▶️ஹதீஸுடன் அவ் கமா கால என்று சொல்வதேன்?
ஹதீஸ் பற்றி சொல்லும்போது” அவ் கமா கால” என்று சொல்வதேன்?
27/09/2020 வாட்ஸ் அப் கேள்வி பதில்
ஹதீஸ் பற்றி சொல்லும்போது” அவ் கமா கால” என்று சொல்வதேன்?
27/09/2020 வாட்ஸ் அப் கேள்வி பதில்
ஆயிஷா ரலியின் திருமண வயது பற்றி அறிவிக்கும் ஹிஷாம் பின் உர்வா பலகீனமானவரா?
23/08/2020 வாட்ஸ் அப் கேள்வி பதில்
ஹதீஸ் மறுப்பு இறை மறுப்பே!
நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்களே!
நபியவர்கள் கூறியதாக வரும் ஒரு செய்தி ஆதாரமாகக் கொள்ளப்பட வேண்டுமென்றால் அதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும் என்பதும், அதன் கருத்து குர்ஆனுக்கும், உறுதிப்படுத்தப்பட்ட மற்ற செய்திகளுக்கும் முரணாக இருக்கக் கூடாது என்பது அடிப்படையான விதியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிப்பவர்களில் முதல் நிலையில் இருப்பவர்கள் நபித்தோழர்கள் ஆவார்கள்.
ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்று தரம் பிரிப்பது நபித்தோழர்களுக்கு அடுத்த நிலையில் வரும் அறிவிப்பாளர்களில் இருந்து தான் பார்க்கப்படுகின்றது. நபித்தோழர்களை, அவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்று தரம் பிரித்துப் பார்ப்பது ஹதீஸ் கலைவிதியில் இல்லை.
நபித்தோழர்களை ஏன் தரம் பிரிப்பதில்லை? நபியவர்கள் கூறியதாக அறிவிக்கும் நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் தான் என்பதற்கு என்ன ஆதாரம்? என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒருவரை நாம் நம்பகமானவர் என்று தீர்மானிப்பதும், பலவீனமானவர் என்று தீர்மானிப்பதும் அவர்களின் வெளிப்படையான செயல்களை வைத்துத் தான்.
ஒருவரை நாம் நம்பகமானவர் என்று தீர்மானித்து விட்டால் அவர் நூறு சதவிகிதம் நல்லவராகத் தான் இருப்பார் என்பது கிடையாது. அவர் கெட்டவராகவும் இருக்கலாம். அதற்கான வெளிப்படையான சான்றுகள் நமக்குக் கிடைக்கவில்லை என்பது தான் அதன் பொருளாகும்.
அது போன்று ஒருவர் நம்பகமானவர் அல்லர் என்று நாம் முடிவு செய்வதும் அவருடைய வெளிப்படையான செயல்பாடுகளை வைத்துத் தான். அவர் நூறு சதவிகிதம் கெட்டவர் என்பது இதன் பொருளல்ல.
நபித்தோழர்களைப் பொறுத்தவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கும், பெயர் குறிப்பிட்டுச் சொல்லப்படும் எந்த ஒரு நபித்தோழரும் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் காரியங்களைச் செய்ததாகவோ, திட்டமிட்டுப் பொய் சொன்னதாகவோ வெளிப்படையான எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.
நபித்தோழர்களின் நம்பகத் தன்மை குறித்து அல்லாஹ்வும், அவனது தூதரும் நற்சான்று அளித்துள்ளதால் தான் அவர்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புவதில்லை.
முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏகஇறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூவு, ஸஜ்தா செய்தோராக அவர்களைக் காண்பீர்! அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் தழும்பாக அவர்களின் முகத்தில் இருக்கும். இதுவே தவ்ராத்தில் அவர்களது உதாரணம்.
இன்ஜீலில் அவர்களுக்குள்ள உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது. அது தனது குருத்தை வெளிப்படுத்துகிறது. பின்னர் அதைப் பலப்படுத்துகிறது. பின்னர் கடினமாகி அதன் தண்டின் மீது நிலையாக நிற்கிறது. நிராகரிப்பவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்துவதற்காக விவசாயி(கள் எனும் நம்பிக்கையுடையவர்)களை அது மகிழ்ச்சியடையச் செய்கிறது. அவர்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு மன்னிப்பையும், மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.
திருக்குர்ஆன்:48:29
எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.
திருக்குர்ஆன்:7:157
ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
திருக்குர்ஆன்:9:100
ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.
திருக்குர்ஆன்:9:108
இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களையும் மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன்.
தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்.) பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன்:9:117,118
உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். (வெற்றிக்குப்) பின்னர் செலவிட்டுப் போரிட்டவர்களை விட அவர்கள் மகத்தான பதவியுடையவர்கள். அனைவருக்கும் அல்லாஹ் அழகியதையே வாக்களித்துள்ளான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
திருக்குர்ஆன்:57:10
அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்.
திருக்குர்ஆன்:59:9
அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதிமொழி எடுத்தபோது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்குச் சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான்.
அல்குர்ஆன்:48:18
صحيح مسلم
163 - (2496) حَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللهِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، يَقُولُ: أَخْبَرَتْنِي أُمُّ مُبَشِّرٍ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ عِنْدَ حَفْصَةَ: «لَا يَدْخُلُ النَّارَ، إِنْ شَاءَ اللهُ، مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ أَحَدٌ، الَّذِينَ بَايَعُوا تَحْتَهَا» قَالَتْ: بَلَى، يَا رَسُولَ اللهِ فَانْتَهَرَهَا، فَقَالَتْ حَفْصَةُ: {وَإِنْ مِنْكُمْ إِلَّا وَارِدُهَا} [مريم: 71] فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَدْ قَالَ اللهُ عَزَّ وَجَلَّ: {ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا} [مريم: 72]
அல்லாஹ் நாடினால் அந்த மரத்தின் கீழ் உறுதிமொழி எடுத்தவர்களில் யாரும் நரகத்திற்குள் நுழையமாட்டார்கள்’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு முபஷ்ஷிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (4909)
صحيح البخاري
3081 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَوْشَبٍ الطَّائِفِيُّ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُصَيْنٌ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، - وَكَانَ عُثْمَانِيًّا فَقَالَ لِابْنِ عَطِيَّةَ: وَكَانَ عَلَوِيًّا - إِنِّي لَأَعْلَمُ مَا الَّذِي جَرَّأَ صَاحِبَكَ عَلَى الدِّمَاءِ، سَمِعْتُهُ يَقُولُ: بَعَثَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالزُّبَيْرَ، فَقَالَ: «ائْتُوا رَوْضَةَ كَذَا، وَتَجِدُونَ بِهَا امْرَأَةً، أَعْطَاهَا حَاطِبٌ كِتَابًا»، فَأَتَيْنَا الرَّوْضَةَ: فَقُلْنَا: الكِتَابَ، قَالَتْ: لَمْ يُعْطِنِي، فَقُلْنَا: لَتُخْرِجِنَّ أَوْ لَأُجَرِّدَنَّكِ، فَأَخْرَجَتْ مِنْ حُجْزَتِهَا، فَأَرْسَلَ إِلَى حَاطِبٍ، فَقَالَ: لاَ تَعْجَلْ، وَاللَّهِ مَا كَفَرْتُ وَلاَ ازْدَدْتُ لِلْإِسْلاَمِ إِلَّا حُبًّا، وَلَمْ يَكُنْ أَحَدٌ مِنْ أَصْحَابِكَ إِلَّا وَلَهُ بِمَكَّةَ مَنْ يَدْفَعُ اللَّهُ بِهِ عَنْ أَهْلِهِ وَمَالِهِ، وَلَمْ يَكُنْ لِي أَحَدٌ، فَأَحْبَبْتُ أَنْ أَتَّخِذَ عِنْدَهُمْ يَدًا، فَصَدَّقَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ عُمَرُ: دَعْنِي أَضْرِبْ عُنُقَهُ فَإِنَّهُ قَدْ نَافَقَ، فَقَالَ: " مَا يُدْرِيكَ، لَعَلَّ اللَّهَ اطَّلَعَ عَلَى أَهْلِ بَدْرٍ فَقَالَ: اعْمَلُوا مَا شِئْتُمْ "، فَهَذَا الَّذِي جَرَّأَهُ
பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களைப் பார்த்து, ‘நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்’ என்று அல்லாஹ் கூறியிருக்கக் கூடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
நூல்: புகாரி (3081)
صحيح البخاري
3673 - حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ: سَمِعْتُ ذَكْوَانَ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَسُبُّوا أَصْحَابِي، فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ، ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ، وَلاَ نَصِيفَهُ» تَابَعَهُ جَرِيرٌ، وَعَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، وَأَبُو مُعَاوِيَةَ، وَمُحَاضِرٌ، عَنِ الأَعْمَشِ
என் தோழர்களை ஏசாதீர்கள்! ஏனெனில் உங்களில் ஒருவர் உஹத் மலையளவு தங்கத்தைச் செலவிட்டாலும் அவர்களின் இரு கையளவு அல்லது அதில் பாதியளவுக்கு அது ஈடாகாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி)
நூல்: புகாரி (3673)
صحيح البخاري
17 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، قَالَ: سَمِعْتُ أَنَسًا عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «آيَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ، وَآيَةُ النِّفَاقِ بُغْضُ الأَنْصَارِ»
இறை நம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும்; நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல் : புகாரி 17
நபித்தோழர்கள் அனைவரும் நம்பக மானவர்கள் என்பதன் பொருள் அவர்களின் அறிவிப்பை மறுக்கும் அளவிற்கு அவர்களிடம் எந்த ஒரு குறையும் இல்லை என்பது தான். அவர்களது சொந்தக் கருத்துக்களை மார்க்கமாகக் கருதிப் பின்பற்றலாம் என்றும் இதைப் புரிந்து கொள்ளக்கூடாது. ஏனெனில் இறைச்செய்தியை மட்டுமே ஒரு முஸ்லிம் மார்க்கமாகப் பின்பற்ற வேண்டும்.
நபித்தோழர்கள் அறிவிக்கும் அறிவிப்புகளில் அறியாமல் நிகழும் சில தவறுகள் நிகழ்ந்துள்ளன. அவை ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகும் போது அந்த அறிவிப்புகளை ஏற்க வேண்டிய அவசியமில்லை. இது போன்றவை தவிர நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக நபித்தோழர்கள் அறிவிக்கும் எந்தச் செய்தியாக இருந்தாலும் அதன் அறிவிப்பாளர் தொடர் சரியாகவும், குர்ஆனுக்கு முரண் இல்லாமலும் இருந்தால் அது ஆதாரப்பூர்வமான செய்தியாகவே கருதப்படும்.
மஜ்ஹூல் – யாரென அறியப்படாதவர்?
ஹதீஸ் கலையில் சில அறிவிப்பாளர் குறித்து யாரென அறியப்படாதவர் என்று காரணம் கூறி அவர் அறிவிக்கும் ஹதீஸைப் பலவீனமானது என்று கூறுவதை நாம் அறிந்துள்ளோம்.
இந்த விதியை அதிகமான மக்கள் மேலோட்டமாகவே அறிந்துள்ளனர்.
எனவே இந்த விதியை முழுமையாக விளக்கவே இந்தப் பதிவு.
அறியப்படுதல் என்றால் என்ன?
ஒரு நபர் அல்லது ஒரு செய்தி அறியப்படுதல் என்றால் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்பது பொருளல்ல. அனைவரைப் பற்றியும், அனைத்தைப் பற்றியும் அனைவரும் அறிந்திருக்க முடியாது.
அறியப்படுதல் என்றால் நம்பகமான யாராவது அறிந்திருப்பதாகக் கூறினால் அவர் அறியப்பட்டவர் ஆவார். பலருக்கு அவரைப் பற்றி தெரியாத காரணத்தால் அறியப்படாதவர் எனக் கூற முடியாது.
உதாரணமாக சாலிம் மகன் இஸ்மாயீல் என்று ஒருவர் ஒரு ஹதீஸில் இடம் பெறுகிறார். இவரைப் பலரும் அறியப்படாதவர் என்கிறார்கள். அல்லது அவரைப் பற்றி எந்த ஹதீஸ் கலை அறிஞரும் எதுவும் கூறாமல் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் சில ஹதீஸ்கலை அறிஞர்கள் மட்டும் அவரைத் தெரியும் என்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அவர் அறியப்பட்டவர் ஆகிவிடுவார்.
பலருக்கு ஒருவரைப் பற்றி தெரியாததால் யாருக்குமே தெரியாது என்று கூறமுடியாது.
அதே நேரத்தில் தனக்கு ஒரு அறிவிப்பாளரைத் தெரியும் என்று சொல்பவர் எந்த அளவுக்கு அறிந்துள்ளதாகக் கூறுகிறாரோ அந்த அளவுக்கு அவர் அறியப்பட்டவராக ஆவார்.
இஸ்மாயீல் என்று ஒருவர் இருந்தார். அவர் இந்த ஊர்க்காரர்; இந்தக் காலத்தவர் என்பன போன்ற விஷயங்களை மட்டுமே ஒருவர் குறிப்பிட்டால் அப்படி ஒருவர் இருந்தார் என்பதற்கு இது ஆதாரமாகும். அவர் நல்லவரா? நம்பகமானவரா என்பதை முடிவு செய்ய இது போதுமாகாது.
அவர் நம்பகமானவர்; உண்மையாளர்; மனன சக்தி உள்ளவர் என்பது போன்ற விபரங்களையும் சொன்னால் தான் அந்த அறிவிப்பாளர் ஏற்கப்பட்டவர் ஆவார்.
இதற்குப் பின்வரும் செய்தியை உதாரணமாகக் கூறலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததே இல்லை என்று ஆயிஷா (அலி) கூறும் செய்தியை எடுத்துக் கொள்வோம்.
مسند أحمد
25787 - حَدَّثَنَا وَكِيعٌ، وَعَبْدُ الرَّحْمَنِ الْمَعْنَى، عَنْ سُفْيَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: " مَنْ حَدَّثَكَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَالَ قَائِمًا بَعْدَمَا أُنْزِلَ عَلَيْهِ الْفُرْقَانُ فَلَا تُصَدِّقْهُ "، " مَا بَالَ قَائِمًا مُنْذُ أُنْزِلَ عَلَيْهِ الْفُرْقَانُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் அருளப்பட்ட பின்பு அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று யாரேனும் உமக்கு அறிவித்தால் அவரை நம்பி விடாதே! திருக்குர்ஆன் அவர்களுக்கு அருளப்பட்டதிலிருந்து அவர்கள் நின்று சிறுநீர் கழித்ததே இல்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியாகிய ஆயிஷா (ரலி) அவர்கள் இப்படி கூறியதற்கு எதிராக வேறு எவரும் அறிவிக்காமல் இருந்தால் இதை அப்படியே நாம் எடுத்துக் கொள்வோம்.
ஆனால் இதற்கு மாற்றமாகவும் ஹதீஸ் உள்ளது.
صحيح البخاري
224 - حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ «أَتَى النَّبِيُّ صلّى الله عليه وسلم سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا، ثُمَّ دَعَا بِمَاءٍ فَجِئْتُهُ بِمَاءٍ فَتَوَضَّأَ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் போடும் இடத்தில் வந்து நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்.
அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)
நூல்: புகாரி 224
இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
ஆயிஷா (ரலி) அவர்கள் தான் அறிந்த அளவுக்கு இதைக் கூறியுள்ளார்கள்; ஆயிஷா (ரலி) அவர்களுக்குத் தெரியும் வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று சிறுநீர் கழித்ததில்லை என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று சிறுநீர் கழித்ததைப் பார்த்து ஒரு நபித்தோழர் அறிவிக்கிறார். இதை மறுத்தால் அந்த நபித்தோழர் பொய் சொன்னதாக ஆகும்.
இவர் சொல்வதை ஏற்றுக் கொண்டால் ஆயிஷா (ரலி) பொய் சொன்னார்கள் என்ற கருத்து வராது. அவர் அறிந்த செய்தியை அவர் கூறியுள்ளார் என்ற கருத்து வரும்.
ஆயிஷா (ரலி) அவர்களுக்குத் தெரியாததால் யாருக்கும் தெரியவில்லை என்று ஆகாது.
அறிவிப்பாளர்கள் குறித்தும் இதே நிலைதான்.
எத்தனை பேர் நற்சான்று கூற வேண்டும்?
ஒரு அறிவிப்பாளர் அறியப்படாதவர் என்று பலர் கூறியிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அல்லது யாருமே அவரைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று வைத்துக் கொள்வோம். அவரைப் பற்றி அவரது நம்பகத் தன்மை குறித்து சிலர் மட்டும் சான்றளித்துள்ளார்கள் என்றால் அந்தச் சிலர் என்பதற்கு எண்ணிக்கை வரம்பு உண்டா? என்பதையும் அறிந்து கொள்வோம்.
இதற்கு எண்ணிக்கை வரம்பு எதுவும் இல்லை. ஒரே ஒரு நல்லறிஞர் சான்றளித்தால் போதும்.
ஒரு அறிவிப்பாளரை நம்பகமானவர் என்று ஒருவர் சொல்கிறார். அவரைப் பற்றி மற்ற யாரும் குறை சொல்லவில்லை என்பதைக் காரணம் காட்டி அந்த ஒரு அறிஞரின் நற்சான்றை மறுத்தால் அவரைப் பொய்யராக நாம் ஆக்கியவர்களாவோம். இதனால் அந்த நல்லறிஞரே பலவீனமானவர் என்று ஆகிவிடுவார்.
எனவே ஒரே ஒருவர் நற்சான்று அளித்தால் அறியப்படாதவர் என்ற விமர்சனம் விழுந்து விடும்.
இது நேரடியாக வழங்கும் நற்சான்றுக்குரிய நிலை. இது தவிர மறைமுகமான நற்சான்றும் உள்ளது.
மறைமுக நற்சான்று
ஒரு அறிவிப்பாளர் குறித்து இவர் நல்லவர் என்பது போல் விமர்சனம் செய்வது நேரடியான நற்சான்று ஆகும்.
இஸ்மாயீல் என்ற அறிவிப்பாளர் குறித்து ஒருவர் கூட எந்த நற்சான்றும் அளிக்கவில்லை. ஆனால் அந்த அறிவிப்பாளர் வழியாக நம்பகமான சிலர் ஹதீஸ்களை அறிவிக்கிறார்கள் என்றால் இதை எப்படி எடுத்துக் கொள்வது?
அறியப்படாதவர் என்று மற்ற அறிஞர்களால் கருதப்பட்ட ஒரு அறிவிப்பாளர் வழியாக நம்பகமான அறிவிப்பாளர்கள் அறிவித்திருப்பதே நற்சான்றாக ஆகுமா?
பொதுவாக அப்படிக் கூற முடியாது.
மறைமுகமாக நற்சான்று அளிப்பவர்கள் இரு வகையினராக உள்ளனர்.
தன்னளவில் நம்பகமானவராக இருக்கும் அறிவிப்பாளர் தனக்கு ஹதீஸை அறிவித்தவரை எடை போட மாட்டார். நம்பகமானவர் அறிவித்தாலும், நம்பகமில்லாதவர் அறிவித்தாலும் அவர் வழியாக ஹதீஸை அறிவிப்பார். இவர்கள் ஒரு வகையினராவர்.
அறியப்படாதவர் என்ற நிலையில் உள்ளவர் வழியாக இந்த வகையான நம்பகமானவர்கள் அறிவித்தால் அது நற்சான்றாக ஆகாது. ஏனெனில் தனக்கு அறிவித்தவர் நம்பகமானவரா என்பதை உறுதி செய்து அறிவிப்பது இவர்களின் வழக்கம் அல்ல என்பதால் இது நற்சான்றாக ஆகாது.
இன்னும் சில நம்பகமான அறிவிப்பாளர்கள் உள்ளனர். அவர்கள் யாரிடம் கேட்டாலும் அறிவிக்க மாட்டார்கள். மாறாக அவர் நம்பகமானவரா என்று உறுதி செய்து தான் அறிவிப்பார்கள். தனக்கு அறிவிப்பவரின் நம்பகத்தன்மை உறுதியாக இல்லாவிட்டால் அவர் வழியாக எதையும் அறிவிக்க மாட்டார்கள். இத்தகையவர்கள், அறியப்படாதவர்கள் எனக் கருதப்படும் அறிவிப்பாளர் வழியாக அறிவித்தால் அது அவருக்கான நற்சான்றாக ஆகும். அறியப்படாதவர் என்ற குறைபாடு நீங்கி விடும்.
நேரடியாக நற்சான்று அளிப்பது ஒரே ஒரு அறிஞராக இருந்தால் போதும் என்று முன்னர் அறிந்தோம். மறைமுக நற்சான்றுக்கும் ஒருவரே போதும் என்பதே சரியான கருத்தாகும்.
மறைமுக நற்சான்று அளிப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் இருவர் அப்படி அறிவிக்க வேண்டும் என்று சிலரும் மூவர் அறிவிக்க வேண்டும் சிலரும் கூறியுள்ளனர். இது சரியான நிலைபாடு இல்லை.
நம்பகமானவர் என்று இவர்களும் ஏற்றுக் கொண்ட ஒருவர், நம்பகமானவர் என்று தன்னளவில் உறுதியானால் மட்டுமே அறிவுக்கும் அறிஞராக ஒருவர் இருக்கிறார். இவர் அறியப்படாதவர் என்று கருதப்படும் நபரிடமிருந்து அறிவிக்கும் போது அதை நாம் மறுத்தால் அவர் பொய் சொல்லி விட்டார் என்றும் சரியாக ஆய்வு செய்ய மாட்டார் என்றும் குற்றம் சுமத்தியதாக ஆகும். எனவே ஒருவர் அறிவித்தாலும் அது நற்சான்றாக ஆகும் என்பதே சரியாகும்.
علل الترمذي
والمنصوص عن أحمد يدل على أنه من عرف منه أنه لا يروي إلا عن ثقة، فروايته عن إنسان تعديل له. ومن لم يعرف منه ذلك فليس بتعديل، وصرح بذلك طائفة من المحققين من أصحاب الشافعي.
நம்பகமான அறிவிப்பாளர் மூலம் மட்டுமே அறிவிப்பதைக் கொள்கையாகக் கொண்டவர் என்று அறியப்பட்ட நம்பகமான அறிவிப்பாளர் ஒரு அறிவிப்பாளர் வழியாக அறிவித்தால் அதுவே அவர் நம்பகமானவர் என்பதற்கான சான்றாகும். யார் வழியாகவும் அறிவிக்கும் வழக்கமுடையவர் - அவர் தன்னளவில் நம்பகமானவராக இருந்தாலும் - ஒருவரிடமிருந்து அறிவித்தால் அது அவருக்கான நற்சான்றாக ஆகாது. இதை ஷாஃபி இமாம், மற்றும் அவர்களின் மாணவர்களில் தீர்க்கமான அறிவுடையவர்கள் கூறியுள்ளனர்.
நூல் : இலல் அத்திர்மிதி
ஒருவர் நம்பகமானவர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளார். அவர் நம்பகமானவர் வழியாக மட்டுமே அறிவிப்பார். யாரென அறியப்படாதவர் வழியாக எதையும் அறிவிக்க மாட்டார் என்று நாம் ஒப்புக் கொண்டு விட்டு அவர் நற்சான்று அளித்தவரை ஏற்கமாட்டேன் என்று கூறுவது அவரைப் பொய்யராக்குவதாகும். அவரது நம்பகத் தன்மையை சந்தேகிப்பதாகும்.
இக்கருத்தை இன்னும் பல அறிஞர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
قال أحمد - في رواية الأثرم - إذا روى الحديث (عبد الرحمن) بن مهدي (عن) رجل، فهو حجة، ثم قال: كان عبد الرحمن أولا يتساهل في الرواية عن غير واحد، ثم تشدد بعد، وكان يروى عن جابر، ثم تركه.
அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ ஒருவர் வழியாக அறிவித்தால் அந்த ஒருவர் ஆதாரமாகக் கொள்ளத் தக்கவராவார். ஆரம்ப காலத்தில் அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ அவர்கள் நம்பகமானவர் என்று உறுதி செய்யாத பலர் வழியாக அறிவித்து வந்தார். பின்னர் இதில் கடுமையான நிலைபாட்டை எடுத்து விட்டார் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறுகிறார்கள்.
شرح علل الترمذي
وقال) في رواية أبي زرعة: مالك بن أنس إذا روى عن رجل لا يعرف فهو حجة.
இமாம் மாலிக் அவர்கள் அறியப்படாத ஒருவர் வழியாக அறிவித்தால் அவர் அறியப்படாதவர் அல்ல. ஆதாரமாகக் கொள்ளத்தக்கவர் ஆவார் என்று அபூ ஸுர்ஆ கூறுகிறார்.
شرح علل الترمذي
وقال (في) رواية ابن هانئ: ما روى مالك عن أحد إلا وهو ثقة. كل من روى عنه مالك فهو ثقة
நம்பகமானவர் வழியாக தவிர யார் வழியாகவும் மாலிக் இமாம் அறிவிக்க மாட்டார். எனவே யார் வழியாக மாலிக் இமாம் அறிவிக்கிறாரோ அவர்கள் நம்பகமானவர்கள் ஆவர்.
شرح علل الترمذي
وقال الميموني: سمعت أحمد - غير مرة - يقول: كان مالك من أثبت الناس. ولا تبال أن لا تسأل عن رجل روى عنه مالك، ولا سيما مدني.
மாலிக் இமாம் மக்களில் அதிக உறுதியானவராவார். ஒருவர் வழியாக மாலிக் இமாம் அறிவித்து விட்டால் மற்றவர்களிடம் அவரைப் பற்றிக் கேட்காதே என்றும் இமாம் அஹ்மத் கூறுகிறார்கள்.
قال الميموني: وقال لي يحيى بن معين: لا تريد أن تسأل عن رجال مالك كل من حدث عنه ثقة إلا رجلا أو رجلين.
மாலிக் இமாம் யார் வழியாக அறிவித்துள்ளாரோ அவர்கள் நம்கமானவர்கள் ஆவார்கள். ஓரிருவரைத் தவிர. எனவே மாலிக் இமாம் யார் வழியாக அறிவித்தாரோ அவரைப் பற்றிக் கேட்காதே என்று யஹ்யா பின் மயீன் கூறுகிறார்.
شرح علل الترمذي
وقال يعقوب بن شيبة: قلت ليحيى بن معين: متى يكون الرجل معروفا؟ إذا روى عنه كم؟ قال: إذا روى عن الرجل مثل ابن سيرين والشعبي، وهؤلاء أهل العلم، فهو غير مجهول. قلت: فإذا روى عن الرجل (مثل سماك) بن حرب، وأبي إسحاق؟ قال: هؤلاء يروون عن مجهولين، انتهى. وهذا تفصيل حسن.
யாரென அறியப்படாதவர் என்ற நிலையில் உள்ளவர் அறியப்பட்டவராக ஆக எத்தனை நபர்கள் அவர் வழியாக அறிவிக்க வேண்டும் என்று யஹ்யா பின் மயீன் அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு ஸீரீன், ஷுஅபி ஆகிய அறிஞர்கள் அவர் வழியாக அறிவித்தால் அவர் அறியப்படாதவர் ஆக மாட்டார். ஸிமாக் பின் ஹர்ப், அபூ இஸ்ஹாக் ஆகியோர் ஒருவரிடமிருந்து அறிவித்தால் அதனால் அறியப்பட்டவர் ஆக மட்டார். ஏனெனில் இவர்கள் அறியப்படாதவர்கள் வழியாகவும் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர் என்று இப்னு மயீன் பதிலளித்ததாக யஃகூப் பின் ஷைபா கூறுகிறார்.
. وابن المديني يشترط أكثر من ذلك: فإنه يقول فيمن يروي عنه يحيى بن أبي كثير وزيد بن أسلم معا، إنه مجهول.
யாரென அறியப்படாதவர் வழியாக யஹ்யா பின் அபீ கஸீர், ஸைத் பின் அஸ்லம் ஆகிய இருவர் அறிவித்தாலும் அவர் அறியப்படாதவர் தான் என்று இப்னுல் மதீனீ கூறுகிறார்.
ويقول فيمن يروي عنه شعبة وحده، إنه مجهول .
அறியப்படாத அறிவிப்பாளர் வழியாக ஷுஃபா மட்டும் அறிவித்தால் அவர் அறியப்படாதவர் தான் என்றும் இப்னுல் மதீனி கூறுகிறார்.
(இவர்கள் யாரென அறியப்படாதவர்கள் வழியாகவும் அறிவிப்பவர்கள் என்பதே இதற்குக் காரணம்.)
وقال فيمن يروي عنه ابن المبارك ووكيع وعاصم، هو معروف.
யரென அறியப்படாதவர் வழியாக ஆஸிம், வகீவு, இப்னுல் முபாரக் ஆகியோரில் ஒருவர் அறிவித்தால் அவர் அறியப்பட்டவர் ஆவார்.
وقال فيمن يروي عنه عبد الحميد بن جعفر وابن لهيعة، ليس بالمشهور.
அறியப்படாத அறிவிப்பாளர் வழியாக இப்னு லஹ்யஆ, அப்துல் ஹமீத் பின் ஜாஃபர் ஆகியோர் அறிவித்தால் அவர் அறியப்பட்டவராக மாட்டார்.
وقال فيمن عنه ابن وهب وابن المبارك، معروف.
அறியப்படாத அறிவிப்பாளர் வழியாக இப்னு வஹப், இப்னுல் முபாரக் அறிவித்தால் அவர் அறியப்பட்டவராவார்.
وظاهر هذا أنه لا عبرة بتعدد الرواة، وإنما العبرة بالشهرة ورواية الحفاظ الثقات. قال: هؤلاء يروون عن مجهولين، انتهى. وهذا تفصيل حسن.
இதிலிருந்து தெரிய வருவது என்ன? அறியப்படாதவர் வழியாக எத்தனை பேர் அறிவிக்கிறார்கள் என்பதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஏனெனில் அவர்கள் அறியப்படாதவர்கள் வழியாகவும் அறிவிப்பவர்கள். மாறாக எத்தகையவர்கள் அவர் வழியாக அறிவித்துள்ளார்கள் என்பதற்கே முக்கியத்துவம் உள்ளது என்பது இதிலிருந்து தெரிகின்றது.
இதுதான் அறிவார்ந்த நிலைபாடாகும்.
அறியப்படாதவர் வழியாக மூன்று நம்பகமானவர்கள் அறிவிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் தம்மளவில் நம்பகமானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தனக்கு அறிவிப்பவரின் நம்பகத்தன்மை பற்றி அக்கறை கொள்ள மாட்டார்கள் என்றால் அவர்கள் அறிவிப்பதால் அறியப்படாதவர், அறியப்பட்டவராக மாட்டார். இது நற்சான்றாக ஆகாது.
அறியப்படாதவர் வழியாக ஒருவர் தான் அறிவிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அறிவிப்பாளரை எடை போட்டு நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டால் தான் அறிவிப்பார் என்றும் வைத்துக் கொள்வோம்.
இத்தகைய தகுதி படைத்தவர் அறியப்படாதவர் வழியாக அறிவித்தால் அறியப்படாதவர் என்ற குறை நீங்கி விடும்.
வழக்கு கொடுக்கல் வாங்கல் போன்றவைகளுக்கு இருவர் சாட்சி கூற வேண்டும்; நால்வர் சாட்சி கூற வேண்டும் என்ற சட்டம் உள்ளது.
மார்க்க விஷயத்தில் ஒருவர் சான்றளித்தாலே போதுமாகும்.
ஆதாரப்பூவமான ஹதீஸ்கள் என்று கூறும் ஹதீஸ்களில் பாதிக்கும் மேற்பட்ட ஹதீஸ்களை ஒருவரிடமிருந்து ஒருவர் என்று தான் அறிவித்துள்ளனர். ஆனாலும் ஒருவர் அறிவிப்பதால் அந்த ஹதீஸ்களை யாரும் மறுத்ததில்லை.
صحيح البخاري
88 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الحَسَنِ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الحَارِثِ، أَنَّهُ تَزَوَّجَ ابْنَةً لِأَبِي إِهَابِ بْنِ عُزَيْزٍ فَأَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ: إِنِّي قَدْ أَرْضَعْتُ عُقْبَةَ وَالَّتِي تَزَوَّجَ، فَقَالَ لَهَا عُقْبَةُ: مَا أَعْلَمُ أَنَّكِ أَرْضَعْتِنِي، وَلاَ أَخْبَرْتِنِي، فَرَكِبَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ فَسَأَلَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ وَقَدْ قِيلَ» فَفَارَقَهَا عُقْبَةُ، وَنَكَحَتْ زَوْجًا غَيْرَهُ
88 உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) கூறியதாவது:
நான் அபூஇஹாப் பின் அஸீஸ் என்பவரின் மகளை மணந்து கொண்டேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து நான், உக்பாவுக்கும் நீ மணந்து கொண்டுள்ள பெண்ணுக்கும் (உங்கள் மழலைப் பருவத்தில்) பாலூட்டியிருக்கிறேன்' (இந்த வகையில் நீங்கள் இருவரும் பால்குடிச் சகோதரரர்கள் ஆவீர்கள்) என்று கூறினார். நான் நீங்கள் எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான் மணமுடித்துக் கொண்ட போது) நீங்கள் எனக்கு (இதைத்) தெரிவிக்கவில்லையே! என்று கேட்டேன். ஆகவே, (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து) நான் மதீனாவிலிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கிப் பயணம் செய்து, அவர்களிடம் (இது குறித்து) வினவினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நீயும் உம் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால்குடித்ததாகச்) சொல்லப்பட்டுப் போன பிறகு எப்படி (நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வது) எப்படி (செல்லும்)? என்று கூறினார்கள். ஆகவே நான் அவளை விட்டுப் பிரிந்துவிட்டேன். அவள் பெண்ணும் வேறொரு கணவனை மணந்து கொண்டாள்.
நூல் : புகாரி 88
பால் ஊட்டியதாக ஒரு பெண் கூறியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியே ஏற்றுள்ளனர். இதற்கு வேறு சாட்சியைக் கொண்டு வருமாறு கூறவில்லை.
سنن الدارمي
1733 - حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ سَالِمٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «تَرَاءَى النَّاسُ الْهِلَالَ، فَأَخْبَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي رَأَيْتُهُ، فَصَامَ وَأَمَرَ النَّاسَ بِالصِّيَامِ»
[تعليق المحقق] إسناده صحيح*
மக்களெல்லாம் பிறை பார்க்க முயன்றனர். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நான் பிறை பார்த்தேன் என்று தெரிவித்தேன். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும் நோன்பு நோற்று மக்களுக்கும் நோன்பு நோற்க கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : தாரிமி
ஒரே ஒருவர் சாட்சியத்தை ஏற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை முடிவு செய்தார்கள். இன்னொரு சாட்சி வரட்டும் என்று காத்திருக்கவில்லை.
ஒரு நம்பகமானவர் நற்சான்று அளித்தால் போதும் என்ற நிலைபாடு ஆதாரங்கள் அடிப்படையில் அமைந்துள்ளது.
இருவர் அல்லது மூவர் அறிவிக்க வேண்டும் என்பது ஆதாரங்களின்படி அமையவில்லை.
மஜ்ஹூல் குறித்து மேலதிகமாக அறிய கீழ்க்காணும் ஆக்கத்தைப் பார்க்கவும்
நம்பகமானவர்கள் அறிவித்த ஹதீஸை மறுக்கும் மூத்த சவூதி அறிஞர்
அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும், அதன் கருத்து குர்ஆனுக்கு மாற்றமாகவும், குர்ஆன் கூறும் அறிவுக்கு மாற்றமாகவும் இருந்தால் அதை ஹதீஸாக ஏற்க முடியாது என்று நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம்.
இது தான் சரியான கொள்கை. ஆனாலும் இதை சுன்னத் ஜமாஅத் உலமாக்கள் ஏற்றுக் கொள்ளாமல் கடந்து விடுகிறார்கள். ஆனால் நாங்களும் தவ்ஹீத்வாதிகள் எனக் கூறும் ஸலபிகள் என்போர் இதற்கு ஹதீஸ் மறுப்புக் கொள்கை என்ற பட்டம் சூட்டி நமக்கு வழிகேடர், காஃபிர் என்றெல்லாம் முத்திரை குத்தி வருகிறார்கள்.
ஆனால் ஸலபுகளின் முக்கிய இமாமாகத் திகழும் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமின் அவர்கள் கருத்து தவறாக உள்ளதால் ஹதீஸை மறுத்துள்ளார்.
இப்னு சவூத் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக உள்ள இவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். சவூதியில் உள்ள மூத்த ஸலபு உலமாக்களில் முன்னனியில் உள்ளவர் ஆவார்.
தஜ்ஜால் குறித்து பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் முஸ்லிம் நூலில் தஜ்ஜால் குறித்து கூறுகின்ற நீண்ட ஹதீஸை அதன் கருத்துக்கள் சரியில்லை என்ற காரணத்துக்காக மறுத்துள்ளார்.
அறிவிப்பாளர்கள் தொடர் சரியாக இருந்தாலும் இது நபியின் பேச்சு போல் இல்லை என்பது போன்ற காரனங்களைக் கூறி அவர் அந்த ஹதீஸை மறுத்துள்ளார்.
இது குறித்து துருக்கியில் ஆய்வு மாணவராகக் கல்வி கற்கும் இலங்கையைச் சேர்ந்த அஹ்மத் ஜம்ஸாத் அவர்கள் ஒரு ஆக்கத்தை அனுப்பியுள்ளார். அதை இங்கே பதிவு செய்கிறோம்.
தஜ்ஜால் குறித்த இந்த ஹதீஸ் குறித்து நமது நிலைபாடும் இதுதான்.
ஆக்கம் அஹ்மத் ஜம்ஷாத்
ஜஸ்ஸாஸா ஹதீஸ் என்று கூறப்படும் முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸை அறிவிப்பாளர்கள் தொடர் சரியாக இருந்தாலும் அதை ஏற்க முடியாது என்று முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் அவர்கள் கூறியுள்ளார்கள்.
அவர்கள் மறுக்கும் தஜ்ஜால் பற்றிய ஹதீஸ் இதுதான்:
صحيح مسلم
119 - (2942) حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ، وَحَجَّاجُ بْنُ الشَّاعِرِ، كِلَاهُمَا عَنْ عَبْدِ الصَّمَدِ - وَاللَّفْظُ لِعَبْدِ الْوَارِثِ بْنِ عَبْدِ الصَّمَدِ - حَدَّثَنَا أَبِي، عَنْ جَدِّي، عَنِ الْحُسَيْنِ بْنِ ذَكْوَانَ، حَدَّثَنَا ابْنُ بُرَيْدَةَ، حَدَّثَنِي عَامِرُ بْنُ شَرَاحِيلَ الشَّعْبِيُّ، شَعْبُ هَمْدَانَ، أَنَّهُ سَأَلَ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ، أُخْتَ الضَّحَّاكِ بْنِ قَيْسٍ - وَكَانَتْ مِنَ الْمُهَاجِرَاتِ الْأُوَلِ - فَقَالَ: حَدِّثِينِي حَدِيثًا سَمِعْتِيهِ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَا تُسْنِدِيهِ إِلَى أَحَدٍ غَيْرِهِ، فَقَالَتْ: لَئِنْ شِئْتَ لَأَفْعَلَنَّ، فَقَالَ لَهَا: أَجَلْ حَدِّثِينِي فَقَالَتْ: نَكَحْتُ ابْنَ الْمُغِيرَةِ، وَهُوَ مِنْ خِيَارِ شَبَابِ قُرَيْشٍ يَوْمَئِذٍ، فَأُصِيبَ فِي أَوَّلِ الْجِهَادِ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا تَأَيَّمْتُ خَطَبَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ فِي نَفَرٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَخَطَبَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَوْلَاهُ أُسَامَةَ بْنِ زَيْدٍ، وَكُنْتُ قَدْ حُدِّثْتُ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ أَحَبَّنِي فَلْيُحِبَّ أُسَامَةَ» فَلَمَّا كَلَّمَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ: أَمْرِي بِيَدِكَ، فَأَنْكِحْنِي مَنْ شِئْتَ، فَقَالَ: «انْتَقِلِي إِلَى أُمِّ شَرِيكٍ» وَأُمُّ شَرِيكٍ امْرَأَةٌ غَنِيَّةٌ، مِنَ الْأَنْصَارِ، عَظِيمَةُ النَّفَقَةِ فِي سَبِيلِ اللهِ، يَنْزِلُ عَلَيْهَا الضِّيفَانُ، فَقُلْتُ: سَأَفْعَلُ، فَقَالَ: «لَا تَفْعَلِي، إِنَّ أُمَّ شَرِيكٍ امْرَأَةٌ كَثِيرَةُ الضِّيفَانِ، فَإِنِّي أَكْرَهُ أَنْ يَسْقُطَ عَنْكِ خِمَارُكِ أَوْ يَنْكَشِفَ الثَّوْبُ عَنْ سَاقَيْكِ، فَيَرَى الْقَوْمُ مِنْكِ بَعْضَ مَا تَكْرَهِينَ وَلَكِنِ انْتَقِلِي إِلَى ابْنِ عَمِّكِ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو ابْنِ أُمِّ مَكْتُومٍ» - وَهُوَ رَجُلٌ مِنْ بَنِي فِهْرٍ [ص:2262]، فِهْرِ قُرَيْشٍ وَهُوَ مِنَ الْبَطْنِ الَّذِي هِيَ مِنْهُ - فَانْتَقَلْتُ إِلَيْهِ، فَلَمَّا انْقَضَتْ عِدَّتِي سَمِعْتُ نِدَاءَ الْمُنَادِي، مُنَادِي رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُنَادِي: الصَّلَاةَ جَامِعَةً، فَخَرَجْتُ إِلَى الْمَسْجِدِ، فَصَلَّيْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكُنْتُ فِي صَفِّ النِّسَاءِ الَّتِي تَلِي ظُهُورَ الْقَوْمِ فَلَمَّا قَضَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ جَلَسَ عَلَى الْمِنْبَرِ، وَهُوَ يَضْحَكُ، فَقَالَ: «لِيَلْزَمْ كُلُّ إِنْسَانٍ مُصَلَّاهُ»، ثُمَّ قَالَ: «أَتَدْرُونَ لِمَ جَمَعْتُكُمْ؟» قَالُوا: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: " إِنِّي وَاللهِ مَا جَمَعْتُكُمْ لِرَغْبَةٍ وَلَا لِرَهْبَةٍ، وَلَكِنْ جَمَعْتُكُمْ، لِأَنَّ تَمِيمًا الدَّارِيَّ كَانَ رَجُلًا نَصْرَانِيًّا، فَجَاءَ فَبَايَعَ وَأَسْلَمَ، وَحَدَّثَنِي حَدِيثًا وَافَقَ الَّذِي كُنْتُ أُحَدِّثُكُمْ عَنْ مَسِيحِ الدَّجَّالِ، حَدَّثَنِي أَنَّهُ رَكِبَ فِي سَفِينَةٍ بَحْرِيَّةٍ، مَعَ ثَلَاثِينَ رَجُلًا مِنْ لَخْمٍ وَجُذَامَ، فَلَعِبَ بِهِمِ الْمَوْجُ شَهْرًا فِي الْبَحْرِ، ثُمَّ أَرْفَئُوا إِلَى جَزِيرَةٍ فِي الْبَحْرِ حَتَّى مَغْرِبِ الشَّمْسِ، فَجَلَسُوا فِي أَقْرُبِ السَّفِينَةِ فَدَخَلُوا الْجَزِيرَةَ فَلَقِيَتْهُمْ دَابَّةٌ أَهْلَبُ كَثِيرُ الشَّعَرِ، لَا يَدْرُونَ مَا قُبُلُهُ مِنْ دُبُرِهِ، مِنْ كَثْرَةِ الشَّعَرِ، فَقَالُوا: وَيْلَكِ مَا أَنْتِ؟ فَقَالَتْ: أَنَا الْجَسَّاسَةُ، قَالُوا: وَمَا الْجَسَّاسَةُ؟ قَالَتْ [ص:2263]: أَيُّهَا الْقَوْمُ انْطَلِقُوا إِلَى هَذَا الرَّجُلِ فِي الدَّيْرِ، فَإِنَّهُ إِلَى خَبَرِكُمْ بِالْأَشْوَاقِ، قَالَ: لَمَّا سَمَّتْ لَنَا رَجُلًا فَرِقْنَا مِنْهَا أَنْ تَكُونَ شَيْطَانَةً، قَالَ: فَانْطَلَقْنَا سِرَاعًا، حَتَّى دَخَلْنَا الدَّيْرَ، فَإِذَا فِيهِ أَعْظَمُ إِنْسَانٍ رَأَيْنَاهُ قَطُّ خَلْقًا، وَأَشَدُّهُ وِثَاقًا، مَجْمُوعَةٌ يَدَاهُ إِلَى عُنُقِهِ، مَا بَيْنَ رُكْبَتَيْهِ إِلَى كَعْبَيْهِ بِالْحَدِيدِ، قُلْنَا: وَيْلَكَ مَا أَنْتَ؟ قَالَ: قَدْ قَدَرْتُمْ عَلَى خَبَرِي، فَأَخْبِرُونِي مَا أَنْتُمْ؟ قَالُوا: نَحْنُ أُنَاسٌ مِنَ الْعَرَبِ رَكِبْنَا فِي سَفِينَةٍ بَحْرِيَّةٍ، فَصَادَفْنَا الْبَحْرَ حِينَ اغْتَلَمَ فَلَعِبَ بِنَا الْمَوْجُ شَهْرًا، ثُمَّ أَرْفَأْنَا إِلَى جَزِيرَتِكَ هَذِهِ، فَجَلَسْنَا فِي أَقْرُبِهَا، فَدَخَلْنَا الْجَزِيرَةَ، فَلَقِيَتْنَا دَابَّةٌ أَهْلَبُ كَثِيرُ الشَّعَرِ، لَا يُدْرَى مَا قُبُلُهُ مِنْ دُبُرِهِ مِنْ كَثْرَةِ الشَّعَرِ، فَقُلْنَا: وَيْلَكِ مَا أَنْتِ؟ فَقَالَتْ: أَنَا الْجَسَّاسَةُ، قُلْنَا: وَمَا الْجَسَّاسَةُ؟ قَالَتْ: اعْمِدُوا إِلَى هَذَا الرَّجُلِ فِي الدَّيْرِ، فَإِنَّهُ إِلَى خَبَرِكُمْ بِالْأَشْوَاقِ، فَأَقْبَلْنَا إِلَيْكَ سِرَاعًا، وَفَزِعْنَا مِنْهَا، وَلَمْ نَأْمَنْ أَنْ تَكُونَ شَيْطَانَةً، فَقَالَ: أَخْبِرُونِي عَنْ نَخْلِ بَيْسَانَ، قُلْنَا: عَنْ أَيِّ شَأْنِهَا تَسْتَخْبِرُ؟ قَالَ: أَسْأَلُكُمْ عَنْ نَخْلِهَا، هَلْ يُثْمِرُ؟ قُلْنَا لَهُ: نَعَمْ، قَالَ: أَمَا إِنَّهُ يُوشِكُ أَنْ لَا تُثْمِرَ، قَالَ: أَخْبِرُونِي عَنْ بُحَيْرَةِ الطَّبَرِيَّةِ، قُلْنَا: عَنْ أَيِّ شَأْنِهَا تَسْتَخْبِرُ؟ قَالَ: هَلْ فِيهَا مَاءٌ؟ قَالُوا: هِيَ كَثِيرَةُ الْمَاءِ، قَالَ: أَمَا إِنَّ مَاءَهَا يُوشِكُ أَنْ يَذْهَبَ، قَالَ: أَخْبِرُونِي عَنْ عَيْنِ زُغَرَ، قَالُوا: عَنْ أَيِّ شَأْنِهَا تَسْتَخْبِرُ؟ قَالَ: هَلْ فِي الْعَيْنِ مَاءٌ؟ وَهَلْ يَزْرَعُ أَهْلُهَا بِمَاءِ الْعَيْنِ؟ قُلْنَا لَهُ: نَعَمْ، هِيَ كَثِيرَةُ الْمَاءِ، وَأَهْلُهَا يَزْرَعُونَ مِنْ مَائِهَا، قَالَ: أَخْبِرُونِي عَنْ نَبِيِّ الْأُمِّيِّينَ مَا فَعَلَ؟ قَالُوا: قَدْ خَرَجَ مِنْ مَكَّةَ وَنَزَلَ يَثْرِبَ، قَالَ: أَقَاتَلَهُ الْعَرَبُ؟ قُلْنَا: نَعَمْ، قَالَ: كَيْفَ صَنَعَ بِهِمْ؟ فَأَخْبَرْنَاهُ أَنَّهُ قَدْ ظَهَرَ عَلَى مَنْ يَلِيهِ مِنَ الْعَرَبِ وَأَطَاعُوهُ، قَالَ لَهُمْ: قَدْ كَانَ ذَلِكَ؟ قُلْنَا: نَعَمْ، قَالَ: أَمَا إِنَّ ذَاكَ خَيْرٌ لَهُمْ أَنْ يُطِيعُوهُ، وَإِنِّي مُخْبِرُكُمْ عَنِّي، إِنِّي أَنَا الْمَسِيحُ، وَإِنِّي أُوشِكُ أَنْ يُؤْذَنَ لِي فِي الْخُرُوجِ، فَأَخْرُجَ فَأَسِيرَ فِي الْأَرْضِ فَلَا أَدَعَ قَرْيَةً إِلَّا هَبَطْتُهَا فِي أَرْبَعِينَ لَيْلَةً غَيْرَ مَكَّةَ وَطَيْبَةَ، فَهُمَا مُحَرَّمَتَانِ عَلَيَّ كِلْتَاهُمَا، كُلَّمَا أَرَدْتُ أَنْ أَدْخُلَ وَاحِدَةً - أَوْ وَاحِدًا - مِنْهُمَا اسْتَقْبَلَنِي مَلَكٌ بِيَدِهِ السَّيْفُ صَلْتًا، يَصُدُّنِي عَنْهَا، وَإِنَّ عَلَى كُلِّ نَقْبٍ مِنْهَا مَلَائِكَةً يَحْرُسُونَهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَطَعَنَ بِمِخْصَرَتِهِ فِي الْمِنْبَرِ: «هَذِهِ طَيْبَةُ، هَذِهِ طَيْبَةُ، هَذِهِ طَيْبَةُ» - يَعْنِي الْمَدِينَةَ - «أَلَا هَلْ كُنْتُ حَدَّثْتُكُمْ ذَلِكَ؟» فَقَالَ النَّاسُ: نَعَمْ، «فَإِنَّهُ أَعْجَبَنِي حَدِيثُ تَمِيمٍ، أَنَّهُ وَافَقَ الَّذِي كُنْتُ أُحَدِّثُكُمْ عَنْهُ، وَعَنِ الْمَدِينَةِ وَمَكَّةَ، أَلَا إِنَّهُ فِي بَحْرِ الشَّأْمِ، أَوْ بَحْرِ الْيَمَنِ، لَا بَلْ مِنْ قِبَلِ الْمَشْرِقِ مَا هُوَ، مِنْ قِبَلِ الْمَشْرِقِ مَا هُوَ مِنْ قِبَلِ الْمَشْرِقِ، مَا هُوَ» وَأَوْمَأَ بِيَدِهِ إِلَى الْمَشْرِقِ، قَالَتْ: فَحَفِظْتُ هَذَا مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஹதீஸுக்கு ரஹ்மத் ட்ரஸ்ட் வெளியிட்ட மொழி பெயர்ப்பைக் கீழே காண்க!
ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ளஹ்ஹாக் பின் கைஸ் (ரலி) அவர்களின் சகோதரியும், முந்திய முஹாஜிர்களில் ஒருவருமான ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸ் ஒன்றை எனக்கு அறிவியுங்கள். அது (நேரடியாக) நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து கேட்டதாக இருக்க வேண்டும். பிறர் மூலம் கேட்டதாக இருக்க வேண்டாம்" என்று கேட்டேன்.
அப்போது ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள், "நீங்கள் விரும்பினால் நிச்சயமாக அவ்வாறே செய்கிறேன்" என்றார்கள். நான் "ஆம் (அவ்வாறுதான் நான் விரும்புகிறேன்); எனக்கு ஹதீஸ் அறிவியுங்கள்" என்றேன். ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் அன்றைய குறைஷி இளைஞர்களில் சிறந்தவர்களில் ஒருவரான முஃகீராவின் புதல்வருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தேன். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த முதல் போரில் காயப்படுத்தப்பட்ட(வர் ஆவா)ர். (அவர் என்னை மணவிலக்குச் செய்து) நான் விதவையாயிருந்த போது, என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒரு குழுவினர் பெண் கேட்டார்கள். அவர்களில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களும் ஒருவராவார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தம்மால் விடுதலை செய்யப்பட்ட அடிமையின் புதல்வரான உசாமா பின் ஸைத் அவர்களுக்காக என்னைப் பெண் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னை நேசிப்பவர், உசாமாவையும் நேசிக்கட்டும்" என்று கூறிய செய்தியை நான் அறிந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் பேசிய போது, "என் காரியம் உங்கள் கையில் உள்ளது. நீங்கள் நாடியவருக்கு என்னை மணமுடித்து வையுங்கள்" என்று கூறினேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ உம்மு ஷரீக்கின் இல்லத்துக்குச் சென்று தங்கி இரு" என்று சொன்னார்கள் - உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் அன்சாரிகளில் வசதி படைத்த பெண்மணியாகவும் அல்லாஹ்வின் பாதையில் பெருமளவில் செலவு செய்யக் கூடியவராகவும் இருந்தார். அவரது இல்லத்தில் விருந்தாளிகள் தங்குவார்கள்.- "அவ்வாறே செய்கிறேன்" என்று நான் கூறினேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(வேண்டாம்;) அப்படிச் செய்யாதே! உம்மு ஷரீக் ஏராளமான விருந்தாளிகளை உபசரிக்கும் ஒரு பெண்மணி ஆவார். உன் முகத்திரையோ உன் கணைக்காலிலிருந்து ஆடையோ விலகியிருக்க, நீ விரும்பாத சிலவற்றை மக்கள் பார்க்கும் நிலை ஏற்படுவதை நான் வெறுக்கிறேன். எனவே, நீ உன் தந்தையின் சகோதரரான (அம்ர் - உம்மு மக்தூம் தம்பதியரின் புதல்வரான) அப்துல்லாஹ் பின் அம்ர் பின் உம்மி மக்தூம் அவர்களின் இல்லத்துக்குச் சென்று தங்கியிரு" என்று கூறினார்கள்.
அவ்வாறே நான் அவரது இல்லத்திற்குச் சென்று தங்கினேன். என் காத்திருப்புக் காலம் ("இத்தா") முடிந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொது அறிவிப்பாளர்களில் ஒருவர், "கூட்டுத் தொழுகைக்கு வாருங்கள்" என்று அறிவிப்புச் செய்வதை நான் செவியுற்றேன். ஆகவே, நான் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுகையை நிறைவேற்றினேன்.
அப்போது நான் ஆண்களின் தொழுகை வரிசைக்குப் பின்னால் உள்ள பெண்களின் தொழுகை வரிசையில் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துச் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது சிரித்தபடியே அமர்ந்தார்கள். "ஒவ்வொருவரும் தாம் தொழுத இடத்தில் அப்படியே இருங்கள்" என்று கூறினார்கள். பிறகு, "நான் உங்களை ஏன் ஒன்று கூட்டினேன் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு ஆர்வமூட்டுவதற்கோ அச்சுறுத்துவதற்கோ நான் உங்களை ஒன்று கூட்டவில்லை. மாறாக, (மற்றொரு தகவலைச் சொல்வதற்காகவே) உங்களை ஒன்றுகூட்டினேன். கிறித்தவ மதத்தைச் சேர்ந்த தமீமுத் தாரீ எனும் ஒரு மனிதர் (என்னிடம்) வந்து வாக்குறுதிப் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அவர் என்னிடம் ஒரு செய்தியைச் சொன்னார். அது மசீஹுத் தஜ்ஜால் குறித்து நான் உங்களிடம் தெரிவித்திருந்த செய்திக்கு ஒத்திருந்தது.
அவர் என்னிடம் கூறினார்:
நான் "லக்ம்" , "ஜுதாம்" ஆகிய குலங்களைச் சேர்ந்த முப்பது பேருடன் ஒரு கப்பலில் கடல் பயணம் மேற்கொண்டேன். அப்போது கடல் அலை ஒரு மாத காலம் எங்களைக் கடலில் அலைக்கழித்து விட்டது. பிறகு நாங்கள் கடலில் சூரியன் அஸ்தமிக்கும் (மேற்குத்) திசையில் ஒரு தீவில் ஒதுங்கினோம். பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து அங்கிருந்த தீவுக்குள் சென்றோம்.
அங்கு (உடல் முழுவதும் அடர்ந்த) முடிகள் நிறைந்த ஒரு பிராணி எங்களைச் சந்தித்தது. அதன் முன்பகுதி எது, பின்பகுதி எது என்றே எங்களால் அறிய முடியவில்லை. (உடல் முழுவதும்) முடிகள் நிறைந்திருந்ததே அதற்குக் காரணம்.
அப்போது நாங்கள், "உனக்குக் கேடு தான். நீ யார்?" என்று கேட்டோம். அதற்கு அந்தப் பிராணி "நான் தான் ஜஸ்ஸாஸா" என்று சொன்னது. "ஜஸ்ஸாஸா என்றால் என்ன?" என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அந்தப் பிராணி, "கூட்டத்தாரே! இந்த மண்டபத்திற்கு உள்ளே இருக்கும் மனிதரை நோக்கிச் செல்லுங்கள். அவர் உங்களைப் பற்றிய செய்தி அறிய ஆவலாக உள்ளார்" என்று சொன்னது.
அந்தப் பிராணி ஒரு மனிதனைப் பற்றிக் குறிப்பிட்டதைக் கேட்டு அது ஷைத்தானாக இருக்குமோ என்று நாங்கள் பயந்து விட்டோம். உடனே நாங்கள் அந்த மனிதனை நோக்கி விரைந்து நடந்தோம். நாங்கள் அந்த மண்டபத்தைச் சென்றடைந்தோம். அங்கு மாபெரும் உருவமுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவனைப் போன்ற ஒரு படைப்பை நாங்கள் ஒரு போதும் கண்டதில்லை. அவன் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தான். அவனுடைய கைகள் அவனது தோளோடு சேர்த்து வைத்து இறுகக் கட்டப்பட்டிருந்தன. அவனுடைய முழங்கால்கள் கணுக்கால்களோடு சேர்த்துச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தன. அவனிடம் நாங்கள், "உனக்குக் கேடுதான். நீ யார்?" என்று கேட்டோம்.
"என்னைப் பற்றிய தகவலை நிச்சயம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (முதலில்) நீங்கள் யார் என்று கூறுங்கள்?" என்று கேட்டான். "நாங்கள் அரபு மக்கள். நாங்கள் கப்பலொன்றில் கடல் பயணம் மேற்கொண்டோம். கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ஒரு மாத காலமாகக் கடல் அலை எங்களை அலைக்கழித்து விட்டது. பிறகு நீயிருக்கும் இந்தத் தீவில் நாங்கள் கரை ஒதுங்கினோம். பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து இந்தத் தீவுக்குள் நுழைந்தோம்.
அப்போது உடல் முழுவதும் அடர்ந்த முடிகள் கொண்ட பிராணி ஒன்று எங்களைச் சந்தித்தது. உடல் முழுவதும் முடிகள் நிறைந்திருந்த காரணத்தால் அதன் முன்பகுதி எது, பின்பகுதி எது என்று அறிய முடியவில்லை. நாங்கள் "உனக்குக் கேடுதான். நீ யார்?" என்று கேட்டோம். அது "நான் தான் ஜஸ்ஸாஸா" என்று சொன்னது. "ஜஸ்ஸாஸா என்றால் என்ன?" என்று கேட்டோம். அதற்கு அது, "இந்த மண்டபத்திலுள்ள இந்த மனிதரை நோக்கிச் செல்லுங்கள். அவர் உங்களைப் பற்றிய செய்தியை அறிய பெரும் ஆவலுடன் இருக்கிறார்" என்று கூறியது. ஆகவே தான், நாங்கள் உன்னை நோக்கி விரைந்து வந்தோம். அது ஷைத்தானாக இருக்கலாம் என்பதால் எங்களால் அச்சம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை" என்று சொன்னோம்.
அப்போது அவன், "பைசான் பேரீச்சந்தோட்டத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்றான். "அந்தத் தோட்டத்தில் நீ எதைப் பற்றிக் கேட்கிறாய்?" என்று கேட்டோம்.
அதற்கு அவன், "அந்தப் பேரீச்சந்தோட்டத்தின் மரங்கள் கனிகள் தருகின்றனவா என்பதைப் பற்றியே நான் கேட்கிறேன்" என்றான். நாங்கள் "ஆம்" என்று பதிலளித்தோம். அவன், "அறிந்து கொள்ளுங்கள். அது கனியே தராத காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது" என்று கூறினான்.
பிறகு "தபரிய்யா நீர் நிலை பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான். "அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய்?"என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவன், "அதில் தண்ணீர் இருக்கிறதா?" என்று கேட்டான். நாங்கள், "அதில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது" என்று பதிலளித்தோம். அவன், "அறிந்து கொள்ளுங்கள்: அதிலுள்ள நீர் வற்றும் காலம் நெருங்கிவிட்டது" என்று சொன்னான்.
பிறகு, "(ஷாம் நாட்டிலுள்ள) ஸுஃகர் நீரூற்றைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான். நாங்கள், "அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய்?" என்றோம். அதற்கு அவன், "அந்த ஊற்றில் தண்ணீர் உள்ளதா? அந்த ஊற்றுத் தண்ணீரால் மக்கள் பயிர் செய்கிறார்களா?" என்று கேட்டான். நாங்கள் "ஆம், அதில் தண்ணீர் அதிகமாக உள்ளது. அங்குள்ளவர்கள் அந்தத் தண்ணீரால் விவசாயம் செய்கிறார்கள்" என்று சொன்னோம்.
பிறகு அவன், "எழுத்தறிவற்ற மக்களின் இறைத்தூதர் பற்றி எனக்குச் சொல்லுங்கள். அவர் (இப்போது) என்ன செய்கிறார்?" என்று கேட்டான். நாங்கள், "அவர் மக்காவிலிருந்து புறப்பட்டுச் சென்று யஸ்ரிபில் (மதீனாவில்) தங்கியிருக்கிறார்" என்று பதிலளித்தோம்.
அவன், "அவருக்கும் அரபியருக்குமிடையே போர் நடந்ததா?" என்று கேட்டான். நாங்கள், "ஆம்" என்றோம். அவன், "அவர்களை அவர் என்ன செய்தார்?" என்று கேட்டான். நாங்கள், "அவர், தம் அருகிலுள்ள அரபியரை வெற்றி கொண்டுவிட்டார். அரபியர் அவருக்குக் கட்டுப்பட்டு விட்டனர்" என்று சொன்னோம். அதற்கு அவன், "அப்படித் தான் நடந்ததா?" என்று கேட்டான். நாங்கள் "ஆம்" என்றோம்.
அவன், "அறிந்துகொள்ளுங்கள். அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதே அவர்களுக்கு நல்லதாகும். (இனி) நான் என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன்: நான்தான் மசீஹ் (அத்தஜ்ஜால்) ஆவேன். நான் (இங்கிருந்து) புறப்பட அனுமதிக்கப்படும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நான் புறப்பட்டு வந்து, நாற்பது நாட்களில் பூமியில் எந்த ஓர் ஊரையும் விட்டுவைக்காமல் பூமியெங்கும் பயணம் செய்வேன்; மக்காவையும் தைபாவையும் தவிர! அவ்விரண்டிற்குள்ளேயும் நுழைவது எனக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்விரு நகரங்களில் ஏதேனும் ஒன்றில் நுழைய நான் நாடும்போதெல்லாம் என்னை நோக்கி வானவர் ஒருவர் வருவார். அவரது கையில் உருவிய வாள் இருக்கும். (அதை வைத்து) அதற்குள் நுழைய விடாமல் அவர் என்னைத் தடுத்து விடுவார். அதன் ஒவ்வொரு நுழைவாயிலிலும் வானவர் ஒருவர் இருந்து, அதைக் காவல் காத்துக்கொண்டிருப்பார்" என்று கூறினான்.
இதைக் கூறிய பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம்மிடமிருந்த கைத்தடியால் சொற்பொழிவு மேடை மீது குத்தியவாறு இது - அதாவது மதீனா நகரம் - தான் தைபா; இது தான் தைபா; இது தான் தைபா" என்று கூறிவிட்டு, "இதைப் பற்றி நான் உங்களுக்கு (முன்பே) அறிவித்துள்ளேன் அல்லவா?" என்று கேட்டார்கள். மக்கள், "ஆம் (அறிவித்தீர்கள்)" என்று பதிலளித்தனர். "தமீமுத் தாரீ சொன்ன இந்தச் செய்தி, தஜ்ஜாலைப் பற்றியும் மதீனா மற்றும் மக்கா பற்றியும் நான் ஏற்கெனவே உங்களிடம் நான் கூறியிருந்ததற்கு ஒப்பவே அமைந்திருக்கிறது" என்று கூறினார்கள்.
பிறகு அறிந்து கொள்ளுங்கள்: அ(ந்தத் தீவான)து, ஷாம் நாட்டுக் கடலில், அல்லது யமன் நாட்டுக் கடலில் உள்ளது. இல்லை; அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது. அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது. அது கிழக்குப் பகுதி கடலில் உள்ளது" என்று (அறுதியிட்டுச்) சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூறும்போது கிழக்குத் திசையை நோக்கி தமது கரத்தால் சைகை செய்தார்கள்.
ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்தே மனனமிட்டேன்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5638.
இந்த ஹதீஸ் குறித்து அல் உஸைமீன் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அவர்கள் அளித்த பதிலும் இது தான்:
فقد سئل فضيلته: ذكرتم في الفتوى السابقة أن الدجال غير موجود الآن، وهذا الكلام ظاهره يتعارض مع حديث فاطمة بنت قيس في الصحيح عن قصة تميم الداري، فنرجو من فضيلتكم التكرم بتوضيح ذلك؟
கேள்வி: முன்னைய ஃபத்வா ஒன்றில் நீங்கள் தஜ்ஜால் தற்போது இல்லை என்று கூறி உள்ளீர்கள். ஆனால் அது ஃபாதிமா பின்த் கைஸ் அறிவிக்கும் தமீம் அத்தாரி பற்றிய ஹதீஸுக்கு முரணாக உள்ளதே. அதை தெளிவுபடுத்த முடியுமா?
فأجاب بقوله: ذكرنا هذا مستدلين بما ثبت في الصحيحين عن النبي صلى الله عليه وآله وسلم قال: "إنه على رأس مائة سنة لا يبقى على وجه الأرض ممن هو عليها اليوم أحد". فإذا طبقنا هذا الحديث على حديث تميم الداري صار معارضاً له؛ لأن ظاهر حديث تميم الداري أن هذا الدجال يبقى حتى يخرج، فيكون معارضاً لهذا الحديث الثابت في الصحيحين. وأيضاً فإن سياق حديث تميم الداري في ذكر الجساسة في نفسي منه شيء، هل هو من تعبير الرسول صلى الله عليه وسلم أو لا. اهـ.
முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் அளித்த பதில்:
“இன்று இந்த பூமியில் இருக்கும் எவரும் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில் இருக்க மாட்டார்கள்” என்ற ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே நான் அவ்வாறு கூறியுள்ளேன்.
இந்த ஹதீஸை தமீம் அத்தாரியின் (முஸ்லிமில் வரும் ஜஸ்ஸாஸா) ஹதீஸுடன் ஒப்பீடு செய்து பார்த்தால் அதற்கு முரண்படுகிறது. தமீம் அத்தாரியின் ஹதீஸில் தஜ்ஜால் வெளியாகும் வரை (இப்போதும்) இருந்துகொண்டு இருப்பதாக கூறுகிறது. எனவே புகாரி முஸ்லிமில் உள்ள இந்த உறுதியான ஹதீஸுக்கு அது முரண்படுகிறது. (அதாவது அவன் அப்போது உயிருடன் இருந்தால் நபிகள் நாயகம் சொன்ன நூறு ஆண்டுக்குள் அவன் வெளிப்பட்டு இருக்க வேண்டும்) மேலும் தமீம் அத்தாரி விபரிக்கும் அந்த ஹதீஸ் நபியவர்கள் சொல்லி இருப்பார்களா? இல்லையா என்ற சந்தேகத்தை எனக்கு ஏற்படுத்துகிறது.
இந்த ஹதீஸின் “கருத்தில்” “நகாரத்” (மறுக்கத்தக்க குறை) இருப்பதன் காரணமாக இதை நபியவர்களிடம் இருந்து வந்த ஸஹீஹான செய்தியாக ஏற்பதற்கு உள்ளம் இடம் கொடுக்கவில்லை என்று பதிலளித்தார்.
மற்றொரு இடத்தில் பினவ்ருமாறு எழுதியுள்ளார்.
وقال في موضع آخر: حديث الجساسة يخالف ما ورد في صفة الدجال في الصحيحين أنه رجلٌ قصير، قَطط، جعد الرأس أشبه ما يكون بعبد العزى بن قطن، رجل من قحطان. والجساسة ليس على هذا السياق. اهـ.
தஜ்ஜால் பற்றி புகாரி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸ்களில் தஜ்ஜால் குள்ளமானவன் என்றும் சுருள் முடி கொண்டவன் என்றும், அப்துல் உஸ்ஸா என்பவரின் தோற்றத்தில் இருப்பான் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. (அங்கு மாபெரும் உருவமுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவனைப் போன்ற ஒரு படைப்பை நாங்கள் ஒரு போதும் கண்டதில்லை) என்ற ஜஸ்ஸாஸா ஹதீஸ் மாற்றமாக உள்ளது.
மேலும் சொல்கிறார்:
وقال أيضا: أن النفس لا تطمئن إلى صحته عن النبي صلى الله عليه وسلم؛ لما في سياق متنه من النكارة، وقد أنكره الشيخ محمد رشيد رضا في تفسيره إنكاراً عظيماً؛ لأن سياقه يبعد أن يكون من كلام النبي صلى الله عليه وسلم
இதன் கருத்தில் மறுக்கத் தக்க அமசம் உள்ளதால் இதை நபிகள் சொன்னதாக எனது மனம் ஏற்கவில்லை. மேலும் இந்த ஹதீஸை ஷைக் முஹம்மத் ரஷீத் ரிழா அவர்கள் தமது தப்ஸீரில் மிகவும் கடுமையாக மறுத்து எழுதியுள்ளார்கள். ஏனெனில் இந்த ஹதீஸின் உள்ளடக்கம் நபியவர்களின் பேச்சு ஒழுங்கிலிருந்து மிகவும் தூரமான ஒன்றாகும்.
فسئل: هل قال به أحد من السلف قبل محمد رشيد رضا ؟ فقال الشيخ: لا أعلم، لكن لا يشترط، وأنا لم أتتبع أقوال العلماء فيه؛ لكن في نفسي منه شيء
முஹம்மத் ரஷீத் ரிழாவுக்கு முன்பு வேறு ஸலஃபு அறிஞர்கள் இவ்வாறு கூறியுள்ளனரா? என்று உஸைமீன் அவர்களிடம் கேட்கப்பட்டது.
அதற்கு ஷைய்க் உஸைமீன் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
இதற்கு முன் யாரும் சொல்லியுள்ளார்களா என்பது எனக்குத் தெரியாது. முன்னர் யாராவது சொல்லியுள்ளார்களா என்று கவனிப்பது சத்தியத்தை அறிவதற்கான நிபந்தனை அல்ல.
நான் இவ்விடயத்தில் உலமாக்களின் கூற்றுக்களைப் பின்பற்றவில்லை. அந்த ஹதீஸில் எனக்குச் சந்தேகம் உண்டு.
அல் உஸைமீன் அவர்களை வழிகேடர் என்றும் ஹதீஸ் மறுப்பாளர் என்றும் இந்திய இலங்கை சலபுகள் அறிவிப்பார்களா?
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை அறிவிப்பவர் பொய்யரா?
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டபட்டவை என்றால் அந்த ஹதீஸ்களை அறிவித்த அறிவிப்பாளர்களில் நிச்சயம் ஒரு பொய்யர் இருப்பார். அவர் யார் என்று கண்டுபிடித்து விட்டால் இந்த ஹதீஸ்களை இட்டுக்கட்டபட்டவை என இலகுவாக ஒதுக்கிவிட முடியும். அவ்வாறு செய்வது சாத்தியமில்லை என்று இருந்தால் எமது இரண்டு மூலாதாரங்களில் ஒன்றான ஹதீஸ்கள் இவ்வளவு சிக்கலினூடாகவா எங்களுக்குக் கிடைக்கப்பெற்று இருக்கிறது ?
நியாஸ் திஹாரி
பதில் :
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்ட வகையுடன் சேர்ந்தவை என்று நாம் கூறுகின்றோம். பல அறிஞர்களும் இவ்வாறு கூறுகின்றனர்.
குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை வைத்துப் பார்த்தாலும் ஹதீஸ் கலையில் கூறப்பட்ட இவ்விதி சரியானது என்பதைச் சந்தேகமற அறியலாம். விரிவான விளக்கங்களுக்கு ஹதீஸ்கள் குர்ஆனுடன் முரண்படுமா? என்ற பெயரில் நமது இணையதளத்தில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
பார்க்க : ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?
பொதுவாக ஹதீஸ் கலையில் பலவீனமான செய்திகள் பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இந்த வகைகளில் மிக மோசமான தரத்தில் அமைந்தவை இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகும்.
குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் இந்த வகையுடனே சேர்க்கப்படுகின்றது. ஏனென்றால் மோசமான நினைவாற்றல், அறிவிப்பாளர் தொடர்பு முறிவு போன்ற காரணங்களால் பலவீனமடையும் ஹதீஸ்கள் அவற்றில் தவறு ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது என்ற அனுமானத்தில் அடிப்படையில் மறுக்கப்படுகின்றன.
ஆனால் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களைப் பொறுத்தவரை அவை வலுவான ஆதாரமாக இருக்கின்ற குர்ஆனுடன் முரண்படுவதால் அவை நூற்றுக்கு நூறு சதவீதம் சரியான செய்திகள் அல்ல என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது.
இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் எவ்வளவு மோசமான தரத்தைப் பெற்றதோ அது போன்று குர்ஆனுக்கு முரண்படும் செய்தியும் மிக மோசமான தரத்தைப் பெற்ற பலவீனமான செய்திகளாக உள்ளன என்பதை உணர்த்துவதற்காகவே இந்த ஹதீஸ்களை இட்டுக்கட்டப்பட்ட வகையுடன் சேர்த்தோம்.
குர்ஆனுக்கு முரண்பட்டு அறிவிப்பவர் பொய் சொல்லி இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மெய்யைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அறிவித்தாலும் தவறுதலாக ஒரு வார்த்தையை விட்டு விட்டு அறிவித்தாலும் கூட கருத்து மாறிவிடும். அதனால் குர்ஆனுக்கு முரண்படும் நிலை ஏற்படும். அறிவிப்பாளர் பொய் சொல்லியிருந்தால் தான் ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படும் என்று நாம் உறுதியாகக் கூற முடியாது.
ஒரு நம்பகமான அறிவிப்பாளர் ஹதீஸின் ஒரு வாசகத்தை நேர் எதிரான கருத்தில் தவறுதலாகப் புரிந்ததின் விளைவாலும் இத்தகைய நிலை ஏற்படலாம்.
குர்ஆனுக்கு முரண்படும் ஒரு செய்தியில் நம்பகமானவர்கள் என உறுதிசெய்யப்பட்ட அறிவிப்பாளர் வந்தால் இவர்களில் யாரோ பொய் கூறியிருக்கின்றார் என்று முடிவு செய்வதை விட இவர்களில் யாரோ தவறிழைத்துள்ளார் என்று முடிவு செய்வதே நியாயமானது. ஏனென்றால் நம்பகமானவர்கள் விஷயத்தில் நல்லெண்ணம் வைக்க வேண்டும்.
ஒரு மிக நம்பகமானவரின் அறிவிப்புக்கு இன்னொரு நம்பகமானவரின் அறிவிப்பு முரண்பட்டால் அந்த அறிவிப்பில் அவர் பொய் சொல்லி விட்டார் என்று ஹதீஸ் கலையில் கருதப்படாது. மாறாக இவர் இதில் அறியாமல் தவறு செய்துள்ளார் என்றே கருதப்படும்.
இதே அடிப்படையில் தான் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களில் வரும் நம்பகமானவர்களின் விஷயத்திலும் நாம் முடிவெடுக்க வேண்டும்.
மேலும் இந்த ஹதீஸ்களில் பல அறிவிப்பாளர்கள் வருகிறார்கள். இவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருந்தால் இவர்களில் இன்னார் தான் தவறு செய்தார் என்று குறிப்பிட முடியாது.
ஒரு பேச்சுக்கு அவ்வாறு கண்டுபிடித்து விட்டால் கூட குர்ஆனுக்கு முரண்பாடாக அவர் அறிவிக்கும் குறிப்பிட்ட அந்த அறிவிப்பு மட்டுமே நிராகரிக்கப்படும். அவர் அறிவித்த மற்ற அறிவிப்புகள் நிராகரிக்கப்படாது.
ஏனென்றால் இவருடைய அறிவிப்பு குர்ஆனுக்கு மாற்றமாக இருப்பதே இதில் இவர் தவறு செய்துள்ளார் என்பதைத் தெளிவுபடுத்தி விடுகின்றது. இவர் நம்பகமானவராக இருக்கும் பட்சத்தில் எந்த முரண்பாடும் வராத இவரது மற்ற அறிவிப்புகளை ஒட்டுமொத்தமாக எவ்வாறு நிராகரிக்க முடியும்?
இவற்றிலும் இவர் தவறு செய்திருப்பார் என்று யூகிப்பது அடிப்படையற்ற யூகமாகும். ஏனென்றால் ஒரு நம்பகமானவர் சரியாக அறிவிப்பார் என்றே கருத வேண்டும்.
எனவே ஒரு நம்பகமானவர் குர்ஆனுக்கு முரணாக செய்தியை அறிவிப்பதால் இதை வைத்துக் கொண்டு அவரைப் பொய்யர் என்று கூறக் கூடாது. நாமும் அவ்வாறு கூறவில்லை.
இந்த ஹதீஸ்களை இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களுடன் நாம் சேர்த்ததற்குக் காரணம் இவற்றில் உள்ள நம்பகமானவர்கள் பொய் சொல்லி விட்டார்கள் என்பதற்காக அல்ல. இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் புறக்கணிக்கப்படுவதைப் போன்று இந்தச் செய்திகளும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதே காரணம்.
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுப்பதால் ஹதீஸ்கள் சிக்கலுடன் இருக்கின்றது என்ற தோற்றம் ஏற்படுகிறது என்ற வாதம் பல காரணங்களால் தவறானது. ஹதீஸ்களை ஆதாரமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு இது ஒரு பிரச்சனையே கிடையாது.
ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமானது என்றும், பலவீனமானது என்றும் ஆய்வு செய்து தரம் பிரிக்கின்றனர். இவ்வாறு ஆய்வு செய்வதால் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்பவர்கள் ஹதீஸ்களில் சிக்கல் இருக்கின்றது எனக் கூறுவதில்லை.
பல நம்பகமானவர்களின் அறிவிப்புக்கு முரணாக ஒரு நம்பகமானவர் அறிவிப்பதுண்டு. மிக வலுவான ஒருவரின் அறிவிப்புக்கு மாற்றமாக அவரை விட மனன சக்தியில் சற்று தரம் குறைந்த நம்பகமானவர் அறிவிப்பதும் உண்டு. ஒருவரை விட மற்றவர் மனன சக்தியில் உயர்ந்து விடாத வகையில் அனைவரும் சம நிலையில் உள்ள நம்பகமான அறிவிப்பாளர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டு அறிவிப்பதும் உண்டு.
இது போன்ற நிலைகளில் ஹதீஸ்களை ஆதாரமாக ஏற்றுக் கொண்டவர்கள் ஹதீஸ்களில் சிக்கல் உள்ளது என்று கூறி ஒட்டுமொத்தமாக ஹதீஸ்களை மறுப்பதில்லை. அனைத்து செய்திகளிலும் சந்தேகம் கொள்வதில்லை.
நம்பகமானவர்களுக்கிடையே முரண்பாடு தோன்றினாலும் யார் மிக வலிமையானவர்? அதிகமானோர் எவ்வாறு அறிவிக்கிறார்கள்? என்று பார்த்து அந்த அறிவிப்பாளர்களின் அறிவிப்பே சரியானது என்றும், அதற்கு முரணாக உள்ள அறிவிப்புகள் அவற்றை அறிவித்தவர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் தவறானது என்றும் முடிவு செய்கின்றனர்.
ஒருவரை விட ஒருவரை முற்படுத்துவதற்கு எந்தக் காரணமும் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் அனைவரின் அறிவிப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் நிறுத்தி வைத்து விடுகின்றனர். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
குர்ஆன் என்பது ஹதீஸ்களை விட பன்மடங்கு வலுவான ஆதாரம். இதை யாரும் மறுக்க மாட்டார்கள். அப்படி இருக்க வலுவான ஆதாரமாகத் திகழும் குர்ஆனுடன் அதற்குக் கீழ் நிலையில் உள்ள ஹதீஸ் முரண்பட்டால் குர்ஆனை எடுத்துக் கொண்டு முரண்படும் அந்த ஹதீஸை விட்டு விடுவது தானே சரி. இந்த முடிவில் ஒரு சிக்கலும் இல்லை.
எனவே குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுப்பதால் எந்தச் சிக்கலும் ஏற்படுவதில்லை. மாறாக அவற்றை ஏற்றுக் கொண்டால் தான் குர்ஆன் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படும்.
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களைப் பற்றி பேசும் போது எடுத்து வைக்கப்படும் இந்தக் கேள்விகள் அறிவிப்பாளர் பலவீனமாக இருக்கும் போதும் எழத்தான் செய்யும். ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டதாக இல்லையே என்ற கேள்வியை யாரும் கேட்பதாகத் தெரியவில்லை.
ஒருவரது அறிவிப்புக்கு மாற்றமாக பலர் அறிவிக்கும் போதும் இந்தக் கேள்வி வரும். ஆனாலும் யாரும் கேட்பதில்லை.
அது போல் மிக நம்பிக்கைக்குரியவரின் அறிவிப்புக்கு எதிராக நடுத்தரமானவர் அறிவிக்கும் போதும் இந்தக் கேள்விகள் எழ வேண்டும், ஆனாலும் யாரும் கேட்பதாகத் தெரியவில்லை.
ஆனால் குர்ஆனுடன் முரண்படுகிறது என்பதற்காக ஒரு ஹதீஸை நிராகரிக்கும் போது மட்டும் இது போன்ற கேள்விகள் எழுவது ஏன்?
இதுவரை நாம் நம்பியதற்கு மாற்றமாக உள்ளதால் இதை ஜீரணிக்க உள்ளம் தயக்கம் காட்டுகிறது. இது தான் காரணம். பழகிப்போன விஷயத்தில் உள்ளம் சரியாகப் புரிந்து கொள்கிறது. எனவே மனோ இச்சைக்கு இடம் கொடுக்காமல் குர்ஆனுக்கு முரண்படுவது பெரிய விஷயமா? சாதாரண விஷயமா? என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு சிந்தித்தால் இந்தக் கேள்விகள் எழாது.