Sidebar

22
Mon, Jun
சமீபத்திய செய்திகள்

அடக்கம் செய்யப்பட்டவர் செருப்போசையைக் கேட்பாரா?

மரணித்தவனின் உடலை அடக்கம் செய்து விட்டு, மக்கள் திரும்பும்போது அவர்களின் செருப்போசையை மரணித்தவர் செவியுறுவார் என்று சில ஹதீஸ்கள் உள்ளன. அதை ஆதாரமாகக் கொண்டு மரணித்தவர்கள் அனைத்தையும் செவியுறுவார்கள் என்று சமாதிவழிபாடு செய்வோர்  வாதிடுகின்றனர்..

இது குறித்து விபரமாகப் பார்ப்போம்.

صحيح البخاري

1374 - حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ حَدَّثَهُمْ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ العَبْدَ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ وَتَوَلَّى عَنْهُ أَصْحَابُهُ، وَإِنَّهُ  لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ، أَتَاهُ مَلَكَانِ فَيُقْعِدَانِهِ، فَيَقُولاَنِ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ لِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَّا المُؤْمِنُ، فَيَقُولُ: أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، فَيُقَالُ لَهُ: انْظُرْ إِلَى مَقْعَدِكَ مِنَ النَّارِ قَدْ أَبْدَلَكَ اللَّهُ بِهِ مَقْعَدًا مِنَ الجَنَّةِ، فَيَرَاهُمَا جَمِيعًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் -பற்றி நீ என்ன கருதிக்கொண்டிருந்தாய்? எனக் கேட்பர். அதற்கு இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சியம் கூறுகின்றேன் என்பார். பிறகு (நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார் ! (நீ நல்லவனாக இருப்பதால்)  அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான் என்று அவரிடம் கூறப்பட்டதும் அவர்  அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பார். நிராகரிப்பவனாகவோ, நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன் என்பான். அப்போது அவனிடம் நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே  (பிடரியில்)  ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.

அறிவிப்பவர் :  அனஸ்  ரலி)

நூல் :  புகாரி  1338, 1374

இந்த ஹதீஸ் கூறுவது என்ன? அடக்கம் செய்ய வந்த மக்கள் அடக்கத் தலத்தில் பல விஷயங்களைப் பேசுவார்கள். அடக்கம் செய்யப்பட்டவர்  குறித்தும் பேசுவார்கள். அடக்கம் செய்யப்பட்டவர்கள் அவற்றைக் கேட்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. செருப்போசையைக் கேட்கும் என்று தான் கூறினார்கள்.

முஸ்லிமில் உள்ள அறிவிப்பில்

صحيح مسلم

71 - (2870) وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ الضَّرِيرُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمَيِّتَ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ، إِنَّهُ لَيَسْمَعُ خَفْقَ نِعَالِهِمْ إِذَا انْصَرَفُوا»،

 அவர்கள் திரும்பிச் செல்லும் போது ஏற்படும் செருப்போசையைக் கேட்பார்கள் 

என்று கூறப்பட்டுள்ளது.

மக்களின் பேச்சுக்களைச்  செவியுறுவார்கள் என்று கூறாமல் செருப்போசையைக் கேட்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. அனைத்தையும் கேட்பார்கள் என்றால் இப்படி கூறமாட்டார்கள்.

உயிருடன் வாழும் ஒரு மனிதர் அனைத்தையும் செவியுறுவார் என்பதை நாம் அறிவோம். உயிருடன் உள்ள ஒருவரைப் பற்றி பேசும் போது செருப்போசையைக் கேட்பார்  என்று சொல்ல மாட்டோம். அனைத்தையும் கேட்பார் என்பதால் இப்படிக் கூறுவது பொருளற்றதாக ஆகும்.

ஆனால் கூர்மையான கேட்கும் திறன் உள்ளவர் என்பதைக் கூற நாம் விரும்பினால் கேட்க சாத்தியக் குறைவானதைக் குறிப்பிடுவோம். ஊசி விழும் சப்தத்தையும் இவர் கேட்பார் என்போம். இடியோசையைக் கேட்பார்  என்று கூறமாட்டோம்.  அப்படிக் கூறினால் அதைத் தவிர வேறு எதையும் செவியுற மாட்டார்  என்று தான் பொருள்.

உயிருடன் உள்ள ஒருவர்  மண்ணுக்குள் சில நிமிடம் புதைக்கப்பட்டால் அவரால் மக்கள் பேசுவதைக் கேட்க முடியாது. ஏனெனில் பேசுவதைக் கேட்க காற்றின் ஊடுறுவல் இருக்க வேண்டும். ஆனால் அருகில் கார் ஓடும் போது எழுப்பும் அதிர்வலைகளை அவர்  கேட்பார்.  பூமிக்குள் காற்று புகாவிட்டாலும் கார்  ஓடும் போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாக அதைக் கேட்க முடியும். அதிர்வுகளைக் கேட்டதால் பேசுவதையும் கேட்பார்கள்  என்ற அர்த்தம்  வராது.

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பதற்குத் தெளிவான ஆதாரங்கள் இருக்கிறது.

அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். ‘எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்’ என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:21

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:14

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.

திருக்குர்ஆன் 46:5

‘நீர் இறந்தோரைச் செவியுறச் செய்ய முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது’

 திருக்குர்ஆன் 30:52

அவ்வாறு இருக்கும் போது பேச்சுக்களைச் செவியுறுவது பற்றிப் பேசாத இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு அனைத்தையும் கேட்பார்கள் என்று அறிவுடையோர்  வாதிட மாட்டார்கள்.

செருப்போசை என்பது எந்தக் கருத்தையும் சொல்லாத வெறும் சப்தமாகும். மனிதர்களின் பேச்சுக்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் சப்தமாகும். மனிதர்களின் பேச்சைக் கேட்பார்கள் என்றால் அதைத் தான் நபியவர்கள்  சொல்லி இருப்பார்கள்.

மேலும் செருப்போசையைக் கேட்பார்கள் என்பது கூட எப்போதும் நடக்கக் கூடியதல்ல. அடக்கம் செய்து விட்டுத் திரும்பும் போது எழும் செருப்போசையைக் கேட்பார்கள் என்று தான் மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் அடக்கம் செய்து விட்டுத் திரும்பும் போது என்று முஸ்லிம் அறிவிப்பில் உள்ளதால் அந்த ஒரு தடவை மட்டும் தான் அதைக் கேட்பார்கள். அடக்கம் செய்து விட்டுத் திரும்பும் போது என்ற சொல்லுக்கு இதுதான் அர்த்தமாகும்.

எப்போதும் செருப்போசையைக் கேட்பார்கள் என்றால் அடக்கம் செய்து விட்டுத் திரும்பும் போது என்று நபியவர்கள் சொல்வார்களா?

நல்லடியார்கள் ஆழ்ந்த உறக்க நிலையில் வைக்கப்படுகிறார்கள் என்ற ஹதீஸையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

. سنن الترمذي ت شاكر (3/ 375)

1071 - حَدَّثَنَا أَبُو سَلَمَةَ يَحْيَى بْنُ خَلَفٍ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ المُفَضَّلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا قُبِرَ المَيِّتُ - أَوْ قَالَ: أَحَدُكُمْ - أَتَاهُ مَلَكَانِ أَسْوَدَانِ أَزْرَقَانِ، يُقَالُ لِأَحَدِهِمَا: الْمُنْكَرُ، وَلِلْآخَرِ: النَّكِيرُ، فَيَقُولَانِ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ؟ فَيَقُولُ: مَا كَانَ يَقُولُ: هُوَ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَيَقُولَانِ: قَدْ كُنَّا نَعْلَمُ أَنَّكَ تَقُولُ هَذَا، ثُمَّ يُفْسَحُ لَهُ فِي قَبْرِهِ سَبْعُونَ ذِرَاعًا فِي سَبْعِينَ، ثُمَّ يُنَوَّرُ لَهُ فِيهِ، ثُمَّ يُقَالُ لَهُ، نَمْ، فَيَقُولُ: أَرْجِعُ إِلَى أَهْلِي فَأُخْبِرُهُمْ، فَيَقُولَانِ: نَمْ كَنَوْمَةِ العَرُوسِ الَّذِي لَا يُوقِظُهُ إِلَّا أَحَبُّ أَهْلِهِ إِلَيْهِ، حَتَّى يَبْعَثَهُ اللَّهُ مِنْ مَضْجَعِهِ ذَلِكَ، وَإِنْ كَانَ مُنَافِقًا قَالَ: سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ، فَقُلْتُ مِثْلَهُ، لَا أَدْرِي، فَيَقُولَانِ: قَدْ كُنَّا نَعْلَمُ أَنَّكَ تَقُولُ ذَلِكَ، فَيُقَالُ لِلأَرْضِ: التَئِمِي عَلَيْهِ، فَتَلْتَئِمُ عَلَيْهِ، فَتَخْتَلِفُ فِيهَا أَضْلَاعُهُ، فَلَا يَزَالُ فِيهَا مُعَذَّبًا حَتَّى يَبْعَثَهُ اللَّهُ مِنْ مَضْجَعِهِ ذَلِكَ

முன்கர் நகீர் கேள்வி கேட்டு முடித்த உடன் “ நெருக்கமானவரை (மனைவியை) தவிர யாரும் எழுப்ப முடியாத புது மணமகன் போல் அல்லாஹ் உம்மை இந்த இடத்தில் இருந்து எழுப்பும் வரை தூங்குவீராக என்று வானவர்கள் அவரிடம் சொல்வார்கள்.

நூல் : திர்மிதி

ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்றதால் அவர்களால் எதையும் செவியுற முடியாது என்பது உறுதி.

செருப்போசையைக் கேட்பது அவர்கள் ஆழ்ந்த உறக்கத்துக்குப் போவதற்கு முன் நடப்பதாகும் என்று மேற்கண்ட ஹதீஸில் இருந்தே அறியலாம். அடக்கம் செய்து மக்கள் திரும்பிச் செல்லும் ஓசையைச் செவியேற்ற பின்னர் தான் முன்கர் நகீர் எனும் வானவர்கள் விசாரணையை ஆரம்பிக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்த விசாரணைக்குப் பின்னர் தான் அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் வைக்கப்படுகிறார்கள்.

அடக்கம் செய்ததற்கும், வானவர்கள் விசாரணையைத் துவக்குவதற்கும் இடைப்பட்ட குறுகிய நேரத்தில் தான் செருப்போசையைச் செவியேற்கிறார்கள். இப்படிச் சரியான முறையில் புரிந்து கொண்டால் அனைத்து ஆதாரங்களும் ஒன்றுடன் ஒன்று பொருந்திப் போகிறது.

மேலும் செருப்போசையைக் கேட்பது என்பது நல்லடியார்களுக்கு மட்டும் உரியது அல்ல. மரணிக்கும் அனைவருக்கும் உரியதாகும். காஃபிர்களுக்கும் உரியதாகும்.

இது மகான்களை வழிபடுவதற்கும் ஆதாரமாகாது. அனைத்தையும் செவியுறுகிறார்கள் என்பதற்கும் ஆதாரமாகாது.

13.10.2016. 4:42 AM

ரவ்ளா ஷரீப் வேறு! அடக்கத்தலம் வேறு!

ரவ்ளா என்ற வார்த்தைக்கு பூங்கா என்று பொருளாகும். ஆனால் மார்க்க அறிவு இல்லாத சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ரவ்ளா ஷரீப் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும்போது தம்முடைய கப்ரை - அடக்கத்தலத்தை ரவ்ளா என்று குறிப்பிட வேண்டும் என்று எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை - அடக்கத்தலத்தை ரவ்ளா என்று குறிப்பிடுவதே நபியவர்களின் வழிகாட்டுதலுக்கு எதிரானதாகும்.Unknown Object

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும்போது தம்முடைய வீட்டிற்கும், மஸ்ஜிதுன் நபவீ பள்ளியில் நபியவர்கள் நின்று உரையாற்றும் மிம்பருக்கும் மத்தியிலுள்ள பகுதியைத் தான் ரவ்ளா என்று குறிப்பிட்டார்கள்.

صحيح البخاري

1195 - حدثنا عبد الله بن يوسف، أخبرنا مالك، عن عبد الله بن أبي بكر، عن عباد بن تميم، عن عبد الله بن زيد المازني رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم قال: «ما بين بيتي ومنبري روضة من رياض الجنة»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இல்லத்திற்கும், எனது சொற்பொழிவு மேடைக்கும் இடைப்பட்ட பகுதி சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். எனது சொற்பொழிவு மேடை, எனது ஹவ்ளுல் கவ்ஸர் தடாகத்தின் மீது அமைந்துள்ளது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1196

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுன் நபவியின் ஒரு பகுதியைத்தான் ரவ்ளா (பூங்கா) என்று குறிப்பிட்டுள்ளார்கள். ரவ்ளா என்பதில் நபியவர்களின் வீடு அடங்காது.

மேலும் இது நபியவர்கள் உயிரோடு வாழும்போது கூறிய வார்த்தையாகும். அப்போது நபியவர்களுக்குக் கப்ரு கிடையாது.

நபியவர்கள் அல்லாஹ்வின் ஆலயத்தை ரவ்ளா என்று குறிப்பிட்டுள்ளார்கள். நபிவழிக்கு எதிராக மண்ணறையை ரவ்ளா என்று அறிவீனர்கள் குறிப்பிடுகின்றனர். பள்ளிவாசலைக் குறிக்கும் ரவ்ளா என்ற வார்த்தையை மண்ணறையைக் குறிக்கும் வார்த்தையாக ஆக்கி, மண்ணறையைப் பள்ளிவாசலாக மாற்றுவது தெளிவான யூதக் கலாச்சாரமாகும்.

நபிகள் நாயகத்தின் அடக்கத்தலம் பள்ளிவாசலில் சேருமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் தற்போது பள்ளிவாசலுக்குள் அமைந்திருப்பதையும், அடக்கத்தலத்தின் மேல் குப்பா எனும் குவிமாடம் அமைக்கப்பட்டு உள்ளதையும் தர்காக்கள் கட்டலாம் என்பதற்கு ஆதாரமாகச் சிலர் காட்டுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமாதியைக் கட்டவும், அதன் மேல் கட்டடம் கட்டவும் தடை செய்திருப்பதற்கு தெளிவான சான்றுகள் இருக்கும் போது, அப்படி கட்டினால் இடிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவான கட்டளையிட்டிருக்கும் போது அதற்கு மாற்றமாக மன்னர்கள் செய்த காரியத்தை எப்படி மார்க்க ஆதாரமாகக் கருத முடியும்? இதை அறியாமல் இவ்வாறு வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை அவர்களே எப்படி பள்ளிவாசலில் சேர்த்து இருப்பார்கள்?

தமது அடக்கத்தலத்தின் மீது அவர்களே மாடத்தை எப்படி கட்டி இருப்பார்கள்?

இதைக் கூட சிந்திக்காமல் நபிகள் நாயகத்துடன் சம்மந்தமில்லாத ஒன்றை மார்க்க ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

எனவே இது குறித்த வரலாற்றை நாம் அறிந்து கொள்வது கூடுதல் தெளிவைத் தரும்.

அந்த வரலாறு இதுதான்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்த ஊரைத் துறந்து மதீனாவுக்கு வந்தபோது, எடுத்துச் செல்ல இயலாத சொத்துக்களை மக்காவில் விட்டு விட்டு, எடுத்துச் செல்ல இயன்ற தங்கம், வெள்ளிக் காசுகளை எடுத்துக் கொண்டு மதீனாவுக்கு வந்தனர்.

மதீனாவுக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஒரு பள்ளிவாசலை எழுப்ப முடிவு செய்தார்கள்.

ثُمَّ رَكِبَ رَاحِلَتَهُ، فَسَارَ يَمْشِي مَعَهُ النَّاسُ حَتَّى بَرَكَتْ عِنْدَ مَسْجِدِ الرَّسُولِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ، وَهُوَ يُصَلِّي فِيهِ يَوْمَئِذٍ رِجَالٌ مِنَ المُسْلِمِينَ، وَكَانَ مِرْبَدًا لِلتَّمْرِ، لِسُهَيْلٍ وَسَهْلٍ غُلاَمَيْنِ يَتِيمَيْنِ فِي حَجْرِ أَسْعَدَ بْنِ زُرَارَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ بَرَكَتْ بِهِ رَاحِلَتُهُ: «هَذَا إِنْ شَاءَ اللَّهُ المَنْزِلُ». ثُمَّ دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الغُلاَمَيْنِ فَسَاوَمَهُمَا بِالْمِرْبَدِ، لِيَتَّخِذَهُ مَسْجِدًا، فَقَالاَ: لاَ، بَلْ نَهَبُهُ لَكَ يَا رَسُولَ اللَّهِ، فَأَبَى رَسُولُ اللَّهِ أَنْ يَقْبَلَهُ مِنْهُمَا هِبَةً حَتَّى ابْتَاعَهُ مِنْهُمَا، ثُمَّ بَنَاهُ مَسْجِدًا، وَطَفِقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْقُلُ مَعَهُمُ اللَّبِنَ فِي بُنْيَانِهِ وَيَقُولُ، وَهُوَ يَنْقُلُ اللَّبِنَ: " هَذَا الحِمَالُ لاَ حِمَالَ خَيْبَرْ، هَذَا أَبَرُّ رَبَّنَا وَأَطْهَرْ، وَيَقُولُ: اللَّهُمَّ إِنَّ الأَجْرَ أَجْرُ الآخِرَهْ، فَارْحَمِ الأَنْصَارَ، وَالمُهَاجِرَهْ "

மதீனாவுக்கு வந்தவுடன் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக ஒரு பள்ளிவாசல் தேவை என்பதால் இரண்டு இளைஞர்களுக்குச் சொந்தமான இடத்தை விலைக்குக் கேட்டார்கள். ஆனால் அவ்விருவரும் 'இலவசமாகத் தருவோம்; விலைக்கு விற்க மாட்டோம்' எனக் கூறினார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இலவசமாகப் பெற மறுத்து வற்புறுத்தி தமது சொந்தப் பணத்தில் அந்த இடத்தை விலைக்கு வாங்கினார்கள்.

நூல் : புகாரி 3906

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்தப் பணத்தில் விலை கொடுத்து வாங்கிய அந்த இடத்தில் தான் மதீனாவின் புனிதப் பள்ளிவாசல் இன்றளவும் இருக்கிறது.

தொழுகை நடத்துவதற்காக மட்டும் அந்த இடத்தை அவர்கள் வாங்கவில்லை. ஒரு அரசை நடத்துவதற்குத் தேவையான பல பணிகளைக் கருத்தில் கொண்டே அவ்விடத்தை வாங்கினார்கள்.

தொழுகைக்கான விசாலமான பள்ளிவாசல், மக்காவைத் துறந்து வந்த சுமார் எழுபது பேர் நிரந்தரமாகத் தங்கும் வகையில் வெளிப்பள்ளிவாசல், வீர விளையாட்டுகளுக்காகவும், இராணுவப் பயிற்சிக்காகவும் பள்ளிவாசலுக்கு முன் பரந்த திடல் ஆகிய அனைத்தும் அங்கே அமைக்கப்பட்டன.

பள்ளிவாசலை ஒட்டி தமக்கான வீடுகளையும் அமைத்துக் கொண்டார்கள். பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் தமக்காக அவர்கள் வீடு கட்டிக் கொள்ளவில்லை. மாறாக தம் சொந்தப் பணத்திலிருந்து வாங்கிய இடத்தில் மிகச் சிறிய அளவிலான இடத்தைத் தமக்காக ஒதுக்கிக் கொண்டார்கள்.

இடங்களுக்கு அதிக மதிப்பு இல்லாத அன்றைய காலகட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெரிய நிலப்பரப்பைத் தமக்காக ஒதுக்கி இருக்க முடியும். ஆனால் மிகச் சிறிய அளவிலான இடத்தையே தமது மனைவியருக்காக ஒதுக்கிக் கொண்டார்கள்.

அவர்களின் குடிலின் பரப்பளவு எந்த அளவுடையதாக இருந்தது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறும் பின்வரும் செய்தியில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

صحيح البخاري

382 - حدثنا إسماعيل، قال: حدثني مالك، عن أبي النضر مولى عمر بن عبيد الله، عن أبي سلمة بن عبد الرحمن، عن عائشة زوج النبي صلى الله عليه وسلم، أنها قالت: «كنت أنام بين يدي رسول الله صلى الله عليه وسلم ورجلاي، في قبلته فإذا سجد غمزني، فقبضت رجلي، فإذا قام بسطتهما»، قالت: والبيوت يومئذ ليس فيها مصابيح

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். எனது இரு கால்களையும் அவர்கள் ஸஜ்தாச் செய்யும் இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது விரலால் எனது காலில் குத்துவார்கள். உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்து விட்டு எழுந்து நின்று வணங்கும் போது மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன். இவ்வாறு நடந்ததற்குக் காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்.

நூல் : புகாரி 382, 513, 1209

மனைவி படுத்திருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தொழுவதற்கு இடம் போதவில்லை. மனைவி கால்களை மடக்கிக் கொண்ட பிறகே அவர்களால் தொழ முடிந்துள்ளது என்ற அளவுக்கு சிறிய அறைதான் அவர்களின் வீடாக இருந்தது. ஆயிஷா (ரலி) அவர்களுக்கும், மற்ற மனைவியருக்கும் இது போல் சிறிய அறைகளை ஒதுக்கினார்கள். பள்ளிவாசலின் வலப்புறமாக அவர்களின் வீடுகள் இருந்தன. வீட்டில் இருந்தே பள்ளிவாசலுக்கு வரும் வகையில் பள்ளிவாசல் பக்கம் வாசலும் இருந்தது.

அந்த வீடுகள் பள்ளிவாசலை ஒட்டி இருந்தாலும் அதற்குப் பள்ளிவாசலின் அந்தஸ்தை நபியவர்கள் வழங்கவில்லை. பள்ளிவாசலின் அந்தஸ்தை வழங்கி இருந்தால் அந்த வீடுகளில் மணைவியருடன் அவர்கள் இல்லற வாழ்க்கை நடத்தி இருக்க மாட்டார்கள்.

அவர்கள் வாழ்ந்த காலம் முழுவதும் பள்ளிவாசல் வேறாகவும், அவர்களின் வீடு வேறாகவும் தான் இருந்தது.

இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அவர்கள் மரணித்த போது அவர்களை எங்கே அடக்கம் செய்வது என்ற பிரச்சனை வந்தது. அவர்களின் மனைவியாகிய ஆயிஷா (ரலி) அவர்களின் அறையில் தான் நபியவர்கள் மரணித்தார்கள் என்பதால் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழ்ந்த போதும் அவர்களின் வீடுகள் பள்ளிவாசலுடன் சேர்க்கப்படவில்லை. அவர்கள் மரணித்த பின்னர் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட ஆயிஷா (ரலி) அவர்களின் வீடும், மற்ற மனைவியருக்கான வீடுகளும் பள்ளிவாசலுடன் சேர்க்கப்படவில்லை.

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பள்ளிவாசலில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை. அதன் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பள்ளிவாசலை உறுதிப்படுத்தினார்கள். அதன் பின் உஸ்மான் (ரலி) ஆட்சியில் பள்ளிவாசலை விரிவாக்கம் செய்தார்கள். ஆனால் நபிகள் நாயகத்தின் அடக்கத்தலத்தையும், அவர்களின் மனைவியருடைய வீடுகளையும் பள்ளிவாசலுடன் சேர்க்காமல் மற்ற மூன்று திசைகளில் தான் அவர்கள் விரிவாக்கம் செய்தார்கள்.

صحيح البخاري

446 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، قَالَ: حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، أَخْبَرَهُ " أَنَّ المَسْجِدَ كَانَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَبْنِيًّا بِاللَّبِنِ، وَسَقْفُهُ الجَرِيدُ، وَعُمُدُهُ خَشَبُ النَّخْلِ، فَلَمْ يَزِدْ فِيهِ أَبُو بَكْرٍ شَيْئًا، وَزَادَ فِيهِ عُمَرُ: وَبَنَاهُ عَلَى بُنْيَانِهِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّبِنِ وَالجَرِيدِ وَأَعَادَ عُمُدَهُ خَشَبًا، ثُمَّ غَيَّرَهُ عُثْمَانُ فَزَادَ فِيهِ زِيَادَةً كَثِيرَةً: وَبَنَى جِدَارَهُ بِالحِجَارَةِ المَنْقُوشَةِ، وَالقَصَّةِ وَجَعَلَ عُمُدَهُ مِنْ حِجَارَةٍ مَنْقُوشَةٍ وَسَقَفَهُ بِالسَّاجِ "

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மஸ்ஜிதுந்நபவீ பள்ளிவாசல்  செங்கற்கற்களால் கட்டப்பட்டிருந்தன; அதன் மேற்கூரை பேரீச்சை ஓலைகளாலும், அதன் தூண்கள் பேரீச்சை மரங்களாலும் அமைந்திருந்தன. அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) அதில் எந்த விரிவாக்கமும் செய்யவில்லை. உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) அதை விரிவுபடுத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த கட்டட அமைப்பிலேயே செங்கல், பேரீச்சை ஓலை ஆகியவற்றின் மூலமே அதைக் கட்டினார்கள். அதன் தூண்களை முன்போன்றே பேரீச்சை மரங்களால் அமைத்தார்கள்.

பின்னர் (ஆட்சிப் பொறுப்பேற்ற) உஸ்மான் (ரலி) அவர்கள் அதில் மாற்றம் செய்தார்கள். அதில் அநேக விஷயங்களை அதிகப்படுத்தினார்கள். வேலைப்பாடுகள் பொறிக்கப்பட்ட கற்களாலும், சுண்ணாம்புக் காரையாலும் அதன் சுவர்களைக் கட்டினார்கள். வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கற்களால் அதன் தூண்களை எழுப்பினார்கள். தேக்கு மரத்தால் அதற்கு மேற்கூரை அமைத்தார்கள்.

நூல் : புகாரி 446

இதன் பின்னர் ஹிஜ்ரி எண்பத்தி எட்டாம் ஆண்டில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் பள்ளிவாசலுக்குள் வரும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

 قال العلامة الحافظ محمد بن عبد الهادي في " الصارم المُنْكي " : " وإنما أُدْخِلت الحجرة في المسجد في خلافة الوليد بن عبد الملك بعد موت عامة الصحابة الذين كانوا بالمدينة , وكان آخرهم موتا جابر بن عبد الله , وتوفي في خلافة عبد الملك , فإنه توفي سنة ثمان وسبعين والوليد تولى سنة ست وثمانين , وتوفي سنة ست وتسعين , فكان بناء المسجد وإدخال الحجرة فيه فيما بين ذلك

அனைத்து நபித்தோழர்களும் மரணித்து, ஒரு நபித்தோழர் கூட உயிருடன் வாழாத ஹிஜ்ரி எண்பத்தி எட்டாம் ஆண்டில் வலீத் பின் அப்துல் மலிக் என்பாரின் ஆட்சியில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் பள்ளிவாசலுக்குள் கொண்டு வரப்பட்டது. நபித்தோழர்களில் கடைசியாக மரணித்தவர் ஜாபிர் பின் அப்துல்லா ஆவார். இவர்கள் 78 ஆம் ஆண்டு மரணித்தார்கள். அதன் பின்னர் தான் இவ்வாறு செய்யப்பட்டது

ஆதாரம் : இப்னு அப்துல் ஹாதி அவர்களில் அஸ்ஸாரிமுல் முன்கீ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தைப் பள்ளிவாசலுடன் சேர்த்த போது அது அன்றைய ஆட்சியாளருக்கு அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. அன்றைய நல்லறிஞர்கள் அனைவரின் அதிருப்தியை மீறி அதிகாரத்தைப் பயன்படுத்தியே சேர்க்கப்பட்டது என்பதற்கும் ஆதாரம் உள்ளது.

البداية والنهاية

 وذكر ابن جرير أنه في شهر ربيع الأول من هذه السنة قدم كتاب الوليد على عمر بن عبد العزيز يأمره بهدم المسجد النبوي وإضافة حجر أزواج رسول الله ( ص ) وأن يوسعه من قبلته وسائر نواحيه حتى يكون مائتي ذراع في مائتي ذراع فمن باعك ملكه فاشتره منه وإلا فقومه له قيمة عدل ثم اهدمه وادفع إليهم أثمان بيوتهم فإن لك في ذلك سلف صدق عمر وعثمان فجمع عمر بن عبد العزيز وجوه الناس والفقهاء العشرة وأهل المدينة وقرأ عليهم كتاب أمير المؤمنين الوليد فشق عليهم ذلك وقالوا هذه حجر قصيرة السقوف وسقوفها من جريد النخل وحيطانها من اللبن وعلى أبوابها المسوح وتركها على حالها أولى لينظر إليها الحجاج والزوار والمسافرون وإلى بيوت النبي ( ص ) فينتفعوا بذلك ويعتبروا به ويكون ذلك أدعى لهم إلى الزهد في الدنيا فلا يعمرون فيها إلا بقدر الحاجة وهو ما يستر ويكن ويعرفون أن هذا البنيان العالي إنما هو من أفعال الفراعنة والأكاسرة وكل طويل الأمل راغب في الدنيا وفي الخلود فيها فعند ذلك كتب عمر بن عبد العزيز إلى الوليد بما أجمع عليه الفقهاء العشرة المتقدم ذكرهم فأرسل إليه يأمره بالخراب وبناء المسجد على ما ذكر وأن يعلى سقوفه فلم يجد عمر بدا من هدمها ولما شرعوا في الهدم صاح الأشراف ووجوه الناس من بني هاشم وغيرهم وتباكوا مثل يوم مات النبي ( ص وأجاب من له ملك متاخم للمسجد للبيع فاشترى منهم وشرع في بنائه وشمر عن إزاره واجتهد في ذلك وأرسل الوليد إليه فعولا كثيرة فأدخل فيه الحجرة النبوية حجرة عائشة فدخل القبر في المسجد وكانت حده من الشرق وسائر حجر أمهات المؤمنين كما أمر الوليد وروينا أنهم لما حفروا الحائط الشرقي من حجرة عائشة بدت لهم قدم فخشوا أن تكون قدم النبي ( ص ) حتى تحققوا أنها قدم عمر رضي الله عنه ويحكى أن سعيد بن المسيب أنكر إدخال حجرة عائشة في المسجد كأنه خشي أن يتخذ القبر مسجدا والله أعلم

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் பள்ளிவாசலுடன் சேர்க்கப்பட்ட போது அன்று இருந்த நன்மக்கள் ஆட்சேபணை செய்தனர். நபியின் வீடு பேரீச்சை ஓலையால் வேயப்பட்டுள்ளதையும், குறைந்த உயரத்தில் அந்த வீடு அமைந்து இருப்பதையும், அதன் சுற்றுச் சுவர் செங்கற்களால் அமைக்கப்பட்டதையும் பிற்காலத்தவர் பார்த்து நபியின் எளிய வாழ்க்கையை அறிந்து கொள்வார்கள். இதனால் அவர்களும் எளிய வாழ்க்கை வாழ முன்மாதிரியாக ஆக்கிக் கொள்வார்கள். பிர்அவ்ன் மற்றும் கொடுங்கோல் மன்னர்களின் அரண்மனை போல் அலங்காரம் செய்யும் வகையில் பள்ளிவாசலுடன் அதைச் சேர்க்க வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தனர். அந்த மறுப்பை மீறி பள்ளிவாசலுடன் அடக்கத்தலம் சேர்க்கப்பட்ட போது நபியவர்கள் மரணித்த போது நபித்தோழர்கள் அழுதது போல் அன்றைய நன்மக்களும் அறிஞர்களும் அழுதார்கள். 

ஹிஜ்ரி 200களில் வாழ்ந்த இமாம் இப்னு ஜரீர் அவர்கள் இதைக் குறிப்பிடுகிறார்கள். இமாம் இப்னு ஜரீர் அவர்களின் இந்தக் கூற்றை இப்னு கஸீர் அவர்களும் தமது அல்பிதாயா வன்னிஹாயா என்ற நூலில் எடுத்துக் காட்டுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் பள்ளிவாசலுடன் சேர்க்கப்படக் கூடாது என்று ஒட்டு மொத்த நல்லறிஞர்களும் போராடிய பிறகும் ஆட்சியாளர்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி பள்ளிவாசலுடன் சேர்த்தார்கள். இதைக் கண்டு நல்லறிஞர்கள் கண்ணீர் விட்டு கதறத்தான் முடிந்தது.

இதன் பிறகும் இந்தச் செயலை மார்க்க ஆதாரமாகக் கொள்ள முடியுமா?

அடுத்து பள்ளிக்குள் நபியின் அடக்கத்தலம் சேர்க்கப்பட்டாலும் இப்போது நாம் காணும் பச்சை நிற குப்பா அப்போது கட்டப்படவில்லை. குப்பா இல்லாமல்தான் மூடப்பட்டு இருந்தது.

ஒவ்வொரு ஆட்சியாளரும் நபிகளின் கட்டளையை மீறி, நல்லறிஞர்களின் அறிவுரையைப் புறக்கணித்து யூதர்களின் வழிமுறையைப் பின்பற்றி பலவிதமான அலங்காரங்களைச் செய்யலானார்கள்.

وقال الصنعاني - رحمهُ اللهُ - في " تطهير الاعتقادِ " : " فإن قلت : " هذا قبرُ الرسولِ صلى اللهُ عليه وسلم قد عُمرت عليه قبةٌ عظيمةٌ انفقت فيها الأموالُ قلتُ : " هذا جهلٌ عظيمٌ بحقيقةِ الحالِ فإن هذه القبةَ ليس بناؤها منهُ صلى اللهُ عليه وسلم ، ولا من أصحابهِ ، ولا من تابعيهم ، ولا من تابعِ التابعين ، ولا علماء الأمةِ ‏وأئمة ملتهِ ، بل هذه القبةُ المعمولةُ على قبرهِ صلى اللهُ عليه وسلم من أبنيةِ بعضِ ملوكِ مصر المتأخرين ، وهو قلاوون الصالحي المعروف بالملكِ المنصورِ في سنةِ ‏ثمانٍ وسبعين وست مئة ، ذكرهُ في تحقيقِ النصرةِ بتلخيصِ معالمِ دارِ الهجرةِ ؛ فهذه أمورٌ دولية لا دليليةٌ " .ا.ه

இமாம் சன்ஆனீ அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மண்ணறை மீது அதிகமான பொருளாதாரத்தைச் செலவிட்டு மிகப் பெரிய குவிமாடம் கட்டலாமா? என்று நீ வினவினால் நான் சொல்வேன் : உண்மையில் இது மிகப் பெரிய முட்டாள்தனம். ஏனென்றால் இது நபியவர்களின் கட்டளை காரணமாகவோ, அவர்களின் தோழர்கள் (ஸஹாபாக்கள்) மூலமாகவோ, அவர்களுக்கு அடுத்த காலத்தைச் சார்ந்தவர்கள் (தாபியீன்கள்) மூலமாகவோ, அவர்களின் காலத்தை அடுத்துள்ள காலத்தைச் சார்ந்தவர்கள் (தப்வுத் தாபியீன்கள்) மூலமாகவோ, சமூக உலமாக்கள் அல்லது சமுதாய இமாம்கள் மூலமாகவோ கட்டப்பட்ட கட்டடம் அல்ல. 

பிற்காலத்தில் வந்த எகிப்து மன்னர்களில் ஒருவர் கட்டியதாகும். இக்கட்டடம் ஹிஜ்ரி 678ஆம் ஆண்டு மன்னர் அல்மன்சூர் என்று அறியப்பட்ட கலாவுன் அஸ்ஸாலிஹீ என்பவரால் கட்டப்பட்டது. இது அரசியல் விவகாரம்தான். மார்க்க ஆதாரம் இல்லை

என்று தஹ்கீக் அன்னுஸ்ரா பி தல்ஹீஸ் மஆலிமி தாரில் ஹிஜ்ரா என்ற நூலில் இமாம் சன்ஆனி குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் ஏராளமான அறிஞர்கள் சுல்தான் கலாவூன் என்ற மன்னரின் செயல் மார்க்கத்துக்கு எதிரானது என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து 700 ஆண்டுகளுக்குப் பின்னர் கெட்ட ஆட்சி நடத்திய ஒரு மன்னர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டிய குப்பாவை ஆதாரமாகக் காட்டியே தர்காக்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இது குறித்து செய்த கடுமையான எச்சரிக்கைகள் நமக்கு ஆதாரமா? அவர்களின் கட்டளைக்கு எதிரான ஒரு கேடுகெட்ட மன்னன் செய்தது ஆதாரமா? முஸ்லிம்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மறுமையில் அல்லாஹ் விசாரிக்கும் போது சுல்தான் கலாவூனைப் பின்பற்றி தர்கா கட்டினோம் என்று அல்லாஹ்விடம் சொல்ல முடியுமா?.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ர் உயரமாக இல்லையா

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரும், சில நபித்தோழர்களின் கப்ருகளும் உயரமாக இருந்ததாகக் கூறப்படும் அறிவிப்புகளையும் தர்கா கட்டுவதற்கு ஆதாரமாக சிலர் எடுத்து வைக்கின்றனர்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை பற்றிய அறிவு இல்லாதவர்கள் தான் இதுபோன்ற வாதங்களை எடுத்து வைக்க முடியும்.

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 5:3

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே அல்லாஹ்வால் இஸ்லாம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டதால் நபியவர்களின் காலத்துக்குப் பின்னால் இஸ்லாம் என்ற பெயரில் எது நுழைந்திருந்தாலும், அது யாரால் நுழைக்கப்பட்டு இருந்தாலும், எத்தனை ஆண்டுகள் அது சமுதாயத்தில் வழக்கத்தில் இருந்தாலும் அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்மந்தம் இல்லை. அது பித்அத் எனும் வழிகேடாகும்.

صحيح مسلم

4589 - حدثنا أبو جعفر محمد بن الصباح وعبد الله بن عون الهلالى جميعا عن إبراهيم بن سعد قال ابن الصباح حدثنا إبراهيم بن سعد بن إبراهيم بن عبد الرحمن بن عوف حدثنا أبى عن القاسم بن محمد عن عائشة قالت قال رسول الله -صلى الله عليه وسلم- « من أحدث فى أمرنا هذا ما ليس منه فهو رد ».

நமது உத்தரவு இல்லாமல் யாரேனும் ஒரு நல்லறத்தை உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

நூல் : முஸ்லிம் 4590

من عمل عملا ليس عليه أمرنا فهو رد

நமது மார்க்கத்தில் இல்லாததை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல் : புகாரி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்த ஒன்றை அவர்களின் மரணத்திற்குப் பின் யாரேனும் செய்தால் அது ஒருக்காலும் மார்க்க ஆதாரமாக ஆகாது.

நபித்தோழர்கள் காலத்தில் நபிகள் நாயகத்தின் கப்ரு உயரமாக கட்டப்பட்டு இருந்ததா என்றால் அதுவும் உண்மை இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரு உயரமாக இருந்தது என்று வாதிடுவோர் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

صحيح البخاري

حدثنا محمد بن مقاتل، أخبرنا عبد الله، أخبرنا أبو بكر بن عياش، عن سفيان التمار، أنه حدثه: «أنه رأى قبر النبي صلى الله عليه وسلم مسنما»

ஸுஃப்யான் அத்தம்மார் என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை உயரமாகப் பார்த்தார்.

நூல் : புகாரி 1390

நபிகள் நாயகத்தின் கப்ரை உயரமாகப் பார்த்ததாகக் கூறும் ஸுஃப்யான் அத்தம்மார் என்பவர் நபித்தோழர் அல்லர். நபித்தோழர்கள் காலத்துக்குப் பின் அவர் பார்த்தது மார்க்க ஆதாரமாகாது. நபித்தோழர்கள் காலத்தில் அவ்வாறு உயரமாக்கப்பட்டு இருந்தது என்பதற்குக் கூட ஆதாரமாக ஆகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் உயரமாக இருந்ததைப் பார்த்ததாக சுஃப்யான் அத்தம்மார் கூறுவது உண்மையாக இருந்தால் கூட இன்று தர்காக்களில் நாம் காணும் கப்ரைப் போல் இருந்திருக்கும் என்று அதைப் புரிந்து கொள்ளக் கூடாது.

ஏனெனில் இவரது காலத்துக்குப் பின் உமர் பின் அப்துல் அஸீஸ் என்பாரின் காலத்தில் உஸைம் பின் பிஸ்தாம் என்பவர் நபிகள் நாயகத்தின் கப்ரை நான்கு விரல்கடை உயரத்தில் பார்த்ததாகக் கூறுகிறார். அதாவது சுமார் மூன்று இஞ்ச் உயரத்தில் பார்த்துள்ளார்.

السيل الجرار

وأخرج أبو بكر الآجري في صفة قبر النبي صلى الله عليه و سلم عن عثيم بن بسطام المديني قال رأيت قبر النبي صلى الله عليه في إمارة عمر بن عبد العزيز فرأيته مرتفعا نحوا من أربع أصابع

فتح الباري لابن حجر

وقد روى أبو بكر الآجري في كتاب صفة قبر النبي صلى الله عليه وسلم من طريق إسحاق بن عيسى بن بنت داود بن أبي هند عن غنيم بن بسطام المديني قال رأيت قبر النبي صلى الله عليه وسلم في إمارة عمر بن عبد العزيز فرأيته مرتفعا نحوا من أربع أصابع

சுஃப்யான் அத்தம்மார் என்பாரின் காலத்துக்குப் பின்னர் உள்ள காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் மூன்று இஞ்ச் உயரத்தில் இருந்தால் அதற்கு முன்னர் இதே உயரத்திலோ, இதைவிட குறைவான உயரத்திலோ தான் இருந்திருக்கும்.

மேலும் நபிகள் நாயகத்தின் அடக்கத்தலம் மூன்று இஞ்ச் உயரத்துக்கு சுண்ணாம்பு அல்லது காரை பூசப்பட்டு இருந்ததாகக் கூட இதில் கூறப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

கப்ரைக் கண்டு கொள்ள அடையாளம் வைத்தல்

ஒருவரை அடக்கம் செய்த பின் அந்த இடத்துக்குப் போய் ஸியாரத் செய்து துஆ செய்ய வேண்டும் என்று விரும்புவது முஸ்லிம்களின் இயல்பாக உள்ளது. அடக்கம் செய்து சில நாட்கள் இவ்வாறு விரும்புவார்கள். காலாகாலத்துக்கும் அவ்வாறு விரும்ப மாட்டார்கள். இதற்காகக் கப்ரைக் கட்டுவதோ, எழுதுவதோ கூடாது. மாறாக அந்த இடத்தில் ஒரு பாராங்கல்லைப் போட்டு வைத்து அடையாளம் காண அனுமதி உள்ளது.

حدثنا عبد الوهاب بن نجدة ثنا سعيد بن سالم ح وثنا يحيى بن الفضل السجستاني ثنا حاتم يعني ابن إسماعيل بمعناه عن كثير بن زيد المدني عن المطلب قال : لما مات عثمان بن مظعون أخرج بجنازته فدفن فأمر النبي صلى الله عليه و سلم رجلا أن يأتيه بحجر فلم يستطع حمله فقام إليها رسول الله صلى الله عليه و سلم وحسر عن ذراعيه قال كثير قال المطلب قال الذي يخبرني ذلك عن رسول الله صلى الله عليه و سلم قال كأني أنظر إلى بياض ذراعي رسول الله صلى الله عليه و سلم حين حسر عنهما ثم حملها فوضعها عند رأسه وقال " أتعلم بها قبر أخي وأدفن إليه من مات من أهلي " . قال الشيخ الألباني : حسن

உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாறாங்கல்லை தூக்க முடியாமல் தூக்கி வந்து அவரது தலைமாட்டில் வைத்தார்கள். 'எனது சகோதரர் உஸ்மானின் கப்ரை நான் அடையாளம் கண்டு என் குடும்பத்தில் யாரேனும் இறந்தால் இவருக்கு அருகில் அடக்குவதற்காக இந்த அடையாளம்' என்றும் கூறினார்கள்.

நூல்: அபூ தாவூத் 2791

இது கப்ரைக் கட்டக் கூடாது என்பதற்கு மேலும் வலுவான சான்றாகவுள்ளது.

உஸ்மான் பின் மழ்வூன் அவர்களின் அடக்கத்தலத்தை அடையாளம் காண நபியவர்கள் விரும்பிய போதும், அந்த இடத்தில் ஒரு கல்லை எடுத்துப் போட்டார்களே தவிர நிரந்தரமாக இருக்கும் வகையில் சமாதியைக் கட்டவும் இல்லை. எழுதவும் இல்லை; கல்வெட்டு கூட வைக்கவில்லை. எனவே நாம் நினைக்கும் போது அப்புறப்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு பொருளை அடக்கத்தலத்தின் அருகில் அடையாளம் காண்பதற்காக வைத்தால் தவறில்லை.

கப்ரின் மேல் எழுதக் கூடாது

سنن النسائي

2027 - أخبرنا هارون بن إسحاق قال حدثنا حفص عن بن جريج عن سليمان بن موسى وأبي الزبير عن جابر قال : نهى رسول الله صلى الله عليه و سلم أن يبني على القبر أو يزاد عليه أو يجصص زاد سليمان بن موسى أو يكتب عليه - قال الشيخ الألباني : صحيح

சமாதிகள் மீது எழுதுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: அபூதாவூத் 2807

குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காமல் இருப்பது மட்டும் போதாது. அந்த மண்மீது தண்ணீர் தெளித்து இறந்தவரின் பெயரையோ, அவரது புகழையோ எழுதாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் இதன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றனர்.

அடக்கத்தலத்தின் மேல் மீஸான் என்ற பெயரில் கல்வெட்டை ஊன்றி வைக்கும் வழக்கம் சில பகுதிகளில் உள்ளது. சில ஊர்களில் இதற்காக ஜமாஅத் நிர்வாகம் கூடுதல் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு இவ்வாறு கல்வெட்டு வைக்க அனுமதிக்கின்றனர். இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட தடையில் அதுவும் அடங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அடக்கத்தலத்தை கட்டக் கூடாது

سنن النسائي

2027 - أخبرنا هارون بن إسحاق قال حدثنا حفص عن بن جريج عن سليمان بن موسى وأبي الزبير عن جابر قال : نهى رسول الله صلى الله عليه و سلم أن يبني على القبر أو يزاد عليه أو يجصص زاد سليمان بن موسى أو يكتب عليه - قال الشيخ الألباني : صحيح

கப்ருகள் மீது கட்டுவதையும், அதில் அதிகப்படுத்தப்படுவதையும், பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்கள்: நஸயீ 2000, அபூதாவூத் 2807

حدثنا أبو بكر بن أبى شيبة حدثنا حفص بن غياث عن ابن جريج عن أبى الزبير عن جابر قال نهى رسول الله -صلى الله عليه وسلم- أن يجصص القبر وأن يقعد عليه وأن يبنى عليه.

சமாதிகளின் மீது கட்டடம் கட்டுவதையும், அது பூசப்படுவதையும், அதன் மீது உட்கார்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1610

சமாதியில் பூசுவதும் இந்த ஹதீஸில் தெளிவாகத் தடை செய்யப்பட்டுள்ளது. சிமிண்ட், சுண்ணாம்பு போன்றவற்றால் பூசுவதும், சந்தனம் பூசுவதும், வேறு எதனைப் பூசுவதும் குற்றமாகும்.

وحدثنى أبو الطاهر أحمد بن عمرو حدثنا ابن وهب أخبرنى عمرو بن الحارث ح وحدثنى هارون بن سعيد الأيلى حدثنا ابن وهب حدثنى عمرو بن الحارث - فى رواية أبى الطاهر - أن أبا على الهمدانى حدثه - وفى رواية هارون - أن ثمامة بن شفى حدثه قال كنا مع فضالة بن عبيد بأرض الروم برودس فتوفى صاحب لنا فأمر فضالة بن عبيد بقبره فسوى ثم قال سمعت رسول الله -صلى الله عليه وسلم- يأمر بتسويتها.

ஸுமாமா பின் ஷுஃபை அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ரோம் நாட்டிலுள்ள 'ரோடிஸ்' தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அப்போது ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள், அவரது சமாதியைத் தரைமட்டமாக அமைக்கும்படி உத்தரவிட்டார்கள். பின்னர் ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சமாதியைத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்'' என்று சொன்னார்கள்.

நூல் : முஸ்லிம் 1763

சமாதிகள் கட்டப்படக் கூடாது என்பதை இன்னும் உறுதியாக விளக்கும் வகையில் சமாதிகளின் மீது எழுதக் கூடாது என்றும் நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.

More Articles …