Sidebar

18
Thu, Jun
சமீபத்திய செய்திகள்

ஆறு நோன்பு எப்போது நோற்க வேண்டும்?

சுன்னத்தான நோன்புகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கேள்வி

ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் பிடிக்க வேண்டும் என்று உள்ளது. இது பெருநாளை அடுத்துள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்க வேண்டுமா? அல்லது ஷவ்வால் மாதம் முழுவதும் ஏதேனும் ஆறு நாட்களில் நோற்றுக் கொள்ளலாமா?

அக்பர், திருநெல்வேலி.

صحيح مسلم

2815 – حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِىُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ – قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ – أَخْبَرَنِى سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتِ بْنِ الْحَارِثِ الْخَزْرَجِىِّ عَنْ أَبِى أَيُّوبَ الأَنْصَارِىِّ – رضى الله عنه – أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ ».

யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் 6 நோன்பு நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார்.
அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி)
நூல் : முஸ்லிம்

இந்த ஹதீஸில் ரமளானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வால் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"தொடர்ந்து'' என்ற வார்த்தையிலிருந்து பெருநாளைக்குப் பிறகுள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.  இது தவறான வாதமாகும்.

ஏனெனில் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, ஷவ்வாலிலும் ஆறு நாட்கள் நோன்பைத் தொடர வேண்டும் என்ற கருத்தில் தான் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே தவிர, ஆறு நாட்கள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்ற கருத்தில் இது கூறப்படவில்லை.

ஒரு வாதத்திற்கு ரமளானைத் தொடர்ந்து ஆறு நாட்கள் நோன்பு பிடிக்க வேண்டும் என்று அந்த ஹதீஸ் கூறுகின்றது என்று வைத்துக் கொண்டால், பெருநாளில் நோன்பு பிடிப்பதற்குத் தடை உள்ளது. ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தில் உள்ளவர்கள் கூட ஷவ்வால் பிறை 2லிருந்து 7 வரை தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று தான் கூறுகின்றனர்.  இதில் ரமளானைத் தொடர்ந்து என்ற வாதம் அடிபட்டுப் போகின்றது. ஒரு நாள் விடுபட்டு விட்டால் அது ரமளானின் தொடர்ச்சியாக ஆகாது. மேலும் ஷவ்வால் பிறை 2லிருந்து 7 வரை தான் ஆறு நோன்பு பிடிக்க வேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் இல்லை.

மேலும் இந்த நன்மை ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் கிடைக்க வேண்டும். ரமலான் முடிந்த மறுநாள் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்கள் ரமலானைத் தொடர்ந்து இந்த நோன்பைப் பிடிக்க முடியாமல் போய்விடும். எனவே தொடர்து என்பதன் பொருள் நாட்களால் தொடர்வது அல்ல; மாதத்தால் தொடர்வது என்ற கருத்தில் தான் பயன்படுத்தப்பட்டு இருக்க முடியும்.

ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதம் தனக்கு வசதியான நாட்களில் இந்த நோன்பை நோற்கலாம். நாட்களால் தொடர்ச்சி என்று பொருள் கொண்டால் ஷவ்வால் பிறை ஒன்று பெருநாளாக உள்ளதால் ஒருவரும் தொடர்ந்து பிடிக்க முடியாமல் போய்விடும். பெண்களில் பலருக்கு இந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்.

எனவே ஆறு நோன்புகள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.  ஷவ்வால் மாதம் முழுவதும் உள்ள நாட்களில் ஏதேனும் ஆறுநாட்கள் நோன்பு வைக்கலாம் என்பதே சரியான கருத்தாகும்.

முப்பது நோன்பும், ஆறு நோன்பும் சேர்த்து முப்பத்து ஆறு நோன்புகளாகின்றன. நன்மைகள் ஒன்றுக்குப் பத்து என்ற கணக்குப்படி தினமும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்குக் காரணம் கூறியுள்ளனர்.

ஆறு நோன்பின் தத்துவம் இது தான் என்றால் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.  ஆனால் ஷவ்வாலில் என்று ஹதீஸ்களில் இடம்பெறுவதால் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பையும் வைத்து விட வேண்டும்.

Top Stories

Grid List

அனைவரும் ஒரே நாளில் ஏன் நோன்பை கொண்டாடுவதில்லை


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

கடந்த காலங்களில் எண்ணிக்கை தெரியாமல் விட்ட நோன்பை என்ன செய்வது?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் பதிலாக, விடுபட்ட ஒவ்வொரு நோன்பிற்கும் ஒரு ஏழைக்கு நான் உணவளிக்கிறேன். இஸ்லாத்தில் இது நோன்பிற்கு மாற்றாகக் கருதப்படுமா? விளக்கவும்."

-இலுப்பூர் சங்கரன்பந்தல் நஜ்முன்னிசா

பதில்

அதிகமான முஸ்லிம்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது: அதாவது ஒருவரால் நோய் காரணமாக நோன்பு நோற்க முடியாவிட்டால், விடுபட்ட ஒவ்வொரு நோன்பிற்கும் ஒரு ஏழைக்கு உணவளிப்பதன் மூலம் அதை ஈடு செய்யலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

பல முதியவர்கள் இந்த நம்பிக்கையைப் பின்பற்றி, பரிகாரமாக ஏழைகளுக்குத் தொடர்ந்து உணவளிக்கிறார்கள். செல்வந்தர்களும் இந்த முறையைப் பின்பற்றி, ஒரு மாதம் முழுதும் நோன்பு நோற்கவில்லை என்றால் முப்பது ஏழைகளுக்கு உணவளிக்கிறார்கள். நோன்பு நோற்க முடியாத முதியவர்கள் சார்பாக உணவை விநியோகிப்பதாகக் கூறி சில குழுக்கள் பணம் வசூலிப்பதாகவும் செய்திகள் உள்ளன.

ஆனால் இந்த நடைமுறை உண்மையில் இஸ்லாத்தில் இருக்கிறதா?

2:184 வசனத்தில் ஆரம்பத்தில், நோன்பு நோற்க வசதியுள்ளவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது: அவர்கள் நோன்பு நோற்கலாம் அல்லது அதற்குப் பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம்.

அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது

திருக்குர்ஆன் 2:184

 நோன்பு முதன் முதலில் கடமையாக்கப்பட்ட போது இந்த வசனம் அருளப்பட்டது, அப்போது நோன்பு நோற்பது கட்டாயமில்லை. ஒருவர் நோன்பும் நோற்கலாம் அல்லது ஒரு ஏழைக்கு உணவும் அளிக்கலாம்.

பின்னர், வசனம் 2:185 அருளப்பட்டு முந்தைய சட்டத்தை மாற்றியது. ரமலான் மாதத்தை அடையும் (ஆரோக்கியமான) அனைவரும் நோன்பு நோற்பதைக் கட்டாயமாக்கியது. முன்னதாக இருந்த அந்தத் தேர்வு (option) நீக்கப்பட்டது.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்

திருக்குர்ஆன் 2:185

صحيح البخاري

4507 – حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ يَزِيدَ، مَوْلَى سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، عَنْ سَلَمَةَ، قَالَ: " لَمَّا نَزَلَتْ: {وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ} [البقرة: 184]. «كَانَ مَنْ أَرَادَ أَنْ يُفْطِرَ وَيَفْتَدِيَ، حَتَّى نَزَلَتِ الآيَةُ الَّتِي بَعْدَهَا فَنَسَخَتْهَا» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «مَاتَ بُكَيْرٌ، قَبْلَ يَزِيدَ»

ஆரம்ப காலத்தில் நோன்பு நோற்க சக்தி பெற்றிருந்தவர்கள் சில சமயங்களில் அதற்குப் பதிலாக ஏழைகளுக்கு உணவளிப்பதைத் தேர்ந்தெடுத்தனர் என்று விளக்குகிறது. ஆனால் பிந்தைய வசனம் அருளப்பட்ட பிறகு, நோன்பு கட்டாயமாக்கப்பட்டது, நோன்பிற்குப் பதிலாக உணவளிக்கும் முறை நீக்கப்பட்டது

நூல் : புகாரி 4507

எனவே, நோன்பு நோற்க முடியாதவர்கள் அதற்குப் பரிகாரம் கொடுக்க வேண்டும் என்று குர்ஆன் கூறவில்லை. பரிகாரம் கொடுக்கும் முறை ஆரம்பத்தில் நோன்பு நோற்க சக்தி பெற்றவர்களுக்கு மட்டுமே இருந்தது.

ஒருவரால் நோய் அல்லது முதுமை காரணமாக நோன்பு நோற்கவே முடியாது என்றால், நோன்பு நோற்பது அவர் மீது கடமையே அல்ல. கடமை இல்லாத போது, அதற்குப் பரிகாரம் செய்வதும் கடமையில்லை.

உதாரணமாக, உடல் நலக் காரணங்களுக்காக அடிக்கடி சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒரு தீவிர நீரிழிவு நோயாளி நோன்பு நோற்க முடியாது. அத்தகையவர் நோன்பு நோற்கத் தேவையில்லை. அதற்குப் பரிகாரமும் தேவையில்லை. ஒருவரின் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயத்திற்காக அல்லாஹ் ﷻ அவரை கேள்வி கேட்க மாட்டான்.

முதியவர்கள் அல்லது நோயாளிகள் பரிகாரம் வழங்கலாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) ஒரு கருத்தைக் கூறியதாக சில அறிவிப்புகள் உள்ளன. இருப்பினும், இது அவரது தனிப்பட்ட விளக்கமே தவிர, குர்ஆன் வசனத்தால் நேரடியாக ஆதரிக்கப்படவில்லை.

குர்ஆன் அந்தச் சட்டம் மாற்றப்பட்டுவிட்டதை தெளிவாகக் கூறுகிறது, மேலும் நோன்பு நோற்க சக்தி பெற்றவர்களுக்கு மட்டுமே அது கடமை என்கிறது.

எனவே, நோன்பிற்கு மாற்றாக ஏழைகளுக்கு உணவளிப்பது ஒரு சரியான பரிகாரம் ஆகாது. உங்களால் முடிந்தால், நீங்கள் நோன்பு நோற்க வேண்டும். மருத்துவ ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ உங்களால் முடியாவிட்டால், நோன்பு அவசியமில்லை, பரிகாரமும் தேவையில்லை. ஒருவரால் நோன்பு நோற்க முடியுமா இல்லையா என்பதை அவரோ அல்லது ஒரு தகுதி வாய்ந்த மருத்துவரோ மட்டுமே தீர்மானிக்க முடியும்.

உங்களது மனசாட்சியும் மருத்துவ நிலையும் உங்களால் நோன்பு நோற்க முடியாது என்பதை உறுதிப்படுத்தினால், நீங்கள் நோன்பு நோற்கவோ அல்லது பரிகாரம் கொடுக்கவோ தேவையில்லை. உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட எதற்கும் அல்லாஹ் ﷻ உங்களைக் கேள்வி கேட்க மாட்டான்.

நோன்பிற்குப் பதிலாக உணவளிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்குச் சக்தி இருப்பதாக நீங்களே கருதுகிறீர்கள் என்று அர்த்தம், அப்படியானால் விலக்கு அளிக்கும் சட்டம் உங்களுக்குப் பொருந்தாது.

ரமலான் தொடர் உரை நேரம் பற்றிய அறிவிப்பு


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

தொடர் உதிரப்போக்குள்ள பெண்கள் எப்படி நோன்பு வைப்பது?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

துன்பம் அடக்குமுறை போன்றவற்றிற்கு நோன்பு வைத்து பாதுகாப்பு தேடலாமா?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

தொழுகையில் குர் ஆன் வசனங்களில் பகுதி ஓதலாமா?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

ஐந்து வேளைத் தொழுகைக்கு குர்ஆனில் ஆதாரம் உண்டா


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

தொழுகையில் அல்ஹம்துவுடன் பிஸ்மில்லா அவசியமா


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

லுஹா தொழுகைக்கு முடிவு நேரம் என்ன?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

இஷா தொழுகையில் ஐந்து ரக்கஅத் தொழுதார்கள் இது ஏன்?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

ஐந்து வேளை தொழுகை குர்ஆனில் உண்டா?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

90 - சமுதாயப்பணி செய்வோருக்கு ஜகாத்தில் முன்னுரிமை

 89 - ஜகாத்தை ரமலான் மாதம் கொடுப்பதற்கு சிறப்பு உண்டா

87 - எட்டு வகைகளில் ஜகாத் செலவிடப்பட வேண்டும்

86 - சொந்த செலவுகளைக் கழித்து விட்டு ஜகாத் கொடுக்கலாமா?

85 - ஜகாத் வாங்குவது சுயமரியாதைக்கு இழுக்கா?

84 - ஜகாத் பணத்தில் கிணறு வெட்டி கொடுக்கலாமா?