Sidebar

01
Wed, Jul
சமீபத்திய செய்திகள்

தமிழகத்தில் ஏறக்குறைய எல்லா முஸ்லிம் அமைப்புகளும் திமுகவை ஆதரித்தும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லையே? முஸ்லிம்கள் வாழும் பகுதியிலும் அதிமுக அதிக வாக்குகள் பெற்றுள்ளதே? தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறதே?

ஆதில் சா, மதுரை

பதில்

முஸ்லிம் இயக்கங்களின் கோரிக்கையை இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் அப்படியே ஏற்கவில்லை என்பது உண்மை தான்.

பாஜக பற்றி ஜெயலலிதா வாய் திறக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காகத் தான் நாம் ஆதரவை வாபஸ் பெற்றோம்.

மற்றபடி அவரது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு பெரிய மனக்குறை இல்லை. கலவரங்களின் போதும், குண்டு வெடிப்புகளின் போதும் அவரது நடவடிக்கை பாரபட்சமாக இருக்கவில்லை. கருனாநிதியைப் போல் அவர் அடக்குமுறை செய்யவில்லை. அத்துடன் இட ஒதுக்கீட்டுக்கான ஆணையத்தையும் அமைத்து இருந்தார். இதனால் அவரை ஆதரிக்கும் மனநிலையில் தான் அதிகமான முஸ்லிம்கள் இருந்தனர்.

பாஜகவை எதிர்க்கவில்லை என்ற காரணத்தால் நாம் ஆதரவை வாபஸ் பெற்றவுடன் அவர் பாஜகவை விமர்சிக்க ஆரம்பித்தது முஸ்லிம்களிடம் எடுபட்டது. இதைத் தானே குற்றச்சாட்டாக வைத்தீர்கள். ஜெயலலிதா பாஜகவையும் விமர்சித்து விட்டாரே என்ற அதிமுகவின் பிரச்சாரத்தை முஸ்லிம் மக்கள் நம்பினார்கள். எனவே தான் முஸ்லிம் இயக்கங்களின் கோரிக்கை எடுபடவில்லை. ஆதரவு வாபஸ் என்ற பிறகு அவர் பாஜக பற்றி வாய் திறக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் அவர் பாதி இடங்களில் தோற்று இருப்பார்.

முஸ்லிம்கள் பெருவாரியாக அவருக்கு வாக்களித்துள்ளதால் இட ஒதுக்கீட்டு கோரிக்கையை அவர் சொன்ன படி நிறைவேற்றுவார் என்று வாக்களித்த முஸ்லிம்கள் எதிர்பார்க்கிறார்கள்.

20.05.2014. 4:51 AM

இடஒதுக்கீடு அளித்தால் பாஜகவை ஆதரிக்கலாமா?

கேள்வி பா.ஜ.க. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தால், மற்ற பிச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜகவுக்கு வாக்களிப்போம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிரமுகர் பேட்டியளித்ததும், நிர்வாகத்தின் சார்பில் உடனே அதற்கு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டதும், தவ்ஹீத் ஜமாஅத்தில் முரண்பாடுகள் உள்ளதைக் காட்டுவதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர். இதுபோல் வேறு எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களாவது கூறியிருந்தால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அதை லேசில் விட்டுவிடுவார்களா என்றும் முகநூல்களில் கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் செய்யப்பட்டு வருகின்றன. ஏன் இந்த முரண்பாடு? உங்களுக்கு ஒரு நீதி? மற்றவர்களுக்கு வேறு நீதியா?

எம். அக்ரம் பாஷா, அபுதாபி

பதில்

உங்கள் கேள்வியில் மூன்று விஷயங்கள் உள்ளன.

முதலில் இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலை என்ன என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தால் அவ்வாறு அளிக்கும் கட்சி முஸ்லிம்களுக்கு எவ்வளவு அநீதி இழைத்திருந்தாலும் அதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வாக்களிப்போம் என்ற தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு பாஜகவுக்குப் பொருந்தாது. இது பாஜக அல்லாத கட்சிகளைக் கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நிலைபாடாகும்.

பாஜவைப் பொருத்தவரை சமுதாய உணர்வுள்ள எந்த முஸ்லிமும் இந்த நிலைபாட்டை எடுக்க மாட்டான்.

இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு முக்கியம் என்றாலும், அவர்களின் உயிர், உடமை மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்படுவது அதைவிட முக்கியமானதாகும். பாஜக இடஒதுக்கீடு அளித்தாலும் அதன் மூலம் பயன்பெற முஸ்லிம்கள் நிம்மதியாக வாழமுடியாத நிலையை ஏற்படுத்துவார்கள்.

பல்லாயிரம் முஸ்லிம்களைக் கொன்று குவித்தது,

கொலையாளிகளைப் பாதுகாக்க அதிகாரத்தைப் பயன்படுத்தியது,

பாபர் மஸ்ஜிதை இடித்தது மட்டுமன்றி இன்னும் மூவாயிரம் பள்ளிவாசல்களை இடிப்போம் என்று மிரட்டுவது,

முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதப் பயிற்சி அளிப்பது,

திட்டமிட்டு கலவரங்களை உருவாக்குவது,

அப்பாவி முஸ்லிம்களை என்கவுண்டர் என்ற பெயரில் கொன்று குவிப்பது,

முஸ்லிம்கள் தங்களது மத நம்பிக்கையின்படி நடத்தும் திருமணம் போன்ற விஷயங்களை ஒழிக்க பொது சிவில் சட்டம் என்று கூப்பாடு போடுவது

இப்படி ஏராளமான கொடுமைகளை பாஜகவினர் செய்துள்ளனர்.

முஸ்லிம்கள் வாழ்வதும் வழிபடுவதும் இவர்கள் ஆட்சியில் கேள்விக்குறியாகி விடும்.

எனவே இடஒதுக்கீடு அளிப்பதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்தாலும் தவ்ஹீத் ஜமாஅத் பா.ஜ.க.வை ஆதரிக்காது. முஸ்லிம்களும் ஆதரிக்க மாட்டார்கள். இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாஜக இட ஒதுக்கீடு அளித்தால் எல்லா பிரச்சனைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜகவை ஆதரிப்போம் என்று மேலாண்மைக் குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் பேட்டியில் குறிப்பிட்டது ஜமஅத்துடன் முரண்பாடு கொண்டு சொன்னது அல்ல.

இடஒதுக்கீடுதான் முதன்மையானது. இடஒதுக்கீடு வழங்கினால் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கடந்த காலங்களில் அவர்கள் செய்த அநீதிகளை மறந்துவிட்டு ஆதரிப்போம் என்று தவ்ஹீத் ஜமாஅத் பல சந்தர்ப்பங்களிலும், தீர்மானத்திலும் சொல்லியுள்ளது. இது பா.ஜ.க.வுக்குப் பொருந்தாது என்பதைக் கவனத்தில் கொள்ளாமல், செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது அப்படிச் சொல்லி விட்டார்.

இது தவறு என்று நாம் சுட்டிக் காட்டுவதற்கு முன்பே செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது இப்படிச் சொல்லிவிட்டேன். இவ்வாறு நான் சொல்லியிருக்கக் கூடாது என்று அவரே நம்மிடம் தெரிவித்தார்.

தவ்ஹீத் ஜமாஅத் தனது அறிக்கையில் என்ன தெரிவித்ததோ, அதுதான் அல்தாஃபியின் நிலையுமாகும்.

நான் சொன்னது சரிதான், அதுதான் எனது கருத்து என்று அவர் வாதிட்டால் தான் அது முரண்பாடு என்று கூற முடியும்.

சில கேள்விகளை திடீரென்று எதிர்கொள்ளும் போது இது போன்ற நிலமை சில வேளைகளில் ஏற்பட்டு விடுவதுண்டு.

ஜமாஅத்தில் இந்த விஷயத்தில் இரண்டு கருத்துக்கள் இல்லை. முரண்பாடுகளும் இல்லை என்பதை இரண்டாவதாகப் பதிவு செய்கிறோம்.

இது அவரது தனிப்பட்ட கருத்து என்று மற்ற அரசியல் கட்சிகள் கூறுவது போல் நாம் கூற மாட்டோம்.

ஜமாஅத்தின் நிலைபாட்டுக்கு எதிராக யாருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்க இந்த ஜமாஅத்தில் அனுமதி இல்லை. சொந்த விஷயங்களில் தான் தனிப்பட்ட கருத்து இருக்கலாம்.

இது என் தனிப்பட்ட கருத்து என்று இதன் பின்னர் அல்தாபி சொல்லி இருந்தால் தான் அது முரண்பாடு என்று சொல்ல முடியும். அப்படி சொல்லி இருந்தால் ஜமாஅத் தாட்சண்யமில்லாமல் நடவடிக்கை எடுக்கும். கவனமின்மையால் திடீரென கேள்வி கேட்ட போது தவறுதலாக இப்படிச் சொல்லி விட்டேன் என்பது தான் அல்தாபியின் பதில் என்பதால் ஜமாஅத்தில் முரண்பாடு என்று அறிவுடையோர் கூறமாட்டார்கள்.

வேறு இயக்கத்தின் தலைவர்கள் இப்படிச் சொல்லியிருந்தால், தவ்ஹீத் ஜமாஅத் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளுமா என்ற கேள்வியும் தவறாகும்.

ஒரு இயக்கத்தின் முக்கியப் பிரமுகர் ஒருவர் பாரதூரமான கருத்தைச் சொல்கிறார். அதை அவரும் மறுக்கவில்லை. அவரது இயக்கமும் மறுக்கவில்லை என்றால், அதைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் விமர்சித்துள்ளது.

அல்தாபி இவ்வாறு கருத்து சொன்ன பின் தவ்ஹீத் ஜமாஅத் அதை ஆதரித்து இருந்தால் அப்போது தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்கலாம்.

அல்லது ஜமாஅத் இது பற்றி வாய் திறக்காமல் மவுனம் சாதித்தால் அப்போதும் ஜமாஅத்தை விமர்சிக்கலாம்.

அல்தாபியின் பேட்டி வெளியாகி முகநூல்களில் பலவித விமர்சனங்கள் வந்த போது தான் கூறியது சரிதான் என்று நியாயப்படுத்தி அறிக்கையோ, மின்ன்ஞ்சலோ அல்தாபி அனுப்பி இருந்தால் அப்போதும் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்கலாம்.

அல்தாஃபி அவர்கள் இப்படிக் கூறியவுடன் ரியாதில் பொதுச் செயலாளர் இருக்கும் நிலையில் அங்கிருந்தே அனைவரிடமும் ஆலோசனை பெற்று அங்கிருந்தே ஜமாஅத்தின் கருத்து என்ன என்று அறிக்கை வெளியிட்டார்.

ஜமாஅத்தின் கருத்து இது தான் என்று அந்த அறிக்கை தெளிவாக அறிவித்தது. அல்தாபி சொன்னது ஜமாஅத்தின் கருத்து அல்ல என்ற விஷயமும் அதற்குள் அடங்கி இருந்தது.

அவ்வாறு அறிக்கை வெளியிட்ட பின்னர், ஜமாஅத்தின் கருத்து தவறு, நான் சொன்னதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று அல்தாஃபி சொல்லி இருந்தால் தான் ஏன் அவருக்கு ஒரு நிலை மற்றவருக்கு ஒருநிலையா என்று கேள்வி கேட்கமுடியும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தவ்ஹீத் ஜமாஅத் நடந்து கொண்டது போல் வேறு இயக்கம் நடந்து அதை தவ்ஹீத் ஜமாஅத் விமர்சித்துள்ளதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உதாரணமாக தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்மா அவர்கள் அள்ளிக் கொடுத்ததைப் பார்த்து, தமிழகத்தில் தானே புயல் வராத பகுதிகளில் வசிக்கும் மக்கள் புயல் தமது பகுதிக்கும் வராதா என்று ஏங்குகின்றனர் என்று மமக சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் சொன்னார்.

இது அவரது கருத்து. இதை மமக மற்றும் தமுமுக ஆதரிக்கவில்லை என்று அதன் நிர்வாகிகள் அறிக்கை விட்டிருப்பார்களானால் தவ்ஹீத் ஜமாஅத் அந்த இயக்கத்தினை இந்த விஷயத்தில் விமர்சனம் செய்திருக்காது.

அதுபோல் பேசிய சட்டமன்ற உறுப்பினரும் தான் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது என்று உடனே மறுத்து இருந்தால், அப்போதும் நாம் விமர்சித்து இருக்க மாட்டோம்.

(அனைத்து முஸ்லிம்களின் கடும் கண்டனத்துக்குப் பிறகு பல மாதங்கள் கழித்து ஒரு பொதுக்கூட்டத்தில் தான் கூறியது தவறு என்று மென்மையாக அவர் ஒப்புக் கொண்டார்.)

பெரும்பாலான முஸ்லிம் இயக்கங்களில் இதுதான் நடக்கிறது.

அந்த இயக்கத்தின் முக்கியப் பிரமுகர்கள் சிலை திறந்தாலும், இறந்தவரின் படங்களுக்கு மூத்த தலைவர்கள் மலர் தூவினாலும், பா.ஜ.வு.டன் ஒரே மேடையில் தோன்றினாலும், அந்த இயக்கங்கள் அதை எதிர்க்க முடியாமல் மவுனம் காக்கின்றன.

பா.ஜ.க. தலைவருடன் போஸ் கொடுத்ததை எங்கள் இயக்கம் கண்டிக்கிறது என்று அந்த இயக்கங்களால் சொல்ல முடியவில்லை. சொன்னால் அந்த மூத்த தலைவர் மனஸ்தாபம் அடைவார் என்று மௌனம் சாதிக்கிறார்கள்.

ஏராளமான சம்பவங்கள் மூலம் தெரிந்து இதை தெரிந்து கொள்ளலாம்.

மூத்த தலைவர்களும் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளக் கூடிய மனநிலையில் இல்லை. நிர்வாகிகளுக்கும் அதைத் தட்டிக் கேட்கும் துணிவு இல்லை.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை ஒரு தலைவர் இப்படிக் கூறினால், அது ஜமாஅத்தின் கருத்துக்கு எதிராக இருந்தால், வாய் மூடி இருக்காமல், கருத்து சொன்ன நபரைப் பார்க்காமல், கருத்தை மட்டும் பார்த்து உடனே மறுப்புச் சொல்கிறது.

அதுபோல் யாருடைய கருத்துக்கு எதிராக ஜமாஅத் கருத்துச் சொல்கிறதோ, அவரும் சரியானவராக இருக்கிறார். கவனக்குறைவாக நான் சொன்ன சொற்களால் ஜமாஅத்திற்கு தர்ம சங்கடம் ஏற்பட்டுவிட்டதே என்று சொல்லி அவரும் வருந்துகிறார்.

நான் சொன்ன கருத்துக்கு எதிராக உடனே எப்படி மறுப்பு வெளியிடலாம் என்று அவரும் நினைக்கவில்லை.

அவர் மேலாண்மைக்குழு உறுப்பினராக இருப்பதால் எப்படி எதிர்க்கருத்து சொல்வது என்று நிர்வாகமும் நினைக்கவில்லை.

இது ஆட்களைச் சார்ந்த இயக்கமல்ல. கொள்கை சார்ந்த இயக்கம். மார்க்க விஷயத்தில் கூட பெரிய பெரிய இமாம்கள் சொன்ன கருத்தாக இருந்தாலும், அது தவறு என்றால், அதை விட்டுவிட வேண்டும் என்ற சரியான, உறுதியான அடித்தளத்தில் இந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த வித்தியாசத்தை விளங்கினார்கள் என்றால், இந்தப் பிரச்சனையில் தவ்ஹீத் ஜமாஅத் நடந்து கொண்டதை அவர்கள் பெருமிதத்துடன் பார்ப்பார்களே தவிர குறைகூற மாட்டார்கள்.

எத்தனையோ இயக்கங்களைப் பார்க்கிறோம். அதன் மாவட்ட நிர்வாகிகள் கட்டப்பஞ்சாயத்து செய்தாலோ, மோசடி செய்தாலோ, சமுதாய நலனுக்கு எதிராக நடந்தாலோ, அவர்களை எதிர்த்து கருத்துச் சொல்லவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ தலைமைக்குத் துணிவு இல்லை.

அந்த மாவட்டத்தில் அந்த நபரை நம்பித் தான் இயக்கம் உள்ளதால், நடவடிக்கை எடுத்தால், எல்லோரும் அவருடன் சென்று விடுவார்கள் என்று அஞ்சும் அளவிற்கு கொள்கையற்றவர்களாக உள்ளனர்.

ஆனால் அதிகச் செலவில் நடத்தப்பட்ட திருமணங்களில் கலந்துகொண்ட சின்ன விஷயத்துக்காக மாநில நிர்வாகிகள் மீதே நடவடிக்கை எடுக்கும் ஜமாஅத்தாக தவ்ஹீத் ஜமாஅத் உள்ளது.

இந்த ஜமாஅத்தில் இருக்கும் மக்கள் இதன் தெளிவான கொள்கைக்காகவே இருக்கிறார்கள்.

எனவேதான் தலைமையும் சரியாக உள்ளது. நடவடிக்கைகளுக்கு உட்பட்டவர்களும் சரியாக உள்ளனர்.

நம்மை இந்த விஷயத்தில் விமர்சிப்பவர்கள் இந்த வித்தியாசத்தை விளங்கிக் கொண்டால் மேலும் உயர்வாகத்தான் இந்த ஜமாஅத்தை மதிப்பார்கள்.

ஒரு பேச்சுக்காக நான் சொன்ன கருத்து தான் சரி என்று அல்தாபி வாதிட்டு இருந்தாலோ, அறிக்கை வெளியிட்டு இருந்தாலோ இந்த ஜமாஅத் இவர்களைப் போல் வாய்பொத்தி இருக்காது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.

28.10.2013. 4:29 AM

அம்பலத்திற்கு வந்த மோடியின் பித்தலாட்டம்!

ஒரு வழியாக நரபலி மோடி குறித்து காவிகளும், மீடியாக்களும் கொடுத்த பில்டப்கள் கடந்த 26.09.13 வியாழன் இரவோடு மோடி மாநாடு முடிந்ததோடு முடிவுக்கு வந்தது.

மோடியின் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முப்பதாயிரம் பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்கள்; நாற்பதாயிரம்; ஐம்பதாயிரம் என்று சொல்லிக்கொண்டே போய் கடைசியில் ஒரு லட்சமாகி அது இறுதியில் ஒன்றரை லட்சம் பேரில் வந்து நின்றது.

ஒன்றரை லட்சம் பேர் ரூ10 கட்டணமாகக் கட்டி ஆன்லைன் வாயிலாகப் பதிவு செய்துள்ளார்கள் என்று மோடி மஸ்தான் வேலையை காவிக் கயவர்களோடு சேர்ந்து கொண்டு மீடியாக் கயவர்களும் அரங்கேற்றினர்.

ஆனால் வந்த கூட்டத்தின் அளவு என்ன?

சுமார் 15ஆயிரத்திற்கு நெருக்கமான அளவிலான இருக்கைகளே வாடகைக்கு எடுக்கப்பட்டு அதிலும் அந்த இருக்கைகளும் கூட முழுவதுமாக நிரப்ப வழியில்லாமல் பல இருக்கைகள் காலியானதாக இருந்ததும், அந்த இருக்கைகளையும் மாநாட்டுத் திடலை நிரப்பும் அளவிற்கு போட்டாக வேண்டும் என்ற அடிப்படையில் மிகுந்த இடைவெளிவிட்டு போட்டு, அவைகளுக்கு மத்தியில் பெரிய அளவிலான இடைவெளிவிட்டு மாநாட்டு திடலை இருக்கைகளால் நிரப்ப படுபிரயத்தனம் எடுத்துள்ளது காவிக்கூட்டம் என்பது அந்த நிகழ்ச்சியின் வீடியோ பதிவைக் காணும்போது நன்றாகத் தெரிந்தது.

கூட்டம் கூடியது போல காட்டுவதற்காக எல்லாவித மாயாஜாலங்களையெல்லாம் காட்டுவதற்கு இவர்கள் முயற்சித்துள்ளார்கள் என்ற விஷயம் இதன் மூலம் அம்பலத்திற்கு வந்தது.

அடுத்ததாக கூடிய கூட்டம் குறித்து மீடியாக்கள் காவிக் கயவர்களுக்கு ஆதரவாக ஜால்ரா தட்டினர். ஆரம்பத்தில் இரண்டு லட்சம் பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறியவர்கள் மறுகணமே சில நிமிடத்துளிகளில் நாலரை லட்சம் பேர் கூடியதாக நாக்கூசாமல் புளுகித் தள்ளினர்.

உத்தரகாண்டில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் மக்களை பத்து டாடா சுமோ காரில் போய் மோடி காப்பாற்றியதாக கதை விட்ட இந்தக் கயவர்களுக்கு பத்தாயிரத்தை நாலரை லட்சமாகச் சித்தரிப்பது சின்ன விஷயம் தான்.

ரஜினி காந்த் தனது ரசிகர்களுக்கு வாய்மொழி உத்தரவு போட்டு ரஜினியின் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஆதரவு தெரிவித்தும் பதினைந்தாயிரம் பேரைத் தான் கூட்ட முடிந்தது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரஜினிகாந்த் நிகழ்ச்சி முடிந்ததும் மோடியைச் சந்திக்க திருச்சியில் முகாமிட்டுள்ளார் என்று இவர்கள் பரப்பினார்கள். தனது ரசிகர்கள் கூடினாலே ஐம்பதாயிரம் பேர் வந்திருக்க வேண்டுமே? நம் ரசிகர்கள் கூட நரபலி மோடியை ஏற்கவில்லை என்பதை இந்தக் கூட்டத்தில் இருந்து ரஜினி மதிப்பிட்டதில் இருந்தும் இதை அறியலாம்.

இதனால் தான் திருச்சியில் முகாமிட்டுள்ளதாக இவர்கள் சொன்னபடி ரஜினிகாந்த் மோடியை சந்திக்காமலே நழுவிவிட்டார்.

மேலும் சாதிக்கட்சி தலைவர் பச்சைமுத்து என்ற பாரி வேந்தர் நடத்தும் கல்லூரியில் இருந்து மாணவர்களை அனுப்பியும் பேருந்துகளைக் கொடுத்தும் பதினைந்தாயிரம் பேர் தான் வந்தனர் என்றால் பீஜேபிக்காக நரபலி மோடிக்காக வந்தவர்கள் ஆயிரம் கூட தேற மாட்டார்கள் என்பது உறுதியாகும்.

நாம் அறைகூவலாகவே சொல்கிறோம்.

அந்த இடத்துக்கு நாங்கள் வருகிறோம். தினத்தந்தியும், லோட்டஸ் டிவியும் பாஜகவும் சொன்னது போல் நாலரை லட்சம் சேர்களை போட்டுக் காட்டினால் மோடியே பிரதமராக நாங்களும் ஆதரவு தருகிறோம்.

அவ்வளவு வேண்டாம் ஆன்லைனில் பதிவு செய்த இரண்டரை லட்சம் பேருக்கு இரண்டரை லட்சம் சேர்களைப் போட்டுக் காட்டினால் கூட போதும். நாமும் மோடி பிரதமராக ஆதரவு தெரிவிக்கிறோம்.

 

 

வீடியோ இணைப்பு

அல்லது இந்த நாலரை லட்சம் பேர் கூடிய அதிசய மாநாட்டுக்காக எவ்வளவு செலவு செய்தார்களோ அந்த செலவை அவர்கள் காட்டும் கணக்கின் அடிப்படையில் நாங்கள் தந்து விடுகிறோம்.

தினத்தந்தியும், லோட்டஸ் டிவியும், பாஜகவும் தனியாகவோ கூட்டாகவோ இந்த அறைகூவலை ஏற்கத்தயாரா?

அவ்வளவு வேண்டாம் அதில் பாதியளவு ஒன்னே கால் லட்சம் சேர்களை போட்டுக்காட்டத் தயாரா?

நாம் இப்படி சவால் விடுவதற்கு முன்னர் அந்த இடத்தில் எத்தனை சேர் போட முடியும் என்று மாநாட்டுக்கு மறுநாள் கள ஆய்வு செய்து உறுதி செய்து கொண்டுதான் இந்த சவாலை விடுகிறோம்.

கள ஆய்வு செய்யும் காட்சியை காணுங்கள்.

வீடியோ இணைப்பு

ஒவ்வொரு பிளாக்குக்கும் இடையே ஒரு லாரி போகும் அளவுக்கு இடைவெளி விட்டு பாஜக போட்டது போல் சேர்களைப் போட்டால் ஒரு வரிசைக்கும் மறுவரிசைக்கும் இடையே இன்னொரு வரிசை அளவுக்கு இடைவெளி விட்டால் அதிகபட்சம் முப்பதாயிரம் சேர்களைக் கூட போட முடியாது என்பதுதான் உண்மை.

இந்தப் புளுகர்களுக்கு இதை பகிரங்க அறைகூவலாக சொல்லிக் கொள்கிறோம்.

அம்பலத்திற்கு வந்த மோடியின் பித்தலாட்ட உரை :

இந்த நிகழ்ச்சியில் மோடி பேசிய உரையானது இவர் எவ்வளவு பெரிய கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதி என்பதை தெள்ளத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியது.

தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும் புகழ்ந்த மோடி :

தனது உரையின் துவக்கமாக மோடி சில நிமிடம் தமிழில் உரை நிகழ்த்தினார். அவர் நிகழ்த்திய தமிழ் உரையை ஹெச்.ராஜா என்பவர் தமிழில் மொழிபெயர்த்து(?) கூறினார்.

வாலிப் சிங்கங்களே! என்ற மோடியின் தமிழ் உரையை, வாலிப சிங்கங்களே! என்று தமிழில் மொழிபெயர்த்தார் ஹெச்.ராஜா.

அதைத்தொடர்ந்து தமிழ் நாட்டிற்கும் எனக்கும் நெருங்கிய தொடர்புண்டு. தமிழர்கள் தான் என்னை எனது தொகுதியில் ஜெயிக்க வைத்தனர். தமிழ்ச் சங்க இலக்கியங்கள் என்றால் எனக்கு மிக விருப்பம். தமிழன் போன்று நல்லவர்கள் கிடையாது. தமிழ் மொழி போல மொழி கிடையாது என்று கூறி தமிழ் வெறியைத் தூண்டிவிட்டார் மோடி.

இவருக்கும் தமிழ் மொழிக்கும் எந்த உறவும் கிடையாது. தமிழ் மொழியை இவர் கற்றதும் கிடையாது. பல நாட்கள் உருப்போட்டும் வாலிப சிங்கங்களே என்பதை வாலிப் சிங்கங்களே என்று இவர் சொன்னதில் இருந்து இவருக்கு சுட்டுப் போட்டாலும் தமிழ் வராது என்பதை அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களே விளங்கி இருப்பார்கள்.

போகிற இடங்களில் வசிக்கும் மக்களை ஏமாற்றுவதற்காக இது போல் பேசி ஏமாற்றும் சந்தர்ப்பவாதி நாட்டின் பிரதமரானால் என்ன ஆகும்? நினைத்துப் பார்க்கவே பயமாக உள்ளது.

அதைத் தொடர்ந்து தமிழகத்திலும் கடற்கரை உள்ளது. குஜராத்திலும் கடற்கரை உள்ளது என்று கொஞ்சம் அதிகமாகப் போய் உளறிக் கொட்டினார்.

அதுபோக இங்கே ராஜாஜி அங்கே காந்திஜி. இருவரும் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்று தமிழர்களின் நெஞ்சை நக்குவதாக நினைத்துக் கொண்டு மோடி பேசினார்.

இவர் எத்தகைய நாடக நடிகர் என்பதை அவரது பேச்சு நமக்கு உணர்த்தியது. இந்திய நாட்டின் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்ட ஒரு நபர், அனைத்து மாநிலங்களையும், அனைத்து மொழிகளையும் சம தூரத்தில் வைத்து பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் வந்தால் தமிழைத் தூக்கிப்பிடிப்பதும். கன்னட நாட்டில் கன்னடத்தைத் தூக்கிப் பிடிப்பதும், ஆந்திராவிற்குச் சென்றால் தெலுங்கைத் தூக்கிப்பிடிப்பதுமாக இருந்தால் இவரது நயவஞ்சகத்தனமும், இரட்டை வேடமும் அம்பலத்திற்கு வருகின்றதா இல்லையா?

இதுபோல மற்ற மாநிலங்களில் சென்று அந்த மொழி பேசக்கூடியவர்களை உசுப்பேற்றி விட்டால் மொழி வெறி தூண்டப்படுவதன் காரணமாக நாட்டில் மொழிக் கலவரம் ஏற்பட அது வழி வகுக்குமா இல்லையா?

இத்தகைய காவிக்கயவர் கூட்டம் தான் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு தங்களுக்குத் தேவை என்று ரஜினிகாந்தை தங்களுக்கு ஆதரவாக அழைக்கின்றது.

இவர்களது நாலாந்திர ஐந்தாம் படை வேளைக்கு உதவ அவர் ரொம்பத் தகுதியானவர் தான். காரணம் என்னவென்றால் இதற்கு முன்பாக படையப்பா என்ற ஒரு படத்தில் இவர் ஒரு பாடலுக்கு ஆடும்போது, என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா? என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும், தமிழருக்கும் கொடுப்பது முறையல்லவா? என்று பாடியிருப்பார்.

அதே படத்தை நரசிம்மா என்று தெலுங்கில் டப்பிங் செய்தார்கள். அதிலோ, என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தெலுங்கல்லவா? என் உடல் பொருள் ஆவியை தெலுங்குக்கும், தெலுங்கருக்கும் கொடுப்பது முறையல்லவா? என்று பாடியிருப்பார்.

கன்னடத்திலும் இப்படி பாடியிருப்பார்.

ஒரு துளி வியர்வைக்கு ஒரு தங்கக் காசு என்பது நாலரை லட்சம் பேர் கூடியதாக இவர்கள் சொல்வது போன்ற பொய்க் கணக்குத்தான். ஒரு துளி வியர்வைக்கு ஒரு கோடி தங்கக் காசு என்ற கணக்கை விட அதிகமாகவே தமிழ் ஏமாளிகள் ரஜினிக்கு கொடுத்தனர் என்பது தனி விஷயம்.

இதுதான் இவரது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பது. அதைப் போல மோடியும் தான் செல்லும் மாநிலத்திற்கு தகுந்தாற்போல நாடகமாடும் நாடக நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார்.

மோடி + ரஜினி கூட்டணி உண்மையிலேயே நல்ல நாடகக் கூட்டணிதான்.

அதுபோல இங்கேயும் கடற்கரை, அங்கேயும் கடற்கரை; இங்கே ராஜாஜி அங்கே காந்திஜி என்பது போன்ற டயலாக்குகளெல்லாம் தமிழ் நாட்டில் வேகாது என்பது மோடிக்குத் தெரியவில்லை போலும். மோடியை விட செண்டிமென்ட் டச் பண்ணுவதற்கு கருணாநிதி, ஜெயலலிதா போன்ற வித்துவான்கள் இருப்பது இவருக்குத் தெரியவில்லை.

அண்ணா என்பது மூன்றெழுத்து, அறிவு என்பது மூன்றெழுத்து என்று சொல்லி டயலாக் அடிப்பதற்கு இங்கே நிறைய ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதும் மோடிக்குத் தெரியவில்லை.

காந்தியைச் சுட்டுக்கொன்ற சங்பரிவாரக் கும்பலைச் சேர்ந்த மோடிக்கு காந்தியை பற்றி பேச என்ன அருகதை உள்ளது?

மீனவர்கள் பாதுகாப்பு விஷயத்தில் பொய்யுரைத்த மோடி:

அடுத்ததாக மோடி மீனவர்கள் விஷயத்தைக் கையிலெடுத்தார். இலங்கை இராணுவம் தமிழக மீனவர்களையும், பாகிஸ்தான் இராணுவம் குஜராத் மீனவர்களையும் பிடித்துச் செல்கின்றது. இதற்குக் காரணம் மத்திய அரசுதான் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் வாஜ்பாய் ஆட்சியில் இதுபோன்ற நிலை இல்லை. மீனவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். காங்கிரஸ் அரசு மத்தியில் இருப்பதால் தான் மீனவர்களை அண்டை நாடுகள் பிடித்து வைத்துக் கொள்கின்றது என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார் மோடி.

இந்திய நாட்டின் கடல் எல்லையைத் தாண்டி அடுத்த நாட்டின் கடல் எல்லைக்குள் புகுந்தால் அண்டை நாடு நமது மீனவர்களையும், அண்டை நாட்டு மீனவர்கள் நமது எல்லைக்குள் புகுந்தால் அவர்களை நமது நாட்டினரும் சிறைப்பிடிப்பது வழக்கம். ஆனால் அதற்கும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் தான் காரணம் என்று சொன்னதோடு, மாவீரர்(?) வாஜ்பேய் ஆட்சியில் இப்படி நடந்ததில்லை என்று கதை கட்டுகின்றார் மோடி.

ஆனால் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் இல.கணேசனுடன் நடத்திய விவாதத்தில் மோடி கூட்டத்திற்கு மறுநாள் நடந்த தந்தி டிவியின் நேரடி ஒளிபரப்பில் வாஜ்பேய் ஆட்சியில் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட புள்ளி விபரங்களை எடுத்துக் காட்டினார். வாஜ்பாய் ஆட்சியில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் வாஜ்பாய் ஆட்சி போன பிறகு கங்கிரஸ் ஆட்சி வந்த போதுதான் விடுவிக்கப்பட்டார்கள் என்பதையும் புள்ளி விபரங்களுடன் போட்டு உடைத்தார்.

அதற்கு பதிலளிக்கத் திராணியற்ற இல.கணேசன் வாஜ்பாய் ஆட்சியில் மீனவர்கள் சிறைபிடிக்கப்படவில்லை என்பது மீனவர்களுக்குத் தெரியும் என்று கையாலாகத்தனமான பதிலைக் கூறி அசடு வழிந்தார். காங்கிரஸ் ஆட்சி வரப்போகிறது என்று தெரிந்து கொண்டு இலங்கை அரசு மீனவர்களை சிறைப்பிடித்திருக்கும் என்று இல.கனேசன் கூறியது உச்சகட்ட காமெடியாக இருந்தது. மோடியின் பித்தலாட்ட உரை இல.கணேசனின் வாயாலேயே இந்த விஷயத்திலும் அம்பலமானது.

அடுத்ததாக மோடி தனது உரையில் குறிப்பிட்டது நாட்டின் பாதுகாப்பு மற்றும் தன்மானம் பற்றியது.

மானம் கெட்டவர்கள் தன்மானத்தை பற்றிப் பேசியதுதான் மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது.

ராணுவ வீரர்களின் தலையை பாகிஸ்தான் வீரர்கள் துண்டிப்பது, எல்லை வீரர்களைக் கொன்று குவிப்பது என்று சம்பவங்கள் நடக்கும் போது நமது நாட்டின் பிரதமர் பாகிஸ்தான் பிரதமரோடு பேசுவேன் என்று கூறி சிக்கன் பிரியானி சாப்பிடுகிறார் என்றால் இது எல்லாம் எந்த தையரித்தில் நடக்கிறது.

இந்திய நாட்டில் ராணுவ வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எல்லைக்கும் பாதுகாப்பு இல்லை. மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இப்படி எதற்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு அரசைத் தூக்கி எறிய வேண்டியது நமது கடமையாகும் என்று அடுத்த கோரிக்கையை வைத்துள்ளார் மோடி.

இதில்தான் மோடியின் உச்சகட்ட பித்தலாட்டம் அம்பலத்திற்கு வருகின்றது.

மோடி இந்த உரையில் இரண்டு முக்கியமான கருத்துக்களை முன்வைக்கின்றார்.

1.நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது.

2.அப்படி நாட்டின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியவர்களோடு அமர்ந்து சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறார் பிரதமர். இது சரியா?

இது தான் இந்த கோயபல்ஸ்களின் வாதம். இது எந்த அளவிற்கு அயோக்கியத்தனமான கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத வாதம் என்பதற்கு இந்த சங்பரிவாரக் கும்பல்களே ஆதாரமாகத் திகழ்கின்றன.

நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது என்று பேசுவதற்கு மோடிக்கு என்ன தகுதியுள்ளது? சொந்த நாட்டில் வாழக்கூடிய முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்து சொந்த நாட்டிலேயே இரண்டரை லட்சம் முஸ்லிம்களை அகதிகளாக ஆக்கி மகத்தான(?) பாதுகாப்பு அளித்த பெருமை மோடியையே சாரும். அந்த மாபாதகன் மோடிதான் மக்களது பாதுகாப்பு குறித்து பேசியுள்ளார்.

இவருடைய ஆட்சியில் சொந்த நாட்டில் சொந்த மண்ணில் வாழக்கூடிய மக்களுக்கே பாதுகாப்பில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை எனும் போது பாதுகாப்பைப் பற்றி மோடி பேசலாமா?

மோடியின் இந்த பசப்பு வாதம் புதிதல்ல. ஏற்கனவே இதே வாதத்தை முன்வைத்துத் தான் பாஜக ஆட்சிக்கு வந்தது.

அந்த ஆட்சியில் நாடு எவ்வளவு பாதுகாப்பாக இருந்தது என்பது நாட்டு மக்களுக்கு தெரியாது என்று மோடி நினைத்து விட்டார்.

பாஜகவின் ஆட்சியில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வழங்கப்பட்ட பாதுகாப்பின் லட்சணம் என்ன?

நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்திய பாராளுமன்றத் தாக்குதல்:

பாஜக ஆட்சியின் போதுதான் ஜனநாயகத்தின் சின்னமாகவும், நமது தேசத்தின் அடையாளமாகவும் திகழக்கூடிய பாராளுமன்றத்தை தீவிரவாதிகள் தாக்கினர். இதை விட ஒரு அரசாங்கத்திற்கு கேவலம் என்ன இருக்க முடியும். இதைவிடக் கேவலமான முறையில் எந்த ஒரு அரசாங்கத்தாலும் பாதுகாப்பு வழங்க இயலாது.

கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியவன் 100 ரூபாய் லஞ்சம் வாங்கியவனை மேடை போட்டு விமர்சிப்பதற்கும் மோடியின் இந்த நாலாந்தர பேச்சுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

தீவிரவாதிகளை தீவிரவாதிகளிடத்தில் பத்திரமாக ஒப்படைத்த ஒரே ஆட்சி:

அதுமட்டுமா? பாஜக ஆட்சியின் போதுதான் கடந்த 1999 ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகருக்கு கடத்தப்பட்டது. விமானத்தை விடுவிக்க வேண்டும் என்றால், ஜெய்ஷ் இ முகம்மது தலைவர் மசூத் அஸார் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என விமானத்தைக் கடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர். இதை பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏற்றுக்கொண்டு விமானத்தைக் கடத்திய தீவிரவாதிகளிடம் அவர்கள் விதித்த நிபந்தனையின் அடிப்படையில் இந்தியாவிலிருந்த தீவிரவாதிகளை தீவிரவாதக் கூட்டத்திடமே பத்திரமாக அழைத்துச் சென்று ஒப்படைத்தது. அப்போது பா.ஜ.க. தலைமையிலான அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த்சிங் தலைமையில், தனி விமானத்தில் அந்தத் தீவிரவாதிகளை ஏற்றிச்சென்று ஒப்படைத்துவிட்டு, பயணிகளுடன் நமது விமானத்தை மீட்டு வந்தார்.

இதன் காரணமாக உலக அரங்கில் இந்திய நாடு மிகப்பெரும் கேவலத்தைச் சந்தித்தது. இதை விட பாதுகாப்பு விஷயத்தில் ஒரு கேவலம் வேண்டுமா?. இத்தகைய பாதுகாப்பைத் தான் மோடி மறுபடியும் நமது நாட்டு மக்களுக்கு பா.ஜ.க தலைமையில் அமையும் ஆட்சியின் மூலம் வழங்குவார்கள் என்பதில் நாட்டு மக்களுக்கு சந்தேகம் இல்லை.

இராணுவ வீரர்களின் தலையை அறுத்து முண்டத்தை போட்டுவிட்டுச் சென்ற கொடூரம் :

தற்போது மத்திய அரசின் பாதுகாப்பற்ற தன்மை எந்த அளவிற்கு உள்ளது என்பதற்கு மோடி தனது பேச்சில் ஒரு உதாரணத்தைச் சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்டில் இராணுவ வீரர்களுக்கே பாதுகாப்பில்லை. இராணுவ வீரர்களின் தலையை அறுத்து முண்டத்தை போட்டுவிட்டுச் சென்றுள்ளனர் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள். இது எந்த அளவிற்கு மத்திய அரசு பலவீனமாக உள்ளது என்பதைக் காட்டுகின்றது என்று சொல்லியுள்ளார்.

பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இந்திய இராணுவ வீரர்களின் தலையை அறுத்து முண்டத்தை போட்டுவிட்டுச் செல்வது இப்போது முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியில் நடந்திருக்குமேயானால் மோடி சொல்வதை நியாயம் என்று நம்பலாம். ஆனால் நடப்பு என்ன?

பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இந்திய இராணுவ வீரர்களின் தலையை அறுத்து முண்டத்தை போட்டுவிட்டுச் செல்லும் சேட்டையை முதன் முதலில் பாஜக ஆட்சியின் கடந்த கிபி 2000 ஆம் ஆண்டின் போது தான் ஆரம்பித்து வைத்தார்கள். இந்த உண்மையை வசமாக மறைத்துவிட்டு, ஒன்றும் தெரியாதவர் போல் நல்லபிள்ளை நாடகமாடுகின்றார் மோடி.

பாஜக அரசு அப்போதே ராணுவ நடவடிக்கை எடுத்து இருக்கலாமே? அதை யார் தடுத்தது?

இராணுவத் தளபதி விக்ரம் சிங் இந்த உண்மையை புள்ளிவிபரங்களோடு கடந்த ஜனவரி மாதத்தில் போட்டு உடைத்தார். இதற்கும் பாஜக ஆட்சிதான் வழிகாட்டியுள்ளது எனும் போது காங்கிரஸ் அரசை மோடி குற்றம்சாட்டி தன்னை நல்ல பிள்ளை போல காட்ட முயல்கின்றார்.

இதுதான் பாஜக ஆட்சியில் இராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு கிடைத்த லட்சணம்.

100கிலோ மீட்டர் பரப்பளவை பாகிஸ்தானிடம் இழந்து பா.ஜ.க. தந்த பாதுகாப்பு:

அதோடுமட்டுமல்லாமல் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம் நமது நாட்டை எந்த அளவிற்கு அந்நிய சக்திகளிடமிருந்து பாதுகாத்தது என்பதற்கான ஆதாரம்தான் கார்கில் போர் ஆகும்.

கார்கில் போர் நடந்தபோது மோடி கோமாவில் இருந்தாரா என்று நமக்குத் தெரியவில்லை.

கார்கில் போர் நடக்க காரணம் என்ன? பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷரப் தலைமையிலான பாகிஸ்தான் இராணுவம் கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டர்களுக்கு மேலான இந்தியாவின் எல்லைப் பகுதியான கார்கில் பகுதியை ஆக்கிரமித்தது.

அந்நிய நாட்டுப்படை தங்களது இராணுவ துருப்புகளோடு இந்தியா நாட்டின் பாதுகாப்பு எல்லையைத் தாண்டி 100கிலோமீட்டர் தூரம் கடந்து நமது நாட்டை ஆக்கிரமிப்பதாக இருந்தால் எத்தனை நாட்கள் செலவிட்டிருக்க வேண்டும்? எவ்வளவு முயற்சிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்? இது எதுவுமே பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்குத் அப்போது தெரியவில்லை.

இவ்வளவு ஆக்கிரமிப்பும் நடந்து முடிந்த பிறகு தான் இந்தச் செய்தி தூங்கிக்கொண்டிருந்த பாஜக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த விவரம் தெரிந்த பிறகுதான் கார்கில் போர் நடத்தி இழந்த பகுதிகளை மீட்டெடுத்தார்கள். இதுதான் பா.ஜ.க. ஆட்சி தந்த பாதுகாப்பு. இந்த பாதுகாப்பைத்தான் மோடி தரப்போகிறாரா?

கார்கில் என்பது பாகிஸ்தான் நாட்டில் உள்ளது போலவும் அங்கே போய் வீரதீர சண்டையிட்டு மீட்டு வந்தது போலவும் கார்கில் நாயகன் என்று வாஜ்பேய்க்கு பட்டம் வேறு கொடுத்துக் கொண்டார்கள் நாட்டுபற்று இல்லாத இந்த நயவஞ்சகர்கள்.

ஒரு காவல் நிலையத்தை ரவுடிக் கூட்டம் கைப்பற்றிக் கொள்கிறது. இப்படி கைப்பற்றிக் கொண்ட விபரம் ஆறு மாதமாக மாவட்ட காவல்துறை அதிகாரிக்கோ மாநில காவல்துறை ஆணையருக்கோ மாநில முதல்வருக்கோ தெரியவில்லை. ஆறு மாதம் கழித்து பத்திரிகையில் செய்திகள் வந்த பின்னர் தான் விபரம் தெரிந்து ரவுடிகளை அப்புறப்படுத்தி காவல் நிலையத்தைக் கைப்பற்றினார்கள் என்றால் காவல் ஹீரோ என்று யாரேனும் சொல்வார்களா?

வேறு ஆட்சியில் பறிகொடுத்த கார்கிலை பாஜக ஆட்சி மீட்டு எடுத்தால் கூட இதைப் பாராட்டலாம். பறிகொடுத்ததே பாஜக ஆட்சியின் கையாலாகாத்தனத்தால் தான் எனும் போது இவர்களை நம்பி நாட்டை மீண்டும் ஒப்படைத்தால் பாகிஸ்தான் ராணுவம் டெல்லியில் தனது படைகளைக் குவித்தாலும் ஆறு மாதம் கழித்துத்தான் இவர்கள் அதை அறிந்து கொள்வார்கள். இது போன்ற பாதுகாப்பு தான் நாட்டுக்கு தேவையா?

இத்தகைய கேவலமானதொரு ஆட்சியை வழங்கியவர்கள் நாட்டின் பாதுகாப்பைப் பற்றி பேச என்ன அருகதை உள்ளது?

பாகிஸ்தான் தலைவர்களுடன் சிக்கன் பிரியாணி தின்னலமா?:

அடுத்ததாக மோடி எழுப்பிய கேள்விதான் தங்களுக்கு மானம், ரோஷம், சூடு, சொரணை எதுவுமே இல்லை என்பதை வெளிக்கொணர்ந்து வந்த கேள்வி.

நமது நாட்டு இராணுவ வீரர்களைப் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் தாக்கி வரும் இவ்வேளையில் அந்த நாட்டு தலைவர்களோடு சிக்கன் பிரியாணி சாப்பிடுகின்றார் நமது பிரதமர். நாட்டிற்கு தன்மானம், கௌரவம் முதலில் முக்கியம். தன்மானத்தையும், கௌரவத்தையும் விட்டுவிட்டு பாகிஸ்தான் தலைவர்களோடு சேர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு செய்வதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? என்று நான் கேட்கிறேன் நீங்கள் அனைவரும் ஒருமித்த குரலில் அதற்கு பதில் சொல்லுங்கள் என்று மோடி கேள்வி எழுப்பினார்.

கூடியிருந்த கூட்டத்தில் மோடியின் கேள்விக்கு பலத்த(?) வரவேற்பு. எந்த அளவிற்கு வரவேற்பு(?) என்றால் மொத்தமே இருபது பேர் கூட அதற்கு கரவொலி எழுப்பவில்லை. ஹெச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்து சொன்ன பிறகும் எல்லோருமே ஜடங்களைப்போல அமர்ந்திருந்தினர். மறுபடியும் கேட்கிறேன்; மறுபடியும் சொல்லுங்கள் என்று மோடி கேட்க, அப்போதும் அந்த 20பேர்தான் கரவொலி(?) எழுப்பினார்கள். மீண்டும் கேட்கிறேன் என்று மோடி மீண்டும் கேட்க, முதலில் கத்திய 20நபர் கூட கடைசியில் கரகோஷம் எழுப்பாமல் மோடியின் முகத்தில் கரி பூசினார்கள். கடைசியாக மோடி இவ்வாறு கேட்கும் போது முன்வரிசையில் அமந்திருந்த மூவர் குஷன் மெத்தையில் மல்லாக்க தலையைப் பின்புறமாக தொங்கவிட்டு படுத்துக் கிடந்தனர்.

(இதற்கு ஆதாரமாக வீடியோ காட்சிகள் நம்மிடம் உள்ளன)

அந்த அளவிற்கு மோடியின் இந்தப் பேச்சிற்கு பலத்த(?) வரவேற்பு. வந்த அனைவரும் கூலிப்படையினர் தான். கொடுத்த காசுக்காக வந்திருக்கின்றார்கள். வாங்கிய காசுக்குக்கூட சரியாகக் கூவவில்லை என்பது அங்கே வெட்ட வெளிச்சமானது.

இந்த பலத்த(?) கரகோஷத்திற்குப் பிறகு மோடி சொன்னது தான் காமெடியிலும் காமெடி. பிரதமர் அவர்களே! இந்தக் கருத்தை நான் சொல்லவில்லை; மக்கள் சொல்கின்றார்கள் என்று மோடி நாக்கூசாமல் புளுகினார். திரண்டிருந்த மக்களில் 20 பேர் கூட மோடியின் இந்தக் கருத்தை ஆமோதிக்கவில்லை. மேடையில் அமர்ந்திருந்தவர்கள் கூட அதை ஏற்கவில்லை எனும்போது மோடி தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை அங்கு நிரூபித்தார்.

பாகிஸ்தான் தலைவர்களுடன் மன்மோகன் சிங் தற்போது சிக்கன் பிரியாணி உண்பதாக குற்றச்சாட்டு வைக்கின்றாரே மோடி. இவரது பா.ஜ.க.வின் ஆட்சியில் நடந்தது என்ன என்பதை மோடி ஒப்பிட்டு பார்க்க வேண்டுமா இல்லையா?

பாகிஸ்தான் வீரர்கள் நமது நாட்டின் இராணுவ வீரர்களைக் கொன்று குவிக்கும் நிலையில் அவர்களோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது நாட்டின் தன்மானத்திற்கும், கௌரவத்திற்கும் இழுக்கு என்றால் கார்கில் பகுதியை ஆக்கிரமிப்பதில் தலைமையேற்று நடத்திய முஷரப் அதிபராக இருந்தபோது, கார்கில் போரில் பல இந்திய இராணுவ வீரர்கள் பலியாவதற்கு காரணமாக இருந்த முஷரபை இந்தியாவிற்கு அழைத்து அவரோடு வாஜ்பேயியும், அத்வானியும் கை குலுக்கினார்களே! அது மானமுள்ள செயலா? அல்லது மானம் கெட்ட செயலா?

மோடிக்கு வெட்கம் வேண்டாமா?

அத்தோடு மட்டுமல்லாமல், முஷரபிற்கு தலைநகர் டெல்லியில் வைத்து இந்திய இராணுவ வீரர்கள் இராணுவ மரியாதையுடன் கூடிய அணிவகுப்பு நடத்தி பாஜக ஆட்சியில் பிரதமர் வரவேற்பு வழங்கினாரே! இது மானமுள்ள செயலா? மானங்கெட்ட செயலா?

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீபுடன் இணைந்து டாட்டா காட்டிக்கொண்டு சிரித்துக் கொண்டு போஸ் கொடுத்து பாகிஸ்தானிற்கு பஸ் விட்டாரே வாஜ்பேய். இதுதான் மோடியின் பார்வையில் தன்மானமுள்ள, நாட்டின் சுய கௌரவத்தைக் காக்கக்கூடிய லட்சணமா என்பதை மோடியும், சங்பரிவாரக்கூட்டமும் மறைக்க முயன்றாலும் மக்கள் தெளிவாக இதை நினைவில் வைத்துத்தான் உள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமரோடு மன்மோகன் சிங் சிக்கன் பிரியாணி உண்டது போல, பாகிஸ்தான் தலைவர்களோடு சேர்ந்து வாஜ்பேயும் வெஜிடேபிள் பிரியாணி சாப்பிட்டுள்ளார் என்பதை மோடி மறந்துவிட்டாரா! அல்லது அவரது தன்மானம்(?) அதை மறைந்துவிட்டதோ தெரியவில்லை.

அது மட்டும் இவ்வளவு தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு பஸ் விட்டதும் பாஜக ஆட்சிதான்.

உலக நடப்பு அறியாத மோடி:

இது குறித்து குறிப்பிடும்போது மோடி சில நாட்டுத் தலைவர்கள் குறித்து உதாரணத்தைக் கூறினார். தனது நாட்டை உளவுபார்த்த ஒருவனுக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்திற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா ரஷ்யாவில் கால் வைக்கவில்லை என்று மோடி யாரோ விவரமில்லாமல் தவறாக எழுதிக் கொடுத்ததை உளறிக் கொட்டினார்.

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதிதான் ஒபாமா ரஷ்யாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டார். 20நாட்களுக்கு முன்பு நடந்த உலக நிகழ்வு கூட தெரியாத இந்த கூழ்முட்டையைத் தான் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் என்று அறிவித்து பிரதமர் பதவியையே அசிங்கப்படுத்தி வருகின்றனர் காவிகள்.

அது மட்டுமின்றி தமிழக மக்களின் காதுகளில் பூ சுற்றுவதாக எண்ணிக் கொண்டு உப்பு சத்தியாக்கிரகம் வ.உ.சி தலைமையில் தமிழகத்தில் நடந்தது. அவ்வளவு பெருமைக்குரிய மாநிலம் தமிழகம் என்றார்.

வ.உ.சி உப்பு சத்தியாக்கிரகத்தை எதிர்த்தவர் என்ற சாதாரண பொது அறிவு கூட மோடிக்கு இல்லை.

வ.உ.சி தலைமையில் தான் உப்பு சத்தியாக்கிரகம் நடந்தது என்று வாயில் வந்ததை உளறிக் கொட்டும் அறிவிலி பொய்யன் நாட்டின் பிரதமராகலாமா?

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் இந்தியப் பிரதமரை கிராமத்துப் பெண்ணோடு ஒப்பிட்டு பேசியதாக டெல்லிக் கூட்டத்தில் புளுகி மாட்டிக் கொண்டார். அப்படி நவாஸ் ஷரீப் பேசவேயில்லை என்று மறுநாளே அம்பலமாகிப் போனது.

பேசுவதெல்லாம் பொய். சுய ஆய்வோ சுய சிந்தனையோ சிறிதும் இல்லாமல் எவனோ எழுதிக் கொடுக்கும் பொய்களைப் பரப்ப ஒரு பிரதமர் தேவையா?

நீரோ மன்னன் ஹீரோவாக முயற்சிக்கலாமா?:

நாடே தீப்பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததாக ஒரு சம்பவம் கூறுவார்கள். மோடியை நினைக்கும் போது அந்த நீரோ மன்னன் ஞாபகம்தான் நமக்கு வருகின்றது.

குஜராத்தில் வெள்ளப் பெருக்கெடுத்து மக்கள் அவதிக்குள்ளாகி வரும் வேளையில் அங்கு போய் மீட்பு பணியைப் பார்க்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர் பதவி வெறி பிடித்து திருச்சியில் வந்து படம் காட்டுவது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைத் தான் ஞாபகப்படுத்துகின்றது.

உத்தரகாண்டில் வெள்ளம் ஏற்பட்ட போது பத்து காரில் போய் 15 ஆயிரம் மக்களை மீட்டதாகப் புளுகியவர் சொந்த மாநிலத்தில் மக்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உள்ள போது திருச்சியிலும் சென்னையிலும் கூட்டம் நடத்திக் கொண்டிருப்பவரிடம் நாட்டை ஒப்படைத்தால் என்னவாகும்?

பணத்திற்கு விலைபோன புலனாய்வு(?) பத்திரிக்கைகள்:

மோடி விஷயத்தில் கேடித்தனம் செய்தது மோடி மட்டுமல்ல. நமது தமிழகத்து மீடியாக்களும் தான். ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி மோடிக்கு கூட்டம் சேர்ப்பதற்காக வாங்கிய காசுக்கு மேலாக கூவினர். அதிலும் குறிப்பாக புலனாய்வு இதழ்கள் நடத்திய புலனாய்வு லட்சணங்கள் மோடி விஷயத்தில் அம்பலத்திற்கு வந்தன.

இரண்டு பக்கத்திற்கு இந்தப் புலனாய்வு வார இதழ்களுக்கு விளம்பரம் கொடுத்து விட்டால் போதும், வரலாறு காணாத கூட்டம்! திணறியது திருச்சி! பா.ஜ.விற்கு திருப்புமுனை தந்த திருச்சி என்று வாங்கிய காசுக்கு ஏற்றாற்போல கதை எழுத ஆரம்பித்து விடுவார்கள். அதே வேலையைத்தான் மோடி விஷயத்திலும் செய்தார்கள்.

இவர்கள் தாங்கள் வாங்கிய காசுக்கு ஏற்றாற்போல தொழில் செய்யும் எழுத்து விபச்சாரிகள் தான் என்பதை நிரூபித்தனர். இவர்கள் இந்தத் தொழில் செய்வதற்கு வேறு ஏதாவது தொழில் செய்து பிழைப்பை நடத்தலாம் என்று நடுநிலையாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

வாங்கிய காசுக்கு கூவிய தினமணி:

தினமணி நாளிதழ் திருச்சி மாநாடு நடப்பதற்கு முன்பாகவே மோடியைப் புகழும் விதத்தில் ஒரு கார்ட்டூனை வெளியிட்டது.

பிரியாணி கிடையாது;

கைப்பணம் கிடையாது;

சரக்கு கிடையாது;

ஆளுக்கு ரூ10 டிக்கட் வாங்கி ஒன்றரை லட்சம் பேர் மோடி பேச்சைக் கேட்கப்போறாங்களாம். இவர் பிரதமர் ஆவதற்கு முன்னாடியே நாடு கெட்டுப்போயிருச்சு என்று மோடியைப் புகழும் விதத்தில் அந்த கார்ட்டூனை வெளியிட்டிருந்தது தினமணி நாளிதழ்.

மாநாடு நடந்து முடிந்து, அந்த மாநாட்டில் ஆனலைனில் பதிவு செய்த ஒன்றரை லட்சம் பேர் வந்து கலந்து கொண்டு, மாநாட்டிற்கு வந்த யாருமே பா.ஜ.க.வினரிடத்தில் பிரியாணி பொட்டலம் வாங்காமல், சரக்கு வாங்கி அடிக்காமல், கைப்பணம் பெறாமல் தியாகம் செய்து வந்திருந்தால் இவர்கள் சொல்வதில் உண்மை இருக்கும் என்று நம்பலாம்.

ஆனால் மாநாடு நடப்பதற்கு முன்பே பிரியாணி, கைப்பணம், சரக்கு வழங்கப்படவில்லை. மாநாட்டிற்கு வரக்கூடிய யாருமே இவைகளை வாங்காமல் மாநாட்டிற்கு வருகின்றார்கள் என்று தினமணி அவிழ்த்துவிட்டது தார்ப்பாயில் வடிகட்டிய பொய் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

வந்திருந்த அனைவரும் மப்பில் மிதந்தார்கள் என்பதற்கு மோடி ஆக்ரோஷமாக மக்களை நோக்கி கேள்வி எழுப்ப அனைவரும் வேறு உலகத்தில் இருந்ததும், ஜடமாகி கிடந்ததும் சிறந்த ஆதாரம்.

காந்திக்கு முடிவு கட்டிய காவி கயவர்கள்:

காங்கிரஸைக் கலைத்து அதன் மூலம் காங்கிரஸிற்கு முடிவு கட்ட வேண்டும்

என்று காந்தி சொன்னதாக மோடி தனது உரையில் குறிப்பிட்டார். ஆனால் அதற்கு முன்பாகத்தான் காந்திக்கே சமாதி கட்டி, காந்திக்கு முடிவு கட்டியவர்கள்தான் இந்தக் காவிக்கயவர்கள் என்பதை மோடி வசமாக மறைத்துவிட்டார்.

மீடியாக்கள் அனைத்தும் மகுடி வாசித்தும் பிசுபிசுத்த மாநாடு:

சங்பரிவாரக் கும்பல்களின் சதி வேலை அனைத்தும் திருச்சி மாநாட்டில் முறியடிக்கப்பட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

அனைத்து மீடியாக்களும் மோடிக்கு ஆதரவாகத்தான் தங்களது விளம்பரங்களையும், செய்திகளையும் வாசித்தன. இவர்கள் கொடுத்த பில்டப்புகள் கொஞ்ச நெஞ்சமல்ல. தினத்தந்தி என்ற நாளிதழ் சார்பாக நடத்தப்பட்டு வரும் தந்தி டிவியும் இதற்கு ஆதரவாக களமிறங்கியது. ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களை வைத்து கூட்டம் காட்டிவிடலாம் என்றும் அவர்கள் போட்ட சதி வேலை அனைத்தும் பிசுபிசுத்துப் போனது.

இவர்கள் கொடுத்த பில்டப்புகளைப் பார்க்கும் போது ஒட்டுமொத்த தமிழகமும் திருச்சியில் தான் குழுமியிருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த மீடியாக்களின் சதிவேலைகளை மக்கள் நம்பத் தயாரில்லை என்பதையும், மோடி என்பவனை மக்கள் தூரமாகத்தான் தள்ளி வைத்துள்ளார்கள் என்பதும் திருச்சி மாநாட்டின் வாயிலாக வெட்ட வெளிச்சமானது.

இந்த நரபலி மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததன் காரணமாக பா.ஜ.க. ஏற்கனவே பெற்ற இடங்களை விட குறைவான இடங்களைப் பெற்று மண்ணைக் கவ்வ உள்ளது என்பது வல்ல இறைவனின் நாட்டப்படி நடக்கும். இன்ஷா அல்லாஹ்

இது தினமலர் ஸ்டைல் :

இது போன்று தான் ஊர், பெயர் ஆகியவற்றை கற்பனையாக போட்டு தினமலர் நாளிதழ் பொய்களை எழுதுகிறது. கீழ்க்கண்ட கருத்துக்களும் தினமலர் நாளிதழை பின்பற்றி எழுதப்பட்டது.

மாநாட்டிற்கு வந்திருந்தோர் கருத்துக்கள்:

சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை:

மாநாட்டிற்கு ஏதோ பெருமளவில் கூட்டம் கூடும் என்று வந்திருந்தேன். ஆனால் மொத்தம் 10ஆயிரம் பேர் கூட தேர மாட்டார்கள். கூட்டம் மிக மிகக் குறைவு. இந்தக்கூட்டத்தைப் போல ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை நான் கண்டதே இல்லை என்று மோடி சொன்ன போது சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை.

- திருச்சி பொன்மலை நகர் மாரிமுத்து

நான் ஆன்லைன் வாயிலாக எனது பெயரைப் பதிவு செய்தேன். நானே கிட்டத்தட்ட 50 பெயர்களைப் பதிவு செய்தேன். அனைத்தையும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனலைனில் பதிவு செய்ததாக எனக்கு மாநாட்டிற்கு முந்தைய நாளில் வந்த எண் 10,530. அப்போது தான் எனக்கு விளங்கியது மொத்தமே இதுவரை 10ஆயிரம் பேர் தான் பதிவு செய்துள்ளார்கள் என்று. அதிலும் என்னைப்போன்று எத்தனை பேர் 50 தடவை பதிவு செய்தார்களோ! தெரியவில்லை. அதற்கு ஏற்றாற்போலத்தான் கூட்டமும் இருந்தது.

- தெட்சிணா மூர்த்தி, கரூர்

மாநாட்டில் கூட்டம் எவ்வளவு உள்ளது என்பதைப் பார்ப்பதற்காக காவி துண்டு போட்டுக் கொண்டு சென்றிருந்தேன். வந்திருந்தவர்களின் வாயிலிருந்து பெருவாரியாக டாஸ்மாக் வாடை நாறியது. பாதிப்பேர் சரக்கு கேஸ்கள் என்பது தெரிந்தது.

- சுகுமாரன், மதுரை

கொடுத்த பில்டப்புகளுக்கும், மாநாட்டில் கூடிய கூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை. மாநாடு மொத்தத்தில் ஊத்திக்கிச்சு. பா.ஜ.க.வும் ஊத்திக்கொள்ளும்.

- ராஜாராம், நாமக்கல்

03.10.2013. 2:47 AM

மோடிக்கு ஆதரவாக மகுடி ஊதும் ஜால்ராக்கள்!

மோடிதான் அடுத்த பிரதமர்; இந்தியா முழுவதும் மோடி அலை வீசுகின்றது. மோடிக்கு ஆதரவு ஊற்றெடுத்து பெருகி ஓடிக்கொண்டிருக்கின்றது என்று அநேக பில்டப்புகளை கொடுத்து ஊடகங்கள் செய்யும் அட்டூழியங்கள்தான் தற்போது அதிக பக்கங்களை ஆக்கிரமிக்கும் செய்தியாக உள்ளது.

கருத்துக் கணிப்பில் மோடிதான் முன்னணியில் உள்ளார் என்று கூறி கருத்து திணிப்பை இப்போதிருந்தே மீடியாக்கள் செய்ய ஆரம்பித்து விட்டனர். மோடி என்ற நரமாமிசப் பிரியரை பிரதமராக்காமல் ஓயமாட்டோம் என்று மீடியாக்கள் உறுதிமொழி ஏற்றதுபோல அவைகளின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.

அரியானாவில் மோடி உரையாற்றக்கூடிய நிகழ்ச்சியை தமிழ்நாட்டிலுள்ள தந்தி டிவி நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடிய அளவிற்கு மோடிக்கு ஆதரவாக மகுடி ஊதி வருகின்றனர் நமது மீடியாக்கள்.

திருச்சியில் பா.ஜ.க. சார்பாக நடைபெறவுள்ள மாநாட்டில் மோடி உரை நிகழ்த்த உள்ளார். அந்த மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் குவிய உள்ளார்கள் என்று இவர்கள் காட்டும் பில்டப்புகள் எல்லை கடந்து செல்கின்றன.

மோடிக்கு மிரட்டல் உள்ளதால் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தேவை; அவர் குண்டு துளைக்காத மேடையில் நின்று உரையாற்றப் போகின்றார். அவருக்கு ரஜினி ஆதரவு தரப்போகின்றார்; இதற்கென தனியாக பாடல் ரிங்டோன்களை பா.ஜ.க. அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து தனியாக பிரச்சார சிடிக்கள் வெளியிடப்பட்டுள்ளன; சாமானியர்கள்; தொழிலாளர்கள்; தொழில் அதிபர்கள் என அனைத்து தரப்பு மக்களுடைய ஆதரவும் மோடிக்குத்தான் என்று இவர்கள் மோடியை புகழ்ந்து தள்ளி எழுதுவதைக் காணும் போது தமிழகத்தையும் குஜராத்தாக மாற்றாமல் ஓய மாட்டார்கள் போலும் என்ற சந்தேகம் நமக்கு எழும்புகின்றது.

குஜராத் போன்று ஒட்டுமொத்த இந்தியாவையும் மாற்றுவதுதான் இவர்களுக்கு விருப்பமாம். ஆம்! குஜராத்தில் எப்படி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை மோடி கருவறுத்து இரத்த ஆறு ஓட்டினாரோ அதுபோல இந்தியா முழுவதும் இரத்த ஆறு ஓடவிடவேண்டும் என காவிக்கரை படிந்த மீடியாக்கள் எதிர்பார்க்கின்றனர் போலும்.

மோடி கலந்து கொண்டு உரையாற்றவுள்ள திருச்சி மாநாட்டிற்கு வருகை தருவதற்காக ஒரு லட்சம் பார்வையாளர்கள் ஆனலைன் வாயிலாக தங்களது பெயர்களை 10ரூபாய் பணம் கட்டி பதிவு செய்துள்ளனர் என்று கதையளந்தது தான் இதில் உச்சகட்ட ஜால்ராவாக இருந்தது.

1லட்சம பேர் அளவிற்கு ஆனலைன் வாயிலாக இவர்களது மாநாட்டிற்கு வருகை தர பதிவு செய்யக்கூடிய அளவிற்கா இவர்களது தொண்டர்கள் கணினியுடனும், இணையதளத்துடனும் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். அந்த அளவிற்கா அனைத்து விஷயங்களையும் இணையதளத்தில் அப்டேட்டாக இவர்கள் வைத்துள்ளார்கள் என்று ஆச்சர்யப்பட்டுப்போய் அவர்களது இணையதளத்தை விசிட் செய்தோம்.

பிஜேபியின் தமிழக இணையதளத்தில் நிகழ்ச்சிகள் என்ற பகுதியில் அவர்களது அன்றாட நிகழ்ச்சிகள் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. அதில் கடைசியாக அப்டேட் செய்யப்பட்ட நிகழ்ச்சியை பார்த்தால் காரித்துப்பி விடுவீர்கள்.

ஆம்! கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி மின்வெட்டைக் கண்டித்து மாணவர்களிடம் கையெழுத்து வாங்கிய செய்திதான் கடைசியாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

அதாவது கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் ஆண்டுகளுக்கு முன்பாக அப்டேட் செய்யப்பட்டதுதான் இவர்களது லேட்டஸ்ட் செய்தியாம்.

இந்த லட்சணத்தில் தான் இவர்களது இணையதள அப்டேட் இருக்கின்றது என்றால் இத்தகைய சூரப்புலிகள் தான் ஆன்லைன் வாயிலாக ஒரு லட்சம் பேர்களை பதிவு செய்துள்ளார்களாம். கேட்பதற்கே மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது.

இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களைத் தான் ஒன்றுமில்லாத விஷயங்களைக் கூறி, பொய் செய்திகளைப் புனைந்து மிகப்பெரிய சாதனை மன்னர்களைப் போல காட்ட முயல்கின்றனர். இதிலிருந்த இந்த மீடியாக்களின் கோர புத்தி தெளிவாகின்றது.

மோடியை கதாநாயகனாகச் சித்தரிக்கும் இதே வேலையில் அந்த நரபலி நாயகன் செய்த மிருக வெறிச்செயல்களை, இரத்தம் குடித்த கொடூரத்தை வசதியாக மறைத்து இந்த காட்டுமிராண்டியை மனித நேய விரும்பியைப்போல காட்டி மனித நேயத்தை குழிதோண்டி புதைக்கும் வேலையையும் இந்த மீடியாக்கள் செய்து வருகின்றனர்.

இவற்றையெல்லாம் காணும்போது இதற்கு முன்பு வாஜ்பேய் ஆட்சிக்காலத்தில் இந்தியா ஒளிர்கின்றது என்று சொல்லி காட்டப்பட்ட பில்டப்புகள் தான் நமக்கு ஞாபகத்திற்கு வருகின்றன.

இந்தியா ஒளிர்கின்றது; நாடு முழுவதும் வாஜ்பேயி அலை வீசுகின்றது. வாஜ்பேயிதான் அடுத்த பிரதமர். இவரைப் போல ஒரு சாது கிடையாது; இவர்தான் உலக அளவில் இந்தியாவைத் தூக்கி நிறுத்தினார் என்றெல்லாம் சொல்லி தேர்தல் பிரச்சாரம் செய்தனர். கடைசியில் வாஜ்பேயி மண்ணைக் கவ்வினார். பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது. அது போலத்தான் இவர்கள் மோடிக்கு கொடுக்கும் பில்டப்புகளும் இறைவனின் அருளால் புஷ்வாணமாகிப் போகவுள்ளது என்பதை தற்போதைக்கு சொல்லி வைக்கின்றோம்.

23.09.2013. 2:44 AM

பாஜக அல்லாத ஆட்சிகளில் கலவரம் நடக்கவில்லையா

கேள்வி - குஜராத்தில் மோடி நடத்திய மிருக வெறியாட்டத்தைப் பற்றி பேசுவோர் காங்கிரஸ் ஆட்சியிலும் இன்னபிற மாநிலக் கட்சிகளின் ஆட்சியிலும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதைப் பற்றி ஏன் பேசுவதில்லை?

கலவரங்கள் எல்லா ஆட்சியிலும் தான் நடக்கிறது. எல்லா கலவரங்களிலும் முஸ்லிம்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தினமலர் உள்ளிட்ட நாளிதழ்கள் கேள்வி எழுப்புகின்றனவே? இந்தக் கேள்வி நியாயமானது தானா?

சொல்லின் செல்வன், அதிராம்பட்டிணம்

பதில் - குஜராத்தில் மட்டுமின்றி இன்னும் பல மாநிலங்களிலும் கலவரங்கள் நடந்துள்ளன என்பது உண்மை. காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகளின் ஆட்சியிலும் கலவரங்கள் நடந்துள்ளன என்பதும் உண்மை. சில கலவரங்களில் குஜராத்தை விட அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் உண்மைதான்.

ஆனால் குஜராத் வன்முறைக்கும் இன்னபிற மாநிலங்களில் நடந்த வன்முறைக்கும் இடையே உள்ள மிகப் பெரிய வித்தியாசத்தை சங்பரிவாரமும் அதன் சார்பு ஊடகங்களும் இருட்டடிப்பு செய்கின்றன.

மற்ற மாநிலங்களில் நடந்த கலவரங்களின் போது மாநில அரசின் கையாலாகாத்தனம் காரணமாக இருக்கும்.

மாநில முதலமைச்சரும், அமைச்சர்களும் போலீஸ் உயர் அதிகாரிகளும் நேரடியாகத் திட்டமிட்டு நடத்தி இருக்க மாட்டார்கள்.

பெரும்பான்மை பயங்கரவாதிகள் கலவரத்தில் ஈடுபடும்போது அதைத் தடுக்கத் தவறிய குற்றத்தைத்தான் அவர்கள் செய்தனர்.

ஆனால் குஜராத்தில் மோடிதான் கலவரத்தை நடத்தியவர். அவரது அமைச்சர்கள்தான் முன்னின்று நடத்தினார்கள். காவல் நிலையத்தில்தான் முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டன.

பிற ஆட்சியில் பிற மாநிலங்களில் நடந்த கலவரத்தின்போது 2,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்றால் அந்த மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்திருந்தால் 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருப்பார்கள்.

குஜராத் கலவரத்தின்போது மோடி அல்லாத வேறு யாராவது முதல்வராக இருந்திருந்தால் அப்போது கொல்லப்பட்டவர்களில் கால்வாசி மக்கள் கூட கொல்லப்பட்டு இருக்க மாட்டார்கள்.

மோடியின் ஆட்சியில் அமைச்சராக இருந்த மாயா கோத்னானி கலவரத்தை நடத்தி முஸ்லிம்களைக் கொன்று குவித்ததற்காக 28 ஆண்கள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

உபியில் கலவரம் செய்வதற்காக மோடியால் அனுப்பி வைக்கப்பட்ட மோடியின் ஆட்சியில் அமைச்சராக இருந்த அமித்ஷா என்ற கொடியவனுக்கு கலவரத்தில் சம்மந்தம் உண்டு என்று நிரூபிக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளான்.

காவல்துறை அதிகாரிகளும் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் உள்ளனர்.

மற்ற கலவரங்களுக்கும் மோடி நிகழ்த்திய கலவரத்திற்கும் இதுதான் பெரிய வேறுபாடு.  இதைத் திட்டமிட்டு ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன.

மேலும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிற மாநில அரசுகள் இழப்பீடு அளித்தன. இடிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் அரசுத் செலவில் புணர்நிர்மானம் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால் பயங்கரவாதி மோடியோ இதைக்கூட செய்ய முடியாது என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.

மற்ற கலவரங்கள் ஆள்வோரின் திறமையின்மையால் நடந்தன.

ஆனால் குஜராத் கலவரம் மோடியின் மதவெறித் திமிரால் திறமையாகத் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.

நடக்கும் கலவரத்தைக் கட்டுப்படுத்துவதில் ஒரு அரசின் திறமையின்மையும், அரசே கலவரத்தை முன்னின்று நடத்துவதும் சமமாகுமா?

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்து மற்ற மாநில அரசுகள் தாமதமாக நீதி வழங்கினார்கள்.

ஆனால் கலவரக்கார்களை தப்பிக்க வைக்க எல்லா அயோக்கியத்தன்ங்களையும் செய்தவர் பயங்கரவாதி மோடி. நாட்டின் உச்ச நீதிமன்றம் தலையிட்டிருக்கா விட்டால் கலவரத்தை நிகழ்த்தியவர்கள் அனைவரும் தப்பித்து இருப்பார்கள். இந்த வித்தியாசம் தினமணிக்கும் தினமலருக்கும் தினத்தந்திக்கும் நன்றாக தெரியும். ஆனாலும் அவர்களின் மதவெறி இந்த உண்மையை மறைக்கச் சொல்கிறது.

ஒரு ஊரில் காவல் நிலையம் இருந்தும் திருட்டுக்கள் நடக்கின்றன. 100 கோடி ரூபாய் அளவுக்கு திருட்டு நடந்துள்ளதாகத் தெரிகிறது என்று வைத்துக் கொள்வோம்.

இன்னொரு ஊரில் 10 கோடி அளவுக்குத்தான் திருட்டு நடந்துள்ளது. ஆனால் இந்த பத்து கோடி திருட்டையும் காவல்துறையினரே செய்துள்ளார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

இரண்டும் சமமானதா? பத்து கோடியைவிட நூறு கோடி பெரிது என்று மனசாட்சியுள்ளவர்கள் பேசுவார்களா?

ஒன்று சமூக விரோதிகளின் திருட்டு. இன்னொன்று காவல்துறையே நடத்திய திருட்டு என்று வேறுபடுத்தி பேச மாட்டார்களா? இவர்களைப் போலீஸ் வேலைக்கே வைக்கக்கூடாது என்று சொல்ல மாட்டார்களா?

மோடி செய்தது இரண்டாவது வகையைச் சேர்ந்ததாகும்.

தினத்தந்தியும், தினமலரும் தினமணியும் என்னதான் திசை திருப்பினாலும் மக்கள் தெளிவாக உள்ளனர். நடுநிலையான இந்துக்கள் மோடி என்ற பயங்கரவாதியைப் பிரதமராக ஒருக்காலும் ஏற்க மாட்டார்கள் என்று நாம் நம்புகிறோம்.

23.09.2013. 2:31 AM

கிரிமினல்கள ஆதிக்கத்தை நீதிமன்றத் தீர்ப்பு மாற்றுமா?

கேள்வி

குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது கிரிமினல்களின் ஆதிக்கத்தைக் குறைக்குமா?

பதில்

உச்ச நீதிமன்றம் இரண்டு தீர்ப்புகள் வழங்கியுள்ளது. அதில் ஒரு தீர்ப்பை நாம் வரவேற்கலாம். இன்னொரு தீர்ப்பு நியாயமற்றதாக உள்ளது. அதை நாம் வரவேற்க முடியாது.

ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் உடனே அவர் பதவி இழக்க வேண்டும் என்ற தீர்ப்பை நாம் வரவேற்க முடியும். இது குறித்து தனி கட்டுரை இடம் பெற்றுள்ளது.

ஆனால் விசாரணைக் கைதிகளாக உள்ளவர்கள் தேர்தலில் ஓட்டுப் போட முடியாது என்றும். ஓட்டுப் போட உரிமை இல்லாதவர்கள் போட்டியிடக் கூடாது என்றும் அளிக்கப்பட்ட தீர்ப்பை நாம் வரவேற்க முடியாது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 4 மற்றும் 5-ன் படி வாக்களிக்கத் தகுதி பெற்ற ஒருவர் தான் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதி படைத்தவர்கள் என்கிறது. அதே மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 62(5) பிரிவின்படி தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்களும், விசாரணைக் கைதிகளும் தேர்தலில் ஓட்டுப்போட முடியாது. எனவே வாக்களிக்கும் தகுதியை இழந்த நபர் தேர்தலில் போட்டியிட தகுதி கிடையாது என்ற சட்டத்தின் அடிப்படையில் விசாரணைக் கைதிகளாக சிறையில் இருப்பவர்களும், போலீஸ் காவலில் இருக்கும் விசாரணைக் கைதிகளும் தேர்தலில் போட்டியிட முடியாது என்று நீதிபதிகள் பட்நாயக், முகோபாதியா கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு முற்றிலும் தவறாகும்.

இது கிரிமினல்களை ஒழிப்பதற்குப் பதிலாக அப்பாவிகளை கிரிமினல்களாக ஆக்கவே உதவும்.

போலீசார் எத்தனையோ அப்பாவி மக்களைக் கைது செய்து சிறையில் தள்ளுகின்றனர். அவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு நீண்ட காலம் விசாரணைக் கைதிகளாக அடைத்து வைக்கப்படுன்றனர். பல வருடங்கள் சிறைவாசம் முடிந்த பின் இவர்கள் நிரபராதிகள் என்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. இவர்களைத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று தீர்ப்பளித்தால் இது மாபெரும் அநீதி என்று ஏன் இந்த நீதிபதிகளுக்குத் தோன்றவில்லை?

தேர்தல் நெருங்கும் சமயத்தில் எதிர்க்கட்சிகள் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு என பல வழக்குகளைப் போட்டு நீதிமன்றக் காவலில் அரசாங்கத்தால் வைக்க முடியும். அவர்களை இதன் காரணமாக போட்டியிடாமல் தடுப்பது எந்த வகையில் நியாயம்? ஒருவர் கிரிமினலா இல்லையா என்பதை நீதிமன்றங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். போலீசார் முடிவு செய்யக் கூடாது என்று ஏன் இந்த நீதிபதிகளுக்குத் தோன்றவில்லை?

விசாரணைக் கைதிகள் ஓட்டுப் போட முடியாது என்று சட்டம் உள்ளதால் ஓட்டுப் போடாதவர்கள் எப்படி தேர்தலில் போட்டி இடலாம் என்று நீதிபதிகள் கேட்பது அவர்களின் சிந்தனைக் கோளாறுக்கு ஆதாரமாக உள்ளது. விசாரணைக் கைதிகள் ஓட்டுப் போட முடியாது என்ற சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி அதைத் தான் நீதிமன்றம் தடுத்து இருக்க வேண்டும்.

நீதிமன்றங்கள் குற்றவாளி என்று முடிவு சொல்வதற்கு முன்னால் அரசாங்கம் குற்றவாளி என்று தீர்மானிக்கும் வகையில் இந்தச் சட்டம் உள்ளதால் விசாரணைக் கைதிகள் ஓட்டும் போடலாம். போட்டியும் இடலாம் என்று தீர்ப்பளிப்பதுதான் அரசியல் சட்டத்துக்கு நெருக்கமானதாக இருக்கும்.

இல்லாவிட்டால் ஒரு அரசாங்கம் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் விசாரணக் கைதியாக்கி தேர்தலில் ஓட்டுப் போடுவதைத் தடுக்க முடியும். அதைக் காரணம் காட்டி அவர் தேர்தலில் போட்டியிடுவதையும் தடுக்க முடியும். இந்த அநியாயத்தை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிராக உள்ளது என்று காரணம் சொல்லி அந்தச் சட்டத்தை திருத்தச் சொல்லும் நீதிமன்றம் அதே காரணத்தை இந்த விஷயத்தில் கருத்தில் கொள்ளவில்லை.

சட்டப்படி ஒருவன் குற்றவாளி என்று அறிவிக்கப்படும் முன் அவன் நிரபராதி என்பது தான் உலகம் முழுவதும் உள்ள நீதியாகும். நீதிமன்றங்கள் விசாரணை செய்து குற்றவாளி என்று அறிவிக்காமல் இருக்கும் போது அவன் குற்றவாளி என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கூறினால் அதைத் தான் திருத்த வேண்டும்.

விசாரணைக் கைதிகள் உண்மையில் குற்றவாளிகள் அல்லர். எனவே அவர்களின் ஓட்டுரிமையைப் பறிக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் செல்லாது என்று தீர்ப்பளிப்பது தான் சரியானதாக இருக்கும். முரண்பாடு இல்லாத தீர்ப்பாக இருக்க முடியும்.

இரு தீர்ப்புகளுக்கும் இரு வேறு அளவுகோலைப் பயன்படுத்தி அப்பாவிகளைக் கிரிமினல்களாக ஆக்கும் இந்தத் தீர்ப்பு கட்டாயம் மாற்றப்பட வேண்டும்.

13.07.2013. 15:40 PM

புதிய தலைமுறை நிகழ்ச்சி தடை ஏன்?

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தலாக் குறித்து ஒளிபரப்பாக இருந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்ட நேரத்தில் ஒளிபரப்பாகவில்லை. இதற்கு முஸ்லிம் இயக்கங்களின் மிரட்டலே காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். விஜய் டிவியில் பர்தா குறித்த நிகழ்ச்சியை தவ்ஹீத் ஜமாஅத் தடுத்ததால் இதிலும் தவ்ஹீத் ஜமாஅத்தைத் தொடர்பு படுத்தி சிலர் பேசுகின்றனர். இது உண்மையா?

மசூது, கடையநல்லூர்.

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை எதை எதிர்ப்பதாக இருந்தாலும் அதை நேருக்கு நேராகத் தான் செய்யும். கொல்லைப்புறமாக எதையும் செய்யாது. தவ்ஹீத் ஜமாஅத் இதை எதிர்க்கிறது என்று வெளிப்படையாக அறிவித்து விட்டுத் தான் தனது எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யும்.

விஸ்வரூபம் திரைப்படத்தை நாம் எதிர்த்தோம். வெளிப்படையாக அறிவித்து விட்டுத் தான் எதிர்த்தோம்.

மனுஷபுத்திரன் என்ற அறிவிலி ஆதாரமில்லாமல் உளறிய போதும் நேருக்கு நேராகத்தான் அவரை எதிர்த்தோம்.

கருணாநிதி அந்தப் பொய்யை வாந்தி எடுத்த போதும் அவரையும் நேருக்கு நேராகத் தான் எதிர்த்தோம்.

படித்தும் படிக்காத பதர் சயீத் உளறிய போதும் அதையும் நேருக்கு நேராகத் தான் எதிர்த்தோம்.

இவர்கள் இஸ்லாத்துக்கு எதிராக உளறிக்கொட்டிய போது எங்களுடன் விவாதம் செய்து உங்கள் கருத்தை நிரூபிக்கத் தயாரா என்று நேரடியாக அவர்களுக்கே கடிதம் எழுதினோம்.

விளம்பரத்துக்காக எதையாவது எழுதும் அறிவுஜீவிகள் எனும் விஷக்கிருமிகள் ஓட்டம் பிடித்தார்களே தவிர தாங்கள் சொன்னதை நிரூபிக்கத் தயாராக இல்லை.

மனுசபுத்திரன், கருனாநிதி, நக்கீரன், பதர்சயீத் உள்ளிட்ட யாரும் இஸ்லாத்துக்கு எதிராக எடுத்து வைத்த வாதங்களை நிரூபிக்கத் திராணியற்றவர்களாகவும், கோழைகளாகவும், இஸ்லாம் பற்றி அறிவீனர்களாகவும் தான் உள்ளனர் என்பது இதன் மூலம் நிரூபணமானது.

தலாக் குறித்து இப்போதும் யாராவது தவறான வாதங்களை வைத்தால் அதைத் தவறு என்று நிரூபிக்கும் திராணியும், துணிவும், தெளிவும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு இருக்கும் போது கொல்லைப்புறமாக மிரட்டல் விடும் அவசியம் இல்லை.

தலாக் குறித்த ஒரு நிகழ்ச்சி புதிய தலைமுறையில் ஒளிபரப்ப உள்ளதாக புதிய தலைமுறை நிர்வாகம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளரைத் தொடர்பு கொண்டு பீஜே அவர்களின் கருத்தையும் நாங்கள் அறிய வேண்டும் என்று கேட்டனர்.

என்னிடம் பொதுச் செயலாளர் சொன்ன போது நானும் அதை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கும் நமக்கும் வசதியான புதன்கிழமை காலை பத்து மணிக்கு பேட்டி எடுப்பதாக முடிவு செய்யப்பட்டது.

குறித்த நாளில் நான் புதிய தலைமுறை படக்குழுவினரை எதிர்பார்த்து காத்து இருந்தேன். ஆனால் அவர்கள் வரவில்லை. திடீரென்று இன்னொரு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் சென்று விட்டதாக நமக்குச் சொல்லப்பட்டது.

புதிய தலைமுறையில் செய்தியாளர்களுக்கும், படக்குழுவினருக்கும் பஞ்சம் இல்லை. நானறிந்த வரையில் குறித்த நேரத்தை அவர்கள் மீற மாட்டார்கள் என்பதால் வேறு ஏதோ காரணத்தால் நம்மைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

இதன் பின்னர் ஏன் நிறுத்தினார்கள் என்று நமக்குத் தெரியவில்லை.

முக்கிய இயக்கத்தின் சார்பில் மிரட்டினார்களா?

மொட்டை மிரட்டல் வந்ததா?

நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது இதை ஒளிபரப்பினால் நீதிமன்ற அவமதிப்பாகி விடுமோ என்று கருதி இதை நிறுத்தினார்களா?

அல்லது அவர்களாகவே ஏதோ காரணத்துக்காக நிறுத்தினார்களா?

என்று தெரியவில்லை.

அதைப் புதிய தலைமுறை சொன்னால் தான் நமக்குத் தெரியும். அப்படியில்லாமல் ஊகமாக எதையும் நாம் சொல்ல முடியாது.

ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சி இப்படி எந்தக் குற்றச்சாட்டையும் சொல்லாதபோது அதில் முகம் காட்டியவர்கள் தங்கள் முகம் தெரியாமல் போய்விட்டதே என்பதற்காக மக்களை உசுப்பி விடுகிறார்கள்.

பர்தா பற்றி விஜய் டிவியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியை தவ்ஹீத் ஜமாஅத் தடுத்து நிறுத்தியது உண்மை தான். இது உலகத்துக்கே தெரிந்த உண்மை தான். இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை.

மறைமுகமாக விஜய் டிவிக்கு நாம் எந்த மிரட்டலும் விடவில்லை. நமது லட்டர் பேடில் விஜய் டிவிக்குக் கடிதம் எழுதி இந்த நிகழ்ச்சி கிறுக்குத்தனமானது. வாதங்கள் அடிப்படையில் அமையவில்லை. பர்தா அணிந்த பெண்ணை நடிக்க வைத்து முடிவில் பர்தாவைக் கழற்றி வீசிச் செல்வது போல் தயாரிக்கப்பட்டுள்ள நாடகமாக இது உள்ளது.

பர்தா? சரியா இல்லையா என்பதைப் பற்றி கோபிநாத்தோ வேறு யாருமோ முஸ்லிம் அறிஞர்களுடன் விவாதிக்கட்டும். அதை நாம் வரவேற்போம்.

ஒரு பெண்ணை நடிக்க வைத்து பர்தாவைக் கழற்றச் சொல்லி காட்டுவது என்றால் இது அறிவுப்பூர்வமானது அல்ல. கண்டிப்பாக அதைத் தயாரித்தவரின் விஷமத்தனம் தான் காரணம் என்பதைத் தகுந்த காரணங்களுடன் விஜய் டிவி நிர்வாகத்துக்கு விளக்கினோம்.

ஒளிந்து கொண்டு மிரட்டல் எதுவும் விடவில்லை.

உதாரணமாக நிர்வாணமாக மனிதன் நடமாடலாமா என்று ஒரு நிகழ்ச்சியை அந்த தொலைக்காட்சி ஏற்பாடு செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். (விஜய் டிவி அப்படி ஒரு நிகழ்ச்சி தயாரித்தாலும் ஆச்சர்யம் இல்லை.) அதில் நிர்வாணம் தான் சரி என்று காட்டி அதில் கலந்து கொண்டு ஆடை அணிந்த மனுஷ(?) புத்திரன் என்பவரை எல்லா ஆடையையும் அவிழ்த்துப் போட்டு விட்டு ஓடுவது போல் காட்டினால் அது விவாதம் என்ற வகையில் சேருமா?

பர்தா பற்றிய நிகழ்ச்சி அது போல் இருந்ததால் தான் விஜய் டிவியின் அயோக்கியத்தனத்தை நேருக்கு நேராக எதிர்கொண்டோம்.

விஜய் டிவி நிர்வாகமும் அதைப் பார்த்து விட்டு அது விஷமத்தனமாக தயாரிக்கப்பட்டதை அறிந்து தயாரித்தவரையும் கண்டித்து அதை நிறுத்தியது.

எனவே தவ்ஹீத் ஜமாஅத் எதைச் செய்தாலும் சொந்தப் பெயரில் நேருக்கு நேராகத் தான் செய்யும். முதுகெலும்பில்லாமல் செயல்படாது.

புதிய தலைமுறையில் தலாக் என்ற நிகழ்ச்சி நிறுத்தப்பட்டற்கு தவ்ஹீத் ஜமாஅத் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணம் இல்லை.

ஆனால் அந்த நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் சார்பில் பேசிய சிலர் வரும் ஆனால் வராது என்ற வகையில் பேசி இருமுகம் காட்டியுள்ளதாக ஊடக நண்பர்கள் சிலர் வருத்தப்பட்டு நம்மிடம் சொன்னார்கள்.

தலாக் என்பது தவறானது என்று அவர்கள் கருதினால் தவறு என்று சொல்ல வேண்டும். சரி என்று கருதினால் அதற்கேற்ப வாதிட வேண்டும்.

அப்படி இல்லாமல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தின் எதிரிகளையும் இரு சேர திருப்திப்படுத்தும் வகையில் பேசுவதைச் சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே ஊடக நண்பர்கள் சொன்னது நமக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை.

அது ஒளிபரப்பப்பட்டால் தான் இது உண்மையா என்று தெரியும்.

30.06.2013. 10:31 AM

விபச்சாரத்தைத் திருமணமாக்கிய உயர்நீதி மன்றம்

திருமணம் செய்யாமல் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டால், அதுவும் திருமணம்தான் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது சரியா? திருமணம் செய்யாமல், இருவர் சேர்ந்து வாழ்வதும் திருமணம் மூலம் சேர்ந்து வாழ்வதும் சமமானதுதான் என்று இதை ஒட்டி எழுப்பப்படும் வாதங்கள் சரியானவையா?

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் முஸ்லிம்களாக உள்ளதால், முஸ்லிம் சட்டத்தில் நீதி மன்றம் தலையிடுவதற்கு இதை முன்னோடியாக எடுத்துக் கொள்ளலாமா?

அபுசாலிஹ், அரக்கோணம் மற்றும் சிலர்

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டின் சட்டப்படி சரியானது தானா என்றால் நமது சட்டத்தில் உள்ள குளறுபடிகள் காரணமாக இதைச் சரி என்றும் வாதிட முடியும். தவறு என்றும் வாதிட முடியும்.

நமது நாட்டின் சட்டப்படி ஒரு ஆணும் பெண்ணும் மனம் விரும்பி உடலுறவு கொள்வது விபச்சாரமாகக் கருதப்படுவதில்லை. அவர்கள் மீது விபச்சார வழக்குப் போட முடியாது. விபச்சாரம் இல்லை என்று சட்டம் சொன்னால் அது திருமணம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று புரிந்து கொள்ள முடியும்.

அது போல் ஒருவனுக்கு மனைவி இருக்கும் போது இன்னொருத்தியை அல்லது இன்னும் பலரை வைப்பாட்டியாக வைத்துக் கொண்டு குடும்பம் நடத்தினால் அந்த ஆண் மீதும், பெண் மீதும் விபச்சார வழக்குகள் போட முடியாது. அதாவது அது சட்டப்படியான செயல்தான் என்று நமது சட்டம் சொல்கிறது.

கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதும், விபச்சாரத்தைத் தொழிலாக நடத்துவதும் தான் நமது நாட்டு சட்டப்படி குற்றமாகத் தெரிகிறது. இதை மட்டும் கவனத்தில் கொள்ளும் நீதிபதிகள் சட்டப்படி குற்றமில்லாத வகையில் உடலுறவு நடந்துள்ளதால் அது கணவன் மனைவி உறவாகத்தான் ஆகும் என்று தீர்ப்பளித்து விடுகிறார்கள்.

விரும்பிச் செய்தால் அது குற்றமில்லை என்று சட்டம் இயற்றப்பட்டுள்ள நாட்டில் இப்படி நீதிபதி தீர்ப்பளித்ததை முற்றாக எதிர்க்க முடியாது. அவர் மேற்கண்ட வாதங்களை வைத்து தனது தீர்ப்பை நியாயப்படுத்துவார். ஆனால் இதற்கு முரணாகத் தீர்பளிக்கும் வகையிலும் நமது நாட்டுச் சட்டம் அமைந்துள்ளதைக் காண முடிகிறது.

நமது நாட்டில் முஸ்லிமல்லாதவர்கள் ஒன்றுக்கு மேல் திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும்.

ஒரு மனிதனுக்கு மனைவி இருக்கும் போது இன்னொருத்தியை வைப்பாட்டியாக வைத்துக் கொள்கிறான்; அல்லது பலரை வைப்பாட்டியாக வைத்துக் கொள்கிறான்.

வைப்பாட்டிகள் நீதிமன்றத்தை அணுகி எங்களுடன் மனவிருப்பத்துடன் பத்து வருடம் குடும்பம் நடத்தினார். எங்கள் பிள்ளைகளுக்கு தந்தை எனக் கூறி பள்ளிச் சான்றிதழிலும் குறிப்பிட்டுள்ளார். எனவே எங்களையும் அவரது மனைவியராக ஆக்கி உத்தரவு போட வேண்டும் என்று வழக்குப் போட்டால் என்ன தீர்ப்பு அளிப்பார்கள்? என்ன தீர்ப்பு அளித்துள்ளார்கள்?

இரண்டாம் திருமணம் செய்து நீதிமன்றங்களால் தண்டிக்கப்படாதவர்கள் :

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த, இந்து மதத்தைச் சேர்ந்த பாவ்ராவ் சங்கர் லோகாண்டே முதல் மனைவி இருக்க இரண்டாம் திருமணம் செய்தார். முதல் மனைவி இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். கீழ்நிலை நீதிமன்றங்களும், உயர் நீதிமன்றமும் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தன.

ஆனால் பாவ்ராவ் சங்கர் லோகாண்டே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தபோது இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் இரண்டாவதாக நடந்தது திருமணமே இல்லை. எனவே பாவ்ராவ் சங்கர் இரண்டாம் திருமணம் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

(பாவ்ராவ் சங்கர் லோகாண்டே எதிர் மராட்டிய அரசு 1965 - 1566)

சுரேஷ் சந்திர கோஷ் என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். அவரது மனைவி பிரியா பாலா கோஷ் அவருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் இரண்டாம் திருமணம் செய்த சுரேஷ் சந்திர கோஷைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் நடந்தது நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி சுரேஷைத் தண்டிக்க மறுத்து விட்டது.

(பிரியா பாலா கோஷ் எதிர் சுரேஷ் சந்திர கோஷ் AIR 1971 sc 1153)

ஆந்திராவைச் சேர்ந்த எல்.வெங்கடரெட்டி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்தார். முதல் மனைவி லிங்காரி ஒப்புல்லம்மா கணவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் வெங்கடரெட்டியைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின்போது சில சடங்குகள் செய்யப்படாததே காரணம்.

(லிங்காரி ஒப்புல்லம்மா எதிர் எல்.வெங்கடரெட்டி மற்றும் சிலர் AIR 1979 sc 848)

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பங்காரி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் அது திருமணமே அல்ல. இரண்டாம் மனைவி அவரது வைப்பாட்டி தான். வைப்பாட்டி வைத்துக் கொள்வதைத் தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என்று காஷ்மீர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

(பங்காரி எதிர் ஜம்மு கஷ்மீர் மாநில அரசு AIR 1965 jk105)

இப்படி ஏராளமான வழக்குகளில் நாட்டின் உச்சநீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் தீர்ப்பளித்துள்ளன.

மேற்கண்ட நீதிபதியிடம் இது போன்ற வழக்கு வந்தால் உடலுறவு நடந்துவிட்டதால் மனைவியர் தான் என்று சொல்வாரா? சொல்ல மாட்டார் என்றுதான் நாம் நினைக்கிறோம்.

இவர்களும் மனைவியர் தான் என்று சொல்வது மட்டும் போதாது. ஒரு மனைவிக்கு மேல் திருமணம் செய்யக் கூடாது என்ற சட்டத்தை மீறியதற்காக அவருக்கு உரிய சிறைத் தண்டனை அளித்தும் உத்தரவிட வேண்டும்.

நாடு சுதந்திரமடைந்தது முதல் ஒரே ஒரு வழக்கில் கூட இப்படி தீர்ப்பளிக்கப்பட்டதாக நாம் அறியவில்லை. பல வழக்கறிஞர்களிடம் கேட்ட போது அவர்களுக்கும் இப்படி தீர்ப்பளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

அப்படியானால் உடலுறவு நடந்தாலே போதும்! பள்ளிச்சான்றிதழில் பெயர் இருந்தாலே போதும் என்ற வாதம் இப்போது என்னாவது?

மேலை நாடுகளில் இருந்த குரூப் செக்ஸ் எனும் கலாச்சாரம் இங்கேயும் பரவி வருகிறது. ஒரு பெண்ணுடன் இரண்டு மூன்று ஆண்கள் பல வருடங்கள் இப்படி உடலுறவு கொண்டால் அந்தப் பெண்ணிற்கு அந்த இருவரும் கணவர்களா?

அந்தப் பெண்ணுக்கு பிறந்த ஒரு குழந்தைக்கு ஒருவன் தந்தை எனவும், இன்னொரு குழந்தைக்கு இன்னொருவன் தந்தை எனவும் பள்ளிச் சான்றிதழில் குறிப்பிட்டு இருந்தால் நீதிபதி எப்படித் தீர்ப்பளிப்பார்? அந்தப் பெண்ணுக்கு இருவரையும் கணவர்கள் என்று தீர்ப்பளிப்பாரா?

குழப்பமான சட்டங்களை வைத்துக் கொண்டு தாமும் குழம்பி மக்களையும் குழப்புகிறார்கள் என்பது இது போன்ற முரண்பட்ட தீர்ப்புகள் மூலம் தெரிய வருகிறது.

இஸ்லாம் சொல்வதுபோல திருமணம் மூலம் தவிர உடலுறவு நடக்கக் கூடாது. அப்படி நடந்தால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் இருந்தால் பெண்ணும் ஆணைத் தன் வலையில் வீழ்த்த நினைக்க மாட்டாள். ஆணும் பெண்ணை ஏமாற்றி அனுபவிக்க நினைக்க மாட்டான். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினால் சட்டப்படி திருமணம் செய்து கொள்வார்கள். இதுபற்றிய வழக்குகள் நீதிமன்றத்துக்கே வராமல் போய்விடும்.

மேற்படி தீர்ப்பைப்பற்றி சட்டத்தின் பார்வை இதுதான்.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் அறிவு ஜீவிகள் என்ற போர்வையில் நாட்டைக் கெடுக்கும் விஷக்கிருமிகள் புரட்சிகரமான தீர்ப்பு என்று கிருக்கித் தள்ளுகின்றனர்.

திருமணம் செய்தாலும் அவர்களிடையே பிரச்சனை வருகிறது; திருமணம் செய்யாவிட்டாலும் பிரச்சனை வருகிறது. எனவே இரண்டும் ஒன்றுதான் என்று உளறிக் கொட்டுகின்றனர்.

விஷம் குடித்தாலும் சாகிறார்கள் விஷம் குடிக்காதவர்களும் சாகிறார்கள். இரண்டும் ஒன்று தான் என்று கூறுவதற்குச் சமமாக இந்த விஷக்கிருமிகளின் வாதங்கள் அமைந்துள்ளன.

ஆரோக்கியமாக இருந்தவனும் சாவான், நோயாளியும் சாவான் என்பதால் இரண்டும் ஒன்றாகி விடாது. நோயாளிகளில் அதிக சதவிகிதம் சாவார்கள். ஆரோக்கியமானவர்களில் குறைந்த சதவிகிதம் சாவார்கள்.

நாட்டில் சுமார் 95 சதவிகிதம் மக்கள் திருமண வாழ்க்கையில் உள்ளனர். திருமணம் ஆகாமலே குடும்பம் நடத்துபவர்கள் 5 சதவிகிதம் கூட இருக்க மாட்டர்கள். ஆனால் திருமண வாழ்க்கையில் ஈடுபட்ட 95 சதவிகித மக்களிடம் ஏற்படும் அதே அளவு பிரச்சனை ஐந்து சதவிகிதத்திலும் உள்ளது என்றால் இது எவ்வளவு பெரிய வேறுபாடு?

அறிவைப் பயன்படுத்தி சிந்தித்தால் எது பாதுகாப்பானது? எது நன்மை பயக்கக் கூடியது என்று இவர்கள் அறிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அறிவாளிகளுக்கு முற்போக்கு பட்டம் கிடைக்காதே? அதனால்தான் சிந்திக்க மறுத்து முற்போக்காளர்களாக ஆகிக் கொண்டு இருக்கிறார்கள்.

திருமணம் நடக்கும்போது அதில் ஒரு உறுதிமொழி உள்ளது. அதில் ஒரு ஒப்பந்தம் உள்ளது. ஒருவர் மற்றவரிடம் தலையிடும் உரிமை உள்ளது. இருவருக்கும் இடையே சமுதாயம் முன்னின்று நடத்தி வைத்ததால் அவர்களின் தலையீடு இருக்கும்.

பெண்ணின் இளமையை அனுபவித்துவிட்டு ஓடிப்போனால் கட்டிவைத்து உதைப்பார்கள் என்ற அச்சம் காரணமாகவும், வேறு இடத்தில் யாரும் பெண் தர முடியாத நிலை ஏற்படும் என்பதற்காகவும் மனைவி அழகிழந்த போதும் அவருடனே ஆண்கள் வாழ்கிறார்கள்.

ஒரு ஆணும் பெண்ணும் தாமாகப் பேசி சேர்ந்து வாழும்போது பெண்ணுக்கு ஒரு குழந்தையுடன் அழகு போய்விட்டால் அடுத்தவளைத் தேடிச் சென்று இது போல வாழ்வான். அவளுக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினர் வர மாட்டார்கள். பெண்ணுக்கு அப்படி நினைத்த மாத்திரத்தில் துணை அமையாது.

திருமணம் மூலம் பெண்களின் வாழ்வுக்கும் எதிர்காலத்துக்கும் உத்தரவாதம் கிடைக்கின்றது.

திருமணம் இல்லாமல் வாழும் நூறு பேர் திருமணம் செய்த நூறு பேர் என்று எடுத்துக்கொண்டு பார்த்தால் முதல் நூறில் சரிபாதி பஞ்சாயத்தாக போய் விடும். இரண்டாம் நூறில் ஒரு பஞ்சாயத்து நடந்தால் அதுவே அதிகம்.

எனவே ஒழுக்க மாண்புகளின் அடிப்படையிலும், பெண்களின் பாதுகாப்பு என்ற அடிப்படையிலும் நீதிபதியின் தீர்ப்பு கண்டனத்துக்கு உரியது. அறிவு ஜீவிகளின் வாதம் கிறுக்குத்தனமானது.

அடுத்து இவ்வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதால் நமக்குப் பாதிப்பு ஏற்படுமா என்பதை எடுத்துக் கொள்வோம்.

உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முஸ்லிம்களையும், முஸ்லிம் தனியார் சட்டத்தையும் எள் முனையளவும் பாதிக்காது. முஸ்லிம் தனியார் சட்டத்துக்கு அரசியல் சாசனத்தில் உத்தரவாதம் இருக்கும்வரை நாட்டின் எந்த நீதிமன்றமும் அதில் தலையிட முடியாது.

அப்படித் தலையிட்டால் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஒருங்கிணைந்து அதைத் தக்க முறையில் சந்திப்பார்கள்.

வழக்கில் சம்மந்தப்பட்ட இருவரும் முஸ்லிம் சட்டப்படி திருமணம் செய்யாமலே சின்ன வீடு போல் வாழ்ந்ததால் அவர்கள் முல்லிம் தனியார் சட்டத்தின் கீழ் வர மாட்டார்கள்.

இஸ்லாம் கூறும் முறைப்படி திருமணம் நடந்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு முஸ்லிம் தனியார் சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்படும். எனவே இது முஸ்லிம்களின் பிரச்சனை அல்ல. இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்த எந்த முஸ்லிமையும் இந்தத் தீர்ப்பு பாதிக்காது.

முஸ்லிமாகப் பிறந்தவன் தாலி கட்டி திருமணம் செய்தால் அவன் பெயர் அரபு மொழியில் உள்ளதால் அவன் முஸ்லிம் தனியார் சட்டத்துக்குள் வரமாட்டான். அதுபோல இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்யாமல் பதிவுத் திருமணம் செய்து கொண்டால் அவர்களாகவே முஸ்லிம் தனியார் சட்டத்தில் இருந்து விடுவித்துக் கொண்டதால் அவர்களும் முஸ்லிம் தனியார் சட்டத்துக்குள் வரமாட்டார்கள்.

எனவே இந்தத் தீர்ப்பு முஸ்லிமாக வாழாத இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தை மதிக்காத இருவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பதால் இதுபற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

25.06.2013. 14:38 PM

More Articles …