▶️கஅபாவை இப்ராஹிம் நபி கட்டினார்களா? சிதிலமடைந்த பள்ளியை சரி செய்தார்களா?
கஅபாவை இப்ராஹிம் நபி கட்டினார்களா? சிதிலமடைந்த பள்ளியை சரி செய்தார்களா?
உரை:பீ.ஜைனுல் ஆபிதீன்
12/09/21
கஅபாவை இப்ராஹிம் நபி கட்டினார்களா? சிதிலமடைந்த பள்ளியை சரி செய்தார்களா?
உரை:பீ.ஜைனுல் ஆபிதீன்
12/09/21
ஆதம் நபி பேசியது தமிழ் மொழியா?
உரை: பீ.ஜைனுல் ஆபிதீன்
சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்விகள் 29/08/2021
இப்ராஹீம் நபிக்கு எத்தனை மொழிகள் தெரியும்?
இப்ராஹீம் நபிக்கு எத்தனை மொழிகள் தெரியும்? ஒரு மொழிதான் தெரியும் என்றால் தனது மருமகளிடம் எந்த மொழியில் பேசினார்கள்?
அஸ்வர் முஹம்மத்
இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும், மகன் இஸ்மாயீல் அவர்களையும் கஅபாவில் விட்டுவிட்டுத் திரும்பினார்கள். இதன் பிறகு ஜுர்ஹும் குலத்தினர் அங்கே வருகை தந்து தங்குகின்றனர். இவர்களிடமிருந்தே இஸ்மாயீல் (அலை) அவர்கள் அரபு மொழியைக் கற்றுக் கொண்டார்கள் என்று புகாரியின் 3364 ஆவது செய்தி கூறுகின்றது.
இப்ராஹீம் (அலை) அவர்களும் அவரது குடும்பத்தினரும் அரபு அல்லாத வேறுமொழி பேசக் கூடியவர்கள் என்று இச்சம்பவம் கூறுகிறது. அப்படியானால் அரபு மொழி பேசக்கூடிய இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய மனைவியிடம் வேறு மொழி பேசக்கூடிய இப்ராஹீம் (அலை) எவ்வாறு பேசியிருக்க முடியும் என்ற சந்தேகம் உங்களுக்கு எழுகின்றது.
இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ஒரு மொழி மட்டும் தான் தெரியும் என்று எந்தச் செய்தியும் கூறவில்லை. அவர்கள் அரபு மொழியையும் கற்றிருக்கலாம். ஒருவர் இரண்டு மூன்று மொழிகளை அறிந்திருப்பது இன்றைக்கும் சாதாரணமான ஒன்று தான். எனவே இப்ராஹீம் (அலை) அவர்கள் தன் மருமகளிடம் அரபு மொழியில் பேசியிருக்கலாம்.
அல்லது அந்தப் பெண் அரபு மொழியுடன் இப்ராஹீம் (அலை) அவர்களின் மொழியையும் அறிந்திருக்கலாம். இந்த மொழியில் இவ்விருவருக்கும் இடையே உரையாடல் நடந்திருக்கலாம்.
எத்தனையோ பேர் வேறு மொழி பேசுவோரிடம் திருமண சம்மந்தம் செய்கின்றனர். காலப்போக்கில் ஒருவர் மொழியை மற்றவர் கற்றுக் கொள்கின்றனர். அல்லது சைகையில் பேசிக் கொள்வதை சாதாரணமாக நாம் பார்க்கலாம். இது போல் இப்ராஹீம் நபி சம்பவத்தையும் புரிந்து கொண்டால் குழப்பம் இல்லை.
11.04.2011. 14:12 PM
கொலை செய்த மூஸா நபி தண்டிக்கப்படாதது ஏன்?
கொலைக் குற்றத்துக்கு இவ்வுலகில் கிடைக்கும் தண்டனை வேறு; மறுமை தண்டனை வேறு. இவ்வுலகில் இஸ்லாம் கூறும் தண்டனையை அளிப்பதாக இருந்தால் அதற்கு இஸ்லாமிய ஆட்சி இருந்தாக வேண்டும். மூஸா நபி அவர்களால் ஒருவர் கொல்லப்பட்ட போது மூஸா நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கவில்லை. இறைவனின் சட்டத்தின் படி தண்டிக்கும் எந்த அரசாங்கமும் அப்போது இருக்கவில்லை. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் மூஸா நபி செய்தது கொலைக் குற்றத்தில் சேராது. ஏனெனில் கோபத்தில் ஒருவரைத் தாக்குவது தான் அவர்களின் நோக்கம். கொலை செய்வது அவர்களின் நோக்கம் அல்ல. அவர்கள் அடித்த அடி படாத இடத்தில் பட்டதால் தாக்கப்பட்டவர் இறந்தது எதிர்பாராதது.
இஸ்லாமிய அரசு இருந்தால் இதற்காக நட்ட ஈடு தான் கொடுக்க வேண்டும். மரண தண்டனை கொடுக்க முடியாது. நட்ட ஈடு பெற்றுத் தருவதாக இருந்தாலும் அதைச் செயல்படுத்த ஒரு இஸ்லாமிய அரசு இருந்தால் தான் சாத்தியமாகும். அப்படி ஒரு அரசு இல்லாவிட்டால் இந்தத் தண்டனையும் கொடுக்க முடியாது.
தவறுதலாகக் கொலை செய்து அதற்காக மன்னிப்புக் கேட்டால் இறைவன் விரும்பினால் அதை மன்னிப்பான். மூஸா நபியை அல்லாஹ் மன்னித்து விட்டதாகக் குர்ஆன் கூறுகிறது.
அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார். உடனே மூஸா ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. இது ஷைத்தானின் வேலை. அவன் வழி கெடுக்கும் தெளிவான எதிரி என்றார். என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக! என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். . என் இறைவா! நீ எனக்கு அருள் புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன் என்றார்.
திருக்குர்ஆன் 28:15-17
தவறுதலாகவே கொல்லப்பட்டிருந்தாலும் கொல்லப்பட்டவர் மறுமை நாளில் முறையிட்டால் அவருக்கு உரிய நியாயத்தை அல்லாஹ் அவருக்கு வழங்காமல் இருக்க மாட்டான். மூஸா நபியின் சில நன்மைகளை எடுத்து கொல்லப்பட்டவருக்கு இறைவன் கொடுக்கலாம். இதனால் மூஸா நபி போன்றவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாமல் போகலாம். இறைத் தூதர்கள் பார்டரில் பாஸாக மாட்டார்கள். அதிகமான நன்மைகளைச் செய்திருப்பார்கள் என்பதால் அதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் போகலாம்.
18.04.2011. 8:37 AM
ஆதம், ஹவ்வாவுக்கு தொப்புள் உண்டா?
? ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகியோர் எந்த நாட்டில் இறக்கப்பட்டார்கள்?அவர்களுக்குத் தொப்புள் கிடையாது என்று கூறப்படுவது உண்மையா?
எம்.ஏ. ஜின்னாஹ்
பதில் :
ஆதம் (அலை) அவர்கள் எங்கு இறக்கப்பட்டார்கள் என்பது குறித்து நேரடியாக குர்ஆன் ஹதீஸில் எந்தக் குறிப்பும் இல்லை. இது குறித்து ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன. இவற்றில் எதற்குமே ஆதாரம் இல்லை.
ஆனால் முதன் முதலில் அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட ஆலயம் மக்காவில் உள்ள கஃபா தான் என்று அல்குர்ஆன் கூறுகின்றது.
அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.
திருக்குர்ஆன் 3:96
மனித சமுதாயம் இறைவனை வழிபடுவதற்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் கஃபா என்றால் அதை ஏற்படுத்தியவர் ஆதம் (அலை) அவர்களாகத் தான் இருக்க வேண்டும்.
ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதராக இருந்ததால் அவர்கள் வணங்குவதற்காக நிச்சயம் ஓர் ஆலயத்தை நிர்மாணித்திருப்பார்கள். அந்த ஆலயம் மக்காவில் உள்ள கஃபா என்று இறைவன் கூறுகின்றான். எனவே இதை வைத்துப் பார்க்கும் போது ஆதம் (அலை) அவர்களும், அவரது துணைவியாரும் இறக்கப்பட்டது மக்காவில் தான் என்பது தெளிவாகின்றது.
அவ்விருவருக்கும் தொப்புள் உண்டா என்று கேட்டுள்ளீர்கள். தொப்புள் என்பது கருவில் இருக்கும் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் செல்லும் குழாயின் இணைப்பாகவுள்ளது. கருவில் வளரும் குழந்தைக்குத் தான் தொப்புள் கொடி இருக்கும். இறைவனால் நேரடியாக இருவரும் படைக்கப்பட்டதால் தொப்புள் இருக்க முடியாது என்ற லாஜிக்கின் அடிப்படையில் அவ்விருவருக்கும் தொப்புள் கிடையாது என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால் இந்த லாஜிக்கை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் தொப்புள் கொடிக்கு இவர்கள் கூறுகின்ற காரணம் பொருந்தினாலும் அது ஆணுக்கும், பெண்ணுக்கும் கவர்ச்சியை அதிகரிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.
மனிதனை அழகிய வடிவில் படைத்தோம் என்று இறைவன் கூறுவது தொப்புளையும் சேர்த்துத் தான். தொப்புள் இல்லாத ஆணையோ, பெண்ணையோ கற்பனை செய்து பாருங்கள். விகாரமாக இருக்கும். எனவே ஆதம், ஹவ்வா ஆகிய இருவரும் அவ்வாறு இருந்திருந்தால் நிச்சயமாக அது அழகிய வடிவமாக இருக்காது.
தொப்புள் இல்லாமல் இருப்பது தான் அழகிய வடிவம் என்றால் அவ்விருவரின் வழித் தோன்றல்களுக்கு மற்ற தழும்புகள் காலப்போக்கில் மறைவது போல் தொப்புளும் மறைந்து சமமாக ஆகி விடவேண்டும். அவ்வாறு ஆகாமால் வேண்டுமென்றே அல்லாஹ் குறிப்பிட்ட வடிவத்தில் அதை விட்டு வைத்துள்ளான். எனவே தொப்புள் கொடி விஷயத்தில் லாஜிக் பேசி, ஆதம், ஹவ்வாவுக்கு தொப்புள் கிடையாது என்று கூறுவதை ஏற்க முடியாது.
16.12.2014. 19:48 PM
ஆதம் (அலை) சமாதி எங்கே உள்ளது?
இப்னு ஹாஷிம்
பதில்
நம்மில் பலர் தேவையான கேள்விகளை விடுத்து தேவை இல்லாத கேள்விகளைக் கேட்டு பொன்னான நேரத்தை வீணாக்கி வருகின்றனர். அத்தகைய கேள்விகளில் இதுவும் அடங்கும்.
ஆதம் (அலை) அவர்களின் கப்ரு எங்கே இருக்கிறது என்பது குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ கூறப்படவில்லை. இதை அறிந்து கொள்வதில் சமுதாயத்துக்கு எந்த நன்மையும் இல்லை. இதில் நன்மை இருந்தால் அதை அல்லாஹ் சொல்லி இருப்பான்.
இந்த நபி இந்த தேதியில் பிறந்தார்? அவரது மனைவி பெயர் என்ன? எத்தனை பிள்ளைகள்? எப்போது திருமணம் முடித்தார் என்பன போன்றவைகளை அல்லாஹ்வோ, அவன் தூதரோ சொல்லாமல் அறிந்து கொள்ள முடியாது.
மார்க்கத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டிய விஷயங்கள், வணக்க வழிபாடுகள், ஹலால் ஹராம் சட்டங்கள் போன்றவற்றை அறிந்து கொள்வதில் நமக்கு நன்மை உள்ளது. சமாதிகளை அறிந்து கொண்டு நமக்கு ஆகப் போவது ஒன்றும் இல்லை. நீ ஏன் ஆதம் அவர்களின் கப்ரைக் கண்டு பிடிக்கவில்லை என்று அல்லாஹ் கேட்க மாட்டான்.
12.08.2011. 17:48 PM
தவறுதலாக மூஸா நபி கொலை செய்தது நபியாவதற்கு முன்பா?
மூஸா நபிக்கு ஞானம் வந்த பின்னர் தான் ஒருவரை தவறுதலாகக் கொலை செய்ததாக கஸஸ் அத்தியாயத்தில் இருந்து தெரிகிறதே? அப்படியானால் அவர்கள் நபியாக ஆன பின்னர் தான் கொலை செய்தார்களா?
பதில்:
அவர் பருவமடைந்து சீரான நிலையை அடைந்த போது அவருக்கு அதிகாரத்தையும், கல்வியையும் அளித்தோம். நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார். உடனே மூஸா ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. இது ஷைத்தானின் வேலை. அவன் வழி கெடுக்கும் தெளிவான எதிரி என்றார். என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக! என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். என் இறைவா! நீ எனக்கு அருள் புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன் என்றார்.
திருக்குர்ஆன் 28 : 15
20:40, 26:14, 28:15, 28:16, 28:19 ஆகிய வசனங்களில் மூஸா நபியவர்கள் ஒருவரைத் தவறுதலாகக் கொலை செய்த நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட வசனத்தில் அவருக்கு கல்வியையும், ஞானத்தையும் அளித்தோம் என்று கூறி விட்டு கொலை நடந்த சம்பவம் கூறப்பட்டுள்ளதால் அவர் நபியாக ஆன பின்னர் இந்தச் சம்பவம் நடந்ததாக நினைக்க இடம் உள்ளது.
ஆனால் இதே அத்தியாயத்தில் தொடர்ச்சியாகக் கூறப்படுவதைக் கவனித்தால் இதன் பின்னர் தான் இறைவன் அவருடன் உரையாடி அவரை நபியாக நியமித்ததாகக் கூறப்படுகிறது.
எனவே இந்த வசனத்தில் கூறப்படுவது பொதுவாக பருவ வயதை அடைந்து அதன் மூலம் கிடைக்கும் ஞானம் பற்றியே கூறப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
இந்தக் கொலை நடந்த பிறகு மூசா நபி ஊரை விட்டும் வெளியேறி மத்யன் என்ற நகரத்திற்குச் செல்கிறார்கள். அங்குள்ள ஒரு பெண்ணை மணக்கிறார்கள். சில வருடங்கள் கழிகின்றது. இதன் பிறகு ஒரு நாள் மூசா நபி நெருப்பைத் தேடிச் செல்லும் போது அவர்களுக்கு இறைவனிடமிருந்து இறைச்செய்தி வந்து இறைத்தூதராக நியமிக்கப்படுகிறார்கள்.
எனவே மூசா நபி கொலை செய்த நிகழ்வு அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்பு நடந்தவையாகும். மேலும் அவர்கள் கொலை செய்யும் நோக்கத்தில் தாக்கவில்லை என்பது இவ்வசனங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
18.04.2011. 10:32 AM
ஆதம் நபிக்கு இரு மகன்கள் மட்டும் தான் இருந்தார்களா?
சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்விகள் 20/06/2021