Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

மனிதனால் குர்ஆனை சுமக்க முடியும் என்றால் மலையால் ஏன் சுமக்க முடியாது?

தஃப்சீர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மனிதனால் குர்ஆனை சுமக்க முடியும் என்றால் மலையால் ஏன் சுமக்க முடியாது?

? இறைவன் குர்ஆனை இறக்கும் போது, மலையின் மீது இறக்குகின்றேன் என்று கேட்க, என் மீது குர்ஆனை இறக்கினால் வெடித்துச் சிதறி விடுவேன் என்று மலை கூறியதால் மனிதன் மீது இறக்கியதாக இறைவன் கூறுகின்றான். அதிகமாக குற்றம் புரியும் மனிதன் குர்ஆனைச் சுமக்கும் போது, எந்தத் தப்பும் செய்யாத மலையினால் ஏன் தாங்க முடியாது?

டி. திவான் பஜிரா, பெரிய குளம்.

குர்ஆனை மலையின் மீது இறக்குவதாக இறைவன் அனுமதி கேட்டதாகவும், அதற்கு மலை மறுத்ததாகவும் நீங்கள் கூறுவதற்கு குர்ஆன் ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை.

இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து நொறுங்கி விடுவதைக் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம்.

திருக்குர்ஆன் 59:21

இந்த வசனத்தை அடிப்படையாக வைத்து இவ்வாறு நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் இந்த வசனத்தில் தாங்கள் கூறுவது போன்ற கருத்து இடம் பெறவில்லை.

குர்ஆனில் இடம் பெற்றுள்ள அறிவுரைகள், செய்திகள் ஆகியவற்றின் காரணமாக மலை கூட இறையச்சத்தால் பணிந்து விடும், ஆனால் மனிதன் இந்தக் குர்ஆனைச் சிந்திக்காமல் இருக்கின்றான் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் உதாரணம் கூறுகின்றான்.

இது மனிதர்கள் சிந்திப்பதற்காக அல்லாஹ் கூறுகின்ற உதாரணம் தான் என்று இவ்வசனத்திலேயே இடம் பெற்றுள்ளதைக் கவனிக்கவும்.

அமானிதம் பற்றித்தான் நீங்கள் கூறியது போன்ற கருத்தில் வசனம் உள்ளது. அது குறித்த விளக்கத்தைக் காண மனிதன் சுமந்த அமானிதம் எது?

22.12.2014. 18:53 PM