▶️இதே பெற்றோர்களை எனக்கு சொர்க்கத்தில் தா என்று துஆ செய்யலாமா
இதே பெற்றோர்களை எனக்கு சொர்க்கத்தில் தா என்று துஆ செய்யலாமா?
இதே பெற்றோர்களை எனக்கு சொர்க்கத்தில் தா என்று துஆ செய்யலாமா?
அநீதிக்காக இட்ட சாபத்தை திரும்ப பெறலாமா?
ஆரம்ப துஆ பலவீனமானதா?
எல்லோருடைய பொது தேவைக்காக கூட்டாக துஆ செய்யலாமா
சமகால நிகழ்வுகளும் வாஃப்ஸ் அப் கேல்வி பதில்களும்
உரை: பீ.ஜைனுல் ஆபிதீன்’
05/02/2023
எழும் போது அல்லாஹு அக்பர் என்றும், அமரும் போதும் பிஸ்மில்லாஹ் என்றும் கூற வேண்டுமா? மேலும் ஸஜ்தா வசனங்களுக்காக ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூற வேண்டுமா?
இஸ்மாயீல் ஷெரீப், சென்னை – 11
உட்காரும் போது பிஸ்மில்லாஹ் என்றும், எழுந்திருக்கும் போது அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை.
குர்ஆன் வசனங்களை ஓதி ஸஜ்தா செய்யும் போது, அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை பலவீனமான ஹதீஸ்களாக உள்ளன.
سنن أبي داود
1413 – حدَّثنا أحمد بن الفرات. أبو مسعود الرازي، أخبرنا عبدُ الرزاق، أخبرنا عبد الله بن عمر، عن نافع عن ابن عمر، قال: كان رسولُ الله – صلَّى الله عليه وسلم – يقرأ علينا القرآنَ، فإذا مرَّ بالسجدة، كبَّر وسَجَد وسَجَدْنا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர். அவர்கள் ஸஜ்தா வசனத்தைக் கடக்கும் போது, தக்பீர் சொல்லி ஸஜ்தா செய்வார்கள். அவர்களுடன் நாங்களும் செய்வோம் என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : அபூதாவூத்
இந்த ஹதீஸை இப்னு உமரிடமிருந்து நாஃபிவு அறிவிப்பதாகவும், நாஃபிவு என்பாரிடமிருந்து அப்துல்லாஹ் பின் உமர் என்பார் அறிவிப்பதாகவும் உள்ளது.
நபித்தோழர் அல்லாத இந்த அப்துல்லாஹ் பின் உமர் என்பவரை பல அறிஞர்கள் குறை கூறியிருக்கின்றார்கள் என்று ஹாபிழ் முன்திரி குறிப்பிடுகின்றார்கள். அப்துல்லாஹ் பின் உமர் என்பவரை அலீ பின் முதைனீ அவர்களும் குறை கூறியுள்ளார்கள். எனவே இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.
ஸஜ்தா வசனத்தை ஓதி ஸஜ்தா செய்யும் போது தக்பீர் சொல்வதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவும் இல்லை.
01.01.2015. 21:00 PM
எதையாவது மறந்து விடும் போது ஸலவாத் கூறினால் உடனே அது நினைவுக்கு வரும் என்று கூறுகிறார்களே இது உண்மையா?
M.H.M.நிம்சாத்.
பதில் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதின் சிறப்பைக் குறித்து பல ஹதீஸ்கள் வந்துள்ளன. ஆனால் ஸலவாத்துச் சொன்னால் மறந்த விஷயம் நினைவுக்கு வந்துவிடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஹதீஸையும் நாம் பார்க்கவில்லை.
யார் உங்களிடம் இதைக் கூறினார்களோ அவர்களிடம் இதற்கு ஆதாரத்தைக் கேளுங்கள்.
786 குறித்த உங்களின் விளக்கத்தை நான் அறிவேன். ஆனால் பீ.ஜைனுல் ஆபிதீன் என்ற பெயரை பீஜே என்று சுருக்கிச் சொல்வது போல் இதை எடுத்துக் கொள்ள முடியாதா?
நஸ்ருத்தீன்
பதில்:
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்குப் பதிலாக 786 என்று குறிப்பிடும் முறை நம் சமுதாயத்தில் பலரிடம் உள்ளது. ஒருவரின் பெயரில் உள்ள ஆரம்ப எழுத்துக்களை மட்டும் குறிப்பிட்டு அழைக்கும் வழக்கமும் உள்ளது. இந்த இரண்டும் ஒன்று தானே என்று நீங்கள் கேட்கிறீர்கள்.
இந்த இரண்டு முறைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அறிந்து கொண்டால் முதல் வழிமுறை தவறானது என்பதும் இரண்டாவது வழிமுறை அனுமதிக்கப்பட்டது என்பதும் தெளிவாகிவிடும்.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதி துவங்குவது இஸ்லாம் கற்றுக் கொடுத்த ஒரு வணக்கம். இஸ்லாமிய வணக்க முறைகளை நம் இஷ்டத்துக்கு செய்யக் கூடாது. குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்டவாறே செய்ய வேண்டும்.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதை 786 என்று குறிப்பிடலாம் என குர்ஆனிலோ, நபிகளாரின் பொன்மொழிகளிலோ கூறப்படவில்லை. எனவே இவ்வாறு குறிப்பிடுவது மார்க்கத்தில் இல்லாத அநாச்சாரமாகும்.
அடுத்து பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது அரபுச் சொல்லாகும். இந்த அரபுச் சொல்லை 786 என்ற எண்ணில் குறிப்பிடுவதாக இருந்தால் இவ்வாறு குறிப்பிடும் வழக்கம் அரபு மொழியில் இருக்க வேண்டும். ஆனால் இவ்வாறு எழுதும் வழக்கம் அரபுமொழியில் அறவே கிடையாது. தமிழ் மொழி பேசக்கூடிய நமது சமுதாயத்திலும் இப்படியொரு வழக்கம் இல்லை.
ஒரு சொல்லில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் குறிப்பிட்ட எண்களை வழங்கி மொத்த எண்களையும் கூட்டி கிடைக்கும் எண்ணால் அச்சொல்லைக் குறிப்பிடும் இம்முறை யூதர்கள் கண்டுபிடித்த முட்டாள்தனமான முறையாகும்.
அலிஃப், பா என்ற அரபு எழுத்துக்கள் ஹிப்ரு மொழியிலும் உள்ளது. அலிஃபுக்கு ஒன்று, பாவுக்கு இரண்டு, ஜீமுக்கு மூன்று, தாலுக்கு நான்கு என்று ஹிப்ரு மொழியில் சொல்லப்படுகிறது. இதில் ஜீம் என்பதை மூன்றாகவும், தால் என்பதை நான்காகவும் சொல்கின்றனர்.
ஹிப்ரு மொழியில் மூனாவது எழுத்து ஜீம், நாலாவது எழுத்து தால் ஆகும் என்பதால் அவர்களுக்கு இந்த வரிசை சரிதான்.
ஆனால் அரபு மொழியில் தா என்பது மூன்றாவது எழுத்தாகும். ஸா என்பது நான்காவது எழுத்தாகும். இதைக் கூட கவனிக்காமல் யூதர்களின் அகர வரிசையை அப்படியே காப்பி அடித்துள்ளனர்.
ஒருவரின் பெயரைச் சுருக்கி அழைப்பது இது போன்றதல்ல. மனிதப் பெயர்களைச் சொல்வது வணக்கமில்லை. வணக்கமில்லாத விஷயங்களில் நமது இஷ்டப்படி செய்வது தவறில்லை.
மேலும் பெயரில் உள்ள முதல் எழுத்துக்களை மட்டும் குறிப்பிட்டு அழைக்கும் வழக்கம் நமது மொழியில் இருக்கின்றது. பலர் இவ்வாறு அழைக்கப்படுகிறார்கள். கடைகளுக்கும், பேருந்துகளுக்கும் கூட இவ்வாறு பெயர் வைக்கப்படுகின்றது. எனவே இதுவும் 786 என்று எழுதுவதுவும் ஒரே மாதிரியானதல்ல.
ஷேக் மைதீன்
பதில்:
நம் நலனைப் பற்றி யாராவது விசாரித்தால் அவருக்கு அல்ஹம்து லில்லாஹ் என்று பதிலளிக்கும் நடைமுறை பலரிடம் உள்ளது. இவ்வாறு தான் பதிலளிக்க வேண்டும் என மார்க்கம் கட்டளையிடவில்லை. இது நாமாக ஏற்படுத்திக்கொண்ட சொல் வழக்காகும்.
நம்மிடம் நலம் விசாரிக்கும் போது இவ்வாறு தான் கூற வேண்டும்; அது தான் சுன்னத் என்று நினைத்தால் அவ்வாறு சொல்லாதவர்களை சுன்னத்தை விட்டவர்கள் போல் கருதும் நிலை இருந்தால் அது பித்அத்தாக ஆகி விடும்.
நான் நன்றாக இருக்கிறேன்; அதற்காக அல்லாஹவைப் புகழ்கிறேன் என்ற கருத்தில் சுன்னத் என்று கருதாமல் தன்னிச்சையாக இவ்வாறு கூறினால் அது குற்றமாகாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை யாரும் நோய் விசரிக்கும் போது அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறியதாகவோ, அல்லது அவர்கள் நோய் விசாரித்த போது மற்றவர்கள் அவர்களிடம் அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறியதாகவோ நாம் தேடியவரை எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை.