அந்தப் பதிலுக்கும் தற்போது நடக்க வேண்டிய விவாதத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

எங்கள் பதில் என்னவாக இருந்தாலும் விவாத ஒப்பந்த்துக்கு அது சம்மந்தமில்லாத விஷயம் என்பதால் உங்களது கொச்சியில் உங்களது ஏற்பாட்டில் நீங்கள் சொல்லும் தலைப்பிலேயே விவாதம் செய்யத் தயார் என்று நாங்கள் ஏற்கனவே எழுதிய நிலைபாட்டுக்குத் தான் நீங்கள் பதிலளிக்க்க் கடமைப்பட்டுள்ளீர்கள்.

விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத உங்களது பொய்களை அம்பலப்படுத்தி நாங்கள் எப்போது எழுதுகிறோமோ அப்போது நீங்கள் பதில் தந்தால் போதும். அது உங்களைப் பொய்யர்கள் என்றும் உலகிற்குத் தோலுரித்துக் காட்டும் கடிதமாகத் தான் அது இருக்குமே தவிர விவாத ஒப்பந்தம் சம்பந்தமானவை அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே தாமதமில்லாமல் கொச்சி காவல்துறை ஆணையரை அணுகி அனுமதி ஆணையைப் பெற்று அரங்கை முன்பதிவு செய்து விவாத ஏற்பாடுகளைச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே எழுதிய மெயிலின் வாசகத்தை உறுதி செய்யும் வண்ணமாக அதன் முக்கிய பகுதியை கீழே தருகிறோம்.

ஆகவே, உங்கள் கொச்சியிலேயே வந்து மீண்டும் ஒரு முறை குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பில் விவாதிக்கத் தயாராக உள்ளோம். ஏற்கனவே நடந்த இந்த விவாதத்தை நாங்கள் லைவ் ரிலே பண்ணினோம். அதை நீங்கள் முழுமையாகப் பார்த்தீர்கள். முடிந்தால் அதற்குப் பதில் தயாரித்து வாருங்கள்.

இந்த விவாதம் முடிந்த மறு வாரம் சனி ஞாயிறுகளில் ஓடி ஒளிந்தது யார் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற வேண்டும்.

போலீஸ் அனுமதியைப் பெறுவதற்கு நீங்கள் தனித்தே பொறுப்பேற்றதால் நீங்களே முறையான அனுமதியைப் பெற்று விவாதம் நடக்கும் தேதிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாக அதன் ஒரிஜினலை எங்களுக்கு அனுப்பித் தரவேண்டும்.

எங்கள் தரப்பில் 150 நபர்கள் கலந்து கொள்வார்கள். (அவர்கள் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு வசதியாக போலீஸ் அனுமதியைப் பதினைந்து நாட்களுக்கு முன்னரே தர வேண்டும்.)

காவல்துறையில் அனுமதி பெறும் போது முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இந்த தலைப்பில் நடத்தப்படும் விவாதத்துக்கு அனுமதி என்று தெளிவாக இருக்க வேண்டும். தெளிவற்ற முறையில் ஏதோ ஒரு நிகழ்ச்சி என்பது போல் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பின்னர் விபரம் தெரிந்தவுடன் அனுமதியை மறுக்கும் நிலை ஏற்படும்.

சென்னையில் விவாதம் செய்ய நீங்கள் தயார் என்று சொன்னீர்கள். ஆனால் நேரடி ஒளிபரப்பு செய்ய போலீஸ் தடை விதித்துள்ளது என்று தான் மறுத்தீர்கள். எனவே நீங்கள் வாங்கும் அந்த போலீஸ் அனுமதியில் தொலைக்காட்சியிலும் இன்டர்நெட்டிலும் நேரடி ஒளிபரப்புச் செய்யலாம் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

நீங்கள் ஒப்புக் கொண்டபடி இதற்கான செலவுகளை நீங்களே ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

மார்ச் 17, 18 அல்லது மார்ச் 24, 25 அல்லது மார்ச் 31, ஏப்ரல் 1 அல்லது ஏப்ரல் 7, 8 அல்லது ஏப்ரல் 14, 15 அல்லது ஏப்ரல் 21, 22 அல்லது ஏப்ரல் 28, 29

ஆகிய ஏதாவது தேதிகளில் உங்களுக்கு வசதியான தேதியைத் தேர்வு செய்து எங்களுக்கு தாமதமின்றி தெரிவிக்கவும்.

இதில் எந்தவொன்றை நீங்கள் ஏற்க மறுத்தாலும் நீங்கள் ஒடி ஒளிந்தீர்கள் உறுதிபட தெளிவாகிவிடும்.

உங்களுக்கு வசதியான தேதியையும் விவாத ஏற்பாடுகளை துவங்கி விட்டோம் என்ற உங்களின் பதிலை மார்ச்-3 ஆம் தேதிக்குள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இப்படிக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

01.03.2012. 11:17 AM

சான் குழுவினருக்கு பகிரங்க அறைகூவல்!

திருக்குர்-ஆன் இறைவேதமா? என்ற தலைபில் விவாதிக்க வராமல் பொய்க் காரணங்களைக் கூறி ஓட்டமெடுத்த சான் குழுவினர், கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி ஒரு மெயிலை நமக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த மெயில் இதோ:

அவர்களுக்கு அளித்த பதிலை இங்கே தருகின்றோம்.

SAN REPLY.pdf

18.02.2012. 11:07 AM

காஷ்மீரில் இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டதா?

இந்தியாவின் கோயபல்சுகள்

காஷ்மீர் மாநிலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அவர்கள் ஏராளமான இந்துக் கோவில்களை இடித்து விட்டனர் என்று சங்பரிவாரக் கும்பல் 1986 ஆம் ஆண்டு செய்த கோயபல்ஸ் பிரச்சாரம் 1993 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அந்த வரலாறை இந்தியா டுடே முடித்து வைத்தது. புதிய தலைமுறையினருக்கு இந்த உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காக 1993 மார்ச் மாதம் அல்ஜன்னத் இதழில் அப்போது ஆசிரியராக இருந்த பீஜே எழுதிய தலையங்கம் வெளியிடப்படுகிறது- திருத்தங்களுடன்

இந்தியாவை ஹிந்து ராஜ்ஜியமாக மாற்றி விட வேண்டும் என்பதற்காக மதவெறியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு சில இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி, இந்து முண்னணி, இந்து மகாசபை, பஜ்ரங்தள் என்று பல பெயர்களில் இவர்கள் இயங்கி வருகின்றனர்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்னனால் வரை ஹிந்து ராஜ்ஜியம் வெறும் கனவாக மட்டுமே இருந்து வந்தது. இவர்களின் மதவெறிப் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாமல் இருந்தது. பெரும்பாலான ஹிந்துக்கள் இவர்களின் பிரச்சாரத்தை நம்பாததால் முஸ்லிம்களைப் பகைவர்களாக எண்ணவில்லை.

ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளாக இவர்களின் வெறியூட்டும் பிரச்சாரத்தைப் பெரும்பாலான ஹிந்துக்கள் நம்ப ஆரம்பித்துள்ளனர். காரணம் கடந்த ஏழு ஆண்டுகளாக இவர்கள் கோயபல்சு கண்டுபிடித்த தத்துவத்தைப் பலமாகப் பிடித்துக் கொண்டது தான்.

ஹிட்லரின் அரசில் கொள்கை பரப்பும் பொறுப்பில் இருந்த அமைச்சர் தான் கோயபல்ஸ். ஹிட்லர் மீது மக்கள் வெறுப்படையாமல் இருப்பதற்காக ஹிட்லருக்கு ஆதரவாகவும், ஹிட்லரின் எதிரிகளுக்குப் பாதகமாகவும் பொய்களைப் புணைந்து பரப்பியவன். ஒரு பொய்யை வெட்கமின்றி தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தால் அது உண்மை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டு விடும் என்ற கருத்தை பரப்பியவன் தான் கோயபல்ஸ்.

கோயபல்ஸின் இந்தக் கேடுகெட்ட சிந்தனை தான் சங்பரிவாரத்தின் அடிப்படைக் கொள்கை. அதன் அடிப்படையில் அவர்கள் பரப்பிய பொய்களில் ஒன்று தான் காஷ்மீர் முஸ்லிம்கள் ஏராளமான இந்துக் கோவில்களை இடித்து விட்டார்கள் என்ற புளுகு மூட்டை.

காஷ்மீரில் முஸ்லிம்கள் ஏராளமான ஹிந்துக் கோவில்களை இடித்துத் தரை மட்டமாக்கி விட்டதாக இவர்கள் 1986 முதல் பிரச்சாரம் செய்தார்கள். மீண்டும் மீண்டும் அதையே கூறினார்கள். ஒவ்வொரு தலைவரும் இதை முக்கிய விஷயமாக மக்கள் மத்தியில் எடுத்து வைத்தார்கள். இதன் பிறகு தான் இவர்களின் வெறியூட்டும் பிரச்சாரம் ஹிந்துக்களிடம் எடுபடலாயிற்று.

எத்தனையோ முஸ்லிம் அமைப்புகள் இருந்தும், முஸ்லிம்களுக்காக பாடுபடுவதாகக் கூறிக் கொள்ளும் கட்சிகள் பல இருந்தும் இவர்களின் இந்தப் பிரச்சாரத்தை முறியடிக்க யாரும் முன்வரவில்லை.

சமய ஒற்றுமை பற்றி வாய் கிழியப் பேசும் ஆட்சியாளர்கள் எல்லா வசதிகளும் இருந்தும் இந்தக் கோயபல்சுகளின் பிரச்சாரத்தை முறியடிக்க முயலவில்லை.

போபர்ஸ் ஊழலையும், ஹர்ஷத் மேத்தா ஊழலையும் தமது நிருபர்களைக் கொண்டு அம்பலத்துக்கு கொண்டு வந்த பத்திரிக்கையாளர்கள் இவர்களின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

அதிரடி ரிப்போர்ட்கள் தரும் பத்திரிக்கைகளும் இதைக் கண்டு கொள்ளவில்லை. இதனால் இந்தக் கோயபல்சுகள் வளர்ந்தார்கள். மதவெறி தலைவிரித்தாடியது, அவர்களின் வளர்ச்சியை அத்தனை பேரும் மவுனமாக மகிழ்வுடன் ரசித்துக் கொண்டிருந்தனர்.

இவர்களில் இருந்து மாறுபட்டு இந்தியா டுடே இதழ் தனது செய்தியாளர்களைக் களம் இறக்கி இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் அத்தனை கோவில்களுக்கும் சென்று உணமையைக் கண்டறிந்து அம்பலப்படுத்தியுள்ளது. (பிப்ரவரி 21. 1993)

இந்தியா டுடே பிப்ரவரி 1993 இதழ் யாரிடமாவது இருந்து அதை அனுப்பி வைத்தால் அதை இங்கே இணைத்துக் கொள்ளலாம்.

கோவில்கள் இடிக்கப்பட்டதாகக் கூறும் இந்தக் கோயபல்சுகளை அணுகிய இந்தியா டுடே அந்தப் பட்டியலைக் கேட்ட போது இடிக்கப்பட்ட கோவில்களின் எண்ணிக்கை பற்றியே அவர்களிடம் ஒத்த கருத்து இல்லை. ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு எண்ணிக்கையைக் கூறியதை இந்தியா டுடே அம்பலப்படுத்தியது.

பின்வரும் உண்மைகளை இந்தியா டுடே வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

எத்தனை கோவில்கள் இடிக்கப்பட்டன என்பதை பா.ஜகவைச் சேர்ந்த எவரும் சரியாகச் சொல்ல முடியவில்லை.

100க்கும் மேற்பட்ட கோவில்கள் என்றார் சஹான்.

கடந்த மூன்று ஆண்டுகளில் அத்வானி இது பற்றிப் பேசும் போது ஒரு முறை 55 என்றார். மற்றொரு முறை 40 என்றார்.

பாஜகவின் மத்திய அலுவலகம் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் 46 கோயில்களின் பட்டியலைத் தந்தது.

அதன் ஜம்மு அலுவலகமோ 82 கோவில்களின் பெயர் அடங்கிய பட்டியலைத் தந்தது.

இரு ஆண்டுகளுக்கு முன்பு மூத்த ஆர் எஸ் எஸ் தலைவர் ஒருவர் பத்திரிக்கையாளர் பி.ஜி வர்கீஸிடம் 1990 ல் காஷ்மீர் பயங்கரவாதிகளால் இடிக்கப்பட்ட கொளுத்தப்பட்ட 62 கோவில்களின் பட்டியலை அளித்தார்.

1986 பட்டியலில் இருந்த கோவில்களும் அதிகம் இடம் பெற்றிருந்தன.

1986 ல் இடிக்கப்பட்ட கோவில்களை 1990 லும் எப்படி இடிக்க முடியும்?

பா.ஜ. க விடமிருந்தே பெற்ற பட்டியலில் உள்ள 23 கோவில்களை இந்தியா டுடே சென்று பார்த்த பிறகு சாயம் வெளுத்து விட்டது.

எந்தெந்த கோவில்களை முஸ்லிம்கள் இடித்து விட்டார்கள் என்று சங்பரிவாரக் கும்பல் புளுகி வந்ததோ அவை அனைத்தையும் இந்தியா டுடே நேரில் பார்த்து அவை எவ்வித சேதாரமும் இல்லாமல் நின்று கொண்டிருப்பதைப் புகைப்பட ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை ஒரு பத்திரிக்கை மட்டும் தான் செய்திருக்கிறது. தூங்கிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களும், பத்திரிக்கையாளர்களும், சமுதாயத் தலைவர்களும் இனியாவது விழிப்பார்களா? நியாய உணர்வுள்ள ஹிந்துக்கள் இவர்களை இனம் காண்பார்களா?

இந்தியா டுடே இந்தக் கயமையை தோலுரித்துக் காட்டிய பின் காஷ்மீரில் கோவில்களை முஸ்லிம்கள் இடித்து விட்டார்கள் என்று யாரும் பேசுவதில்லை என்பது குறிப்படத்தக்கது.

ஒரு நாடகம் நடக்குது நாட்டிலே!

அல்ஜன்னத் மாத இதழில் பீ.ஜைனுல் ஆபிதீன் ஆசிரியராக இருந்த போது 1993ல் எழுதிய தலையங்கம். வரலாற்றுப் பதிவாக இதை வெளியிடுகிறோம்.

இந்தியாவில் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்களை விட அதிக சலுகையும், சுதந்திரமும் பெற்று வருகின்றனர் என்று இந்து மத வெறியர்கள் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இத்தகைய பிரச்சாரத்தின் மூலம் அப்பாவி இந்துக்களை சிறுபான்மையினருக்கு எதிராகத் திரட்டி வருகின்றனர்.

சிறுபான்மை மக்கள் அதிகs சலுகைகள் பெறுவது ஒருபுறமிருக்கட்டும். அவர்கள் உரிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளார்களா? அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுகிறார்களா? இல்லை! நிச்சயமாக இல்லை! இரண்டாந்தரக் குடிமக்களைப் போலவே சிறுபான்மையினர் நடத்தப்பட்டு வருகின்றனர்.

அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கும் மதச்சார்பின்மை என்பது சிறுபான்மையினரையும், உலக நாடுகளையும் ஏமாற்றுவதற்கு மட்டுமே இந்திய அரசியல்வாதிகளுக்குப் பயன்பட்டு வருகிறது.

அல்லாஹ்வின் இல்லம் தகர்க்கப்பட்டதன் காரணமாக மட்டும் நாம் இந்த முடிவுக்கு வரவில்லை. பாபர் பள்ளிவாசல் இடிக்கப்படுவதற்கு முன்னர் நடந்த நாடகங்கள், அதன் பின்னர் நடந்துவரும் நாடகங்கள் யாவும் இதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

பாபர் பள்ளிவாசல் பிரச்சினையில் மட்டுமின்றி எத்தனையோ பிரச்சினைகளிலும் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை நாம் காணமுடிகின்றது.

மதச் சார்பற்ற ஒரு நாட்டில் - ஒரு மானிலத்தின் - தமிழ்நாட்டின் - அரசுச் சின்னமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலின் கோபுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற ஒரு நாட்டில் ஒரு மதத்தினரின் வழிபாட்டுத்தலம் எப்படி அரசுச் சின்னமாக இருக்க முடியும்? சிறுபான்மை மக்களின் உள்ளத்தில் ஐயப்பாட்டைத் தோற்றுவிக்கும் இந்தப் போக்கு எதைக் காட்டுகின்றது?

எல்லா மதத்தவர்களுக்கும் பண்டிகைகள் வருகின்றன. மற்ற மதத்தினரை விடக் குறைவான எண்ணிக்கையிலேயே முஸ்லிம்களின் பண்டிகைகள் அமைந்துள்ளன. மதச்சார்பற்ற நாட்டில் தீபாவளி பண்டிகையின் போது மட்டும் இரு மடங்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றனவே! இதற்குப் பெயர் தான் மதச்சார்பின்மையா? எந்தப் பண்டிகைகளுக்கும் சலுகை காட்டாமல் இருந்தால் மதச் சார்பின்மை என்று கூறலாம். அல்லது எல்லா மதத்தவர்களின் பண்டிகைகளுக்கும் இந்த சலுகைகள் வழங்கப்பட்டிருந்தால் அதையும் மதச் சார்பின்மை என்று கூறலாம். இது எப்படி மதச் சார்பின்மையாக முடியும்?

அரசுப் பணத்தில் வேதாகமக் கல்லூரி நடத்தப் போவதாக அரசே அறிவுப்புச் செய்யும். ஹிந்து மத வேதங்களைப் படித்துக் கொடுக்க அரசுப் பணத்தைச் செலவு செய்வது எப்படி மதச் சார்பின்மையாக இருக்க முடியும்? ஹிந்துக்கள் மட்டும் தான் அரசுக்கு வரி செலுத்தி வருகின்றனரா?

ஹிந்துக் கோவில்களைப் பராமரிக்க மதச்சார்பற்ற நாட்டின் ஒரு மாநில முதல்வரால் நிதி வசூலிக்கப்படுகிறதே! இது தான் மதச் சார்பின்மையா? மத்திய அரசுக்குச் சொந்தமான மத்திய வங்கி ஒன்று அதற்கு நிதி வழங்குகின்றதே! இதுதான் மதச் சார்பின்மைக்கு அடையாளமா?

அரசுச் செலவில் கோவில்களைப் பாதுக்க தனிப்படை அமைப்பதும் மதச் சார்பின்மை தானா?

மகாமகக் குளம் அரசுப் பணத்தில் ஆழப்படுத்தப்படும்! தண்ணீர் நிரப்பப்படும்! ஆடிப்பெருக்கு அன்று மட்டும் காவிரி புரண்டு ஓடும்! ஸ்ரீரங்கத்தில் இராஜ கோபுரம் கட்டப்பட்டு அதையொட்டி நடத்தப்பட்ட விழா அரசுச் செலவிலேயே நடைபெறும்! மதச்சார்பற்ற நாட்டின் ஜனாதிபதி அரசுச் செலவில் வந்து கலந்து கொள்வார்! இதையெல்லாம் மதச் சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக சிறுபான்மை மக்கள் கருதிக் கொள்ள வேண்டும்!

அகில பாரத இசை, கர்நாடக இசை என்றெல்லாம் தொலைக்காட்சியும், வானொலியும் இந்து மதப்பிரச்சாரம் செய்யும்! அதை மதச் சார்பற்ற நாடு என்பதற்கு அடையாளமாக நாம் கருதிக் கொள்ள வேண்டும்.

கம்பராமாயணமும், மகாபாரதமும் தொலைக்காட்சியில் காட்டப்படும், திப்புசுல்தான் வாள்  மட்டும் இது முழுக்க முழுக்க கற்பனையே என்ற டைட்டிலுடன் ஒளிபரப்பப்படும்.

நடந்த நிகழ்ச்சியை கற்பனை எனவும், கற்பனைகளை உண்மை எனவும் விளம்பரப்படுத்துவது ஒரு மதச்சார்புக்கு அடையாளமாக இல்லையா?

இந்து மத வேதங்களும், புராணங்களும் சமஸ்கிருத மொழியில் அமைந்துள்ளது என்ற ஒரே ஒரு காரணத்துக்காக செத்த மொழிக்கு அரசுப் பணத்தில் உயிரூட்ட முயற்சிப்பது மதச் சார்பின்மையாகுமா?

அரசு அலுவலகங்களுக்கு உள்ளேயே ஹிந்து மதத் தெய்வங்களின் சிலைகள் நிறுவப்படும்! படங்கள் மாட்டப்படும்! அவற்றுக்கு ஆராதனையும் செய்யப்படும்!

காவல் நிலையங்களுக்குள்ளேயே கோவில் கட்டப்படும்! அரசு நிகழ்ச்சிகள் ஹிந்து மத ஆச்சாரப்படி குத்து விளக்கேற்றி விஷேச பூஜையுடன் தெடங்கும்! இவற்றைக் கூட மதச் சார்பின்மை என்று நாம் நம்பியாக வேண்டும்!

விவேகானந்தர் என்பவர் இந்து மதச் சாமியார்களில் ஒருவர். அவருக்காக கன்னியாகுமரியில் விழா நடத்தப்படும்! பிரதமரும், ஐந்து மாநில முதல்வர்களும் அதில் கலந்து கொள்வார்கள். ஒரு மதத்தின் சாமியார் பற்றிய விழா மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டு என்று இவர்கள் காதில் பூச்சுற்றுவார்கள். சிறுபான்மையினர் பேசாமல் காதுகளைக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

சமீபத்தில் தமிழக அரசின் செய்திக் குறிப்பு ஒன்று, மதச் சார்பின்மை எந்த இலட்சணத்தில் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. தினமணியில் (12-12-92-மதுரைப் பதிப்பு) வந்த செய்தியைப் படியுங்கள்.

மருதமலை கோவில் திருப்பணிக்கு 1.09 கோடி அனுமதி.

சென்னை டிச-11 கோயம்பத்தூர் அருகே உள்ள மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு தங்கத்தேர் செய்வதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா 71 லெட்சம் அனுமதித்துள்ளார், இது தவிர கோவில் திருப்பணிக்காக 38 லெட்ச ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (தினமணி)

ஏதோ இந்து அறநிலையத் துறையிலிருந்து இந்த நிதி ஒதுக்கப்பட்டதாக எண்ணி ஆறுதலடைய வேண்டாம். 11-12-92 மாலை மாநிலச் செய்தியில் கைத்தறித் துறையிலிருந்து இந்த நிதி ஒதுக்கப்படுவதாக வானொலி தெரிவிக்கின்றது.

கைத்தறித் துறைக்கும், மருதமலைக் கோவிலுக்கும் என்ன சம்பந்தம்? மதச்சார்பற்ற நாட்டில் இது அக்கிரமம் இல்லையா?

தழிழகத்தை ஆளும் அ.இ.அ.தி.மு.க வின் பொதுக்குழு கூடுகிறது. மதச்சார்பற்ற நாட்டின் முதல்வர் ஜெயலலிதா திருப்பதியில் பக்தர்கள் வசதிக்காக தமிழக அரசு மண்டபம் கட்டித் தரும் என்று அறிவிக்கிறார்.

இவையெல்லாம் இந்தியாவில் மதச் சார்பின்மைக்கு இருக்கும் மதிப்பை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

பாபர் மசூதி தகர்க்கப்பட்ட விஷயத்துக்கு வருவோம். தகர்க்கப்படுவதில் உடந்தையாக காங்கிரஸ் நடந்து கொண்டதை அனைவரும் அறிவோம். மசூதி தகர்க்கப்படுவதற்கு முன்பு இவர்கள் நடந்து கொண்ட விதம். அதன் பிறகு அரசியல் கோமாளி நரசிம்மராவ் நடத்தும் நாடகம் ஆகியவைகளையும் சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டும்.

மதச் சார்பற்ற நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரு, அவரது புதல்வி இந்திரா, அவரது புதல்வன் ராஜிவ், இன்றைக்கு நரசிம்மராவ் ஆகியோர் மதச்சார்பின்மையைக் காலில் போட்டு நசுக்கி வந்தனர் என்பதில் ஐயமில்லை.

1949 ல் பாபர் பள்ளிவாசலுக்குள் ராமர் சிலை அத்து மீறி சட்ட விரோதமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. மதச்சார்பின்மை பற்றி வாய் கிழியப் பேசும் காங்கிரஸ் தான் மத்தியிலும், உ.பி மாநிலத்திலும் அப்போது ஆண்டது.

அதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்குள் செல்ல தடுக்கப்பட்டார்கள். அப்போதும் அதிகாரம் காங்கிரஸ் கையில்தான்.

பிறகு பள்ளிவாசலுள் வைக்கப்பட்ட சிலைக்கு பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டது. இதுவும் காங்கிரஸின் ஆசியோடுதான் நடந்தது.

செங்கல் ஊர்வலம் விட்டு, பல உயிர்களைக் குடித்துவிட்டு ராமர் கோயில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது! அப்போதும் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்தது மதச்சார்பின்மையைக் காக்கும் (?) காங்கிரஸ் தான்.

கட்டுமானப்பணி துவங்கிய போதும், அல்லாஹ்வின் இல்லம் இடிக்கப்பட்டபோதும் மாநிலத்தை பிஜேபி ஆட்சி புரிந்தாலும் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் காங்கிரஸ் தான் இருந்தது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பிஜேபியின் மாநில அரசின் மீது நரசிம்மராவ் பழி சுமத்த முடியும். மாநில அரசு என்பது தனிநாடு அல்ல. அது தன்னிஷ்டத்துக்கு எதையும் செய்ய முடியாது. மத்திய அரசு நினைத்திருந்தால் அதை முன்கூட்டியே தடுத்திருக்க முடியும். நரசிம்மராவின் இந்தப் புலம்பலை நம்பித் தொலைப்போம்.

அதன் பிறகு நடந்தது என்ன? இடிக்கப்பட்ட இடத்தில் சாவகாசமாக ராணுவத்தின் பாதுகாப்புடன் சிறிய கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இதற்கு யார் மீது பழியைப் போடப் போகிறார்? அதன் பிறகு பூசாரிக்கு மட்டும் பூஜை செய்ய அனுமதி வழங்கப்பட்டதே? அது யாருடைய ஆட்சியில்?

பாபர் மசூதி கட்டித் தரப்படும் என்று வாக்களித்து விட்டு அதே இடத்தில் கட்டித் தருவதாக அரசு கூறவில்லை என்று அதிகாரிகளை விட்டு அறிவிக்கச் செய்தது யாருடைய ஆட்சியில்? பள்ளிவாசல் கட்டித் தருவது பற்றி கலந்து பேசி முடிவெடுக்கப்படும், என்று அந்தர் பல்டி அடித்தது துரோகி நரசிம்மராவ் அல்லவா?

 27.12.92 அன்று பக்தர்களை தரிசனத்துக்காக அனுமதிக்க பைஸாபாத் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்கிறது! அதை நடைமுறைப்படுத்துகின்றது! திருவனந்தபுரம் வந்த நரசிம்மராவிடம் நிருபர்கள் இது பற்றிக் கேட்கின்றனர்.

அவர் அளித்த பதிலைப் படியுங்கள்!

நாங்கள் எந்த அனுமதியையும் அளிக்கவில்லை. மைய அரசு என்ற முறையில் அத்தகைய அனுமதி எதையும் அளிக்கவில்லை.

 தரிசனத்துக்கு அனுமதியளிப்பதும் ஊரடங்கு பிரப்பிப்பதும் மைய அரசின் பணியல்ல.

அயோத்தியில் தகராறுக்குட்பட்ட இடத்தில் தற்காலிகமாகக் கட்டப்பட்டுள்ள அமைப்பில் வைக்கப்பட்டுள்ள பலராமர் சிலை தரிசனத்துக்கு அனுமதியளித்தது பைஸாபாத் மாவட்ட நிர்வாகம் தானே தவிர மைய அரசு அல்ல.

முஸ்லிம்களை முட்டாள்களாக்கும் விதமாக இத்தகைய தத்துவங்களை உதிர்க்கிறார். சென்ற மாத தலயங்கத்திலேயே இந்த துரோகியை நம்ப முடியாது என்று எச்சரித்திருந்தோம். அந்த எச்சரிக்கையை மெய்ப்படுத்தியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் மனப்பான்மை கொண்ட அவரை இனியும் முஸ்லிம்கள் நம்பப் போகிறார்களா? இனியும் ஏமாந்து கொண்டே இருப்பது என்று முடிவு செய்யப் போகிறார்களா?

மாநிலத்தில் நடக்கும் அக்கிரமங்களைத் தடுத்து நிறுத்த முடியாத கையாளாகாத நரசிம்மராவ் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் தானா? இதை எல்லா சிறுபான்மையினரும் சிந்திக்க வேண்டும்.

இந்தத் துரோகிகள் தங்களை இவ்வளவு தெளிவாக அடையாளம் காட்டிய பிறகும், பதவி வெறிபிடித்த முஸ்லிம் லீக் கட்சியினர் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகிக்கின்றனர். தங்களின் பதவியைப் பெரிதாகக் கருதும் சந்தர்ப்பவாத முஸ்லிம் லீக்கை இனியும் நம்ப வேண்டுமா?

இந்தச் சமுதாயம் இதன் பிறகு கூட துரோகிகளை அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்பது தான் வேதனையிலும் வேதனை.

சமீபத்தில் கேரளத்தில் நடத்தப்பட்ட முஜாஹித்களின் மாநாட்டில் கருனாகரன், மற்றும் மத்திய அமைச்சர்கள், முஸ்லிம் லீக்கினர் அழைத்துக் கௌரவிக்கப் பட்டிருக்கிறார்கள். இவ்வளவு சீக்கிரம் தங்களுக்கு எற்பட்ட அவமானத்தை மறந்துவிட்டனர்.

குர்ஆன், ஹதீஸை அடிப்படையாகக் கொண்ட அமைப்பினருக்கே சொரணை இல்லையென்றால் மற்றவர்களின் நிலை என்ன?

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் போலி மதச்சார்பின்மை பேசுவோருக்கு நாம் உணர்த்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்ட வேதனையில் உணர்ச்சி வசப்பட்டு பாகிஸ்தானில் சில ஹிந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டன. பாகிஸ்தான் தன்னை மதச்சார்பற்ற நாடு என்று கூறவில்லை. இஸ்லாமிய நாடு என்றே பிரகடனம் செய்துள்ளது. ஆனால் பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட கோவில்களை அரசுச் செலவில் கட்டித் தரும் பணி துவங்கி விட்டதாக தினமணி 28-12-92 செய்தி கூறுகின்றது.

மதச்சார்பின்மையைக் கொள்கையாகக் கொண்ட இந்தியாவில் இந்நேரம் இடிக்கப்பட்ட பள்ளிவாசலைக் கட்டி முடித்திருக்க வேண்டாமா? இது பற்றி இன்னும் முடிவே செய்யவில்லையாம்! பிரதமர் திருவாய் மலர்ந்துள்ளார்!

 அயோத்தியில் ராமர் கோவில், மற்றும் மசூதி கட்டும் பணிகளை மேற்கொள்வதற்காக இரண்டு அறக்கட்டளைகளை மைய அரசு விரைவில் அமைக்கும் என்று பிரதமர் அறிவித்தார்.

எவ்வளவு விரைவில் இந்த அறக்கட்டளைகள் அமைக்கப்படும்? என நிரூபர்கள் கேட்டதற்கு சில நாட்கள் அவகாசம் தாருங்கள் என்றார்.

 அறக்கட்டளைகள் அமைப்பதற்கு சிறிது காலம் ஆகும் .

பள்ளிவாசல் கட்டுவதற்கு அவகாசம் கேட்கவில்லை. பள்ளிவாசல் கட்டுவதற்காக ஒரு அறக்கட்டளை அமைக்கப் போகிறாராம்! அது அமைவதற்கே சிறுது காலம் பிடிக்குமாம்! ஏன் இந்த அவகாசம்? முஸ்லிம்கள் அதற்குள் அனைத்தையும் மறந்து விடுவார்கள் அல்லவா? அதற்குத் தான் ஐயாவுக்கு அவகாசம் தேவைப்படுகின்றது.

மதச்சார்புள்ள நாட்டின் நடவடிக்கையை விடவும் மேசமாக மதச்சார்பற்ற நாட்டின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

மற்றொரு செய்தியைப் படியுங்கள்! இது தினமணியின் தலையங்கத்தில் (26.12.92) இடம் பெற்றுள்ளது.

அதே வேளையில் ஐக்கிய அரபுக் குடியரசு நாடு 2000 பாகிஸ்தானியரை நாடு கடத்தியதானது பாகிஸ்தானை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அயோத்தி சம்பவத்துக்காக அரபு நாட்டிலிருந்த ஹிந்துக்களையும், கிறிஸ்தவர்களையும், அவர்களுடைய வழிபாட்டுத் தலங்களையும் தாக்கியமைக்காக அவர்களை அந்த அரசு நாடு கடத்தியது. தனது வளர்ச்சித் திட்டங்களை இந்த வெளியேற்றம் பாதிக்கும் என்று தெரிந்திருந்தும் கூட ஐக்கிய அரபுக் குடியரசு மதக் கலவரத்தைத் தனது நாட்டில் தடுக்க கடுமையான நடவடிக்கையை எடுத்தது. (தினமணி தலையங்கம்)

இதை ஒரு முறை அல்ல! பல முறை படியுங்கள்! பள்ளிவாசல் இடிக்கப்பட்டதற்காக ஐக்கிய அரபுக் குடியரசு இந்துக்களை நாட்டை விட்டு வெளியேற்றவில்லை. கோவில்களைச் சேதப்படுத்தியதற்காக முஸ்லிம்களை வெளியேற்றுகின்றது! இதனால் தனது நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கும் என்று தெரிந்தே இந்த நடவடிக்கையை எடுக்கின்றது. எத்தகைய நடவடிக்கை! நாடு கடத்தும் நடவடிக்கை!

ஐக்கிய அரபுக் குடியரசு மதச்சார்பின்மையை அரசியல் சாசனத்தில் எழுதி வைக்கவில்லை. இஸ்லாமிய நாடு என்றே அது தன்னைக் கூறிக் கொள்கிறது! அப்படி இருந்தும் அந்த நாடு பாரபட்சமற்ற கடுமையான நடவடிக்கை எடுத்தது. காரணம் அங்கே நடப்பது சட்டத்தின் ஆட்சி.

வெட்கங்கெட்ட இந்திய ஆட்சியாளர்கள் பள்ளியை இடித்தவர்களுக்கு எதிராக எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்கக் காணோம்! உயர் நீதிமன்ற உத்தரவையும், அரசியல் சாசனத்தையும் அவமதித்தவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் உயிரைக் குடித்தது போலீஸும் ராணுவமுமே! கரசேவையில் கூட இந்தக் கயவர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். இவர்களைக் களை எடுக்கக் காணோம்.

நடைமுறைப்படுத்தப்படாத ஏட்டளவு மதச்சார்பின்மையை விட நடைமுறைப்படுத்தப்படும் ஐக்கிய அரபுக் குடியரசின் மதச்சார்புக் கொள்கை ஆயிரம் மடங்கு உயர்ந்தது. அறிவுடையோர் இந்த முடிவுக்கே வருவார்கள்.

மொத்தத்தில் முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காக இந்த நாட்டில் ஒருநாடகம் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள், குறிப்பாக காங்கிரஸ் - அதிமுக வினர் மிகவும் சிறப்பாக நடிக்கின்றனர். சொரணையற்ற சமுதாயம் நடிப்பை உண்மை என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கின்றது.

(அல் ஜன்னத் ஜனவரி 1993)

பாக்கியாத் பத்வாவும் பரேலவி நாளேடும்

தமிழகத்தில் உள்ள அரபுக் கல்லூரிகளின் தாய்க்கல்லூரி என்று தமிழக உலமாக்களால் பாராட்டப்படும் நிறுவனம் வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் . இதை நிறுவிய அஃலா ஹஸ்ரத் அவர்கள் மத்ஹப்வாதியாக இருந்த போதும் மத்ஹப் நூல்களில் கண்டிக்கப்பட்டுள்ள பித்அத்களை துணிவுடன் கண்டித்தவர். ஆனாலும் பிற்காலத்தில் அந்தக் கல்லூரியின் பொறுப்புக்கு வந்தவர்கள் மத்ஹப்களில் கண்டிக்கப்பட்ட தீமைகளைக் கூட கண்டிக்காமல் அதற்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து மக்களை வழிகெடுத்தனர். இந்த நிலையில் தான் மத்ஹப்களில் கண்டிக்கப்பட்ட தீமைகளைக் கூட நியாயப்படுத்தும் போலி உலமாக்களை அடையாளம் காட்டுவதற்காக தப்லீக் சிந்தனை உடைய உலமாக்கள் அஃலா ஹஸ்ரத் அளித்த ஃபத்வாக்களில் காலத்துக்கு தேவையானதைத் தொகுத்து பாகியாத் ஃபத்வா என்ற பெயரில் இலவசமாக வெளியிட்டனர். அதனை நாமும் மக்களிடம் பரப்புவதில் கவனம் செலுத்தினோம்.

இந்தக் காலகட்டத்தில் தான் முஸ்லிம் லீக் தலைவரும் மணிச்சுடர் நாளிதழ் உரிமையாளருமான அப்துஸ் ஸமத் இதற்கு எதிராக கடுமையான கருத்தைப் பதிவு செய்தார். இவரது தந்தை திருக்குர்ஆனைத் தமிழாக்கம் செய்த அப்துல் ஹமீத் பாக்கவி ஆவார். பாக்கவியின் மைந்தன் என்ற பொருள்படும் இப்னுல் பாக்கவி என்ற பெயரில் அப்துஸ்ஸமத் கட்டுரை எழுதுவது இதன் அடிப்படையில் தான்.

மத்ஹப்களில் கூறப்பட்ட உண்மைகளைச் சொல்வதைக் கூட அன்றைய சமுதாயத் தலைவர்கள் அனுமதிக்கத் தயாராக இல்லை. அப்படியானால் மத்ஹபுக்கு எதிரான நமது பிரச்சாரத்துக்கு எத்தகைய எதிர்ப்புகள் இருந்திருக்கும்? அந்த வரலாற்றைப் பதிவு செய்வதற்காக அன்று பீஜே ஆசிரியராக இருந்த போது அல்ஜன்னத் இதழில் பதிவு செய்ததை தேவையான மாற்றத்துடன் இங்கே வெளியிடுகிறோம்..

காலம் சென்றவரை விமர்சிப்பது நமது நோக்கம் அல்ல. தவ்ஹீதுக்கு எதிராக யாரெல்லாம் கச்சை கட்டி இருந்தனர் என்ற வரலாற்றைப் பதிவு செய்வதே இதன் நோக்கம்.

பாக்கியாத் ஸ்தாபகரின் பத்வாக்கள் என்ற தொகுப்பிலிருந்து ஒரு பத்வாவைச் சென்ற இதழில் அல்ஜன்னத்தில் வெளியிட்டிருந்தோம். அந்த பத்வா தொகுப்புகள் யாவும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அமைந்தது அல்லவெனினும் ஷிர்க், பித்அத் பற்றிய பத்வாக்களில் பெரும்பாலானவை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையை ஒட்டி அமைந்துள்ளது.

இதனிடையே பரேலவி நாளேடு மணிச்சுடரில் சமுதாயத் தலைவர் யார்? என்ற தலைப்பில் இப்னுல் பாகவி (முஸ்லிம் லீக் தலைவர் அப்துஸ்ஸமத்) 15.09.1988 இதழில் பாகியாத் பெயரால் மோசடிப் பிரசுரம் என்ற தலைப்பிட்டு மிதிப்புரை என்று எழுதியிருக்கிறார்.

அதைப் படிக்கின்ற அறிவுடைய எவருக்கும் எழுதியவரின் மடமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு மக்களை இன்னமும் மடையர்களாக எண்ணிக் கொண்டிருக்கும் அவரது மனப் போக்கையும் காட்டுகின்றது. வரிக்கு வரி விமர்சிக்கப்பட வேண்டிய அளவுக்கு அதில் சரக்குகள் இருக்கின்றன.

24.04.1988 அன்று நடைபெற்ற பாக்கியாத் பட்டமளிப்பு விழாவில் அது வெளியிடப்பட்டதாக அந்த மதிப்புரையில் ஒப்புக் கொள்ளும் இப்னுல் பாகவி இந்த பத்வாவை மக்கள் மத்தியில் மதிப்பற்றதாகச் செய்ய வேண்டும் என்பதற்கு எடுத்து வைக்கும் மலிவான வாதங்கள் மஞ்சள் பத்திரிகைகளையும் மிஞ்சி விடுகின்றன.

அஃலா ஹஸரத் காலமாகி அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் பாக்கியாத் பதிவு ஏட்டில் உள்ள சுமார் 375 பத்வாக்களை மவ்லவி முஹம்மது யாகூப் வெளியிட்டிருக்கிறார்

என்கிறது மிதிப்புரை.

இதன் மூலம் பாக்கியாத் பதிவு ஏட்டில் அந்த ஃபத்வா இருக்கின்றது என்பதை இப்னுல் பாகவி ஒப்புக் கொண்டு விட்டு அரை நூற்றாண்டுகள் கழிந்து விட்ட பின் வெளியிடப்பட்டதைக் குறை காண்கிறார்.

அப்துல் ஹமீது பாகவி வெளியிட்ட தர்ஜமதுல் குர்ஆனை அவர் மறைந்து பல்லாண்டுகள் கழித்த பின் அவரது மகன் வெளியிடுவது எப்படியோ அப்படி இதை இப்னுல் பாகவி எடுத்துக் கொள்ளவில்லை?

பத்வாக்கள் வெளியிடப்படு முன் அதன் முதல்வருடைய அனுமதியையோ பேராசிரியர்களின் அனுமதியையோ பெற்றதாகத் தகவல் இல்லை

என்கிறார் இப்னுல் பாகவி..

அனுமதி பெறவில்லை என்றே வைத்துக் கொள்வோம். அதனால் அந்த ஃபத்வாக்களை அதன் ஸ்தாபகர் வழங்கவில்லை என்று ஆகிவிடுமா? அனுமதி பெறவில்லை என்று கூட எழுதத் திராணியின்றி அனுமதி பெற்றதாகத் தகவல் இல்லை. என்று எழுதியிருக்கிறார் இவர்.

சொல்லப்படுகிறது, பேசிக் கொள்கிறார்கள், தகவல் இல்லை இவையெல்லாம் மஞ்சள் பத்திரிக்கை நடை இல்லையா?

இவரது பாணியிலே நாம் எழுவதென்றால் இந்த மிதிப்புரை எழுதுவதற்காக எத்தனை லட்சம் பெற்றார் என்பது பற்றி நமக்குத் தகவல் இல்லை என்று எழுதலாம் அல்லவா?

அனுமதி பெறவில்லை என்றே வைத்துக் கொள்வோம். பகிரங்கமாக அந்த ஸ்தாபனத்தில் நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர், நிர்வாகிகள், பேராசிரியர்கள் அனைவரும் சேர்ந்து நடத்திய விழாவில் பெங்களூர் அரபிக்கல்லூரி முதல்வர் அபுஸ்ஸூவூத் அவர்களால் வெளியிடப்பட்டதே அனுமதி தானே.

இதன் ஒரு பகுதியைத் தமிழில் மொழி பெயர்த்த அந்தக் கல்லூரிப் பேராசிரியரை அந்த ஸ்தாபனத்தில் தொடர அனுமதிக்கக் கூடாது

என்று எழுதியிருக்கும் இவர் இன்னொன்றையும் எழுதுவாரா?

மதரஸா பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பேராசிரியர்கள் முன்னிலையில் அது வெளியிடப்படும் போது அதைத் தடுத்து நிறுத்தாத - நிறுத்த முடியாத - அதற்கு ஆதரவாக இருந்த கையாலாகாத முதல்வர் உட்பட எல்லாப் பேராசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தனது நாளிதழில் வலியுறுத்துவாரா? கையாலாகாத முதல்வரும், பேராசிரியர்களும் நிறைந்த ஸ்தாபனமே பாக்கியாத் என்று சொல்லாமல் சொல்கிறார் இவர்.

ஆயிரக்கணக்கான பத்வாக்கள் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த ஏட்டிலிருந்து 375 பத்வாக்களை மாத்திரம் இவர் பொறுக்கி எடுத்து வெளியிடுவதற்கு என்ன நோக்கம் இருந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை

இப்படி ஒரு வித்தியாசமான வாதத்தைக் கூறுகிறது பரேலவி நாளேடு.

6666 ஆயத்களுக்கு இவரது தந்தை மொழி பெயர்ப்பு செய்திருக்கும் போது தனது நாளேட்டில் ஒரு சில ஆயத்களை மட்டும் வெளியிடுவதற்கு என்ன நோக்கம் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கும் போது இவர் மட்டும் ஸிராஜுல் மில்லத் என்று தன்னைப் பற்றி தானே எழுதிக் கொள்வதற்கு என்ன நோக்கம் என்று தெளிவாகத் தெரியவில்லை.

அவரது வஞ்சக நடையில் இதற்கு இப்படித்தான் பதில் கூற வேண்டும்.

வட ஆர்காடு மாவட்ட முஸ்லிம்கள் அனைவரும் உர்தூ மொழியினர். உர்தூ பேசாவிட்டால் முஸ்லிமே இல்லை என்று கூறும் அளவுக்கு உர்தூ மோகம் கொண்டவர்கள்.

அந்த மாவட்டத்தின் தலைநகரில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு உர்தூ தெரிந்திருக்கவில்லையாம்.

பைத்தியக்காரன் கூட இதை நம்ப மாட்டானே? வந்திருந்த மக்களுக்குத் தான் தெரியவில்லை. உர்தூவில் மணிக்கணக்காகப் பேசும் அந்த முதல்வருக்குமா உர்தூ தெரியாமல் போனது?

உர்தூவிலேயே பாடங்கள் நடத்துகின்ற பேராசியரியர்களுக்குமா உர்தூ தெரியவில்லை?

அய்யா இப்னுல் பாக்கவி அவர்களே உங்கள் அரசியல் பித்தலாட்டங்களை இதிலும் காட்ட வேண்டுமா? இப்படி அறவே உண்மையில்லாததை எழுத உங்களுக்கு வெட்கமாக இல்லை?

தெற்கத்தி நடையில் எழுதப்பட்ட அந்த ஃபத்வாவை அதன் கருத்து மாறாமல் இலக்கிய உர்தூவில் மாற்றியதாக அந்த ஃபத்வாவை தொகுத்தவர் குறப்பிடுகிறார். அதையும் இப்னுல் பாக்கவி விடவில்லை.

அஃலா ஹஸரத் அவர்களுக்கு இலக்கிய உர்தூ தெரியாதாம். இவருக்கு இலக்கிய உர்தூ தெரியுமாம்

என்று சிண்டு முடிகிறார்.

இப்னுல் பாக்கவி இவ்வளவு மட்டரகமாகப் போக வேண்டுமா? அரபு மொழியில் பாண்டித்தியம் பெற்ற ஒருவர் உர்தூவில் பாண்டித்துவம் பெற்று இருப்பது அவசியமா என்ன?

உர்தூ இலக்கிய அறிவு ஒருவருக்கு இல்லை என்று கூறுவது அவரது தகுதியைக் குறைத்துவிடுமா என்ன?

மார்க்க அறிஞரான இவரது தந்தையின் தமிழ் நடையை விட இவரது தமிழ் நடை இலக்கியத்தரமுடையது என்று சொன்னால் இவரது தந்தையின் மார்க்கப் புலமைக்கு என்ன மாசு வந்து விடப் போகிறது?

ஒரு குறிப்பிட்ட மஸ்லக்கைப் பின்பற்றும் குழப்பவாதிகள் தமிழ்நாட்டு மஸ்ஜிதுகளில் இதைத் தொங்கவிட எடுத்துக் கொண்ட அவசரத்தையும், முக்கியத்துவத்தையும் பார்க்கும் போது இதன் முன்னால் வேறு சில சக்திகளின் தூண்டுதல் இருக்குமோ என்று சந்தேகம் ஏற்படுகின்றது

என்று தன்னை அடையாளம் காட்டுகிறார் இப்னுல் பாக்கவி.

அந்த பத்வாத் தொகுப்பை தப்லீகின் மிகப்பெரும் தலைவர் அபுஸ்ஸூவூத் மவ்லவி அவர்கள் வெளியிட்டதால் தப்லீக் ஜமாஅத்தினரும் தேவ்பந்த் மஸ்லக்கை ஒட்டி அந்த பத்வாக்கள் அமைந்திருப்பதால் தேவ்பந்த் மவ்லவிகளும் இதை மஸ்ஜிதுகளில் தொங்க விட்டனர். அவர்களைத் தான் குழப்பவாதிகள் என்கிறார். உள்நோக்கம் என்கிறார்.

சந்தனக் கூடு வைபவங்களைச் செய்தியாக வெளியிட்ட போது இவரைப் பரேலவி என்று நம்பாத தப்லீக் ஜமாஅத்தினர்

குணங்குடி மஸ்தானுக்கு விழா எடுக்கச் சொன்ன போதும் பரேலவி என்று இவரை அடையாளம் தெரிந்து கொள்ளாத தப்லீக் ஜமாஅத்தினர்

காயிதே மில்லத் சமாதிக்கு பச்சைப் போர்வை போர்த்தி பாத்தியா ஓதும் போது இவரைத் தெரிந்து கொள்ளாத தப்லீக் ஜமாஅத்தினரும் தேவ்பந்திகளும்

இனியாவது இந்த பரலேவியைப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

அவரது ஏடு சமுதாய நாளேடு அல்ல. பரலேவிக் கொள்கையைப் பரப்புவதற்காக பரேலவியால் நடத்தப்படும பரேலவிக் கொள்கைப் பிரச்சார ஏடு என்பதை இனியும் புரிந்து கொள்ளத் தவறினால் மிகப் பெரும் விளைவை பரேலவிசத்தை ஆதரிக்காத இயக்கங்கள் சந்திக்க நேரும் என எச்சரிக்கிறோம்.

இவருக்கெல்லாம் ஜிந்தாபாத் போடுவதை இனியேனும் தவிர்க்கா விட்டால் தக்லீதை ஆதரிக்கும் தவ்ஹீத் இயக்கங்கள் கூட ஜிந்தாவாக இருக்க முடியாது என்பதை தவ்ஹீத்வாதிகள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

22.12.2010. 12:10 PM

உமர் அலியுடன் முபாஹலா நடந்ததா?

உமர் அலி முபாஹலாவுக்கு சவால் விட்டதாகவும், அதை பீஜே ஏற்றுக் கொண்டதாகவும் உமரலி விவாதம் ஏன் என்ற கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் முபாஹலா நடந்ததா என்று சிலர் கேட்டு எழுதியுள்ளனர். அது குறித்து இலங்கை ஹஃபீல் அவர்கள் எழுதிய ஆக்கத்தையே பதிலாகத் தருகிறோம்.

- இலங்கை ஹஃபீல்

உமர் அலியின் தயக்கமும், தட்டிக்கழிப்பும்

புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெற்ற விவாதத்தில் பீஜே அவர்கள் உமர் அலியிடம் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் அளித்தால் மாட்டிக் கொள்வேன் என்று கூறிய உமர் அலி முபாஹலா என்ற பூச்சாண்டி காட்டி தப்பிக்க முனைந்தார்.

விவாதம் முடிந்த சில நாட்களில் உமர் அலி தனது ஆதரவாளர்களைத் தக்க வைப்பதற்காக கிட்டத்தட்ட ஒன்பது ஆடியோ கெஸட் வெளியிட்டார். அது விவாதத்தில் நான் மாட்டிக் கொள்வேன் என்று கூறியதை விட தமாசாக இருந்தது.

அசகாயசூரன் போன்று வாய்ச்சவடால் விட்ட உமர் அலி முபாஹலா செய்ய இந்தியா செல்லவில்லை. விவாதத்தின் பின்னர் இருவருக்குமிடையே பல கடிதப் போக்குவரத்துகள் நடந்தன. அவர் பீஜேவிற்கு அனுப்பிய கடிதங்களையும் அவற்றிற்கு பீஜே எழுதிய பதில்களையும் உமர் அலி அவர்கள் ஏத்தாளையில் உள்ள அவரது பள்ளிக்கு முன்னாலுள்ள அவரது விளம்பரப் பலகையில் தொங்க விடுவார்.

 நான் ஸலஃபிய்யாவில் மாணவனாக இருக்கும் போது  அங்கு எனது உறவினர் வீட்டுக்கு விடுமுறையில் செல்லும் போது அவற்றைப் படிப்பதுண்டு. அப்போதெல்லம் உமர் அலி ஏன் தயங்குகின்றார் என்ற கேள்வி எழும்.

உமர் அலிக்கு எனது குடும்பத்தோடு நெருக்கமும் இருந்தது. பைஅத் பிரசாரத்தை உமரலி துவக்குமுன்னர் அவர் ஸலஃபிய்யாவில் ஆசிரியராக இருந்த போது எங்கள் வீட்டுக்கு ஒரு தடவை எனது தந்தையைப் பார்க்க வந்திருந்தார். அப்போது என்னை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு நீங்கள் எல்லாம் வஹ்ஹாபியாக மாறி விட்டீர்கள்;  நாங்கள் திருத்த வந்துள்ளோம் என்று கூறிச் சிரித்தார்.

அவர் எங்கள் ஊருக்கு வரும் போது தவ்ஹீத் பிரசாரம் சூடு பிடித்திருந்தது. நான் பள்ளியில் விரல் ஆட்டியதற்காக சிகரட்டால் முகத்தில் சுடப்பட்டேன். அப்போது எனக்கு வயது எட்டைக் கூடத் தாண்டவில்லை. எங்கள் குடும்பத்தை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்திருந்தார்கள். எனது தந்தை தாக்கப்பட்டு எங்கள் குடும்பமே மக்கா வாழ்க்கையை அனுபவித்த நேரம் அது. அந்த இக்கட்டான சூழலில் உமர் அலி வடக்கில் வந்து பல இடங்களில் உரையாற்றி மக்களின் ஐயங்களுக்குப் பதில் அளித்தார்.

எனது பாட்டனை உமர் அலி அடிக்கடி சந்தித்து தன்னிடம் பைஅத் செய்யுமாறு வலியுறுத்தி வந்தார். என் பாட்டனார் ஏகத்துவக் கொள்கையில் தெளிவாக இருந்ததால் பைஅத் செய்யாமலேயே வஃபாத்தாகி விட்டார். முபாஹலா பற்றி அவர் என்னிடம் பேசிய நினைவு உண்டு. உமர் அலி முபாஹலாவுக்கு தயங்கியது எனது பாட்டனார இவரிடமிருந்து காப்பாற்றிய காரணங்களில் ஒன்று என நான் நினைக்கின்றேன்.

பீஜே அவர்கள் உமர் அலி அவர்களுக்குக் கடிதம் மூலமாகவும், அல்ஜன்னத் மாத இதழிலும் பகிரங்க அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார்கள். உமர் அலி தயக்கத்தால் தட்டிக்கழித்துக் கொண்டே இருந்தார்.

பல மதாங்கள் ஆன பின்னரும் அவர் வரத் தயங்கிக் கொண்டிருந்த போது அல்ஜன்னத்தில் பீஜே அவர்கள்  உமர் அலியே வருக! தயக்கமா தட்டிக்கழிப்பா என்று பகிரங்கமாகப் பின்வரும் அழைப்பை விடுத்திருந்தார்கள்.

உமர் அலியே வருக!

கடந்த ஜுலை மாதம் இலங்கையில் உமரலியுடன் விவாதம் நடந்ததும், விவாதத்தின் இடையிலேயே முபாஹலாவுக்கு அவர் அறைகூவல் விடுத்ததும் அதை நான் ஏற்றதும் அனைவரும் அறிந்ததே.

நான் இலங்கையை விட்டுப் புறப்படும் முன் இந்தியாவில் எந்த இடத்திலும், எந்த நாளிலும் முபாஹலாவுக்காக நீங்கள் வரலாம்; பதினைந்து நாட்களுக்கு முன் எனக்குத் தெரிவித்து விட வேண்டும்  என்று கடிதம் எழுதி அவரிடம் சேர்ப்பித்து விட்டு அவரும் அவரது குடும்பத்தாரும் இந்தியா வந்து செல்லும் செலவுக்கு பொறுப்பாளர்களை நியமனம் செய்து விட்டு வந்தேன்.

மாதங்கள் பல உருண்டோடியும் உமரலி வந்த பாடில்லை. வரும் எண்ணமும் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இடம்,  நாள் உட்பட எல்லா லிஷயத்திலும் முடிவு செய்யும் அதிகாரத்தை அவரிடமே வழங்கி எழுதிக் கொடுத்திருந்தும் ஒப்பந்தம் செய்யாததால் வர இயலவில்லை என்று மழுப்பல் கடிதம் அனுப்பியிருக்கிறார். நாம் கையெழுத்திட்டு ஆட்கள் வழியாக நேரில் சமர்ப்பித்த கடிதத்தையே ஒப்பந்தமாக எடுத்துக் கொண்டு அவர் வந்திருக்க வேண்டும்.

அவரது வழியில் அவருக்கே நம்பிக்கையில்லாத நிலையில் முபாஹலாவைச் சந்திக்க அவர் தயங்குகிறார் என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது. அவரை நம்பிய அவரது சகாக்கள் யாரேனும் இருந்தால் அவரை நிர்பந்தம் செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அவர் மறுத்தால் அவர் தமது கொள்கை தவறு என்பதை ஒப்புக் கொள்ளுமாறு அவரது சகாக்கள் நிர்பந்திக்க வேண்டும். அதற்கும் மறுத்தால் அவரை இனம் கண்டு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அவரை வரவழைக்கும் வகையில் கடிதப் போக்குவரத்துக்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம் என்பதை இலங்கைச் சகோதரர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். முபாஹலா அழைப்பை நான் ஏற்றுக் கொண்டதால் இவ்விளக்கம் அவசியமாகிறது.

அன்புடன்

பி. ஜைனுல் ஆப்தீன்.

இந்த அழைப்புக்கும் உமர் அலி பதில் அளிக்கவில்லை. இவர் தயங்குகின்றார் இனி இவரை அழைத்துப் பயன் இல்லை என்பதால் பீஜே அவர்கள் உமர் அலியை அழைப்பதை விட்டு விட்டார்கள். அந்த அறிவிப்பையும் அல்ஜன்னத்தில் பகிரங்கமாகவே வெளியிட்டிருந்தார்கள்.

14.01.2011. 7:37 AM

பீஜேயை விசாரித்த நீதிபதி பார்வையில்

PJ பற்றி குற்றவியல் நடுவர் நீதிபதி உத்திராபதி கதிர்வேலாயுதம் அவர்கள் கோரா (QUORA) இணையதளத்தில் (2017ல்) தெரிவித்த முக்கிய கருத்து.

கோரா (QUORA) இணையதளத்தைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். எந்தவொரு தலைப்பு, பிரபலமான நபர்கள் குறித்து நாம் கேள்விகள், சந்தேகங்கள் கேட்டாலும், அதில் உறுப்பினர்களாக உள்ள துறைசார்ந்த நிபுணர்கள் நமக்கு விடையளிப்பார்கள்.

#PJ குறித்தும், #TNTJ குறித்தும் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு குற்றவியல் நடுவர் உத்திராபதி கதிர்வேலாயுதம் அவர்களின் கருத்து உங்கள் பார்வைக்கு கீழே.

உத்திராபதி அவர்கள் கோவை குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாவார்

இவர் கூறுகிறார் ?

"அந்த அமைப்பின் (TNTJ) நிகழ்கால செயல்பாடுகள் குறித்து எனக்கு தெரியாது. அதனால் நான் அவ்வமைப்பை குறித்து கருத்து கூறுவதைவிட்டு விலகுகிறேன். ஆனால் இந்த கேள்வியில் கேட்கப்பட்ட PJ ஒரு குற்றவழக்கில் சாட்சியாக என் முன் கொண்டுவரப்பட்டார். அவ்வழக்கில் 1305 சாட்சிகளை நான் விசாரித்திருக்கிறேன்.

எனக்கேற்பட்ட தனிப்பட்ட ஆர்வத்தினால் சாட்சிகளின் புத்தி கூர்மை, அறிவு, துருவித்துருவி குறுக்கு விசாரணை செய்யும் போது அதை தைரியமாக எதிர்கொள்ளும் துணிச்சல், மனதை ஒருமுகப்படுத்தும் திறன் போன்றவற்றை குறித்து நான் ஒரு ஆய்வு செய்தேன். PJ அதில் முதல் ரேங்க் வாங்கினார். இந்த பண்புகளில் இரண்டாவது ரேங்க் வாங்கியவர் ஒரு வழக்கறிஞர் ஆவார்."

https://www.quora.com/What-is-your-view-on-Tamil-Nadu-Thowheed-Jamath-TNTJ-and-P-Jainulabdeen

கயவர்களுக்கு உச்ச நீதிமன்றம் சாட்டையடி

1994 நவம்பர் அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது எழுதிய தலையங்கம். சமுதாயத்துக்காக குரல் கொடுக்க இயக்கம் ஏதும் இல்லாத கஷ்டமான காலத்தில் எழுதப்பட்ட தலையங்கம்.

முஸ்லிம்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்து விட்ட நரசிம்மராவின் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களை ஏமாற்றுவதற்குக் கையாளும் எல்லா முயற்சிகளிலும் தோல்வியையே தழுவி வருகின்றது.

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களின் ஓட்டுக்களைக் கவர்வதற்காக உருதுச் செய்தியறிக்கை என்ற கிலுகிலுப்பையைக் கையில் எடுத்தது. கர்நாடகத்தில் உள்ள முஸ்லிம்கள் யாரும் உருதுவில் செய்தி வாசிக்க வேண்டும் என்று ஒரு போதும் கோரவில்லை.

இந்து வெறி பிடித்த கன்னடம் பேசுவோர் இதற்கெதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு முஸ்லிம்களைக் கொன்று முஸ்லிம்களின் சொத்துக்களையும் சூறையாடினர். உடனே உருதுச் செய்தியறிக்கையை அரசு வாபஸ் பெற்றுக் கொண்டது.

உருதுச் செய்தியறிக்கையால் கர்நாடக முஸ்லிம்கள் உச்சி குளிர்ந்து போகவில்லை. ஆனால் அமுல் படுத்தப்பட்ட பின் இந்து வெறியர்களுக்குப் பணிந்து அதை வாபஸ் வாங்கியது இந்திய முஸ்லிம்கள் அனைவரின் உள்ளங்களிலும் அச்ச உணர்வை ஏற்படுத்தியது தான் மிச்சம்.

இந்து வெறியர்களின் காலடியிலேயே ஆள்வோர் இருக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையை முஸ்லிம்கள் உணர்ந்து கொண்டது தான் இதனால் ஏற்பட்ட பலன். இதைப் பிரதமர் நரசிம்மராவ் வெட்கமின்றி ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ஆந்திராவில் நடைபெற உள்ள தேர்தலில் முஸ்லிம்களின் ஓட்டுக்களைக் கவர்வதற்காக முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்று காங்கிரஸ் அரசு அறிவித்தது. இது போன்ற அறிவிப்புக்களின் போது நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கப்படும். இத்தகைய அறிவிப்புகளைச் செய்யும் அரசே சில சமயம் தங்கள் பினாமிகளின் பெயரால் இத்தகைய தடை உத்தரவுகளைப் பெறுவதுண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்த வழக்கப்படி நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கப்பட்டது.

ஆந்திர காங்கிரஸ் அரசு முஸ்லிம்களை ஏமாற்ற முடியவில்லை. அவர்கள் விழித்துக் கொண்டே உள்ளனர் என்பதைக் கண்டவுடன் அவசரமாக முஸ்லிம் பெயர் தாங்கி ஒருவரை ஆந்திர மாநிலக் காங்கிரஸ் தலைவராக்கி முஸ்லிம்களை ஏமாற்றச் செய்யும் முயற்சியிலும் படுதோல்வி.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு என்.டி ராமாராவின் பின்னே முஸ்லிம்கள் திரண்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

காங்கிரஸின் மற்றொரு சூழ்ச்சியையும் முட்டாள் தனத்தையும் காங்கிரஸின் இந்து ஆதரவுப் போக்கையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அம்பலப்படுத்தி விட்டது.

மானமுள்ள எந்த அரசாக இருந்தாலும் இந்தச் சமயத்தில் பதவி விலகியிருக்கும். காங்கிரஸுக்கு அது இல்லாததால் இடித்த புளியாக பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

நான் போன பிறவியில் என்னவாக இருந்தேன் என்று நீதிமன்றத்தில் கருத்துக் கேட்க முடியுமா? இது போன்றதொரு கேள்வியை ஆர்.எஸ்.எஸ் இன் பினாமியாய் மத்தியில் ஆளும் நரசிம்மராவின் காங்கிரஸ் அரசு நாட்டின் மிக உயர்ந்த நீதி மன்றத்திடம் ஜனவரி 7 ஆம் தேதியன்று அற்புதமான கருத்தைக் கேட்டது.

பாபர் மசூதி இருந்த இடத்தில் முன் எப்போதாவது இந்துக் கோவில் இருந்ததா? என்பது தான் அந்தக் கேள்வி.

இந்தியாவுக்கென்று அரசியல் அமைப்புச் சட்டம் இருக்கிறது. சிவில் சட்டங்கள் இருக்கின்றன. கிரிமினல் சட்டங்களும் இருக்கின்றன. பாபர் மசூதி யாருக்குச் சொந்தம் என்பதை இந்தியாவில் உள்ள சிவில் சட்டங்களின் அடிப்படையில் தான் முடிவு செய்ய வேண்டும்.

நரசிம்மராவ் அரசு உச்ச நீதிமன்றத்தில் கேட்ட இந்தக் கேள்வி அரசியல் சட்டத்துக்கே எதிரானதாகும். எனக்குச் சொந்தமான வீடு பற்றி வழக்கு இருந்தால் இந்திய சிவில் சட்டப்படி அது யாருக்குச் சொந்தம் என்று ஆராய வேண்டுமேயன்றி என் வீடு இருக்கின்ற இடத்தில் எப்போதாவது வேறு கட்டிடம் இருந்ததா என்று ஆராய முடியாது.

இப்போது பாராளுமன்றம் இருக்கும் இடத்தில் முன் எப்போதாவது வேறு யாருக்காவது சொந்தமான கட்டிடம் இருந்ததா?

இப்போது இந்தியா என்று கூறப்படும் நாடு முன் எப்போதாவது தனித் தனியான பல நாடுகளாக இருந்ததா?

இப்போது காங்கிரஸ் தலைவராக இருக்கும் நரசிம்மராவ் முன்னெப்போதாவது ஆர்.எஸ்.எஸ் இல் தீவிர உறுப்பினராக இருந்ததுண்டா?

என்றெல்லாம் கூடக் காங்கிரஸ் நீதிமன்றத்தில் கருத்துக் கேட்டால் ஆச்சரியமில்லை. இது போன்ற கேள்விகள் எவ்வளவு அபத்தமானவையோ அதை விடவும் அபத்தமானது நரசிம்மராவ் அரசு உச்ச நீதிமன்றத்தில் கேட்ட கேள்வி.

இந்தக் கேள்வி மிகையானதும் தேவையற்றதுமாகும் இது தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.

இதை விட அவமானம் வேறு இல்லை. கேள்வி மிகையானதும் தேவையற்றதும் ஆகும் என்ற வரி அரசின் முட்டாள் தனத்தையும் கெட்ட எண்ணத்தையும் காட்டப் போதுமானதாகும்.

இந்தக் கேள்வி எதற்காகக் கேட்கப்பட்டது? நீதிமன்றம் கூறக் கூடிய முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்திலா? நிச்சயம் இல்லை.

கோவில் இருந்தது என்று முடிவு கூறப்பட்டால் உடனே கோவில் கட்ட ஏற்பாடு செய்து நீதிமன்றத்தின் மீது பழியைப் போட்டுவிடுவதும் கோவில் ஏதும் இல்லை என்று முடிவு கூறப்பட்டால் கொள்கையளவில் ஏற்றுக் கொள்வதாகக் கூறிவிட்டு ஒதுங்கிக் கொள்வது என்பதுமே நரசிம்மராவின் திட்டம்.

இந்தத் திட்டம் இருந்ததால் தான் நீதிமன்ற முடிவுக்குக் காத்திராமல் அவசர அவசரமாக சங்கராச்சாரியார்கள் தலைமையில் கோவில் கட்ட டிரஸ்டை ஏற்படுத்தினர்.

மஸ்ஜித் இருந்த இடத்தில் கோயில் ஏதும் இருந்ததில்லை என்று முடிவு கூறப்பட்டால் அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டித் தரப்படுமா? என்று தெளிவாகவே நீதிமன்றம் கேட்டது , அதற்கு நரசிம்மராவ் அரசு வழக்கறிஞர் அளித்த பதில் கட்டித் தரப்படாது என்பது தான். இதை இரண்டு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் அம்பலப்படுத்தியுள்ளனர்.

அது பள்ளிவாசல் தான் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அதைச் செயல்படுத்த மாட்டோம் என்று கூறக் கூடிய நரசிம்மராவ் பிறகு ஏன் நீதிமன்றத்தில் கருத்துக் கேட்க வேண்டும். சாமியார்களின் காலடியில் வீழ்ந்து கிடப்பதை பெருமையாகக் கூறும், இந்து வெறி பிடித்த நயவஞ்சக நரசிம்மராவின் நரித்தந்திரத்தின் வெளிப்பாடே இது.

நரசிம்மராவின் இந்து மதவெறிப்போக்குக்கு இதை விட வேறு என்ன சான்று தேவை?

இந்தத் தீர்ப்பை பீ.ஜே.பி என் பாசிசக் கட்சியும் வரவேற்றுள்ளது.

நம்பிக்கை அடிப்படையிலான பிரச்சனையில் நீதிமன்றம் தலையிட முடியாது. தீர்த்து வைக்க முடியாது என்று தாங்கள் கூறி வருவதை உச்ச நீதி மன்றம் உறுதி செய்து விட்டதாகப் பிரச்சாரம் செய்கிறது பி ஜே பி.

மக்களை முட்டாள்களாக்குவது பி.ஜே.பிக்கு வழக்கமான ஒன்று தான். ஆனால் இங்கே உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு தப்பான அர்த்தம் கற்பித்து உச்ச நீதிமன்றத்தை இன்னொரு முறை அவமானப்படுத்துகிறது பிஜேபி . உச்ச நீதிமன்ற உத்தரவையும் அரசியல் சட்டத்தையும் காலடியில் போட்டு மிதிக்கும் பிஜேபிக்கும் இந்தத் தீர்ப்பு மரண அடி கொடுத்துள்ளது என்பது தான் உண்மை.

நம்பிக்கை அடிப்படையிலான விஷயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை. அது பள்ளிவாசலுக்குச் சொந்தமானதா? கோவிலுக்குச் சொந்தமானதா என்பதை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டியதில்லை. மாறாக அலஹாபாத் லக்னோ நீதி மன்றங்களே இதை விசாரிக்கலாம் . சிறிய நீதிமன்றம் கூட இதை விசாரிக்க முடியும் என்பதே உச்ச நீதி மன்றத்தின் முடிவு.

இதனால் தான் அலஹாபாத் லக்னோ நீதிமன்றங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வழக்குகளை அந்த நீதிமன்றங்களே விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியுள்ளது. நரசிம்மராவின் கேள்வி முட்டாள் தனமானது. உள்நோக்கம் கொண்டது என்பதால் தான் அர்த்தமற்ற இந்தக் கேள்விக்கு நீதிமன்றம் பதிலளிக்கவில்லையே தவிர நீதிமன்றங்கள் இது போன்ற விஷயங்களில் தீர்ப்பளிக்க முடியாது என்பதால் அன்று.

அந்த உண்மைக்கு மாற்றமாக நீதி மன்றத்தின் கருத்தைத் திசை திருப்பும் தவறான அர்த்தம் கற்பிக்கும் அத்வானி மீது சட்டத்தை மதிப்போர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்வது நல்லது.

கல்யாண்சிங்குக்குத் தண்டனையும் அபராதமும் அளித்ததன் மூலமும் நீதிமன்றம் இந்த விஷயத்திலும் தலையிட முடியும் என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமின்றி உச்ச நீதிமன்றம தெளிவுபடுத்தியுள்ளது.

நிலத்தை அரசு கையகப்படுத்தியது செல்லும் என்றாலும் அரசாங்கம் எந்த டிரஸ்டிடமும் ஒப்படைக்க முடியாது என்றும் நிறுத்தப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளின் முடிவில் நிலம் யாருடையது என்று தீர்ப்பு வருகின்றதோ அவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சங்கராச்சாரிகளின் கையில் நிலத்தை ஒப்படைக்கும் ராவின் சதித் திட்டத்தையும் இந்தத் தீர்ப்பால் முறியடித்து அவரின் முகத்தில் கரியைப் பூசியுள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்பினால் முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இடிக்கப்பட்ட பள்ளிவாசல் கட்டப்படப் போவதில்லை. அலகாபாத், லக்னோ நீதி மன்றங்கள் நாளைக்கே தீர்ப்பளிக்கப் போவதில்லை . பல ஆண்டுகளை அவை இழுத்தடிக்கலாம்.

ஆயினும் நரசிம்மராவின் முஸ்லிம் விரோதப் போக்கையும் அவரது கபட நாடகத்தையும் ஆர்எஸ்எஸ்ஸை விட அவரது அவர் மோசமானவர் என்ப்தையும் தெளிவாக முஸ்லிம்களுக்கு அடையாளம் காட்டிவிட்டது . பாபர் மசூதி விஷயத்தில் பிஜேபி எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் சட்ட விரோதமானவை தாம் என்பதையும் அதற்கு நரசிம்மராவ் தெரிந்தே உடந்தையாய் இருக்கிறார் என்பதையும் இத்தீர்ப்பு அம்பலப்படுத்தி விட்டது

இந்த வகையில் இந்தத் தீர்ப்பை முஸ்லிம்கள் வரவேற்கலாம்.

29.10.2010. 20:05 PM

வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்

நவம்பர் 1994 அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது எழுதிய தலையங்கம்.

ஒருவரை விசாரணையின்றி எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். உச்ச நீதிமன்றத்தைத் தவிர வேறு நீதி மன்றங்களில் இது பற்றி மேல்முறையீடு செய்ய முடியாது என்ற ஜனநாயகத்துக்கு எதிரான கொடுமையான சட்டம் கடந்த சில ஆண்டுகளாக உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகத் திகழும் இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

பயங்கரவாத மற்றும் பிரிவினைவாதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (தடா) என்று கூறப்படும் இந்தச் சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்டவரை அவர் குற்றம் செய்யாவிட்டாலும் பல ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கலாம். பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் தடுத்து நிறுத்த இந்தச் சட்டம் அவசியமானது தான் என்று அரசுத் தரப்பில் காரணம் கூறப்படுகின்றது.

சாதாரணச் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி அப்பாவி மக்களைக் கொடுமைப்படுத்தும் காவல் துறையினராலும், அரசியல் வாதிகளாலும் தான் மக்கள் பயங்கரவாதத்துக்கும், பிரிவினைவாதத்துக்கும் பலியாகி வருகிறார்கள். அவர்களுக்கு நீதி மறுக்கப்படுவது தான் இந்த நிலைக்கு அவர்களைத் தள்ளி விடுகின்றது என்ற அடிப்படைக் காரணத்தை அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இருக்கின்ற சட்டங்களைக் கொண்டே கொலை, கொள்ளை கற்பழிப்புகளில் ஈடுபடும் காவல் துறையினரின் கையில் இந்தக் கொடுமையான அதிகாரம் வழங்கப்பட்டால் என்னவாகும்?

எதிர்க்கட்சியினர், சிறுபான்மை மக்கள், மற்றும் தவறுகளைக் தட்டிக் கேட்போர் ஆகியோரைப் பழிவாங்கத் தான் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படும். பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தடா வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு சதவீதத்துக்கு குறைவானவர்களே தண்டனை பெறுகிறார்கள் என்று ஓய்வு பெற்ற நீதிபதி எச்.சுரேஷ் கூறுகிறார்.

(தினமணி 25.06.1994)

இந்தச் சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்டுப் பல ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டுச் சித்திரவதைக்கு ஆளானோரில் நூற்றுக்கு 99 பேர் குற்றமற்றவர்கள் என்று இறுதித் தீர்ப்பின் போது விடுவிக்கப்படுகிறார்கள் என்று முன்னாள் நீதிபதியே கூறுகிறார்.

இந்தச் சட்டத்தின் படி கைது செய்யத் தேவையில்லாத 99 சதவீதம் பேர் அநியாயமாகப் பல ஆண்டுகள் சிறையில் வாடியுள்ளனர். இது உலகத்தில் எங்குமே காண முடியாத மிகப் பெரிய அக்கிரமம்.

ஆட்சியாளர்களுக்கும், காவல் துறைக்கும் பிடிக்காத அப்பாவிகளை ஒடுக்கத் தான் இந்தக் கொடிய சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது எனும் அடிப்படையில் சட்டம் வகுக்கப்பட்டதாகக் கூறும் நாட்டில் 99 சதவீதம் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர் . இது இந்த நாட்டுக்கே அவமானம்.

இந்தக் கொடிய சட்டம் முஸ்லிம்கள் மீதே குறிவைத்துப் பாய்கிறது என்ற உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழுவில் திரு.ஜஃபர் ஷரீப் இந்தச் சட்டம் முஸ்லிம்கள் மீதே பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது என்று குட்டை உடைத்திருக்கிறார்.

இஸ்லாமியப் பற்றுள்ள ஒருவர் அவ்வாறு கூறினால் மிகைப்படுத்திக் கூறுவதாக எடுத்துக் கொள்ளலாம். பள்ளிவாசலை இடித்த போதும் அதற்குக் காரணமான காங்கிரஸைத் தாங்கிப் பிடித்தவர். பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகச் சமுதாய நலனைப் பின்னுக்கு தள்ளியவர். அதே காரணத்துக்காக கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தி வருபவர் ஜஃபர் ஷரீப் . காங்கிரஸ் அரசில் அங்கம் வகிப்பவர். அவரே இவ்வாறு கூறினால் நிலைமை அவர் கூறுவதை விட மிக மோசமாகவே இருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

முன்னாள் நீதிபதி சுரேஷ் இந்த உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

சில மாநிலங்களில் வகுப்புக் கலவரங்களின் போது ஒரு வகுப்புக்கு ஆதரவாகவும் மற்றொரு வகுப்புக்கு எதிராகவும் (இந்தச் சட்டம்) பயன்படுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் இந்தச் சட்டம் இந்துக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டதை விட அதிகமான அளவில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பம்பாயில் கலவரங்கள் நடந்த போதும் இதே நிலைதான் 

(தினமணி 25.06.94)

இந்தக் கலவரங்களின் போது முஸ்லிம்கள் தாம் பெருமளவு பலியானார்கள். அவர்களின் உடைமைகள் தாம் பெருமளவு சூறையாடப்பட்டன. அவர்களின் கற்பு தான் பெருமளவு அழிக்கப்பட்டது. அவர்களுக்கெதிராகத் தான் பயங்கரவாதம் தலை விரித்தாடியது. இந்த நிலையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் அவர்கள் மீதே பாய்கிறது என்றால் என்ன காரணம்? நரசிம்மராவ் பழைய ஆர்.எஸ்எஸ் காரராக இருப்பது தான் காரணம்.

பயங்கரவாதத்தில் ஈடுபடாவிட்டாலும், அல்லது பயங்கரவாதத்துக்கு பலியானாலும் நம் மீது தான் இந்தச் சட்டம் பாய்கிறது. எதுவும் செய்யாமல் உள்ளே போய்க் கிடப்பதற்கு எதையாவது செய்து விட்டு உள்ளே போவோம் என்ற எண்ணத்தை சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காகத் தான் ராவ் அரசு இப்படி நடக்கிறதோ என்னவோ?

தமிழ்நாடு அமைதிப் பூங்கா (?) மட்டும் என்ன வாழ்கிறது. இங்கேயும் இதே நிலை தான்.

ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்ததைக் காரணம் காட்டி, காயல்பட்டினத்தில் நடந்த கலவரத்தைக் காரணம் காட்டி, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார்கள் என்று காரணம் காட்டி அந்தச் சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளப்பட்டவர்கள் முஸ்லிம்கள் தாம். இந்தச் சட்டத்தின் கீழ் ஏராளமான தமிழ் முஸ்லிம்கள் சிறையில் வாடுகின்றனர்.

ஏ.கே.ஏ அப்துஸ் ஸமது தமது மானத்தையும் மரியாதையையும் சமுதாய நலனையும் மலிவான விலைபேசி ஜெயலலிதாவிடம் விற்றதை நாம் அறிவோம். முஸ்லிம்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் வாங்குவதாக முதல்வரிடம் உத்தரவாதம் பெற்று விட்டேன் என்று பேட்டியளிப்பதையும் நாம் அறிவோம். உத்தரவாதம் என்பதற்கு என்ன பொருள் என்பது மூன்றாவது நாளே தெரிந்து விட்டது.

ஆம் இந்த வியாபாரம் முடிந்த மூன்றாம் நாள் அப்துஸ்ஸமது கட்சியைத் சேர்ந்த அக்கட்சியின் சிதம்பரனார் மாவட்டச் செயலாளர் காயல் மஹ்பூப் என்றோ நடந்த காயல்பட்டினம் கலவரத்தைக் காரணம் காட்டி குண்டர் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்படுகிறார்.

இந்தச் சட்டத்தில் இன்னும் பலரை உள்ளே தள்ளுவதற்குத் தான் பேரம் நடந்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

முஸ்லீம் லீக் மலிவான தள்ளுபடி விலைக்கு விற்கப்பட்ட நிலையிலேயே அக்கட்சியின் முக்கியப் பிரமுகருக்கு இந்த நிலை என்றால் அதற்கு முன் நிலைமை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்க.

யாருக்கோ வந்த விருந்து என்று இனியும் இருந்தால் எல்லா முஸ்லிம்களும் சிறையில் தான் இருக்க வேண்டி வரும்.

சிறையில் வாடுவோருக்குச் சட்ட உதவிகள் செய்யும் கடமையும் உச்ச நீதிமன்றம் வரை சென்று அவர்களை விடுவிக்கும் கடமையும் நமக்கு இருக்கிறது என்பதை இந்தச் சமுதாயம் உணர்ந்து கொண்டால் சரி.

ஒவ்வொரு பகுதியிலும் தடாமற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களின் பெயர், அவர்களது தந்தையின் பெயர், முகவரி, குடும்ப நிலை, கைது செய்யப்பட்ட நாள் ஆகிய விபரங்களைச் சிரமம் பாராது திரட்டி உடன் அனுப்புக. அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்ய இந்த விபரங்கள் உடனடியாகத் தேவை.

குறிப்பு: இன்றைக்கு இது போல் யாரும் எழுத முடியும். ஆனால் 1995ல் நாம் தமுமுகவை துவங்குவதற்கு முன்பே தடாவுக்கு எதிராக நாம் அழுத்தமாக நம் கருத்தைப் பதிவு செய்துள்ளதையும், சிறைவாசிகள் பற்றி பேசினாலே தடா என்ற நிலை இருந்த போது சிறைப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு நாம் பகிரங்க அறிவிப்பு செய்துள்ளதையும் கவனிக்க!

29.10.2010. 20:50 PM

More Articles …

Subcategories