▶️கால்நடைகள் மூலம் காயம் ஏற்பட்டால் இழப்பீடு இல்லை என்பது தற்காலத்திற்கு பொருத்தமாக இல்லையே..!!
கால்நடைகள் மூலம் காயம் ஏற்பட்டால் இழப்பீடு இல்லை என்பது தற்காலத்திற்கு பொருத்தமாக இல்லையே..!!
கால்நடைகள் மூலம் காயம் ஏற்பட்டால் இழப்பீடு இல்லை என்பது தற்காலத்திற்கு பொருத்தமாக இல்லையே..!!
வாகனத்திற்கு FC எடுப்பதன் மூலம் பெரும் செலவு செய்வதை தவிர்த்து வாகனத்தை பராமரித்து FC எடுக்காமல் இருந்தால் குற்றமா?
ஆன்லைன் தங்க வர்த்தகம், அந்நிய செலவாணி , மற்றும் பிட் காயின் போன்ற வர்த்தகம் செய்யலாமா?
அடிமைகள் விடுதலை இன்று சாத்தியமா? கேள்வி
கர்ப்பிணிப் பெண்ணொருத்தியின் கர்ப்பம் ஒருவரால் கலைக்கப்பட்டால் அதற்கு உயிரீடாக ஓர் ஆண் அடிமை அல்லது ஓர் அடிமைப் பெண் கொடுக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்புக் கூறியதாக புகாரியில் 5758, 5759, 5760, 7317 ஆகிய ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது. முக்கிய கருத்தை மட்டுமே நான் மேலே குறிப்பிட்டுள்ளேன்.
இன்னும் பல குற்றங்களுக்குப் பரிகாரமாக அடிமைகளை விடுதலை செய்தல் உள்ளிட்ட வேறு பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் மேற்கண்ட குற்றத்துக்கு அடிமைகளை விடுதலை செய்தல் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.
அடிமைகள் இல்லாத காலத்தில் என்ன செய்வது?
இந்த ஹதீஸ்களுடன் சேர்த்து வாசித்து விளக்கம் பெறப் போதுமான குர்ஆன் வசனமோ, அல்லது மற்றும் ஹதீஸ்களோ உள்ளனவா?
அவ்வாறில்லை என்றால் இந்த ஹதீஸ்களின் தரம் என்ன? P.G.M.M. ளாஃபிர், புளுகஹதென்னை, அக்குறணை, இலங்கை பதில்:
வயிற்றில் உள்ள குழந்தையை தவறுதலாகக் கொலை செய்தால் அடிமையை நட்ட ஈடாகக் கொடுக்க வேண்டும் என்று மட்டும் மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் அது அல்லாத பரிகாரம் வேறு ஹதீஸில் சொல்லப்படுள்ளது.
أخبرنا يعقوب بن إبراهيم وإبراهيم بن يونس بن محمد قالا حدثنا عبيد الله بن موسى قال حدثنا يوسف بن صهيب عن عبد الله بن بريدة عن أبيه أن امرأة حذفت امرأة فأسقطت فجعل رسول الله صلى الله عليه وسلم في ولدها خمسين شاة ونهى يومئذ عن الخذف أرسله أبو نعيم
ஒரு பெண் கல்லைச் சுண்டி விட்டு இன்னொரு பெண்ணின் கருவைக் கலையச் செய்து விட்டாள். அவளது குழந்தைக்கான நட்ட ஈடாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐம்பது ஆடுகளை நிர்ணயித்தார்கள்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி) நூல் : நஸாயீ
தவறுதலாக கர்ப்பத்தில் உள்ள குழந்தையைக் கொன்றால் அடிமையையும் விடுதலை செய்யலாம். நட்ட ஈடாக ஐம்பது ஆடுகளையும் கொடுக்கலாம். தற்காலத்தில் அடிமைகள் இல்லாததால் ஐம்பது ஆடுகள் நட்ட ஈடாக கொடுக்க வேண்டும்.
06.02.2012. 1:50 AM
கருவில் உள்ள குழந்தைக்கு காது கேட்குமா?
திருக்குர்ஆன் வசனத்தின் படி கருவில் உள்ள குழந்தைக்கு காது கேட்காது என்று நாம் எழுதி இருந்தோம்.
அந்த ஆக்கம் இதுதான்.
ஜாகிர் நாயக்கின் அறியாமை
முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் ஜாகிர் நாயக் அவர்கள் ரவி சங்கருடன் நடத்திய கலந்துரையாடலின் போது திருக்குர்ஆனுக்கு மாற்றமான கருத்தை இஸ்லாத்தின் கருத்து என்று கூறியுள்ளார்.
கருவறையில் உள்ள குழந்தை செவியுறுமா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கும் போது 76:2 வசனத்தை ஆதாரமாகக் காட்டி கருவறையில் குழந்தை செவிமடுக்கும் என்று அவர் கூறுகிறார்.
இது குறித்து ஜகிர் நாயக்கின் மொழி மாற்றம் செய்யப்பட்ட உரையைக் கேளுங்கள்.
إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا(2)إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا(3)
மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். அவனுக்கு நாம் நேர்வழி காட்டினோம். அவன் நன்றி செலுத்துபவனாகவோ, நன்றி கெட்டவனாகவோ இருக்கிறான்.
திருக்குர்ஆன் 76:2,3
இந்த வசனங்கள் கருவரையில் குழந்தை செவிமடுக்கும் என்று கூறுவதாக ஜாகிர் நாயக் கூறுகிறார்.
விந்துத் துளியாக இருந்தவனை கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம் என்பது கருவறையில் இருக்கும் போது குழந்தைக்கு இந்த ஆற்றல் வழங்கப்பட்டுள்ளது பற்றி பேசவில்லை.
இது பற்றி விபரமாகப் பார்ப்போம்.
இவ்வசனத்தில் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் ஆக்கினோம் என்று மட்டும் சொல்லப்படவில்லை. மனிதனுக்கு நேர்வழி காட்டினோம் என்றும் சொல்லப்படுகிறது. மனிதர்கள் நன்றி செலுத்துவோராக சிலரும் நன்றி கெட்டவராக சிலரும் உள்ளனர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இவ்வசனம் கருவறையில் உள்ள குழந்தை பற்றி பேசவில்லை என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது. மனிதனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவது அவன் பருவ வயதை அடையும் போதுதான். மனிதன் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ ஆவதும் பருவ வயதை அடைந்த பின்பு தான். கருவறையில் இருக்கும் போது உள்ள நிலையை இவ்வசனம் பேசவில்லை என்பதை இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
அற்பமான விந்துத்துளியாக இருந்த மனிதன் பிறந்த பின் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் ஆகிறான். சில காலம் கழித்து நேர்வழியை அறிந்து கொள்ளும் ஆற்றலைப் பெறுகிறான் என்று படிப்படியாக மனிதன் வளர்ச்சி அடைவதைத் தான் இவ்வசனம் பேசுகிறது.
கருவறையிலேயே நேர்வழியையும், கெட்ட வழியையும் குழந்தை தேர்வு செய்கிறது என்று ஒருவர் கூறுவது எவ்வளவு அறியாமையோ அது போல் தான் கருவறையில் குழந்தை செவிமடுக்கும் என்று கூறுவதும் அறியாமையாகும்.
இன்னும் சொல்லப் போனால் இதற்கு மாற்றமாக திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்.
وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لا تَعْلَمُونَ شَيْئاً وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ) (النحل:78)
நீங்கள் எதையும் அறியாதிருந்த நிலையில் உங்கள் அன்னையரின் வயிறுகளிலிருந்து அல்லாஹ் உங்களை வெளியேற்றினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் உங்களுக்கு ஏற்படுத்தினான்.
திருக்குர்ஆன் 16:78
கருவில் இருந்து வெளிவரும் போது எதையும் அறியாத நிலையில் தான் குழந்தை வெளிவருகிறது என்ற வாசகம் ஜாகிர் நாயக்கின் கருத்தை அடியோடு நிராகரிக்கிறது.
அது மட்டுமின்றி அவர் மருத்துவர் என்ற அடிப்படையில் தாயின் கருவறையில் குழந்தையின் காது கேட்கும் என்பதற்கு விஞ்ஞான முத்திரை குத்துகிறார்.
குழந்தை கருவறையில் இருந்து கொண்டு வெளியில் உள்ளதைக் கேட்கும் என்பதற்கு எந்த அறிவியல் நிரூபணமும் இல்லை.
கருவறை என்ற தடுப்பு வெளி உலகில் நடப்பதைக் கேட்க முடியாமல் தடுத்துவிடும் என்பது தான் விஞ்ஞான உண்மை.
குழந்தையைச் சுமந்துள்ள தாய், பாடல்களைக் கேட்டால் அதைக் குழந்தையும் கேட்கும் என்கிறார்.
இதற்கு எந்த அறிவியல் நிரூபணத்தையும் அவர் எடுத்துக் காட்டவில்லை. அப்படி எந்த நிரூபணமும் இல்லை
மேலும் கருவறையில் உள்ள குழந்தையைப் பாதுகாப்பதற்காக வெளியில் நடப்பவற்றால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மூன்று திரைகளைப் போட்டுள்ளதாக அல்லாஹ் கூறுகிறான்.
உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?
திருக்குர்ஆன் 39:6
கருவில் உள்ள குழந்தை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கேட்கும் என்று இவர் கூறுவது குர்ஆனுக்கு எதிரான வாதமாகும்.
பெரிய மனிதன் கூட காற்றுப் புக முடியாத தடுப்புக்குள் இருந்தால் வெளியே நடப்பதைக் கேட்க முடியாது.
இந்த ஆக்கத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஜாகிர் நாயக்குக்கு அனுப்பி அவரது விளக்கத்தை யாரேனும் பெற்று அனுப்பினால் அதையும் நாம் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
அஹ்மத் ஜகபர் என்ற சகோதரர் கருவில் உள்ள குழந்தைக்கு காது கேட்கும் என்பதற்கு அறிவியல் ஆதாரம் இருப்பதாக ஆங்கிலக் கட்டுரை ஒன்றை அனுப்பினார். அதைத் தமிழ்படுத்தி அனுப்புங்கள் என்று நாம் பதில் அனுப்பினோம்.
அதன் அடிப்படையில் அவர் கீழ்க்காணும் கட்டுரையை அனுப்பியுள்ளார். அந்தக் கட்டுரை இது தான்:
கருவிலுள்ள குழந்தை எதைக் கேட்கிறது?
(from the Bridge publications newsletter)
கருவிலுள்ள குழந்தைக்குக் கேட்கும் சக்தி உள்ளதா?
மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எப்போதும் புதிய கண்டுபிடிப்புகளை அறிவிப்பதில் ஆர்வம் கொள்வர்.
அண்மையில் கருவிலிருக்கும் குழந்தையால் கேட்க முடியும்; தன் தாயின் குரலையும் சரியாக அடையாளம் காண முடியும் என்ற கண்டுபிடிப்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
கருவிலுள்ள குழந்தையால் எதைக் கேட்க முடியும்; எப்படி துல்லியமாக ஓசையை வேறுபடுத்தி அறிய முடியும் என்பது குறித்து மருத்துவ உலகில் இன்னும் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
இவ்வேளையில் ஒரு கேள்வி எழுகிறது 20 ஆண்டுகளுக்கு முன்பே முழுமையாக ஆராயப்பட்டு பதியு செய்யப்பட்ட ஒரு கருத்தைப் பற்றி மருத்துவ ஆராய்சியாளர்கள் மீண்டும் ஏன் இலட்சகணக்கான டாலர்களைச் செலவிடுகிறார்கள் என்பதே அக்கேள்வி.
கருவிலிருக்கும் குழந்தையுடன் பெற்றோர்கள் உரையாட வேண்டுமா? கருவிலிருக்கும் குழந்தைக்காக தாயானவள் இசை கேட்க வேண்டுமா? என்ற விவாதம் தொடர்கிறது.
ஆம் எனில் அவர்கள் எந்த இசையைத் தேர்வது? மொசார்ட்டின் இசையா? அல்லது ராப் இசையா? எது கருவிலிருக்கும் குழந்தைக்கு நல்லது? அக்கறையுள்ள எந்தப் பெற்றோரும் கருவிலிருக்கும் குழந்தையைப் பாதிப்பது எது? அது எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது? என்று அறியவே விரும்புவர்.
ஒரு கர்ப்பிணிப் பெண் எதிர்பாராமல் சந்திக்கும் விபத்து, அவளது கருவை எவ்வாறு பாதிக்கும்? கருவுற்ற பெண்ணின் குடும்பச் சன்டைகளுக்குக் கரு எவ்விதம் எதிர்வினை புரிகிறது? ஒரு கர்ப்பிணியின் இன்பமான அல்லது துன்பமான மனநிலை கருவிடம் எந்த வேறுபாட்டையாவது ஏற்படுதுகிறதா? கர்ப்பிணி மனைவியுடன் அவள் கணவன் உடல் உறவு கொள்ளலாமா? கருச்சிதைவு செய்து கொள்வது நிச்சயமாக நல்ல விசயம் இல்லை. பாலியல் ஒழுக்கம் குறைந்து வருகின்ற இக்காலத்தில் நாம் அறிந்திருப்பதை விட அதிகமாகவே கருச்சிதைவு நடைபெறுகிறது என்பது உண்மை. இப்படிக் கருச்சிதைவு செய்து கொள்ளும் அன்னையர் இந்தக் கசப்பான உண்மை பிறருக்கு தெரியக் கூடாது என்று தங்களுக்குள்ளேயே மறைத்து விடுகின்றனர்.
ஆனால் இவ்வகை கருச்சிதைவானது கருவின் மீது என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? கருவானது தற்கால அறிவியல் கூறுவதை விடவும் பல்வகைத் திறன்கள் பெற்று இருப்பதாக நம்பப்படுகிறது. அப்படியானால் அன்னையின் கருச்சிதைவு முயற்சியையும் மீறி பிறக்கும் குழந்தையின் வாழ்வில் அது என்ன விளைவை ஏற்படுத்தும்?
கருவிலுள்ள குழந்தையால் கேட்க முடியும் என்ற கருத்து உண்மையில் 50 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்டுள்ளது.
இன்னும் கூறப் போனால் பழமையான யூத மத ஏடு ஒன்றில் கருவினால் சில வகை உணவின் வாசனையை உணரமுடியும். விரும்ப முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
Dianetics: The Modern science of Mental Health என்ற நூலாசிரியர் L. Ron Hubbard, கருவிலிருக்கும் குழந்தையைப் பற்றிய பண்புகள் குறித்த ஆய்வு முடிவுகளை விளக்குகிறார். (விரும்பி செய்கின்ற) கருச்சிதைவு, கருவுற்ற பெண்ணுடன் உடலுறவு, அதிக ஒலி, கர்ப்பிணியின் இருமல் தும்மல் ஆகியவை கருவிலுள்ள குழந்தையின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை, தான் கையாண்ட அனுபவங்களின் அடிப்படையில் பதிவு செய்கிறார்.
மேலும் இவை குழந்தையின் பிற்கால வளர்ச்சியில் எவ்வித பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் அப்பாதிப்பை நீக்கவும் குணப்படுத்தவும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்குகிறார்.
அண்மையில் ப்ளோரிடா பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானிகள் கருவில் இருக்கும் குழந்தையின் காதில் எவ்வித ஒலிகள் வந்தடைகின்றன என்பது குறித்து கருவுற்ற பெண்களிடம் தொடர் ஆய்வு நடத்தியுள்ளனர்.
ஆய்வின் முடிவில் அவர்கள் கருவினால் கேட்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். இசையைப் பொறுத்த வரையில் கருவினால் வயலினைக் கேட்க முடியாது. ஆனால் டிரம் ஒலியைக் கேட்க முடியும் என அறிந்தனர்.
இது உண்மையானால் கருவினால் மொசார்ட் இசையை விட ராப் இசையைக் கேட்க முடியும் என் உணரலாம்
ஆனால் மற்ற ஆய்வுகள் கருவானது மோசர்ட்டின் இசைக்கு எதிர்வினை புரிகிறது எனக் கூறுகின்றனர். ஆகவே கருவினால் வயலின் இசையை உணர முடியும் எனத் தெரிகிறது
உண்மையில் ஒன்டரியோவைச் சேர்ந்த கியீன்ஸ் பல்கலைக்கழகம் தனது ஆய்வு முடிவில் கருவிலிருக்கின்ற குழந்தையினால் பிற பெண்களின் குரலிலிருந்து தன் தாயின் குரலைப் பிரித்தறிய முடியும் என்று காட்டிஉள்ளனர்.
ஒரு கருவினால் உண்மையில் எவ்வளவு கேட்க முடியும்? அதனால் சொற்களை அறிந்து அவற்றை நினைவில் வைக்க முடியுமா? ஆகியன நம்முன் உள்ள கேள்விகள். ப்ளோரிடா பல்கலைக்கழக ஆய்வுக் குழுவிற்கு கடற்படை மற்றும் The National institute of Health and March of Times ஆகியவை ஒரு மில்லியன் டாலர் வழங்கியது பணியாளர்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் வகுப்பதற்காக இவ்வுதவி அளிக்கப்பட்டது. கர்ப்பினிப் பெண்கள் (பணியாளர்கள்) கேட்கின்ற ஒலி அளவிற்கு எல்லை வகுப்பதும் அதில் ஒன்று.
இது நல்லது தான். காரணங்களை ஹப்பர்ட் தன் நூலில் விளக்குகின்றார். 1940 -ல் அவர் செய்த ஆய்வில் தாயின் வயிற்றில் கருவாக இருந்த போது கேட்ட உரையாடல்களை பின்னால் நினைவு கூற முடியும் என்ற உண்மையைப் பதிவு செய்தார். இது நம்ப முடியாததாகத் தோன்றலாம். ஆனால் இது கருவின் பல வித பரினாமங்களை, திறன்களைச் சுட்டிக்காட்டுகின்றது.
1950-ல் ஹப்பர்ட் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்ட பிறகும் இன்னும் இது பற்றி உடல் நலத்துறை ஏன் ஆய்வு செய்ய வேண்டும்?
ஒரு தாயின் கேள்வி: கருவிலிருக்கும் என் குழந்தையால் கேட்க முடியுமா? இக்கேள்வியை இணையதளத்தில் கேட்க நினைத்தேன். அப்போது baby centre.co.uk என்ற முகவரியிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. கருவினுள் என் குழந்தை என் இதயத் துடிப்பை கேட்கிறது என்று அது கூறியது.
இப்போது நான் 18 வார கர்ப்பிணியாக இருக்கிறேன். இன்னும் சில வாரங்களில் கருவால் வெளிப்புற ஒலிகளையும் கேட்க முடியும். (20 ஆவது வாரமாக இருக்கலாம்) என்று நான் நம்புகிறேன்.
நன்றி : தமிழக்கம் திரு. ரவிசெல்வன் M.A(ENG)M.A.(TAMIL)M.Ed PGT (TAMIL) ATOMIC ENERGY HIGHER SECONDARY SCHOOL KALPAKAM.
பதில் :
கருவில் உள்ள குழந்தை கேட்கும் என்பதற்கு நீங்கள் எடுத்துக் காட்டிய செய்தியில் எந்த ஆதாரமும் இல்லை. அதில் அறிவியல் பூர்வமான காரணம் ஏதும் இல்லை.
கண்டது, கேட்டது அனைத்தையும் கலந்து கட்டி அறைகுறையாக எழுதிய கட்டுரையாகவே அது உள்ளது. நம்பப்படுகிறது.
மத நூலில் உள்ளது,
நம்ப முடியாததாக உள்ளது,
இது உண்மையானால்,
கருத்து வேறுபாடு உள்ளது
என்று ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் இது அறிவியலுடன் கப்சா கலந்து கற்பனை செய்யப்பட்ட கட்டுரை என்பதை அம்பலப்படுத்துகிறது..
பொதுவாக காது கேட்பது என்பதற்கு அறிவியலில் விளக்கம் உள்ளது. அந்த விளக்கத்துக்கு எதிராக இக்கட்டுரை அமைந்துள்ளது.
காற்றில் ஏற்படுத்தப்படும் அதிர்வுகள் காதில் உள்ள டிரம்மில் படுவதால் தான் காது கேட்கிறது. நீங்கள் நல்ல காது கேட்கும் திறன் உள்ளவராக இருந்து காற்றுப் புக முடியாத கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்தால் உங்களால் வெளியில் உள்ள சப்தத்தைக் கேட்க முடியாது.
வெளியில் காற்றில் ஏற்படுத்தப்படும் அதிர்வுகள் தாயின் உடலுக்குள் புகுந்து அதிலும் பல்வேறு இருள்களுக்குள் உள்ள கர்ப்ப அறையைக் கடந்து குழந்தையின் காதை அடையும் என்பதற்கு நீங்கள் எடுத்துக் காட்டிய தகவலில் ஆதாரம் இல்லை.
மேலும் கருவறையைக் கடந்து அந்த அதிர்வு சென்றாலும் கேட்கும் திறன் குழந்தைக்கு அப்போது இருக்குமா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
கருவிலேயே கேட்கும் திறன் இருந்தால் பிறந்த குழந்தைக்கு ஏன் அது உடனே இருப்பதில்லை. பல மாதங்கள் கடந்த பிறகு ஏன் அதற்கு காது கேட்கிறது?
இதற்லெல்லாம் பதில் சொல்லத் தக்கதாக இருப்பது தான் அறிவியல் நிரூபணமாகும்.
தாயின் கவலை, சந்தோஷம், அதிர்ச்சி போன்றவை குழந்தையைப் பாதிக்கும் என்பது உண்மை.
அதற்குக் காரணம் காது கேட்கிறது என்பது அல்ல.
மாறாக தாயின் உடலில் ஏற்படும் மாற்றங்களால் கருவரை வரை மாற்றங்கள் ஏற்படும். அதைக் குழந்தை உணர முடியும் என்று தான் அறிவியல் கூறுகிறது.
தாய் தனக்கு விருப்பமான இசையைக் கேட்டு மகிழும் போது அதற்கேற்றவாறு சுரப்பிகள் செயல்படும், அதனால் குழந்தைக்கு தாயிடமிருந்து கிடைக்கும் ஊட்டச் சத்துக்களிலும் மாற்றம் ஏற்படும் என்று தான் அறிவியல் கூறுகிறது.
காது கேட்கும் என்று கூறவில்லை.
மக்கள் பேசிக் கொள்வதையும், சில மதங்களின் நம்பிக்கையையும் கலந்து கட்டி எழுதப்பட்ட கட்டுரையைத் தான் நீங்கள் அனுப்பியுள்ளீர்கள்.
நான் கேட்ட கேள்விக்கு அறிவியல் பூர்வமான விளக்கத்துடன் அறிவியல் ஆய்வு முடிவை நீங்கள் அனுப்பவில்லை.
தொழுகைக்கு ஒலிபெருக்கியைப் பயன்படுத்தலாமா?
செய்யத்
பதில் :
கூட்டுத் தொழுகையில் இமாமின் நடவடிக்கைகளை மக்கள் அறிந்து கொண்டால் தான் அவரைப் பின்பற்ற முடியும்.
சில நேரங்களில் இமாமுடைய குரல் உரத்த சப்தமாக இருக்காது. இதனால் கடைசியில் இருப்பவர்களுக்குக் கேட்காது. இதனால் குழப்பம் ஏற்படும்.
அல்லது ஒரு தளத்தில் இமாம் இருக்கும் போது மற்றொரு தளத்தில் நிற்கும் மக்களுக்கு இமாமுடைய சப்தம் கேட்க முடியாமல் போய் விடும்.
இமாமுடைய ஓதுதல் சிலருக்குக் கேட்காவிட்டாலும், டுகூவு ஸஜ்தா போன்றவற்றுக்காக அவர் கூறும் தஸ்பீஹ்கள் மக்களுக்குக் கேட்டால் தான் அவரைப் பின்பற்ற முடியும். எனவே இதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம். இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது அவர்களால் சப்தமாக ஓத முடியவில்லை. அவர்கள் ஓதுவதும் தக்பீர் கூறுவதும் அருகில் இருந்த அபூபக்ர் (ரலி) அவர்களுக்குத் தான் கேட்டது. பின்னால் இருந்த மக்களுக்குக் கேட்கவில்லை. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தக்பீர் கூறிய உடன் அதை அபூபக்ர் (ரலி) அவர்கள் உரத்த குரலில் சொன்னார்கள்.
صحيح البخاري
712 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: لَمَّا مَرِضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَضَهُ الَّذِي مَاتَ فِيهِ أَتَاهُ بِلاَلٌ يُوذِنُهُ بِالصَّلاَةِ، فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ»، قُلْتُ: إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ إِنْ يَقُمْ مَقَامَكَ يَبْكِي، فَلاَ يَقْدِرُ عَلَى القِرَاءَةِ، فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ»، فَقُلْتُ: مِثْلَهُ، فَقَالَ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ: «إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ [ص:144] فَلْيُصَلِّ»، فَصَلَّى وَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَخُطُّ بِرِجْلَيْهِ الأَرْضَ، فَلَمَّا رَآهُ أَبُو بَكْرٍ ذَهَبَ يَتَأَخَّرُ، فَأَشَارَ إِلَيْهِ أَنْ صَلِّ، فَتَأَخَّرَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَقَعَدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جَنْبِهِ، وَأَبُو بَكْرٍ يُسْمِعُ النَّاسَ التَّكْبِيرَ
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் தொழுகை பற்றி அறிவிப்பதற்காக வந்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். அதற்கு நான், (என் தந்தை) அபூபக்ர் அவர்கள் இளகிய மனம் உடையவர்கள்; நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் அழுது விடுவார்கள். அவர்களால் (தொழுகையில்) ஓத முடியாது என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று (மீண்டும்) சொன்னார்கள். நான் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் (மீண்டும்) சொன்னேன். மூன்றாவது அல்லது நான்காவது தடவையில் அவர்கள் (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள் தாம். அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தம் உடல் நலம் சற்றுத் தேறியிருப்பதைக் கண்ட போது) இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியபடி (பள்ளிவாசலை நோக்கி) புறப்பட்டு வந்தார்கள். (நோயினால் கால்களை ஊன்ற முடியாமல் தம்மிரு கால்களையும் தரையில் பதித்து கோடிட்டு வந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவிக்கும் இடத்திலிருந்து) பின்வாங்க முயன்றார்கள். அப்போது அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கள் தொழுகை நடத்துங்கள் என்று (கையால்) சைகை செய்தார்கள். ஆயினும் அபூபக்ர் (ரலி) அவர்கள் சற்று பின்வாங்கிக் கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் அமர்ந்(து தொழுவித்)தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபியவர்கள் கூறும்) தக்பீரை மக்களுக்குக் கேட்கும் விதமாக (உரத்த குரலில்) கூறிக் கொண்டிருந்தார்கள்.
நூல்: புகாரி 712, 664, 683, 687, 713
தொழுகையில் இமாம் கூறும் தக்பீர்களையும், அவரது கிராஅத்தையும் தொலைவில் உள்ளவர்களுக்கு ஒலிபெருக்கி கேட்கச் செய்கின்றது. பின்னால் தொழுபவர்கள் இமாமுடைய சப்தத்தைச் செவியுற்றால் தான் அவரைச் சரியாகப் பின்பற்ற முடியும்.
இமாம் வளல்லால்லீன் என்று கூறினால் பின்னால் தொழுபவர்கள் ஆமீன் என்று கூற வேண்டும். இதை செயல்படுத்த இமாம் ஓதுவதைச் செவிகொடுத்து கேட்க வேண்டும்.
இமாம் ருகூவிற்குச் சென்றால் நாமும் அவரைப் பின்தொடர்ந்து ருகூவிற்குச் செல்ல வேண்டும். இது போன்ற தொழுகைச் சட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒலிபெருக்கி உதவியாக இருப்பதால் இதைப் பயன்படுத்துவது தவறல்ல.
அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்துவதால் மார்க்க வரம்புகளை மீற வேண்டிய சூழல் ஏற்பட்டால் மட்டுமே அப்போது அவற்றை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தொழுகையில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவது எந்த மார்க்கச் சட்டத்திற்கும் முரணாக இல்லை என்பதால் இதைப் பயன்படுத்துவது தவறல்ல.
அதிமான மக்களுக்கு இமாம் கூறுவது கேட்க வேண்டும் என்பதற்காக ஒலிபெருக்கி பயன்படுத்தும் போது திடீரென மின்சாரம் நின்று விடக் கூடும். அதற்கேற்ப பேட்டரிகள் மூலம் ஒலிபெருக்கியை இயக்குவது தான் நல்லது.
அதுவும் திடீரென பழுதாகி விட்டால் இமாமைப் பின்பற்றி தொழும் மக்களில் சிலர் கடைசி வரிசையில் உள்ளவர்களும் கேட்கும் வகையில் இமாமின் தக்பீர்களை எதிரொலிக்க வேண்டும். இல்லாவிட்டால் பின்னால் நிற்பவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவார்கள்.
ஆயினும் பள்ளிவாசலின் தொழுகையைப் பின்பற்றும் மக்களுக்கு மட்டும் கேட்கும் வகையில் தான் ஒலி பெருக்கியைப் பயன்படுத்த வேண்டும்.
சிறுவர்கள் நோயாளிகள் முதியவர்கள் தேர்வுக்கு படிப்பவர்கள் உள்ளிட்ட பலரும் வீடுக்ளில் இருக்கும் போது அவர்களைப் பாதிக்கும் வகையில் ஒலி பெருக்கியை அலறவிடுவது கூடாது. பிறருக்கு தொல்லை தரும் அனைத்தும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும், இது குறித்து கூடுதல் விளக்கம் அறிய
31.03.2013. 5:07 AM
தொற்று நோய் உண்டா
இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா? உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தும் பறவைக் காய்ச்சல் தொற்று நோய் தானே?
பறவைக் காய்ச்சல் மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்குக் காரணமான வைரஸ்கள் காற்றிலோ, தண்ணீர் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ பரவுவது அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
حدثنا عبد العزيز بن عبد الله حدثنا إبراهيم بن سعد عن صالح عن ابن شهاب قال أخبرني أبو سلمة بن عبد الرحمن وغيره أن أبا هريرة رضي الله عنه قال إن رسول الله صلى الله عليه وسلم قال لا عدوى ولا صفر ولا هامة فقال أعرابي يا رسول الله فما بال إبلي تكون في الرمل كأنها الظباء فيأتي البعير الأجرب فيدخل بينها فيجربها فقال فمن أعدى الأول رواه الزهري عن أبي سلمة وسنان بن أبي سنان
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தொற்று நோய் கிடையாது. ஸஃபர் பீடை கிடையாது. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது என்று கூறினார்கள்.
அப்போது கிராமவாசி ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித்) திரியும் என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றுக்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவற்றின் நிலை என்ன? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அப்படியென்றால் முதல் ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்? என்று திருப்பிக் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5717
இந்த ஹதீஸில் தொற்று நோய் கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் ஒரு ஒட்டகத்திலிருந்து மற்றொரு ஒட்டகத்திற்கு சிரங்கு தொற்றிக் கொள்வதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த ஒரு கிராமவாசி அது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேள்வி எழுப்புகின்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளிக்கும் பதில் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
முதல் ஒட்டகத்திற்கு அந்த நோயைத் தந்தவன் யார்? என்ற வாதத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன் வைக்கின்றார்கள்.
இதன் மூலம் தொற்று நோய் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரேயடியாக மறுக்காமல், தொற்று நோயைக் காரணம் காட்டி, இறைவனுடைய விதியை மறுத்து விடக் கூடாது என்பதை உணர்த்துகின்றார்கள்.
ஒருவருக்கு நோய் ஏற்படுகின்றது என்றால் அது இறைவனின் நாட்டப்படியே ஏற்படுகின்றது என்ற நம்ப வேண்டும்.
ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நோய் தொற்றும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுக்கவில்லை. தொற்றுவதால் மட்டுமே நோய் ஏற்படுகிறது என்பதைத் தான் மறுக்கின்றார்கள். முதல் ஒட்டகத்துக்கு நோயைக் கொடுத்தவன் யார் என்று கேள்வி எழுப்பியதன் மூலம் முதன் முதலில் ஒருவருக்கோ சிலருக்கோ இறைவன் நோயை ஏற்படுத்துகிறான். அதன் மூலம் மற்றும் சிலருக்கு பரவச் செய்கிறான் என்று தெளிவுபடுத்துகிறார்கள்.
நடைமுறையிலும் இதை நாம் அனுபவப் பூர்வமாக உணர்கிறோம்.
குறிப்பிட்ட ஒரு நோய் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. பின்னர் அந்த நோய் உலகில் யாருக்கும் ஏற்படுவதில்லை. சில வருடங்கள் கழித்து மீண்டும் ஏற்படுகிறது. நோய்கள் இயற்கையாக ஏற்படுவதில்லை. மாறாக இறைவன் நாடும் போது அதை ஏற்படுத்துகிறான் என்பதை இது உறுதி செய்கிறது.
மேலும் ஒரு வீட்டில் ஒருவருக்கு தொற்று நோய் ஏற்படுகிறது. அந்த நோய் அந்த வீட்டில் வேறு யாருக்கும் தொற்றாமல் வேறு தெருவில் உள்ளவருக்கு தொற்றுவதைக் காண்கிறோம். தொற்றுதல் என்பது இறைவனின் நாட்டத்தைப் பொருத்தது என்பது இதிலிருந்தும் தெரிகின்றது.
இதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் உணர்த்துகின்றதே தவிர தொற்று நோய் அறவே கிடையாது என்று கூறவில்லை. தொற்று நோய் உண்டு என்ற கருத்தில் அமைந்த பல்வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் இதை வலியுறுத்துகின்றன.
حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن ابن شهاب عن عبد الحميد بن عبد الرحمن بن زيد بن الخطاب عن عبد الله بن عبد الله بن الحارث بن نوفل عن عبد الله بن عباس أن عمر بن الخطاب رضي الله عنه خرج إلى الشأم حتى إذا كان بسرغ لقيه أمراء الأجناد أبو عبيدة بن الجراح وأصحابه فأخبروه أن الوباء قد وقع بأرض الشأم قال ابن عباس فقال عمر ادع لي المهاجرين الأولين فدعاهم فاستشارهم وأخبرهم أن الوباء قد وقع بالشأم فاختلفوا فقال بعضهم قد خرجت لأمر ولا نرى أن ترجع عنه وقال بعضهم معك بقية الناس وأصحاب رسول الله صلى الله عليه وسلم ولا نرى أن تقدمهم على هذا الوباء فقال ارتفعوا عني ثم قال ادعوا لي الأنصار فدعوتهم فاستشارهم فسلكوا سبيل المهاجرين واختلفوا كاختلافهم فقال ارتفعوا عني ثم قال ادع لي من كان ها هنا من مشيخة قريش من مهاجرة الفتح فدعوتهم فلم يختلف منهم عليه رجلان فقالوا نرى أن ترجع بالناس ولا تقدمهم على هذا الوباء فنادى عمر في الناس إني مصبح على ظهر فأصبحوا عليه قال أبو عبيدة بن الجراح أفرارا من قدر الله فقال عمر لو غيرك قالها يا أبا عبيدة نعم نفر من قدر الله إلى قدر الله أرأيت لو كان لك إبل هبطت واديا له عدوتان إحداهما خصبة والأخرى جدبة أليس إن رعيت الخصبة رعيتها بقدر الله وإن رعيت الجدبة رعيتها بقدر الله قال فجاء عبد الرحمن بن عوف وكان متغيبا في بعض حاجته فقال إن عندي في هذا علما سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا سمعتم به بأرض فلا تقدموا عليه وإذا وقع بأرض وأنتم بها فلا تخرجوا فرارا منه قال فحمد الله عمر ثم انصرف
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போது, படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி)யைச் சந்தித்து, ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், ஷாம் நாட்டிற்குப் போகலாமா? என்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்து, கருத்துக் கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்துக் கருத்து கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பிறகு மக்கா வெற்றி கொள்ளப் பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்துக் கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவு எடுத்தார்கள்.
அப்போது தமது தேவை ஒன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள், இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடு வதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சொல்ல நான் கேட்டேன் என்று கூறினார்கள். (சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 5729
கொள்ளை நோய் ஏற்பட்டுள்ள ஊருக்குச் செல்ல வேண்டாம் என்றும், அந்த ஊரில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது. தொற்று நோய் இல்லை என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கட்டளையிடத் தேவையில்லை. எனவே தொற்று நோய் உண்டு என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.
கிருமிகள் மூலமாக நோய் தொற்றிக் கொள்வதை இஸ்லாம் மறுக்கவில்லை. அதே சமயம், இறைவனின் நாட்டப்படியே அந்த நோய் பரவியது என்பதையும் மறுக்கக் கூடாது.
12.08.2009. 11:07 AM
அரைஞான் கயிறு கட்டலாமா?
யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்தச் சமுதாயத்தையே சேர்ந்தவராவார் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவூத் 3512
தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையிலும், மதச் சடங்காகவும் தான் மற்ற சமுதாயத்தினர் அரைஞான் கயிறு (இடுப்புக் கயிறு) கட்டுகின்றனர்.
தாலி எவ்வாறு பிற மதத்துக் கலாச்சாரமாக உள்ளதோ அது போலவே அரைஞான் கயிறு என்பதும் பிற மதத்தின் கலாச்சாரமாக உள்ளது. இது போன்ற மத விஷயங்களில் பிறருக்கு ஒப்பாகி விடக் கூடாது என்பதால் அரைஞான் கயிற்றைத் தவிர்க்க வேண்டும்.
இது போன்ற நம்பிக்கைகளின்றி, அவசியத் தேவைகளின் நிமித்தம், சாதாரணக் கயிறு என்ற நிலையில் கட்டிக் கொள்வது தவறல்ல. சாவிக் கொத்துக்கள் தொங்க விடுவதற்கும், பெண்களின் மாத விலக்கு சமயங்களில் பயன்படுத்துவதற்கும், இன்ன பிற நோக்கங்களுக்காகவும் சாதாரணக் கயிறு என்ற நிலையில் அதைக் கட்டிக் கொள்வது தவறல்ல.