கோவில் சொத்தை விலைக்கு வாங்கலாமா?
பதில் :
கோயில் நிலம் விலைக்கு வந்தால் அதை நாம் வாங்குவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. பணத்தைக் கொடுத்து பொருளை வாங்கும் வியாபாரமாகவே இது உள்ளது. இந்த நிலத்தை விலைக்கு வாங்குவதால் மார்க்க சட்ட திட்டங்களைப் புறக்கணிக்கும் நிலை இல்லை. எனவே இதை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.
ஆனால் அந்த வியாபாரம் அதன் உரிமையாளர்களால் முறைப்படி செய்யப்பட வேண்டும். நிர்வாகியாக இருப்பவர் கள்ளத்தனமாக விற்பனை செய்து அதைச் சுருட்ட நினைத்தால் அந்த வியாபாரம் மார்க்கத்தில் கூடாது.
அது போல் ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்தைப் பத்தாயிரத்துக்கு வாங்குவதற்காக அதன் நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்து வாங்கினால் அது குற்றமாகும்.
இஸ்லாத்தில் வியாபாரத்துக்கு கூறப்பட்ட அனைத்து விதிகளும் பொருந்தினால் மட்டும் வாங்கலாம்.
27.02.2011. 4:09 AM
கோவில் சொத்தை விலைக்கு வாங்கலாமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode