மாமியார் மருமகனிடம் ஹிஜாபை பேண வேண்டுமா
▶️நமக்கு எதிராக செயல்படும் உறவையும் பேணுமாறு அல்லாஹ் கூறுகிறானா?
நமக்கு எதிராக செயல்படும் உறவையும் பேன வேண்டுமா? இறைவன் அப்படி சொல்கிறானா?
நமக்கு எதிராக செயல்படும் உறவையும் பேன வேண்டுமா? இறைவன் அப்படி சொல்கிறானா?
சொத்தை அபகரித்த உறவினருடன் சேர்ந்து வாழவேண்டுமா?
சொத்துக்காக உறவுகளைப் பகைக்கலாமா?
சிறிய தந்தை பெரிய தந்தையை தந்தை என்றழைக்கலாமா?
இரத்த உறவு என்றால் என்ன?
கொள்கைக்காக உறவுகளை முறிக்கலாமா?
இஸ்லாத்திற்கு முரணான திருமணங்கள் மற்றும் அனாச்சாரமான நிகழ்ச்சிகளுக்கு உறவினர்கள் அழைத்தாலும் தவ்ஹீத் நிலைப்பாட்டில் உள்ளவர்கள் தவிர்க்கிறார்கள். தவ்ஹீத் கொள்கையால் உறவுகள் முறிகின்றன என்று சொல்வது சரியா ?
- கிள்ளை, யூசுப்
பதில் :
உறவுகள் முறியும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அசத்தியத்தை எதிர்த்து யார் களம் இறங்குகிறார்களோ அவர்கள் அனைவரும் இந்த நிலையைச் சந்தித்தே உள்ளனர்.
தீமைகளைக் கண்டு யாருக்குக் கோபம் வருகிறதோ, தீமையை ஒழிப்பதில் யாருக்கு உண்மையான அக்கறை உள்ளதோ அவர்கள் அனைவரும் இந்த நிலையைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும். எனவே கொள்கைக்காக உறவை முறிப்பது போற்றுதலுக்கு உரியது தான். விமர்சனத்துக்கு உரியது அல்ல.
2613 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَبُو جَعْفَرٍ ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ : أَتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْتَ فَاطِمَةَ فَلَمْ يَدْخُلْ عَلَيْهَا، وَجَاءَ عَلِيٌّ فَذَكَرَتْ لَهُ ذَلِكَ، فَذَكَرَهُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : " إِنِّي رَأَيْتُ عَلَى بَابِهَا سِتْرًا مَوْشِيًّا ". فَقَالَ : " مَا لِي وَلِلدُّنْيَا ". فَأَتَاهَا عَلِيٌّ فَذَكَرَ ذَلِكَ لَهَا، فَقَالَتْ : لِيَأْمُرْنِي فِيهِ بِمَا شَاءَ. قَالَ : " تُرْسِلُ بِهِ إِلَى فُلَانٍ، أَهْلِ بَيْتٍ بِهِمْ حَاجَةٌ ".
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்தார்கள்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அலீ (ரலி) அவர்கள் வந்ததும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அவரிடம் இதைக் கூறினார்கள். அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்ட போது ” அவரது வீட்டு வாசலில் ஆடம்பரமான திரைச்சீலை இருப்பதைக் கண்டேன்; (இதனால் தான் உள்ளே நுழையவில்லை.) எனக்கும் இவ்வுலகுக்கும் என்ன உள்ளது என்று சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் வீட்டுக்கு வந்து இதை ஃபாத்திமாவிடம் கூறினார்கள். இந்த திரைச்சீலை குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரும்பியவாறு உத்தரவு இடட்டும் என்றார்கள். தேவையுடைய இன்னாருக்கு அதைக் கொடுத்து விடு என்று (நபிகள்ம் நாயகம்) கூறினார்கள்.நூல் புகாரி 2613
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தமது மகள் வீட்டுக்குச் சென்ற போது அங்கே மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத அலங்காரத் துணி தொங்க விடப்பட்டதைக் கண்டு விட்டு அதைப் புறக்கணித்து திரும்பினார்கள். மகளின் உறவு பாதிக்கும் என்றோ மகளின் மனம் புண்படும் என்றோ அவர்கள் நினைக்கவில்லை.
எனவே உறவு முறிவதைப் பற்றி நாம் கவலைப்படாமல் தீமைக்கு எதிராக கடும் போக்கை நாம் மேற்கொள்வது தான் நமது கடமையாகும். அதன் மூலம் தான் தீமைகள் ஒழியும்.
உணரவு 16:10
21.11.2011. 6:27 AM
இரத்த உறவு என்றால் என்ன ?
25/11/18 வாட்ஸ் அப் கேள்வி பதில்