▶️வன்னிய மக்களின் கோபம் தவறா?
ஜெய்பீம் - தலைவிரித்தாடும் சாதி வெறி
வன்னிய மக்களின் கோபம் தவறா?
சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்விகள்
உரை: பி.ஜைனுல் ஆபிதீன்
21/11/21
ஜெய்பீம் - தலைவிரித்தாடும் சாதி வெறி
வன்னிய மக்களின் கோபம் தவறா?
சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்விகள்
உரை: பி.ஜைனுல் ஆபிதீன்
21/11/21
ஜெய்பீம் - தலைவிரித்தாடும் சாதி வெறி
நீயா நானா புர்கா விவாதத்தில் நடந்தது என்ன?
சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்விகள்
உரை: பி.ஜைனுல் ஆபிதீன்
21/11/21
அரசியல் சாக்கடையில் விழுந்த சமுதாய தலைவர்களின் பரிதாபநிலை
உரை:பி.ஜைனுல் ஆபிதீன்
சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்விகள் 14/11/21
பள்ளிக்கூடத்தில் பாலியல் சீண்டல், பெற்றோரின் கடமையும் முதல்வருக்கு கோரிக்கையும்
சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்விகள் 14/11/21
யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து
முஸ்லிம்களின் கோபத்தைக் கொப்பளித்து எரிமலையாய் வெடித்த திநகர் பொதுக்கூட்டம்!
அந்த உரையைக் காண இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை காண்க
கடந்த சில வாரங்களுக்கு முன் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தாமாக முன்வந்து சரணடைந்த யாகூப் மேமன் அவர்களை தூக்கிலிட்டு படுகொலை செய்தது மத்திய அரசு. முஸ்லிம்கள் மட்டுமே இந்த நாட்டில் தூக்குக்கு உரியவர்களாக பழிவாங்கப் படுபவர்களாக வஞ்சிக்கப்படும் சமுதாயமாக ஆக்கப்பட்டுள்ள நிலையில் அதைக் கண்டித்து இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தென் சென்னை மாவட்டம் நடத்தியது.
7 மணிக்கு துவங்குவதாக அறிவிப்புச் செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்கு மக்கள் 6 மணி முதலே குழுமத் துவங்கி விட்டனர்.
பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள், இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
யாகூப் மேமனை அநியாயமான முறையில் தூக்கிலிட்டுக் கொன்றதை கண்டிக்கும் முகமாக இந்தப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் நடத்தப்படுகின்றார்கள் என்பதையும், மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நாட்டில் மதச்சார்பின்மை என்பது மருந்துக்குக் கூட இல்லை என்பதையும் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் கூறி சகோதரர் பீஜே அவர்கள் விளக்கியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
உரையின் துவக்கமாக மதச்சார்பற்ற நாட்டை ஆளக்கூடிய ஆட்சியாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை முன்னாள் அமெரிக்க அதிபர் கென்னடி கூறிய செய்திகளை மேற்கோள்காட்டி பீஜே பேசினார்.
அதாவது கிறித்தவ மதத்திலுள்ள ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த கென்னடி அவர்கள் தான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றவுடன் ஒரு பிரகடனத்தைச் செய்தார். ரோமன் கத்தோலிக்கப் பிரிவினரின் தலைமையிடமாக உள்ள வாடிகனுக்குச் சென்று தான் ஒவ்வொரு முறையும் அங்குள்ள மதத் தலைவரான போப் ஆண்டவரிடத்தில் ஆசி வாங்கி வருவதை வழக்கமாக வைத்திருப்பதாகவும், ஆனால் தற்போது நான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ளதால் இங்குள்ள அனைத்து பிரிவு மக்களுக்கும் நான் அதிபராக ஆகியுள்ளதால் இனிமேல் போப் ஆண்டவரிடத்தில் ஆசி வாங்கச் செல்ல மாட்டேன் என்று அறிவிப்புச் செய்தார். மதச் சார்பற்ற நாட்டில் ஆட்சியாளர்களாக இருப்பவர்கள் இப்படி ஒரு சார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் மதச்சார்பற்ற இந்தியா என்று சொல்லப்படும் நம் நாட்டில் நடக்கும் அநியாயங்களைப் பட்டியலிட்டார்.
மதச்சார்பற்ற நாட்டில் அரசு அலுவலகங்களில் கடவுள் சிலைகளையும், கோவில்களையும் வைத்து வழிபாடு நடத்துவது மதச்சார்பின்ன்மையா?
தமிழக அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் சின்னத்தை வைத்திருப்பது மதச்சார்பின்ன்மையா?
பொங்கல் இனாம் கொடுக்கும் அரசாங்கம், ரமலான் பரிசு வழங்காமல் பாரபட்சம் காட்டுவது சரியா?
பெருநாள் அன்று மின்சாரத்தைத் தடை செய்து முஸ்லிம்களுக்கு வேதனையை பரிசாக கொடுப்பது தான் மதச்சார்பற்ற அரசா?
பள்ளிவாசல் கட்ட இந்து முன்னணியினர் ஆட்சேபனை செய்தால் தடை போடுவது தான் மதச்சார்பற்ற அரசின் லட்சணமா?
இராமாயணத்தை உண்மை சம்பவம் போல் ஒளிபரப்பிவிட்டு, திப்பு சுல்தானின் வீர வரலாற்றை ஒளிபரப்பும் போது இது கற்பனைக் கதை என்று மத்திய அரசின் தூர்தர்சன் தொலைக்காட்சி அறிவித்ததே
இதுதான் மதச்சார்பற்ற தன்மையா?
இந்தியாவிலுள்ள அனைத்து அரசு அதிகாரிகள் வாங்கும் சம்பளத்திலும், உண்ணும் உணவிலும் 20 சதவீதம் முஸ்லிம்களின் வரிப்பணம் இருக்கிறது.
அந்த நன்றி உணர்வு எந்த அதிகாரிக்காவது இருக்கிறதா ?
நீதி தேவதை கண்ணைக் கட்டியிருப்பது போல காட்டிவிட்டு முஸ்லிம் என்றால் மட்டும் மத துவேஷத்தோடு தீர்ப்பளிப்பது தான் மதச்சார்பற்ற தன்மையா?
தாடி வைப்பது தாலிபானிசம்;
தாடி வைக்க அனுமதி கேட்பது பாகிஸ்தானிசம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்களே! அப்படியானால் தாடி வைத்திருக்கும் மோடிக்கு அதைச் சிரைத்து விடுவீர்களா? என்று பல கேள்விகளை எழுப்பினார்.
குர்பானி கொடுக்கத் தடை போட்டு மத துவேஷத்தைத் தங்களது தீர்ப்பில் காட்டியது, பகவத் கீதையை மேற்கோள் காட்டி தீர்ப்பளித்தது என்று சராமாரியாக தீர்ப்பு என்ற பெயரில் செய்யப்பட்ட கட்டப் பஞ்சாயத்துக்களை பீஜே விலாசினார்.
சட்டத்தை மதிக்காமல் வழங்கப்படும் இத்தகைய தீர்ப்புக்கள் எங்களது கால் செருப்புக்குச் சமானம் என்று தெரிவித்தார்.
குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சங்பரிவாரக் கும்பல்களில் ஒருவருக்காவது தூக்குத் தண்டனை கொடுத்தீர்களா?
97 பேரைக் கொன்று குவித்த பாபு பஜ்ரங்கிக்கு தூக்கு வழங்காதது ஏன்?
சரணடைந்த யாகூப் மேமனை தூக்கிவலிட்டு மதவெறியை நிலை நாட்டியது
சப்ரஜித் சிங் என்ற அயோக்கியன் பாகிஸ்தானில் குண்டு வைத்த வழக்கில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்த நிலையில் அவனை அங்குள்ளவர்கள் அடித்தே கொன்று சாகடித்தனர்.
அவனுக்கு 1கோடி உதவித்தொகை, அந்த தீவிரவாதிக்கு தேசியக் கொடி போர்த்தி ராணுவ மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம், என்று கவனித்தது ஏன்?
தீவிரவாதி சப்ரஜித் சிங்க்
தேசியக்கொடி போர்த்தி கொண்டு செல்லப்படும் தேசத்துரோகியின் உடல்
துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்ட தேசத்துரோகி
இதுதான் தேசப்பற்றா? தேசப்பற்றை வெளிக்காட்டும் லட்சணமா?
அப்சல் குருவை அநியாயமாக தூக்கிலிட்டுக் கொலை செய்தது ஏன்?
உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பினார்.
இந்த அநியாயத்திற்கெல்லாம் படைத்த இறைவனிடம் முறையிடுங்கள்
அவன் நமக்கு தீர்ப்பு வழங்குவான்
இந்த அநியாயக்காரர்களுக்கு இங்கும் மறுமையில் அல்லாஹ் இழிவை வழங்குவான் என்று ஆக்ரோசமான முறையில் பேசி முடித்தார்.
முஸ்லிம்களின் கோபத்தை கொபளிப்பதாகவும், ரணமாக வேதனைப்பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களின் உள்ளத்திற்கு ஆறுதலாகவும், இஸ்லாமியர்களிடத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பறைசாற்றும் விதமாகவும் இந்தப் பொதுக்கூட்டம் ஒரு மாநாட்டைப் போல மக்கள் திரளால் நிரம்பி வழிந்தது.
அல்ஹம்துலில்லாஹ்
அந்த உரையைக் காண இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை காண்க
16.08.2015. 9:38 AM
பாஜக இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறக் காரணம் என்ன?
பரகத்துல்லா, பத்தமடை
பதில்
காங்கிரஸ் கட்சி ஒழிந்தால் போதும் என்ற அளவுக்கு காங்கிரஸ் மக்களின் கோபத்துக்கு உள்ளாகி இருந்தது. எப்படியாவது காங்கிரஸ் ஒழிந்தால் போதும் என்ற நிலையில் மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள். அதை பாஜக பயன்படுத்திக் கொண்டது. இது தான் ஒரே காரணம்.
காங்கிரஸ் செய்த ஊழல் உள்ளிட்ட எல்லா அயோக்கியத்தனங்களையும் பாஜகவும் செய்தது. பணக்காரர்களுக்குச் சாதகமாக ஆட்சி நடத்துவதில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அப்படி இருந்தும் காங்கிரசுக்கு மாற்றாக பாஜகவை ஏன் மக்கள் கருதினார்கள் என்பது தான் கவனிக்கப்பட வேண்டும்.
இரண்டுமே அனைத்து அயோக்கியத்தனக்களிலும் சமமானவை எனும் போது காங்கிரசுக்கு மாற்றாக பாஜகவை ஏன் மக்கள் தேர்வு செய்தார்கள் என்றால் சோனியா, ராகுல், மன்மோகன், சிதம்பரம் போன்ற படித்த மேதைகள் தான் காரணம்.
இரண்டு திருடர்களில் ஒரு திருடன் மற்றவனை திருடன் என்று குற்றம் சாட்டினால் நீ தான் திருடன் என்று திருப்பி அடிக்க வேண்டுமல்லவா? மதிகெட்ட காங்கிரஸ் தலைமை இப்படி உரிய பதிலடி கொடுக்கவில்லை. பாஜகவின் ஊழலை அம்பலப்படுத்தி இருவரும் சமம் என்ற நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற அரசியல் அறிவு இல்லை.
ஒரு மாணவி கற்பழிக்கப்பட்டதை வைத்து காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற தோற்றத்தை பாஜக ஏற்படுத்திய போது பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களைப் பட்டியல் போட்டு பாஜக ஆட்சியில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் என்று எளிதாக நிலைநாட்டி இருக்க முடியும்.
இதற்கும் ஊமை மன்மோகனும் மக்களை அணுகாத வெள்ளைக் காலர் சிதம்பரமும் காங்கிரசின் முக்கிய தலைவர்களும் தக்க பதில் கொடுக்கவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ வீரரின் தலையை வெட்டி நமது எல்லையில் போட்டது என்றார் மோடி. இது போல் வாஜ்பாய் ஆட்சியிலும் நடந்தது என்பதை இவர்கள் உரத்துச் சொல்லி மறுத்து இருந்தால் இது எடுபடாமல் போய் இருக்கும். அதைச் செய்யவும் படித்த முட்டாள்களுக்குத் தெரியவில்லை.
மும்பை தாக்குதலைச் சொல்லி பாகிஸ்தான்காரன் நமது நாட்டில் புகுந்து தாக்குதல் நடத்துகிறான். அதைத் தடுக்க காங்கிரசுக்கு துப்பு இல்லை என்றது பாஜக. உன் ஆட்சியில் தான் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடந்தது என்று பதிலடி கொடுக்க வேண்டும் என்ற அறிவும் இந்த மதியீனர்களுக்கு இல்லை.
மன்மோகன், பாகிஸ்தான் பிரதமரோடு கை குலுக்குகிறார் என்று பாஜக செய்த பிரச்சாரத்துக்கும் மவுனம் தான் இந்த மூடர்களின் பதிலாக இருந்தது. பாகிஸ்தானுக்கு ரயில் விட்டது யார்? கார்கில் ஊடுறுவல் நடந்தது யார் ஆட்சியில்? கார்கில் ஊடுறுவல் நாயகன் முசரபுக்கு பட்டுக் கம்பள வரவேற்பு அளித்தவர் வாஜ்பாய் தானே?
தீவிரவாதிகளுக்கு பணிந்து கந்தகாருக்கு போய் தீவிரவாதிகளை ஒப்படைத்து விட்டு வந்தது யாருடைய ஆட்சி என்று எகிறி அடிக்க எண்ணற்ற ஆதாரங்கள் இருந்தும் இந்த மடையர்கள் அதற்கும் பதிலடி கொடுத்து வாயடைக்கச் செய்யவில்லை.
இந்திய மீனவர்கள் இலங்கைப் படையினரால் கைது செய்யப்படுகின்றனர் என்று மோடி பேசியதற்கும் பதில் கொடுக்கவில்லை. வாஜ்பாய் ஆட்சியில் தான் இதைவிட அதிக மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்ற புள்ளிவிபரங்கள் கையில் இருந்தும் அதை எடுத்து வீரியமான பிரச்சாரம் செய்யவில்லை.
அதே நேரத்தில் மோடியின் அயோக்கியதனத்தை அம்பலப்படுத்தும் வகையில் அவருக்கு ஒரு பெண்ணுடன் உள்ள தொடர்பு தெரியவந்தது. அந்தப் பெண்ணுக்காக உளவுத்துறை அதிகாரிகள் இரு மாநிலங்களில் உளவு பார்த்தார்கள். அந்தப் பெண்ணின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டார்கள். இப்படிப்பட்ட ஒருவர் பிரதமராகலாமா என்பதைக் கையில் எடுத்து சரியான முறையில் கொண்டு சென்று இருந்தால் ஒழுக்கத்தை விரும்பும் பண்பாடுள்ள இந்திய மக்கள் மோடியை வெறுத்து இருப்பார்கள். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் பிரமுகர்களை நாம் சந்தித்து இது நல்ல வாய்ப்பு. இது ஒன்றே மோடியை ஒழித்துக் கட்டப் போதுமானது என்று ஆலோசனை சொன்னோம்.
நாடு முழுவதும் காங்கிரஸ்காரர்கள் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்துங்கள், மோடி மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்தினால் மோடி பெண்பித்தர் என்ற கருத்துருவாக்கம் ஏற்படும் என்றெல்லாம ஆலோசனை கொடுத்தோம். எங்கள் கட்சியில் அதெல்லாம் செய்ய மாட்டார்கள் என்பதுதான் அவர்களின் பதிலாக இருந்தது.
பதவிப் பிரமானத்துக்கு எதிராக உளவுத்துறையைச் சொந்த வேலைக்குப் பயன்படுத்தியதாக மத்திய அரசு விசாரணைக் கமிசன் அமைத்து விசாரிப்போம் என்று கூறி விட்டு அதை அப்படியே கிடப்பில் போடும் அளவுக்கு இவர்களின் அரசியல் அறிவு இருந்தது.
எந்தப் பிரச்சனையையும் எப்படிக் கையாள்வது என்ற அறிவும் இவர்களுக்கு இல்லை. தெலுங்கானா பிரச்சனையை மாற்றி மாற்றி பேசி மாநிலத்தை ரணகளமாக்கினார்கள்.
தெலுங்கானா பகுதியில் வாக்கெடுப்பு நடத்துவோம். மக்கள் தனி மநிலத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் மாநிலத்தைப் பிரிப்போம்; இல்லாவிட்டால் பிரிக்க மாட்டோம் என்று சொன்னால் அனைத்து கட்சியினரும் அதை ஏற்று இருப்பார்கள். பிரிப்பது என்று முடிவு எடுத்தாலும் பிரிப்பதில்லை என்று முடிவு எடுத்தாலும் அதை மக்கள் தலையில் போட்டு விடலாம் என்ற திட்டத்தை மேதாவி சிதம்பரத்துக்கு கடிதம் மூலம் நாம் தெரிவித்தோம். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தீர்க்க வழிமுறைகள் உள்ளன என்றும் தெரிவித்தோம். இப்படி எளிதாக தீர்க்க வேண்டிய பிரச்சனையைத் தவறாக தீர்க்க முயன்று ஆந்திராவில் காங்கிரசை அழித்தார்கள்.
ஆந்திராவில் ராஜசேகர் ரெட்டியின் மறைவுக்குப் பின் அவரது மகனுக்குப் பின்னால் மக்கள் நிற்கிறார்கள் என்பது சிறு பிள்ளைக்கும் தெரிந்தது. ஆனால் அவர் வரக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் எடுத்த நடவடிக்கைகளும் ஆந்திராவில் காங்கிரசை அழித்தன.
அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராகப் போராடுவது போல் சித்தரித்து காங்கிரசுக்கு எதிரான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்திய போது அவருக்கு நெருக்கடி கொடுக்காமல் விட்டு இருக்க வேண்டும். நெருக்கடியும் கொடுத்து அவரைக் கைதும் செய்து எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லும் வகையில் நாங்கள் ஊழல்வாதிகள் என்று ஒப்புக் கொள்வது போல் நடந்து கொண்டது காங்கிரஸ்.
பாஜக ஊழலுக்கு எதிராக தம்பி ஹசாரே என்று ஒருவரை உருவாக்கி பில்டப் கொடுத்து பாஜக ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்ப் போராட்டத்தை நடத்தி இருந்தால் பாஜக ஆதாயம் அடைய முடியாமல் தடுத்து இருக்கலாம்.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்குக் கூட பிரதமரும் காங்கிரசை அழித்த சிதம்பரமும் எந்தப் பதிலும் விளக்கமும் மக்களுக்குச் சொல்லவில்லை.
மோடி டீக்கடைக்காரர் என்ற ஆயுதத்தை எடுத்தார்கள். இது மோடிக்குச் சாதகமாக அமையும் என்ற சாதாரண அறிவு கூட காங்கிரசாருக்கு இல்லை.
மோடியின் அம்மா ஆட்டோவில் போகிறார்; தாயைக் கவனிக்கவில்லை என்ற ஆயுதத்தை எடுத்தார்கள். பெற்ற தாய் என்பதற்காக எந்தச் சலுகையும் காட்டாத எளிமையானவர் என்று இது மாறும் என்பது கூட தெரியாக மடையர்களாக கங்கிரசார் இருந்தார்கள்.
கங்கிரஸ் செய்த எல்லா அயோக்கியத்தனங்களையும் பாஜக செய்து இருந்தும் பாஜக பரிசுத்தம் என்பது போலவும் காங்கிரஸ் மட்டுமே அயோக்கியர்கள் போலவும் சித்தரித்து வெற்றி பெற்றார்கள் என்றால் மூளையற்ற காங்கிரசின் தலமை தான் இதற்குக் காரணம்.
களத்தில் நின்று உழைப்பவர்களை அருகில் வைத்துக் கொள்ளாமல் ஒயிட் காலர் தலைவர்களை முன்னிறுத்தினார்கள். மக்களின் நடித்துடிப்பை அறிந்து கொள்ளாத இவர்களின் ஆலோசனையைக் கேட்டதும் இந்த வீழ்ச்சிக்குக் காரணம்.
ஒரு காரியம் சரியா தவறா என்பதை மட்டும் ஏசி அறையில் விவாதிப்பது அரசியலுக்கு உகந்தது அல்ல. இதை மக்கள் ஏற்பார்களா என்பதையும் அறிந்து செயல்படுவது தான் அரசியல். இந்த அரசியல் மன்மோகனுக்கும் தெரியாது. தலைக்கணத்தில் யாராலும் மிஞ்ச முடியாத சிதம்பரத்துக்கும் தெரியாது. பல்லாண்டுகளாக காங்கிரசை வைத்து பிழைப்பு நடத்திய கிழட்டுத் தலைவர்களுக்கும் தெரியாது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தலைவரின் கீழ் செயல்பட வேண்டும். அவர் மக்களால் அறியப்பட வேண்டும். ஒரு மாநிலத்தில் ஒருவர் வளர்ந்தால் நமக்கு கட்டுப்பட மாட்டார்கள் என்று நினைத்து ஏராளமான கோஷ்டிகளை உருவாக்கி ஒரு தலைவரின் கீழ் கட்சி செயல்பட முடியாத நிலையை ஏற்படுத்தினார்கள். ஜகன்மோகனை ஓரம் கட்டி போட்டி தலைவர்களை உருவாக்கி கட்சியை அழித்தனர். தமிழகத்திலும் ஒரு தலைவரின் கீழ் கட்சி செயல்படவில்லை.
இன்னும் பல காரணங்கள் உள்ளன. அனைத்திலும் காங்கிரசின் முட்டாள்தனம் பளிச்சிடுகிறது. இதன் காரணமாக மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து இருந்த காங்கிரஸ் ஒழிந்தால் போதும் என்று கருதிய மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தார்கள்.
இவை பாஜகவின் ஆதரவு ஓட்டு அல்ல. காங்கிரசின் எதிர்ப்பு ஓட்டுக்களாகும். இது நீடிக்காது, காங்கிரஸ் துடிப்புள்ள மூளையுள்ளவர்களின் ஆலோசனையுடன் அரசியல் நடத்தினால் அடுத்த தேர்தலுக்குள் இதை மாற்ற முடியும்.
தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன
கேள்வி
பாஜக அதிகமான இடங்களை வென்றாலும் அவர்களுக்குக் கிடைத்தது 30 சதவிகித வாக்குகள் தான். எழுபது சதவிகித மக்கள் பாஜகவுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். எனவே இது பெரிய வெற்றியல்ல என்று கூறுவது சரியா?
சனாவுல்லா, அய்யம்பேட்டை
பதில்
இதற்கு முன் நடந்த தேர்தல்களில் ஆட்சிக்கு வந்தவர்கள் ஐம்பது சதவிகிதத்துக்கு மேல் பெற்று ஆட்சிக்கு வந்து இருந்து பாஜக மட்டும் 30 சதவிகித வாக்குகளில் அதிக இடங்கள் பெற்று இருந்தால் தான் இந்த வாதம் சரியாக இருக்கும்.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் இது போன்ற நிலைதான் இருந்து வந்துள்ளது. நாளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களும் ஐம்பது சதவிகிதத்துக்குக் குறைவாகப் பெற்றுத்தான் ஆட்சிக்கு வருவார்கள். எனவே இந்த வாதத்தை வைத்து நம்மை நாமே போலியாக ஆறுதல் படுத்திக் கொள்ளக்கூடாது. பாஜக இதற்கு முன்னர் 30 சதவிகித வாக்குகளைப் பெறவில்லை. இப்போது பெற்றுள்ளது என்ற உண்மையை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் நமது நாட்டில் பிரிட்டன் ஜனநாயகத்தின் அடிப்படையிலான தேர்தல் முறை உள்ளது இது மாறினால் பாஜக இவ்வளவு அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்க முடியாது. இதற்கு முன் காங்கிரஸ் கட்சியும் பெரிய வெற்றியைக் கண்டிருக்க முடியாது.
இது குறித்து 2011 ஆம் ஆண்டு உணர்வு இதழில் நாம் எழுதியதன் ஒரு பகுதியை இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.
நமது இந்தியாவில் உள்ள தேர்தல் அமைப்பு பிரிட்டன் நாட்டில் உள்ள தேர்தல் முறையாகும். பிரிட்டன் ஜனநாயக முறை என்ற இந்தத் தேர்தல் முறை ஒரு சூதாட்டம் போன்றதாகும். பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஆட்சி அமைவதற்காகத் தான் ஜனநாயகம் தேவைப்படுகிறது. ஆனால் பிரிட்டன் ஜனநாயகத்தில் சிறுபான்மை மக்களின் விருப்பத்திற்கேற்ப பல நேரங்களில் ஆட்சி அமைந்து விடுவதுண்டு.
உதாரணமாக ஒரு தொகுதியில் ஆயிரம் வாக்காளர்கள் இருப்பதாகவும் அந்தத் தொகுதியில் ஐந்து பேர் போட்டி இடுகிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.
ஏ என்பவர் 210 வாக்குகள் வாங்குகிறார்.
பி என்பவர் 200 வாக்குகள் வாங்குகிறார்.
சி என்பவர் 200 வாக்குகள் வாங்குகிறார்.
டி என்பவர் 200 வாக்குகள் வாங்குகிறார்.
இ என்பவர் 190 வாக்குகள் வாங்குகிறார்.
ஆயிரம் ஒட்டுக்கள் மேற்கண்டவாறு பிரிந்தால் ஏ என்பவர் வெற்றி பெற்றவர் என்று நம்முடைய நாட்டில் உள்ள பிரிட்டன் ஜனநாயகத் தேர்தல் கூறுகிறது. ஆனால் இவர் 790 பேரின் அதிருப்தியைப் பெற்றுள்ளார். 210 பேரின் ஆதரவை மட்டுமே பெற்றுள்ளார். இவர் பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின்படி தேர்வு செய்யப்படவில்லை என்பது தான் உண்மை.
இந்த அடிப்படையில் இது போலி ஜனநாயகமாகவும், மறைமுக சூதாட்டமாகவும் உள்ளது. இரண்டு பேர் மட்டும் போட்டியிடும் போது தவிர மற்ற சந்தர்ப்பங்களில் இது போல் நடப்பதை நாம் காணலாம்.
மேலும் இந்தத் தேர்தல் முறை அனைத்து மக்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இல்லாமல் போய் விடுகிறது.
ஒரு மாநிலத்தில் 100 தொகுதிகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் வாக்காளர் என்றும் வைத்துக் கொள்வோம்.
ஒவ்வொரு தொகுதியிலும்
ஏ கட்சி 501 ஓட்டுக்களும்
பி கட்சி 499 ஓட்டுக்களும்
பெறுவதாக வைத்துக் கொள்வோம்.
இப்போது நூறு தொகுதிகளிலும் ஏ கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. பி கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றும் அறிவிக்கப்படுகிறது. இது நம்முடைய பிரிட்டன் ஜனநாயக முறை. அதாவது ஏ கட்சிக்கு 100 எம் எல் ஏக்கள் கிடைக்க, பி கட்சிக்கு ஒரு எம் எல் ஏ கூட இல்லை.
ஆனால் இரண்டு கட்சிகளும் வாங்கிய ஓட்டுக்களில் தொகுதிக்கு இரு ஓட்டு வீதம் இருநூறு வாக்குகள் தான் வித்தியாசம்.
ஏ கட்சி நூறு தொகுதிகளில் வாங்கிய மொத்த ஓட்டுக்கள் 50100
பி கட்சி நூறு தொகுதிகளில் வாங்கிய மொத்த ஓட்டுக்கள் 49900.
ஏ கட்சி எல்லா இடங்களிலும் வெற்றி பெற, பி கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. பி. கட்சிக்கு வாக்களித்த மக்களின் கருத்தைப் பிரதிபலிக்க சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லை. எனவே தான் இது போலி ஜனநாயகம் என்று கருதப்படுகிறது.
ஒவ்வொரு தொகுதியிலும் சிறுபான்மையாக உள்ள மக்களுக்கு ஒரே ஒரு பிரதிநிதித்துவம் கூட கிடைப்பதில்லை. கிடைக்க வேண்டுமானால் பெரிய கட்சிக்கு அடிமைச் சீட்டு எழுதிக் கொடுத்து ஜால்ரா போட்டால் தான் ஒன்றிரண்டு இடங்களில் வெற்றி பெற முடியும். அதுவும் மார்க்கத்தையும், மானத்தையும் விட்டு விட்டு சமுதாயத்தை மறந்து விட்டு ஜால்ரா போட்டால் தான் இது சாத்தியமாகும்.
இதை விட ஜெர்மன் நாட்டில் உள்ள ஜனநாயகம் பல வகைகளில் சிறந்து விளங்கும் ஜனநாயகமாகும். எல்லா மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் தானாகவே கிடைத்து விடும். இந்த முறைதான் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் எனப்படுகிறது.
அதாவது உதாரணத்துக்கு அதே நூறு தொகுதியை எடுத்துக் கொள்வோம். விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல்முறையில் எப்படி பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
இந்தத் தேர்தலில் ஆட்கள் போட்டியிட மாட்டார்கள். சங்கம், கட்சி ஆகியவை தான் போட்டியிடும்.
ஒவ்வொரு ஆயிரம் ஓட்டுக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்று நிர்ணயிக்கப்படும்.
நூறு தொகுதியிலும் ஏ கட்சி மேலே நாம் சொன்ன அதே எண்ணிக்கையில் 50100 வாக்குகள் வாங்கினால் ஆயிரத்துக்கு ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர்கள் ஐம்பது உறுப்பினர்களை நியமித்துக் கொள்ளலாம்.
அது போல் 49900 வாக்குகள் பெற்ற பி அணி 49 சட்டமன்ற உறுப்பினரை நியமித்துக் கொள்ளலாம்.
இருவருக்கும் இடையில் ஓட்டு எண்ணிக்கையில் சிறிய வித்தியாசம் தான் உள்ளது. எனவே அதற்கேற்ப ஒரே ஒரு உறுப்பினர் தான் இரண்டு கட்சிக்கும் வித்தியாசம் இருக்கும். அனைத்து மக்களின் ஓட்டும் மதிப்பு மிக்கதாக ஆகின்றது. அனைவருக்கும் அவரவர் பலத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கிடைத்து விடுகிறது.
யாருடனும் கூட்டணி சேராமல் சிறுபான்மை சமுதாயத்துக்கும் சிறிய கட்சிகளுக்கும் அவர்களுக்கு உரிய பங்கு கிடைத்து விடுகிறது.
மேலே சொன்ன அதே நூறு தொகுதிகளை எடுத்துக் கொள்வோம். அந்த நூறு தொகுதிகளிலும் முஸ்லிம்கள் தலா 100 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
நமது நாட்டில் உள்ள பிரிட்டன் ஜனநாயகத் தேர்தல் பிரகாரம் முஸ்லிம் கட்சி நூறு தொகுதியிலும் போட்டியிட்டால் தொகுதிக்கு நூறு ஓட்டு கிடைக்கும். ஆனால் எல்லா தொகுதிகளிலும் முஸ்லிம் கட்சி தோற்றதாக ஆகும். ஒரு தொகுதியில் கூட முஸ்லிம் கட்சி ஜெயிக்க முடியாது. முஸ்லிம்களின் அத்தனை ஓட்டுக்களும் வீணாகி விடுகின்றன. எனவே தான் கொள்கையற்ற கூட்டணி வைத்து கேவலப்படும் நிலை ஏற்படுகிறது.
ஆனால் ஜெர்மன் ஜனநாயகம் எனப்படும் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் படி தொகுதிக்கு 100 என்ற கணக்குப்படி முஸ்லிம் கட்சி பத்தாயிரம் ஓட்டுகளை வாங்கும். ஆயிரம் ஓட்டுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற கணக்குப்படி முஸ்லிம்களுக்கு பத்து உறுப்பினர் கிடைப்பார்கள். யாருடனும் சந்தர்ப்பவாத கூட்டணி இல்லாமலே நமக்கு உரிய பங்கு இதன் மூலம் கிடைத்து விடும்.
அது போல் திமுக, அதிமுக அல்லாத சிறிய கட்சிகள் இந்த ஜெர்மன் ஜனநாயக முறையில் யாருடனும் கூட்டணி இல்லாமல் தேர்தலைச் சந்தித்தால் அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகள் எதுவும் வீண் போகாமல் வாங்கிய வாக்குகளுக்கு ஏற்ப சட்டமன்றத்துக்குள் நுழைவார்கள்.
இந்த முறையில் தேர்தல் சீர்திருத்தம் செய்தால் தான் அனைவரும் அரசியல் அதிகாரம் பெற முடியும். எவருடனும் கூட்டணி வேண்டாம். கூழைக் கும்பிடு வேண்டாம். இஸ்லாமிய வரம்பை மீற வேண்டாம். ஆனாலும் நமக்கு உரிய பங்கு கிடைத்து விடும்.
முஸ்லிம் சமுதாயத்தில் அதிகக் கட்சிகள் இருந்தால் கூட பங்கம் வராது. மேற்கண்ட பத்தாயிரம் வாக்குகளை இரண்டு முஸ்லிம் கட்சிகள் தலா ஐந்தாயிரம் என பிரித்துக் கொண்டால் ஒவ்வொரு கட்சிக்கும் ஐந்து உறுப்பினர்கள் கிடைப்பார்கள். அவ்வளவு தான் வித்தியாசம். நாடு முழுவதும் ஆயிரம் ஓட்டு கூட வாங்காத கட்சிக்குத் தான் பங்கு இருக்காது. அத்தகைய லட்டர் பேடு கட்சிகள் ஒழிவது நல்லது தான். ஓரளவாவது மக்கள் ஆதரவு உள்ளவர்கள் மட்டுமே களத்தில் இருப்பார்கள்.
ஆனால் அந்த நிலையை அடைவதற்கு தேர்தல் முறையில் மாற்றம் செய்ய வேண்டும். இதை எல்லா கட்சிகளுக்கும் புரிய வைக்க வேண்டும்.
இவ்வாறு நாம் எழுதினோம்.
இது முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அனைத்துக் கட்சிகளுக்கும் நன்மை பயக்கக் கூடியதாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 542 ஆகும். இப்போது பாஜவுக்கு 30 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன. 542ல் 30 சதவிகிதம் என்பது 162 தொகுதிகள் தான். இதுதான் பாஜகவின் ஒட்டு எண்ணிக்கைக்கு ஏற்ப கிடைக்க வேண்டிய எண்ணிக்கையாகும்.,
காங்கிரஸ் 19 சதவிகிதம் ஓட்டுக்கள் பெற்றுள்ளது. இதற்கு விகிதாசாரக் கணக்குப்படி 118 இடங்கள் கிடைத்து இருக்கும். பலமான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் ஆகியிருக்கும். ஆனால் கிடைத்தது 44 இடங்கள்.
மாயாவதி கட்சி நான்கு சதவிகிதத்துக்கு மேல் ஓட்டுக்களைப் பெற்றும் அதற்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த வாக்குகளுக்கு 22 இடங்கள் அக்கட்சிக்கு கிடைத்து இருக்கும்.
அதிமுக 45 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. இதற்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் 19 தான். ஆனால் 37 இடங்கள் கிடைத்துள்ளன.
திமுக 23 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. இதற்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் 9 ஆகும். ஆனால் கிடைத்தது பூஜ்யம். இது போல் மதிமுக, தேமுதிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளில் ஆறு லட்சம் வாக்குகளுக்கு ஒரு இடம் என்ற அடிப்படையில் ஓரிரு இடங்கள் கிடைத்து இருக்கும்..
நாட்டு மக்கள் தொகையில் 20 சதவிகிதமாக உள்ள முஸ்லிம்களுக்கு 120 இடங்கள் கிடைக்க வேண்டும். ஆனால் கேடு கெட்ட இந்தத் தேர்தல் முறையால் பத்து இடங்கள் தான் கிடைக்கின்றது. ஆனால் ஜெர்மன் ஜனநாயக முறையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் அவரவர் சதவிதத்துக்கு ஏற்ப பங்குகள் கிடைத்து விடும்.
ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் எப்போதும் இதை எதிர்ப்பார்கள். 37 இடங்களை இப்போது வென்ற அதிமுக 19 இடங்களில் தான் வெற்றி பெற முடியும். இதை அதிமுக விரும்பாது. சென்ற முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இதை ஆதரிக்கவில்லை. தோற்றுப்போன பிறகு இதைப் பற்றிப் பேசுகிறது. இந்தத் தேர்தல் முறையினால் அடுத்த தேர்தலில் பாஜக காங்கிரசின் நிலையை அடையலாம். ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க ஜெர்மன் ஜனநாயகம் தான் ஒரே வழியாகும். இதனால் எந்தக் கட்சிக்குப் போடும் ஓட்டும் வீணாகாது. அனைவரின் ஓட்டுக்களும் மதிப்புடையதாக ஆகும்.
இதற்கான கருத்துவாக்கத்தை ஏற்படுத்தி போலி ஜனநாயகமாக உள்ள இந்தத் தேர்தல் முறையை ஒழித்துக்கட்ட அனைவரும் தீவிரமாக உழைக்க வேண்டும். இந்தக் கருத்தை அனைத்து கட்சிகளிடமும் கொண்டு செல்வது இட ஒதுக்கீட்டை விட மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அசுர பலத்துடன் ஆட்சியாளர்கள் ஆட்டம் போடுவதற்கு கடிவாளமாகவும், எப்போதும் பலமான எதிர்க்கட்சி அமைவதை உறுதி செய்வதாகவும் இது அமையும்.
கேடுகெட்ட கூட்டணிக் கலாச்சாரத்துக்கு ஜெர்மன் ஜனநாயகத்தில் வேலை இருக்காது. கட்சி மாறுவதற்கு இடம் இருக்காது. இன்னும் எண்ணற்ற நன்மைகள் இதனால் ஏற்படும்.
இந்தத் தேர்தல் முடிவில் இருந்து முஸ்லிம்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?
சல்மான், கோவை
பதில்
காங்கிரஸ் மீது என்ன தான் கோபம் இருந்தாலும் மோடி நடத்திய பயங்கரவாதச் செயலை நடுநிலை இந்துக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று நாம் நினைத்தோம்.
முஸ்லிம்கள் ஒழிய வேண்டும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் 30 சதவிகிதம் அளவுக்கு வாக்குகள் பெறுவார்கள் என்று நாம் நினைக்கவில்லை. குஜராத்தில் நடந்த கொடூரச் செயலைப் பார்த்து விட்டு, வயிற்றில் உள்ள குழந்தையைக் கூட ஈட்டியால் குத்தி கொலை செய்த கொடூரத்தைப் பார்த்து விட்டு, சிலிண்டர்களை வீடுகளில் வீசி கொளுத்திப் போட்ட கொடூரத்தைப் பார்த்து விட்டு இந்தக் கொடியவர்களை இந்துக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று நாம் நினைத்தோம்.
முஸ்லிம்களை அழித்து ஒழிக்கும் கொள்கை உடையவர் என்று தெரிந்து இருந்தும் மோடியை இவர்களால் ஆதரிக்க முடிகிறது என்றால் முஸ்லிம்கள் அநியாயமாக அழிக்கப்பட்டதும் அழிக்கப்படலாம் என்பதும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.
முஸ்லிம்களுக்கு எவ்வளவு பெரிய கொடுமை செய்தாலும் அது ஒரு பிரச்சனை இல்லை என்ற மனநிலைக்கு இவ்வளவு மக்கள் வந்து விட்டார்கள் என்பது தான் இதில் இருந்து நமக்குத் தெரியவருகிறது.
நம் சமுதாயத்தில் உள்ள சில மூடர்கள் குண்டு வைத்தல் போன்ற காரியங்களில் இறங்குவதும் மற்றவர்கள் வைக்கும் குண்டுகள் முஸ்லிம்கள் மீது போடப்படுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலைக்கு காரணமாக இருந்துள்ளது. ஊடகங்கள் இவ்வாறு சித்தரிப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.
இதை மாற்ற நாம் முயல வேண்டும். ஒட்டு மொத்த முஸ்லிம்களும் இதை வெறுக்கிறார்கள் என்றாலும் அது உரிய முறையில் மக்களைச் சென்றடையவில்லை. முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளாகவோ, தீவுரவாதிகளின் ஆதாரவாளர்களாகவோ இருக்கிறார்கள் என்ற கருத்து ஆழமாகப் பதிந்துள்ளது. தமிழகத்தை விட இந்தி பேசும் மாநிலங்களில் இது அதிகமாகப் பதிந்துள்ளது.
இதை மாற்றி அமைக்க நாம் பாடுபட வேண்டும். பாஜக ஆதரவு 30 சதவிகிதத்தைக் குறைக்கும் வகையில் நாம் திட்டங்கள் வகுத்தாக வேண்டும்.
இதன் துவக்கமாக குண்டு வெடிப்புக்கும், தீவிரவாதச் செயலுக்கும் முஸ்லிம்கள் ஆதரவாக இல்லை என்பதை உணர்த்தும் வகையில் கட்டுக்கடங்காத கூட்டத்தைத் திரட்டி கண்டனப் பேரணிகள் எல்லா ஊரிலும் நடத்த வேண்டும். முஸ்லிம்கள் இது போன்ற செயல்களை நஞ்சாக வெறுக்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையிலும் அனைத்து சமுதாய மக்களும் இதைக் கவனிக்கும் வகையிலும் நடத்தப்பட வேண்டும். இதற்கான திட்டம் அடுத்த வாரம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அறிவிக்கப்படவுள்ளது.
மேலும் தனி நபர் சந்திப்புகளை அதிகப்படுத்தி நாட்டில் நமக்கு என்ன நடக்கிறது என்பதையும் புரியவைக்க வேண்டும். இதற்காக கடுமையாக நாம் உழைக்க வேண்டும். முஸ்லிமல்லாத மக்கள் மனங்களில் உள்ள வெறுப்பை அகற்றுவது தான் உடனடியாகச் செய்ய வேண்டியதாகும்.
மோடி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று நாம் அஞ்சத் தேவை இல்லை. இந்தியாவில் சிறுபான்மையாக உள்ள மக்களிடம் தான் உலக நாடுகளின் அதிகாரம் உள்ளது. சிறுபான்மை மக்கள் நசுக்கப்படும் போது வல்லரசுகளான கிறித்தவ நாடுகளும், பொருளாதார வல்லரசுகளான இஸ்லாமிய நாடுகளும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். ஐநா வரை பிரச்சனையாகும். அதைக் கவனத்தில் கொண்டு தான் ஆட்சி நடத்த முடியும் என்று நம்புகிறோம். எனவே அதிகமாக நாம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை.
பாடப்புத்தகங்களில் இந்து மதக் கருத்தைப் பரப்புதல், சிறுபான்மை கல்விக் கூடங்களின் சலுகைகளைப் பறித்தல், இட ஒதுக்கீட்டின் பயன் முஸ்லிம்களுக்குக் கிடைக்காமல் தடுத்தல், பசுமாடுகளை அறுக்கத் தடை செய்தல், கட்டாய மதமாற்றம் என்ற பெயரில் இடையூறு செய்தல் இது போல் சில்லறைத்தனமான வேலைகள் செய்ய ஓரளவு வாய்ப்பு உள்ளது. உலக அளவில் நல்ல பெயர் எடுப்பதற்காக அவ்வாறு செய்யாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
பாபர் மஸ்ஜிது சம்மந்தமாக வழக்கு போட்டவர்களை மிரட்டி அல்லது சரிக்கட்டி அது குறித்த வழக்கை வாபஸ் பெறச் செய்து .சட்டப்படியான தடை இல்லாமல் ஆக்கி அந்த இடத்தைக் கோவிலாக்க முயற்சிக்கலாம்.
வைப்பாட்டி தான் வைத்துக் கொள்ளலாமே தவிர இரண்டாம் திருமணம் கூடாது என்றும் நீதிமன்றங்கள் மூலமே விவாக ரத்து செய்ய வேண்டும் எனவும் சட்டங்கள் கொண்டு வர முயற்சிக்கலாம்.
இவை நடக்கும் போது இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை சமுதாயம் கவனத்தில் கொள்ளும். இதனால் ஏற்படும் விழிப்புணர்வு முஸ்லிம்களுக்கு நன்மையாக மாறும். எனவே நாம் இப்போது அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை