Sidebar

18
Thu, Jun
சமீபத்திய செய்திகள்

இஸ்லாம் முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லச் சொல்லுகிறதா?

இஸ்லாம் மார்க்கம் முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளது. காஃபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுமாறு திருக்குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது

என்பதும் இஸ்லாத்திற்கெதிரான விமர்சனங்களில் ஒன்றாகும்.

திருக்குர்ஆனில் 2:191 வசனத்தை இதற்கு ஆதாரமாக காட்டுகின்றனர். ஜிஹாத் (புனிதப் போர்) செய்யுமாறு திருக்குர்ஆனில் உள்ள கட்டளைகளையும் எடுத்துக் காட்டி இவ்வாறு விமர்சனம் செய்கின்றனர்.

இது குறித்தும் விரிவாக நாம் விளக்க வேண்டியுள்ளது. முஸ்லிமல்லாதவர்களைக்  கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று திருக்குர்ஆன் கூறுவதாகச் சொல்வதை முதலில் பார்ப்போம்.

(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.

இது தான் அவர்கள் சுட்டிக் காட்டும் குர்ஆன் வசனம். இரண்டாம் அத்தியாயத்தில் 191 வது வசனம் இது.

இவ்வசனத்தில்  அவர்களைக் கொல்லுங்கள்  என்று கூறப்பட்டுள்ளது. எந்த மொழியில் அவர்கள் என்று கூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்க வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களைக் குறிப்பிடுகின்றதா? இதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.

இதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும்.

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 2:190

உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.

அவர்களைக் கொல்லுங்கள் என்பது பொதுவாக முஸ்லிமல்லாதவர்களைக் குறிக்கவில்லை. மாறாக உங்களுக்கு எதிராகப் படைதிரட்டி வரும் அவர்களுடன் போரிடுங்கள் என்றே கூறுகிறது என்பதை இதிலிருந்து அறியலாம். முற்பகுதியை மறைத்து விட்டு பிற்பகுதியை மட்டும் சில விஷமிகள் எடுத்துக் காட்டுவதால் இத்தகைய சந்தேகம் ஏற்படுத்தப்படுகிறது.

ஒரு சமுதாயத்துடன் இன்னொரு சமுதாயம் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு? எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாது மயிலிறகால் வருடிக் கொண்டிருக்குமா?

போர் என வந்துவிட்டால் எல்லாவிதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் திருக்குர்ஆன்  அவர்களுடன் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்  எனக் கூறிப் போர்க்களத்திலும் புதுநெறியை புகுத்துகிறது.

நியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வது நியாயம் தானா? விமர்சனம் செய்பவர்கள் சிந்திக்கட்டும்.

இது போல் திருக்குர்ஆனில் 4:89, 4:90 ஆகிய வசனங்களையும் எடுத்துக்காட்டி இஸ்லாம் காஃபிர்களைக் கொல்லச் சொல்கிறது என்றும் எனக் கூறுகின்றனர்.

அவர்கள் (ஏக இறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!

உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்துடன் சேர்ந்து கொண்டோரைத் தவிர. அல்லது உங்களை எதிர்த்துப் போரிடுவதையோ, தமது சமுதாயத்தை எதிர்த்துப் போரிடுவதையோ ஒப்பாமல் உங்களிடம் வந்து விட்டோரைத் தவிர. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது அடக்கியாளச் செய்திருப்பான். அப்போது அவர்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டிருப்பார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாது, உங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.

4:89 வசனத்தில் அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதுவும் பொதுவாக முஸ்லிமல்லாதவர்களை வெட்டிக் கொல்லச் சொல்வதாகப் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. அதற்கு அடுத்த வசனமான 4:90 ல்  உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானமாக நடக்க அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய எந்த நியாயத்தையும் அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை  எனக் கூறப்படுகிறது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? அவர்களை வெட்டுங்கள் என்பது போர்க்களத்தில் ஆயுதம் தாங்கி தாக்க வரும் எதிரிகளைக் குறித்து சொல்லப்பட்டதாகும் என அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமையில் ஒரு நாடு உருவான பின் அதை அழித்தொழிக்க படை திரட்டி வந்தால் அவர்களை சந்திக்க வேண்டிய விதத்தில் சந்திப்பதை யாரேனும் குறை கூற முடியுமா?

திருக்குர்ஆனில் ஜிஹாத் பற்றிக் கூறப்படும் வசனங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் தலைவர் என்ற முறையில் இடப்பட்ட கட்டளையாகும். என்னென்ன காரணங்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) போர் செய்தனர் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். அந்தக் காரணங்களுக்காக நடத்தப்படும் போர்கள் ஜிஹாத் ஆகும்.

முஸ்லிமல்லாத மக்களை வெட்டிக் கொல்வது ஜிஹாத் இல்லை. இதைப் புரிந்து கொண்டால் இந்த விமர்சனமும் தவறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

போர்க்களத்தில் தவிர மற்ற நேரங்களில் முஸ்லிமல்லாதவர்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) எப்படி நடந்தார்கள்? எப்படி நடக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது? இதையும் அறிந்து கொண்டால் இன்னும் தெளிவு கிடைக்கும்.

போர் வந்து விட்டால் கோழைகளாகச் சரணடையாதீர்கள்! எதிர்த்துப் போரிடுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுங்கள்! என்ற கட்டளையில் என்ன தவறு இருக்கிறது?

சமூகமாகவும், நல்லுறவுடனும் நடக்கக்கூடிய மாற்றார்களுடன் அதே விதமாக நடந்து கொள்ளுமாறு தான் இஸ்லாம் போதிக்கின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும் வரம்பு மீறக்கூடாது என்று தான் இஸ்லாம் போதிக்கின்றது.

மாற்று மதத்தினரை வெட்டிக் கொல்லுமாறு இஸ்லாம் கூறவேயில்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் பல மதத்தவர்களும் வாழ்ந்துள்ளனர்.

எனவே இவர்களின் இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது; அர்த்தமற்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாக இருந்த மதீனாவிலும், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்படவில்லை.

இஸ்லாம் ஒரு கடவுளைத் தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. மனிதர்கள் வணங்கக்கூடிய கற்சிலைகளுக்கு எவ்விதமான சத்தியும் கிடையாது என்பதிலும் இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்து கிடையாது. அதற்காகப் பிற மதத்தவர்களால் வழிபாடு செய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக் கூடாது என இஸ்லாம் திட்டவட்டமாக உத்தரவிடுகிறது.

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.

திருக்குர்ஆன் 6:108

எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.

திருக்குர்ஆன் 22:40

தான தர்மங்கள் செய்வதிலும், உதவிகள் புரிவதிலும், நீதியை நிலைநாட்டுவதிலும் முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் எனப் பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளையைப் பிறப்பிக்கிறது.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 60:8

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 5:8

முஸ்லிமல்லாத மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளையிட்டதோ அதற்கேற்பவே நபிகள் நாயகம் நடந்தார்கள்.

பிற மதத்தவர்களுடன் நபிகள் நடந்து கொண்ட முறையைப் பின்வரும் செய்தியில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

யூதப் பெண்ணொருத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்ட ஆட்டைக் கொண்டு வந்து கொடுத்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள். அவள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அழைத்து வரப்பட்டு அவளிடம் இது பற்றி விசாரித்தார்கள்.  உங்களைக் கொல்லும் நோக்கத்தில் அவ்வாறு செய்தேன்  என்று அவள் கூறினாள். அல்லாஹ் உனக்கு அந்தப் பொறுப்பைத் தரவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.  இவளைக் கொன்று விடட்டுமா?  என நபித்தோழர்கள் கேட்டதற்கு  கூடாது  என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(முஸ்லிம், அஹ்மது ஆகிய நூல்களில் இந்த வரலாற்று நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.)

இஸ்லாமியச் சட்டப்படி அவளைக் கொல்ல அனுமதியிருந்தும் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்கள்.

மாற்றார்களுடன் இத்தகைய சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) எப்படி நடந்துள்ளார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இஸ்லாமிய அரசில் தான் ஜிஹாத் கடமையா?

கேள்வி : இஸ்லாமிய அரசு இருக்கும் போது தான் ஜிஹாத் நம் மீது கடமையா ?

முஹம்மது மசூத்

பதில் :

உலகில் பெரும்பாலான முஸ்லிம்களாலும், முஸ்லிம் அல்லாதவர்களாலும் தவறாக விளங்கிக் கொள்ளப்பட்ட விசயங்களில் ஒன்று ஜிஹாத் என்பதாகும்.

ஜிஹாத் என்ற சொல்லுக்கு உழைத்தல், பாடுபடுதல், ஆய்வு செய்தல், அசத்தியத்தைத் தட்டிக் கேட்டல் எனப் பல அர்த்தங்கள் உள்ளன.

அவற்றில் ஒன்றுதான் ஆயுதம் ஏந்திப் போர் செய்தல் ஆகும்.

இந்த அர்த்தத்தில் அமைந்த ஜிஹாத் ஒரு அரசாங்கத்தின் கீழ் தான் செய்ய வேண்டும். அரசாங்கம் இல்லாமல் குழுக்களாக ஒன்று சேர்ந்து செய்வது ஜிஹாதில் சேராது. இதனைப் பின்வரும் வசனத்திலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா? எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம் என்று தமது நபியிடம் கூறினர். உங்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க மாட்டீர்கள் அல்லவா? என்று அவர் கேட்டார். எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது? என்று அவர்கள் கூறினர். அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன். "தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான் என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர். உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடலை (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 2:246, 247

மேற்கண்ட இரு வசனங்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் சென்ற ஒரு நபியின் வரலாற்றுச் செய்தியைக் கூறுகின்றன.

அந்த நபியின் சமுதாயத்தவர் எதிரிகளால் சொல்லொணாத துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஊரை விட்டும் விரட்டப்பட்டிருந்தனர். ஊரை விட்டு விரட்டப்பட்டிருந்தாலும் அந்த நபியின் தலைமையில் அவர்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிடவில்லை.

இந்த நேரத்தில் எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்கு தங்களுக்கு ஒரு மன்னரை நியமிக்குமாறு அந்த நபியிடம் அவரது சமுதாயத்தவர் வேண்டினார்கள். இந்த வேண்டுகோளுக்குப் பிறகு இறைவன் தாலூத் என்பவரை மன்னராக நியமித்து போர் செய்வதை அவர்கள் மீது கடமையாக்கினான் என்பது இவ்வசனங்கள் கூறும் வரலாறு.

இவ்வரலாற்றில் மிக முக்கியமான இரண்டு சட்டங்கள் பெறப்படுகின்றன.

படை திரட்டி யுத்தம் செய்வதென்றால் அதற்கு ஒரு ஆட்சியும், மன்னரும் இருப்பது அவசியம் என்பது இதில் பெறப்படும் முதலாவது சட்டம். ஏனெனில் அந்தச் சமுதாயம் மிகப்பெரும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், போர் செய்வதற்கான எல்லா நியாயங்களும் இருந்தும் அவர்கள் போர் செய்யவில்லை.

அவர்களுக்குத் தலைமை தாங்கிய நபியும் போர் செய்யவில்லை. மாறாக ஒரு மன்னரை நியமிக்குமாறு இறைவனிடம் கோரிக்கை வைத்து இறைவன் மன்னரை நியமித்த பிறகு தான் அவர்கள் போரிட்டுள்ளார்கள்.

போர் செய்வதற்கு ஆட்சியோ, மன்னரோ அவசியம் இல்லை என்றால் அவர்களின் கோரிக்கையை ஏற்று மன்னராக ஒருவரை இறைவன் நியமித்திருக்க மாட்டான்.

இறைத் தூதர்கள் உலகில் ஆட்சியைப் பிடிப்பதற்காக அனுப்பப்பட்டவர்களல்லர். மாறாக தமது சமுதாயத்தை ஓரிறைக் கொள்கையை நோக்கியும், ஒழுக்கத்தை நோக்கியும் அழைப்பதற்காகவே அனுப்பப்பட்டனர் என்பது இந்நிகழ்ச்சியிலிருந்து பெறப்படும் இரண்டாவது சட்டமாகும்.

ஏனெனில் இந்த நிகழ்ச்சியில் ஒரு இறைத்தூதர் உலகில் இருக்கும் போதே இறைத்தூதர் அல்லாத இன்னொருவரை இறைவன் மன்னராக நியமிக்கிறான். அந்த இறைத்தூதரும் அம்மன்னரின் கீழ் போரிடும் நிலையையும் ஏற்படுத்துகிறான். நபியையே மன்னராக இறைவன் நியமிக்கவில்லை.

சிறிய இயக்கத்தை அமைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வோம் என்று மக்களை மூளைச் சலவை செய்து ஆயுதம் தாங்கி வன்முறையில் ஈடுபடுவோர் ஜிஹாத் செய்பவர்கள் அல்ல என்பது இவ்வசனங்களில் இருந்து தெளிவாக தெரிகிறது.

ஒரு இறைத்தூதர் தலைமையில் உருவான சமுதாயமாக இருந்தாலும் கூட ஆட்சி அமைக்காமல் போர் செய்யக் கூடாது என்று இவ்வசனம் தெளிவாகச் சொல்வதே இவர்களின் வாதம் தவறு என்பதற்குத் தக்க சான்றாகும்.

பின்வரும் ஹதீஸும் போர் செய்வதற்கு ஆட்சியும், ஆட்சித் தலைவரும் அவசியம் என்பதற்கு மிகப்பெரும் சான்றாகும்.

وَبِهَذَا الْإِسْنَادِ مَنْ أَطَاعَنِي فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ عَصَانِي فَقَدْ عَصَى اللَّهَ وَمَنْ يُطِعْ الْأَمِيرَ فَقَدْ أَطَاعَنِي وَمَنْ يَعْصِ الْأَمِيرَ فَقَدْ عَصَانِي وَإِنَّمَا الْإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتَّقَى بِهِ فَإِنْ أَمَرَ بِتَقْوَى اللَّهِ وَعَدَلَ فَإِنَّ لَهُ بِذَلِكَ أَجْرًا وَإِنْ قَالَ بِغَيْرِهِ فَإِنَّ عَلَيْهِ مِنْهُ

இமாம் என்பவர் ஒரு கேடயமாவார்! அவருக்குப் பின்னால் நின்று மக்கள் போராடுவார்கள். அவரையே மக்கள் அரணாக ஆக்கிக் கொள்வார்கள். அவர் அல்லாஹ்வின் அச்சத்தை ஏவி, நீதமாக நடந்தால் அதற்குரிய கூலி அவருக்குக் கிடைத்து விடும். அதற்கு மாறானதை அவர் சொன்னால் அந்தப் பாவத்தில் அவருக்குப் பங்கு கிடைக்கும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)

நூல் : புகாரி 2957

இமாம் என்றால் ஆட்சித் தலைவர் என்பது பொருளாகும்.

05.03.2012. 11:25 AM

இஸ்லாமியப் போர்கள்

முஸ்லிமல்லாதவர்களை மதமாற்றம் செய்வதற்காகவும், மறுப்பவர்களைக் கொன்று குவிப்பதற்காகவும், பிறநாட்டில் உள்ள அழகு மங்கையரைக் கவர்ந்து செல்வதற்காகவும், அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் முஸ்லிம்கள் படையெடுத்து உள்ளனர். இஸ்லாம், பிற மதங்களைச் சகித்துக் கொள்ளாத மார்க்கம் என்பதற்கு அது வாள்முனையில் பரப்பப்பட்ட மார்க்கம் என்பதற்கும் இந்தப் போர்களும் படையெடுப்புகளும் சான்றாக உள்ளன.

முஸ்லிமல்லாதவர்கள் அடிக்கடி எழுப்பிவரும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.

முகலாய மன்னர்களும், வேறு பல முஸ்லிம் மன்னர்களும் இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததையும், நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஏராளமான போர்களை நிகழ்த்தியதையும் தங்கள் வாதத்துக்குச் சான்றாக அவர்கள் எடுத்துக் காட்டுகின்றார்கள்.

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தது உண்மை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல போர்களைச் சந்தித்ததும் உண்மை. ஆயினும் இவற்றை ஆதாரமாகக் கொண்டு எடுத்து வைக்கப்படும் வாதங்கள் தாம் உண்மைக்கு அப்பாற்பட்டவை.

இவர்கள் எடுத்துக் காட்டுகின்ற இரண்டு ஆதாரங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இந்தக் காரணங்களுக்காகப் போர் செய்திருந்தால் அதைக் காரணமாகக் கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் செய்வதில் நியாயம் உள்ளது. அவர்களைத் தவிர ஏனைய முஸ்லிம் மன்னர்கள் எந்தக் காரணங்களுக்காகப் போர் செய்திருந்தாலும் அதற்காக இஸ்லாத்தை விமர்சிப்பது அறிவுடைமையாகாது.

ஆகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த போர்களைப் பற்றி மட்டும் விளக்குவது தான் நமது பொறுப்பாகும். ஆயினும் நாம் வாழக்கூடிய நாட்டில் முஸ்லிம் மன்னர்கள் படையெடுத்து வந்தது, பற்றியே பிரதானமாகப் பேசப்படுவதால் இஸ்லாத்துக்கும், முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாவிட்டாலும் அதுபற்றிச் சுருக்கமாக ஆராய்ந்து விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த போர்களைப் பற்றி ஆராய்வோம்.

அன்றைய காலத்தில் போர்கள் சர்வ சாதாரணமாக நடந்து வந்தன. மன்னர்களின் சுயநலத்திற்காகப் போர்கள் செய்யப்பட்டன.

அன்றைக்குத் தனித்தனி நாடுகளாக விளங்கிய சேர, சோழ, பாண்டிய நாட்டு மன்னர்கள் ஒருவருடன் ஒருவர் போர் புரிந்த வரலாறு உண்டு. அன்றைக்குத் தனிநாடாக விளங்கிய வடநாட்டின் மீது பாண்டிய மன்னன் படை நடத்திச் சென்று வெற்றி பெற்ற வரலாறும் உண்டு.

இந்த நாட்டைச் சுரண்டுவதற்காக ஆரியர்கள் படையெடுத்து வந்த வரலாறும் உண்டு.

மத நம்பிக்கையில்லாத திராவிடர்கள் மீது ஆரியர்கள் இந்து மதத்தைத் திணித்த வரலாறும் உண்டு.

பல நாடுகள் மீது படையெடுத்துச் சென்ற அலெக்சாண்டரின் வீர(?) வரலாறும் உண்டு. வெள்ளையர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றிக் கொண்ட சமீபத்திய வரலாறும் உண்டு.

தங்கள் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்வதற்காகவும், பகைமை கொண்டிருந்த அண்டை நாட்டு மன்னனுக்குப் பாடம் புகட்டுவதற்காகவும், வளங்களை வாரி செல்வதற்காகவும் எத்தனையோ படையெடுப்புகளை உலகம் சந்தித்துள்ளது. அது போன்ற ஒரு படையெடுப்பே முகலாயர்களின் படையெடுப்பு.

முஸ்லிம் படையெடுப்புகள்

வெண்ணி, வாகை, புள்ளலூர், பரியலம், மணிமங்கலம், நெய்வேலி, பெண்ணாடகம், விழிஞம், தெள்ளாறு, திருப்புறம்பியம், வெள்ளூர், தக்கோலம், நொப்பம், கூடல், கலிங்கம், ஈழம், சுமந்திரம், மகேந்திரமங்கலம் மற்றும் கண்ணனூர் ஆகிய போர்கள் தமிழக அளவில் இந்து மன்னர்கள் நிகழ்த்திய போர்களில் சில. இன்னும் ஏராளமான போர்கள் தமிழக அளவிலும், இந்திய அளவிலும் நிகழ்ந்துள்ளன.

இந்தப் போர்களுக்கெல்லாம் எவை காரணமாக இருந்தனவோ அவை தாம் முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புக்கும் காரணங்களாக இருந்தன. நிச்சயமாக மதத்தைப் பரப்புவதோ, மதமாற்றம் செய்வதோ இதற்குக் காரணங்களாக இருந்ததில்லை.

முஸ்லிம் மன்னர்கள் 800 ஆண்டு காலம் இந்த நாட்டை ஆட்சி புரிந்தனர்.

அவர்கள் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவில்லை. ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயங்கள் இதற்கு இன்றளவும் சாட்சியமளித்துக் கொண்டிருக்கின்றன. இந்துக் கோவில்களைக் கட்டிய முஸ்லிம் மன்னர்களும், அவற்றுக்கு மானியம் வழங்கிய முஸ்லிம் மன்னர்களும் இருந்துள்ளனர்.

இஸ்லாம் தடை செய்துள்ள ஆடல் பாடல்களை அவர்கள் தடை செய்ததில்லை. வட்டியை அவர்கள் ஒழித்ததில்லை. குற்றங்களுக்கு இஸ்லாம் கூறக்கூடிய தண்டனைகளை அவர்கள் சட்டமாக்கவில்லை. அரசுப் பதவிகளில் முஸ்லிமல்லாதவர்களைப் பெருமளவு நியமித்திருந்தார்கள். முஸ்லிமல்லாத பெண்களை மணந்தார்கள்.

இன்னும் இஸ்லாத்தின் ஆயிரமாயிரம் கட்டளைகளைப் புறக்கணித்தவர்கள் இஸ்லாத்தை இந்த நாட்டில் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக எப்படி இருந்திருக்க முடியும்?

இஸ்லாத்தை விட்டு வெகுதூரம் விலகியிருந்த முஸ்லிம் மன்னர்கள் வாளால் மிரட்டி இந்திய மக்களை முஸ்லிம்களாக்கினார்கள் என்று நியாய உணர்வுடைய எவருமே கூறத் துணிய மாட்டார்.

நவீன ஆயுதங்களுடன் இந்த நாட்டை அடிமைப்படுத்திய வௌ்ளையர்களை 200 ஆண்டுகளில் நாட்டு மக்கள் விரட்டியடித்துள்ளனர். அதற்கு முன்பே அவர்களை வெளியேற்ற ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன.

ஆனால் முஸ்லிம் மன்னர்கள் கத்தி, அரிவாள், வாள், கேடயம் போன்ற சாதாரண ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட காலத்தில் படையினரின் எண்ணிக்கையே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்ற காலத்தில் 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர். முஸ்லிம் மன்னர்கள் மதமாற்றம் செய்வதில் ஈடுபட்டிருந்தாலோ, வாள் முனையில் மிரட்டியிருந்தாலோ ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்த அவர்களை இந்த நாட்டு மக்கள் வெறும் கையாலேயே அடித்து விரட்டியிருப்பார்கள். முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டில் 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது அவர்கள் மக்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை என்பதற்குச் சான்றாக உள்ளது.

ஆயினும் ஒரு விஷயத்தை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். மோசமான நடத்தையுடைய முஸ்லிம் மன்னர்களின் மோசமான ஆட்சி, அதற்கு முன் நடந்த படு மோசமான இந்து மன்னர்களின் ஆட்சிகளை விட சிறப்பானதாக இருந்தது. இல்லையென்றால், மிகச் சிறு படையுடன் வந்தவர்களை இந்திய மக்கள் பல நூற்றாண்டுகள் வரை சகித்துக் கொண்டிருக்க முடியாது.

படு மோசமான ஆட்சியாளர்களைக் கண்டு வெறுப்புற்றிருந்த மக்களுக்கு முஸ்லிம்களின் ஆட்சி சிறப்பானதாகத் தென்பட்டதாலேயே அவர்களை ஆளவிட்டார்கள்.

முஸ்லிம் மன்னர்கள் பரங்கியர்களிடம் தான் ஆட்சியைப் பறிகொடுத்தார்களே மக்கள் அவர்களை விரட்டியடிக்க எந்தப் போராட்டமும் நடத்தியதில்லை.

இந்து மன்னர்கள் நடத்திய போர்களை இந்துமதம் தான் தூண்டிவிட்டது என எப்படிக் கூற முடியாதோ அது போலவே முஸ்லிம்கள் நிகழ்த்திய போர்களை எல்லாம் இஸ்லாம் தூண்டிவிட்டது என்றும் கூற முடியாது.

சுருங்கச் சொல்வதென்றால் வாள்முனையில் எந்த மதத்தையும் பரப்ப முடியாது. பரப்ப முடியும் என்றாலும் இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் நிச்சயமாக யாரையும் வற்புறுத்தி மதமாற்றம் செய்ததில்லை. அப்படியே செய்திருந்தார்கள் என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் அதற்கும், இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை. ஏனெனில் திருக்குர்ஆனில் கூறப்பட்டவையும், நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழியும் தான் இஸ்லாம். முஸ்லிம் பெயர் தாங்கிகளின் தவறான செயல்களுக்கு இஸ்லாம் பொறுப்பாகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏராளமான யுத்தங்களில் ஈடுபட்டுள்ளார்களே! அவர்களும் நாடு பிடித்துள்ளார்களே? இதற்கு என்ன கூறுகிறீர்கள்? என்ற அடிப்படையான விஷயத்துக்கு வருவோம்.

அது பற்றி நாம் விரிவாக விளக்க வேண்டியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த போர்க்களங்கள் எந்த அடிப்படையிலானவை? என்பதை விரிவாகக் காண்போம்.

நபிகள் நாயகம் அவர்களின் போர்கள் நாடு பிடிப்பதற்காகவா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் முன்னூற்றுக்கும் சற்று அதிகமான தோழர்களும், மக்காவின் எதிரிகளுடன் பத்ர் எனுமிடத்தில் போர் புரிந்தனர். ஆயிரம் பேர் கொண்ட எதிரிகளின் படை இந்த முதல் போரிலேயே படுதோல்வி கண்டு ஓடலாயிற்று. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாபெரும் வெற்றி பெற்றனர். அனைவரும் அறிந்து வைத்துள்ள வரலாற்று நிகழ்ச்சி இது.

நாடு பிடிப்பது அவர்களின் நோக்கம் என்றால் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? தோல்வியுற்று ஓடுபவர்களை விரட்டிச் சென்றிருக்க வேண்டும்.

விரட்டிச் சென்று அவர்களைக் கொன்று குவித்திருக்க வேண்டும். மேலும் முன்னேறி எதிரிகளின் தலைநகரம் மக்கா வரை சென்று வெறியாட்டம் போட்டிருக்க வேண்டும். அந்த ஒரு போரிலேயே மக்கா அவர்களின் கைவசமாக ஆகிவிடக் கூடிய அருமையான சூழ்நிலை இருந்தது. வெற்றியடைந்த எந்தத் தலைவரும் நடந்து கொள்ளும் முறையும் அது தான்.

பத்ர்  எல்லையைத் தாண்டி அவர்கள் ஓரடியும் எடுத்து வைக்கவில்லை. நாடு பிடிப்பது அவர்களின் நோக்கமில்லை என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

உம்ரா வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான தம் தோழர்களுடன் புறப்பட்டு மக்காவுக்குச் சென்றனர். ஹுதைபியா எனும் இடம் வரை வந்து விட்டனர். மக்காவுக்குள் அனுமதிக்க எதிரிகள் மறுத்தனர். நபியவர்களுக்கு ஆத்திரமூட்டும் அளவுக்குப் பிடிவாதம் பிடித்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாடு பிடிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அரை மணி நேரத்திற்குள் மக்கா நகரம் அவர்களின் வசமாகியிருக்கும்.

ஆனாலும் நபியவர்கள் பல விஷயங்களில் விட்டுக் கொடுத்து அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டனர். மக்காவுக்குச் சென்று உம்ராவை நிறைவேற்றாமலேயே திரும்பி வந்தனர். இதுவும் அனைவராலும் அறியப்பட்ட வரலாறு தான்.  நாடு பிடிக்கும் எண்ணம் நபியவர்களுக்கு இருந்ததில்லை என்பதற்கு இவையே போதுமாகும்.

கொள்ளையிடுவதற்காகவா?

எதிரி நாட்டு வளங்களைக் கொள்ளையிடுவதற்காகப் போர் நடத்தினார்களா? என்றால் நிச்சயமாக இல்லை.  தாயிஃப்  நீங்கலாக உள்ள மற்ற பகுதிகள் எதுவும் மதினாவை விட வளமானதாக இருந்ததில்லை. பொருளாதாரத்தைக் கொள்ளை அடிப்பது போருக்கான நோக்கமாக இருக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் அவர்களுக்குத் தெளிவான கட்டளையும் பிறப்பித்துள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) சென்றால் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! உங்களுக்கு ஸலாம் கூறியவரிடம் இவ்வுலக வாழ்க்கையின் பொருட்களைப் பறிப்பதற்காக  நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை என்று கூறி விடாதீர்கள்! அல்லாஹ் விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்தான். எனவே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

 திருக்குர்ஆன் 4:94

கொள்ளையடிப்பது அவர்களின் குறிக்கோளாக இருக்கலாகாது என்று குர்ஆன் தெளிவான கட்டளையிட்டிருக்கும் போது அவர்கள் நடத்திய போருக்கு இது காரணமாக இருக்க முடியாது.

பழிவாங்குவதற்கா?

எதிரிகள் ஏற்கனவே செய்த கொடுமைகளுக்குப் பழிவாங்குவதற்காக போர்க்களங்களைச் சந்தித்தார்களா? நிச்சயமாக அதுவுமில்லை.

மக்காவில் வெற்றி வீரராக நபியவர்கள் நுழைந்த நேரத்தில் பழிவாங்குவதற்குரிய அத்தனை காரணங்களும் இருந்தன. சக்தியும் இருந்தது. நபிகள் நாயகத்தைக் கல்லால் அடித்தவர்கள் அங்கே நின்றார்கள். அவர்களைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியவர்களும், அவர்கள் நாடு துறக்கக் காரணமானவர்களும், அவர்களின் தோழர்களைச் சுடுமணலில் கிடத்தியவர்களும், தூக்கில் தொங்கவிட்டவர்களும், மதீனாவுக்குச் சென்ற பின்பும் பல முறை அவர்களுடன் போர் புரிந்தவர்களும், இப்படிப் பலரும் அங்கே நின்றார்கள். தங்களின் கதி என்னவாகுமோ என்று பயந்து போய் நின்றார்கள்.

அனைவருக்குமே பொதுமன்னிப்பு வழங்கியது தான் அவர்கள் வழங்கிய தண்டனை. பழி வாங்குவதற்குரிய அத்தனை நியாயங்களும் அவர்கள் பக்கம் இருந்தன. ஆனாலும் எவரையும் பழி வாங்கவில்லை. இந்த ஒரு நிகழ்ச்சியே அவர்களின் உயர் பண்புக்கு போதுமான சான்றாகும்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 5:8

என்று இறைவன் கட்டளையிட்டிருக்கும் போது எப்படி அவர்கள் அதை மீறியிருப்பார்கள்?

صحيح البخاري رقم فتح الباري (4/ 61) 3014 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَخْبَرَهُ: أَنَّ امْرَأَةً وُجِدَتْ فِي بَعْضِ مَغَازِي النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقْتُولَةً، «فَأَنْكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتْلَ النِّسَاءِ وَالصِّبْيَانِ»

ஒரு போர்க்களத்தில் பெண்ணொருத்தி கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை ஆட்சேபித்து பெண்களையும், சிறுவர்களையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல்கள் : புகாரி 3014 முஸ்லிம்

போர்க்களத்தில் எந்தத் தர்மமும் பார்க்க வேண்டியதில்லை என்பது உலகமெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபாக இருந்தும் இங்கேயும் புது நெறியைக் கற்றுத் தரும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளம் விசாலமானதாக இருந்தது. எனவே பழி வாங்குதல் என்பதை அவர்களிடம் கற்பனை கூட செய்ய முடியாது.

மதமாற்றம் செய்வதற்காகவா?

மற்றவர்களை மதமாற்றம் செய்வதற்காக போர் நடத்தினார்களா? என்றால் நிச்சயமாக அதுவும் இல்லை.

இம்மார்க்கத்தில் எந்தவித நிருபந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாக உள்ளது.

திருக்குர்ஆன் 2 : 256

அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் கட்டாய மதமாற்றத்தை தடை செய்கின்றது. வெற்றியடைந்த பின் அம்மக்களிடம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வார்கள். விரும்பியவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். விரும்பாதவர்கள் ஜிஸ்யா வரி செலுத்திவிட்டு தம் மதத்திலேயே நீடிப்பார்கள். (ஜிஸ்யா வரி பற்றி பின்னர் விளக்கப்பட்டுள்ளது.)

இணை வைப்பவர்களில் (அதாவது பிற மதத்தவர்களில்) உள்ள எவரேனும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் இறைவனின் வார்த்தையை அவர் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் கொடுப்பீராக! பின்னர் அவருக்கு பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்த்து விடுவீராக! எனெனில் அவர்கள் அறியாத மக்களாக உள்ளனர்.

திருக்குர்ஆன் 9:6

பிற மதத்தவர்களிடம் நபியவர்களின் நடைமுறை எத்தகையதாக இருந்தது என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.

எதற்காகப் போர் செய்தனர்?

மேற்கண்ட காரணங்களுக்காகப் போர் நடக்கவில்லை என்றால் அவர்களே போர் நடத்தியதாகச் சொல்லப்படுவது பொய்யா? அதற்கு வேறு காரணங்கள் ஏதும் உள்ளனவா? என்ற கேள்விக்கு வருவோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தப் போரிலும் பங்கெடுத்ததில்லை என்று நாம் சொல்லவில்லை. கமண்டலமும், ஜெப மாலையும் வைத்துக் கொண்டு சன்னியாசியாக வாழ்ந்தார்கள் என்றும் நாம் சொல்லவில்லை.

தாங்களே களத்தில் இறங்கியுள்ளார்கள். மிகச் சிறந்த படைத் தளபதியாக இருந்தார்கள். எத்தனை ஒட்டகங்களை எதிரிகள் அறுத்துள்ளனர் என்பதை விசாரித்து எதிரிகளின் எண்ணிக்கையை சரியாக மதிப்பிடக் கூடிய அளவுக்கு திறமை மிக்க தலைவராக இருந்தார்கள். இதையெல்லாம் நாம் மறுக்கவில்லை. அவர்கள் படை நடத்திச் சென்றதற்கு நியாயமான சில காரணங்கள் இருந்தன.

முதலாவது காரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் சொந்த ஊரிலிருந்து அநியாயமாக விரட்டப்பட்டு மதீனா வந்து அங்கே வாழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது மக்காவை விட்டு அவர்களை விரட்டியவர்கள், அவர்களையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் பூண்டோடு கருவறுப்பதற்காக படையெடுத்து வந்தனர். அவர்களை எதிர்த்துப் போரிடவில்லையானால் மொத்தச் சமுதாயமும் அழிந்துவிடக் கூடிய அபாயம் ஏற்பட்ட போது எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக நபிகள் நாயகம் (ஸல்) போர்களைச் சந்தித்துள்ளனர். எல்லாப் போர்களுக்கும் இதுவே காரணமில்லை என்றாலும் சில போர்கள் இந்த ஒரு காரணத்துக்காகவே நடத்தப்பட்டன.

நியாய உணர்வுடைய எவரும் இதில் குறை காண மாட்டார்கள். இந்தக் காரணத்துக்காக நடத்தப்பட்ட போர்களில் இரண்டை மட்டும் இங்கே நாம் விளக்குவோம்.

 உஹதுப் போர்  என்பது பிரசித்தி பெற்ற போராகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமையேற்று நடத்திய இந்தப் போர்  உஹத்  எனும் மலையடிவாரத்தில் நடந்ததால்  உஹதுப் போர்  என்று இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றது.

போர் நடந்த இடம் மதீனாவுக்கு ஐந்து மைல் தொலைவில் உள்ளது. மக்காவிலிருந்து ஏறத்தாழ முன்னூறு மைல் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. அதாவது மக்காவாசிகளான எதிரிகள் சுமார் முன்னூறு மைல்களைக் கடந்து மதீனாவின் எல்லை வரை வந்து விட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெறும் ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்தித்தனர்.

முன்னூறு மைல்கள் கடந்து வந்தவர்கள் வம்புச் சண்டைக்கு வந்தவர்களா? ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்தித்த நபியவர்கள் வம்புச் சண்டைக்குச் சென்றார்களா? முன்னூறு மைல்களைக் கடந்து வருவதென்றால் அன்றைய காலத்தில் அதற்கு எவ்வளவு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்! எவ்வளவு நாட்களுக்கு முன் புறப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையிலும் ஆட்சித் தலைவராக உள்ள நபியவர்கள் தமது குடிமக்கள் நலனைப் பேண வேண்டிய நபியவர்கள் இதைக் கண்டு கொள்ளாமலிருக்க வேண்டும் என்று எவருமே எதிர்பார்க்க முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பங்கெடுத்த இரண்டாவது போரின் நிலை. இதுவென்றால், அவர்கள் சந்தித்த முதல் போரின் நிலையும் இத்தகையது தான்.

 பத்ருப் போர்  என்று அறியப்படும் இப்போர் பத்ரு எனும் பள்ளத்தாக்கில் நடைபெற்றது. இந்த இடம் மதீனாவுக்கு எண்பது மைல் தொலைவிலும், மக்காவுக்கு இருநூறு மைல்களை விட அதிக தூரத்திலும் அமைந்துள்ளது.

வலியப் போர் செய்ய நபியவர்கள் சென்றிருந்தால் மக்காவுக்கு அருகில் உள்ள இடத்தில் போர் நடந்திருக்க வேண்டும். மதீனாவுக்கு அருகிலேயே இப்போர் நடந்துள்ளதால் இதுவும் தற்காப்புப் போர் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அறியலாம்.

தங்களின் ஒப்பந்தங்களை முறித்துவிட்டவர்களுடன் நீங்கள் போரிட வேண்டாமா? (இறைத்) தூதரை வெளியேற்றத் திட்டமிட்டவர்களுடன் (நீங்கள் போரிட வேண்டாமா?) மேலும் அவர்களே உங்களிடம் முதலில் ஆரம்பித்துள்ள நிலையில் (நீங்கள் போரிட வேண்டாமா?)

திருக்குர்ஆன் 9:13

போரை முதலில் துவக்கியவர்களே அவர்கள் தான் என்று திருக்குர்ஆனும் குறிப்பிடுகின்றது. சில போர்கள் இந்தக் காரணத்துக்காகவே நடத்தப்பட்டன. இதையும் குறை கூற முடியாது.

இரண்டாவது காரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்ற பின் அங்குள்ள மக்களின் பேராதரவுடன் ஒரு ஆட்சியை நிறுவினார்கள். மதீனாவும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் அந்த நாட்டின் எல்லைகளாக இருந்தன. சிறியதோ, பெரியதோ ஒரு நாடு என்று ஆகிவிட்டால் அதற்கென இறையாண்மை உண்டு. அதை மற்ற நாடுகள் பேணி நடக்க வேண்டும். ஒரு நாட்டுக்குள் அன்னிய நாட்டவர் பிரவேசிக்க வேண்டுமானால் அந்த நாட்டின் முன் அனுமதி பெற வேண்டும். இது இன்றைக்கு மட்டுமல்ல. நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட மரபாக இருந்தது.

இதனால் தான் மக்காவுக்கு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றச் சென்ற நபியவர்கள் மக்காவாசிகளின் ஆட்சேபணைக்கிணங்க திரும்பி வந்தார்கள்.

ஆனால் மக்காவாசிகள் மதீனாவின் இறையாண்மையில் அவ்வப்போது குறுக்கிட்டுக் கொண்டிருந்தனர். பல ஊர்களுக்கு வியாபாரம் செய்யச் சென்றுவிட்டு மக்கா வியாபாரிகள் திரும்பும் போது மதீனாவுக்குள் புகுந்தோ அல்லது மதீனா எல்லைக்குள் புகுந்தோ போய் வந்து கொண்டிருந்தார்கள். இப்படி அனுமதியின்றி அத்துமீறுபவர்களை வழிமறிக்கவும் அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்யவும் நபியவர்கள் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டார்கள். இதனால் அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் நடந்துள்ளன. பத்ருப் போர்க்களத்துக்குச் சற்று முன்னால் மக்காவின் தலைவரான அபூசுஃப்யானின் வணிகக் கூட்டம் வழிமறிக்கப்பட்டதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எந்த ஆட்சித் தலைவருக்கும் கடமையான ஒரு காரியமாகவே இதைக் கொள்ள வேண்டும். தத்தமது நாடுகளில் இத்தகைய அத்துமீறல்களை எந்த ஆட்சியாளரும் அனுமதிப்பார்களா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மூன்றாவது காரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாயகம் மக்காவாகும். அவர்களுடன் தியாகப் பயணம் மேற்கொண்ட அனைவரின் தாயகமும் மக்காவாகும். சொந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள் என்று இவர்களைக் கூறலாம்.

நபிகள் நாயகத்தை எதிர்த்த மக்காவாசிகளுக்கு மக்காவில் எந்த அளவு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு நபிகள் நாயகத்துக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் உரிமை உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்த பின் அவர்களின் சிறப்பையும், அவர்களின் உண்மையான கொள்கைகளையும் உணர்ந்து மக்காவாசிகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வந்தனர். ஏற்றுக் கொண்டவர்களெல்லாம் மக்காவின் தலைவர்களது கொடுமைக்கு அஞ்சி மக்காவை விட்டு வெளியேறி மதீனாவுக்குச் சென்றனர்.

பெரும்பாலான மக்காவாசிகள் இவ்வாறு வெளியேற்றப்பட்டனர். இழந்ததை   சொந்த நாட்டை மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் நபியவர்கள் மக்காவை இரத்தம் சிந்தாமலேயே வெற்றி கொண்டனர். இழந்ததை மீட்பதற்காக நடத்தப்படும் போர்களும் நியாயமான போர்களே.

தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக போரிடுபவர்களுக்கு (அதற்கு) அனுமதியளிக்கப்படுகின்றது. மேலும் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய சக்தி பெற்றவனாவான். அவர்கள் தங்கள் நாடுகளிலிருந்து  எங்கள் இறைவன் அல்லாஹ்  என்று கூறியதற்காக அநியாயமாக வெளியேற்றப்பட்டனர்.

திருக்குர்ஆன் 22 : 39

அநீதியிழைக்கப்பட்டவர்கள் அடங்கிப் போகாமல் எதிர்த்துப் போரிடுமாறு திருக்குர்ஆனின் இவ்வசனம் கட்டளையிடுகிறது. இழந்ததை மீட்பதற்காகக் கூட போர் செய்யக் கூடாது என்று யாரும் கூற மாட்டார்கள்.

தங்கள் தாயகத்தை மீட்பதற்காகப் போராடும் பாலஸ்தீனியர்களை இந்தியா உள்ளிட்ட அனேக நாடுகள் ஆதரிப்பதற்கு எவ்வளவு நியாயங்கள் இருக்கின்றனவோ அந்த அளவு நியாயங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமும் இருந்தது. இதையும் நியாய உணர்வு படைத்த எவரும் குறை சொல்ல மாட்டார்கள்.

நான்காவது காரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் நல்லாட்சி ஒன்றை நிறுவியது மக்காவின் தலைவர்களுக்கு எப்படிச் சகித்துக் கொள்ள முடியாததாக இருந்ததோ அது போலவே மதீனாவைச் சுற்றிலும் வாழ்ந்த யூதர்களுக்கும் சகித்துக் கொள்ள முடியாததாக இருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகைக்கு முன் யூதர்கள் மதீனாவைத் தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். நபிகள் நாயகத்தின் வருகைக்குப் பின் மதீனத்து மக்களில் மிகப் பெரும்பாலோர் (மதீனத்து யூதர்கள் உட்பட) நபியின் தலைமையை ஏற்றுக் கொண்டார்கள்.

இதனால் சுற்று வட்டாரத்தில் இருந்த யூதர்கள் சதிவேலைகளில் ஈடுபடலாயினர். சில்லறை விஷமங்களையும் செய்து வந்தனர். மக்காவுக்குத் தகவல் அனுப்பும் ஏஜெண்டுகளாகச் செயல்பட்டனர். இஸ்லாத்தை அறிந்து கொள்ள என்று கூறி சில நபித்தோழர்களை அழைத்துச் சென்று கோரமாகக் கொலை செய்தனர். நபிகள் நாயகத்துடன் பல தடவை ஒப்பந்தம் செய்துவிட்டு ஒவ்வொரு தடவையும் அதை மீறி வந்தனர். இத்தகைய நம்பிக்கைத் துரோகிகளுடனும் நபியவர்கள் போர் செய்துள்ளனர். யூதர்களுடன் நடைபெற்ற போர்களில் பெரும்பாலானவை இந்த காரணத்துக்காக நிகழ்த்தப்பட்டவையே.

இதுவரை கூறிய நான்கு காரணங்களுக்காகப் போர் செய்வதை நேர்மையான ஆட்சியாளர்கள் என்று மாற்றார்களால் போற்றப்படும் தலைவர்கள் கூட தவிர்த்ததில்லை. நாம் வாழும் நாட்டுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டால் போரில் ஈடுபடுவதையே நாம் வரவேற்போம். இவையல்லாத மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு.

ஐந்தாவது காரணம்

ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் இன்னொரு நாடு தலையிடக் கூடாது என்பதை உலகம் ஒரு கொள்கையாகக் கொண்டுள்ளது. உலகில் அமைதி நிலவிட இந்தக் கொள்கை அவசியமானது தான்.

ஆனாலும் இதற்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் இன்னொரு நாட்டின் விவகாரத்திலும் தலையிடுவது தவறில்லை என்பதையும் உலகம் ஒப்புக் கொண்டிருக்கிறது.

ஒரு மனிதன் தன் மனைவியை ஏசுகிறான். அடுத்த வீட்டு விவகாரம் என்று இருந்து விடலாம். அவளைப் பட்டினி போடுகிறான். அப்போது கூட அடுத்த வீட்டு விவகாரம் என்று விட்டு விடலாம். கூர்மையான கத்தியால் அவளைக் குத்திக் கொலை செய்யப் போகிறான். அப்போதும் அடுத்த வீட்டு விவகாரம் என்று பேசாமல் எவரும் இருக்க முடியாது. அப்படி இருந்தால் அவன் மனிதனாகவே இருக்க முடியாது. அடுத்த வீட்டு விவகாரத்திற்கு நாம் வைத்திருக்கும் எல்லை அடுத்த நாட்டுக்கும் பொருந்தக் கூடியது தான்.

ஒரு கொடுங்கோலன் தனது குடிமக்களைக் கொடுமைப்படுத்துகிறான். தாங்க முடியாத அளவுக்குக் கொடுமை அதிகரிக்கின்றது. அவனை எதிர்ப்பதற்கான துணிவோ, பலமோ அம்மக்களுக்கு இல்லை. அந்த நாட்டு மக்களே இந்தக் கொடுங்கோலன் தொலைய மாட்டானா? இந்த நாட்டை விட்டு நாம் வெளியேறி விடுவோமா? என்று ஏங்குகின்றனர். இந்த நிலையில் அந்த நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அம்மக்களை மீட்பதை இஸ்லாம் அனுமதிக்கின்றது.

பலவீனமான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும்  எங்கள் இறைவா! இந்த அக்கிரமக்கார ஊரிலிருந்து எங்களை வெளியேற்றி விடுவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு புறத்திலிருந்து ஒரு உதவியாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! என்று கூறிக் கொண்டுள்ள நிலையில் அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன வந்துவிட்டது.

திருக்குர்ஆன் 4 : 75

யாராவது உதவிக்கு வர மாட்டார்களா என்று ஒரு நாட்டு மக்களே எதிர்பார்க்கும் நிலையில் அந்த அக்கிரம ஆட்சியாளருக்கு எதிராகப் போரிடுமாறு இந்த வசனம் கட்டளையிடுகின்றது.

மக்களைச் சுரண்டி, கொள்ளையடித்து, நிற்பதற்கு வரி, நடப்பதற்கு வரி, பேசுவதற்கு வரி, எழுத வரி, திருமண வரி, சாவு வரி, வியாபார வரி, விவசாய வரி, வாகனத்துக்கு வரி, குழந்தை பிறப்பதற்கு வரி என்று தாங்க முடியாத வரிகளை மக்கள் மீது சுமத்தி, இப்படிப் பெறப்பட்ட பணத்தை மக்களுக்குச் செலவிடாமல் தங்கத்தால் செருப்பு முதல் சிம்மாசனம் வரை தங்களுக்குச் செய்து கொண்டு, அந்தப் புரத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் ஆட்சி புரிந்த நாடுகள் மீதும் நபியவர்கள் படையெடுத்துள்ளனர். அவர்களின் நான்கு கலீஃபாக்களும் போர் செய்துள்ளனர். அங்குள்ள மக்களே அதை ஆதரிக்கவும் செய்தனர்.

இதையும் நியாய உணர்வுடைய எவரும் குறை சொல்ல மாட்டார்.

பங்களாதேஷ் என்று அறியப்படும் முன்னால் கிழக்கு பாகிஸ்தான் மக்கள், பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டார்கள். அங்குள்ள வளங்கள் மேற்குப் பகுதியின் நலனுக்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. இதை எதிர்த்து முஜீபுர் ரஹ்மான் என்பவரின் தலைமையில் போராட்டம் நடந்தது. அவரால் இந்தியாவின் உதவியும் கோரப்பட்டது.

அன்னிய நாடு என்று பாராமல் அம்மக்களைக் காப்பாற்ற இந்தியா தனது இராணுவத்தை அனுப்பியது. பங்களாதேஷ் என்ற தனிநாட்டை அம்மக்களுக்காக உருவாக்கியது.

விடுதலைப் புலிகள் இன்றைக்கு இந்தியாவிற்கு வேண்டாதவர்களாக ஆகிவிட்டாலும், அவர்கள் வேண்டப்பட்டவர்களாக இருந்த காலத்தில் அவர்களுக்குப் பல வகையிலும் உதவிகள் வழங்கப்பட்டன. அந்த நாட்டுத் தமிழர்களை இலங்கை அரசு பட்டினி போட்ட போது இந்தியாவின் விமானங்கள் அந்நாட்டின் மீது பறந்து சென்று உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்தன.

மாலத்தீவு என்ற அன்னிய நாடு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்ட போது இந்திய அதிரடிப்படை சென்று அதை மீட்டுக் கொடுத்தது.

உலகமகா பயங்கரவாத நாடான அமெரிக்கா, ஈராக் மீதும், அடிக்கடி அநியாயத் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவின் கள்ளக் குழந்தையான இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மக்கள் மீது மிருகவெறியாட்டம் நடத்தி வருகிறது. இவற்றுக்கெல்லாம் எந்த நியாயமும் இல்லை. அமெரிக்காவிடம் பிச்சை எடுப்பதற்கும், வட்டி வாங்குவதற்கும் உலக நாடுகள் மௌனமாக இதை அங்கீகரிக்கின்றன. இந்த அக்கிரமத்தை ஆதரிப்போர் நியாயமான காரணங்களுக்காக நபிகள் நாயகம் அன்னிய நாட்டில் தலையிட்டதைக் குறை கூறுவது தான் வேடிக்கையானது.

அனைவராலும் நியாயமானவை என இன்றளவும் ஒப்புக் கொள்ளப்பட்டு வருகின்ற காரணங்களுக்காகவே நபிகள் நாயகமும் போர் செய்துள்ளனர்.

நியாயமான காரணங்களுக்காக போர் நடத்தப்பட்டு நபிகள் நாயகம் வெற்றி பெற்ற பின் அவர்கள் நடந்து கொண்ட முறையை ஆராய்ந்தால் உண்மையை உணர்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஆன்மீகவாதியாக இருப்பதால் அவர்கள் போர்க்களத்தில் பங்கெடுத்ததை ஏற்க இயல்பாகவே சிலருக்குத் தயக்கம் உள்ளது.

போர் என்பது என்ன? என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே இவ்வாறு தயக்கம் காட்டுகின்றனர்.

பொதுவான தர்மங்களும், போர் தர்மங்களும் வெவ்வேறானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

கொலை செய்வது பொதுவாக அனைவராலும் கண்டிக்கப்படும் ஒரு கொடுமையாகும். பிறர் பொருளை அபகரிப்பதும், சூறையாடுவதும் கூட கொடியவர்களின் செயலாகும்.

பொதுவாக, இந்தக் காரியங்கள் தடுக்கப்பட்டிருந்தாலும் போர் என்று வந்து விடுமானால் இதையெல்லாம் செய்து தான் ஆக வேண்டும். இவ்வாறு செய்வது தான் போர் தர்மம்.

பொதுவாக வெறுக்கப்படும் சில செயல்கள் போர்க்களத்தில் விரும்பத்தக்கதாக அமைந்து விடுகின்றன.

இராமன், கண்ணன், அர்ஜுனன், கர்ணன், பஞ்சபாண்டவர்கள், கவுரவர்கள் போன்ற புராணப் பாத்திரங்களாக இடம் பெறுவோர், பல கொலைகளைச் செய்துள்ளனர். சாதாரண சமயத்தில் இவற்றைச் செய்திருந்தால் அவர்கள் வெறுக்கப்பட்டிருப்பார்கள். போர்க்களத்தில் செய்ததால் அவர்கள் வீரர்கள் என போற்றப்படுகின்றனர்.

தமிழகத்தின் மூவேந்தர்களும் கூட பல கொலைகளைச் செய்தவர்கள் தான். போர்க்களத்தில் கொலைகள் செய்த காரணத்தினால் அவர்கள் வீரர்களாகப் போற்றப்படுகின்றனர்.

போர்க்களத்தில் மட்டுமின்றி. ஒரு நாட்டிலேயே நடக்கும் விடுதலைப் போராட்டத்திலும் இது போன்ற கொலைகள் நடந்துள்ளன. அதைச் செய்தவர்கள் இன்றளவும் தியாகிகளாக மதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் முதல், தேசிய இராணுவம் அமைத்த நேதாஜி வரை அனைவரும் இன்று மாவீரர்களாகப் போற்றப்படுகின்றனர். கொலைகாரர்களாகக் கருதப்படுவதில்லை.

போருக்கு என தனி தர்மங்கள் உள்ளன என்பதற்கே இந்த விளக்கங்கள்.

உலகத்தில் வெற்றி பெற்ற எந்த ஆட்சியாளரும் போரில் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்தனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) போரிலும் கூட புதுநெறி புகுத்தினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் தமது பிரச்சாரத்தைத் துவக்கிய போது துன்புறுத்தப்பட்டு மக்காவை விட்டே விரட்டப்பட்டார்கள். மதீனா சென்று அங்கே ஒரு ஆட்சியையும் நிறுவினார்கள். பல்வேறு போர்க்களங்களையும் மக்காவாசிகளால் அவர்கள் சந்தித்தார்கள். இறுதியாக மக்காவில் அவர்கள் வெற்றி வீரராக பிரவேசித்தார்கள். அவர்களை ஊரை விட்டே விரட்டியவர்கள், அவர்களின் தோழர்கள் பலரைப் படுகொலை செய்தவர்கள், சித்திரவதை செய்தவர்கள் அனைவரும் என்னவாகுமோ என்று பீதியடைந்திருந்தார்கள்.

மக்கத்து எதிரிகளைக் கொல்வதற்கு ஆயிரம் நியாயங்கள் இருந்த இந்த நேரத்தில் அவர்களைக் கொன்று குவித்திருக்க முடியும். அவர்களின் கடந்த கால கொடுமைகளுக்குப் பழி வாங்கியிருக்க முடியும்.

சக்தி மிக்க ஆட்சியாளராகவும், தனது கட்டளைக்குக் காத்திருக்கும் தோழர்களைக் கொண்ட சமுதாயத்தின் தலைவராகவும் மக்காவில் பிரவேசித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கத்தியை எடுக்கவில்லை. இரத்தமும் சிந்தச் செய்யவில்லை. எவரையும் பழிவாங்கவில்லை. அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார்கள்.

உலக வரலாற்றில் சக்திமிக்க ஒரு தலைவர் ஒரு உயிரைக் கூடப் பறிக்காது, ஒரு நாட்டை வெற்றி கொண்டது இது ஒன்றாகத் தான் இருக்க முடியும்.

எதிரி நாட்டு நீர் நிலைகளை யானையை விட்டுக் கலக்கி, விளை நிலங்களுக்குத் தீ வைத்து, தோற்றவன் பற்களைப் பிடுங்கி கோட்டைக் கதவில் பதித்து, தோற்றவனின் மூக்கை அறுத்து கோரப்படுத்தி, தோல்வி கண்டவனின் மனைவியின் கூந்தலை வெட்டி அவமதித்து, போரில் பங்கு கொண்டவன், பங்கு கொள்ளாதவன் என்ற பாகுபாடின்றி அனைவரையும் வெட்டிக் குவித்து இன்னபிற அக்கிரமங்கள் செய்தவர்களையெல்லாம் மாவீரர்களாகவும், தெய்வாம்சம் பொருந்தியவர்களாகவும் போற்றுகின்றவர்கள் இஸ்லாமியப் போர் முறையைக் குறை கூறுவது வேடிக்கையானதே.

ஜிஹாத் அரசின் மீதுதான் கடமையா?

? ஜிஹாத் என்ற உணர்வு மனிதனிடத்தில் (சிறிதளவு கூட) இல்லையென்றால் அவன் முஃமினாக இருக்க முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அரசாங்கம் தான் போர் செய்ய வேண்டும் என்றால் மனிதனிடத்தில் எவ்வாறு அவ்வுணர்வு வர முடியும்?

எஸ்.எம். ஷாஃபி, நாகூர்

இஸ்லாத்தில் எந்த ஒரு வணக்கமாக இருந்தாலும் அது எப்போது கடமையாகின்றதோ அப்போது தான் அதைச் செய்ய வேண்டும். ஜகாத், ஹஜ் போன்ற வணக்கங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அன்றாடம் சாப்பாட்டுக்கு வழியில்லாத ஒருவரிடம் போய், ஹஜ் செய்தால் தான் நீ முஸ்லிம் என்று கூற முடியாது. அது போலவே ஜிஹாத் என்பதும் எப்போது கடமையாகின்றதோ அப்போது தான் அதைச் செய்ய வேண்டும்.

ஜிஹாத் என்ற பெயரில் தடி எடுத்தவன் தண்டல்காரன் எனச் செயல்பட மார்க்கத்தில் இடமில்லை. இஸ்லாமிய அரசாங்கம் தான் ஜிஹாத் செய்ய வேண்டும் என்பதை ஆதாரத்துடன் அறிந்து கொள்ள

இஸ்லாமிய அரசில் தான் ஜிஹாத் கடமையா?

என்ற ஆக்கத்தைப் பார்க்கவும்

صحيح مسلم

5040 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَهْمٍ الأَنْطَاكِىُّ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ وُهَيْبٍ الْمَكِّىِّ عَنْ عُمَرَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ سُمَىٍّ عَنْ أَبِى صَالِحٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ مَاتَ وَلَمْ يَغْزُ وَلَمْ يُحَدِّثْ بِهِ نَفْسَهُ مَاتَ عَلَى شُعْبَةٍ مِنْ نِفَاقٍ ». قَالَ ابْنُ سَهْمٍ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ فَنُرَى أَنَّ ذَلِكَ كَانَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم-.

யார் போர் செய்யாமலும், போரைப் பற்றி மனதில் கூட எண்ணாமலும் மரணிக்கின்றானோ அவன் நயவஞ்சகத்தின் ஒரு பகுதியுடன் மரணிக்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம்

இந்த ஹதீஸில் போரைப் பற்றி மனதில் கூட எண்ணாமல் மரணித்தால் அவன் நயவஞ்சகத்தின் ஒரு பகுதியுடன் மரணிப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஜிஹாத் செய்தால் தான் ஜிஹாதைப் பற்றிய எண்ணம் மனதில் உருவாகும் என்பதில்லை. அப்படியென்றால் யார் ஜிஹாத் செய்யாமல் இறக்கின்றானோ அவன் நயவஞ்சகன் என்று மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கலாம்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லாமல் மனதில் கூட எண்ணாமல் என்பதையும் சேர்த்துச் சொல்வதிலிருந்தே ஜிஹாத் செய்ய முடியாத ஒரு நிலையும் ஏற்படும் என்று இந்த ஹதீஸ் உணர்த்துவதை அறியலாம்.

இப்போதைய சூழ்நிலையில் நமக்கு ஜிஹாத் கடமையில்லை என்றாலும் இதே நிலைதான் எப்போதும் இருக்கும் என்று சொல்ல முடியாது.

ஒரு வேளை நாம் இஸ்லாமிய அரசாங்கத்தின் கீழ் வந்து ஜிஹாத் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் அப்போது ஜிஹாதை மறுக்கக் கூடாது என்பது தான் இந்த ஹதீஸின் பொருள்.

ஹஜ் செய்வதற்கு வசதியில்லை என்பதற்கும், வசதி வந்தாலும் ஹஜ் செய்ய மாட்டேன் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஜிஹாதைப் பற்றிய உணர்வு ஒவ்வொரு முஸ்லிமிடமும் இருந்தாக வேண்டும். ஏனெனில் மற்ற வணக்கங்களைச் செய்வதற்கு யாரும் எளிதாக முன்வந்து விடுவார்கள். ஆனால் ஜிஹாத் செய்வதற்கு மனதளவில் எப்போதும் தயாராக இருந்தால் மட்டுமே கடமை ஏற்படும் போது அதை நிறைவேற்ற முடியும் என்பதால் தான் நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் ஜிஹாதைப் பற்றிய உணர்வுடன் இருப்பதை வலியுறுத்துகின்றார்கள்.

26.12.2014. 21:03 PM

இஸ்லாமிய அரசுக்குத் தான் ஜிஹாத் கடமையா ?

முஹம்மது மசூத்

பதில் :

உலகில் பெரும்பாலான முஸ்லிம்களாலும், முஸ்லிம் அல்லாதவர்களாலும் தவறாக விளங்கிக் கொள்ளப்பட்ட விசயங்களில் ஒன்று ஜிஹாத் என்பதாகும்.

ஜிஹாத் என்ற சொல்லுக்கு உழைத்தல், பாடுபடுதல், ஆய்வு செய்தல், அசத்தியத்தைத் தட்டிக் கேட்டல் எனப் பல அர்த்தங்கள் உள்ளன.

அவற்றில் ஒன்றுதான் ஆயுதம் ஏந்திப் போர் செய்தல் ஆகும்.

இந்த அர்த்தத்தில் அமைந்த ஜிஹாத் ஒரு அரசாங்கத்தின் கீழ் தான் செய்ய வேண்டும். அரசாங்கம் இல்லாமல் குழுக்களாக ஒன்று சேர்ந்து செய்வது ஜிஹாதில் சேராது. இதனைப் பின்வரும் வசனத்திலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா? எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம் என்று தமது நபியிடம் கூறினர். உங்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க மாட்டீர்கள் அல்லவா? என்று அவர் கேட்டார். எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது? என்று அவர்கள் கூறினர். அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன். "தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான் என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர். உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடலை (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 2:246, 247

மேற்கண்ட இரு வசனங்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் சென்ற ஒரு நபியின் வரலாற்றுச் செய்தியைக் கூறுகின்றன.

அந்த நபியின் சமுதாயத்தவர் எதிரிகளால் சொல்லொணாத துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஊரை விட்டும் விரட்டப்பட்டிருந்தனர். ஊரை விட்டு விரட்டப்பட்டிருந்தாலும் அந்த நபியின் தலைமையில் அவர்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிடவில்லை.

இந்த நேரத்தில் எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்கு தங்களுக்கு ஒரு மன்னரை நியமிக்குமாறு அந்த நபியிடம் அவரது சமுதாயத்தவர் வேண்டினார்கள். இந்த வேண்டுகோளுக்குப் பிறகு இறைவன் தாலூத் என்பவரை மன்னராக நியமித்து போர் செய்வதை அவர்கள் மீது கடமையாக்கினான் என்பது இவ்வசனங்கள் கூறும் வரலாறு.

இவ்வரலாற்றில் மிக முக்கியமான இரண்டு சட்டங்கள் பெறப்படுகின்றன.

1. படை திரட்டி யுத்தம் செய்வதென்றால் அதற்கு ஒரு ஆட்சியும், மன்னரும் இருப்பது அவசியம் என்பது இதில் பெறப்படும் முதலாவது சட்டம். ஏனெனில் அந்தச் சமுதாயம் மிகப்பெரும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், போர் செய்வதற்கான எல்லா நியாயங்களும் இருந்தும் அவர்கள் போர் செய்யவில்லை.

அவர்களுக்குத் தலைமை தாங்கிய நபியும் போர் செய்யவில்லை. மாறாக ஒரு மன்னரை நியமிக்குமாறு இறைவனிடம் கோரிக்கை வைத்து இறைவன் மன்னரை நியமித்த பிறகு தான் அவர்கள் போரிட்டுள்ளார்கள்.

போர் செய்வதற்கு ஆட்சியோ, மன்னரோ அவசியம் இல்லை என்றால் அவர்களின் கோரிக்கையை ஏற்று மன்னராக ஒருவரை இறைவன் நியமித்திருக்க மாட்டான்.

2. இறைத் தூதர்கள் உலகில் ஆட்சியைப் பிடிப்பதற்காக அனுப்பப்பட்டவர்களல்லர். மாறாக தமது சமுதாயத்தை ஓரிறைக் கொள்கையை நோக்கியும், ஒழுக்கத்தை நோக்கியும் அழைப்பதற்காகவே அனுப்பப்பட்டனர் என்பது இந்நிகழ்ச்சியிலிருந்து பெறப்படும் இரண்டாவது சட்டமாகும்.

ஏனெனில் இந்த நிகழ்ச்சியில் ஒரு இறைத்தூதர் உலகில் இருக்கும் போதே இறைத்தூதர் அல்லாத இன்னொருவரை இறைவன் மன்னராக நியமிக்கிறான். அந்த இறைத்தூதரும் அம்மன்னரின் கீழ் போரிடும் நிலையையும் ஏற்படுத்துகிறான். நபியையே மன்னராக இறைவன் நியமிக்கவில்லை.

சிறிய இயக்கத்தை அமைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வோம் என்று மக்களை மூளைச் சலவை செய்து ஆயுதம் தாங்கி வன்முறையில் ஈடுபடுவோர் ஜிஹாத் செய்பவர்கள் அல்ல என்பது இவ்வசனங்களில் இருந்து தெளிவாக தெரிகிறது.

ஒரு இறைத்தூதர் தலைமையில் உருவான சமுதாயமாக இருந்தாலும் கூட ஆட்சி அமைக்காமல் போர் செய்யக் கூடாது என்று இவ்வசனம் தெளிவாகச் சொல்வதே இவர்களின் வாதம் தவறு என்பதற்குத் தக்க சான்றாகும்.

பின்வரும் ஹதீஸும் போர் செய்வதற்கு ஆட்சியும், ஆட்சித் தலைவரும் அவசியம் என்பதற்கு மிகப்பெரும் சான்றாகும்.

وَبِهَذَا الْإِسْنَادِ مَنْ أَطَاعَنِي فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ عَصَانِي فَقَدْ عَصَى اللَّهَ وَمَنْ يُطِعْ الْأَمِيرَ فَقَدْ أَطَاعَنِي وَمَنْ يَعْصِ الْأَمِيرَ فَقَدْ عَصَانِي وَإِنَّمَا الْإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتَّقَى بِهِ فَإِنْ أَمَرَ بِتَقْوَى اللَّهِ وَعَدَلَ فَإِنَّ لَهُ بِذَلِكَ أَجْرًا وَإِنْ قَالَ بِغَيْرِهِ فَإِنَّ عَلَيْهِ مِنْهُ

இமாம் என்பவர் ஒரு கேடயமாவார்! அவருக்குப் பின்னால் நின்று மக்கள் போராடுவார்கள். அவரையே மக்கள் அரணாக ஆக்கிக் கொள்வார்கள். அவர் அல்லாஹ்வின் அச்சத்தை ஏவி, நீதமாக நடந்தால் அதற்குரிய கூலி அவருக்குக் கிடைத்து விடும். அதற்கு மாறானதை அவர் சொன்னால் அந்தப் பாவத்தில் அவருக்குப் பங்கு கிடைக்கும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)

நூல் : புகாரி 2957

இமாம் என்றால் ஆட்சித் தலைவர் என்பது பொருளாகும்.

05.03.2012. 11:25 AM

பெண் சல்மான் ருஷ்டியா?

ஓர் உலகளாவிய சதி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் முதல் இன்று வரை இஸ்லாம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகின்றது! அதைப் பின்பற்றி நடப்போர் அதிகரித்து வருகின்றனர்! சமீப காலமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெகுவேகமாக இஸ்லாம் பரவி வருகின்றது!

இந்த வளர்ச்சியினால் பாதிக்கப்பட்ட யூத, கிறிஸ்தவ சக்திகளும், நமது நாட்டிலுள்ள இந்து வெறி சக்திகளும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த சர்வதேச அளவில் திட்டம் தீட்டிச் செயல்பட்டு வருகின்றன.

எப்படியாவது,  இஸ்லாம் ஒரு பிற்போக்கான மார்க்கம் என்று காட்ட பல முனைகளில் சூழ்ச்சி செய்து வருகின்றன. இந்தியாவிலும், உலக அளவிலும் நடக்கும் நிகழ்ச்சிகள் இதை ஊர்ஜிதம் செய்கின்றன. இஸ்லாமியச் சமுதாயம் மிக்க விழிப்புடனிருக்க வேண்டிய நேரமிது!

அமெரிக்க அதிபர் கிளின்டன், சல்மான் ருஷ்டி என்ற மஞ்சள் எழுத்தாளரைச் சந்தித்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்தச் சந்திப்பை இந்தியாவில் உள்ள செய்தித் தாள்கள் முக்கியத்துவத்துடன் வெளியிட்டதை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.

இதைச் சாதாரண சந்திப்பாக அறிவுடையோர் கருத முடியாது. ஏனெனில், உலகின் ஒரே வல்லரசாகச் சமீப காலத்தில் தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்ட நாடு அமெரிக்கா. உலகிலேயே அதிக அதிகாரம் பொருந்திய பதவி அந்நாட்டு அதிபர் பதவி. உள்நாட்டு விவகாரங்களிலும் முழு நேரத்தைச் செலவிட வேண்டிய பிஸியான பதவி அது!

அயல் நாட்டு மன்னர்களும், அதிபர்களும், அமைச்சர்களும் கூட எளிதில் சந்திக்க முடியாத அமெரிக்க அதிபரைச் சர்வ சாதாரணமாக சல்மான் ருஷ்டி சந்திக்க முடிகின்றது.

இவர் ஏதேனும் ஒரு நாட்டின் அதிபரா? மாபெரும் விஞ்ஞானியா? சிறந்த சமூக சேவகரா? மிகப் பெரும் தியாகியா? பெரிய வீரரா? எதுவுமே இல்லை! ஒரு எழுத்தாளர்! அவ்வளவு தான்.

எழுத்தாளர் என்றால், தூங்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தைத் தட்டி எழுப்பும் புரட்சிகரமான எழுத்தாளரா? அல்லது அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களைத் தட்டி எழுப்பும் துணிச்சல் மிக்க எழுத்தாளரா? போதைப் பொருட்கள், ஒழுக்கக் கேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டி மக்களை நல்வழிப்படுத்தும் சீர்திருத்த எழுத்தாளரா? தீராத பிரச்சினைகளுக்குத் தீர்வு கூறும் சிந்தனை மிக்க எழுத்தாளரா? மனித நேயம் வளரப் பாடுபடும் மனிதாபிமானமுள்ள எழுத்தாளரா? நிச்சயமாக இல்லை. ஒரு கீழ்த்தரமான மஞ்சள் எழுத்தாளர்!

இழிந்த நடையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றியும், அவர்களின் துணைவியர் பற்றியும் அவதூறுகளை எழுதிய நரகல் நடை எழுத்தாளர்! இதைத் தவிர எழுத்துலகில் இவர் வேறெந்தச் சாதனையும் செய்ததில்லை. இந்தக் கழிசடையைத் தான் அமெரிக்க அதிபர் சந்திக்கிறார். இந்தச் செய்தியைத் தான் பத்திரிகைகள் பெரிதாக விளம்பரப்படுத்தின.

(இவனது சாத்தானிய வசனங்கள் என்ற நூலுக்கு வேதம் ஓதும் சாத்தான்கள் என்று நாம் எழுதிய மறுப்பு நூலில் இவனது உளறல்களை அடையாளம் காட்டியுள்ளோம்.)

குறைந்தபட்ச தகுதி கூட இல்லாத இவனை அமெரிக்க அதிபரும், பிரிட்டன் அதிபரும் சந்திக்க நேரம் ஒதுக்குகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? இங்குள்ள பத்திரிகையாளர்கள் இதைப் பெரிதுபடுத்துகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?

முஸ்லிம் பெயர் தாங்கியை வைத்தே இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்த முயல்வதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இருக்க முடியாது.

மேலை நாடுகளில் கிறித்தவ மதத்தை நார் நாராகப் பலர் கிழித்துள்ளனர். இன்றளவும் கூட கிறித்தவத்துக்குச் சமாதி கட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை எல்லாம் இந்த அதிபர்கள் சந்தித்ததில்லை.

இந்துக்களாகப் பிறந்த தி.க.வினர், கம்யூனிஸ்டு இயக்கத்தவர், பா.ம.க. மற்றும் ம.க.இ.க. ஆகிய கட்சியினர் இந்து மதம் குறித்து விமர்சனம் செய்துள்ளனர். அறிவுப்பூர்வமான இந்த விமர்சனங்கள் பற்றி இந்த நாட்டின் செய்தித்தாள்கள் என்றேனும் வரவேற்று எழுதியதுண்டா? இல்லவே இல்லை.

முற்போக்கும், புரட்சிகரச் சிந்தனையும் தான் ருஷ்டியை முன்னிலைப்படுத்தக் காரணம் என்றால், டாக்டர் சேப்பன், பிரபஞ்சன் போன்றோரை அதே காரணத்துக்காக இந்த மேல் சாதிப் பத்திரிகைகள் முன்னிலைப்படுத்தியதுண்டா?

பிற்போக்குத் தனத்தின் மொத்த வடிவமாக அமைந்துள்ள தங்கள் மதத்தை விமர்சிப்பதைக் கண்டுகொள்ள மாட்டார்களாம். பிற்போக்குத் தனத்தைப் புறமுதுகிடச் செய்த இஸ்லாத்தைத் தவறாக எவரேனும் விமர்சனம் செய்தால் அவர் புரட்சியாளராம்!

தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் பலர் தங்கள் மதத்தை விமர்சிப்பது போல் இஸ்லாத்தை விமர்சிக்கும் முஸ்லிம் பெயர் தாங்கிகள் கிடைக்க மாட்டார்களா? என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்கள், இஸ்லாம் தோன்றியது முதல் இன்று வரை இரண்டு கழிசடைகளைத் தான் பெற முடிந்துள்ளது. இந்தப் பதினான்கு நூற்றாண்டுகளில் சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ஸரீன் என்ற இரண்டு அறிவீனர்களைத் தான் அவர்களால் பிடிக்க முடிந்துள்ளது.

இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு இப்போது கிடைத்திருப்பவர் தஸ்லிமா நஸரீன்.

பெண்களும், புரட்சிகர சிந்தனைகளும் மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று கருதப்படுகின்ற ஒரு சமூகத்தில் தன் கருத்துக்களை நெஞ்சு நிமிர்த்திச் சொல்லி அசாத்திய துணிச்சலுடன் வாழ்க்கை நடத்துவதற்காகவாவது இந்த எழுத்தாளரை எத்தனை பாராட்டினாலும் தகும் என்று உச்சியில் ஏற்றுகிறது இந்தியா டுடே,. ஏனைய பத்திரிகைகளும் கூட இதே போக்கைத் தான் கடைப்பிடிக்கின்றன.

இந்தியா டுடேயில் இவரைப் பற்றிய கட்டுரையில் கூறப்படுவதன் அடிப்படையிலேயே இந்தியப் பத்திரிகையாளர்களை நாம் அடையாளம் காண முடியும்.

பெண்கள் வித்தியாசமாக நடத்தப்படுவதை என்னுடைய ஒன்பதாவது வயதில் முதல் முறையாக உணர்ந்தேன். எனக்கு பத்து வயதாகும் போதே இனிமேல் வெளியே போகக் கூடாது என்று சொல்லி விட்டார்கள். ஆனால், என் இரண்டு சகோதரர்களுக்குத் தடையில்லை என்கிறார்.

(இந்தியாடுடே – 93, டிசம்பர் 6 – 20)

இவள் இஸ்லாத்தை வெறுத்ததற்கு கூறிய காரணத்தை இந்தியாடுடேயும் ஒப்புக் கொண்டு வெளியிட்டுள்ளது. இந்தியாடுடே இன்னொரு இடத்தில் கூறுவதைப் பாருங்கள்!

-மூன்று வருடங்களுக்கு முன்பு டாக்கா மெடிக்கல் காலேஜில் அனஸ்தீஸியாலஜிஸ்டாக இருந்த நஸரீனால் நோயாளிகளுக்குச் சிகிச்சை தரவும் முடியவில்லை-

இந்த இரண்டுக்குமிடையில் உள்ள முரண்பாடு இந்தியாடுடேயின் முற்போக்குக் (?) கண்களுக்குத் தெரிய நியாயமில்லை. ஒன்பது வயதிலேயே வெளியே செல்ல விடாமல் தடுக்கப்பட்ட இவள் எப்படி ஆங்கில மருத்துவம் கற்று டாக்கா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்தாள்?

இவள் கூறுவது பச்சைப்பொய் என்பதை இந்தியாடுடே உணரவில்லை.

ஒரு வேளை காளிதாசனுக்கும் ஞான சம்பந்தனுக்கும் ஞானம்(?) பொங்கியது போல் தஸ்லீமா நஸரீனுக்கும் மருத்துவ அறிவு பொங்கியதாக நினைத்து விட்டது போலும்!

இவள் எத்தகைய வேஷக்காரி என்பதற்கும், பொய்யிலேயே ஊறிப் போனவள் என்பதற்கும் இதை விட வேறு சான்று தேவையில்லை.

ஆண் பெண் உடலுறவு பற்றிப் பச்சையாக எழுதக் கூடியவர்கள் இந்த நாட்டிலும் உள்ளனர். பெரும்பாலும் பெண்கள் பெயரில் ஒளிந்து கொண்டு ஆண்களே எழுதி வருகின்றனர். இவர்களையெல்லாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்று இப்பத்திரிகைகள் போற்றியதில்லை.

ஆண், பெண் செக்ஸுவாலிடி பற்றி வெளிப்படையாக இவர் எழுதியிருக்கிறார். புத்தகங்களின் தலைப்பே இதைப் படம் பிடித்துக் காட்டும் என்றும் இந்தியாடுடே கூறி மகிழ்கிறது.

ஆபாசமான தலைப்புகளில் ஆண், பெண் உடலுறவு பற்றிப் பச்சையாக எழுதியதில் ஆனந்தப்படுகிறார்கள். இவள் புரட்சிகர எழுத்தாளராம்!

இவள் எவ்வளவு தரங்கெட்டவள் என்பதற்கும் இந்தியாடுடே சாட்சி சொல்லுகிறது.

இவர் எழுதிய ஒரு கதையில் வெறுத்துப் போன இரண்டு குடும்பத் தலைவிகள் தங்கள் செக்ஸ் வாழ்வைப் பற்றி பேசுவதாக வருகிறது என்று இந்தியா டுடே வெளிச்சம் போடுகிறது.

உலக வரலாற்றில் எவரும் செய்யாத பெரும் புரட்சி ஒன்றையும் இவள் செய்திருக்கிறாள். மஞ்சள் பத்திரிகையில் பச்சையாகப் பலரும் எழுதி வருகின்றனர். ஆண்களே இந்தக் கேவலமான வேலையைச் செய்து வருகின்றனர். தகாத உறவுகளை நியாயப்படுத்துவோர் உள்ளனர். ஓரினப் புனர்ச்சிக்கு வக்காலத்து வாங்குவோர் உள்ளனர்.

இந்தக் கீழ்த்தர எழுத்து வியாபாரிகள் கூட ஆண்களே நீங்கள் கண்ட பெண்களைக் கற்பழியுங்கள் என்று எழுதியதில்லை. அவர்களே எழுதத் துணியாத – புரட்சிகரமான(?) இந்த யோசனையைக் காமவெறி கொண்ட இவள் எழுதியிருக்கிறாள்.

ஒரு தரம் ஆண்களைப் பலாத்காரம் செய்ய ஆரம்பிக்கும் படி பெண்களைத் தூண்டினார் என்றும் இந்தியா டுடே பெருமிதப்படுகிறது.

துகாத உறவு கூட, இருவரும் விரும்பியதால் நடப்பதாகத் தான் மஞ்சள் பத்திரிகையாளர்கள் எழுதி வந்தனர். இவளோ ஆண்களைப் பலாத்காரம் செய்யும்படி ஏவுகிறாள்.

இந்த மேல் சாதிப் பத்திரிகையாளர்களை நாம் கேட்கிறோம். சொரணை இருக்குமானால் நேரடியாக இதற்குப் பதில் கூறட்டும்!

இவளது இது போன்ற எழுத்துக்கள் புரட்சி என்றால் உங்கள் குடும்பத்துப் பெண்கள் இவள் எழுதியது போல் எழுதவும், இவளைப் போல் நடக்கவும் உற்சாகமூட்டுவீர்களா? அனுமதியாவது கொடுப்பீர்களா? குறைந்த பட்சம் கண்டு கொள்ளாமலாவது இருப்பீர்களா?

இதைப் புரட்சி என்று கூறும் நீங்கள் இந்தப் புரட்சிக்கு உங்கள் குடும்பத்துப் பெண்களைத் தயார்படுத்துவீர்களா? மாட்டீர்கள் என்றால் இவளுக்கு எந்த முகத்துடன் வக்காலத்து வாங்குகிறீர்கள்?

பெண்கள் கிடக்கட்டும்! ஆண்களாகிய நீங்கள் உங்கள் பத்திரிகையில் இந்தப் புரட்சியை ஆரம்பித்து வைப்பீர்களா? ஒரு பெண் பலருடன் நடத்திய செக்ஸ் வாழ்க்கையை எழுதினால் பிரசுரிப்பீர்களா? கண்ட இடங்களில் ஆண்களைப் பெண்களும் பெண்களை ஆண்களும் பலாத்காரம் செய்யுமாறு அறிவுரை கூறுவீர்களா? அவ்வாறு செய்து விட்டு இவளை ஆதரித்தால் அதில் உள்ள நியாயத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியும்.

இவையெல்லாம் மனித நாகரீகத்துக்கு அப்பாற்பட்டவை! மனித அறிவை மழுங்கடிக்கக் கூடியவை! இவ்வாறு எழுதுவது கேவலமான பிழைப்பு என்று நீங்கள் கருதினால் இவளை ஆதரிப்பதற்கும், விளம்பரப்படுத்துவதற்கும் நீங்கள் வெட்கப்பட வேண்டாமா?

இவளது காமவெறிப் போக்குக்கு மற்றுமொரு சான்றையும் இந்தியா டுடே தருகின்றது.

பொதுவாக பத்திரிகையாளர்கள் பரந்த மனப்பான்மையுடயவர்கள். கவிஞர்கள் அதை விடவும் பரந்த மனப்பான்மை உடையவர்கள் என்று கருதப்படுகின்றனர். மனைவியை இவர்கள் அடக்கியாள மாட்டார்கள்; அவளுக்குப் போதிய சுதந்திரம் வழங்குவார்கள் என்றெல்லாம் நம்பப்படுகிறது.

கடந்த பத்து வருடங்களில் அடுத்தடுத்து மூன்று முறை திருமண வாழ்க்கை தோல்வி அடைந்ததால் ஆண்கள் பற்றி இப்படி ஒரு அணுகுமுறை அவருக்குள் உருவாகியிருக்கலாம். ஒரு கவிஞருடனும் இரண்டு பத்திரிகையாளர்களுடனும் வாழ்ந்து பார்த்தவர் இவர் என்று இந்தியா டுடே கூறுகிறது.

ஒரு தடவை திருமண ஒப்பந்தம் முறியலாம்! இரண்டு தடவை முறியலாம். பத்தாண்டுகளில் மூன்று திருமணம் செய்து உறவை முறித்துக் கொண்டால் நாகரீத்தை விரும்புகின்ற பத்திரிகையாளர்கள், கவிஞர்களுடன் கூட இவளால் வாழ்க்கை நடத்த முடியவில்லை என்றால் கோளாறு எங்கே என்பதை யாரும் அறியலாம்.

நான் ஆவேசமும், நம்பிக்கையும் அடிக்கடி மாறும் மனநிலை கொண்டவள் என்று அவளே கூறியதாக இந்தியா டுடே குறிப்பிடுகின்றது.

இது புரட்சியா? அல்லது பைத்தியமா? இத்தகைய தடுமாற்றத்துக்கும் அடிக்கடி தன்னை மாற்றிக் கொள்வதற்கும் பெயர் தான் புரட்சி என்று நீங்கள் கருதினால் இந்த நாட்டின் அரசியல்வாதிகளுக்குப் பட்டுக் கம்பளம் விரியுங்கள்! அடிக்கடி நிலைமாறும் அரசியல்வாதிகளைச் சந்தர்ப்பவாதிகள் என்று விமர்சிக்கும் நீங்கள் இவளை மட்டும் புரட்சிக்காரி என்பது ஏன்?

மனநிலை சரியில்லாதவள், துணிந்து பொய் சொல்பவள், காமவெறி பிடித்து அலைபவள், இளைஞர்களின் மனதைக் கெடுப்பவள் என்றெல்லாம் தெரிந்திருந்தும் இவளை நீங்கள் ஆதரிப்பதன் காரணத்தைச் சொல்ல மாட்டீர்கள். நீங்கள் சொல்லாவிட்டாலும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

அவள் இஸ்லாத்தை விமர்சித்து விட்டாள் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. அவள் பைத்தியக்காரியானாலும், அவள் கூறுவது பச்சைப் பொய் என்றாலும், வெறி பிடித்து அலைபவள் என்றாலும் இஸ்லாத்தை அவள் குறை கூறி இருக்கும் போது அவளைப் பாராட்டாமல் உங்களால் இருக்க முடியாது.

மதம், பெண்களை எப்படி போகப் பொருளாக நடத்துகின்றது என்று நிரூபிக்க குரானில் உள்ள வாசகங்களை மேற்கோள் காட்டி விளாசித்தள்ளியிருந்தார் நஸரீன்.

இது இந்தியா டுடேயின் வாசகம்.

எவ்வளவுதான் மறைத்தாலும் இவர்களின் உள்நோக்கம் இப்போது தெளிவாகத் தெரிந்து விட்டது. பயன்படுத்தியிருக்கும் வார்த்தையைக் கவனித்தீர்களா? எழுதினார்; குறிப்பிட்டார் என்று கூட எழுதவில்லை. விளாசித் தள்ளினார் என்று மகிழ்ச்சித் துள்ளலுடன் தேர்வு செய்து இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளது இந்தியா டுடே. காமவெறி பிடித்த பைத்தியக்காரியைக் கூட புரட்சியாளராகச் சித்தரிக்கக் காரணம் இது தான்.

இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு மீண்டும் சொல்கிறோம். எழுதுவதை எழுதிவிட்டுப் பிறகு பல்டி அடித்து மன்னிப்புக் கேட்டு தடுமாறக் கூடிய சல்மான் ருஷ்டி போன்ற கோழைகளையும், மனநிலை சரியில்லாத கேவலமான தஸ்லீமா நஸரீனையும் தான் உங்கள் வலையில் சிக்க வைக்க முடியும். ஒழுங்கான ஒரு முஸ்லிமைக் கூட உங்களால் பிடிக்க முடியாது.

அப்படி என்ன விளாசித் தள்ளிவிட்டார் என்பதை விளக்கமாகக் கூறினால் நாமும் கொஞ்சம் விளாசித் தள்ளலாம். அதை இந்தியா டுடே குறிப்பிடவில்லை.

நீங்கள் அவர்களுக்கு ஆடை; அவர்கள் உங்களுக்கு ஆடை என்று ஆண் பெண் சமத்துவத்தைக் குர்ஆன் கூறுகிறதே அதை விளாசினாரா?

ஆண்களுக்கு இருப்பது போன்ற உரிமைகளும் கடமைகளும் பெண்களுக்கும் உள்ளன எனக் குர்ஆன் கூறுகிறதே அதை விளாசினாரா?

ஆண்களாயினும் பெண்களாயினும் சட்டத்தின் முன் சமம் என்று இஸ்லாம் கூறுகிறதே அதை விளாசினாரா?

அவள் விளாசித் தள்ளியது எது என்று இந்தியா டுடே தெளிவுபடுத்தினால் பதிலளிக்க நாம் தயாராக இருக்கிறோம்.

இவளுக்கு எங்கிருந்தெல்லாம் ஆதரவு கிடைக்கின்றது என்று பாருங்கள்!

அலேன்கின்ஸ்பெர்க், குந்தர்கிராஸ், ஜான் இர்விங், நார்மன்மெய்லர், ஆழிடான் போன்ற சர்வதேச எழுத்தாளர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து மரண தண்டனை விதித்ததைக் கண்டித்திருக்கிறார்கள். சக தோழர் சல்மான் ருஷ்டியும் தான் என்று இந்தியா டுடே கூறுகிறது!

இதில் ஆச்சரியப்பட ஏதுவுமில்லை. இவளுக்காக நாளை வெள்ளை மாளிகையின் கதவுகள் கூட திறக்கப்படலாம்! பிரிட்டிஷ் மகாராணியும் போப்பாண்டவரும் கூட இவளைக் கட்டி அணைக்கலாம்? ஆயினும் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் இவர்களின் திட்டம் ஒருக்காலும் வெற்றி பெறப் போவதில்லை.

இவளது தகாத நடத்தைக்கும், போக்குக்கும் எதிராக பங்களாதேஷ் மக்கள் திரண்டெழுந்திருப்பதைப் பிற்போக்கு என்று வர்ணிக்கும் இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு நாம் சிலவற்றை நினைவுபடுத்துகிறோம்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் சுஜாதா ஒரு தொடர் கதையைக் குமுதத்தில் எழுதினார். (இரத்தம் ஒரே நிறம் என்று நினைவு) அத்தொடர் கதையில் நாடார் சமூகத்தைப் பற்றி அவர் பயன்படுத்திய வார்த்தைக்காக அந்த சமூகமே கொதித்தெழுந்தது. குமுதம் இதழ்கள் சாலை நடுவே எரிக்கப்பட்டன. உடனடியாக அத்தொடரை குமுதம் நிறுத்தியது.

இது போன்று தான் கி. ராஜ நாராயணன் விஸ்வகர்ம சமுதாயத்தைப் பற்றி எழுதிய போதும் எதிர்ப்பு வந்தது. அவர் மன்னிப்புக் கேட்டார்.

எந்தச் சமூகம் பற்றியும் தவறாக எழுதுவதை அந்தச் சமூகம் சகித்துக் கொள்வதில்லை. இது மனித இயல்பு. இதை உணர்ந்து குமுதமும் நடந்து கொண்டது. எழுதியவர்களும் நடந்து கொண்டனர். புரட்சி வசனம் பேசிக் கொண்டிருக்கவில்லை. புரட்சியாக எழுதக் கூடியவர்களும் கூட அதற்குரிய இலக்கணத்துடன் எழுத வேண்டும்.

சினிமா டைரக்டரான பாலசந்தர் தனது சமூகமான பிராமண சமுதாயப் பெண்ணைப் பற்றி அரங்கேற்றம் சினிமா எடுத்த போது இப்பத்திரிகைகள் கொதித்ததை நாம் மறக்கவில்லை.

சமீபத்தில் உ.பி.யில் ஸஹமத் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியின் சுவரொட்டியில் ராமனின் தங்கை சீதை என்று குறிப்பிட்டிருந்ததைக் காரணம் காட்டி நாடாளுமன்றத்தையும், நாட்டையும் ரகளையால் திணறச் செய்தார்களே! ஒரு ராமாயணத்தின் அடிப்படையில் ஆதாரத்தோடு வெளியிடப்பட்ட செய்திக்கே இத்தனை காலாட்டா செய்தார்களே! ஸஹமத்தைக் கண்டித்து வேண்டாத வேலையிலீடுபடுவதாகத் தலையங்கம் எழுதினார்களே!

சுஜாதாவுக்கு எதிராகவும், கி.ராஜநாராயணனுக்கு எதிராகவும், ஸஹமத்துக்கு எதிராகவும் போராடியது மட்டும் முற்போக்காம். பங்களாதேஷ் மக்களது நடத்தை பிற்போக்காம். இதுதான் இந்தியப் பத்திரிகைகளின் பத்திரிகா தர்மம்.

இந்தியப் பத்திரிகையாளர்களின் ஒரு தலைப்பட்சமான போக்குக்கு இன்னொரு சான்றையும் கூட நாம் குறிப்பிட முடியும்.

ஹைதராபாத் சிறுமிகள் இருவரை இரண்டு அரபிகள் திருமணம் செய்ததை இந்தப் பத்திரிகைகள் பரபரப்பான செய்தியாக்கின. பெண்ணின் விருப்பமின்றி நடைபெறும் திருமணத்தை இஸ்லாம் அங்கீகரிக்க மறுப்பதால் நாமும் அதனைக் கண்டிக்கிறோம்.

நாள் தோறும் தலைப்புச் செய்தியாக்கி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்து ஆட்டம் போட்டார்களே அது நல்ல நோக்கத்தில் செய்தது தானா? உண்மையிலேயே பொருந்தாத திருமணத்தை எதிர்ப்பதென்றால் இது போல் நடக்கும் அனைத்துத் திருமணங்களையும் அவர்கள் எதிர்க்க வேண்டுமல்லவா?

என்.டி ராமாராவ் அடுத்தவரின் மனைவியை திருமணம் செய்தது சரிதானா? அப்பெண்ணின் கணவர் புகார் செய்த பின்னரும் கூட இதை அவ்வளவு பெரிய விடயமாக இந்தியப் பத்திரிகைகள் எடுத்துக் கொள்ளவில்லையே அது ஏன்?

ஒரு சாமியார் திடீரெனக் காணாமல் போக, பலவிதமான வதந்திகள் வந்தனவே அது பற்றிப் பாராளுமன்றத்தில் எவரும் வாய் திறக்கவில்லையே? பத்திரிகைகள் கண்டு கொள்ளவில்லையே அது ஏன்?

எந்தச் செய்தியாவது இஸ்லாத்தை மாசுபடுத்த உதவும் என்றால் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தப் பயன்படும் என்றால் இவர்கள் அதைப் பெரிய விசயமாக ஆக்குவது என்று முடிவு செய்து விட்டார்கள். சர்வதேச அளவில் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதை சமுதாயம் கண்டுகொள்ள வேண்டும்.

குண்டு வைத்தவர்கள் யார்?

பீ.ஜைனுல் ஆபிதீன்

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பீஜே அவர்கள் எழுதிய இந்தச் சிற்றேடு இலவசமாக வெளியிடப்பட்டது. அதை வரலாற்றுப் பதிவாக இப்போது வெளியிடுகிறோம்.

குண்டு வைத்தவர்கள் யார்?

சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் நின்று உண்மைகளைக் கண்டறிய விரும்பும் அனைவரின் கவனத்திற்கு!

கடந்த சில ஆண்டுகளாக நமது இந்தியத் திருநாட்டில் ஆங்காங்கே குண்டுகள் வெடித்து அப்பாவி மக்கள் உடல் சிதைந்து மாண்டு போனதைக் கண்டு, குண்டு வைத்த படுபாவிகளை மக்கள் மனதாரச் சபித்தார்கள்.

ஒவ்வொரு குண்டு வெடிப்பு நடந்து அரை மணி நேரம் கூட ஆகாத நிலையில் நாட்டில் உள்ள காவல் துறையினரும், புலனாய்வுத் துறையினரும் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள சிமி, லஷ்கரே, தய்யிபா, ஜெய்ஷே முஹம்மது மற்றும் சில பெயர்களைக் கூறி இவர்கள் தான் சதிகாரர்கள் என்று மீடியாக்கள் மத்தியில் அறிவித்து வந்தனர்.

இந்த அறிவிப்புக்கு கண், காது வைத்து மிகைப்படுத்தி மீடியாக்களும் பரபரப்பாகச் செய்தி வெளியிட்டும் வந்தனர். நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகள் அனைத்தையும் முஸ்லிம்கள் தான் செய்கின்றார்கள் என்ற கருத்து தினந்தோறும் பதிவு செய்யப்பட்டதால் முஸ்லிம் சமுதாயத்தை மற்றவர்கள் வெறுக்கும் நிலை ஏற்பட்டது.

கடவுளின் கருணையால் குண்டு வெடிப்புகளின் மர்மம் இப்போது விலகத் துவங்கி விட்டது.

அப்பாவி இந்துக்களையும், அப்பாவி முஸ்லிம்களையும் கொன்று குவித்து, அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டால் இந்துக்களுக்கு ஆளும் கட்சியின் மீது கோபம் ஏற்படும். அந்தக் கோபத்தை தேர்தலில் ஓட்டுக்களாக அறுவடை செய்யலாம் என்ற நோக்கத்துடன் குண்டு வைத்த சதிகாரர்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்து விட்டனர்.

மாலேகான் குண்டு வெடிப்பு

மகாராட்டிர மாநிலம் மாலேகான் என்ற ஊரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் பல்லாயிரம் மக்கள் வெள்ளிக் கிழமையன்று தொழுது கொண்டிருந்த போது மூன்று சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்து 38 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 125 முஸ்லிம்கள் படுகாயம் அடைந்தனர்.

இது 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதியன்று நடந்தது.

குண்டுவெடிப்பு பள்ளிவாசலில் நிகழ்த்தப்பட்டிருந்தும், முஸ்லிம்களே பலியாகி இருந்தும் அந்தப் பழியை முஸ்லிம்கள் மீதே புலனாய்வுத் துறை போட்டு சில முஸ்லிம்களையும் கைது செய்தது.

இதே மாலேகான் நகரில் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதியன்று மற்றொரு குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட சிமி அலுவலகம் அருகில் மோட்டார் சைக்களில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் ஆறு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பல முஸ்லிம்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்தக் குண்டு வெடிப்பிலும் முஸ்லிம்களே பலியாகி இருந்தும் அந்தப் பழியையும் மராட்டியக் காவல் துறை முஸ்லிம்கள் மீது தான் போட்டது.

இதே நாளில் குஜராத் மாநிலம் மொடாசா நகரிலும் குண்டு வெடித்தது.

இதனால் கொந்தளித்துப் போன முஸ்லிம்கள் இது குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். சி.பி.ஐ. விசாரணைக்கு மறுத்த மராட்டிய அரசு ஏ.டி.எஸ். ATS எனப்படும் தீவிரவாதத் தடுப்புப் படையிடம் மறு விசாரணை செய்யும் பொறுப்பை ஒப்படைத்தது.

சாதி, மத உணர்வுகள் இல்லாமல் தீவிரவாதத்தைத் தடுப்பதற்காகவே தக்க பயிற்சி பெற்ற இந்தப்படை மாலேகான் இரண்டாவது குண்டுவெடிப்பைப் பற்றி மறு விசாரணை செய்த போது தான் குண்டு வைத்த சதிகாரர்கள் யார் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

எந்த மோட்டார் சைக்கிளில் குண்டு வைக்கப்பட்டதோ அந்த மோட்டார் சைக்களில் இருந்து தனது விசாரணையை தீவிரவாதத் தடுப்புப்படை துவக்கியது.

கார் மற்றும் மோட்டார் சைக்கிளைப் பொருத்த வரை அது எவ்வளவு தான் சேதமடைந்தாலும் அந்த வாகனத்தின் எண்ணை தடய அறிவியல் துறை மூலம் கண்டுபிடிக்க முடியும்.

மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட் சுரண்டப்பட்டிருந்தாலும் அதன் என்ஜினை ஆய்வு செய்து அதன் எண்ணைத் தடய அறிவியல் துறை கண்டுபிடித்தது.

என்ஜினுடைய எண் தெரிந்து விட்டால் அந்த எண்ணுடைய இரு சக்கர வாகனம் யாருக்கு விற்கப்பட்டது? யார் பெயரில் பதிவு செய்யப்பட்டது என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிதானது என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த மோட்டார் சைக்கிள் இளம் பெண் துறவியான பிரக்யா சிங் என்பவருக்குச் சொந்தமானது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவானது.

இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. யிலும், ஹிந்து ஜாக்ரான் மஞ்ச் என்ற பயங்கரவாத அமைப்பிலும், விஷ்வ ஹிந்து பரிஷத் மகளிர் பிரிவான துர்கா வாஹினியிலும் அங்கம் வகிப்பவர் என்பதும் தெரிய வந்தது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தப் பெண் சாமியார் கைது செய்யப்பட்டு இவரிடம் விசாரணை நடத்தியதில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சங்பரிவாரத்தைச் சேர்ந்த

ஷியாம்லால்,

திலீப்நகர்,

தர்மேந்திரா பைராகி

ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

குண்டு வைக்கப்பட்ட மோட்டார் சைக்களில் குர்ஆன் வசனம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அப்போது தான் முஸ்லிம்கள் மீது சந்தேகம் எழும் என்பது இவர்களின் எண்ணம். அந்த இடத்தில் உருது மொழிப் பிரசுரங்களும் சிதறிக் கிடந்தன.

கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில் குர்ஆன் ஸ்டிக்கர்களும், உருதுப் பிரசுரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் ஒட்டு தாடிகளும், தொப்பிகளும் கைப்பற்றப்பட்டன.

இந்தக் குண்டு வெடிப்புகளில் ஜெலட்டின், அமோனியம் நைட்ரேட் போன்ற வெடிமருந்துகள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக ஆர்.டி.எக்ஸ். என்னும் அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டன.

மற்ற வெடி மருந்துகளைப் போல் இது எங்கேயும் கிடைக்காது. இராணுவத்தில் மட்டுமே இந்த வகை வெடிமருந்து இருக்கும். மாட்டிக் கொண்ட இவர்கள் குண்டு வைத்ததை ஒப்புக் கொண்டதுடன் ஆர்.டி.எக்ஸ். எப்படிக் கிடைத்தது என்று விசாரித்த போது தான் முன்னாள் இராணுவத்தினரும், இந்நாள் இராணுவத்தினரும் ஆர்.டி.எக்ஸ். சப்ளை செய்ததும் வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்துள்ளதும் தெரியவந்தது.

மேஜர் அந்தஸ்தில் இருந்து ஓய்வு பெற்ற

பிரபாகர் குல்கர்னி,

உபாத்யாயா

ஆகிய இராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். தற்போது கர்னல் என்ற உயர் அந்தஸ்தில் உள்ளவருக்கும் தொடர்பு உள்ளதைக் கண்டுபிடித்து இராணுவத்தின் அனுமதி பெற்று அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

54 பேருக்கு வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சி அளித்துள்ளதாக இவர்கள் அளித்த தகவலின் பேரில் அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

வெடிகுண்டு வைத்ததில் தொடர்புடைய

சியாம்சாரு,

திலீப் நஷர்,

சிவநாராயனன் ஆகிய மூவர் மேலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பல சங்பரிவாரத்தினரும், காஷ்மீர் சாமியாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும் பண முதலைகள் இதற்குப் பெருமளவில் பண உதவி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்கிய அரசியல் புள்ளி ஒருவரைக் கைது செய்ய நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்ட பெண் சாமியார், பா..ஜ.க அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத்சிங்குடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும், தொடர்புகளும் அம்பலமாகியுள்ளன.

மேலும் அந்தச் சாமியார் வந்தேமாதரம் என்ற அமைப்பை குஜராத்தில் நிறுவியுள்ளார். இதற்கு குஜராத் மோடி அரசு நிதியுதவி அளித்ததும் அம்பலமாகியுள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்பை துப்பு துலக்கிய ஏ.டி.எஸ் படை, குஜராத் மற்றும் பிற இடங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புக்கும், மாலேகான் குண்டுவெடிப்புக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன என்று தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

அப்பாவி முஸ்லிம்களை மட்டுமின்றி அப்பாவி இந்துக்களையும் சங்பரிவாரத்தினர் எப்படிக் கொலை செய்வார்கள் என்று ஆச்சரியப்படத் தேவையில்லை.

இந்து மதத்தில் ஆழ்ந்த பிடிப்புள்ளவரும், தலித்கள் முஸ்லிம்களாக மதம் மாற இருந்ததை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்து அதைத் தடுத்து நிறுத்தியதன் மூலம் சங்பரிவாரத்தின் ஆசையை நிறைவேற்றியவரும், எப்போதும் ராம் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தவரும், இந்து மதத்தில் அதிக ஈடுபாடு காட்டியவருமான காந்தியைக் கூட இதே சங்பரிவாரத்தைச் சேர்ந்த கோட்சே தான் கொன்றான்.

இந்து மதப்பற்று உள்ள எந்த ஒருவனுக்கும் காந்தியைக் கொல்ல மனம் வராது. ராம பக்தரான காந்தியைக் கொல்வது இவர்களின் நோக்கம் அல்ல.

காந்தியைக் கொன்று அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டால் அதிகமான முஸ்லிம்களை இந்துக்கள் கொன்றொழிப்பார்கள் என்பதற்காகவே காந்தியைக் கொன்றனர்.

இதனால் தான் கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டும், சுன்னத் செய்து கொண்டும் காந்தியைக் கொன்றான் என்பதை நாட்டு மக்கள் மறந்திருக்க முடியாது.

விநாயகருக்கு செருப்பு மாலை

2002ஆம் ஆண்டு சத்தியமங்கலம் அருகில் உள்ள சதுமுகையில் விநாயகர் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டது. இதை முஸ்லிம்கள் மீதும், திகவினர் மீதும் போட்டு இந்துத்துவா இயக்கங்கள் ஆர்ப்பரித்தனர்.

கடைசியில் தீவிர விசாரணைக்குப் பின் செல்வகுமார், மஞ்சுநாதன் ஆகிய இரண்டு இந்து முன்னணியினர் தான் விநாயகர் சிலைக்கு செருப்பு மாலை போட்டவர்கள் என்று அம்பலமாகி இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்து மத்தில் பற்று உள்ள எவரும் தான் வணங்கும் சிலைக்கு செருப்பு மாலை போடத் துணிவாரா? தங்கள் கடவுளுக்கு செருப்பு மாலை போடுவதால் முஸ்லிம்களுக்கு அழிவு வரும் என்றால் அதையும் இந்துத்துவா இயக்கத்தினர் செய்வார்கள் என்பதற்கு இதை விட சான்று தேவையா?

இலஞ்சி தேருக்கு தீ வைப்பு

இது போல் நெல்லை மாவட்டம் இலஞ்சியில் தேருக்குத் தீ வைக்கப்பட்டது. உடனடியாக முஸ்லிம்கள் மீது பழி போடப்பட்டாலும் விசாரணையில் இதைச் செய்தவர்கள் இந்து முன்னணியினர் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்து மதத்தில் பற்று உடைய எவரேனும் தனது கடவுளின் வாகனமான தேருக்கு தீ வைப்பார்களா? இவர்கள் முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்பதற்காக இந்துமதப் போர்வையைப் போர்த்திக் கொண்டு தேருக்கும் தீ வைத்து இந்து மதத்துக்கே துரோகம் செய்வார்கள் என்பது இதிலிருந்து தெரியவில்லையா?

தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலக குண்டு வெடிப்பு

இது போல் 2008ஆம் ஆண்டு தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் அருகில் குண்டு வெடித்தது. முஸ்லிம் தீவிரவாதிகள் தான் இதைத் செய்தனர் என்று ராமகோபாலன் உள்ளிட்ட இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆனால் முடிவில் இந்து முன்னணியைச் சேர்ந்த ரவி, கே.டி.சி. குமார், இலட்சுமி நாராயண சர்மா ஆகியோர் தான் குண்டு வைத்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

தாணே நகர் குண்டு வெடிப்பு

அது மட்டுமின்றி மராட்டிய மாநிலம் தாணேயில் விஷ்னுதாஸ் பவே ஆடிட்டோரியத்திலும், அத்காரி ரக்சயாதன் என்ற ஆடிட்டோரியத்திலும்  நடத்தப்பட்ட குண்டு வெடிப்பிலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

பயங்கரவாதத் தடுப்புப் போலீசாரின் தீவிர புலனாய்வுக்குப் பின்

  1. மங்கேஷ் தினகர் நிகாம்
  2. ரமேஷ் ஹனுமந்த் காத்கரி
  3. சந்தோஷ் ஆங்ரே
  4. விக்ரம் பவே

ஆகிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த நால்வர் தான் இதை நிகழ்த்தியவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராய்காட் மாவட்டம் வர்சா கிராமம் மற்றும் பென் ஆகிய கிராமங்களில் உள்ள இவர்களின் வீடுகளை தீவிரவாதத் தடுப்புப் போலீசார் சோதனையிட்ட போது பாக்கெட் பாக்கெட்டாக அமோனியம் நைட்ரேட் 200டெட்டனேட்டர்கள், டைமர்கள், வோல்டேஜ் மீட்டர்கள், இரண்டு ரேடியோ சர்க்யூட்கள், ரிமோட் கன்ட்ரோல்கள், ரிவால்வர், 92தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

மேற்கண்ட குண்டுவெடிப்புகளில் அப்பாவி இந்துக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். இந்துக்களின் கோபத்தை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்புவதற்காக சில இந்துக்களை அழிப்பது தவறில்லை என்பது இவர்களின் அடிப்படைக் கொள்கை.

மத்தியப் பிரதேச விஹெச்பி அலுவலக குண்டு வெடிப்பு

1993ல் மத்தியப் பிரதேசம் விஸ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் குண்டுவெடித்து இரண்டு பேர் காயமடைந்தனர். முதலில் முஸ்லிம்கள் மீது பழி போடப்பட்டாலும் பின்னர் இவர்கள் வெடிகுண்டு தயாரிக்கும் போது தவறாக வெடித்ததால் தான் அந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

மோவ் நகர் கோவில் குண்டு வெடிப்பு

2002ல் மோவ் எனும் ஊரிலுள்ள கோவிலில் வெடிகுண்டு வெடித்தது.

முதலில் முஸ்லிம்கள் மீது பழி போடப்படாலும் தீவிர விசாரணைக்குப் பின் வி.ஹெச்.பி. தொண்டர்கள் தான் குண்டு வைத்தனர் என்று காவல்துறை கண்டுபிடித்து கைது செய்தது. இவர்களின் ஒப்புதல் வாக்கு மூலம் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது.

மகாராட்டிரம் நாண்டெட் குண்டு வெடிப்பு

2006 ஏப்ரல் 7 அன்று மராட்டிய மாநிலம் நான்டெட் நகரில் ஒரு வீட்டில் குண்டு வெடித்து சங்பரிவாரத்தைச் சேர்ந்த இரண்டு பேர் இறந்தனர். ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஔரங்காபாத் மசூதியில் வெள்ளிக் கிழமை தொழுகையின் போது குண்டு வைப்பதற்காக தயார் செய்த போது வெடித்து விட்டதாகக் கூறினார்கள்.

அந்த வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான அனைத்து மூலப்பொருட்களும் ஏராளமாகக் கிடைத்தன.

முஸ்லிம்கள் அதிகமாகக் கூடும் பள்ளிவாசல்களில் குண்டு வைப்பது இவர்களின் சதித் திட்டத்தில் உள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

பள்ளிவாசலில் குண்டு வைத்தாலும் அதையும் முஸ்லிம்கள் மீது போடுவதற்கு மீடியாக்கள் தயாராக இருப்பதால் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்று இவர்கள் நம்புகின்றனர்.

மராட்டியம் பர்பானி நகர் குண்டு வெடிப்பு

2003 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி வெள்ளிக் கிழமை தொழுகையின் போது மராட்டிய மாநிலம் பார்பானி நகரில் உள்ள முஹம்மதிய்யா பள்ளிவாசலில் குண்டு வெடித்தது.

2004 ஆகஸ்ட் 27ஆம் தேதி பார்பானி மாவட்டம் சித்தார்த் நகரில் உள்ள மதரஸா மற்றும் பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமை தொழுகையின் போது குண்டுகள் வெடித்து பல முஸ்லிம்கள் பலியாகினர்.

அதே நாளில் அதே நேரத்தில் மராட்டிய மாநிலம் ஜால்னா நகரில் உள்ள காதிரியா பள்ளிவாசலில் குண்டு வெடித்து பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

ஹைதராபாத், அஜ்மீர் குண்டு வெடிப்புகள்

2008 ஆம் ஆண்டு ஐதராபாத் மெக்கா மசூதியிலும், அஜ்மீர் தர்காவிலும் குண்டுகள் வெடித்து பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

மேற்கண்ட எல்லா குண்டுவெடிப்புகளும் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று கூடும் வெள்ளிக் கிழமை சிறப்புத் தொழுகையின் போது நடத்தப்பட்டன. நிச்சயமாக இதில் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டிருக்க முடியாது என்பதை சாதாரண மூளையுள்ளவனும் அறிய முடியும். ஆனால் மீடியாக்களுக்குத் தான் மனசாட்சி இல்லாமல் போய் விட்டது.

நான்டெட் நகரில் வெடிகுண்டு தயாரிக்கும் போது காயமடைந்து கைது செய்யப்பட்ட சஞ்சய் என்ற பாபுராவ் சௌத்ரி, ஹிமான் சுபான்சே இருவரும் பெங்களூரில் உள்ள குற்றவியல் ஆய்வுக் கூடத்தில் நரம்பியல் ஆய்வுக்கும், மூளை வரைவு சோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.

2003 ஆம் ஆண்டு வெடிகுண்டு தயாரிக்க, தான் பயிற்சி பெற்றதாகவும், நான்டெட் நகரின் பஜ்ரங்தள் தலைவன் பாலாஜி காடியா, வி.ஹெச்.பி. தலைவன் கோவிந்த் புரானிக், ஔரங்காபத் ஆர்.எஸ்.எஸ் தலைவன் அபய்மதூக்கர், பஜ்ரங்தள் தலைவன் வினோத்ராவ் தேசர் ஆகியோருடன் கூட்டாக பள்ளிவாசலில் குண்டு வைக்கத் திட்டமிட்டதை ஹிமான் சுபான்சே ஒப்புக் கொண்டான்.

காயமடைந்த குருராஜ் ஜெயராம் என்பவன் குண்டு வைக்க தனக்கு 50 ஆயிரம் தரப்பட்டதாகக் கூறினான். புனோ நகரில் மிதுன் சக்கரவர்த்தி என்பவன் தனக்குப் பயிற்சி அளித்ததாக இவன் ஒப்புக் கொண்டான்.

மேலும் ஔரங்காபாத் பள்ளிவாசலைப் பல கோனங்களில் காட்டும் புகைப் படங்கள், ஔரங்காபாத் மேப், பள்ளிவாசல் இருக்கும் பகுதி அடையாளமிடப்பட்ட மேப் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

இவ்வளவு நடந்த பின்பும் சின்ன செய்தியாக மீடியாக்கள் வெளியிட்டு பத்திரிகை தர்மத்தைக் கடைப்பிடித்தன.

கோத்ரா குண்டு வெடிப்பு

கோத்ரா ரயிலைத் தீ வைத்துக் கொளுத்தி விட்டு அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டு 2000 முஸ்லிம்களைக் குஜராத்தில் கொன்று குவித்ததை நாட்டு மக்கள் மறக்க முடியாது. கோத்ரா ரயிலை எரித்ததே சங்பரிவாரர் தான் என்பதை வீடியோ ஆதாரங்களுடன் தெஹல்கா ஏடு அம்பலப்படுத்திய பிறகும் முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் மீடியாக்களிடம் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை.

நாட்டில் எந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் உடனடியாக முஸ்லிம்கள் மீது பழிபோடும் காவல்துறை அதன் படி வழக்கு நடத்தியுள்ளார்களா? தண்டனை பெற்றுத் தந்தார்களா என்றால் இல்லவே இல்லை என்று கூறிவிடலாம்.

நிரூபிக்கப்படாத குண்டு வெடிப்பு பழிகள்

பெங்களூரில் எட்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் இரண்டு பேர் பலியாகி 15 பேர் காயமடைந்தனர். அந்தப் பழி முஸ்லிம்கள் மீது போடப்பட்டாலும் வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

2003 ஆம் ஆண்டு மும்பை ரயிலில் வெடிகுண்டு வெடித்ததில் 11 பேர் பலியானார்கள். அந்தப் பழியும் முஸ்லிம்கள் மீது போடப்பட்டது. இது வரை வழக்கில் எந்தத் துப்பும் இல்லை.

2003ஆகஸ்ட் 25 அன்று மும்பை கார் வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் செத்தனர். உடனடியாக எந்த ஆதாரமும் இல்லாமல் முஸ்லிம்கள் மீது பழி போடப்பட்டது. ஆனால் வழக்கில் எதையும் காவல் துறை கண்டுபிடிக்கவில்லை.

2004 ஆகஸ்ட் 15 அன்று மும்பையில் வெடிகுண்டு வெடித்ததில் 14 பேர் இறந்தனர். அந்தப் பழியும் உடனடியாக முஸ்லிம்கள் மீது போடப்பட்டது. ஆனால் எந்தத் துப்பும் துலக்கப்படவில்லை.

2005 ஆகஸ்ட் 29 அன்று புதுடெல்லியில் 3 இடங்களில் குண்டு வெடித்து 66 பேர் பலியானார்கள். உடனடியாக முஸ்லிம்கள் தான் காரணம் என்று கூறப்பட்டது. அதன் பிறகு பேச்சு மூச்சற்றுக் கிடக்கிறது.

2006 மார்ச் 7 அன்று காசி வாரணாசியில் குண்டு வெடித்து 15 பேர் செத்தனர். 60 பேர் படுகாயம் அடைந்தனர். அதுவும் நிரூபிக்கப்படவில்லை.

2006 ஜுலை 11 அன்று மும்பை ரயில் நிலையங்களில் குண்டு வெடித்தது. 180 பேர் செத்தனர். அந்தப் பழியும் முஸ்லிம்கள் மீது போடப்பட்டது.

எந்த முஸ்லிம்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

2007 பிப்ரவரி 19 அன்று பாகிஸ்தான் சென்ற சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் செத்தனர். பெரும்பாலோர் முஸ்லிம்கள். ஆயினும் இந்தப் பழியும் முஸ்லிம்கள் மீதே போடப்பட்டது. ஆனால் இன்னும் துப்பு துலக்கப்படவில்லை.

2007மே 118 அன்று ஹைதாரபாத் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடித்து 11 பேர் செத்தனர். அந்தப் பழியையும் முஸ்லிம்கள் மீதே போட்டனர். ஆனால் துப்பு துலக்கவில்லை.

2007 ஆகஸ்ட் 25 அன்று ஹைதராபாத் பூங்காவில் வெடிகுண்டு வெடித்து 40 பேர் பலியானார்கள். அந்தப் பழியும் உடனடியாக முஸ்லிம்கள் மீதே போடப்பட்டது. ஆனால் இது வரை தடையங்கள் இல்லை.

2008 மே 13 அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 7 வெடிகுண்டுகள் வெடித்து 63 பேர் பலியானார்கள். இந்தப் பழியையும் முஸ்லிம்கள் மீதே போட்டு பெரிய கலவரமே நடந்து பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆனால் முஸ்லிம்களைத் தொடர்பு படுத்த எந்தத் தடயமோ ஆதாரமோ இல்லை.

இப்படி நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகள் அனைத்தையும் உரிய விதத்தில் துப்பு துலக்கியிருந்தால் அன்றைக்கே சங்பரிவாரர் தான் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்.

முஸ்லிம்கள் மீது பொய்யாகப் பழி சுமத்தியதால் தான் எந்தத் துப்பும் கிடைக்காமல் இந்த வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன.

கோவை மும்பை குண்டு வெடிப்புகளின் நிலை

கோவை குண்டுவெடிப்பும், மும்பை தொடர் குண்டுவெடிப்பும் ஆகிய இரண்டு மட்டுமே முஸ்லிம்கள் மீது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

கோவையில் முஸ்லிம்களுக்கு எதிராகப் போலீசும், அரசும் இந்துத்துவா சக்திகளும் ஒருமித்து தாக்குதல் நடத்தி 19 பேர் கொல்லப்பட்டு, பல்லாயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டது. இதற்கு அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கோபம் கொண்ட குழு என்ன செய்வது என்ற அறிவு இல்லாமல் பதிலடி என்ற பெயரில் வெடிகுண்டு வைத்தனர். இதன் பின்னணியில் வெளிநாட்டு சக்தி இல்லை. எந்த நெட்ஒர்க்கும் இல்லை என்று நீதிமன்றமே கூறிவிட்டது.

அது போல் பால் தாக்கரேயால் தூண்டிவிடப்பட்ட மும்பை காலவரத்தில் குறி வைத்து முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம் அல்லாத வீடுகளுக்கு ஸ்வஸ்திக் அடையாளம் போட்டு முஸ்லிம் வீடுகளைக் கண்டறிந்து தாக்கி நூற்றுக் கணக்கானோரைக் கொன்று குவித்தனர். இதற்குக் காரணமானவர்கள் இன்று வரை தண்டிக்கப்படவில்லை. அந்தக் கோபத்தின் காரணமாக மும்பை தொடர் குண்டுவெடிப்பில் சில முஸ்லிம்கள் இறங்கினார்கள். அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.

இதைத் தவிர எந்தக் குண்டுவெடிப்பிலும் முஸ்லிம்களைச் சம்மந்தப்படுத்த துரும்பளவும் முகாந்திரமோ, ஆதாரமோ இல்லை. ஆனால் சங்பரிவாரத்தைச் சம்பந்தப்படுத்த எண்ணற்ற ஆதராங்கள் கிடைத்தும் பெரும்பான்மை என்ற போர்வைக்குள் நுழைந்து சங்பரிவாரம் தங்களைத் தற்காத்துக் கொள்கிறார்கள்.

குண்டு எடுப்பு நாடகம்

இவை யாவும் சங்பரிவாரத்தின் திட்டமே என்பதை குஜராத் குண்டு எடுப்பு (வெடிப்பு அல்ல) நாடகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

குஜராத்தின் சூரத் நகரில் வெடிக்காத குண்டுகளை எடுத்தார்கள். மோடி பார்வையிட வரும் போது அவரது மேடையில் கூட ஒரு குண்டு தொங்க விடப்பட்டதாக தொலைக் காட்சியில் பார்த்தோம்.

நாட்டில் அதிகப் பாதுகாப்பில் இருக்கின்ற மோடி ஒரு பகுதிக்கு வந்தால் எவ்வளவு சோதனை நடத்தப்படும்? அப்படி இருக்கும் போது அவர் பர்வையிடும் மேடையில் மோடியைத் தவிர யாராவது குண்டு வைக்க முடியுமா?

அவர் போகும் பாதையெல்லாம் வெடிகுண்டுகளாக எடுக்கப்படுகின்றன. இப்படி நடக்கும் என்பதை அறிவுடைய யாராவது நம்புவார்களா?

அதை விட வேடிக்கை வெடிகுண்டைச் செயல் இழக்கச் செய்த நாடகம்.

வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ய தனி நிபுணர்கள் உள்ளனர். அதற்கென குண்டு துளைக்காத உடை உண்டு. அப்படியெல்லாம் இல்லாமல் சாதாரண போலீசார், சாதாரண உடையில் பொது மக்கள் மத்தியில் பக்கோடா பொட்டலத்தைப் பிரிப்பது போல் பிரித்து வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ததைப் பார்த்து நாடே கை கொட்டி சிரித்தது.

இந்து மதத்தின் தீவிர பக்தரான பூரி சங்காராச்சரியாரே இதை நாடகம் என்றார்.

வெடிக்கப்படாமல் கண்டு எடுக்கப்பட்ட வெடிகுண்டுகள் குஜராத் முதல்வர் மோடியின் நாடகம். மதக் கலவரத்தை ஏற்படுத்துவதற்காக வைக்கப்பட்டவை. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கோத்ரா சம்பவம் போன்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்த மோடி திட்டமிடுகிறார். அவர் எதையும் செய்யத் திறமை படைத்தவர்

என்று பூரி சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.

தலைச்சேரி குண்டு எடுப்பு

19.10.2008 அன்று கேரள மாநிலம் தலைச்சேரியை அடுத்த தர்மடத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் வீட்டுத் தோட்டத்தில் சக்திவாய்ந்த 20 குண்டுகளைக் காவல்துறை கண்டுபிடித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் விபின் தாஸ் என்பவருக்குச் சொந்தமான ஷோபாசதனம் என்ற வீட்டில் தான் மேற்படி குண்டுகள் எடுக்கப்பட்டன.

2008 செப் 21 அன்று கர்நாடகா புத்துர் எனும் இடத்தில் பா.ஜ.க. தலைவர் சுரேஷ் காமத்துக்குச் செந்தமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் இருந்து 397 ஜெலட்டின் குச்சிகள், 1200 டெட்னேட்டர்கள் மற்றும் மூலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் பா.ஜ.க தலைவர் சுரேஷ் காமத் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவற்றையெல்லம் தொகுத்துப் பார்க்கும் போது கோவை, மும்பை தொடர் குண்டுவெடிப்பு தவிர அனைத்துமே சங்பரிவாரத்தின் சதித் திட்டம் என்பது தெளிவாகிறது.

டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு முஸ்லிம்கள் மீது பழிபோட்டு அவர்களை டெல்லி போலீஸ் கைது செய்தது. ஆனால் மறு விசாரணை நடத்திய சி.பி.ஐ. அவர்கள் அப்பாவிகள் என்றும் அவர்கள் மீது வழக்குப் போட்ட காவலர்களைக் கைது செய்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

நடுநிலையாளர்களே! இந்த விபரங்கள் யாவும் மறுக்க முடியாத ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.

இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்கும் போது மிகப் பெரிய வலைப்பின்னல் இதன் பின்னால் இருப்பது தெரிகிறது.

ராணுவத்தினரே இந்த பயங்காரவாதச் செயல்களுக்குப் பயிற்சி அளித்துள்ளனர். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து கடத்தி தீவிரவாதிகளூக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தலைவர்கள் பணக்காரர்கள், அரசியல் பிரமுகர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.

இவை அனைத்துமே நாட்டிலிருந்து முஸ்லிம்களை ஒழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செய்யப்பட்டுள்ளது.

இந்துக் கடவுளை உடைத்தாலும், இந்துக் கோவில்களை இடித்தாலும், இந்துத் தலைவர்களைக் கொன்றாலும், இந்து அப்பாவி மக்கள் உடல் சிதறி செத்து மடிந்தாலும் அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட முடியும் என்றால் அதைச் செய் என மூளைச் சலவை செய்யப்ட்ட ஒரு கூட்டம் தான் அனைத்தையும் கன கச்சிதமாகச் செய்து வந்தது.

அத்வானியாலும் காப்பாற்ற முடியாத அளவுக்கு மறுக்க முடியாத ஆதாரங்களுடன் இப்போது மாட்டிக் கொண்டனர்.

நியாய உள்ளம் படைத்த எங்கள் இந்து சகோதரர்களே! உங்களையே கொன்று குவிக்கத் தயங்காத இந்தப் பாவிகளை இனியும் இந்து மதத்தின் காவலர்கள் என்று நம்பப் போகிறீர்களா?

ஆட்சியைப் பிடிக்கவும், முஸ்லிம்களை அழித்தொழிக்கவும், இந்துக்களையே கொன்று, அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போடுபவர்களையும், இந்துத் தெய்வங்கள் மீது செருப்பு மாலை போட்டு அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டவர்களையும், இந்துத் தலைவர் காந்தியைக் கொன்று அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டவர்களையும், கோத்ரா ரயிலில் வந்த கரசேவகர்களைக் கொளுத்தி அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டவர்களையும் இந்துக்களின் காவலர்கள் என்று இனியும் நம்பப் போகிறீர்களா?

உங்களையே நாளை அழிக்கத் தயங்க மாட்டார்கள் என்பதில் இனியும் உங்களுக்குச் சந்தேகமா?

உங்கள் தெய்வங்களுக்குச் செருப்பு மாலை போடத் துனிந்தவர்களை இந்துக்கள் பட்டியலில் சேர்க்க உங்கள் மனம் இடம் தருமா?

அரசியலுக்காக மதவெறியைத் தூண்டும் இவர்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல; இந்துக்களுக்கும் எதிரிகள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

அனைத்து மதத்தவரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக வாழ குறுக்கே வருபவர்கள் இந்துவாக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும் அவர்களை அடியோடு ஒதுக்கித் தள்ளுவோம். ஒற்றுமை காப்போம்.

08.08.2015. 13:16 PM

குண்டு வெடிப்புக்கு அல்லாஹ் தான் சூத்திரதாரியா ?

இலங்கை புத்தசாமியாரின் அறியாமை

சமகால நிகழ்வுகளும் வாட்ஸ் அப் கேள்வி பதில்களும் 03/10/2021

 

More Articles …