Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

இயேசு பிறப்பதற்கு முன் அது குறித்து நற்செய்தி இம்மானுவேல் என்று பெயரிடப்படுவார் தேவனால் சொல்லப்பட்டது என்று பைபிள் சொல்கிறது. அந்த விபரங்களைப் பாருங்கள்

14. ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.

ஏசாயா 7 : 14

இது பழைய ஏற்பாட்டில் ஏசாயா எனும் தீர்க்கதரிசி செய்த முன்னறிவிப்பு. இது யாரைக் குறிக்கிறது என்று தெளிவாக சொல்லபடாவிட்டாலும் கன்னிகை கர்ப்பம் தரித்து பிள்ளை பெறுவாள் என்பது மேரியைத் தவிர வேறு யாரையும் குறிக்காது. இந்த முன்னறிவ்வு இயேசுவைத் தான் குறிக்கிறது என்று மத்தேயுவும் தனது சுவிசேஷத்தில் பினவ்ருமாறு எடுத்துக் காட்டுகிறார்.

23. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.

24. யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;

25. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.

மத்தேயு 1:23 

இயேசு பிறந்தவுடன் இமானுவேல் என பெயரிடப்படுவார் என்று முன்னறிவிப்பு உள்ளதாக மத்தேயு கூறுகிறார். இந்த முன்னறிவிப்பின் படி இமானுவேல் என்று பெயர் சூட்டப்படவில்லை. மாறாக இயேசு என்று பெயரிட்டதாக அதே மத்தேயு அடுத்த வசனத்தில் கூருகிறார்.

இயேசுவுக்கு இமானுவேல் என்று பெயர் சூட்டப்படும் என்ற ஏசாயாவின் முன்னறிவிப்பு பொய்யாகி விட்டது. அல்லது ஏசாயா பெயரில் யாரோ இட்டுக்கட்டியுள்ளார்களா?

இயேசு என்ற பெயருடன் இமானுவேல் என்ற பெயரும் சூட்டப்பட்டு இருக்கலாமா என்றால் அதுவும் இல்லை. அப்படி சூட்டப்பட்டு இருந்தால் ஒரு தடவையாவது இயேசு இமானுவேல் என்று அழைக்கப்பட்டு இருப்பார். அதுவும் முன்னறிவிப்பான பெயர் என்பதால் அந்தப் பெயரில் அழைக்கபபட்டு இருக்க வேண்டும். ஆனால் இயேசு ஒரே ஒரு தடவை கூட இமானுவேல் என்று இயேசு அழைக்கப்பட்டதாக பைபிளில் ஒரு வசனம் கூட இல்லை. 

 

கர்த்தருக்காக அர்ப்பணித்தவர்களுக்கு நூறு தாய்கள் நூறு தந்தைகள் கிடைப்பார்களா? ஆம் என்று பைபிள் சொல்கிறது

29 அதற்கு அவர் அவர்களிடம், ”உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இறையாட்சியின் பொருட்டு வீட்டையோ மனைவியையோ சகோதரர் சகோதாரிகளையோ பெற்றோரையோ பிள்ளைகளையோ விட்டுவிட்டவர் எவரும்

30 இம்மையில் பன்மடங்கும் மறுமையில் நிலைவாழ்வும் பெறாமல் போகார்” என்றார்.

லூக்கா 18: 29,30

 

29 மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்.

மத்தேயு 19 : 29

 ஒருவன் கர்த்தருக்காக தனது தந்தையை தியாகம் செய்தால் அவனுக்கு 100 தந்தைகள் கிடைப்பார்கள் என்று இவசனங்கள் கூறுகின்றன. அதுவும் இம்மையில் கிடைக்கும் என்று கூறுகின்றன. அது போல் தாய் சகோதரி சகோதரன் ஆகியோரை விட்டுச் சென்றாலும் அவர்களும் நூறு மடங்காக கிடைப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது.

அப்படியானால் கர்த்தருக்காக திருமணம் கூட செய்யாமல் அனைத்தையும் துறந்துள்ள கிறித்தவ போதகர்கள் ஒவ்வொருவருக்கும் 100 தந்தைகள் உள்ளனரா?

மனைவியை விட்டுச் என்றவருக்கு 100 மனைவிகள் உண்டா?

 

 

இயேசு வானுலகம் போவதற்கு முன் மக்களிடம் ஒரு முன்னறிவிப்பு செய்தார். நான் போய்விட்டு தந்தையின் மாட்சியோடு திரும்ப வருவேன். அப்படி நான் வருவதைக் காணாமல் இங்கே இருப்பவர்களில் சிலர் சாகமாட்டார் என்று இயேசு முன்னறிவிப்பு செய்தார்.

27 மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.

28 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார்” என்றார்.

மத்தேயு 16 :27 , 28

 மேலே ஏறிச் என்ற இயேசு இன்னும் வரவில்லை. இனிமேல் வருவார் என்று தான் கிறித்தவர்களும் நம்புகிறார்கள். அவர் வரும் வரை அன்று இருந்த சிலர் உயிருடன் இருபார்கள் என்றால் இன்று 2020 வய்துடையவர் இஸ்ரேலில் இருக்க வேண்டும். சிலர் என்பது ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் குறிக்கும். அவ்வளவு வேண்டாம் 2020 வயதுடைய ஒரே ஒருவர் உயிருடன் உள்ளார் என்று காட்டமுடியுமா? 

முடியவே முடியாது என்றால் இயேசு பொய் சொன்னார் என்பது கிறித்தவர்கள் நம்பிக்கையா? அல்லது இயேசுவின் பெயரால் அம்த்தேயு இட்டுக்கட்டி விட்டாரா? 

 

கிறித்தவப் பார்வையில் திருமணமும் மறுமணமும்

திருமணம் குறித்தும் மறுமணம் குறித்தும் கிறித்துவ மதம் சொல்வதை கிறித்தவர்கள் முழுமையாக நிராகரிக்கிறார்கள்.

திருமணம் செய்யாமல் இருப்பதுவே நல்லது

38. ஆகவே தாம் ஒப்பந்தம் செய்துகொண்ட பெண்ணைத் திருமணம் செய்பவர் நல்லதையே செய்கிறார். எனினும் திருமணம் செய்யாமல் இருப்பவர் அதைவிட நல்லதையே செய்கிறார்.

1 கொரிந்தியர் 38

48. மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது. இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன்.

1 கொரிந்தியர் 48

 51. அன்பர்களே, நான் சொல்வது இதுவே; இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும்.

1 கொரிந்தியர் 51

 54. நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்கவேண்டுமென்றே நான் விரும்புகிறேன், மணமாகாதவர் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்.

55. ஆனால் மணமானவர் உலகுக்குரியவற்றில் அக்கறைகொள்கிறார்; எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்.

1 கொரிந்தியர் 54,55 

56. இவ்வாறு அவர் மனம் பிளவுபட்டுள்ளது. மணமாகாத பெண்ணும் கன்னிப்பெண்ணும் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்வதால் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயோராகின்றனர். ஆனால் மணமான பெண், உலகுக்குரியவற்றில் அக்கறை கொள்வதால் எப்படித் தம் கணவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார்.

1 கொரிந்தியர் 56 

திருமணம் செய்யக் கூடாது

49. மனைவியுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டு இருப்பவர்கள் மணவிலக்குக்கு வழிதேடக் கூடாது; மனைவியுடன் இணைக்கப்படாதவர்கள் திருமணம் செய்துகொள்ள வழி தேடக்கூடாது.

1 கொரிந்தியர் 49

விவாகரத்து கூடாது 

49. மனைவியுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டு இருப்பவர்கள் மணவிலக்குக்கு வழிதேடக் கூடாது; மனைவியுடன் இணைக்கப்படாதவர்கள் திருமணம் செய்துகொள்ள வழி தேடக்கூடாது. 

1 கொரிந்தியர் 49,50

கணவனை எக்காரணம் கொண்டும் பிரியக் கூடாது

39. கணவர் உயிரோடு இருக்கும் காலம்வரை மனைவி அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறார். கணவர் இறந்துவிட்டால் தாம் விரும்புபவரைத் திருமணம் செய்து கொள்ள அவருக்கு உரிமையுண்டு. ஆனால் அவர் திருமணம் செய்து கொள்பவர் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவராய் இருத்தல் வேண்டும்.

விதவைகள் மறுமணம் செய்யக் கூடாது

40. அவர் கைம்பெண்ணாகவே இருந்துவிட்டால் அது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். இதுவே என் கருத்து. நானும் கடவுளின் ஆவியால் ஆட்கொள்ளப் பெற்றிருக்கிறேன் எனக் கருதுகிறேன்.

1 கொரிந்தியர் 39.40

 

பைபிளில் ஆபாசங்கள்

சிறுநீர் கழிக்கும் ஒழுங்குகள் இல்லற வாழ்க்கையின் ஒழுங்கள் பற்றி திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் சொல்லப்படுவதை கிறித்தவ போதகர்கள் ஆபாசமாக சித்தரித்து இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்த நினைக்கின்றனர். ஆனால் இஸ்லாத்தில் எந்த ஆபாசமும் இல்லை.

இஸ்லாத்தில் ஆபாசம் என்று சித்தரிக்க முற்படும் கிறித்தவர்களின் பைபிளில் தான் ஆபாசம் மலிந்துள்ளன என்பதை இஸ்லாத்தை விமர்சிப்பவர்களுக்கு எடுத்துக் காட்ட இது பதிவிடப்படுகிறது.

ஆபாசம் ஒன்று


24 வேசிக் குடிலைக் கட்டிக் கொண்டு பொதுவிடங்களில் உன் விபசாரத் தொழிலுக்கு இடம் தயாரித்தாய்.

25 எல்லாத் தெருக்கோடிகளிலும் உன் விபசாரக் கூடங்களைக் கட்டி, உன் மகிமையையும் அழகையும் கெடுத்து, வருவார் போவார்க்கெல்லாம் உன்னைக் கையளித்து, நமக்கு ஆத்திரம் உண்டாகும்படி நீ விபசாரத்தில் மேன் மேலும் உழன்று வந்தாய்.

26 நீ உன் பாவாடையை தூக்கினாய். அதனால் அவர்களால் உங்கள் கால்களை காண முடிந்தது. பின் அம்மனிதர்களோடு வேசிகளைப் போல் நடந்துகொண்டாய். பிறகு நீ எகிப்துக்குப் போனாய். ஏனெனில் அவனிடம் பெரிய ஆணுறுப்பு இருந்தது. எனக்கு கோபமூட்டுவதற்காக நீ பலமுறை அவனோடு பாலின உறவு வைத்துக்கொண்டாய்.

27 ஆகையால் இதோ நமது கரத்தை உனக்கு விரோதமாய் நீட்டி, உனக்குரிய பங்கைக் குறைத்து, உன்னுடைய முறைகேடான நடத்தையைப் பார்த்து வெட்கப்படும் உன் பகைவார்களான பிலிஸ்தியால்ன் குமாரத்திகளுக்கு உன்னைக் கையளிப்போம்.

28 அசீரியர்களோடும் நீ வேசித்தனம் செய்தாய்; ஏனெனில் நீ இன்னும் திருப்தி அடையவில்லை; ஆம், நீ அவர்களோடு வேசித்தனம் செய்தும் உனக்குத் திருப்தி உண்டாகவில்லை.

29 ஆகையால் வாணிக நாடாகிய கல்தேயாவோடும் வேசித்தனம் பண்ணினாய்; அப்பொழுதும் நீ திருப்தி அடையவில்லை.

30 நாணமற்ற வேசியின் செயல்களையெல்லாம் செய்த உன் இதயத்தின் காமநோய் தான் என்னே, என்கிறார் ஆண்டவர்.

31 உண்மையாகவே எல்லா வழி முனைகளிலும் உன் வேசிக்குடிலைக் கட்டினாய்; எல்லாப் பொதுவிடங்களிலும் உன் விபசாரக் கூடங்களை ஏற்படுத்தினாய்; மற்ற வேசிகளைப் போலப் பணம் சம்பாதிக்கவும் நீ வேசித்தனம் செய்யவில்லை.

32 வேசியாகிய மனைவியே, சொந்தக் கணவனை விட்டு அந்நியரைச் சேர்க்கிறாயே!

33 மற்ற வேசிகளுக்குப் பணம் கொடுப்பார்கள்; ஆனால் உன் காரியத்தில் அப்படியில்லையே! நாற்றிசையிலுமிருந்து வந்து உன்னுடன் விபசாரஞ் செய்யும்படி உன் காதலர்களுக்கு நீயல்லவோ காணிக்கை கொடுத்து அழைக்கின்றாய்!

34 ஆகவே வேசித்தனத்திலும் நீ மற்ற வேசிகளிலிருந்து வேறுபட்டிருக்கிறாய்; வேசித்தனம் செய்ய உன்னைத் தூண்டியவர் யாருமில்லை; நீ பிறர்க்குக் கையூட்டுக் கொடுத்தாய்; பிறர் உனக்குப் பணமேதும் தரவில்லை; இது பெரிய வேறுபாடன்றோ!

35 ஆகையால் வேசியே, ஆண்டவருடைய வார்த்தையைக் கேள்:

36 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீ உன் காதலரோடு செய்த வேசித்தனத்தால் உன் வெட்கம் வெளியாகி, உன் நிருவாணம் காணப்பட்டதாலும், நீ சிலைகளை வழிபட்டதாலும், அவற்றுக்கு உன் பிள்ளைகளைப் பலியிட்டு இரத்தம் சிந்தியதாலும்,

37 இதோ, நீ இன்பம் அனுபவித்த உன் காதலர் அனைவரையும், நீ விரும்பியவர்கள், வெறுத்தவர்கள் எல்லாரையும் ஒன்றுகூட்டுவோம்; அவர்கள் எல்லாரையும் நாற்றிசையிலிருந்தும் கூட்டிச்சேர்த்து உன்னிடம் கொண்டு வந்து அவர்களுக்கு உன் வெட்கத்தைக் காட்டுவோம்; அவர்கள் யாவரும் உன் நிருவாணத்தைக் காண்பார்கள்.

38 விபசாரிகளையும், இரத்தம் சிந்தியவர்களையும் நியாயந் தீர்ப்பது போல் உன்னையும் தீர்ப்பிட்டு, உன் மீது இரத்தப் பழியையும் ஆத்திரத்தையும் சுமத்துவோம்.

39 உன்னை அவர்கள் கையில் ஒப்படைப்போம்; அவர்கள் உன் குடிலை இடித்து விபசாரக் கூடங்களைத் தரைமட்டமாக்குவார்கள்; பின், உன் ஆடைகளை உரிந்து, உன் ஆபரணங்களை அபகரித்து, உன்னை நிருவாணியாக்கி, வெட்கக் கேடான நிலையில் உன்னை விட்டுப் போவார்கள்.

எசேக்கியேல் 16 ஆம் அதிகாரம் 23

 ஆணின் பெரிய உறுப்பு என்றும் பாவாடையைத் தூக்கினாள் என்றும், அவளது ஆடையைக் களைந்து அவளது நிர்வாணத்தை அனைவரும் காணும் படி செய்வோம் என்பது போன்ற ஆபாசங்கள் வேதத்தில் இருக்கலாமா?

ஆபாசம் இரண்டு

1 அரசிள மகளே! காலணி அணிந்த உன் மெல்லடிகள் எத்துணை அழகு! உன் தொடைகளின் வளைவுகள் அணிகலனுக்கு இணை! கைதேர்ந்த கலைஞனின் வேலைப்பாடு!

2 உன் கொப்பூழ் வட்டவடிவக் கலம்; அதில் மதுக் கலவைக்குக் குறைவே இல்லை; உன் வயிறு கோதுமை மணியின் குவியல்; லீலிகள் அதை வேலியிட்டுள்ளன.

3 உன் முலைகள் இரண்டும் இரு மான் குட்டிகள் போன்றவை; கலைமானின் இரட்டைக் குட்டிகள் போன்றவை.

4 உன் கழுத்து தந்தத்தாலான கொத்தளம் போன்றது; உன் கண்கள் எஸ்போனின் குளங்கள் போன்றவை; பத்ரபீம் வாயிலருகே உள்ள குளங்கள் போன்றவை; உம் மூக்கு லெபனோனின் கோபுரத்திற்கு இணை; தமஸ்கு நகர் நோக்கியுள்ள கோபுரத்திற்கு இணை.

5 உன் தலை கர்மேல் மலைபோல் நிமிர்ந்துள்ளது; உன் கூந்தல் செம்பட்டுப் போன்றது; அதன் சுருள்களுள் அரசனும் சிறைப்படுவான்.

6 அன்பே! இன்பத்தின் மகளே! நீ எத்துணை அழகு! எத்துணைக் கவர்ச்சி!

7 இந்த உன் வளர்த்தி பேரீச்சைக்கு நிகராகும்; உன் முலைகள் இரண்டும் அதன் குலைகளாகும்.

8 ஆம், பேரீச்சையின்மேல் நான் ஏறுவேன்; அதன் பழக்குலைகளைப் பற்றிடுவேன்” என்றேன்; உன் முலைகள் திராட்சைக் குலைகள்போல் ஆகுக! உன் மூச்சு கிச்சிலிபோல்; மணம் கமழ்க!

9 இதழ்களுக்கும் பற்களுக்கும் மேலே மென்மையுடன் இறங்கும் இனிமைமிகு திராட்சை இரசம் போன்றவை உன் முத்தங்கள்!

10 நான் என் காதலர்க்குரியள்; அவர் நாட்டம் என்மேலே!

11 என் காதலரே, வாரும்; வயல்வெளிக்குப் போவோம்; மருதோன்றிகள் நடுவில் இரவைக் கழிப்போம்.

12 வைகறையில் திராட்சைத் தோட்டத்திற்குப் போவோம்; திராட்சைக் கொடிகள் துளிர்த்தனவா, அதிலிருக்கும் மொட்டுகள் விரிந்தனவா, மாதுளை மரங்கள் மலர்ந்தனவா என்று பார்ப்போம். அங்கே உம்மேல் என்; காதலைப் பொழிவேன்.

13 காதற்கனிகளின் மணம் கமழுகின்றது; இனியது அனைத்தும் நம் கதவருகில் உளது; புதிதாய்ப் பறித்தனவும் பலநாள் காத்தனவுமான பழங்களை என் காதலரே, உமக்கென்றே நான் சேர்த்து வைத்தேன்.

உன்னதப்பாட்டு 7

ஆபாசம் மூன்று

1 நீர் என் உடன்பிறப்பாக இருக்கக் கூடாதா! என் அன்னையிடம் பால் குடித்தவராய் இருக்கலாகாதா! தெருவில் கண்டாலும் நான் உம்மை முத்தமிடுவேனே! அப்போது எவருமே என்னை இகழமாட்டார்.

2 உம்மை என் தாய் வீட்டுக்குக் கூட்டி வருவேன்; எனக்குக் கற்றுத் தந்தவளின் மனைக்குள் கொணர்ந்திடுவேன்; மணமூட்டிய திராட்சை இரசத்தை உமக்குக் குடிக்கக் கொடுப்பேன்; என் மாதுளம் பழச்சாற்றைப் பருகத் தருவேன்.

3 இடக்கையால் அவர் என்; தலையைத் தாங்கிக் கொள்வார்; வலக்கையால் அவர் என்னைத் தழுவிக் கொள்வார்.

4 எருசலேம் மங்கையரே, ஆணையிட்டுக் கேட்கின்றேன்; காதலை ஏன் தட்டி எழுப்புகின்றீர்? தானே விரும்பும்வரை அதை ஏன் தட்டி எழுப்புகின்றீர்?

5 ”யார் இவள்! பாலைவெளியினின்று எழுந்து வருபவள்; தன் காதலர்மேல் சாய்ந்து கொண்டு வருபவள் யார் இவள்?” கிச்சிலி மரத்தடியில் நான் உம்மை எழுப்பினேன்; அங்கேதான் உம்தாய் பேறுகால வேதனையுற்றாள்.

6 உம் நெஞ்சத்தில் இலச்சினைபோல் என்னைப் பொறித்திடுக; இலச்சினைப்போல் உம் கையில் பதித்திடுக; ஆம், அன்பு சாவைப்போல் வலிமைமிக்கது; அன்பு வெறி பாதாளம்போல் பொறாதது; அதன் பொறி, எரிக்கும் நெருப்புப் பொறி; அதன் கொழுந்து பொசுக்கும் தீக்கொழுந்து.

7 பெருங்கடலும் அன்பை அணைக்க முடியாது; வெள்ளப்பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது; அன்புக்காக ஒருவன் தன் வீட்டுச் செல்வங்களை எல்லாம் வாரியிறைக்கலாம்; ஆயினும், அவன் ஏளனம் செய்யப்படுவது உறுதி.

8 நம்முடைய தங்கை சிறியவள்; அவளுக்கு முலைகள் முகிழ்க்கவில்லை; அவளைப் பெண்பேச வரும்;நாளில் நம் தங்கைக்காக என் செய்வோம்?

9 அவள் ஒரு மதிலானால் அதன்மேல் வெள்ளியரண் கட்டிடுவோம்; அவள் ஒரு கதவானால் அதனை கேதுருப் பலகையால் மூடிடுவோம்.

10 நான் மதில்தான்; என் முலைகள் அதன் கோபுரங்கள் போல்வன; அவர்தம் பார்வையில் நான் நல்வாழ்வு தருபவள் ஆவேன்.

உன்னதப்பாட்டு 8

ஆபாசம் நான்கு

1 என் தோட்டத்திற்கு நான் வந்துள்ளேன்; என் தங்காய், மணமகளே, என் வெள்ளைப்பேளத்தையும் நறுமணப் பொருளையும் சேகரிக்கின்றேன்; என் தேனையும் தேனடைகளையும் உண்கின்றேன்; என் திராட்சை இரசத்தையும் பாலையும் பருகுகின்றேன்; தோழர்களே, உண்ணுங்கள்; அன்பர்களே, போதையேறப் பருகுங்கள்.

2 நான் உறங்கினேன்; என் நெஞ்சமோ விழித்திருந்தது; இதோ, என் காதலர் கதவைத் தட்டுகின்றார்; ”கதவைத் திற, என் தங்காய், என் அன்பே, என் வெண்புறாவே, நிறை அழகே, என் தலை பனியால் நனைந்துள்ளது; என் தலைமயிர்ச் சுருள் இரவுத் தூறலால் ஈரமானது.

3 ”என் ஆடையைக் களைந்து விட்டேன்; மீண்டும் அதனை நான் உடுத்த வேண்டுமோ? என் கால்களைக் கழுவியுள்ளேன்; மீண்டும் அவற்றை அழுக்குப்படுத்தவோ?”

4 என் காதலர் கதவுத் துளை வழியாகக் கையை விட்டார்; என் நெஞ்சம் அவருக்காகத் துள்ளிற்று.

5 எழுந்தேன் நான், காதலர்க்குக் கதவு திறக்க; என் கையில் வெள்ளைப்போளம் வடிந்தது; என் விரல்களில் வெள்ளைப்போளம் சிந்திற்று; தாழ்ப்பாள் பிடிகளில் சிதறிற்று.

இனிமைமிகுப் பாடல்கள் 5 : 7

ஆபாசம் ஐந்து

1 என்னே உன் அழகு! ”என் அன்பே, என்னே என் அழகு! முகத்திரைக்குப் பின்னுள்ள உன் கண்கள் வெண்புறாக்கள்! கிலயாதின் மலைச்சரிவில் இறங்கி வரும் வெள்ளாட்டு மந்தை போன்றது உன் கூந்தல்.

2 உன் பற்களோ மயிர் கத்தரிப்பதற்கெனக் குளித்துக் கரையேறும் பெண் ஆடுகளின் மந்தை போல்வன; அவையாவும் இரட்டைக் குட்டி போட்டவை; அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.

3 செம்பட்டு இழைபோன்றன உன்னிதழ்கள்; உன் வாய் எழில் மிக்கது; முகத்திரையின் பின்னிருக்கும் உன் கன்னங்கள் பிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை.

4 தாவீதின் கொத்தளம்போல் அமைந்துள்ளது உன் கழுத்து; வரிவரியாய் ஆயிரம்; கேடங்கள் ஆங்கே தொங்குகின்றன; அவையெலாம் வீரர்தம் படைக்கலன்களே.

5 உன் முலைகள் இரண்டும் லீலிகள் நடுவில் மேயும் இருமான் குட்டிகளை ஒக்கும்; கலைமானின் இரட்டைக் குட்டிகளை ஒக்கும்.

6 பொழுது புலர்வதற்குள், நிழல்கள் மறைவதற்குள், வெள்ளைப்போள மலையினுக்கு விரைந்திடுவேன்; சாம்பிராணிக் குன்றுக்குச் சென்றிடுவேன்;

7 என்; அன்பே, நீ முழுவதும் அழகே! மறுவோ உன்னில் சிறிதும் இலதே!

8 லெபனோனிலிருந்து வந்திடு மணமகளே; லெபலோனிலிருந்து வந்திடு புறப்படு; அமானா மலையுச்சியினின்று - செனீர் மற்றும் எர்மோன் மலையுச்சியினின்று- சிங்கங்களின் குகைளினின்று - புலிகளின் குன்றுகளினின்று இறங்கிவா!

9 என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்; என் தங்காய், மணமகளே, உன் விழிவீச்சு ஒன்றினாலே, உன் ஆரத்தின் முத்து ஒன்றினாலே, என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்.

10 உன் காதல் எத்துணை நேர்த்தியானது; என் தங்காய், மணமகளே, உன் காதல் திராட்சை இரசத்தினும் இனிது! உனது பாமளத்தின் நறுமணமோ எவ்வகைத் தைலத்தின் நறுமணத்தினும் சிறந்தது.

11 மணமகளே, உன் இதழ்கள் அமிழ்தம் பொழிகின்றன; உன் நாவின்கீழ்த் தேனும் பாலும் சுரக்கின்றன; உன் ஆடைகளின் நறுமணம் லெபனோனின் நறுமணத்திற்கு இணையானது.

12 பூட்டியுள்ள தோட்டம் நீ; என் தங்காய், மணமகளே, பூட்டியுள்ள தோட்டம் நீ; முத்திரையிட்ட கிணறு நீ!

13 மாதுளைச் சோலையாய்த் தளிர்த்துள்ளாய்; ஆங்கே தித்திக்கும் கனிகள் உண்டு; மருதோன்றியும் நரந்தமும் உண்டு.

14 நரந்தம், மஞ்சள், வசம்பு, இலவங்கம், எல்லாவகை நறுமண மரங்களும், வெள்ளைப்போளமும் அகிலும், தலைசிறந்த நறுமணப் பொருள்கள் யாவுமுண்டு.

15 நீ தோட்டங்களின் நீரூற்று; வற்றாது நீர்சுரக்கும் கிணறு; லெபலோனினின்று வரும் நீரோடை!

16 வாடையே, எழு! தென்றலே, வா! என் தோட்டத்தின்மேல் வீசு! அதன் நறுமணம் பரவட்டும்! என் காதலர் தம் தோட்டத்திற்கு வரட்டும்! அதன் தித்திக்கும் கனிகளை உண்ணட்டும்!

 உன்னதப்பாட்டு 4 : 1to 16

 ஆபாசம் ஆறு

1. ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

2. மனிதா, ஒரே தாயின் குமாரத்திகளான இரண்டு பெண்கள் இருந்தார்கள்

3. இவர்கள் தங்கள் வாலிய வயதில் எகிப்தில் வேசித்தனம் செய்தார்கள்; அங்கே அவர்கள் மார்புகள் அமுக்கப்பட்டன; கன்னிக் கொங்கைகளைப் பிறர் தொட்டு விளையாடினர்.

4. அவர்களுள் தமக்கையின் பெயர் ஒல்லா, தங்கையின் பெயர் ஒலிபா. அவர்கள் நமக்கு உரிமை மனைவியராகிப் புதல்வர் புதல்வியரைப் பெற்றார்கள். ஒல்லா சமாரியாவையும், ஒலியா யெருசலேமையும் குறிக்கின்றன.

5. ஒல்லா என்னுடையவளாய் இருந்தும், விபசாரியானாள்; அசீரியர்கள் மீது காமம் கொண்டாள்;

6. நீல ஆடையுடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய், ஆசை மூட்டும் அழகு கொண்ட வாலிபர்களுமாய்க் குதிரை மீது வந்த வீரர்கள் மேல் காதல் பைத்தியம் கொண்டாள்.

7. அசீரியருள் தலைசிறந்தவர்களான இவர்கள் அனைவருடனும் வேசித்தனம் செய்தாள். தான் காமங்கொண்ட அவர்களுடைய சிலைகளால் இவள் தீட்டுப்பட்டாள்.

8. தான் எகிப்தில் வாழ்ந்த நாளிலிருந்து செய்து வந்த வேசித்தனத்தை இவள் விட்டு விடவில்லை. ஏனெனில் இவளுடைய வாலிப வயதில் அவர்கள் இவளுடன் படுத்து, இவளுடைய கன்னிக் கொங்கைகளைத் தொட்டு விளையாடி, தங்கள் காமத்தை இவள் மேல் தீர்த்துக் கொண்டார்கள்.

9. ஆகையால் அவள் மோகித்த அவளுடைய காதலர்களின் கைகளிலேயே- அந்த அசீரியால்ன் கைகளிலேயே நாம் அவளை விட்டு விட்டோம்.

10. அவர்கள் அவள் ஆடைகளை உரிந்தனர்; அவளுடைய புதல்வர் புதல்வியரை பிடித்துக் கொண்டு, அவளை வாளால் கொன்று போட்டனர்; அவளுக்குக் கிடைத்த தண்டனையின் காரணமாய் அவள் பெண்களுக்குள்ளே பழமொழிக்காளானாள்.

11. அவள் தங்கை ஒலிபாவுக்கு இதெல்லாம் நன்கு தெரியும்; தெரிந்திருந்தும் தமக்கையை விடக் காமத்திலும் வேசித்தனத்திலும் மிகுந்தவள் ஆனாள்.

12. பகட்டான ஆடைகளை உடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய், ஆசைமூட்டும் அழகு வாலிபர்களுமாய்க் குதிரை மீது ஏறி வந்த வீரர்களான அசீரியர்கள் மேல் காமம் கொண்டாள்.

13. இவ்வாறு சகோதரிகள் இருவரும் ஒரே வழியில் நடந்து காமத்தால் தீட்டுப்பட்டதைக் கண்டோம்.

14. ஆனால் ஒலிபா தன் வேசித்தனத்தில் இன்னும் மிகுதியாய் ஆழ்ந்தாள்; சுவரில் எழுதப்பட்ட ஆண்களின் உருவங்களையும், வரையப்பட்ட கல்தேயாரின் ஒவியங்களையும் கண்டாள்;

15. அவர்கள் தங்கள் பிறப்பிடமான கல்தேயாவிலுள்ள பபிலோன் நகரத்தாரைப் போல் இடையில் கச்சை கட்டிக் கொண்டும், தலையில் தலைப்பாகை அணிந்தும், படைத்தலைவர்கள் போல் தோற்றமுள்ளவர்களாயும் இருந்ததைக் கண்டாள்.

16. கண்டதும் அவர்கள் மேல் காமங்கொண்டு, அவர்களிடம் ஜகல்தேயா நாட்டுத் தூதர்களை அனுப்பினாள்.

17. பபிலோனியர்கள் வந்து, அவளோடு காமப்படுக்கையில் படுத்து, தங்கள் காமச் செயல்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; தீட்டுப்பட்ட பின் அவர்கள் மேல் வெறுப்புக் கெண்டாள்.

18. இவ்வாறு அவள் தன் வேசித்தனத்தை வெளிப்படையாய் செய்து, தன் நிருவாணத்தைக் காண்பித்த போது, அவள் சகோதால்யை விட்டுப் பிரிந்தவாறே நம் மனம் இவளையும் விட்டுப் பிரிந்தது.

19. இருப்பினும் அவள் எகிப்தில் தன் வாலிப வயதில் செய்த வேசித்தனத்தை நினைத்துக் கொண்டு, இன்னும் மிகுதியாய் அதில் ஆழ்ந்தாள்.

20. காமவெறியர் மேல் அவள் மோகங்கொண்டாள்; அவர்களுடைய உறுப்புகள் கழுதைகளின் உறுப்புகள் போலும், அவர்களுடைய இந்திரியம் குதிரைகளின் இந்திரியம் போலும் இருந்தன.

21 இவ்வாறு எகிப்தியர் உன் இளமார்புளைத் தொட்டு விளையாடி, உன் கன்னிக் கொங்கைகளை அமுக்கிய போது செய்த அதே வாலிப வயதின் வேசித்தனத்தை விரும்பினாய்.”

எசேக்கியேல் 23 வது அதிகாரம் 1to 21 வரை

 ஆபாசம் ஏழு

13 ஒரு பெண்ணை மணந்து கொண்ட ஒருவன் பிறகு அவளை வெறுத்து:

14 நான் அந்தப் பெண்ணை மணம் புரிந்து அவளிடம் மணவுறவு கொண்டபோது அவள் கன்னியல்லள் என்று கண்டுபிடித்தேன் என்று சொல்லி, அவள்மீது பெரிலாத அவதூறான காரியங்களைத் தூற்றி அவளைத் தள்ளிவைக்க நேரம் பார்த்துக் கொண்டிருப்பானாயின்,

15 அவளுடைய தந்தையும் தாயும் நகரவாயிலிலுள்ள பெரியோர்களிடம் அவளைக் கூட்டிக்கொண்டுபோய், அவளுடைய கன்னிமையின் அடையாளங்களைக் காண்பிக்க ஆயத்தமாய் இருப்பார்கள்.

16 என் மகளை இவனுக்கு மனைவியாகக் கொடுத்தேன். இவன் அவள்மேல் வெறுப்புக் கொண்டமையால்:

17 நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லை என்று அவள்மேல் மிகக்கேடான அவதூறு சாற்றியிருக்கிறான். என் மகளுடைய கன்னிமையின் சான்று இங்கே இருக்கிறது, பாருங்கள் என்று சொல்லி, (அவளுடைய) ஆடையை நகரப் பெரியார்களின் முன்பாக விரித்துக் காட்டுவான்.

18 அப்பொழுது அந்நகரப் பெரியார்கள் அந்த மனிதனைப் பிடித்துக் கசையால் அடிப்பார்கள்

உபாகமம் 22 : 13 to 21

 ஆபாசம் எட்டு

11 மேலும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது;

12 இஸ்ரயேல் மக்களிடம் சொல்; ஒருவனின் மனைவி நெறி தவறி அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தால்,

13 வேறொருவன் அவளோடு படுத்து உடலுறவு கொள்ள, அது அவள் கணவனின் கண்களுக்கு மறைக்கப்பட்டு அவள் கறைப்பட்டிருந்தும் கண்டு பிடிக்கப்படாதிருந்து, அவள் தவறு செய்த நிலையிலேயே பிடிக்கப்படாமலிருந்தால்,

14 வெஞ்சினத்தின் ஆவி, கணவனை ஆட்கொண்டு தன்னையே கறைப்படுத்திவிட்ட மனைவியின் மேல் அவன் வெகுண்டழுந்தால் அல்லது வெஞ்சினத்தின் ஆவி அவனை ஆட்கொண்டு தன் மனைவி தன்னையே கறைபடுத்தாதிருந்தும் அவன் வெகுண்டெழுந்தால்,

15 அவன் தன் மனைவியை குருவின் முன் கொண்டு வரவேண்டும். அவளை முன்னிட்டுத் தேவைப்படும் பத்தில் ஒரு ஏப்பா வாற்கோதுமை உணவைப் படைக்க வேண்டும்; அவன் அதன் மேல் எண்ணெய் ஊற்றவோ தூபப்பொருள்கள் தூவவோ கூடாது. ஏனெனில் அது நினைவுபடுத்தும் உணவுப்படையல், அதாவது குற்றத்தை நினைவூட்டக்கூடிய சினத்தின் உணவுப்படையல்.

16 பின் குரு அவளைக் கூட்டிக் கொண்டு வந்து ஆண்டவர் முன் நிறுத்துவார்;

17 குரு ஒரு மண் பாத்திரத்தில் புனித நீர் எடுத்து, திருக்கூடாரத்தின் தரையில் இருந்து கொஞ்சம் துகள் எடுத்து நீரில் போடுவார்.

18 குரு அப்பெண்ணின் தலைமுடியைக் கலைத்துவிட்டு, வெஞ்சினத்தின் உணவுப் படையலாகிய நினைவுபடுத்தும் உணவுப்படையலை அவள் கைகளில் வைப்பார்; சாபத்தைக் கொண்டு வரும் கசப்பு நீரையும் குரு தன் கையில் வைத்திருப்பார்.

19 அதன் பின்னர் குரு அவளை ஆணையிடச் சொல்லிக் கூற வேண்டியது; ”நீ உன் கணவனின் அதிகாரத்துக்கு உட்பட்டிருக்கும்போது வேறு எந்த மனிதனும் உன்னோடு படுக்காமலும், நீ ஒழுக்கக்கேட்டுக்கு உடன்படாமலுமிருந்தால் சாபங்களைக் கொண்டு வரும் இக்கசப்பு நீர் உன்னை ஒன்றுஞ் செய்யாது;

20 ஆனால் நீ உன் கணவனின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தும் நெறி தவறி, உன்னையே கறைப்படுத்தி, உன் கணவன் தவிர வேறொருவன் உன்னோடு படுத்திருக்க உடன்பட்டால்

21 குரு அப்பெண்ணைச் சாப ஆணை இடச் சொல்லி அவளிடம், ”ஆண்டவர் உன் தொடைகள் அழுகி விழவும் உன் வய்று வீங்கவும் செய்து உன் மக்களிடையே உன்னை ஒரு சாபமாகவும், ஆணைக்கூற்றாகவும் ஆக்குவார்;

22 சாபத்தைக் கொண்டு வரும் இந்த நீர் உன் குடல்களில் இறங்கி உன் வயிற்றை வீங்கச் செய்து உன் தொடைகளை அழுகி விழச் செய்யட்டும்” என்பார். அதற்கு அப்பெண் ”ஆமென், ஆமென்” என்பாள்.

23 பின்னர் குரு இச்சாபங்களை ஓர் ஏட்டில் எழுதிக் கசப்பு நீரால் அவற்றை அழித்து விடுவார்;

24 சாபத்தைக் கொண்டுவரும் அக் கசப்பு நீரை அப்பெண் குடிக்கச் செய்வார்; சாபத்தைக் கொண்டு வரும் அந்நீர் அவளுக்குள் சென்று கொடிய வேதனையை உண்டாக்கும்

25 குரு வெஞ்சினத்தின் உணவுப்படையலைப் பெண்ணின் கையிலிருந்து வாங்கி அதை ஆண்டவர் முன்னிலையில் ஆரத்தியாகக் காட்டிப் பலிபீடத்துக்குக் கொண்டு வருவார்.

26 குரு அந்த உணவுப் படையிலிலிருந்து அதன் நினைவுப் பகுதியாக ஒரு கைப்பிடி எடுத்து அதனைப் பீடத்தின் மேல் எரித்து விடுவார்; இறுதியாக அப்பெண், அந்நீரைக் குடிக்கச் செய்வான்.

27 அவன் அவளை நீர் குடிக்கச் செய்யும்போது அவள் உண்மையிலேயே தன்னைக் கறைப்படுத்தித் தன் கணவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்திருந்தால் சாபத்தைக் கொண்டுவரும் நீர் அவளுக்குள் போய் கொடிய வேதனையை உண்டாக்கும்; அவள் வயிறு வீங்கி, தொடைகள் அழுகிவிடும்; அவள் தன் மக்களிடையே ஒரு சாபமாக இருப்பாள்.

28 ஆனால், அப்பெண் கறைபடாது தூயவளாயிருந்தால் அவளுக்கு ஒரு கேடும் வராது; அவள் குழந்தையைக் கருத்தரிப்பாள்.

29 வெஞ்சினத்தின் வேளைகளில் இதுவே சட்டம்; அதாவது ஒரு மனைவி தன் கணவனின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தும் நெறிதவறித் தன்னையே கறைபடுத்தியிருந்தால்,

30 அல்லது வெஞ்சினத்தின் ஆவி ஒரு மனிதன் மேல் வந்து அவன் தன் மனைவி மேல் வெகுண்டெழுந்தால் அவன் அவளை ஆண்டவர் திருமுன் நிறுத்துவான்; குரு இச்சட்டத்தையெல்லாம் அவளிடம் செயல்படுத்துவார்.

31 ஆடவன் தன் குற்றப்பழி அற்றவனாவான்; பெண்ணோ தன் குற்றப்பழியைச் சுமப்பாள்.

எண்ணாகமம் 5 : 11 to 31

 ஆபாசம் ஒன்பது

1 ஒரு நாள் மாமியாராகிய நகோமி ரூத்திடம் நீ இல்வாழ்க்கையில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் இருக்குமாறு செய்வது என் கடமை அல்லவா?

2 போவாசு நமக்கு உறவினர். அவருடைய பணிப்பெண்களோடுதான் நீ இத்தனை நாள்களும் இருந்தாய். நான் சொல்வதைக் கவனமாயக் கேள். இன்றிரவு அவர் களத்தில் வாற்கோதுமையைத் தூற்றிக் கொண்டிருப்பார்.

3 நீ குளித்துவிட்டு, எண்ணெய் தடவிக் கொண்டு, உன்னிடமுள்ள ஆடைகளில் மிகவும் நல்லதை உடுத்திக் கொள்; பின்னர் அவருடைய களத்துக்குப் போ. ஆனால் அவர் உண்டு குடிக்கும் வரை, அவர் கண்ணில் படாமலிரு; அவர் படுக்கும் இடத்தைப் பார்த்து வைத்துக் கொள்.

4 அவர் உறங்கியதும், நீ சென்று அவர் கால்களை மூடியிருக்கும் போர்வையை விலக்கிவிட்டு, அங்கேயே படுத்துக் கொள். அதற்கு மேல் நீ செய்ய வேண்டியதை அவரே உன்னிடம் சொல்வார் என்றார்.

5 ரூத்து, ”நீர் சொல்லித்தந்த அனைத்தையும் நான் செய்கிறேன்” என்றார்.

6 அவ்வாறே ரூத்து அந்தக் களத்துக்கு சென்று, தம் மாமியார் சொல்லித் தந்த அனைத்தையும் செய்தார். போவாசு உண்டு குடித்து மகிழ்ச்சியாய் இருந்தார்.

7 பிறகு, அவர் தானியக் குவியல் ஒன்றின் அருகே சென்று உறங்குவதற்காகப் படுத்துக்கொண்டார். சிறிது நேரம் கழித்து ரூத்து ஓசையின்றி அங்கே சென்று அவர் கால்களை மூடியிருந்த போர்வையை விலக்கி விட்டுப் படுத்துக் கொண்டார்.

8 நள்ளிரவில் திடீரென்று போவாசு விழித்துக் கொண்டார்; தலை உயர்த்திப் பார்க்கையில் தம் காலருகில் ஒரு பெண் படுத்துக்கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டார். உடனே அவர், ”யார் நீ?” என்று கேட்க, அவர், நான் தான் ஐயா, ரூத்து உம்முடைய அடியாள். நீரே என்னைக் காப்பாற்றும் கடமையுள்ள என் முறை உறவினர். அந்த முறைப்படி என்னை உமது போர்வையால் மூடும்” என்றார்.

9 அதற்கு அவர் ”என் மகளே, ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! நீ இது வரை காட்டிய குடும்பப் பற்றை விட இப்போது காட்டும் குடும்பப் பற்றே மேலானது என்பேன்.

10 ஏனெனில் பணமுள்ள ஓர் இளைஞனை நீ நாடவில்லை; ஏழையாயினும் இளைஞனே வரவேண்டும் என்று நீ கேட்கவில்லை.

11 என் மகளே, கவலைப்படாதே! என் உறவின் முறையினர் அனைவருக்கும் நீ எவ்வளவு நல்லவள் என்பது தெரியும். நீ கேட்பது அனைத்தையும் நான் செய்து முடிப்பேன்.

ரூத்து 3 : 1 to 14

 ஆபாசம் பத்து

1 பின்னர் நிகழ்ந்ததாவது: தாவீதின் மகனான அம்னோன் என்பவன் தாவீதின் மற்றொரு மகனான அப்சலோமின் சகோதரியின் மேல் காதல் கொண்டான். தாமார் என்ற பெயர் கொண்ட இவள் ஒரு பேரழகி.

2 அவன் தாமாரை எவ்வளவு காதலித்தான் என்றால் அவள் மீது கொண்டிருந்த ஏக்கத்தினால் நோயுற்றான். அவள் கன்னிப் பெண்ணானபடியால் அவளுடன் தகாத உறவு கொள்வது கடினம் என அவனுக்குத் தோன்றிற்று.

3 அப்படியிருக்க அம்னோனுக்கு யோனதாப் என்ற நண்பன் இருந்தான். இவன் தாவீதின் சகோதரனான செம்மாவின் மகன்; பெரும் தந்திரசாலி.

4 இவன் அம்னோனைப் பார்த்துஇ ”இளவரசேஇ நீ நாளுக்கு நாள் இவ்வாறு மெலிந்துபோகக் காரணம் என்ன? எனக்குச் சொல்லமாட்டாயா?” என்றான். அதற்கு அம்னோன்இ ”என் சகோதரனான அப்சலோமின் சகோதரி தாமாரின் மேல் நான் காதல் கொண்டுள்ளேன்” என்றான்.

5 யோனதாப் அவனை நோக்கி ”நீ உன் படுக்கையில் படுத்துக்கொண்டு நோயுற்றவனைப் போல் பாசாங்கு செய். உன் தந்தை உன்னைப் பார்க்க வரும் போது நீ அவரைப் பார்த்து: ‘என் சகோதரி தாமார் எனக்கு உணவு கொடுத்து அவள் கையால் நான் சாப்பிடத்தக்க உணவு சமைத்துத் தரும்படி தாங்கள் தயவு செய்து அவளை அனுப்பவேண்டும்‘ என்று சொல்” என்றான்.

6 அதன்படி அம்னோன் நோயாளி போன்று பாசாங்கு செய்தான். அரசர் அவனைப் பார்க்க வந்தார். அம்னோன் அவரை நோக்கி ”என் சகோதரி தாமார் கையினால் நான் சாப்பிடும்படி என் கண்முன் இரண்டு பணியாரங்களைச் செய்து கொடுக்க அவளை அனுப்பும்படி வேண்டுகிறேன்” என்றான்.

7 எனவே தாவீது தாமாருக்கு ஆள் அனுப்பி ”நீ உன் சகோதரன் அம்னோன் வீட்டுக்குப் போய் அவனுக்குச் சமையல் செய்து கொடு” என்று சொல்லச் சொன்னார்.

8 தாமார் தன் சகோதரன் அம்னோன் வீட்டுக்கு வந்தாள். அவன் படுத்திருந்தான். அவள் மாவு எடுத்துப் பிசைந்து கூழாக்கி அவன் கண்முன் பணியாரங்களைச் சுட்டாள்.

9 பின்னர் அவற்றை எடுத்து அவனுக்குப் படைத்தாள். அம்னோன் ”எல்லோரும் வெளியே போனாலன்றி நான் சாப்பிட மாட்டேன்” என்றான். அவ்விதமே அனைவரும் வெளியேறினர்.

10 பின்னர் அம்னோன் தாமாரை நோக்கி ”நான் உன் கையால் சாப்பிடும்படி படுக்கை அறைக்குப் பணியாரங்களைக் கொண்டுவா” என்றான். தாமார் தான் செய்த பணியாரங்களைப் படுக்கை அறையில் இருந்த தன் சகோதரன் அம்னோனிடம் கொண்டு வந்து அவனுக்குக் கொடுக்கையில்

11 அவன் அவள் கையைப் பிடித்துஇ ”தங்காய் வா; வந்து என்னோடு படு” என்றான்.

12 அதற்கு அவள் ”அண்ணா வேண்டாம் என்னைக் கற்பழிக்காதே. இஸ்ராயேல் மனிதர் இவ்வாறு செய்வதில்லை. இப்படிப்பட்ட மதிகெட்ட செயலை நீ செய்யலாமா?

13 இதனால் வரும் அவமானத்தை என்னால் தாங்க முடியாது. நீயும் இஸ்ராயேலில் மதிகெட்டவர்களுள் ஒருவனாய் இருப்பாய். மாறாக அரசாpடம் நீ கேள். அவர் என்னை உனக்கு மனைவியாகத் தர மறுக்க மாட்டார்” என்றாள்.

14 அவள் எவ்வளவு தான் கெஞ்சியும் அம்னோன் ஒன்றுக்கும் செவிகொடாமல் வலுவந்தமாய் அவளைப் பிடித்து அவளோடு படுத்தான்.

15 அதன் பின் அம்னோன் அவளை மிகவும் வெறுக்கத் தொடங்கினான். முன்பு அவளை எவ்வளவு விரும்பியிருந்தானோ அதற்கும் அதிகமாக இப்போது அவளை வெறுத்தான். அவளை பார்த்து ”நீ எழுந்து போ” என்றான்.

இரண்டாம் சாமுவேல் 13

ஆபாசம் பதினொன்று

10 நீ நன்மைப் புறக்கணித்து ஏத்தையனாகிய உரியாசின் மனைவியை உனக்கு மனைவியாகக் கொண்டபடியால், வாளானது என்றும் உன் வீட்டை விட்டு அகலாது‘.

11 ஆகையால் ஆண்டவர் சொல்லுகிறதாவது: ‘இதோ உன் வீட்டின் தீமை உன்மேல் வரச் செய்வோம்; உன் பார்வையிலேயே நாம் உன் மனைவியரை எடுத்துப் பிறனுக்குக் கையளிப்போம். அவன் இச்சூரிய வெளிச்சத்தில் உன் மனைவிகளோடு படுப்பான்.

12 நீயோ மறைவில் செய்தாய்; நாமோ இஸ்ராயேலர் எல்லாருக்கும் முன்பாகவும் சுர்யனுக்கு முன்பாகவும் அதைச் செய்வோம்” என்று கூறினார்.

இரண்டாம் சாமுவேல் அதிகாரம் 12 : 10 to 12

ஆபாசம் பன்னிரண்டு

25. யாக்கோபை வெற்றி கொள்ள முடியாதென்று கண்ட அந்த ஆடவர் அவரது தொடைச்சந்தைத் தொட்டார். யாக்கோபு அவரோடு மற்போரிடுகையில் தொடைச் சந்து இடம் விலகியது.

26. அப்பொழுது ஆடவர் ”என்னைப் போகவிடு; பொழுது புலரப்போகிறது” என, யாக்கோபு, ”நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்” என்று மறுமொழி சொன்னார்.

27.ஆடவர், ”உன் பெயர் என்ன?” என,

28. அவர்; ”நான் யாக்கோபு” என்றார். அப்பொழுது அவர், ”உன்பெயர் இனி யாக்கோபு எனப்படாது, ”இஸ்ரயேல்” எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றிகொண்டாய்” என்றார்.

29.யாக்கோபு அவரை நோக்கி ”உம் பெயரைச் சொல்லும்” என்றார். அவர் ”என் பெயரை நீ கேட்பதேன்?” என்று, அந்த இடத்திலேயே அவருக்கு ஆசி வழங்கினார்.

30.அப்பொழுது யாக்கோபு, ”நான் கடவுளின் முகத்தை நேரில் கண்டும் உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்று சொல்லி, அந்த இடத்திற்குப் ”பெனியேல்” என்று பெயரிட்டார்.

31.அவர் பெனியேலுக்கு அப்பால் சென்றவுடன் கதிரவன் தோன்றினான். தொடை விலகியதால் அவரும் நொண்டி நொண்டி நடந்தார்.

32.அதன் பொருட்டு, இஸ்ரயேலர் இந்நாள்வரை தொடைச் சந்துச் சதைநாரை உண்பதில்லை. ஏனென்றால், அந்த ஆடவர் யாக்கோபின் தொடைச் சந்துச் சதைநாரைத் தொட்டார்.

ஆதியாகமம் 32 : 24

ஆபாசம் பதிமூன்று 

8அப்போது யூதா தன் மகன் ஓனானை நோக்கி: நீ உன் அண்ணன் மனைவியை உன் மனைவியாக ஏற்று, அவளோடு உன் தமையனுக்கு மகப்பேறு உண்டு பண்ணு என்றான்.

9 அந்தச் சந்ததி தன் சந்ததியாய் இராதென்று அறிந்து, அவன் தன் தமையன் மனைவியோடு படுக்கையில், தன் தமையனுக்கு மகப்பேறு உண்டாகாதபடிக்குத் தன் விதையைத் தரையிலே விழவிட்டு வந்தான்.

10 அவன் செய்தது பெரிய அக்கிரமமென்று ஆண்டவர் அவனையும் அழித்துவிட்டார்.

11 ஆதலால், யூதா தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் மகன் சேலா பெரியவனாகு மட்டும் நீ உன் தந்தை வீட்டிலே விதைவையாய்த் தங்கியிரு என்றான். அவன் அவ்வாறு சொன்னதற்குக் காரணம் ஏதென்றால், சேலாவும் தன் சகோதரரைப் போல் சாவானோ என்று பயந்திருந்தது தான். அவள் அப்படியே தன் தந்தை வீட்டில் வாழ்ந்து வந்தாள்.

12 நெடுநாட்களுக்குப் பின், சூயேயின் புதல்வியான யூதாவின் மனைவி இறந்தாள். அவன், துக்கம் தீர்ந்து ஆறுதலான பின்னர், தன் மந்தைகளின் மேய்ப்பனான ஓதொல்லாம் ஊரானாகிய கீராஸ் என்பவரோடு தம்னாஸிலே ஆடுகளுக்கு மயிர் கத்தரிப்பவர்கள் இடத்திற்குப் போனான்.

13 அப்போது: உன் மாமனார் தம் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கத் தம்னாஸீக்குப் போகிறார் என்று தாமாருக்குச் செய்தி அறிவிக்கப்பட்டது.

14 அவள், சேலா பெரியவனாகியும் தனக்குக் கணவனாகக் கொடுக்கப்படவில்லை என்று மனவருத்தம் கொண்டு, தன் கைம்பெண்மைக்குப் பொருந்திய உடைகளைக் கழற்றி விட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக் கொண்டு, புதிய ஆடைகளை அணிந்தவளாய் தம்னாஸீக்குப் போகும் வழியில் ஒரு சந்திப்பில் உட்கார்ந்தாள்.

15 அவள், யாரும் தன்னை அறியா வண்ணம் முக்காடிட்டுக் கொண்டதனால், யூதா அவளைக் கண்டு, அவள் ஒரு வேசி என்று கருதி, அவள் கிட்டப் போனான்;

16 அவள் தன் மருமகளென்று அறியாமல்: நான் உன்னோடு படுக்க விரும்புகிறேன்; இசைகிறாயா என்றான். அதற்கு அவள்: நீர் என்னோடு படுப்பதற்கு எனக்கு என்ன தருவீர் என்றாள். அவன்:

17 என் மந்தையிலிருந்து உனக்கு ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமட்டும் எனக்கு ஓர் அடைமானம் கொடுத்தால், நான் உம் ஆசைக்கு உட்படுவேன் என, யூதா:

18 அடைமானமாக எதைத் தரக் கேட்கிறாய் என்று வினவினான். அவள்: உம்முடைய மோதிரமும், கைக்காப்பும், கைக்கோலும் தர வேண்டும் என்றாள். இந்த ஒரே சேர்க்கையால் அவள் கருவுற்றாள்.

19 பின் அவள் எழுந்து போய், தன் உடையைக் களைந்து விதவைக்குரிய ஆடைகளை அணிந்து கொண்டாள்.

20 பெண்ணிடம் தான் கொடுத்திருந்த அடைமானத்தை வாங்கிக் கொண்டு வருமாறு, யூதா ஓதொல்லாம் ஊரானாகிய மேய்ப்பன் கையிலே ஒரு வெள்ளாட்டுக் குட்டியைக் கொடுத்தனுப்பினான். அவன் (போய்) அவளைக் காணாமல், அங்கிருந்த ஆடவர்களை நோக்கி:

21 வழிச் சந்திப்பிலே அமர்ந்திருந்த வேசி எங்கே என்று கேட்க, அவர்கள்: ஏது! இவ்விடத்தில் வேசி இல்லையே என்றனர்.

22 அவன் யூதாவிடம் திரும்பி வந்து: நான் அவளைக் கண்டதுமில்லை, அவ்விடத்து மனிதரும், அவ்விடத்தில் யாதொரு வேசியும் எப்போதாகிலும் அமர்ந்ததுமில்லை என்று சொன்னார்கள் என்று சொல்ல, யூதா:

23 போனால் போகட்டும். எப்படியும் அவள் நம் மீது குற்றம் சாட்ட நிச்சயம் இயலாது. நான் ஆட்டுக் குட்டியை அனுப்பவுதாகச் சொல்லியிருந்தேன்; அப்படியே அனப்பினேன், நீயோ, அவளைக் காணவில்லை என்றான்.

24 மூன்று மாதம் சென்ற பின்னர்: உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம் பண்ணினாள். அதனால் அவள் கருவுற்றிருக்கிறாள் போலும் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அவன்: அவளை வெளியே கொண்டு வாருங்கள்; அவள் சுட்டெரிக்கப்பட வேண்டும் என்றான்.

25 மரணத் தண்டனை (நிறைவேற்றும்) இடத்திற்கு அவளைக் கூட்டிக் கொண்டு போகையில், அவள் அந்த அடைமானத்தைத் தன் மாமனாரிடம் அனுப்பி: இந்தப் பொருட்களுக்கு உடையவன் எவனோ, அவனாலே நான் கருவுற்றேன். இந்த மோதிரமும், இந்தக் கைக்காப்பும், இந்தக் கைக்கோலும் யாருடையவை என்று பாரும் என்று சொல்லி அனுப்பினாள்.

26 யூதா அவற்றைப் பார்த்தறிந்து: அவள் என்னைக் காட்டிலும் நீதியுள்ளவள். அவளை நான் என் மகன் சேலாவுக்குக் கொடுக்காமல் போனேனே என்றான். ஆயினும், அதன் பின் அவன் அவளோடு படுக்கவேயில்லை.

ஆதியாகமம் அதிகாரம் 38

ஆபாசம் பதினான்கு 

30. 30 லோத் சொகோரினின்று மலைமேல் ஏறி அங்குத் தங்கினான். அவனோடு அவன் இரு புதல்விகளும் சென்றிருந்தனர். (ஏனென்றால், அவன் செகோரில் குடியிருக்க அஞ்சினான்.) அவ்விடத்தில் அவனோடுகூட அவன் இரு புதல்விகளும் ஒரு குகையில் வாழ்ந்து வந்தனர்.

31 அப்படியிருக்க, மூத்த புதல்வி தன் சகோதரியை நோக்கி: நம் தந்தை வயது சென்றவர். உலகமெங்கும் நடக்கிற முறைமையின்படி நம்மை மணந்து கொள்ளப் பூமியில் ஆடவன் ஒருவனும் இல்லை.

32 தந்தை வழியாவது நமக்குச் சந்ததி உண்டாகும்படி அவருக்கு மதுபானம் கொடுத்து அவரோடு படுப்போம், வா என்றாள்.

33 அவ்வாறே அவ்விரவில் அவர்கள் தங்கள் தந்தைக்கு மயக்க மூட்டும் பானம் கொடுத்தனர். பிறகு மூத்ததவள் உள்ளே புகுந்து தன் தந்தையோடு படுத்தாள். ஆனால், அவள் வந்து தன்னுடன் படுத்தும் பின் எழுந்து போனதும் அவனக்குத் தெரியாது.

34 மறுநாள் மூத்தவள் இளையவளை நோக்கி: இதோ, நேற்றிரவு நான் தந்தையோடு படுத்தேன். இன்றிரவும் அவருக்கு மதுவைக் கொடுப்போமாக. நம் தந்தை வழியாவது நமக்குச் சந்ததி உண்டாகும் வண்ணம், நீ போய் அவரோடு படுப்பாய் என்றாள்.

35 அப்படியே அன்றிரவும் தங்கள் தந்தைக்கு மதுபானம் குடிக்கக் கொடுத்தார்கள். இளைய புதல்வி அவரோடு படுத்தாள். இம்முறையும் அவள் படுத்ததையும் எழுந்து போனதையும் அவன் உணரவேயில்லை.

36 இவ்வாறு லோத்தின் புதல்விகள் இருவரும் தங்கள் தந்தையாலேயே கருத்தரித்தனர்.

37 பின் மூத்தவள் ஒரு புதல்வனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்னும் பெயாpட்டாள். அவன் இன்று வரை இருக்கிற மோவாப்பித்தாரக்குத் தந்தையானான்.

38 இளையவளும் ஒரு புதல்வனைப் பெற்று: இவன் என் இனத்தின் புதல்வன் என்று சொல்லி, அவனுக்கு ஆமோன் என்னும் பெயரைச் சூட்டினாள். அவன் இன்று வரை இருக்கிற ஆமோனித்தாருக்கு மூதாதை ஆனான்.

ஆதியாகமம் (19 : 30)

 ஆபாசம் பதினைந்து

1 இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்கு செல்வது வழக்கம். அப்பொழுது தாவீது யோவாபைத் தம் பணியாளரோடும் இஸ்ரயேலர் அனைவரோடும் அனுப்பினார். அவர்கள் அம்மோனியரைத் தோற்கடித்து இரபாவை முற்றுகையிட்டனர். தாவீதோ எருசலேமிலேயே தங்கிவிட்டார்.

2 ஒரு நாள் மாலை வேளை, தாவீது தம் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததைக் தாவீது கண்டார். அவள் மிகவும் அழகிய தோற்றம் கொண்டிருந்தாள்.

3 தாவீது அவளை யார் என்று கேட்க, ஆளனுப்பினார். ”அவள் எலியாவின் மகளும் இத்தியர் உரியாவின் மனைவியுமான பத்சேபா” என்று கூறினர்.

4 தாவீது தூதனுப்பி அவளை வரவழைத்தார். அப்பொழுதுதான் மாதவிலக்கு முடிந்து அவள் தன்னைத் தூய்மைப்படுத்தியிருந்தாள். அவள் தம்மிடம் வந்ததும் அவர் அவளோடு உடலுறவு கொண்டார். பிறகு அவள் தம் இல்லம் சென்றாள்.

5 அப்பெண் கருவுற்று தாவீதிடம் ஆளனுப்பி, தான் கருவுற்றிருப்பதாக அவரிடம் தெரிவித்தாள்.

........................

14 காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு மடல் எழுதி அதை உரியாவின் கையில் கொடுத்தனுப்பினார்.

15 அம்மடலில் அவர், ”உரியாவைப் போர் கடுமையாக நடக்கும் முன்னிலையில் நிறுத்தி, அவனைவிட்டு பின்வாங்கு. அவன் வெட்டுண்டு மடியட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

16 யோவாபு நகரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த போது வலிமைமிகு எதிரிகள் இருந்த இடத்தை அறிந்து அங்கே உரியாவை நிறுத்தினார்.

........................

26 உரியானின் மனைவி தன் கணவன் இறந்துவிட்டதைக் கேள்வியுற்று அவருக்காகப் புலம்பி அழுதாள்.

27 துக்ககாலம் முடிந்ததும் தாவீது ஆளனுப்பி அவளைத் தம் வீட்டிற்கு கொண்டு வந்தார். அவள் அவருக்கு மனைவியாகி ஆண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். தாவீது செய்த இச்செயல் ஆண்டவரின் பார்வையில் தீயதாக இருந்தது.

இரண்டாம் சாமுவேல் 1 to 27

ஆபாசம் பதினாறு

20. சவுலின் வேறொரு மகளான மிக்கோல் தாவீதுக்கு அன்பு செய்தாள். இச்செய்தி சவுலுக்கு அறிவிக்கப்பட்ட போது அவர் மகிழ்வுற்றார்.

21. நான் அவளை அவனுக்கு கொடுப்பேன். ஏனெனில் அவள் அவனுக்கு இடையூறாய் இருப்பாள். பிலிஸ்தியர் கையும் அவன் மேல் விழும் என்று சவுல் சொன்னார். மேலும் அவனைப் பார்த்து, ”நீ இரண்டு காரியங்களை முன்னிட்டு இன்று எனக்கு மருமகனாய் இருப்பாய்” என்றார்.

22. பிறகு சவுல் தம் ஊழியக்காரரை நோக்கி, ”நீங்கள் தாவீதோடு இரகசியமாய்ப் பேசி, ‘அரசர் உன் மேல் பிரியமாய் இருக்கிறார். அவருடைய ஊழியர் எல்லாம் உன்மேல் அன்பு கொண்டுள்ளனர். ஆதலால் நீ அரசனுக்கு மருமகனாய் இரு‘ என்று சொல்லுங்கள்” என்றார்.

23. அவ்விதமே அவர்கள் இச்சொற்களை எல்லாம் தாவீதிடம் கூறினார்கள். அதற்குத் தாவீது, ”அரசனின் மருமகனாய் இருப்பது உங்களுக்கு அற்பமென்று தோன்றுகின்றதா? நானோ எளியவனும் தாழ்ந்த நிலையில் உள்ளவனுமாய் இருக்கிறேனே” என்றான்.

24. தாவீது இவ்வாறு சொன்னான்” என்று சவுலின் ஊழியர்கள் அவருக்குத் தொpவித்தார்கள்.

25. அதைக் கேட்டுச் சவுல், ”நீங்கள் அவனைப் பார்த்து, ‘அரசருக்குப் பரிசம் அவசியமில்லை; அரசருடைய எதிரிகளைப் பழிவாங்கிப் பிலிஸ்தியரின் நூறு நுனித்தோல்களை நீ கொண்டு வந்தால் போதும்‘ என்று சொல்லுங்கள்” என்றார். ஏனெனில் தாவீதை பிலிஸ்தியாpன் கையில் ஒப்படைக்கச் சவுல் எண்ணியிருந்தார்.

26. சவுல் சொன்ன வார்த்தைகளை அவருடைய ஊழியர்கள் தாவீதுக்குத் திரும்பத் தெரிவித்த போது தாவீது மகிழ்வுற்று அரசருடைய மருமகனாய் இருக்க மனம் இசைந்தான்.

27. சில நாட்களுக்குப் பின் தாவீது எழுந்து தனக்குக் கீழிருந்த மனிதர்களோடு போய்ப் பிலிஸ்தியரில் இருநூறு பேரைக் கொன்று அவர்களுடைய நுனித்தோல்களைக் கொண்டு வந்து அரசரின் மருமகனாகும் பொருட்டு அவற்றை அவர்முன் எண்ணி வைத்தான். ஆகையால் சவுல் தம் மகள் மிக்கோலை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தார்.

1 சாமுவேல் 18 வது அதிகாரம் வசனம் 20 to 27

ஆபாசம் பதினேழு

29 குருடன் இருளிலே தடவித் தடவிக் திரிகிறது போல, நீ பட்டப்பகலிலே வழி தெரியாமல் தடவித் திரிவாய். நீ எந்நாளும் மனிதர்களுடைய கோள் குண்டணிகளுக்கு உட்பட்டவனாயும், உதவி செய்வாரில்லாமல் அவர்களுடைய கடுமை முதலிய வல்லடிக்கு இலக்காயும் இருப்பாய்.

30 நீ மணந்து கொண்ட பெண்ணை மற்றொருவன் அனுபவிப்பான். நீ கட்டின வீட்டிலே குடியேறக் கூடாமற் போவாய். நீ நட்டிய கொடி முந்திரித்தோட்டத்துப் பலனை நீ அனுபவிக்க மாட்டாய்.

 உபாகமம் அதிகாரம் 28 : 29 30

கடவுள் இப்படித்தான் சாபம் இடுவாரா?

ஆபாசம் பதினெட்டு

4 இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன? பேரழகும் கவர்ச்சியும் நிறைந்தவளாய், தன் வேசித்தனங்களால் மக்களினங்களையும், தன் மயக்கும் கவர்ச்சியால் கோத்திரங்களையும், விற்றுப்போடுகிற அந்த விலைமகளின் கணக்கிலடங்காத வேசித்தனங்களே காரணம்.

5 சேனைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ, நாம் உனக்கெதிராக இருக்கிறோம் உன் முகத்துக்கு மேலாக உன் உள்ளாடையைத் தூக்குவோம்; மக்களினங்கள் உன் அவமானத்தையும், அரசுகள் உன் ஈனத்தையும் பார்க்கும்படி செய்வோம்;

நாகூம் (4,5)

ஆபாசம் பத்தொன்பது

2 அந்நேரத்தில் ஆமோட்சின் மைந்தன் எசாயா வாயிலாய் ஆண்டவர் சொல்லியது; ”நீ போய் உன் இடையிலிருந்து சாக்கு உடையைக் களைந்துவிடு; உன் கால்களிலிருந்து காலணிகளைக் கழற்றிவிடு.” அவரும் அவ்வாறே செய்து ஆடையின்றியும் வெறுங்காலோடும் நடமாடிக் கொண்டிருந்தார்.

3 ஆண்டவர் கூறினார்; என் ஊழியன் எசாயா ஆடையின்றியும் வெறுங்காலோடும் மூன்று ஆண்டுகள் நடமாடியது, எகிப்துக்கும் எத்தியோப்பியாவுக்கும் எதிரான அடையாளமும் முன்குறியும் ஆகும்.

ஏசாயா 20 : 2 to 4

ஆபாசம் இருபது

17. இதினிமித்தம்: உன் பெண்ஜாதி நகரத்தில் வேசியாவாள்; உன் குமாரரும் உன் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்; உன் வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயாவெனில் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன் தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான் 

ஆமோஸ் 7 வது அதிகாரம் 17 வது வசனம்

ஆபாசம் இருபத்து ஒன்று

1. தாவீது அரசர் முதுமைப் பருவம் அடைந்தார். அத்தள்ளாத வயதில் போர்வைகளால் அவரைப் போர்த்தியும் அவரால் குளிரைத் தாங்க இயலவில்லை.

2. எனவே அவருடைய அலுவலர் அவரிடம், ”அரசே! எம் தலைவராகிய உமக்கென ஒர் இளம் கன்னிப் பெண்ணைத் தேடப்போகிறோம். அவள் அரசராகிய உமக்குத் தாதியாக இருந்து பணிவிடை புரிவாள்; அவள் உமக்கருகில் படுத்து எம் தலைவரும் அரசருமாகிய உமது குளிரைப் போக்குவாள்” என்றனர்.

3. அவ்வாறே அவர்கள் இஸ்ரயேல் நாடெங்கும் சென்று அழகிய ஓர் இளம் பெண்ணுக்காகத் தேடி அலைந்து, சூனேம் ஊரைச் சார்ந்த அபிசாகு என்பவளைக் கண்டு, அவளை அரசரிடம் அழைத்து வந்தார்கள்.

4. பேரழகியான அந்த இளம்பெண் அரசருக்குத் தாதியாயிருந்து பணிவிடை புரிந்து வந்தாள். ஆனால், அரசர் அவளோடு கூடி வாழவில்லை.

முதலாம் ராஜாக்கள் 1-4

ஆபாசம் இருபத்து இரண்டு

7. அதின் சுரூபங்கள் எல்லாம் நொறுக்கப்படும்; அதின் பணையங்கள் எல்லாம் அக்கினியால் எரித்துப்போடப்படும்; அதின் விக்கிரகங்களை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது திரும்ப வேசிப்பணையமாய்ப் போகும்.

8. இதினிமித்தம் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் அம்மணமாகவும் நடப்பேன்; நான் ஓரிகளைப்போல ஊளையிட்டு ஆந்தைகளைப்போல அலறுவேன் 

மீக்கா அதிகாரம் 1- 7,8

ஆபாசம் இருபத்து மூன்று

12. ஆறு மாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறு மாதம் பெண்டிர்க்கான வாசனைத் தைலங்கள், நறுமணத் பொருள்கள் ஆகியவற்றாலும் அழகுபடுத்தும் பன்னிரு மாதங்கள் நிறைவெய்தின. பின்னர் ஒவ்வொரு இளமங்கையும் மன்னர் அகஸ்வோரின் முன் செல்லும் சமயம் வந்தது.

13. மன்னாரிடம் செல்லும் ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும், அந்தரப்புரத்திலிருந்தது அரச மாளிகைக்குச் செல்லும்போது, அவள் கேட்பதனைத்தும் கொடுக்கப்பட்டது.

14. அவள் மாலையில் சென்று, மறுநாள் காலையில் இரண்டாம் அந்தப்புரத்திற்குச் செல்வாள்; அங்கு வைப்பாட்டியாரின் கண்காணிப்பாளரான அரச அண்ணகர் சாட்சகாசின் பொறுப்பில் விடப்படுவாள். மன்னர் அவள் மீது விருப்பம் கொண்டு பெயர் சொல்லி அழைக்கும் வரை மன்னிரிடம் அவள் மீண்டும் செல்ல இயலாது.

எஸ்தர் 2 வது அதிகாரம் வசனம் 12 முதல் வரை 14

பெண்களின் கால்களில் முத்தமிட்ட போப்

பெண்களை தேவாலயப் பணிகளில் ஈடுபடுத்த புதிய யுக்தி(?)

கடந்த மார்ச் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறித்தவர்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளிக்கு முந்தைய தினமான புனித வியாழன் தினத்தை அனுசரித்தார்கள். ஏசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய தினம் நடைபெற்றதாகச் சொல்லப்படும் விருந்து நிகழ்ச்சியில் தனது 12 சீடர்களின் கால்களைக் கழுவி ஏசு முத்தமிட்ட நிகழ்ச்சியை நினைவு கூரும் புனித வியாழன் வழிபாடு வாடிகன் நகரத்தில் மார்ச் 28 ஆம் தேதி நடைபெற்றது.

வழக்கமாக வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் பாதிரியார்களின் கால்களை கழுவி ஆண்டுதோறும் போப் முத்தமிடுவார். ஆனால், இந்த முறை புதிதாகப் பொறுப்பேற்றுள்ள போப் பிரான்சிஸ் இது வரையிலான மரபுகளை மாற்றினார்.

பெண்களின் கால்களை முத்தமிட்டு புதிய புரட்சி(?):

இதற்கு முன்பு போப்பாக இருந்தவர்களெல்லாம் ஆண்களுடைய கால்களில் தான் முத்தமிட்டனர். ஆனால் புதிய போப்போ இரண்டு பெண்களது கால்களை முத்தமிட்டு சரித்திர சாதனை புரிந்துள்ளார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

பெரிய வியாழன் என்று சொல்லப்படக்கூடிய தினமான மார்ச் 28ஆம் தேதி ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்த 14 வயது முதல் 21 வயதுள்ள இளம் குற்றவாளிகளுக்கும், அங்கிருந்த 2 இளம்பெண்களுக்கும் அவர்களது பாதங்களை கழுவி போப் முத்தமிட்டார்.

இதற்கு முன்னர் இருந்த எந்த போப்பும் பெண்களது பாதங்களைக் கழுவி முத்தமிட்டதில்லை. முதல் முறையாக சர்ச் மரபுகளுக்கு மாறாக போப் பிரான்சிஸ் செய்தது சரியா தவறா என்று விவாதம் தற்போது எழுந்துள்ளது.

கேள்விக்குரிய ஒரு முன்னுதாரணத்தை போப் ஏற்படுத்தி இருக்கிறார் என்று போப் செய்த செயலை எதிர்ப்பவர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

ஆனால், சர்ச் நடவடிக்கைகளில் பெண்களையும் இடம்பெறச் செய்ய போப்பின் இந்த முத்த நடவடிக்கை உதவும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

முத்தம் கொடுத்துவிட்டு ஆற்றிய உரை:

பெண்களது காலில் முத்தம் கொடுத்துவிட்டு போப் பேசியதாவது :

உங்கள் பாதங்களைக் கழுவியதன் அர்த்தம், நான் உங்களுக்காக சேவை செய்யவே இருக்கிறேன் என்பதை உணர்த்தத்தான். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யுங்கள்.

இயேசு இதைத்தான் நமக்கு கற்றுத் தந்தார். அதைத்தான் நான் செய்கிறேன். ஒரு போதகராக, ஒரு பிஷப்பாக மனப்பூர்வமாக நான் இதை செய்கிறேன். இதற்கு விளக்கம் தேவையில்லை. சேவை செய்ய வேண்டியது என் கடமை என்று தனது செயலுக்கு விளக்கமளித்துள்ளார்.

அதாவது பெண்களுக்கு யாராவது சேவை செய்ய விரும்பினால் அவர்களது கால்களைக் கழுவி முத்தமிட வேண்டும் என்பதுதான் புதிய போப்பின் புதிய அறிவுரை.

போப் மீது குற்றச்சாட்டு :

இயேசு தனது ஆண் சீடர்களின் கால்களைத் தான் கழுவினாரே தவிர, பெண்களுடைய கால்களைக் கழுவி பெண்களுக்கு முத்தம் கொடுக்கவில்லை. இயேசுவுடைய வழிகாட்டுதலை மீறி போப் பெண்களது காலில் முத்தம் கொடுத்துள்ளார். இது தவறான அணுகுமுறை என்று கிறித்தவர்களில் ஒரு தரப்பினர் பகிரங்க குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகின்றனர்.

ஆனால் இவர்களது குற்றச்சாட்டுகளுக்கு அசராத போப் அவர்களோ, பெண்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற சேவை மனப்பான்மையை வெளிப்படுத்தத்தான் பெண்களது கால்களையும் கழுவி அவர்களுக்கு முத்தம் கொடுத்தேன் என்ற கருத்துப்பட விளக்கமளித்துள்ளார்.

பெண்களுக்கு போப் ஆண்டவர் முத்தம் கொடுத்தது தவறு என்று இவரை எதிர்க்கக்கூடியவர்கள் வைக்கக்கூடிய மற்றொரு வாதம் ரொம்ப நகைச்சுவையானதும், அதே நேரத்தில் வெட்கித் தலைகுனிய வேண்டியதுமாக உள்ளது.

விசித்திர விளக்கம் :

போப் ஆண்டவர் பெண்களுக்கு முத்தம் கொடுத்தது இயேசுவுடைய வழிகாட்டுதலில் இல்லாத செயல். எனவே போப் ஆண்டவர் பெண்களுக்கு முத்தம் கொடுத்தது தவறு. போப் ஆண்டவருக்கு பெண்கள் முத்தம் கொடுத்தால் அது தவறில்லை.

மேற்கண்ட விளக்கத்தைக் கூறி அனைவரையும் திகைக்க வைத்துள்ளனர். காரணம் என்னவென்றால் ஏசுவுக்கு ஒரு பெண் தைலம் பூசிவிட்டு ஏசுவுடைய பாதங்களை முத்தமிட்டுள்ளார். அதை ஏசுவுடைய சீடர்கள் கண்டித்தபோது, முத்தம் கொடுத்த பெண்ணை கண்டித்த சீடர்களை ஏசு கண்டித்துள்ளார்.

நீங்கள் எப்போதாவது இது போன்று எனக்கு முத்தம் கொடுத்துள்ளீர்களா? இல்லையே! இந்தப் பெண் எனக்கு முத்தம் கொடுப்பதை நீங்கள் ஏன் தடுக்கின்றீர்கள்? இப்படி அவள் எனக்கு தைலத்தைப் பூசிவிட்டு, முத்தம் கொடுத்த காரணத்தால் அவளது பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டன என்று இயேசு கூறியுள்ளார்.

(பார்க்க : லூக்கா அதிகாரம் 7 : 27 முதல் 48 வரை, யோவான் அதிகாரம் 12 : 3முதல் 8 வரை)

அதாவது பெண்கள் பாதிரியார்களுக்கு தைலம் பூசி, அவர்களது பாதங்களில் முத்தம் கொடுத்தால் அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது ஏசுவின் வழிகாட்டுதல். அதைவிடுத்துவிட்டு பாதிரியாராக இருக்கக்கூடியவர் பெண்களுக்கு முத்தம் கொடுப்பது எவ்விதத்தில் நியாயம் என்பது தான் போப் ஆண்டவரை எதிர்ப்பவர்கள் வைக்கும் ஆழமான(?) கேள்வி.

பெண் அதிபருக்கு முத்தம் கொடுத்த போப்:

அது மட்டுமல்லாமல் புதிய போப் ஆண்டவராக பிரான்சிஸ் அவர்கள் பதவியேற்றவுடன் அர்ஜெண்டினாவின் பெண் அதிபர் கிரிஸ்டினா பெர்னான்டிஸ் கடந்த மார்ச் 18 ஆம் தேதி போப் ஆண்டவரை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார். அப்போது போப் ஆண்டவர் பெண் ஜனாதிபதிக்கு பல பரிசுகளை வழங்கினார். அத்தோடு பெண் ஜனாதிபதியைக் கட்டித்தழுவி முத்தத்தையும் பரிசாக வழங்கினார் போப்.

பின்னர் வெளியே வந்த பெண் ஜனாதிபதியோ, போப் எனக்கு முத்தம் கொடுத்தார். இதுவரை இப்படி நான் எந்த போப்பிடமும் முத்தம் பெறவில்லை என்று பெருமையாக பத்திரிக்கையாளர்களிடத்தில் தெரிவித்தார். இதுவும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தீமையோடு நீங்கள் எதிர்த்து நிற்க வேண்டாம் என்று இயேசு சொன்ன உதாரணத்தைக் கூறி நான் எந்தத் தீமையையும் எதிர்க்க மாட்டேன்; தீமைகளுக்கு கண்டனம் தெரிவிக்க மாட்டேன் என்று போப் ஆண்டவர் உரை நிகழ்த்தியதன் அர்த்தம் இதுதானா என்று பலருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

நீங்கள் செய்யக்கூடிய அநியாயங்களைத் தட்டிக் கேட்கமாட்டேன்; அது போல நான் செய்யக்கூடிய இது போன்ற சேட்டைகளை நீங்களும் கண்டுகொள்ளக் கூடாது; கண்டிக்கக் கூடாது; கண்டனம் தெரிவிக்கக் கூடாது என்பதைத் தான் புதிய போப் சூசகமாகச் சொல்லியுள்ளாரோ என்று அனைவரும் சந்தேகப்படுகின்றனர்.

அதே நேரத்தில் போப் ஆண்டவரிடத்தில் மற்றுமொரு கேள்வியையும் நாம் கேட்க விரும்புகின்றோம். தீமைகளுக்கு கண்டனம் தெரிவிக்கக் கூடாது என்று சொல்லும் தாங்கள் தீமைகளைச் செய்தவரை சிறையில் தள்ளி அழகு பார்க்கலாமா?

தீமைகளைக் கண்டிக்கக் கூடாது என்றால் அந்த தீமைகளைச் செய்தவர்களை சிறையிலும் அடைக்கக் கூடாதல்லவா? அவர்களது கால்களைக் கழுவி அவற்றை முத்தமிடுவது அவர்களுக்குச் செய்யும் சேவையா? அல்லது திருடர்களை விடுதலை செய்து சிறைக் கொட்டடிகளை ஒழித்துக் கட்டுவது அவர்களுக்கு உதவுவதா என்பதை போப் முதலில் விளக்க வேண்டும்.

ஆகமொத்தத்தில் போப் செய்யும் அத்தனை செயல்களும் பைபிளுக்கும், இயேசுவின் போதனைகளுக்கும் மாற்றமாக உள்ளதோடு மட்டுமல்லாமல் பல பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாகவும் அமைந்துள்ளது.

05.04.2013. 2:35 AM

ஈஸ்டர் சண்டே என்பது தவறு!

ஈஸ்டர் சண்டே என்பது தவறு! ஈஸ்டர் மண்டே என்பதுதான் சரி! பைபிளின் அடிப்படையில் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்தவ சகோதரர்கள் ஈஸ்டர் சண்டே என்று கூறி ஏசு மரணித்து உயிர்த்தெழுந்த நாள் என்ற அடிப்படையில் கொண்டாடுவர். இது குறித்து பல உண்மைத் தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதால், மறைக்கப்பட்ட அந்த உண்மைத் தகவல்களை உலகறியச் செய்ய வேண்டும் என்பதற்காக ஏற்கனவே உணர்வு இதழில் வெளியான இந்த சிறப்புக் கட்டுரை தற்போது மீண்டும் வெளியிடப்படுகின்றது.

ஏசு மரணித்த நாள்:

ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளை குட் ஃப்ரைடே அதாவது புனித வெள்ளி என்று கிறித்தவ மக்கள் கொண்டாடி வருகின்றனர். அப்படியானால் அவர் மரணித்தது வெள்ளிக்கிழமை என்பது உறுதியாகின்றது.

ஏசு தான் மரணிப்பது குறித்து செய்த ஒரு முன்னறிவிப்பு மத்தேயு என்ற சுவிஷேசத்தில் 12 : 40 ஆம் வசனத்தில் இடம்பெற்றுள்ளது.

அதாவது அவர் மரணித்த பிறகு பூமியில் அடக்கம் செய்யப்பட்டு மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் பூமியின் இருதயத்தில் அவர் இருப்பார் என்பதுதான் அந்த முன்னறிவிப்பு.

ஏசு மரணித்த பிறகு உயிரோடு எழுந்ததாக சொல்லப்படும் அந்த நாளே ஈஸ்டர் பண்டிகை.

இப்போது ஏசு சொன்ன முன்னறிவிப்பு எப்போது நிறைவேறும் என்பதை பைபிளின் துணையோடு நாம் கணக்குப்போட்டு பார்க்கலாம்.

அதாவது ஏசு மரணித்தது வெள்ளிக்கிழமை பகல் 3 மணி. அன்று இரவு அவர் அடக்கம் செய்யப்படுகின்றார். அந்த அடிப்படையில், மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் அவர் பூமியின் இருதயத்தில் இருந்தாக வேண்டும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் உயிர்த்தெழுந்து விட்டதாகவும், அதைச் சிலர் பார்த்ததாகவும் பைபிள் கூறுகின்றது.

இப்போது பைபிள் சொல்லக்கூடிய கணக்கை காண்போம். ஏசு இறந்து அடக்கம் செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை.

வெள்ளிக்கிழமை இரவில் அடக்கம் செய்யப்பட்டதால் வெள்ளிக்கிழமை பகலில் அவர் பூமிக்குள் இருக்கவில்லை, இரவு மட்டுமே இருந்துள்ளார்.

சனிக்கிழமை முழுவதும் அவர் பூமிக்குள் இருந்துள்ளதால் இதில் ஒரு பகல், ஒரு இரவு உள்ளது.

மொத்தம் இரண்டு இரவுகள் ஒரு பகல் ஆகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை மரகத மரியாள் ஏசுவை பார்த்ததாக பைபிள் கூறுகின்றது.

ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது. காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள். தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;

மத்தேயு 28 : 1 முதல் 6

கிறித்தவ நம்பிக்கைப் பிரகாரம் சனிக்கிழமை ஓய்வு நாள். அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்திலேயே ஏசு உயிர்த்தெழுந்ததாக பைபிள் கூறுகின்றது. அப்படியானால் மொத்தம் இரண்டு இரவுகளும், ஒரு பகல் மட்டும்தான் இயேசு பூமியின் இருதயத்தில் இருந்துள்ளார்.

ஏசு சொன்ன முன்னறிவிப்பு பிரகாரம் மூன்று இரவும், மூன்று பகல்களும் பூமியின் இருதயத்தில் ஏசு இருந்திருக்க வேண்டும்.

ஏசு சொன்ன உண்மையான முன்னறிவிப்பின்படி,

1)வெள்ளிக்கிழமை இரவு  2)சனிக்கிழமை பகல் 3) சனிக்கிழமை இரவு 4) ஞாயிறு பகல் 5) ஞாயிறு இரவு 6)திங்கள் பகல்

முடிந்து திங்கட்கிழமை இரவுதான் உயிர்த்தெழுந்ததாக கிறித்தவர்கள் நம்ப வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் இயேசுவின் முன்னறிவிப்பை மறுக்கிறார்கள்.

மேற்கண்டவாறு கணக்கு போட்டால்தான் மூன்று இரவும், மூன்று பகல்களும் வருகின்றன. அப்படியானால், ஏசு தான் உயிர்த்தெழுவதாக குறிப்பிட்ட நாள் திங்கள் கிழமை இரவுதான். ஆக பைபிளின் அடிப்படையில் பார்த்தால் ஈஸ்டர் சண்டே என்பது முழுக்க முழுக்க தவறு. ஈஸ்டர் மண்டே என்பதுதான் சரி என்பது தெரிய வருகின்றது.

ஏசு தான் சொன்ன பிரகாரம் மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் கழித்து திங்கள் கிழமை உயிர்த்தெழுந்தார் எனபதற்கு பைபிள் அடிப்படையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாததால் ஏசு செய்த முன்னறிவிப்பும் பைபிள் அடிப்படையில் பொய்யாகிப் போனது. இதன் மூலம் பைபிள் இறைவேதமில்லை என்பதும் நிரூபணமாகிவிட்டது.

அதே நேரத்தில் ஏசுவைப்போல தோற்றமுடைய சாத்தான்தான் இந்த வேளையை ஏசுவுடைய வடிவத்தில் வந்து காட்டியுள்ளார் என்பதற்கு பைபிளிலேயே பலசான்றுகளை நாம் காண்பதால் அது இன்னும் உறுதிசெய்யப்படுகின்றது.

 அதே நேரத்தில் இந்த உண்மையை மறைக்க பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் எத்தகைய மொழிபெயர்ப்பு மோசடியை செய்துள்ளனர் என்பதையும் நாம் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

Jonah was in the stomach of a huge fish for three days and three nights. The Son of Man will be in the grave for three days and three nights.

மத்தேயு 12 : 40

மேற்கண்ட ஆங்கில வார்த்தைகளில் மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் என்று தெள்ளத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதைக் கீழ்க்கண்டவாறு மோசடி மொழிபெயர்ப்பு செய்துள்ளனர்.

யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.

மத்தேயு - 12 : 38 முதல் 40

மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் என்ற வாசகத்தை இரவும் பகலும் மூன்று நாள் என்று திட்டமிட்டு மோசடி செய்து தங்களது திறமையைக் கட்டியுள்ளனர் போதகர்கள்.

31.03.2013. 8:12 AM

More Articles …

Page 3 of 4