அனைவரும் ஒரே நாளில் ஏன் நோன்பை கொண்டாடுவதில்லை
▶️ரமலானில் பெண்கள் ஜமாஅத்தாக தொழலாமா?
ரமலானில் பெண்களாக கூடி ஒரு வீட்டில் ஜமாஅத்தாக இரவு தொழுகை நடத்துகிறார்கள்.இது கூடுமா?
ரமலானில் பெண்களாக கூடி ஒரு வீட்டில் ஜமாஅத்தாக இரவு தொழுகை நடத்துகிறார்கள்.இது கூடுமா?
25:64 வசனத்தில் நல்லடியார்களைப் பற்றிக் கூறும் போது, இறைவனை வணங்கியவர்களாக இரவைக் கழிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. சில நபிமொழிகளில் கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமை, மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். இரவை வணக்கத்தில் கழிப்பவர்கள் இந்த நபிமொழிக்கு மாறுபடுகின்றார்களே! விளக்கவும்.
அவர்கள் தமது இறைவனுக்காக ஸஜ்தாச் செய்தும், நின்றும் இரவைக் கழிப்பார்கள்.
திருக்குர்ஆன் 25:64
பதில்
திருக்குர்ஆனில் ஒரு வசனத்திற்கு இன்னொரு வசனம் விளக்கமாக அமையும். இந்த வசனத்தில் இரவைக் கழிப்பார்கள் என்று பொதுவாகக் கூறப்பட்டிருந்தாலும் இதே கருத்தில் இடம் பெற்றுள்ள வேறு சில வசனங்கள் இரவின் ஒரு பகுதியில் நின்று வணங்குவதைப் பற்றியே குறிப்பிடுகின்றன.
(அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல்வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவ மன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.)
திருக்குர்ஆன் 3:17
இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.
திருக்குர்ஆன் 51:18
இந்த வசனங்களும் நல்லடியார்களைப் பற்றியே கூறுவதால் 26:64 வசனத்திற்கு இவை விளக்கமாக அமைந்துள்ளன. இந்த வசனங்களில் இரவு முழுவதும் வணங்குமாறு இறைவன் கூறவில்லை. இரவின் ஒரு பகுதியில், குறிப்பாக இரவின் கடைசிப் பகுதியில் வணங்குவதைத் தான் சிறப்பித்துக் கூறுகின்றான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரவின் மூன்று பகுதிகளில் மூன்றாவது பகுதியில் வணங்குவதைப் பற்றி மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.
இதை விளங்கிக் கொண்டால் கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமை, மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் குறித்து இடம் பெறும் ஹதீஸ்களுக்கும் இந்த வசனங்களுக்கும் எந்த முரண்பாடும் இல்லை என்பதை விளங்கலாம்.
இந்த இடத்தில் நியாயமான ஒரு சந்தேகம் ஏற்படலாம்.
மார்க்கத்தில் நாமாக விரும்பிச் செய்கின்ற நபில்கள் எனும் உபரியான வணக்கம் இல்லையா? எட்டு ரக்அத்கள் போக எஞ்சியதை உபரி வணக்கம் என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? என்பது தான் அந்தச் சந்தேகம்.
கடமையான நோன்புகள், சுன்னத்தான நோன்புகள் போக ஒருவர் தனக்கு விருப்பம் ஏற்படும் போது உபரியான நோன்பை நோற்கலாம்.
அது போல் கடமையான, சுன்னத்தான தொழுகை போக நாம் விரும்பும் போது உபரியாகத் தொழலாம் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் உபரியான தொழுகைக்கும், கடமையான, சுன்னத்தான தொழுகைக்கும் வேறுபாடுகள் உள்ளன.
கடமையான தொழுகை அல்லது நோன்பு, சுன்னத்தான தொழுகை அல்லது நோன்பு அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரே அளவு கொண்டதாக அமையும்.
உபரியான தொழுகை அல்லது உபரியான நோன்பு என்பது தனிப்பட்ட மனிதன் விரும்பித் தேர்வு செய்வதால் அது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒருவருக்கு நேரம் கிடைத்தால் ஒரு புதன் கிழமை நோன்பு வைப்பார். அந்த நேரத்தில் கோடானு கோடி முஸ்லிம்கள் நோன்பு வைக்க மாட்டார்கள். இன்னொருவர் ஒரு செவ்வாய்க் கிழமை நோன்பு நோற்பார். அந்த நாளில் கோடானு கோடி முஸ்லிம்கள் நோன்பு வைக்க மாட்டார்கள்.
முஹர்ரம் 9, 10ல் நோன்பு நோற்பது சுன்னத் என்றால் உலக முஸ்லிம்கள் அனைவரும் அந்த நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்.
ஒருவர் விரும்பிய தினத்தில் நோன்பு நோற்க அனுமதி உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் அறிஞர்கள் மிஃராஜ் நோன்பு என்பதை மறுக்கின்றனர். இதற்குக் காரணம் இந்தப் பெயரில் முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு நோற்க வேண்டும் என்ற அடிப்படையில் இது கூறப்படுகிறது. எனவே தான் இதை பித்அத் என்கிறோம்.
சுன்னத் என்றால் இஷ்டம் போல் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. நபில் என்றால் ஒரு நாள் இரண்டு ரக்அத்கள் தொழுதவர் மறு நாள் நான்கு ரக்அத்கள் தொழலாம். அதற்கு மறுநாள் அதை விட்டு விடலாம். நபில் என்பது முழுக்க முழுக்க தனித் தனி நபர்களின் விருப்பத்தின் பாற்பட்டதாகும்.
இப்போது தராவீஹ் என்ற பெயரில் தொழும் தொழுகையை எடுத்துக் கொள்வோம். குர்ஆன், நபிவழி ஆதாரமின்றி 20 ரக்அத்கள் என்று தீர்மானித்துக் கொண்டு அதை அனைவர் மீதும் திணிக்கின்றனர். இதுதான் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய, மார்க்கத்தின் கட்டளை எனவும் தவறாக நம்புகின்றனர்.
இவர்கள் தொழும் தராவீஹ் என்பதற்கு உபரியான வணக்கம் என்ற வாதம் பொருந்தாது.
உபரியான வணக்கத்துக்கு இன்னும் சில நிபந்தனைகள் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வணக்கத்தைத் தான் மேலதிகமாக ஒருவர் செய்ய அனுமதி உண்டு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத ஒன்றைச் செயல்படுத்துவது நபில் எனும் உபரியான வணக்கத்தில் சேராது.
உதாரணமாக தராவீஹ் தொழுகையின் நான்கு ரக்அத்களுக்கிடையில் சில திக்ருகளை ஓதுகின்றனர். இந்த திக்ருகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குத் கற்றுத் தரவில்லை. அவர்கள் கற்றுத் தராத ஒன்றை கற்பனையாக உருவாக்கிக் கொண்டு நாங்களாக விருப்பப்பட்டு ஓதுகிறோம் என்று வாதிட்டால் அது ஏற்கப்படாது.
மார்க்கம் வரையறுத்துள்ள எல்லையைக் கடந்து விடாத அளவுக்கு உபரி வணக்கங்கள் இருக்க வேண்டும் என்பது மற்றொரு நிபந்தனை.
صحيح البخاري
1978 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُغِيرَةَ، قَالَ: سَمِعْتُ مُجَاهِدًا، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «صُمْ مِنَ الشَّهْرِ ثَلاَثَةَ أَيَّامٍ»، قَالَ: أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، فَمَا زَالَ حَتَّى قَالَ: «صُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمًا» فَقَالَ: «اقْرَإِ القُرْآنَ فِي كُلِّ شَهْرٍ»، قَالَ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ فَمَا زَالَ، حَتَّى قَالَ: «فِي ثَلاَثٍ»
தினமும் முழுக் குர்ஆனை ஓதி முடிப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தனர். உபரி என்ற பெயரில் இந்த எல்லையை மீறக் கூடாது.
நூல் : புகாரி 1978
உடலுக்கும், மனைவிக்கும், குடும்பத்தாருக்கும் செய்ய வேண்டிய கடமைகளைப் பாதிக்கும் வகையில் உபரியான வணக்கம் இருக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லை வகுத்தனர். இந்த எல்லையை மீறி உபரி வணக்கம் கூடாது.
பார்க்க : புகாரி 1968, 1975, 5199, 6134, 6139
எனவே உபரியான வணக்கத்தின் இலக்கணத்தை அறியாமல் இது போன்ற வாதங்களை எடுத்து வைத்து 20 ரக்அத்களை நியாயப்படுத்த எந்த முகாந்திரமும் இல்லை.
நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?
அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் பதிலாக, விடுபட்ட ஒவ்வொரு நோன்பிற்கும் ஒரு ஏழைக்கு நான் உணவளிக்கிறேன். இஸ்லாத்தில் இது நோன்பிற்கு மாற்றாகக் கருதப்படுமா? விளக்கவும்."
-இலுப்பூர் சங்கரன்பந்தல் நஜ்முன்னிசா
பதில்
அதிகமான முஸ்லிம்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது: அதாவது ஒருவரால் நோய் காரணமாக நோன்பு நோற்க முடியாவிட்டால், விடுபட்ட ஒவ்வொரு நோன்பிற்கும் ஒரு ஏழைக்கு உணவளிப்பதன் மூலம் அதை ஈடு செய்யலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
பல முதியவர்கள் இந்த நம்பிக்கையைப் பின்பற்றி, பரிகாரமாக ஏழைகளுக்குத் தொடர்ந்து உணவளிக்கிறார்கள். செல்வந்தர்களும் இந்த முறையைப் பின்பற்றி, ஒரு மாதம் முழுதும் நோன்பு நோற்கவில்லை என்றால் முப்பது ஏழைகளுக்கு உணவளிக்கிறார்கள். நோன்பு நோற்க முடியாத முதியவர்கள் சார்பாக உணவை விநியோகிப்பதாகக் கூறி சில குழுக்கள் பணம் வசூலிப்பதாகவும் செய்திகள் உள்ளன.
ஆனால் இந்த நடைமுறை உண்மையில் இஸ்லாத்தில் இருக்கிறதா?
2:184 வசனத்தில் ஆரம்பத்தில், நோன்பு நோற்க வசதியுள்ளவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது: அவர்கள் நோன்பு நோற்கலாம் அல்லது அதற்குப் பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம்.
அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது
திருக்குர்ஆன் 2:184
நோன்பு முதன் முதலில் கடமையாக்கப்பட்ட போது இந்த வசனம் அருளப்பட்டது, அப்போது நோன்பு நோற்பது கட்டாயமில்லை. ஒருவர் நோன்பும் நோற்கலாம் அல்லது ஒரு ஏழைக்கு உணவும் அளிக்கலாம்.
பின்னர், வசனம் 2:185 அருளப்பட்டு முந்தைய சட்டத்தை மாற்றியது. ரமலான் மாதத்தை அடையும் (ஆரோக்கியமான) அனைவரும் நோன்பு நோற்பதைக் கட்டாயமாக்கியது. முன்னதாக இருந்த அந்தத் தேர்வு (option) நீக்கப்பட்டது.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்
திருக்குர்ஆன் 2:185
صحيح البخاري
4507 – حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ يَزِيدَ، مَوْلَى سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، عَنْ سَلَمَةَ، قَالَ: " لَمَّا نَزَلَتْ: {وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ} [البقرة: 184]. «كَانَ مَنْ أَرَادَ أَنْ يُفْطِرَ وَيَفْتَدِيَ، حَتَّى نَزَلَتِ الآيَةُ الَّتِي بَعْدَهَا فَنَسَخَتْهَا» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «مَاتَ بُكَيْرٌ، قَبْلَ يَزِيدَ»
ஆரம்ப காலத்தில் நோன்பு நோற்க சக்தி பெற்றிருந்தவர்கள் சில சமயங்களில் அதற்குப் பதிலாக ஏழைகளுக்கு உணவளிப்பதைத் தேர்ந்தெடுத்தனர் என்று விளக்குகிறது. ஆனால் பிந்தைய வசனம் அருளப்பட்ட பிறகு, நோன்பு கட்டாயமாக்கப்பட்டது, நோன்பிற்குப் பதிலாக உணவளிக்கும் முறை நீக்கப்பட்டது
நூல் : புகாரி 4507
எனவே, நோன்பு நோற்க முடியாதவர்கள் அதற்குப் பரிகாரம் கொடுக்க வேண்டும் என்று குர்ஆன் கூறவில்லை. பரிகாரம் கொடுக்கும் முறை ஆரம்பத்தில் நோன்பு நோற்க சக்தி பெற்றவர்களுக்கு மட்டுமே இருந்தது.
ஒருவரால் நோய் அல்லது முதுமை காரணமாக நோன்பு நோற்கவே முடியாது என்றால், நோன்பு நோற்பது அவர் மீது கடமையே அல்ல. கடமை இல்லாத போது, அதற்குப் பரிகாரம் செய்வதும் கடமையில்லை.
உதாரணமாக, உடல் நலக் காரணங்களுக்காக அடிக்கடி சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒரு தீவிர நீரிழிவு நோயாளி நோன்பு நோற்க முடியாது. அத்தகையவர் நோன்பு நோற்கத் தேவையில்லை. அதற்குப் பரிகாரமும் தேவையில்லை. ஒருவரின் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயத்திற்காக அல்லாஹ் ﷻ அவரை கேள்வி கேட்க மாட்டான்.
முதியவர்கள் அல்லது நோயாளிகள் பரிகாரம் வழங்கலாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) ஒரு கருத்தைக் கூறியதாக சில அறிவிப்புகள் உள்ளன. இருப்பினும், இது அவரது தனிப்பட்ட விளக்கமே தவிர, குர்ஆன் வசனத்தால் நேரடியாக ஆதரிக்கப்படவில்லை.
குர்ஆன் அந்தச் சட்டம் மாற்றப்பட்டுவிட்டதை தெளிவாகக் கூறுகிறது, மேலும் நோன்பு நோற்க சக்தி பெற்றவர்களுக்கு மட்டுமே அது கடமை என்கிறது.
எனவே, நோன்பிற்கு மாற்றாக ஏழைகளுக்கு உணவளிப்பது ஒரு சரியான பரிகாரம் ஆகாது. உங்களால் முடிந்தால், நீங்கள் நோன்பு நோற்க வேண்டும். மருத்துவ ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ உங்களால் முடியாவிட்டால், நோன்பு அவசியமில்லை, பரிகாரமும் தேவையில்லை. ஒருவரால் நோன்பு நோற்க முடியுமா இல்லையா என்பதை அவரோ அல்லது ஒரு தகுதி வாய்ந்த மருத்துவரோ மட்டுமே தீர்மானிக்க முடியும்.
உங்களது மனசாட்சியும் மருத்துவ நிலையும் உங்களால் நோன்பு நோற்க முடியாது என்பதை உறுதிப்படுத்தினால், நீங்கள் நோன்பு நோற்கவோ அல்லது பரிகாரம் கொடுக்கவோ தேவையில்லை. உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட எதற்கும் அல்லாஹ் ﷻ உங்களைக் கேள்வி கேட்க மாட்டான்.
நோன்பிற்குப் பதிலாக உணவளிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்குச் சக்தி இருப்பதாக நீங்களே கருதுகிறீர்கள் என்று அர்த்தம், அப்படியானால் விலக்கு அளிக்கும் சட்டம் உங்களுக்குப் பொருந்தாது.
90 - சமுதாயப்பணி செய்வோருக்கு ஜகாத்தில் முன்னுரிமை
89 - ஜகாத்தை ரமலான் மாதம் கொடுப்பதற்கு சிறப்பு உண்டா
87 - எட்டு வகைகளில் ஜகாத் செலவிடப்பட வேண்டும்
86 - சொந்த செலவுகளைக் கழித்து விட்டு ஜகாத் கொடுக்கலாமா?
85 - ஜகாத் வாங்குவது சுயமரியாதைக்கு இழுக்கா?
84 - ஜகாத் பணத்தில் கிணறு வெட்டி கொடுக்கலாமா?