Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

சொர்க்கத்தில் கிடைக்கும் சுகங்கள் பற்றிய கிருஸ்துவ பாதிரிமார்களின் விமர்சங்கள்

சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்வி பதில் 26/09/2021

உரை: பீ.ஜைனுல் ஆபிதீன்

 

விதி பற்றிய கிருஸ்துவர்களின் அறியாமை

சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்வி பதில் 26/09/2021

உரை: பீ.ஜைனுல் ஆபிதீன்

சொர்க்கத்தில் 72 கன்னிகள் என்பது சரியா

  • இறைவனுக்காக உயிர் தியாகம் செய்தால் அவர்களுக்கு சொர்க்கத்தில் 72 ஹூருல் ஈன்கள் கிடைக்கும் என்ற ஹதீஸை எடுத்துக்காட்டி இஸ்லாமை விமர்சனம் செய்கிறார்கள்.
  • அப்படி ஹதீஸ் உள்ளதா? இருந்தால் இந்த விமர்சனத்துக்கு இஸ்லாத்தின் பதில் என்ன?
  • இந்தச்  செய்தி தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக அறியப்படாவிட்டாலும் ஆங்கில உலகத்தில் இஸ்லாத்திற்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமாக இஸ்லாத்தைக்  அசிங்கமாகக் காண்பிப்பதற்காக இந்த ஹதீஸைப் பரப்புகிறார்கள்.
  • இம்ரான் கோவை

பதில்

இந்தக் கருத்துடைய ஹதீஸ்கள் அஹ்மத், தப்ரானி திர்மிதி உள்ளிட்ட நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

.

இது ஆதாரப்பூர்வமான செய்தி தான்.

ஆனால் இதில் விமர்சனம் செய்ய எதுவும் இல்லை.

இது குறித்து விமர்சிக்கும் கிறித்தவர்கள் பைபிளை சரியாக அறியாமல் விமர்சிக்கிறார்கள்.

கீழ்க்கண்ட வசனங்களை மட்டும் பார்த்து விட்டு பரலோக ராஜ்ஜியம் குறித்து முடிவு செய்கிறார்கள்

24. போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்க வேண்டும் என்று மோசே சொன்னாரே.

25. எங்களுக்குள்ளே சகோதரர் ஏழு பேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம் பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப் போனான்.

26. அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன் முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள்.

27. எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.

28. ஆகையால், உயிர்த்தெழுதலில், அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்களெல்லாரும் அவளை விவாகம் பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.

29. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.

30. உயிர்த்தெழுதலில், கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப் போல் இருப்பார்கள்;

மத்தேயு 22:24-30

பரலோக ராஜ்ஜியத்தில் உண்ணுதல், பருகுதல், உடல் இன்பம் போன்றவை இல்லை. வானவர்களைப் போல் அவர்கள் எந்த இன்பங்களையும் அனுபவிக்காமல் நித்திய ஜீவனை அடைவார்கள் என்று இவ்வசங்களின் அடிப்படையில் நம்புகிறார்கள்.

அதனால் சொர்க்கத்தில் கன்னியர் கிடைப்பார்கள் என்ற செய்தி அவர்களுக்கு வியப்பாகத் தெரிகிறது.

பரலோக ராஜ்ஜியத்தில் இன்பங்கள் உண்டு எனக் கூறும் வசனங்களும் உள்ளன.

29. என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்;

மத்தேயு 19:29

பரலோக ராஜ்ஜியத்தில் தேவ தூதர்களைப் போல் இருக்க மாட்டார்கள். மாறாக இந்த உலகத்தில் தியாகம் செய்தவைகளை பன்மடங்காகப் பெற்று இன்பம் அனுபவிப்பார்கள் என்று மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.

கர்த்தருக்காக மனைவியை தியாகம் செய்தவன் அது போல் நூறு மனைவிகளைப் பெறுவான். நிலங்களை தியாகம் செய்தவன் அது போல் நூறு மடங்கை அடைவான் என்று இவ்வசனங்களில் கூறப்படுகிறது.

கர்த்தருக்காக மனைவியை தியாகம் செய்தால் நூறு மனைவியைப் பெறுவார்கள் என்று சொல்லும் பைபிளை வேதமாக ஏற்றுள்ளவர்கள் 72 கன்னிகள் பற்றி கேள்வி கேட்பது அறியாமையாகும்.

6. தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத் தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.

7. சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.

8. சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.

ரோமர் 2:6,7,8

அவனவனது கிரியைகளுக்கு தக்க பலனை அனுபவிப்பார்கள் என்ற இந்த வசனம் பரலோக ராஜ்ஜியத்தில் வானவர்கள் போல் இருப்பார்கள் என்ற கிறித்தவர்களின் நம்பிக்கை தவறு என்று நிரூபிக்கிறது.

பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.

2 கொரிந்திர 5:1

பரலோக ராஜ்ஜியத்தில் தேவனால் உருவாக்கப்பட்ட வீடுகள் மாளிகைகள் உள்ளன என்று இவ்வசனம் கூறுகிறது.

தேவன் கட்டிய வீடுகள் கிடைக்கும் என்றால் என்ன பொருள்? வீடுகளில் இருக்கும் அனைத்து சாதனங்களும் இருக்கும். அதை பரலோக ராஜ்ஜியத்தில் அனுபவிப்பார்கள் என்பது தான் பொருள்.

34. அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்.

மத்தேயு 25:34

நன்மக்களுக்காக தேவனால் ஒரு ராஜ்ஜியம் உருவாக்கப்பட்டுள்ளது. அதை உரிமையாக்கிக் கொள்வார்கள் என்றால் அங்கே அனைத்து இன்பங்களும் உண்டு என்பதைத் தான் பைபிள் கூறுகிறது.

21. இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்பு கூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.

மார்க் 10:21

தனது செல்வத்தை நல் வழியில் செலவு செய்தவனுக்கு பரலோக ராஜ்ஜியத்தில் பொக்கிசம் உண்டு என்று இயேசு கூறியதாக இவ்வசனம் கூறுகிறது. தேவதூதர்கள் போல் இருப்பவர்களுக்கு பொக்கிஷம் எதற்கு?

அப்படியானால் தேவதூதர்கள் போல் இருப்பீர்கள் என்று இயேசு சொன்னதற்கு என்ன பொருள்?

தேவதூதர்கள் உண்ணாமல் பருகாமல் இருப்பவர்கள் அல்லர்:. மனிதர்களைப் போலவே சாப்பிடுபவர்கள் என்று பைபிள் கூறுகிறது.

ஆப்ரஹாமைச் சந்தித்த மூன்று தேவதூதர்கள் மனிதர்களின் உணவை மனிதர்களைப் போல் சாப்பிட்டுள்ளார்கள் என்று பைபிள் கூறுகிறது.

6. அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்று படி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான்.

7. ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான்.

8. ஆபிரகாம் வெண்ணெயையும், பாலையும், சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள்.

ஆதியாகமம் 18:6,7,8

அது போல் லோத்துவைச் சந்தித்த தேவ தூதர்கள் உணவு உட்கொண்டதாக பைபிள் சொல்கிறது

1. அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:

2. ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டுமுகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.

3. அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுக் கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்து பண்ணினான், அவர்கள் புசித்தார்கள்.

ஆதியாகமம் 19:1,2,3

பரலோக ராஜ்ஜியத்தில் தேவதூதர்கள் போல் இருப்பார்கள் என்பதை பைபிள் அடிப்படையில் புரிந்து கொண்டால் தேவதூதர்கள் உண்பார்கள்; பருகுவார்கள் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.

பல கணவன்மார்களை மணந்த பெண் யாருக்கு மனைவியாக இருப்பாள் என்ற கேள்விக்குத் தான் தேவதூதர்கள் போல் இருப்பார்கள் என்று இயேசு பதில் கூறியுள்ளார். அவள் எனக்கு உனக்கு என்று சண்டையிட்டுக் கொள்ள மாட்ட்டார்கள். கடவுள் தீர்ப்பை தேவதூதர்கள் போல் ஏற்றுக் கொள்வார்கள் என்ற கருத்தில் தான் அதைப் புரிந்து கொள்ள முடியும். அப்போது தான் நாம் எடுத்துக்காட்டிய மற்ற வசனங்களுடன் இணக்கமாக அமையும்.

பரலோக ராஜ்ஜியத்தில் ஒன்றுக்கு நூறாக மனைவியர் கிடைப்பார்கள் என்று பைபிள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்பவர்கள் 72 கன்னிகள் குறித்து கேலி செய்து தங்களையே கேலி செய்கிறார்கள்.

அடுத்து மறுமை வாழ்க்கை என்பது இவ்வுலக வாழ்வில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.

அங்கே சாப்பிடுவார்கள் ஆனால் மலம் கழிக்க மாட்டார்கள்.

பருகுவார்கள். சிறு நீர் கழிக்க மாட்டார்கள்.

நோய், முதுமை இருக்காது.

அங்கே சோர்வு அசதி இருக்காது. முதுமை இருக்காது. மாறாத இளமையுடன் இருப்பார்கள். அங்கே கள்ளம் கபடம் இருக்காது.

இந்த உலகத்தில் எடுக்கும் முடிவைப் போல் அங்கே முடிவு எடுக்க மாட்டார்கள்.

இவை எல்லாம் சாத்தியமற்றதாக இவ்வுலகப் பார்வையில் தெரியும். ஆனால் இறைவன் தனது பேராற்றலால் மனிதர்களுக்கு இவற்றைச் செய்து கொடுக்கிறான்.

ஒருவனுக்கு கிடைக்கும் சொர்க்கம் பல மாதங்கள் பயணிக்கும் அளவு விசாலமானதாக இருக்கும். எல்லாமே பிரம்மாண்டமாக வழன்கப்படும் சொர்க்கத்தில் எத்தனை கன்னிகள் கொடுக்கப்பட்டாலும் அந்த உலகில் அது பிரச்சனையாக இருக்காது.

இதில் கிறித்தவர்கள் விமர்சிக்க ஒன்றும் இல்லை. அவர்களின் வேதத்திலும் இது போல் சொல்லப்பட்டுள்ளது என்பதே அவர்களுக்கான பதிலாகும்.

தலைவிதி பற்றி பைபிள் பேசவில்லையா?

  • கேள்வி : பைபிள் விதியைப் பற்றி ஏதும் சொல்கின்றதா? தயவு செய்து விளக்கவும். என் கிறித்தவ நண்பன் பைபிள் விதியைப் பற்றி எங்கும் சொல்லவில்லை என்கிறான். பைபிள் மூலமே பதில் கூற வேன்டும்.

பதில்

எல்லாம் விதிப்படி நடக்கின்ற்ன என்று இஸ்லாம் கூறுகிறது. இதற்கு எதிராக கிறித்தவ போதகர்கள் பல குதர்க்கமான கேள்விகளைக் கேட்கிறார்கள். எல்லாம் விதிப்படி என்றால் சொர்க்கம் நரகம் ஏன்? பாவம் செய்தவன் விதிப்படி தானே பாவம் செய்கிறான்? அவனைத் தண்டிப்பது என்ன நியாயம் என்பது போன்ற கேள்விகளைக் கேட்கின்றனர்.

இந்த நிலையில் நீங்கள் கேட்டுள்ள கேள்வி மிகவும் அவசியமான கேள்வியாகும். இஸ்லாத்தில் விதி குறித்த நம்பிக்கை உள்ளது போல் பைபிளிலும் விதி குறித்த நம்பிக்கையைப் பேசும் வசனங்கள் பல உள்ளன. ஆனால் கிறித்தவ போதகர்கள் அவற்றைப் படிக்காமல் இஸ்லாத்துக்கு எதிராக கேள்வி கேட்கின்றனர்.

8. உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.

வெளிப்படுத்திய சுவிசேஷம் 13:8

12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக் கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின் படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத் தக்கதாக நியாயத் தீர்ப்படைந்தார்கள்.

வெளிப்படுத்திய சுவிசேஷம் 20:12

13. சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத் தீர்ப்படைந்தார்கள்.

14. அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.

15. ஜீவ புஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டான்.

வெளிப்படுத்திய சுவிசேஷம் 20:13,14,15

26. உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டு வருவார்கள்.

27. தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.

வெளிப்படுத்திய சுவிசேஷம் 21:26, 27

3. நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.

4. என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.

சங்கீதம் 139:3, 4

16. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாத போதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.

சங்கீதம் 139:16

21. அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும் போது, அவர்கள் சந்ததியாரின் வாயில் மறந்து போகாதிருக்கும் இந்தப் பாட்டே அவர்களுக்கு விரோதமான சாட்சி பகரும்; நான் ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப் பண்ணாதிருக்கிற இப்பொழுதே அவர்கள் கொண்டிருக்கும் எண்ணம் இன்னது என்று அறிவேன் என்றார்.

உபாகமம் 31:21

2. பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்து கொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.

1ம் பேதுரு 1:2

29. ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.

30. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.

31. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.

மத்தேயு 10:29-31

28. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

ரோமர் 8:28

10. இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியான போது,

11. பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்து கொள்ளுதலின் படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலை நிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு,

12. மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது.

13. அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.

14. ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.

15. அவர் மோசேயை நோக்கி: எவன் மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன் மேல் இரக்கமாயிருப்பேன், எவன் மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன் மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.

16. ஆகையால் விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.

17. மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.

18. ஆதலால் எவன் மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன் மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.

19. இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்து நிற்பவன்யார்? என்று என்னுடனே சொல்லுவாய்.

20. அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?

21. மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின் மேல் அவனுக்குஅதிகாரம் இல்லையோ?

22. தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,

23. தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபா பாத்திரங்கள் மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள் மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?

ரோமர் 9:10 - 23

7. உலகத் தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.

1 ம் கொரிந்திரியர் 2:7

3. நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்.

4. பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டான்; ஆகையால் எகிப்துக்கு விரோதமாக நான் என் கையை நீட்டி, மகா தண்டனையினால் என் சேனைகளும் என் ஜனங்களுமாகிய இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணுவேன்.

யாத்திராகம்ம் 7:3,3

20. கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.

யாத்திராகமம் 10:20

27. கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாதிருந்தான்.

யாத்திராகமம் 10:27

10. மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினதினால், அவன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து போகவிடவில்லை.

யாத்திராகமம் 11:10

4. ஆகிலும் கர்த்தர் உங்களுக்கு உணரத்தக்க இருதயத்தையும், காணத்தக்க கண்களையும், கேட்கத்தக்க காதுகளையும் இந்நாள் வரைக்கும் கொடுக்கவில்லை.

உபாகமம் 29:4

10. இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தில் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.

ஏசாயா 6:10

8. கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.

ரோமர் 11:8

40. அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான்.

யோவான்12:40

17. கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகப் பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்குக் கடினப்படுத்துவானேன்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உம்முடைய சுதந்தரமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்.

ஏசாயா 63:17

11. ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,

12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

தெசலோனிக்கேயர் 2:11,12

இது போல் விதியின்படியே எல்லாம் நடக்கின்றன எனக் கூறும் பல வசனங்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் ஏராளமாக உள்ளன.

விதியைக் குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது என்று தேடிப்படிக்கும் கிறித்தவப் போதகர்கள் பைபிளில் விதியைப் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளதை அறியவில்லை. பைபிள் காட்டும் வழியை கிறித்தவ மக்களுக்குப் போதிக்கிறார்கள் என்பதை இந்த ஆதாரங்களில் இருந்து அறியலாம்.

அடிமைப்பெண் தன் எஜமானனுக்கு பிள்ளை பெற்றால் சுதந்திரம் அடைவாளா?

சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்விகள் 15/08/2021

உரை பி ஜைனுல் ஆபிதீன்

ரசூலுல்லாஹ் விஷத்தால் பாதிக்க பட்டார்களா- பரிசுப் போட்டி

சமகால நிகழ்வுகளும் வாட்ஸ் அப் கேள்விகளும் 08/08/2021

More Articles …