Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா?

பள்ளிவாசலில் ஆண்கள் ஜமாஅத்துடன் தொழுவது போல் பெண்களும் பள்ளிக்கு வந்து தொழலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுதுள்ளார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

صحيح البخاري 
5238 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَأْذَنَتِ امْرَأَةُ أَحَدِكُمْ إِلَى المَسْجِدِ فَلاَ يَمْنَعْهَا»

உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரீ 5238

صحيح البخاري 
578 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ، قَالَتْ: «كُنَّ نِسَاءُ المُؤْمِنَاتِ يَشْهَدْنَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلاَةَ الفَجْرِ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ، ثُمَّ يَنْقَلِبْنَ إِلَى بُيُوتِهِنَّ حِينَ يَقْضِينَ الصَّلاَةَ، لاَ يَعْرِفُهُنَّ أَحَدٌ مِنَ الغَلَسِ»

முஃமினான பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 578

صحيح البخاري 
707 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا الوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ أَبِي قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنِّي لَأَقُومُ فِي الصَّلاَةِ أُرِيدُ أَنْ أُطَوِّلَ فِيهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي كَرَاهِيَةَ أَنْ أَشُقَّ عَلَى أُمِّهِ

நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: புகாரீ 707

صحيح مسلم 
52 - (873) وحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ الْأَنْصَارِيُّ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدِ بْنِ زُرَارَةَ، عَنْ أُمِّ هِشَامٍ بِنْتِ حَارِثَةَ بْنِ النُّعْمَانِ، قَالَتْ: «لَقَدْ كَانَ تَنُّورُنَا وَتَنُّورُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاحِدًا، سَنَتَيْنِ أَوْ سَنَةً وَبَعْضَ سَنَةٍ، وَمَا أَخَذْتُ ق وَالْقُرْآنِ الْمَجِيدِ إِلَّا عَنْ لِسَانِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقْرَؤُهَا كُلَّ يَوْمِ جُمُعَةٍ عَلَى الْمِنْبَرِ، إِذَا خَطَبَ النَّاسَ»

காஃப் வல்குர்ஆனில் மஜீத்  என்று துவங்கும் அத்தியாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நாவிலிருந்து தான் மனனம் செய்தேன். அதை அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் மிம்பரில் மக்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தும் போது ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் (ரலி)

நூல்: முஸ்லிம் 1442

இதை அறிவிப்பவர் உம்மு ஹிஷாம் என்ற பெண்ணாவார். அவர் ஜும்ஆ தொழுகையில் கலந்து கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காஃப் அத்தியாயம் ஓதுவதைக் கேட்டு மனனம் செய்துள்ளார்.

صحيح البخاري 
900 - حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: كَانَتِ امْرَأَةٌ لِعُمَرَ تَشْهَدُ صَلاَةَ الصُّبْحِ وَالعِشَاءِ فِي الجَمَاعَةِ فِي المَسْجِدِ، فَقِيلَ لَهَا: لِمَ تَخْرُجِينَ وَقَدْ تَعْلَمِينَ أَنَّ عُمَرَ يَكْرَهُ ذَلِكَ وَيَغَارُ؟ قَالَتْ: وَمَا يَمْنَعُهُ أَنْ يَنْهَانِي؟ قَالَ: يَمْنَعُهُ قَوْلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ»

உமர் (ரலி) அவர்களின் மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ் மற்றும் இஷாத் தொழுகைகளில் பள்ளியில் ஜமாஅத்தில் கலந்து கொள்வார். அவரிடம், (உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும், இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்?  என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்பெண்மணி,  அவர் என்னைத் தடுக்கக் முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல் (என்னைத் தடுப்பதை விட்டும்) அவரைத் தடுத்து விடும்  என்று கூறினார்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரீ 900

பெண்கள் பள்ளிக்கு வரலாம் என்றாலும் இரவில் பள்ளிக்கு வரும் போது நறுமணம் பூசக் கூடாது.

صحيح مسلم 
143 - (444) حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ يَحْيَى: أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي فَرْوَةَ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا امْرَأَةٍ أَصَابَتْ بَخُورًا فَلَا تَشْهَدْ مَعَنَا الْعِشَاءَ الْآخِرَةَ»

நறுமணம் பூசிக்கொண்ட பெண் நம்முடன் இஷாத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம்

மதீனா பள்ளியில் தொழுவதன் நன்மைகள் யாவை?

மதீனா பள்ளியில் தொழுவதன் நன்மைகள் யாவை?

மஜீத்

மஸ்ஜிதுந் நபவியில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்தது.

1190 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ زَيْدِ بْنِ رَبَاحٍ وَعُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி  1190

மஸ்ஜிதுந் நபவீ சிறப்புக்குரிய பள்ளியாக இருப்பதால் அதிக நன்மையை நாடி இந்தப் பள்ளிக்கு பயணம் புறப்பட்டு வரலாம்.

1189 حَدَّثَنَا عَلِيٌّ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ الْمَسْجِدِ الْحَرَامِ وَمَسْجِدِ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَسْجِدِ الْأَقْصَى رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு எந்தப் பள்ளிவாசலுக்கும் சிரத்தை எடுத்து பயணம் மேற்கொள்ளக் கூடாது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 1189

ஷிர்க்கான செயல் நடக்கும் பள்ளியில் தொழலாமா?

ஷிர்க் வைக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்பது சரி. ஆனால் ஷிர்க்கான காரியங்கள் நடக்கும் பள்ளியில் ஏன் தொழக்கூடாது?

அப்துர் ரஜாக்

பதில் :

பாவமான நான்கு காரியங்கள் நடக்கின்ற பள்ளிவாசல்களில் தொழக்கூடாது என அல்லாஹ் கூறுகிறான்.

وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ(107)لَا تَقُمْ فِيهِ أَبَدًا لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ(108)9

தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் "நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். "அவர்கள் பொய்யர்களே'' என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.

(முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 9:107

  • இறைவனை மறுத்தல்,
  • பிறருக்குத் தீங்கிழைத்தல்,
  • பிரிவை ஏற்படுத்துதல்,
  • அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக நடப்பவர்களுக்கு புகலிடம் அளித்தல்

ஆகிய நான்கு தன்மைகள் உள்ள பள்ளிவாசலில் தொழக்கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

இந்த நான்கு அம்சங்களில் எந்த ஒரு அம்சமும் இல்லாமல் பள்ளிவாசலைப் பராமரிக்க வேண்டும்.

எந்தப் பள்ளிவாசலில் இந்த நான்கு அம்சங்களும் ஒரு சேர அமைந்துள்ளதோ அந்தப் பள்ளிவாசலில் தொழக் கூடாது என்று மேற்கண்ட வசனத்தின் மூலம் சந்தேகமற அறியலாம்.

ஆனால் இந்த நான்கு அம்சங்களில் ஓரிரு அம்சங்கள் இருந்தால் அதில் தொழக் கூடாது என்ற முடிவை எடுக்கக் கூடாது. நான்கும் சேர்ந்து இருந்தால் தான் புறக்கணிக்க வேண்டும். ஏனெனில் நான்கு அம்சங்களும் சேர்ந்து இருந்தால் தான் அந்தப் பள்ளிகளில் தொழக் கூடாது என்று மேற்க்ண்ட வசனங்கள் கூறுகின்றன.

நான்கு அம்சங்களில் முன்று அம்சங்கள் இல்லாமல் இருந்து அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் காரியங்கள் மட்டும் நடக்கும் பள்ளிகளிலும் தொழக் கூடாது என்று சிலர் வாதம் செய்து வருகின்றனர்.

இதற்கு பின்வரும் வசனத்தை ஆதாரமாக முன் வைக்கின்றனர்.

{وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا (18) } [الجن: 18، 19]

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கு உரியன. எனவே அல்லாஹ்வுடன் யாரையும் அழைக்காதீர்கள்

திருக்குர்ஆன் 72:18

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்பதால் பள்ளிவாசலில் அல்லஹ்வுடன் யாரையும் அழைக்காதீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். மவ்லிது போன்ற இணை கற்பிக்கும் பாடல்களைப் பள்ளிவாசலில் பாடுகின்றனர். இதன் மூலம் அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கின்றனர். எனவே அது பள்ளிவாசலாக ஆகாது என்று காரணம் கூறி ஷிர்க் வைக்கும் காரியங்கள் நடக்கும் பள்ளிவாசல்களில் தொழக்கூடாது என்பது அவர்களின் வாதம்.

ஆதாரம் என்று ஒரு குர்ஆன் வசனத்தை யாராவது சொன்னால் அந்த வசனத்தில் அந்தக் கருத்து இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். குருட்டுத்தனமாக ஏற்கக் கூடாது. இது பற்றி அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்

தமது இறைவனின் வசனங்கள் மூலம் அவர்களுக்கு அறிவுறை கூறப்பட்டால் அதன் மீது குருடர்களாகவும், செவிடர்களாகவும் விழ மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 25: 73

அல்லாஹ் சொல்கிறான் என்று ஒரு வசனத்தைக் காட்டி அவ்வசனத்தில் இல்லாத கருத்தைத் தினித்தால் குருட்டுத் தனமாக விழக் கூடாது என்று இவ்வசனம் மூலம் அல்லாஹ் எச்சரிக்கிறான்.

இவர்கள் ஆதாரமாகக் காட்டும் வசனம் சொல்வது என்ன? அல்லாஹ்வுடன் வேறு யாரையும் நீங்கள் அழைக்கக் கூடாது என்பது தான் இவ்வசனம் சொல்லும் கருத்தாகும். பள்ளிவாசலில் மற்றவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்தால் அந்த இடத்தில் தொழாதீர்கள் என்ற கருத்துக்கு இதில் கடுகளவும் இடமில்லை.

நாம் ஒரு பள்ளிவாசலுக்குச் செல்கிறோம். அங்கே சென்று அல்லாஹ்வை மட்டும் நாம் அழைக்கிறோம்.

சிலர் அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கிறார்கள்.

அல்லாஹ் அல்லாதவர்களை ஏன் அழைத்தீர்கள் என்று அவ்வாறு அழைத்தவர்களை நோக்கி கேள்வி கேட்கலாம்.

அல்லாஹ்வை மட்டும் அழைத்த நம்மை நோக்கி இக்கேள்வியை நம்மை நோக்கி எழுப்ப முடியுமா?

அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கும் இடத்தில் நீங்கள் தொழாதீர்கள் என்று இவ்வசனத்தில் இருந்து எவ்வாறு கருத்து எடுக்க முடியும்?

அல்லாஹ் அல்லாதவர்களை மற்றவர்கள அழைத்தாலும் நாம் அல்லாஹ்வைத் தான் அழைக்க வேண்டும். மற்றவர்களும் அல்லாஹ்வைத் தான் அழைக்க வேண்டும். இந்தக் கருத்து மட்டுமே இதில் அடங்கியுள்ளது.

ஆனால் 9:107,108 வசனங்களில் நான்கு அம்சங்கள் இருந்தால் அங்கே தொழாதே என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. இவ்வசனங்கள் தெளிவாகச் சொல்லும் கருத்துக்கு மாற்றமாக 72:18 வசனத்துக்கு அதில் இல்லாத கருத்தைக் கொடுப்பது அறிவீனமாகும். குருட்டுத்தனமாகவும் செவிட்டுத்தனமாகவும் வீழ்வதாகும்.

அல்லாஹ்வின் பள்ளிவாசலில் செய்யக் கூடாத பல காரியங்கள் உள்ளன. அந்தக் காரியங்களை யாரேனும் பள்ளிவாசலில் செய்தால் அது பள்ளிவாசல் இல்லை என்ற கருத்து வருமா? பள்ளிவாசலில் அவற்றைச் செய்யாதீர்கள் என்ற கருத்து வருமா?

பள்ளிவாசலில் விற்பனை செய்யக் கூடாது; வாங்கக் கூடாது; காணாமல் போன பொருளைத் தேடக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்

ஒரு பள்ளிவாசலில் விற்பதோ வாங்குவதோ செய்யப்பட்டால் பள்ளிவாசலில் செய்யத் தகாத காரியங்களை செய்து விட்டார்கள் என்று சொல்வதில் அர்த்தம் உண்டு. அதனால் அப்பள்ளியில் தொழக் கூடாது என்ற அர்த்தம் இதில் உள்ளதா?

ஷிர்க்கும் வியாபாரமும் ஒன்றா என்ற விதண்டாவாதம் செய்யக் கூடாது. ஷிர்க் கொடும் குற்றம் என்பது தனி விஷயம்.

பள்ளிவாசலில் வியாபாரம் செய்யக் கூடாது என்று தடை உள்ளது. அப்படி தடை செய்யப்பட்ட காரியங்கள் நிகழ்ந்தால் அது பள்ளிவாசல் இல்லை என்று ஆகுமா என்பதற்காகவே இதை எடுத்துக் காட்டுகிறோம்

குளிப்பு கடமையானவர் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று தடை உள்ளது. குளிப்பு கடமையான சிலர் ஒரு பள்ளிவாசலுக்குச் சென்றார்கள் என்று நமக்கு தெரிய வருகிறது. பள்ளிவாசலில் செய்யத் தகாத காரியம் செய்யப்பட்டதால் அது பள்ளிவாசல் இல்லை என்று யாராவது சொல்வார்களா? அல்லது அந்தக் காரியத்தைப் பள்ளிவாசலில் செய்தவர்கள் குற்றம் செய்துள்ளார்கள் என்று கருதுவார்களா?

ஹரம் எல்லையில் வேட்டையாடக் கூடாது; புல் பூண்டுகளைப் பறிக்கக் கூடாது என்று தடை உள்ளது. ஹரமில் மேற்கண்ட காரியங்களைச் சிலர் செய்து விட்டால் அது பள்ளிவாசல் தகுதியை இழந்து விட்டது; எனவே அங்கே தொழக் கூடாது என்று புரிந்து கொள்ள முடியுமா? அந்தக் காரியங்களை அங்கே செய்யக் கூடாது என்று மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும்.

பூண்டு சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு வரக் கூடாது என்று தடை உள்ளது. யாரோ சிலர் பூண்டு சாப்பிட்டு விட்டு பள்ளிவாசலுக்கு வந்து விட்டால் பள்ளியில் செய்யக் கூடாத காரியம் செய்து விட்டதால் இது பள்ளி அல்ல என்று அறிவுள்ள யாராவது சொல்வார்களா?

அல்லாஹ்வுடன் யாரையும் அழைக்காதீர்கள் என்றால் அவ்வாறு செய்யக் கூடாது என்ற அர்த்தம் தான் அதற்கு உண்டு. யாரோ அங்கே இணை கற்பிக்கும் காரியங்களைச் செய்வதால் அது பள்ளிவாசலே அல்ல என்ற கருத்து அதில் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டிய மஸ்ஜிதுன்னபவியில் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் வாசகங்கள் இன்றும் எழுதப்பட்டுள்ளன. அதை அழித்தால் குழப்பம் ஏற்படும் என்று சவூதி அரசு அதில் கை வைக்காமல் உள்ளது. எனவே அல்லாஹ்வுக்கு இனை கற்பிக்கும் பாடல் எழுதப்பட்டுள்ளதால் மஸ்ஜிதுன்னபவியில் தொழக் கூடாது என்பார்களா?

கப்ருகள் மீது கட்டடம் கட்டக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். அவர்கள் தடை செய்த கட்டடம் மஸ்ஜிதுன்னபிக்குள் கட்டப்பட்டுள்ளதால் மதீனா பள்ளியில் தொழக் கூடாது என்று சொல்வார்களா?

எனவே 9:107,109 வசனங்களில் கூறப்பட்டதன் அடிப்படையில் அதில் கூறப்பட்ட நான்கு காரியங்கள் ஒரு சேர இருந்தால் மட்டுமே அந்த பள்ளியில் தொழக் கூடாது. அவற்றில் ஒன்று விடுபட்டால் கூட அதில் தொழலாம் என்பதே சரியான கருத்தாகும்

.இது குறித்து விரிவாக அறிய

தொழக்கூடாத பள்ளிகள் உண்டா என்ற் ஆக்கத்தைப் பார்க்கவும்

https://onlinepj.in/index.php/videos/online-videos/simple-question-and-answers/thozakkoodatha_pallivasal