Sidebar

18
Thu, Jun
சமீபத்திய செய்திகள்

காய்ச்சல் நரகத்தின் கடும் வெப்பத்தால் உருவானது என்ற ஹதீஸ் சரியா?

உரை: பீ.ஜைனுல் ஆபிதீன்

சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்வி பதில்கள் 10/10/21

 

நபிமார்கள் மரணத்தருவாயில் உலக வாழ்வா மறுமை வாழ்வா என்று அனுமதி கேட்கப்படுமா?

சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்வி பதில்

உரை:பீ.ஜைனுல் ஆபிதீன்

19/09/21

இப்னு ஸய்யாத் பற்றிய ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையா?

இப்னுஸ் ஸய்யாத் என்ற பெயரில் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்துள்ளார் என்பது ஹதீஸ்களில் இருந்து தெரிகிறது.

ஆனால் இப்னு ஸய்யாத் குறித்த செய்திகளில் ஏற்கத்தக்கவையும் மறுக்கத்தக்கவையும் கலந்து காணப்படுகின்றன.

எனவே இப்னுஸ் ஸய்யாத் பற்றிய ஹதீஸ்களில் எவை ஏற்கத்தக்கவை? எவை மறுக்கத்தக்கவை என்பதை இக்கட்டுரையில் விளக்குகிறோம்.

صحيح البخاري

7355 - حَدَّثَنَا حَمَّادُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، قَالَ: رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَحْلِفُ بِاللَّهِ: أَنَّ ابْنَ الصَّائِدِ الدَّجَّالُ، قُلْتُ: تَحْلِفُ بِاللَّهِ؟ قَالَ: «إِنِّي سَمِعْتُ عُمَرَ يَحْلِفُ عَلَى ذَلِكَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يُنْكِرْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

7355 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் இப்னுஸ் ஸய்யாத், தான் தஜ்ஜால் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறியபோது நான் பார்த்தேன். இதை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்கிறீர்களே? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து இதைக் கூறியதை நான் கேட்டேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை மறுக்கவில்லை என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மத் பின் அல்முன்கதிர்

நூல் : புகாரி 7355

صحيح البخاري

6173 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، أَخْبَرَهُ: أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ: انْطَلَقَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ مِنْ أَصْحَابِهِ قِبَلَ ابْنِ صَيَّادٍ، حَتَّى وَجَدَهُ يَلْعَبُ مَعَ الغِلْمَانِ فِي أُطُمِ بَنِي مَغَالَةَ، وَقَدْ قَارَبَ ابْنُ صَيَّادٍ يَوْمَئِذٍ الحُلُمَ، فَلَمْ يَشْعُرْ حَتَّى ضَرَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ظَهْرَهُ بِيَدِهِ، ثُمَّ قَالَ: «أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ» فَنَظَرَ إِلَيْهِ فَقَالَ: أَشْهَدُ أَنَّكَ رَسُولُ الأُمِّيِّينَ، ثُمَّ قَالَ ابْنُ صَيَّادٍ: أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ، فَرَضَّهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: «آمَنْتُ بِاللَّهِ وَرُسُلِهِ» ثُمَّ قَالَ لِابْنِ صَيَّادٍ: «مَاذَا تَرَى» قَالَ: يَأْتِينِي صَادِقٌ وَكَاذِبٌ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُلِّطَ عَلَيْكَ الأَمْرُ» قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي خَبَأْتُ لَكَ خَبِيئًا» قَالَ: هُوَ الدُّخُّ، قَالَ: «اخْسَأْ، فَلَنْ تَعْدُوَ قَدْرَكَ» قَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، أَتَأْذَنُ لِي فِيهِ أَضْرِبْ عُنُقَهُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ يَكُنْ هُوَ لاَ تُسَلَّطُ عَلَيْهِ، وَإِنْ لَمْ يَكُنْ هُوَ فَلاَ خَيْرَ لَكَ فِي قَتْلِهِ»،

6173, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் இப்னுஸ் ஸய்யாதை  நோக்கி நபித் தோழர்கள் சிலருடன் நடந்தார்கள். பனூ மஃகாலா' குலத்தாரின் மாளிகைகளுக்கருகே சிறுவர்களுடன் இப்னு ஸய்யாத் விளையாடிக் கொண்டிருக்கக் கண்டார்கள். -அப்போது இப்னு ஸய்யாத் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்தார்.- நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் அவனது முதுகில் தட்டும் வரை அவன்  உணரவில்லை. பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான் என்று நீ உறுதி கூறுகிறாயா? என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்துவிட்டு இப்னு ஸய்யாத், நீங்கள் (எழுதப் படிக்கத் தெரியாத மக்களான) உம்மீகளின் தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன் என்றான்.

பிறகு இப்னு ஸய்யாத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், நான் அல்லாஹ்வின் தூதன் என்று உறுதி கூறுகின்றீர்களா? என்று  கேட்டான். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனைத் தள்ளிவிட்டு விட்டு, நான் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொண்டேன் என்று கூறினார்கள். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாதிடம், நீ என்ன காண்கிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத் என்னிடம், மெய்யான செய்திகளும், பொய்யான செய்திகளும் வருகின்றன என்று சென்னான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உனக்கு இப்பிரச்சினையில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு, நான் ஒன்றை மனத்தில் மறைத்து வைத்துள்ளேன். (அது என்னவென்று சொல்!) என்று கேட்டார்கள். அது துக் என்று பதிலளித்தான். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூர விலகிப்போ; நீ உன் எல்லையைத் தாண்டி விட முடியாது என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், இவனைக் கொல்ல எனக்கு அனுமதியளிப்பீர்களா? இவனது கழுத்தைக் கொய்து விடுகிறேன் என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இவன் அவனில்லையென்றால் இவனைக் கொல்வதால் உங்களுக்கு நன்மையேதும் இல்லை என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : புகாரி 6173, 1354

صحيح البخاري

6172 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا سَلْمُ بْنُ زَرِيرٍ، سَمِعْتُ أَبَا رَجَاءٍ، سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِابْنِ صَائِدٍ: «قَدْ خَبَأْتُ لَكَ خَبِيئًا، فَمَا هُوَ؟» قَالَ: الدُّخُّ، قَالَ: «اخْسَأْ»

6172, இப்னு ஸய்யாத்  இடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உனக்காக ஒன்றை நான் (மனத்தில்) மறைத்து வைத்துள்ளேன். அது என்ன என்றனர். அவன், அத்துக் (அத்துகான்' எனும் 44ஆவது அத்தியாயம்) என்றான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தூர விலகிப்போ என்றனர்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 6172

صحيح البخاري

6174 - قَالَ سَالِمٌ: فَسَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، يَقُولُ: انْطَلَقَ بَعْدَ ذَلِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُبَيُّ بْنُ كَعْبٍ الأَنْصَارِيُّ، يَؤُمَّانِ النَّخْلَ الَّتِي فِيهَا ابْنُ صَيَّادٍ، حَتَّى إِذَا دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، طَفِقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، وَهُوَ يَخْتِلُ أَنْ يَسْمَعَ مِنْ ابْنِ صَيَّادٍ شَيْئًا قَبْلَ أَنْ يَرَاهُ، وَابْنُ صَيَّادٍ مُضْطَجِعٌ عَلَى فِرَاشِهِ فِي قَطِيفَةٍ لَهُ فِيهَا رَمْرَمَةٌ، أَوْ زَمْزَمَةٌ، فَرَأَتْ أُمُّ ابْنِ صَيَّادٍ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، فَقَالَتْ لِابْنِ صَيَّادٍ: أَيْ صَافِ - وَهُوَ اسْمُهُ - هَذَا مُحَمَّدٌ، فَتَنَاهَى ابْنُ صَيَّادٍ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ تَرَكَتْهُ بَيَّنَ»

6174, அதற்குப் பின் (இன்னொரு முறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் இருந்த பேரீச்சந் தோட்டத்தை நோக்கி நடந்தனர். (தோட்டத்திற்குள்) நுழைந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்து விடுவதற்கு முன்னால் அவனிடமிருந்து அவனது பேச்சு எதையாவது கேட்டுவிட வேண்டுமென்று திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களின் அடிப் பகுதிகளுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு நடக்கலானார்கள். அப்போது இப்னு ஸய்யாத் தனது படுக்கையில் குஞ்சம் வைத்த போர்வைக்குள் எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களின் தண்டுகளுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு வருவதைக் கண்ட இப்னு ஸய்யாதின் தாய் இப்னு ஸய்யாதிடம், ஸாஃபியே!' -இது இப்னு ஸய்யாதின் பெயராகும்-என்றழைத்து, இதோ! முஹம்மது (வருகிறார்) என்று கூறினாள். உடனே இப்னு ஸய்யாத் (சுதாரித்துக் கொண்டு தானிருந்த நிலையிலிருந்து) விலகிக் கொண்டான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவள் அவனை அப்படியே விட்டிருந்தால் அவன் (தனது உண்மை நிலையை) வெளியிட்டிருப்பான் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி 6174, 135, 2638

மேற்கண்ட செய்திகளில் உள்ள விஷயங்களின் சுருக்கம்:

இப்னுஸ் ஸய்யாதை நபிக: நாயகம் (ஸல்) அவர்கள் தஜ்ஜால் என்று கருதியுள்ளார்கள்.

அவன் தஜ்ஜாலா இல்லையா என்ற விபரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனதில் மறைத்த துகான் என்ற சொல்லில் பாதியை அதாவது துக் என்பதை இப்னுஸ் ஸய்யாத கண்டு பிடித்து விட்டதாக இதில் சொல்லப்படுகிறது.

நீங்கள் உம்மிகளுக்கு தூதர் என்று இப்னுஸ் ஸய்யாத் சொன்னபோது அதற்கு மறுப்பு சொல்லாமல் நபிகள் அதை அங்கீகரித்துள்ளதாக இதில் கூறப்படுகிறது.

நான் அல்லாஹ்வின் தூதர் என்று இப்னுஸ் ஸய்யாத் சொன்ன போது அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேற்கண்ட அத்தனை விஷயங்களும் ஏராளமான அடிப்படைகளைத் தகர்க்கும் வகையில் உள்ளன.

இப்னுஸ் ஸய்யாத் தான் தஜ்ஜால் என்று நபிகள் சொல்லி இருபார்களா? அப்படி சந்தேகம் கொண்டு இருப்பார்களா? நிச்சயம் சொல்லி இருக்க மாட்டார்கள்.

இப்னுஸ் ஸய்யாத் தான் தஜ்ஜால் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும்போதே ஈஸா நபி இறங்கி அவரைக் கொன்று இருப்பார்கள்.

صحيح مسلم

فَيَطْلُبُهُ حَتَّى يُدْرِكَهُ بِبَابِ لُدٍّ، فَيَقْتُلُهُ،

ஈஸா நபி அவர்கள் தஜ்ஜாலைத் தேடிச் என்று லுத் நகர் வாசலில் அவனைக் கொல்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

ஈஸா நபியால் கொல்லப்படாமல் இயற்கையாக இப்னுஸ் ஸய்யாத் மரணித்துள்ளதால் அவர் தஜ்ஜால் அல்ல என்பது உறுதியாகிறது.

صحيح البخاري

1879 - حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لاَ يَدْخُلُ المَدِينَةَ رُعْبُ المَسِيحِ الدَّجَّالِ، لَهَا يَوْمَئِذٍ سَبْعَةُ أَبْوَابٍ، عَلَى كُلِّ بَابٍ مَلَكَانِ»

1879, தஜ்ஜாலைப் பற்றிய அச்சம் மதீனாவுக்குள் நுழையாது! அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாசல்கள் இருக்கும்! ஒவ்வொரு வாசலிலும் இரு வானவர்கள் இருப்பார்கள்!

அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி)

நூல் : புகாரி 1879

தஜ்ஜால் மதீனாவுக்கு வர மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த உண்மைக்கு மாற்றமாக இப்னுஸ் ஸய்யாதை தஜ்ஜால் என்ற கூற்று அமைந்துள்ளது.

இப்னுஸ் ஸய்யாத் மதீனாவில் பிறந்து மதீனாவில் வாழ்ந்துள்ளார். இந்த உண்மைக்கு மாற்றமாக மேற்கண்ட ஹதீஸ் அமைந்துள்ளது.

صحيح البخاري

1881 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، حَدَّثَنَا الوَلِيدُ، حَدَّثَنَا أَبُو عَمْرٍو، حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَيْسَ مِنْ بَلَدٍ إِلَّا سَيَطَؤُهُ الدَّجَّالُ، إِلَّا مَكَّةَ، وَالمَدِينَةَ، لَيْسَ لَهُ مِنْ نِقَابِهَا نَقْبٌ، إِلَّا عَلَيْهِ المَلاَئِكَةُ صَافِّينَ يَحْرُسُونَهَا، ثُمَّ تَرْجُفُ المَدِينَةُ بِأَهْلِهَا ثَلاَثَ رَجَفَاتٍ، فَيُخْرِجُ اللَّهُ كُلَّ كَافِرٍ وَمُنَافِقٍ»

1881, மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காவல் புரிந்து கொண்டு இருப்பார்கள். பின்னர் மதீனா, தனது குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றிவிடுவான்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பபர் அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி 1881

தஜ்ஜால் மக்காவுக்குள் நுழைய மாட்டான் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. ஆனால் இப்னுஸ் ஸய்யாத் மக்காவுக்குள் நுழைந்துள்ளதற்கு ஆதார்ம் உள்ளது. அதைப் பின்னர் குறிப்பிடுவோம்.

صحيح البخاري

3057 - وَقَالَ سَالِمٌ، قَالَ ابْنُ عُمَرَ: ثُمَّ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّاسِ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ ذَكَرَ الدَّجَّالَ فَقَالَ: «إِنِّي أُنْذِرُكُمُوهُ وَمَا مِنْ نَبِيٍّ إِلَّا قَدْ أَنْذَرَهُ قَوْمَهُ، لَقَدْ أَنْذَرَهُ نُوحٌ قَوْمَهُ، وَلَكِنْ سَأَقُولُ لَكُمْ فِيهِ قَوْلًا لَمْ يَقُلْهُ نَبِيٌّ لِقَوْمِهِ، تَعْلَمُونَ أَنَّهُ أَعْوَرُ، وَأَنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ»

3057, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்தார்கள்: நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும், அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி 3057

தஜ்ஜால் குறித்து இவ்வளவு தெளிவாக விளக்கியுள்ளனர். தஜ்ஜால் அல்லாத ஒருவரை தஜ்ஜால் என்று அவர்கள் கூறியதாக வரும் செய்திகள் இட்டுக்கட்டப்பட்ட பொய்யாகும்.

மேலும் தஜ்ஜால் செய்யும் பல காரியங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவன் மூலம் வெளிப்படும் அற்புதங்களை சொன்னார்கள். அவன் தன்னைக் கடவுள் என வாதிடுவான் என்று சொன்னார்கள். இப்னுஸ் ஸய்யாதிடம் இதில் எந்த ஒன்றுமே இல்லை. அப்படி இருக்கும் போது இப்னுஸ் ஸய்யாதை தஜ்ஜால் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக அறிவிக்கப்படும் எல்லா செய்திகளும் கட்டுக்கதைகள் தான் என்பதில் ஐயமில்லை.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகில உலகுக்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள்.

قُلْ يَاأَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا إِلَهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ فَآمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ النَّبِيِّ الْأُمِّيِّ الَّذِي يُؤْمِنُ بِاللَّهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ (158)7

மனிதர்களே நான் உங்கள் அனைவருக்கும் அனுப்பட்ட தூதராவேன் என்று நபியே சொல்வீராக (7:158) என்று அல்லாஹ் கூறுகிறான்.

அப்படி இருக்கும் போது நீர் உம்மிகளுக்குத் தான் தூதர் என்று இப்னுஸ் ஸய்யாத சொன்ன போது அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுப்புக் கொடுக்க கடமைப்பட்டுள்ளார்கள். மேற்கண்ட வசனத்தை எடுத்துக் காட்டி நான் முழு மனித குலத்துக்கும் தூதர் என்று சொல்லி இருப்பார்கள். இப்னுஸ் ஸய்யாத சொன்னதை மவுனமாக கேஏட்டுக் கொண்டு இருக்க மாட்டார்கள். எனவே இப்னுஸ் ஸய்யாத் அப்படி கூறி இருக்க முடியாது. அது கட்டுக்கதையாகவே இருக்க முடியும்.

என்னை அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்றுக் கொள்கிறீர்களா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இப்னுஸ் ஸய்யாத் கூறியபோது அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்புஇறேன் என்று நபிகள் சொன்னதாக வருகிறது.

இதுவும் கட்டுக் கதையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறுதி நபி என்று தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

இதற்கான ஆதாரங்களை இறுதி நபி என்ற இந்த லின்கில் காணவும்.

நீ நபி கிடையாது; பொய்யன்; எனக்குப் பின் எந்த நபியும் கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) சொல்வார்களே தவிர அவனை தூதர் என்று நம்புவது போன்ற சொல்லைப் பயன்படுத்த மாட்டார்கள்.

எனவே இப்னுஸ் ஸய்யாத் குறித்த இந்தச் செய்திகள் கட்டுக்கதைகள் என்பது உறுதியாகிறது.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனதின் நினைத்ததை அதில் ஒரு பகுதியை இப்னுஸ் ஸய்யாத் கண்டு பிடித்து விட்டதாக இதில் சொல்லப்பட்டுள்ளது.

உள்ளங்களில் உள்ளதை யாரும் அறிய முடியாது. அது அல்லாஹ்வின் தனிப்பட்ட ஆற்றல் என்று திருக்குர்ஆனின்

3:29, 3:119, 3:154, 5:7, 8:43, 11:5, 27:74, 28:69, 29:10, 31:23, 35:38, 39:7, 40:19, 42:24, 64:4, 67:13 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இதற்கு மாற்றமாக நபிகள் நினைத்ததை இப்னுஸ் ஸய்யாத் கண்டு பிடித்த்தாக சொல்லும் செய்திகள் கட்டுக் கதைகளாகத் தான் இருக்க முடியும்.

மேலும் இப்னுஸ் ஸய்யாத் குறித்த பின்வரும் ஆதாரங்களும் இவை கட்டுக் கதைகள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

صحيح مسلم

5608 حَدَّثَنِي عُبَيْدُ اللهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، حَدَّثَنَا دَاوُدُ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: صَحِبْتُ ابْنَ صَائِدٍ إِلَى مَكَّةَ، فَقَالَ لِي: أَمَا قَدْ لَقِيتُ مِنَ النَّاسِ، يَزْعُمُونَ أَنِّي الدَّجَّالُ، أَلَسْتَ سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّهُ لَا يُولَدُ لَهُ» قَالَ: قُلْتُ: بَلَى، قَالَ: فَقَدْ وُلِدَ لِي، أَوَلَيْسَ سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَا يَدْخُلُ الْمَدِينَةَ وَلَا مَكَّةَ» قُلْتُ: بَلَى، قَالَ: فَقَدْ وُلِدْتُ بِالْمَدِينَةِ، وَهَذَا أَنَا أُرِيدُ مَكَّةَ، قَالَ: ثُمَّ قَالَ لِي فِي آخِرِ قَوْلِهِ: أَمَا، وَاللهِ إِنِّي لَأَعْلَمُ مَوْلِدَهُ وَمَكَانَهُ وَأَيْنَ هُوَ، قَالَ: فَلَبَسَنِي

5608 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு ஸாயிதுடன் மக்கா வரை பயணம் மேற்கொண்டேன். அப்போது அவன் என்னிடம், "நான் மக்களில் சிலரைச் சந்தித்தேன். அவர்கள் என்னை "தஜ்ஜால்' எனக் கருதுகின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தஜ்ஜாலுக்குக் குழந்தை இருக்காது' என்று கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?'' என்று கேட்டான். நான், "ஆம் (கேட்டுள்ளேன்)'' என்றேன். "எனக்குக் குழந்தை உள்ளது'' என்று கூறிவிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தஜ்ஜால் மதீனாவுக்குள்ளும், மக்காவுக்குள்ளும் நுழைய மாட்டான்' என்று கூறியதை நீங்கள் கேட்டதில்லையா?'' என்றான். நான் "ஆம் (கேட்டுள்ளேன்)'' என்றேன். அவன், "நான் மதீனாவில் பிறந்தேன். இதோ நான் மக்காவுக்குச் செல்லப் போகிறேன்'' என்று கூறினான்.

பிறகு இறுதியாக அவன், "அறிந்துகொள்க: அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தஜ்ஜாலின் பிறப்பையும் அவனது வசிப்பிடத்தையும் இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்பதையும் நன்கறிவேன்'' என்று கூறி, என்னைக் குழப்பி விட்டான்.

நூல் : முஸ்லிம் 5608

صحيح مسلم

5609 حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَا: حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ لِي ابْنُ صَائِدٍ: وَأَخَذَتْنِي مِنْهُ ذَمَامَةٌ: هَذَا عَذَرْتُ النَّاسَ، مَا لِي وَلَكُمْ؟ يَا أَصْحَابَ مُحَمَّدٍ أَلَمْ يَقُلْ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُ يَهُودِيٌّ» وَقَدْ أَسْلَمْتُ، قَالَ: «وَلَا يُولَدُ لَهُ» وَقَدْ وُلِدَ لِي، وَقَالَ: «إِنَّ اللهَ قَدْ حَرَّمَ عَلَيْهِ مَكَّةَ» وَقَدْ حَجَجْتُ، قَالَ: فَمَا زَالَ حَتَّى كَادَ أَنْ يَأْخُذَ فِيَّ قَوْلُهُ، قَالَ: فَقَالَ لَهُ: أَمَا، وَاللهِ إِنِّي لَأَعْلَمُ الْآنَ حَيْثُ هُوَ، وَأَعْرِفُ أَبَاهُ وَأُمَّهُ، قَالَ: وَقِيلَ لَهُ: أَيَسُرُّكَ أَنَّكَ ذَاكَ الرَّجُلُ؟ قَالَ فَقَالَ: لَوْ عُرِضَ عَلَيَّ مَا كَرِهْتُ

5609 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

இப்னு ஸாயித் என்னிடம் பேசியபோது, அவனைப் பழிப்பதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது. அவன், பொது மக்களை நான் பொருட்படுத்தவில்லை. (ஆனால்,) முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களே! உங்களுக்கும் எனக்குமிடையே என்ன பிரச்சினை? நபி (ஸல்) அவர்கள், "அவன் (தஜ்ஜால்) யூதன்' என்று சொல்லவில்லையா? ஆனால், நானோ இஸ்லாத்தை ஏற்று விட்டேன்; "அவனுக்குக் குழந்தையேதும் பிறக்காது' என்று நபியவர்கள் சொன்னார்கள். எனக்குக் குழந்தை இருக்கிறது. "அவன் மக்காவுக்குள் நுழைவதை அல்லாஹ் தடை செய்துவிட்டான்' என்று நபியவர்கள் கூறினார்கள். நான் ஹஜ் செய்துவிட்டேன்'' என்று கூறினான்.

இவ்வாறு அவனது சொல் என்னில் ஒரு மதிப்பை உண்டாக்கும் அளவுக்கு அவன் பேசிக் கொண்டேயிருந்தான். பிறகு அவன், "அறிந்து கொள்க: அல்லாஹ்வின் மீதாணையாக! இப்போது அவன் (தஜ்ஜால்) எங்கே இருக்கிறான் என்பதை நான் அறிவேன். அவனுடைய தந்தையையும், தாயையும் நான் அறிவேன்'' என்றான். அவனிடம் "அந்த (தஜ்ஜால் எனும்) மனிதனாக நீ இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறாயா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவன், "அவ்வாறு என்னிடம் கோரப்பட்டால் அதை நான் வெறுக்கமாட்டேன்'' என்றான்.

صحيح مسلم

5610 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا سَالِمُ بْنُ نُوحٍ، أَخْبَرَنِي الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: خَرَجْنَا حُجَّاجًا، أَوْ عُمَّارًا، وَمَعَنَا ابْنُ صَائِدٍ، قَالَ: فَنَزَلْنَا مَنْزِلًا، فَتَفَرَّقَ النَّاسُ وَبَقِيتُ أَنَا وَهُوَ، فَاسْتَوْحَشْتُ مِنْهُ وَحْشَةً شَدِيدَةً مِمَّا يُقَالُ عَلَيْهِ، قَالَ: وَجَاءَ بِمَتَاعِهِ فَوَضَعَهُ مَعَ مَتَاعِي، فَقُلْتُ: إِنَّ الْحَرَّ شَدِيدٌ، فَلَوْ وَضَعْتَهُ تَحْتَ تِلْكَ الشَّجَرَةِ، قَالَ: فَفَعَلَ، قَالَ: فَرُفِعَتْ لَنَا غَنَمٌ، فَانْطَلَقَ فَجَاءَ بِعُسٍّ، فَقَالَ: اشْرَبْ، أَبَا سَعِيدٍ فَقُلْتُ إِنَّ الْحَرَّ شَدِيدٌ وَاللَّبَنُ حَارٌّ، مَا بِي إِلَّا أَنِّي أَكْرَهُ أَنْ أَشْرَبَ عَنْ يَدِهِ - أَوْ قَالَ آخُذَ عَنْ يَدِهِ - فَقَالَ: أَبَا سَعِيدٍ لَقَدْ هَمَمْتُ أَنْ آخُذَ حَبْلًا فَأُعَلِّقَهُ بِشَجَرَةٍ، ثُمَّ أَخْتَنِقَ مِمَّا يَقُولُ لِي النَّاسُ، يَا أَبَا سَعِيدٍ مَنْ خَفِيَ عَلَيْهِ حَدِيثُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا خَفِيَ عَلَيْكُمْ مَعْشَرَ الْأَنْصَارِ أَلَسْتَ مِنْ أَعْلَمِ النَّاسِ بِحَدِيثِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ أَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ كَافِرٌ» وَأَنَا مُسْلِمٌ، أَوَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ عَقِيمٌ لَا يُولَدُ لَهُ»، وَقَدْ تَرَكْتُ وَلَدِي بِالْمَدِينَةِ؟ أَوَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَدْخُلُ الْمَدِينَةَ وَلَا مَكَّةَ» وَقَدْ أَقْبَلْتُ مِنَ الْمَدِينَةِ وَأَنَا أُرِيدُ مَكَّةَ؟ قَالَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ: حَتَّى كِدْتُ أَنْ أَعْذِرَهُ، ثُمَّ قَالَ: أَمَا، وَاللهِ إِنِّي لَأَعْرِفُهُ وَأَعْرِفُ مَوْلِدَهُ وَأَيْنَ هُوَ الْآنَ، قَالَ: قُلْتُ لَهُ: تَبًّا لَكَ، سَائِرَ الْيَوْمِ

5610 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நாங்கள் ஹஜ்ஜுக்கு, அல்லது உம்ராவுக்குச் சென்றோம். எங்களுடன் இப்னு ஸாயிதும் இருந்தான். (வழியில்) நாங்கள் ஓரிடத்தில் தங்கினோம். (ஓய்வெடுப்பதற்காக) மக்கள் கலைந்து சென்றபின் நானும் இப்னு ஸாயிதும் மட்டுமே எஞ்சியிருந்தோம். அவனைப் பற்றிச் சொல்லப்படுகிற விஷயங்களால் அவனருகில் இருப்பதை நான் மிகவும் வெறுத்தேன். அவன் தனது பயணச் சாமான்களைக் கொண்டுவந்து எனது பயணச் சாமான்களுடன் வைத்தான்.

அப்போது நான், "வெயில் கடுமையாக உள்ளது. அந்த மரத்திற்குக் கீழே நீ உன் பொருட்களை வைத்தால் நன்றாயிருக்குமே'' என்றேன். அவ்வாறே அவன் செய்தான். அப்போது ஆட்டு மந்தை ஒன்று வந்தது. உடனே அவன் சென்று, ஒரு பெரிய கோப்பை (நிறைய பால்) உடன் என்னிடம் வந்து, "அபூ சயீதே! பருகுவீராக'' என்றான். நான், "வெயிலும் கடுமையாக உள்ளது. பாலும் சூடாக உள்ளது என்று -அவன் கையிலிருந்து வாங்கி அருந்தப் பிடிக்காமல், அல்லது அவன் கையிலிருந்து வாங்கப் பிடிக்காமல்- சொன்னேன். அவன், "அபூசயீதே! நான் ஒரு கயிற்றை எடுத்து வந்து அதை ஒரு மரத்தில் மாட்டி தற்கொலை செய்து கொள்ளலாமா என்று நினைத்தேன். என்னைப் பற்றி மக்கள் பேசிக்கொள்கிற செய்திகளே காரணம். அபூசயீதே! யாருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் தெரியாவிட்டாலும், அன்சாரிகளே! உங்களுக்குத் தெரியாமல் போகாது.

(அபூசயீதே!) நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை நன்கறிந்தவர்களில் ஒருவரல்லவா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் (தஜ்ஜால்) இறைமறுப்பாளன்' என்று சொல்லவில்லையா? நானோ ஒரு முஸ்லிமாக இருக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் (தஜ்ஜால்) குழந்தை பாக்கியமற்ற மலடன்' என்று கூறவில்லையா? நானோ என் குழந்தையை மதீனாவில் விட்டு வந்துள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் மதீனாவுக்குள்ளும் மக்காவுக்குள்ளும் நுழைய முடியாது' என்று கூறவில்லையா? நானோ, மதீனாவிலிருந்து மக்காவை நாடி வந்துகொண்டிருக்கிறேன்'' என்று சொன்னான். இதையெல்லாம் கேட்டு அவனை மன்னிக்கும் அளவுக்கு நான் போய்விட்டேன். பிறகு அவன், "அறிந்துகொள்க: அல்லாஹ்வின் மீதாணையாக! தஜ்ஜாலை நான் அறிவேன். அவனது பிறப்பையும், இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்பதையும் நான் அறிவேன்'' என்றான். அப்போது நான் "காலமெல்லாம் உனக்கு நாசமுண்டாகட்டும்'' என்று கூறி (சபித்து)விட்டேன்.

இப்னுஸ் ஸய்யாத் குறித்த செய்திகளை தொகுத்துப் பார்க்கும் போது அவர் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக வாழ்ந்த ஒருவராகவே தெரிகின்றது. தஜ்ஜாலாகவோ நபியாகவோ வாதிட்டவராகவோ சொல்வது புணையப்பட்டவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஹிஜாமா எனும் மருத்துவம் நபிவழியா?

தற்போது ஹிஜாமா எனும் மருத்துவ முறையை மார்க்கத்துடன் தொடர்புபடுத்தி சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இரத்தம் குத்தி எடுக்கும் ஹிஜாமா எனும் சிகிச்சை செய்வது நபிவழியா? இதைச் செய்வதற்கு மறுமையில் நன்மை உண்டா? என்பதை இந்த ஆக்கத்தில் விரிவாகக் காண்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தலையிலும், தோள்பட்டையிலும். கழுத்திலும் சிறு துவாரமிட்டு இரத்தத்தை உரிஞ்சி எடுக்கும் முறை இருந்தது. இது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மருத்துவமாக கருதப்பட்டு வந்தது.

அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இந்த சிகிச்சையை எடுத்துள்ளார்கள்.

صحيح البخاري

1939- حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ ، حَدَّثَنَا أَيُّوبُ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : احْتَجَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهُوَ صَائِمٌ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருந்த போது ஹிஜாமா செய்தார்கள்.

அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 1939, 5694

صحيح البخاري

1835 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: قَالَ لَنَا عَمْرٌو: أَوَّلُ شَيْءٍ سَمِعْتُ عَطَاءً يَقُولُ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ: «احْتَجَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُحْرِمٌ»، ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ: حَدَّثَنِي طَاوُسٌ، عَنْ ابْنِ عَبَّاسٍ، فَقُلْتُ: لَعَلَّهُ سَمِعَهُ مِنْهُمَا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் ஹிஜாமா செய்தார்கள்.

அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 1835, 1836, 1938, 5695, 5698, 5700, 5701

صحيح البخاري

5697- حَدَّثَنَا سَعِيدُ بْنُ تَلِيدٍ ، قَالَ : حَدَّثَنِي ابْنُ وَهْبٍ قَالَ : أَخْبَرَنِي عَمْرٌو وَغَيْرُهُ أَنَّ بُكَيْرًا حَدَّثَهُ أَنَّ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ حَدَّثَهُ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَادَ الْمُقَنَّعَ ثُمَّ قَالَ : لاََ أَبْرَحُ حَتَّى تَحْتَجِمَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ : إِنَّ فِيهِ شِفَاءً.

ஹிஜாமா செய்வதில் நோய் நிவாரணம் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல் : புகாரி 5697

صحيح البخاري

2103 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «احْتَجَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَعْطَى الَّذِي حَجَمَهُ» وَلَوْ كَانَ حَرَامًا لَمْ يُعْطِهِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜாமா செய்தார்கள். ஹிஜாமா செய்தவருக்கான கூலியையும் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 2103, 2278, 2279, 5691, 5696

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜாமா செய்துள்ளார்கள் என்பதற்கும், அதைத் தொழிலாகச் செய்பவர்கள் அன்று இருந்துள்ளனர் என்பதற்கும் இவை சான்றாக உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) ஹிஜாமா செய்ததை மார்க்கத்துடன் தொடர்புபடுத்தலாமா என்பதைப் புரியாமல் இதை சுன்னத் எனக் கூறி மக்களை சிலர் வழிகெடுக்கின்றனர்.

இது பற்றி நாம் விரிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகள் இரு வகைகளில் அமைந்துள்ளன.

ஒன்று வணக்கவழிபாடுகள்.

மற்றொன்று உலகம் சம்மந்தப்பட்ட காரியங்கள்.

வணக்கவழிபாடுளைப் பொருத்தவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடைத்தால் அவை மார்க்கச் சட்டமாகி விடும்.

ஆனால் உலகக் காரியங்களைப் பொருத்தவரை அவர்கள் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடைத்தாலும் அவை மார்க்கச் சட்டமாகாது. தாம் செய்ததுடன் மார்க்கம் என்ற அடிப்படயில் அவர்கள் கட்டளை இட்டால் மட்டுமே அவை மார்க்கச் சட்டமாக ஆகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் பயணம் செய்தது, கோதுமை உணவை உட்கொண்டது போன்ற காரியங்கள் இரண்டாம் வகைக்கு உதாரணங்களாகும். மேற்கண்ட காரியங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்பது உண்மை என்றாலும் அவற்றை நாம் செய்வது சுன்னத் என்று ஆகாது. இதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள தலைமுடி வளர்ப்பதையும், தாடி வைப்பதையும் உதாரணமாகக் கூறலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாடியும் வைத்துள்ளனர். தலைமுடியும் வளர்த்துள்ளனர்.

ஆனாலும் தாடி வைப்பதை சுன்னத் என்கிறோம். தலைமுடி வளர்ப்பதை சுன்னத் என்று யாரும் கூறுவதில்லை.

தாடியும், தலைமுடியும் வணக்க வழிபாடுகளில் உள்ளவை அல்ல. எல்லா மனிதர்களும் செய்யக் கூடிய காரியங்களே. ஆனாலும் தாடி வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் தாடி வளர்த்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் மற்றவர்களுக்கும் அது குறித்து மார்க்கக் கட்டளை இட்டதால் அது சுன்னத் ஆகிறது. ஆனால் தலைமுடி வளர்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலை முடி வளர்க்குமாறு மற்றவர்களுக்குக் கட்டளை இடாததால் அது சுன்னத் ஆக ஆகவில்லை.

எனவே மார்க்க விஷயங்களைப் பொருத்தவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதும் மார்க்கமாகும். அவர்கள் செய்ததும் மார்க்கமாகும். அவர்கள் அங்கீகரித்ததும் மார்க்கமாகும்.

உலக விஷயங்களைப் பொருத்த வரை அவர்கள் கட்டளையிட்ட அனைத்தும் மார்க்கமாக ஆகும். ஆனால் அவர்கள் செய்தவை அனைத்தும் மார்க்கமாகாது. அது போல் அவர்கள் அங்கீகரித்தவை அனைத்தும் மார்க்கமாகாது. மாறாக அவர்கள் செய்ததுடன் மற்றவர்களுக்கும் அது குறித்து கட்டளையிட்டால் மட்டுமே அவை மார்க்கமாக ஆகும்.

ஹிஜாமா வஹியின் அடிப்படையில் செய்த ஒன்றல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதாராக ஆவதற்கு முன்பே இந்த வழக்கம் இருந்ததால் இது இறைவன் புறத்திலிருந்து வந்த வழிகாட்டுதல் அல்ல. மனிதர்கள் தமது அனுபவ அறிவைக் கொண்டு கண்டறிந்த மருத்துவம் தவிர வேறில்லை. இதை நாம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை.

இதில் நன்மை இருப்பதாக நமக்குத் தெரிந்தால் அதைக் கடைப்பிடிக்கலாம். இல்லாவிட்டால் விட்டு விடலாம்.

இதை வேறு ஹதீஸ்களின் துணையுடன் நாம் தெளிவாக விளங்க முடியும்.

صحيح البخاري

243 - حَدَّثَنَا مُحَمَّدٌ يَعْنِي ابْنَ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي حَازِمٍ، سَمِعَ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، وَسَأَلَهُ النَّاسُ، وَمَا بَيْنِي وَبَيْنَهُ أَحَدٌ: بِأَيِّ شَيْءٍ دُووِيَ جُرْحُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: مَا بَقِيَ أَحَدٌ أَعْلَمُ بِهِ مِنِّي، «كَانَ عَلِيٌّ يَجِيءُ بِتُرْسِهِ فِيهِ مَاءٌ، وَفَاطِمَةُ تَغْسِلُ عَنْ وَجْهِهِ الدَّمَ، فَأُخِذَ حَصِيرٌ فَأُحْرِقَ، فَحُشِيَ بِهِ جُرْحُهُ»

சஹ்ல் பின் ஸஅத் அஸ்ஸாயிதீ (ரலி) அவர்களிடம் (உஹுதுப் போரில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காயத்திற்கு எது மருந்தாக இடப்பட்டது? என்று மக்கள் கேட்டார்கள். அப்போது எனக்கும், ஸஹ்ல் (ரலி) அவர்களுக்கும் இடையில் வேறு யாரும் இருக்கவில்லை - அதற்கு ஸஹ்ல் (ரலி) அவர்கள், இதைப் பற்றி என்னை விட அறிந்தவர்கள் தற்போது யாரும் இல்லை. அலீ (ரலி) அவர்கள் தமது கேடயத்தில் தண்ணீர் கொண்டு வர, ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகத்திலிருந்து இரத்தத்தைக் கழுவிக் கெண்டிருந்தார்கள். பாய் எடுத்துக் கரிக்கப்பட்டது. அதை நபியவர்களின் காயத்தில் வைத்து அழுத்தப்பட்டது என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹாஸிம்

நூல் :புகாரி 243

அன்றைக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டால் அதில் சாம்பலைப் பூசி இரத்த ஓட்டத்தை நிறுத்துவார்கள். இவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹதுப் போரில் வெட்டப்பட்ட போது செய்யப்பட்டது. இது அன்றைய மருத்துவ முறை என்ற அடிப்படையில் செய்யப்பட்டதே தவிர மார்க்க அடிப்படையில் செய்யப்பட்டதல்ல. அது போன்றது தான் இரத்தம் குத்தி எடுத்தல் என்பதும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமை உணவையே சாப்பிட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இறைத்தூதர் என்ற முறையில் தான் இவ்வாறு சாப்பிட்டார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

இறைத்தூதராக ஆவதற்கு முன்பும் அவர்கள் இவ்வுணவையே சாப்பிட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்காத எதிரிகளும் கூட இதையே சாப்பிட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் ஊரில் இருந்த வழக்கப்படி கோதுமையைச் சாப்பிட்டார்களே தவிர வஹீயின் அடிப்படையில் அல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமையைச் சாப்பிட்டார்கள் என்பதற்காக நாமும் அதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று நாம் கருதுவதில்லை. அவ்வாறு கருதுவதும் கூடாது.

அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது பயணம் செய்ததால் நாமும் ஒட்டகத்தில் பயணம் செய்வது சுன்னத் என்று கூற முடியாது.

அவர்கள் அணிந்த ஆடை வகைகளைத் தான் நாமும் அணிய வேண்டும் என்று கூற முடியாது.

அவர்களுக்கு உஹத் போரில் காயம் ஏற்பட்ட போது சாம்பலைப் பூசி இரத்தக் கசிவை நிறுத்தினார்கள். அது போல் தான் நாமும் செய்ய வேண்டும் என்று கூறக் கூடாது.

ஏனெனில் அவை யாவும் இறைத்தூதர் என்ற அடிப்படையில் அவர்கள் செய்தவை அல்ல. அவர்களின் காலத்திலும், ஊரிலும் கிடைத்த வசதிகளுக்கேற்ப வாழ்ந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்தவையாகும்.

இந்த வேறுபாட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவும் விளக்கியுள்ளனர்.

صحيح مسلم

6277 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَعَمْرٌو النَّاقِدُ كِلاَهُمَا عَنِ الأَسْوَدِ بْنِ عَامِرٍ – قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ – حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ وَعَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- مَرَّ بِقَوْمٍ يُلَقِّحُونَ فَقَالَ « لَوْ لَمْ تَفْعَلُوا لَصَلُحَ ». قَالَ فَخَرَجَ شِيصًا فَمَرَّ بِهِمْ فَقَالَ « مَا لِنَخْلِكُمْ ». قَالُوا قُلْتَ كَذَا وَكَذَا قَالَ « أَنْتُمْ أَعْلَمُ بِأَمْرِ دُنْيَاكُمْ ».

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டு வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாதிருக்கலாமே? என்று கூறினார்கள். மதீனாவின் தோழர்கள் உடனே இவ்வழக்கத்தை விட்டு விட்டனர். ஆனால் இதன் பின்னர் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நபித் தோழர்கள் நினைவுபடுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “உங்கள் உலக விஷயங்களை நீங்களே நன்கு அறிந்தவர்கள் எனக் குறிப்பிட்டார்கள்.

நூல் : முஸ்லிம் 4358

صحيح مسلم

إِنَّمَا أَنَا بَشَرٌ إِذَا أَمَرْتُكُمْ بِشَىْءٍ مِنْ دِينِكُمْ فَخُذُوا بِهِ وَإِذَا أَمَرْتُكُمْ بِشَىْءٍ مِنْ رَأْىٍ فَإِنَّمَا أَنَا بَشَرٌ

மற்றொரு அறிவிப்பில் நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதைக் கடைப்பிடியுங்கள்! என் சொந்தக் கருத்தைக் கூறினால் நானும் மனிதன் தான் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல் : முஸ்லிம் 4357

صحيح مسلم

فَإِنِّى إِنَّمَا ظَنَنْتُ ظَنًّا فَلاَ تُؤَاخِذُونِى بِالظَّنِّ وَلَكِنْ إِذَا حَدَّثْتُكُمْ عَنِ اللَّهِ شَيْئًا فَخُذُوا بِهِ فَإِنِّى لَنْ أَكْذِبَ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ

மற்றொரு அறிவிப்பில் நான் எனது கருத்தைத் தான் கூறினேன். அதற்காக என்னைப் பிடித்து விடாதீர்கள்! எனினும் அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக் கடைப்பிடியுங்கள்! ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல் : முஸ்லிம் 4356

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருந்தும், அவர்களுக்கு வஹீ எனும் இறைச்செய்தி தொடர்ந்து வந்திருந்தும் கூட அவர்களின் நடவடிக்கைகளே இரண்டு வகைகளாகப் பார்க்கப்படுகின்றது.

மனிதர் என்ற முறையில் அவர்கள் செய்தவை.

இறைவனின் செய்தியைப் பெற்று தூதர் என்ற அடிப்படையில் செய்தவை.

இதில் முதல் வகையான அவர்களின் நடவடிக்கைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியமில்லை. இரண்டாவது வகையான அவர்களின் நடவடிக்கைகளைத் தான் பின்பற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். காரணம் இவை தான் வஹீயின் அடிப்படையில் அமைந்தவை.

இரத்தம் குத்தி எடுத்தல் முதல் வகையைச் சேர்ந்ததாகும்.

ஆயினும் ஹிஜாமா செய்யச் சொன்னது வஹீ அடிப்படையில் தான் என்று கருத்தைத் தரும் வகையில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை ஆதாரமாகக் காட்டி இது மார்க்கத்தின் உள்ள சுன்னத்தான வணக்கம் என்று சிலர் வாதிடக்கூடும்.

ஆனால் அந்த ஹதீஸ்கள் யாவும் பலவீனமானவையாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மிஃராஜ் பயணத்தின் போது மலக்குமார்களின் கூட்டங்களைக் கடக்கும் போது “முஹம்மதே, ஹிஜாமா செய்யுங்கள்” என்று சொல்லப்படாமல் தவிர கடக்கவில்லை.

மேற்கண்ட ஹதீஸ் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவை அனைத்திலும் பலவீனமான அறிவிப்பாளர்களே இடம் பெற்றுள்ளனர்

முதலாவது அறிவிப்பு – அப்பாத் பின் மன்சூர் அறிவிப்பது

مسند احمد

3316 - حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " خَيْرُ يَوْمٍ تَحْتَجِمُونَ فِيهِ سَبْعَ عَشْرَةَ، وَتِسْعَ عَشْرَةَ، وَإِحْدَى وَعِشْرِينَ " وَقَالَ: " وَمَا مَرَرْتُ بِمَلَإٍ مِنَ الْمَلَائِكَةِ لَيْلَةَ أُسْرِيَ بِي، إِلَّا قَالُوا: عَلَيْكَ بِالْحِجَامَةِ يَا مُحَمَّدُ " (2)

مصنف ابن أبي شيبة

24151- حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ , قَالَ : أَخْبَرَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ : مَا مَرَرْتُ بِمَلأَ مِنَ الْمَلاَئِكَةِ لَيْلَةَ أُسْرِيَ بِي إِلا َقَالُوا : عَلَيْكَ بِالْحِجَامَةِ يَا مُحَمَّدُ. (7/442).

عبد بن حميد

574 - أَخبَرنا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخبَرنا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلى الله عَلَيه وسَلم، قَالَ: خَيْرُ يَوْمٍ تَحْتَجِمُونَ فِيهِ سَبْعَ عَشْرَةَ، وَتِسْعَ عَشْرَةَ، وَإِحْدَى (1) وَعِشْرِينَ. قَالَ: وَمَا مَرَرْتُ بِمَلإٍ مِنَ الْمَلاَئِكَةِ لَيْلَةَ أُسْرِيَ بِي، إِلاَّ قَالُوا: عَلَيْكَ بِالْحِجَامَةِ يَا مُحَمَّدُ.

سنن الترمذي

2053 - حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ: أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ قَالَ: حَدَّثَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، قَالَ: سَمِعْتُ عِكْرِمَةَ، يَقُولُ: كَانَ لِابْنِ عَبَّاسٍ، غِلْمَةٌ ثَلَاثَةٌ حَجَّامُونَ «فَكَانَ اثْنَانِ مِنْهُمْ يُغِلَّانِ عَلَيْهِ وَعَلَى أَهْلِهِ وَوَاحِدٌ يَحْجُمُهُ وَيَحْجُمُ أَهْلَهُ» قَالَ: وَقَالَ ابْنُ عَبَّاسٍ: قَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نِعْمَ العَبْدُ الحَجَّامُ، يُذْهِبُ الدَّمَ، وَيُخِفُّ الصُّلْبَ، وَيَجْلُو عَنِ البَصَرِ» وَقَالَ: " إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ عُرِجَ بِهِ مَا مَرَّ عَلَى مَلَإٍ مِنَ المَلَائِكَةِ إِلَّا قَالُوا: عَلَيْكَ بِالحِجَامَةِ " وَقَالَ: «إِنَّ خَيْرَ مَا تَحْتَجِمُونَ فِيهِ يَوْمَ سَبْعَ عَشْرَةَ وَيَوْمَ تِسْعَ عَشْرَةَ وَيَوْمَ إِحْدَى وَعِشْرِينَ»

المستدرك على الصحيحين للحاكم

7473 - أَخْبَرَنَا مُكْرَمُ بْنُ أَحْمَدَ الْقَاضِي، ثَنَا الْحَسَنُ بْنُ مُكْرَمٍ، ثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَ عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مَرَرْتُ بِمَلَأٍ مِنَ الْمَلَائِكَةِ لَيْلَةَ أُسْرِيَ بِي إِلَّا قَالُوا عَلَيْكَ بِالْحِجَامَةِ يَا مُحَمَّدُ» هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ "

திர்மிதீ, முஸ்னத் அப்து பின் ஹுமைத், அஹ்மத், ஹாகிம், முஸன்னப் இப்னு அபீஷைபா ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்ட இந்த அறிவிப்பில் அப்பாத் பின் மன்சூர் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார்.

இவர் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன், இப்னுல் மதீனி, நஸாயீ, அபூதாவூத் இப்னு ஸஅத், அபூபக்ர் பின் அபீஷைபா ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் அப்பாத் பின் மன்சூர் என்ற இந்த அறிவிப்பாளர் இக்ர்மாவிடம் இதைக் கேட்டதாக கூறுகிறார்.

ஆனால் இவர் இக்ரிமாவிடம் கேட்டதாக பொய்யாக சொல்லி இருக்கிறார் என்று அறிஞர்கள் அவர் வாயாலேயே ஒப்புக் கொள்ள வைத்துள்ளனர்.

وقد دلسَ هذا الخبرَ فأسقط من إسناده اثنين من الرواة، فروى العقيلى في "الضعفاء" 3/136- ونقله عنه المزي في "تهذيب الكمال" 14/159- من طريق أحمد بن داود الحداد، قال: سمعتُ على ابن المديني يقول: سمعتُ يحيى بنَ سعيد القطان يقولُ: قلتُ لعباد بن منصور الناجي، سمعتَ: ما مررتُ بمل! من الملائكة، والنبي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كان يكتحل ثلاثاً؟ (يعني من عكرمة) ، فقال: حدثني ابن أبي يحيى، عن داود بن حُصين، عن عكرمةَ، عن ابن عباس. قلنا: وابن أبي يحيى- واسمه إبراهيم بن محمد- متروك، وداود بن حصين ضعيف في عكرمة خاصة.

நீங்கள் இக்ரிமாவிடம் இதைக் கேட்டீர்களா என்று யஹ்யா பின் ஸயீத் அல் கத்தான் அவர்கள் அப்பாத் பின் மன்சூரிடம் கேட்டனர். அதற்கு அவர் இக்ரிமா சொன்னதாக தாவூத் பின் ஹுசைன் என்பார் கூற தாவூத் கூறியதாக எனக்கு இப்னு அபீ யஹ்யா கூறினார் என்று பதிலளித்தார். அதாவது நேரடியாக இக்ரிமாவிடம் இவர் செவியுறவில்லை. இவர் இடையில் விட்டுள்ள இரு அறிவிப்பாளர்களும் பலவீனமானவர்கள் ஆவர்.

இரண்டாவது அறிவிப்பு – முஹம்மத் பின் உமர் மற்றும் இப்னு அபீ துவாலா அறிவிப்பது.

المطالب العالية محققا

2510 - وَقَالَ الْحَارِثُ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا ابْنُ أَبِي طُوَالَةَ، عَنْ [عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ حَزْمٍ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ الله عنه عن النبي -صلى الله عليه وسلم-صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ: لَمَّا عُرج بي إلى السماء أمُرّ بملاءِ مِنَ الْمَلَائِكَةِ إلَّا قَالُوا: عَلَيْكَ يَا مُحَمَّدُ بالحجامة.

2510 - الحكم عليه: هذا إسناد ضعيف جدًا فيه علتان:

الأولى: محمد بن عمر الواقدي فهو متروك.

الثانية: ابن أبي طوالة لم أجد له ترجمة.

முஹம்மத் பின் உமர் என்பார் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் ஆவார்.

இப்னு அபீ துவாலா என்பவர் யார் என அறியப்படாதவர். எனவே இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.

மூன்றாவது அறிவிப்பு – கதாதா அறிவிப்பது

المعجم الأوسط

 2081 - حدثنا أحمد قال نا عبد القدوس بن محمد العطار قال نا عمرو بن عاصم الكلابي قال نا همام قال نا قتادة عن أنس بن مالك  عن مالك بن صعصعة قال قال رسول الله صلى الله عليه و سلم ما مررت ليلة أسري بي على ملإ من الملائكة إلا أمروني بالحجامة لم يروه عن قتادة إلا همام ولا عن همام إلا عمرو بن عاصم تفرد به عبد القدوس

قلت: رجاله رجال الصحيح، لكن في سنده قتادة ولم يصرح بالتحديث، وهو مدلّس. من الثالثة، فالإِسناد ضعيف.

கதாதா என்பவர் தத்லீஸ் செய்பவர் ஆவார். தனக்கு அறிவித்தவரைக் கூறாமல் அவருக்கு முந்திய அறிவிப்பாளரைக் கூறுதல் தத்லீஸ் ஆகும். இது பற்றி அறிய

தத்லீஸ் என்றால் என்ன என்ற ஆக்கத்தை பார்க்கவும்

நான்காவது அறிவிப்பு – அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் அறிவிப்பது

 عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ

سنن الترمذي

2052 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بُدَيْلٍ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ، عَنْ القَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ  بْنِ مَسْعُودٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ مَسْعُودٍ قَالَ: «حَدَّثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لَيْلَةِ أُسْرِيَ بِهِ أَنَّهُ لَمْ يَمُرَّ عَلَى مَلَإٍ مِنَ المَلَائِكَةِ إِلَّا أَمَرُوهُ أَنْ مُرْ أُمَّتَكَ بِالحِجَامَةِ»: وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ

திர்மிதியில் பதிவு செய்யப்பட்ட இந்த ஹதீஸில் அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்ற அற்விப்பாளார் வருகிறார். இவர் பலவீனமானவர் ஆவார்.

، ففيه عبد الرحمن بن إسحاق وهو أبو شيبة الواسطي، قال في التقريب (ص 336) ضعيف.

ஐந்தாவது அறிவிப்பு – அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் அறிவிப்பது

مسند البزار

5970 ، حَدَّثنا عُمَر بن الخطاب : حَدَّثنا عَبد الله بن صالح ، حَدَّثنا العطاف ، عَن نافع ، عَن ابن عُمَر ، عَن النبي صلى الله عليه وسلم قال : ما مررت بسماء من السموات إلاَّ قالت الملائكة : يا محمد مر أمتك بالحجامة فإنه خير ما تداووا به الحجامة والكست والشونيز.

பஸ்ஸார் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஹதீஸில் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் என்பார் இடம்பெறுகிறார்.

وهذا إسناد فيه ضعف من أجل عبد الله بن صالح المصري كاتب الليث قال في  التقريب (ص 308): صدوق كثير الغلط، ثبت في كتابه وكانت فيه غفلة.

இவர் உண்மையாளர் ஆனாலும் அதிகம் தவறாக அறிவிப்பவர். இவரிடம் கவனமின்மை உள்ளது.

ஆறாவது அறிவிப்பு – அபூ ஹுர்முஸ் என்ற நாஃபிவு அறிவிப்பது

المعجم الكبير للطبراني

11204 - حَدَّثَنَا يَحْيَى بن مُحَمَّدٍ الْحِنَّائِيُّ، حَدَّثَنَا شَيْبَانُ بن فَرُّوخٍ، حَدَّثَنَا نَافِعٌ أَبُو هُرْمُزٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِي اللَّهُ تَعَالَى عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:لَيْلَةَ أُسْرِيَ بِي مَا مَرَرْتُ عَلَى مَلأٍ مِنَ الْمَلائِكَةِ إِلا أَمَرُونِي بِالْحِجَامَةِ.

தப்ரானியின் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஹதீஸ் அபூ ஹுர்முஸ் எனும் நாஃபிவு என்பார் வழியாக அறிவிக்கப்படுள்ளது.

قَالَ أَحْمَدُ: ضَعِيفُ الْحَدِيثِ. وَقَالَ ابْنُ مَعِينٍ: ضَعِيفٌ، لا يُكْتَبُ حَدِيثُهُ.

وَقَالَ ابْنُ حِبَّانَ: رَوَى عَنْ عَطَاءٍ نُسْخَةً مَوْضُوعَةً. وَقَالَ النَّسَائِيُّ: لَيْسَ بِثِقَةٍ.

இவர் பலவீனமானவர் என அஹ்மத் பின் ஹம்பல், இப்னு மயீன் ஆகியோர் விமர்சித்துள்ளனர். இவரது ஹதீஸை பதிவு செய்யக் கூடாது என்று இப்னு மயீன் கூறுகிறார்.

அதா என்பார் வழியாக அறிவிக்கப்பட்டவை என்ற ஏடு ஒன்று இவரிடம் இருந்த்து. அவை அதா அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்டவை. அதிலிருந்து தான் இவர் அறிவிப்பார் என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார். இவர் நம்பகமானவர் அல்லர் என்று நஸாயீ கூறுகிறார்.

ஏழாவது அறிவிப்பு – ஸஅது பின் தரீஃப் மற்றும் இஸ்பஃ பின் நபாத்தா ஆகியோர் அறிவிப்பது

الكامل في ضعفاء الرجال - ابن عدي

 ثنا الساجي ثنا إبراهيم بن سليمان الكوفي ثنا عبيد بن عبد الرحمن ثنا سعد بن طريف عن الأصبغ بن نباتة عن علي قال رسول الله صلى الله عليه و سلم ما مررت ليلة أسري بي في السماء إلا قالت الملائكة مر أمتك بالحجامة

இந்த ஹதீஸ் அல்காமில் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 - سعد بن طريف، قال ابن معين: لا يحل لأحد أن يروي عنه، وقال ابن حبّان: كان يضع الحديث. الميزان (2/ 123).

2 - الأصبع بن نباته قال في التقريب (ص 113): متروك، رُمي بالرفض.

இதன் அறிவிப்பாளர்களில்  ஸஅது பின் தரீஃப் இடம் பெற்றுள்ளார்.

இவர் வழியாக அறிவிப்பது ஹலால் இல்லை என்று இப்னு மயீன் கூறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டி அறிவிப்பவராக இருந்தார் என இப்னு ஹிப்பான் கூறுகிறார்.

மேலும் இதன் மற்றொரு அறிவிப்பாளரான இஸ்பஃ என்பார் பொய்யர் என சந்தேகிக்கப்பட்டவர் என்று இப்னு ஹஜர் கூறுகிறார்.

எட்டாவது அறிவிப்பு - ஈஸா பின் அப்துல்லாஹ் அறிவிப்பது

الكامل في ضعفاء الرجال - ابن عدي

أخبرنا محمد بن الحسن بن حفص ثنا عباد بن يعقوب أخبرنا عيسى بن عبد الله قال حدثني أبي عن أبيه عن جده عن علي قال نزل جبريل عليه السلام باليمين مع الشاهد والحجامة ويوم الأربعاء يوم نحس مستمر

இது அல்காமில் எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

وهذا إسناد ضعيف جدًا من أجل عيسى بن عبد الله، وهو ابن محمد بن عمر الكوفي قال الدارقطني: متروك كما في اللسان (4/ 399).

இதன் அறிவிப்பாளரான ஈஸா பின் அப்துல்லாஹ் மிக பலவீனமானவர். இவர் பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர் என்று தாரகுத்னீ கூறுகிறார்.

ஒன்பதாவது அறிவிப்பு – கஸீர் பின் ஸலீம் அறிவிப்பது

الكامل في ضعفاء الرجال - ابن عدي

حدثنا محمد بن علي قال ثنا قتيبة بن سعيد وحدثنا بن ذريح ثنا جبارة قالا ثنا كثير بن سليم عن أنس عن النبي صلى الله عليه و سلم قال جبارة سمعت النبي  صلى الله عليه و سلم يقول ما مررت ليلة أسري بي على ملأ من الملائكة إلا قالوا يا محمد مر أمتك بالحجامة

இது அல்காமில் எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ضَعَّفَهُ ابْنُ الْمَدِينِيِّ، وَالنَّاسُ. وَقَالَ الْنَّسَائِيُّ، وَغَيْرُهُ: مَتْرُوكٌ. وَقَالَ أَبُو حَاتِمٍ. ضَعِيفُ الْحَدِيثِ.

இதன் அறிவிப்பாளரான கஸீர் பின் ஸலீம் என்பார் பலவீனமானவர் என இப்னுல் மதீனீ கூறுகிறார். இவர் பொய்யரெஅன சந்தேகிக்கப்பட்டவர் என நஸாயீ மற்றும் சிலர் கூறியுள்ளனர். இவர் பலவீனமானவர் என அபூ ஹாதம் அவர்கள் கூறியுள்ளனர்.

ஹிஜாமா செய்ய வானவர்கள் கூறியது சரியான அறிவிப்பாக இருந்தால் இது மார்க்கத்தில் சுன்னத்தாக ஆகிவிடும். ஆனால் இந்தக் அக்ருத்தில் ஒரு அறிவிப்பு கூட அசரியான அறிவிப்பு அல்ல. எனவே ஹிஜாமா செய்வதற்கும் மார்க்கத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

அன்றைக்கு இருந்த பழங்கால மருத்துவம் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்துள்ளனர்.

இப்னு ஸய்யாத் தான் தஜ்ஜாலா ? அவன் பிறர் மனதை அறியக்கூடியவனா?

சமகால நிகழ்வுகளும் வாட்ஸ் அப் கேள்விகளும் 08/08/2021

முஸ்லீம்களுக்கும் அல்லாதோருக்கும் வித்தியாசம் ஸஹர் சாப்பிடுவது என்று நபி ஸல் சொன்னது ஏன்?

சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்வி பதில் 11/07/2021

உரை: பி ஜெய்னுல் ஆபிதீன்

More Articles …