Sidebar

19
Fri, Jun
சமீபத்திய செய்திகள்

குறிப்பிட்ட மூன்று நிலைகளில் அமர்ந்துதான் சாப்பிடவேண்டுமா?

25/04/2020 ரமலான் மாத வாட்ஸ் அப் கேள்வி பதில்

உணவு உண்டபின்னர் கை விரல்களை சூப்பி சாப்பிட வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறதா? அதன் நன்மை என்ன?

24/03/2020 ரமலான் மாத வாட்ஸ் அப் கேள்வி பதில்

 முஸ்லிம் நாடுகளில் விற்கப்படும் சிக்கன் ஹலாலா?

துபையில் விற்கப்படும் கோழி இறைச்சி ஹலால் இல்லை என்று ஒரு நண்பர் கூறுகிறார். அது சரியா?

பதில்

ஒரு முஸ்லிம் உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட உயிரினத்தை பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அறுத்தால் அந்த உயிரினம் ஹலலானதாகி விடுகின்றது. அதாவது அதை உண்பது ஆகுமானது.

இந்த ஒழுங்கு முறைகள் பேணப்படாமல் அறுக்கப்பட்ட உயிரினங்களை உண்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

வேறு நாடுகளில் அறுக்கப்பட்ட கோழிகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு துபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்தக் கோழிகள் ஹலாலானவை என்று இந்த பாக்கெட்டுகளின் மீதே போடப்பட்டிருக்கும். துபாய் அரசின் அங்கீகாரம் பெற்றே இவை நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. 

இவை ஹலால் என்று துபாய் அரசாங்கம் சான்று அளிக்கின்றது. இதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கோழிகளை உண்பது தவறல்ல.

இஸ்லாமிய முறைப்படி இவை அறுக்கப்படவில்லை என்று யாரேனும் கூறினால் அதை அவர் நிரூபிக்க வேண்டும். யூகமாகக் கூறாமல் ஆதாரத்துடன் நிரூபித்தால் அப்போது துபாய் அரசின் சாட்சியம் தவறானது என்ற முடிவுக்கு வரலாம். இந்நிலையில் இந்தக் கோழிகளை உண்ணக் கூடாது எனலாம்.  இவ்வாறு நிரூபிக்காத வரை யூகத்தின் அடிப்படையில் இந்தக் கோழிகள் ஹராமானவை என்று முடிவெடுக்கக் கூடாது.

அறுக்கப்பட்ட பிராணி ஹலாலா? ஹராமா? என்பதை நம்மால் நேரில் பார்த்து முடிவு செய்ய முடியாது. இதற்கு ஒரு முஸ்லிம் வழங்கும் சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டே முடிவு செய்ய முடியும். துபாய் ஆட்சியாளர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் இவ்விஷயத்தில் இவர்களுடைய சாட்சியத்தை ஏற்க வேண்டியுள்ளது.

நமக்குத் தெரியாமல் தவறான முறையில் அறுக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது? என்ற சந்தேகம் தேவையற்றது. ஒரு பேச்சுக்கு நமக்குத் தெரியாமல் தவறான முறையில் அறுக்கப்பட்டிருந்தால் அதற்கு நாம் பொறுப்பாளியாக மாட்டோம். இத்தவறைச் செய்து மறைத்தவர்களே அதற்குப் பொறுப்பாளியாவார்கள்.

தவறான முறையில் அறுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்டால் நமது கையால் அறுத்தவற்றைத் தவிர வேறு எந்த இடத்திலும் இறைச்சியை உண்ண முடியாது.

ஒரு முஸ்லிம் அளிக்கும் விருந்தில் இவ்வாறு சந்தேகப்பட்டால் யாருடைய விருந்திலும் கலந்து கொள்ள முடியாது. அண்டை வீட்டுக்காரர் தரும் உணவையும் உண்ண முடியாது. எனவே இது தேவையற்ற சந்தேகம்.

 

பூண்டு வெங்காயம் சாப்பிட்டு பள்ளிக்கு வரலாமா

வெள்ளைப் பூண்டு வெங்காயம் சாப்பிட்டுவிட்டு பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று ஹதீஸ் உள்ளது. இதற்கு என்ன காரணம்?

மவ்லாஷா 

பதில்

இதற்கான காரணத்தை அல்லாஹ்வின் தூதர் அவர்களே நமக்குத் தெளிவுபடுத்தி விட்டனர்.

பூண்டு, வெங்காயம் போன்ற பொருட்கள் அசுத்தமானவையோ, உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ அல்ல. ஆனால் அவற்றை உண்டால் நீண்ட நேரத்திற்கு வாயில் துர்நாற்றம் அடிக்கும். இந்த துர்நாற்றம் பள்ளியில் உள்ள மற்றவர்களுக்கு நோவினை ஏற்படுத்தும்.

தொழுகைக்காகப் பள்ளிக்கு வரும் போது, இது போன்ற நாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது தான் இதற்கான காரணம்.

صحيح البخاري
5452 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو صَفْوَانَ عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي عَطَاءٌ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: زَعَمَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ أَكَلَ ثُومًا أَوْ بَصَلًا فَلْيَعْتَزِلْنَا، أَوْ لِيَعْتَزِلْ مَسْجِدَنَا»

"வெள்ளைப் பூண்டோ, வெங்காயமோ சாப்பிட்டவர் நம்மிடமிருந்து விலகியிருக்கட்டும். அல்லது நம் பள்ளிவாசலிலிருந்து விலகியிருக்கட்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 5452

வெங்காயம் சாப்பிட்டு விட்டு, நம்முடன் தொழ வேண்டாம் என்றும், பள்ளிவாசலுக்கு வர வேண்டாம் என்றும் பல்வேறு ஹதீஸ்களில் கூறப்பட்டாலும், பின்வரும் ஹதீஸில் அதற்கான காரணம் கூறப்பட்டுள்ளது.

صحيح مسلم 
74 - (564) وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الْبَقْلَةِ، الثُّومِ - وقَالَ مَرَّةً: مَنْ أَكَلَ الْبَصَلَ وَالثُّومَ وَالْكُرَّاثَ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا، فَإِنَّ الْمَلَائِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَ "

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று தடை செய்தார்கள். எங்களுக்குத் தேவை மிகைத்து விடவே அவற்றிலிருந்து நாங்கள் சாப்பிட்டு விட்டோம். அப்போது அவர்கள், "துர்வாடையுள்ள இந்தச் செடியிலிருந்து விளைகின்றவற்றைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில் மனிதர்களுக்குத் தொல்லை தருகின்றவை வானவர்களுக்கும் தொல்லை தருகின்றன'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 874

மனிதர்களுக்குத் தொல்லை தருவதால் தான் நபிகள் (ஸல்) அவர்கள், வெங்காயம் சாப்பிட்டு விட்டுப் பள்ளிக்கு வருவதைத் தடை செய்துள்ளார்கள்.

தொழுகை நேரம் அல்லாத மற்ற நேரங்களில் இவற்றைச் சாப்பிட்த் தடையில்லை. இவற்றைச் சாப்பிட்டுவிட்டு துர்வாடை கிளம்பாத அளவுக்கு வாயைத் தூய்மைப்படுத்தி விட்டால் ஜமாஅத்தில் தாராளமாக்க் கலந்து கொள்ளலாம்.

More Articles …