Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

ஜின் அத்தியாயம் குறித்து கிறித்தவ போதகர்களின் விதண்டாவாதம்

கேள்வி:

குர்ஆனின் அல்-ஜின் சூராவின் ஒரு பகுதியை இங்கு கொடுக்கிறோம் (முஹம்மது ஜான் குர்ஆன் தமிழாக்கம்). இந்த சூராவில் ஜின் பேசியதாக உள்ள வசனங்களை பச்சை வண்ணத்தில் தருகிறோம்.

72:1 நிச்சயமாக, ஜின்களில் சில (திருக்குர்ஆனை) செவிமடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்) நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம் என்று கூறினர், என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக.

72:2 அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது, ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்; அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம் (என்று அந்த ஜின் கூறலாயிற்று).

72:3 மேலும் எங்கள் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானது, அவன் (எவரையும் தன்) மனைவியாகவோ மகனாகவோ எடுத்துக் கொள்ளவில்லை.

72:4 ஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்) அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

72:5 மேலும் மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள் என்று நிச்சயமாக நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.

72:6 ஆனால், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர், இதனால் அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்) மமதையை பெருக்கிவிட்டனர்.

72:7 இன்னும், நிச்சயமாக அவர்களும் நீங்கள் எண்ணியதைப் போலவே, அல்லாஹ் ஒருவரையும் (மறுமையில் உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று எண்ணிக் கொண்டு இருந்தனர்.

72:8 நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம்.

72:9 (முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே கண்பான்.

72:10 அன்றியும், பூமியிலிருப்பவர்களுக்குத் தீங்கு நாடப்பட்டிருக்கிறதா, அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறிய மாட்டோம்.

72:11 மேலும், நிச்சயமாக நம்மில் நல்லோரும் இருக்கின்றனர், அப்படியல்லாதவர்களும் நம்மில் இருக்கின்றனர், நாம் பல்வேறு வழிகளையுடையவர்களாகவும் இருந்தோம்.

72:12 அன்றியும், நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வை இயலாமலாக்க முடியாது என்பதையும், அவனை விட்டு ஓடி (ஒளிந்து) கொள்வதாலும் அவனை (எங்கேயும்) இயலாமலாக்க முடியாதென்பதையும், நாம் அறிந்து கொண்டோம்.

72:13 இன்னும், நிச்சயமாக நாம் நேர்வழியை (குர்ஆனை) செவிமடுத்த போது, நாம் அதன் மீது ஈமான் கொண்டோம். எனவே எவன் தன் இறைவன் மீது ஈமான் கொள்கிறானோ, அவன் இழப்பைப் பற்றியும், அநீதியைப் பற்றியும் பயப்படமாட்டான்.

72:14 இன்னும், நிச்சயமாக, நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர் - எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர்.

72:15 அக்கிரமக்காரர்களோ நரகத்திற்கு எரி விறகாய் விட்டனர் (என்று அந்த ஜின் கூறிற்று).

72:16 (மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது, உறுதியுடன் நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம்.

இந்த அதிகாரத்தில் பதினான்கரை வசனங்களை (1b - 15) ஜின்கள் பேசினார்கள், அதுவும் குர்ஆனின் இலக்கிய நடையிலேயே பேசினார்கள். இந்த பேச்சும் குர்ஆனின் ஒரு பாகமாக உள்ளது. இந்த சூராவில் உள்ள அரபி இலக்கிய நடைக்கும், இதர சூராவில் உள்ள அரபி இலக்கிய நடைக்கும் ஏதாவது வித்தியாசம் உங்களுக்குத் தெரிகிறதா?

சாதிக்

பதில்:

இஸ்லாத்திற்கு ஈடு கொடுக்க இயலாத கிறித்தவ போதகர்கள் பைபிள் குறித்து முஸ்லிம்கள் கேட்கும் எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லத் திராணியற்று குர்ஆனுக்கு எதிராக நாங்களும் கேள்வி கேட்கிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக உளறல்களைக் கேள்விகளாக்கி வருகின்றனர். அத்தகைய கேள்விகளில் ஒன்று தான் நீங்கள் மேலே காண்பது.

கிறித்தவ போதகர்கள் கேட்ட கேள்வியை சாதிக் என்பவர் நம் கவனத்துக்குக் கொண்டு வருகிறாரா? அல்லது வழக்கம் போல் முஸ்லிம் பெயரில் கள்ளக் கிறித்தவக் கூட்டம் செய்யும் விஷமத்தனமா என்று தெரியவில்லை.

இந்தக் கேள்வியைப் பார்த்தவுடன் இவர்கள் எந்த அளவு அறிவீனர்கள் என்பதையும், குர்ஆனுக்கு எதிராக இது போல் உளறத் தான் முடியும் என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த அளவுக்கு மூளை கெட்டவர்களும் இருப்பார்களா என்று கருதும் அளவுக்கு இந்தக் கேள்வி அமைந்துள்ளது.

அரபு இலக்கிய நடை குறித்து கேள்வி எழுப்பினால் தமிழ் மொழிபெயர்ப்பை வைத்து எவராவது கேள்வி கேட்பாரா?

அரபு மொழியில் அதை வெளியிட்டு இரண்டும் ஒரே தரத்தில் உள்ளது என்று அரபு இலக்கிய விதிகளை மேற்கோளாக எடுத்துக் காட்டி கேள்வி கேட்டால் அவரை மூளையுள்ளவராகக் கருதலாம்.

மொழி பெயர்ப்பை வெளியிட்டு அரபு இலக்கிய நடையில் வித்தியாசம் உண்டா என்று கேட்டால் இவரை என்னவென்பது? இந்த மொழி பெயர்ப்பைப் பார்த்து விட்டு அரபு இலக்கியப்படி இது சரி என்று எப்படி விளங்க முடியும்?

குர்ஆனில் மோசே, ஏசு, மற்றும் கடந்த காலத்தில் வாழ்ந்த நல்லவர்கள், கெட்டவர்கள் ஆகியோரின் பேச்சுக்களும் உள்ளன. அவர்களில் யாருக்கும் அரபு மொழி தெரியாது. அவர்கள் தமது மொழியில் கூறியதை இறைவன் அரபு மொழியில் மாற்றிக் கூறுகிறான் என்று அறிவுடைய மக்கள் புரிந்து கொள்வார்கள்.

அது போல் தான் ஜின்கள் தமது மொழி வழக்கில் பேசியதை இறைவன் அரபு மொழிக்கு மாற்றிக் கூறுகிறான். இவ்வாறு மாற்றிக் கூறும் போது இறைவன் தனக்கே உரிய நடையில் தான் கூறுவான்.

இது குர்ஆனுக்கு மட்டும் உள்ளது அல்ல. சாக்ரடீஸ் கூறியதாக அவரது கூற்றை நான் எடுத்துக் காட்டினால் சாக்ரடிஸ் தனது மொழியில் கூறியதை நான் உள்வாங்கி எனது மொழியிலும், எனது மொழி அறிவுக்கு ஏற்ற நடையிலும் தான் நான் கூறுவேன்.

இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் கள்ளக் கிறித்தவர்கள் கேள்வி கேட்டு தங்களின் மடமையை நிரூபித்துக் கொள்கிறார்கள்.

ஒரு ஆங்கில நூலை சாதாரண தமிழறிவு பெற்றவன் மொழி பெயர்ப்பதற்கும் தமிழ் பண்டிதன் மொழி பெயர்ப்பதற்கும் அதிக வித்தியாசம் இருக்கும்.

பண்டிதன் மொழி பெயர்க்கும் போது அந்த மூல நூலின் தரத்தை உயர்வாகக் கருதும் அளவுக்கு சிறப்பு சேர்ப்பான். தமிழ்ப் பண்டிதனாக இல்லாதவன் மொழி பெயர்த்தால் உயர்ந்த தரத்தில் உள்ளதை தன் தரத்துக்கு கீழே இறக்கி மொழி பெயர்ப்பான்.

கள்ளக் கிறித்தவர்கள் பேசும் அற்புதமான அலட்டல் நடையை நாம் அறிவோம். இதை இறைவன் எடுத்துக் காட்ட நினைத்தால் இவர்களைப் போல் வார்த்தைகளை மென்று துப்புவது போல் இல்லாமல் அவனுக்கே உரிய அழகிய நடையில் மாற்றித்தான் கூறுவான்.

14.09.2011. 8:11 AM

இயேசு இறங்கும் போது கிறித்தவர்கள் அனைவரும் அவர் தான் ஈஸா நபி என்று அடையாளம் தெரிந்து கொள்ள முடியுமா?

கேள்வி : என்னுடைய கிறித்தவ நண்பரிடம் ஈஸா நபி (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்படவில்லை. அவரை இறைவன் தன் பால் உயர்த்திக் கொண்டான் என்பதைக் குர்ஆன் ஆதாரத்துடன் காண்பித்தேன். மேலும் ஈஸா நபி அவர்கள் டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரில் இறங்குவார்கள் என்றும் சொன்னேன். இதற்கு இயேசு இறங்கும் போது கிறித்தவர்கள் அனைவரும் அவர் தான் ஈஸா நபி என்று அடையாளம் தெரிந்து கொள்ள முடியுமா? அவரை ஏற்றுக் கொண்ட கிறித்தவ மதம் அப்போது இருக்காதா? அவர் இறங்குவதை உலக மக்கள் அனைவரும் பார்ப்பார்களா? என்றும் கேட்கிறார். என்ன விளக்கம் அளிக்கலாம்?

எஸ்.ஏ. ஜம்ஸாத் அலி, திருப்பத்தூர்

பதில் :

நாம் எந்த யுகத்தில் இருக்கிறோம் என்பதைக் கவனித்தால் இக்கேள்விக்கு நீங்களே பதில் கூற முடியும்.

ஆகாயத்தில் பறக்கும் பறவைகளைக் கூட கண்டுபிடிக்கும் ரேடார் கருவிகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நூற்றுக்கணக்கான செயற்கைக் கோள்கள் விண்ணில் நிறுத்தப்பட்டு பூமியைப் படம் பிடித்து அனுப்பிக் கொண்டே இருக்கின்றன.

இத்தகைய யுகத்தில் ஒரு மனிதர் எவ்விதக் கருவிகளின் துணையுமின்றி பூமியை நோக்கி வருகின்றார் என்றால் அந்த வினாடியே அது உலகுக்குத் தெரிந்து விடும்.

அதிசயமான முறையில் இறங்கும் அவரை நோக்கி உலகத்தின் அனைத்துத் தொலைக்காட்சி கேமராக்களும் திரும்பி விடும். வீட்டிலிருந்தபடியே அவர் இறங்கி வருவதை உலகின் ஒவ்வொரு மனிதனும் காண்பான்.

அதிசயமான முறையில் இறங்கி வருவதே பெரிய சான்றாக இருப்பதால் நான் தான் ஈஸா என்று அவர் கூறினால், அதற்கு உலகத்தில் யாருமே சான்று கேட்காமல் நம்புவார்கள். இறைவனுக்கு மகன் இருக்க முடியாது. நானும் இறைவனின் மகன் அல்ல என்று அவர் கூறும் போது இதை உலகமே ஏற்கும் நிலை உருவாகும்.

முழு உலகும் அவரது தலைமையை ஏற்கும் என்ற நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்பு குறித்து நூறு வருடத்திற்கு முன் வாழ்ந்தவர்கள் இது எப்படி சாத்தியம் என்று நினைக்கலாம். இன்றைக்கு அத்தகைய கேள்விக்கே இடமில்லை.

(இதற்கு முந்தைய இதழ்களை நீங்கள் வாசிக்காதவராக இருந்தால் ஈஸா நபி மரணிக்கவில்லை என்ற தொடர் கட்டுரையில் இதை நாம் நிரூபித்திருப்பதைப் பார்வையிடுக.)

முகம்மது நபி தான் அந்திக் கிறிஸ்துவா 

கேள்வி
பைபளில் உள்ள எதிர் கிறிஸ்து முகம்மது தான் .அது எப்படி என்றால் கிறிஸ்துவிற்கு சமமாக தன்னை உயர்த்தி சொல்லியது தான் என்று கிறித்தவ போதகர்கள் கூறுகிறார்களே இதற்கு என்ன பதில்?

 பதில்

இயேசுவுக்கு எதிரான கொள்கையைச் சொல்பவர் அந்திக் கிறிஸ்து என்று பைபிள் கூறுகிறது.

முகம்மது நபி அவர்கள் இயேசுவுக்கு எதிரான கொள்கையைச் சொல்லவில்லை. இயேசு சொன்ன ஓரிறைக் கொள்கையைத் தான் சொன்னார்கள்.

இயேசுவுக்குப் பின் புதுக் கொள்கையை இயேசுவின் பெயரால் உருவாக்கிய பவுல் சொல்வதை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு கூறுகின்றனர்.

இது பற்றி யோவான் கூறுவது இது தான்:

22. இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக் கிறிஸ்து.

1-யோவான் 2:22

உண்மையில் யோவான் சொல்லும் பிதா சுதன் என்ற கொள்கை தான் இயேசுவுக்கு எதிரான கொள்கை. பவுலும் அவரை ஏற்பவர்களும் தான் அந்திக் கிறிஸ்து எனச் சொல்லப்பட தகுதியானவர்கள்.

நபிகள் நாயகமும், நாங்களும் இயேசு இறைவனின் குமாரன் அல்ல என்று பெருமையுடன் சொல்கிறோம். அதில் எங்களுக்குப் பெருமை தான். ஏனெனில் இயேசு சொன்ன அதே கொள்கையைத் தான் நாங்கள் சொன்னவர்களாக ஆவோம். பவுலுக்குத் தான் நாங்கள் எதிரிகள்.

ஆனால் பவுலைத் தூக்கிப் போட்டு விட்டு இயேசு யாரை எதிரிகள் என்று அடையாளம் காட்டினாரோ அவர்களை மத குருமார்களாக ஆக்கிக் கொண்டுள்ள நீங்கள் தான் இயேசுவின் எதிரிகள்.

இதோ இயேசு தனது எதிரிகளை இனம் காட்டுவதைப் பாருங்கள்

தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காண வேண்டுமென்று செய்கிறார்கள்.; தங்கள் காப்பு நாடாக்களை அகலமாக்கி தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ ரபீ என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள். நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார். நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்;! பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்;! கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார.

மத்தேயு 23:5

மேலே இயேசு சொன்னபடி நடப்பவர்கள் தான் பாதிரிமார்கள். மக்களிடமிருந்து தனித்துக் காட்டும் வகையில் நாடாக்கள் கொண்ட ஆடைக்ளை நீளமான தொங்கலுடன் அணிபவர்களும், பாதர் என்று சொல்லக் கூடாது என்று இயேசு சொல்லி இருந்தும் பாதர் என்று சொல்வதை விரும்பும் பாதிரிகளும், அவ்வாறு அழைப்பவர்களும் இயேசுவின் எதிரிகள் என்பதில் சந்தேகம் இல்லை.

அன்றியும் நீ ஜெபம் பண்ணும் போது மாயக்காரரைப் போலிருக்க வேண்டாம்;. மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்.; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ ஜெபம் பண்ணும் போது உன் அறை வீட்டிற்குள் பிரவேசித்து உன் கதவைப் பூட்டி அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு!; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார் .அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும் போது அஞ்ஞானிகளைப் போல வீண் வாரத்தைகளை அலப்பாதேயுங்கள்!; அவர்கள் அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப் போல நீங்கள் செய்யாதிருங்கள்!; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

மத்தேயு6:5-8

ஜெபம் பண்ணுகிறோம் என்ற பெயரில் கண்னை மூடிக் கொண்டு காட்டுக் கத்தல் போட்டுக் கொண்டு செயற்கையாக உருக்கம் காட்டி கடவுளையும் இயேசுவையும் இறங்ங்ங்ங்குவீ………..ரா…………….க என்று நாடகம் போடுபவர்கள் தான் இயேசுவின் எதிரிகள் என்பது இயேசுவின் வாயாலேயே வெளியாகி விட்ட்து.

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ! மனுஷர் பிரவேசியாதபடி பரலோக ராஜ்யத்தைப் பூட்டிப் போடுகிறீர்கள்;. நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை. பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ! பார்வைக்காக நீண்ட ஜெபம் பண்ணி விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப் போடுகிறீர்கள்;. இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ! ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித் திரிகிறீர்கள். அவன் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

மத்தேயு23:13-15

மதமாற்றம் செய்து ஆள் பிடிப்பதற்காக தொண்டு நிறுவனம் என்ற பெயரில் ஆட்டம் போடுபவர்கள் எல்லாம் இயேசுவுக்கு எதிரிகள் என்று சொல்கின்றன.

உங்கள் கச்சைகளில் பொன்னையாவது வெள்ளியையாவது செம்பையாவது வழிக்காகப் பையையாவது இரண்டு அங்கிகளையாவது பாதரட்சைகளையாவது தடியையாவது தேடி வைக்க வேண்டாம்;! வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.

மத்தேயு10:9,10

ஒவ்வொரு பாதிரியையும் பங்குத் தந்தை என்ற பெயரில் கோடிகளூக்கு அதிபதிகளாக்கி மக்கள் ஓட்டாண்டிகளவும் இருப்பதே இயேசுவுக்கு யார் எதிரி என்பதைக் காட்டவில்லையா?

கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்!; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக் கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்;. உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

மத்தேயு 7:15

குருடரான வழிகாட்டிகளே கொசுயில்லாதபடி வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ!

போஜன பான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்.; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. குருடனான பரிசேயனே! போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ!

வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள். அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும். உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்;. உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ. நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து: எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால் அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப் பழிக்கு உடன்பட்டிருக்க மாட்டோம் என்கிறீர்கள்.

மத்தேயு 23:24-30

அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை;. அக்கிரமச் செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

மத்தேயு7:22- 23

இந்த வன்ங்களை ஒழுங்காக வாசித்து இயேசுவுக்கு எதிரிகளாக ஆக்கும் மதகுருமார் வழியை விட்டும் பவுல் உண்டாக்கிய மார்க்கத்தை விட்டும் விலகி இயெசுவின் மார்க்கத்துக்கு அப்படியே உயிர் கொடுக்கும் இஸ்லாத்தில் சேர்ந்து இயேசுவுக்கு நண்பர்களாகவும் பவுலுக்கு எதிரிகளாகவும் ஆவோம் என்று அழைக்கிறோம்.

இயேசு தன்னை வனங்கச் சொன்னாரா?

கேள்வி

நான் என் நண்பனிடம் திரித்துவம் பற்றி கேட்டேன் அதற்கு அவர் சொன்னார்

Holy father, Holy spirit, Holy Jesus=

Jehovah shamma, jehovah yirae, yeshva!

Jehovah, Jesus, holy ghost moovarum oruvaray!

என்று சொன்னார்.

மூவரும் ஒருவராக இருக்கும் போது ஜீஸஸ் தன்னை வணங்குங்கள் என்று எங்காவது கூறியிருக்கிறாரா? என்று நான் கேட்டேன்.

என்னை கண்டவன் பிதாவை கண்டான்” யோவான் 14:9

நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருப்பதை நம்புங்கள்” யோவான் 14:11

ஆகிய ஆதாரங்களை எடுத்துக் காட்டுகிறார்

இவருக்கு நான் என்ன பதில் கூறுவது???

பதில்

நீங்கள் சரியான தகவலுடன் விவாதிக்க வேண்டும்.

இயேசு இறைமகனா என்ற நூலில் நாம் எடுத்துக் காட்டிய ஒவ்வொரு வாதங்களையும் ஆதாரங்களையும் படித்து அதை எடுத்துக் காட்டி விவாதியுங்கள்.

இயேசு இறைமகனா?

அந்த நண்பர் கேட்டதாக நீங்கள் குறிப்பிட்ட விஷயங்களுக்கும் அதே நூலில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவர்களுக்கு பதில் கூறுங்கள்.

,நபியின் மனைவியர் அனைவருக்கும் எப்படி தாயாவார்கள்?

கேள்வி

புகாரி 3443 ஹதீஸின் படி இறைத் தூதர்கள் ஒரே தந்தையின் பிள்ளைகள் ஆவர். அவர்களின் தாய்மார்கள் பலராவர். அவர்களின் மார்க்கம் ஒன்றே என்பதின் விளக்கம் என்ன?

பைபிளில் இறைவனே எல்லோருக்கும் தந்தை என்ற வசனத்தை கொச்சைப்படுத்த நினைக்கும் இஸ்லாமியர்கள் குர்ஆனில் முகமது அவர்களின் மனைவிகள் முஸ்லிம்கள் அனைவருக்கும் தாய் என்று சொல்லப்பட்டுள்ள வசனத்தை முழுமையாக மறந்து விடுகிறார்கள். ஆனால் இந்த ஹதீஸின் படி அனைத்து இறைத்தூதர்களின் தந்தையார்?

என்று கிறித்தவ போதகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில்?

பதில்

கடவுள் என்பவர் தனித்தவர். அவருக்குப் பெற்றோரும் பிள்ளைகளும் இருக்கக் கூடாது. இது தான் கடவுள் குறித்த சரியான நிலைப்பாடாகும்.

கடவுளுக்குப் பிள்ளைகள் இருக்கக் கூடாது; அது கடவுள் தன்மைக்கு இழுக்கானது எனும்போது இயேசுவையோ, பிற மனிதர்களையோ கடவுளின் குமாரர்கள் என்று சொல்வது எப்படிச் சரியாகும்.?

நாகரீகமுள்ள சமுதாயத்தில் ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் தான் இருக்க முடியும். ஒரு பெண் என் கணவன்மார்களே என்று சொன்னால் அல்லது உலகில் உள்ள எல்லா ஆண்களும் எனக்கு கணவர்கள் என்று சொன்னால் அதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இதை விட மோசமான வார்த்தை தான் கடவுளின் குமாரர்கள் என்ற வார்த்தையும்.

கடவுளுடன் ஒப்பிடும் போது அற்பத்திலும் அற்பமான மனிதனைக் கடவுளின் பிள்ளைகள் என்று சொல்வது கடவுளுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தும். கடவுளின் தகுதியை அது குறைத்து விடும்.

ஆனால் நபிகள் நாயகத்தின் மனைவிமார்களை முஸ்லிம்களின் அன்னையர் என்று சொல்வதை இதனுடன் ஒப்பிடக் கூடாது.

ஏனெனில் அன்னை என்ற சொற்பிரயோகம் பெண்களுக்கு கண்ணியம் சேர்ப்பதாகும். எந்தப் பெண்ணும் தன்னை விட வயது குறைந்த ஆண்களை மகனே என்று கூப்பிடலாம். இப்படி கூப்பிடுவதை உலகில் யாருமே அருவருப்பாகப் பார்க்க மாட்டோம்.

அது போல் தன்னை விட வயது முதிர்ந்த எந்தப் பெண்ணையும் ஒருவன் அம்மா என்று அழைக்கலாம். இதையும் யாரும் இழிவாகக் கருத மாட்டோம். மேடைகளில் பேசும் போது தாய்மார்களே என்று அழைக்கலாம். என் பெண்டாட்டிமார்களே என்று அழைக்க முடியாது.

அந்த அடிப்படையில் நபிகள் நாயகத்தின் மனைவியரை அன்னையர் என்கிறோம். இது மரியாதைக்குரியது தான். கேவலமானது அல்ல.

கடவுளுக்குப் பிள்ளைகள் இருப்பதாக நம்புவது கடவுளைக் கேவலப்படுத்தும் சொல் என்பதால் அது போன்ற சொற்களை மனிதர்களுக்குப் பயன்படுத்தாமல் கடவுளில் அடிமைகள் என்ற சொல்லைப் பயன்படுத்த இஸ்லாம் வழிகாட்டுகிறது.

யகுர்ஆன் அத்தியாங்கள் எண்ணிக்கையில் முரண்பாடு ஏன்

கேள்வி

குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் உண்டு? மொத்தம் 114 என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். ஆனால், முஹம்மதுவின் தோழரும், முஹம்மதுவின் நெருங்கிய வட்டாரங்களில் ஒருவராக இருந்தவரும், மற்றும் மூல குர்ஆனின் கைப்பிரதியை வைத்திருந்தவர்களில் ஒருவருமாகிய “உபை இப்னு கஅப் ” என்பவரிடம் 116 அதிகாரங்கள் (சூராக்கள்) இருந்தன. உஸ்மான் குர்ஆனைத் தொகுப்பதற்கு முன்பு இவரிடம் இரண்டு அதிகாரங்கள் அதிகப்படியாக இருந்தன. அவைகளை அஸ்ஸூயுதி என்பவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு சூராக்களும் குர்ஆனின் முதல் சூராவாகிய அல் பாத்திஹா போலவே ஒரு வேண்டுதல் வடிவில் உள்ளது.

இப்படி கிறித்தவ போதகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில்?

பதில்

நீங்கள் சொல்வது போல் குர்ஆனை எழுதிய சிலர் கூடுதல் குறைவாக எழுதி இருந்தார்கள் என்பது உண்மையே. அதற்கான காரணத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆன் நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் ஒலி வடிவமாக அருளப்பட்டது. அதை பல நபித்தோழர்களும் மனனம் செய்திருந்தார்கள். சிலர் எழுதியும் வைத்து இருந்தார்கள்.

மனிதர்கள் என்ற முறையில் ஓரிருவர் கூடுதல் குறைவாக எழுதி இருந்தால் அனைவரின் எழுத்துக்களையும் மனனத்தில் உள்ளதையும் திரட்டி யார் கூடுதலாக எழுதினார்; குறைவாக எழுதினார் என்று கண்டுபிடிப்பது சிரமமானதல்ல.

இப்னு மஸ்வூது என்ற நபித்தோழர் திருக்குர்ஆனின் அத்தியாயங்கள் 112 என்றார். கடைசி இரு அத்தியாயங்களும் நபிகள் கற்றுத்தந்த பிரார்த்தனை என்று அவர் கருதிக் கொண்டார்.

எல்லா எழுத்தர்களும் அதை குர்ஆனில் எழுதியிருந்ததை வைத்து இவர் தவறாக கருதியது கண்டுபிடிக்கப்பட்டது.

அது போல் நபிகள் கற்றுக் கொடுத்த இரண்டு பிராரத்த்னைகளை குர்ஆன் என்று எண்ணிக் கொண்டு உபை பின் கஃபு எனபார் 116 அத்தியாயம் என்றார். இவர் எழுதியது போல் வேறு ஒரு எழுத்தரும் எழுதவில்லை, மனனம் செய்தவர்களின் மனனத்திலும் இவர் எழுதிக் கொண்ட படி இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் இரண்டு பிரார்த்தனகளை குர்ஆன் என்று தவறாக எண்ணி விட்டார் என்று ஒட்டு மொத்த சமுதாயமும் கண்டு பிடித்து அவரது கருத்து தவறு ஒதுக்கி விட்டனர்.

ஆய்வு செய்து தவறு என்று நிருபிக்கப்பட்டு நிராகரித்த கருத்தை இஸ்லாத்தின் கருத்தாக அறிவுடைய மக்கள் வாதிட மாட்டார்கள்.

116 அத்தியாயம் என்று ஒருவர் சொன்னது சரியான கருத்தாக இருந்தால் குர்ஆனை உயிருக்கும் மேலாக மதித்த அன்றைய முஸ்லிம்கள் அதை நிராகரிப்பதை ஒப்புக் கொண்டு இருக்க மாட்டார்கள்

இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் முன்னுரையில் கீழ்க்கண்டவாறு நாம் விளக்கியுள்ளோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசனங்களை எழுதச் சொல்லும் எல்லா நேரத்திலும் எல்லா எழுத்தர்களும் மதீனாவில் இருந்திருக்க மாட்டார்கள்.சில வசனங்கள் அருளப்படும் போது வெளியூரில் இருந்தவர்கள் தமது ஏடுகளில் அந்த வசனங்களை எழுதியிருக்க மாட்டார்கள். இதனால் ஒவ்வொரு எழுத்தருடைய ஏடுகளிலும் ஏதேனும் சில வசனங்களோ, அத்தியாயங்களோ விடுபட்டிருக்க வாய்ப்பு இருந்தது.

ஒவ்வொரு எழுத்தரும், தம்மிடம் உள்ளதுதான் முழுமையான திருக்குர்ஆன் என்று தவறாக எண்ணும் போது திருக்குர்ஆனில் முரண்பாடு இருப்பது போல் தோன்றும்.

அனைத்து எழுத்தர்களின் அனைத்து ஏடுகளையும் ஒன்றுதிரட்டி, மனனம் செய்த அனைவர் முன்னிலையிலும் சரிபார்த்தால் ஒவ்வொருவரும் எந்தெந்த வசனங்களை அல்லது அத்தியாயங்களை எழுதாமல் விட்டுள்ளார் என்று கண்டறிய இயலும்.

இந்தப் பணியைத் தான் ஸைத் பின் ஸாபித் என்ற நபித்தோழர் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்கள் செய்துமுடித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டிலிருந்த ஏடுகளையும், திருக்குர்ஆன் எழுத்தர்களிடமிருந்த ஏடுகளையும் ஸைத் பின் ஸாபித் (ரலி) திரட்டினார்கள். மனனம் செய்தவர்களை அழைத்து அவர்கள் மனனம் செய்தவற்றையும் எழுத்து வடிவமாக்கினார்கள்.

இவற்றைத் தொகுத்து, மனனம் செய்திருப்பவர்களுடைய மனனத்திற்கு ஏற்ப ஏடுகளைச் சீர்படுத்தினார்கள்.

More Articles …