Sidebar

20
Sat, Jun
சமீபத்திய செய்திகள்

துல்ஹஜ் மாதம் 9 நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா?

சுன்னத்தான நோன்புகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா?

துல்ஹஜ் மாதம் 1 முதல் 9 வரை சிலர் நோன்பு வைக்கிறார்கள், அப்படி வைக்கலாமா? அல்லது 9 அரபாத் நாள் மட்டும் வைக்க வேண்டுமா? 

பதில்

இந்தக் கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் குழப்பங்கள் உள்ளதால் இது சரியான ஹதீஸ் அல்ல என்று ஸைலயீ, முன்திர் உள்ளிட்ட ஹதீஸ் கலை அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

مسند أحمد

22334 - حَدَّثَنَا سُرَيْجٌ، وَعَفَّانُ قَالَا: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا الْحُرُّ بْنُ الصَّيَّاحِ قَالَ: سُرَيْجٌ، عَنِ الْحُرِّ، عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ، عَنِ امْرَأَتِهِ، عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: " كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ تِسْعَ ذِي الْحِجَّةِ، وَيَوْمَ عَاشُورَاءَ، وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ " قَالَ عَفَّانُ: أَوَّلَ اثْنَيْنِ مِنَ الشَّهْرِ وَخَمِيسَيْنِ


سنن أبي داود

2437 - حدَّثنا مُسَدَّدٌ، حدَّثنا أبو عَوانة، عن الحرِّ بنِ الصَّيَّاح، عن هُنيدَة ابنِ خالد، عن امرأتِه عن بعضِ أزواج النبيِّ -صلَّى الله عليه وسلم- قالت: كان رسولُ الله -صلَّى الله عليه وسلم- يَصُوُم تسعَ ذي الحجة، ويَوْمَ عاشوراء، وثلاثةَ أيامٍ من كُلِّ شهرٍ: أولَ اثنين من الشهر، والخميسَ والخَميسَ (2) (3).

துல்ஹஜ் மாதம் ஒன்பது நாட்களும் ஆஷூரா நாளிலும், ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்களும், மாதத்தின் முதல் இரு நாட்களும், இரண்டு வியாழன்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பவர்களாக இருந்தனர்.

நூல்கள் அஹ்மது அபூதாவூத்  

இதை நபியின் ஒரு மனைவி கூறியதாக என் மனைவி சொன்னார் என்று ஹுனைதா என்பார் இதை அறிவிக்கிறார்.

  • ஹுனைதாவின் மனைவியின் பெயர் எது குறித்தோ அவரது நம்பகத் தன்மை குறித்தோ எந்த விபரமும் இல்லை. இதன் காரணமாக இது பலவீனமாகின்றது.
  • அத்துடன் ஹுனைதா என்பார் அறிவிப்பாளர் குறித்து பலவாறாக முரண்பட்டு அறிவிக்கிறார்.
  • மனைவி சொன்னதாக ஒரு முறை கூறும் அவர் மற்றொரு சந்தர்ப்பத்தில் என் தாய் சொன்னார் என்று அறிவிக்கிறார்.

 

  • மற்றொரு சந்தர்ப்பத்தில் நபியின் மனைவியிடம் தானே கேட்டதாகக் கூறுகிறார்.

 

  • நபியின் மனைவி உம்மு சலமா என்று ஒரு சந்தர்ப்பத்தில் கூறுகிறார்.
  • நபியின் மனைவி ஹஃப்ஸா என்று மற்றொரு சந்தர்ப்பத்தில் கூறுகிறார்.

இப்படி மாற்றி மாற்றி அறிவிக்கப்படும் ஹதீஸ் முள்தரப் (மாற்றி மாற்றி அறிவிக்கப்பட்டது) என்று கூறப்படுகிறது. இது பலவீனமான ஹதீஸின் ஒரு வகையாகும்.

(அல்பானி அவர்கள் இதை சரியான ஹதீஸ் என்று குறிப்பிட்டுள்ளது தவறானதாகும்.)

இந்த ஹதீஸை இவர் எத்தனை விதமாக முரண்பட்டு அறிவித்துள்ளார் என்பதைக் கீழே தந்துள்ளோம்.

உம்மு ஸலமா கூறியதை தானே கேட்டதாக அறிவிக்கும் ஹதீஸ்

سنن أبي داود

2452 - حدَّثنا زهيرُ بنُ حربٍ، حدَّثنا محمدُ بنُ فضيلٍ، حدَّثنا الحسنُ بنُ عُبيدِ الله، عن هُنيْدة الخُزاعيِّ عن أُمِّهِ، قالت: دخلتُ على أُمِّ سلمةَ فسألتُها عن الصِّيامِ، فقالت: كان رسولُ الله -صلَّى الله عليه وسلم- يأمرُني أن أصومَ ثلاثةَ أيامٍ من كل شهرٍ، أوَّلَها الاثنينِ، والخميسَ، والخَميسَ (2).

நபியின் மனைவி கூறியதாக அறிவிக்கும் ஹதீஸ்

سنن النسائي

2414 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا خَلَفُ بْنُ تَمِيمٍ عَنْ زُهَيْرٍ عَنْ الْحُرِّ بْنِ الصَّيَّاحِ قَالَ سَمِعْتُ هُنَيْدَةَ الْخُزَاعِيَّ قَالَ  دَخَلْتُ عَلَى أُمِّ الْمُؤْمِنِينَ سَمِعْتُهَا تَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ أَوَّلَ اثْنَيْنِ مِنْ الشَّهْرِ ثُمَّ الْخَمِيسَ ثُمَّ الْخَمِيسَ الَّذِي يَلِيهِ

நபியின் மனைவி ஹப்ஸா கூறியதாக அறிவிக்கும் ஹதீஸ்

سنن النسائي

2415 - أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي النَّضْرِ قَالَ حَدَّثَنِي أَبُو النَّضْرِ قَالَ حَدَّثَنَا أَبُو إِسْحَقَ الْأَشْجَعِيُّ كُوفِيٌّ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ الْمُلَائِيِّ عَنْ الْحُرِّ بْنِ الصَّيَّاحِ عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ الْخُزَاعِيِّ عَنْ حَفْصَةَ قَالَتْ  أَرْبَعٌ لَمْ يَكُنْ يَدَعُهُنَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِيَامَ عَاشُورَاءَ وَالْعَشْرَ وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ

உம்மு ஸலமாவிடம் என் தாய் கேட்டார் என்று அறிவிக்கும் ஹதீஸ்

سنن النسائي

2418 - أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ هُنَيْدَةَ الْخُزَاعِيِّ عَنْ أُمِّهِ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ  كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ بِصِيَامِ ثَلَاثَةِ أَيَّامٍ أَوَّلِ خَمِيسٍ وَالِاثْنَيْنِ وَالِاثْنَيْنِ

இந்த ஹதீஸில் மற்றொரு பலவீனமும் உள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் அபூ இஸ்ஹாக் அல்அஷ்ஜயீ என்பவர் இடம் பெறுகின்றார். இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இவருடைய நம்பகத் தன்மை நிரூபிக்கப்படாத காரணத்தால் இது பலவீனமான செய்தியாகும்.

இந்தச் செய்தி இப்னு ஹிப்பான், முஸ்னத் அஹ்மத், தப்ரானீ ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

صحيح مسلم

9 - (1176) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَاقُ - قَالَ إِسْحَاقُ: أَخْبَرَنَا، وَقَالَ الْآخَرَانِ: - حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: «مَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَائِمًا فِي الْعَشْرِ قَطُّ»

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் துல்ஹஜ் பத்து நாட்கள் நோன்பு நோற்று நான் பார்த்ததில்லை என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.

இது முஸ்லிம் நூலில் இடம் பெற்றுள்ளது.

அரஃபா எனும் ஒன்பதாம் நாள் நோன்பு மட்டுமே ஹஜ்ஜில் இருப்போர் தவிர மற்றவர்களுக்கு சுன்னத் ஆகும்.

பொதுவாக தடை செய்யப்பட்ட ஐந்து நாட்கள் தவிர மற்ற நாட்களில் நாம் உபரியாக நோன்பு நோற்கலாம். அந்த அடிப்படையில் ஒருவர் தாமாக விரும்பி இந்த ஒன்பது நாள் நோன்பு நோற்றால் உபரியான நோன்பின் நன்மையை அவர் பெற்றுக் கொள்வார்.

இந்த நாட்களில் நோன்பு நோற்பது நபிவழி என்பது போல் கருதினாலோ அப்படி வலியுறுத்தினாலோ அது பித்அத் ஆகும்.

இந்தக் குறிப்பிட்ட செய்தி பலவீனம் என்றாலும் துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள்  நல்லறம் செய்ய ஆர்வமூட்டும் ஆதாரப்பூர்வமான செய்தி உள்ளது.

صحيح البخاري

 969 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُسْلِمٍ البَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «مَا العَمَلُ فِي أَيَّامٍ أَفْضَلَ مِنْهَا فِي هَذِهِ؟» قَالُوا: وَلاَ الجِهَادُ؟ قَالَ: «وَلاَ الجِهَادُ، إِلَّا رَجُلٌ خَرَجَ يُخَاطِرُ بِنَفْسِهِ وَمَالِهِ، فَلَمْ يَرْجِعْ بِشَيْءٍ»

(துல்ஹஜ்) பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர்.  அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான்; ஆயினும் தனது உயிருடனும், தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத பேராளியைத் தவிர (அதாவது அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவரைத் தவிர) என்று விடையளித்தார்கள். 

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) 

நூல் : புகாரி 969

இந்தச் செய்தி பொதுவாக நோன்பு உட்பட அனைத்து நல்லறங்களையும் குறிக்கின்றது.

இந்த நாட்களில் தொழுகை, திக்ரு, தர்மம் செய்தல் போன்ற எந்த நல்லறங்களைச் செய்தாலும் அதற்கு தனிச்சிறப்பு உண்டு. எனவே இந்தப் பொதுவான ஆதாரத்தின் அடிப்படையில் இந்த நாட்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அது வரவேற்கத்தக்கது தான்.

இந்த ஒன்பது நாட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்கவில்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதால் இவ்வாறு நோன்பு நோற்பது கூடாது என்று சொல்ல முடியாது.

ஒரு அமலுக்கு நபிகளாரின் சொல் ஆதாரமாக இருக்கும் போது அந்த வணக்கத்தை நபிகளார் செய்ததாக எந்தச் செய்தியும் இல்லை என்றால் நபிகளாரின் கட்டளை இருப்பதால் அந்த அமல் நபிவழியாகக் கருதப்படும்.

உதாரணமாக அரஃபா நாளில் நோன்பு நோற்பதற்கு நபிகளாரின் சொல்லில் ஆதாரம் உள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்பு நோற்றதாக எந்தச் செய்தியும் இல்லை. இது போல் தாஜ் துல் ஹஜ் நோன்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும்

இப்போது இந்த நோன்புக்கு நபியின் செயல் ஆதாரமாகக் கிடைக்காவிட்டாலும் சொல் கிடைத்திருப்பதால் இது மார்க்க அங்கீகாரம் பெறுகின்றது.

துல்ஹஜ் மாதம் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பதையும் இதே அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும்.

Top Stories

Grid List

அனைவரும் ஒரே நாளில் ஏன் நோன்பை கொண்டாடுவதில்லை


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

கடந்த காலங்களில் எண்ணிக்கை தெரியாமல் விட்ட நோன்பை என்ன செய்வது?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் பதிலாக, விடுபட்ட ஒவ்வொரு நோன்பிற்கும் ஒரு ஏழைக்கு நான் உணவளிக்கிறேன். இஸ்லாத்தில் இது நோன்பிற்கு மாற்றாகக் கருதப்படுமா? விளக்கவும்."

-இலுப்பூர் சங்கரன்பந்தல் நஜ்முன்னிசா

பதில்

அதிகமான முஸ்லிம்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது: அதாவது ஒருவரால் நோய் காரணமாக நோன்பு நோற்க முடியாவிட்டால், விடுபட்ட ஒவ்வொரு நோன்பிற்கும் ஒரு ஏழைக்கு உணவளிப்பதன் மூலம் அதை ஈடு செய்யலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

பல முதியவர்கள் இந்த நம்பிக்கையைப் பின்பற்றி, பரிகாரமாக ஏழைகளுக்குத் தொடர்ந்து உணவளிக்கிறார்கள். செல்வந்தர்களும் இந்த முறையைப் பின்பற்றி, ஒரு மாதம் முழுதும் நோன்பு நோற்கவில்லை என்றால் முப்பது ஏழைகளுக்கு உணவளிக்கிறார்கள். நோன்பு நோற்க முடியாத முதியவர்கள் சார்பாக உணவை விநியோகிப்பதாகக் கூறி சில குழுக்கள் பணம் வசூலிப்பதாகவும் செய்திகள் உள்ளன.

ஆனால் இந்த நடைமுறை உண்மையில் இஸ்லாத்தில் இருக்கிறதா?

2:184 வசனத்தில் ஆரம்பத்தில், நோன்பு நோற்க வசதியுள்ளவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது: அவர்கள் நோன்பு நோற்கலாம் அல்லது அதற்குப் பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம்.

அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது

திருக்குர்ஆன் 2:184

 நோன்பு முதன் முதலில் கடமையாக்கப்பட்ட போது இந்த வசனம் அருளப்பட்டது, அப்போது நோன்பு நோற்பது கட்டாயமில்லை. ஒருவர் நோன்பும் நோற்கலாம் அல்லது ஒரு ஏழைக்கு உணவும் அளிக்கலாம்.

பின்னர், வசனம் 2:185 அருளப்பட்டு முந்தைய சட்டத்தை மாற்றியது. ரமலான் மாதத்தை அடையும் (ஆரோக்கியமான) அனைவரும் நோன்பு நோற்பதைக் கட்டாயமாக்கியது. முன்னதாக இருந்த அந்தத் தேர்வு (option) நீக்கப்பட்டது.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்

திருக்குர்ஆன் 2:185

صحيح البخاري

4507 – حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ يَزِيدَ، مَوْلَى سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، عَنْ سَلَمَةَ، قَالَ: " لَمَّا نَزَلَتْ: {وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ} [البقرة: 184]. «كَانَ مَنْ أَرَادَ أَنْ يُفْطِرَ وَيَفْتَدِيَ، حَتَّى نَزَلَتِ الآيَةُ الَّتِي بَعْدَهَا فَنَسَخَتْهَا» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «مَاتَ بُكَيْرٌ، قَبْلَ يَزِيدَ»

ஆரம்ப காலத்தில் நோன்பு நோற்க சக்தி பெற்றிருந்தவர்கள் சில சமயங்களில் அதற்குப் பதிலாக ஏழைகளுக்கு உணவளிப்பதைத் தேர்ந்தெடுத்தனர் என்று விளக்குகிறது. ஆனால் பிந்தைய வசனம் அருளப்பட்ட பிறகு, நோன்பு கட்டாயமாக்கப்பட்டது, நோன்பிற்குப் பதிலாக உணவளிக்கும் முறை நீக்கப்பட்டது

நூல் : புகாரி 4507

எனவே, நோன்பு நோற்க முடியாதவர்கள் அதற்குப் பரிகாரம் கொடுக்க வேண்டும் என்று குர்ஆன் கூறவில்லை. பரிகாரம் கொடுக்கும் முறை ஆரம்பத்தில் நோன்பு நோற்க சக்தி பெற்றவர்களுக்கு மட்டுமே இருந்தது.

ஒருவரால் நோய் அல்லது முதுமை காரணமாக நோன்பு நோற்கவே முடியாது என்றால், நோன்பு நோற்பது அவர் மீது கடமையே அல்ல. கடமை இல்லாத போது, அதற்குப் பரிகாரம் செய்வதும் கடமையில்லை.

உதாரணமாக, உடல் நலக் காரணங்களுக்காக அடிக்கடி சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒரு தீவிர நீரிழிவு நோயாளி நோன்பு நோற்க முடியாது. அத்தகையவர் நோன்பு நோற்கத் தேவையில்லை. அதற்குப் பரிகாரமும் தேவையில்லை. ஒருவரின் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயத்திற்காக அல்லாஹ் ﷻ அவரை கேள்வி கேட்க மாட்டான்.

முதியவர்கள் அல்லது நோயாளிகள் பரிகாரம் வழங்கலாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) ஒரு கருத்தைக் கூறியதாக சில அறிவிப்புகள் உள்ளன. இருப்பினும், இது அவரது தனிப்பட்ட விளக்கமே தவிர, குர்ஆன் வசனத்தால் நேரடியாக ஆதரிக்கப்படவில்லை.

குர்ஆன் அந்தச் சட்டம் மாற்றப்பட்டுவிட்டதை தெளிவாகக் கூறுகிறது, மேலும் நோன்பு நோற்க சக்தி பெற்றவர்களுக்கு மட்டுமே அது கடமை என்கிறது.

எனவே, நோன்பிற்கு மாற்றாக ஏழைகளுக்கு உணவளிப்பது ஒரு சரியான பரிகாரம் ஆகாது. உங்களால் முடிந்தால், நீங்கள் நோன்பு நோற்க வேண்டும். மருத்துவ ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ உங்களால் முடியாவிட்டால், நோன்பு அவசியமில்லை, பரிகாரமும் தேவையில்லை. ஒருவரால் நோன்பு நோற்க முடியுமா இல்லையா என்பதை அவரோ அல்லது ஒரு தகுதி வாய்ந்த மருத்துவரோ மட்டுமே தீர்மானிக்க முடியும்.

உங்களது மனசாட்சியும் மருத்துவ நிலையும் உங்களால் நோன்பு நோற்க முடியாது என்பதை உறுதிப்படுத்தினால், நீங்கள் நோன்பு நோற்கவோ அல்லது பரிகாரம் கொடுக்கவோ தேவையில்லை. உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட எதற்கும் அல்லாஹ் ﷻ உங்களைக் கேள்வி கேட்க மாட்டான்.

நோன்பிற்குப் பதிலாக உணவளிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்குச் சக்தி இருப்பதாக நீங்களே கருதுகிறீர்கள் என்று அர்த்தம், அப்படியானால் விலக்கு அளிக்கும் சட்டம் உங்களுக்குப் பொருந்தாது.

ரமலான் தொடர் உரை நேரம் பற்றிய அறிவிப்பு


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

தொடர் உதிரப்போக்குள்ள பெண்கள் எப்படி நோன்பு வைப்பது?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

துன்பம் அடக்குமுறை போன்றவற்றிற்கு நோன்பு வைத்து பாதுகாப்பு தேடலாமா?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

தொழுகையில் குர் ஆன் வசனங்களில் பகுதி ஓதலாமா?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

ஐந்து வேளைத் தொழுகைக்கு குர்ஆனில் ஆதாரம் உண்டா


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

தொழுகையில் அல்ஹம்துவுடன் பிஸ்மில்லா அவசியமா


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

லுஹா தொழுகைக்கு முடிவு நேரம் என்ன?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

இஷா தொழுகையில் ஐந்து ரக்கஅத் தொழுதார்கள் இது ஏன்?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

ஐந்து வேளை தொழுகை குர்ஆனில் உண்டா?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

90 - சமுதாயப்பணி செய்வோருக்கு ஜகாத்தில் முன்னுரிமை

 89 - ஜகாத்தை ரமலான் மாதம் கொடுப்பதற்கு சிறப்பு உண்டா

87 - எட்டு வகைகளில் ஜகாத் செலவிடப்பட வேண்டும்

86 - சொந்த செலவுகளைக் கழித்து விட்டு ஜகாத் கொடுக்கலாமா?

85 - ஜகாத் வாங்குவது சுயமரியாதைக்கு இழுக்கா?

84 - ஜகாத் பணத்தில் கிணறு வெட்டி கொடுக்கலாமா?