Sidebar

01
Wed, Jul
சமீபத்திய செய்திகள்

வந்தேமாதரம் பாடத்தேவை இல்லை - உயர்நீதிமன்றம்

வந்தே மாதரம் பாடச்சொல்லி  எவரையும் வற்புறுத்த முடியாது:

- லக்னோ நீதிமன்றம்  அதிரடித் தீர்ப்பு..!

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்ட போது, கூட்ட அரங்கை விட்டு வெளிநடப்பு செய்த, பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி ஷஃபீகுர் ரஹ்மானுக்கு எதிராக, சவுரப் ஷர்மா என்பவர் லக்னோ உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.சிங் மற்றும் வீ.கே.அரோடா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது இவ்வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்;  ஜன கன மன தான் இந்தியாவின் தேசிய கீதம் எனவும், வந்தே மாதரம் என்பது தேசிய கீதமாகாது என்றும் வாதிட்டார். ஆகவே இதை பாடச் சொல்லி எவரையும் வற்புறுத்தவும் முடியாது என்றும் தனது வாதத்தை பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, சவுரப் ஷர்மா தாக்கல் செய்த பொது நல வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர் ஷஃபீகுர் ரஹ்மான் வந்தே மாதரம் நிகழ்ச்சியைப் புறக்கணித்தது, அவரது தனிப்பட்ட நிலைப்பாடு, அதை எதிர்த்து பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்..!

ஜனகன மன பாடலைப் புறக்கணித்துவிட்டு வந்தே மாதரம் பாடுவது என்பது தேசவிரோத செயலாகும். அந்த தேசத் துரோகத்தை சங் பரிவாரக் கும்பல் செய்து வருகின்றது.

வந்தே மாதரம் பாடலை இந்தியக் குடிமகன்கள் பாட வேண்டும் என்பதோ, வந்தே மாதரம் பாடும் போது அதற்கு எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்பதோ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்றாகும்.

வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்டபோது அவையை விட்டு வெளிநடப்புச் செய்த ஷஃபீக்குர் ரஹ்மான் எம்.பி அவர்களை தேசத்துரோகி போல சித்தரித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால் அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு, அந்த வழக்கை லக்னோ உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த செய்தியை சொல்லி வைத்தாற்போல அனைத்து ஊடகங்களும் இருட்டடிப்புச் செய்துள்ளன.

இதுவே இவர்களது நடுநிலை(?) தன்மையைப் பறைசாற்றுகின்றது. வந்தே மாதரம் பாடலை பாடக்கூடாது என்ற முஸ்லிம்களின் தீர்மானத்திற்கு எதிராக வழக்குத் தொடராலாமா என மத்திய அரசு ஆலோசனை செய்து மண்ணைக் கவ்விய செய்தியை சென்ற இதழில், வந்தே மாதரம் பாடலை பாட மறுப்பது தேசத்துரோகமா? என்ற கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பகுதியில் தெளிவுபடுத்தியிருந்தோம். நமது அந்த நிலைப்பாட்டை தற்போது லக்னோ உயர்நீதி மன்றத் தீர்ப்பும் உறுதி செய்துள்ளது.

24.05.2013. 13:03 PM

வந்தேமாதரத்தின் போது முஸ்லிம் எம்பி வெளிநடப்பு சரியா?

கேள்வி பாராளுமன்றத்தில் வந்தேமாதரம் பாடும்போது அனைத்து எம்.பி.க்களும் எழுந்து நின்றபோது, பகுஜன் சமாஜ் எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் வெளி நடப்பு செய்துள்ளார். தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக சபாநாயகர் மீராகுமாரும் அவரைக் கண்டித்துள்ளார். அதிகமான எம்.பி.க்களும் இதைக் கண்டித்துள்ளார்கள்.

ஷபிகுர் ரஹ்மான் வெளிநடப்பு செய்தது சரியா? சபாநாயகர் கண்டித்தது சரியா?

சந்தான கிருஷ்ணன், ஆவடி

பதில் அனைத்து முஸ்லிம் எம்.பி.க்களும், கடவுள் நம்பிக்கை இல்லாத எம்பிக்களும், இந்து மதம் சாராத எம்பிக்களும் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். அனைவரும் கோழைகளாக இருக்கும்போது, துணிச்சலாக, ஷபிகுர் ரஹ்மான் வெளிநடப்பு செய்ததை நாம் பாராட்ட வேண்டும்.

எனது இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரான பாட்டை நான் பாட முடியாது என்று துணிவாக தனது கருத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.

இந்திய சுதந்திர வரலாறும், இந்திய அரசியல் சட்டமும் தெரியாத மீராகுமார் என்ற அறிவிலி உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் பாராளுமன்றத்துக்கு சபாநாயகராக இருப்பதால் தேசிய கீதத்தை அவமதித்ததாகக் கூறி கண்டிக்கிறார். நாட்டின் தேசிய கீதம் எது என்று தெரியாதவர் எல்லாம் நாடாளுமன்றத்திற்கு தலைமை தாங்க முடிகிறது என்றால் இதைவிட தேசிய அவமானம் எதுவும் இருக்க முடியாது.

வந்தேமாதரத்தை முஸ்லிம்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

நாடு சுதந்திரமடைவதற்கு முன்னாள் வங்காள மொழியில் ஆனந்த மடம் என்ற நாவல் வெளியானது. இந்த நாவல் கல்கத்தாவில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைப் பின்னணியாகக் கொண்டதாகும்.

கலவரம் நடந்தால் ஒருவரை ஒருவர் சரியாக இனம் கண்டு தாக்க வேண்டும் என்பதற்காக இந்துக்கள் வந்தே மாதரம் என்பதை தங்கள் அடையாளமாக ஏற்படுத்திக் கொண்டார்கள். வந்தே மாதரம் சொன்னால் அவன் இந்து என்று தாக்காமல் விட்டுவிடுவதற்காகவும், அதைச் சொல்ல மறுப்பவர்கள் முஸ்லிம் என்று அறிந்து கொன்று போடவும் வந்தே மாதரம் என்பது உருவாக்கப்பட்டதாக அந்தக் கதையில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.

இந்த நாவலுக்கு முன் வந்தே மாதரம் என்பது தேசப்பற்றின் அடையாளமாகக் கருதப்பட்டதில்லை. கலவரத்தின் போது இந்துக்கள் வந்தே மாதரம் சொல்வது போல் முஸ்லிம்களும் சொல்லிவிட மாட்டார்களா என்றால் வந்தே மாதரம் என்பதை உயிர் போனாலும் சொல்ல மாட்டார்கள் என்பதை அந்தக் கதையில் வரும் இந்துக்கள் விளங்கி வைத்திருந்தனர். ஏனெனில் வந்தே மாதரத்தின் பொருள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்பதால், முஸ்லிம்கள் இதைச் சொல்லவே மாட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்தது.

வந்தே மா தரம் என்பதில் மூன்று சொற்கள் உள்ளன.

வந்தே என்றால் வந்தனம் செய்கிறோம் வணங்குகிறோம் வழிபடுகிறோம் என்பது பொருள்.

மா என்றால் தாய் என்று பொருள்.

தரம் என்றால் மண் என்பது பொருள்.

அதாவது தாய்மண்ணாக இருக்கிற இந்த நிலத்தைக் கடவுளாகக் கருதி வணங்குகிறோம் என்பது மொத்த வார்த்தையின் பொருளாகும்.

வங்காள மொழிச் சொல்லான இந்த வார்த்தையின் பொருளை நாம் தெரிந்துகொள்ள அகராதியைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. பாரதியார் தனது பாட்டில் இதன் அர்த்தத்தைத் சொல்லித் தந்துவிடுகிறார்.

வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதுமென்போம்.

இது பாரதியார் பாட்டின் முதல் வரிகள்.

எங்கள் மாநிலத் தாயை வணங்குகிறோம் என்பதுதான் வந்தே மாதரத்தின் பொருள் என்று பாரதியார் பொருள் சொல்லிவிட்டார்.

பராசக்தியையும், கற்சிலைகளையும் கடவுளாகக் கருதிய பாரதியார் மண்ணை வணங்கினால் நமக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. அவரைப் போல் நாமும் மண்ணைக் கடவுளாக்குமாறு சொன்னால் இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

பாரதியார் பாட்டை மக்கள் என்றைக்கோ மறந்து விட்டார்கள் என்பதற்காக இஸ்லாத்தின் பெயரால் சமாதியை அதாவது கல்லை வழிபடும் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற சினிமாக்காரர் தாய் மண்ணே வணக்கம் என்று காட்டுக் கூச்சல் போட்டு ஆல்பம் வெளியிட்டு புதிய தலைமுறைக்கும் இதன் பொருளைப் புரிய வைத்துவிட்டார்.

பாரதியார் போலவே மண்ணை வணங்கும் சினிமாக்காரர் வந்தே மாதரம் பாடிவிட்டுத் தொலையட்டும். அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்க மாட்டோம் என்று உறுதி மொழி கூறி இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் எப்படி இதைப் பாடமுடியும்?

இந்த விஷயங்கள் எல்லாம் தெரியாத அறிவிலியாக சபாநாயகர் மீராகுமாரி இருக்கிறார்.

இவர் அறிவிலியாக இருந்தாலும் இவரது தந்தையிடமிருந்து வந்தே மாதரம் வரலாற்றை அறிந்து கொண்டிருந்தால் இப்படி உளறி இருக்க மாட்டார். பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் மகள் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் நாட்டு மக்கள் எவருக்குமே தெரியாத இவர் சபாநாயகராக்கப்பட்டார்.

பிரதமருக்கு அடுத்த நிலையில் இருந்த இராணுவ அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் காந்தி சிலையைத் திறந்து வைத்தார். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஜெகஜீவன்ராம் உயர் ஜாதியைச் சேர்ந்த டாக்டர் சம்புரணானந்து சிலையைத் திறந்ததால் அந்தச் சிலை தீட்டாகிவிட்டது என்று கூறி சங்பரிவாரக் கும்பல் தீட்டுக் கழிக்கும் சடங்கையும் நடத்தியது.

அப்படிப்பட்ட சங்பரிவாரக் கும்பலுடன் சேர்ந்து கொண்டு வந்தே மாதரத்திற்கு ஜெகஜீவன்ராமின் மகள் வக்காலத்து வாங்குகிறார் என்றால் இது ஆச்சரியமான உண்மையாக உள்ளது.

ஆனந்த மடம் நாவல் பிரபலமடைந்த பின்னர், சங்பரிவாரத்தினர் (இந்து மகாசபை) தங்களது நிகழ்ச்சிகளில் வந்தேமாதரம் பாட ஆரம்பித்தனர். முஸ்லிம்கள் எதை ஏற்க மாட்டார்களோ அதை தேசிய கீதமாக்கினால் முஸ்லிம்கள் பாட மறுப்பார்கள். அதை வைத்து அவர்களை தேசவிரோதிகளாகச் சித்தரிக்கலாம் என்ற திட்டத்துடன் அந்தக் கருத்தை படிப்படியாக உருவாக்கி பாரதியார் வரைக்கும் கொண்டு சேர்த்தனர்.

வெள்ளையர் ஆட்சியில் சங்பரிவாரத்தினர் இதை தேசிய கீதம் போல் சித்தரித்ததால், காங்கிரஸுக்கும் இந்த நோய் பரவியது. காங்கிரஸ் மாநாடுகளிலும் வந்தே மாதரம் பாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். 1923ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வந்தே மாதரம் பாடியபோது அப்போது காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்த முகம்மது அலி அவர்கள் மேடையிலேயே இதைக் கண்டித்து வெளிநடப்புச் செய்தார்.

வெள்ளையர் ஆட்சியில் நடந்த மாகாணத் தேர்தலில் ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஏழு மாகாணங்களிலும் வந்தே மாதரம் என்பதை தேசியகீதமாக அறிவித்தார்கள். ஆனால் முகம்மது அலி அவர்களின் எதிர்ப்புக்குப் பின்னர் விழிப்புணர்வு பெற்ற முஸ்லிம்கள் வந்தே மாதரத்திற்குக் கடுமையான எதிர்ப்பை பரவலாகத் தெரிவிக்க ஆரம்பித்தனர்.

முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் வந்தே மாதரம் எதிராக உள்ளதைக் காலம் கடந்து உணர்ந்து கொண்ட காங்கிரஸ் கட்சி முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வந்தே மாதரம் பாடத் தேவையில்லை அவர்கள் ஸாரே ஜஹான்சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா ஹமாரா என்ற கவிஞர் இக்பாலின் பாடலைப் பாடிக் கொள்ளலாம் என்று இரட்டை தேசிய கீதத்தைக் கொண்டுவந்தது.

இக்பாலின் பாடலின் பொருள் அகில உலகிலும் சிறந்த நாடு எங்கள் இந்தியா என்பதாகும்.முஸ்லிம் கவிஞன் பாடிய பாடலில் தேசத்தின் சிறப்பை மட்டுமே பார்க்கிறான். இஸ்லாத்தின் கொள்கை எதையுமே திணிக்கவில்லை.

ஆனால் முஸ்லிம் அல்லாதவர்கள் உருவாக்கிய தேசிய கீதத்தில் இந்துமத நம்பிக்கை முஸ்லிம்கள் மீதும், கிறித்தவர்கள் மீதும் மத நம்பிக்கை அற்றவர்கள் மீதும் திணிக்கப்பட்டது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இந்த வரலாற்றை தனது தந்தையிடமிருந்து மீராகுமார் கற்றிருந்தால், ஷபீகுர் ரஹ்மான் வெளிநடப்பு செய்த காரணம் தெரிந்தாக வேண்டும் என்று கூறியிருப்பாரா?

நாடு சுதந்திரமடைந்த போது சில பகுதிகளில் ஸாரே ஜஹான்சே அச்சா பாடலும் சில பகுதிகளில் வந்தே மாதரமும் பாடப்பட்டு வந்தன. நாடு சுதந்திரமடைந்த பின்னர் எதை தேசிய கீதமாக ஆக்கலாம் என்ற விவாதத்தின் போது மேற்கண்ட இரு பாடல்களுக்கும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

இரண்டும் வேண்டாம். ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜனகனமன என்பதே தேசிய கீதமாக இருக்கட்டும் என்று 1950ஆம் ஆண்டு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. அதிலும் சிறிய அளவிலான மறுப்பு முஸ்லிம்களுக்கு இருந்தபோதும், வந்தேமாதரம் போல் அப்பட்டமான மதத் திணிப்பாக இல்லாத காரணத்தால், முஸ்லிம்களும் இதை ஏற்றுக் கொண்டனர்.

வந்தேமாதரம் தேசியகீதம் போட்டியில் தோற்றுப் போனதையும், ஜனகனமன என்பது தான் தேசிய கீதம் என்பதையும் அறியாதவர் நாட்டின் குடிமகன்களில் ஒருவராக இருப்பதற்கே தகுதியற்றவராவார்.

சுதந்திரப் போராட்ட கால வரலாறுதான் தெரியவில்லை. சமகால வரலாறாவது சபாநாயகருக்குத் தெரிந்திருக்க வேண்டாமா? அந்த அறிவும் சபாநாயகருக்கு அறவே இல்லை.

2009ஆம் ஆண்டு நாட்டின் தலைநகரமாகிய டெல்லியில் ஜம்மியத்துல் உலமா சபையின் மாநாடு நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த அந்த மாநாட்டில் முதல் நாளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வந்தே மாதரம் என்பது இஸ்லாமியக் கொள்கைக்கு எதிரானது. முஸ்லிம்கள் அதைப் பாடக்கூடாது என்பதும் தீர்மானங்களில் ஒன்றாகும்.

முஸ்லிம் மத அறிஞர்களின் சபை இது இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானது என்று நிறைவேற்றிய தீர்மானத்தை மீராகுமார் அறிந்திருந்தால் இப்படிப் பேசியிருக்க மாட்டார்.

அந்தத் தீர்மானம் நிறைவேற்றிய பின் உலமா சபை தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாக சங்பரிவாரத்தினர் கொந்தளித்தனர்.

ஜம்மியதுல் உலமா சபைக்கு எதிராக தேசதுரோக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டையே ரணகளப்படுத்தினார்கள். தமிழகத்திலும் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

மத்திய அரசும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலுமா என்று சட்ட வல்லுனர்களைக் கலந்து பல ஆலோசனைகளை நடத்தியது. வந்தேமாதரம் தேசிய கீதமே இல்லை எனும்போது இதற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது என்று கூறப்பட்டதால் மத்திய அரசு அடங்கியது. இந்த வரலாறும் சபாநாயகருக்குத் தெரியவில்லை.

ஊடகங்களும், சினிமாக்காரர்களும், சங்பரிவாரக் கும்பலும் வந்தே மாதரத்தை தேசிய கீதம் போல் சித்தரித்து தவறான கருத்தை மக்கள் மனதில் பதித்து வைத்து விட்டன.

ஆனால் சட்டப்புத்தகத்தில் வந்தே மாதரத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அது இந்துக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் ஒரு பாடல் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

நடுநிலை இந்துக்களும் இதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். சிறுபான்மை மக்களின் மத நம்பிக்கைக்கு எதிரான ஒரு பாடலை அவர்களும் பாடவேண்டும் என்று வற்புறுத்துவது நேர்மையானதாக இருக்குமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அனைத்து மதத்தினரும், மதத்திற்கு அப்பாற்பட்டவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துக்கள் தானே எல்லோருக்கும் பொதுவாக இருக்க முடியும்? இதை உணர்ந்து இந்துக்களும் அந்தக் கருத்து வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

அந்தப் பாடலில் சரஸ்வதி, லட்சுமி போன்றவர்களை கடவுளாகச் சித்தரிக்கும் வரிகள் உள்ளன. இதை எப்படி ஏற்க முடியும் என்று இடதுசாரிகளும், பகுத்தறிவாளர்களும் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

சட்டப்பூர்வமான தேசிய கீதமான ஜனகனமனவை சங்பரிவாரத்தினர் இன்றுவரை தங்களது நிகழ்ச்சிகளில் பாடாமல் வந்தேமாதரம் பாடுகின்றனர். இவர்களின் இந்த அடாவடித்தனம் தான் தேசத் துரோகம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

 

12.05.2013. 5:06 AM

மும்பை குண்டு வெடிப்பு வழக்கு : இந்தியா கடைபிடிக்கும் இருநீதி கொள்கை!

கடந்த மார்ச் 21 - 2013 அன்று உச்ச நீதிமன்றம் 1993ஆம் ஆண்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் சங்பரிவார் என்ற சமூக விரோதிகளால் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1993ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த குண்டு வெடிப்புகளில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் காயம் அடைந்தனர்.

30 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் தடாவில் கைது செய்யப்பட்டு தடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தனர். அவர்களில் 123 பேர்கள் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். இவர்களில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.

இவர்களில் இருவர் இறந்து விட்டனர். 68 பேருக்கு ஆயுள் தண்டனைக்கு குறைவான தண்டனை அளிக்கப்பட்டது. மீதமுள்ள 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தடா நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு தீர்ப்பைத்தான் மார்ச் 21 - 2013ல் உச்ச நீதிமன்றம் அளித்தது.

தடா நீதிமன்றம் தீர்ப்பளித்த 20 பேர்களில் இறந்து விட்ட இருவரைக் கழித்து 18 பேர்களில் 16 பேருக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்தது. மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேர்களில் இப்ராஹீம் முஷ்தாக் என்ற டைகர் மெமன் தலைமறைவாகி விட்டார்.

மீதமுள்ள 11 பேர்களில் யாகூப் மெமனுக்கு உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. யாகூப் மெமன் கடந்த 20 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து மீதமுள்ள 10 பேர்களும் இருபது ஆண்டுகளாக சிறையில் வாடி வருவதையும் இதனால் அவர்களுடைய சுகாதார, பொருளாதார நிலை முற்றிலும் நொறுங்கிப் போனதையும் கவனத்தில் கொண்டு அவர்களுடைய மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. அதன்படி அவர்கள் தங்களின் இயற்கையான மரணத்தைத் தழுவுகின்றவரை சிறையிலேயே அடைந்து கிடக்க வேண்டும்.

பெண் குற்றவாளிகள்:

1993 மும்பை வெடி குண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண்களில் யாகூப் மெமனின் மனைவி ரஹீன் மெமன், இவரது தாயாரான ஹனீபா மெமன் இருவரும் ஏற்கனவே தடா நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். பாயி மூஸா பீவாண்டிவாலா என்ற முபீனா என்பவருக்கு தடா நீதிமன்றம் ஐந்தாண்டு தண்டனை விதித்திருந்தது.

ஆனால் அவரை உச்சநீதி மன்றம் விடுதலை செய்தது. யாகூப் மெமனின் மதனி ரூபினா மெமனுக்கு (ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட பத்து பேர்களில் ஒருவர்) எந்தச் சலுகையும் காட்டவில்லை. 70 வயது நிரம்பிய ஜைபுன்னிசா அன்வர் காஜிக்கு தடா நீதிமன்றம் அளித்த ஐந்தாண்டு தண்டனையிலிருந்து எந்தச் சலுகையும் அளிக்கவில்லை.

பாலிவுட் குற்றவாளி: இந்தக் குற்றவாளிகளில் மிக முக்கியமான பிரபல்யமான குற்றவாளி இந்தி திரைப்படத்துறையான பாலிவுட்டைச் சார்ந்த சஞ்சய் தத்.

குரல் எழுப்பும் கோலிவுட் ரஜினி:

இவருக்கு தடா நீதிமன்றம் 6 ஆண்டு கால சிறைத் தண்டனை அளித்திருந்தது. அதை உச்ச நீதிமன்றம் 5 ஆண்டு காலமாக குறைத்து தீர்ப்பளித்தது. ஏற்கனவே இவர் 15 மாதம் சிறைவாசம் அனுபவித்து விட்டார். இதனால் இனிமேல் அவர் மூன்றரை ஆண்டுகால தண்டனையை மட்டும் அனுபவிக்க வேண்டும்.

இவருக்கு உச்ச நீதிமன்றம் சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது தான் தாமதம்! இவருக்காக வாரி வரிந்து கொண்டு திரையுலகம் குரல் கொடுத்தது. நடிகை ஜெயப்பிரதா என்னுடைய உள்ளம் உடைந்து விட்டது. சஞ்சய் தத்துக்கு கருணை வழங்க வேண்டும் என்று கூறினார். அமீர்கான் கருணை மனு வேண்டி கூப்பாடு போடுகின்றார். அவருக்காக சென்னை திரைப்பட உலகமான கோலிவுட்டிலிருந்து ரஜினிகாந்த் குரல் கொடுக்கின்றார்.

அரசியல்வாதிகளும் தேசபிதாவான(?) சஞ்சய் தத் வீட்டிற்கு ஜெயபிரதாவுடன் சென்று ஆறுதல் கூறுகின்றனர். வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன் பங்குக்காக சஞ்சய் தத் மன்னிப்பு பெறுவதற்கு முழுத் தகுதி பெற்றவர் என்று சான்றிதழ் அளிக்கின்றார். இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதியும் இவருக்காக பரிந்துரை பேசுகின்றார். ஜெயப்பிரதா அமர்சிங் போன்றோர் சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்டு மகாராஷ்டிர ஆளுநரையும் சந்திக்கின்றனர். இவர்களது கோரிக்கையை ஏற்று கவர்னரும் அதை உள்துறைச் செயலாளருக்கு பரிந்துரை செய்கின்றார். ஒட்டுமொத்த ஊடகத்துறையும் அவருக்காக ஓலமிட்டு ஒப்பாரி வைக்கின்றனர்.

பிரபல்யமே பின்னணி:

இவ்வளவு ஆதரவு இவருக்கு ஏன்? இவர் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தாரா? சமூக, சமுதாய விடுதலைக்காக களப்பணி ஆற்றினாரா? திரைப்படத்தில் நடித்தார். அதுதான் இவருடைய பின்னணி! மறைந்த இவருடைய தகப்பனார் சுனில் தத் ஒரு நடிகர். அத்துடன் காங்கிரஸ் கட்சி எம்.பி.யாகவும் இருந்தார். இவருடைய தாயார் நர்கிஸ் ஒரு நடிகை. இவருடைய சகோதரி பிரியா தத் இப்போது காங்கிரஸ் எம்பி. இந்தக் குடும்பப் பின்னணியும், பிரபல்யமும்தான் இத்தகையோரை குரல் கொடுக்கச் செய்கின்றது.

பண முதலைகளின் படமுதலீடு:

இதில் திரைப்படத்துறையினர் ஒட்டு மொத்தமாக குரல் கொடுப்பதற்கு மற்றுமொரு முக்கிய பின்னணி,சஞ்சய் தத் படங்களுக்காக திரைப்படத் தயாரிப்பாளர்கள் - அதாவது பண முதலைகள் பல கோடி ரூபாய் சுமார் 100 கோடிக்கும் மேலாக முதலீடு செய்திருக்கின்றார்கள். இந்த முதலீடுகள் மூழ்கி போய் விடக்கூடாது என்பதற்காகத்தான் சஞ்சய் தத்துக்காக பொங்கி எழுகின்றனர்.

ஐந்தாண்டு சிறைத் தண்டனைக்காக சஞ்சய்தத்துக்காக ஆர்த்தெழுபவர்கள், பொங்கி எழுந்து போர்க் குரல் கொடுப்பவர்கள் அநியாயமாக தூக்கிலிடப்பட்ட அப்ஸல் குருவுக்கு குரல் கொடுத்திருப்பார்களா? கற்பழிக்கப்பட்ட, களங்கப்படுத்தப்பட்ட அப்பாவி அபலைப் பெண்களுக்காக என்றைக்காவது குரல் கொடுத்திருப்பார்களா? கிடையாது.

இவர்கள் குரல் கொடுக்க முன் வருவதெல்லாம் உயர்குடி மக்களுக்காகத்தான். சாதாரண,சாமான்ய மக்களுக்காக அல்ல.

முஸ்லிம்கள் என்றால் பூதாகரமாக காட்டுவது, சஞ்சய் தத்தின் விவகாரத்தை சிறிதாக காட்டுவது இதுதான் இவர்களது செயல். சஞ்சயின் குற்றம் சாதாரணமானதா? இங்கு தான் இந்த நடிகர், நடிகையர் கும்பல்கள், அரசியல்வாதிகள், ஊடகத் துறையினரின் போலி தேசப்பற்று வெளிச்சத்திற்கு வருகின்றது.

இவர்களில் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ சற்று வித்தியாசமானவர் என்று கூறலாம். ஆனால் அவர் சஞ்சய் தத்துக்காக குரல் கொடுக்கும் அணுகு முறையை நாம் சரிகாண முடியாது. உண்மையில் இவர்களுக்கு சரியான தேசப்பற்று இருக்குமேயானால் சஞ்சய் தத்துக்கு எந்த வக்காலத்தும் வாங்கக்கூடாது. வக்கணையும் பேசக்கூடாது.

காரணம் சஞ்சய் தத்தின் குற்றம் சாதாரணமானது அல்ல. மும்பை கலவரத்துக்குப் பின்னால் 1993 ஜனவரி மாதம் அபூ சலீமிடமிருந்து ஏ.கே.56 ரக துப்பாக்கி பெற்றிருந்தார். மும்பை கலவரத்தின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹீமின் சகோதரர் அனீஸ் இப்ராஹீமுடன் தொடர்பில் இருந்தார். சமீர் ஹிங்கோரா என்பவரிடம் மூன்று ஏ.கே.56 ரக துப்பாக்கிகளையும், வெடி மருந்து பொருட்களையும் சஞ்சய் தத் தன் வீட்டில் வாங்கி வைத்திருந்தார். மூன்று ஏ.கே.56 ரக துப்பாக்கிகளில் ஒன்றை பெற்றுக்கொண்டு இரண்டை திரும்பக் கொடுத்திருந்தார். சஞ்சய் தத் மொரீசியஸ் நாட்டில் படப்பிடிப்பில் இருந்தபோது தனது நண்பர்களான ஹனீஃப், கந்தாவலா, சமீர் ஹிங்கோரா இருவரும் கைது செய்யப்பட்டு விட்டார்கள் என்று தெரிந்ததும் யூசுப் நுல்வல்லாவுக்கு போன் செய்து ஏ.கே.56 ரக துப்பாக்கி,250 சுற்று மருந்துகள் 9விவி பிஸ்டல் ஆகியவை அடங்கிய பையை எடுத்துச் சென்று கேஸ்ரி அட்ஜானியாவிடம் கொடுத்து தடம் தெரியாமல் அழித்து விடுமாறு சொல்கிறார்.

1992 ல் சட்டத்திற்கு புறம்பாக பிஸ்டல் ஒன்றை தன் வசம் வைத்திருந்தார். துபாயில் ரவுடிக் கும்பல்களுடன் தாவூத் இப்ராஹீம் அளித்த விருந்தில் கலந்து கொண்டார். சட்டத்திற்குப் புறம்பாக ஆயுதங்கள் வைத்தது, ஆயுதங்களை அழித்ததன் மூலம் தடயங்களை அழித்தது என்று சஞ்சய் தத்தின் குற்றம் பல்வேறு கோணங்களில் பல்வேறு பரிமாணங்களில் விரிந்து விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது.

இந்திய அரசியல் சட்டத்தின் 1958 ஆம் ஆண்டின் நன்னடத்தை விதியின்படி அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த அளவிற்கு இவரது குற்றம் மிகக் கடுமையானது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். மொத்தத்தில் இதை ஒரு வார்த்தையில் இந்நாட்டு சட்டத்தின் பார்வையில் சொல்ல வேண்டுமென்றால் தேசத்துரோகம். இந்த தேசத்துரோகத்தை செய்தவருக்குத்தான் இப்படிப்பட்ட குரல்களும், கூச்சல்களும்.

விநோதமான வாதங்கள்:

துப்பாக்கி வைத்து இருந்ததற்காக இப்படிப்பட்ட துர்பாக்கியவானுக்கு ஐந்தாண்டுகால தண்டனையா? ஆயுதங்கள் வைத்திருந்தார். ஆனால் அவற்றை அவர் பயங்கரவாதத்திற்காகப் பயன்படுத்தவில்லையே.அதற்காக அவருக்கு ஐந்தாண்டுகள் தண்டனையா? சஞ்சய் தத்துக்கு மனைவி, மக்கள் இருக்கின்றனர். அவர் தனது படங்களில் அறப் போராட்ட அடிப்படையில் நடித்திருக்கின்றார் என்பது போன்ற கேலிக்கூத்தான வாதங்களையும், கோமாளித்தனமான விஷயங்களையெல்லாம் வைக்கின்றார்கள்.

சட்டத்திற்கு புறம்பான ஆயுதங்களை தன் கைவசம் வைத்திருந்தாலே அவர் அந்த சட்டப்படி ஐந்தாண்டு சிறைத் தண்டனைக்குரிய குற்றமாகும். இதில் பயன்படுத்துதல், பயன்படுத்தாமை என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. சஞ்சய் தத்துக்குத்தான் மனைவி, பிள்ளைகுட்டிகள் இருக்கின்றனர் என்ற வாதம் சுத்தப் பைத்தியக்காரத்தனமான வாதமாகும்.

இவருக்கு இருப்பது தான் மனைவி, மக்கள்! மற்ற குற்றவாளிக்கு இருப்பது மண்ணாங்கட்டிகளா? உணர்வற்ற மரக்கட்டைகளா? உயிரற்ற சடலங்களா? இவர்கள் புத்தி சுவாதீனத்துடன்தான் பேசுகிறார்களா அல்லது புத்தியில்லாமல் புலம்புகிறார்களா என்று தெரியவில்லை. இருபது வருடமாக அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார்.

அலைக்கழிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றார். இதைக் கணக்கில் கொண்டு அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை போலி தேச பக்தியாளர்கள் வைக்கின்றனர். இந்த வாதமும் அர்த்தமற்றது. இருபது ஆண்டுகளைக் கடந்து எத்தனையோ வழக்குகள் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டவர் யாரும் இப்படிப்பட்ட வாதத்தை வைத்ததில்லை.அப்படி ஒரு வாதம் சட்டப்படியும் அறிவுப்பூர்வமாகவும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய வாதமும் அல்ல. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திக் விஜய் சிங் எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே போய் சஞ்சய் தத் இக்குற்றத்தில் ஈடுபடும்போது ஒரு குழந்தையாக இருந்தார். அப்போது அவர் அந்தத் தப்பை செய்து விட்டார் என்று வக்காலத்து வாங்குகின்றார்.

குற்றம் செய்த ஒவ்வொரு குற்றவாளிக்கும் இதே வாதம் பொருந்துமே என்று  கடுகளவு கூட சிந்திக்கவில்லை. இப்படி இத்துனை கோணங்களில் பரிமாணங்களில் சஞ்சய் தத்துக்கு பரிந்துரை செய்வதற்கு ஒரே காரணம் அவர் ஓர் இந்து என்பதால் தான். அதே சமயம் இவர் ஒரு முஸ்லிம் என்றால் அவரைத் தண்டிப்பதற்காக சங்பரிவாரங்கள் புறக்கண்ணுக்கு தெரியாத சிறு சிறு குற்றங்களை பூதக் கண்ணாடி போட்டு பூதாகரமாக்கி விடும்.

இந்துக்கள் என்றால் அதை புஸ்வானமாக்கி விடும். இதற்கு அப்ஸல் குரு, சஞ்சய் தத் வழக்குகள் எடுத்துக்காட்டுகளாகும். கூட்டு மனசாட்சி என்று குறிப்பிட்டு நாட்டு சட்டத்தை தூரத் தள்ளி விட்டு- தூக்கி எறிந்து விட்டு உச்ச நீதிமன்றம் தண்டனையும் வழங்குகின்றது.

இதைத்தான் முஸ்லிம்களாகிய நாம் இரட்டை நீதி என்று குறிப்பிடுகின்றோம்.

இந்தியாவின் இரட்டை நீதி :

மும்பை வெடிகுண்டு வழக்கை எடுத்துக் கொள்வோம். சஞ்சய் செய்த குற்றங்களின் பட்டியலை மேலே விரிவாகப் பார்த்தோம். அப்படியிருந்தும் நடிகர், நடிகையர் கூட்டமும், அரசியல்வாதிகளும் இவருக்காக குருட்டுத்தனமாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதிலிருந்து சஞ்சய் தத் செய்த குற்றம் மாபெரும் பரிமாணத்தைக் கொண்டது என்று விளங்கிக் கொள்ளலாம்.

ஆனால் சஞ்சய் தத்துக்காக பலமிக்க பட உலகம், பண்ணை உலகம், அரசியல் உலகம், ஆட்சியர் உலகம் விதிவிலக்காக ஒன்றிரண்டைத் தவிர உள்ள ஊடக உலகம் அத்துனையும் குரல் கொடுத்தது. இவ்வழக்கில் சேர்க்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் 5 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்ட ஜைபுன்னிசா அன்வர் காஜிக்காக யாராவது குரல் கொடுத்தார்களா என்றால், நிச்சயமாக இல்லை.

காஜியின் கண்ணீர் பேட்டி :

TIMES NOW என்ற ஆங்கில செய்தி தொலைக்காட்சி மட்டும் ஜைபுன்னிசா காஜி மற்றும் அவரது 40 வயது நிரம்பிய மகள் ஆகிய இருவரின் பரிதாபகரமான பேட்டியை வெளியிட்டது. அந்தப் பேட்டியில் ஜைபுன்னிசா காஜி குறிப்பிட்டதாவது:

எனக்கு 70 வயதாகின்றது. இரண்டாண்டுகளுக்கு முன்பு எனக்கு கிட்னி ஆபரேஷன் நடந்தது. அதனால் கால்களில் கடுமையான வலி.என்னால் சரியாக நடக்க இயலவில்லை. தொழுவதற்காக கூட என்னால் உட்கார முடியவில்லை. படுக்கையில் இருந்து கொண்டு தொழுகின்றேன். சிறைச்சாலையில் ஐந்து ஆண்டுகால வாழ்க்கையை கழிப்பது என்பது என்னால் எண்ணிப் பார்க்க முடியாது. இறைவா! நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. குடியரசுத் தலைவர் அவர்களே! மகாராஷ்டிர ஆளுநர் அவர்களே! எனக்கு மன்னிப்பு வழங்குங்கள்.

இது ஜைனப் காஜியின் கண்ணீர் பேட்டி.

அவரது மகள் அளித்த பேட்டி இதோ! கடந்த 20 ஆண்டுகளாக என்னுடைய தாயாருக்காக நான் மட்டும் நீதிமன்றத்திற்கு அலையாய் அலைந்து விடுதலைக்காக பாடுபட்டு வருகின்றேன். எங்களுக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை. நடிகர், நடிகையாக இல்லாமல் இருப்பதுதான் நாங்கள் செய்த பாவம்.

இது Times Now வெளியிட்ட பேட்டியாகும். இது வெளியான பின்புதான் முன்னால் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ நான் ஜைபுன்னிசாவுக்காக குரல் கொடுப்பேன். குடியரசுத் தலைவர், ஆளுநர் இடத்தில் கருணை, மன்னிப்பு வழங்கக் கோருவேன்.

ஜைபுன்னிசாவுடைய வழக்கு சம்பந்தப்பட்டவைகளை நான் படித்து விட்டேன். பரிந்துரைப்பதற்கு தகுதி உள்ள வழக்குதான் என்று குறிப்பிட்டார்.

Times Now செய்தி வெளியீட்டுக்குப் பின்தான் ஜைபுன்னிசாவின் பாதிப்பும், அவருக்கு இழைக்கப்படுகின்ற அநியாயமும் வெளி உலகத்திற்குத் தெரிய வந்தது. இந்த வகையில் இஸ்லாமிய சமுதாயம் Times Now க்கு நன்றி சொல்லவும்,பாராட்டவும் கடமைப்பட்டிருக்கின்றது.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், இந்தியாவின் இரட்டை நீதியைத் தான். வலியவனுக்கு தண்டனை என்றால் வரிந்து கொண்டு ஆதிக்கபுரிகள், அரசியல்வாதிகள், ஆட்சி தர்பார்கள் ஓர் அணியாய் நின்று அது அநியாயமாக இருந்தாலும் சட்டத்திற்கு புறம்பாக இருந்தாலும் குரல் கொடுக்கின்றார்கள்.

ஏழைகள் என்றால் ஏன் என்று கூட கேட்க மறுக்கின்றார்கள். ஏறிட்டுக் கூட பார்க்க மறுக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் என்றால் மூச்சுவிடக் கூட மறுக்கின்றார்கள். இந்த அடிப்படையில் ஒரு சிலரைத் தவிர ஜைபுன்னிசாவுக்காக இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், திரைப்படத்துறையினர் குரல் கொடுக்க முன் வராதது இவர்களிடம் குடி கொண்டிருக்கும் இரட்டை நீதி நிலைபாட்டைத் தான் இது படம் பிடித்துக் காட்டுகின்றது.

இந்த பிரதிபலிப்பைத் தான் அப்ஸல் குரு போன்றவர்களை தூக்கில் போடுவது மூலம் இந்திய நிர்வாகத்துறை தனது செயல்பாடாகக் கடைபிடிக்கின்றது.

இது நிர்வாகத்துறையின் போக்கு என்றால் நீதித்துறையின் போக்கும் இதற்கு முற்றிலும் வேறுபட்டதாக இல்லை.

நீதித்துறையின் இரட்டை நிலை : இதற்குரிய எடுத்துக் காட்டும் ஜைபுன்னிசா வழக்குதான். ஜைபுன்னிசா செய்த குற்றம் என்ன? ரியல் எஸ்டேட் வியாபாரத்தின் அடிப்படையில் அபூ சலீமுடன் இவரது தொடர்பு இருந்தது. இதைப் பயன்படுத்தி அபூசலீம் ஓர் ஆயுத மூட்டையை சஞ்சய் தத் வீட்டிலிருந்து ஜைபுன்னிசா வீட்டிற்கு மாற்றி விட்டார். மூட்டையில் இருப்பது என்ன என்பது பற்றி தாய்க்கும், மகளுக்கும் அறவே தெரியாது. இது ஜைபுன்னிசா காஜிக்கு வினையாகவும், விபரீதமாகவும் ஆனது. சிறைத் தண்டனையை விலையாகவும் பெற வேண்டியதாயிற்று.

இதல்லாமல் வேறெதையும் இவரது வீட்டிலிருந்து சிபிஐ கைப்பற்றவில்லை. குண்டு வெடிப்பில் அவருக்கு எந்த வகையிலும் எள்முனையளவிலும் பங்கில்லை. இந்த ஆயுத மூட்டையினால் மட்டும் இவர் மீது தடாலடியாக தடா வழக்கு பாய்கின்றது. 2007ல் தடா நீதிமன்றத்தின் நீதிபதி இதை தனது தீர்ப்பில் தெளிவாக தெரிவிக்கின்றார்.

இந்த மூட்டை ஆயுதப்பை இருந்ததால் அவர் மீது தடா பாய்கின்றது. இதே தடா சஞ்சய் தத்தின் மீது பாய்ந்தது. பாய்ந்த அந்தத் தடா சட்டம் சுனில் தத் செல்வாக்கினால், சிவசேனாவிடம் அவர் கெஞ்சிய கெஞ்சலால் தடா அவரை விட்டும் விலகியது. சஞ்சய் தத்தின் மீது பாய்ந்திருப்பது இந்திய ஆயுதச் சட்டம் மட்டும் தான். தடா கிடையாது. இவ்வாறு சஞ்சய் தத் மீது தடாவை திரும்பப் பெற்றது எந்த அடிப்படையில் நியாயம்? அது மிகப்பெரும் தப்பில்லையா? ஒருதலைப்பட்சமான நியாயம் இல்லையா? ஓரவஞ்சனை இல்லையா? இதை தப்பு என்று நாம் சொல்லவில்லை.மும்பையின் போலீஸ் முன்னால் கமிஷனர் திரு.எம்.என்.சிங் தான் இவ்வாறு கூறுகின்றார்.

இவர் மும்பை தொடர் குண்டு வெடிப்பை விசாரித்த காவல்துறை அதிகாரி. சஞ்சய் தத்தின் தந்தை சுனில் தனது (எம்.பி. பதவியின்) அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தன் மகனுக்கு கருணை காட்டுமாறும், மன்னிப்பு வழங்குமாறும் கோருகின்றார். எந்த விதமான சார்பு நிலை- யாருக்கும் ஆதரவு ஏதுமின்றி நான் ஒரு கருத்தை பதிவு செய்கின்றேன். நான் சஞ்சய் தத்துக்கு நண்பனும் இல்லை. பகைவனும் இல்லை. அவர் மீது தடா வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவ்வழக்கு திரும்பப் பெறப்பட்டு அவர் மீது இந்திய ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது பெரும் தப்பாகும் என்று நான் குறிப்பிடுகின்றேன்.

இதுதான் முன்னால் மும்பை காவல் ஆணையாளர் குறிப்பிடுகின்ற உண்மைக் கருத்தாகும். ஜைபுன்னிசாவுக்கு வேறு நீதி : ஜைபுன்னிசாவிலிருந்து மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட அத்துனை பேரும் தடாவின் கீழ்தான் கைது செய்யப்படுகின்றனர். ஆனால் சஞ்சய் தத் மட்டும் விதிவிலக்கு பெறுகின்றார். இது ஏன்? எப்படி? இதைத் தான் நாம் சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி ஜைபுன்னிசாவுக்கு வேறு நீதியா என்று கேட்கின்றோம் என்று நினைக்காதீர்கள்.

இந்தச் செய்தியை தொலைக்காட்சியிலும் வெளியிட்டு விட்டு இணையதளத்திலும் ஆவணப்படுத்தியிருக்கின்றது NDTV. அந்த NDTV தான்,1993 Bombay blast: same crime, different punishment 1993 பம்பாய் குண்டு வெடிப்பு ஒரே குற்றம். வேறு வேறு தண்டனை என்று இதற்கு தலைப்பிட்டு இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றது.

இது இரட்டை நீதியில்லாமல் வேறென்ன? ஏற்கனவே இந்தியாவில் மனுதர்மக் கொள்கை உயர் சாதிக்காரர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. இப்போது இந்தியா மனித நீதியை விட்டு விட்டு மனு நீதியைத்தான் கடைப்பிடிக்கின்றது என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

மேற்குடிமகன், கீழ்க்குடிமகன், ஏழை, பணக்காரன், ஆண்டான் அடிமை, உயர்ந்தோன், தாழ்ந்தோன், சாதிமதம் என்று வேறுபடுத்தி பார்க்காமல் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் இவர்கள் நம்புகின்ற நீதி தேவனின் கண்கள் கருப்புக் கயிரால் கட்டப்பட்டிருக்கின்றது. இப்போது இந்த நீதி தேவனின் கருப்பு கயிறு அவிழ்த்து விடப்பட்டு அவ்விரு கண்களும் ஆட்களை தரம் பிரித்து பார்க்கின்றன. அதனால் தான் சஞ்சய் தத்தை தடாவிலிருந்து விடுவித்து ஒப்புக்காக ஓர் ஐந்தாண்டு தண்டனை கொடுத்துள்ளது. தப்புக்காக கொடுக்க வேண்டுமானால் ஆயுள் தண்டனை கொடுத்திருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் அவ்வாறு செய்யவில்லை.சஞ்சய் தத்தை தடாவிலிருந்து எப்படி விடுவித்தீர்கள் என்று கேட்கவும் இல்லை.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஜைபுன்னிசாவை மட்டும் தடா சட்டம் மாட்டி அவரை வாட்டிக் கொண்டிருக்கிறது. ஜைபுன்னிசாவுக்கு தடா இல்லை எனில் சிறைத்தண்டனை இல்லை. ஆனால் அவர் ஒரு முஸ்லிம் என்பதால் சாதாரணமானவர்- சாமான்யமானவர் என்பதால் அவர் மீது தடா பாய்ந்து 70 வயது படுகிழவியான அவருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டிருக்கின்றது. இதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து விட்டது.

இந்த அநீதி தொடர்ந்தால் நீதியின் கட்டுமானம் குலைந்தால், இந்தியா சீர்குலைந்து போய்விடும். இந்தியா மட்டுமல்ல வேறெந்த நாடும் இந்தப் பாரபட்சத்தைக் கடைபிடித்தால் அந்நாடும் நிலைகுலைந்து நீர்மூலமாகி விடும். இறை சாபத்திற்கும், கோபத்திற்கும் இலக்காகி விடும்.

இதோ மனித குலத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் எச்சரிக்கை :

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்கா வெற்றியின் போது) மக்ஸுமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?'' என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்? என்று கூறினர். (உஸாமா (ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய் என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்) விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன் என்று சொன்னார்கள். புகாரி : 3475

05.04.2013. 2:29 AM

முஸ்லிம்களுக்குமட்டும் மறுக்கப்படும் நீதி!

அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு ரகசியமாக அவர் தூக்கிலிடப்பட்டார். அவரது குடும்பத்தினர்களுக்குக்கூட தெரியாத வகையில் அவரை தூக்கிலிட்டது அயோக்கிய காங்கிரஸ் அரசு.

இந்தச் சம்பவம் நடந்து முடிந்த சில வாரங்களுக்குள்ளேயே காங்கிரஸ் கயவர்களின் கயமைத்தனம் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாகிக் கொண்டு வருகின்றது.

முஸ்லிம்களின் முதுகில் குத்தும் கயவர்கள் நாங்கள் தான். நாங்கள் சங்பரிவாரர்களை விட முஸ்லிம்களை கறுவருப்பதில் கைதேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக காங்கிரஸின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.

வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்கு நாடகம்:

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருடைய கருணை மனுக்களையும் ஜனாதிபதி நிராகரித்து விட்டதாகவும், அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட உள்ளதாகவும் சென்ற வாரம் செய்திகள் வெளியாயின.

சங்பரிவாரர்களைத் திருப்திப்படுத்த அப்பாவி அப்சல் குருவைத் தூக்கிலிட்ட காங்கிரஸ் கயவர்கள், தாங்கள் நடுநிலையானவர்கள் தான் என்று காட்டிக் கொள்வதற்காக சோனியா காந்தியால் திரைக்கதை வசனம் எழுதப்பட்டு, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, ஷிண்டே ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம்தான், வீரப்பன் கூட்டாளிகளுக்குத் தூக்கு என்ற அடுத்தகட்ட நாடகமாகும்.

முஸ்லிம்களை இவர்கள் இழித்தவாயர்களாக நினைத்துக் கொண்டும், இவர்கள் ஆடக்கூடிய நாடகமும், போடக்கூடிய தெருக்கூத்தும் நமக்கு விளங்காது என்று கற்பனை செய்து கொண்டும் அரங்கேற்றிய இந்த சதித்திட்டத்தின் பின்னணி இதோ:

நாங்கள் நல்லவர்கள்; நடுநிலையானவர்கள் என்பது போலும் காட்டிக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனையும் நிறைவேற்றக் கூடாது. அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?

வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப் போகின்றோம். அவர்களுடைய கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது என்ற செய்தியை அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அறிவிப்புச் செய்ய வேண்டும். அவ்வாறு அறிவிப்புச் செய்து, தூக்குத் தண்டனைக்குரிய கால அவகாசத்தை அவர்களுக்கு அளித்தால் அவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்கள். நீதிமன்றம் அவர்களது தூக்குத் தண்டனைக்கு தடை விதிக்கும். காரணம் என்னவெனில் அவர்கள் தான் பல வருடங்கள் சிறைச்சாலையில் இருந்துள்ளார்களே! அதுவே அவர்களுக்கான மரண தண்டனையை ரத்து செய்யப் போதுமான ஆதாரம் என்று நீதிபதிகள் தீர்ப்பளிப்பார்கள்.

இப்படித்தான் தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட பல நபர்களை இரண்டு ஆண்டுகள் வரைக்கும் தூக்கு நிறைவேற்றப்படாமல் இருந்துள்ளதை காரணம் காட்டி உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது.

காங்கிரஸ் அயோக்கியர்களின் இந்த மாஸ்டர் பிளான் இப்போது வெற்றி பெற்றுவிட்டது.

இந்த 4 பேருடைய கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்த செய்தியை மீடியாக்களில் அறிவிப்புச் செய்தார்கள்.

காங்கிரஸ் கயவர்கள் சொல்லிக் கொடுத்தது போல அவர்களும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள்.

நீதிமன்றமும் கருணை மனு பரிசீலிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வீரப்பன் கூட்டாளிகள் வைத்த வாதத்தை ஏற்று அவர்கள் 4 பேருக்கும் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்து கடந்த 18.02.13 திங்கட்கிழமை அன்று தீர்ப்பளித்து விட்டது. இதன் மூலம் காங்கிரஸ் அயோக்கியர்களின் மாஸ்டர் பிளான் வெற்றி பெற்றுள்ளது.

நாம் இந்த கயவர்களிடத்தில் கேட்கக்கூடிய கேள்வி,

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருடைய கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்த செய்தியை ஏன் சம்பந்தப்பட்டவர்களிடமும், மீடியாக்களிடமும் சொன்னீர்கள்?

அப்சல் குருவுக்கு அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை யாரிடமாவது சொன்னீர்களா? குறைந்தபட்சம் அவரது குடும்பத்தினருக்காவது தெரிவித்தீர்களா?

அப்சல் குருவுக்கு அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டவுடனேயே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்தீர்களா? குறைந்தபட்சம் அந்த ஒரு வாய்ப்பையாவது அப்பாவி அப்சல் குருவுக்கு வழங்கினீர்களா?

வீரப்பன் கூட்டாளிகளுக்கு மட்டும் தூக்குத் தண்டனையை ரத்து செய்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கிய மர்மம் என்ன?

நீண்ட நாட்கள் வீரப்பன் கூட்டாளிகள் சிறைவாசம் அனுபவித்து விட்டதனால் அவர்களுக்கு மட்டும் இந்த சிறப்புச் சலுகை என்று சொல்வீர்களானால், அப்சல் குரு 8 ஆண்டுகள் மரணதண்டனையை எதிர்நோக்கி காத்திருந்தது மட்டும் சிறிய அளவு காலமா?

அப்படியானால் அப்சல் குருவுக்கு ஒரு நீதி, வீரப்பன் கூட்டாளிகளுக்கு ஒரு நீதியா?

முஸ்லிம்களுக்கு ஒரு நீதி; முஸ்லிமல்லாதவருக்கு ஒரு நீதியா?

முஸ்லிம்கள் கண்ணில் சுண்ணாம்பும், முஸ்லிமல்லாதவர்கள் கண்ணில் வெண்ணெய்யும் வைப்பீர்களா?

அப்சல் குரு பாராளுமன்றத்தைத் தாக்கினார் என்பது உண்மையென்று வைத்துக் கொண்டாலும் அது தேச குற்றச் செயல் என்றால், 22 காவலர்களைக் குண்டு வைத்து கொலை செய்த வீரப்பன் கூட்டாளிகள் செய்த செயல் மட்டும் என்ன தேசத் தியாகமா?

அப்படியென்றால் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அப்சல் குருவைத் தூக்கிலிட்டுவிட்டு, 22 காவலர்களைக் குண்டு வைத்துக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு கருணை காட்டப்படுமேயானால் இது தான் இந்த தேசத்தில் முஸ்லிம்களை காங்கிரஸ் கையாளக்கூடிய, கவனிக்கக்கூடிய, கழுத்தறுக்கக் கூடிய விதம் என்பது அனைவருக்கும் விளங்கிவிட்டது; வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

முஸ்லிம்களை கழுத்தறுத்த காங்கிரஸ் கயவர்களுக்கு வரக்கூடிய தேர்தலில் தக்க பாடம் புகட்டப்பட வேண்டும். முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு சவக்குழி வெட்ட வேண்டும்.

காங்கிரஸ் அயோக்கியர்கள் அப்சல் குருவைத் தூக்கிலிடவில்லை. அப்சல் குருவை தூக்கிலிட்டதன் மூலம் தனக்குத்தானே தூக்குக்கயிறை தனது கழுத்தில் மாட்டிக் கொண்டுள்ளனர் என்ற உண்மையை வரக்கூடிய தேர்தலில் அவர்கள் உணர்ந்து கொள்ளக்கூடிய வகையில் முஸ்லிம்களின் பதிலடி இருக்க வேண்டும்.

உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.

அல்குர்ஆன் 3 : 120

19.02.2013. 10:52 AM

 

அப்சல் குரு விவகாரத்தில் சாகடிக்கப்பட்ட நீதி நியாயம்!

அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட அநீதியான தீர்ப்பின் மூலம் நீதி சாகடிக்கப்பட்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்நாட்டில் அடுத்தடுத்து தொடர் சமபவங்கள் அரங்கேறி வருகின்றன.

வீட்டுக்காவலில் அடைக்கப்பட்ட முஸ்லிம் பத்திரிக்கையாளர்:

டெல்லியில் உள்ள பிரபல பத்திரிக்கையாளர் இப்திகார் ஜிலானியின் வீட்டை டெல்லி போலீசார் சுற்றி வளைத்து அவரை வீட்டுக் காவலில் அடைத்து நமது நாட்டின் இறையாண்மையை பாதுகாத்து(?) வருகின்றார்கள்.

பாராளுமன்றம் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரான இப்திகார் ஜிலானியின் வீட்டுக்குச் சென்ற டெல்லி போலீசார், ஜிலானி வீட்டை விட்டு வெளியே போக முடியாதபடி அவரைத் தடுத்து நிறுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர் கவுன்சிலிங் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜுவிடம் ஜிலானி புகார் தெரிவித்தார். தனது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களையும், குழந்தைகளையும் டெல்லி போலீசார் அவமதித்து வேதனைப்படுத்தியதாகவும் அவர் புகாரில் தெரிவித்தார்.

இதனையடுத்து, ஜிலானியை வெளியே போக விடாமல் தடுத்து நிறுத்திய டெல்லி போலீசாரை சஸ்பெண்ட் செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து மார்கண்டேய கட்ஜு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் சட்டத்தை மீறிய வகையில் ஜிலானியில் வீட்டுக்குள் நுழைந்த டெல்லி போலீசார் அவரை வீட்டுக் காவலில் கைது செய்தது போல் செயல்பட்டு வெளியே போகவிடாமல் தடுத்து சிறைப்படுத்தி வைத்தனர். அவரது குடும்பத்தார், குழந்தைகள் ஆகியோரையும் துன்புறுத்தியுள்ளனர். இத்தகைய செயல்கள் ஜெர்மனியில் நடைபெற்ற நாஜியின் சர்வாதிகார ஆட்சியை நினைவுபடுத்துவதாக உள்ளது.

ஜனநாயகத்துக்கு மாறான சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரான இந்த செயல்களில் ஈடுபட்ட போலீசார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மீது இன்னும் 48 மணி நேரத்துக்குள் சஸ்பெண்ட் செய்து அவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும். என்று அந்த கடிதத்தில் மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

இப்படி முஸ்லிம்கள் என்றால் ஒரு நீதியும், முஸ்லிம் அல்லாதவர்கள் என்றால் ஒரு நீதியும் வழங்கும் அரசுகளும், நீதிமன்றங்களும் சிறுகச் சிறுக நீதி நியாயங்களை சாகடித்து வருகின்றனர்.

கிலானி சொன்ன உண்மைகள்:

அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட இதே நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு கொடுமையான சித்தரவதைகள் அனுபவித்து பிறகு குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்ட டெல்லி பேராசிரியர் கீலானி அவர்கள் சில செய்திகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்சல் குருவிற்காக அவரது மனைவி தான் கருணை மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனைவி தபாசமிற்கு இந்தத்தகவல் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் அவரது உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்காதது மிகப்பெரிய மோசடி என்று பேராசிரியர் கீலானி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நான் இப்போது தான் அப்சல் மனைவியிடம் பேசினேன். அவருக்கு அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது தெரியவில்லை. செய்தி சானல்கள் வழியே தான் அவர் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது, இது மனித உரிமைக்கு விழுந்துள்ள பெரிய அடி என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் பிப்ரவரி 4 ஆம் தேதியே தூக்கு உறுதி செய்யப்பட்டது என்றால் ஏன் அவரது மனைவியிடம் தெரிவிக்கப்படவில்லை? இது மட்டுமல்ல கருணை மனு நிராகரிப்பு மீதான நீதித்துறை மறுபரிசீலனையும் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் மக்புல் பட் 1984ஆம் ஆண்டு இவ்வாறுதான் அவரது குடும்பத்தினருக்குத் தெரியாமல் ரக்சியமாக தூக்கிலிடப்பட்டு திகாரிலேயே புதைக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் அனைத்து சட்ட நடைமுறைகளும் புறந்தள்ளப்பட்டுள்ளது. அவருக்குத் தூக்கு தண்டனை அளித்தது முழுதும் அரசியல் தீர்மானமே. சட்டம் ஒழுங்கு என்று கூறப்படுவது ஒரு சாக்குப் போக்குதான். இவ்வாறு கடுமையாக சாடியுள்ளார் பேராசிரியர் கீலானி.

அப்சல் குருவை துக்கிலிட்டு புதைக்கப்பட்ட பிறகு அவரது குடும்பத்திற்கு கிடைத்த கடிதம்:

பிப்ரவரி 6ஆம் தேதியே அப்சல் குரு குடும்பத்திற்கு தூக்கிலிடப்படும் செய்தியை ஸ்பீட் போஸ்டில் அனுப்பி விட்டோம் என்று மத்திய அரசு தரப்பில் கூறியிருந்தது. ஆனால் டெல்லியிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தின் உறையில் உள்ள ஸ்டாம்பில் பிப்ரவரி 8ஆம் தேதி என்று இருந்தது.

பிப்ரவரி 9ஆம் தேதி சனிக்கிழமையன்று திகார் ஜெயிலில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு, தூக்கிலிடப்படும் செய்தி அடங்கிய ஸ்பீட் போஸ்ட் மிகவும் ஸ்பீடாக பிப்ரவரி 11ஆம் தேதி அவரது குடும்பத்தினரிடம் சேர்ந்துள்ளது!! ஸ்பீட் போஸ்டின் ஸ்பீட் இதுவென்றால் சாதாரண போஸ்ட் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்!

இதைவிடக்கொடுமை, இந்தக் கடிதம் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட பிப்ரவரி 9ஆம் தேதியன்று மாலை ஜம்மு காஷ்மீர் தபால் நிலையத்திற்கு கிடைத்துள்ளது.

கடிதத்தில் அப்சல் குருவின் கிராமத்தின் முகவரி இருந்துள்ளது.

கடிதத்தை நாங்கள் வாங்க முதலில் மறுத்தோம், ஆனால் உறவினர்கள் அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம் என்று கூறினார்கள் அதனால் வாங்கினோம், தூக்கிலிடப்பட்டு உடலும் புதைக்கப்பட்ட பிறகு தூக்கிலிடப்படும் செய்தி எங்களுக்குக் கிடைத்து என்ன பயன் என்று அவரது குடும்பத்தினர் ஆதங்கத்துடன் கேள்வியெழுப்பினர்.

உள்துறை அமைச்சகம் அன்று வாய்கிழிய தொலைக்காட்சியில் அப்சல் குருவின் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியதாக கூறி வந்தது. இப்போது குட்டு உடைந்தது.

மற்றொரு வேதனையான வேடிக்கை என்னவெனில் அரசுத் தரப்பில் பிப்ரவரி 6ஆம் தேதியே அப்சல் குரு குடும்பத்திற்கு தூக்கிலிடப்படும் செய்தியை ஸ்பீட் போஸ்டில் அனுப்பிவிட்டோம் என்று கூறியிருந்தது. ஆனால் டெல்லியிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தின் உறையில் உள்ள ஸ்டாம்பில் பிப்ரவரி 8ஆம் தேதி என்று முத்திரை குத்தப்பட்டிருந்தது.

இப்போது இந்தக் கடிதம் கையில் கிடைப்பது மிகவும் கொடூரமானது என்று அப்சல் குடும்பத்தினர் வேதனையுடன் கூறியுள்ளனர். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது இந்த செயல் என்றும் அப்சல் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இதுதான் இவர்கள் கடைபிடிக்கும் நீதி பரிபாலனம்..

காங்கிரஸ் கயவர்களுக்கு சமாதி கட்டும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. தொடர்ந்து முஸ்லிம் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வரும் காங்கிரஸுக்கு முஸ்லிம்கள் தக்க பாடம் கற்பிப்பது நிச்சயம்.

11.02.2013. 8:35 AM

அப்சல் குருவுக்கு தூக்கு! உணர்த்தும் உண்மைகள்!

2001ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம்தேதி பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 5 பேரையும் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி, சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்று விட்டனர். ஒரு பயங்கரவாதியைக் கூட அவர்கள் தப்பிக்க விடவில்லை.

பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கையை நாடே வரவேற்றது. தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. இந்நிலையில் பாராளுமன்றத் தாக்குதலுக்கு சதி செய்ததாக காஷ்மீரைச் சேர்ந்த அப்சல் குருவை மத்திய அரசு திடுதிப் என்று தூக்கில் போட்டுள்ளது. இது காஷ்மீரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி, போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 50க்கும் அதிகமான பொது மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

தொலைபேசி, இன்டர்நெட் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகள் அனைத்தும் காஷ்மீரில் முடக்கப்பட்டுள்ளன. 14 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்புக்கு காரணம் அப்சல் குரு சட்டத்தின் அடிப்படையில் தூக்கில் போடப்படவில்லை. மாறாக அரசியலுக்காக தூக்கில் போடப்பட்டார்.

இங்கு ஒரு விஷயத்தை நாம் கூடுதலாக பதிவு செய்ய வேண்டியுள்ளது. அப்சல் குரு தூக்கிலிடப்பட்டத்தை நாம் எதிர்த்தவுடன் ஒட்டு மொத்தமாக மரண தண்டனையே கூடாது என்று நாம் எதிர்ப்பதாக யாரும் விளங்கிக் கொள்ளக் கூடாது. மரண தண்டனையே கூடாது என்பது நமது வாதம் அல்ல. அது சட்டப்படி முறையாக விசாரித்து வழங்கப்பட வேண்டும் என்பதே நமது வாதம்.

அப்சல் குரு துப்பாக்கி தூக்கிக் கொண்டு பாராளுமன்ற வளாகத்திற்குள் செல்லவில்லை. அங்கு யாரையும் அவர் துப்பாக்கியால் சுடவில்லை. இந்த பாராளுமன்றத் தாக்குதலுக்கும், அப்சல் குருவுக்கும் நேரடியாக எந்தச் சம்பந்தமும் இல்லை.

(குறிப்பு : மேற்கண்டவாறு நாம் சொல்லவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர். இது குறித்த செய்திகளை லிங்கில் காண்க!)

இப்படி பாராளுமன்றத் தாக்குதலில் நேரடிச் சம்பந்தம் இல்லாத அப்சல் குருவை பா.ஜ.கவின் நெருக்குதலுக்கு அடிபணிந்து, மத்திய காங்கிரஸ் அரசு தூக்கில் போட்டது நாட்டில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாராளுமன்றத் தாக்குதலில் அப்சல் குரு மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. இவரோடு சேர்த்து பேராசிரியர் ஜிலானி, சவுகத் ஹுசைன், அப்சான் குரு ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி தனி நீதிமன்றம் முதலில் அப்சான் குருவை நிரபராதி என்று விடுதலை செய்து விட்டது. அதே சமயம் ஜிலானி, சவுகத் ஹீசைன், அப்சல் குரு ஆகிய மூவருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது.

இதன் பிறகு உச்ச நீதி மன்றம் பேராசிரியர் ஜிலானியை நிரபராதி என்று சொல்லி விடுதலை செய்து, சவுகத் ஹீசேனுக்கு பத்தாண்டு சிறைத் தண்டனை விதித்தது. இந்த சிறைத் தண்டனை காலம் கழிந்து சவுகத் ஹுசைனும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்.

இந்நிலையில் தான் மத்திய அரசு அப்சல் குருவை அவசர அவசரமாக தூக்கில் தொங்க விட்டுள்ளது. அப்சல் குருவிற்கு நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை கிடைப்பதற்கு சட்டத்தின் உரிமைகள் அவருக்கு தரப்படவில்லை என்பது பிரதான காரணமாகும்.

அப்சல் குரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். 1986ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேறிய இவர் 1988ஆம் ஆண்டு 12வது படித்து முடித்து ஒரு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து முழுமையாக ஒரு ஆண்டு நன்றாக படித்து முடித்தார். இதற்கு மேல் படிக்க இவருடைய பொருளாதாரம் ஒத்துழைக்கவில்லை. அதனால் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு பழ வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்.

மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைப்பது எவ்வளவு கடினம் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட மருத்துவ படிப்பையே இவர் பாதியில் விட்டுவிட்டார் எனில் வறுமை இவரை எந்த அளவிற்கு விரட்டி இருக்க வேண்டும்? அந்த ஏழையைத்தான் சட்டப்படியான உரிமைகளை தராமல் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தூக்கில் ஏற்றி சாகடித்துள்ளார்கள்.

பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழையான அப்சல் குருவுக்கு வக்கீல் வைத்துக் கொள்ளக் கூட வசதியில்லை. வக்கீல் வைத்துக் கொள்ள வசதி இல்லாதவருக்கு அரசு தான் இலவச வக்கீல் அமர்த்தித் தர வேண்டும். ஆனால் வழக்கு விசாரணையின் போது இவர் கேட்ட வக்கீலை அரசு அமர்த்தித் தரவில்லை. மாறாக அரசுக்கு இணக்கமான ஒரு வழக்கறிஞரை அமர்த்தினார்கள். இந்த முதல் கோணல் தான் முற்றிலும் கோணலாகி இப்போது அவரது உயிரை பறித்து விட்டது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

பாராளுமன்றத் தாக்குதலில் நேரடியாக எந்தச் சம்பந்தமும் இல்லாத இருவரை நீதிமன்றமே விடுதலை செய்து, ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அப்சல் குருவுக்கு மட்டும் தூக்குத் தண்டனை கிடைப்பதற்கு காரணம் ஏழையான அப்சல் குருவுக்குக் கிடைக்க வேண்டிய சட்ட ரீதியான உரிமைகள் கிடைக்கவில்லை என்பதை மக்கள் அறியாமல் இல்லை. என்ன தான் இருந்தாலும் அப்சல் குரு உச்சநீதி மன்றத்தால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டவர். அவரை தூக்கில் போடுவதை எதிர்க்கக் கூடாது என்று பலரும் சொல்கிறார்கள்.

உச்சநீதி மன்றம் அப்சல் குருவின் தூக்குத் தண்டனையை மட்டும் உறுதி செய்து, வேறு எவருடைய தூக்குத் தண்டனையும் உறுதி செய்யாமல் இருந்தால் இவர்களின் வாதத்தை ஒப்புக் கொள்ளலாம். ஆனால் உண்மை அதுவல்ல. அப்சல் குருவுக்கு முன்னால் 90 பேரின் தூக்குத் தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. இவர்களையெல்லாம் தூக்கில் போட்டு விட்டு அப்சல் குருவையும் தூக்கில் போட்டால் இந்த தூக்கு தண்டனைக்கு எதிராக ஒருவரும் வாய் திறக்க மாட்டார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

அப்சல் குருவுக்கு முன்னால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட எவரையும் மத்திய அரசு தூக்கில் போடவில்லை.

உதாரணமாக முன்னால் பிரதமர் இராஜீவ் காந்தியை கொன்று குவித்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் இன்றுவரை தூக்கிலிடப்படவில்லை.

காலிஸ்தான் பயங்கரவாதியான தேவேந்தர் சிங் புல்லார் தூக்கில் இடப்படவில்லை.

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றது இந்தியாவின் பயங்கர சம்பவம் இல்லையா? பஞ்சாபின் முதல் மந்திரியை ரஜோனா என்பவர் கொன்றது பயங்கர சம்பவம் இல்லையா? தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இவர்களை எல்லாம் தூக்கில் போடாமல் இவர்களுக்குப் பின்னால் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்ட அப்சல் குருவை மட்டும் தூக்கில் போட்டுள்ளார்கள் எனில் உச்சநீதி மன்றம் தூக்குத் தண்டனை விதித்ததால் அப்சல் குருவை தூக்கில் இடவில்லை. மாறாக அப்சல் குரு ஒரு ஏழை முஸ்லிம். இவரை தூக்கில் போட வேண்டும் என்று பா.ஜ.க கூக்குரலிட்டது. அதனால் அவர் தூக்கிலிடப்பட்டார் என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

அப்சல் குருவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து விட்டார். அதனால் அவர் தூக்கிலிடப்பட்டார் என்ற சொத்தை வாதத்தையும் சிலர் வைக்கின்றனர். சில மாதங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த மத்திய அமைச்சர் சிதம்பரம் ஜனாதிபதியிடம் தரப்பட்ட கருணை மனுக்கள் வரிசையாகத் தான் பரிசீலிக்கப்படும் என்றார். மத்திய அரசின் இந்த உறுதி மொழியின்படி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நடந்து கொள்ளவில்லை. எல்லா கருணை மனுக்களையும் ஒதுக்கி வைத்து விட்டு 1984ஆம் ஆண்டு காஷ்மீர் விடுதலை இயக்கத் தலைவர் மக்பூல் பட், அஜ்மல் கசாப் , அப்சல் குரு ஆகியோர் மனுக்களை மட்டும் பரிசீலித்து நிராகரிக்கிறார் எனில் இதில் அரசியல் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?

ஜனாதிபதி கருணை மனுக்களை வரிசையாக பரிசீலனை செய்யாமல் இருப்பதில் அரசியல் இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகமும் கொலைக் குற்றவாளிகளை வரிசைப்படுத்தி தூக்கில் போடாமல் இருப்பதில் நிச்சயம் அரசியல் இருக்கிறது. சிறைத் துறையும் வரிசையை பின்பற்றாமல் முஸ்லிம்களை மட்டும் குறி வைத்து தூக்கில் போடுவதில் அரசியல் இல்லாமல் வேறு என்ன இருக்கிறது?

காஷ்மீரில் 98 ஆயிரம் அப்பாவி முஸ்லிம் மக்கள் பலியாகி இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவர்கள் அனைவரும் சட்ட விரோதமாக கொல்லப்பட்டவர்கள் ஆவர். சிறைக்கு வெளியில் இருக்கும் அப்பாவி மக்கள் முஸ்லிம்கள் என்பதற்காகத் தான் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீரைச் சேர்ந்த அப்சல் குருவும் முஸ்லிம் என்பதற்காகத் தான் தூக்கில் போடப்பட்டுள்ளார். இவை அனைத்தும் அரசியல் ரீதியான பச்சை படுகொலைகள்.

இந்தியாவில் முஸ்லிம்களின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது என்று இந்த சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றன.

இந்த அரசியல் சதியை முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகத்தான் எதிர் கொள்ள வேண்டும். முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காவி அமைப்புகள் முஸ்லிம்களை குறிவைத்து நாடு முழுவதும் குண்டு வெடிப்புகளை நடத்தி கொலை வெறியாட்டம் போடுகின்றனர். திட்டமிட்டு மதக் கலவரங்களை நடத்தி, ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவிக்கின்றனர். இந்தியாவில் நடந்த மதக்கலவரங்களில் முஸ்லிம்கள் மட்டும்தான் பிணமாக கிடந்தார்கள். முஸ்லிம் அல்லாத ஒருவர் கூட பலியாகி கிடக்கவில்லை என்று வி.எச்.பி.யின் தலைவர் பிரவீன் தொக்கடியா ஒப்புக் கொள்ளும் அளவுக்கு நிலைமை படுபயங்கரமாக இருக்கிறது.

இந்தியாவை அதிக ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் அரசோ காவி பயங்கரவாதிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு போலீஸ், இராணுவ நடவடிக்கைகளின் மூலம் அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவிக்கிறது. சட்ட ரீதியான உரிமைகளைப் பறித்து அவர்களைக் கழுவிலும் ஏற்றுகிறது. இவர்களுக்குத் தக்க பாடம் புகட்டப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

11.02.2013. 8:31 AM

அப்சல்குருவோடு நீதிக்கும் தூக்கு!

பாராளுமன்றத் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதித்து பி.வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி.பி.நவ்லேகர் என்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் கடந்த 04/08/2005 அன்று தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் அப்சல் குரு கடந்த வாரம் தூக்கிலிடப்பட்டார்.

அப்சல் குருவோடு சேர்த்து இந்த நாட்டின் நீதி பரிபாலனமும் தூக்கிலிடப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பின் மூலம் நம் நாட்டில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கின்றதா? இந்திய அரசியலமைப்புச் சாசனச் சட்டத்தின் அடிப்படையில் தான் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றனவா? என்ற சந்தேகம் நம்முடைய உள்ளத்தில் எழுந்துள்ளது.

பாபர் மசூதி விவகாரத்தில் சாகடிக்கப்பட்ட நீதி:

இதற்கு முன்பாக பாபர் மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் பள்ளிவாசலை இடித்த பயங்கரவாதிகளுக்கு இரண்டு பங்கும், பள்ளிவாசலை இழந்த முஸ்லிம்களுக்கு ஒரு பங்கும் வழங்கி அற்புதமான(?) கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பை வழங்கி நீதியை நிலைநாட்டினார்கள்(?) நமது நீதிபதிகள்.

அது போலத் தான் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை குறித்த தீர்ப்பும் அமைந்துள்ளது.

இதோ தீர்ப்பின் வாசகங்கள்:

அப்சல் குரு எந்தவொரு பயங்கரவாதக் குழு அல்லது அமைப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. பெரும்பாலான சதித்திட்டங்களில், குற்றச் சதியில் பங்கேற்றதற்கான நேரடி சாட்சியம் இருக்க முடியாது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட அப்சல் கொல்லப்பட்ட தற்கொலைப் படை பயங்கரவாதிகளுடன் ஒத்துழைத்தார் என்பது சூழ்நிலைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் போது தெளிவாகிறது.

குற்றம் மிகப் பெரியது, கொடியது என்பதால் முழு நாடுமே இதனால் அதிர்ந்துள்ளது என்பதால் collective conscience of the society ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கூட்டு மனசாட்சியை அப்சல் குருவிற்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால் தான் திருப்திப்படுத்த முடியும். அந்த உச்ச கட்ட தண்டனை மரண தண்டனையாக இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

ஒருவருக்கு மரண தண்டனை வழங்குவதாக இருந்தால் அவர் அந்தக் குற்றத்தைச் செய்ததை கண்ணால் கண்ட சாட்சியம் இருந்தாக வேண்டும் என்பது தான் மரணதண்டனை வழங்கப்படுவதற்கான நமது இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் முக்கிய விதிகளில் ஒரு விதியாகும்.

நமது அரசியல் சாசனச் சட்டம் மரண தண்டனை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை மேற்கண்டவாறு தெளிவாகக் கூறியுள்ள நிலையில், அப்சல் குரு என்பவர் பாராளுமன்றத் தாக்குதலை நடத்தினார் என்பதற்கு எவ்வித (கண்ணால் கண்ட சாட்சிகள்) ஐவிட்னஸும் இல்லாத நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்திருப்பது நம் நாட்டின் நீதிபரிபாலனத்தையே கேலிக்குள்ளாக ஆக்கியுள்ளது.

அத்தோடு மட்டுமல்லாமல் மரண தண்டனை வழங்குவதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறிய காரணம் எள்ளி நகையாடக்கூடிய வகையிலும், நீதிமன்றத் தீர்ப்பைக் காரி உமிழக்கூடிய தரத்திலும் உள்ளது.

மக்களின் கூட்டு மனசாட்சி (collective conscience of the society) அப்சல் குருவைத் தூக்கிலிட வேண்டும் என்று விரும்புவதால் தான் இவருக்கு தூக்குத் தண்டனை என்று இவர்கள் தீர்ப்பெழுதுவார்களேயானால், மக்களின் கூட்டு மனசாட்சியை அப்போதுதான் திருப்திப்படுத்த முடியும் என்று இவர்கள் கூறுவார்களேயானால் இவர்களிடத்தில் சில கேள்விகளை நாம் கேட்க விரும்புகின்றோம்:

மக்களின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்துவது தான் நோக்கம் என்றால் ஒருவருக்கு மரண தண்டனை வழங்க எந்த சாட்சிகளும் தேவையில்லையா?

ஒருவருக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டுமா? இல்லையா? என்பதை மக்களின் கூட்டு மனசாட்சிதான் முடிவெடுக்கும் என்றால் பிறகெதற்கு நீதிமன்றங்கள்?

பிறகு எதற்கு காவல் நிலையங்கள்?

பிறகெதற்கு அரசியல் சாசனச் சட்டம்?

அனைத்தையும் கலைத்துவிட்டு மக்களின் கூட்டு மனசாட்சியையே உச்சநீதிமன்ற உயர் பெஞ்ச் என்று அறிவித்துவிட்டுப் போக வேண்டியதுதானே!

குஜராத்தில் 2000 முஸ்லிம்களைக் கொன்று குவித்து நரவேட்டையாடிய மோடியைத் தூக்கில் தொங்கவிட வேண்டும். அதுதான் சரியான தீர்வாக அமையும் என்று இந்திய முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், உலகத்திலுள்ள அனைத்து முஸ்லிம்கள் உட்பட நடுநிலையான இந்துப் பெருமக்கள் முதற்கொண்டு அமெரிக்காவிலுள்ள ஆட்சியாளர்கள் வரை அனைவரது கூட்டு மனசாட்சியும் தீர்ப்பளிக்கின்றது.

இதைக் காரணம் காட்டி மோடிக்கும் சங்பரிவாரக்கும்பல்களுக்கும் மக்களின் கூட்டு மனசாட்சி அடிப்படையில் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளிப்பார்களா?

மேற்கண்ட கேள்விகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

அப்சல் குரு எந்தவொரு பயங்கரவாத குழுவைச் சேர்ந்தவரும் இல்லை – உச்சநீதிமன்றம்:

எந்தவொரு பயங்கரவாதக் குழு அல்லது அமைப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று தெளிவாக தங்களது தீர்ப்பில் கூறியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தண்டனை அனுமானத்தின் அடிப்படையிலும், யூகத்தின் அடிப்படையிலுமானது தான் என்பதைக் கீழ்க்கண்ட தங்களது தீர்ப்பு வரிகளில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

பெரும்பாலான சதித்திட்டங்களில், குற்றச் சதியில் பங்கேற்றதற்கான நேரடி சாட்சியம் இருக்க முடியாது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட அப்சல் கொல்லப்பட்ட தற்கொலைப் படை பயங்கரவாதிகளுடன் ஒத்துழைத்தார் என்பது சூழ்நிலைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் போது தெளிவாகிறது.

இவர் குற்றம் செய்தார் என்பதற்கு நேரடியான சாட்சிகள் இல்லை என்பது தான் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு. மேலும் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு ஒத்துழைத்தார் என்பதும் கூட சாட்சியங்களின் மூலமாக தெரிய வருகின்றது என்று நீதிபதிகள் கூறவில்லை. மாறாக சூழ்நிலைகளை சீர்தூக்கிப் பார்க்கும் போது தெரிய வருகின்றது என்று கூறி தங்களது தீர்ப்பின் லட்சணத்தை தாங்களே தெளிவுபடுத்தியுள்ளனர்.

8ஆண்டுகள் தூக்குக்கு காத்திருந்தவரை தூக்கிலிட தடைசெய்த உச்சநீதிமன்றம்:

பஞ்சாப் முதலமைச்சராக இருந்த பிரதாப் சிங் கெய்ரோன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தயா சிங் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை விட ஒரு பயங்கரவாத செயல் வேறொன்றும் இருக்க முடியாது. ஆனால் இந்த பயங்கரவாதிக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது உச்சநீதிமன்றம்.

இந்த வழக்கில் மரணதண்டனை விதித்த பிறகு ஒருவர் நீண்ட காலம் தண்டனை வழங்கப்படாமலே தண்டனையை சந்திக்கப் போகிறோம் என்ற மனநிலையில் 13 ஆண்டுகாலம் சிறையில் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்திருக்கிறார். எனவே நாங்கள் தூக்குத் தண்டனையை ரத்து செய்து அதற்கு குறைவான தண்டனையான ஆயுள் தண்டனையாக குறைக்கின்றோம் என்று தீர்ப்பு சொன்னார்கள் உச்சநீதி மன்ற நீதிபதிகள்.

இதற்கு முன்பாக எத்தனையோ படுபாதக கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட எத்தனையோ நபர்களை மன்னித்து அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மரண தண்டனையை எதிர்நோக்கி இருந்துள்ளார்கள் என்று காரணம் கூறி, அந்தக் காரணத்தால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை நாங்கள் ரத்து செய்கின்றோம் என்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், அப்சல் குரு முஸ்லிம் என்பதால் மக்களின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த வேண்டும் என்பதாக தீர்ப்பெழுதியிருப்பது விநோதத்திலும் விநோதம்தான்.

இவர்கள் விரும்பினால் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி 8 ஆண்டுகாலம் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி வெந்து கொண்டிருந்துள்ளார். அதனால் தூக்கு தண்டனையை ரத்து செய்கின்றோம் என்று சொல்வார்கள்.

இவர்களுக்குப் பிடிக்காவிட்டால், தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி 8 ஆண்டு காலமாகியும் தூக்கில் போடாமல் வைத்துள்ளீர்கள். என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?. உடனே அவனை தூக்கில் போடுங்கள் என்று சொல்வார்கள் என்றால் இதுவெல்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் திட்டம் தீட்டி எழுதப்பட்ட தீர்ப்புகளாகத்தான் நாம் கருத வேண்டியுள்ளது.

அப்சல் குருவுக்கு தண்டனை கொடுத்ததிலும் விநோதம்:

அது மட்டுமல்லாமல் பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குரு கைது செய்யப்பட்டதன் பின்னணி விநோதத்திலும் விநோதமான ஒன்று.

பாராளுமன்றத்தைத் தாக்கியவர்களை சுட்டுக் கொன்ற போது இறந்து கிடந்தவர்கள் தொலைபேசியில் அவர்கள் தங்களது தொலைபேசி வாயிலாக அப்சல் குருவை தொடர்பு கொண்டிருந்தார்களாம். இதுதான் அப்சல் குரு குற்றவாளி என்பதற்கான ஆதாரமாம்.

இதில் பிரதான குற்றவாளியாக கைது செய்யப்பட்ட கிலானி என்ற பேராசிரியர் உட்பட மூன்று நபர்களில் இருவர் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். ஒருவருக்கு மட்டும் 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கிய உச்ச நீதிமன்றம், பாராளுமன்றத் தாக்குதலில் அப்சல் குரு நேரடியாக ஈடுபட்டார் என்றும் குற்றம் சாட்டவில்லை. இப்படி நேரடியாக குற்றம் சாட்டப்படாத நிலையிலும், அதற்கான நேரடி சாட்சிகள் இல்லாத நிலையிலும் இந்த வழக்கில் யாருக்காவது தூக்குதண்டனை வழங்க வேண்டும் என்று இவர்களாக முடிவெடுத்து அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்து மக்களின் கூட்டு மனசாட்சியின் மீது பழியைப்போட்டுள்ளார்கள்.

அரசியல் சாசனத்திற்கு முரணாக தங்களது மனோ இச்சைப் பிரகாரம் அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இந்திய அரசின் இறையாண்மையையும், நீதி பரிபாலனத்தையும் இந்த நீதிபதிகள் தூக்கிலிட்டுள்ளார்கள் என்பதுதான் இதிலிருந்து நாம் அறிந்து கொண்ட உண்மை.

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலை நாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

அல்குர் ஆன் 4 : 135

11.02.2013. 7:14 AM

பெட்ரோல் விலை உயரக் காரணம் என்ன?

கச்சா எண்ணெயின் விலையேற்றம் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு நஷ்டம் எனக் கூறி பெட்ரோல் விலையை ஏற்றிக் கொண்டே போகிறார்களே, அதற்கான உண்மையான காரணம் என்ன?

பதில் :

அரசாங்கத்தின் கொள்ளை அடிக்கும் மனப்பான்மை தான் இதற்குக் காரணம்.

ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால் பெட்ரோலின் விலை 20 ரூபாய் தான். 20 ரூபாய் பெட்ரோலுக்கு மத்திய மாநில அரசுகள் சுமார் 50 ரூபாய் வரி போட்டு விட்டு அடக்க விலை 70 ரூபாய் என்று மக்களை ஏமாற்றுகின்றன.

70 ரூபாய் அடக்கமாவதால் 75 ரூபாய்க்கு விற்கிறோம் என்று நாட்டுமக்கள் காதில் பூ சுற்றுகின்றனர்.

மிகவும் அவசியமான பெட்ரோலுக்கு மத்திய மாநில அரசுகள் விதி விலக்கு அளித்தால் பெட்ரோல் 25 ரூபாய்க்கு விற்க முடியும். அதன் மூலம் விற்பனையாளருக்கு 20 சதம் லாபமும் கிடைக்கும்.

அத்துடன் விலைவாசி உயர்வும் உடனடியாக பல மடங்கு குறைந்து விடும். இன்றைய விலைவாசி உயர்வுக்கு மிக முக்கிய காரணம் பெட்ரோல் விலை உயர்வு தான். சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்பது இதற்குத் தான் கச்சிதமாக பொருந்தும்.

உண்ரவு 19:9

21.11.2011. 5:56 AM

More Articles …