Sidebar

18
Thu, Jun
சமீபத்திய செய்திகள்

வீடுகளில் கழிப்பறை அமைக்கலாமா?

அஸதுல்லா தாம்பரம்

பதில்

வீடுகளில் கழிப்பறை அமைப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல. அது வரவேற்கத்தக்க நல்ல காரியம் தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மலஜலம் கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி தூரமான வெற்றிடத்துக்குச் செல்லும் வழக்கம் ஆரம்பத்தில் இருந்தது.

حدثنا عبد الله بن مسلمة بن قعنب القعنبي حدثنا عبد العزيز يعني ابن محمد عن محمد يعني ابن عمرو عن أبي سلمة عن المغيرة بن شعبة أن النبي صلى الله عليه وسلم كان إذا ذهب المذهب أبعد

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழிப்பிடம் செல்வதாக இருந்தால் தூரமாகச் சென்று விடுவார்கள்.

அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி)

நூல்கள் : அபூதாவூத் 1, நஸாயீ 17

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துப் பெண்கள் மாலை மயங்கும் வரை கட்டுப்படுத்தி இருந்து விட்டு மாலை மயங்கியதும் திறந்தவெளி கழிப்பிடம் செல்வார்கள்.

இது பற்றி ஆயிஷா (ரலி) கூறும் போது

فخرجت أنا وأم مسطح قبل المناصع متبرزنا لا نخرج إلا ليلا إلى ليل وذلك قبل أن نتخذ الكنف قريبا من بيوتنا وأمرنا أمر العرب الأول في البرية أو في التنزه

நானும், உம்மு மிஸ்தஹ் (ரலி) அவர்களும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த மனாஸிஉ என்னுமிடத்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வது வழக்கம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு அங்கு சென்று கொண்டிருந்தோம். (இயற்கைத் தேவைக்காக) நகருக்கு வெளியே செல்லும் முற்கால அரபுகளின் வழக்கமே அப்போது எங்களது வழக்கமாயிருந்தது.

நூல் : புகாரி (சுருக்கம்) 2661

இதே கருத்து புகாரி 4141, 4750 ஆகிய எண்களிலும் பதிவாகியுள்ளது.

ஊருக்கு வெளியே மலஜலம் கழிக்கச் செல்வது அறியாமைக் கால மக்களின் வழக்கமாக இருந்தது என்பதையும், அதே வழக்கத்தை நபித்தோழர்களும் கடைப்பிடித்துள்ளனர் என்பதும், பின்னர் வீடுகளை ஒட்டி கழிவறை அமைக்கப்பட்டன என்பதும் மேற்கண்ட செய்தியில் இருந்து அறிந்து தெரிகிறது.

இன்று நாகரீகமான செயலாகக் கருதப்பட்டு ஐநா சபை மூலம் வலியுறுத்தப்படும் நாகரீகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தான் உலகுக்கு முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

மலஜலத்தை அடக்கிக் கொள்ளக் கூடாது என்ற இஸ்லாத்தின் வழிகாட்டுதலை வீட்டில் கழிவறை இருந்தால் தான் செயல்படுத்த முடியும்.

மேலும் பிறர் பார்க்காமல் முடிந்த அளவு மறைத்துக் கொள்ள வேண்டும். இதைத் திறந்த வெளியில் நிறைவாகச் செய்ய முடியாது.

மேலும் மலஜலம் கழித்து விட்டு கழுவாமல் அப்படியே வந்து பின்னர் கழுவும் அநாகரீகமும் இதனால் தடுக்கப்படும்.

பெண்களைப் பொருத்த வரை கொடூரர்களின் திருட்டுத் தனமான ரசனையில் இருந்தும் வெட்ட வெளியில் பாதுகாப்பு பெற முடியாது.

எனவே வீடுகளில் கழிவறை அமைப்பது வரவேற்க வேண்டிய நபிவழியாகும்.

حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن يحيى بن سعيد عن محمد بن يحيى بن حبان عن عمه واسع بن حبان عن عبد الله بن عمر أنه كان يقول إن ناسا يقولون إذا قعدت على حاجتك فلا تستقبل القبلة ولا بيت المقدس فقال عبد الله بن عمر لقد ارتقيت يوما على ظهر بيت لنا فرأيت رسول الله صلى الله عليه وسلم على لبنتين مستقبلا بيت المقدس لحاجته وقال لعلك من الذين يصلون على أوراكهم فقلت لا أدري والله قال مالك يعني الذي يصلي ولا يرتفع عن الأرض يسجد وهو لاصق بالأرض

நான் ஒரு நாள் என் வீட்டின் மாடியில் ஏறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தமது வீட்டில்) இரண்டு செங்கற்கள் மீது பைத்துல் முகத்தஸை நோக்கி அமர்ந்து கொண்டு தமது இயற்கைத் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருந்ததை பார்த்தேன் என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : புகாரி 145, 149

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டுக்குள் கழிப்பறை அமைத்துக் கொண்டார்கள் என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

06.06.2012. 14:39 PM

தொலைக்காட்சியில் பெண்களைப் பார்க்கலாமா?

பார்வையைத் தாழ்த்தும்படி திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதால் டிவியில் பெண்களைப் பார்ப்பதற்கும் தடை உண்டா?

சமீா்

பதில் :

பெண்களை நேரடியாகப் பார்ப்பதற்கு எந்த அளவுக்கு தடை உண்டோ அதே தடை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் பொருந்தும். எந்த அளவுக்கு அனுமதி உள்ளதோ அதே அனுமதி தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் பொருந்தும்.

எவ்விதத் தேவையுமில்லாமல் தவறான நோக்கத்தில் ஆண்கள் பெண்களைப் பார்ப்பதை இஸ்லாம் தடுக்கின்றது. இறைநம்பிக்கையாளர்களான ஆண்கள் அவ்வாறு பார்ப்பதை விட்டும் தங்களின் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என இறைவன் கட்டளையிட்டுள்ளான்.

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 24:30,31

صحيح البخاري

6243 – حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: لَمْ أَرَ شَيْئًا أَشْبَهَ بِاللَّمَمِ مِنْ قَوْلِ أَبِي هُرَيْرَةَ، ح حَدَّثَنِي مَحْمُودٌ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: مَا رَأَيْتُ شَيْئًا أَشْبَهَ بِاللَّمَمِ مِمَّا قَالَ أَبُو هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنَ الزِّنَا، أَدْرَكَ ذَلِكَ لاَ مَحَالَةَ، فَزِنَا العَيْنِ النَّظَرُ، وَزِنَا اللِّسَانِ المَنْطِقُ، وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي، وَالفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ كُلَّهُ وَيُكَذِّبُهُ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவையனைத்தையும் உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகிறது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 6243

سنن الترمذي

2776 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: أَخْبَرَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَظْرَةِ الفُجَاءَةِ «فَأَمَرَنِي أَنْ أَصْرِفَ بَصَرِي»

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (அன்னியப் பெண் மீது) திடீரெனப் படும் பார்வையைப் பற்றிக் கேட்டேன். நான் என்னுடைய பார்வையைத் திருப்ப வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

நூல் : திர்மிதி

صحيح البخاري

1513 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: كَانَ الفَضْلُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَتِ امْرَأَةٌ مِنْ خَشْعَمَ، فَجَعَلَ الفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ، وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَصْرِفُ وَجْهَ الفَضْلِ إِلَى الشِّقِّ الآخَرِ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا، لاَ يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ، أَفَأَحُجُّ عَنْهُ؟ قَالَ: «نَعَمْ»، وَذَلِكَ فِي حَجَّةِ الوَدَاعِ

(இளைஞரான) ஃபழ்ல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்த போது கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் அவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 1513

பார்வைகளிலும், பேச்சுக்களிலும் கூட விபச்சாரம் என்று மேற்கண்ட ஹதீஸ்கள் கூறுகின்றன. இதனடிப்படையில் தொலைக்காட்சியிலும், வீடியோவிலும் தகாத முறையில் பெண்களைப் பார்ப்பது பாவம் என்று தெரிகின்றது.

பெண்கள் ஹிஜாபைக் கடைபிடித்திருக்கும் நிலையில் அவா்களைப் பார்ப்பதற்கு தேவை ஏற்பட்டால் அப்போது அந்நிய ஆண்கள் பெண்களைப் பார்க்கலாம். இதை மார்க்கம் அனுமதிக்கின்றது. இதற்கு நபிமொழிகளில் ஏரளாமான ஆதாரங்கள் உள்ளன.

صحيح البخاري

98 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، قَالَ: سَمِعْتُ عَطَاءً، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ: أَشْهَدُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَوْ قَالَ عَطَاءٌ: أَشْهَدُ عَلَى ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – «خَرَجَ وَمَعَهُ بِلاَلٌ، فَظَنَّ أَنَّهُ لَمْ يُسْمِعْ فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلَتِ المَرْأَةُ تُلْقِي القُرْطَ وَالخَاتَمَ، وَبِلاَلٌ يَأْخُذُ فِي طَرَفِ ثَوْبِهِ»

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார்கள். அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும், மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையின் ஓரத்தில் அவற்றைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள் என நான் உறுதியளிக்கிறேன்.

நூல் : புகாரி 98

நபியவா்களின் முன்னிலையில் பெண்கள் பகுதிக்குச் சென்று பெண்கள் தர்மமாக தருபவைகளை பிலால் (ரலி) தமது ஆடையில் வாங்கிக் கொண்டார் என்பதிலிருந்து தேவை ஏற்படும் நேரத்தில் பெண்களைப் பார்ப்பது அனுமதி என்பதை அறியலாம்

இஸ்லாம் கூறும் ஹிஜாபை முஸ்லிமல்லாத பெண்கள் கடைப்பிடிக்க மாட்டார்கள். அவர்களை நேரில் சந்திக்கும் நிலை நமக்கு ஏற்படுகிறது. உதாரணமாக பெண் மருத்துவர், பெண் அதிகாரி, பெண் நிர்வாகி, பெண் ஆசிரியை எனப் பலரையும் நாம் சந்திக்கும் அவசியம் ஏற்படுகிறது. அவர்கள் இஸ்லாமிய மரபுப்படி ஆடை அணியாவிட்டாலும் நமக்கு நாமே ஹிஜாப் அணிந்து கொண்டு பார்க்கலாம். அதாவது முகத்தை மட்டும் காமப்பார்வை இல்லாமல் பார்க்கலாம். அது போல் தொலைக் காட்சியிலும் பார்க்கலாம்.

ஆடல் பாடல் கூத்து போன்றவைகளில் ஈடுபட்டுள்ள பெண்களை நேரில் பார்ப்பது கூடாது. அதுபோல் தொலைக்காட்சியிலும் பார்க்கக் கூடாது.

இது பற்றி மேலும் அறிய

உருவப்படத்துக்கு அனுமதி உண்டா?

என்ற ஆக்கத்தைப் பார்க்கவும்.

19.04.2013. 23:43 PM

தாய்ப்பாலை நிறுத்துப்பார்த்து முடிவு செய்யும் நவீன விஞ்ஞானம்

சமீபகாலமாக பின்வரும் செய்தி முகநூலில் அதிகம் உலா வருகிறது. இச்செய்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முக நூலில் பரவி ஓய்ந்து போனது. தற்போது அதை யாரோ பரப்ப மீண்டும் வேகமாகப் பரவிவருகிறது.

அந்தச் செய்தி இதுதான்.

அல்குர்ஆனின் தீர்ப்பு

ஃப்ரான்ஸ் நாட்டு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு குழந்தை பிறந்தது. ஒன்று ஆண், மற்றொன்று பெண். செவிலியரின் தவறினால் குழந்தைகள் மாறிவிட்டன. ஆண் குழந்தை தன்னுடையது என்று இரண்டு பெண்களும் வாதிட்டார்கள். 

அங்கு பணிபுரியும் முஸ்லிம் மருத்துவரிடம் சக மருத்துவர்கள், எல்லாவற்றிருக்கும் குர்ஆனில் தீர்வு இருக்கிறது என்று சொல்வாயே? இதற்கு குர்ஆன் சொல்லும் தீர்வு என்ன? என்று கிண்டலாகக் கேட்டனர்.

அந்த முஸ்லிம் மருத்துவர் எகிப்தில் உள்ள அல்அஜ்ஹர் பல்கலைக்கழக மார்க்க அறிஞர்களிடம் வினவினார். அதற்கு அவர்கள், அந்நிஸா அத்தியாயத்தில் இதற்கான விடை இருக்கிறது ஆராய்ந்து பாருங்கள் என்று சொன்னார்கள்.

மருத்துவர் ஆராய்ந்து பார்த்த போது, உங்கள் மக்களில் ஓர் ஆணிற்கு இரண்டு பெண்களுக்கு கிடைக்கும் பங்கு போன்றது கிடைக்கும்

அல்குர்ஆன்4:11

எனும் அல்லாஹ்வின் வாக்கிற்கு ஏற்ப இரண்டு பெண்களின் தாய்ப்பாலின் மாதிரியை எடுத்து ஆராய்ச்சி செய்தார்.

ஒரு தாயின் பாலின் எடையும் கொழுப்பு சக்தியும் மற்றைய தாய்ப் பாலின் எடையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதைக் கண்டுபிடித்தார். அதனடிப்படையில் எந்தத் தாயின் பாலிலுள்ள கொழுப்பு சக்தி அதிகம் உள்ளதோ ஆண் குழந்தை அந்தத் தாயிற்கு உரியது என்று முடிவெடுத்தார். அண்மைக் கால ஆராய்ச்சிகளும் இதை உறுதிபடுத்துகின்றன.

இந்த தகவலின் விஞ்ஞானக் கருத்தை நீங்கள் உறுதிப்படுத்த விரும்பினால் சர்வதேச இணையத்ததளமான www.Wikipedia.org இல் "ஆண், பெண் குழந்தைகளின் தாய்ப்பாலுக்கு இடையிலான வித்தியாசம்" எனும் கருத்தைத் தேடி உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

"இறுதிநாள் வரை மக்களுக்கு தேவையான அனைத்துப் பிரச்சனைகளுக்கும் குர்ஆனில் தீர்விருக்கிறது. ஆனால் அதை ஆராய்ந்தறியும் அறிஞர்கள் தாம் தேவை" இது தான் அந்தச் செய்தி.

இஸ்லாத்துக்கு சிறப்பு சேர்க்க வேண்டும் என்ற இயல்பின் காரணமாக இதை முஸ்லிம்கள் பரப்பி வருகின்றனர். திருக்குர்ஆனில் பல அறிவியல் கருத்துக்கள் முன்னரே சொல்லப்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அத்துடன் பொய்யான செய்திகளைக் கலக்கும் போது மெய்யான செய்திகள் மீதும் சந்தேகம் ஏற்பட்டு விடும். இதைக் கவனத்தில் கொண்டு ஆய்வு செய்து உண்மை தானா என்பதை உறுதி செய்த பின்பே எதையும் பரப்ப வேண்டும்.

பொய்களை ஆதாரமாக ஆக்கக் கூடாது என்பதை மேலும் அறிய அத்தாட்சிகளை மறுக்கலாமா என்ற ஆக்கத்தைப் பார்க்கவும்.

மேற்கண்ட செய்தியில் இஸ்லாம் கூறும் விஞ்ஞானக் கருத்துடன் ஒரு கதையும் கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானக் கருத்து பற்றி விளக்குவதற்கு முன் இதில் சொல்லப்பட்ட கதையை ஆராய்வோம்.

ஃப்ரான்ஸ் நாட்டு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு குழந்தை பிறந்தது என்று இந்தக் கதை ஆரம்பிக்கிறது.

முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம் உண்மையாக இருந்தால் இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லப்படாது. அப்படிச் சொல்லப்பட்டால் அது பொய்யாகவே இருக்கும்.

பிரான்ஸ் நாட்டில் எந்த ஊரில் இது நடந்தது? அந்த மருத்துவமனையின் பெயர் என்ன? மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் யார்? அந்த முஸ்லிம் டாக்டர் யார்? அந்த தம்பதிகள் யார்? இது எந்த ஆண்டு நடந்தது? இந்த அபூர்வமான செய்தி எந்த ஊடகத்தில் முதன் முதலில் வந்தது? உள்ளிட்ட எந்த விபரமும் இதில் இல்லை. ஒரு ஊரில் ஒரு ராஜா என்ற பாட்டி கதை போல் உள்ள இதை எப்படி அறிவுடைய மக்கள் பரப்பலாமா? மேற்கண்ட கேள்விகளுக்கு விடை காணாமல் இதைப் பரப்புவது பொய்யைப் பரப்பியதாகவே ஆகும்.

இது அல்லாத இன்னும் பல கேள்விகளும் இதில் எழும்.

பிரான்ஸ் நாடு தனக்கென சட்டத்தை வகுத்துக் கொண்டு செயல்படும் நாடு. அந்த நாட்டில் இது போல் ஒரு பிரச்சனை வந்தால் அந்த நாட்டுச் சட்டப்படி தான் தீர்ப்பு அளிக்கும். எகிப்தில் பத்வா கேட்டு முடிவு செய்யப்படாது என்ற அடிப்படை அறிவுக்கு முரணாக உள்ளது.

டி என் ஏ டெஸ்ட் மூலம் தான் பிரான்ஸ் நாட்டில் இதற்கு தீர்ப்பு அளிக்கப்படும். தாய்ப்பாலின் எடையை வைத்து அல்ல.

எகிப்து பல்கலைக் கழகம் ஒரு பத்வா கொடுத்தால் அதற்கான ஆதாரம் வேண்டும்? யார் பெயரில் பத்வா கேட்கப்பட்டது? எந்தத் தேதியில் பத்வா கேட்கப்பட்டது? அந்த பத்வா எண் எது? அந்த ஃபத்வாவின் காப்பி எங்கே? என்றெல்லாம் சிந்தித்தால் இதைப் பரப்புவார்களா?

எகிப்தின் மேற்படி பல்கலைக்கழகத்தில் தாய்ப்பால் எடையை வைத்து யாருடைய குழந்தை என்று தீர்மானிக்கலாம் என்று எந்த பத்வாவும் எந்தக் காலத்திலும் கொடுக்கப்படவில்லை. எகிப்து உள்ளிட்ட எந்த இஸ்லாமிய நாட்டிலும் தாய்ப்பாலின் எடையை வைத்து பெற்றோரை முடிவு செய்யும் சட்டம் இல்லை.

ஆக ஒரு அடிப்படையும் இல்லாமல் எவனோ கற்பனை செய்து பரப்பிய இச்செய்தி இறக்கை கட்டி பறக்கிறது என்பது தெளிவாக தெரிகின்றது.

அடுத்து அந்த வசனத்தில் இந்தக் கருத்து உள்ளதா? சாதாரணமாகப் பார்த்தாலே அப்படி இல்லை என்பது பளிச்சென்று தெரியும். சொத்துரிமை சம்மந்தமாக இவ்வசனம் பேசுகிறது. ஒருவனது பிள்ளைகளில் பெண்ணுக்கு ஒன்று ஆணுக்கு இரண்டு எனப் பங்கிட வேண்டும் என்பது தான் இதில் சொல்லப்பட்டுள்ளது. தாய்ப்பாலின் எடையைப் பற்றி இவ்வசனம் பேசவே இல்லை. நேரடியாகவும் பேசவில்லை. மறைமுகமாகவும் பேசவில்லை.

விஞ்ஞானத்தில் இப்படி கண்டுபிடிக்கப்பட்டதாக பரப்புவோர் விக்கி பீடியாவில் உள்ளது என்று சேர்த்துக் கூறுகின்றனர். ஆனால் விக்கி பீடியா விஞ்ஞானத் தளம் இல்லை. அதன் உறுப்பினரான யாரும் எதையும் எழுதக் கூடிய தளம். மேலும் இதில் கூட இப்படி எழுதப்படவில்லை. தாய்ப்பால் என்று அடித்து தேடினால் இதில் கூறப்பட்ட விஷயம் காணப்படவில்லை.

தாயின் போஷாக்கின் அடிப்படையில் தான் தாய்ப்பாலின் எடை அமைந்திருக்கும். இது தான் உண்மை.

இரட்டைக் குழந்தை பெற்றால் ஒரு மார்பில் எடை அதிகமான பாலும் மறு மார்பில் எடை குறைவான பாலும் சுரக்கும் என்று சொல்வார்கள் போலும்.

ஒரு வாதத்துக்காக விஞ்ஞானத்தில் அப்படி இருந்தாலும் அதை இந்த வசனம் கூறவில்லை என்பதே உண்மையாகும். இது திருக்குர்ஆனுடன் விளையாடும் நிலையாகும்.

பிள்ளைகளின் சொத்து தொடர்பாகத் தான் ஆணுக்கு இரண்டு பெண்ணுக்கு ஒன்று என்று இவ்வசனம் கூறுகிறது. மரணித்த ஒருவருக்கு பிள்ளைகளும் தாய் தந்தையும் இருந்தால் தாய் த்ந்தை இருவருக்கும் தலா ஆறில் ஒன்று என்று சமமான சொப்த்துரிமையஏ உள்ளது. இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை.

ஆணாகிய தந்தைக்கும் பெண்ணாகிய தாய்க்கும் சமமாக ஆறில் ஒரு பாகம் என்று உள்ளதால் ஆண் பெண் தாய்ப்பாலின் எடை சமமாக இருக்கும் என்று ஏன் ஆராயமல் விட்டார்கள்?

அது போல் தான் அல்லாஹ்வின் வசனம் தவறான கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற ஆதாரமற்ற வதந்திகளை இஸ்லாத்தின் பெயரல் பரப்பும் போக்கை கைவிடுவோமாக!

கொசு பேட் பயன்படுத்தலாமா?

இன்றைய உலகில் கொசுவை அழிக்க bat (பேட்) போன்ற பொருட்களைப் பயன்படுத்துகின்றோம். இதில் பட்டு கொசு எரிந்து சாகின்றது. நெருப்பால் உயிர்களுக்குத் தண்டனையை அல்லாஹ் மட்டுமே வழங்குவான் என்ற ஹதீஸின் படி இதைப் பயன்படுத்தக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். சரியா? விளக்கவும்.

ரபிக், பவானி

பதில் :

நெருப்பால் தண்டனை கொடுக்கக் கூடாது என்ற கட்டளை இருப்பது உண்மை தான். மனிதர்களுக்கு மரண தண்டனை வழங்க நேர்ந்தால் அவர்களை நெருப்பில் எரித்து கொல்லக் கூடாது என்பது தான் இதன் கருத்தாகும். மனிதனல்லாத உயிரனத்தை எரிக்கக் கூடாது என்பது பொருள் அல்ல.

அல்லாஹ் தண்டிப்பது போல் தண்டிக்க வேண்டாம் என்ற சொல்லே இதைத் தெளிவாக்கி விடுகிறது. அல்லாஹ் மறுமையில் நெருப்பால் தண்டனை அளிப்பது மனிதர்கள், ஜின்கள், ஷைத்தான்களுக்கு மட்டுமே. கொசுக்களுக்கோ, இன்ன பிற ஜீவன்களுக்கோ அல்லாஹ் தண்டனை அளிப்பதில்லை.

மேலும் பின்வரும் ஹதீஸில் இருந்தும் இதை அறியலாம்.

حدثنا يحيى بن بكير حدثنا الليث عن يونس عن ابن شهاب عن سعيد بن المسيب وأبي سلمة أن أبا هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قرصت نملة نبيا من الأنبياء فأمر بقرية النمل فأحرقت فأوحى الله إليه أن قرصتك نملة أحرقت أمة من الأمم تسبح

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

இறைத் தூதர்களில் ஒருவரை ஒரு எறும்பு கடித்து விட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், ஓர் எறும்பு உங்களைக் கடித்து விட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி

حدثنا إسماعيل بن أبي أويس قال حدثني مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال نزل نبي من الأنبياء تحت شجرة فلدغته نملة فأمر بجهازه فأخرج من تحتها ثم أمر ببيتها فأحرق بالنار فأوحى الله إليه فهلا نملة واحدة

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைத் தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்தின் கீழே தங்கினார். அவரை ஒரு எறும்பு கடித்து விட்டது. உடனே, அவர் தமது (பயண) மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டார். அவ்வாறே அவை மரத்தின் கீழிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. பிறகு எறும்புப் புற்றை எரிக்கும்படி உத்தரவிட்டார். அவ்வாறே அது தீயிட்டு எரிக்கப்பட்டது. உங்களைக் கடித்தது ஒரே ஒரு எறும்பல்லவா? (அதற்காக ஓர் எறும்பு கூட்டத்தையே எரிக்கலாமா?) என்று அறிவித்(து அல்லாஹ் அவரைக் கண்டித்)தான்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 3319

எறும்பை எரித்ததை அல்லாஹ் கண்டிக்கவில்லை; கடித்த ஒரு எறும்பை எரித்திருக்கலாமே? எல்லா எறும்புகளையும் ஏன் எரிக்க வெண்டும் என்று தான் அல்லாஹ் கண்டிக்கிறான். நெருப்பில் எரிக்காமல் வேறு வகையில் அழித்திருக்கலாமே என்று அல்லாஹ் கூறவில்லை. எனவே தாராளமாக பேட் மூலம் கொசுவைக் கொல்லலாம்.

சில சகோதரர்கள் பின்வரும் ஹதீஸை எடுத்துக்காட்டி கொசு பேட் பயன்படுத்தக் கூடாது என்று நமக்கு சுட்டிக் காட்டியுள்ளனர்.

حدثنا أبو صالح محبوب بن موسى أخبرنا أبو إسحق الفزاري عن أبي إسحق الشيباني عن ابن سعد قال غير أبي صالح عن الحسن بن سعد عن عبد الرحمن بن عبد الله عن أبيه- كان ثقة قليل الحديث ، وقد تكلموا في روايته عن أبيه وكان صغيرًا.- قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر فانطلق لحاجته فرأينا حمرة معها فرخان فأخذنا فرخيها فجاءت الحمرة فجعلت تفرش فجاء النبي صلى الله عليه وسلم فقال من فجع هذه بولدها ردوا ولدها إليها ورأى قرية نمل قد حرقناها فقال من حرق هذه قلنا نحن قال إنه لا ينبغي أن يعذب بالنار إلا رب النار

நாங்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அவர்கள் ஒரு தேவைக்காக வெளியே சென்றார்கள். அப்போது நாங்கள் சிறு குருவியையும், அதன் இரு குஞ்சுகளையும் கண்டோம். நாங்கள் இரு குஞ்சுகளையும் எடுத்துக் கொண்டோம். தாய்ப் பறவை சிறகடித்துக் கொண்டு வந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து விட்டனர். இந்தத் தாய்ப் பறவையைப் பதறச் செய்தவர் யார் என்று கேட்டு விட்டு அதன் குஞ்சுகளை அதனிடம் விட்டு விடுங்கள் எனக் கூறினார்கள். மேலும் ஒரு எறும்புப் புற்றை நாங்கள் எரித்திருப்பதையும் அவர்கள் கண்டனர். யார் இதை எரித்தவர் என்று கேட்ட போது நாங்கள் தான் என்று கூறினோம். நெருப்பின் சொந்தக்காரன் (அல்லாஹ்) தவிர வேறு யாரும் நெருப்பின் மூலம் தண்டிக்கக் கூடாது எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)

நூல் : அபூதாவூத்

இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக இருந்தால் இதில் இருந்து கொசு பேட் பயன்படுத்தக் கூடாது என்று முடிவு செய்வது சரியானது தான். ஆனால் இது பலவீனமான ஹதீஸாகும். நாம் முன்னர் சுட்டிக்காட்டிய ஆதாரப்பூர்வமான ஹதீஸின் கருத்துக்கும் எதிரானதாகும்.

இப்னு மஸ்வூத் அவர்களிடமிருந்து அவரது மகன் அப்துர் ரஹ்மான் என்பார் அறிவிக்கிறார். இப்னு மஸ்வூத் (ரலி) மரணிக்கும் போது இவரின் வயது ஆறாகும். எனவே இவர் தனது தந்தையிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை.

இதற்கான ஆதாரம் வருமாறு:

(79) خت 4 عبد الرحمن بن عبد الله بن مسعود ثقة قال بن معين لم يسمع من أبيه وقال بن المديني لقي أباه وسمع منه حديثين حديث الضب وحديث تأخير الصلاة وقال العجلي يقال أنه لم يسمع من أبيه الا حرفا واحدا محرم الحرام وذكر البخاري في التاريخ الاوسط من طريق بن خثيم عن القاسم بن عبد الرحمن عن أبيه قال اني مع أبي فذكر الحديث في تأخير الصلاة قال البخاري سمعته يقول لم يسمع من أبيه وحديث بن خثيم عندي وقال أحمد كان له عند موت أبيه ست سنين والثوري وشريك يقولان سمع وإسرائيل يقول في حديث الضب عنه سمعت وأخرج البخاري في التاريخ الصغير طريق القاسم بن عبد الرحمن عن أبيه لما حضرت عبد الله الوفاة قلت له أوصني قال أبك من خطيتك وسنده لا بأس به قلت فعلى هذا يكون الذي صرح فيه بالسماع من أبيه أربعة أحدها موقوف وحديثه عنه كثير ففي السنن خمسة عشر وفي المسند زيادة على ذلك سبعة أحاديث معظمها بالعنعنة وهذا هو التدليس والله أعلم

– تعريف اهل التقديس بمراتب الموصوفين بالتدليس بن حجر [ص 40]

437 – عبد الرحمن بن عبد الله بن مسعود قال يحيى بن سعيد القطان مات أبوه وله نحو ست سنين وقال بن معين في رواية لم يسمع من أبيه وروى معاوية بن صالح عن بن معين أنه سمع من أبيه ومن علي رضي الله عنه وسئل أحمد بن حنبل هل سمع عبد الرحمن من أبيه فقال أما الثوري وشريك فيقولان سمع وكذلك أثبت له بن المديني السماع من أبيه والله أعلم

جامع التحصيل في أحكام المراسيل [ص 223]

31.10.2010. 23:12 PM

 

கருணைக் கொலை கூடுமா?

போரில் கொல்லுதல், ஒரு சில குற்றவாளிகளை அரசு கொல்லுதல் தவிர வேறு எந்தவிதமான கொலைக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

திருக்குர்ஆன் 4:93

கொலையில் கருணை என்பது பைத்தியக்காரத்தனமாகும்.

ஒருவன் எவ்வளவு தான் துன்பத்தை அனுபவித்தாலும் அவற்றையும் தாங்கிக் கொண்டு வாழவே விரும்புகிறான். ஒருவன் படும் துன்பத்துக்கு இரங்குகிறோம் எனக் கூறி அவனைக் கொல்ல எவருக்கும் உரிமையில்லை.

வறுமையின் பிடியில் சிக்கியவர்கள், பார்வையிழந்தோர், உறுப்புக்களை இழந்தோர் செத்து விட்டால் நல்லது என்று சில சமயம் கூறி விடுவார்கள். அவர்களைச் சாகடிக்க வேண்டும் என்பது அதன் பொருளன்று. தனது துன்பம் சாவுக்கு நிகரானது என்று அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். மற்றபடி அவர்களும் வாழவே விரும்புகிறார்கள்.

முதியோர்களைக் கவனிக்க விரும்பாதவர்கள், நோயாளிகளைக் கண்டு விலகுபவர்கள் தங்களின் இந்தக் கொடூரமான மனப்பான்மையை கருணைக் கொலை என்ற போர்வையைப் போர்த்தி மறைக்கிறார்கள். உண்மையில் கொலையில் எந்தக் கருணையும் கிடையாது. முற்றிலும் இது காட்டுமிராண்டித் தனமாகும்.

உங்களில் யாரும் மரணத்தைக் கோரிப் பிரார்த்திக்கக் கூடாது. அப்படிக் கேட்க வேண்டிய நிலையை அடைந்தால், இறைவா! வாழ்வது எனக்கு நல்லதென்றால் வாழச் செய்! மரணிப்பது நல்லதென்றால் என்னை மரணிக்கச் செய் என்று கேட்கட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 5671, 6351

ஒரு முஸ்லிம் இவ்வுலகில் எவ்வளவு வேதனையை அனுபவிக்கிறானோ அந்த அளவு மறுமையில் அவனது துன்பங்கள் குறையும் என்பது இஸ்லாம் கூறும் சித்தாந்தம்.

பார்க்க : புகாரி 5640, 5642, 5648, 7684

எனவே ஒருவன் என்ன தான் கஷ்டப்பட்டாலும் அதனால் அவனுக்கு மறுமையில் நன்மைகள் தான் ஏற்படப் போகின்றன. அவனுக்கு மறுமையில் கிடைக்கும் பேறுகளை கருணைக் கொலை என்ற பெயரில் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை.

More Articles …