Sidebar

19
Fri, Jun
சமீபத்திய செய்திகள்

தொழுகையில் தமிழில் துஆ செய்யலாமா?

s.a.s.காமில்

பதில்:

குர்ஆனில் இறைவன் கற்றுத்தந்த துஆக்களையும்,  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்த துஆக்களையும் அரபுமொழியில் அப்படியே உள்ளபடி ஓத வேண்டும். அரபுமொழிக்கு சிறப்பு சேர்ப்பது இதன் நோக்கம் அல்ல. அல்லாஹ்வின் வார்த்தையையும், நபியின் வார்த்தையையும் அப்படியே கூற வேண்டும் என்பது தான் இதற்குக் காரணம். குர்ஆன் ஹதீஸில் உள்ள துஆக்களை அரபுமொழியில் அதற்கு இணையான வேறு சொற்களைப் பயன்படுத்தினால் கூட அந்த துஆக்களை ஓதியதாக ஆகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த பிரார்த்தனைகள் அரபுமொழியில் அமைந்துள்ளன. இந்தப் பிரார்த்தனைகளை நபியவர்கள் கூறிய வார்த்தை மாறாமல் அப்படியே கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

247حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ ثُمَّ قُلْ اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ فَأَنْتَ عَلَى الْفِطْرَةِ وَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَتَكَلَّمُ بِهِ قَالَ فَرَدَّدْتُهَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا بَلَغْتُ اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ قُلْتُ وَرَسُولِكَ قَالَ لَا وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ رواه البخاري

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக உளூச் செய்வது போன்று உளூச் செய்து கொள். பிறகு உன் வலப்பக்கம் சாய்ந்து படுத்துக்கொள். பிறகு இறைவா! உன்னிடம் நான் என்னை ஒப்படைத்தேன். எனது காரியத்தை உன் பொறுப்பில் விட்டுவிட்டேன். என் முதுகை உன்னளவில் சார்ந்திருக்கச் செய்தேன். உன் மீதுள்ள ஆவலிலும், அச்சத்திலும் தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னை விட்டும் தப்பிச் செல்லவும் உன்னை விட்டும் ஒதுங்கிவிடவும் உன்னிடம் தவிர வேறு போக்கிடமில்லை. நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன் "நபி'யை நான் நம்பினேன்.'' என்று பிரார்த்தித்துக் கொள்! (இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ இயற்கை நெறியில் (இஸ்லாத்தின் தூய வழியில்) ஆகி விடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன் (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்!

இந்நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையை திரும்ப ஓதிக் காண்பித்தேன். "நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன்' என்ற இடத்தை அடைந்ததும் ("உன் நபியை' என்பதற்கு பதிலாக) "உன் ரசூலை' என்று (மாற்றிச்) சொல்லி விட்டேன். (உடனே) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இல்லை. (அவ்வாறு சொல்லாதே!) "நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்' என்று சொல்'' என (எனக்குத் திருத்திச்) சொன்னார்கள்.

நூல் : புகாரி 247

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆக்களில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்று இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தராமல் நம் விருப்பத்தில் விட்டுள்ள துஆக்களும் உள்ளன. அவற்றை நாம் நமது தாய் மொழியில் கேட்கலாம். இதற்கு ஹதீஸ்களில் அனுமதி உள்ளது.

இறைவன் எல்லா மொழிகளையும் அறிந்தவன். அவனிடம் எந்த மொழியில் வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்யலாம். தொழுகையில் நாம் விரும்பிய பிரார்த்தனைகளைச் செய்யலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

صحيح البخاري

835 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنِ الأَعْمَشِ، حَدَّثَنِي شَقِيقٌ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: كُنَّا إِذَا كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلاَةِ، قُلْنَا: السَّلاَمُ عَلَى اللَّهِ مِنْ عِبَادِهِ، السَّلاَمُ عَلَى فُلاَنٍ وَفُلاَنٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لاَ تَقُولُوا السَّلاَمُ عَلَى اللَّهِ، فَإِنَّ اللَّهَ هُوَ السَّلاَمُ، وَلَكِنْ قُولُوا: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، فَإِنَّكُمْ إِذَا قُلْتُمْ أَصَابَ كُلَّ عَبْدٍ فِي السَّمَاءِ أَوْ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، ثُمَّ يَتَخَيَّرُ مِنَ الدُّعَاءِ أَعْجَبَهُ إِلَيْهِ، فَيَدْعُو "

……. ….. ஒருவர் (அத்தஹிய்யாத்து ஓதி முடித்த) பிறகு தனக்கு விருப்பமான துஆவைத் தேர்வு செய்து அதைக் கேட்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 835, 6230

صحيح مسلم

924 – حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَعُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ أَبِى وَائِلٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ كُنَّا نَقُولُ فِى الصَّلاَةِ خَلْفَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- السَّلاَمُ عَلَى اللَّهِ السَّلاَمُ عَلَى فُلاَنٍ. فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- ذَاتَ يَوْمٍ « إِنَّ اللَّهَ هُوَ السَّلاَمُ فَإِذَا قَعَدَ أَحَدُكُمْ فِى الصَّلاَةِ فَلْيَقُلِ التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِىُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ فَإِذَا قَالَهَا أَصَابَتْ كُلَّ عَبْدٍ لِلَّهِ صَالِحٍ فِى السَّمَاءِ وَالأَرْضِ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ثُمَّ يَتَخَيَّرُ مِنَ الْمَسْأَلَةِ مَا شَاءَ ».

…… ……. அவன் நாடுகின்ற கோரிக்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

سنن النسائي

1163 – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ أَبَا إِسْحَقَ يُحَدِّثُ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: كُنَّا لَا نَدْرِي مَا نَقُولُ فِي كُلِّ رَكْعَتَيْنِ غَيْرَ أَنْ نُسَبِّحَ وَنُكَبِّرَ وَنَحْمَدَ رَبَّنَا، وَإِنَّ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَ فَوَاتِحَ الْخَيْرِ وَخَوَاتِمَهُ، فَقَالَ: " إِذَا قَعَدْتُمْ فِي كُلِّ رَكْعَتَيْنِ، فَقُولُوا: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ،وَلْيَتَخَيَّرْ أَحَدُكُمْ مِنَ الدُّعَاءِ أَعْجَبَهُ إِلَيْهِ فَلْيَدْعُ اللَّهَ عَزَّ وَجَلَّ "

سنن النسائي

1279 – أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا الْفُضَيْلُ وَهُوَ ابْنُ عِيَاضٍ، عَنْ الْأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ هُوَ السَّلَامُ، فَإِذَا قَعَدَ أَحَدُكُمْ فَلْيَقُلْ: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ،ثُمَّ لِيَتَخَيَّرْ بَعْدَ ذَلِكَ مِنَ الْكَلَامِ مَا شَاءَ "

……  அவனுக்குத் தோன்றியதைத் தனக்காகக் கேட்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : நஸாயி

صحيح مسلم

1111 – وَحَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ وَعَمْرُو بْنُ سَوَّادٍ قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ عَنْ سُمَىٍّ مَوْلَى أَبِى بَكْرٍ أَنَّهُ سَمِعَ أَبَا صَالِحٍ ذَكْوَانَ يُحَدِّثُ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ فَأَكْثِرُوا الدُّعَاءَ ».

ஓர் அடியார் தம் இறைவனிடம் மிக நெருக்கமாக இருப்பது அவர் சஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே, நீங்கள் (சஜ்தாவில்) அதிகமாகப் பிரார்த்தியுங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம்

ஒருவருக்குத் தமிழ் மொழி மட்டும் தெரியுமானால் அவர் தான் விரும்பிய பிரார்த்தனைகளை அந்த மொழியில் தான் செய்ய முடியும். அவரவருக்குத் தெரிந்த மொழியில் பிரார்த்தனை செய்தாலே விரும்பிய பிரார்த்தனையைச் செய்யுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைச் செயல்படுத்த முடியும். எனவே நம் விருப்பத்தில் விடப்பட்டுள்ள துஆக்களை தொழுகையில் தமிழில் பிரார்த்தனை செய்வது தவறல்ல.

தொழுகையாளியின் பார்வை நெற்றி வைக்கப்படும் இடத்தில் இருக்கவேண்டுமென்றால் குரானை பார்த்து எப்படி ஓத முடியும்

02/05/2020 ரமலான் மாத வாட்ஸ் அப் கேள்வி பதில்

பார்வை எங்கு இருக்க வேண்டும்?

தொழும்போது ஸஜ்தா செய்யும் இடத்தில் தான் பார்வை இருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஸஜ்தா செய்யும் இடத்தைப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஹதீஸ்கள் எதுவும் இல்லை.

ஸஜ்தா செய்யும் இடத்தைப் பார்க்காமல் வேறு இலக்கை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பார்த்துள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழுத நபித்தோழர்களும் பார்த்துள்ளனர்

صحيح البخاري
752 - حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي خَمِيصَةٍ لَهَا أَعْلاَمٌ، فَقَالَ: «شَغَلَتْنِي أَعْلاَمُ هَذِهِ، اذْهَبُوا بِهَا إِلَى أَبِي جَهْمٍ وَأْتُونِي بِأَنْبِجَانِيَّةٍ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சதுரமான கறுப்பு நிற ஆடையை அணிந்து தொழுதார்கள். அதில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. (தொழுது கொண்டிருந்த போது அந்த வேலைப்பாடுகளின் பக்கம் தம் கவனம் சென்றுவிடவே,) இதன் வேலைப்பாடுகள் (தொழுகையிலிருந்து) என் கவனத்தை ஈர்த்துவிட்டது. இதை (எனக்கு அன்பளித்த) அபூஜஹ்மிடம் கொடுத்துவிட்டு, (அபூ ஜஹ்மிடமிருக்கும் வேலைப்பாடுகளற்ற) அன்பிஜான் (நகர சாதாரண) ஆடையை என்னிடம் வாங்கிவாருங்கள்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் :,புகாரி 752

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும்போது ஸஜ்தா செய்யும் இடத்தைப் பார்க்காமல் தாம் அணிந்திருந்த ஆடையைப் பார்த்து அதில் ஈடுபாடு காட்டினார்கள் என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.

صحيح البخاري
742 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " أَقِيمُوا الرُّكُوعَ وَالسُّجُودَ فَوَ اللَّهِ إِنِّي لَأَرَاكُمْ مِنْ بَعْدِي - وَرُبَّمَا قَالَ: مِنْ بَعْدِ ظَهْرِي - إِذَا رَكَعْتُمْ وَسَجَدْتُمْ "

742 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

 ருகூஉவையும் சஜ்தாவையும் நிறைவாகச் செய்யுங்கள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் எனக்கு பின்புறமாக' அல்லது என் முதுகுக்குப் பின்புறமாக' நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யும் போதும் சஜ்தா செய்யும் போதும் உங்களைப் பார்க்கிறேன்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 742

மக்கள் ருகூவு சஜ்தா செய்யும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதுக்குக்குப் பின் தமது பார்வையைச் செலுத்தி மக்கள் சரியாக ருகூவு ஸஜ்தா செய்கிறார்களா என்று கண்காணித்துள்ளனர். ஸஜ்தா செய்யும் இடத்தை விட்டு பார்வை விலகியுள்ளது என்று  இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.

صحيح البخاري
4418ثُمَّ أُصَلِّي قَرِيبًا مِنْهُ، فَأُسَارِقُهُ النَّظَرَ، فَإِذَا أَقْبَلْتُ عَلَى صَلاَتِي أَقْبَلَ إِلَيَّ، وَإِذَا التَفَتُّ نَحْوَهُ أَعْرَضَ عَنِّي

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சமூகப் புறக்கணிப்பு செய்யப்பட்டனர். இந்து மிக நீண்ட இந்த ஹதீஸில்

……நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருகில் தொழுவேன். கடைக்கண்ணால் நான் திருட்டுப் பார்வை பார்ப்பேன். நான் அவர்களைப் பார்க்காமல் தொழுகையில் ஈடுபடும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பார்ப்பார்கள். நான் அவர்கள் பக்கம் திரும்பும் போது பார்வையைத் திருப்பிக் கொள்வார்கள்……

அறிவிப்பவர் : கஅப் பின் மாலிக்

நூல் : புகாரி 4418

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்யும் இடத்தைப் பார்க்காமல் கஅப் மின் மாலிக்கைப் பார்த்துள்ளார்கள். கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களும் ஸஜ்தா செய்யும் இடத்தை நோக்காமல் கடைக்கண்ணால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்துள்ளார்கள் என்பதால் கடைக் கண்ணால் பார்க்கலாம் என்பது தெரிகின்றது.

صحيح البخاري 
746 - حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، قَالَ: قُلْنَا لِخَبَّابٍ أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالعَصْرِ؟، قَالَ: نَعَمْ، قُلْنَا: بِمَ كُنْتُمْ تَعْرِفُونَ ذَاكَ؟ قَالَ: «بِاضْطِرَابِ لِحْيَتِهِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹரிலும், அஸரிலும் ஓதுவார்களா?  என்று கப்பாப் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர்கள் ஆம் என்றார்கள்.  நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்?  என்று நாங்கள் கேட்டோம்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்  என்று கப்பாப் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூமஃமர்

நூல்: புகாரீ 746

صحيح البخاري

748 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: خَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، رَأَيْنَاكَ تَنَاوَلْتَ شَيْئًا فِي مَقَامِكَ، ثُمَّ رَأَيْنَاكَ تَكَعْكَعْتَ، قَالَ: «إِنِّي أُرِيتُ الجَنَّةَ، فَتَنَاوَلْتُ مِنْهَا عُنْقُودًا، وَلَوْ أَخَذْتُهُ لَأَكَلْتُمْ مِنْهُ مَا بَقِيَتِ الدُّنْيَا»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது, (அதற்காக) தொழுதார்கள். "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நின்ற இடத்தில் எதையோ பிடிக்க முயன்று விட்டுப் பின்வாங்கினீர்களே?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். "எனக்குச் சொர்க்கம் எடுத்துக் காட்டப்பட்டது. அதிலிருந்து ஒரு குலையைப் பிடித்தேன். அதை நான் எடுத்திருந்தால் உலகம் உள்ளளவும் அதை நீங்கள் புசித்திருப்பீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 748

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அத்தஹிய்யாத்தில் ஆட்காட்டி விரலை அசைக்கும் போது, அதை நோக்கி பார்வையைச் செலுத்துவார்கள் என்று ஹதீஸ் உள்ளது.

سنن النسائي

1160 – أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ، عَنْ مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمُعَاوِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ رَأَى رَجُلًا يُحَرِّكُ الْحَصَى بِيَدِهِ وَهُوَ فِي الصَّلَاةِ، فَلَمَّا انْصَرَفَ، قَالَ لَهُ عَبْدُ اللَّهِ: لَا تُحَرِّكِ الْحَصَى وَأَنْتَ فِي الصَّلَاةِ فَإِنَّ ذَلِكَ مِنَ الشَّيْطَانِ، وَلَكِنِ اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ، قَالَ: وَكَيْفَ كَانَ يَصْنَعُ؟ قَالَ: فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى، وَأَشَارَ بِأُصْبُعِهِ الَّتِي تَلِي الْإِبْهَامَ فِي الْقِبْلَةِ، وَرَمَى بِبَصَرِهِ إِلَيْهَا أَوْ نَحْوِهَا، ثُمَّ قَالَ: «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ»

தொழுகையில் இருக்கும் போது ஒருவர் சிறுகல்லை அசைத்துக் கொண்டிருப்பதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கண்டார்கள். தொழுகை முடிந்ததும் அவரிடம், "தொழுகையில் இருக்கும் போது நீ கல்லை அசைக்காதே! இது ஷைத்தானின் வேலை! மாறாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்வது போன்று நீ செய்'' என்று கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படிச் செய்வார்கள்?'' என்று அவர் கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி), தமது வலது கையை வலது தொடையில் வைத்து கிப்லா திசையில் பெருவிரலுக்கு அடுத்த விரலை வைத்து இஷாரா செய்து அதை நோக்கி தமது பார்வையைச் செலுத்தினார்கள். பிறகு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்யக் கண்டேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ பின் அப்துர் ரஹ்மான்

நூல்: நஸாயீ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு முன்னால் தென்பட்ட பழக்குலையைப் பிடிக்க முயன்றுள்ளார்கள். இந்த சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பார்வை நெற்றி படும் இடத்தில் நிச்சயம் இருந்திருக்காது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தச் செயலை நபித்தோழர்கள் பார்த்துள்ளனர். எனவே அவர்களும் நெற்றி படும் இடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகின்றது.

தொழுகையில் இருக்கும் போது ஸஜ்தா செய்யும் இடத்தை நபித்தோழர்கள் பார்க்காமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாடையைப் பார்த்துள்ளனர்.

இந்த ஆதாரங்கள் சொல்வது என்ன?

தொழுகையில் இமாமைப் பார்க்கலாம்; எதிரில் உள்ள சுவறைப் பார்க்கலாம். சற்று தலை குணிந்து நாம் அணிந்துள்ள ஆடைகளைப் பார்க்கலாம்; அருகில் இருப்பவரை க்டைக்கண்களால் பார்க்கலாம். விரும்பினால் ஸஜ்தா செய்யும் இடத்தையும் பார்க்கலாம்.

வானத்தை நோக்கிப் பார்க்கக் கூடாது என்று தடை உள்ளது.

صحيح البخاري 
750 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ حَدَّثَهُمْ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَالُ أَقْوَامٍ يَرْفَعُونَ أَبْصَارَهُمْ إِلَى السَّمَاءِ فِي صَلاَتِهِمْ»، فَاشْتَدَّ قَوْلُهُ فِي ذَلِكَ، حَتَّى قَالَ: «لَيَنْتَهُنَّ عَنْ ذَلِكَ أَوْ لَتُخْطَفَنَّ أَبْصَارُهُمْ»

தொழும் போது தங்கள் பார்வைகளை வானத்தின் பக்கம் உயர்த்துவோருக்கு என்ன நேர்ந்து விட்டது? இதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்; இல்லை எனில் அவர்களின் பார்வைகள் பறிக்கப்பட்டு விடும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 750

வானத்தைப் பார்ப்பது தடுக்கப்பட்டு இருந்தாலும் தேவை இருந்தால் பார்க்கலாம்.

கிரகணத் தொழுகையில் கிரகணம் விலகி விட்டதா என்பதை அறிவதற்காக வானத்தைப் பார்க்கலாம்.

பார்க்க புகாரி 86, 1063

மேலும் வலது புறம் இடது புறம் பின்புறம் திரும்புவது தடுக்கப்படுள்ளது.

صحيح البخاري 
751 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، قَالَ: حَدَّثَنَا أَشْعَثُ بْنُ سُلَيْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الِالْتِفَاتِ فِي الصَّلاَةِ؟ فَقَالَ: «هُوَ اخْتِلاَسٌ يَخْتَلِسُهُ الشَّيْطَانُ مِنْ صَلاَةِ العَبْدِ»

தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன்.  ஒரு அடியானுடைய தொழுகையை ஷைத்தான் அதன் மூலம் பறித்துச் செல்கிறான்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 751

தொழுது கொண்டு இருக்கும் போது சலசலப்பு ஏற்பட்டால் என்ன என்று அறிவதற்காக திரும்பிப் பார்க்கலாம்.

صحيح البخاري 
754 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ: بَيْنَمَا المُسْلِمُونَ فِي صَلاَةِ الفَجْرِ لَمْ يَفْجَأْهُمْ إِلَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَشَفَ سِتْرَ حُجْرَةِ عَائِشَةَ، فَنَظَرَ إِلَيْهِمْ وَهُمْ صُفُوفٌ، فَتَبَسَّمَ يَضْحَكُ، وَنَكَصَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى عَقِبَيْهِ لِيَصِلَ لَهُ الصَّفَّ، فَظَنَّ أَنَّهُ يُرِيدُ الخُرُوجَ وَهَمَّ المُسْلِمُونَ أَنْ يَفْتَتِنُوا فِي صَلاَتِهِمْ، فَأَشَارَ إِلَيْهِمْ أَتِمُّوا صَلاَتَكُمْ، فَأَرْخَى السِّتْرَ وَتُوُفِّيَ مِنْ آخِرِ ذَلِكَ اليَوْمِ»

754 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அபூபக்ர் ரலி அவர்கள் இமாமாக நிற்க) முஸ்லிம்கள் ஃபஜ்ர் தொழுகை தொழுது கொண்டிருந்த போது (உடல் நலமில்லாமல் இருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திடீரென எட்டிப்பார்த்து) மக்களை திகைப்புள்ளாக்கி விட்டார்கள். (இதன் விவரம் வருமாறு:)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களது அறையின் திரையை விலக்கித் தொழுகையில் அணிவகுத்து நின்று கொண்டிருந்த மக்களைப் பார்த்து புன்னகை புரிந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அறையிலிருந்து) வரப்போகிறார்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக (இடம் விட்டு), (முதல்) வரிசையில் சேர்ந்துகொள்ளத் தம் குதிகால்களால் பின் வாக்கில் வந்தார்கள். (நபி ஸல் அவர்களைத் திரும்பிப் பார்த்த மகிழ்ச்சியினால்) மக்கள் தம் (கவனம் சிதறி) தொழுகை குழம்பிப் போகுமோ என எண்ணலாயி னர். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களைப் பார்த்து உங்கள் தொழுகையை நிறைவு செய்யுங்கள்' என்று சைகை செய்துவிட்டு (அறைக்குள் நுழைந்து) திரையைத் தொங்கவிட்டார்கள். அன்றைய தினத்தின் இறுதியிலே அவர்கள் இறந்தார்கள்.

அறிவிப்பவர் :அனஸ் (ரலி)

நூல் : புகாரி 754

நிய்யத் (எண்ணம்)

முஸ்லிம்கள் எந்த வணக்கத்தைச் செய்வதாக இருந்தாலும் வணக்கம் செய்கின்றோம் என்ற எண்ணத்துடன் தான் செய்ய வேண்டும். இந்த எண்ணமில்லாமல் வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது.

உடற்பயிற்சி என்பதற்காகவோ, அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவோ தொழுகையில் கடைப்பிடிக்கும் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்கின்றார்; ஆனால் தொழுகின்றோம் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்றால் இவர் தொழுகையை நிறைவேற்றியவராக மாட்டார்.

எல்லா வணக்கங்களுக்கும் நிய்யத் எனும் எண்ணம் அவசியம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.

صحيح البخاري 
1 - حَدَّثَنَا الحُمَيْدِيُّ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ، يَقُولُ: سَمِعْتُ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ»

அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)

நூல்கள்: புகாரீ 1, முஸ்லிம் 3530

நிய்யத் என்பதை முஸ்லிம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். குறிப்பிட்ட வார்த்தைகளை அரபு மொழியில் வாயால் மொழிவது தான் நிய்யத் என்று எண்ணுகின்றனர்.

உஸல்லீ ஸலாத்தஸ் ஸுப்ஹி... என்பன போன்ற சில அரபிச் சொற்களைக் கூறுவது தான் நிய்யத் என்று கருதுகின்றனர். இதற்கு நபி வழியில் எந்த ஆதாரமும் இல்லை.

நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும்.

மேலும் உளூச் செய்யும் போதோ, தொழும் போதோ, நோன்பு நோற்கும் போதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதனையும் வாயால் மொழிந்து விட்டுச் செய்ததில்லை.

ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மட்டுமே வாயால் மொழிந்துள்ளனர். மற்ற எந்த வணக்கத்திற்கும் வாயால் மொழிந்ததில்லை.

நான் இப்போது தொழப் போகின்றேன் என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்குமானால் அதுவே நிய்யத் ஆகும். வாயால் எந்தச் சொல்லையும் மொழியக் கூடாது. அவ்வாறு மொழிவது பித்அத் ஆகும். இது அவசியம் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாயால் மொழிந்து நமக்கு வழி காட்டியிருப்பார்கள்.

மழைக்காலமும் ஜமாஅத் தொழுகையும்

கடுமையான மழை நேரங்களில் பள்ளிவாசலுக்கு வராமல் கடமையான தொழுகைகளை வீடுகளிலேயே தொழுவதற்கு மார்க்கம் அனுமதிக்கின்றது.

அது போன்ற சூழ்நிலையில் பாங்கின் சில வாசகங்களை மாற்றிச் சொல்ல வேண்டும்.

ஹய்ய அலஸ்ஸலாஹ், மற்றும் ஹய்ய அலல் ஃபலாஹ் என்ற வாக்கியங்களைக் கூறாமல் அதற்கு பகரமாக  "ஸல்லூ ஃபீ புயூதிகும்" என்று இருமுறை கூற வேண்டும் என்று மார்க்கம் வழிகாட்டுகின்றது.

இதற்குரிய ஆதாரம்

صحيح البخاري 

901 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الحَمِيدِ، صَاحِبُ الزِّيَادِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الحَارِثِ ابْنُ عَمِّ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ: ابْنُ عَبَّاسٍ لِمُؤَذِّنِهِ فِي يَوْمٍ مَطِيرٍ: إِذَا قُلْتَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَلاَ تَقُلْ حَيَّ عَلَى الصَّلاَةِ، قُلْ: «صَلُّوا فِي بُيُوتِكُمْ»، فَكَأَنَّ النَّاسَ اسْتَنْكَرُوا، قَالَ: فَعَلَهُ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي، إِنَّ الجُمْعَةَ عَزْمَةٌ وَإِنِّي كَرِهْتُ أَنْ أُحْرِجَكُمْ فَتَمْشُونَ فِي الطِّينِ وَالدَّحَضِ

அப்துல்லாஹ் இப்னு அல் ஹாரிஸ் அறிவித்தார்:

'அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்' என்று கூறிய பிறகு ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்) என்பதைக் கூறாமல் (ஸல்லூ ஃபீ புயூதிகும்)  உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று கூறுவீராக என்று பாங்கு சொல்பவரிடம் ஒரு மழை நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். (இவ்வாறு கூறியதை) மக்கள் வெறுப்பது போல் இருந்தபோது 'என்னை விட மிகவும் சிறந்தவ(ரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்' என்று கூறினார்கள். நிச்சயமாக ஜும்ஆ அவசியமானது தான்; எனினும், நீங்கள் சேற்றிலும், சகதியிலும் நடந்து வந்து அதனால் உங்களுக்குச் சிரமம் தருவதை நான் விரும்பவில்லை' என்றும் குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 901

ஹய்ய அலஸ்ஸலாஹ் (தொழுகையின் பக்கம் வாருங்கள்) ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்)  என்ற வாக்கியத்தைக் கூறாமல் அதற்கு பகரமாக ஸல்லூ ஃபீ புயூதிகும் (உங்களின் வீடுகளில் தொழுது கொள்ளுங்கள்) என்ற வாக்கியத்தைக் கூறவேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம்!

இந்த ஹதீஸில் ஸல்லூ ஃபீ புயூதிகும் எனக் கூற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இதற்குப் பகரமாக வேறு சில சொற்களைக் கூறுவதற்கும் ஆதாரம் உள்ளது.

صَلُّوا فِي رِحَالِكُمْ

ஸல்லூ ஃபீ ரிஹாலிக்கும் (அஹ்மத் 23215)

أَلَا صَلُّوا فِي رِحَالِكُمْ

அலா ஸல்லூ ஃபீ ரிஹாலிக்கும் (முஸ்லிம் 1241)

الصَّلَاةُ فِي الرِّحَالِ

அஸ்ஸலாத்து ஃபிர்ரிஹால்  (புகாரி 616)

أَلَا صَلُّوا فِي الرِّحَالِ

அலா ஸல்லூ ஃபிர் ரிஹால் (புகாரி 632)

இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கூற வேண்டுமா? அல்லது அல்லது ஸல்லூ ஃபீ புயூதிகும் எனக் கூற வேண்டுமா?

பீ புயூதிகும் என்பதை ஊர்களில் சொல்லும் பாங்கில் பயன்படுத்த வேண்டும். ஃபீ புயூதிகும் என்றால் வீடுகளில் என்று பொருள்.

ரிஹால் என்ற  சொல் இடம்பெறும் வாசகங்களை பயணத்தில் இருக்கும் போது சொல்ல வேண்டும். ரிஹால் என்றால் இருப்பிடங்கள் என்று பொருள். இது வீட்டையும், வீடு அல்லாமல் பயணத்தின் போது அமைக்கும் கூடாரங்களையும் குறிக்கும். ரிஹால் என்ற சொல் இடம் பெற்ற அதிகமான அறிவிப்புக்கள் பயணத்தின் போது சொல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வீடுகளில் என்ற அறிவிப்பு பயணத்தின் போது சொல்லப்பட்டதாக இருக்க முடியாது. பயணத்தில் அமைக்கும் கூடாரங்களை வீடுகள் என்று சொல்வதில்லை. எனவே தான் ரிஹால் என்ற இரு பொருள் தரும் அறிவிப்புக்களை விட  ஃபீ புயூதிகும் என்ற சொல் தான் உள்ளூரில் சொல்வதற்குப் பொருத்தமானது.

ஹய்ய அலஸ்ஸலா என்பதையும் சொல்லி விட்டு மேற்கண்ட வாசகங்களைக் கூற வேண்டும் என சிலர் கூறியுள்ளனர். இது தவறாகும். ஹய்ய லஸ்ஸலா என்பதற்குப் பதிலாகத் தான் மேற்கண்ட சொற்களைக் கூற வேண்டும்.

ஏனெனில் ஹய்ய அலஸ்ஸலாஹ் என்றால் தொழுகையின் பக்கம் வாருங்கள் என்று பொருள் ஆகும். இதையும் கூறி விட்டு தொழுகைக்கு வர வேண்டாம் வீட்டில் தொழுங்கள் என்றும் கூறினால் இரண்டும் முரண்படும்.

வாருங்கள்! ஆனால் வராதீர்கள் என்ற குழப்பமான நிலையைத் தவிர்க்கவே ஹய்ய அலஸ்ஸலாஹ் என்பதை தவிர்க்க சொல்லி இருக்கிறார்கள் என்பது மேலோட்டமாகப் பார்த்தாலே தெரியும்.

மழைக்காலங்களில் பள்ளிவாசலுக்கு வராமல் வீட்டிலே தொழுது கொள்வது சலுகையா? கட்டாயக் கடமையா? இதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மழைக்காலங்களில் பள்ளிவாசலில் வழக்கம் போல் தொழுகை நடத்த வேண்டும். வீடுகளில் தொழலாம் என்ற சலுகையைப் பயன்படுத்த விரும்புவோர் அவ்வாறு பயன்படுத்தலாம். மழையைச் சிரமமாகக் கருதாதவர்கள் விரும்பினால் பள்ளிவாசலுக்கு வரலாம் என்பதே சரியான கருத்தாகும்.

صحيح البخاري

1013 - حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: أَخْبَرَنَا أَبُو ضَمْرَةَ أَنَسُ بْنُ عِيَاضٍ، قَالَ: حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَذْكُرُ أَنَّ رَجُلًا دَخَلَ يَوْمَ الجُمُعَةِ مِنْ بَابٍ كَانَ وِجَاهَ المِنْبَرِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ، فَاسْتَقْبَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ: هَلَكَتِ المَوَاشِي، وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُغِيثُنَا، قَالَ: فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ، فَقَالَ: «اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا» قَالَ أَنَسُ: وَلاَ وَاللَّهِ مَا نَرَى فِي السَّمَاءِ مِنْ سَحَابٍ، وَلاَ قَزَعَةً وَلاَ شَيْئًا وَمَا بَيْنَنَا وَبَيْنَ سَلْعٍ مِنْ بَيْتٍ، وَلاَ دَارٍ قَالَ: فَطَلَعَتْ مِنْ وَرَائِهِ سَحَابَةٌ مِثْلُ التُّرْسِ، فَلَمَّا تَوَسَّطَتِ السَّمَاءَ، انْتَشَرَتْ ثُمَّ أَمْطَرَتْ، قَالَ: وَاللَّهِ مَا رَأَيْنَا الشَّمْسَ سِتًّا، ثُمَّ دَخَلَ رَجُلٌ مِنْ ذَلِكَ البَابِ فِي الجُمُعَةِ المُقْبِلَةِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ، فَاسْتَقْبَلَهُ قَائِمًا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ: هَلَكَتِ الأَمْوَالُ وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُمْسِكْهَا، قَالَ: فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ حَوَالَيْنَا، وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالجِبَالِ وَالآجَامِ وَالظِّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ» قَالَ: فَانْقَطَعَتْ، وَخَرَجْنَا نَمْشِي فِي الشَّمْسِ قَالَ شَرِيكٌ: فَسَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ: أَهُوَ الرَّجُلُ الأَوَّلُ؟ قَالَ: «لاَ أَدْرِي»

1013 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது மேடைக்கு எதிர்த்திசையிலிருந்த வாசல் வழியாக ஒரு மனிதர் வந்தார். அவர் நின்று கொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! (பஞ்சத்தால்) கால்நடைகள் அழிந்துவிட்டன; போக்குவரத்து நின்றுவிட்டது. அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் எங்களுக்கு மழை பொழியச் செய்வான் என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! வானத்தில் மேகக் கூட்டம் எதையும் நாங்கள் காணவில்லை; தனி மேகத்தையோ (மழைக்கான அறிகுறிகள்) எதையுமோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (மதீனாவிலுள்ள) சல்உ மலைக்குமிடையே எந்த வீடும் கட்டடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியே இருந்தது.) அப்போது அம்மலைக்குப் பின்னாலிருந்து கேடயம் போன்று (வட்டவடிவில்) ஒரு மேகம் தோன்றியது. அது நடுவானில் மையம் கொண்டு சிதறியது. பிறகு மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஆறு (ஏழு), நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜுமுஆவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தும் போது ஒரு மனிதர் அதே வாசல் வழியாக வந்தார். (வந்தவர்) நின்றவாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! (தொடர்ந்து பெய்த பெருமழையால் எங்கள் கால்நடைச்) செல்வங்கள் அழிந்துவிட்டன; பாதைகள் தடைபட்டு விட்டது. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்! என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, இறைவா! எங்கள் சுற்றுப்புறங்கள் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! இறைவா! குன்றுகள், மலைகள் ஓடைகள் விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) என்று பிரார்த்தித்தார்கள். உடனே (மதீனாவில்) மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.

நூல் : புகாரி 1013

இதன் அறிவிப்பாளரான ஷரீக் பின் அப்தில்லாஹ் பின் அபீநமிர் அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், இ(ரண்டாவதாக வ)ந்த மனிதர் முதலில் வந்தவர்தாமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், எனக்குத் தெரிய வில்லை' என்று பதிலளித்தார்கள்.

صحيح البخاري

933 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، قَالَ: حَدَّثَنَا الوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَمْرٍو الأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: أَصَابَتِ النَّاسَ سَنَةٌ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فِي يَوْمِ جُمُعَةٍ قَامَ أَعْرَابِيٌّ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ: هَلَكَ المَالُ وَجَاعَ العِيَالُ، فَادْعُ اللَّهَ لَنَا، فَرَفَعَ يَدَيْهِ وَمَا نَرَى فِي السَّمَاءِ قَزَعَةً، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، مَا وَضَعَهَا حَتَّى ثَارَ السَّحَابُ أَمْثَالَ الجِبَالِ، ثُمَّ لَمْ يَنْزِلْ عَنْ مِنْبَرِهِ حَتَّى رَأَيْتُ المَطَرَ يَتَحَادَرُ عَلَى لِحْيَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمُطِرْنَا يَوْمَنَا ذَلِكَ، وَمِنَ الغَدِ وَبَعْدَ الغَدِ، وَالَّذِي يَلِيهِ، حَتَّى الجُمُعَةِ الأُخْرَى، وَقَامَ ذَلِكَ الأَعْرَابِيُّ - أَوْ قَالَ: غَيْرُهُ - فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، تَهَدَّمَ البِنَاءُ وَغَرِقَ المَالُ، فَادْعُ اللَّهَ لَنَا، فَرَفَعَ يَدَيْهِ فَقَالَ: «اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا» فَمَا يُشِيرُ بِيَدِهِ إِلَى نَاحِيَةٍ مِنَ السَّحَابِ إِلَّا انْفَرَجَتْ، وَصَارَتِ المَدِينَةُ مِثْلَ الجَوْبَةِ، وَسَالَ الوَادِي قَنَاةُ شَهْرًا، وَلَمْ يَجِئْ أَحَدٌ مِنْ نَاحِيَةٍ إِلَّا حَدَّثَ بِالْجَوْدِ

933 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் ஒருமுறை பஞ்சம் ஏற்பட்டது. ஒரு ஜுமுஆ நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு கிராமவாசி எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்து விட்டன; குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே, எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கூறினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் கைகளை ஏந்தினார்கள்.- அப்போது எந்த மழைமேகத்தையும் நாங்கள் வானத்தில் காணவில்லை- என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கையை கீழே விடுவதற்கு முன்பாக மலைகளைப் போன்ற மேகங்கள் பரவத் தொடங்கின. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவு மேடையை விட்டும் இறங்கியிருக்கவில்லை. மழை பெய்து அவர்களது தாடியில் வழிந்ததை நான் பார்த்தேன். எங்களுக்கு அன்றைய தினமும் மறுதினமும் அதற்கடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் அடுத்த ஜுமுஆ வரையிலும் மழை கிடைத்தது.அதே கிராமவாசி' அல்லது வேறொருவர்' எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! கட்டடங்கள் இடிந்து கொண்டிருக்கின்றன; செல்வங்கள் வெள்ள நீரில் மூழ்குகின்றன. எனவே, எங்களுக்கு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார். அப்போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்தி, இறைவா! எங்களைச் சுற்றிலும் மழையைப் பொழிவாயாக! எங்களுக்கெதிராக மழை பொழியச் செய்யாதே! என்று பிரார்த்தித்தார்கள். மேகத்தின் எந்தப் பகுதியை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சைகை செய்தார்களோ அம்மேகம் விலகிச் சென்றது. மதீனா(வைச் சூழ்ந்திருந்த மேகம் விலகியதால் அது) பாதாளம் போன்று மாறிவிட்டிருந்தது. கனாத்' ஓடையில் ஒரு மாதம் தண்ணீர் ஓடியது. எந்தப் பகுதியிலிருந்து யார் வந்தாலும் இந்த அடை மழை பற்றிப் பேசாமால் இருக்கவில்லை.

நூல் : புகாரி 933

ஒரு வாரம் தொடர் மழை பொழிந்தும் ஜும்மாவுக்கு மக்கள் வந்துள்ளனர்; வந்தவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும் ஆதொழுகை நடத்தியுள்ளனர் என்பதை இந்த ஹதீஸ்களில் இருந்து அறிகிறோம். எனவே மழைக்காலத்தில் பள்ளிவாசலுக்கு வர விரும்பியவர் வரலாம் என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது.

மேலும் வீடுகளில் தொழுது கொள்வது கட்டாயமானதல்ல என்பதைப் பின்வரும் ஹதீஸில் இருந்தும் அறியலாம்.

صحيح مسلم

25 - (698) حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَمُطِرْنَا، فَقَالَ: «لِيُصَلِّ مَنْ شَاءَ مِنْكُمْ فِي رَحْلِهِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் புறப்பட்ட பொது மழை பெய்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களில் விரும்பியவர் தமது கூடாரத்தில் தொழுது கொள்ளலாம் என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

எனவே பள்ளிவாசலில் தொழுகையே இல்லாமல் பூட்டிப்போடக் கூடாது. விரும்பி வரக்கூடிய மக்களுக்கு தொழுகை நடத்தப்பட வேண்டும்.

நாற்காலியில் அமர்ந்து தொழக் கூடாதா?

நிற்கவும் தரையில் அமர்ந்தும் தொழ இயலாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து தொழலாமா என்ற கேள்விக்கு தமிழ்நாடு ஜமாஅதுல் உலமா கூடாது என்று ஃப்தவா அளித்துள்ளனர். இது சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகிறது.

சில வாதங்களுக்கு நாம் பதில் கூறவில்லை என்று தவறாக விமர்சனம் செய்ய இடளிக்கக் கூடாது என்பதற்காக ஜமாஅதுல் உலமா ஃபத்வாவை ஒரு வரி விடாமல் முழுமையாக வெளியிட்டு அதன் பின்னர் ஒவ்வொரு வாதத்துக்கும் பதில் அளித்துள்ளோம். இது ஆதாரமற்ற அறிவீனமான ஃபத்வா என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

இது தான் ஜமாஅதுல் உலமாவின் ஃபத்வா

நாற்காலியில் அமர்ந்து தொழுவது அறவே கூடாது - மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.-    தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் 350 உலமாக்களின் ஒரு மித்த தீர்ப்பு

மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா குழு வெளியீடு:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

முஹியுஸ் ஸுன்னா ஹஜ்ரத் மௌலானா முஹம்மது ஷஃபீக்கான் ஸாஹிப் தாமத்பரகாதுஹும்

ஸ்தாபகர்,   மழாஹிருல் உலூம் அரபிக்கல்லூரி,   சேலம்.

& ஹஜ்ரத் மௌலானா அல்லாமா அப்துர்ரஹ்மான் ஸாஹிப் தாமத்பரகாதுஹும்.

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கீழ் வரும் காரணங்களினால் தடுக்கப்பட்டுள்ளது   

1, குர்ஆனுக்கு மாற்றமானது.

2, ஹதீஸுக்கு மாற்றமானது.

3, உலமாக்களின் ஃபத்வாக்களுக்கு மாற்றமானது.

4, தொழுகையின் அசலான தன்மைக்கு மாற்றமானது.

5, யூதர்கள், கிருஸ்தவர்களின் சூழ்ச்சியாகும்.

6,  25 வருடங்களுக்கு பிறகு பள்ளிகளை கிருஸ்தவ ஆலையங்களைப் போன்று மாற்றுவதற்கான சூழ்ச்சியாகும்.

    ஆதாரங்கள்   :    

ஆதாரம் 1      

தொழுகையின் நோக்கமே அல்லாஹ்வின் முன்னிலையில் பணிவை வெளிப்படுத்தி அவனை வணங்குவதாகும்.

திட்டமாக முஃமின்கள் வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுடைய தொழுகையில் உள்ளச்சம் கொண்டோராக இருப்பர்.(அல்முஃமினூன்1,2.)

தொழுகை என்பது தன்னை முற்றிலும் மறந்து இறைவனுக்கு முன்னால் தன் பணிவை வெளிப்படுத்தி அவனை வணங்குவதாகும். தொழுகையில் உள்ள ஒவ்வொரு செயல்களும் இதையே உணர்த்துகின்றன.

இதுவே (குஷுவு) என்னும் உள்ளச்சமாகும்.

மேலும் உள்ளச்சம் என்பது தொழுகையாளி தன் பணிவை வெளிப்படுத்தி பார்வையை கீழ் தாழ்த்தியும் உடல் அங்கங்களை அமைதியாக வைத்து குரலை தாழ்த்துவதாகும்.(ஷாமி2/407)

நாற்காலியில் அமர்ந்து தொழுவதினால் மேற்கூறப்பட்ட (குஷுவு)உள்ளச்சத்தின் வெளிப்பாடுகள் இல்லாமல் ஆகிவிடுவதால் நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

ஆதாரம் 2      

முஸ்லிம்களே! ஐந்து நேரத்தொழுகைகளையும் (குறிப்பாக)நடுத்தொழுகைகளையும் பேணித் தொழுது வாருங்கள் மேலும் அல்லாஹ்விற்கு அடிபணிந்தவர்களாக நில்லுங்கள் (அல்பகரா238)

சில உலமாக்கள் மேற்கண்ட ஆயத்திற்கு அல்லாஹ்வுக்கு முன் ஒழுங்காக நில்லுங்கள் என்று அர்த்தம் செய்துள்ளார்கள். (ம ஆரிஃபுல் குர்ஆன் 1/236)

قومو ا لله قانتين என்பதின் விளக்கவுரை: அல்லாஹ்விற்கு முன்னால் பணிவுடனும் ஒழுக்கமாகவும் நின்றுகொள்ளுங்கள்.

பூமியில் அமர்ந்து தொழும்போது பணிவும், ஒழுக்கமும் ஏற்பாடுகின்றன.

நாற்காலியில் இந்த நிலை ஏற்படாததால் அவற்றில் அமர்ந்து தொழுவது கூடாது.

தொழுகை என்பது வணக்கமாகும் (அப்த்) என்ற வார்த்தையின் பொருள் அடிமையாகும். அடிமையிடம் அடிமைத்தனம் வெளிப்படவேண்டும். நாற்காலியில் அமர்ந்து தொழும்போது அடிமைத்தனம் வெளிப்படுவதில்லை. எனவே நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

ஆதாரம் 3      

ஹஜ்ரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோயுற்ற நிலையில் ஃர்ளான தொழுகையை பூமியில் அமர்ந்தே நிறைவேற்றினார்கள். மேலும் நஃபில் தொழுகையை அமர்ந்தும் சைக்கினை செய்தும் நிறைவேற்றினார்கள்.

ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு துல்ஹிஜ்ஜா மாதம் நபியவர்களின் காலில் காயம் ஏற்பட்டபோது பல நேரத் தொழுகையை தங்கள் வீட்டில் அமர்ந்தே தொழுதார்கள். அச்சமயம் நாற்காலி அவர்களிடம் இருந்தது.(முஸ்லிம் 876)

நபியவர்களின் வீடு மஸ்ஜித்தின் அருகில் இருந்தும் கூட நோயின் காரணமாக தொழுகைகளை வீட்டிலேயே நிறைவேற்றினார்கள்.

இவ்வாறே எவரேனும் பூமியில் அமர்ந்து தொழ முற்றிலும் சக்தியற்றவராக இருந்தால் அவர் வீட்டிலேயே அமர்ந்து தொழுது கொள்ளட்டும். (மஜ்ம உஜ்ஜவாயித் வமன்பவுல் ஃபவாயித்(2/149, அல் முஃஜமுல் அவ்ஸத் 3/28, முஸ்னத் அபியஃலா அல்மவ்ஸலி7/42)

ஆதாரம் 4      

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நோயாளியை நலம் விசாரிக்க சென்றார்கள். அவர் தலையனையின் மீது ஸஜ்தா செய்து தொழுது கொண்டிருப்பதை கண்ட நபியவர்கள் அதை தூக்கி எறிந்து விட்டார்கள். அவர் ஸஜ்தா செய்ய ஒரு குச்சியை எடுத்தார். அதையும் எறிந்து விட்டார்கள். பிறகு கூறினார்கள். உங்களால் முடிந்தால் பூமியில் ஸஜ்தா செய்து தொழுங்கள் இல்லையானால் சைகை செய்தால் போதுமானது. (ஸுனனுஸ் ஸஙீர் லில் பைஹகீ 118/1,ஹுல்யதுல் அவ்லியாவதபகாதுல்அஸ்ஃபியா92/7)

ஆதாரம் 5 

ஹஜ்ரத் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நோயாளியை சந்திக்க சென்றோம் அவர் தலையனை மீது ஸஜ்தா செய்து தொழுது கொண்டிருப்பதை கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைப் பார்த்து கூறினார்கள் உங்களால் முடிந்தால் பூமியின் மீது ஸஜ்தா செய்யுங்கள் இல்லை எனில் சைகை செய்தால் போதுமானது.

உங்கள் ருகூவை காட்டிலும் ஸஜ்தாவிற்கு அதிகமாக குனிந்து தொழுங்கள்.

மேற்கண்ட மூன்று ஹதீஸ்களிலும் நபியவர்கள் பூமியின் மீது அமர்ந்து தொழுகையை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டார்கள். (முஸ்னத் அபியஃலா 3/345, அல் முதாலிபுல் ஆலியா 4/300,ம ஆரிஃபதுஸ்ஸுன் வல்ஆஸார்3/224)

எனவே நாற்காலியில் அமர்ந்து தொழுவது தொழுகையின் அடிப்படை நோக்கத்திற்கு மாற்றமானதாகும்.

அன்று முதல் இன்று வரை உலமாக்கள் நாற்காலிகளை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நாற்காலியில் அமர்ந்து தொழுவது ஏதேனும் ஒரு வகையில் ஆகும் என்றிருந்தால் நிச்சயமாக அதைப் பற்றி கூறியிருப்பார்கள். ஆனால் அதைப் பற்றி எங்கும் உலமாக்கள் குறிப்பிடாமல் இருப்பது, நாற்காலியில் அமர்ந்து தொழுவது   தொழுகையில் இருக்கவேண்டிய உள்ளச்சம், பணிவு, அடிமைத்தனத்தின் வெளிப்பாடு ஆகிய வற்றிர்கு மாற்றமாக உள்ளது என்ற கருத்து தெளிவாகிறது.

இம்தாதுல் முஃப்தியீனில் எழுதப்பட்டுள்ளதாவது:

இது போன்ற விஷயங்களில் நிபந்தனைகளோடு கூடும் என்று அனுமதி அளித்தோம் என்றால் நாளடைவில் பொது மக்கள் நிபந்தனைகளை மறந்து விட்டு வெறும் கூடும் என்கிற விஷயத்தை மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். இது அனுபவபூர்னமான விஷயமாகும்.

(இம்தாதுல் முஃப்தியீன், கேள்வி எண்-879)

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது என்பதற்கான ஃபத்வாக்கள் :

நாற்காலியில் கால்களை தொங்க விட்டு தொழுவதற்காக அமருவதும் ஸஜ்தா செய்வதற்காக டேபிளின் மீது தலைகுணிவதும் கூடாது.ஆனால் பூமியில் அமர்வதற்கோ, ஸஜ்தா செய்வதற்கோ முற்றிலும் முடியாது என்கிற போது அனுமதி உண்டு. பூமியில் ஸஜ்தா செய்வதற்கு அறவே முடியாத நிலையில் பூமியில் அமர்ந்து ஒரு ஜானை விட உயரமில்லாத ஒரு பொருளின் மீது ஸஜ்தா செய்வது கூடும்.

(ஹஜ்ரத் மொவ்லானா முப்தி கிஃபாயதுல்லாஹ் சாஹிப்-ரஹ்.நூல். கிஃபாயதுல் முஃப்தி3/400) கேள்வி எண் 1393)

ஒரு நாற்காலியில் அமர்ந்து மற்றொரு நாற்காலியின் மீது ஸஜ்தா செய்தால் தொழுகை கூடிவிடும். எனினும் நிபந்தனை என்னவெனில் இரு முழங்கால்களையும் நாற்காலியின் மீது வைக்கவேண்டும்.

அவ்வாறு வைக்கவில்லை எனில் தொழுகை கூடாது. திரும்ப தொழுவது அவசியமாகும். (அஹ்ஸனுல் ஃபத்வா 4/51)

தாருல் உலூம் தேவ்பந்தினுடைய முஃப்திகளின் தீர்ப்பு    

ஒருவர் தொழுகையில் நிற்க முடியாது ஆனால் பூமியில் அமர்ந்து ஸஜ்தா செய்து தொழுக முடியுமென்றால் அவர் பூமியில் ஸஜ்தா செய்வது அவசியமாகும்.

பூமியில் ஸஜ்தா செய்யாமல் நாற்காலியிலோ அல்லது தரையிலோ அமர்ந்து வெறும் சைகை மூலம் ஸஜ்தா செய்வது கூடாது.

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது. ஏனெனில் முடியாத நிலையில்...

1, பூமியில் அமர்ந்து தொழுவது சுன்னத்தான வழிமுறை ஆகும். இவ்வாறே ஸஹாபாக்களும் அவர்களுக்கு பின் வந்தவர்களும் செய்து வந்துள்ளார்கள்.   ஏறத்தாழ கி.பி.1990-க்கு முன்பு வரை நாற்காலியின் மீது அமர்ந்து தொழகும் முறை காணப்படவில்லை.

2, நாற்காலிகளை தேவையின்றி பயன் படுத்துவதால் ஸஃப்ஃபுகளில் இடையூறு ஏற்படுகிறது.   ஆனால் ஹதீஸ்களில் தொழுகையின் ஸஃப்ஃபுகளில் சேர்ந்து நிற்பது பற்றி மிக அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

3, தகுந்த தேவையின்றி நாற்காலிகளை பள்ளியில் கொண்டு வருவதால் மாற்றார் களின் வழிப்பாட்டு தலங்களுக்கு ஒப்பாகிறது.

தீனுடைய காரியத்தில் அன்னியர்களுடன் நாம் ஒபாகுவதை தடுக்கப் பட்டுள்ளது.

4, தொழுகை என்பது பணிவு, அடிமைத்தனத்தின் வெளிப்பாடு ஆகும். இந்நிலை நாற்காலியில் அமர்ந்து தொழும்போது தான் பூரணமாக வெளிப்படாது.

5, ஒரு தொழுகையாளி பூமியை நெருங்கி தன் நெற்றியை வைப்பது தொழுகையில் வேண்டப்படுகிறது. நாற்காலியில் அவை நிறைவேறுவதில்லை.

      தமிழ் நாடு உலமாக்களின் ஒரு மித்த தீர்ப்பு     

ஸஃபர்20 ஹிஜ்ரி 1432, ஜனவரி மாதம் 20/2011 அன்று மதுரையில் கூடிய தமிழ் நாடு ஜமாஅத் துல் உலமா சபையில் 350 உலமாக்களின் ஒரு மித்த தீர்ப்பு:

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

தங்கடம் உள்ளவர்கள் தரையில் தான் உட்கார்ந்து தான் தொழுக வேண்டும்.

மேற்கூறப்பட்ட குர்ஆன், ஹதீஸ், ஃபத்வாக்களின் மூலம் நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது என்பது தெளிவாகிவிட்டது.

ஒரு முஃமின் எப்பொழுது உட்கார்ந்து தொழுவது கூடும்?

நின்று தொழுவதை விடுவதற்கான காரணம் இருவகைப்படும்.

1, ஹகீகி: அறவே நின்று தொழ முடியாதவர்.

2, ஹிக்மி: அறவே நிற்க முடியாது என்பதல்ல மாறாக அவரால் நிற்க முடியும் ஆனால் நின்றால் கீழே விழுந்தது விடுவார் அல்லது மார்க்கம் எதை தங்கடம் என கூறியுள்ளதோ அந்த அளவிற்கு பலகீனம் ஏற்படுவது.

உதாரணமாக: அனுபவமுள்ள முஸ்லிம் மருத்துவர் நின்று தொழுதால் நோய் அதிகமாகும் (அ) கடுமையான வலி ஏற்படும் (அ) நோய் குணமாக தாமதமாகும்.என கூறியிருந்தால்-அவர் அமர்ந்து தொழுவது கூடும்.

ஆனால் சகித்துக் கொள்ளும் படி வலி இருந்தால் கூடாது.

நோயாளி தொழுகும் முறை.

1, அத்தஹிய்யாதில் அமரும் நிலை தான் சிறந்து.

சம்மணம் போட்டு அமர்வதும், இரண்டு கால்களையும் வெளியே விட்டு பித்தட்டில் அமருவதும் மற்றும் குத்த வைத்து அமருவதும் கூடும்.

2, உட்கார்ந்து தொழும் போது பார்வை மடியில் இருக்க வேண்டும்.

கையைக் கட்டிக்கொள்ள வேண்டும்.

ருகூசெய்யும்போது கையை முட்டுக்காலில் வைக்க வேண்டும்.

நெற்றியை முட்டுக்கால்களுக்கு சமமாக வைக்க வேண்டும்.

பித்தட்டை உயர்த்தக் கூடாது.

மேலும் ஸஜ்தா செய்ய வேண்டும் ஸஜ்தா செய்ய சக்தி இல்லை எனில் ருகூவைவிட ஸஜ்தா வில் தலையை அதிகமாக சாய்க்க வேண்டும்.

ஸஜ்தா செய்யும் போது கையை பூமியின் மீது வைக்க வேண்டும்.

சைகை செய்து தொழுபவரை பின் பற்றி தொழுவது கூடாது.

3, தொழுகையின் மற்ற செயல்களான கிராஅத் ஓதுவது, தஸ்பீஹ் ஹாத் ஓதுவது, நடுநிலையாக   மன ஓர்மையோடு தொழுவது இவையனைத்தும் உடல் ஆரோக்கியம் உள்ளவர் நிறைவேற்றுவது போன்று நிறைவேற்ற வேண்டும்.

மஸ்அலாக்கள்      

1, யாராவது தரையில் அமர்ந்து எழுந்து நிற்பதற்கு சக்தி இல்லை எனில் அவர் கட்டிலில் அமர்ந்து கால்களை மடக்கி தொழவேண்டும்.

2, ஃபஜ்ருடைய சுன்னத் அதிமுக்கியமானதாக இருப்பதால் நிற்க சக்தி உள்ளவர்கள் அதை நின்று தான் தொழுக வேண்டும்.

மற்ற சுன்னத்களை உட்கார்ந்து தொழலாம்.

3, முதல் ரக அத்தை நின்று தொழுதவர் 2வதுரக அத்திற்கு எழ முடியாமல் ஆகிவிட்டால் தரையில் அமர்ந்து தொழுவது கூடும்.

4,ஒருவர் தலையால் சைகை செய்து தொழ முடியாத நிலைக்கு ஆகிவிட்டால் தொழுகை மன்னிக்கப்படும்.

தொகுப்பு:

மௌலானா முஃப்தி அபுல் கலாம் காஸிமி மழாஹிரி.சேலம்.

பொதுச்செயலாளர்-மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா குழு

தொலைபேசி 9443391412

வெளியீடு:

மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா குழு

இது தான் முழுமையான ஃபத்வா. இதில் ஒவ்வொரு வாதத்தையும்  எடுத்துக் காட்டி தனித்தனியாக பதில் அளித்துள்ளோம்.

ஜமாஅதுல் உலமா ஃபத்வாவுக்கு நமது மறுப்பு

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கீழ் வரும் காரணங்களினால் தடுக்கப்பட்டுள்ளது   

1,குர்ஆனுக்கு மாற்றமானது.

2, ஹதீஸுக்கு மாற்றமானது.

3, உலமாக்களின் ஃபத்வாக்களுக்கு மாற்றமானது.

4, தொழுகையின் அசலான தன்மைக்கு மாற்றமானது.

5, யூதர்கள், கிருஸ்தவர்களின் சூழ்ச்சியாகும்.

6, 25 வருடங்களுக்கு பிறகு பள்ளிகளை கிருஸ்தவ ஆலையங்களைப் போன்று மாற்றுவதற்கான சூழ்ச்சியாகும்.

நமது மறுப்பு

நாற்காலியில் அமர்ந்து தொழக்கூடாது என்பதற்கு ஆறு காரணங்களை ஜமாஅதுல் உலமா கூறியுள்ளது.

குர்ஆனுக்கு மாற்றமானது; ஹதீஸுக்கு மாற்றமானது என்று கூறிய ஜமாஅதுல் உலமா குர்ஆனுக்கு முரணானது என்பதையும் ஹதீஸுக்கு முரணானது என்பதையும் இந்த ஃபத்வாவில் நிரூபிக்கவில்லை என்பதை இவர்கள் காட்டிய ஆதாரங்களை வைத்தே நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

நாற்காலியில் தொழலாம் என்பது உலமாக்களின் ஃபத்வாவுக்கு மாற்றமானது என்று இவர்கள் கூறும் காரணம் மார்க்கத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லாத காரணமாகும். மத்ஹபு தரீகா உள்ளிட்டவைகளையே நியாயப்படுத்தும் உலமாக்கள் நாற்காலி விஷயத்தில் மட்டும் சரியான தீர்ப்பை அளித்திருப்பார்களா?

மார்க்கத்தில் இதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லாவிட்டாலும் அந்த உலமாக்களின் கூற்றையும் நாம் அலசி ஒவ்வொன்றுக்கும் பதில் அளித்துள்ளோம்.

நான்காவதாக தொழுகையின் அசலான தன்மைக்கு மாற்றமானதாகும் என்று கூறியுள்ளனர். இது மதிகெட்ட வாதமாகும்.

தொழுகைக்கு அசலான தன்மை உள்ளது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அசலான முறையில் தொழ முடியாதவர்கள் அவர்களால் இயன்ற முறையில் தான் தொழுவார்கள். இயலாதவர்களுக்குச் சொல்லப்படும் எல்லா சட்டமும் சலுகையும் அசலான முறைக்கு மாற்றமாகத் தான் இருக்கும்.

இதே ஃபத்வாவில் தரையில் அமர்ந்து தொழலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர். அதுவும் அசலான தன்மைக்கு மாற்றமானது தான். ஆனாலும் இதைச் சரிகாணும் இவர்களுக்கு நாற்காலியில் அமர்ந்து தொழுவது மட்டும் அசலான தன்மைக்கு மாற்றமாகத் தெரிகிறது.

ஐந்தாவது ஆறாவது காரணங்கள் பிதற்றலின் உச்சகட்டமாகும்.

உலமாக்களின் அறியாமைக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் அதை முறியடிக்க இவர்கள் கூறும் காரணம் யூதர்களின் சூழ்ச்சி என்பது தான்.

உடற்கூறு சார்ந்த ஒரு பிரச்சனைக்கு அதற்கேற்ப தீர்ப்பு அளிப்பது இவர்களுக்கு யூத கலாச்சாரமாக தெரிகிறது.

யூத கிறித்தவர்களின் சூழ்ச்சி என்று சொல்லும் உலமா சபை இந்த ஃபத்வாவில் எந்த இடத்திலும் இதை ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்  

தொழுகையின் நோக்கமே அல்லாஹ்வின் முன்னிலையில் பணிவை வெளிப்படுத்தி அவனை வணங்குவதாகும்.

திட்டமாக முஃமின்கள் வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுடைய தொழுகையில் உள்ளச்சம் கொண்டோராக இருப்பர்.(அல்முஃமினூன்1,2.)

தொழுகை என்பது தன்னை முற்றிலும் மறந்து இறைவனுக்கு முன்னால் தன் பணிவை வெளிப்படுத்தி அவனை வணங்குவதாகும். தொழுகையில் உள்ள ஒவ்வொரு செயல்களும் இதையே உணர்த்துகின்றன.

இதுவே (குஷுவு) என்னும் உள்ளச்சமாகும்.

மேலும் உள்ளச்சம் என்பது தொழுகையாளி தன் பணிவை வெளிப்படுத்தி பார்வையை கீழ் தாழ்த்தியும் உடல் அங்கங்களை அமைதியாக வைத்து குரலை தாழ்த்துவதாகும்.(ஷாமி2/407)

நாற்காலியில் அமர்ந்து தொழுவதினால் மேற்கூறப்பட்ட (குஷுவு)உள்ளச்சத்தின் வெளிப்பாடுகள் இல்லாமல் ஆகிவிடுவதால் நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

நமது மறுப்பு

தொழுகையில் பணிவு அவசியம் என்று கூறும் குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.

பணிவு அவசியம் என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை.

இப்படி வாதிடும் ஜமாஅதுல் உலமா சபை தரையில் உட்கார்ந்து தொழலாம் என்று இதே ஃபத்வாவில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

எல்லோரும் நிற்கும் போது சிலர் மட்டும் தரையில் உட்கார்ந்து தொழுவது பணிவுக்கு அப்பாற்பட்டது என்பதால் தரையில் உட்கார்ந்து தொழக் கூடாது என்று இவர்கள் சொல்ல வேண்டும்.

இதற்கு என்ன காரணம் சொல்வார்கள்? நிற்க இயலாதவன் தானே உட்கார்ந்து தொழுகிறான். இயலாத போது பணிவுக்கு மாற்றமாகத் தெரியும் செயல்களைச் செய்வது பணிவுக்கு எதிராக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தான் இவர்களின் பதிலாக இருக்க முடியும்.

நான் நின்று வணங்க முடிந்தாலும் நின்று வணங்க மாட்டேன் நாற்காலியில் உட்கார்ந்து தான் வணங்குவேன் என்று ஆணவம் பிடித்து யாரும் நாற்காலியில் உட்காருவதில்லை. நிற்க முடியவில்லை என்பதற்காகத் தான் நாற்காலியில் உட்காருகிறார்கள்.

நாற்காலியில் யார் உட்காருகிறார்கள்? முட்டுக்கால் பிரச்சனை ஏற்பட்டு தரையில் உட்கார்ந்தால் வலி ஏற்படும் நிலையில் உள்ளவர்கள் தான் நாற்காலியில் உட்காருகிறார்கள். தரையில் உட்கார கால்களை மடித்துப் போட வேண்டும். முட்டுக்கால் வலி பிரச்சனை உள்ளவர்களால் தரையில் உட்கார முடியாது. கால்களைத் தொங்க விட்டுத்தான் அமர முடியும்.

இப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களை தரையில் உட்காரச் சொல்வது அறிவீனம் அல்லவா? தரையில் உட்கார முடியாத நிலையும் உள்ளது என்ற பொது அறிவு கூட இவர்களுக்கு இல்லை.

صحيح البخاري

1117 - حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ، قَالَ: حَدَّثَنِي الحُسَيْنُ المُكْتِبُ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَتْ بِي بَوَاسِيرُ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلاَةِ، فَقَالَ: «صَلِّ قَائِمًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ»

1117 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு மூலவியாதி இருந்தது. ஆகவே நான் தொழுவது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று தொழுவீராக! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழுவீராக! அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழுவீராக! என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 1117

இயலாவிட்டால் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி அதற்கான சலுகையை அளித்துள்ளார்கள். சலுகை என்பது இயலாமைக்குத் தான்.

ஒருவருக்கு நிற்கவும் இயலவில்லை. தரையில் அமரவும் இயலவில்லை. அவர் எப்படி தொழ வேண்டும் என்று கேட்டால் இவர்கள் சொல்லும் பதில் என்ன? தரையில் அமர்ந்து தொழ வேண்டும் என்பது தான். தரையில் அமர முடியாதவர்கள் பற்றித் தான் கேள்வி கேட்கப்படுகிறது. அவரை தரையில் அமரச் சொல்வது தான் ஃபத்வாவா?

இந்த ஃபத்வாவில்

தொழுகை என்பது தன்னை முற்றிலும் மறந்து

என்று போகிற போக்கில் ஒரு நச்சுக் கருத்தைத் தூவியுள்ளனர். முற்றிலும் தன்னை மறந்து விடுதல் இஸ்லாத்தில் இல்லை. பைத்தியக்காரனுக்கு மட்டுமே உள்ள தன்மையாகும்.

தொழுகையில் தன்னை மறத்தல் என்பது யாராலும் முடியாத காரியமாகும். இப்படி ஒரு நிலை இஸ்லாத்தில் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையில் ரக்அத்களின் எண்ணிக்கையை மறந்துள்ளார்கள். தமது பேத்தி உமாமாவை தொழுகையில் தோளில் சுமந்துள்ளார்கள். மறதிக்காக ஸஜ்தா ஸஹ்வு என்பதைக் கற்றுத் தந்துள்ளனர். எனவே தன்னிலை மறத்தல் என்பது போலி தத்துவமாகும்.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்  

முஸ்லிம்களே! ஐந்து நேரத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகைகளையும் பேணித் தொழுது வாருங்கள் மேலும் அல்லாஹ்விற்கு அடிபணிந்தவர்களாக நில்லுங்கள் (அல்பகரா238)

சில உலமாக்கள் மேற்கண்ட ஆயத்திற்கு அல்லாஹ்வுக்கு முன் ஒழுங்காக நில்லுங்கள் என்று அர்த்தம் செய்துள்ளார்கள். (ம ஆரிஃபுல் குர்ஆன் 1/236)

قومو ا لله قانتين என்பதின் விளக்கவுரை: அல்லாஹ்விற்கு முன்னால் பணிவுடனும் ஒழுக்கமாகவும் நின்றுகொள்ளுங்கள்.

பூமியில் அமர்ந்து தொழும்போது பணிவும், ஒழுக்கமும் ஏற்பாடுகின்றன.

நாற்காலியில் இந்த நிலை ஏற்படாததால் அவற்றில் அமர்ந்து தொழுவது கூடாது.

தொழுகை என்பது வணக்கமாகும் (அப்த்) என்ற வார்த்தையின் பொருள் அடிமையாகும். அடிமையிடம் அடிமைத்தனம் வெளிப்படவேண்டும். நாற்காலியில் அமர்ந்து தொழும்போது அடிமைத்தனம் வெளிப்படுவதில்லை. எனவே நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

நமது மறுப்பு

இதுவும் நாற்காலியில் அமர்ந்து தொழக்கூடாது என்பதற்கு ஆதாரமாக இல்லை.

தரையில் உட்கார்ந்து தொழும் போது ஏற்படும் அதே பணிவு நாற்காலியில் அமரும் போது ஏற்படாது என்பது இவர்களின் கற்பனை தானே தவிர உண்மை அல்ல.

இயலாத நிலயில் நாற்காலியில் அமர்ந்தாவது தொழுதாக வேண்டும் என்று தொழ வருபவருக்கு இறையச்சம் உள்ளதால் தான் அந்த நிலையிலும் தொழ வருகிறார்.

நாற்காலியில் அம்ர்ந்தால் பணிவு இல்லை; நாற்காலியில் அமர்ந்தால் இறையச்சம் இல்லை என்று வாதிடுவதற்கு முன்னால் அதை ஜமாஅதுல் உலமா நிரூபிக்க வேண்டும்.

நின்றாலும், நிற்க முடியாத போது தரையில் அம்ர்ந்தாலும், அதற்கும் முடியாத போது நாற்காலியில் அமர்ந்தாலும், அதற்கும் இயலாத போது படுத்து தொழுதாலும் அவை அனைத்திலும் பணிவும் உள்ளது. இறையச்சமும் உள்ளது.

ஜமாஅதுல் உலமாவின் வாதம் 

ஹஜ்ரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோயுற்ற நிலையில் ஃபர்ளான தொழுகையை பூமியில் அமர்ந்தே நிறைவேற்றினார்கள். மேலும் நஃபில் தொழுகையை அமர்ந்தும் சைக்கினை செய்தும் நிறைவேற்றினார்கள்.

ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு துல்ஹிஜ்ஜா மாதம் நபியவர்களின் காலில் காயம் ஏற்பட்டபோது பல நேரத் தொழுகையை தங்கள் வீட்டில் அமர்ந்தே தொழுதார்கள். அச்சமயம் நாற்காலி அவர்களிடம் இருந்தது.(முஸ்லிம் 876)

நபியவர்களின் வீடு மஸ்ஜித்தின் அருகில் இருந்தும் கூட நோயின் காரணமாக தொழுகைகளை வீட்டிலேயே நிறைவேற்றினார்கள்.

இவ்வாறே எவரேனும் பூமியில் அமர்ந்து தொழ முற்றிலும் சக்தியற்றவராக இருந்தால் அவர் வீட்டிலேயே அமர்ந்து தொழுது கொள்ளட்டும். (மஜ்ம உஜ்ஜவாயித் வமன்பவுல் ஃபவாயித்(2/149, அல் முஃஜமுல் அவ்ஸத் 3/28, முஸ்னத் அபியஃலா அல்மவ்ஸலி7/42)

நமது மறுப்பு

சிந்திக்கும் வழிமுறை ஜமாஅதுல் உலமாவுக்கு இல்லை என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தரையில் உட்கார்ந்து தொழுதார்கள் என்று ஹதீஸ் வந்தால் அப்படி உட்கார்ந்து தொழலாம் என்று தான் சட்டம் எடுக்க முடியும். நாற்காலியில் உட்காரக் கூடாது என்று சட்டம் எடுக்க முடியது.

நாற்காலியில் உட்காருதல் என்பது தரையில் உட்கார்ந்து தொழ முடியாதவர்களுக்கான சலுகையாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தரையில் உட்கார முடியாமல் நாற்காலியில் உட்காரும் நிலையில் இருந்தும் தரையில் உட்கார்ந்து தொழுதார்கள் என்று ஹதீஸ் இருந்தால் தான் அதை ஆதாரமாகக் காட்ட முடியும்.

தரையில் உட்கார்ந்து தொழக் கூடாது என்று யாராவது வாதிட்டால் அவர்களுக்கு மறுப்பாக இதை எடுத்துக் காட்டலாம்.

தரையில் உட்கார முடியாவிட்டாலும் தரையில் உட்கார வேண்டும் என்பதற்கு இது எப்படி ஆதாரமாக ஆகும்?

ஒரு முடிவை முன்னரே எடுத்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப ஹதீஸ்களை வளைப்பது தான் மத்ஹபுகளில் உள்ள பிரதான நோய்,. அந்த நோய் தான் இங்கே வெளிப்பட்டுள்ளது.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நோயாளியை நலம் விசாரிக்க சென்றார்கள். அவர் தலையனையின் மீது ஸஜ்தா செய்து தொழுது கொண்டிருப்பதை கண்ட நபியவர்கள் அதை தூக்கி எறிந்து விட்டார்கள். அவர் ஸஜ்தா செய்ய ஒரு குச்சியை எடுத்தார். அதையும் எறிந்து விட்டார்கள். பிறகு கூறினார்கள். உங்களால் முடிந்தால் பூமியில் ஸஜ்தா செய்து தொழுங்கள் இல்லையானால் சைகை செய்தால் போதுமானது. (ஸுனனுஸ் ஸஙீர் லில் பைஹகீ 118/1,ஹுல்யதுல் அவ்லியாவதபகாதுல்அஸ்ஃபியா92/7)

நமது மறுப்பு

ஒரு ஹதீஸை ஆதாரமாக எடுத்துக்காட்டி வாதம் செய்தால் அந்த ஹதீஸ் சரியானதா என்பதை உறுதி செய்து விட்டு வாதம் செய்ய வேண்டும். இவர்கள் எடுத்துக்காட்டிய ஹதீஸ் பலவீனமானது. இந்தக் கருத்தில் உள்ள எல்லா ஹதீஸ்களும் பலவீனமானவையாகும்.

ஹதீஸ் ஒன்று

السنن الكبرى للبيهقي (2/ 434)

3669 - أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ بِشْرَانَ بِبَغْدَادَ أنبأ أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ الْبَخْتَرِيِّ الرَّزَّازُ ثنا يَحْيَى بْنُ جَعْفَرٍ ح وَأَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ بْنِ إِبْرَاهِيمَ الْهَاشِمِيُّ بِبَغْدَادَ أنبأ أَبُو عَمْرِو بْنُ السَّمَّاكِ، ثنا أَبُو بَكْرٍ [ص:435] يَحْيَى بْنُ أَبِي طَالِبٍ ثنا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَادَ مَرِيضًا فَرَآهُ يُصَلِّي عَلَى وِسَادَةٍ فَأَخَذَهَا فَرَمَى بِهَا، فَأَخَذَ عُودًا لِيُصَلِّيَ عَلَيْهِ فَأَخَذَهُ فَرَمَى بِهِ وَقَالَ: " صَلِّ عَلَى الْأَرْضِ إِنِ اسْتَطَعْتَ وَإِلَّا فَأَوْمِ إِيمَاءً وَاجْعَلْ سُجُودَكَ أَخْفَضَ مِنْ رُكُوعِكَ وَكَذَلِكَ رَوَاهُ مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ الْبَحْرَانِيُّ، عَنْ أَبِي بَكْرٍ الْحَنَفِيِّ وَهَذَا الْحَدِيثُ يُعَدُّ فِي إِفْرَادِ أَبِي بَكْرٍ الْحَنَفِيِّ، عَنِ الثَّوْرِيِّ

இந்த ஹதீஸை ஜாபிர் கூறியதாக அபுஸ்ஸுபைர் அறிவிக்கிறார். இவர் தத்லீஸ் செய்பவர் ஆவார். இந்த ஹதீஸிலும் ஜாபிர் வழியாக என்று தான் கூறப்பட்டுள்ளது. ஜாபிரிடம் நான் கேட்டேன் என்று கூறப்படவில்லை. எனவே இது ஆதாரமாக ஆகாது.

தத்லீஸ் பற்றி அறிய தத்லீஸ் என்றால் என்ன என்ற ஆக்கத்தைப் பார்க்கவும்.

ஹதீஸ் இரண்டு

المعجم الكبير للطبراني

12906 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بن أَحْمَدَ بن حَنْبَلٍ , حَدَّثَنِي شَبَابٌ الْعُصْفُرِيُّ , حَدَّثَنَا سَهْلٌ أَبُو عَتَّابٍ , حَدَّثَنَا حَفْصُ بن سُلَيْمَانَ , عَنْ قَيْسِ بن مُسْلِمٍ , عَنْ طَارِقِ بن شِهَابٍ , عَنِ ابْنِ عُمَرَ , قَالَ: عَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلا مِنْ أَصْحَابِهِ مَرِيضًا , وَأَنَا مَعَهُ , فَدَخَلَ عَلَيْهِ وَهُوَ يُصَلِّي عَلَى عُودٍ , فَوَضَعَ جَبْهَتَهُ عَلَى الْعُودِ , فَأَوْمَأَ إِلَيْهِ فَطَرَحَ الْعُودَ وَأَخَذَ وِسَادَةً , فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:دَعْهَا عَنْكَ إِنِ اسْتَطَعْتَ أَنْ تَسْجُدَ عَلَى الأَرْضِ , وَإِلا فَأَوْمِئْ إِيمَاءً , وَاجْعَلْ سُجُودَكَ أَخْفَضَ مِنْ رُكُوعِكِ.

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள ஹஃப்ஸ் பின் சுலைமான் இட்டுக்கட்டுபவர் என சந்தேகிக்கப்பட்டவர் ஆவார். இதுவும் ஆதாரமாக ஆகாது.

ஹதீஸ் மூன்று

مسند أبي يعلى الموصلي (3/ 345)

1811 - حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ، حَدَّثَنَا حَفْصُ بْنُ أَبِي دَاوُدَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَطَاءِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: عَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرِيضًا وَأَنَا مَعَهُ فَرَآهُ يُصَلِّي وَيَسْجُدُ عَلَى وِسَادَةٍ فَنَهَاهُ، وَقَالَ: «إِنِ اسْتَطَعْتَ أَنْ تَسْجُدَ عَلَى الْأَرْضِ فَاسْجُدْ، وَإِلَّا فَأَوْمِئْ إِيمَاءً، وَاجْعَلِ السُّجُودَ أَخْفَضَ مِنَ الرُّكُوعِ»

[حكم حسين سليم أسد] : إسناده ضعيف جدا

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள ஹஃப்ஸ் பின் அபீ தாவூத் இட்டுக்கட்டுபவரென சந்தேகிக்கப்பட்டவர் ஆவார்.

அவரது ஆசிரியரான மற்றொரு அறிவிப்பாளர் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பலவீனமானவர் ஆவார்.

இதையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.

ஒரு வாதத்துக்கு இது ஆதாரப்பூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும் இது நாற்காலியில் தொழக் கூடாது என்ற கருத்தைத் தரவில்லை. தரையில் ஸஜ்தா செய்ய முடியாவிட்டால் சைகை மூலம் ஸஜ்தா செய்ய வேண்டும் என்ற கருத்து தான் இதில் உள்ளது. தரையில் அமர்ந்து சைகை மூலம் ஸஜ்தா செய்வது போலவே நாற்காலியில் அமர்ந்தும் சைகை மூலம் ஸஜ்தா செய்யலாம்.

சம்மந்தமில்லாத ஹதீஸ்களை அதுவும் பலவீனமான ஹதீஸ்களைப் பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி தவறான ஃபத்வா கொடுத்துள்ளனர்.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

ஹஜ்ரத் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நோயாளியை சந்திக்க சென்றோம் அவர் தலையனை மீது ஸஜ்தா செய்து தொழுது கொண்டிருப்பதை கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைப் பார்த்து கூறினார்கள் உங்களால் முடிந்தால் பூமியின் மீது ஸஜ்தா செய்யுங்கள் இல்லை எனில் சைகை செய்தால் போதுமானது.

உங்கள் ருகூவை காட்டிலும் ஸஜ்தாவிற்கு அதிகமாக குனிந்து தொழுங்கள்.

மேற்கண்ட மூன்று ஹதீஸ்களிலும் நபியவர்கள் பூமியின் மீது அமர்ந்து தொழுகையை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டார்கள். (முஸ்னத் அபியஃலா 3/345, அல் முதாலிபுல் ஆலியா 4/300,ம ஆரிஃபதுஸ்ஸுன் வல்ஆஸார்3/224)

எனவே நாற்காலியில் அமர்ந்து தொழுவது தொழுகையின் அடிப்படை நோக்கத்திற்கு மாற்றமானதாகும்.

நமது மறுப்பு

மேற்கண்ட ஹதீஸுக்கும் ஐந்தாவது மறுப்பில் பதில் அளித்துள்ளோம். இதில் அபுஸ்ஸுபைர் இடம் பெறுகிறார். அவர் தத்லீஸ் செய்பவர். மேலும் இது ஸஜ்தாவின் போது சைகையால் ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதற்குத் தான் ஆதாரமாக உள்ளது. நாற்காலியில் தொழக் கூடாது என்பதற்கு ஆதாரமாகாது

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

அன்று முதல் இன்று வரை உலமாக்கள் நாற்காலிகளை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நாற்காலியில் அமர்ந்து தொழுவது ஏதேனும் ஒரு வகையில் ஆகும் என்றிருந்தால் நிச்சயமாக அதைப் பற்றி கூறியிருப்பார்கள். ஆனால் அதைப் பற்றி எங்கும் உலமாக்கள் குறிப்பிடாமல் இருப்பது, நாற்காலியில் அமர்ந்து தொழுவது   தொழுகையில் இருக்கவேண்டிய உள்ளச்சம், பணிவு, அடிமைத்தனத்தின் வெளிப்பாடு ஆகிய வற்றிர்கு மாற்றமாக உள்ளது என்ற கருத்து தெளிவாகிறது.

நமது மறுப்பு

மார்க்கத்தில் ஒன்று கூடுமா கூடாதா என்பதை முடிவு செய்ய அல்லாஹ்வின் வேதத்தை ஆதாரமாகக் காட்ட வேண்டும்; அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதலை ஆதாரமாகக் காட்ட வேண்டும். அதில் எந்த ஆதாரமும் இல்லை என்பது முன்னர் நிரூபணமாகி விட்டது.

எனவே தான் உலமாக்கள் இது பற்றி பேசவில்லை என்பதை ஆதாரமாக காட்டுகிறார்கள். இது ஒரு ஆதாரமாக ஆகுமா?

இந்த வாதத்தில் ஜமாஅதுல் உலமா பொய்யர்களாக உள்ளனர்.

நாற்காலி ஆரம்பம் முதலே உலகில் இருந்து வருகின்றது. அப்படி இருந்தும் அது பற்றி உலமக்கள் எதுவும் பேசவில்லை என்று இங்கே எழுதியவ்ர்கள் அடுத்தடுத்து எழுதும் போது இதற்கு மாற்றமாக எழுதியுள்ளனர்.

கிபாயதுல் முஃப்தி, தேவ்பந்த் ஆகிய பத்வாக்களை இவர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். அதில் நாற்காலியில் அமர்ந்து தொழுவது பற்றி பேசப்பட்டுள்ளது. சில நிபந்தனைகளுடன் அப்படி தொழலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

தாம் எழுதும் ஃபத்வாவில் நாற்காலியில் தொழுவது பற்றி பேசப்பட்டிருந்தும், அதுவும் சில வரிகளுக்குப் பின்னாலே பேசப்படிருந்தும் நாற்காலியில் தொழுவது பற்றி உலமாக்கள் எதுவும் பேசவில்லை என்று இவர்கள் எழுதுகிறார்கள் என்றால் இது எதைக் காட்டுகிறது?

இவர்கள் எந்தக் கவனமும் இல்லாமல் ஆய்வும் செய்யாமல் எதையாவது எழுதி முன்னர் எடுத்த முடிவை நியாயப்படுத்தப் பார்க்கிறார்கள் என்பது இதில் தெரிகிறது.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

இம்தாதுல் முஃப்தியீனில் எழுதப்பட்டுள்ளதாவது:

இது போன்ற விஷயங்களில் நிபந்தனைகளோடு கூடும் என்று அனுமதி அளித்தோம் என்றால் நாளடைவில் பொது மக்கள் நிபந்தனைகளை மறந்து விட்டு வெறும் கூடும் என்கிற விஷயத்தை மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். இது அனுபவபூர்னமான விஷயமாகும்.

(இம்தாதுல் முஃப்தியீன், கேள்வி எண்-879)

நமது மறுப்பு

இது கூடும் என்று தீர்ப்பளிப்பதே சரி என்று இவர்களின் உள் மனது சொல்கிறது. ஆனால் அப்படி அனுமதி அளித்தால் நாளடைவில் சதாரணமாக ஆக்கிவிடுவார்கள் என்று அறிவீனமான காரணத்தைச் சொல்கிறார்கள்.

இது நாற்காலியில் அமர்வதற்கு மட்டும் தானா? இயலாதவர்கள் தரையில் அமர்ந்து தொழலாம் என்று பத்வா கொடுக்கிறீர்களே இயன்றவர்களும் தரையில் தொழ ஆரம்பித்து விடுவார்கள் என்பதால் அதைக் கூடாது என்று ஏன் சொல்லவில்லை?

உலக விஷயங்களில் தான் இவர்கள் சொல்வது போல் சில நேரங்களில் ஏற்படலாம். மார்க்க விஷயத்தில் அப்படி நடக்கவே நடக்காது.

தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்யலாம் என்றால் தண்ணீர் கிடைக்கும் போதும் மக்கள் தயம்மம் செய்ய ஆரம்பித்து விட்டார்களா?

இது அறிவுடயோரிடம் எடுபடாத வாதமாகும்.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது என்பதற்கான ஃபத்வாக்கள் :

நாற்காலியில் கால்களை தொங்க விட்டு தொழுவதற்காக அமருவதும் ஸஜ்தா செய்வதற்காக டேபிளின் மீது தலைகுணிவதும் கூடாது. ஆனால் பூமியில் அமர்வதற்கோ, ஸஜ்தா செய்வதற்கோ முற்றிலும் முடியாது என்கிற போது அனுமதி உண்டு. பூமியில் ஸஜ்தா செய்வதற்கு அறவே முடியாத நிலையில் பூமியில் அமர்ந்து ஒரு ஜானை விட உயரமில்லாத ஒரு பொருளின் மீது ஸஜ்தா செய்வது கூடும்.

(ஹஜ்ரத் மொவ்லானா முப்தி கிஃபாயதுல்லாஹ் சாஹிப்-ரஹ்.நூல். கிஃபாயதுல் முஃப்தி3/400) கேள்வி எண் 1393)

நமது மறுப்பு

இந்த பத்வாக்கள் எல்லாம் மார்க்க ஆதாரமாக ஆகாது. இன்றைய உலமாக்கள் தமது ஃபத்வாவுக்கு ஆதாரம் காட்ட கடமைப்பட்டுள்ளது போல் முந்தைய உலமாக்களும் தமது ஃபத்வாக்களுக்கு ஆதாரம் காட்டக் கடமைப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் அவர்களின் பத்வாவையே ஆதாரமாகக் காட்டுவது அறிவீனமாகும்.

அப்படி காட்டும் பத்வா இவர்களின் வாதத்தை ஆதரிக்கிறதா? இல்லவே இல்லை.

இது இவர்களுக்கே எதிரானதாகும். இயலாவிட்டால் நாற்காலியில் தொழலாம் என்று தான் இதில் கூறப்பட்டுள்ளது.

இவர்களின் மதஹபுகளிலேயே இரு கருத்துக்கும் இடம் உள்ள போது எதற்கு ஆதாரம் உள்ளதோ அதைத் தான் ஃபத்வாவாக கொடுக்க வேண்டும். ஆனால் ஆதாரமில்லாத கருத்தை ஃபத்வாவாக அளித்துள்ளனர்.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

ஒரு நாற்காலியில் அமர்ந்து மற்றொரு நாற்காலியின் மீது ஸஜ்தா செய்தால் தொழுகை கூடிவிடும். எனினும் நிபந்தனை என்னவெனில் இரு முழங்கால்களையும் நாற்காலியின் மீது வைக்கவேண்டும்.

அவ்வாறு வைக்கவில்லை எனில் தொழுகை கூடாது. திரும்ப தொழுவது அவசியமாகும். (அஹ்ஸனுல் ஃபத்வா 4/51)

தாருல் உலூம் தேவ்பந்தினுடைய முஃப்திகளின் தீர்ப்பு 

நமது மறுப்பு

நாற்காலியில் அமர்ந்து தொழக்கூடாது என்ற உலமா சபையின் வாதத்துக்கு எதிராகவே இந்த பத்வாவும் அமைந்துள்ளது.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

ஒருவர் தொழுகையில் நிற்க முடியாது ஆனால் பூமியில் அமர்ந்து ஸஜ்தா செய்து தொழுக முடியுமென்றால் அவர் பூமியில் ஸஜ்தா செய்வது அவசியமாகும்.

பூமியில் ஸஜ்தா செய்யாமல் நாற்காலியிலோ அல்லது தரையிலோ அமர்ந்து வெறும் சைகை மூலம் ஸஜ்தா செய்வது கூடாது.

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது. ஏனெனில் முடியாத நிலையில்...

1, பூமியில் அமர்ந்து தொழுவது சுன்னத்தான வழிமுறை ஆகும். இவ்வாறே ஸஹாபாக்களும் அவர்களுக்கு பின் வந்தவர்களும் செய்து வந்துள்ளார்கள்.   ஏறத்தாழ கி.பி.1990-க்கு முன்பு வரை நாற்காலியின் மீது அமர்ந்து தொழகும் முறை காணப்படவில்லை.

நமது மறுப்பு

சமீப காலங்களில் தான் முட்டுக்கால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

உடலுழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால் எல்லா வேலைகளையும் நாற்காலியில் அமர்ந்தே செய்து பழகியதால் முட்டுக்காலை மடக்க முடியாத நிலை தற்காலத்தில் தான் அதிகம். மேலும் குளிரூட்டப்பட்ட அறைகளில் அதிகமாக இருப்பதால் முட்டுக்காலில் ஏற்படும் இறுக்கம் காரணமாகவும் இந்த நிலை ஏற்படுகிறது.

 மலம் கழிக்கக் கூட கால்களைத் தொங்கவிடும் வகையிலான கழிப்பறைகளை உருவாக்கும் அளவுக்கு பாதிப்பு ஏற்படுள்ளது.

இவ்வளவு காலமாக இப்பிரச்சனை இல்லை என்பதைக் காரணம் காட்டி இயலாதவனுக்கு சட்டம் கூறி மார்க்கத்தைக் கடுமையாக்குவது தான் ஆய்வா?

சர்க்கரை நோய் முற்றிப்போனவர்கள் நோன்பை விட்டு விடலாம் என்று சொன்னால் இது வரை யாருக்காவது சர்க்கரை நோய் முற்றி நோன்பை விட்டுள்ளார்களா? இல்லையே? எனவே சர்க்கரை இருந்தாலும் நோன்பு வைத்து செத்துப் போ என்று சொல்வதற்கும் இந்தக் காரணத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

 2, நாற்காலிகளை தேவையின்றி பயன்படுத்துவதால் ஸஃப்ஃபுகளில் இடையூறு ஏற்படுகிறது.   ஆனால் ஹதீஸ்களில் தொழுகையின் ஸஃப்ஃபுகளில் சேர்ந்து நிற்பது பற்றி மிக அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

நமது மறுப்பு

 நாற்காலியில் அமராமல் தரையில் சம்மனமிட்டு அமர்ந்தாலும் இதே இடையூறு ஏற்படுகிறதே?

இருவர் நிற்கும் இடம் ஒருவருக்கு தேவைப்படுகிறதே?

சேர்ந்து நிற்க முடியாத நிலை ஏற்படுகிறதே?

அப்படியானால் தரையில் அமர்ந்தும் தொழக் கூடாது என்று இவர்கள் சொல்வார்களா?

ஜமாஅதுல் உலமாவின் வாதம் 

3, தகுந்த தேவையின்றி நாற்காலிகளை பள்ளியில் கொண்டு வருவதால் மாற்றார்களின் வழிப்பாட்டு தலங்களுக்கு ஒப்பாகிறது.

தீனுடைய காரியத்தில் அன்னியர்களுடன் நாம் ஒபாகுவதை தடுக்கப்பட்டுள்ளது.

நமது மறுப்பு 

மாற்றாருக்கு ஒப்பாகுதல் கூடாது என்பதன் அர்த்தம் கூட இவர்களுக்குப் புரியவில்லை,

நாற்காலி என்பது வசதிக்காக செய்து கொண்ட ஏற்பாடாகும். வணக்கத்துடன் இதற்கு தொடர்பு இல்லை. மாற்றார்கள் சோறு சாப்பிடுவதால் நாம் சோறு சாப்பிடக் கூடாது என்பது போல் இந்த வாதம் அமைந்துள்ளது.

மேலும் கிறித்தவர்களின் வழிபாட்டுத்தலங்களில் வழிபடும் போது முழந்தாளிட்டுத்தான்  வணங்குவார்கள். உரை கேட்கும் போது நாற்காலியில் அமர்வார்கள்.

இந்துக் கோவில்களில் நின்று தாம் கும்பிடுவார்கள்.

இதுவும் பொய்யான காரணமாக உள்ளது.

இவர்கள் வாதப்படி பொதுக்கூட்டம் பயான் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் நாற்காலியில் அமரக் கூடாது என்று ஆகும். அப்படித்தான் ஃப்த்வா கொடுக்கப் போகிறார்களா?

ஜமாஅதுல் உலமாவின் வாதம்  

4, தொழுகை என்பது பணிவு, அடிமைத்தனத்தின் வெளிப்பாடு ஆகும். இந்நிலை நாற்காலியில் அமர்ந்து தொழும்போது தான் பூரணமாக வெளிப்படாது.

நமது மறுப்பு  

இயலாதவர்கள் தமக்கு இயன்ற முறையில் தொழுவது பணிவுக்கு எதிரானதல்ல என்பதை முன்னரே விளக்கி விட்டோம்.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்   

5, ஒரு தொழுகையாளி பூமியை நெருங்கி தன் நெற்றியை வைப்பது தொழுகையில் வேண்டப்படுகிறது. நாற்காலியில் அவை நிறைவேறுவதில்லை.

நமது மறுப்பு

இது சக்தியுள்ளவருக்கான சட்டம். நாம் பேசிக் கொண்டு இருப்பது இயலாதவர்கள் பற்றி.

இதைக் கூட உணராமல் வாயில் வந்ததை விட்டு அடித்துள்ளார்கள்.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

ஸஃபர்20 ஹிஜ்ரி 1432, ஜனவரி மாதம் 20/2011 அன்று மதுரையில் கூடிய தமிழ் நாடு ஜமாஅத் துல் உலமா சபையில் 350 உலமாக்களின் ஒரு மித்த தீர்ப்பு:

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

தங்கடம் உள்ளவர்கள் தரையில் தான் உட்கார்ந்து தான் தொழுக வேண்டும்.

மேற்கூறப்பட்ட குர்ஆன், ஹதீஸ், ஃபத்வாக்களின் மூலம் நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது என்பது தெளிவாகிவிட்டது.

ஒரு முஃமின் எப்பொழுது உட்கார்ந்து தொழுவது கூடும்?

நின்று தொழுவதை விடுவதற்கான காரணம் இருவகைப்படும்.

1, ஹகீகி: அறவே நின்று தொழ முடியாதவர்.

2, ஹிக்மி: அறவே நிற்க முடியாது என்பதல்ல மாறாக அவரால் நிற்க முடியும் ஆனால் நின்றால் கீழே விழுந்தது விடுவார் அல்லது மார்க்கம் எதை தங்கடம் என கூறியுள்ளதோ அந்த அளவிற்கு பலகீனம் ஏற்படுவது.

உதாரணமாக: அனுபவமுள்ள முஸ்லிம் மருத்துவர் நின்று தொழுதால் நோய் அதிகமாகும் (அ) கடுமையான வலி ஏற்படும் (அ) நோய் குணமாக தாமதமாகும்.என கூறியிருந்தால்-அவர் அமர்ந்து தொழுவது கூடும்.

ஆனால் சகித்துக் கொள்ளும் படி வலி இருந்தால் கூடாது.

நோயாளி தொழுகும் முறை.

1, அத்தஹிய்யாதில் அமரும் நிலை தான் சிறந்து.

சம்மணம் போட்டு அமர்வதும், இரண்டு கால்களையும் வெளியே விட்டு பித்தட்டில் அமருவதும் மற்றும் குத்த வைத்து அமருவதும் கூடும்.

2, உட்கார்ந்து தொழும் போது பார்வை மடியில் இருக்க வேண்டும்.

கையைக் கட்டிக்கொள்ள வேண்டும்.

ருகூசெய்யும்போது கையை முட்டுக்காலில் வைக்க வேண்டும்.

நெற்றியை முட்டுக்கால்களுக்கு சமமாக வைக்க வேண்டும்.

பித்தட்டை உயர்த்தக் கூடாது.

மேலும் ஸஜ்தா செய்ய வேண்டும் ஸஜ்தா செய்ய சக்தி இல்லை எனில் ருகூவைவிட ஸஜ்தா வில் தலையை அதிகமாக சாய்க்க வேண்டும்.

ஸஜ்தா செய்யும் போது கையை பூமியின் மீது வைக்க வேண்டும்.

சைகை செய்து தொழுபவரை பின் பற்றி தொழுவது கூடாது.

3, தொழுகையின் மற்ற செயல்களான கிராஅத் ஓதுவது, தஸ்பீஹ் ஹாத் ஓதுவது, நடுநிலையாக   மன ஓர்மையோடு தொழுவது இவையனைத்தும் உடல் ஆரோக்கியம் உள்ளவர் நிறைவேற்றுவது போன்று நிறைவேற்ற வேண்டும்.

மஸ்அலாக்கள்      

1, யாராவது தரையில் அமர்ந்து எழுந்து நிற்பதற்கு சக்தி இல்லை எனில் அவர் கட்டிலில் அமர்ந்து கால்களை மடக்கி தொழவேண்டும்.

2, ஃபஜ்ருடைய சுன்னத் அதிமுக்கியமானதாக இருப்பதால் நிற்க சக்தி உள்ளவர்கள் அதை நின்று தான் தொழுக வேண்டும்.

மற்ற சுன்னத்களை உட்கார்ந்து தொழலாம்.

3, முதல் ரக அத்தை நின்று தொழுதவர் 2வதுரக அத்திற்கு எழ முடியாமல் ஆகிவிட்டால் தரையில் அமர்ந்து தொழுவது கூடும்.

4,ஒருவர் தலையால் சைகை செய்து தொழ முடியாத நிலைக்கு ஆகிவிட்டால் தொழுகை மன்னிக்கப்படும்.

தொகுப்பு:

மௌலானா முஃப்தி அபுல் கலாம் காஸிமி மழாஹிரி.சேலம்.

பொதுச்செயலாளர்-மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா குழு

தொலைபேசி 9443391412

வெளியீடு:

மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா குழு

நமது மறுப்பு

இந்த ஃபத்வா போகிற போக்கில் கொடுக்கப்படவில்லை.  350 உலமாக்கள் கூடி அளித்த ஃபத்வா என்று இந்த ஃப்த்வாவில் குறிப்பிட்டுள்ளனர். 

எத்தனை  அறிஞர்கள் ஃப்த்வா கொடுத்துள்ளனர் என்பதை வைத்து சட்டங்கள் முடிவு செய்யப்படாது. எந்த ஆதாரங்கள் அடிப்படையில் பத்வா கொடுத்துள்ளனர் என்பதை வைத்தே சட்டங்கள் எடுக்கப்படும்.

இந்தஃபத்வாவில் அறியாமையும் மனோ இச்சையும் தான் உள்ளதே தவிர ஆதாரம் எதுவும் இல்லை, ஆய்வும் இல்லை.

உண்மைக்கு முரணான ஊகமும், கற்பனையும் தான் இதில் ஆதாரமாகக் காட்டப்பட்டுள்ளது.

நிற்கவும், தரைய்ல் உட்காரவும் முடியாதவர்கள் நாற்காலியில் அமரக் கூடாது என்பதைச் சொல்லும் ஒரு குர்ஆன் வசனம் கூட இந்த ஃபத்வாவில் இல்லை. இந்தக் கருத்தைச் சொல்லும் ஒரு ஹதீஸ் கூட இந்த ஃபத்வாவில் இல்லை.

இது ஃபத்வாவாக எடுத்துக் கொள்ள தகுதியில்லாத உளறல் என்பதில் சந்தேகம் இல்லை.

நாற்கலியில் அமர்ந்து தொழுவது குறித்து முன்னரும் நாம் பதிலளித்துள்ளோம். அதைக் காண நாற்காலியில் அமர்ந்து தொழலாமா என்ற ஆக்கத்தைப் பார்க்கவும்.

 

More Articles …