ஐக்கிய அரப் அமீரகத்தில் வாழும் சகோதரர்களின் இஸ்லாமிய கேள்விக்கான பதில்கள் (07-03-2024)
அமெரிக்கா வாழ்கொள்கை சகோதரர்களின் இஸ்லாமிய கேள்வி பதில் நேரலை (25-05-2024)
இறைவனின் திருப்பெயரால்
அடிமை முறை ஒழிக்கப்பட்டது கடந்த பத்தொன்பதாம் நுாற்றாண்டில்தான். இயந்திரங்களும், தொழிற்புரட்சியும்தான் அதை சாத்தியமாக்கியதே தவிர எந்த சமூக செயற்பாட்டாளரும் அதை உருவாக்கவில்லை. இதன் அடிப்படையில்தான் நாம் அடிமைத்தனத்தை அணுக வேண்டும்.
போர்களில் பிடிக்கப்பட்ட ஆண்களையும், பெண்களையும் அடிமைகளாக்கும் வழக்கம் இஸ்லாம் உருவாக்கிய வழக்கம் அல்ல. மாறாக. இஸ்லாம் வருவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உருவான நடைமுறை. உலகம் முழுவதும் நடைமுறையில் இருந்த ஒரு விஷயத்தில் இஸ்லாம் எவ்வாறு செயல்பட்டது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம்.
பழைய உலகம்
இஸ்லாத்தின் அடிமை தொடர்பான சட்டத்தை விளங்கிக் கொள்ள வேண்டுமென்றால் முதலில் அக்கால உலக சூழலை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இன்றைக்கு நாம் வாழும் உலகில் நாடுகளுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஐநா மன்றம் இருக்கிறது. உலகம் முழுவதும் போரால் பாதிக்கப்படும் அகதிகளின் நலன்களை கவனித்து கொள்ள ஐநா அகதி முகமை இருக்கின்றது. உலக சுகாதார நிறுவனம், மனித உரிமை அமைப்பு, ஆம்னஸ்டி இண்டர்நேஷனல், சர்வதேச நீதிமன்றம், செஞ்சிலுவை சங்கம் போன்ற எண்ணற்ற அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை இதுபோன்ற எந்த அமைப்புகளும் இல்லை. 100 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலைமை என்றால் 500, 1000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நிலையை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அக்காலத்தில் இரண்டு நாடுகளோ அல்லது இரண்டு கூட்டங்களோ போரிட்டால் அதில் அதிகம் மடிவது ஆண்களே. காரணம் அக்கால போர்கள் ஊரை விட்டு வெகு துாரம் தள்ளி சமவெளிகளிலும், மலைப்பகுதிகளிலும் நடைபெறும். ஆகவே அதில் கலந்து கொள்ளும் ஆண்களே அதிகம் மடிந்தனா். அப்படி ஒரு நாடு தோற்கடிக்கப்படும் பொழுது தோற்ற நாட்டில் அதிகமாக பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் எஞ்சியிருப்பர்.
போரில் பிடிபட்ட பெண்களை அடிமைகளாக்குவது
இங்குதான் ஒரு பிரச்சினை எழுகிறது. இந்த கூட்டத்தை யார் பாதுகாப்பது? யார் இவர்களின் உணவுக்கு பொறுப்பேற்றுக்கொள்வது? அவர்களை அங்கேயே விட்டு சென்றால் அவர்களை இன்னொருவர் கைப்பற்றிக் கொள்வார்கள். ஆகவே போரில் கைப்பற்றப்பட்ட பொருள்களோடு அவர்களையும் எடுத்துச் செல்வதே சிறந்தது. அதனால்தான் அன்றைய உலகில் அனைவரும் இந்த நடைமுறையே பின்பற்றினார்கள்.
பிடிக்கப்பட்ட கைதிகளில் ஆண்களை கடுமையான வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். கிட்டத்தட்ட எல்லா வேலைகளும் வலிமை தேவைப்பட்டதால் ஆண்களே அதிகம் தேவைப்பட்டனர். ஆனால், பெண்களை என்ன செய்வது? பெண்கள் பெரும்பாலும் வீட்டு வேலைகளுக்கே தேவைப்பட்டனர். 90 சதவீதம் விவசாயம் மட்டுமே தொழிலாக உள்ள காலத்தில் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆண்களுக்கே வேலை இல்லாத போது பெண்களின் நிலைமை மிகவும் மோசம். சுதந்திரமான பெண்களே தங்களின் வாழ்கைத் தேவைகளுக்கு தந்தையையோ கணவணையோ நம்பியிருக்கும்போது அடிமைப்பெண்கள் எங்கு செல்வர்? ஆகவேதான் பெரும்பாலும் செல்வந்தர்களே அதிகம் அடிமைகளை வைத்திருந்தார்கள்.
போரில் பிடிபட்ட பெண்களிடம் உடலுறவு கொள்ளுதல்
குற்றச்சாட்டு 1: பெண்களை பிடிப்பதற்காகவே போர் செய்தார்களா?
பனுா முஸ்தலிக் கூட்டத்தார் உஹத் போரில் முஸ்லிம்களுக்கு எதிராக மக்கா குறைஷிகளுக்கு ஆதரவாக செயல்பட்டனர். மேலும் அவர்கள் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக போர் தொடுக்க ஆயத்தமாகி வருகின்றனர் என்ற தகவலும் கிடைக்கவே நபி ஸல் அவர்கள் பனுா முஸ்தலிக் கூட்டத்தாருக்கு எதிராக போரிட்டனர். திரிபு வேலை செய்யும் கிறுத்துவ கூட்டம் இதை மறைத்துவிட்டு வெறும் பெண்ணாசையால் போரிட்டார்கள் என்று பொய் சொல்கின்றனர்.
ஆனால் உண்மையில் பெண்ணுக்காக கொலை செய்த வரலாறு கிறுத்துவ கூட்டத்திற்கே உண்டு.
பைபிளில் பெண் அடிமைகளின் நிலை:
உயர்சாதி பெண்களை தேடி சென்றார்கள் என்று இந்த கள்ளக்கூட்டம் கதறுகிறது. ஆனால் உண்மையில் அழகான பெண்களை தேடி சென்றது இந்த கூட்டங்கள்தான் என்பதை கீழ்கண்ட பைபிள் வசனம் விளக்குகிறது.
திராட்சத்தோட்டங்களில் பதுங்கியிருந்து பெண்களை பிடித்தல்:
20. அவர்கள் பென்யமீன் புத்திரரை நோக்கி: நீங்கள் போய், திராட்சத்தோட்டங்களிலே பதிவிருந்து,21. சீலோவின் குமாரத்திகள் கீதவாத்தியத்தோடே நடனம்பண்ணுகிறவர்களாய்ப் புறப்பட்டு வருகிறதை நீங்கள் காணும்போது, திராட்சத்தோட்டங்களிலிருந்து புறப்பட்டு, உங்களில் அவரவர் சீலோவின் குமாரத்திகளில், ஒவ்வொரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன் தேசத்திற்குக் கொண்டுபோங்கள். நியாயாதிபதிகள்21:20,21
அழகான பெண்களை தேடி பிடித்தல்:
10. நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,11. சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி, - உபாகமம் 21
இயேசு கூறுகிறார் " நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன்". வெளி22-16.
இயேசு தன்னை பெருமையோடு எந்த தாவீது ராஜாவின் வாரிசு என்று சொன்னாரோ அந்த தாவீது ராஜாதான் ஒரு பெண்ணுக்காக அதுவும் திருமணமான ஒரு பெண்ணை அடைய வெறி கொண்டு அவள் கணவனையே கொன்றவர் 2 சாமுவேல் 11:5-27. அவரைத்தான் புதிய ஏற்பாட்டின் கடைசி பகுதியான வெளிப்படுத்தலில் இயேசு தனது முன்மாதிரி என்கிறார்.
குற்றச்சாட்டு 2: அடிமைப்பெண்களிடம் அஸ்ல் செய்வது
அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!" என்று கூறினார்கள். புகாரி 2229
போரில் கைதியாக இருக்கும் பெண்கள் பிணைத்தொகை கிடைக்கும் வரை அல்லது வேறு ஒருவருக்கு விற்கப்படும் வரை ஒருவரின் பராமரிப்பிலேயே இருப்பார். அப்போது அந்த எஜமானருக்கும் உடல் ரீதியான தேவை இருக்கும். அதேபோல் அப்பெண்ணிற்கும் உடல்ரீதியான தேவை இருக்கும். அவர் தன் இனத்தாரால் மீட்கப்படும் வரை அல்லது வேறொருவர் வாங்குவதற்கு நாட்களாகளாகும் மாதங்களாகளாகும். அதுவரை இருவரில் ஒருவர் தவறான வழியை தேடக் கூடும்.
எனவே தான் அஸ்ல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. பொதுவாக போர்களில் பிடிக்கப்படும் பெண்களை நன்றாக அனுபவித்துவிட்டு பிறகு அவர்களை கர்ப்பமாக்கி பின்னர் அவர்களை கைவிட்டு விடுவார்கள். அவர்களை விலைக்கு வாங்கிய எஜமானர்களும் அவள் பிள்ளையை கவனிக்க மறுத்துவிடுவார்கள். அந்தக் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். ஆகவே அஸ்ல் என்பது பல வகைகளில் மேலான ஏற்பாடாகும்.
பைபிளில் பெண் அடிமைகளின் நிலை:
அஸ்ல் செய்வதை குறித்து அங்கலாய்க்கும் இந்த கிறித்துவ கூட்டம் பைபிளில் போரில் பிடிபட்ட பெண்களை என்ன செய்தது?
அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவரும், நூறுபேருக்குத் தலைவருமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு,அவர்களை நோக்கி: ஸ்திரீகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா?...... 17. ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள்.18. ஸ்திரீகளில் புருஷசம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடே வையுங்கள். – எண்ணாகமம் 31: 14-18
அதாவது கன்னி பெண்ணாக இருந்தால் இவர்கள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் திருமணமான பெண்ணென்றால் உடனடியாக மரணம் தான்.
குற்றச்சாட்டு 3: குடும்பத்தை இழந்த பெண்களிடம் உடலுறவு கொள்வதா?
கணவனையும் தந்தையையும் சகோதரனையும் இழந்த பெண்களை வலுக்கட்டயமாக அனுபவிக்கின்றனர் என்று குற்றச்சாட்டு வைக்கின்றனர். இது உண்மையில் தவறான வாதமாகும். ஏனெனில் ஒருவேளை முஸ்லிம்கள் போரில் தோற்றிருந்தால் அப்பெண்களின் கணவர்கள் தந்தையர்கள் சகோதரர்கள் இதே போல் முஸ்லிம்களை செய்திருப்பார்களே. ஒட்டுமொத்த உலகமும் கைதிகளை அடிமைகளாக்கும்போது இஸ்லாம் மட்டும் அதைத் தடுத்து ஒரு பிரயோஜனமும் இல்லை. ஒருவேளை எதிரிகள் நாங்கள் வென்றால் உங்கள் பெண்களை ஒன்றும் செய்ய மாட்டோம் என்று அனைவரும் உடன்படிக்கை எடுத்தால், இஸ்லாமும் அதே நடைமுறையை பின்பற்றி இருக்கும், அனைவரும் சேர்ந்து இனிமேல் யாரையும் அடிமைகளாக்குவதில்லை என்று முடிவெடுத்தாலே தவிர இப்பிரச்சினைக்கு தீர்வு இல்லை. அதனால்தான் அடிமைமுறை பத்தொன்பதாம் நுாற்றாண்டின் கடைசியில் ஒழிக்கப்பட்டது.
பைபிளில் பெண் அடிமைகளின் நிலை:
கணவனை தந்தையை சகோதரனை இழந்த பெண்களை பைபிள் ஐயோ! பாவம்! என்று விட்டுவிட்டதா? போரில் பிடிபட்ட பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பைபிள் விரிவாக step by step ஆக சொல்கிறது.
STEP1: திருமணமானவளை கொலை செய்தல்:
அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவரும், நூறுபேருக்குத் தலைவருமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு,அவர்களை நோக்கி: ஸ்திரீகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா?...... 17. ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள் எண்ணாகமம் 31: 14-17
STEP2: கன்னியை விட்டுவைத்தல்
18. ஸ்திரீகளில் புருஷசம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடே வையுங்கள். – எண்ணாகமம் 31: 14-18
STEP3: அழகானவளை தேர்வு செய்தல்
11. சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி, - உபாகமம் 21
STEP4: தலையை மொட்டை அடித்தல்
12. அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களைக் களைந்து, உபாகமம் 21
பிறகு அவளை எடுத்துக் கொள்ளலாம். இவ்வளவு அவமானப்பட்டுத் தான் ஒருஅடிமைப்பெண் பைபிளில் வாழ வேண்டும்.
அடிமை முறை x கூட்டு பலாத்காரம்
பெண்களை அடிமைகளாக எடுத்துக்கொள்வது பலமடங்கு அப்பெண்களுக்கு பாதுகாப்பனது. காரணம் ஒரு போரில் வென்றவுடன் உடனே அந்த வீரர்கள் எதிரியின் நாடுகளுக்கு சென்று கண்ணில் பட்ட பெண்களை எல்லாம் கற்பழிப்பது சர்வ சாதாரணமாக நடைபெறுவது. இன்னும் சொல்லப்போனால் கூட்டுப்பலாத்காரம் செய்து பல பெண்களை சர்வ சாதாரணமாக கொன்று விடுவார்கள். வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் இருந்தாலும் மிக அருகில் சில உதாரணங்களை பார்ப்போம்..
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ராணுவம் மேற்கு ஜெர்மனியில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தி தொண்ணுாராயிரம் பெண்களை கற்பழித்ததாக ஜெர்மனி நாளேடு டெர் ஸ்பீகல் 2016ம் ஆண்டு தெரியப்படுத்தியது. தன்னை கம்யூனிஸ நாடு என்று மார்தட்டிய சோவியத் யூனியனின் படைகள் கற்பழித்த பெண்களின் எண்ணிக்கை சுமார் இருபது லட்சம் என்று மேற்கத்திய வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பல லட்சக்கணக்கான பெண்கள் சுகாதாரமின்மை, செக்ஸ் நோய்த் தொற்றுகள், கருகலைப்பு, கூட்டு பலாத்காரத்தில் ஏற்பட்ட நிரந்தரமான காயங்கள் மற்றும் பல மணி நேரம் மாறி மாறி கற்பழித்ததால் லட்சக்கணக்கான பெண்கள் இறந்தும் போனார்கள். வரலாற்றில் இந்த கருப்பு பக்கங்கள் நடந்தது ஏதோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அல்ல. மாறாக வெறும் எழுபது ஆண்டுகளுக்கு முன்பாக. நடத்தியது தங்களை நாகரிகத்தில் முன்னேறியதாக மார்தட்டிக் கொண்ட நாடுகள். அதுவும் கிறுத்துவ நாடுகள். இந்த லட்சணத்தில் தான் இவர்கள் இஸ்லாத்தை விமர்சிக்கின்றனர்.
ஆனால், இஸ்லாமிய மார்க்கமோ கைதியாக பிடிக்கப்பட்ட பெண்களை இரக்கத்துடன் நடத்த உத்தரவிட்டது. முறையாக கைதிகளை பிரித்துக் கொடுத்தது. விரும்பியவர் வைத்துக் கொள்ளலாம் அல்லது அவர்களை விற்றுவிடலாம். கைதிகளை வாங்கியவர்கள் அவர்களை நல்ல முறையில் நடத்த வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் கல்வி கற்றுத்தர வேண்டும் (புகாரி 2544). அவர்களை விரும்பினால் தாங்களே திருமணம் செய்து கொள்ளலாம். அல்லது நல்ல அடிமைகளுக்கு திருமணம் செய்த வைக்கலாம்.
பைபிளில் மேலும் அடிமைப்பெண்களின் நிலை
தந்தையே மகளை அடிமையாக விற்பனை செய்யலாம்
7. ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டானானால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக்கூடாது. யாத்திராகமம்21 அதிகாரம்
இஸ்லாத்தின் பெண்களின் நிலை
கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா(ரலி) கூறினார் கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்துவைத்தார்கள். எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்)னேன். அத்திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள் புகாரி 5138.
கற்பழிக்கலாம் காசு கொடுக்கலாம்
நியமிக்கப்படாத கன்னியாஸ்திரீயாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளோடே சயனிக்கையில், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால். அவளோடே சயனித்த மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசைக் கொடுக்கக்கடவன்;-உபாகமம்22:28,29
இஸ்லாத்தின் நிலை:
2. விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! (திருக்குர்ஆன் 24:2)
மோசமான எஜமானனுக்கும் பணிவது தேவனுக்குப் பணிவது
வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்
1பேதுரு2:18
இஸ்லாத்தின் நிலை:
'நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அரும்லுள்ள) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்:
'அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்" என அபூதர் கூறினார்" என மஃரூர் கூறினார் – புகாரி 30
மோசமாக நடத்தும் எஜமானனுக்கு அறிவுரை கூறாமல் அடக்குமுறைக்கு ஆளான அடிமையை கீழ்ப்படியச் சொல்கிறது, இதுதான் கிறித்துவத்தின் லட்சணம். ஆனால் இஸ்லாமிய மார்க்கமோ வெறும் வார்த்தைகளால் கடிந்து பேசிய எஜமானனை சரியாக நடக்குமாறு உபதேசிக்கிறது.
இந்த அளவோடு இஸ்லாம் நின்றுவிட்டதா என்றால் அதுதான் இல்லை. மாறாக அடிமைத்தனம் என்பது ஒழிய வேண்டும் என்று பாடுபட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.
அடிமைகளை விடுதலை செய்ய ஊக்குவித்தல்
நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரைத் தவறுதலாகவே தவிர கொலை செய்தல் தகாது. நம்பிக்கை கொண்டவரை யாரேனும் தவறுதலாகக் கொன்று விட்டால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். திருக்குர்ஆன் 4:92
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. திருக்குர்ஆன் 5:89
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும், தர்மங்கள் உரியனவாகும். திருக்குர்ஆன் 9:60
திருமணம் செய்ய வசதியற்றவர்களை அல்லாஹ் தனது அருளால் தன்னிறைவு பெற்றோராக ஆக்கும் வரை அவர்கள் கற்பொழுக்கம் பேணட்டும்.435 உங்கள் அடிமைகளில் விடுதலைப் பத்திரம் எழுதிக் கேட்போரிடம் நல்லதை நீங்கள் அறிந்தால் அவர்களுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுங்கள்!301 அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள செல்வத்திலிருந்து அவர்களுக்கு வழங்குங்கள்! திருக்குர்ஆன் 24:33
சொல்லில் மட்டுமல்ல செயல்படுத்தியும் காட்டியது
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்: (பரீரா என்ற அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்வது சம்பந்தமான) விஷயத்தை அவர்களிடம் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் 'நீ விலைக்கு வாங்கி விடுதலை செய்! (அந்த அடிமை மரணித்த பின்) அவருக்கு வாரிசாகும் உரிமை, விடுதலை செய்தவருக்குத் தான்!" என்று கூறினார்கள். புகாரி 2155
அஸ்மா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யுமாறு கட்டளையிட்டார்கள். புகாரி 1054
உச்சகட்டமாக அடிமையை விடுதலை செய்வதை இறைநம்பிக்கையின் அடையாளமாக இஸ்லாம் சொல்லியது.
உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் நம்புவோரும் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும் (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலைநாட்டுவோரும், ஜகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.
திருக்குர்ஆன் 2:177
இருவழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா?அவன் கணவாயைக் கடக்கவில்லை.கணவாய் என்பது என்னவென்பது உமக்கு எப்படித் தெரியும்? அடிமையை விடுதலை செய்தல், அல்லது நெருங்கிய உறவுடைய அனாதைக்கும், அல்லது வறுமையில் உழலும் ஏழைக்கும் பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல்.
திருக்குர்ஆன் 90:10-17
M. Fakrudeen Ali Ahammed
9790345345
அஸ்ஸலாமு அலைக்கும்,
முதலில் இஸ்லாத்தில் அடிமைத்தனத்தை பற்றி பேசும் போதெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) வருவதற்கு முன்னர் இந்த உலகத்தில் அடிமைத்தனம் இல்லாமல் இருந்தது போலவும். இஸ்லாம் தான் முதன் முதலாக அடிமைத்தனத்தை தோற்றுவித்தது போலவுமான கருத்தோடுதான் பேசுகிறார்கள். முதலில் அடிமைத்தனம் உருவான வரலாறை தெரிந்துகொள்ள வேண்டும்.
“Mesapotamian Code of Hammurabi” என்ற கல்வெட்டின் படி அடிமைத்தனம் சுமார் கிமு 3500 ஆண்டுகளில் ஆரம்பம் ஆகிறது. சுமார் நபிகள் நாயகம் வருவதற்கு 4000 ஆண்டுகளுக்கு முன்னரே அடிமைத்தனம் ஆரம்பம் ஆகிறது. 4000 வருடங்களாகவே அடிமைகளும் அவ்ரகளுக்கு எதிரான கொடுமைகளும் நடந்தது தான் வருகின்றன.
யார் அடிமைகள்?
நபிகள் நாயகத்திற்கு முந்தைய காலத்தில் உலகம் முழுவதிலும் பல காரணங்களுக்காக மக்கள் அடிமைகள் ஆக்கப்பட்டனர்
அவைகள்,
மேல் கூறப்பட்ட பல வழிகளில் அடிமைகள் உருவாகினர்.
ஒரு சில காலக்கட்டத்தில் அடிமைகளின் எண்ணிக்கை ஒரு நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காக இருந்தது. அதிகமான அடிமைகள் இருந்ததினால் அடிமைகளை வாங்கவும் விற்கவும் “அடிமைகள் சந்தை” உருவானது. அதில் அடிமைகளை வாங்கவும் விற்கவும் தொடங்கினர்.
அடிமைகளுக்கெதிரான கொடுமைகள்
அடிமைகள் பெரும்பாலும் மிக கடினமான வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டார்கள். ஒரு நாட்டில் கட்டப்படும் அரண்மனைகள், பெரிய கட்டிடங்களை கட்டுவதற்காக அடிமைகள் பயன்படுத்தப்பட்டனர். ஒரு சில மன்னர்கள் வேலைக்கு அடிமைகள் வேண்டும் என்பதற்காகவே சிறிய நாடுகளின் மீது போர் தொடுத்து அங்குள்ள மக்களை அடிமைகளாக பிடித்து வந்தார்கள்.
இந்த அடிமைகளுக்கு தங்கள் பார்க்கும் வேலைகளுக்கு எந்த வித ஊதியமும் வழங்கப்படவில்லை. சரியான உணவும் வழங்கப்படாமல் கடுமையான வேலைகள் வாங்கப்பட்டனர்.
அடிமைகளிடம் அதிகமான வேலைகளை வாங்குவதற்காக, அவர்களின் வேலைகளில் தொய்வு ஏற்படும் போது சாட்டைகளால் அடிக்கப்பட்டனர். கர்ப்பிணி பெண்களிடம் கூட எவ்வித இறக்கமும் காட்டப்படவில்லை. குழந்தையை ஈன்றெடுத்த அடிமைப் பெண்கள் கூட குழந்தை பெற்ற உடனே வேலைக்கு செல்வதற்கு அனுப்பப்பட்டனர்.
அடிமைகளின் அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டன. அவர்களால் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது. அடிமைகள் ஒரு உயிராகவே மதிக்கப்படவில்லை. அதாவது ஒரு அடிமையின் எஜமான் அந்த அடிமையை அடித்து கொன்றுவிட்டால் கொண்றவர்க்கு எதிராக எந்த வழக்கும் பாயாது.
அடிமைகள் செய்த தவறுக்காக நிர்வாண படுத்தி சாட்டைகளால் அடிக்கப்பட்டனர், கை கால்கள் கட்டப்பட்டு வெயிலில் சுடுமணலில் வீசப்பட்டனர், மிருகங்களிடம் சண்டை போட வைத்து அவைகளுக்கு அவர்களை உணவாக்கினர். அடிமைகளுக்குள்ளேயே சண்டை போட வைத்து ரசித்தனர். கை கால்களை வெட்டி ஊனமாக்கினர்.
பெண் அடிமைகள் கூட்டாக கற்பழிக்கப்பட்டனர். நண்பர்களை விருந்த்துக்கு அழைத்து அவர்களுக்கு அந்த பெண் அடிமைகளை வழங்கி அவர்களின் பாலியல் வன்கொடுமைகளை வேடிக்கை பார்த்தனர். அவர்களை விபச்சார தொழிலுக்கு அனுப்பி அதன் மூலம் பணம் சம்பாதித்தனர்.
நபிகள் நாயகம் காலத்தில் அடிமைகள்
நபிகள் நாயகம் வருகைக்கு பின்னர், முதலில் அவர்கள் அடிமைகள் உருவாகும் வழிகளை குறைத்தார்கள். போர் கைதிகளை தவிர வேற யாரையும் அடிமைகள் ஆக்க கூடாது என்றார்கள்.
“மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்'. ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன். இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன். மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா(ரலி)” (நூல் புகாரி 2227, 2270)
அடிமைகள் விசயத்தில் எவ்வாறு நடந்தது கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு கூறிய அறிவுரை. பின்வரும் செய்தியில் இருந்து.
நான் ஒருவரை (அவருடைய தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன்; அவர் என்னைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) ‘‘நீர் இவருடைய தாயைக் குறித்துத் தரக்குறைவாகப் பேசினீரா” என்று கேட்டார்கள்.
பிறகு, ‘‘உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான்.
ஆகவே, எவருடைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கிறாரோ அவர், தம் சகோதரருக்கு தாம் உண்பதிலிருந்து உண்ணத்தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்தே உடுத்தத்தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள்மீது சுமத்தாதீர்கள். அப்படி அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள்மீது நீங்கள் சுமத்தினால், (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள்” என்று கூறினார்கள்.
புகாரி 2545
மேலே கூறப்பட்ட ஒரு செய்தியே போதுமானது அடிமைகளிடம் எவ்வாறு நடந்தது கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் எவ்வாறு கட்டளையிட்டு உள்ளார்கள் என்பதற்கு.
அடிமைகள் உங்கள் சகோதரர்கள் என்ற ஒரு வார்த்தையே அடிமைகள் விசயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) கொண்டு வந்த மிகப் பெரிய புரட்சி. அடிமைகள் உயிரினங்களுக்கும் கீழாக பார்க்கப்பட்ட காலத்தில் அடிமைகளை சகோதரர்களாக பார்க்க சொன்னார்கள்.
சரியான உணவும் உடையும் வழங்கப்படாத காலத்தில் நீங்கள் உண்ணுவதையே அவர்களுக்கும் கொடுங்கள், நீங்கள் உடுத்துவது போலவே அவர்களுக்கும் கொடுங்கள் என்று மக்களுக்கு கூறினார்கள்.
அடிமைகளிடம் மிக கடுமையான வேலைகள் வாங்கப்பட்ட நேரத்தில் அவர்களால் முடியாத வேலையே வழங்காதீர்கள் அவ்வாறு வழங்கினால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கட்டளையிட்டார்கள்.
பெண் அடிமைகள்
இந்த பெண் அடிமைகள் யாரென்று தெரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் போர் நடக்கும் பொழுது எதிரி நாட்டு படை வீரர்களுக்கு ஊக்கமளிப்பவர்களாக இருப்பார்கள். இந்த பெண்களால் போரில் எதிர் நாட்டு வீரர்கள் பின் வாங்கி செல்லாமல் இருப்பார்கள்.
மற்றும் அடிமை சந்தைகளில் இருந்ததும் பெண் அடிமைகளை வாங்கி வருவார்கள்.
பெண் அடிமைகள் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொண்டிருந்த காலத்தில் ஒரு பெண் அடிமையை ஒரு எஜமானனின் கீழ் கொண்டு வந்தார்கள் அந்த எஜமானனை தவிர வேறு யாரும் அவளை நெருங்க கூடாது.
அந்த பெண்களை அவர்கள் வீட்டு வேலைகளுக்காக பயன்படுத்தி கொள்வார்கள். அந்த எஜமானனின் கீழ் பல காலங்கள் அவர்கள் வேலை செய்வார்கள். ஆண்களை போலவே பெண்களும் உணர்ச்சி உள்ளவர்களாவே இருப்பார்கள். தன்னுடைய உணர்ச்சிகளை தீர்த்து கொள்வதற்காக அவர்கள் தவறான பாதையில் சென்று விட கூடாது என்பதற்காக அந்த எஜமானன் மட்டும் உடல் ரீதியாக அவளை அடைந்து கொள்வதற்கு அனுமதி அளித்தார்கள்.
அவர்கள் விரும்பினால் அந்த பெண் அடிமைகளை அவர்கள் திருமணமும் செய்து அவர்களை மனைவியாகவும் ஆக்கி கொள்ளலாம். பெண் அடிமைகள் பாலியல் சுகத்திற்க்காக சின்னாபின்னமாக ஆக்கப்பட்ட காலத்தில் அவர்களை திருமணம் செய்து கொள்ள ஊக்கப்படுத்தினார்கள். இதன் மூலம் அவர்கள் அடிமை எந்த அந்தஸ்திலிருந்த்து மனைவி என்ற அந்தஸ்திற்கு வந்து விடுவார்கள்.
“உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள்”
குர்ஆன் 4:25
மேலே கூறப்பட்ட குர்ஆன் வசங்களின் படி அவர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் அல்லது அவர்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று இறைவன் கட்டளை இடுகிறான்.
“மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்”
குர்ஆன் 24:33
அடிமை பெண்களை விபச்சாரத்திற்கு அனுப்பி அதன் மூலம் பொருள் ஈட்டுவதை இறை கட்டளையின் படி தடுத்தார்கள்.
இதன் மூலம் பெண் அடிமைகளின் வாழ்க்கையை சீராக்கியது இஸ்லாம்.
நபிகள் நாயகம் ஏன் அடிமை முறையை முற்றிலுமாக ஒழிக்கவில்லை?
அரேபிய சாம்ராஜ்ஜியத்தின் ஜனாதிபதியாக இருந்த நபிகள் நாயகம் ஏன் தன்னுடைய நாட்டில் அடிமை முறையை முழுமையாக ஒழிக்கவில்லை என்ற காரணத்தை கீழே காணலாம்,
மேலே கூறப்பட்ட முக்கிய காரணங்களால் தான் அடிமை முறையை முற்றிலுமாக நபிகள் நாயகம் ஒழிக்கவில்லை.
அடிமைகளை விடுதலை செய்ய நபிகள் நாயகம் காட்டிய வழிகள்.
அடிமைகளை விடுதலை செய்வதற்கு பல வழிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்தார்கள்.
அடிமைகளை விலைக்கு வாங்கியவர்கள் மனமுவந்து அடிமைகளை விடுதலை செய்வதற்கு வழிவகை செய்தார்கள்.
அவைகள்,
அடிமைகளை அவர்களின் எஜமானர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு ஊக்கப்படுத்தினார்கள். இதன் மூலம் அடிமைகள் மனைவி என்ற அந்தஸ்திற்கு உயர்வார்கள். பல பேர் தங்களின் அடிமைகளை திருமணமும் செய்து கொண்டார்கள்.
குர்ஆன் 5:89
ஒருவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டு அதை காப்பாற்ற தவறி விட்டால் அதற்க்கு பரிகாரமாக ஒரு அடிமையை விடுதலை செய்ய உத்தரவிட்டார்கள்.
குர்ஆன் 9:60
ஜகாத் என்ற தர்மத்தின் மூலம் அடிமைகளை விலைக்கு வாங்கி அவர்களை விடுதலை செய்ய இறைவன் கட்டளையிட்டான். அதை நபிகள் நாயகம் நடைமுறை படுத்தினார்கள். இதன் மூலமும் அடிமைகள் விடுதலை செய்ய பட்டார்கள்.
குர்ஆன் 24:33
அப்பொழுது அடிமையாய் இருந்தவர்களில் எவரேனும் தன்னுடைய எஜமானனிடம் தனக்கான ஈட்டு தொகையை சம்பாதித்து தருவதாக வாக்குறுதி கொடுத்து தன்னை விடுதலை செய்ய கூறினால், அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு தகுதியானவர்களா, நல்ல நடத்தை உள்ளவர்களா என்பதை பார்த்து அவர்களை விடுதலை செய்து, அவர்கள் தொழில் செய்வதற்கும், வருமானம் ஈட்டவும் உதவி செய்ய வேண்டும் என்று இறைவன் கட்டளை இடுகிறான். இதன் மூலம் தகுதியான அடிமைகள் தாங்களாகவே விடுதலை ஆனார்கள்.
நூல்: இப்னு மாஜா
குர்ஆன் 4:92
விபத்தின் மூலமாகவோ அல்லது அறியாமல் செய்த செயல் ஒருவரின் மரணத்திற்கு காரணமாகி விட்டால் ஒரு அடிமையை விடுதலை செய்யவும் பிறகு மரணித்தவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு கொடுக்கவும் இறைவன் கட்டளையிட்டான். இதன் மூலமும் அடிமைகள் விடுதலை செய்யபட்டார்கள்.
குர்ஆன் 58:3
அறியாமை காலத்தில் தன் மனைவியை தலாக் இடுவதற்கு பயன் படுத்தும் வார்த்தைகளில் ஒன்றுதான் ளிஹார் என்பது. அதாவது ஒருவர் தன் மனைவியை பார்த்து நீ என் தாயின் முதுகைப் போல் என்று கூறினால், அந்தப் பெண் தலாக் இடப்பட்டவளாக கருதப்படுவாள். அதாவது என் தாய் எனக்கு ஹராம் என்பது போல், நீயும் என்மீது ஹராம் என்பதே அவ்வார்த்தையின் கருத்தாகும். அந்த காலத்தில் தன்னுடைய மனைவியை கோபத்தில் இவ்வாறு கூறி அவர்களை விட்டு விலகி இருக்கும் மூடப்பழக்கம் இருந்து வந்தது இதை ஒழித்துக்கட்ட இந்த செயலுக்கு பரிகாரமாக அடிமையை விடுதலை செய்ய இறைவன் கட்டளையிட்டான்.
“ஒரு முஸ்லிமான அடிமையை விடுதலை செய்கிறவரை (விடுதலை செய்யப்பட்ட) அவரின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக விடுதலை செய்தவருடைய ஓர் உறுப்பை இறைவன் நரகத்திலிருந்து விடுவிப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”, (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)
அடிமைகளை விடுதலை செய்வதை மிகப்பெரிய நன்மையான காரியம் என நபிகள் நாயகம் போதித்தார்கள்.
இதனைச் செவியுற்ற ஆரம்ப கால முஸ்லிம்கள் தங்களிடமிருந்த அடிமைகளை மட்டுமல்ல, அடுத்தவர்களிடம் இருந்த அடிமைகளையும் விலைகொடுத்து வாங்கி இயன்ற அளவுக்கு விடுதலை செய்தார்கள்.
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புகாரி 2552
இதன் மூலம் அடிமை என்ற வார்த்தையையே தன்னுடைய சமுதாயத்தில் ஒழித்தார்கள் நபிகள் நாயகம்.
அடிமைகள் விடுதலை சம்பந்தமாக ஏகப்பட்ட செய்திகளை நபிகள் நாயகத்தின் வாழ்க்கை குறிப்பான ஹதீஸ்களில் காண முடிகிறது.
அடிமைகளும், அடிமைக் கொடுமைகளும் மேலோங்கி இருந்த அந்த காலத்தில் இதை விட சிறந்த சட்டத்தையும், வழிக்காட்டுத்தலையும் யாரும் கூற இயலாது. இதையெல்லாம் அரைகுறையாக மழுங்கிய மூளைகளோடு புரிந்து கொண்டு இஸ்லாத்தை விமர்ச்சிக்கின்ற கிறிஸ்த்துவ மடச் சாம்பிராணிகள் தன்னுடைய மதத்தில் அடிமைகள் பற்றிய செய்திகளை தெளிந்த கண்களோடு காண வேண்டும்.
இஸ்லாமிய ஹதீஸ்களை அரை குறையாக புரிந்து கொண்டு அவற்றின் கால அளவுகளை சரியாக தெரிந்து கொள்ளாமல் நபித்தோழர்கள் பலவந்தமாக அடிமைகளிடம் நடந்து கொண்டதை போன்ற ஒரு தோற்றத்தை விதைக்கிறார்கள்.
“நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது”
திருக்குர்ஆன் 4:19
பெண்களை பலவந்தமாக அடைவதை இஸ்லாம் மிகக் கடுமையாக கண்டிக்கின்றது.
இவ்வாறு இருக்க நபித்தோழர்கள் அடிமை பெண்களிடம் கடுமையாக நடந்தது கொண்டது போன்ற ஒரு மடை மாற்று வேலையை செய்து வருகிறார்கள்.
இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு முன் அவர்கள் இஸ்லாத்தை தெளிவாக விளங்கிருந்த்தால் விமர்சனம் செய்வதற்கான எந்த ஒரு அடித்தளமும் அவர்கள் கண்டிருக்க மாட்டார்கள்.
ஹதீஸ்களின் விளக்கம்
கிருஸ்த்தவர்கள் குறிப்பிட்ட மூன்று ஹதீஸ்களில் இரண்டு அஸ்ல் பற்றியதும், (புகாரி 2229, முஸ்லிம் 2834) ஒன்று கணவன் உள்ள அடிமைகள் சம்பந்தமானதும் (முஸ்லிம் 2885) ஆகும்.. அதாவது உறவு கொள்ளும் போது விந்தணுவை உள்ளே செலுத்தாமல் வெளியேற்றுவது. நபித்தோழர்கள் அஸ்ல் செய்வதற்கு காரணம் அந்த பெண் கைதிகளை விற்க நினைத்தனர் மற்றும் அவர்களை தேடி யாரேனும் வந்து நஷ்டஈடு கொடுத்து பெற்று செல்லலாம் என்று இருந்தனர். இந்த விஷயத்தில் அடிமைகளாக அழைத்து வரப்படும் போரில் கலந்துகொண்ட எதிரி நாட்டு பெண்களை சிலர் உடனே விற்று விடாமல் சில காலம் தங்களுடன் வைத்துக்கொள்வார்கள்.பெண் அடிமைகளை எவ்வளவு காலம் வைத்துக்கொள்வது என்பது அந்தந்த நபர்களை பொறுத்தது. அவர்களுடன் இருக்கும் காலமெல்லாம் அந்த பெண்களும் தங்களுடைய உணர்ச்சிகளை அடைக்கிக் கொள்ள வேண்டும். இது கால போக்கில் அவர்கள் தவறான பாதைக்கு செல்வதற்கு வழிவகைக்கும். அதனால் அந்த எஜமானர்கள் அவர்களுடன் உறவு கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். அப்படி உறவு கொள்ளும் போது அந்த பெண் கருவுற்று குழந்தை பெற்று விட்டால் அவள் அடிமைத்தனத்திலிருந்த்து வெளியேறி விடுவாள். பிறகு அவளை அடிமையாக யாரும் விற்க முடியாது. பெண் அடிமைகளை சில ஆண்டுகளுக்கு பிறகு விற்று விடலாம் என்ற எண்ணம் உள்ளவர்கள் அந்த அடிமை மூலம் குழந்தை பெற்று கொள்ள விரும்ப மாட்டார்கள். அந்த எண்ணம் உள்ளவர்கள் அந்த அடிமைகளிடம் அஸ்ல் செய்து கொள்வார்கள். நஷ்டஈடு பெற நினைப்பவர்களும் உடனே அந்த அடிமைகளை தேடி யாரும் வருவதில்லை. கடைசி வரையிலும் அந்த அடிமைகளை தேடி யாரும் வராமலும் போகலாம். நஷ்டஈடு பெற்று விட்டுவிடலாம் என்று இருப்பவர்களிடமும் அந்த அடிமைகள் சில ஆண்டுகள் தங்குவார்கள். அவர்கள் தாங்கும் காலமெல்லாம் அந்த பெண்களின் உடல் தேவைகளுக்காகவும் மற்றும் அவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் இருப்பதற்காகவும் அந்த எஜமானர்கள் அவர்களுடன் சேர்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். அப்பொழுது அவர்கள் அஸ்ல் செய்து கொள்வார்கள். இதை தான் ஒரு சந்தேகமாக நபிகள் நாயகத்திடம் கொண்டுவந்தார்கள். இப்படி செய்வது சரியா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள. அதற்க்கு நபிகள் நாயகம் உங்களின் மூலமும் உங்கள் அடிமை மூலமும் ஒரு உயிரை இறைவன் படைக்க நினைத்து விட்டால் அந்த உயிர் உருவாகாமல் இருப்பதில்லை என்று கூறினார்கள். இதன் மூலம் அவர்கள் அஸ்ல் செய்வதையும் தடுக்கவில்லை அதை செய்யமல் இருப்பதையும் தடுக்கவில்லை.
கணவன் உள்ள அடிமைகள் விஷயத்தில். அடிமைகளாக கொண்டு வரப்படும் கணவன் உள்ள பெண்கள் இந்த எஜமானனிடம் இருப்பார்கள். இந்த அடிமைகளின் கணவன்கள் வேறு எங்கோ ஒரு இடத்தில் இருப்பார். இந்த அடிமை அவரின் கணவனை காண்பது மிக்க கடினமான விஷயம். அடிமைகளாக விற்கப்பட்டவர்கள் ஒவ்வொருவர் மூலமாக விற்கப்பட்டு எங்கேயோ சென்று விடுவார். இப்படி கணவன் உள்ள அடிமைகள் தன்னுடைய கணவனுடன் திரும்ப சேருவதற்கு வழி இல்லாத காரணத்தினால் கணவன் உள்ள பெண் அடிமைகள் இத்தா என்று அழைக்கப்படும் சில காலங்கள் பிறகு அவர்களின் எஜமானர்கள் அந்த அடிமைகளின் உடல் தேவைகளுக்காகவும் தவறான பாதைகளுக்கு செல்லாமல் இருப்பதற்காகவும் அவர்களை அடைந்து கொள்ளலாம். இதை தான் நபிகள் நாயகம் அவர்களிடம் கேட்கும் போது அனுமதி வழங்கினார்கள்.
கிருஸ்த்துவத்தில் அடிமைகளின் நிலை
கழிவறைக்கு சென்று சரியாக கழுவாதவன் அடுத்தவன் சுத்தமாக இருக்கின்றனா என்று சோதிப்போது போல உள்ளது விமர்சனம் செய்த கிறிஸ்தவர்களின் நிலை. முதலில் அவர்கள் தங்கள் மதத்தில் உள்ள அடிமைகளின் நிலைமையை தெரிந்து கொள்ள வேண்டும். அவைகள்,
எண்ணாகமம் 31:17
“இப்போது எல்லா மீதியானிய சிறுவர்களையும், வாழ்க்கைப்பட்ட மீதியானிய பெண்களையும், ஒருவனோடு பாலின உறவுகொண்ட ஒவ்வொரு மீதியானிய பெண்ணையும் கொன்றுவிடுங்கள். 18 எந்தவொரு மனிதனோடும் பாலின உறவுகொள்ளாத இளம் பெண்ணை மட்டும் வாழவிடுங்கள்.”
மோசே தன் மக்களுக்கு கட்டளை இடுகிறார் போரில் தோல்வி அடைந்த நாட்டின் ஆண் குழந்தைகளையும், திருமணமான பெண்களையும் கொன்று விட்டு கன்னி பெண்களை மட்டும் அவர்கள் அனுபவிப்பதற்காக உயிரோடு வைத்திருக்க கட்டளையிடுகிறார். ஆனால் இஸ்லாம் போரில் தோல்வி அடைந்தவர்களில் யாரையும் கொல்வதற்கு அனுமதி அளிக்கவில்லை.
எண்ணாகமம் 31:26
“பிறகு கர்த்தர் மோசேயிடம், 26 “நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் தலைவர் அனைவரும் கைதிகளையும், மிருகங்களையும், கைப்பற்றி வந்த பொருட்களையும், எண்ணிக் கணக்கிட வேண்டும். 27 பிறகு அவற்றைப் போருக்குச் சென்று வந்த வீரர்களுக்கும், மற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்கும் பங்கிட வேண்டும்.”
கர்த்தர் மோசேவிற்கு கட்டளை இடுகிறார் மிருகங்களையும், ஆண் பெண் கைதிகளையும் போருக்கு சென்று வந்தவர்களுக்கும், இஸ்ரவேலர்களுக்கும் பங்கிட்டு கொடுக்க சொல்கிறார். பெண் கைதிகளை அவர்கள் எவ்வாறு கொடுமை படுத்தினார்கள் என்று ஏற்கனவே மேலே பார்த்தோம்.
உபாகமம் 15:12
“எபிரெய ஆணையோ, பெண்ணையோ நீங்கள் அடிமைகளாக விலை கொடுத்து வாங்கியிருந்தால், நீங்கள் அவர்களை ஆறு ஆண்டுகளுக்கு உங்களுக்கு சேவை செய்ய வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஏழாவது ஆண்டு அவர்களை உங்களிடமிருந்து விடுதலை பெற்றுச் செல்ல அனுமதிக்க வேண்டும்.”
ஏதோ கிருஸ்த்தவம் அடிமைகளை வைத்து கொள்ளாதது போல் பேசுபவர்கள் ஏன் அடிமைகளை இயேசு கிறிஸ்த்து உடனடியாக விடுதலை செய்யவில்லை என்று பார்க்கவில்லை.
உபாகமம் 15:16
“உங்களது அடிமைகளுள் ஒருவன், ‘நான் உங்களை விட்டுப் பிரியமாட்டேன்’ என்று உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நேசித்து உங்களுடன் நல்லதொரு வாழ்வைப்பெற்றதனால், கூறிடலாம். 17 நீங்கள் அந்த அடிமையை உங்கள் வீட்டுக் கதவுக்கு எதிராக நிறுத்தி, ஒரு கூர்மையான சிறிய கம்பியினால் அந்த அடிமையின் காதில் ஒரு துளை போடவேண்டும். அவன் உங்களுக்கு என்றைக்கும் அடிமையாயிருப்பான் என்பதை இது காட்டும், உங்களோடு இருக்க விரும்பும் உங்களின் பெண் அடிமைக்கும் இவ்வாறே செய்ய வேண்டும்.”
தன்னுடன் இருப்பதற்கு ஆசை பட்ட அடிமையிடம் கிறிஸ்தவம் நடந்து கொள்ள சொல்லும் முறை. அந்த அடிமைக்கு நல்ல வாழ்வாதாரத்தை ஏற்படுத்தாமல் காலா காலத்திற்கும் அவர்களை அடிமையாக வைத்திருக்க சொல்லுகிறது கிறிஸ்தவம். ஆனால் இஸ்லாம் இதிலிருந்த்து முற்றாக மாறுபட்டு அவர்களுக்கு நல்ல வாழ்வை அமைத்து கொடுக்க சொல்கிறது.
உபாகமம் 21:10
“நீங்கள் உங்கள் எதிரிகளுக்கு எதிராகச் சண்டையிடும்போது, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடம் அவர்களைத் தோல்வியடையச் செய்யும்போது, நீங்கள் அந்தப் பகைவர்களைச் சிறைப்பிடித்து வந்திருக்கலாம். 11 அந்த கைதிகளில் உள்ள ஒரு அழகியப் பெண்ணைக் கண்டு, அவளை உங்களில் ஒருவன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால், 12 அவளை அவன் வீட்டிற்கு அழைத்து வரவேண்டும். அவள் தன் தலையை மொட்டையடித்து தன் நகங்களை வெட்டிக்கொள்ள வேண்டும். 13 அவள் அணிந்திருந்த போர்க் கைதிக்குரிய ஆடைகளை நீக்கிவிடவேண்டும். அவள் தான் இழந்த தந்தை, தாயை எண்ணி உங்கள் வீட்டில் ஒரு மாதம் முழுவதும் துக்கம் கொண்டாட வேண்டும். அதற்குப் பின்பு அவன் அவளிடம் சென்று அவளுக்குக் கணவனாக வாழலாம். அவள் அவனுக்கு மனைவியாக இருப்பாள்.”
இஸ்லாத்திற்கும் கிருஸ்த்தவத்திற்கும் உள்ள வேறுபாடுகளை தெளிவாக சொல்லுகிறது இந்த வசனம்.
லேவியராகமம் 25:44
“உங்கள் ஆணும் பெண்ணுமான அடிமைகளைப்பற்றிய காரியங்களாவன: உங்களைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்து அடிமைகளை அழைத்து வரலாம். 45 உங்கள் தேசத்தில் வசிக்கும் அயல் நாட்டவர்கள் குடும்பங்களில் இருந்து நீங்கள் அடிமைகளாக சிறுவர்களையும் அழைத்து வந்திருக்கலாம். அந்த அடிமைச் சிறுவர்கள் உனக்கு உரியவர்கள். 46 உங்கள் இறப்பிற்குப் பின் உங்களது பிள்ளைகளின் வசத்தில் அவர்கள் இருப்பார்கள். என்றென்றும் அவர்கள் உங்களது அடிமைகளாக இருக்கலாம். இந்த அயல் நாட்டுக்காரர்களை உங்கள் அடிமைகளாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் உங்கள் சொந்தச் சகோதரர்களாகிய இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு கொடுமையான எஜமானனாக நீ இருக்கக்கூடாது.”
இந்த வசனத்தின் படி இஸ்ரவேலர்களில் யாராவது அடிமையாய் வந்தால் அவர்களை அடிமைகள் போல் நடத்தக்கூடாதாம் ஆனால் புறஜாதிகளில் யாராவது அடிமையாய் வந்தால் அவர்களை விற்கலாம்
விலைக்கு வாங்காலாம் அந்த புறஜாதிகளில் உள்ள அடிமைகளை இவர்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு சுதந்தரமாக்கலாமாம்
யாத்திராகமம் 21: 4
“அடிமை மணமாகாதவனாக இருந்தால், எஜமான் அவனுக்கு ஒரு மனைவியைக் கொடுக்கலாம். அவள் மகன்களையோ, மகள்களையோ பெற்றெடுத்தால் அவளும் அவள் பிள்ளைகளும் எஜமானுக்கு உரிமையாவார்கள். அடிமையின் வேலையாண்டுகள் முடிந்தபின், அவன் மட்டும் விடுதலை பெறுவான்.
5 “ஆனால் அடிமை எஜமானோடு நீடித்து இருப்பதாக முடிவு செய்தால் அவன், ‘நான் என் எஜமானை நேசிக்கிறேன். நான் எனது மனைவியையும், என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன். நான் விடுதலை பெறமாட்டேன். நான் இங்கேயே தங்குவேன்’ என்று சொல்லவேண்டும். 6 இவ்வாறு நிகழ்ந்தால், எஜமான் அடிமையை தேவனுடைய சந்நிதானத்தில் கொண்டுவரவேண்டும். எஜமான் அடிமையை ஒரு வாசலருகே அல்லது வாசலின் நிலைக்காலின் அருகே அழைத்துச் சென்று, அடிமையின் காதில் கூர்மையான கருவியால் ஒரு துளை போடவேண்டும். அப்போது அடிமை தன் வாழ்க்கை முழுவதும் எஜமானுக்கு தொண்டு செய்வான்.”
ஒருவன் அடிமையாய் இந்த கிருஸ்தவர்களுக்கு இருந்து பைபிள் கர்த்தர் கூறிய ஆறுவருஷம் சேவைசெய்தபின்பு
அவர்களுக்கு எதுவுமே கொடுக்காமல் விடுதலை செய்யவேண்டுமாம் அந்த அடிமைக்கு பெண்பிள்ளைகள் இருந்தால் அவர்களை இந்த கிருஸ்தவர்களிடம் கொடுத்து விட்டு தனிமையாய் செல்லவேண்டுமாம் அதை அந்த அடிமை விரும்பவில்லை என்றால் அந்த அடிமையை பிடித்து அவன் காதை கம்பியினால் குத்தி கொடுமைபடுத்திவிட்டு இவர்களுக்கு மறுபடியும் அடிமையாய் வைத்துக்கொள்ள வேண்டுமாம் காலா காலத்திற்கும்.
யாத்திராகமம் 21: 20
“ஒருவன் தனக்கு அடிமையானவனையாவது தனக்கு அடிமையானவளையாவது, கோலால் அடித்ததினாலே, அவன் கையால் இறந்துபோனால், பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும்.
21ஒரு நாளாவது இரண்டு நாளாவது உயிரோடிருந்தால், அவர்கள் அவனுடைய உடைமையாகையால், பழிவாங்கவேண்டியதில்லை.”
கிருஸ்தவர்கள் இவர்களுடைய அடிமையை அடித்து துண்புறுத்தி அவள் அப்போதே இறந்து போனால் பழிக்கு பழி வாங்க வேண்டுமாம் அவள் இரண்டு நாட்கள் வழியால் துடித்து சித்திரவதைப்பட்டு செத்துப்போனால் பழிக்கு பழி வாங்கவேண்டியது இல்லையாம்.
ஆதியாகமம் 38:9
இந்தச் சேர்க்கையினால் பிறக்கும் குழந்தைகள் தன்னுடையதாக இருக்காது என்பதை ஓனான் அறிந்தான். ஓனான் தாமாருடன் பாலின உறவுகொள்ளும்போது தனது சகோதரனுக்கு சந்ததி உண்டாகாதிருக்கத் தனது வித்துவைத் தரையில் விழச் செய்தான்.
அந்த ஹதீஸில் அஸ்ல் செய்வதை பற்றி பேசும் பொழுது அதை பேச முடியவில்லை கூச்சமாக இருப்பதாக கூறியவர்களுக்கு பைபிளின் இந்த வசனத்தை படிக்கும் போது மூளை மழுங்கி விடும் போலும்.
ஈஸா நபி அல்லாஹ்விடம் உயர்த்தப்பட்டதை அந்த மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள்?
”அஹத்” ஓர் ஆய்வு
பைபிள் தான் இஞ்சீல் - சூப்பர் மடமைக்கு பதில்