Sidebar

18
Thu, Jun
சமீபத்திய செய்திகள்

சவூதியின் கொரோனா வைரஸ்கள்

கிப்லா கஅபா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்த மூடர்களை என்ன செய்யலாம்?

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை விட்டு சிறிது சிறிதாக விலகிச் செல்லும் சவூதி ஆட்சியாளர்கள் கொரோனா வைரஸுக்குப் பயந்து மார்க்கத்தில் விளையாடி வருகின்றனர்.

புனித கஅபா ஆலயத்துக்கு வரலாற்றில் இது வரை இல்லாத கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

தற்போது சவூதி அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பைக் காணுங்கள்.

corona

கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கீழ்க்கண்டவற்றைப் பேணவும் என்ற முன்னுரையுடன் வெளியிட்ட அறிவிப்புகளைக் காணுங்கள்!

1- ஐந்து வேளைத் தொழுகைகளிலும் பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை பத்து நிமிடம் என்ற அளவில் குறைத்துக் கொள்ளவும்.

2- வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையில் தொழுகைக்கும் ஜும்மா உரைக்கும் சேர்த்து பதினைந்து நிமிடங்களுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவும்.

3- ரமலானிலும் இதர மாதங்களிலும் நோன்பு துறக்கும் ஏற்பாடுகள் அனைத்தையும் நிறுத்தவும்.

4- எல்லா பள்ளிவாசல்களிலும் இஃதிகாப் இருப்பதைத் தடை செய்யவும்.

5- பேரீச்சம்பழம் உள்ளிட்ட அனைத்து உணவுகளையும் பள்ளிவாசலில் இருந்து அப்புறப்படுத்தவும்.

6- பயன்படுத்தப்பட்ட குடினீர் கோப்பைகளை அகற்றவும்

இப்படி அறிவித்துள்ளனர்.

மேலும் உம்ரா விசாவையும் ரத்து செய்து கஅபா ஆலயத்தை வெறிச்சோட வைத்துள்ளனர்.

கஅபா ஆலயத்துக்கு மாஸ்க் போடாதது மட்டும் தான் இவர்கள் செய்யாமல் விட்டது.

கொரோனா வைரஸை விட சவூதி ஆட்சியாளர்கள் இஸ்லாத்துக்கு மிகப்பெரிய வைரஸ்களாக ஆகியுள்ளனர் என்பது இந்த அறிவிப்பில் இருந்து தெரிகின்றது.

صحيح البخاري 3473

حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، وَعَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَهُ يَسْأَلُ أُسَامَةَ بْنَ زَيْدٍ، مَاذَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الطَّاعُونِ؟ فَقَالَ أُسَامَةُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الطَّاعُونُ رِجْسٌ أُرْسِلَ عَلَى طَائِفَةٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ، أَوْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ، فَإِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ، فَلاَ تَقْدَمُوا عَلَيْهِ، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ، وَأَنْتُمْ بِهَا فَلاَ تَخْرُجُوا، فِرَارًا مِنْهُ» قَالَ أَبُو النَّضْرِ: «لاَ يُخْرِجْكُمْ إِلَّا فِرَارًا مِنْهُ»

ஓர் ஊரில் பிளேக் நோய் இருப்பதைக் கேள்விப்பட்டால் அவ்வூரை நோக்கிச் செல்லாதீர்கள். நீங்கள் வாழும் ஊரில் பிளேக் நோய் ஏற்பட்டால் ஊரை விட்டு ஓட்டம் பிடிக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)

நூல்: புகாரி 3473, 5728, 6974

صحيح البخاري 3474

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الفُرَاتِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الطَّاعُونِ، فَأَخْبَرَنِي «أَنَّهُ عَذَابٌ يَبْعَثُهُ اللَّهُ عَلَى مَنْ يَشَاءُ، وَأَنَّ اللَّهَ جَعَلَهُ رَحْمَةً لِلْمُؤْمِنِينَ، لَيْسَ مِنْ أَحَدٍ يَقَعُ الطَّاعُونُ، فَيَمْكُثُ فِي بَلَدِهِ صَابِرًا مُحْتَسِبًا، يَعْلَمُ أَنَّهُ لاَ يُصِيبُهُ إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَهُ، إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ شَهِيدٍ»

பிளேக் நோய் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் தான் நாடியவர்களைத் தண்டிப்பதற்காக அல்லாஹ் அனுப்பும் வேதனை தான் அது என்று கூறிவிட்டு இறை நம்பிக்கையாளருக்கு அல்லாஹ் அதை அருளாக ஆக்கியுள்ளான். ஒருவர் வசிக்கும் ஊரில் பிளேக் நோய் ஏற்பட்டு, அல்லாஹ் நாடியதைத் தவிர வேறு எதுவும் நமக்கு ஏற்படாது என்று நம்பி சகித்துக் கொண்டும் நன்மையை எதிர்பார்த்தும் தங்கி விட்டால் அவருக்கு ஷஹீத் - உயிர்த் தியாகி - உடைய கூலி கிடைக்காமல் இருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 3474, 5734, 6619

கொள்ளை நோய்கள் குறித்த இஸ்லாமியப் பார்வை என்ன என்பது இந்த நபிமொழிகளில் இருந்து தெளிவாகத் தெரிகின்றது.

ஒரு ஊரில் கொள்ளை நோய் ஏற்பட்டால் அவ்வூருக்கு நாம் போகக் கூடாது என்ற அளவுக்குத் தான் நமது முன்னெச்சரிக்கை நடவடிக்கை இருக்க வேண்டும்.

கொள்ளை நோய்க்குப் பயந்து அவ்வூரை விட்டு ஓட்டம் எடுக்கும் அளவுக்கு நமது முன் எச்சரிக்கை நடவடிக்கை இருக்கக் கூடாது என்று அற்புதமான வழிகாட்டலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்து விட்டார்கள்.

கொள்ளை நோய் ஏற்பட்ட ஊரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறரது உதவிகள் அதிகம் தேவைப்படும். நாம் ஊரை விட்டு ஓட்டம் பிடித்தால் மனிதர்களுக்குச் செய்யும் கடமையில் இருந்து நாம் தவறியவர்களாக மனிதாபிமானம் அற்றவர்களாக ஆகி விடுவோம்.

மேலும் நோய் இல்லாத ஊர்களுக்கு அதைப் பரப்பியவர்களாகவும் ஆகி விடுவோம்.

இதைக் கவனத்தில் கொண்டு அழகான வழிகாட்டலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தந்துள்ளனர்.

அல்லாஹ் நாடினால் தான் எதுவும் நிகழும் என்ற மன உறுதியுடன் அவ்வூரிலேயே இருந்து மக்கள் தொண்டு ஆற்ற வேண்டும். உயிருக்குப் பயந்து ஓடும் கோழைகளாக ஆகக் கூடாது என்ற இந்த வழிகாட்டலை சவூதி அரசு அப்பட்டமாக மீறியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் மக்காவுக்கு வர வேண்டாம் அல்லது எங்கள் நாட்டுக்கு வர வேண்டாம் என்று சவூதி அறிவிக்கலாம். இதற்கு உரிமை உள்ளது.

இதற்கு கடும் சட்டம் எதுவும் போடத் தேவையில்லை. நபிகள் நாயகம் (ஸல்) இப்படித் தான் வழிகாட்டியுள்ளனர் என்று அறிவித்தாலே கொரோனாவால் பாதிக்கப்பட்ட எந்த முஸ்லிமும் மக்காவுக்கு வர மாட்டான்.

கொரோனா வந்து விடும் என்று அளவுக்கு அதிகமாக அஞ்சி ஒருவரும் வரக் கூடாது என்று தடுக்க இவர்களுக்கு மார்க்கம் அனுமதி அளித்துள்ளதா?

மேலும் உள்ளூர் மக்கள் கூட சில நிமிடங்களுக்குள் தொழுது விட்டு ஓடி விட வேண்டும் என்று கட்டளையிடுகிறார்கள் இவர்களிடம் இறை நம்பிக்கை உள்ளதா?

பதினைந்து நிமிடங்கள் அளவுக்கு மக்களுடன் கல்ந்தால் கொரோனா பாதிக்காது; அதை விட அதிகமான நேரம் மக்களுடன் கலந்தால் தான் கொரோனா பரவும் என்று இவர்களுக்கு சொல்லிக் கொடுத்த அடி முட்டாள் யார்?

பரவ வேண்டும் என்று இருந்தால் ஒரு வினாடி போதாதா?

மக்காவில் கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை எனும் போது இந்த அறிவிப்பு செய்கிறார்கள் என்றால் இவர்களை விட அறிவீனர் யாரும் இருக்க முடியாது.

ஒரு வேளை கொரோனாவால் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களைச் அந்தித்து ஆறுதல் கூறுவதும், தேவையான உதவிகள் செய்வதும் மார்க்கக் கடமையாகும். வருவது வரட்டும் என்ற துணிவோடு இதை எதிர் கொள்ள வேண்டும்.

மேலும் நபிகள் நாயகத்தின் இந்த எச்சரிக்கையைப் பாருங்கள்!

868 حَدَّثَنَا أَبُو عَمَّارٍ ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ ، قَالَا : حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنْ أَبِي الزُّبَيْرِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَاهُ ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : يَا بَنِي عَبْدِ مَنَافٍ، لَا تَمْنَعُوا أَحَدًا طَافَ بِهَذَا الْبَيْتِ، وَصَلَّى أَيَّةَ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ. وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ، وَأَبِي ذَرٍّ. حَدِيثُ جُبَيْرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

(கஅபாவின் நிர்வாகிகளான) அப்து முனாபின் சந்த்திகளே! இந்த ஆலயத்தில் இரவிலும் பகலிலும் எந்த நேரத்திலும் தொழுபவரையும், தவாப் செய்பவரையும் தடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : திர்மிதி

கஅபாவை நிர்வகிக்கும் சவூதி மன்னருக்கும் அவருக்கு ஜால்ரா அடிக்கும் போலி அறிஞர்களுக்கும் தொழுகையைத் தடுக்க அதிகாரம் அளித்தது யார்?

இதனால் உயிர் போகும் என்றால் அல்லாஹ்வின் அந்த நாட்டத்தை ஏற்பதற்கு முஸ்லிம் சமுதாயம் தயாராக இருக்கும் போது அதைத் தடுக்கும் முடிவை இவர்கள் எடுத்துள்ளனர்.

இஸ்லாம் மார்க்கத்துக்கு தவறான வடிவம் கொடுத்து இஸ்லாத்தை இந்த நாசகார ஆட்சியாளர்கள் கேவலப்படுத்தப் பார்க்கின்றனர்.

கஅபாவின் பல்லாயிரம் ஆண்டு வரலாற்றில் கஅபாவில் தொழுவதற்குத் தடை செய்யப்படவில்லை; கஅபாவை நெருங்க முடியாமல் தடுப்பு ஏற்படுத்தப்பட்டதில்லை. வரலாற்றில் இந்த மடமையை சவூதி ஆட்சியாளர்கள் செய்துள்ளனர்.

இறைவா உனது ஆலயத்தை நிர்வகிக்கும் பயந்தாங்கொள்ளிகளிடம் இருந்து கஅபா ஆலயத்தை மீட்டு தகுதியானவர்கள் கையில் ஒப்படைப்பாயாக என நாம் அல்லாஹ்வை இறைஞ்சுவோம்.

Top Stories

Grid List

அனைவரும் ஒரே நாளில் ஏன் நோன்பை கொண்டாடுவதில்லை


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

கடந்த காலங்களில் எண்ணிக்கை தெரியாமல் விட்ட நோன்பை என்ன செய்வது?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் பதிலாக, விடுபட்ட ஒவ்வொரு நோன்பிற்கும் ஒரு ஏழைக்கு நான் உணவளிக்கிறேன். இஸ்லாத்தில் இது நோன்பிற்கு மாற்றாகக் கருதப்படுமா? விளக்கவும்."

-இலுப்பூர் சங்கரன்பந்தல் நஜ்முன்னிசா

பதில்

அதிகமான முஸ்லிம்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது: அதாவது ஒருவரால் நோய் காரணமாக நோன்பு நோற்க முடியாவிட்டால், விடுபட்ட ஒவ்வொரு நோன்பிற்கும் ஒரு ஏழைக்கு உணவளிப்பதன் மூலம் அதை ஈடு செய்யலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

பல முதியவர்கள் இந்த நம்பிக்கையைப் பின்பற்றி, பரிகாரமாக ஏழைகளுக்குத் தொடர்ந்து உணவளிக்கிறார்கள். செல்வந்தர்களும் இந்த முறையைப் பின்பற்றி, ஒரு மாதம் முழுதும் நோன்பு நோற்கவில்லை என்றால் முப்பது ஏழைகளுக்கு உணவளிக்கிறார்கள். நோன்பு நோற்க முடியாத முதியவர்கள் சார்பாக உணவை விநியோகிப்பதாகக் கூறி சில குழுக்கள் பணம் வசூலிப்பதாகவும் செய்திகள் உள்ளன.

ஆனால் இந்த நடைமுறை உண்மையில் இஸ்லாத்தில் இருக்கிறதா?

2:184 வசனத்தில் ஆரம்பத்தில், நோன்பு நோற்க வசதியுள்ளவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது: அவர்கள் நோன்பு நோற்கலாம் அல்லது அதற்குப் பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம்.

அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது

திருக்குர்ஆன் 2:184

 நோன்பு முதன் முதலில் கடமையாக்கப்பட்ட போது இந்த வசனம் அருளப்பட்டது, அப்போது நோன்பு நோற்பது கட்டாயமில்லை. ஒருவர் நோன்பும் நோற்கலாம் அல்லது ஒரு ஏழைக்கு உணவும் அளிக்கலாம்.

பின்னர், வசனம் 2:185 அருளப்பட்டு முந்தைய சட்டத்தை மாற்றியது. ரமலான் மாதத்தை அடையும் (ஆரோக்கியமான) அனைவரும் நோன்பு நோற்பதைக் கட்டாயமாக்கியது. முன்னதாக இருந்த அந்தத் தேர்வு (option) நீக்கப்பட்டது.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்

திருக்குர்ஆன் 2:185

صحيح البخاري

4507 – حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ يَزِيدَ، مَوْلَى سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، عَنْ سَلَمَةَ، قَالَ: " لَمَّا نَزَلَتْ: {وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ} [البقرة: 184]. «كَانَ مَنْ أَرَادَ أَنْ يُفْطِرَ وَيَفْتَدِيَ، حَتَّى نَزَلَتِ الآيَةُ الَّتِي بَعْدَهَا فَنَسَخَتْهَا» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «مَاتَ بُكَيْرٌ، قَبْلَ يَزِيدَ»

ஆரம்ப காலத்தில் நோன்பு நோற்க சக்தி பெற்றிருந்தவர்கள் சில சமயங்களில் அதற்குப் பதிலாக ஏழைகளுக்கு உணவளிப்பதைத் தேர்ந்தெடுத்தனர் என்று விளக்குகிறது. ஆனால் பிந்தைய வசனம் அருளப்பட்ட பிறகு, நோன்பு கட்டாயமாக்கப்பட்டது, நோன்பிற்குப் பதிலாக உணவளிக்கும் முறை நீக்கப்பட்டது

நூல் : புகாரி 4507

எனவே, நோன்பு நோற்க முடியாதவர்கள் அதற்குப் பரிகாரம் கொடுக்க வேண்டும் என்று குர்ஆன் கூறவில்லை. பரிகாரம் கொடுக்கும் முறை ஆரம்பத்தில் நோன்பு நோற்க சக்தி பெற்றவர்களுக்கு மட்டுமே இருந்தது.

ஒருவரால் நோய் அல்லது முதுமை காரணமாக நோன்பு நோற்கவே முடியாது என்றால், நோன்பு நோற்பது அவர் மீது கடமையே அல்ல. கடமை இல்லாத போது, அதற்குப் பரிகாரம் செய்வதும் கடமையில்லை.

உதாரணமாக, உடல் நலக் காரணங்களுக்காக அடிக்கடி சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒரு தீவிர நீரிழிவு நோயாளி நோன்பு நோற்க முடியாது. அத்தகையவர் நோன்பு நோற்கத் தேவையில்லை. அதற்குப் பரிகாரமும் தேவையில்லை. ஒருவரின் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயத்திற்காக அல்லாஹ் ﷻ அவரை கேள்வி கேட்க மாட்டான்.

முதியவர்கள் அல்லது நோயாளிகள் பரிகாரம் வழங்கலாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) ஒரு கருத்தைக் கூறியதாக சில அறிவிப்புகள் உள்ளன. இருப்பினும், இது அவரது தனிப்பட்ட விளக்கமே தவிர, குர்ஆன் வசனத்தால் நேரடியாக ஆதரிக்கப்படவில்லை.

குர்ஆன் அந்தச் சட்டம் மாற்றப்பட்டுவிட்டதை தெளிவாகக் கூறுகிறது, மேலும் நோன்பு நோற்க சக்தி பெற்றவர்களுக்கு மட்டுமே அது கடமை என்கிறது.

எனவே, நோன்பிற்கு மாற்றாக ஏழைகளுக்கு உணவளிப்பது ஒரு சரியான பரிகாரம் ஆகாது. உங்களால் முடிந்தால், நீங்கள் நோன்பு நோற்க வேண்டும். மருத்துவ ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ உங்களால் முடியாவிட்டால், நோன்பு அவசியமில்லை, பரிகாரமும் தேவையில்லை. ஒருவரால் நோன்பு நோற்க முடியுமா இல்லையா என்பதை அவரோ அல்லது ஒரு தகுதி வாய்ந்த மருத்துவரோ மட்டுமே தீர்மானிக்க முடியும்.

உங்களது மனசாட்சியும் மருத்துவ நிலையும் உங்களால் நோன்பு நோற்க முடியாது என்பதை உறுதிப்படுத்தினால், நீங்கள் நோன்பு நோற்கவோ அல்லது பரிகாரம் கொடுக்கவோ தேவையில்லை. உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட எதற்கும் அல்லாஹ் ﷻ உங்களைக் கேள்வி கேட்க மாட்டான்.

நோன்பிற்குப் பதிலாக உணவளிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்குச் சக்தி இருப்பதாக நீங்களே கருதுகிறீர்கள் என்று அர்த்தம், அப்படியானால் விலக்கு அளிக்கும் சட்டம் உங்களுக்குப் பொருந்தாது.

ரமலான் தொடர் உரை நேரம் பற்றிய அறிவிப்பு


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

தொடர் உதிரப்போக்குள்ள பெண்கள் எப்படி நோன்பு வைப்பது?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

துன்பம் அடக்குமுறை போன்றவற்றிற்கு நோன்பு வைத்து பாதுகாப்பு தேடலாமா?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

தொழுகையில் குர் ஆன் வசனங்களில் பகுதி ஓதலாமா?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

ஐந்து வேளைத் தொழுகைக்கு குர்ஆனில் ஆதாரம் உண்டா


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

தொழுகையில் அல்ஹம்துவுடன் பிஸ்மில்லா அவசியமா


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

லுஹா தொழுகைக்கு முடிவு நேரம் என்ன?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

இஷா தொழுகையில் ஐந்து ரக்கஅத் தொழுதார்கள் இது ஏன்?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

ஐந்து வேளை தொழுகை குர்ஆனில் உண்டா?


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

90 - சமுதாயப்பணி செய்வோருக்கு ஜகாத்தில் முன்னுரிமை

 89 - ஜகாத்தை ரமலான் மாதம் கொடுப்பதற்கு சிறப்பு உண்டா

87 - எட்டு வகைகளில் ஜகாத் செலவிடப்பட வேண்டும்

86 - சொந்த செலவுகளைக் கழித்து விட்டு ஜகாத் கொடுக்கலாமா?

85 - ஜகாத் வாங்குவது சுயமரியாதைக்கு இழுக்கா?

84 - ஜகாத் பணத்தில் கிணறு வெட்டி கொடுக்கலாமா?