Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

கிப்லா திசையில் கழிப்பிடம் கூடுமா

கிப்லா கஅபா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கிப்லாவை நோக்கி மலஜலம் கழிக்கலாமா ?

صحيح البخاري 
144 - حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا أَتَى أَحَدُكُمُ الغَائِطَ، فَلاَ يَسْتَقْبِلِ القِبْلَةَ وَلاَ يُوَلِّهَا ظَهْرَهُ، شَرِّقُوا أَوْ غَرِّبُوا»

உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் கிப்லாவை முன்னோக்கவும் கூடாது; கிப்லாவை முதுகுக்குப் பின்னாலும் ஆக்கக் கூடாது. கிழக்கையோ மேற்கையோ நோக்கி அமருங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி)

நூல்: புகாரி 144, 394

கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமருங்கள் என்பது மதீனாவில் உள்ள மக்களைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டதாகும். மதீனாவிலிருந்து வடக்கு திசையில் கிப்லா அமைந்திருப்பதால் வடக்கு தெற்காக அமராமல் கிழக்கு மேற்காக அமரச் சொன்னார்கள். நமது நாட்டைப் பொறுத்த வரை மேற்குத் திசையில் அல்லது வடமேற்குத் திசையில் கிப்லா அமைந்திருப்பதால் நாம் வடக்கு தெற்காகத் தான் அமர வேண்டும்.

கிப்லாவை நோக்கி மலஜலம் கழிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தாலும் இந்தத் தடை திறந்த வெளியில் தான். கட்டடத்திற்குள் கிப்லாவை நோக்கலாம் என்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

صحيح البخاري
145 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ عَمِّهِ، وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَقُولُ: إِنَّ نَاسًا يَقُولُونَ إِذَا قَعَدْتَ عَلَى حَاجَتِكَ فَلاَ تَسْتَقْبِلِ القِبْلَةَ وَلاَ بَيْتَ المَقْدِسِ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: لَقَدْ ارْتَقَيْتُ يَوْمًا عَلَى ظَهْرِ بَيْتٍ لَنَا، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «عَلَى لَبِنَتَيْنِ، مُسْتَقْبِلًا بَيْتَ المَقْدِسِ لِحَاجَتِهِ». وَقَالَ: لَعَلَّكَ مِنَ الَّذِينَ يُصَلُّونَ عَلَى أَوْرَاكِهِمْ؟ فَقُلْتُ: لاَ أَدْرِي وَاللَّهِ. قَالَ مَالِكٌ: يَعْنِي الَّذِي يُصَلِّي وَلاَ يَرْتَفِعُ عَنِ الأَرْضِ، يَسْجُدُ وَهُوَ لاَصِقٌ بِالأَرْضِ



மலஜலம் கழிக்கும் போது கிப்லாவையோ, பைத்துல் முகத்தைஸையோ நோக்காதே என்று சிலர் கூறுகின்றனர். நான் ஒரு நாள் எனது வீட்டின் முகட்டின் மீது ஏறினேன். நபி (ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி இரு செங்கற்கள் மீது அமர்ந்து தமது தேவையை நிறைவு செய்ததைப் பார்த்தேன் என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.

நூல்: புகாரி 145, 149

صحيح البخاري مشكول (1/ 41)
148 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ [ص:42] مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: ارْتَقَيْتُ فَوْقَ ظَهْرِ بَيْتِ حَفْصَةَ لِبَعْضِ حَاجَتِي، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْضِي حَاجَتَهُ مُسْتَدْبِرَ القِبْلَةِ، مُسْتَقْبِلَ الشَّأْمِ

நான் (எனது சகோதரியும் நபிகள் நாயகத்தின் மனைவியுமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டின் மேல் ஏறினேன். நபி (ஸல்) அவர்கள் கிப்லாவை முதுகுக்குப் பின்னால் ஆக்கி சிரியாவை முன்னோக்கி தமது தேவையை நிறைவேற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன் என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல்: புகாரி 148, 3102

கட்டடத்திற்குள் மலஜலம் கழிப்பதாக இருந்தால் கிப்லாவை முன்னோக்கத் தடை ஏதும் இல்லை என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.

* திறந்த வெளியாக இருந்தால் கண்டிப்பாக கிப்லாவை முன்னோக்கவும், பின்னால் ஆக்கவும் கூடாது.

* கட்டடமாக இருந்தால் அதில் கிப்லாவை நோக்காது இருக்க வழி இருந்தால் அப்போதும் கிப்லாவை நோக்கக் கூடாது.

* கட்டடத்தில் கிப்லாவை நோக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை இருந்தால் அது போன்ற சந்தர்ப்பங்களில் கிப்லாவை முன்னோக்குவது குற்றமில்லை.

இப்படி முடிவு செய்தால் நபி (ஸல்) அவர்கள் தாம் இட்ட கட்டளையை தாமே ஏன் மீறினார்கள் என்பதற்கும் நமக்கு விடை கிடைக்கும். கிப்லாவை முன்னோக்குவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலை அங்கே இருந்திருக்கலாம். அதனால் அவ்வாறு இருந்திருப்பார்கள் என்று விளக்கம் அளிக்க இடம் உண்டு.

பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் கிழக்கு மேற்கில் அமைக்கப் பட்டிருந்தால் அங்கே நம்மால் வடக்கு தெற்காக அமர முடியாத நிலை ஏற்படலாம். அது போன்ற தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அது குற்றமில்லை என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயலை ஆதாரமாகக் கொள்ளலாம்.

صحيح البخاري
394 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَتَيْتُمُ الغَائِطَ فَلاَ تَسْتَقْبِلُوا القِبْلَةَ، وَلاَ تَسْتَدْبِرُوهَا وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا» قَالَ أَبُو أَيُّوبَ: «فَقَدِمْنَا الشَّأْمَ فَوَجَدْنَا مَرَاحِيضَ بُنِيَتْ قِبَلَ القِبْلَةِ فَنَنْحَرِفُ، وَنَسْتَغْفِرُ اللَّهَ تَعَالَى»



நீங்கள் கழிப்பிடம் சென்றால் கிப்லாவை முன்னோக்காதீர்கள். அதைப் பின்னோக்கவும் செய்யாதீர்கள். கிழக்கு மேற்காக நோக்குங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கூறியிருந்தனர். நாங்கள் சிரியாவுக்கு வந்த போது அங்கே கிப்லாவை நோக்கி கழிவறைகள் அமைக்கப் பட்டிருப்பதைக் கண்டோம். எனவே சற்றே சாய்வாக அமர்ந்து (மலம் கழித்து விட்டு) அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடிக் கொள்வோம் என்று அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல்: புகாரி 394

இந்த ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது நம்மால் இயன்ற வரை கிப்லாவை நோக்கி மலம் கழிக்காமல் இருக்க முயல வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம்.

வீட்டில் கிழக்கு மேற்காக கழிப்பிடம் அமைப்பதற்குத் தான் வசதி இருக்கின்றது என்றால் - அல்லது அமைக்கப் பட்ட கழிப்பிடங்களில் நாம் மலஜலம் கழிப்பதாக இருந்தால் - அது போன்ற சந்தர்ப்பங்களில் மட்டும் கிப்லாவை முன்னோக்குவதோ பின்னோக்குவதோ குற்றமாகாது

Top Stories

Grid List

அனைவரும் ஒரே நாளில் ஏன் நோன்பை கொண்டாடுவதில்லை


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

கடந்த காலங்களில் எண்ணிக்கை தெரியாமல் விட்ட நோன்பை என்ன செய்வது?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் பதிலாக, விடுபட்ட ஒவ்வொரு நோன்பிற்கும் ஒரு ஏழைக்கு நான் உணவளிக்கிறேன். இஸ்லாத்தில் இது நோன்பிற்கு மாற்றாகக் கருதப்படுமா? விளக்கவும்."

-இலுப்பூர் சங்கரன்பந்தல் நஜ்முன்னிசா

பதில்

அதிகமான முஸ்லிம்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது: அதாவது ஒருவரால் நோய் காரணமாக நோன்பு நோற்க முடியாவிட்டால், விடுபட்ட ஒவ்வொரு நோன்பிற்கும் ஒரு ஏழைக்கு உணவளிப்பதன் மூலம் அதை ஈடு செய்யலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

பல முதியவர்கள் இந்த நம்பிக்கையைப் பின்பற்றி, பரிகாரமாக ஏழைகளுக்குத் தொடர்ந்து உணவளிக்கிறார்கள். செல்வந்தர்களும் இந்த முறையைப் பின்பற்றி, ஒரு மாதம் முழுதும் நோன்பு நோற்கவில்லை என்றால் முப்பது ஏழைகளுக்கு உணவளிக்கிறார்கள். நோன்பு நோற்க முடியாத முதியவர்கள் சார்பாக உணவை விநியோகிப்பதாகக் கூறி சில குழுக்கள் பணம் வசூலிப்பதாகவும் செய்திகள் உள்ளன.

ஆனால் இந்த நடைமுறை உண்மையில் இஸ்லாத்தில் இருக்கிறதா?

2:184 வசனத்தில் ஆரம்பத்தில், நோன்பு நோற்க வசதியுள்ளவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது: அவர்கள் நோன்பு நோற்கலாம் அல்லது அதற்குப் பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம்.

அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது

திருக்குர்ஆன் 2:184

 நோன்பு முதன் முதலில் கடமையாக்கப்பட்ட போது இந்த வசனம் அருளப்பட்டது, அப்போது நோன்பு நோற்பது கட்டாயமில்லை. ஒருவர் நோன்பும் நோற்கலாம் அல்லது ஒரு ஏழைக்கு உணவும் அளிக்கலாம்.

பின்னர், வசனம் 2:185 அருளப்பட்டு முந்தைய சட்டத்தை மாற்றியது. ரமலான் மாதத்தை அடையும் (ஆரோக்கியமான) அனைவரும் நோன்பு நோற்பதைக் கட்டாயமாக்கியது. முன்னதாக இருந்த அந்தத் தேர்வு (option) நீக்கப்பட்டது.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்

திருக்குர்ஆன் 2:185

صحيح البخاري

4507 – حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ يَزِيدَ، مَوْلَى سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، عَنْ سَلَمَةَ، قَالَ: " لَمَّا نَزَلَتْ: {وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ} [البقرة: 184]. «كَانَ مَنْ أَرَادَ أَنْ يُفْطِرَ وَيَفْتَدِيَ، حَتَّى نَزَلَتِ الآيَةُ الَّتِي بَعْدَهَا فَنَسَخَتْهَا» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «مَاتَ بُكَيْرٌ، قَبْلَ يَزِيدَ»

ஆரம்ப காலத்தில் நோன்பு நோற்க சக்தி பெற்றிருந்தவர்கள் சில சமயங்களில் அதற்குப் பதிலாக ஏழைகளுக்கு உணவளிப்பதைத் தேர்ந்தெடுத்தனர் என்று விளக்குகிறது. ஆனால் பிந்தைய வசனம் அருளப்பட்ட பிறகு, நோன்பு கட்டாயமாக்கப்பட்டது, நோன்பிற்குப் பதிலாக உணவளிக்கும் முறை நீக்கப்பட்டது

நூல் : புகாரி 4507

எனவே, நோன்பு நோற்க முடியாதவர்கள் அதற்குப் பரிகாரம் கொடுக்க வேண்டும் என்று குர்ஆன் கூறவில்லை. பரிகாரம் கொடுக்கும் முறை ஆரம்பத்தில் நோன்பு நோற்க சக்தி பெற்றவர்களுக்கு மட்டுமே இருந்தது.

ஒருவரால் நோய் அல்லது முதுமை காரணமாக நோன்பு நோற்கவே முடியாது என்றால், நோன்பு நோற்பது அவர் மீது கடமையே அல்ல. கடமை இல்லாத போது, அதற்குப் பரிகாரம் செய்வதும் கடமையில்லை.

உதாரணமாக, உடல் நலக் காரணங்களுக்காக அடிக்கடி சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒரு தீவிர நீரிழிவு நோயாளி நோன்பு நோற்க முடியாது. அத்தகையவர் நோன்பு நோற்கத் தேவையில்லை. அதற்குப் பரிகாரமும் தேவையில்லை. ஒருவரின் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயத்திற்காக அல்லாஹ் ﷻ அவரை கேள்வி கேட்க மாட்டான்.

முதியவர்கள் அல்லது நோயாளிகள் பரிகாரம் வழங்கலாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) ஒரு கருத்தைக் கூறியதாக சில அறிவிப்புகள் உள்ளன. இருப்பினும், இது அவரது தனிப்பட்ட விளக்கமே தவிர, குர்ஆன் வசனத்தால் நேரடியாக ஆதரிக்கப்படவில்லை.

குர்ஆன் அந்தச் சட்டம் மாற்றப்பட்டுவிட்டதை தெளிவாகக் கூறுகிறது, மேலும் நோன்பு நோற்க சக்தி பெற்றவர்களுக்கு மட்டுமே அது கடமை என்கிறது.

எனவே, நோன்பிற்கு மாற்றாக ஏழைகளுக்கு உணவளிப்பது ஒரு சரியான பரிகாரம் ஆகாது. உங்களால் முடிந்தால், நீங்கள் நோன்பு நோற்க வேண்டும். மருத்துவ ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ உங்களால் முடியாவிட்டால், நோன்பு அவசியமில்லை, பரிகாரமும் தேவையில்லை. ஒருவரால் நோன்பு நோற்க முடியுமா இல்லையா என்பதை அவரோ அல்லது ஒரு தகுதி வாய்ந்த மருத்துவரோ மட்டுமே தீர்மானிக்க முடியும்.

உங்களது மனசாட்சியும் மருத்துவ நிலையும் உங்களால் நோன்பு நோற்க முடியாது என்பதை உறுதிப்படுத்தினால், நீங்கள் நோன்பு நோற்கவோ அல்லது பரிகாரம் கொடுக்கவோ தேவையில்லை. உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட எதற்கும் அல்லாஹ் ﷻ உங்களைக் கேள்வி கேட்க மாட்டான்.

நோன்பிற்குப் பதிலாக உணவளிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்குச் சக்தி இருப்பதாக நீங்களே கருதுகிறீர்கள் என்று அர்த்தம், அப்படியானால் விலக்கு அளிக்கும் சட்டம் உங்களுக்குப் பொருந்தாது.

ரமலான் தொடர் உரை நேரம் பற்றிய அறிவிப்பு


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

தொடர் உதிரப்போக்குள்ள பெண்கள் எப்படி நோன்பு வைப்பது?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

துன்பம் அடக்குமுறை போன்றவற்றிற்கு நோன்பு வைத்து பாதுகாப்பு தேடலாமா?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

தொழுகையில் குர் ஆன் வசனங்களில் பகுதி ஓதலாமா?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

ஐந்து வேளைத் தொழுகைக்கு குர்ஆனில் ஆதாரம் உண்டா


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

தொழுகையில் அல்ஹம்துவுடன் பிஸ்மில்லா அவசியமா


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

லுஹா தொழுகைக்கு முடிவு நேரம் என்ன?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

இஷா தொழுகையில் ஐந்து ரக்கஅத் தொழுதார்கள் இது ஏன்?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

ஐந்து வேளை தொழுகை குர்ஆனில் உண்டா?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

90 - சமுதாயப்பணி செய்வோருக்கு ஜகாத்தில் முன்னுரிமை

 89 - ஜகாத்தை ரமலான் மாதம் கொடுப்பதற்கு சிறப்பு உண்டா

87 - எட்டு வகைகளில் ஜகாத் செலவிடப்பட வேண்டும்

86 - சொந்த செலவுகளைக் கழித்து விட்டு ஜகாத் கொடுக்கலாமா?

85 - ஜகாத் வாங்குவது சுயமரியாதைக்கு இழுக்கா?

84 - ஜகாத் பணத்தில் கிணறு வெட்டி கொடுக்கலாமா?