Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

பைபிளில் இருந்து குர்ஆன் காப்பியடிக்கப்பட்டதா?

கேள்வி

பைபிளுக்குப் பிறகு தான் குர்ஆன் வந்தது. பைபிளில் இருந்து சில வசனங்களை குர்ஆன் காப்பி அடித்துக் கூறியுள்ளது என்று கிறித்தவர்கள் சிலர் கேட்கிறார்கள். இதற்கு நாம் சொல்லும் பதில் என்ன?

பதில்

இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் முன்னுரையில் காலத்தால் முரண்படாதது என்ற உள் தலைப்பில் பின்வருமாறு விளக்கியுள்ளோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்க முடியாது என்று ஒப்புக் கொள்ளும் ஆய்வாளர்கள் யூத, கிறித்தவ சமுதாயமக்களின் வேதங்களிலிருந்து கற்று இவர் கூறுகிறார் எனக் கூறியதுண்டு. இன்றைக்கும் கூடசில கிறித்தவர்கள் இவ்வாறு கூறுவதுண்டு.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே திருக்குர்ஆனின் தரத்தைப் பார்த்து வியந்து யாரோஇவருக்கு சொல்லிக் கொடுத்துள்ளனர் என்று விமர்சனம் செய்தனர்.

இந்த ஆக்கத்தைப் பார்க்கவும்

ஏனெனில் நபிகள் நாயகத்துக்கு முன் வாழ்ந்த ஆதாம், நோவா, மோசே, யோவான், யோபு, தாவீது, ஸாலமோன், இயேசு போன்ற பல்வேறு இறைத்தூதர்கள் பற்றி யூத கிறித்தவ வேதங்கள் கூறுகின்றன. திருக்குர்ஆனும் இவர்களைப் பற்றிப் பேசுவதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முந்தைய வேதங்கள் வழியாக அறிந்து அதைக் கூறுகிறார் எனக் கூறுகின்றனர்.

பல காரணங்களால் இது தவறாகும்.

மேற்கண்ட நன்மக்களின் பெயர்களைத் தான் திருக்குர்ஆன் கூறுகிறதே தவிர யூத, கிறித்தவ வேதங்கள் கூறுவது போல் அவர்களைப் பற்றிக் கூறவில்லை.

மேற்கண்ட நன்மக்கள் குடி, விபச்சாரம், மோசடி போன்ற தீய பழக்க வழக்கங்கள் உடையோராக இருந்தனர் என்று மற்ற வேதங்கள் கூறுவது போல் திருக்குர்ஆன் கூறவில்லை. மாறாக அவர்கள் நன்மக்களாகத் திகழ்ந்தார்கள் என்று கூறுகிறது.

அவர்கள் வாழ்வில் நாம் படிப்பினை பெறத் தேவையான முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே திருக்குர்ஆன் கூறுகிறது. அதுவும் மற்ற வேதங்கள் கூறுவதற்கு எதிராகக் கூறுகிறது.

“இவர் அவரைப் பெற்றார்; அவர் இவரைப் பெற்றார்”என்று யூத, கிறித்தவ வேதங்களில் உள்ளது போல் தலைமுறைப் பட்டியல் ஏதும் திருக்குர்ஆனில் இல்லை.

இவ்வாறிருக்க முந்தைய வேதங்களை முஹம்மது நபியவர்கள் காப்பியடித்து விட்டார்கள் எனக் கருத முடியாது.

யூத, கிறித்தவ வேதங்களில் பெருமளவுக்கு வரலாறுகளும், மிகக் குறைந்த அளவுக்கு மட்டுமே போதனைகளும் உள்ளன. வாழ்வின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அந்த வேதங்களில் எவ்வித வழிகாட்டுதலும் காணப்படவில்லை.

ஆனால், திருக்குர்ஆன் மனிதர்கள் படிப்பினை பெறத் தேவையான சில வரலாற்றுத் துணுக்குகளை மட்டுமே குறிப்பிடுகிறது. மேலும், மனிதன் சந்திக்கின்ற அனைத்துப் பிரச்சனைகளிலும் ஏற்கத்தக்க தீர்வையும் கூறுகிறது. இவை யூத, கிறித்தவ வேதங்களில் கூறப்படாதவை. எனவே, அவ்வேதங்களிலிருந்து திருக்குர்ஆன் காப்பியடிக்கப்பட்டது என்று கூறுவது அடிப்படையில்லாத குற்றச்சாட்டாகும்.

மற்ற சமுதாய மக்களைப் போலவே யூத, கிறித்தவ மக்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அதிக அளவில் நபிகள் நாயகத்தை இறைத்தூதராக ஏற்றனர். தங்கள் வேதங்களில் உள்ளதையே காப்பியடித்துக் கூறும் ஒருவரைத் தங்கள் வழிகாட்டியாக அம்மக்கள் ஏற்றிருக்க மாட்டார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

ஸமுது சமுதாயம் அழிக்கப்பட்டது குறித்து குர்ஆன் முரண்பட்டு பேசுகிறதா?

கேள்வி

ஸமூது சமூகத்தினர் அழிக்கப்பட்ட வரலாற்றை கூறும் குர்ஆன் 7:78 என்ற வசனத்தில் பூகம்பம் என்றும் மற்ற வசனங்களில் இடிமுழக்கம் பெரும் சப்தம் என்று வருகிறது

குர்ஆன் ஒன்றுகொன்று முரண்படுகிறது என்று கிறித்தவர்கள் பரப்புகின்றனர். இது பற்றி விளக்கம் அளியுங்கள்

பதில்

காழ்ப்புணர்வு கொண்டு பார்ப்பதால் முரண்பாடு இல்லாதவை அவர்களுக்கு முரண்பாடாகத் தோன்றியுள்ளது.

ஒரு நேரத்தில் இடி இடித்து புயல் அடித்து பெருமழை பெய்து வெள்ளமும் ஏற்பட்டு பூகம்பமும் ஏற்படுகிறது என்றால் இதில் எந்த ஒன்றைச் சொன்னாலும் அது தவறாக ஆகாது.

பூகம்பம் ஏற்பட்டது என்றாலும் அது உண்மை தான்.

பெருவெள்ளம் ஏற்பட்டது என்று சொன்னாலும் அதுவும் உண்மை தான்.

மழைபெய்தது என்று சொன்னாலும் அதுவும் உண்மை தான்.

ஒவ்வொரு நேரத்தில் ஒன்றைச் சொன்னாலும் அனைத்துமே உண்மைகள் தான்.

பெரும் சப்தமும் ஏற்பட்டு பூகம்பமும் ஏற்பட்டால் இரண்டையும் சொல்லலாம். இரண்டில் ஒன்றைச் சொல்லலாம். எதுவும் தவறில்லை.

பூகம்பம் ஏற்பட்டது என்று ஒரு வசனத்திலும் பூகம்பம் ஏற்படவில்லை என்று வேறு வசனத்திலும் சொன்னால் அது தான் முரண்பாடு. இது போன்ற முரண்பாடுகள் பைபிளில் கணக்கின்றி காணப்படுகின்றன. குரானில் இப்படி எதுவுமே இல்லை

பைபிள் இறைவேதம் அல்ல என்று சொல்லும் நீங்கள் பைபிளில் நபிகள் நாயகம் என ஆதாரம் காட்டுவது ஏன்?

கேள்வி

பைபிள் இறை வேதம் இல்லை என்று கூரி விட்டு பைபிளில் நபிகள் நாயகம் என்பது சரியா ?

பதில்

பைபிள் இறை வேதம் அல்ல என்று நாம் கூறுவது எந்தப் பொருளில் என்பதை நாமே விளக்கியுள்ளோம்.

அதாவது இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்ட வேதத்தில்

சிலதை மறைத்து விட்டனர்.

சிலதை மாற்றி   விட்டனர்.

சிலதை சேர்த்து விட்டனர்.

எவ்வாறு அருளப்பட்டதோ அந்த தூய வடிவில் அவர்களின் வேதம் இல்லை என்பது தான் நமது வாதம்.

பெரும்பாலான இறை வார்த்தைகள் நீக்கப்பட்ட பிறகும் நீக்காமல் விட்டு வைத்துள்ள வசனங்களில் ஒரே கடவுள் கொள்கையைச் சொல்லும் வசனங்களும் நபிகள் நாயகம் குறித்த முன்னறிவிப்புகளும் இருக்க வாய்ப்புண்டு. அது போல் ஏதும் மீதமுள்ளதா என்று தேடிப்பார்த்த போது குர்ஆனுடன் ஒத்துப் போகின்ற விஷயங்களை எடுத்துக் காட்டி வாதிடுவது தவறில்லை.

இப்படி வாதிடுவதால் பைபிளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று நாம் ஒப்புக் கொண்டதாக ஆகாது

மாற்றிய பிறகும் கூட அவர்களையும் அறியாமல் சில உண்மைகள் மிச்சமாக உள்ளன என்பது தான் இதிலிருந்து தெரியும் உண்மையாகும்.

ந்நாய்களுடன் பெண்களை ஒப்பிடலாமா?

கேள்வி

பின் வரும் ஹதீஸில் நபிகளார் பெண்களை நாய்க்கு ஒப்பிடுகின்றார்களா இதற்கு மறுப்பு என்ன ஆயிஷா (ரலி ஏன் அவ்வாறு கேட்டார்கள்

508. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(பெண்கள், நாய்கள், கழுதைகள் தொழுபவருக்குக் குறுக்கே சென்றால் தொழுகை முறிந்து விடும் என்று கூறுவதன் மூலம்) எங்களை நாய்களுக்கும் கழுதைகளுக்கும் சமமாக்கி விட்டீர்களே! நான் கட்டிலில் படுத்திருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் கட்டிலுக்கு நேராக நின்று தொழுவார்கள். அவர்களுக்கு நேராக நின்று தொழுவார்கள். அவர்களுக்கு நேராகக் கால்களை நீட்டுவது எனக்குப் பிடிக்காததால் கட்டிலின் கால்கள் வழியாக நழுவிக் சென்று விடுவேன்.

பதில்

கழுதைகள்,  நாய்கள் பெண்கள் ஆகியோர் தொழுபவருக்கு குறுக்கே சென்றால் தொழுபவரின் தொழுகை முறிந்து விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக சிலர் அறிவிப்பது பற்றி ஆயிஷா ரலி அவர்களிடம் கேட்டபோது மேற்கண்டவாறு கூறுகிறார்கள்.

நபிகள் பெண்களை நாய்க்கு ஒப்பிட்டு இருக்க மாட்டார்கள் என்று ஆயிஷா அவர்கள் மறுக்கிறார்கள். மேலும் நானே குறுக்கே படுத்திருக்கும் போது நபியவர்கள் தொழுதிருக்கிறார்கள். எனவே இது பொய்யான செய்தி என்று காரணத்துடன் மறுக்கிறார்கள்.

இதன் மூலம் நபியவர்கள் அப்படி சொல்லவில்லை என்று தான் ஆயிஷா (ரலி) வாதிடுகின்றனர் என்பது தெரிகின்றது,

கேள்வி

அல்லாஹ் சொல்வது எப்போதும் தவறு ஆகாது என்றால் எதற்காக தவ்ராத், இஞ்சில், குரான் என்று வரிசையாக உருவாக்க வேண்டும்?  ஒரே இறைவேதமாக அருளியிருக்கலாமே?

பதில்

ஒரே மாதிரியான சட்டத்தை எல்லாக் காலத்துக்கும் போட முடியாது. அது அறிவுடமையும் ஆகாது. சந்தர்ப்பம், சூழ்நிலைகளுக்கு ஏற்பவே சட்டங்கள் போடப்பட வேண்டும். அது தான் இறைவனின் அளப்பரிய் அறிவுக்கு ஏற்றதகும்.

இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் நாம் எழுதியதை உங்களுக்கு கூடுதல் விளக்கத்துக்காக கீழே தருகிறோம்.

30. சில வசனங்கள் மாற்றப்பட்டது ஏன்?

2:106, 13:39, 16:101 ஆகிய வசனங்களில் இறைவன் தனது வசனங்களை மாற்றுவான் என்று சொல்லப்படுகிறது.

இறைவன் அருளிய வசனத்தைஅவனே ஏன் மாற்ற வேண்டும்? அவனுக்குத் தான் அனைத்தும் தெரியுமே? மாற்றுவதற்கு அவசியம் ஏற்படாத வகையில் முதலிலேயே சரியாகக் கூறிடலாமே? என்று இவ்வசனங்களை வாசிக்கும் சிலர் நினைக்கலாம்.

இது இறைவனின் அறியாமையைக் குறிக்காது. அவனது அளவற்ற அறிவையே குறிக்கும் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வரலாறுகளிலும், வாக்குக் கொடுப்பதிலும் முன்னர் சொன்னதை மாற்றிக் கொள்ளக் கூடாது.

சட்டங்களைப் போடும் போது இருக்கின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்பத் தான் சட்டம் போட வேண்டும். சூழ்நிலை மாறிய பின் சட்டத்தை மாற்றாவிட்டால் அதுதான் அறியாமையாகும்.

நெருக்கடியான நேரத்தில் அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கின்றன. நெருக்கடி நீங்கியதும் ஊரடங்கை விலக்கிக் கொள்கின்றன. ஏற்கனவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அதையே தொடர்வதும் அறிவுடமையாகாது. அல்லது நெருக்கடியான நேரம் வரும் போது ஊரடங்கு உத்தரவு போடாமல் இருப்பதும் விவேகமாகாது.

ஒரு தாய், இரண்டு வயதுப் பாலகனுக்குச் சில உணவுகளை மறுப்பாள்; சாப்பிடக் கூடாது எனத் தடுப்பாள். அதே குழந்தை 10 வயதை அடையும் போது, முன்பு தடுத்த உணவை உண்ணுமாறு கூறுவாள்.

இவ்வாறு கூறும் நிலை ஏற்படும் என்பது அவளுக்கு ஏற்கனவே தெரியும். இங்கு குழந்தையின் நிலை தான் மாறியதே தவிர தாயின் அறிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரச்சாரத்தைத் துவக்கிய போது மக்காவில் உயிர் வாழ்வதே பெரும் பிரச்சினையாக இருந்தது. இவ்வாறு இருக்கும் போது “திருடினால் கையை வெட்டுங்கள்” எனக் கூற முடியாது. கூறினால் அதற்கு அர்த்தம் இருக்காது. ஆட்சி அதிகாரம் முஸ்லிம்கள் கையில் வந்த பிறகு தான் இந்தச் சட்டத்தைப் போட முடியும். எனவே மாறும் சூழ்நிலைகளுக்கேற்ப சட்டங்கள் வழங்குவது தான் அறிவுடமை.

ஒரு நிகழ்ச்சி 2002ல் நடந்தது எனக் கூறி விட்டு 1967ல் அந்த நிகழ்ச்சி நடந்தது என்று இன்னொரு நாள் கூறக் கூடாது. ஏனெனில் இது வரலாறு. நடந்ததை மாற்ற முடியாது. இத்தகைய மாறுதல் ஏதும் திருக்குர்ஆனில் இல்லை. சில சட்டங்களில் மட்டுமே இத்தகைய நிலை உள்ளது.

இறைவசனங்கள் மாற்றப்படாது என்ற கருத்தைச் சில வசனங்கள் (6:34,6:115, 10:64, 18:27, 48:15) தருவதாகவும் இதற்கு மாற்றமாக மேலே கண்ட வசனங்கள் இருப்பதாகவும் சில கிறித்தவ சபையினர் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர்.

இவர்கள் எடுத்துக் காட்டும் மேலே உள்ள வசனங்கள் வேத வசனங்களை மாற்றுவது பற்றிப் பேசவில்லை. அல்லாஹ் எடுக்கும் முடிவுகள் பற்றியும் அவனது கட்டளைகள் பற்றியும் கூறப்படுகிறது.

ஒரு சமுதாயத்தை அல்லாஹ் அழிக்க நாடி அதற்கான கட்டளையைப் பிறப்பித்து விட்டால் மறுகட்டளை போட்டு அதை யாரும் மாற்றிவிட முடியாது என்ற தனது அதிகாரத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வின் கட்டளையை மாற்றுபவன் இல்லை என்றால் யாராலும் மாற்ற முடியாது என்ற கருத்தும் அதில் உள்ளது. அப்படி மாற்றுவதாக இருந்தாலும் நான் தான் மாற்றுவேன் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.

திருக்குர்ஆன் வசனங்கள் மாற்றப்படுவது பற்றி இவ்வசனங்கள் பேசவில்லை. எனவே எந்த முரண்பாடும் இல்லை.

கடவுளைச் சரியான முறையில் நம்பிவிட்டு பாவங்கள் செய்தால் சொர்க்கம் கிடைக்குமா?

கேள்வி என்னிடம் ஒரு கிறிஸ்துவ நண்பர் கேட்டார்

நான் ஒரே கடவுள் என்பதை ஏற்று கொள்கிறேன்; .இறைவனுக்கு உருவம் இல்லை என்பதையும் ஏற்கிறேன்; . இறைவனின் தூதர் மீதும் நம்பிக்கை கொள்கிறேன்.

ஆனால் நான் விபச்சாரம் செய்வேன்,  குடிப்பேன், தொழ மாட்டேன், நான் சொர்க்கம் செல்வேனா மாட்டேனா

இதற்கு என்ன பதில்

பதில்

இந்த வாதம் சரியா தவறா என்பதை பின் வரும் உதாரணம் மூலம் அவருக்கு நீங்கள் உணர்த்தலாம்.

நான் உங்களை கணவர் என்று ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் தந்தையை மாமனார் என்றும் ஏற்றும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் மற்ற ஆண்களுடனும் விபச்சரம் செய்வேன். நீங்கள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று ஒரு மணைவி கணவனிடம் கூறினால் அவன் அதை ஏற்றுக் கொள்வானா?

அல்லது இவள் கணவனைக் கணவனாகவே ஏற்கவில்லை என்பானா?

நான் இந்தியாவை எனது நாடாக ஏற்றுக் கொள்வேன். அதன் பிரதமரை நான் தலைவராக ஏற்றுக் கொள்வேன். ஆனால் இந்தியாவின் சட்டங்கள் எதற்கும் நான் கட்டுப்பட மாட்டேன். இந்தியாவில் தடுக்கப்பட்டவைகளை செய்வேன். நான் இந்தியாவை எனது தாய் நாடு என்று ஏற்றுக் கொண்டதால் இந்தியா என்னைத் தண்டிக்க கூடாது என்று சொன்னால் அதுசரி என யாரேனும் கூறுவார்களா?

இந்தக் கேள்விக்குள் அவருக்கான பதில் அடங்கியுள்ளது

மர்யம் அவர்களிடம் வந்தவர் ஒரு வானவரா? பல வானவர்களா?

கேள்வி

மர்யம் அவர்களிடம் ஒரு வானவர் வந்ததாக 19:19 வசனம் சொல்கிறது, பல வானவர்கள் வந்ததாக 3:45 வசனம் சொல்கிறது. இந்த முரண்பாடு ஏன்

பதில்

திருக்குர்ஆனில் கிறித்தவர்கள் எழுப்பும் கேள்விகள் இந்த வகையில் தான் அமைந்துள்ளன.

ஒரு நிகழ்ச்சியில் முதல்வரும், இன்னும் பல அமைச்சர்களும் பல கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதைப் பற்றி பேசும் போது

அ. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டார் என்று சொல்லலாம் அதில் பொய் இல்லை.

ஆ. முதல்வரும் அமைச்சர்களும் கலந்து கொண்டார்கள் என்றும் சொல்லலாம். இதுவும் உண்மை தான்.

இ. அமைச்சர்கள் கலந்து கொண்டனர் என்றும் சொல்ல்லாம். அதிலும் பொய் இல்லை.

ஈ. இந்த நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்றும் சொல்லலாம். அதுவும் உண்மையே.

இவை அல்லாமல் இன்னும் மக்கள் கலந்து கொண்டனர் எனவும், காவல் துறையினர் கலந்து கொண்டார்கள் எனவும் உளவுத் துறையினர் கல்ந்து கொண்டார்கள் என்றும் கூறலாம். அனைத்துமே உண்மை தான்

ஒன்றை ஏற்றால் மற்றவை மறுக்கப்படும் என்றால் தான் முரண்பாடு ஏற்படும். இதில் எந்த ஒன்றைச் சொன்னாலும் மற்றவைகளை மறுப்பதாக ஆகாது.

பல வாணவர்கள் வந்து ஒருவர் மட்டும் பேசும் போது அந்த ஒருவர் பேசியதாக கூறினாலும் அதுவும் சரிதான்.

பலரும் பேசினார்கள் என்றாலும் அதுவும் சரிதான். பேசியது ஒருவர் என்றாலும் அனைவரின் சார்பிலும் அவர்கள் பேசியதால் அனைவரும் பேசியதாகத் தான் பொருள்.

பிரதமரைச் சந்திக்க ஐந்து பேர் செல்கிறோம். அதில் ஒருவர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசுவார். இன்னார் பிதரமரிடம் பேசினார் என்றும் இதைச் சொல்லலாம்.

ஐவரும் பேசினார்கள் என்றும் சொல்லலாம்.

இது போல் தான் மேற்கண்ட வசனமும் சொல்கிறது.

இரண்டு உண்மைகளை இரண்டு வகையில் சொல்கிறது என்ற சாதாரன உண்மை தான் இது.

திருக்குரானில் முரண்பாடு உள்ளது என்று கிருத்துவ போதகர்கள் பரப்பும்
02/08/2020 வாட்ஸ் அப் கேள்விபதில்

More Articles …