▶️மோடியின் லடாக் நாடகம்
மோடியின் லடாக் நாடகம்
05/07/2020 வாட்ஸ் அப் கேள்வி பதில்
மோடியின் லடாக் நாடகம்
05/07/2020 வாட்ஸ் அப் கேள்வி பதில்
சாத்தான்குளம் விவகாரத்தில் உடனடி கொந்தளிப்பும் விசாரணையும் ஏன்?
05/07/2020 வாட்ஸ் அப் கேள்வி பதில்
உள்ளாட்சியில் ம.ம.க மகத்தான வெற்றியா?
த.மு.மு.கவின் அரசியல் பிரிவான ம.ம.க 60 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் 90 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் பெருமையடித்துக் கொள்கிறார்களே இது உண்மையா?
- அமீர் சுல்தான், ஏழுகிணறு சென்னை.
நீங்கள் சொல்வது போல் பெருமை அடித்தார்கள் என்றால் கட்டாயம் அவர்களை மனநல மருத்துவர்களிடம் தான் காட்ட வேண்டும். கனவுலகில் வாழ்வதும் ஒரு.வகை மனநோய் தான்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இவர்கள் கொடுத்த பில்டப்பை நம்பி ஏமாந்த ஊடகங்கள் வெற்றி வாய்ப்பு பற்றி எழுதும் போதும், பேசும் போதும் ம.ம.கவையும் அதிமுக வெற்றிக்கு காரணமாகக் குறிப்பிட்டனர். ஊடகங்களின் அறியாமையை நினைத்து சமுதாயம் கேலிச் சிரிப்பு சிரித்தது.
ஆனால் உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து ஒவ்வொரு கட்சியும் வாங்கிய வாக்கு சதிவிகிதத்தைக் குறிப்பிடும் பத்திரிகைகள் அந்தப் பட்டியலில் ம.ம.க என்ற பெயரையே குறிப்பிடக் காணோம்.
அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தை, பாஜக, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு எவ்வளவு சதவிகிதம் வாக்குகள் கிடைத்தன என்று பட்டியல் போட்டு ஊடகங்கள் விளக்கியுள்ளன. தேர்தல் ஆணையம் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த புள்ளிவிபரத்தை ஊடகங்கள் வெளியிட்டன. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளது. இக்கட்சி 0.70 சதம் ஓட்டுக்கள் வாங்கியதாக பட்டியல் வெளியிட்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு 400 வாக்குகளில் 3 வாக்குகளை இக்கட்சி வாங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 400க்கு மூன்று என்ற அற்பமான வாக்குகளைக் கூட ம.ம.க வாங்காததால் தான் பட்டியலில் கூட மமகவைச் சொல்ல முடியவில்லை. இது தான் ம.ம.க வெற்றியின் லட்சணம்.
இவர்கள் கூறுவது போல் 60 அல்லது 90 இடங்களில் வெற்றி பெற்றது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். நூறு இடங்களில் 60 இடங்களை வென்றார்களா? அல்லது ஆயிரம் இடங்களில் 60 இடங்களை வென்றார்களா? அல்லது பத்தாயிரம் இடங்களில் 60 இடங்களைப் பிடித்தார்களா? நிச்சயமாக இல்லை.
தேர்தல் நடந்த மொத்த இடங்கள் ஒரு லட்சத்தி முப்பத்தி இரண்டாயிரத்தி நானூற்றி அறுபத்தி ஏழு இடங்களாகும். 1,32,467 இடங்களில் 60 இடம் என்பது என்ன கணக்கு?
நூறு இடங்களில் ஒன்று என்ற கணக்கில் இவர்கள் வெல்லவில்லை.
200 இடங்களில் ஒன்று என்ற கணக்கிலும் வெல்லவில்லை.
முன்னூறு இடங்களில் ஒன்று என்ற கணக்கிலும் இவர்கள் வெற்றி பெறவில்லை.
நானூறு இடங்களுக்கு ஒரு இடம் என்ற கணக்கிலும் இவர்கள் வெல்லவில்லை.
ஐநூறு இடங்களுக்கு ஒன்று என்ற கணக்கிலும் வெல்லவில்லை.
அறுநூறு இடங்களுக்கு ஒன்று என்ற கணக்கிலும் இவர்கள் வெல்லவில்லை.
மாறாக ஆயிரத்துக்கு ஒரு இடம் என்ற கணக்கிலும் மமக வெல்லவில்லை.
மாறாக இரண்டாயிரம் இடங்களுக்கு ஒரு இடம் என்பது தான் இவர்கள் வெற்றி பெற்ற சதவிகிதக் கணக்கு.
234 சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு இடங்களில் இவர்கள் வெற்றி பெற்றனர். சுமார் நூற்றுக்கு ஒன்று என்ற கணக்கு வருகின்றது. இந்தக் கணக்குப்படி 1,32,467 இடங்களில் 1,324 இடங்களை வென்றால் தான் சட்ட சபையில் பெற்ற அற்ப வெற்றிக்கு ஈடாகும். 1,324 இடங்களுக்கு பதிலாக 60 இடம் என்பது எவ்வளவு கேவலமான தோல்வி! இதைக் கூட வெற்றி என்று தம்பட்டம் அடிக்க ரொம்ப துணிச்சல் வேண்டும்.
சரி அப்படியே வெற்றி பெற்ற இடங்கள் மாநகராட்சி அல்லது நகராட்சி உறுப்பினர் என்றால் அதில் அதிக ஓட்டுக்களையாவது பெற்றிருப்பார்கள் என்று கருதலாம். ஆனால் இவர்கள் அதிகம் வென்ற இடங்கள் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள சின்னச் சின்ன வார்டுகள் தான். அதாவது ஒரு வார்டில் சுமார் 100 முதல் 300 ஓட்டுகள் வரை இருக்கும். இதில் வெற்றி பெறுபவர் 60 அல்லது எழுபது ஓட்டுக்கள் வாங்கினாலே போதும். ஜெயித்து விடலாம். இவர்களே தம்பட்டம் அடித்த ஒரு வார்டு நீடூர் வார்டு; அதன் கணக்கைப் பாருங்கள்.
சபீர் (மமக) - 57
ரோஜா (எ) அப்துல் கபூர் (சுயே) - 47
இதில் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் நீடூரில் ஒரு தெருவில் 57 வாக்குகள் வாங்கி அதில் ஜெயித்து விட்டதாகக் கூறியுள்ளனர். முஸ்லிம்கள் நிறைந்த ஊர்களில் பஞ்சாயத்து தலைவர் பதவியில் ஜெயிக்கவில்லை. அவ்வூரில் அதிகமான வார்டுகளில் ஜெயிக்கவில்லை. ஒரு வார்டில் 57 வாக்குகள் வாங்கி ஜெயித்துள்ளனர்.
இவர்கள் தம்பட்டம் அடிக்கும் அளவுக்கு வெற்றி பெற்றார்கள் என்றால் மொத்த வாக்காளர்களில் இவர்களுக்கு வாக்களித்தவர்கள் மொத்தம் எவ்வளவு என்பதை பட்டியல் போட்டு விளக்கத் தயாரா?
மொத்தம் உள்ள நான்கு கோடி வாக்காளர்களில் இவர்களுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று பட்டியல் போட்டு சட்டமன்றத் தேர்தலை விட தாங்கள் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று கூறத் தயாரா என்று கேளுங்கள்.
முஸ்லிம் லீக் வென்ற இடங்களில் கால்வாசி இடங்களில் கூட வெற்றி பெறாத இவர்கள் தம்பட்டம் அடிப்பதை அவர்களின் தொண்டர்களே சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
எஸ் டி பி ஐ இயக்கத்தினர், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து ஐம்பது இடங்களில் வெற்றி பெற்றதாகப் பெருமையடித்துக் கொள்கின்றனர். அவர்கள் அடித்துக் கொள்ளும் தம்பட்டத்திற்கும் இந்தப் பதில் பொருந்தும்.
உணர்வு 16:10
21.11.2011. 6:33 AM
நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் இடஒதுக்கீடு என்பது சரியா?
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உணர்வு 10:8 இதழில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீடு குறித்து கூறிய கருத்து முற்றிலும் தவறானது என்று விளக்கி எழுதிய தலையங்கம்.
கேள்வி
? தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் மசோதாவை நிறைவேற்றி அதை இந்திய அரசியல் சாசனத்தில் 9வது அட்டவணையிலும் சேர்க்கக் காரணமாக இருந்தது அதிமுக அரசு. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் மீதான தீர்ப்பு வந்த பிறகு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கான வாய்ப்புகள் பரிசீலிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கும், அவர் கூறியிருப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இதற்கு விளக்கம் தேவை.
உ. முகமது அபுதாஹீர், கம்பம்
! முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவது கூடாது என்று ஏற்கனவே வெளிப்படையாக அவர் கருத்துத் தெரிவித்தார். இதற்காக நமது ஜமாத் சார்பில் முதல்வரைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்து முஸ்லிம்களின் உணர்வை வெளிப்படுத்தினோம்.
அதன் பிறகு இந்த விஷயத்தில் அவரது கருத்தில் மாற்றம் ஏற்பட்டதாக அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மூலம் நமக்கு தகவல்கள் கிடைத்தன.
வருகின்ற பொதுத்தேர்தலுக்கு முன்னால் நிச்சயம் இடஒதுக்கீடு வழங்குவார் என்ற நம்பிக்கை இதனால் நமக்கு ஏற்பட்டது.
ஜனவரி-29 பேரணி அநேகமாக ஜெயலலிதா இடஒதுக்கீடு அளித்ததற்கு நன்றி தெரிவிக்கும் பேரணியாக ஆகலாம் என்ற அளவுக்கு நமக்கு நம்பிக்கை ஊட்டினார்கள்.
ஆனால் சென்ற வாரம் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி அவரது கருத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி புரிய வைத்துவிட்டது.
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க மாட்டேன் என்பதை நேரடியாகச் சொல்லாமல் அதை மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் என்பதைத் தவிர அவரது கருத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை.
உச்சநீதிமன்றத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு இருப்பதால் அது குறித்த தீர்ப்பு வந்ததும் பரிசீலிப்பதாக அவர் அந்தப் பேட்டியில் குறிப்பிடுகிறார்.
இதற்கும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 69 சதவிகிதத்துக்கு அதிகமாக மேலும் இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்காக அதிகப்படுத்தினால் அது உச்சநீதிமன்றத்தை அவமதித்ததாக ஆகும்.
முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கை அதுவல்ல. ஏற்கனவே உள்ள 69 சதவிகித இடஒதுக்கீட்டில் பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோருக்கு என்று இடஒதுக்கீடு உள்ளது. இதில் சுமார் 200-க்கும் அதிகமான சாதிகளைச் சேர்த்து முஸ்லிம்களையும் அதில் ஒரு சாதியாக்கியுள்ளனர். இதனால் பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் பலன் முஸ்லிம்களுக்குக் கிடைக்கவில்லை.
எனவே பிற்பட்டோருக்காக உள்ள பட்டியலில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கை தனியாகப் பிரித்து வழங்குங்கள் என்பது தான் சமுதாயத்தின் கோரிக்கை. இடஒதுக்கீட்டின் மொத்த அளவு 69 சதவிகிதத்தை விட இதனால் அதிகரிக்காது. நீதிமன்றத்தில் உள்ள வழக்கை எந்த வகையிலும் இது பாதிக்காது.
அவ்வாறு இருந்தும் அவர் இதைக் காரணமாகக் காட்டியிருப்பது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தர முடியாது என்ற கருத்தில் சொன்னதாகவே எடுத்துக் கொள்ள முடியும்.
ஒருவேளை 69 சதவிகித்துக்கு மேல் நாம் அதிகம் கேட்டதாக அவர் நினைத்துக் கொண்டு இவ்வாறு கூறியிருக்கலாமோ என்றும் நினைக்க முடியாது. ஏனெனில், ஏற்கனவே இதை சமுதாயத் தலைவர்களிடமும் அவர் கூறினார். நாங்கள் கேட்பது அதுவல்ல என்பது அவருக்கு மிகத் தெளிவாக விளக்கப்பட்டது. எனவே, சமுதாயத்தின் கோரிக்கை என்னவென்பது அவருக்கு நன்றாகத் தெரியும். தெரிந்து கொண்டே தான் அவர் இவ்வாறு சம்பந்தமில்லாத காரணத்தைக் கூறுகிறார்.
நீதிமன்றத்தில் அந்த வழக்கு பத்து வருடங்களாவது நடக்கும். அதைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு அளிக்காமலேயே, அளிக்க எனக்கு விருப்பம் உள்ளது என்று சொல்லி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றலாம் என்று அவர் நினைக்கிறாரா? அல்லது அப்படி யாராவது அவருக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை.
முஸ்லிம்களே! உங்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க எனக்கு ஆசை தான்! என்ன செய்ய நீதிமன்றம் குறுக்கே நிற்கிறதே?'' என்று கூறி முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுவிட முடியும் என்று அவர் நினைத்தால் அவர் நிச்சயம் ஏமாந்து போவார். எம்.ஜி.ஆர் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களைப் போல் இன்றைய முஸ்லிம்கள் இல்லை. இப்போது முஸ்லிம்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர்.
தாங்கள் கேட்கும் இடஒதுக்கீடு என்ன என்பதன் பொருள் முஸ்லிம்களுக்கு நன்றாகவே தெரியும். மேலும், அவர் கூறுவது பொருந்தாத- ஏற்க முடியாத காரணம் என்பதை சமுதாயய இயக்கங்கள் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும்.
எனவே, இடஒதுக்கீடு அளிக்காமல் முஸ்லிம்களின் ஓட்டை அள்ளலாம் என்று அவர் நினைத்தால், அல்லது முஸ்லிம் தலைவர்கள் சிலரைச் சரிக்கட்டி விட்டால் முஸ்லிம்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் நினைத்தால் - அவரையும், அந்தத் தலைவர்களையும் முஸ்லிம்கள் அறவே நிராகரிப்பார்கள் என்பதை ஜெயலலிதாவுக்குச் சொல்லி வைக்கிறோம்.
முஸ்லிம்கள் ஓட்டு எனக்குத் தேவையில்லை என்று அவர் நினைத்தால் இது போல் பொருந்தாத காரணத்தைக் கூறிக் கொள்ளட்டும்.
முஸ்லிம்கள் ஓட்டு வேண்டும் என்றால் இடஒதுக்கீடு அளிப்பதைத் தவிர வேறு எதன் மூலமும் அதைப் பெற முடியாது என்பதையும் அவருக்கு நினைவூட்டுகிறோம்.
இந்த நேரத்தில் இன்னொன்றையும் நாம் நினைவுபடுத்துகிறோம். ஜனவரி-29 பேரணியை இன்னும் வீரியத்துடன் முழுமூச்சாக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் சமுதாயத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இது ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கருத்து என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தால் தான் இந்தக் கோரிக்கையை வென்றெடுக்க முடியும். அதன் மூலம் தான் முஸ்லிம்கள் விழிப்போடு இருப்பதை ஆள்வோருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் உணர்த்த முடியும்.
27.02.2012. 13:27 PM
காஃபிர் அரசாங்கத்தில் உரிமை கேட்கலாமா?
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உணர்வு 10:9 இதழில் வெளியான கேள்வியை இங்கே பதிவு செய்கிறோம்.
? என்னுடன் தவ்ஹீத் ஜமாஅத்தில் முன்பு இருந்த சகோதரர் ஒருவர் கேட்கும் கேள்வி! - எதன் அடிப்படையில், உங்களது ஜமாத் உரிமை மீட்புப் பேரணி போராட்டம் நடத்துகிறீர்கள். காஃபிர் அரசாங்கத்திடம் பிச்சை கேட்பது நபிகள் வழியா? இதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா? என்று கேட்கிறார்.
எஸ். அப்துல் சுபான், சேலம்.
தான் கூறுவதில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு அந்த நண்பர் அப்படிக் கேட்கிறாரா? அல்லது நம்மை எதிர்ப்பதற்காக விதண்டாவாதத்துக்காகக் கேட்கிறரா? என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள்!
அந்த நண்பர் மீது காவல்துறை வழக்குப் போட்டால் காஃபிர் அரசாங்க நீதிபதியிடம் நியாயம் கேட்டு வழக்கைச் சந்திப்பாரா? அல்லது காஃபிர் அரசாங்காத்திடம் நீதி கேட்கக் கூடாது என்பதற்காக சிறையிலேயே கிடப்பாரா?
அவரை யாராவது கடுமையாகத் தாக்கினால் அல்லது அவரது குடும்பத்தினரைச் சேர்ந்த ஒருவரைக் கொன்று விட்டால் காஃபிர் அரசாங்கத்திடம் நீதி கேட்கக் கூடாது என்பதற்காக புகார் கொடுக்காமல் இருந்து விடுவாரா? புகார் கொடுப்பாரா?
அவர் சம்பாதித்த பணத்தில் ஒரு சொத்தை வாங்கும் போது அதை அரசாங்க முத்திரைத் தாளில் எழுதி பத்திரப் பதிவு அலுவலகம் சென்று அதற்கான கட்டணத்தைச் செலுத்தி அதைப் பதிவு செய்வாரா? அல்லது காஃபிர் அரசாங்கத்திடம் நான் ஏன் சொத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று கருதி பதிவு செய்யாமல் விட்டு விடுவாரா?
அல்லது வீட்டில் திருட்டுப் போய் விட்டால் காஃபிர் அரசாங்கத்திடம் நான் ஏன் முறையிட வேண்டும் என்று கருதி புகார் கொடுக்காமல் இருப்பாரா?
ரேஷன் அட்டை வழங்கும் போது காஃபிர் அரசாங்கம் வழங்கும் பிச்சை எனக்கு வேண்டாம் என்று கூறி ரேஷன் அட்டை வாங்காமல் இருப்பாரா?
ரூபாய் நோட்டுக்கள் வெறும் பேப்பர் தான். காஃபிர் அரசாங்கம் அதற்கு உத்தரவாதம் தருவதால் தான் அதற்கு என மதிப்பு உள்ளது. அந்த நோட்டு செல்லாது என்று அரசாங்கம் அறிவித்தால் அந்தக் காகிதம், காகிதக் கப்பல் செய்வதற்குத் தான் உதவும் என்று கருதி ரூபாய்களைப் பயன்படுத்தாமல் இருப்பாரா? பண்டமாற்று முறையில் தான் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வாரா?
பத்திரிகைகளுக்கோ, குடும்ப உறுப்பினர்களுக்கோ தகவல் தெரிவிக்க விரும்பினால் காஃபிர் அரசாங்க முத்திரையுடன் வெளியிடப்படும் தபால் தலையை ஒட்டி தகவல் தெரிவிப்பாரா? சவூதி அரசாங்கம் வெளியிட்ட தபால் தலைகளை ஒட்டுவாரா?
வெளிநாடுகளுக்குச் செல்ல நேர்ந்தால் காஃபிர் அரசாங்கத்தின் அனுமதியை நான் ஏன் பெற வேண்டும் என்று கருதி கள்ளத்தனமாக வெளி நாட்டுக்குச் செல்வாரா? விசா வாங்கிச் செல்வாரா?
அரிசி, பருப்பு உள்ளிட்ட எண்ணற்ற பொருட்களை வாங்கும் போது அதற்கான வரியையும் காஃபிர் அரசாங்கத்துக்குச் செலுத்தியாக வேண்டும். எனவே, காஃபிர் அரசாங்கத்துக்கு வரியைச் செலுத்தக் கூடாது என்பதற்காக இலை தழைகளை உண்டு வாழ்வாரா?
காஃபிர் அரசாங்கம் சலுகை விலையில் வழங்கும் கேஸ், எண்ணெய், மின்சாரம் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் தனது வாழ்நாளைக் கழிப்பாரா?
இப்படி பல்லாயிரம் பட்டியல்களை வெளியிடலாம். இதையெல்லாம் செய்யாதவராக அவர் இருந்தால் அந்த அதிசயப் படைப்பை வைத்து கண்காட்சியே நடத்தலாம்.
இதையெல்லாம் அவர் செய்வார் என்றால் அவர் கேட்கும் கேள்வி விதண்டாவாதமாகும்.
மேற்கண்ட பல்லாயிரம் செயல்களைச் செய்வதற்கு எது ஆதாரமாக உள்ளதோ அதுவே தான் நமது உரிமைகளைக் கேட்பதற்கும் ஆதாரமாக உள்ளது என்பதை அவருக்குத் தெரிவியுங்கள்.
காஃபிர் ஆட்சியில் உரிமையைக் கேட்கக் கூடாது என்று சொன்ன ஒரு இயக்கம் கூட அந்த நிலையில் உறுதியாக நின்றதில்லை. எதையாவது சொல்லி ஆள் பிடிப்பதற்காக இவ்வாறு கூறுவதுண்டு. அதன் பின்னர் தங்கள் நிலைபாட்டை அறவே மாற்றிக் கொண்டு விட்டதை நாம் கண்டு விட்டோம்.
28.02.2012. 11:51 AM
சாத்தான்குளம் சம்பவமும் மக்கள் பெற வேண்டிய படிப்பினையும்
28/06/2020 வாட்ஸ் அப் கேள்வி பதில்
காவலர்களின் விசாரனை எல்லை என்ன குற்றவியல் சட்டம் சொல்வதென்ன?
28/06/2020 வாட்ஸ் அப் கேள்வி பதில்
எல்லைமீறி போன போலிஸ் அத்துமீறல்கள்
28/06/2020 வாட்ஸ் அப் கேள்வி பதில்