Sidebar

01
Wed, Jul
சமீபத்திய செய்திகள்

ஒன்று பட்டு தேர்தலை சந்திப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்ன?

வாட்ஸ் அப் கேள்வி பதில் 18/10/2020

விகிதாச்சார பிரதிநிதித்துவத்துக்கு யுக்தி வகுப்பீர்களா?

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 17-10-2020

நான் யார்? நான் யார்? அப்துல் கலாம் விளக்கம்:

அப்துல் கலாம் குறித்தும், அவரது உண்மை நிலை குறித்தும் கடந்த காலங்களில் உணர்வு இதழில் எழுதப்பட்ட செய்திகளை காலத்தின் கட்டாயம் கருதி இங்கே மீள் பதிவு செய்கின்றோம்.

தான் பயின்ற திருச்சி புனித ஜோசப் கல்லூரிக்கு வருகை புரிந்தார் ஜனாதிபதி வேட்பாளர் அப்துல் கலாம். கல்லூரியைச் சுற்றிப் பார்த்து தனது மாணவப் பருவத்தை நினைவு கூர்ந்தார் கலாம்.

1950-54  ஆண்டுகளில் அப்துல் கலாமுடன் பயின்ற ஒரு முஸ்லிம் நண்பர், அப்துல் கலாமைச் சந்தித்து அந்தக் காலத்தில் புனித ஜோசப் கல்லூரியில் படித்த இரண்டே முஸ்லிம்கள் நாம்தான் என்பதை நினைவுபடுத்தினார். உடனே இடைமறித்த அப்துல் கலாம், தயவு செய்து என்னை முஸ்லிம் என்று கூறாதீர்கள், இந்தியன் என்று கூறுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி வேட்பாளராக கலாம் அறிவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். பேட்டியின் முடிவில் தமிழகத்துச் செய்தியாளர்கள், நீங்கள் தமிழ்நாட்டுக்காரர். தமிழக மக்களுக்கு உங்கள் செய்தியை தமிழில் கூறுங்கள் எனக் கேட்டனர். அப்போது உடனிருந்த பிரமோத் மகாஜன், ஒரு பிராந்திய மொழியில் பேட்டித் தரக்கூடாது என்று அப்துல் கலாமைத் தடுத்தார். பிரமோத் மகாஜனின் உத்தரவுக்குப் பணிந்த அப்துல் கலாம் தமிழில் பேசுவதை தவிர்த்துக் கொண்டார்.

அப்துல் கலாமை முஸ்லிமாகவும், தமிழராகவும் தவறாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இதை சிந்திக்க வேண்டும்.

ஜூலை 05 - 11,2002 தேதியிட்ட உணர்வில் எழுதியமேற்கண்ட செய்தியை வரலாற்றுப் பதிவாக வெளியிடுகிறோம்.

அப்துல் கலாமின் அவமானப் பயணம்:

பதவியேற்றதும் முதல் சுற்றுப்பயணமாக குஜராத்துக்குப் போவதாக அப்துல் கலாம் முடிவெடுத்தவுடன் திடீரென ஆசாமி திருந்தி விட்டாரோ என பலரும் நினைத்தார்கள். ஆனால் அப்துல் கலாமின் குஜராத் பயணம் மணப்புண்ணுக்கு மருந்து போடுவதற்குப் பதிலாக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே அமைந்தது.

ஷா ஆலம் முகாம் உள்ளிட்ட பல அகதி முகாம்களில் இந்திய முஸ்லிம்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட சோகம் நிலை கொண்டுள்ளது. அரசாங்கமே நடத்திய அராஜகத்தால் வாழ்விழந்த முஸ்லிம்கள் ஆறாத் துயரோடு அங்கே தங்கியுள்ளனர். அகதிகளான பின்னரும் பாஜக அரசு அவர்களை இயன்றவரை இம்சித்து வருகிறது.

குடியரசுத் தலைவர் பொறுப்பிலிருக்கும் அப்துல் கலாம் அம்மக்களைச் சந்தித்திருந்தால் அவர்களுக்கு அது ஓர் ஆதரவாக இருந்திருக்கும். ஆனால் முஸ்லிம்கள் அதிக அளவில் தங்கியுள்ள அகதி முகாம்களை அப்துல் கலாம் முற்றிலும் தவிர்த்துள்ளார். அம்மக்களுக்கு இந்நிலை ஏற்படக் காரணமாக இருந்த பயங்கரவாதி நரேந்திர மோடியைத் தன்னோடே அழைத்துச் சென்றார்.

கடந்த ஆண்டு ஜனவரியில் குஜராத்தில் ஏற்பட்ட பூகம்ப பாதிப்புகளை நேரில் சென்று பார்த்தார். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிமல்லாத மக்களுக்கு குஜராத் அரசு உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்து மாடி வீடுகளைக் கட்டிக் கொடுத்ததையறிந்து அப்துல் கலாம் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்.

தனது வழக்கமான சிறுபிள்ளைத் தனங்களை அரங்கேற்றிட குழந்தைகளை அழைத்து கேள்விகள் கேட்டார். அதிலும் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளை அவர் சந்தித்து தனது மதச்சார்பின்மையை(?) சிதைக்கவில்லை.

நரேந்திர மோடியின் கண்ணசைவுக்கு ஏற்ப, தனது பார்வையிடல் பயணத்தை அமைத்துக் கொண்டார் அப்துல் கலாம். முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து அவர் மறந்தும் விசாரிக்கவில்லை. மருந்துக்குக் கூட ஆறுதல் வார்த்தைகளைக் கூறவில்லை. பூகம்ப சேத இடங்களைப் பார்வையிட்டு தனது காருண்ய குணத்தை வெளிக்காட்டினார் கலாம்.

நேரு காலத்தில் கும்பமேளாவில் மக்கள் நசுங்கி உயிர்விட்ட இடம், கும்பகோணத்தில் மகாமக நெரிசல் சாவுகள், இன்னும் இருபது முப்பது வருடங்களுக்கு முன் நடந்த எத்தனையோ இழப்புகள் உள்ளன. அவற்றையும் அப்துல் கலாம் பார்வையிட்டு தனது கருணையைக் காட்டட்டும். குஜராத்தில் இப்போது நடந்துள்ள கொடுமைகளை இருபத்தி ஐந்து வருடங்களுக்குப் பின்னால் ஜனாதிபதியாக பதவி ஏற்பவர் பார்த்துக் கொள்வார்.

இந்தக் கூத்துக்களைக் கண்ட ஒட்டுமொத்த உலகமும் உமிழ்கிறது.

ஆகஸ்ட் 23 - 29, 2002 தேதியிட்ட உணர்வில் நாம் எழுதியது. அப்துல் கலாமின் மரணத்தினால் இதை மறக்க மாட்டோம்.

கலாமின் குஜாராத் பயணம் ஒரு கண்துடைப்பு :

அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக நியமித்துவிட்டால் குஜராத்தில் தாங்கள் நடத்திய மனிதப் படுகொலைகளை உலக நாடுகளின் சிந்தனையிலிருந்து திசை திருப்பிவிடலாம் எனக் கனவு கண்ட பி.ஜே.பி உள்ளிட்ட சங்பரிவார சக்திகள், மீண்டும் ஒரு சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்துல் கலாமை குஜராத்திற்குச் செல்ல வைத்து தங்கள் கபட நாடகத்தை மீண்டும் அரங்கேற்றியுள்ளனர்.

குஜராத் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய முகாமான ஷா ஆலம் முகாம், மற்றும் ஜுஹாபுராவில் உள்ள சங்கவித் நகர் முகாம் ஆகியவை அப்துல் கலாமின் பயணத் திட்டத்தில் இடம்பெறவில்லை என டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு தெரிவித்துள்ளது.

இதற்கு மாறாக வெறும் 11 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட கலூபூரில் உள்ள ஹஜ் இல்லம் மற்றும் ஜூஹாபுராவில் உள்ள விதவைகள் இல்லம் ஆகியவை அப்துல்கலாம் பார்வையிடும் இடங்களில் உள்ளவையாகும்.

86  பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட நரோடா பாடியாவிற்குச் செல்லும் கலாம் முன்னாள் எம்.பி. எஹ்ஸான் ஜாப்ரீ உள்ளிட்ட 39 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சமன்புராவிற்குச் செல்லவில்லை.

பிரதமர் வாஜ்பேய் மற்றும் தலைமைத் தேர்தல் கமிஷனர் லிங்டோ உள்ளிட்டவர்கள் சென்ற மிகப்பெரும் நிவாரண முகாமான ஷா ஆலம் முகாமிற்கு கலாம் செல்லாதது பெரும் விந்தையாக உள்ளது.

செய்தி ஊடகங்களுக்குக் கூட தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. ஹஜ் இல்லம் மற்றும் விதவைகள் இல்லம் ஆகியவற்றிற்கு கலாம் செல்லும்போது பத்திரிக்கையாளர்கள் உடன்வர மாநில அரசு தடைவிதித்துள்ளது.

தலைமைத் தேர்தல் கமிஷனர் லிங்டோ வந்தபோது செய்தி ஊடகங்களில் மாநில அரசுக்கெதிராக மிகப்பெரும் விமர்சனங்கள் எழுந்ததைக் கண்டு எரிச்சலடைந்துள்ள அதிகாரிகள், அப்துல் கலாமின் வருகையின் போது செய்தியாளர்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்பதில் கவனமாக உள்ளனர்.

மொத்தத்தில் அப்துல் கலாமின் குஜராத் பயணம் பாதிக்கப்பட்ட குஜராத் முஸ்லிம்களின் காயங்களைப் போக்குவதாக இல்லை. மாறாக முக்கிய நிவாரண முகாம்களைப் பார்வையிடச் செல்லாத அவரது போக்கு அவர் சங்பரிவாரின் கைப்பாவை தான் என்பதைச் சந்தேகமின்றி நிரூபித்துள்ளது.

ஆகஸ்ட் 16 - 22, 2002 தேதியில் நாம் எழுதியதை வரலாற்றுப் பதிவாக இங்கே வெளியிடுகிறோம்.

பா.ஜ.க. கொள்கையைப் பிரதிபலிக்கும் கலாம்:

பா.ஜ.க. கொள்கைகளுக்கு ஒத்து ஊதும் ஒருவரைத் தான் ஜனாதிபதி வேட்பாளராக பா.ஜ.க தேர்ந்தெடுத்துள்ளது என்பதை அப்துல் கலாம் நிரூபித்து விட்டார். தேசிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்று அத்வானியும், அவருடைய ஆர்.எஸ்.எஸ். பரிவாரமும் பல தடவை கூறி வந்துள்ளது. அந்தக் கீறல் விழுந்த பழைய ரெக்கார்டின் பல்லவியை இப்போது கலாமும் பாடியுள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு அடையாள அட்டை வழங்கப்பட்டால் இந்தியாவில் இருந்து பிழைப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள முஸ்லிம்களை இந்தியர்கள் பட்டியலில் இருந்து எளிதாக எடுத்து விடலாம். அவ்வாறு எடுத்து விட்ட பிறகு மீண்டும் இந்தியர்கள் பட்டியலில் இணைவதற்கு ஏராளமான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டிவரும். அரசாங்கம் கேட்கும் அவ்வளவு ஆவணங்களும் எல்லோரிடமும் இருக்காது.

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், அடிக்கடி வீடும் மாற வேண்டி வரும். அதனால் பழைய விலாசம் இடம் பெற்றுள்ள ரேஷன் கார்டு செல்லுபடியாகாது என்றும் கூட அதிகாரிகள் நிராகரிக்கலாம். ரேஷன் கார்டு பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி இறுதி வகுப்புச் சான்றிதழ் ஆகிய அனைத்திலும் எழுத்துப் பிழையில்லாமல் யாருடைய பெயரும் சரியாக இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. அரசு ஆவணங்களில் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் கவனக் குறைவாக சேர்க்கப்பட்டுள்ளதும் சாதாரண விஷயமாகும்.

எனவே இதிலுள்ள சிறு முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி அதிகாரிகள் வீம்புக்காக அலைய விடலாம். இப்படி சட்டரீதியாக முஸ்லிம்களை அலைக்கழிப்பதற்கு அத்வானி கூறும் தேசிய அடையாள அட்டை சரியான காரணமாக அமையும்.

குஜராத், காஷ்மீர், ராஜஸ்தான், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் வாழும் ஏராளமான முஸ்லிம்களை வந்தேறிகள் என்று பா.ஜ.க. பிரச்சாரம் செய்கிறது.

தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டால் இம்மாநிலங்களில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்களை இந்தியர்கள் பட்டியலில் இருந்து மத்திய பாஜக அரசு எளிதாக அகற்றிவிடும். மற்ற சமுதாய மக்களை விட முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின்தங்கியே இருக்கின்றனர். ஆகவே தேசிய அடையாள அட்டை பற்றிய குறைகளைச் சொல்வதற்கு யாரை அணுக வேண்டும்? எத்தகைய ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்? உரிமைகள் பறிக்கப்படும் போது எப்படி சட்ட ரீதியாகப் போராட வேண்டும் என்ற வழிமுறைகள் தெரிய வாய்ப்பில்லை.

முஸ்லிம்களில் உள்ள பெரும்பான்மையினரின் நிலை இந்த வகையில் தான் உள்ளது. எனவே தேசிய அடையாள அட்டை என்ற யோசனை முஸ்லிம்களை நசுக்கவும் மனரீதியாக அவர்களைத் துன்புறுத்தவும் அரசுத் திட்டங்கள் முஸ்லிம்களுக்கு கிடைக்கவிடாமல் செய்வதற்காகவும் தான் பா.ஜ.க. மற்றும் சங்பரிவார அமைப்பால் முன்மொழியப்படுகிறது. இதைத் தவிர இந்த அடையாள அட்டையால் வேறு எந்த வெங்காயமும் விளையப் போவதில்லை.

இந்த யோசனையை பா.ஜ.க. வைத் தவிர இந்தியாவில் உள்ள எந்தக் கட்சிகளும் தெரிவிக்கவில்லை. ஏற்கவில்லை.

ஆனால் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கப் போகும் அப்துல் கலாம். இப்படிப்பட்ட தேசிய அடையாள அட்டை தேவை என்று டெல்லியில் ஜூன் 25ஆம் தேதியன்று நடந்த தொழில்நுட்ப பாதுகாப்புக் கருத்தரங்கில் பேசியுள்ளார். தேசிய அடையாள அட்டை ஒருமைப்பாடு அணுகுமுறைக்கு மிகவும் அவசியம் எனவும், அதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.

நாட்டு மக்களையும், சொந்த மண்ணையும் நேசிப்பவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் அப்துல் கலாம் சொல்வது போன்று நடக்கலாம். ஆனால் சொந்த நாட்டு மக்களை அகதி முகாம்களில் தங்க வைத்துள்ளவர்கள் ஆட்சியில் இது போல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் ஒரு சதவீத அளவுக்குக் கூட இருக்க முடியாது என்பதுதான் உண்மை. பாஜக ஆட்சியில் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டால் அதனால் இந்தியாவின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் சிதையுமே ஒழிய உறுதிப்படாது.

இதை அப்துல் கலாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் அனுபவம் உள்ளவர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறும் கம்யூனிஸ்டுகளின் கருத்துக்கு அப்துல் கலம் வலு சேர்த்து விடுவார் போல் தெரிகிறது.

ஜூலை 05 - 11,2002 தேதியிட்ட உணர்வில் எழுதியமேற்கண்ட செய்தியை வரலாற்றுப் பதிவாக வெளியிடுகிறோம்.

கலாம் என்ற முஸ்லிம்?:

இந்தியாவுடைய அடுத்த ஜனாதிபதி ஆகப்போகின்ற அப்துல் கலாம் எல்லா வகையிலும் உலக அளவில் இந்தியாவிற்குப் புகழ் வாங்கிக் கொடுத்த விஞ்ஞானி என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. அவரை ஏவுகணை மனிதன் என்பதில் எல்லா இந்தியர்களும் பெருமை அடைகிறோம்.

அப்துல் கலாம் அவர்கள் முஸ்லிமாகப் பிறந்ததினாலோ, முஸ்லிமாக வளர்ந்ததினாலோ முன்னாள் முஸ்லிம் ஜனாதிபதிகளான டாக்டர் ஜாகிர் உசேன், பக்ருத்தீன் அலி அஹமது இவர்களுக்கு சமமாக மாட்டார்.

கலாமைப் போலவே அவர்கள் இருவரும் மிகுந்த தேசப்பற்று உள்ளவர்களாகவும், இந்தியாவுடைய பெருமைகளைக் கட்டிக் காப்பவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் சொல்லிலும், செயலிலும் பெயரிலும் முஸ்லிம்களாக இருந்தார்கள். 

நாட்டுடைய வளர்ச்சியில் எப்படி அக்கறை கொண்டு இருந்தார்களோ அது போலவே தமது சமுதாயத்தின் மீதும் அக்கறை கொண்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் மகாத்மா காந்திக்கு பிரியப்பட்ட உத்தமர்களாகவும் இந்தியாவுடைய சுதந்திர தியாகிகளாகவும் இருந்தார்கள்.

முஹம்மதலி ஜின்னாவின் பிரிவினை வாதத்தை எதிர்த்து அவர்கள் அபுல் கலாம் ஆசாத்தோடு கைகோர்த்து நின்றார்கள். இந்தியாவுடைய பண்பாட்டிலும், ஒருமைப்பாடிலும் ஒத்துப்போகக் கூடியவர்களாகவே இருந்தார்கள்.

டாக்டர் ஜாகிர் உசேன் ஜாமியா மில்லியா இஸ்லாமிய ஸ்தாபனத்திலும், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலும் உப தலைவராக இருந்தார். பக்ருத்தீன் அலி அஹமது அஸ்ஸாமிலும் மற்றும் சில மாநிலங்களிலும் உள்ள முஸ்லிம் அறக்கட்டளைகளிலும் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அப்துல் கலாமோ முஸ்லிம்களை விட்டும் எப்போதும் விலகி நிற்கவே முயற்சித்தர் என்பதை வேதனையோடு குறிப்பிடுகிறேன். மேலும் அவர்களோடு பழகுவதையும் தவிர்த்தார். முஸ்லிம் சமுதாய விழாக்களில் கலந்து கொள்வதையும் தவிர்த்தார்.

மும்பையில் ஆல் இந்தியா கிலாபத் கமிட்டி வருடந்தோறும் நடத்தும் பத்து லட்சம் பேர் கலந்து கொள்ளக்கூடிய மீலாது நபி தின பொதுக்கூட்டத்திற்கு இந்தக் கமிட்டியுடைய சேர்மன் என்ற முறையில் நான் அவர்களை நேரில் சென்று அழைத்தும் வர இயலாது எனத் தட்டிக் கழித்து விட்டார்.

1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியால் இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காகவே இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிலாபத் கமிட்டி நடத்தும் விழாக்களில் இந்தியாவுடைய பிரதமர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது உண்மை.

இதைப் போலவே மேலும் ஒரு நிகழ்ச்சி என்னவென்றால் அஞ்சுமனே இஸ்லாம் சங்கம் நடத்திய நபி தின நினைவு நாளன்று நடக்கும் விழாவிற்கு அஞ்சுமன் நிர்வாகி இஸ்ஹாக் ஜும்கான்வாலா அழைத்தும் அவர் செல்லவில்லை. அதையும் தட்டிக் கழித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்களின் எந்த நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் எந்த ஒரு முன்னேற்றத்திலும் இவருக்கு அக்கறை இல்லை என்பது கீழே குறிப்பிடுவதை வைத்து நீங்களே சொல்லலாம்.

மத்திய அரசாங்கத்தின் உதவியோடும், ஒத்துழைப்போடும் ஆரம்பிக்கப்பட்ட மௌலானா ஆசாத் எஜுக்கேஷன் பவுண்டேஷன் அறக்கட்டளையில் ஒரு நபராக இருந்தார். ஆனால் இதுவரை இவரை வைத்து முஸ்லிம்களுக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை.

இந்து நண்பர்க்ளோடு பழகுவதையே அவர் விருப்பமாகக் கொண்டிருந்தார். வாழ்க்கையின் அதிக காலத்தை அவர்களோடு தான் அவர் செலவழித்தார் என்று சொல்வது எனக்குத் தவறாகத் தோன்றவில்லை.

ஒரு முஸ்லிமை நாங்கள் ஜனாதிபதியாக ஆக்கி இருக்கிறோம் என்று மார் தட்டிக் கொள்ளாதீர்கள்.

DRDL இதனுடைய முன்னாள் டைரக்டர் கே. ராமாராவ் எழுதுகிறார்.

32 வருடமாக நான் கலாமோடு பழகுகிறேன். 32 வருடகாலமாக எனக்கு அவரைத் தெரியும். 1954ல் இருந்து நாங்கள் ஒன்றாகவே ஒரே அறையில் தங்கியிருந்தோம்.

1980ல் விஞ்ஞானியாகி அதற்குத் தலைவராகி வரும் வரை என் கூடவே இருந்தார். அவர் இரவு வெகு நேரம் கழித்துத்தான் உறங்குவார். காய்கறிகள் மட்டுமே சாப்பிடும் பழக்கமுள்ளவர். முஸ்லிம் என்பதற்கு எந்தவொரு அடையாளமும் காணப்படாதவர். தினம் ஐந்து நேரத் தொழுகையோ ரமலான் மாதங்களில் நோன்பு நோற்கவோ நான் பார்த்ததில்லை.

பெங்களூர் மிஷிஸிளி சாட்டிலைட் சென்டரின் முன்னாள் டைரக்டர் ஆர். அறவுமதன் கூறுகிறார்

திருவனந்தபுரத்தில் இந்திரா பவன் லாட்ஜில் நாங்கள் தங்கியிருந்த காலத்தில் கலாமை, கலாம் ஐயர் என்று சொன்னால் தான் தெரியும். பிராமணர்களோடு இருப்பதையும், அவர்களின் உணவை சாப்பிடுவதையும் பெருமையாகக் கருதுபவர். அவர் அசைவம் சாப்பிட்டுள்ளார் என்றால் புரோட்டாவோடு முட்டை மசாலா மட்டுமே சாப்பிட்டுள்ளார். அவர் மாதா பிதாக்களை நினைத்தோ சொந்த பந்தங்களை நினைத்தோ பேசியதை நான் கேடதில்லை. ஆனால் தினந்தோறும் காலை பகவத் கீதை வாசிப்பதையும், மனப்பாடம் செய்வதையும் பழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் கிருஷணனின் பக்தராக இருந்தார். சைவம் சாப்பிடுபவராகவும், சுத்த பிரம்மச்சாரியாகவும் இருந்தார்.

அவர் தன்னை ஒரு முஸ்லிம் ஜனாதிபதி என்றோ, முன்னாள் ஜனாதிபதிகள் டாக்டர் ஜாகிர் உசேன், பக்ருதீன் அலி அஹமது இவர்கள் போல் நானும் ஒரு முஸ்லிம் என்றோ சொல்லிக் கொள்ள விருப்பப்படாதவர்.

அவர் மோசமானவர் என்றோ இதற்கு முன்பிருந்த இரண்டு ஜனாதிபதிகளை விட தாழ்ந்தவர் என்றோ இதற்கு அர்த்தமில்லை. அவரை முஸ்லிம் என்று மதத்தின் பெயர் சொல்லி அழைப்பதையே நான் எதிர்க்கிறேன்.

நன்றி : மாத்யமம் 21.06.2002 ஜூலை 12 - 18,2002 தேதியிட்ட உணர்வில் இடம்பெற்ற வரலாற்றுப் பதிவாக வெளியிடுகிறோம்.

மீலாது விழாக்களில் நமக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அது முஸ்லிம்களின் விழாவாகக் கருதப்படுகிறது. அரசு விடுமுறை விடப்படுகிறது. அப்படி இருந்தும் அவர் அந்த விழாவில் கூட கலந்து கொள்ள மறுத்துள்ளார்.

05.08.2015. 11:34 AM

முஸ்லிம்கள் பார்வையில் அப்துல் கலாம் மரணம்!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மரணம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் அளவுக்கு மற்ற எந்தத் தலைவரின் மரணமும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனலாம்.

மத்திய அரசும், இந்தியாவின் பல மாநில அரசுகளும் யாருக்கும் வழங்காத அளவுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை அளித்தன. எல்லா ஊடகங்களும், பொது மக்களும் அவரது எளிமை, மாணவர்களுடன் அவர் காட்டிய நெருக்கம், அவரது ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டங்களால் இந்தியாவுக்கு கிடைத்த பெருமை ஆகிவற்றைப் பேசி அவருக்கு புகழ்மாலை சூட்டின.

அவர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து, முஸ்லிம் பெயரை வைத்திருந்து, முஸ்லிமாக அறியப்பட்டு இருந்தும் முஸ்லிமல்லாத மக்களும் அவரைப் பெரிதும் மதித்து வீதிகள் தோறும் அவரது படத்தை வைத்து மாலை சூட்டி அஞ்சலி செலுத்தினார்கள்.

இது எப்படிச் சாத்தியமானது? எந்த முஸ்லிமையும் அனைத்து மக்களும் அங்கீகரிக்க மாட்டார்களே! முஸ்லிம் என்றால் வெறுப்புடன்தானே பார்ப்பார்கள்? அப்படி இருக்கும் போது இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது?

முஸ்லிமுக்கு வாடகைக்கு வீடு தர மறுக்கும் சமுதாயத்தில், முஸ்லிம் மாணவர்களுக்கு கல்விக் கூடத்தில் இடம் தர மறுக்கும் சமுதாயத்தில், முஸ்லிம்களைப் பணியில் அமர்த்த மறுக்கும் சமுதாயத்தில் ஒரு முஸ்லிமுக்கு எப்படி ராஜ மரியாதை அளிக்கப்பட்டது?

இந்த அதிசயம் எப்படி நடந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்துக்கும் எதிரான துவேசத்தை விதைக்கும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அனைத்து சங்பரிவார இயக்கங்களும் அப்துல் கலாமைத் தூக்கிப் பிடித்தன. புகழ்மாலை சூட்டின. 90 விழுக்காடு ஊடகங்கள் சங்பரிவாரக் கொள்கையில் உள்ளதால் அவரைப் பற்றி உயர்வான அபிப்பிராயம் ஏற்படும் வகையில் அதிகமான பொய்களைக் கலந்து கருத்துருவாக்கம் செய்தன. திரும்பத் திரும்ப இதையே ஒரே செய்தியாக முன்வைத்து மக்களை மூளைச் சலவை செய்தன.

அப்துல் கலாமுக்கு எங்காவது படம் வைத்து மாலை போட்டால் அதையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பி அனைவரும் இவ்வாறு செய்யத் தூண்டின. இதன் விளைவாகவே அப்துல் கலாமுக்கு யாருக்கும் கிடைக்காத கவுரவம் கிடைத்தது.

சங்பரிவாரமும், சங்பரிவார ஊடகங்களும் ஒரு முஸ்லிமை ஏன் தூக்கிப் பிடிக்க வேண்டும். இதைத்தான் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்றால் அவர்கள் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு சங்பரிவாரம் சில விதிகளை வைத்துள்ளது.

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் முஸ்லிம் பெயர் வைத்துக் கொள்ளலாம்; தொழுகை நடத்தலாம். ஆனால் இந்துக்கள் தெய்வமாக மதிக்கும் கடவுள்களையும் தங்களின் கடவுள்களாக முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்துக்கள் வேதமாக மதிக்கும் கீதை உள்ளிட்ட வேதங்களைத் தமது வேதங்களாக முஸ்லிம்கள் மதித்து ஓத வேண்டும்

இந்து தெய்வங்களை வழிபட்டு, இந்துச் சாமியார்களின் காலில் விழுந்து ஆசி வாங்க வேண்டும். இந்துக் கோவில்களுக்குச் சென்று வழிபட வேண்டும். முஸ்லிம்களை இப்படி மாற்றுவதுதான் சங்பரிவாரின் முக்கியக் கொள்கையாகும்.

இந்தக் கொள்கையை அப்படியே அட்சரம் பிசகாமல் கடைப்பிடித்து சங்பரிவாரத்தின் அடிமையாக அப்துல் கலாம் இருந்ததுதான் இந்த பில்டப்புக்குக் காரணம். இப்படி நடக்கும் முஸ்லிம்களைத்தான் மதிப்போம் என்ற செய்தியை உரத்துச் சொல்லவே இந்த பில்டப்புகள்..

மக்களின் கருத்து எப்படிச் செல்கிறதோ அதுபோல் நிலை மாறுவது மனிதனின் இயல்பு. முஸ்லிம்கள் இந்த நிலையில் இருக்கக் கூடாது. எது சரியானதோ அதில் உறுதியாக நிற்பதுதான் முஸ்லிம்களின் இயல்பாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் அப்துல் கலாம் அவர்கள் குறித்த நமது கருத்தை அழுத்தமாகச் சொல்கிறோம்.

மலஜலத்தைச் சுமந்து கொண்டுள்ள சாமியார்கள் மேலே இருக்க, அப்துல் கலாம் கீழே அமர்ந்து குடியரசுத் தலைவர் என்ற மரியாதையைக் கெடுக்கும் வகையில் ஆசி வாங்கும் காட்சிகளையும் சங்பரிவாரத்தை மனம் குளிரச் செய்யும் வகையில் சாமி கும்பிடும் காட்சிகளையும் பாருங்கள்!

ஏவுகனையைக் கண்டுபிடித்தவருக்கு, அணுசக்தியை ஆராய்ச்சி செய்தவருக்கு மனிதன் மனிதன்தான் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தன் பகுத்தறிவை அடகு வைத்து சரணாகதி அடையக் காரணம் என்ன? இப்படி நடப்பதுதான் சங்பரிவாரத்துக்குப் பிடிக்கும் என்பதுதான் காரணம்.

இவரது ஆராய்ச்சி குறித்து தினமலர் உள்ளிட்ட பல ஊடகங்கள் வெளியிட்ட செய்தியைப் பாருங்கள்!

கடவுள் துகள் என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்து இந்தியாவில் அப்துல் கலாம் உட்பட மொத்தம் 30 இலட்சம் விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த ஆராய்ச்சியின் நோக்கம் பூமி எப்படி உருவானது என்பதுதான். அதன் அடிப்படையில் அண்டார்டிக்காவின் அருகில் உள்ள பகுதியை விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்காக ஏற்றுக் கொண்டனர். அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனெனில் இந்த ஆய்வை மேற்கொள்ள பூமிக்கு பல கோடி மீட்டர் கொண்ட ஆழம் தோண்டும்போது அதனால் பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர்.

உடனடியாக 30 இலட்சம் விஞ்ஞானிகளில் ஒருவரான அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் சிவபெருமான் சிலையை வைத்து ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள் என்று கூறினார். ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்க அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவத்தில் இந்த உலகம் இயங்குகிறது. மேலும் தமிழ்ப் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பதாகக் கூறினார்.

விஞ்ஞானிகள் 1978 ஆம் ஆண்டு தான் அணுவையே கண்டறிந்தனர். அதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார். மேலும் இந்த உலகத்தைப் படைத்தது சிவபெருமான் தான். அந்தச் சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதையும் கூறினார். அங்கே சிவபெருமான் நடனமாடுவதைப் போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து நோபல் பரிசையும் தட்டிச் சென்றுள்ளனர்.

சிவன்தான் உலகைப் படைத்தார் என்ற நம்பிக்கையும், அல்லாஹ்தான் படைத்தான் என்ற நம்பிக்கையும் ஒரு உள்ளத்தில் இருக்க முடியாது.

அல்லாஹ்வுக்கு அப்பட்டமாக இணை வைத்து, இல்லை இல்லை அல்லாஹ்வையே மறுத்து நடந்து கொண்ட அப்துல் கலாமை இஸ்லாம் அங்கீகரிக்காது.

முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் ஒரே சிவில் சட்டம் வேண்டும் என்ற கொள்கையை இவர் ஆதரித்தார். இதுதான் சங்பரிவாரத்தின் பிரதானக் கொள்கை.

குஜராத் கலவரத்தின் போது ஜனாதிபதியாக இருந்தவர் அப்துல் கலாம். அந்தக் கொடூரமான முஸ்லிம் இன அழிப்பைப் பொறுக்க முடியாமல் பிரதமர் வாஜ்பாய் மோடியைக் கண்டித்தார். ராஜ தர்மத்தைக் கடைப்பிடிக்க வலியுறுத்தினார்.

ஆனால் அப்துல் கலாம் மவுனச் சாமியாராக இருந்தார். வாய் திறக்கவில்லை. குஜராத் முஸ்லிம்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை. நேரிலும் போய்ப் பார்க்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் குஜராத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை இந்த நேரத்தில் பார்வையிடச் சென்றார்.

ஆர்.எஸ்.எஸ். கண்ணசைவின் படி நடந்து கொண்டதற்குத் தான் இந்த வெகுமதியைக் கொடுத்துள்ளனர் என்று தெரிகிறதா?

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா, பிராமணராக இருந்தும் இந்தக் கொடும் செயலைக் கண்டித்தார். அந்த உணர்வு கூட இல்லாமல் அப்துல் கலாம் நடந்து கொண்டார். மூவாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது எள் முனையளவு கூட இவருக்கு உறுத்தலை ஏற்படுத்தவில்லை.

இவரது இறுதிச் சடங்கில் அதிகமான மக்கள் கலந்து கொண்டாலும், யாகூப் மேமன் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையில் பத்து சதம் கூட முஸ்லிம்கள் கலந்து கொள்ளவில்லை. நாடு முழுவதும் இலவசப் பயண ஏற்பாடு செய்து கொடுத்தும் இந்த நிலை ஏன்?

மும்பை என்ற ஒரு பகுதியில் முஸ்லிம்கள் கலந்து கொண்ட அளவுக்குக் கூட முஸ்லிம்கள் இவருக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதில் இருந்து அவரால் முஸ்லிம்கள் எந்த அளவுக்கு காயம் பட்டிருப்பார்கள் என அறியலாம்.

சில முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஜனாசா தொழுகையில் முகம் காட்டினார்கள் என்றால் அதற்குக் காரணம் உள்ளது. இவர்களும் அப்துல் கலாம் போல் திருவாடுதுறை ஆதீனத்திடம் ஆசி வாங்கியுள்ளனர். அப்துல் கலாமே செய்திருக்கும் போது நாங்கள் செய்தால் என்ன என்று நியாயப்படுத்த அஸ்திவாரம் போட்டுள்ளனர்.

அல்லாஹ்வை மறுத்து சிவ பெருமானை வழிபட்டவருக்கு ஜன்னதுல் பிர்தவ்ஸைக் கேட்குமளவுக்கு ஈமான் உறுதியைக் காட்டியுள்ளனர்.

இவர்களைப்போல் அப்துல் கலாமுக்காக இந்துக் கோவில்களில் மோட்சதீபம் ஏற்றியுள்ளனர். இது இந்துக்களுக்கு மட்டுமே ஏற்றப்படும் தீபமாகும்.

அப்துல் கலாம் ஆன்மா சந்தி அடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் இது ஏற்றப்பட்டது.

அப்துல் கலாம் உடல் அன்று நல்லடக்கம் செய்யப்பட்டபின் மாலை 5:30 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமானோர் பிரார்த்தனை செய்தனர்.

அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டி கோயிலின் 4 வாசல்களில் மோட்ச தீபத்தை கோயில் குருக்கள் விஜய ஆனந்த், கணபதி ராமன் ஏற்றினார். அதை இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின் ராஜாங்கம், பேஷ்கார் அண்ணாதுரை, கமல நாதன், பா.ஜ. தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளீதரன், யாத்திரை பணியாளர் சங்கத் தலைவர் மகேந்திரன் உள்ளிட்டோர் பிரார்த்தனை செய்தனர். அப்துல் கலாமுக்கு ஏராளமானோர் திரண்டு இதை ஏற்றினர்.

இவர்கள் மோட்ச தீபம் ஏற்றியதிலாவது நியாயம் உள்ளது. இவர்களைப் போன்ற நம்பிக்கையுடையவராக அப்துல் கலாம் திகழ்ந்தார். தொழுகை நடத்தியவர்களிடம் அந்த நியாயமும் இல்லை.

(முஹம்மதே!) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் நம்புவதாகக் கூறிக் கொள்வோரை நீர் அறியவில்லையா? அவர்கள் தீய சக்திகளிடம் தீர்ப்புக் கோர விரும்புகின்றனர். அதை மறுக்குமாறு அவர்கள் கட்டளையிடப்பட்டிருந்தனர். (உண்மைக்கு) மிகவும் தூரமாக உள்ள வழிகேட்டில் அவர்களைத் தள்ள ஷைத்தான் விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 4 : 60

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்.

திருக்குர்ஆன் 9:113,114

ஊரெல்லாம் சேர்ந்து ஒன்றைச் செய்தால் அதைப் பார்த்து முஸ்லிம்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக் கூடாது. அல்லாஹ் கூறியதில் அசைக்க முடியாத உறுதியுடன் இருக்க வேண்டும்.

இனிமேல் முஸ்லிம் தலைவர்கள் அப்துல் கலாம் போல் நடக்கவும், அதை நியாயப்படுத்தவும் இதைக் காரணமாக ஆக்கக் கூடாது என்பதற்காக இதைக் குறிப்பிடுகிறோம்.

இறந்தவர்களை ஏசாதீர்கள் என்ற ஹதீஸைச் சொல்லி சில மூடர்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்த அப்துல் கலாமின் செயலை நியாயப்படுத்தினார்கள். கேட்டால் கடைசி நேரத்தில் தவ்பா செய்து திருந்தி இருக்கலாம் அல்லவா என்ற வாதத்தை வைத்தனர்.

சல்மான் ருஷ்டியோ, தஸ்லீமாவோ மரணிக்கும்போது கடைசி நேரத்தில் திருந்தி இருக்கலாம் என்று சொல்வார்களா?

முஸ்லிம்களாகிய நாம் வெளிப்படையானதைத் தான் பார்க்க வேண்டும். உள்ளத்தில் உள்ளதைப் பார்க்கக் கூடாது. அப்துல் கலாம் வெளிப்படையாக இணை கற்பித்தார். நான் நடந்து கொண்டது தவறு என்று அறிவிக்கவில்லை. இதை வைத்துத் தான் நாம் முடிவு செய்ய வேண்டும். அவர் தவ்பாச் செய்திருக்கலாம் என்பது இவர்களின் ஆதாரமற்ற ஊகம்.

இறந்தவரை குறை கூறாதீர்கள் என்பது அப்துல் கலாமுக்குப் பொருந்தாது. முஸ்லிமாக வாழ்ந்தவருக்கே பொருந்தும்.

அப்துல் கலாம் வாழும்போது அவர் முஸ்லிமாக வாழவில்லை என்று நாம் எழுதினோம். அதை வாசித்தால் அவர் ரொம்ப மகிழ்ச்சியடைவார். அவர் மகிழ்ச்சி அடையக் கூடியதைக் கூறுவது இறந்தவரை ஏசுவதில் சேராது.

முஸ்லிம்களே! உங்களுக்கு இந்த நாட்டில் மரியாதை வேண்டும் என்றால் அப்துல் கலாம்போல் முஸ்லிம் பெயரில் இந்துவாக மாறுங்கள் என்ற செய்தியை இந்திய அரசும், மாநில அரசுகளும் இந்துத்துவா சக்திகளும் இந்துத்துவாவில் ஊறிய ஊடகங்களும் தெளிவாகச் சொல்லியுள்ளன. ஆனால் உண்மை முஸ்லிம் உயிரே போனாலும் உலகே திரண்டாலும் ஏகத்துவக் கொள்கையில் இருந்து தடம் புரள மாட்டான்.

சுருங்கச் சொன்னால் அப்துல்கலாமினால் முஸ்லிம்களுக்கு கடுகளவும் நன்மை கிடைக்கவில்லை. இவரால் இஸ்லாத்துக்கு கடுகளவும் பெருமை இல்லை. இதைச் சொல்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.

05.08.2015. 11:06 AM

அரசியல்ஜெர்மன் ஜனநாயகம் என்றால் என்ன

ஜெர்மன் ஜனநாயகம் என்றால் என்ன?

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் தான் நமது இலக்கு என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறுவதாக ஒரு நண்பர் கூறினார். ஆனால் அவரால் அதை விளக்கிச் சொல்ல முடியவில்லை. அதை விளக்க முடியுமா?

அபூ அஜ்மல், சென்னை

பதில்

நமது இந்தியாவில் உள்ள தேர்தல் அமைப்பு பிரிட்டன் நாட்டில் உள்ள தேர்தல் முறையாகும். பிரிட்டன் ஜனநாயக முறை என்ற இந்தத் தேர்தல் முறை ஒரு சூதாட்டம் போன்றதாகும். பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஆட்சி அமைவதற்காகத் தான் ஜனநாயகம் தேவைப்படுகிறது. ஆனால் பிரிட்டன் ஜனநாயகத்தில் சிறுபான்மை மக்களின் விருப்பத்திற்கேற்ப பல நேரங்களில் ஆட்சி அமைந்து விடுவதுண்டு.

உதாரணமாக ஒரு தொகுதியில் ஆயிரம் வாக்காளர்கள் இருப்பதாகவும் இந்தத் தொகுதியில் ஐந்து பேர் போட்டி இடுகிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

ஏ என்பவர் 210 வாக்குகள் வாங்குகிறார்.

பி என்பவர் 200 வாக்குகள் வாங்குகிறார்.

சி என்பவர் 200 வாக்குகள் வாங்குகிறார்.

டி என்பவர் 200 வாக்குகள் வாங்குகிறார்.

இ என்பவர் 190 வாக்குகள் வாங்குகிறார்.

ஆயிரம் ஒட்டுக்கள் மேற்கண்டவாறு பிரிந்தால் ஏ என்பவர் வெற்றி பெற்றவர் என்று நம்முடைய நாட்டில் உள்ள பிரிட்டன் ஜனநாயகத் தேர்தல் கூறுகிறது.

ஆனால் இவர் ஆயிரம் ஓட்டுக்களில் 790 பேரின் அதிருப்தியைப் பெற்றுள்ளார். 210 பேரின் ஆதரவை மட்டுமே பெற்றுள்ளார். இவர் பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின்படி தேர்வு செய்யப்படவில்லை. இந்த அடிப்படையில் இது போலி ஜனநாயகமாகவும் மறைமுக சூதாட்டமாகவும் ஆகி விடும். இரண்டு பேர் போட்டியிடும் போது தவிர மற்ற சந்தர்ப்பங்களில் இது போல் நடப்பதை நாம் காணலாம்.

மேலும் இந்தத் தேர்தல் முறை அனைத்து மக்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இல்லாமல் போய் விடுகிறது.

ஒரு மாநிலத்தில் 100 தொகுதிகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் வாக்காளர் என்றும் வைத்துக் கொள்வோம்.

ஒவ்வொரு தொகுதியிலும்

ஏ கட்சி 501 ஓட்டுக்களும்

பி கட்சி 499 ஓட்டுக்களும்

பெறுவதாக வைத்துக் கொள்வோம்.

இப்போது நூறு தொகுதிகளிலும் ஏ கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. பி கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றும் அறிவிக்கப்படுகிறது. இது நம்முடைய பிரிட்டன் ஜனநாயக முறை. அதாவது ஏ கட்சிக்கு 100 எம் எல் ஏக்கள் கிடைக்க, பி கட்சிக்கு ஒரு எம் எல் ஏ கூட இல்லை.

ஆனால் இரண்டு கட்சிகளும் வாங்கிய ஓட்டுக்களில் தொகுதிக்கு இரு ஓட்டு வீதம் இருநூறு வாக்குகள் தான் வித்தியாசம்.

ஏ கட்சி நூறு தொகுதிகளில் வாங்கிய ஓட்டுக்கள் 50100

பி கட்சி நூறு தொகுதிகளில் வாங்கிய ஓட்டுக்கள் 49900.

ஆனாலும் பி கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. பி. கட்சிக்கு வாக்களித்த மக்களின் கருத்தைப் பிரதிபலிக்க சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லை. எனவே தான் இது போலி ஜனநாயகம் என்று கருதப்படுகிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் சிறுபான்மையாக உள்ள மக்களுக்கு ஒரே ஒரு பிரதிநிதித்துவம் கூட கிடைப்பதில்லை. கிடைக்க வேண்டுமானால் பெரிய கட்சிக்கு அடிமைச் சீட்டு எழுதிக் கொடுத்து ஜால்ரா போட்டால் தான் ஒன்றிரண்டு இடங்களில் வெற்றி பெற முடியும். அதுவும் மார்க்கத்தையும் மானத்தையும் விட்டு விட்டு சமுதாயத்தை மறந்து விட்டு ஜால்ரா போட்டால் தான் இது சாத்தியமாகும்.

இதை விட ஜெர்மன் நாட்டில் உள்ள ஜனநாயகம் பல வகைகளில் சிறந்து விளங்கும் ஜனநாயகமாகும். எல்லா மக்களுக்கும் உரிய பிரதி நிதித்துவம் தானாகவே கிடைத்து விடும். இந்த முறை தான் விகிதாச்சார பிரதிநிதித்துவம் எனப்படுகிறது.

அதாவது உதாரணத்துக்கு அதே நூறு தொகுதியை எடுத்துக் கொள்வோம். விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல்படி எப்படி பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

இந்தத் தேர்தலில் ஆட்கள் போட்டியிட மாட்டார்கள். சங்கம் கட்சி ஆகியவை தான் போட்டியிடும்.

ஒவ்வொரு ஆயிரம் ஓட்டுக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்று நிர்ணயிக்கப்படும்.

நூறு தொகுதியிலும் ஏ கட்சி மேலே நாம் சொன்ன அதே எண்ணிக்கையில் 50100 வாக்குகள் வாங்கினால் ஆயிரத்துக்கு ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர்கள் ஐம்பது உறுப்பினர்களை நியமித்துக் கொள்ளலாம்.

அது போல் 49900 வாக்குகள் பெற்ற பி அணி 49 சட்டமன்ற உறுப்பினரை நியமிக்கலாம்.

இருவருக்கும் இடையில் ஓட்டு எண்ணிக்கையில் சிறிய வித்தியாசம் தான் உள்ளது. எனவே அதற்கேற்ப ஒரே ஒரு உறுப்பினர் தான் இரண்டு கட்சிக்கும் வித்தியாசம் இருக்கும். அனைத்து மக்களின் ஓட்டுக்களும் மதிப்பு மிக்கதாக ஆகின்றது. அனைவருக்கும் அவரவர் பலத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கிடைத்து விடுகிறது.

சிறுபான்மை சமுதாயத்துக்கும், சிறிய கட்சிகளுக்கும் யாருடனும் கூட்டணி சேராமல் அவர்களுக்கு உரிய பங்கு கிடைத்து விடுகிறது.

மேலே சொன்ன அதே நூறு தொகுதிகளை எடுத்துக் கொள்வோம்.

அந்த நூறு தொகுதிகளிலும் முஸ்லிம்கள் தலா 100 பேர் இருக்கிறார்கள். நமது நாட்டில் உள்ள பிரிட்டன் ஜனநாயக தேர்தல் பிரகாரம் நாம் நூறு தொகுதியிலும் போட்டியிட்டால் தொகுதிக்கு நூறு ஓட்டு கிடைக்கும், ஆனால் எல்லா தொகுதிகளிலும் நாம் தோற்றவர்களாக ஆவோம்., ஒரு தொகுதியில் கூட நாம் ஜெயிக்க முடியாது, முஸ்லிம்களின் அத்தனை ஓட்டுக்களும் வீணாகி விடுகின்றன. எனவே தான் கொள்கையற்ற கூட்டணி வைத்து கேவலப்படும் நிலை ஏற்படுகிறது.

ஆனால் ஜெர்மன் ஜனநாயகம் எனப்படும் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் படி தொகுதிக்கு100 என்ற கணக்குப் படி முஸ்லிம் கட்சி பத்தாயிரம் ஓட்டு வாங்கும். ஆயிரம் ஓட்டுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற கணக்குப்படி முஸ்லிம்களுக்கு பத்து உறுப்பினர் கிடைப்பார்கள். யாருடனும் சந்தர்ப்பவாத கூட்டணி இல்லாமலே நமக்கு உரிய பங்கு இதன் மூலம் கிடைத்து விடும்,.

அது போல் திமுக அதிமுக அல்லாத சிறிய கட்சிகள் இந்த ஜெர்மன் ஜனநாயக முறையில் யாருடனும் கூட்டணி இல்லாமல் தேர்தலைச் சந்தித்தால் அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகள் எதுவும் வீண் போகாமல் வாங்கிய வாக்குகளுக்கு ஏற்ப சட்டமன்றத்துக்குள் நுழைவார்கள்.

இந்த முறையில் தேர்தல் சீர்திருத்தம் செய்தால் தான் நமக்கு அரசியல் அதிகாரம் பெற முடியும். அப்போது தவ்ஹீத் ஜமாஅத் கூட தேர்தலில் போட்டியிடலாம். ஏனெனில் எவருடனும் கூட்டணி வேண்டாம். கூழைக் கும்பிடு வேண்டாம். இஸ்லாமிய வரம்பை மீற வேண்டாம், ஆனாலும் நமக்கு உரிய பங்கு கிடைத்து விடும்.

முஸ்லிம் சமுதாயத்தில் அதிகக் கட்சிகள் இருந்தால் கூட நமது பங்குக்கு பங்கம் வராது. மேற்கண்ட பத்தாயிரம் வாக்குகளை இரண்டு முஸ்லிம் கட்சிகள் தலா ஐந்தாயிரம் என பிரித்துக் கொண்டால் ஒவ்வொரு கட்சிக்கும் ஐந்து உறுப்பினர்கள் கிடைப்பார்கள். அவ்வளவு தான் வித்தியாசம். நாடு முழுவதும் ஆயிரம் ஓட்டு கூட வாங்காத கட்சிக்குத் தான் பங்கு இருக்காது. அத்தகைய லட்டர் பேடு கட்சிகள் ஒழிவது நல்லது தான். ஓரளவாவது மக்கள் ஆதரவு உள்ளவர்கள் மட்டுமே களத்தில் இருப்பார்கள்.

ஆனால் அந்த நிலையை அடைவதற்கு தேர்தல் முறையை மாற்றம் செய்ய வேண்டும். இதை எல்லா கட்சிகளுக்கும் புரிய வைக்க வேண்டும், எனவே தான் அதுவரை தலித் மக்களுக்கு இருப்பது போல் தனித்தகுதி முறை தேவை என்கிறோம்.

இது குறித்து சென்ற இதழில் நாம் எழுதியதை நினவு கூறுகிறோம்.

நாம் அரசியல் இட ஒதுக்கீடு கேட்பதன் பொருளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தலித் மக்களுக்கு இருப்பது போன்ற தலித் ரிசர்வ் தொகுதி போல் முஸ்லிம் ரிசர்வ் தொகுதி முறை வேண்டும். அப்படி அமைந்து விட்டால் முஸ்லிம் ரிசர்வ் தொகுதியில் எந்தக் கட்சியும் முஸ்லிமைத் தான் நிறுத்த முடியும். முஸ்லிமல்லாதவர் அந்தத் தொகுதிகளில் போட்டியிட முடியாது. இப்படி முஸ்லிம் ரிசர்வ் தொகுதி இருந்தால் எல்லா கட்சிகளும் அந்தத் தொகுதியில் முஸ்லிமை நிறுத்துவதால் முஸ்லிமைத் தவிர யாரும் வெற்றி பெற முடியாது. இதன்மூலம் நாம் அதிக எண்ணிக்கையில் சட்டசபைக்கும், பாராளுமன்றத்துக்கும் செல்ல முடியும். இது தான் நாம் கேட்கும் அரசியல் இட ஒதுக்கீடாகும். பெரிய கட்சிகளின் கால்களைக் கழுவி குடிக்கும் கேடு கெட்ட அரசியல் அதிகாரத்தை நாம் கேட்கவில்லை.

தனித்தொகுதி என்பது சமுதாய இயக்கங்களுக்கும் நன்மை இல்லை. சமுதாயத்துக்கும் நன்மை இல்லை. கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் முஸ்லிம்கள் தான் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் சமுதாயத்துக்கு குரல் கொடுக்காமல் அந்தக் கட்சியின் சார்பில் தான் குரல் கொடுப்பார்கள்.. ஆனால் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் வந்து விட்டால் சமுதாயத்திற்காகக் குரல் கொடுப்பவர்கள் சொந்தப் பலத்தில் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

தனித்தொகுதி முறையைத்தான் நாம் இப்போது கோருகிறோம். ஆனாலும் நமது இலக்கு விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் தான் என்பதில் சந்தேகம் இல்லை. தனித் தொகுதி முறையை விட விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் தான் உண்மையான அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத் தருவதாகும் என்பதிலும் நம்க்கு சந்தேகம் இல்லை.

உணர்வு 16:06

24.10.2011. 4:18 AM

அனைத்து இஸ்லாமிய கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதா?

வாட்ஸ் அப் கேள்விகள் 11/10/2020

More Articles …