Sidebar

18
Thu, Jun
சமீபத்திய செய்திகள்

ஆண்கள் மருதானி இடலாமா?

ஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

سنن أبي داود

4928 - حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، وَمُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، أَنَّ أَبَا أُسَامَةَ، أَخْبَرَهُمْ عَنْ مُفَضَّلِ بْنِ يُونُسَ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ أَبِي يَسَارٍ الْقُرَشِيِّ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِمُخَنَّثٍ قَدْ خَضَّبَ يَدَيْهِ وَرِجْلَيْهِ بِالْحِنَّاءِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَالُ هَذَا؟» فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، يَتَشَبَّهُ بِالنِّسَاءِ، فَأَمَرَ بِهِ فَنُفِيَ إِلَى النَّقِيعِ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَلَا نَقْتُلُهُ؟ فَقَالَ: «إِنِّي نُهِيتُ عَنْ قَتْلِ الْمُصَلِّينَ» قَالَ أَبُو أُسَامَةَ: «وَالنَّقِيعُ نَاحِيَةٌ عَنِ الْمَدِينَةِ وَلَيْسَ بِالْبَقِيعِ»

கைகளிலும், கால்களிலும் மருதாணி பூசிய ஒரு அரவானி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். என்ன விஷயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இவர் பெண்களுக்கு ஒப்பாக நடக்கிறார் என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அவரை நகீவு எனும் பகுதிக்கு கடத்துமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். இவரைக் கொன்று விடலமா என்று சிலர் கேட்ட போது தொழுகையாளிகளைக் கொல்வதை விட்டு நான் தடுக்கப்பட்டுள்ளேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : அபூதாவூத்

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களாக இடம் பெற்றுள்ள அபூஹாஷிம், மற்றும் அபூ யசார் ஆகிய இருவரும் யாரென அறியப்படாதவர்கள்.

ஆண்கள் மருதாணி பூசலாம் என்றோ, பூசக் கூடாது என்றோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் நேரடியாகக் கூறப்படவில்லை.

பெண்களைப் போல் நடக்கும் ஆண்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்துள்ளதை ஆதாரமாகக் கொண்டு ஆண்கள் மருதாணி அனியக் கூடாது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

صحيح البخاري م

5885 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: «لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ» تَابَعَهُ عَمْرٌو، أَخْبَرَنَا شُعْبَةُ

பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள் .

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 5885

ஆண்கள் பெண்களைப் போன்று நடந்து கொள்ளக் கூடாது என்று இந்தச் செய்தி கூறுகின்றது.

பெண்களுக்கு மட்டுமே உரித்தான ஆண்கள் பயன்படுத்துவதை இச்செய்தி தடைசெய்கின்றது. பெண்கள் மட்டுமே பயன்படுத்துகின்ற பொருட்கள் நாட்டுக்கு நாடு வேறுபடும். ஒரு பகுதியில் பெண்கள் மட்டும் பயன்படுத்துகின்ற பொருள் மற்றொரு பகுதியில் ஆண் பெண் இரு பாலருக்கும் உரிய பொருளாக இருக்கும்.

எனவே தான் மார்க்கம் இவ்விஷயத்தில் வரையறை செய்யவில்லை. உதாரணமாக தலையில் பூ வைப்பது நமது நாட்டில் பெண்கள் மட்டும் செய்யும் காரியம். ஆண்கள் யாரும் இவ்வாறு செய்வதில்லை. இந்நிலையில் ஒரு ஆண் தலையில் பூ வைத்தால் மேற்கண்ட ஹதீஸ் அடிப்படையில் இது தவறான செயலாகிறது.

மருதாணியைப் பொறுத்தவரை அது பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் அலங்காரப் பொருளாக இருந்து வருகின்றது.

அதே நேரத்தில் பித்த வெடிப்பு போன்ற காரணங்களுக்காக மருந்தாக அதைப் பூசிக் கொள்வதையும் நரை முடியின் நிறத்தை மாற்றிக் கொள்வதற்காக அதைப் பூசிக் கொள்வதையும் இது கட்டுப்படுத்தாது. ஏனெனில் இதில் பெண்களுக்கு ஒப்பாக நடக்கும் தன்மை ஏதும் இல்லை.

ஆடைஆண்களுக்கு முடி பதியம் போடுவது கூடுமென்றால் பெண்களுக்கு சவுரி முடி வைத்துக்கொள்ள ஏன் தடை

13/05/2020 ரமலான் மாத வாட்ஸ் அப் கேள்வி பதில்

ஆடை விஷயத்தில் தடுக்கப்பட்ட நிறம் எது? ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே அளவுகோலா?

06/05/2020 ரமலான் மாத வாட்ஸ் அப் கேள்விகள்

More Articles …