Sidebar

18
Thu, Jun
சமீபத்திய செய்திகள்

ஜனாஸாவுக்காக எழுந்து நிற்க வேண்டும்

முஸ்லிமின் உடலோ, முஸ்லிம் அல்லாதவரின் உடலோ ‎நம்மைக் கடந்து சென்றால் உடனே எழுந்து நிற்க வேண்டும். ‎அது நம்மைக் கடந்து சென்ற பின் தான் அமர வேண்டும்.‎

صحيح البخاري

‎1308 - ‎حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ رَضِيَ اللَّهُ ‏عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَى أَحَدُكُمْ جِنَازَةً، فَإِنْ لَمْ يَكُنْ مَاشِيًا مَعَهَا، فَلْيَقُمْ حَتَّى يَخْلُفَهَا أَوْ تُخَلِّفَهُ ‏أَوْ تُوضَعَ مِنْ قَبْلِ أَنْ تُخَلِّفَهُ‎»‎

உங்களில் ஒருவர் ஜனாஸாவைக் கண்டால் அதனுடன் அவர் ‎நடப்பவராக இல்லையென்றால் அது கடக்கும் வரை எழுந்து ‎நிற்க வேண்டும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)‎

நூல்: புகாரி 1308‎

صحيح البخاري

‎1311 - ‎حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ ‏عَنْهُمَا، قَالَ: مَرَّ بِنَا جَنَازَةٌ، فَقَامَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقُمْنَا بِهِ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ، قَالَ: ‏‏«إِذَا رَأَيْتُمُ الجِنَازَةَ، فَقُومُوا‎»‎

ஒரு ஜனாஸா எங்களைக் கடந்து சென்றது. இதற்காக நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் ‎எழுந்தோம்.  அல்லாஹ்வின் தூதரே! இது யூதரின் ஜனாஸா ‎என்று நாங்கள் கூறினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள்  ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்  எனக் ‎கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)‎

நூல்: புகாரி 1311, 1313‎

எழுந்து நிற்கும் சட்டம் மாற்றப்படவில்லை

ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நிற்க வேண்டும் என்ற சட்டம் ‎மாற்றப்பட்டு விட்டது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். பின் ‎வரும் ஹதீஸ்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் ‎காட்டுகின்றனர்.‎

صحيح مسلم

‎2274 - ‎وَحَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ قَالَ سَمِعْتُ مَسْعُودَ ‏بْنَ الْحَكَمِ يُحَدِّثُ عَنْ عَلِىٍّ قَالَ رَأَيْنَا رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَامَ فَقُمْنَا وَقَعَدَ فَقَعَدْنَا. يَعْنِى فِى الْجَنَازَةِ‎.‎

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸாவில் எழுந்ததைக் ‎கண்டோம். நாங்களும் எழுந்தோம். உட்கார்ந்ததைக் கண்டோம். ‎நாங்களும் உட்கார்ந்தோம்

அறிவிப்பவர் அலீ (ரலி)‎

நூல்: முஸ்லிம் 1599‎

இந்த ஹதீஸை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டதன் ‎அடிப்படையில் இவ்வாறு வாதிடுகின்றனர்.‎

எழுந்து நின்றார்கள்; பின்னர் எழுந்து நிற்கவில்லை  என்பது ‎போன்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தால் முதலில் ‎எழுந்துவிட்டு பின்னர் எழாமல் இருந்துள்ளனர் என்று பொருள் ‎கொள்ள முடியும்.‎

ஆனால் மேற்கண்ட ஹதீஸின் வாசகம் அவ்வாறு இல்லை. ‎எழுந்தார்கள்; நாங்களும் எழுந்தோம். உட்கார்ந்தார்கள்; நாங்களும் ‎உட்கார்ந்தோம் என்று தான் ஹதீஸின் வாசகம் உள்ளது. ‎அதாவது ஜனாஸாவைக் கண்டவுடன் எழுந்தார்கள். பின்னர் ‎உட்கார்ந்தார்கள் என்ற கருத்திலேயே மேற்கண்ட வாசகம் ‎அமைந்துள்ளது.‎

ஜனாஸாவைக் கண்டவுடன் நின்று கொண்டே இருக்க வேண்டும் ‎என்பதில்லை; எழுந்துவிட்டு உட்கார்ந்து விடலாம் என்ற ‎கருத்தைத் தான் இது தரும்.‎

எழுந்தார்கள்  என்பதை எழவில்லை  அல்லது எழுவதைத் ‎தடுத்தார்கள் என்பன போன்ற சொற்கள் தான் மாற்றும்.‎

எழுந்தார்கள்  என்பதை பின்னர் உட்கார்ந்தார்கள்  என்பது மாற்றாது.‎

இந்தக் கருத்தில் அமைந்த மற்றொரு ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.‎

صحيح مسلم

‎2271 - ‎وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَحْيَى ‏بْنِ سَعِيدٍ عَنْ وَاقِدِ بْنِ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ أَنَّهُ قَالَ رَآنِى نَافِعُ بْنُ جُبَيْرٍ وَنَحْنُ فِى جَنَازَةٍ قَائِمًا وَقَدْ جَلَسَ يَنْتَظِرُ أَنْ ‏تُوضَعَ الْجَنَازَةُ فَقَالَ لِى مَا يُقِيمُكَ فَقُلْتُ أَنْتَظِرُ أَنْ تُوضَعَ الْجَنَازَةُ لِمَا يُحَدِّثُ أَبُو سَعِيدٍ الْخُدْرِىُّ. فَقَالَ نَافِعٌ فَإِنَّ مَسْعُودَ بْنَ ‏الْحَكَمِ حَدَّثَنِى عَنْ عَلِىِّ بْنِ أَبِى طَالِبٍ أَنَّهُ قَالَ قَامَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- ثُمَّ قَعَدَ‎.‎

நாங்கள் ஒரு ஜனாஸாவில் நின்று கொண்டிருக்கும் போது ‎என்னை நாஃபிவு பின் ஸுபைர் என்பார் பார்த்தார். ஜனாஸா ‎வைக்கப்படுவதை எதிர்பார்த்தவராக அவர் உட்கார்ந்திருந்தார். ‎ஏன் எழுந்து நிற்கிறாய்?  என்று என்னிடம் கேட்டார்.  ஜனாஸா ‎வைக்கப்படுவதற்காகக் காத்திருக்கிறேன்; இவ்வாறு அபூ ஸயீத் ‎அல்குத்ரீ அவர்கள் அறிவித்துள்ளனர்  என்று நான் கூறினேன். ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்துவிட்டு பின்னர் ‎உட்கார்ந்தார்கள்  என்று அலீ (ரலி) அவர்கள் அறிவித்ததாக ‎மஸ்வூத் பின் ஹகம் எனக்குக் கூறினார்  என அவர் ‎பதிலளித்தார்.‎

அறிவிப்பவர்: வாகித் பின் அம்ர்

நூல்: முஸ்லிம் 1597‎

இந்த ஹதீஸும் இவர்கள் கூறுகின்ற கருத்தில் இல்லை. நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்; பின்னர் உட்கார்ந்தார்கள் ‎என்ற சொற்றொடர் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டையும் ‎செய்தார்கள் என்ற கருத்தைத் தருமே தவிர எழுந்து நிற்பதை ‎விட்டு விட்டார்கள் என்ற கருத்தைத் தராது.‎

ஜனாஸாவைப் பின் தொடர்ந்தவர் அது கீழே இறக்கப்படும் வரை ‎உட்காரக் கூடாது

ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்றவர் ஜனாஸாவை முந்திக் ‎கொண்டு அடக்கத்தலம் சென்றுவிடலாம். அப்படி முந்திச் ‎சென்றவர்கள் உடனே அமர்ந்து விடக் கூடாது. ஜனாஸா வரும் ‎வரை காத்திருக்க வேண்டும். ஜனாஸா கொண்டு வரப்பட்டு ‎தோள்களிலிருந்து கீழே இறக்கப்படும் வரை நின்றுவிட்டு கீழே ‎இறக்கப்பட்ட பின் தான் உட்கார வேண்டும்.‎

صحيح البخاري

‎1307 - ‎حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ، عَنِ النَّبِيِّ ‏صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَيْتُمُ الجَنَازَةَ، فَقُومُوا حَتَّى تُخَلِّفَكُمْ» قَالَ سُفْيَانُ: قَالَ الزُّهْرِيُّ: أَخْبَرَنِي سَالِمٌ، عَنْ أَبِيهِ، ‏قَالَ: أَخْبَرَنَا عَامِرُ بْنُ رَبِيعَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَادَ الحُمَيْدِيُّ: «حَتَّى تُخَلِّفَكُمْ أَوْ تُوضَعَ‎»‎

அது உங்களைக் கடக்கும் வரை அல்லது கீழே வைக்கப்படும் ‎வரை நில்லுங்கள்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறியுள்ளனர்.‎

நூல்: புகாரி 1307, 1308, 1310‎

கடக்கும் வரை என்பது ஜனாஸாவுடன் தொடர்ந்து ‎செல்லாதவருக்காகச் சொல்லப்பட்டது. கீழே வைக்கப்படும் வரை ‎என்பது பின் தொடர்ந்து அடக்கத்தலம் வரை செல்பவருக்காகக் ‎கூறப்பட்டது.‎

صحيح البخاري

‎1309 - ‎حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنَّا فِي جَنَازَةٍ، فَأَخَذَ أَبُو ‏هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ بِيَدِ مَرْوَانَ فَجَلَسَا قَبْلَ أَنْ تُوضَعَ، فَجَاءَ أَبُو سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَأَخَذَ بِيَدِ مَرْوَانَ، فَقَالَ: قُمْ فَوَاللَّهِ ‏لَقَدْ عَلِمَ هَذَا «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانَا عَنْ ذَلِكَ» فَقَالَ أَبُو هُرَيْرَةَ صَدَقَ

நாங்கள் ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது அபூ ‎ஹுரைரா (ரலி) அவர்கள் (அன்றைய ஆட்சியாளரான) ‎மர்வானின் கையைப் பிடித்து ஜனாஸா கீழே வைக்கப்படுவதற்கு ‎முன்னர் உட்கார வைத்து, தானும் உட்கார்ந்தார். அப்போது அபூ ‎ஸயீத் (ரலி) அவர்கள் வந்து மர்வானின் கையைப் பிடித்து ‎‎ எழுங்கள்  என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் ‎தடுத்தார்கள் என்பதை இவர் (அபூ ஹுரைரா) அல்லாஹ்வின் ‎மீது ஆணையாக நிச்சயமாக அறிந்து வைத்துள்ளார்  என்றும் ‎கூறினார். அப்போது அபூ ஹுரைரா (ரலி) அவர்கள்,  இவர் ‎சொல்வது உண்மை தான்  என்றார்கள்.‎

அறிவிப்பவர்: ஸயீத் அல் மக்புரி

நூல்: புகாரி 1309‎

صحيح البخاري

‎1310 - ‎حَدَّثَنَا مُسْلِمٌ يَعْنِي ابْنَ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ ‏عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَيْتُمُ الجَنَازَةَ، فَقُومُوا، فَمَنْ تَبِعَهَا فَلاَ يَقْعُدْ حَتَّى تُوضَعَ‎»‎

ஜனாஸாவை நீங்கள் கண்டால் எழுங்கள்! யார் அதைப் பின் ‎தொடர்ந்து செல்கிறாரோ அவர் ஜனாஸா (கீழே) வைக்கப்படும் ‎வரை உட்கார வேண்டாம்  என்று நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி)‎

நூல்: புகாரி 1310‎

இறந்தவருக்காக நாம் என்ன செய்ய வேண்டும்?

கேள்வி 1

இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அவர்கள் பெயரில் நன்மையைச் சேர்க்கலாமா?

ஹெச். ஜுனைதா பேகம், மேலக்காவேரி.

கேள்வி 2

வீட்டில் ஒரு நபர் இறந்தால் அவருக்காக ஸபுர் செய்யுங்கள் என்று கூறுகின்றார்கள். ஸபுர் என்றால் என்ன? இறந்தவருக்குக் குர்ஆன் ஓதலாமா? இறந்தவருக்காக வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியிருக்கின்றார்கள்?

பி. இதாயத்துல்லாஹ், மதுராவயல்

பதில்:

ஸபுர் என்றால் பொறுமை என்று பொருள். குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டதற்காக ஒப்பாரி வைத்து அழுது புலம்பாமல் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. இதைத் தான் ஸபுர் செய்யுங்கள் என்று கூறியிருப்பார்கள்.

இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அனுப்பி வைப்பதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை. இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவது நன்மை என்றிருந்தால் அதை நிச்சயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்திருப்பார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியார் கதீஜா (ரலி) இறந்த போதோ, அல்லது அவர்களின் மகனார் இப்ராஹீம் (ரலி) இறந்த போதோ அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புதல்விகளில் ஃபாத்திமா (ரலி) தவிர மற்றவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே மரணித்து விட்டார்கள். அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர் ஆன் ஓதவில்லை

எத்தனையோ நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இறந்துள்ளார்கள். அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதுமாறு கட்டளையிட்டதாகவோ அல்லது நபித்தோழர்கள் ஓத அதை அங்கீகரித்ததாகவோ ஆதாரப்பூர்வமான ஒரு ஹதீஸ் கூட இல்லை.

صحيح مسلم)

4590 – وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ أَبِى عَامِرٍ قَالَ عَبْدٌ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِىُّ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ رَجُلٍ لَهُ ثَلاَثَةُ مَسَاكِنَ فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا قَالَ يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِى مَسْكَنٍ وَاحِدٍ ثُمَّ قَالَ أَخْبَرَتْنِى عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ».

நம்முடைய அங்கீகாரம் இல்லாத ஒரு செயலை (மார்க்கமெனக் கருதி) செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் 3540

صحيح البخاري)

2697 – حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ»

நமது மார்க்கத்தில் ஒன்றை யாராவது புதிதாக உருவாக்கினால் அது அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 2697

سنن النسائي 

1578 – أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ: يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ يَقُولُ: «مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ، إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ»

"(மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொன்றும் பித்அத் (நூதனப் பழக்கம்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : நஸயீ 1560

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அங்கீகாரம் இன்றி நாமாக ஒரு அமலைச் செய்தால் அது நம்மை நரகில் சேர்த்து விடும். எனவே இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

இறந்தவர்களுக்காக ஜனாஸா தொழுகை நடத்துவது, பாவமன்னிப்புத் தேடுவது ஆகிய காரியங்கள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

அவர்களுக்குப் பின் வந்தோர் "எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் 59:10

இந்த வசனத்தில் நமக்கு முன் சென்றவர்களுக்காக பிரார்த்திப்பதை நல்லவர்களின் செயலாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

இந்த அடிப்படையில் குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக பாவமன்னிப்புத் தேட வேண்டும். அன்றாடம் ஐவேளை தொழுகைகளிலும் இறந்தவருக்காக பாவமன்னிப்பு கோரி பிரார்த்தனை செய்யலாம்.

இவை தவிர இறந்தவர் மீது நோன்பு கடமை இருந்தால் அதை அவரது வாரிசுகள் நிறைவேற்ற வேண்டும்.

صحيح البخاري

1952 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ أَعْيَنَ، حَدَّثَنَا أَبِي، عَنْ عَمْرِو بْنِ الحَارِثِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ جَعْفَرٍ، حَدَّثَهُ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامٌ صَامَ عَنْهُ وَلِيُّهُ»

களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்து விட்டால் அவர் சார்பாக அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 1952

இது போல் இறந்தவருக்கு ஹஜ் கடமையாக இருந்து அதை அவர் நிறைவேற்றாமல் இறந்திருந்தால் அந்த ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும்.

صحيح البخاري

1852 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ، جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ، أَفَأَحُجُّ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ حُجِّي عَنْهَا، أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً؟ اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالوَفَاءِ»

அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய தாய் ஹஜ் செய்ய நேர்ச்சை செய்து அதை நிறைவெற்றாமல் இறந்து விட்டார். அவருக்குப் பதிலாக நான் ஹஜ் செய்யலாமா? என்று ஒரு பெண் வினவினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "உன்னுடைய தாயின் மீது கடன் இருந்தால் அதை நீ தானே நிறைவேற்றுவாய்? அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள்! அல்லாஹ்வுடைய கடன் (நிறைவேற்றப்படுவதற்கு) மிகத் தகுதியானதாகும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 1852

இறந்தவருக்குக் கடன் இருந்தாலோ அல்லது பொருளாதாரம் தொடர்பாக ஏதேனும் வஸிய்யத் செய்திருந்தாலோ அதை நிறைவேற்றுவது வாரிசுகளின் பொறுப்பாகும் என்பதையும் இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.

இது போன்ற காரியங்களை இறந்தவருக்காகச் செய்ய வேண்டுமே தவிர குர்ஆன் ஓதி அனுப்புவது போன்ற மார்க்கத்தில் சொல்லப்படாத காரியங்களைச் செய்வதால் பித்அத் எனும் தீமையைச் செய்த குற்றம் தான் ஏற்படுமே தவிர நன்மை ஏற்படாது.

நபிவழி அடிப்படையில் ஜனாஸா தொழுகை நடத்தாத பட்சத்தில், நபி வழி அல்லாத தொழுகையில் கலந்துகொள்ளலாமா?

07/05/2020 ரமலான் மாத வாட்ஸ் அப் கேள்வி பதில்




More Articles …