Sidebar

29
Wed, Jul

வழிகேடுகளை விட்டு வெளியேறுங்கள்

இஸ்மாயீல் ஸலபிக்கு, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் அன்பான அழைப்பு

இஸ்மாயீல் ஸலபி என்பவர் எழுதிய பீ.ஜெ யின் கருத்துக்களை மீளாய்வு செய்யுங்கள்’ என்ற தலைப்பிலான ஓர் ஆக்கம் சமூக தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. குறித்த ஆக்கம் பீ.ஜெ அவர்கள் பேச்சிலும், எழுத்திலும் செய்து வரும் கொள்கை பிரச்சாரம் பற்றிய விமர்சனங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

பீ.ஜெ அவர்கள் மொழி பெயர்த்த திருமறைக் குர்ஆன் தமிழாக்கத்தின் சில செய்திகளைக் குறிப்பிட்டு அவை தவறான மொழிபெயர்ப்புகள், தவறான விளக்கவுரைகள் என்று எழுதியுள்ளார் இஸ்மாயீல் ஸலபி அவர்கள்.

இந்த குறித்த ஆக்கத்தில் பீ.ஜெ அவர்கள் பரப்புரை செய்யும் கொள்கைகளைப் பற்றியும் அவருடைய மொழிபெயர்ப்பு பற்றியும் எழுத வந்தவர் சிங்களத்தில் வெளியிடப்பட்ட திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பையும் இணைத்தே தனது வாதங்களை முன்வைத்துள்ளார்.

பீ.ஜெ அவர்கள் மொழி பெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் சிங்கள மொழியாக்கம் தொடர்பாகவும் இஸ்மாயீல் ஸலபி அவர்கள் பேசியிருப்பதினாலும், கொள்கையை மீளாய்வு செய்யுங்கள் என்று பொது வெளியில் கோரிக்கை வைத்திருப்பதினாலும் அவருடைய ஆக்கத்திற்கு வரிக்கு வரி பதில் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதினால் இந்த பதில் ஆக்கம் வெளியிடப்படுகிறது.

அத்துடன், இஸ்மாயீல் ஸலபி அவர்கள் இது போன்ற விமர்சனங்களை முன்வைப்பது இது முதல் தடவையல்ல. இதற்கு முன்பும் பல தடவைகள் இது போன்ற விமர்சனங்களை இவர் முன்வைத்து எழுதியும், பேசியுமுள்ளார்.

இவர் எழுதும் போதும், பேசும் போம் நாம் கொடுக்கும் பதிலடிகளினால் வாய்மூடி மௌனித்து சில காலம் காணாமல் போய் விட்டு மீண்டும் வந்து அதே செய்திகளை புதிதாக சொல்வதைப் போல் சொல்வதையே வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த காலங்களில் சகோதரர் இஸ்மாயீல் ஸலபி அவர்கள் ஏகத்துவக் கொள்கையை நோக்கி எந்த விமர்சனங்களை முன் வைத்தாரோ அதே விமர்சனங்களையே தற்போதும் முன்வைக்கிறார்.

இருப்பினும் அவற்றுக்கு மீண்டும் மீண்டும் உரிய பதில் கொடுப்பது எம் மீது கடமை என்ற வகையில் மறுப்புரை வழங்கப்படுகிறது.

பீ.ஜெ என்ற தனி மனிதரைப் பற்றிய செய்திகளாக இல்லாமல் கொள்கை சார்ந்த பிரச்சினையாக இஸ்மாயீல் ஸலபியின் ஆக்கம் அமைந்திருப்பதினாலும், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச் செயலாளர் மொழிபெயர்த்த சிங்கள மொழிபெயர்பை சுட்டிக்காட்டி விமர்சனங்களை எழுப்பியுள்ளதினாலும் அதற்குரிய பதில்களை தர வேண்டிய கடமை எமக்கிருக்கிறது.

சத்தியத்தை நிரூபிக்கும் விவாதக் களத்திற்கு வாருங்கள்.

தான் இருக்கும் வழிதவறிய கொள்கையை சரியானது என்று இஸ்மாயீல் ஸலபி அவர்கள் வாதிட்டு வருகிறார். இஸ்மாயீல் ஸலபி கொண்டுள்ள கொள்கை வழிகேடானது என்பதுடன், நாம் கொண்டுள்ள ஏகத்துவக் கொள்ளை மாத்திரம் தான் நேர்வழியானது என்பதில் எமக்கு எவ்வித சந்தேகமும் இல்லாத அளவு தெளிவாகவும் இருக்கிறோம்.

இந்த நிலையில் சகோதரர் இஸ்மாயில் ஸலபி அவர்கள் எம்முடன் பகிரங்க விவாதம் ஒன்றில் பங்கேற்று தான் கொண்ட கொள்கை தான் சரியானது என்பதையும், எமது கொள்கை தவறானது என்றால் அது தவறானது என்பதையும் தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளார்.

நாம் கொண்டுள்ள கொள்கை மிகச் சரியானது என்பதையும், நாம் வெளியிட்ட சிங்கள மொழி மூலமான திருமறைக் குர்ஆன் மொழிபெயர்ப்பு சரியானது என்பதையும் இதே நேரம் ஜமாஅத் அன்சார் சுன்னத்தில் முஹம்மதிய்யா (JASM) என்ற இஸ்மாயீல் ஸலபி அங்கம் வகிக்கும் அமைப்பு வெளியிட்ட தமிழ், சிங்கள மொழியாக்கங்களில் உள்ள மொழிபெயர்ப்பு பிழைகள், கருத்துப்பிழைகள் மற்றும் விளக்கவுரை என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள வழிகெட்ட கொள்கைகள் அனைத்தையும் பகிரங்க விவாதக் களத்தில் மிக அழகிய முறையில் எடுத்து வைத்து சத்தியத்தை நிரூபிக்க நாம் எப்போதும் தயார் என்பதை தெரிவித்து, சகோதரர் இஸ்மாயீல் ஸலபியை  பகிரங்க விவாதத்திற்கு முதலில் அழைப்பு விடுக்கிறோம்.

இதுவரை காலமும் நாம் விவாதத்திற்கு அழைக்கும் போதெல்லாம் எம்மை பீ.ஜெ வின் ஆட்களாகவும், டி.என்.டி.ஜெ வின் ஆட்கள் என்றும் கூறியும், இன்னும் பல வலுவற்ற சாக்குப் போக்குகளையும் கூறி விவாதத்திலிருந்து தப்பிச் சென்றீர்கள். அந்த வாதங்கள் அணுவளவும் பொருத்தமானதாக இல்லாவிட்டாலும் இப்போது அதனைக் கூறிக்கூட விவாத்திலிருந்து உங்களால் தவிர்ந்து கொள்ள முடியாது. ஏனெனில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய எமக்கு பின்னால் இப்போது பீ.ஜெ வும் இல்லை, டி.என்.டி.ஜெ வும் இல்லை. நாம் இலங்கை உலமாக்களை மட்டும் கொண்ட ஓர் அமைப்பாகவே செயல்பட்டு வருகிறோம். ஆகவே இப்போதாவது எம்முடன் பகிரங்க விவாதத்தில் கலந்து கொண்டு நீங்கள் சத்தியத்தில் இருந்தால், நீங்கள் இருக்கும் கொள்கை சத்தியமானது என்பதை நிரூபிக்குமாறு அன்பாய்  அழைப்பு விடுக்கிறோம்.

மறுப்புரை

இப்போது இஸ்மாயீல் ஸலபியின் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள செய்திகளுக்குரிய வரிக்கு வரி பதிலை பார்போம்.

திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் உள்ள பிழைகள் என்று இஸ்மாயீல் ஸலபி பட்டியலிட்டுள்ள செய்திகளை ஒவ்வொன்றாக அலசுவோம்.

குர்ஆன் மொழிபெயர்ப்பில் உள்ள பிழைகள் என்ற தலைப்பில் இஸ்மாயீல் ஸலபி இவ்வாறுஎழுதுகிறார்.

ஸலபியின் விமர்சனம் – 01

  1. அல்லாஹ் கற்றுத் தந்த ஒழுக்கங்களை மீறுவது:

அல்குர்ஆனில் பல நபிமார்களைப் பெயர் கூறி விழித்து அல்லாஹ் பேசியுள்ளான். ஆனால் நபி(வ) அவர்களை அல்லாஹ் முஹம்மதே! என விழித்துப் பேசியதில்லை.

ஆதமே! (2:33-35) - நூஹே! (11:46) - இப்றாஹீமே! (37:104) - முஸாவே! (7:144) - ஈஸாவே (3:55)… இவ்வாறு பேசும் அல்லாஹ் முஹம்மதே! என எங்கும் விழித்துப் பேசவில்லை. யா அய்யுஹன் நபி! (நபியே!) (8:64-65இ 70)- (9:73)- (33:1- 28- 45-50- 58) என்று மிக கண்ணியமாகவே அழைக்கின்றான். இந்த அடிப்படையில் குர்ஆன் மொழிபெயர்ப்பு செய்தவர்கள் நபியை விழித்துப் பேசும் இடங்களில் அடைப்புக் குறிக்குள் (நபியே!) எனப் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஆனால் இவர் அல்லாஹ் காட்டித் தந்த இந்த ஒழுங்கையும் கண்ணியத்தையும் பேணும் வழியைப் புறக்கணித்து (முஹம்மதே!) எனப் போடுவதை வழக்கமாக்கியுள்ளார்.

உதாரணம்:

ஏனைய தர்ஜுமாக்கள்: ‘அல்லாஹ் ஒருவன் என (நபியே) நீர் கூறுவீராக!” (111:01)

பீ.ஜே. தர்ஜுமா: ‘அல்லாஹ் ஒருவன் என (முஹம்மதே) நீர் கூறுவீராக!”

அல்லாஹ் முஹம்மதே என குர்ஆனில் எங்குமே விழித்துப் பேசாது, நபிக்குத் தனியான ஒரு அந்தஸ்தை வழங்கியிருக்க அதைத் தகர்க்கும் விதத்தில் இவர் செயற்பட்டுள்ளதுடன் அதை நியாயப்படுத்தியும் வருகின்றார்.

நமது பதில்:

குர்ஆன் மொழியாக்கத்தில் உள்ள பிழைகள் என்று எழுத ஆரம்பித்த இஸ்மாயீல் ஸலபி அவர்கள் முதலாவதாக மேற்கண்ட விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இஸ்மாயீல் ஸலபி அவர்கள் முன்வைத்த விமர்சனத்திற்கு உரிய பதில் நாம் வெளியிட்டுள்ள குர்ஆன் மொழிபெயர்ப்பிலேயே மிகத் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. நமது பதிலை கிஞ்சிற்றும் கணக்கில் கொள்ளாமல், தான் காலா காலம் முன்வைத்து வரும் வாதத்தை மட்டுமே மீண்டும் குறிப்பிட்டு கட்டுரை எழுதியுள்ளார் இஸ்மாயீல் ஸலபி.

இம்மொழிபெயர்ப்பு பற்றி என்ற தலைப்பில் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் நாம் வெளியிட்டுள்ள விளக்கத்தை பாருங்கள்.

முன்னிலையாகப் பேசும் சில வசனங்களில் முஹம்மதே என்று நாம் அடைப்புக்குறிக்குள் பயன்படுத்தியுள்ளோம். கட்டளைச் சொல்லாக திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளவை பெரும்பாலும் பொதுவானவை தான். அவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரியவை அல்ல. என்றாலும் சில கட்டளைச் சொற்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மட்டும் குறிப்பவையாக உள்ளன. அது போன்ற வசனங்களில் அடைப்புக் குறிக்குள் முஹம்மதே என்று குறிப்பிட்டுள்ளோம்.

‘முஹம்மதே’ என்று மரியாதைக் குறைவாகக் குறிப்பிடலாமா? என சிலர் கருதலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ‘முஹம்மதே’ என்று நாம் அழைத்தால் அது மரியாதைக் குறைவாகும். அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ் அவ்வாறு அழைப்பது மரியாதைக்குறைவாகாது. இறைவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கிக் கூறுவதைப் போன்று அமைந்த வசனங்களுக்கு மட்டுமே நாம் ‘முஹம்மதே’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளோம். இதில் எந்த மரியாதைக் குறைவும் இல்லை.

இவ்வாறு நமது மொழிபெயர்ப்பில் முன்னரே விளக்கியுள்ளோம்.

இஸ்மாயீல் ஸலபி இப்படி விமர்சிக்கும் முன்னர் அரபு மொழியில் எழுதப்பட்ட தப்ஸீர்களை எடுத்துப் பார்த்து இருந்தால் இப்படி எழுத துனிய மாட்டார்.

கஷ்ஷாப், தப்ஸீர் கபீர், நைஸாபூரி, இப்னு அபீ ஹாத்தம், பைலாவீ, ஜலாலைன், தப்ஸீர் சம்ஆனி, தப்ஸீர் பகவி உள்ளிட்ட எல்லா தப்ஸீர்களிலும் நபிகள் நாயகத்தைக் குறிக்கும் வசனங்களை விளக்கும் போது யா முஹம்மத் - முஹம்மதே - என்று பல நூறு இடங்களில் குறிப்பிட்டு உள்ளனர்.

இவை எல்லாம் எங்கள் ஸலபுகள் அங்கிகரிக்கும் தப்ஸீர்கள் அல்ல என்று இஸ்மாயீல் ஸலபி சமாளிக்க கூடும்.

சலபுகள் அங்கீகரித்த தப்ஸீர்களிலும் நபிகள் நாயகத்தை நோக்கிப் பேசும் வசனங்களுக்கு “யா முஹம்மத்” என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளனர்.

இப்னு அபீ ஹாத்தம் அவர்கள் தனது தப்ஸீரில் 116 தடவை யா முஹம்மத் என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்னு கஸீர் அவர்கள் 321 இடங்களில் யா முஹம்மத் என்று பயன்படுத்தி உள்ளார்.

தபரி அவர்கள் நபிகள் நாயகத்தை நோக்கிப் பேசும் வசனங்களுக்கு யா முஹம்மத் என்ற சொல்லை 1439 இடங்களில் பயன்படுத்தி உள்ளார்.

ஷவ்கானி அவர்கள் 244 இடங்களில் யா முஹம்மத் என்று பயன்படுத்தி உள்ளார்.

குர்துபி அவர்கள் 284 இடங்களில் பயன்படுத்தி உள்ளார்.

சவூதியிலும் சலபுகள் மதரஸாக்களிலும் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ள சப்வது தபாசீர் என்ற நூலில் 500 க்கு மேற்பட்ட இடங்களில் யா முஹம்மத் என்று பயன் படுத்தி உள்ளார்.

இஸ்மாயீல் சலபி மதிக்கும் உஸைமீன் அவர்கள் தமது தப்ஸீரில் 22 தடவை பயன்படுத்தி உள்ளார்

இவர்களைப் பற்றியும் இவர்களின் தப்சீர் பற்றியும் இஸ்மாயீல் ஸலபி இதே கேள்விகளை எழுப்புவாரா?

மேலும் இஸ்லாத்தின் மூல ஆதாரம் குர் ஆன் மட்டுமல்ல. ஹதீஸ்களும் மூல ஆதாரங்களே! குர் ஆனில் முஹம்மதே என்று இல்லை என்பதால் அப்படி நாம் சொல்லக் கூடாது என்று கூறுவதன் மூலம் இவர் ஹதீஸ் மறுப்பாளராக ஆகி விடுகிறார்.

புகாரி உள்ளிட்ட ஹதீஸ் நூல்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஹம்மதே என்று அல்லாஹ் அழைப்பதாக ஹதீஸ்கள் உள்ளன. அது வஹீ அல்லவா? முஹம்மதே என்று அல்லாஹ் அழைக்கவில்லை என்று அல்லாஹ்வின் மீது இவர் இட்டுக்கட்டியுள்ளார்.

ஸலபி விமர்சனம் – 02

  1. குர்ஆனின் போக்கை மாற்றி பக்கம் குறைப்பதற்காக சில மொழி பெயர்ப்புக்களைத் தவிர்த்தல்:

அல்குர்ஆனில் சில விடயங்களை முக்கியத்துவப்படுத்தி அழுத்திக் கூறுவதற்காக ‘இன்ன”இ‘அன்ன” போன்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவர் அவற்றை மொழியாக்கம் செய்யாமல் தவிர்த்துள்ளார். தமிழ் நடைக்கு இது அழகன்று என்பதற்காக குர்ஆனின் நடையையும் அதன் கருத்தாழத்தையும் சிதைத்துள்ளார்.

உதாரணம்:

ஏனைய தர்ஜுமாக்கள்: ‘நிச்சயமாக உமது இரட்சகனின் பிடி மிகக் கடினமானது.”

பீ.ஜே. தர்ஜுமா: ‘உமது இரட்சகனின் பிடி கடுமையானது.”

இதில் தமிழ் நடைக்காகவும் சுருக்கத்திற்காகவும் அவர் விட்ட இடங்கள் குர்ஆனின்அழுத்தத்தையும் கடுமையையும் சிதைப்பதைக் காணலாம்.

நமது பதில்:

இதுவும் மேற்கண்ட விமர்சனத்தை போல் கடந்த காலத்திலேயே பதில் சொல்லப்பட்ட விமர்சனங்களில் ஒன்றாகும். இந்த இடத்திலும் நமது பதிலை கொஞ்சமும் கவனிக்காமல் வாதத்தை மாத்திரம் முன்வைத்து விட்டு சென்றுள்ளார்.

அரபு மொழியில் ஒரு கருத்தைச் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தெரிவிப்பதற்காக“இன்ன” அல்லது “அன்ன” என்ற இடைச் சொல்லைப் பயன்படுத்துவார்கள். “நிச்சயமாக” என்று சிலர் இதற்குத் தமிழாக்கம் செய்துள்ளனர். இது தமிழ் மொழிநடைக்கு தேவையற்றதாகும்.

அரபுமொழியில் ஒன்றை உறுதிப்படுத்திக் கூறுவதற்காக “இன்ன” “அன்ன” ஆகிய சொற்கள் மட்டுமின்றி இன்னும் பல சொற்களும் உள்ளன. “இன்ன” “அன்ன” என்ற சொற்கள் எப்படி உறுதிப்படுத்திக் கூறுவதற்காக உள்ளனவோ அதே பொருளைத் தான் அந்தச் சொற்களும் தரும். இது போன்ற சொற்கள் தஃகீத் சொற்கள் என்று சொல்லப்படுகிறது. ஒரு வாக்கியத்தில் ஒரு செய்தியில் ஐந்தாறு தஃகீத் சொற்களைக் கூட அரபுகள் பயன்படுத்துவார்கள்.

நான் நேற்று மருத்துவமனை சென்றேன்

என்பதைச் சில நேரங்களில்

“நிச்சயமாக நான் நிச்சயமாக நேற்று நிச்சயமாக மருத்துவமனைக்கு நிச்சயமாகச் சென்றேன்”

என்று சொல்வார்கள்.

இது அரபுமொழியில் விகாரமாகத் தெரியாது. ஆனால் தமிழில் இப்படி எழுதினால் இதை வாசிப்பவர்கள் திருக்குர்ஆனின் நடையைக் குறையாகக் கருதுவார்கள். அது அரபு மொழியின் வழக்கம் என்பதை அறிய மாட்டார்கள்.

தஃகீத் எனும் சொற்களை அலங்காரச் சொல்லாகவே அரபுகள் பயன்படுத்துகின்றனர் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இதனால் இன்ன, அன்ன என்ற சொல்லுக்கும் தஃகீத் வகையைச் சேர்ந்த இதர சொற்களுக்கும் நாம் தமிழாக்கம் செய்யவில்லை.

இது தவறு என்று நம்மை விமர்சிக்கின்றனர்.

இஸ்மாயில் ஸலபி உட்பட இப்படி நம்மை விமர்சிப்பவர்கள் தங்கள் மொழிபெயர்ப்புகளில் அனைத்து தஃகீத் சொற்களுக்கும் நிச்சயமாக என்று தமிழாக்கம் செய்திருக்க வேண்டும். இன்ன, அன்ன என்ற இரு தஃகீத் சொற்களுக்கு மட்டும் நிச்சயமாக என்று மொழிபெயர்த்து விட்டு இதே வகையைச் சேர்ந்த மற்ற சொற்களுக்கு நிச்சயமாக என்று மொழிபெயர்க்காமல் விட்டு விட்டனர்.

இதற்குச் சில உதாரணங்களை நாம் எடுத்துக் காட்டுகிறோம்.

20வது அத்தியாயத்தின் 97வது வசனத்தை எடுத்துக் கொள்வோம்.

இவ்வசனத்துக்கு நாம் செய்த தமிழாக்கம்

“நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் தீண்டாதே என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனதுகடவுளைப் பார்! அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம்” என்று (மூஸா) கூறினார்.

நமது தமிழாக்கத்தை எதிர்த்து இக்கேள்வியைக் கேட்பவர்கள் செய்ய வேண்டிய தமிழாக்கம் இப்படித் தான் வரவேண்டும்.

“நீ சென்று விடு! நிச்சயமாக உனது வாழ்க்கையில் ‘தீண்டாதே’ என நீ கூறும் நிலையே இருக்கும். நிச்சயமாக மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் நிச்சயமாக உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நிச்சயமாக நெருப்பில் நிச்சயமாக எரித்து பின்னர் நிச்சயமாக அதைக் கடலில் நிச்சயமாக தூவுவோம்” என்று (மூஸா) கூறினார்.

மேற்கண்ட 20வது அத்தியாயம் 97வது வசனத்தில் ஏழு இடங்களில் நிச்சயமாக என்ற கருத்தைத் தரும் சொற்கள் உள்ளன. எந்த அறிஞருடைய மொழி பெயர்ப்பிலாவது இவ்வசனத்தில் நிச்சயமாக என்ற சொல் ஏழு தடவை பயன்படுத்தப்பட்டுள்ளதா என்றுபாருங்கள்.

20வது அத்தியாயம் 97வது வசனத்திற்கு இஸ்மாயில் ஸலபி சார்ந்த JASM தர்ஜமாவின் மொழிபெயர்பை பாருங்கள்.

(எம்மை விட்டும்) நீ சென்று விடு. என்னை தீண்டாதீர்கள் என நீ கூறுவது தான் இவ்வாழ்வில் நிச்சயமாக உனக்குறியதாகும். நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட ஒரு நேரம் உண்டு. அதில் நீ மாற்றம் செய்யப்பட மாட்டாய் நீ வணங்குவதிலேயே நிலையாக இருந்த உனது கடவுலைப்பார். நிச்சயமாக அதை நாம் எரித்து பின்னர் கடலில் அதை முற்றிலுமாக தூவி விடுவோம் என, (மூஸா ஸாமிரிக்கு)க் கூறினார்.

இஸ்மாயில் ஸலபி உள்ளிட்டவர்களினால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட குர்ஆன் மொழியாக்கத்திலாவது 07 இடங்களில் நிச்சயமாக என்று மொழிபெயர்த்துள்ளார்களா என பாருங்கள். அவர்களும் 07 இடங்களில் மொழிபெயர்ப்பு செய்யவில்லை மாறாக 03 இடங்களில் நிச்சயமாக என மொழிபெயர்த்து விட்டு 04 இடங்களை மொழியாக்கம் செய்யாமல் விட்டு விட்டார்கள்.

நமது மொழியாக்கத்தில் நாம் செய்ததை பிழை என்று கூறும் இஸ்மாயில் ஸலபி அவர்கள் தாம் வெளியிட்ட குர்ஆன் மொழியாக்கத்தில் நிச்சயமாக என்பதை ஏன் மொழிபெயர்க்காமல் விட்டார்?

இஸ்மாயில் ஸலபி கூட நிச்சயமாக என்று ஏழு இடங்களில் குறிப்பிடவில்லை. இதிலிருந்து அவர்களும் தஃகீத் எனும் வகையைச் சேர்ந்த சொல்லுக்குப் பொருள் செய்யாமல் விட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது.

அதுபோல் 3:155 வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! இவ்வசனத்துக்கு நாம் செய்த தமிழாக்கம் இதுதான்:

இரு அணிகளும் மோதிக்கொண்ட நாளில் உங்களில் பின்வாங்கியவர்களை, அவர்களின் சில செயல்கள் காரணமாக ஷைத்தான் வழிதவறச் செய்தான். அல்லாஹ் அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன்.

இவ்வசனத்தில் தஃகீத் எனும் உறுதிப்படுத்தும் சொற்கள் ஐந்து உள்ளன. இன்ன என்பதற்கு நாம் பொருள் செய்யவில்லை என்று நமக்கு எதிராக வாதிடுவோர் ஐந்து இடங்களில் நிச்சயமாக என்று குறிப்பிட்டு பின்வருமாறு இவ்வசனத்தை மொழிபெயர்த்து இருக்க வேண்டும்.

இரு அணிகளும் மோதிக் கொண்ட நாளில் உங்களில் நிச்சயமாகப் பின்வாங்கியவர்களை, அவர்களின் சில செயல்கள் காரணமாக நிச்சயமாக ஷைத்தான் வழிதவறச் செய்தான். நிச்சயமாக அல்லாஹ் நிச்சயமாக அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன்.

இப்படி நிச்சயமாக என்ற சொல்லை ஐந்து இடங்களில் ஒரு அறிஞரும் இவ்வசனத்தின் தமிழாக்கத்தில் பயன்படுத்தவில்லை. இஸ்மாயில் ஸலபி தரப்பினரமு் பயன்படுத்த வில்லை இவர்களும் தஃகீத் சொற்களுக்குப் பொருள் செய்யாமல் விட்டுள்ளனர் என்பது இதிலிருந்தும் உறுதியாகின்றது.

03வது அத்தியாயம் 155வது வசனத்திற்கு இஸ்மாயில் ஸலபி சார்ந்த JASM தர்ஜமாவின் மொழிபெயர்பை பாருங்கள்.

இரு அணியினரும் (போருக்காக) நேருக்கு நேர் சந்தித்த அந்நாளில் உங்களில் நிச்சயமாக எவர்கள் புறமுதுகிட்டுச் சென்றார்களோ, அவர்கள் செய்த (தவறுகள்) சிலவற்றின் காரணமாக ஷைத்தானே அவர்களை நிலைகுலையச் செய்தான். எனினும், நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், சகிப்புத் தன்மையுடையவனுமாவான்.

இஸ்மாயில் ஸலபி உள்ளிட்டவர்களினால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட குர்ஆன் மொழியாக்கத்திலாவது 05 இடங்களில் நிச்சயமாக என்று மொழிபெயர்த்துள்ளார்களா என பாருங்கள். அவர்கள் 05 இடங்களில் மொழிபெயர்ப்பு செய்யவில்லை மாறாக 03 இடங்களில் நிச்சயமாக என மொழிபெயர்த்து விட்டு 02 இடங்களை மொழியாக்கம் செய்யாமல் விட்டு விட்டார்கள்.

நமது மொழியாக்கத்தில் நாம் செய்ததை பிழை என்று கூறும் இஸ்மாயில் ஸலபி அவர்கள் தாம் வெளியிட்ட குர்ஆன் மொழியாக்கத்தில் நிச்சயமாக என்பதை ஏன் மொழிபெயர்க்காமல் விட்டார்?

கீழ்க்காணும் வசனங்களைக் காணுங்கள். அந்த வசனங்களில் தஃகீத் எனும் வகையிலான சொற்கள் எத்தனை இடங்களில் இடம் பெற்றுள்ளன என்பதைக் குறிப்பிட்டுள்ளோம். தமிழ் மொழிபெயர்ப்பிலோ, ஆங்கில மொழிபெயர்ப்பிலோ தேடிப்பாருங்கள். அவர்கள் இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப நிச்சயமாக என்ற சொல்லைக் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள் என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம்.

2:74 வசனத்தில் ஆறு தஃகீத் சொற்கள் உள்ளன.

2:130 வசனத்தில் நான்கு தஃகீத் சொற்கள் உள்ளன.

5:12 வசனத்தில் ஒன்பது தஃகீத் சொற்கள் உள்ளன.

5:32 வசனத்தில் ஆறு தஃகீத் சொற்கள் உள்ளன.

6:109 வசனத்தில் நான்கு தஃகீத் சொற்கள் உள்ளன.

7:134 வசனத்தில் நான்கு தஃகீத் சொற்கள் உள்ளன.

11:10 வசனத்தில் நான்கு தஃகீத் சொற்கள் உள்ளன.

11:110 வசனத்தில் ஐந்து தஃகீத் சொற்கள் உள்ளன.

12:32 வசனத்தில் ஏழு தஃகீத் சொற்கள் உள்ளன.

12:41 வசனத்தில் நான்கு தஃகீத் சொற்கள் உள்ளன.

14:7 வசனத்தில் நான்கு தஃகீத் சொற்கள் உள்ளன.

15:24 வசனத்தில் நான்கு தஃகீத் சொற்கள் உள்ளன.

15:97 வசனத்தில் மூன்று தஃகீத் சொற்கள் உள்ளன.

16:103 வசனத்தில் நான்கு தஃகீத் சொற்கள் உள்ளன.

23:30 வசனத்தில் நான்கு தஃகீத் சொற்கள் உள்ளன.

29:3 வசனத்தில் ஆறு தஃகீத் சொற்கள் உள்ளன.

30:58 வசனத்தில் ஐந்து தஃகீத் சொற்கள் உள்ளன.

39:65 வசனத்தில் ஆறு தஃகீத் சொற்கள் உள்ளன.

மேற்கண்ட வசனங்களுக்கு யாருடைய தமிழாக்கத்தை நீங்கள் எடுத்துப் பார்த்தாலும் நிச்சயமாக என்ற சொல்லை இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதை அறிந்து கொள்வீர்கள்.

உதாரணத்துக்குத் தான் சில வசனங்களைப் பட்டியல் போட்டுள்ளோம். இது போல் ஏராளமான வசனங்கள் உள்ளன.

தஃகீத் எனும் உறுதிப்படுத்தும் வகையில் உள்ள சொற்கள் அனைத்துமே உறுதிப்படுத்துவதில் சமமான தகுதியில் உள்ளவை தான். இவற்றில் இன்ன, அன்ன என்ற இடைச் சொற்களுக்கு மட்டும் நிச்சயமாக என்று பொருள் செய்து விட்டு, மற்ற சொற்களுக்கு அவ்வாறு பொருள் செய்யாமல் அவர்கள் விட்டதற்கு எந்தக் காரணமும் இல்லை.

நிச்சயமாக என்பது அரபுமொழியில் அலங்காரத்துக்காகப் பயன்படுத்துவதாலும், தமிழில் இத்தகைய மொழிநடை இல்லாததாலும் நிச்சயமாக என்பதை நாம் தவிர்த்து விட்டோம். ஆனால் அவ்வாறு மொழிபெயர்த்தே ஆக வேண்டும் என்ற கொள்கையில் இருப்பவர்கள் சிலவற்றுக்கு மொழிபெயர்த்து சிலவற்றுக்கு மொழிபெயர்க்காமல் விட்டு விடுகின்றனர். இதற்கு அவர்களிடம் ஏற்கத்தக்க எந்தப் பதிலும் இல்லை.

ஸலபியின் விமர்சனம் – 03

  1. முஃஜிஸாக்களுக்கு காரண காரியங்களைக் கற்பித்து அல்லாஹ்வின் ஆற்றலைக் குறைத்துக் காட்டுவது:

ஈஸா (அலை) அவர்கள் ஆண் தொடர்பு இல்லாமல் அற்புதமாகப் படைக்கப்பட்டவர்கள் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். ஆனால், இதை அவர் குளோனிங் முறையாக சித்தரிக்க முற்படுகின்றார். இது பற்றி குளோனிங் சாத்தியமே என்ற தலைப்பில் 415 ஆவதுவிளக்கக் குறிப்பில் அவர் கூறும் போது,

‘தந்தையில்லாமல் ஒரு குழந்தையை இறைவன் உருவாக்க நாடினால், ‘ஆகு” என்று சொல்லியே அவனால் உருவாக்க முடியும். அப்படியிருந்தும் ஒரு வானவரை மனித வடிவில் அனுப்பிஇ அந்த வானவர் ஈஸா நபியின் தாயாரான மர்யமிடம் ஊதினார் எனக் கூறப்படுகின்றது. இதன் மூலம் இறைவனின் ஆற்றலால் உருவாக்கப்பட்ட ஒரு மரபணுவை ஊதியிருக்கலாம் என்பதையும்….” எனக் கூறி ஜிப்ரீல்(ர) அவர்கள் ரூஹை ஊதினார் எனக்குர்ஆன் கூறும் போது மரபணுவை ஊதியதாகக் காட்ட முனைகின்றார்.

நமது பதில்:

திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் ஈஸா நபி தொடர்பாக தவறாக எழுதியுள்ளதாக இஸ்மாயீல் ஸலபி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

உண்மையில் நமது மொழிபெயர்ப்பு தவறானதா? இஸ்மாயீல் ஸலபியின் வாதம் தவறானதா? என்பதை திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு 415ம் (தமிழ், சிங்களம்) குறிப்பை படித்தாலே மிகத்தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

ஈஸா நபியின் பிறப்பு தொடர்பில் நமது மொழியாக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பை ஆரம்பமாக தருகிறோம்.

குலோனிங் சாத்தியமே (குர்ஆன் மொழியாக்கம் - தமிழ், சிங்களம் 415ம் குறிப்பு)

இன்றைய மனிதன் கண்டுபிடித்துள்ள குளோனிங் குறித்து நாம் எந்த முடிவை எடுப்பது என்பதற்கு இவ்வசனங்கள் (3:46, 19:21, 19:29,30, 21:91, 23:50) வழிகாட்டுகின்றன.

ஈஸா நபியவர்கள் ஆணின் உயிரணுவின்றி கன்னித்தாய் மூலம் இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் பிறந்தார்கள். இந்த நிகழ்ச்சியை வெறும் வரலாறாக மட்டும் திருக்குர்ஆன் கூறாமல் 'இது ஓர் அத்தாட்சியாக உள்ளது' என்று கூறி, இது குறித்து இவ்வசனங்களில் சிந்திக்கத் தூண்டுகிறது.

மனிதர்கள் முயற்சி செய்தால் இது சாத்தியமாகாது என்றால் இதைச் சிந்திக்கத் தூண்டுவதில் பொருள் இருக்காது. முயன்றால் முடியும் என்பதால் தான் இது குறித்து சிந்திக்குமாறு இவ்வசனம் கூறுகிறது.

இன்றைய நவீன உலகில் உயிரினங்களின் உயிரணுவுக்கு மாற்றாக மரபணுவைப் பயன்படுத்தி உயிரினங்களை உண்டாக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

உதாரணமாக ஓர் ஆடு குட்டி போட்டால் அந்தக் குட்டி எல்லா வகையிலும் தாயைப் போலவோ, அக்குட்டி உருவாவதற்குக் காரணமான கிடாவைப் போலவோ இருப்பதில்லை.

சில விஷயங்களில் தாயை ஒத்ததாகவும், சில விஷயங்களில் தந்தையை ஒத்ததாகவும்இருக்கும். சில சமயங்களில் பெற்றோருக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத தோற்றத்திலும் இருக்கும்.

ஆனால் ஓர் ஆட்டின் மரபணு மூலம் உருவாக்கப்படும் குட்டியானது, அந்த மரபணுக்குச் சொந்தமான ஆடு அல்லது கிடாவை எல்லா வகையிலும் ஒத்ததாக இருக்கும். இவ்வாறு மரபணு மூலம் இன உற்பத்தி செய்வதற்குக் குளோனிங் எனப்படுகின்றது.

மரபணுவில் உருவாக்கப்படும் குட்டி, அச்சு அசலாக தாயைப் போல் பிறப்பதற்குரிய காரணத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆணுடைய உயிரணுவும், பெண்ணின் சினைமுட்டையும் இணைந்து கரு உருவாகி வளரும்போது அதில் அதற்கான மரபணுக்கள்தோன்றுகின்றன.

இரண்டும் கலந்த ஒரு கலவையாக மரபணு அங்கே புதிதாக உருவாவதால் அது பெற்றோரை எல்லா வகையிலும் ஒத்ததாக இருப்பதில்லை.

அதே சமயம், உயிரினங்களின் உடல் முழுவதும் ஒவ்வொரு தசையிலும் மரபணுக்கள் வியாபித்துள்ளன. சிறிய அளவு தசையை எடுத்து அதிலிருந்து மரபணுவை மட்டும் பிரிக்கின்றனர். இந்த மரபணு 25 வயதுடைய ஒருவனின் மரபணு என்றால் அந்த மரபணுவின் வயதும் 25 தான்.

இதன் காரணமாகத் தான் யாருடைய மரபணுவிலிருந்து குழந்தை உருவாக்கப்படுகின்றதோ அவரைப் போலவே அச்சு அசலாக அந்தக் குழந்தை இருக்கிறது.

ஆணுடைய உயிரணுவையும், பெண்ணுடைய கருமுட்டையையும் சோதனைக் குழாயில் வைத்து வளர்க்கிறார்கள். இரண்டும் கலந்து புதிய மரபணுக்கள் அதில் உருவாகியிருக்கும்.

குறிப்பிட்ட காலம் வரை குழாயில் வளர்த்து, அதில் உருவான மரபணுவை நீக்கி விட்டு, யாரை குளோனிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவருடைய மரபணுவை அந்த இடத்தில் வைக்கிறார்கள். இதன் பிறகு சோதனைக் குழாயில் வளர்த்ததை பெண்ணின் கருவறையில் வைத்து கரு வளர்ச்சி ஏற்படுத்துகின்றனர். சாதாரணமாகக் குழந்தையைப் பெற்றெடுப்பது போல் அக்குழந்தை பெற்றெடுக்கப்படுகிறது.

மனிதனிடம் இது சோதித்துப் பார்த்து நிரூபிக்கப்படாவிட்டாலும் ஆடு, எருமை, பன்றி போன்ற உயிரினங்களில் இதைச் சோதித்து விஞ்ஞானிகள் வெற்றி கண்டிருக்கிறார்கள்.

மனிதனைப் பொறுத்த வரை அவனைக் குளோனிங் செய்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்.

25 வயதுடைய ஒருவரது மரபணுவை எடுத்து குளோனிங் செய்து ஒரு குழந்தையை உருவாக்கினால் அது வடிவத்தில் குழந்தையாக இருந்தாலும் அதன் மரபணுவைப் பொறுத்தவரை அதன் வயது 25 ஆகும். எனவே 25 வயதுடையவனின் அறிவும், சிந்தனையும் அந்தக் குழந்தைக்கு இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.

இந்த விபரங்களைக் கவனத்தில் வைத்து, ஈஸா நபியின் பிறப்பு பற்றிக் திருக்குர்ஆன் கூறுவதைச் சிந்தித்துப் பார்ப்போம்.

தந்தையில்லாமல் ஒரு குழந்தையை இறைவன் உருவாக்க நாடினால், ஆகு என்று சொல்லியே அவனால் உருவாக்க முடியும். அப்படியிருந்தும் இறைவன் ஒரு வானவரை மனித வடிவில் அனுப்பி, அந்த வானவர், ஈஸா நபியின் தாயாரான மர்யமிடம் ஊதினார் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் இறைவனின் ஆற்றலால் உருவாக்கப்பட்ட ஒரு மரபணுவை அந்த வானவர் மர்யம் (அலை) அவர்களிடம் ஊதியிருக்கலாம் என்பதையும், எந்த முறையில் குழந்தை உருவாவதாக இருந்தாலும் முடிவில் தாயின் கருவறை அவசியம் என்பதையும் இந்நிகழ்ச்சி நமக்குக் காட்டுகின்றது.

அடுத்ததாக நாம் சிந்திக்க வேண்டிய விஷயம், ஈஸா நபியவர்கள் பிறந்தவுடனே பேசியதாக இதில் கூறப்படுகின்றது. தந்தையில்லாமல் பிறந்ததால் அற்புதம் என்ற அடிப்படையில் பிறந்தவுடன் சில வார்த்தைகளைப் பேசி விட்டு அதன் பிறகு குழந்தைத் தன்மையுடையவராக அவர் இருக்கவில்லை. அவர் குழந்தையாக இருக்கும் போது பேசினார் என்பதுடன் அவரை அப்போதே இறைத்தூதராக ஆக்கியதாகவும் இங்கு கூறப்படுகிறது.

இறைத்தூதர் என்றால், இறைச் செய்திகளைச் சரியாக விளங்க வேண்டும், அதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதை அறிவோம்.

பிறந்தவுடனேயே ஈஸா நபியவர்கள் பேசியதுடன், இறைச் செய்திகளை விளங்கி, மக்களிடம் எடுத்துச் சொல்லும் அளவுக்கு முதிர்ச்சி உடையவர்களாக இருந்தது மனிதக் குளோனிங்பற்றிய விஞ்ஞானிகளின் கருத்துக்கு ஒத்ததாக இருக்கின்றது.

இதுதான் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் பீ.ஜெ அவர்கள் எழுதியுள்ள விளக்கமாகும். சிங்கள மொழியாக்கத்திலும் இதுதான் இருக்கிறத. இது அறிவியல் ரீதியில் ஈஸா நபியின் பிறப்பைப் பற்றி விளக்கும் பகுதியாகும். இதனை போகிற போக்கில் தவறு என்று சொல்லி விட்டு நகரப் பார்க்கிறார் இஸ்மாயீல் ஸலபி.

அது மாத்திரமன்றி இஸ்மாயில் ஸலபியின் விமர்சனத்திற்க இதற்க முன்னரே பீஜே தரப்பில் இன்னம் விரிவான பதில் அளிக்கப்பட்டுள்ளதையும் இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.

ஈஸா நபியின் அற்புதப் பிறப்பும் இஸ்மாயீல் சலபியின் அறியாமையும்!

இஸ்மாயீல் சலபி என்பவர் சமீபத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். குளோனிங் பற்றி பீஜே அவர்கள் தமது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் அளித்த விளக்கத்தை அதில் விமர்சனம் செய்துள்ளார்.

ஈஸா நபியின் அற்புதப் பிறப்பையும், குளோனிங்கையும் ஒப்பிட்டு குளோனிங் சாத்தியமே என்ற தலைப்பில் பீஜே அவர்கள் தனது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் குறிப்பு எண் 415ல் விளக்கம் அளித்துள்ளார்கள்.

அதில் ஈஸா நபி (அலை) அவர்கள் இறைவனின் தனிப்பெரும் வல்லமையால் பிறந்தார்கள் என்றும், அவரது பிறப்பைச் சிந்தித்துப் பார்த்தால் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மனித குளோனிங் குறித்து முடிவெடுப்பதற்குரிய வழிகாட்டல் அதில் உள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இஸ்மாயீல் சலபி என்பவர் இதை மறுத்து வீடியோவையும், கட்டுரையையும் வெளியிட்டுள்ளார்.

பீ.ஜே எதை சொன்னாலும் அதனை எதிர்க்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பதினாலும், குளோனிங் பற்றிய அறிவு இவருக்கு இல்லாததாலும் (குளோனிங் பற்றி தனக்குத் தெரியாது என்று அந்த வீடியோவிலேயே ஒப்புக் கொள்கிறார்.) பல தவறான கருத்துக்களையும் உள்ளடக்கியதாக அந்த வீடியோ அமைந்துள்ளது.

அதை விளக்குவதற்கு முன் குளோனிங் என்பது என்ன? என்பதைப் பார்ப்போம்.

ஆணுடைய உயிரணுவையும், பெண்ணுடைய கருமுட்டையையும் சோதனைக் குழாயில் வைத்து வளர்க்கிறார்கள். இரண்டும் கலந்து புதிய மரபணுக்கள் அதில் உருவாகியிருக்கும். பின் அதில் உருவான மரபணுவை நீக்கி விட்டு, யாரை குளோனிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவருடைய மரபணுவை அந்த இடத்தில் வைக்கிறார்கள். இதன் பிறகு சோதனைக் குழாயில் வளர்த்ததை பெண்ணின் கருவறையில் வைத்து கரு வளர்ச்சி ஏற்படுத்துகிறார்கள். இந்த வழிமுறை குளோனிங் எனப்படுகிறது. சாதாரணமாகப் பெண்கள் பல மாதங்கள் கர்ப்பமாக இருந்து குழந்தை பெற்றெடுப்பதைப் போன்றே இதிலும் பெற்றெடுப்பார்கள்.

மனிதனிடம் இது சோதித்துப் பார்த்து நிரூபிக்கப்படாவிட்டாலும் ஆடு, எருமை, பன்றி போன்ற உயிரினங்களில் இதைச் சோதித்து விஞ்ஞானிகள் வெற்றி கண்டிருக்கிறார்கள்.

இதுதான் குளோனிங் செய்யும் முறையாகும். இது பீ.ஜேவின் 415வது விளக்கக் குறிப்பிலேயே தெளிவாக்கப்பட்டுள்ளது.

இஸ்மாயீல் சலபி பேசும்போது பீ.ஜேயின் குளோனிங் சித்தாந்தத்திற்கு மறுப்பு என்று தலைப்பிட்டு ஈஸா நபியின் பிறப்பை பீ.ஜே குளோனிங் என்கிறார் என்று கூறுகிறார்.

ஈஸா (அலை) அவர்கள் குளோனிங் முறையில் பிறந்தார்கள் என்று தமிழாக்கத்தில் பீ.ஜே சொல்லவில்லை. மாறாக அவர்கள் அல்லாஹ்வின் அற்புத ஆற்றலால், வல்லமையால் ஈஸா (அலை) அவர்கள் பிறந்தார்கள் என்று தான் பீ.ஜே கூறியுள்ளார்.

இதை பீ.ஜேயின் மேற்கண்ட (415) விளக்கக் குறிப்பின் துவக்க வாசகம் சந்தேகத்திற்கிடமின்றி சொல்கிறது.

ஈஸா நபியவர்கள் ஆணின் உயிரணுவின்றி கன்னித்தாய் மூலம் இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் பிறந்தார்கள்.

உயிரணுவின்றி கன்னித்தாய் மூலம் இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் ஈஸா நபி பிறந்தார்கள் என்ற இச்சொற்றொடர் மூலம் ஈஸா நபியின் பிறப்பு ஓர் அற்புதம் என்பதும், ஈஸா நபி ஒரு அற்புதப் படைப்பு என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது.

மேலும் ஈஸா நபி, அல்லாஹ்வின் வார்த்தை எனும் கருத்தைக் கொண்ட 3:39 வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் போது பின்வருமாறு பீ.ஜே விளக்கம் அளித்துள்ளார்.

பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினைமுட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸா நபி, ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

(தமிழாக்கத்தின் விளக்க குறிப்பு எண் 90)

அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர் என்று சொல்வதின் வாயிலாக அவர் அற்புதப் பிறப்பு தான் என்பதை இவ்விளக்கத்தில் பீஜே கூறுகிறார்.

ஈஸா நபியின் பிறப்பு பற்றி இவ்வளவு தெளிவாக கூறிய பின்னரும் இஸ்மாயீல் சலபி இதற்கு மாற்றமாக விமர்சிக்கக் காரணம் என்ன?

நாம் சொன்னது என்ன?

ஈஸா நபி குளோனிங்கில் பிறந்தார் என்று சொல்வதற்கும், ஈஸா நபியின் பிறப்பில் குளோனிங் பற்றி முடிவெடுப்பதற்கான வழிகாட்டல் உள்ளது என்று சொல்வதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.

இதில் நாம் சொன்னது என்ன?

ஈஸா நபி குளோனிங் படைப்பு என்று நாம் சொல்லவில்லை.

இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் பிறந்த அற்புதப் படைப்பு அவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஈஸா நபியின் பிறப்பில் குளோனிங்கிற்கான வழிகாட்டல் உள்ளது எனும் கருத்தைத் தான் கூறினோம். அதைக் கூறியதற்கு ஏற்கத்தக்க காரணங்களும் உள்ளன.

குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் தன்னைப் பற்றிக் கூறும் போது ஹகீம் - நுண்ணறிவாளன் என்கிறான். அவன் செய்யும் அனைத்திலும் ஏதாவது ஒரு ஹிக்மத் - ஞானம் இருக்கும். அது நமக்குத் தெரியலாம். அல்லது தெரியாமலும் போகலாம்.

அல்லாஹ்வின் தனிப்பெரும் ஆற்றலால் செய்யப்பட்ட சில அற்புதங்களைச் சிந்திக்கும் போது அது அற்புதமாக இருப்பதுடன் நாம் சிந்தித்து கண்டுபிடிக்கும் வழிகாட்டலும் அதில் இருக்கலாம்.

இந்த அடிப்படையில் ஈஸா நபியின் பிறப்பை உற்று நோக்கும் போது,

தந்தையில்லாமல் ஒரு குழந்தையை இறைவன் உருவாக்க நாடினால், ஆகு என்று சொல்லியே அவனால் உருவாக்க முடியும். அப்படியிருந்தும் அல்லாஹ் அவரை குன் என்ற வார்த்தையினால் மட்டுமே படைக்காமல் மர்யம் எனும் பெண்ணைத் தேர்வு செய்து, வானவரை மர்யம் (அலை) அவர்களிடம் அனுப்பி ஊத வைத்தது, பிறகு மர்யம் (அலை) அவர்கள் கருத்தரித்தது, அதன் பிறகு ஈஸா (அலை) அவர்கள் பல மாதங்கள் கர்ப்ப அறையில் இருந்து, பின் பிறந்தது, பிறந்ததும் ஈஸா நபி பேசியது, பிறந்த உடன் அவரை நபியாக ஆக்கியது இப்படி பல விஷயங்களையும் ஒன்றிணைத்து சிந்தித்துப் பார்த்த வகையில் ஈஸா நபியின் பிறப்பில் குளோனிங் குறித்த வழிகாட்டல் உள்ளது என்று நாம் கூறினோம்.

இறைவன் ஞானமிக்கவன் என்ற அடிப்படையில் அவனுடைய இந்தச் செயல் அதாவது ஈஸா நபியை குன் என்ற கட்டளை மூலமாகவே படைக்க ஆற்றல் இருந்தும் மேற்கண்ட முறையைத் தேர்வு செய்தது, தற்காலத்தில் தோன்றியுள்ள குளோனிங் முறையை உணர்த்துவதாக உள்ளது என்பது தான் அந்த விளக்கத்தின் சாராம்சம்.

இந்தக் கருத்தில் தான் அந்த விளக்கம் எழுதப்பட்டிருந்தது.

எதிர்வாதங்களும், பதில்களும்

வாதம் ஒன்று

ஈஸா நபியைக் குளோனிங்குக்கு ஒப்பிட்டு அல்லாஹ் செய்த அற்புதத்தை மனிதர்களும் செய்யலாம் என (பிஜே) கூற வருகிறார்.

இது இஸ்மாயீல் சலபி முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டாகும்.

அற்புதத்தின் அர்த்தம் என்ன என்பதை இவர் விளங்கவில்லை.

அற்புதம் என்பதை அல்லாஹ் தான் செய்ய இயலும், அல்லாஹ்வின் அனுமதியுடன் இறைத்தூதர்கள் செய்யலாம். வேறு எந்த மனிதராலும் செய்ய இயலாது.

அல்லாஹ் செய்து காட்டிய அற்புதங்களை நம்புவதுடன் அதில் மேலதிகமாக உள்ள ஒரு கருத்தைச் சிந்தித்துக் கூறினால் அது அற்புதத்தை மறுத்ததாக ஆகும் என்ற இவர் புரிந்து கொண்டுள்ளதினால் இப்படி வாதிடுகிறார்.

அற்புதங்கள் இரு வகைகளில் அமைந்துள்ளன.

கடலைப் பிளந்து வழி காண்பது, சந்திரனைப் பிளப்பது போன்ற சில அற்புதங்கள் எந்தக் காலத்திலும் எவ்வளவுதான் முயன்றாலும் யாராலும் செய்ய முடியாதபடி இருக்கும். அல்லாஹ்வின் வல்லமையை மட்டும் தான் இதில் உணர முடியும்.

சில அற்புதங்களை ஆகு என்ற கட்டளை மூலம் அல்லாஹ் எளிதாகச் செய்து காட்டியிருப்பான். கடுமையான முயற்சி செய்து கடும் பிரயத்தனங்கள் மூலம் மனிதர்கள் அதைச் செய்ய முடியும் என்ற வழிகாட்டல் அதில் அடங்கி இருக்கும். ஆனாலும் அது அல்லாஹ் செய்த அற்புதத்தை முற்றிலும் ஒத்ததாக அவை இருக்காது. இத்தகைய அற்புதங்களும் உள்ளன.

கடும் முயற்சியினால் மனிதன் இப்படிச் செய்து காட்டினாலும் அது அல்லாஹ் செய்த அற்புதத்தைச் சாதாரணமானதாக ஆக்கிவிடாது.

உதாரணமாக மிஃராஜ் பயணத்தின் போது கஃபாவிலிருந்து பைத்துல் முகத்தஸிற்கு ஒரு இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனால் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இது மிகப் பெரிய அற்புதமாகும். இதை அல்லாஹ்வும் அற்புதம் என்கிறான்.

سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ الإسراء:

மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 17:1

இன்று நம்மால் ஒரு இரவில் இந்தத் தொலைவுப் பயணத்தை மேற்கொள்ள இயலும். அதனால் அல்லாஹ் நிகழ்த்திக் காட்டியது அற்புதம் இல்லை என்றாகி விடாது. இறைவன் இந்த அற்புதத்தை நிகழ்த்திய காலகட்டத்தில் இத்தகைய வசதிகள் இருந்திருக்கவில்லை. இறைவனுக்கு இத்தகைய வசதிகளும் தேவையில்லை. அந்த விதத்தில் நபிகளாரின் மிஃராஜ் பயணம் அற்புதமாகத் திகழ்கிறது.

ஒருவர் ஒரு இரவில் இலங்கையிலிருந்து சவூதி அரேபியா, ஜித்தாவிற்கு விமானத்தில் சென்று வருவதால் அவர் அல்லாஹ்வின் அற்புதத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டார் என்று இஸ்மாயீல் சலபி போன்றவர்கள் வாதிடுவார்கள் போலும்.?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜில் அவ்வாறு சென்றது அற்புதமே இல்லை; நானும் தான் ஒரு இரவில் அதிகத் தொலைவு பயணம் செல்கிறேன் என்று இவர் சொன்னாலும் சொல்வார் போல் தெரிகிறது.

சூனிய நம்பிக்கை மூலம் சூனியக்காரன் சொன்னதை எல்லாம் அல்லாஹ் கேட்பான் என்று சொல்லி அல்லாஹ்வை ஒன்றுமில்லாமல் ஆக்கியவர் நம்மைப் பார்த்து அல்லாஹ்வின் அற்புதத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கியவர்கள் என்கிறார்.

வாதம் இரண்டு

பி.ஜே தமிழாக்கத்தின் மேற்கண்ட விளக்கக் குறிப்பில் பின்வருமாறு விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் இறைவனின் ஆற்றலால் உருவாக்கப்பட்ட ஒரு மரபணுவை அந்த வானவர் மர்யம் (அலை) அவர்களிடம் ஊதியிருக்கலாம் என்பதையும், எந்த முறையில் குழந்தை உருவாவதாக இருந்தாலும் முடிவில் தாயின் கருவறை அவசியம் என்பதையும் இந்நிகழ்ச்சி நமக்குக் காட்டுகின்றது.

இப்படி பீஜே எழுதியது குறித்து இஸ்மாயீல் சலபி பின்வருமாறு கேள்வி கேட்கிறார்.

மரபணுவை ஊதினாலும் தாயின் கருவறையில்லாமல் குழந்தையை உருவாக்க முடியாது என இந்தச் செய்தி காட்டுகிறது என ஏன் கூற வேண்டும். அல்லாஹ் ஆதம் (அலை), ஹவ்வா (அலை) அவர்களை தாயின் கருவறை இல்லாமலே உருவாக்கவில்லையா?

என்று இவர் கேள்வி எழுப்புகிறார்.

இவருக்குப் புரியும் திறன் கொஞ்சமும் இல்லை என்பதைத் தான் இது காட்டுகிறது.

தாயின் கருவறை இல்லாமல் குழந்தையை உருவாக்க முடியாது என்று நாம் சொல்வது மனிதர்களைக் கவனத்தில் கொண்டு சொன்னதாகும்.

இறைவன் எப்படியும் படைப்பான்; ஒரு பொருளைப் படைக்க அவனுக்கு எந்த மூலமும் தேவையில்லை, எந்தப் பொருளும் தேவையில்லை. குன் என்ற கட்டளையே போதுமானது.

ஆனால் மனிதன் அப்படியில்லை, அவன் ஒரு பொருளை உருவாக்க இறைவனால் படைக்கப்பட்ட மூலப் பொருள் தேவை. இறை படைப்பின் துணையில்லாமல் மனிதனால் எந்தப் பொருளையும் உருவாக்க இயலாது.

அதை விளக்கவே மேலுள்ள வாசகம் இடம்பெற்றது.

குளோனிங் செய்வதாகக் கூறிக் கொண்டாலும் தாயின் கருவறை இல்லாமல் மனிதனால் எதுவும் முடியாது என்பதை இறைவன் இச்சம்பவத்தின் வாயிலாக மக்களுக்கு உணர்த்துகிறான் என்பதே அவ்வாசகத்தால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதைப் புரிந்து கொள்ள இயலாத இஸ்மாயீல் ஸலபி, அல்லாஹ்வுக்கு தாயின் கருவறை தேவை என்று நாம் சொன்னதாக நினைத்து அதற்கு ஆதம், ஹவ்வா என்று பக்கம் பக்கமாக மறுப்பு வாசித்துக் கொண்டிருக்கிறார்.

நமது விஷயத்தில் மட்டும் தான் இப்படி ஏறுக்குமாறாகப் புரிகிறார். நபியை விட அதிகமாக இவர்கள் போற்றும் இமாம்கள் விஷயத்தில் சரியாகவே புரிகிறார்.

வானம் பூமியை ஒரு வினாடியில் படைக்க அல்லாஹ் ஆற்றல் பெற்றிருந்தும் ஆறு நாட்களை ஏன் எடுத்துக் கொண்டான் என்ற கேள்விக்கு விரிவுரையாளர்கள் பதில் அளிக்கும் போது மனிதர்களுக்கு நிதானத்தைக் கற்றுக் கொடுக்கத்தான் என்று சொல்லி விட்டு சறுகல் ஏற்படாதவனே நிதானமாகச் செய்யும் போது சறுகல் ஏற்படுபவர் எப்படி நிதானம் காட்ட வேண்டும் என்பதை அல்லாஹ் விளக்குகிறான் என்று கூறுகின்றனர்.

تفسير القرطبي

وَلَوْ أَرَادَ خَلْقَهَا فِي لَحْظَةٍ لَفَعَلَ، إِذْ هُوَ الْقَادِرُ عَلَى أَنْ يَقُولَ لَهَا كُونِي فَتَكُونُ. وَلَكِنَّهُ أَرَادَ أَنْ يُعَلِّمَ الْعِبَادَ الرِّفْقَ وَالتَّثَبُّتَ فِي الْأُمُورِ، وَلِتَظْهَرَ قُدْرَتُهُ لِلْمَلَائِكَةِ شَيْئًا بَعْدَ شي

அல்லாஹ் ஒரு வினாடியில் அதைப் படைக்க நாடினால் அப்படியே செய்திருப்பான். ஆகு என்று ஒரு உத்தரவிட்டால் அதுவும் அவ்வாறு ஆகிவிடும். இதற்கு அல்லாஹ் ஆற்றல் பெற்றவன் என்றாலும் அடியார்களுக்கு மென்மையையும், நிதானத்தையும் கற்றுக் கொடுக்கவே அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்.

பார்க்க : தஃப்ஸீருல் குர்துபீ பாகம் 7 பக்கம் 219

அல்லாஹ் உலகை ஆறு நாட்களில் படைத்தான் என்றால் அதை அப்படியே நம்பி விட்டுப் போக வேண்டியது தானே? விளக்கம் அளிக்கிறேன் என்ற பெயரில் மனிதனோடு அல்லாஹ்வை ஏன் ஒப்பிட வேண்டும்? சறுகல், தவறு ஏற்படும் மனிதனுக்கு அல்லாஹ்வை ஒப்பாக்கி ஏன் பேச வேண்டும்? என்று இஸ்மாயீல் சலபி கேட்கவில்லை. கேட்கவும் மாட்டார். ஏனெனில் அப்படி சொன்னது அவர்கள் மதிக்கும் மிகப் பெரும் அறிஞர்கள் அல்லவா?

இமாம்கள் கூறுவதை எல்லாம் சரியாகப் புரிந்து கொள்ளும் இவர் பீ.ஜே மொழியாக்கம் விஷயத்தில் மட்டும் தப்பும் தவறுமாகப் புரிகிறார்.

வாதம் மூன்று

குளோனிங் பற்றிய விளக்கத்தின் துவக்கத்தில் பீ.ஜே இப்படி கூறியிருந்தார்.

ஈஸா நபியவர்கள் ஆணின் உயிரணுவின்றி கன்னித்தாய் மூலம் இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் பிறந்தார்கள். இந்த நிகழ்ச்சியை வெறும் வரலாறாக மட்டும் திருக்குர்ஆன் கூறாமல் இது ஓர் அத்தாட்சியாக உள்ளது என்று கூறி, இது குறித்து இவ்வசனங்களில் சிந்திக்கத் தூண்டுகிறது.

அத்தாட்சி என்று தான் வந்துள்ளது. சிந்திக்க வேண்டும் என இவராகக் கூறுகிறார் என்பது தான் இவரது மூன்றாவது வாதம்.

அத்தாட்சி என்று தான் வந்துள்ளதாம்! சிந்திக்க வேண்டும் என்று வரவில்லையாம். அதனால் சிந்திக்கக் கூடாதாம். அப்பப்பா? என்ன ஒரு அறிவு? என்ன ஒரு வாதம்?

அத்தாட்சிகள் என்பதே சிந்தித்து விளங்குவதற்குத் தானே. சிந்திக்கவும், படிப்பினை பெறவும் தான் அல்லாஹ் அத்தாட்சிகளைக் கூறுகிறான்.

அத்தாட்சிகள், சான்றுகள் என்பதே சிந்திக்கும் மக்களுக்குத் தான் என்று பல திருக்குர்ஆன் வசனங்கள் சான்றளிக்கின்றன.

மழை குறித்து அல்லாஹ் கூறும் போது

சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று இருக்கிறது.

என்கிறான்.

திருக்குர்ஆன் 16:11

தேன் குறித்து அல்லாஹ் கூறும் போது

சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது

என்று கூறுகிறான்.

திருக்குர்ஆன் 16:69

படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 2:221

நீங்கள் விளங்குவோராக இருந்தால் (நமது) வசனங்களைத் தெளிவுபடுத்தி விட்டோம்.

திருக்குர்ஆன் 3:118

இப்படி அத்தாட்சிகள், சான்றுகள் என்பதே சிந்திப்பதற்கும், விளங்குவற்கும் தான் என எண்ணற்ற வசனங்கள் எடுத்தியம்புகின்றன.

சிந்தித்தால் தான் அது அத்தாட்சி என்பதே விளங்கும்.

இந்த அடிப்படை  கூட தெரியாமல் விமர்சிக்க வந்திருப்பது வியப்பாக உள்ளது.

வாதம் நான்கு

இஸ்மாயீல் சலபி தனது சிந்தனைத் திறன் மொத்தத்தையும்? வெளிப்படுத்தும் விதத்தில் மற்றுமொரு வாதம் வைக்கிறார்.

குளோனிங் தொடர்பாக பீ.ஜே ஒரு பயானில் பேசுகிறார். ஈஸா (அலை) அவர்களின் படைப்பு சம்பந்தமாக அல்லாஹ் கூறும்போது அது எனக்கு இலேசானது என்று கூறுகிறான். இதன் அர்த்தம் அல்லாஹ்விற்கு இலேசானது என்றால் நாமும் இது முயற்சி செய்தால் சாத்தியமே.

மனிதர்கள் முயற்சி செய்தால் அதில் சாத்தியம் இருக்கிறது என்பதால் தான் அல்லாஹ் சிந்திக்கத் தூண்டுகிறான் என்று பீஜே அந்த பயானில் கூறுகிறார்.

அப்படி என்றால் குர்ஆனில் பல இடங்களில் இறைவன் சிந்திக்கத் தூண்டுகிறான். வானம், ஒட்டகம் போன்றவைகளை இறைவன் சிந்திக்கத் தூண்டுகிறான். இதில் மனிதன் முயற்சித்தால் வானம் பூமியைப் படைக்க முடியுமா?

என்பது இவரது நான்காவது வாதம்

ஒன்று சிந்திக்கவே கூடாது என்கிறார். அல்லது ஏறுக்குமாறாகச் சிந்திக்கிறார்.

மனிதர்கள் முயற்சி செய்தால் அதில் சாத்தியம் இருக்கிறது என்பதால் தான் அல்லாஹ் சிந்திக்கத் தூண்டுகிறான் என்று இந்த விளக்கத்தில் சொன்னால் வானம், ஒட்டகம், பூமி இவை குறித்து அல்லாஹ் சிந்திக்கச் சொல்கிறான். மனிதன் முயற்சி செய்தால் இவற்றை உருவாக்க முடியுமா என்று வினா எழுப்புகிறார்.

சிந்திக்கத் தூண்டுவதில் முயற்சி செய்ய வேண்டியவையும் உள்ளன. முயற்சி செய்ய முடியாதவைகளும் உள்ளன.

சிந்தித்து படைத்தவனின் ஆற்றலை விளங்க வேண்டியவைகளும் உள்ளன.

மனிதன் முயற்சித்தால் செய்ய முடியுமானவையும் உள்ளன,

இரு வகைகளும் கலந்தும் உள்ளன.

{ وَلَقَدْ تَرَكْنَاهَا آيَةً فَهَلْ مِنْ مُدَّكِرٍ } [القمر: 15]

அதைச் சான்றாக விட்டு வைத்தோம். படிப்பினை பெறுவோர் உண்டா?

திருக்குர்ஆன் 54:15

இந்த வசனத்தில் கப்பலை அத்தாட்சியாக விட்டு வைத்துள்ளோம்; சிந்திப்போர் இல்லையா என்று அல்லாஹ் கூறுவதில் அவன் கப்பல் மூலம் காப்பாற்றியது மட்டுமின்றி அதை தேடிக் கண்டுபிடிக்கலாம் என்ற சிந்தனைக்கும் இடமுண்டு.

பாறையில் இருந்து ஒட்டகம் வந்தது (திருக்குர்ஆன் 7:73) என்ற வசனத்தில் ஒட்டகம் அத்தாட்சி என்பதில் இது போல் யாரும் செய்ய முடியாது. இதில் இறைவனின் வல்லமையை மட்டுமே சிந்திக்க முடியும்.

பாறையை அடித்து தண்ணீர் பீறிட்டு வரச் செய்ததில் (அல்குர்ஆன் 2:60) இறைவனின் வல்லமை உள்ளது. அத்துடன் பாறைக்கு அடியில் தண்ணீர் இருக்கும்; அதைப் பிளந்து தண்ணீரைப் பெருக்கெடுத்து ஓடச் செய்யலாம் என்று கண்டுபிடித்து மனிதன் செய்ய முடியும்.

வித்தியாசம் என்னவென்றால் அல்லாஹ் ஆகு எனக் கூறி செய்து விடுவான், நாம் கடின உழைப்பு செய்து தான் செய்ய முடியும். அல்லாஹ் செய்த தரத்தில் செய்ய முடியாது. எனவே இதனால் அற்புதம் சாதாரணமாக ஆக்கப்படாது.

அபாபீல் பறவைகள் அல்லாஹ்வின் அற்புதம் தான். அதில் அல்லாஹ்வின் வல்லமை அடங்கியுள்ளது. அத்துடன் சிறு பொருளுக்குள் மிகப்பரும் சக்தி அடக்கப்பட்டிருப்பதை நாம் ஆராயலாம். ஆனால் ஆகு என்று உத்தரவு மூலம் இதை நம்மால் செய்ய முடியாது. கடுமையான ஆராய்ச்சியுடன் பாடுபட வேண்டும். இப்படியான ஆற்றல் ஒன்று உள்ளது என்று சிந்திக்கத் தூண்டுவதால் அல்லாஹ்வின் ஆற்றலை மறுப்பதாக ஆகாது.

ஈஸா நபியவர்கள் ஆணின் உயிரணுவின்றி கன்னித்தாய் மூலம் இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் பிறந்தார்கள் என்று சொல்லி விட்டோம்.

இதன் மூலம் அது அல்லாஹ்வின் அற்புதம் என்பதையும் சொல்லி விட்டோம். தனிப்பெரும் ஆற்றலால் யாரும் இப்படிச் செய்ய முடியாது என்பதும் அதனுள் அடக்கம்.

அதேவேளை ஆணின் உயிரணு இல்லாமல் குழந்தை பிறக்கும் தொழில் நுட்பம் இருக்க முடியுமா என்று சிந்தித்து அப்படி கண்டறிந்தால் அல்லாஹ்வின் இரு அற்புதங்களை நம்பியதாக ஆகும். இது அல்லாஹ்வின் வார்த்தை தான் என்பதும், உறுதியாகும். இவ்வளவு கஷ்டப்பட்டு மனிதன் செய்ததை அல்லாஹ் சாதாரணமாகச் செய்து விட்டான் என்றும் ஆகும்.

மனிதன் முயற்சித்தால் ஆணின் விந்து இல்லாமல் குழந்தை பெறும் தொழில் நுட்பத்தைச் சிந்தித்து பல்லாண்டுகள் ஆய்வு செய்து அது சாத்தியமா என்று சிந்திக்கலாம். இப்படி சிந்திக்கும் போது அல்லாஹ்வின் ஆற்றலை மற்றவரின் ஆற்றலுடன் சமமாக்குதல் இல்லை.

அல்லாஹ் செய்தது வேறு. மனிதன் செய்வது வேறு.

இந்த நுணுக்கத்தை அறியாமல், சிந்திக்காமல் நுனிப்புல் மேய்ந்த இஸ்மாயீல் சலபி அத்தாட்சி என்பதால் வானத்தை உருவாக்க முடியுமா? பூமியைப் படைக்க முடியுமா? என்று கேட்க்க தலைப்பட்டு விட்டார்.

வாதம் ஐந்து

இதோ இஸ்மாயீல் ஸலஃபி கூறுவதைப் பாருங்கள்.

ஈஸா (அலை) அவர்கள் பிறந்தவுடன் பேசினார்கள் என்றால் அவர்கள் மரபணுவால் குளோனிங் முறையில் படைக்கப்பட்டார்கள் என பி.ஜெ கூறுகிறார். இவைகளைப் பார்க்கும் போது இது குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் என நாம் நினைக்கலாம். ஆனால் முஃதஸிலாக்களுக்கு அற்புதங்கள் மீது நம்பிக்கை கிடையாது. எல்லா அற்புதங்களுக்கும் காரண காரியங்களைச் சொல்லிவிட்டால் இது பவ்தீக ரீதியில் சாத்தியமானது என நினைக்கலாம்.

இப்படி நச்சுக்கருத்தைத் திணிக்கிறார் இஸ்மாயில் ஸலபி அவர்கள்.

ஈஸா நபி குளோனிங் மூலம் பிறந்தார்கள் என்று நாம் கூறவில்லை என்பதை முன்னர் விளக்கி விட்டோம்.

ஈஸா நபியை பீ.ஜே குளோனிங் என்று சொன்னார் என்று இவர் கூறுவது பச்சைப் பொய்.

அடுத்து முஃதஸிலாக்களுக்கு அற்புதங்கள் மீது நம்பிக்கை கிடையாது என்று கூறி நம்மை இந்தப் பட்டியலில் இணைக்க பெரும் முயற்சியை மேற்கொள்வது இவரின் பேச்சிலும், எழுத்திலும் மிகத் தெளிவாக தெரிகிறது.

எதற்காவது பதில் சொல்லத் தெரியவில்லை என்றால் முஃதஸிலா என்ற வாதத்தை எடுப்பதை இவர்கள் காலத்திற்கும் வழக்கமாகவே கொண்டிருக்கிறார்கள்.

ஈஸா நபியின் பிறப்பு ஒரு அற்புதம் என்பதுடன் அதில் இந்தக் கருத்தும் அடங்கியுள்ளது என்று ஒரு விளக்கம் சொன்னால் முஃதஸிலாக்கள் அற்புதங்களை மறுப்பார்கள் - பௌதீக விளக்கங்களை அளிப்பார்கள் என சம்பந்தமில்லாமல் பேசுகிறார்.

அற்புதங்கள் குறித்து இவர்களை விட நமக்குத் தெளிவான, உறுதியான நம்பிக்கை உண்டு.

நபிமார்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அற்புதங்கள் நிகழ்த்தியதாகத் திருக்குர்ஆனும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் கூறுகின்றன. அல்லாஹ் எப்போது அனுமதி அளித்துள்ளானோ அந்த நேரத்தில் மட்டும்தான் அவர்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும். அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது. எனவே அற்புதங்களை மறுப்பவர் இஸ்லாத்தின் அடிப்படையை மறுத்தவராவார்.

இவ்வளவு தெளிவாக அற்புதங்கள் குறித்து நிலைப்பாட்டை வரையறுத்துள்ள நம்மை அற்புதங்களை மறுப்பவர்கள் போன்று சித்தரிக்க முயலுவது எந்த அளவு தவறான வாதம் என்று புரிந்து கொள்ளுங்கள்.

வாதம் ஆறு

அடுத்து இஸ்மாயீல் சலபி வைக்கும் மற்றுமொரு வாதத்தைப் பார்ப்போம்.

குழந்தை பேசியது குளோனிங் முறை என்றால் முஸ்லிம் ஹதீஸ் கிரந்தத்தில் உள்ள ஒரு ஹதீஸிலும் குழந்தை பேசியதாக உள்ளதே. பனூ இஸ்ராயீலின் சமுதாயத்தில் உள்ள ஜுரைஜ் என்ற நல்லடியாரின் சம்பவத்திலும் குழந்தை பேசியதாக உள்ளதே. இவர்கள் யாருடைய குளோனிங்கில் உருவானார்கள்?

இப்படி கேட்கிறார்.

குழந்தை பேசியது என்ற ஒரு விஷயத்தை மட்டும் வைத்து ஈஸா நபியின் பிறப்பில் குளோனிங் முறைக்கான வழிகாட்டல் உள்ளது என்று நாம் சொன்னால் இவர் சொல்வது நியாயம் எனலாம்.

நாம் இதை மட்டும் வைத்துச் சொல்லவில்லை. முன்னர் சொன்ன எல்லா அம்சங்களையும் இணைத்துப் பார்க்கும் போது அது குளோனிங்குக்கான வழிகாட்டல் உள்ளது என்று சொன்னோம்.

ஐந்தாறு விஷயங்களை இணைத்து ஒரு பொருளிற்கு ஒப்பு காட்டும் போது அதில் உள்ள ஐந்தையும் தனித்தனியாகப் பிரித்தெடுத்து கேள்வி கேட்பது என்பது அறிவுடைமையா?

மதுவைப் பற்றி விளக்கும் போது கெட்ட வாடை, போதையூட்டும் தன்மை, சிகப்பு நிறம் என தன்மைகள் அதில் உள்ளதாக சொல்கிறோம்.

இப்போது ஒருவர் இரத்தமும் சிகப்பு நிறத்தில் தான் உள்ளது அதனால் அது போதையா? குடிபான கலரிலும் தான் சிகப்பு நிறம் உள்ளது அதுவும் மதுவா?

கெட்ட வாடை கொண்ட சில பொருட்களைப் பட்டியலிட்டு இது மதுவா? அது மதுவா? என ஒருவர் வினா எழுப்பினால் அவரை அறிவாளி என்போமா?

அல்லாஹ் அவரை குன் என்ற வார்த்தையினால் மட்டுமே படைக்காமல் மர்யம் எனும் பெண்ணைத் தேர்வு செய்தது, மலக்கை அனுப்பி ஊத வைத்தது, பிறகு கருத்தரித்தது, பிறகு பல மாதங்கள் கர்ப்ப அறையில் இருந்து அதன் பிறகு பிறந்தது, பிறந்ததும் பேசியது, அப்போதே நபியாக ஆக்கியது இப்படி பல விஷயங்களையும் ஒன்றிணைத்து ஈஸா நபியின் பிறப்பு குளோனிங் முறை குறித்து முடிவெடுக்க வழிகாட்டுகின்றது என்று நாம் சொன்னோம்.

இதைப் புரிந்து கொள்ளாமல் குழந்தையில் பேசிய நபர்களைப் பட்டியிலிட்டு இவர்களெல்லாம் குளோனிங்கா? மறுமையில் கல்லும், மரமும் பேசும் என்று ஹதீஸ் வருகிறதே அவைகள் குளோனிங்கா? என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்கிறார்.

விட்டால் சில கிளிகள் கூடத்தான் பேசுகின்றன அவையும் குளோனிங்கா? இதோ நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேனே நானும் குளோனிங்கா? என்று கேட்டாலும் கேட்பார்.

வாதம் ஏழு

ஈஸா நபி பேசியது தவிர மற்ற ஓடுதல், நடந்து செல்லுதல் போன்றவைகள் நடந்ததா? ஈஸா நபியிடம் மக்கள் பேசும்போது தாயின் மடியில்தானே படுத்துக் கிடந்தார்கள்?

இப்படியும் இஸ்மாயீல் சலபி கேள்வி எழுப்புகிறார்.

ஈஸா நபி எழுந்து நடந்தாரா என்று கேட்க முடியாது, யாருடைய மரபணுவில் இருந்து உருவாக்கப்படுகிறானோ அதே வயது தான் அந்தக் குழந்தையின் மரபணுவுக்கும் இருக்கும் என்று தான் நாம் கூறியுள்ளோம்.

25 வயதுடைய ஒருவரது மரபணுவை எடுத்து குளோனிங் செய்து ஒரு குழந்தையை உருவாக்கினால் அது வடிவத்தில் குழந்தையாக இருந்தாலும் அதன் மரபணுவைப் பொறுத்த வரை அதன் வயது 25 ஆகும். எனவே 25 வயதுடையவனின் அறிவும், சிந்தனையும் அந்தக் குழந்தைக்கு இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.

இப்படித்தான் கூறினோமே தவிர எழுந்து நடக்கும் என்று சொல்லவில்லை. எனவே இந்தக் கேள்வி புரிந்து கொள்ளாமையினால் உண்டான கேள்வியாகும்.

அவ்வப்போது தனது பேச்சின் இடையிடையே ஈஸா நபியின் பிறப்பில் நாம் சொல்லாத கருத்தைத் திணிக்க முற்படுகிறார்.

ஈஸா நபியவர்கள் ஆணின் உயிரணுவின்றி கன்னித்தாய் மூலம் இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் பிறந்தார்கள்.

இந்த வாசகமே இவர்கள் திணிக்க முற்படும் கூற்றைப் பொய்யென்று வெளிச்சம் போட போதுமானது.

வாதம் எட்டு

அடுத்து மலக்கை அனுப்பி ஊதச் செய்ததைப் பெரிய ஆதாரமாக பீ.ஜே காட்டுகிறார். இது ஈஸா நபிக்கு மட்டும் உரியதல்ல. எல்லா மனிதர்களுக்கும் உரிய சாதாரண விஷயம் என்று இஸ்மாயீல் சலபி கூறுகிறார்.

முஸ்லிமில் இடம் பெற்ற ஹதீஸில் 120 ஆம் நாள் எல்லா மனிதர்களுக்கும் உயிர் ஊதப்படுவதாக உள்ளது. அது போல் உங்களுக்கும் ஊதப்பட்டுள்ளது; எனக்கும் ஊதப்பட்டுள்ளது. இது அனைவருக்குமானது எனவும் வாதிடுகிறார்.

இவர் எந்த அளவுக்கு வழிகெட்டுள்ளார் என்பதற்கு இது போதிய ஆதாரமாக உள்ளது.

இவர் தான் இப்போது தன்னை ஈஸா நபி படைப்புடன் ஒப்பிட்டு அற்புதத்தைச் சாதாரணமாக்குகிறார்.

கரு உருவாகி வளர்ந்து 120 வது நாளில் மலக்கு வந்து உயிரை மனித உயிரை ஊதுவார் என்று இவர் சுட்டிக்காட்டும் ஹதீஸ் கூறுகிறது.

எல்லா மனிதர்களுக்கும் 120 ஆம் நாளில் ஊதப்பட்டது போல் தான் ஈஸா நபிக்கும் ஊதப்பட்டதா? கரு உருவாகி 120 நாள் வளர்ந்த பின் மனித உயிரை ஊதுவது தான் ஈஸா நபிக்கு நடந்ததா? நிச்சயமாக இல்லை.

கருவே உருவாகாத நிலையில் கருவை உருவாக்குவதற்காக துவக்கத்திலேயே ஊதப்பட்டதைத் தான் குர்ஆன் கூறுகிறது. இப்படி எல்லா மனிதர்களுக்கும் ஊதப்படவில்லை.

இவர் சுட்டிக்காட்டும் ஹதீஸில் உள்ள விஷயத்துக்கும், ஈஸா நபி விஷயத்துக்கும் கடுகளவும் சம்மந்தமில்லை. தன்னிஷ்டத்துக்கு இஸ்மாயில் ஸலபி கருத்துருவாக்கி கதை சொல்கிறார் என்பது தெளிவாகிறது.

பிற காரணம் கூறக்கூடாதா?

மொத்தத்தில் இஸ்மாயில் சலபி என்ன சொல்ல வருகிறார் என்றால் இறைவசனத்தில் என்ன உள்ளதோ அதைத் தாண்டி சொந்த விளக்கத்தையும், வசனத்திலிருந்து நாம் புரியும் காரணங்களையும் கூறக் கூடாது என்கிறார்.

அதாவது வசனத்தில் என்ன வார்த்தைகள் உள்ளதோ அதைத் தாண்டி இவ்வசனத்திலிருந்து இந்தக் கருத்தை விளங்கலாம் என்று கூறக்கூடாதாம்!

சில விஞ்ஞானக் கருத்துக்களை மேற்கோள் காட்டி இதை இந்த வசனம் தாங்கி நிற்கிறது, இந்த வசனத்திற்குள் இந்த அறிவியல் கருத்தும் உள்ளடங்கியுள்ளது என்றெல்லாம் சொந்த விளக்கம் அளிக்கக் கூடாதாம்!

இந்தக் கோணத்தில் இஸ்மாயீல் சலபியின் ஒட்டு மொத்த வாதமும் அமைந்திருக்கின்றது.

நம்மைப் பொறுத்தவரை இறை வசனங்களையும், நபிமொழிகளையும் அல்லாஹ், ரசூல் சொன்ன அர்த்தத்திலேயே விளங்குவோம் என்பது தான் நமது நிலைப்பாடு.

இன்றைய கால கண்டுபிடிப்புகள், அறிவியல் கருத்துக்களை உள்ளடக்கியதாக ஒரு வசனம் தென்பட்டால் அந்த வசனத்தைக் குறிப்பிட்டு இதில் இன்றைய நவீன அறிவியல் கருத்து உள்ளடங்கியுள்ளது என்று குறிப்பிடுவதில் தவறில்லை. அது அல்லாஹ்வின் வார்த்தையைப் பெருமைப்படுத்துவதாகவே ஆகும்.

இஸ்மாயீல் சலபி இறைவசனத்தில் உள்ள வார்த்தைகளைத் தாண்டி சொந்த விளக்கம் எதையும் கூறக்கூடாது - தான் அப்படிப்பட்டவன் அல்ல - என்ற தொனியில் பேசுகிறார். ஆனால் அதில் அவர் உண்மையாளராக இல்லை.

பல குர்ஆன் வசனங்களுக்கு இறைவன் சொன்ன வார்த்தைகளைத் தாண்டி பல நோக்கங்களை, சொந்தக் காரணங்களை இவரே அளித்துள்ளார்.

இந்த வீடியோவிலேயே அவர் அளிக்கும் அற்புத விளக்கத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

அதாவது இப்ராஹீம் நபியிடம் மலக்குகள் வந்த போது அவர்களுக்கு இப்ராஹீம் நபி விருந்தளித்தார் என்று தான் குர்ஆனில் உள்ளது. இதை அவர் விளக்குவதைக் கேட்டால் புல்லரிக்கிறது.

ஏன் விருந்து கொடுத்தார்கள் தெரியுமா? விருந்து கொடுத்தால் யாரும் எதிரியாக மாட்டார்கள்; உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பதற்காக இப்ராஹீம் நபி விருந்து கொடுத்தார்கள் என்கிறார்.

இந்தக் காரணத்தை இவருக்கு சொன்னது அல்லாஹ்வா? அல்லாஹ்வின் தூதரா?

பொருத்தமான சொந்த விளக்கத்தையே கூறக் கூடாது என்று நம் மீது குற்றம் சுமத்தும் இவர் பொருத்தமற்ற காரணத்தைக் குர்ஆனுக்கு விளக்கமாகக் கூறுகிறார்.

இவரது மற்றொரு தத்துவத்தைப் பாருங்கள்!

அல்குர்ஆன் 29:41 வசனத்தில் வலை பின்னும் சிலந்தி ஏன் பெண்பாலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை விஞ்ஞான? பூர்வமாக விளக்குகிறார்.

இது தொடர்பாக மார்ச் 2016 அவர் சார்ந்த இணையத்தில் வலை பின்னும் சிலந்தி ஆணா? பெண்ணா? என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள கட்டுரையின் பகுதி.

அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டோரின் உதாரணம், சிலந்தியின் உதாரணத்தைப் போன்றதாகும். அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. நிச்சயமாக வீடுகளில் மிகப் பலவீனமானது சிலந்தியின் வீடாகும். அவர்கள் அறிபவர்களாக இருந்தால் (இவர்களை எடுத்திருக்க மாட்டார்கள்.) (29:41)

இங்கு வலை பின்னும் சிலந்தியை அல்லாஹ் பெண்பால் வினைச் சொல்லில் பயன்படுத்தியுள்ளான். பொதுவாக சிலந்தி அரபு இலக்கணப் பிரகாரம் ஆண்பால் என்பதால் ஆண்பாலுக்குப் பெண்பால் வினைச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அல்குர்ஆனில் இலக்கணப் பிழை உள்ளது எனச் சிலர் கடந்த காலத்தில் விமர்சித்தனர்.

இந்த அடிப்படையில் இத்தஹதத் என்ற அரபு வார்த்தை இத்தஹத என்று வந்திருக்க வேண்டும் என்பது அவர்களுடைய வாதமாகும்.

ஆனால், அண்மைக்கால ஆய்வுகள் ஒரு அற்புதமான உண்மையைக் கண்டறிந்துள்ளன. சிலந்திவலை பின்னும் சிலந்தி ஆணா? பெண்ணா? என்று ஆய்வு செய்ததில் பெண் சிலந்திதான் வலை பின்னும் ஆற்றலுடையது. இதில் ஆண் சிலந்திக்குப் பங்கில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வகையில் அரபு இலக்கணப் பிரகாரம் சிலந்தி என்பது ஆண்பாலாக இருந்தாலும் சிலந்திகளில் பெண் சிலந்தி மட்டுமே வலை பின்னுகின்றது என்பதால் பெண்பால் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது நியாயமானது என்பது விஞ்ஞானபூர்வமாகவே உறுதி செய்யப்படுகின்றது. இந்த உதாரணத்தைக் கூறிவிட்டு அல்லாஹ் சொல்லும் செய்தியை சற்று அவதானியுங்கள்.

இவை உதாரணங்களாகும். இவற்றை மனிதர்களுக்காகவே நாம் கூறுகின்றோம். அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் இதனை விளங்கிக் கொள்ள மாட்டார்கள். (29:43)

இந்த உதாரணத்தை அறிவுடையோரே சரியாகப் புரிந்து கொள்வார்கள் என்று கூறி இதில் அறிவியல் உண்மை இருப்பதையும் அல்லாஹு தஆலா உணர்த்தி விடுகின்றான். அல்குர்ஆனில் ஒரு எழுத்து கூட வீணாக இடம் பெறவில்லை என்பதை நாம் இன்று சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டாலும் நாளைய உலகு அதைச் சரியாகப் புரிந்து கொள்ளும். இந்த உண்மை மூலம் அல்குர்ஆன் ஓர் இறைவேதம் என்பது மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்படுகின்றது.

இப்படி இஸ்மாயீல் சலபி விளக்கம் சொல்கிறார்.

இதை நன்கு படித்துப் பாருங்கள்.

பீஜே மொழியாக்கத்தில் ஈஸா நபியின் பிறப்பு குறித்த விளக்கத்திற்கு எந்தக் குற்றச்சாட்டுக்களை அவர் வைத்தாரோ அவை அனைத்தையும் அவரே இதில் செய்துள்ளார்.

சிலந்தி வீட்டை அமைத்துக் கொண்டது என்பது மட்டும் தான் அல்லாஹ்வின் வார்த்தை. சொந்தக் காரணம் சொல்லக் கூடாது என்று சூளுரையிட்டவர் இதற்குச் சில பக்க கட்டுரை ஏன் எழுதினார்?

வலை பின்னும் சிலந்தி பெண் இனம் தான். ஆண் சிலந்திக்கு வலை பின்னுவதில் பங்கில்லை என்று விஞ்ஞானக் கருத்தை இவ்வசனத்திற்கு விளக்கமாக ஏன் இணைக்கிறார்.

இந்த விளக்கம் இறைவசனத்தில் உள்ளதா? அல்லது விஞ்ஞானத்திலிருந்து இவர் புரிந்து கொண்ட சொந்த விளக்கமா?

சொந்தக் காரணம் கூறக்கூடாது என்று ஒரு புறம் கூறிக் கொண்டு பிறகு தானே அதைச் செய்வது அறிவுடைமையா?

மேலும் இவர் அளித்த விஞ்ஞான ரீதியான பதிலும் தவறானது.

அரபு மொழியில் சில சொற்கள் ஆண்பாலாகப் பயன்படுத்தப்படும். சில சொற்கள் பெண்பாலாகப் பயன்படுத்தப்படும் என்ற விஷயத்தைக் கூட சரியாக அறிந்து கொள்ளாமல் அவசர கோலத்தில் இந்த விளக்கத்தைக் கூறியுள்ளார்.

சிலந்தி எனும் சொல் அரபு மொழியில் ஆண்பால் என்றால் அதன் பொருள் என்ன? ஆண் சிலந்தியாக இருந்தாலும், பெண் சிலந்தியாக இருந்தாலும் அந்தச் சொல் ஆண் பாலாகத் தான் பயன்படுத்தப்படும் என்பது தான் பொருள். ஆண் சிலந்திக்கு ஆண்பாலும் பெண் சிலந்திக்கு பெண்பாலும் பயன்படுத்தப்படும் என்பது இதன் பொருளல்ல.

பெண் சிலந்திக்கு பெண் பால் சொல்லும், ஆண் சிலந்திக்கு ஆண்பால் சொல்லும் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இலக்கண ஆதாரத்தை இவர் காட்ட வேண்டும். இஷ்டத்துக்கு உளறி இருக்கிறார்.

ஏதோ தான் படித்த விஞ்ஞானக் கருத்தை எப்படியாவது பொருத்திக் காட்டி விஞ்ஞானியாக பெயர் எடுப்பதுதான் இதில் உள்ளது. எந்த அறிவும் இதில் இல்லை.

பெண் சிலந்தியே கூடு கட்டினாலும் அச்சொல்லுக்கு ஆண்பால் தான் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்விக்கு இவரது விளக்கத்தில் பதில் இல்லை.

அதே போல இங்கே இன்னொன்றையும் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

விஞ்ஞான விளக்கங்களை குர்ஆன், ஹதீஸ் ஒளியில் பி.ஜே விளக்கும் போது

இது தான்தோன்றித் தனமானது,

இஸ்லாத்தை அழிக்கக் கூடியது,

தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் செயல்

என்றெல்லாம் வாயில் வந்ததைக் கொட்டியவர் அதுவே தான் விஞ்ஞான கருத்தைக் குர்ஆன் வசனத்தில் விளக்கினால் அதற்கு இஸ்மாயில் சலபி சூட்டிக் கொண்ட பெயர் தஃவாப்பணி.

நாம் செய்தால் தலைக்கணம், தான் செய்தால் தஃவாக்களம்?

உண்மையில் இதுவல்லவா உச்சக்கட்ட தலைக்கணம்?

அல்குர்ஆனில் ஒரு எழுத்து கூட வீணாக இடம்பெறவில்லை என்பதை நாம் இன்று சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டாலும் நாளைய உலகு அதை சரியாகப் புரிந்து கொள்ளும் என்று இவர் கூறியுள்ளாரே?

நாளைய உலகு சரியாகப் புரிந்து கொள்ளும் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?

இன்று நமக்குப் புலப்படாத பல அறிவியல் உண்மைகள் நாளை வரும் தலைமுறைக்குப் புரிய வரும் என்பது தானே அர்த்தம்.

அதன் மூலம் குர்ஆன் இறைவேதம் என்பது உறுதியாகும் என்கிறார்.

அப்படி என்றால் இறை வார்த்தைகளைத் தாண்டி சிந்திக்க வேண்டும், விளக்கம் அளிக்க வேண்டும் என்பது தானே இதன் பொருள்.

வாதம் ஒன்பது

நவீன அறிவியல் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு குறைந்து விட்டதைப் பற்றி அங்கலாய்க்கும் போது அதற்குக் காரணம் என சிலவற்றை இஸ்மாயீல் சலபி பட்டியலிடுகிறார். அதில் முதலாவதாக அவர் குறிப்பிடும் காரணம் என்ன என்பதைப் பாருங்கள்.

அறிவியல் துறையில் முஸ்லிம்கள் தேக்க நிலையை அடைந்தமைக்குப் பல காரணங்களை இனங்காட்ட முடியுமாயினும் பிரதானமான காரணங்கள் இங்கு கோடிட்டுக் காட்டப்படுகின்றன.

  1. அல் குர்ஆன், சுன்னா புறக்கணிக்கப்பட்டமை.

முஸ்லிம் சமூகம் குர்ஆன் சுன்னாவை விட்டும் தூரமானது அல்லது அவற்றை ஆன்மீக தேவைகளுக்கு மட்டுமுரியதாக காணமுற்பட்டமை பிரதான காரணங்களில் ஒன்றாகும்.

முஸ்லிம்கள் இபாதத் என்ற பரந்த விடயத்தைக் குறிப்பிட்ட சில கிரிகைகளுக்குள் சுருங்கிக் கொண்டனர். வானம், பூமி, நட்சத்திரம், கோள்கள் பற்றியெல்லாம் சிந்திப்பதும், அல்லாஹ்வின் படைப்புக்களின் அற்புதங்களை ஆராய்வதும் இபாதத்தாக அவர்களால் நோக்கப்படவில்லை.

அல்குர்ஆனையும், சுன்னாவையும் முழுமையாக ஆராய்வது குறைவடைந்தது. பிக்ஹ் மஸாயில்களுக்குத் தீர்வு காண்பதற்காக மட்டும் குர்ஆன் சுன்னாவை அலசி ஆராய்ந்தார்கள். அதன் மறுபக்கங்களை மறந்து போனார்கள்.

குறிப்பாகப் பிற்காலத்தில் ஏற்பட்ட மத்ஹபு வேறுபாடுகள் முஸ்லிம்களின் முழுக் கவனத்தையும் அதன்பாலே ஈர்த்துக் கொண்டமையால் குர்ஆன், சுன்னா உரிய முறையில் ஆராயப்படவில்லை.

இல்முல் கலாம் என்ற பெயரில் தர்க்கவாதத்தை உருவாக்கி தேவையற்ற விடயங்களில் மயிர் பிளக்கும் ஆய்வில் ஈடுபட்டனர். ஒரு அறிஞரிடம் முஸ்லிம்கள் அறிவியல் துறையில் பின்தங்கியிருப்பதற்கும் கிறிஸ்தவர்கள் அத்துறையில் முன்னேற்றம் கண்டிருப்பதற்குமான காரணம் வினவப்பட்டபோது மார்க்கத்தைப் புறக்கணித்ததால் என பதில் கூறினார்.

கிறிஸ்தவர்கள் தமது மதப் பிரகாரம் வாழ்ந்திருந்தால் அறிவியலில் அவர்கள் முன்னேற்றம் கண்டிருக்க முடியாது. முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் புறக்கணிக்காது இருந்திருந்தால் இந்த தேக்க நிலை ஏற்பட்டிருக்காது என்பதை இது உணர்த்துகின்றது.

இதுதான் அவரது ஆராய்ச்சி.

இதில் அவர் என்ன சொல்ல வருகிறார்? பிக்ஹ் மஸாயில் போன்ற மார்க்கச் சட்டங்களுக்காக மட்டும் குர்ஆன், ஹதீஸை ஆராய்ந்தவர்கள் அறிவியல் ரீதியாக குர்ஆன் ஹதீஸை நோக்கவில்லை.

இது தான் அறிவியல் உலகில் முஸ்லிம்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று இஸ்மாயீல் சலபி இந்தக் கட்டுரையில் எழுதுகிறார்.

அல்லாஹ் சொன்ன வார்த்தையைத் தாண்டி காரணங்கள், விளக்கங்கள் கூறக்கூடாது என்று பீ.ஜேவுக்கு அறிவுரை கூறியவர் மார்க்க சட்டங்களைத் தாண்டி குர்ஆன் ஹதீஸை அறிவியல் பார்வையில் பாருங்கள் என்று மற்றவருக்கு அறிவுறுத்துகிறார்.

நடப்பு அறிவியலை குர்ஆன் ஹதீஸோடு ஒப்பு நோக்கி பீ.ஜே அவர்களோ நாமோ எழுதக் கூடாது; வேறு யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்பது தான் இஸ்மாயீல் சலபியின் நிலையோ?

பீ.ஜே அவர்களோ நாமோ அவ்வாறு எழுதினால் அது வீழ்ச்சி

இஸ்லாத்தை அழிக்கும் செயல்

தானோ மற்றவர்களோ எழுதினால் அது வளர்ச்சி

இஸ்லாத்தை வளர்க்கும் செயல்.

எம்மாதிரியான மனநிலையில் இஸ்மாயீல் சலபி உள்ளார் என்பதை அவரது நடுநிலையற்ற இப்பார்வை பளிச்சென்று காட்டுகிறது.

வாதம் பத்து

தனது சகாக்களுக்குச் சொல்வாரா?

குர்ஆன், நபிமொழிகளுக்கு சொந்தக் காரணம் கூறுவது கூடாது என்று சொல்லும் இஸ்மாயீல் சலபி அதில் உறுதியாக இருப்பார் எனில் இந்த பயான் முதல் கொண்டு தனது பல பயான்களைப் பதிவேற்றம் செய்யும் இஸ்லாம் கல்வி எனும் இணையதளத்தை விட்டும் முதலில் வெளியேற வேண்டும்.

ஏனென்றால் அதில் அனேக குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம், விஞ்ஞானம் என்ற பெயரில் அவரது சகாக்களால் சொந்தக் காரணங்கள் கூறப்படுகின்றன.

அதாவது இஸ்மாயீல் சலபிக்கு பிடிக்காத சொந்தக் காரணங்கள் கூறப்படுகின்றன.

உதாரணத்திற்கு இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் என்ற தலைப்பில் ஒரு நபிமொழியைப் பதிவிட்டு அதற்கு அவர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.

அந்த விளக்கத்தை இங்கு இடம்பெறச் செய்கிறோம்.

கருப்புத் தங்கம் அதிகம் விளையும் நாடு:

(மேற்காசியாவில் பாயும்) ஃபுராத் (யூப்ரட்டீஸ்) நதியானது தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்து விட வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி.

தங்கப் புதையல் வெளிப்படும் என்பதற்கு உண்மையிலே தங்கப் புதையல் வெளிப்படும் என்றும் கருதலாம். அது இன்னமும் நடைபெறவில்லை. எதிர்காலத்தில் தங்கம் கட்டி கட்டியாக அங்கு வெளிப்படும், அப்போது அதனை எடுப்பதற்காக நடைபெறும் சண்டையில் பலர் கொல்லப்படுவார்கள்.

அதே போல் கருப்புத் தங்கமான பெட்ரோல் வளம் எனவும் அதற்குப் பொருள் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்தவர்களுக்கு பெட்ரோல் பற்றிய ஞானம் அறவே இல்லாதிருந்ததாலும், அவர்களிடையே விலை உயர்ந்த பொருளாக தங்கம் மட்டுமே இருந்து வந்துள்ளதாலும் (தங்கம் அவர்களிடம் விலை மதிப்பு மிக்க பொருளாக கருதப்பட்டு வந்துள்ளது என்பதற்கு பல நபி மொழிகளில் சான்றுகள் உள்ளன. இது அதற்குரிய இடம் இல்லை என்பதால் தவிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது) பெட்ரோலைத் தங்கத்திற்கு ஒப்பிட்டு தங்கம் என்ற வார்த்தையையும், அது சார்ந்த கருத்துகளையுடைய வார்த்தைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கு பயன்படுத்தி இருக்கலாம்.

இவ்வாறு பேசுவது அரபி இலக்கியத்தில் ஒரு வகையைச் சார்ந்ததாகும்.

அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள் இந்த பெட்ரோலைப் பற்றி புரிந்து கொள்வார்கள் என்றிருந்தால் அம்மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் பெட்ரோல் பற்றிய செய்தியினை அன்றே எடுத்துக் கூறியிருப்பார்கள்.

அது சாத்தியமில்லாததால், மேற்கூறியவாறு அவர்களது வார்த்தைப் பிரயோகம் அமைந்து இருக்கலாம்.

இராக்கின் பெட்ரோல் மீது கொண்ட அவர்களது ஆசை, அறிவுக் கண்களை மறைத்து, அவர்களை மிருகங்களாக மாற்றியது. அதனால் நிரபராதியான பல இலட்ச அப்பாவி மக்கள் இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளார்கள். இது போன்ற கொடுமைகளும், சோதனைகளும் நடைபெறும் என்பதால் தான் அங்குள்ள மக்கள் அதனை எடுக்க வேண்டாம் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்து செய்திருக்கலாம்.

http://www.islamkalvi.com/?p=4852

இவற்றைப் படித்ததும் உங்களுக்கு ஒரு கணம் தலை சுற்றிப் போகும் என்பதை நாம் அறிவோம்.

ஒரு நபிமொழிக்கு எத்தனை இருக்கலாம் என்று பார்த்தீர்களா?

சொந்தக் காரணம் கூறக் கூடாது என்று கூறும் இஸ்மாயில் சலபியின் கூடாரத்திலிருந்து அதுவும் அந்த பயானையே பதிவேற்றம் செய்த அதே இணையதளத்திலிருந்து இத்தனை சொந்தக் காரணங்கள் வெளிப்படுவதைத் தடுக்காதது ஏனோ?

சரியான கருத்தைச் சொல்வதையே குறை கூறும் இஸ்மாயீல் சலபி பொருத்தமற்ற இந்த கருத்தை பற்றி வாய் திறக்காதது ஏன்?

இதில் எதுவும் சொந்தக் காரணங்களாக இஸ்மாயில் சலபிக்குத் தெரியாதது ஏன்?

எது தான்தோன்றித் தனம்?

ஈஸா நபியின் பிறப்பு ஓர் அற்புதம் என்பதுடன் அது தற்காலத்தில் தோன்றியுள்ள குளோனிங் பற்றி சுட்டிக் காட்டுகிறது என்று பீ.ஜே அவர்கள் தனது தர்ஜுமாவில் விளக்கம் அளித்திருப்பது தான்தோன்றித் தனமான விளக்கம் என்று பொங்கியுள்ளார்.

தான்தோன்றித் தனத்தின் மொத்த உருவமான இஸ்மாயில் சலபி நம்மைப் பார்த்து, தான்தோன்றித் தனமாக விளக்கம் அளிப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார்.

இஸ்மாயில் சலபி மீது நாம் வைக்கும் இக்குற்றச்சாட்டு அவரைப் போன்று குரோதத்தில் வைக்கப்படும் குற்றச்சாட்டு அல்ல.

நூறு சதவிகிதம் உண்மையான, துளியும் சந்தேகமற்ற, மெய்யான குற்றச்சாட்டாகும்.

அவர் விளக்கம் என்ற பெயரில் இஸ்லாத்தின் அடிப்படையைக் குழி தோண்டிப் புதைப்பவர் என்பதற்கு அவர் மொழிபெயர்ப்பாளராக அங்கம் வகித்து வெளியிடப்பட்ட குர்ஆன் மொழிபெயர்ப்பு பெரும் சான்றாகும்.

நபிகளாருக்கு வஹி எனும் இறைச் செய்தி வந்தது சாத்தியமே என்பதை நிறுவ சில பல சான்றுகளை? அவரது தர்ஜூமாவில் அடுக்குகிறார்.

அதில் முத்தாய்ப்பாக, முக்கிய சான்றாக அவர் முன்வைக்கும் தகவல்களைப் பாருங்கள்.

மெஸ்மரிஸம்:

இதன் மூலம் ஒருவரது புற உணர்வுகளை மயக்கி அவரது ஆன்மாவுடன் மற்றொருவர் தொடர்பு கொள்ள முடியும். மயக்கபட்டவரது ஆன்மா சம்பந்தமான கேள்விகளைக் கேட்டு பதிலும் பெற முடியும். அந்த ஆன்மாவிற்கு சில கட்டளைகளையும் இட முடியும்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் ஆன்மாவுடன் உரையாட முடியுமென்றால் ஏன் அல்லாஹ் தான் நாடிய ஒரு சில அடியார்களுடன் உரையாட முடியாது? இதில் மறுப்பதற்கு என்ன இருக்கிறது?

அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா (JASM) வெளியிட்ட தர்ஜூமா பக்கம் 964 ல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

இஸ்மாயில் சலபியும் இதன் மொழிபெயர்ப்புக் குழுவில் ஒருவர்.

வஹி சாத்தியமே என்பதை நிறுவ மெஸ்மரிஸத்தை ஆதாரமாகக் கொண்டு வருகிறார்.

மெஸ்மரிஸத்தில் என்னவெல்லாம் செய்ய முடியுமாம்?

ஒருவரை மயக்கமுறச் செய்து அவரது ஆன்மாவுடன் தொடர்பு கொள்ள முடியுமாம். கேள்விகளைக் கேட்டு பதிலும் பெற முடியுமாம். விட்டால் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம், இனிய மார்க்கம் போன்ற கேள்வி பதில் நிகழ்ச்சிகளையே நடத்தி விடுவார்கள் போலும்.

என்ன ஒரு கதை இது.?

பழைய சினிமா படங்களில் டாக்டர் ஒரு மனநோயாளியை விசாரிக்கும் போது உனக்கு இப்போது 20 வயது அப்போது என்ன செய்தாய் சொல் என்ற பாணியில் கேள்வி கேட்க அவரும் நான் இதைச் செய்தேன் அதைச் செய்தேன் என்று பதிலளிப்பார்களே, அந்த மெஸ்மரிஸம் எனும் கட்டுக்கதையை உண்மை என நம்புவது மட்டுமல்ல, அதை ஒப்பற்ற வஹியோடு ஒட்டப் பார்க்கிறாரே? இதுவல்லவா தான்தோன்றித் தனம்.

எதற்கு எது ஆதாரம்?

மெஸ்மரிசம் என்பது ஒரு கட்டுக்கதை. சோதித்துப் பார்த்தால் அது எவ்வளவு பெரிய கட்டுக்கதை என்பது தெரியவரும்.

மெஸ்மரிஸம் உண்மை என்றால் முக்கிய குற்ற வழக்குகளில் கைது செய்யப்படக் கூடியவர்களை எல்லாம் இந்த முறையில் இலகுவாக விசாரித்து விடலாமே.

நீ எப்படி குண்டு வைத்தாய்?

பாராளுமன்றத்தைத் தாக்க எப்படித் திட்டமிட்டாய்?

இரயிலைக் கவிழ்க்க எப்படிச் சதி செய்தாய்?

என்றெல்லாம் மெஸ்மரிச முறையில் கேள்வி எழுப்பி சமூக விரோத குற்றவாளிகளிடமிருந்து உண்மைகளை இலகுவாக, இலாவகமாகக் கறந்து விடலாமே.

கோர்ட், கேஸ், சாட்சி, வழக்கு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என வருடக்கணக்கில் அலைவதையும் மெஸ்மரிஸம் தேவையற்றதாக்கி இருக்கும்.

அப்படி எதுவும் நடக்காததிலிருந்து மெஸ்மரிஸம் என்பது எவ்வளவு பெரிய டுபாக்கூர் தனம் என்பது புரிய வரும்.

இந்த மெஸ்மரிஸம் தான் வஹி சாத்தியம் என்பதற்கு ஆதாரமாம்.

அதிலும் இது பற்றி அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் ரொம்ப அனாயசமானவை. அதை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் ஆன்மாவுடன் உரையாட முடியுமென்றால் ஏன் அல்லாஹ் தான் நாடிய ஒரு சில அடியார்களுடன் உரையாட முடியாது? இதில் மறுப்பதற்கு என்ன இருக்கிறது?

தவ்ஹீத் என்ற பெயரில் இருந்து கொண்டு ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் ஆன்மாவுடன் உரையாட முடியும் என்று எழுதுவதற்கும், அதை குர்ஆனிலேயே பிரசுரம் செய்வதற்கும் அதையே வஹி சாத்தியம் என்பதை நிறுவ ஆதாரமாக முன்வைப்பதற்கும் பெயர் தான் தான்தோன்றித் தனம்.

வஹி சாத்தியம் என்பதை நிறுவ இத்தகைய மெஸ்மரிஸம் என்ற கட்டுக் கதையைக் கொண்டு வந்து நிலைநிறுத்த வேண்டிய அவசியம் என்ன?

புதிய புதிய விளக்கங்களை அளித்து இஸ்லாத்தை உண்மைப்படுத்த வேண்டும் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர் இஸ்மாயில் சலபி தான் என்பதை இந்த விளக்கம் தெளிவாகப் பறைசாற்றுகிறது.

இத்துடன் முடிந்து விடவில்லை. வஹி சாத்தியமே என்பதற்கு இன்னுமொரு ஆதாரத்தை வைக்கிறார்.

அது இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வண்ணம் அமைந்திருக்கிறது என்பதைப் படிப்போர் யாரும் அறியலாம்.

டெலிபதி:

இது ஒரு மனிதரில் நிகழும் அற்புத ஆற்றலாகும். இந்த ஆற்றலால் தூரத்தில் இருப்பவர் உள்ளத்தை எவ்வித சடரீதியான தொடர்பும் இன்றி இயக்க முடியும். சேனிலை உணர்வாட்சி எனும் இந்நிலையை அடைபவர்கள் தூரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை நேரடியாகக் காண்பது போல கூறுவர். உமர் (ரலி) அவர்களது வரலாற்றில் இது போன்றதொரு நிகழ்ச்சி நடந்தது பிரபல்யமானதாகும். இந்த வரலாறும் அது கூறும் தொலை உணர்வு எனும் அற்புத நிகழ்வும் சாத்தியமானதே என்பதை இன்றைய அறிவியல் உலகு ஒப்புக் கொள்கின்றது.

(அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா வெளியிட்ட தர்ஜூமா பக்கம் 964)

ஏதோ டெலிபதியாம். அற்புத ஆற்றலாம்.

தூரத்தில் உள்ளவரது உள்ளத்தை புறச்சாதனம் இல்லாமல் இயக்க முடியுமாம். இந்த டெலிபதி நிலையை அடைபவர் தூரத்தில் நடக்கும் காட்சிகளை நேரடியாகக் காண்பது போல விளக்குவாராம். இதை அறிவியல் உலகு வேறு ஒப்புக் கொள்கின்றதாம். இந்தக் கொடுமையை எங்கு போய்ச் சொல்ல?

இது என்ன திருக்குர்ஆன் தர்ஜூமாவா? அல்லது விக்கிரமாதித்தன், விட்டலாச்சாரியார் கதைகளா?

புறச்சாதனம் இல்லாமல் மனிதனின் உள்ளத்தை இயக்க முடியும் என்றால் இதைத் தானே பைஅத், முரீது பேர்வழிகள் சொன்னார்கள். அவர்கள் அதற்கு டெலிபதி என்று பெயரிடவும் இல்லை. அறிவியல் உலகை ஆதாரமாக்கவும் இல்லை. அவ்வளவு தான் வித்தியாசம்.

புறச்சாதனமின்றி உள்ளத்தைப் புரட்டக்கூடியவன் அல்லாஹ் ஒருவனே.

سنن الترمذي

2140 - حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ: «يَا مُقَلِّبَ القُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ

உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதியாக ஆக்கி வைப்பாயாக! என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரார்த்தனையாக இருந்தது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : திர்மிதீ 3511

صحيح مسلم

6921 - حَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ وَابْنُ نُمَيْرٍ كِلاَهُمَا عَنِ الْمُقْرِئِ قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ قَالَ حَدَّثَنَا حَيْوَةُ أَخْبَرَنِى أَبُو هَانِئٍ أَنَّهُ سَمِعَ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِىَّ أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ يَقُولُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِنَّ قُلُوبَ بَنِى آدَمَ كُلَّهَا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ كَقَلْبٍ وَاحِدٍ يُصَرِّفُهُ حَيْثُ يَشَاءُ ». ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « اللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ ».

மனிதனின் உள்ளங்கள் அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கிடையே உள்ளன. அவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் 4798

உள்ளங்கள் இறைவனது கைவசத்திலேயே உள்ளன; அதில் எவருக்கும் எந்தப் பங்குமில்லை என்பதற்கு இவை தெளிவான சான்றுகள்.

இதற்கு மாற்றமாக எவனோ ஒருவன் டெலிபதி என்று காதில் பூ சுற்றினால் அதற்கு அறிவியல் சாயம் பூசி அதைக் கொண்டு வஹியை உண்மைப்படுத்த முன் வந்திருக்கும் இஸ்மாயில் சலபியின் போக்கு இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் செயலாகும்.

இத்தகைய கருத்துக்களை கப்ர் வணங்கி அப்துர் ரஊப் தான் சொல்வார் என நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் இஸ்மாயில் சலபியும் தனது தர்ஜூமாவில் சொல்வதைப் பார்க்கும் போது இருவருக்குமிடையில் இந்த விஷயத்தில் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை அறியலாம்.

இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் அவரது டெலிபதி அறிவியல் விளக்கம் இன்னும் நீள்கிறது. இதோ அதன் தொடர்ச்சி.

இத்தொலை உணர்வு பற்றி கலாநிதி அல் குஸைப்காரில் என்பவர் தனது The Man UK known எனும் நூலில், இவ்வுணர்ச்சியால் ஒருவரைத் தூங்கச் செய்யவும், சிரிக்கச் செய்யவும், அழச் செய்யவும் முடிகின்றது. மேலும், தூரத்திலிருக்கும் ஒருவர் அறிந்திராத வார்த்தைகளை அல்லது எண்ணங்களை அவரது உள்ளத்தில் உதிக்கச் செய்யவும் முடிகின்றது. சேனிலை உணர்வாட்சியை எவராலும் எவ்வித கருவியைப் பயன்படுத்தியும் அறிந்து கொள்ள முடியாது. ஒருவன் தான் விரும்பும் கருத்துக்களைப் பூரணமாகவே தூரத்திலிருக்கும் பிறிதொரு மனிதனுக்கு எவ்விதச் சாதனத்தையும் பயன்படுத்தாமலேயே உதிக்கச் செய்ய முடியுமாயின், ஏன் அது போன்ற ஒரு செயல் இறைவனுக்கும் அவன் அடியானுக்குமிடையில் இடம்பெற முடியாது? எனக் கூறுகின்றார்.

இவ்வாறு பல்வேறு வழிகள் மூலம் வஹியின் சாத்தியத்தை நாம் நம்பலாம்.

அல்லாஹ்வின் வேதத்தின் தமிழாக்கத்தில் அப்பட்டமான ஷிர்கை தந்திரமாக இவர் நுழைத்திருப்பது தெரிகிறதா?

தூரத்திலிருக்கும் ஒருவர் அறிந்திராத வார்த்தைகளை அல்லது எண்ணங்களை அவரது உள்ளத்தில் உதிக்கச் செய்ய முடியும் என்றும், இதை எவராலும் எவ்வித கருவியைப் பயன்படுத்தியும் அறிந்து கொள்ள முடியாது என்றும் குறிப்பிடுகிறார்.

இதை எந்தக் கருவியைப் பயன்படுத்தியும் கண்டுபிடிக்க முடியாது என்றால் இப்படி ஒன்று இருக்கிறது என்பதை மட்டும் எப்படி? எந்தக் கருவியை வைத்து கண்டுபிடித்தார்கள்? இவர்கள் கூறுவது ஏற்புடையதாக உள்ளதா?

மேலும் இதைச் சொன்னது அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரோ அல்ல. யாரோ குஸைப் காரிலாம்.

யார் இவர்? நபிகள் நாயகத்திடம் பாடம் பயின்ற நபித்தோழரா? இஸ்மாயில் சலபி விளக்குவாரா?

யாரோ ஒரு கிறுக்கன் எதையோ சொன்னால் அதைக் கொண்டு வஹியை உண்மைப்படுத்த முனைவது தான்தோன்றித் தனமில்லையா?

ஒருவன் தான் விரும்பும் கருத்துக்களைப் பூரணமாகவே தூரத்திலிருக்கும் பிறிதொரு மனிதனுக்கு எவ்விதச் சாதனத்தையும் பயன்படுத்தாமலேயே உதிக்கச் செய்ய முடியுமாயின், ஏன் அது போன்ற ஒரு செயல் இறைவனுக்கும் அவன் அடியானுக்குமிடையில் இடம்பெற முடியாது?

நஊது பில்லாஹ் அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

முதலில் மெஸ்மரிஸத்தை வைத்து வஹி சாத்தியம் என்பதை விளங்கலாம் என்றார்கள்.

இப்போது டெலிபதியும் வஹியும் ஒன்றுதான் என்கிறார்கள்.

இறைவனின் ஒப்பற்ற தூதுச் செய்தியை அடிப்படை ஆதாரமற்ற, டெலிபதியுடன் ஒப்பிட்டு வஹியையும் பொய்யாக்க முனைகிறார்கள்.

இதை விட இஸ்லாத்தை வேறு யாராலும் கேவலப்படுத்த முடியாது.

இது தான் வஹி சாத்தியம் என்பதை விளக்கும் விளக்கங்களா?

விஞ்ஞான ஒளியில் இஸ்லாத்தை உண்மைப்படுத்தப் போகிறேன் என்ற பெயரில் தான்தோன்றித் தனமான விளக்கங்களையும் இஸ்லாத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலையும் ஒரு சேர அரங்கேற்றுவது இஸ்மாயில் சலபியே என்பது அவரது இந்த தர்ஜூமா விளக்கம் சந்தேகமற நிரூபணம் செய்கிறது.

ஸலபியின் விமர்சனம் – 04

  1. அமல்கள் விடயத்திலும் குர்ஆன் சொல்லும் ஒழுங்கை மீறி தமிழுக்காக என தன் இஷ்டத்திற்கு வரிசைப்படுத்திக் கூறுவது:

வுழூ என்பது முக்கியமான மார்க்கக் கடமையாகும். வுழூச் செய்யும் போது,

  1. முகத்தைக் கழுவ வேண்டும்.
  2. முழங்கை வரை இரு கரங்களையும் கழுவ வேண்டும்.
  3. தலையை மஸ்ஹ் செய்ய வேண்டும்.
  4. கால்களை கரண்டை வரை கழுவ வேண்டும்.

இது தான் குர்ஆன் கூறும் தொடர் ஒழுங்காகவும் முகம், கை கழுவப்பட வேண்டியது, தலைதண்ணீரால் தடவப்பட வேண்டியது, கால் கழுவப்பட வேண்டியது, கழுவப்பட வேண்டிய உறுப்புக்களுக்கு மத்தியில் தடவப்பட வேண்டிய தலையையும் அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ்வுக்கே பாடம் சொல்லுவது போல் இந்த ஒழுங்கை மாற்றுகின்றனர்.

பீ.ஜே. தர்ஜுமா:

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும் முட்டுக்கால் வரை உங்கள் கைகளையும்இ கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவிக் கொள்ளுங்கள்….” (5:6)

என மொழியாக்கம் செய்துள்ளார்.

இவரின் தர்ஜுமாவைப் பார்த்து வுழூச் செய்தால் வுழூ செல்லாத நிலையை உருவாக்கியுள்ளார். கழுவக் கூடிய உறுப்புக்களை ஒரு ஒழுங்கிலும் தடவக் கூடிய உறுப்பைத் தனியாகவும் சொல்ல வேண்டும் என்று அல்லாஹ்வுக்கு சொல்லிக் கொடுப்பது போல் இயங்கியுள்ளார். இந்தக் குறைகள் பல தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் கூட தனது தவறைத் திருத்தாது அதற்கு பிடிவாதத்துடன் நியாயம் கற்பித்தும் வருகின்றார்.

நமது பதில்:

இவ்வசனத்தில் கழுவுங்கள் என்ற சொல் ஒரு தடவை தான் உள்ளது. மொழி பெயர்ப்பிலும் ஒரு தடவை தான் வர வேண்டும்.

அரபு மூலத்தில் உள்ளபடி நேரடி மொழி பெயர்ப்பு இதுதான்.

உங்கள் முகங்களையும் முட்டுக்கால் வரை உங்கள் கைகளையும், கழுவுங்கள்.  உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவிக் கொள்ளுங்கள. கரண்டை வரை உங்கள் கால்களையும்” (5:6)

இப்படித்தான் மூலத்தில் உள்ளது. கால்களையும் என்று மட்டுமே உள்ளது. இதை இப்படியே விட்டு விட்டால் கால்களைக் கழுவுங்கள் என்று பொருள் கொள்வதா? அல்லது கழுவுங்கள் என்று பொருள் கொள்வதா? என்ற சந்தேகம் வரும். நேரடியான வாசகத்தின் படி பார்த்தால் தடவிக் கொள்ளுங்கள் என்பதை ஒட்டி கால்களையும் என்று சொல்லப்படுவதால் கால்களை மஸஹ் செய்ய வேண்டும் என்ற கருத்தைத் தான் தரும். ஆனால் கால்கள் கழுவப்பட வேண்டிய உறுப்பு என்று ஹதீஸ்களில் உள்ளதால், முன்னர் சொல்லப்பட்ட கழுவிக் கொள்ளுங்கள் என்பதுடன் இதை இணைக்க வேண்டும். எனவே தான் கால்களையும் என்பதை எங்கே இணைக்க வேண்டுமோ அங்கே இணைத்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

மற்றவர்கள் மொழி பெயர்க்கும் போது கால்கலையும் என்பதுடன் கழுவிக் கொள்ளுங்கள் என்று இன்னொரு தடவை சேர்த்து மொழி பெயர்த்துள்ளனர். அல்லாஹ் ஒரு தடவை தான் கழுவிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளான். அதில் தான் கழுவப்படும் மூன்றையும் சேர்க்க வேண்டும். இரு தடவை கழுவிக் கொள்ளுங்கள் என்று சேர்கக்க் கூடாது.

மேலும் இந்த வரிசைப்படி உளு செய்தால் செல்லுமா? என்ற அபத்தமான கேள்வியை கேட்டுள்ளார். குர் ஆன் மட்டும் ஆதாரம் என்பவர்களிடம் இப்படிக் கேட்கலாம். ஆனால் ஹதீஸ்களும் மார்க்கா ஆதாரம் என்பதை நாங்கள் நம்புகிறோம். அதில் எப்படி எந்த வரிசைப்படி உளூ செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் இதில் சொல்லப்படாத இன்னும் பல விஷயங்களும் ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளன. ஹதீஸ்களைப் பார்த்து முறைப்படி நாங்கள் உளு செய்து கொள்வோம்.

5:55 வசனத்தில் ருகூவு செய்தவர்களாக ஸகாத் கொடுப்பார்கள் என்ற வசனத்தை இஸ்மாயீல் சலபி இவ்வசனத்தைப் புரிந்து கொண்டது போல் புரிந்து கொண்டால் ஸகாத் கொடுப்பவர்கள் ருகூவு செய்த நிலையில் கொடுக்க வேண்டும் என்று புரிந்து கொள்வார்களா? சிந்தனையைப் பயன்படுத்தி புரிந்து கொள்வார்களா?

மார்க்கத்தை சரியாக புரிந்து கொள்ளாத காரணத்தினாலும், குர்ஆனுடைய போங்கை சரியாக இனம் காணததினாலும் தான் இவர்கள் இத்தகைய கேள்விகளை முன்வைக்கிறார்கள் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஸலபியின் விமர்சனம் – 05

  1. மொழிபெயர்ப்புப் பிழைகள்:

பல இடங்களில் குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக இவர் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். சிலவேளை அது குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாகவும் அமைந்துள்ளது.

உதாரணம்:

ஒரு கணவன் தன் மனைவியை மீட்டிக் கொள்ளக் கூடிய தலாக் கூறி இத்தாக் காலமும் முடிந்த பின்னர் அவர்களது திருமண உறவு முறிந்துவிடும். அதன் பின்னர் அவர்கள் விரும்பினால் புதிய நிகாஹ் செய்து கொள்ளலாம். இவ்வாறு பிரிந்தவர்கள் மீண்டும் மணம் செய்ய விரும்பினால் அதைத் தடுக்கக் கூடாது என குர்ஆன் கூறுகின்றது.

‘நீங்கள் (உங்கள்) மனைவியர்களை (மீளக் கூடிய) விவாகரத்து செய்து அவர்கள் தங்கள் (இத்தா) காலக் கெடுவின் எல்லையை நிறைவு செய்து (மீண்டும்) அவர்கள் தமக்குள் நல்ல முறையில் உடன்பட்டுக் கொண்டால் (அப்)பெண்கள் தங்களது கணவன்மார்களை (மறுமுறை) மணமுடிப்பதை (பொறுப்புதாரிகளாகிய) நீங்கள் தடுக்க வேண்டாம்.

உங்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்பவர் இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகின்றார். இதுதான் உங்களுக்கு மிகத் தூய்மையானதும் பரிசுத்தமானதுமாகும். அல்லாஹ் தான் நன்கறிவான்’ நீங்களோ அறியமாட்டீர்கள்.” (2:232)

இதைப் பீ.ஜே. பின்வருமாறு மொழியாக்கம் செய்துள்ளார்.

‘பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்துவிட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்….” (2:232)

விவாகரத்துச் செய்த கணவன்-மனைவி இருவரும் மீண்டும் இணைந்து வாழ விரும்பினால் தடுக்காதீர்கள் என்ற குர்ஆனின் கருத்தை இவரது மொழிபெயர்ப்பு தவறும் அடைப்புக்குறியும் விவாக ரத்து செய்யப்பட்ட பெண் மறுமணம் செய்வதைத் தடுக்காதீர்கள் என மாற்றியுள்ளன.

நமது பதில்.

இவ்வசனத்திற்கு  இரண்டு விதமாக பொருள் செய்யலாம்.

இது குறித்து ஷவ்கானி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்.

فتح القدير للشوكاني (1/ 279)

الْخِطَابُ فِي هَذِهِ الْآيَةِ بِقَوْلِهِ: وَإِذا طَلَّقْتُمُ وَبِقَوْلِهِ: فَلا تَعْضُلُوهُنَّ إِمَّا أَنْ يَكُونَ لِلْأَزْوَاجِ، وَيَكُونَ مَعْنَى الْعَضْلِ مِنْهُمْ: أَنْ يَمْنَعُوهُنَّ مِنْ أَنْ يَتَزَوَّجْنَ مَنْ أَرَدْنَ مِنَ الْأَزْوَاجِ بَعْدَ انْقِضَاءِ عِدَّتِهِنَّ لِحَمِيَّةِ الْجَاهِلِيَّةِ، كَمَا يَقَعُ كَثِيرًا مِنَ الْخُلَفَاءِ وَالسَّلَاطِينِ غَيْرَةً عَلَى مَنْ كُنَّ تَحْتَهُمْ مِنَ النِّسَاءِ أَنْ يَصِرْنَ تَحْتَ غَيْرِهِمْ، لِأَنَّهُمْ لِمَا نالوه من رئاسة الدُّنْيَا وَمَا صَارُوا فِيهِ مِنَ النَّخْوَةِ وَالْكِبْرِيَاءِ يَتَخَيَّلُونَ أَنَّهُمْ قَدْ خَرَجُوا مِنْ جِنْسِ بَنِي آدَمَ، إِلَّا مَنْ عَصَمَهُ اللَّهُ مِنْهُمْ بِالْوَرَعِ وَالتَّوَاضُعِ وَإِمَّا أَنْ يَكُونَ الْخِطَابُ لِلْأَوْلِيَاءِ، وَيَكُونَ مَعْنَى إِسْنَادِ الطَّلَاقِ إِلَيْهِمْ:

தடுக்க வேண்டாம் என்ற கட்டளை கணவனுக்கு உரியதாகவும் இருக்கலாம். அப்படி பொருள் கொண்டால் வேறு ஒருவனை மணக்க தடுக்கக் கூடாது என்ற கருத்து கிடைக்கும்.

இந்த வாசக அமைப்புக்கு இப்படியும் பொருள் கொள்ளலாம் என்பதால் நாம் இந்த பொருளை தேர்வு செய்துள்ளார்.

பீஜேயின் மொழி பெயர்ப்புப்படி விவாகரத்து செய்யப்பட்ட பின்னர் யாரை மணப்பது என்று தேர்வு செய்யும் உரிமை பெண்ணுக்கு உள்ளது.

அவள் விரும்பினால் முதல் கணவனை திருமணம் செய்யலாம். விரும்பாவிட்டால் வேறு கணவனையும் மணக்கலாம் என்ற விரிந்த கருத்து உள்ளது.

இவர் முதல் கணவனையும் திருமணம் செய்யலாம் என்பது மட்டுமின்றி அவனைத் தான் திருமணம் செய்தாக வேண்டும் என்பது இல்லை, என்ற அழகான முறையில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இதனை புரிந்த கொள்ளாமல், எப்படியாவது நமது மொழிபெயர்பை பிழை காணுவதற்காக பெரும் பிரயத்தனப் படுகிறார்.

ஸலபியின் விமர்சனம் – 06

  1. மொழிபெயர்ப்புத் தவறுகள்:

இவரது மொழிபெயர்ப்பில் பல இடங்களில் சில வார்த்தைகளுக்கு மொழி பெயர்ப்புச் செய்யப்படாமல் விடுபட்டுள்ளது. மனிதன் என்ற அடிப்படையில் ஏற்பட்ட தவறாக இது இருப்பின் குற்றம் பிடிப்பதற்குரியதல்ல. இருப்பினும் பல பதிப்புக்களைக் கண்ட பின்னரும் பல குறைகளை பலரும் சுட்டிக் காட்டிய பின்னரும் அவற்றைத் திருத்துவதில் அவர் கரிசணை காட்டவில்லை.

நமது பதில்

நமது மொழியாக்கத்தில் என்ன மொழிபெயர்ப்புத் தவறு இருக்கிறது என்பதை முறைப்படி ஆதாரங்களுடன் எந்த இடத்திலும் சுட்டிக்காட்டாமல் ஏதாவது சொல்லி விட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காக இதனை எழுதியுள்ளார்.

இதில் எவ்விதமான அடிப்படை வாதங்களும் கிடையாது. இஸ்மாயீல் ஸலபி அவர்கள் நமது மொழிபெயர்ப்பின் மொழியாக்கப் பிழைகளை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தால் அதற்கும் ஆதாரத்துடன் வரிக்கு வரி பதில் வழங்கப்படும். இன்ஷா அல்லாஹ்.

ஸலபியின் விமர்சனம் – 07

  1. மொழிபெயர்ப்புத் தில்லுமுல்லுகள்:

இவர் சூனியம் தொடர்பில் சூனியம் என்றொரு கலை உண்டு. அதனால் நினைத்ததையெல்லாம் செய்ய முடியாவிட்டாலும் சில பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார். அப்போது அவரது எழுத்துக்களில் 2:102 வசனத்தை மொழியாக்கம் செய்ததற்கும் சூனியம் தொடர்பில் அவரது நிலப்பாடு மறிய பின்னர் செய்த மொழிபெயர்ப்புக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன.

‘எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது.”

என்று மொழியாக்கம் செய்தவர் சூனியம் இல்லையென்ற கருத்துக்கு மாறிய பின் ‘பிஹி” என்பதற்கு மொழியாக்கம் செய்யாமல் விட்டார். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என மொழியாக்கம் செய்தார். இந்தப் பிழை சுட்டிக்காட்டப்பட்டு பல பதிப்புகள் வெளிவந்த பின்னர் தான் திருத்தம் செய்துள்ளார்.

அவ்வாறே இந்த வசனத்தில் வரும் ‘பயத அல்லமூன” என்ற வார்த்தையில் வரும் ‘ப” வுக்கு ஆரம்பத்தில் அப்படியிருந்தும் சூனியத்தைக் கற்றனர் என்ற கருத்தில் அர்த்தம் செய்தார். பின்னர் ‘ப”வுக்கு அர்த்தம் செய்யாமல் விட்டார். இப்போது எனவே என அர்த்தம் செய்து அவர்கள் சூனியத்தைப் படிக்கவில்லை வேறு ஒரு கலையைப் படித்தனர் என அர்த்தம் செய்கின்றார். இவரது கொள்கை மாற்றத்திற்கு ஏற்ப குர்ஆனின் மொழிபெயர்ப்பில் தில்லுமுல்லுகளைச் செய்து வருகின்றார்.

நமது பதில்

02:102 வது வசனத்திற்கு பீ.ஜெ அவர்கள் இவ்வாறு மொழியாக்கம் செய்துள்ளார்.

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். ஸுலைமான் (ஏகஇறைவனை) மறுக்கவில்லை. மேலும் (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே (ஏகஇறைவனை) மறுத்தனர். "நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவனை) மறுத்து விடாதே!'' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. எனவே எதன் மூலம் கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவார்களோ அதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் அனுமதியின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. மேலும் அவர்கள் தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். "இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை" என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?

பீ.ஜெ அவர்கள் மேற்கண்டவராறு 02:102 வது வசனத்திற்கு மொழியாக்கம் செய்தமைக்கான காரணத்தையும் தனது குர்ஆன் மொழிபெயர்ப்பில் இவ்வாறு விளக்குகிறார்.

சூனியத்தின் மூலமாக சில காரியங்களைச் செய்யலாம் என்ற கருத்துடையவர்கள் இவ்வசனத்தை (2:102) எடுத்துக்காட்டி சூனியத்தினால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என இவ்வசனம் சொல்வதாக வாதிடுகின்றனர்.

சூனியத்தின் மூலம் கணவன் மனைவிக்கு இடையே பிரிவை ஏற்படுத்த முடியும் என்று இவ்வசனம் சொல்கிறதா என்பது மட்டும் இங்கே விளக்கப்படுகிறது.??

இவ்வசனம் சொல்வது என்ன? இதை எவ்வாறு புரிந்து கொள்வது? இவ்வசனம் சூனியத்துக்கு ஆற்றல் உள்ளது எனச் சொல்கிறதா? எதிராகச் சொல்கிறதா என்பதை நாம் விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டும்.

இதன் சரியான பொருளை அறிந்து கொள்வதற்கு முன்னால் மேற்கண்ட வசனத்திற்கு அப்துல் ஹமீது பாக்கவி, ஜான் ட்ரஸ்ட், ரஹ்மத் அறக்கட்டளை ஆகியோர் வெளியிட்ட மொழிபெயர்ப்புகளைக் காண்போம்.

அப்துல் ஹமீது பாக்கவி மொழி பெயர்ப்பு வருமாறு:

 மேலும், (அந்த யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியைப் பற்றி (அவர்களுக்கு) ஷைத்தான் ஓதிக் (கற்றுக்) கொடுத்திருந்த (சூனியம், மாய மந்திரம் ஆகிய)வைகளைப் பின்பற்றினார்கள். ஆனால் ஸுலைமானோ நிராகரிப்பவராக இருக்கவில்லை; அந்த ஷைத்தான்கள்தான் உண்மையாகவே நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மனிதர்களுக்கு சூனியத்தையும் "பாபிலூன்" (என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்னும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்தவற்றையும் கற்றுக்கொடுத்து வந்தார்கள். அவ்விரு மலக்குகளோ (அவர்களிடம் சூனியத்தைக் கற்கச்சென்ற மனிதர்களை நோக்கி) "நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்றால் நீங்கள் நிராகரிப்பவர்களாகி விடுவீர்கள். ஆதலால் இதைக்கற்று) நீங்கள் நிராகரிப்பவர்களாகிவிட வேண்டாம் என்று கூறும் வரையில் அவர்கள் அதனை ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதேயில்லை, (இவ்விதம் கூறிய பின்னும் இதைக் கற்க விரும்பியவர்கள்) கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவினை உண்டுபண்ணக் கூடிய வழியை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் கட்டளையின்றி அதன் மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைத்திட முடியாது. அன்றி, அவர்களுக்கு யாதொரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக் கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். தவிர, (இறை நம்பிக்கைக்குப் பதிலாக) அ(ச் சூனியத்)தை எவன் விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதைத் தெளிவாக சந்தேகமற அவர்களும் அறிந்திருக்கிறார்கள். அன்றி, தங்களையே விற்று அவர்கள் எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!

ஜான் ட்ரஸ்ட் மொழிபெயர்ப்பு வருமாறு:

அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக் கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் – மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே – கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக் கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளிலும் சொல்லப்படுவது என்ன?

இரு வானவர்கள் மக்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுக்க வந்தனர்.

அவ்வாறு கற்றுக் கொடுக்கும்போது சூனியத்தைக் கற்காதே! கற்றால் காஃபிராகி விடுவாய் என்று சொல்லாமல் அவர்கள் கற்றுக் கொடுக்க மாட்டார்கள்.

இப்படி அவர்கள் எச்சரிக்கை செய்த பின்பும் சூனியத்தைக் கற்க விருப்பம் கொண்டவர்கள் கணவன் மனைவியரிடையே பிரிவினை ஏற்படுத்துவதைக் கற்றுக் கொண்டார்கள்.

மேற்கண்ட இரண்டு மொழிபெயர்ப்புகளிலும் சூனியத்தைக் கற்க விரும்பியவர்கள் சூனியத்தின் ஒரு வகையான கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்துவதைக் கற்றுக் கொண்டனர் என்ற கருத்து வருகிறது.

சூனியத்தினால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்பதற்கு இது ஆதாரம் என்கின்றனர்.

சூனியத்துக்கு ஆற்றல் உள்ளது என்று திருக்குர்ஆனே சொல்வதால் அதை நம்புகிறோம் என்றும் வாதிடுகின்றனர்.

மேற்கண்ட இரு நிறுவனங்களின் மொழிபெயர்ப்புகளும் இலக்கணப்படி சரியாக இருந்தாலும் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வகையில் உள்ளன.

சூனியத்தின் மூலம் கணவன் மனைவியைப் பிரிக்கலாம் என்ற கருத்து மேற்கண்ட மொழிபெயர்ப்புகளில் இருந்து கிடைக்கிறது.

கோள் மூட்டி, பொய் சொல்லி கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்று சொன்னால் அது பாவச்செயல் என்றாலும் சாத்தியமானதுதான். கணவன் மனைவிக்கு இடையே சூனியத்தின் மூலம் பிரிக்க முடியும் என்று நம்பினால் அது சாத்தியமற்றதாகும். மேலும் சூனியக்காரன் அல்லாஹ்வைப் போல் செயல்படும் ஆற்றல் உள்ளவன் என்று ஆகிறது.

கணவன் மனைவி இருவரையும் மந்திர சக்தி மூலம் பிரிக்கலாம் என்று நம்புவது இணைகற்பித்தலில் சேரும். இந்தக் காரணத்தினால் இம்மொழிபெயர்ப்பு தவறு என்று ஆகிறது.

(சூனியத்தால் ஒன்றும் செய்ய இயலாது; அது ஒரு பித்தலாட்டம் என்பதை 357வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.)

10:77 வசனம் சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று கூறுகிறது. சூனியத்தால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்பது சூனியக்காரர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்தைத் தருகிறது.

7:116 வசனம் சூனியம் என்பது கண்கட்டு வித்தை தான்; மெய்யல்ல என்று கூறுகிறது. சூனியத்தால் கணவன் மனைவிக்கிடையே பிரிக்க முடியும் என்று கூறுவது இவ்வசனத்துக்கு எதிராக அமைந்துள்ளது.

7:118 முதல் 7:120 வரை உள்ள வசனங்களில் சூனியமும் தோற்றது; சூனியக்காரர்களும் தோற்றனர் என்று கூறப்படுகிறது. சூனியத்தால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்று கூறுவது இவ்வசனங்களுக்கு எதிராகவும் அமைந்துள்ளது.

20:66 வசனத்தில் மிகப்பெரும் சூனியக்காரர்கள் செய்த மிகப் பெரும் சூனியத்தால் கயிறுகளைப் பாம்பு போல் காட்ட முடிந்ததே தவிர பாம்பாக ஆக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கு முரணாகவும் இம்மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது.

20:69 வசனத்தில் சூனியம் என்பது தந்திரமும் சூழ்ச்சியும் தான்; மெய்யல்ல என்று சொல்லப்பட்டுள்ளது. சூனியத்தின் மூலம் கணவன் மனைவியரைப் பிரிக்க முடியும் என்பது இதற்கு முரணாகவும் அமைந்துள்ளது.

52:13,14,15 வசனங்களில் நிஜம் என்பதற்கு எதிர்ப்பதமாக சூனியம் என்ற சொல்லை அல்லாஹ் பயன்படுத்தி இருக்கிறான். சூனியம் என்பது பொய் என அல்லாஹ் சொல்லி இருக்கும்போது சூனியத்தால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்று கூறுவது இதற்கு எதிராக அமைந்துள்ளது.

சூனியத்தால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்ற கருத்துப்பட அமைந்த இந்த மொழிபெயர்ப்புகள் தவறானவை என்பதற்கு அறிவுப்பூர்வமான காரணங்களும் உள்ளன.

சூனியத்தைக் கற்றுக் கொண்டால் காஃபிராகி விடுவீர்கள் என்று இருவரும் எச்சரிக்கை செய்த பிறகு, நாங்கள் காஃபிர்களாக ஆனாலும் பரவாயில்லை; எங்களுக்கு சூனியத்தைக் கற்றுத் தாருங்கள் எனக் கூறி கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் சூனியத்தை மக்கள் கற்றுக் கொண்டார்கள் என்று இம்மொழிபெயர்ப்புகள் கூறுகின்றன.

சூனியத்தைக் கற்றால் காஃபிராகி விடுவீர்கள் என்ற எச்சரிக்கை அவர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றால் அவர்கள் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் மிகச் சிறிய சூனியத்தை ஏன் கற்றுக் கொள்ள வேண்டும்?

சிறியதைக் கற்றாலும் காஃபிராகத் தான் ஆவார்கள். பெரியதைக் கற்றாலும் காஃபிராகத் தான் ஆவார்கள் எனும்போது ஏன் அவர்கள் சிறியதைக் கற்க வேண்டும்?

சூனியம் என்பது சூனியக் கட்சியினரின் நம்பிக்கைப்படி ஏராளமான வித்தைகளைச் செய்யத்தக்க கலையாகும். காஃபிர்களாக ஆனால் ஆகிவிட்டுப் போகிறோம் என்று துணிந்தவர்கள் அனைத்து வகை சூனியத்தையும் அல்லவா கற்று இருப்பார்கள்?

ஒன்றே ஒன்றை, அதுவும் மிகவும் சிறியதைத் தேர்வு செய்து கற்பார்களா? ஒரு சூனியம் கற்றாலும் காஃபிர் ஆவது உறுதி. ஆயிரம் சூனியம் கற்றாலும் காஃபிர் ஆவது உறுதி. இப்படி இருக்க ஏன் அனைத்தையும் கற்காமல், அல்லது பெரிய பெரிய விஷயங்களை அவர்கள் கற்காமல் விட்டார்கள்?

பொருளீட்டுவதற்காகவும், உலக ஆதாயங்களை அடைவதற்காகவும் தான் சூனியத்தைக் கற்க முன்வந்திருப்பார்கள். ஒரே ஒரு சூனியத்தைக் கற்றால் குறைவாகவே பொருளீட்ட முடியும். அதிகமான சூனிய வகைகளைக் கற்றுக் கொண்டால் அதிகமாகப் பொருளீட்ட முடியும்.

உலக ஆதாயத்துக்காக காஃபிராவதைப் பற்றி கவலைப்படாதவர்கள் அனைத்து வகை சூனியத்தையும் தானே கற்று இருப்பார்கள் என்று சிந்திக்கும்போது இம்மொழிபெயர்ப்பில் கருத்துப் பிழை இருப்பது தெளிவாகிறது.

எனவே திருக்குர்ஆனின் இதர வசனங்களுக்கு முரணில்லாத வகையிலும், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணில்லாத வகையிலும் இவ்வசனத்துக்குப் பொருள் செய்வது தான் சரியானது.

எனவே தான் பின்வருமாறு இவ்வசனத்தை நாம் மொழிபெயர்த்துள்ளோம்.

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். ஸுலைமான் (ஏகஇறைவனை) மறுக்கவில்லை. (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். "நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவனை) மறுத்து விடாதே!'' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. எனவே எதன் மூலம் கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவார்களோ அதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர் அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. மேலும் தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். "இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை" என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?

எனவே எதன் மூலம் கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவார்களோ அதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர் என்ற வாக்கியம் சொல்வது என்ன?

இந்த இடத்தில் எனவே என்று நாம் பொருள் செய்த இடம் கவனிக்க வேண்டியதாகும். எனவே என்ற பொருள் தரும் ஃபா என்ற சொல் இங்கு இடம் பெற்றுள்ளது. இதை எப்போது பயன்படுத்த வேண்டும்?

இந்த மனிதன் ஏமாற்றுபவன்; எனவே அவனுக்கு நான் கடன் கொடுக்க மாட்டேன் என்ற வாக்கியத்தில் எனவே என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அவனுக்குக் கடன் கொடுக்காமல் இருப்பதற்குக் காரணம் அவன் ஏமாற்றுபவனாக இருப்பதுதான் என்ற கருத்து கிடைக்கும்.

அது போல் தான் இச்சொற்றொடரும் அமைந்துள்ளது.

கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்துவதை அவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்பதும் இதில் இருந்து விளங்குகிறது. சூனியத்தைக் கற்றால் காஃபிராகி விடுவீர்கள் என்ற எச்சரிக்கை தான் இதற்குக் காரணம் என்றும் விளங்குகிறது.

சூனியத்தைக் கற்றுக் கொள்வதால் காஃபிராகி விடுவீர்கள் என்று எச்சரிக்கப்பட்டதால் தங்களைக் காஃபிர்களாக ஆக்கிவிடும் சூனியத்தைக் கற்றுக் கொள்ளாமல் அது அல்லாத வேறு ஒன்றைக் கற்றுக் கொண்டார்கள் என்பது எனவே என்ற சொல்லில் இருந்து தெரிகிறது.

காராத்தே கற்றுக் கொண்டால் குருவை வணங்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்து கராத்தே கற்றுக் கொடுத்தார்கள். எனவே மக்கள் மல்யுத்தத்தைக் கற்றுக் கொண்டார்கள் என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். கராத்தேயினால் ஏற்படும் தீமையைச் சொல்லி எச்சரித்த காரணத்தால் அவர்கள் கராத்தே அல்லாத மல்யுத்தத்தைக் கற்றுக் கொண்டனர்.

இது போல்தான் மேற்கண்ட வாசகம் அமைந்துள்ளது.

கராத்தேயின் கேடுகளைச் சொன்னார்கள். எனவே கராத்தேயைக் கற்றுக் கொண்டார்கள் என்று கூறுவது பொருத்தமற்றதாகும். எச்சரிக்கை செய்த பின்னர் அது அல்லாத வேறு ஒன்றைக் கற்றால் தான் எனவே என்ற சொல்லைப் பயன்படுத்த முடியும்.

புகை பிடிக்காதே என்று தந்தை எச்சரித்தார். எனவே மகன் அந்தப் பழக்கத்தை விட்டு விட்டான் என்று கூறினால் அது பொருத்தமாக இருக்கும்.

புகை பிடிக்காதே என்று தந்தை எச்சரித்தார். எனவே மகன் நன்றாக புகை பிடித்தான் என்று கூறினால் அது பொருத்தமற்றதாக ஆகும்.

இந்த விளக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு மேற்கண்ட வாசகத்தைக் கவனியுங்கள்.

சூனியத்தால் கேடு ஏற்படும் என இருவரும் எச்சரித்தார்கள். எனவே கணவன் மனைவிக்கு இடையே பிரிவு ஏற்படுத்தும் கலையை மக்கள் கற்றுக் கொண்டார்கள் என்ற சொல்லில் இருந்து கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் கலை சூனியத்தில் சேராது. சூனியம் அல்லாத சூனியத்தை விட குறைந்த தீமையுடைய மற்றொன்று என்று நாம் அறிந்து கொள்ளலாம்.

ஃப என்ற சொல்லுக்கு எனவே என்று நாம் மொழிபெயர்த்துள்ளோம். இது போல் அமைந்த சில வசனங்களை கூடுதல் தகவலுக்காக நாம் எடுத்துக் காட்டுகிறோம்.

2:144 வசனத்தில் உமது முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே நீர் திருப்தி அடையும் கிப்லாவை நோக்கி உமது முகத்தைத் திருப்புகிறோம் என்று அல்லாஹ் சொல்கிறான். இங்கே எனவே என்ற பொருள் தரும் ஃப என்ற சொல் இடம்பெற்றுள்ளது. கிப்லாவை மாற்றுவதற்குக் காரணம் அதற்கு முன்னால் சொல்லப்பட்ட விஷயம் தான். அதாவது வானத்தை நோக்கி நபியவர்கள் அடிக்கடி முகத்தைத் திருப்பியது தான் காரணம் என்று எனவே என்ற சொல்லை வைத்து அறிந்து கொள்கிறோம்.

36:49,50 வசனங்களிலும் ஃப என்ற சொல் இடம் பெற்றுள்ளது. அவர்கள் விவாதித்துக் கொண்டு இருக்கும்போது திடீரென பெரும் சப்தம் ஏற்பட்டு அவர்கள் அழிவார்கள். எனவே அவர்கள் தமது சொத்துக்கள் குறித்து மரண சாசனம் செய்ய இயலாது என்று அல்லாஹ் இவ்வசனங்களில் கூறுகிறான். அவர்கள் மரண சாசனம் செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் இதற்கு முன்னர் சொல்லப்பட்ட விஷயம் தான். அதாவது எதிர்பாராமல் கியாமத் நாள் வருவதால் மரண சாசனம் செய்ய இயலாது என்று இங்கே சொல்லப்படுகிறது.

17:48 வசனத்தில் அவர்கள் உமக்கு எப்படி உதாரணம் கூறுகின்றனர் எனக் கவனிப்பீராக! எனவே அவர்கள் வழிகெட்டனர் என்று அல்லாஹ் கூறுகிறான். அவர்கள் வழி கெட்டதற்குக் காரணம் இதற்கு முன்னர் சொன்னதுதான். அதாவது நபிக்குப் பொருத்தமில்லாத உதாரணங்களை நபிக்குப் பயன்படுத்தியதால் இவர்கள் வழிகெட்டனர்.

18:105 வசனத்தில் அவர்களின் அமல்கள் அழிந்து விட்டன. எனவே அவர்களுக்கு நாம் தராசை நிறுவ மாட்டோம் என்று அல்லாஹ் கூறுகிறான். அவர்களின் அமல்கள் அழிந்து போனதுதான் அவர்களுக்காக தராசை நிறுவாததற்குக் காரணம் என்பது எனவே என்ற சொல்லால் இங்கே உணர்த்தப்படுகிறது.

இது போல் தான் காஃபிர்களாகி விடுவீர்கள் என்று ஷைத்தான்கள் எச்சரிக்கை செய்த காரணத்தால் அவர்கள் சூனியத்தைக் கற்றுக் கொள்ளாமல் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் வேறு ஒன்றைக் கற்றுக் கொண்டார்கள் என்பதும் அமைந்துள்ளது.

இவ்வாறு பொருள் தரும் ஃப என்ற சொல் சபபிய்யா என்று கூறப்படுகிறது. அரபு மொழி மேதைகளாக தம்மைக் கருதிக் கொள்ளும் சிலர் இது சபபிய்யா எனும் ஃப அல்ல என்று வாதிட்டு சில ஆதாரங்களை எடுத்துக் காட்டுகின்றனர்.

சபபிய்யா வகை ஃப என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருந்தால் யதஅல்லமூன என்பது யதஅல்லமூ என்று சுருங்கி விடும். நூன் என்ற எழுத்து போய் விடும். இங்கே நூன் உள்ளதால் சபபிய்யா என்று இதைச் சொல்லக் கூடாது என்பது அவர்களின் வாதம்.

சபபிய்யா எனும் ஃப இரு வகைகளாகும். 2:102 வசனத்திலும் நாம் மேற்கொள் காட்டிய வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள சபபிய்யா வகை ஃப வுக்கும் இவர்கள் எடுத்துக் காட்டும் சபபிய்யா வகை ஃப வுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. இவர்களுக்கு அரபு இலக்கணம் பற்றி சரியான அறிவு இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

நாம் சுட்டிக்காட்டிய வசனங்களில் உள்ள ஃப வை பல தப்ஸீர்களில் சபபிய்யா என்று சொல்லி உள்ளதை இவர்கள் பார்க்கட்டும். அவர்கள் சொல்லும் சபபிய்யா வேறு. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள சபபிய்யா வேறு என்பதை அறிந்து தமது அறியாமையை நீக்கிக் கொள்ளட்டும்.

அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது என்ற வாக்கியத்தையும் தமது தவறான கருத்துக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

அல்லாஹ் நாடினால் தவிர அதன் மூலம் எந்தக் கேடும் செய்ய முடியாது என்று கூறப்படுவதால் சூனியத்தின் மூலம் கேடுகள் ஏற்படுத்த முடியும் என்பதற்கு இது பலமான ஆதாரமாக அமைந்துள்ளது என்றும் கூறுகிறார்கள்.

அல்லாஹ் நாடினால் அதன் மூலம் கேடு ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் அதன் மூலம் என்பது சூனியத்தைக் குறிக்கவில்லை என்பதை அவர்கள் அறியவில்லை.

அதன் மூலம் என்று சொல்லப்பட்டால் இதற்கு முன்னால் என்ன சொல்லப்பட்டதோ அதன் மூலம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். இதற்கு முன் சொல்லப்பட்டது என்ன? சூனியத்தால் காஃபிராகி விடுவோம் என்று அஞ்சி அதை விட்டு விட்டு கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தக் கூடிய கலையைக் கற்றுக் கொண்டார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. அதன் மூலம் என்ற சொல் இதையே குறிக்கும். சூனியத்தைக் குறிக்காது.

கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் கலையின் மூலம் அல்லாஹ் நாடினால் கேடு ஏற்பட முடியும் என்று தான் இச்சொற்றொடர் கூறுகிறது. சூனியத்தினால் கேடு ஏற்படும் கூறவில்லை.

தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். "இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை' என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?  என்பதன் கருத்து என்ன?

கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்தும் கலையால் அல்லாஹ் நாடினால் பிறருக்குத் தீங்கு ஏற்படுத்த முடியும் என்றாலும் இதைச் செய்பவருக்கு இதனால் மறுமையில் கேடுதான் உள்ளது. இவர்களுக்கு இதனால் எந்தப் பயனும் ஏற்படாது என்று இச்சொற்றொடர் எச்சரிக்கின்றது.

ஆக இவ்வசனத்தைக் கவனமுடன் ஆய்வு செய்யும்போது சூனியம் அல்லாத, கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்தும் கலையைத் தான் மக்கள் கற்றுக் கொண்டனர் என்பதும், அதன் மூலம் சில தீங்குகள் ஏற்படலாம் என்பதும் தெரிய வருகின்றது.

சூனியத்தினால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று இதில் சொல்லப்படவே இல்லை.

கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்துவது சூனியத்தின் ஒரு வகையாக ஏன் இருக்கக் கூடாது என்று சிலர் கருதினால் அது இரண்டு காரணங்களால் தவறாகும்.

சூனியத்தைப் பற்றி அவ்விருவரும் கடுமையாக எச்சரித்த பின்னர் சூனியத்தின் ஒரு வகையைக் கற்றுக் கொண்டு இருந்தால் எனவே என்று சொல்லப்பட்டு இருக்காது.

மேலும் சூனியத்தைக் கற்பது ஒருவனைக் காஃபிராக ஆக்கிவிடும் என்று இவ்வசனத்தில் மூன்று இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்துவது பாவமான காரியம் என்றாலும் அது ஒருவனைக் காஃபிராக ஆக்கும் குற்றம் அல்ல. நாமும் அவ்வாறு கூறவில்லை. சூனியத்தை நம்புவோரும் அவ்வாறு கூறுவதில்லை. அவர்கள் கற்றுக் கொண்ட இந்தக் கலை ஒருவரைக் காஃபிராக ஆக்காது என்றால் அது சூனியத்தின் ஒருவகையாக இருக்க முடியாது என்பது உறுதியாகும்.

அதாவது அவர்கள் சூனியத்தைக் கற்றுக் கொள்ளவில்லை. சூனியம் அல்லாத முறையில் கணவன் மனைவியை எவ்வாறு பிரிப்பது என்பதைத் தான் கற்றுக் கொண்டார்கள். அது கூட நூறு சதவிகிதம் வெற்றி தராது. அல்லாஹ் நாடினாலே தவிர அதன் மூலம் கணவன் மனைவியைப் பிரிக்க முடியாது இவ்வசனம் சொல்கிறது.

இவ்வாறு மொழிபெயர்க்கும்போது அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் பெரும்பாவம் ஏற்படுவதில்லை. சூனியம் என்பது சூழ்ச்சி, தந்திரம், வெற்றி தராது என்றெல்லாம் சொல்லும் திருக்குர்ஆன் வசனங்களுக்கு இம்மொழிபெயர்ப்பு முரண்படாது.

மேலும் இதில் அல்லாஹ் பயன்படுத்தியுள்ள வாசக அமைப்பும் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

கனவன் மனைவியரிடையே பிரிக்கும் சூனியத்தைக் கற்றுக் கொண்டார்கள் என்று சொல்லப்படவில்லை. எதன் மூலம் பிரிக்க முடியுமோ அந்த ஒன்றை என்ற சொல்லமைப்பு சூனியம் அல்லாத வேறு ஒன்று என்பதைத் தான் காட்டுகிறது.

இதே வசனத்துக்கு ரஹ்மத் அறக்கட்டளை செய்த மொழிபெயர்ப்பைப் பார்ப்போம்.

ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்ட மொழிபெயர்ப்பு

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் படித்துக் காட்டியதை அவர்கள் பின்பற்றினார்கள். ஸுலைமான் நிராகரிக்கவில்லை; மாறாக, ஷைத்தான்களே நிராகரித்தனர். அவர்கள் மக்களுக்குச் சூனியத்தையும், பாபிலோனில் இருந்த ஹாரூத், மாரூத் ஆகிய இரு வானவர்களுக்கு அருளப்பெற்ற(தாக அவர்களே சொல்லிக்கொண்ட)தையும் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால், அவ்விருவரும் "நாங்கள் (இறைவனிடமிருந்து வந்துள்ள) ஒரு சோதனையாக உள்ளோம். எனவே, (இறையை) நிராகரிக்க வேண்டாம்" என்று கூறாத வரை யாருக்கும் அதைக் கற்றுக் கொடுப்பதில்லை (என்றும்), ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவினை உருவாக்கக்கூடியதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றனர் (என்றும் கூறிவந்தனர்). அதன் மூலம் அல்லாஹ்வின் உத்தரவின்றி யாருக்கும் அவர்கள் தீங்கிழைக்க இயலாது. அவர்கள் தமக்குத் தீங்களிப்பதையும் பயன் தராததையுமே கற்கின்றனர். இதைக் கொள்முதல் செய்தவனுக்கு மறுமையில் எந்தப் பேறும் கிடையாது என்பதை அவர்கள் உறுதியாகத் தெரிந்தே உள்ளனர். எதற்குப் பதிலாகத் தங்களை அவர்கள் விற்றார்களோ அது மிகவும் தீயது. (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!

இந்த மொழிபெயர்ப்பு முன்னர் நாம் எடுத்துக்காட்டிய மொழிபெயர்ப்புகளில் இருந்து வேறுபட்டுள்ளதைக் கவனிக்கவும்.

முன்னர் நாம் சுட்டிக்காட்டிய இரு மொழிபெயர்ப்புகளைப் போல் மொழிபெயர்த்தால் அது இணைகற்பித்தலில் தள்ளிவிடும் என்று அஞ்சி இதை அல்லாஹ்வின் கூற்றாகக் காட்டாத வகையில் மொழிபெயர்த்துள்ளனர்.

ஒரு மனிதனுக்கும், அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவினை உருவாக்கக்கூடியதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றனர் (என்றும் கூறிவந்தனர்)

கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தக் கூடியதை கற்றுக் கொண்டார்கள் என்ற சொல் அல்லாஹ்வின் கூற்று அல்ல. மாறாக யூதர்கள் இப்படி சொல்லிக் கொண்டார்கள் என்ற கருத்தைத் தருவதற்காக (என்றும் கூறிவந்தனர்) என்று அடைப்புக்குறிக்குள் போட்டுள்ளனர். யூதர்கள் இப்படி சொல்லிக் கொண்டார்கள் என்பதை அல்லாஹ் எடுத்துச் சொல்கிறான் என்ற கருத்தைத் தரும் வகையில் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர்.

சூனியத்தால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்று யூதர்கள் கூறினார்கள் என்று அர்த்தம் செய்தால் இது சூனியக் கட்சியினருக்கு ஆதாரமாகாது. யூதர்கள் தமது நம்பிக்கைக்கு ஏற்ப இப்படிச் சொன்னார்கள் என்ற செய்தியைத் தவிர வேறு ஒரு கருத்தும் இதில் இல்லை.

சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று அல்லாஹ் எப்படிச் சொல்வான் என்றும், அப்படிச் சொன்னால் அது பல வசனங்களுக்கு முரணாகி விடும் என்றும் அஞ்சி மேற்கண்ட சொல் யூதர்களின் சொல் என்ற கருத்தைத் தரும் வகையில் ரஹ்மத் ட்ரஸ்ட் நிறுவன அறிஞர்கள் மொழிபெயர்த்துள்ளனர்.

அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் அர்த்தம் வராத வகையிலும், திருக்குர்ஆனின் மற்ற வசனங்களுக்கு முரணில்லாத வகையிலும் இப்படி மொழி பெயர்த்தால் அதில் நமக்கு மறுப்பு ஏதும் இல்லை.

சூனியம் குறித்து மேலும் அறிய 28, 285, 357, 468, 499 ஆகிய குறிப்புக்களையும் பார்க்கவும்.

பீ.ஜெ அவர்களின் மொழியாக்கமும், விளக்கமும் எந்த வகையில் தவறானது என்பதை இஸ்மாயீல் ஸலபி அவர்கள் விளக்க வில்லை. போகிற போக்கில் பீ.ஜெ யின் மொழிபெயர்ப்பு தவறு என்று சொல்லி விட்டு கடந்து செல்லப் பார்க்கிறார்.

இந்த மொழி பெயர்ப்பு எப்படி தவறானது என்பதை இஸ்மாயீல் ஸலபி காரண காரியங்களுடன் விளக்கினால் உரிய ஆதாரங்களுடன் நாமும் வரிக்கு வரி பதில் தர தயாராக இருக்கிறோம்.

இப்போது எனவே என்று அர்த்தம் செய்தது சரியா? சரியில்லையா? அதைப் பற்றி காரண காரியத்தோடு விளக்கினால் பதில் தருவோம்.

இறுதியாக....

சகோ. இஸ்மாயீல் ஸலபி அவர்களின் கட்டுரைக்கு வரிக்கு வரி காரண காரியங்களுடன், ஆதாரங்களை முன்வைத்து நாம் பதில் தந்துள்ளோம். அத்துடன் பகிரங்க விவாதத்திற்கும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

பகிரங்க விவாதத்தில் கலந்து கொண்டு தன் பக்கம் சத்தியம் இருப்பின் அதனை நிரூபிக்க வேண்டிய கடமை இஸ்மாயீல் ஸலபிக்கு இருக்கிறது என்பதினால் அவர் விவாதக் களத்தை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இஸ்மாயீல் ஸலபி தொடரும் போது நாமும் தொடர்வோம் இன்ஷா அல்லாஹ்....

-சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ (தலைமையகம் – கொழும்பு)

JAQH TMMK TNTJ வரலாற்றுப் பார்வை

ஜாக், தமுமுக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு வரலாற்றுப் பார்வை

இப்பிரசுரம் தஞ்சை வல்லம் மாநாட்டின் போது ஷம்சுள்ளுஹா அவர்களால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டதாகும். தவ்ஹீத் கொள்கையில் புதிதாக இணைந்துள்ள சகோதரர்களுக்கு இந்த வரலாறு தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக அதை நமது தளத்தில் வெளியிடுகிறோம். இதில் சிவப்பு எழுத்தில் உள்ளவை பின்னர் சேர்க்கப்பட்டதாகும்.

இறைவன் திருப்பெயரால்

தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி

1980களுக்கு முன்னால் தமிழக முஸ்லிம்களின் நிலையும், தமிழக உலமாக்களின் நிலையும் எவ்வாறு இருந்தது என்பதை இன்றைய இளைஞர்கள் அறிய மாட்டார்கள்.

தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கை அவர்களிடமிருந்து அறவே எடுபட்டுப் போயிருந்தது. திருக்குர்ஆனிலும், நபிவழியிலும் அனுமதிக்கப்படாத போலிச் சடங்குகளைத் தான் இஸ்லாம் என்ற பெயரால் தமிழக முஸ்லிம்கள் செய்து வந்தனர். மத்ஹபு என்ற பெயரால் முரண்பட்டுக் கிடந்தனர். போலி ஷைகுமார்களின் கால்களில் விழுந்து வணங்குவதை பெரும் பாக்கியமாகக் கருதி வந்தனர்.

இந்தக் காலகட்டத்தில் தான் மயிலாடுதுறை அருகில் அமைந்துள்ள சங்கரன்பந்தல் என்ற கிராமத்திலிருந்து தவ்ஹீத் பொறி பற்றத் தொடங்கியது.

பைஜுல் உலூம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த அரபுக் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்த இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த பி.ஷைகு அலாவுத்தீன் எனும் பி.எஸ். அலாவுத்தீன், அவரது சகோதரர் மல்லவி பி.ஜைனுல் ஆபிதீன் ஆகியோர் அந்த அரபுக்கல்லூரியில் படித்துக் கொடுப்பதோடு நின்று விடாமல் மக்களை நல்வழிப்படுத்த மாதந்தோறும் தெருமுனைக் கூட்டங்களை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலானார்கள்.

தீன் விளக்கக் குழு என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதுடன் துண்டுப் பிரசுரங்கள் வாயிலாகவும், அவ்வூரில் நிலவிய மூடநம்பிக்கைகளை எதிர்த்து வந்தனர்.

மேலப்பாளையத்தைச் சேர்ந்த மவ்லவி ஷம்ஸுல் லுஹா, மவ்லவி முஹம்மது அலி ரஹ்மானி, மவ்லவி யூசுப் மிஸ்பாஹி போன்றவர்களும் சங்கரன்பந்தல் சிராஜுத்தீன், அப்துல் பத்தாஹ் போன்ற நண்பர்களும் இப்பிரச்சாரத்துக்குப் பக்கபலமாக இருந்தனர்.

இவர்களில் யூசுப் மிஸ்பாஹி கொள்கையில் முரண்பட்டு ஜாக் இயக்கத்தில் இன்னும் இருக்கிறார்.

இந்த நிலையில் 1984ல் தஞ்சை நகரில் ஆற்றங்கரைப் பள்ளிவாசல் வளாகத்தில் தமிழக உலமாக்கள் சபை சார்பில் வலிமார்கள் மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் உரையாற்றிய எல்லா உலமாக்களுமே தர்கா வழிபாட்டை ஊக்குவித்தும் ஆதரித்தும் பேசினார்கள். ஏகத்துவ சிந்தனைவாதிகளின் இரத்தம் சூடேறும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபாதகச் செயலை நியாயப்படுத்தினார்கள்.

அதைக் கண்டு கொதித்துப்போன பி.ஜைனுல் ஆபிதீன், அம்மாநாட்டில் ஆற்றப்பட்ட உரைகள் அனைத்தும் குர்ஆனுக்கும், நபிவழிக்கும் எதிரானவை என்பதைத் தக்க ஆதாரங்களுடன் ஒரு நாடகம் அரங்கேறியது என்ற தலைப்பில் கடுமையாக விமர்சனம் செய்து ஒரு பிரசுரம் வெளியிட்டார்.

ஒரு நாடகம் அரங்கேறியது என்ற பிரசுரத்தை வாசிக்க

அப்பிரசுரத்தால் ஆத்திரம் அடைந்த உலமாக்கள் வேன்களில் வந்து இறங்கி சங்கரன்பந்தலில் பணியாற்றும் பி.ஜைனுல் ஆபிதீனை மதஸாவில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி முறையிட்டனர். கல்லூரி நிர்வாகம் அதை ஏற்க மறுத்துவிட்டாலும் உலமாக்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று சில கட்டுப்பாடுகளை விதித்தது.

சங்கரன்பந்தலில் தவ்ஹீத் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழகத்தில் வேறு சில பகுதிகளிலும் பிரச்சாரம் நடத்தப்பட்டு வந்தது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் மவ்லவி கமாலுத்தீன் மதனி,

கடையநல்லூரில் மவ்லவி அப்துல் ஜலீல் மதனி,

பேர்ணாம்பட்டில் பி.அன்வர்பாஷா, ரபீக் அஹ்மது தலைமையிலான குழுவினர்,

கோவையில் அப்துல் மாஜித் உமரி,

திருச்சியில் அப்துல் மஜீத், அப்துல் சமத் தலைமையிலான குழுவினர்,

சென்னையில் உஸ்மான் கான் தலைமையிலான குழுவினர்

பிரச்சாரம் செய்து வந்தனர்.

இவர்களில் மவ்லவி அப்துல் ஜலீல் மதனி கொள்கையில் உறுதியாக நின்று மரணித்து விட்டார். மவ்லவி கமாலுத்தீன் மதனி, ரபீக் அஹ்மது, அப்துல் மாஜீத் உமரி, அப்துல் மஜீத், அப்துல் சமத், உஸ்மான் கான் ஆகியோர் கொள்கையில் முரண்பட்டு ஜாக் இயக்கத்தில் இருந்து வருகின்றனர். அன்வர் பாஷா அவர்கள் இன்று வரை தடம் மாறாமல் உறுதியுடன் நம்மோடு இருந்து வருகிறார்.

அன்வர் பாஷா அவர்கள் கடைசி வரை பீஜே அவர்களுடன் பயணித்து 2018 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 10 ஆம் தேதி உடல் நலக்குறைவால் மரணித்து விட்டார்கள்

சங்கரன்பந்தலில் பி.ஜைனுல் ஆபிதீன் தெளிவாகப் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று கேள்விப்பட்டு மேற்கண்ட பகுதிகளில் உள்ளவர்கள் அவரைப் பேச்சாளராக அழைத்து பொதுக் கூட்டங்கள் நடத்தினார்கள். இதனால் அவர்களுக்கிடையே அறிமுகமும், ஒருங்கிணைப்பும் ஏற்பட்டது.

இதே காலகட்டத்தில் துபையில் இஸ்லாமிய விழிப்புணர்வு மையம் ஐ.ஏ.சி என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. இவர்களும் தமிழ் கூறும் துபை வாழ் மக்களிடம் ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்து வந்தனர்.

மவ்லவி முஹம்மது இக்பால் மதனி, லெப்பைக்குடிகாட்டைச் சேர்ந்த ஜஹாங்கீர், கள்ளக்குறிச்சி சுலைமான், மேலப்பாளையம் பழ்லுல் இலாஹி உள்ளிட்டவர்கள் இஸ்லாமிய விழிப்புணர்வு மையத்தை நடத்தி வந்தனர்.

(இவர்களில் ஜஹாங்கீர் கொள்கையில் உறுதியாக நின்று மரணித்து விட்டார். ஃபழ்லுல் இலாஹி அவர்கள் பீஜே க்கு எதிராக பல ஆண்டுகள் செயல்பட்டு சமூக ஊடகங்களில் பீஜேக்கு எதிரான அவதூறுகளையும் பரப்புவதில் முன்னிலை வகித்தார். பீஜேக்கு எதிரான ஆபாச ஆடியோ தயாரிப்பவர்களுக்கு பெருமளவு பணம் கொடுத்து பீஜேயை ஒழித்துக் கட்ட முழு மூச்சாக பாடுபட்டார். பின்னர் பீஜே அவர்கள் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு துவக்கி தன் தரப்பு நியாயங்களை விளக்கிய பின்னர் ஃபழ்லுல் இலாஹி மனம் மாறினார். பீஜேயிடம் நேரிலும் பொது வெளியிலும் மன்னிப்பு கேட்டார். மேலப்பாளயம் வரலாற்றில் இதுவரை நடந்த எல்லா பொதுக்கூட்டங்களையும் மிஞ்சும் வகையில் பீஜேயை அழைத்து மாபெரும் பொது கூட்டத்தையும் நடத்திக் காட்டினார். ஆபாச ஆடியோ பொய் என்று நிருபிக்க நான் தயார். தவ்ஹீத் ஜமாஅத்தோ ஆடியோவைப் பரப்புபவர்களோ சவாலை ஏறகத்தயாரா என்றும் சவால் விட்டார். ஆடியோ தயாரிக்க தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளும் பணம் கொடுத்தார்கள். அதையும் நான் நான் நிருபிகிறேன் என சவால் விட்டார். அதை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்கவில்லை.

மேலப்பாளையம் பொதுகூட்டம் 

 

ஆடியோ குறித்து ஃபழ்லுல் இலாஹியின் சவால்

 

 

பின்னர் கொள்கையில் உறுதியாக நின்று கடந்த 22-0602021  செவ்வாய்க்கிழமை உடல் நலக்குறைவால் துபாயில் மரணித்தார்

நஜாத் மாத இதழ்

தமிழகத்தின் சில பகுதிகளில் தவ்ஹீத் பிரச்சாரம் நடந்தாலும் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் எழுத்தும், பேச்சும் பாமரர்களுக்கும் புரியும் வகையில் எளிய நடையில் தக்க ஆதாரங்களுடன் இருந்ததை ஒலி நாடாக்கள் மூலமும், துண்டுப் பிரசுரம் மூலமும் துபை இஸ்லாமிய விழிப்புணர்வு மையத்தினர் கண்டறிந்தனர்.

சங்கரன்பந்தல் மதரஸாவில் தொடர்ந்து பணியாற்ற முடியாத அளவுக்கு கெடுபிடிகள் அதிகமானதால் அங்கிருந்து வெளியேறும் எண்ணத்தில் இருந்த பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களை ஐ.ஏ.சி இயக்கத்தினர் நேரிலும் தபால் மூலமும் தொடர்பு கொண்டனர்.

உங்கள் எழுத்தாற்றலைப் பயன்படுத்தி ஏன் மாத இதழ் ஒன்றை நடத்தக் கூடாது என்று அவர்கள் பி.ஜைனுல் ஆபிதீனிடம் கேட்டனர். தவ்ஹீத் அடிப்படையில் நடத்தப்படும் பத்திரிகைகளை இலாபகரமாக நடத்த முடியாது என்று பி.ஜே சொன்ன போது மாதம் மாதம் எவ்வளவு நட்டம் ஏற்படுகிறதோ அதை நாங்கள் தந்து விடுகிறோம். நீங்கள் மதஸாவை விட்டு வெளியேறி பத்திரிகை நடத்த முன் வாருங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.

எழுதுகின்ற பணியை மட்டும் தான் என்னால் ஏற்க முடியும், பண விவகாரத்தை வேறு யாரிடமாவது ஒப்படைத்துக் கொள்ளுங்கள் என்று பீ.ஜே திட்டவட்டமாகக் கூறி விட்டார்.

அதன் பின்னர் திருச்சி அப்துல் சமத், அப்துல் மஜீத் தலைமையில் செயல்பட்டு வந்த திருச்சியில் வாட்ச் ரிப்பேர் கடை வைத்திருந்த அபூ அப்துல்லாஹ் என்பவரை நிர்வாகம் செய்ய ஐ.ஏ.சி இயக்கத்தினர் நியமித்தனர்.

ஐ.ஏ.சி யின் சார்பில் அந்நஜாத் என்ற மாத இதழ் துவக்கப்பட்டது. அதன் எழுத்துப் பொறுப்பு முழுவதும் பீ.ஜே.யைச் சேர்ந்தது. இந்த இதழ் தமிழகத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. வளைகுடா நாடுகளில் வாழ்ந்தவர்கள் தங்கள் குடும்பத்திற்காக ஏராளமான சந்தாக்களை அனுப்பி பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவினார்கள். இதன் காரணமாகவே தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக் கொள்பவர்களை நஜாத் கூட்டம் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.

பத்திரிகையின் மாபெரும் வளர்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஐ.ஏ.சிக்கும் அபூ அப்துல்லாஹ்வுக்கும் மத்தியில் பண விஷயத்தில் விவகாரம் ஏற்பட்டது. ஐ.ஏ.சி பக்கம் நியாயம் இருந்ததால் ஐ.ஏ.சி பக்கம் பீ.ஜே நின்றார். மற்ற ஆரம்பகால பிரச்சாரகர்களும் ஐ.ஏ.சி பக்கம் நின்றனர்.

அபூ அப்துல்லா நஜாத் பத்திரிகையைத் தனது சொந்தப் பத்திரிகை என்று சட்டப்படி பதிவு செய்து கொண்டதால் அவர்களால் நியாயம் பெற முடியவில்லை. அந்த அநியாயத்துக்குத் துணை போகக் கூடாது என்று பீ.ஜே நஜாத் பத்திரிகையிலிருந்து வெளியேறினார். பல்லாயிரம் பத்திரிகைகள் விற்பனையை சில நூறு பிரதிகளில் கொண்டு வந்த அபூ அப்துல்லா அதைக் கோமா ஸ்டேஜில் நிறுத்தினார். அவரும் அவருடன் இருந்த சிலரும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டனர்.

ஜாக் உதயம்

அதே காலகட்டத்தில் தான் தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே பிரச்சாரம் செய்தவர்கள் கூட்டமாக ஒரு அமைப்பை உருவாக்கி ஏன் செயல்படக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.

அனைவரும் திருச்சியில் உள்ள தேவர் ஹாலில் (இது இப்போது இல்லை) கூட்டப்பட்டு அஹ்லுல் குர்ஆன் வல்ஹதீஸ் (ஆக் AQH) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பி.ஜைனுல் ஆபிதீன் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இந்த இயக்கம் ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (ஜாக் JAQH) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஓராண்டுக்குப் பின் தனக்கு தலைமைப் பொறுப்பு வேண்டாம். பொறுப்பு இருப்பதால் அதிகமான பிரச்சார நிகழ்ச்சிகளுக்குச் செல்ல முடியவில்லை என்று பீ.ஜே மறுத்து கமாலுத்தீன் மதனியைத் தலைவராக்குமாறு வலியுறுத்தினார். மக்கள் இதைக் கடுமையாக எதிர்த்தாலும் பீ.ஜே தனது நிலையை மாற்றிக் கொள்ள விரும்பாததால் வேண்டா வெறுப்பாக கமாலுத்தீன் மதனி தலைவராக்கப்பட்டார்.

அதன் பின்னர் கமாலுத்தீன் தலைமையில் பி.ஜைனுல் ஆபிதீன், சைபுல்லாஹ் ஹாஜா, ஹாமித் பக்ரி, எம்.ஐ. சுலைமான், சம்சுல்லுஹா, அலி ரஹ்மானி உள்ளிட்ட பல அறிஞர்கள் தீவிரப் பிரச்சாரகர்களாகச் செயல்பட்டனர்.

மவ்லவி அப்துல்லா என்பவர் மதுரையில் புரட்சி மின்னல் என்ற பெயரில் பத்திரிகை நடத்தி வந்தார். ஏகத்துவப் பிரச்சாரத்தால் கவரப்பட்ட அவர் தனது பத்திரிகையை ஏகத்துவக் கொள்கையைப் பிரதிபலிக்கும் இதழாக நடத்த முன்வந்தார். ஏற்கனவே அந்நஜாத் பத்திரிகையை இழந்து புதிய பத்திரிகை ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்த ஐ.ஏ.சி இயக்கத்தினர் மவ்லவி அப்துல்லாஹ்வின் விருப்பத்தை ஏற்று புரட்சி மின்னலைத் தத்தெடுத்தனர். பி.ஜைனுல் ஆபிதீன் மற்றும் உலமாக்களுடைய ஆக்கங்களைத் தாங்கி புரட்சி மின்னல் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

எதிர்ப்பு வலுத்தது

மேடைப் பிரச்சாரம் மூலமாகவும் புரட்சி மின்னல் பத்திரிகை வழியாகவும முடுக்கி விடப்பட்ட தீவிரப் பிரச்சாரம் காரணமாக மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டது போல் எதிர்ப்பும் அதிகமானது.

 பள்ளிவாசலில் தொழத்தடை, ஊர் நீக்கம், அடக்கு முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்தன.

உலமாக்களால் தூண்டி விடப்பட்ட மார்க்கம் அறியாத மக்கள் தவ்ஹீத் பிரச்சாரம் நடக்கும் இடங்களில் கலவரங்களை ஏற்படுத்தினார்கள்.

பீ.ஜே அவர்கள் முத்துப்பேட்டை, நாகூர், மதுரை, சென்னை, முரார்பாத், பொதக்குடி, பண்டாரவாடை, லெப்பைக்குடிக்காடு, தேங்காய்ப் பட்டிணம், கோவை எனப் பல ஊர்களில் தாக்கப்பட்டார். மேலப்பாளையத்தில் கொலை முயற்சியில் மேடையேறி அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். மற்ற பிரச்சாரர்களும் ஆங்காங்கே தாக்கப்பட்டனர்.

அந்தத் தடைகளைக் கண்டு தவ்ஹீத் பிரச்சாரர்களும் கொள்கைவாதிகளும் நிலை மாறவில்லை. முன்பை விட இன்னும் உறுதியுடனும், தீவிரமாகவும் பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர்.

நன்றாகப் போய்க் கொண்டிருந்த பிரச்சாரத்தில் அரபு நாட்டு நிதியை மையமாக வைத்து பிரச்சனை தலைதூக்கியது.

ஜாக் தலைவராக இருந்த கமாலுத்தீன் மதனியும், மதீனாவில் படித்த மற்ற மதனிகளும், சவூதி அரசிலிருந்து சம்பளம் பெற்று வந்தனர். இந்தத் தொடர்பைப் பயன்படுத்தி சவூதி அரசுடன் தொடர்பு கொண்டு ஜாக் இயக்கத்துக்கு நிதியாரங்களைப் பெற முயன்றனர். எந்த நிகழ்ச்சி நடந்தாலும் மேடையில் அரபு மொழியில் பெரிய பேனரைக் கட்டி அதை வீடியோவாக்கி அதை சவூதிக்கு அனுப்புவது மட்டுமே குறிக்கோளாக ஆனது.

அரபு நாட்டிலிருந்து உதவிகள் பெற வேண்டாம் என்று பீ.ஜேயும் மதனிகள் அல்லாத மற்ற பிரச்சாரகர்களும் மறுப்புத் தெரிவித்ததால் பீஜேயை அழைக்காமலே ஆலோசனைக் கூட்டம் நடக்கலானது.

அரபு நாட்டுப் பணம் வர ஆரம்பித்துள்ளது என்பதற்காக இயக்கத்திலே சேர்ந்தவர்கள் சுய ஆதாயத்துக்காக அரபுநாட்டு நிதி உதவி பெறுவதை ஆதரித்து தூபம் போட்டனர். பள்ளிவாசல், மதரஸா, நோன்புக் கஞ்சி, தஃவா என்று பல வகைகளில் இலட்சம் இலட்சமாகப் பணம் வர ஆரம்பித்தது. என்ன வரவு என்பதும், என்ன செலவு என்பதும மதீனாவில் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும் தான் தெரியுமே தவிர, ஜாக் மாநில நிர்வாகிகளுக்குக் கூட தெரியாத நிலை ஏற்பட்டது.

தங்களுக்குக் கமிஷன் கிடைக்கிறது என்பதற்காக தவ்ஹீத்வாதிகளே இல்லாத ஊரிலும் பள்ளிவாசல் கட்டப் பணம் வாங்குவது மட்டுமே இவர்களின் குறிக்கோளாக ஆனது. ஆனாலும் சிரமப்பட்டு உருவாக்கிய இயக்கம் பாழாகி விடக்கூடாது என்பதற்காக பிரச்சாரகர்கள் உள்ளிருந்து போராடி வந்தனர்.

பலர் மீது பொருளாதார மோசடி போன்ற குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் பீ.ஜே யால் எடுத்துக் காட்டப்பட்டும் அவர்கள் மேலான நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள். அதற்கு கமாலுத்தீன் மதனியும் உடந்தை என்பது உறுதியானது.

இதை பின்வரும் லின்குகளில் இருந்து அறியலாம்.

ஜாக் இயக்கத்துடன் பிரச்சனை என்ன

அரபு நாடுகளில் நிதி உதவி பெறக்கூடாது என்பதில் பிரச்சனை ஆரம்பித்தாலும் அதன் பின்னர் மேலும் பிரச்சனைகள் உருவாயின. அதாவது கணக்கு வழக்குகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். அனைத்து சகோதரர்களுக்கும் உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டு அவர்களுக்கு தட்டிக் கேட்கும் அதிகாரம் இருக்க வேண்டும். தலைமைப் பொறுப்பு நிரந்தரமாக ஒருவரிடம் இருக்கக் கூடாது என்பன போன்ற பிரச்சனைகள் உருவாயின.

அரபு நாடுகளில் உதவி பெறக் கூடாது;

நிரந்தரமாக பொறுப்பில் இருக்கக் கூடாது;

கொள்கைவாதிகளுக்கு தட்டிக் கேட்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்;

அதற்காக உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும்.

என்பன போன்ற கோரிக்கைகளை கமாலுத்தீன் மதனி ஏற்க மறுத்தார். இதனால் இவர்களுடன் சேர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.

மற்ற நிர்வாகிகளுக்குக் கூடத் தெரியாமல் வரவு செலவு வைப்பது முறையா? நீங்கள் மரணித்துவிட்டால் என்னவாகும் என்று கமாலுத்தீன் மதனியிடம் பீ.ஜே நேரடியாகக் கேட்ட போது, எல்லாக் கணக்குகளும் என் மனைவிக்குத் தெரியும் என்று கமாலுத்தீன் மதனி பதிலளித்தார். இவர் நிர்வாகிகளிடம் கூட கணக்குக் காட்டத் தயார் இல்லை என்றால், இதைவிட மோசடி இருக்க முடியாது என்ற எண்ணம் தவ்ஹீத் பிரச்சாரத்தில் முன்னணியில் இருந்த அனைத்து பிரச்சாரகர்களுக்கும் ஏற்பட்டது.

இதே காலகட்டத்தில் தான் அல்ஜன்னத் என்ற மாத இதழ் துவக்கப்பட்டது. ஐ.ஏ.சி இயக்கத்தின் ஆதரவில் புரட்சி மின்னல் நடத்தப்பட்டாலும் தன் பொறுப்பில் ஒரு இதழ் இருந்தால் நல்லது; இன்னும் அழுத்தமாக செய்திகளைச் சொல்ல முடியும என்று நினைத்து பீஜேயால் அல்ஜன்னத் மாத இதழ் ஆரம்பிக்கப்பட்டது.

பீ.ஜேயின் சொந்தப் பத்திரிகையாக அவரது சொந்தப் பொறுப்பில் அல்ஜன்னத் நடத்தப்பட்டது. அதில் கிடைக்கும் லாப நட்டம் பீ.ஜேயைச் சேர்ந்தது என்ற அடிப்படையில் தான் அல்ஜன்னத் நடத்தப்பட்டது.

பத்திரிகையின் விற்பனை அதிகமாக இருந்தாலும், பத்திரிகையின் ஏஜெண்டுகள் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் நாளுக்கு நாள் நட்டம் அதிகரித்தது. இனிமேல் தொடர்ந்து நடத்துவது என்றால், மக்களிடம் நன்கொடை திரட்டித் தான் நடத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. நன்கொடை கேட்டு மக்களிடம் அறிவிப்புச் செய்தால் கடந்த கால நட்டத்தையும் ஈடு செய்யலாம். இனியும் நட்டமில்லாமல் நடத்தலாம் என்று நண்பர்கள் ஆலோசனை கூறினார்கள்.

பத்திரிகையின் லாப நட்டம் ஜமாஅத்தைச் சேர்ந்தது என்றால், நன்கொடை கேட்கலாம். எனக்குச் சொந்தமான பத்திரிகை எனும் போது நன்கொடை கேட்க மாட்டேன் என்று பீ.ஜே மறுத்து விட்டார். நான் ஆக்கங்களை எழுதித் தருகிறேன்; ஜாக் இதன் உரிமையைப் பெற்றுக் கொண்டு மக்களிடம் நன்கொடை பெற்று நடத்திக் கொள்ளட்டும் என்று பீ.ஜே விட்டுக் கொடுத்தார். இதற்காக எந்தத் தொகையையும் அவர் கேட்கவில்லை.

இதன் பின்னர் ஐ.ஏ.சி யின் சார்பில் புரட்சி மின்னலும், ஜாக் சார்பில் அல்ஜன்னத்தும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வலம் வந்தன. பின்னர் புரட்சி மின்னல் இதழ் அல்முபீன் என்று பெயர் மாற்றப்பட்டது. அதுவே தற்போது ஏகத்துவம் இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் ஷிர்க், பித்அத், லஞ்சம், லாட்டரி, சினிமா போன்ற தீமைகளை மட்டுமே எதிர்த்துப் பிரச்சாரம் அமைந்தது. அரசியல், சமுதாயப் பிரச்சனைகளில் நாம் ஆர்வம் காட்டவில்லை.

சமுதாயப்பணியில் தவ்ஹீத் ஜமாஅத்

பாபரி மஸ்ஜிதும் பயண மாற்றமும்

இப்படியே தவ்ஹீத் ஜமாஅத்தின் பயணம் தொடர்ந்தது. காலம் எனும் சாலையில் 89,90,91 என்ற மைல் கற்களைத் தாண்டி 92 ஆம் ஆண்டில் அந்த நிகழ்வு நிகழ்ந்தது. 1992, டிசம்பர் 6 ஆம் தேதி அன்று பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்டது தான் அந்த நிகழ்வு. பட்டப்பகலில் சங்பரிவார பயங்கரவாதிகளால் பள்ளிவாசல் உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

உடைக்கப்பட்டது பள்ளிவாசல் மட்டுமல்ல! சமுதாயத்தின் முதுகெலும்பும் தான். சமுதாய இயக்கங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த லீக்குகள் சமுதாயத்தைக் காக்கின்ற ஆயுதங்களாகவும், சமுதாயத்தின் மானம் காக்கும் ஆடைகளாகவும் இருக்கத் தவறிவிட்டன.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகும் கேரளாவில் முஸ்லிம்லீக், காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து அமைச்சர் பதவியை அனுபவித்துக் கொண்டிருந்தது. இந்திய அளவில் முஸ்லிம் சமுதாயம், தான் ஒரு அனாதை என்பதை உணர்ந்து கொண்டது.

இத்தகைய காரணங்களால் முஸ்லிம் தலைவர்கள் சமுதாயத்தில் செல்லாக் காசானார்கள். செல்லரித்துப் போனார்கள். இந்த இயக்கங்கள் அவரச சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இருந்ததால் கேரளாவில் நாஸர் மஃதனி போன்றோர் சமுதாயப் பணி செய்யக் களமிறங்கினார்கள்.

இதுதான் தவ்ஹீத் ஜமாஅத்தின் பயணத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதன் விருப்பமின்றியே ஒரு திருப்பம் திணிக்கப்பட்டது. சமுதாயப் பிரச்சனைகளில் தலையிட்டே ஆக வேண்டும் என்பது தலைவிதியானது.

அதுவரை தவ்ஹீத் என்ற இலக்கை மட்டும் நோக்கிப் பயணம் செய்த தவ்ஹீத் ஜமாஅத், அந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் சமுதாயப் பிரச்சனைகளையும் கையில் எடுத்தாக வேண்டும் என்று முடிவுக்கு சகோதரர் பி.ஜே வந்தார். தானாக வந்தார் என்று சொல்வதை விட அந்த முடிவுக்குத் தள்ளப்பட்டார்.

தமிழகத்தில் தலைகாட்டிய பி.டி.பி

நாஸர் மஃதனியின் உணர்வுப்பூர்வமான உரையில் மக்கள் கவரப்பட்டனர். மக்களிடம் அப்படியொரு தேட்டமும், தணியாத தாகமும் இருந்தது. அதனால் அவரது கட்சிக்கொடி கேரள எல்லையைத் தாண்டி தமிழகக் கம்பங்களிலும் பறக்க ஆரம்பித்தது. அந்த அளவுக்குத் தமிழக முஸ்லிம் சமுதாயத்திலும் ஒரு தேட்டம் இருந்தது. பி.டி.பி (பீப்பிள்ஸ் டெமாக்ரடிக் பார்ட்டி- மக்கள் ஜனநாயகக் கட்சி) என்ற அவரது கட்சிக்கு தமிழகத்திலும் செல்வாக்கு ஏற்பட ஆரம்பித்தது.

ஆனால் நாஸர் மஃதனி அவர்கள் அப்போது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் கொள்கையில் இருந்தார். அவரது உரை, யாஸய்யதீ, யாரசூலுல்லாஹி என்ற இணைவைப்புக் கவிதைகளுடனே துவங்கும். இதனால் அவரது இயக்கம் தமிழகத்தில் வலுப்பெறுவது தவ்ஹீத பிரச்சாரத்துக்குப் பின்னடைவாக அமையும் என்ற கவலை தவ்ஹீத் சகோதரர்களுக்கு ஏற்பட்டது.

ஆனால் தவ்ஹீத்வாதிகளுக்கு சிரமம் தராமல் பிடிபியின் முடிவுரையை நாசர் மதனி தானே எழுதினார். சமுதாயப் போர்க்களத்தில் ஒரு காலை இழந்தும் சிங்கமாய் கர்ஜித்துக் கொண்டிருந்த அவர் சிகரத்தைத் தொடவிருந்தார். ஆனால் அரசியல் கட்சிகளுடனான அவரது கூட்டணி அவரை ஏறிய அதே வேகத்தில் குப்புறத் தள்ளியது. முஸ்லீக் செய்த அதே பிழையை இவரும் செய்தார். அதனால் அதன் விளைவை அவர் சந்திக்க நேரிட்டது.

ஜிஹாத் கமிட்டி

கேரளத்தில் நிலவிய வெற்றிடத்தை நிரப்புவதற்கு நாஸர் மஃதனி தேவைப்பட்டது போலவே தமிழகத்திற்கு ஒருவர் தேவைப்பட்டார். பழனிபாபா அந்த வெற்றிடச் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார்.

இவரிடம் பேச்சுத்திறமை இருந்தது. ஆனால் ஏகத்துவம் இல்லை. தெளிவான இஸ்லாமியக் கொள்கை இல்லை. பேசிக் கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் ஒருவரை எழுப்பி, உனக்கு ஐந்து கலிமா தெரியுமா? என்று கேட்பார். இந்த ஐந்து கலிமாக்கள் என்பதெல்லாம் மார்க்கத்தில் இல்லை, இதைத் தெரிந்திருந்தால் தான் ஒருவர் முஸ்லிம் என்பதும் இல்லை என்ற மார்க்க ஞானம் கூட அவருக்கு இருக்கவில்லை.

முன்கர் நகீர் கேள்வி கேட்டால் நான் அவரிடம் எதிர்க் கேள்வி கேட்பேன். எனது பேச்சு குற்றம் என்று அல்லாஹ் என்னை நரகில் போட்டால் போடட்டும் என்றெல்லாம் அவரது மேடைப் பேச்சு அமைந்தது.

எனினும் மக்களுக்கு ஒரு தேட்டம் இருந்தது. ஒரு தேவை இருந்தது. அந்த தேட்டத்தையும், தேவையையும் பழனிபாபா நிறைவேற்றினார்.

அவரது பேச்சில் அனல் பறக்கும். ஆங்கிலம் ஆட்டம் போடும். பிசிறடிக்காத அந்தப் பேச்சு இளைஞர்களைத் தன் வசப்படுத்தியது. அதன் விளைவு அவர் சென்று வரும் ஊர்களில் கலவரத் தீ பற்றிக் கொள்ளும் என்றானது.

அந்தக் கலவரத் தீயால் உயிர்களும், உடைமைகளும் சேதமாகும். எனவே அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அடிக்கடி சிறைவாசம்!

இங்கே நாம் இதைக் குறிப்பிடக் காரணம், பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு ஒரு வெற்றிடம் நிலவியது. அதை நிரப்புவதற்கு அப்போது யாருமில்லை. சமுதாயத்திலிருந்து யார் அந்த வெற்றிடத்தை நிரப்ப முன்வந்தாலும் அவரை ஏற்றுக் கொள்ள சமுதாயம் காத்திருந்தது. அவரிடம் மார்க்கம் இருக்கின்றதா? என்ற தரத்தையெல்லாம் யாரும் பார்க்கத் தயாரில்லை.

சமுதாய உணர்வு, வீரம் உள்ள எவர் வந்தாலும் அவரை ஏற்றுக் கொள்ள சமுதாயம் தயாராக இருந்தது என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.

சத்தியத்திற்கு ஜாக்; சமுதாயத்திற்கு பி.டி.பி

இந்த வெற்றிடம் தான் தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் ஒரு கேள்விப் புயலை மீண்டும் மீண்டும் கிளப்பியது. அதிலும் குறிப்பாக ஜாக்கின் மேல்மட்ட நிர்வாகக் குழு உறுப்பினருக்குக் கூட பி.டி.பி மீது பகிரங்கக் காதல்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் பாணியில், அவரது பாதையில், தங்கள் பெற்றோர், உற்றாரைப் பகைத்துக் கொண்டு ஒன்று கூடியிருக்கும் ஓர் இயக்கத்தில், அதிலும் குறிப்பாக அதை வழிநடத்தும் உயர் பொறுப்பிலிருந்து கொண்டு, ஷிர்க்கைக் கொள்கையாகக கொண்ட பி.டி.பி தலைமை மீது காதல் கொள்கிறார்; புகழ்கிறார் என்றால் அதற்கு அடிப்படைக் காரணம் வெற்றிடம் என்ற கோளாறு தான்.

தவ்ஹீத் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களிடமே இந்த நிலை என்றால் தவ்ஹீத் இயக்கத்தில் உள்ள சாதாரண உறுப்பினர்களின் நிலை என்ன? உண்மையில் அவர்களிடமும் பி.டி.பியில் ஈடுபாடு இருந்தது. இன்னும் சிலருக்கு ஜிஹாத் கமிட்டியின் மீது நாட்டம் இருந்தது. இது தான் பி.ஜேவை சமுதாயப் பிரச்சனையை நோக்கி கொண்டு சென்றது.

அப்போதிலிருந்து அவரது மேடைப் பேச்சுக்கள் சமுதாயப் பிரச்சனையையும் மையமாகக் கொண்டு சுழன்றது. மத்திய, மாநில அரசுகள், அரசியல்வாதிகள், கட்சிகள் முஸ்லிம்களுக்குச் செய்த துரோகங்களைத் தோலுரித்துக் காட்டியது.

பழனிபாபா, நாஸர் மஃதனி போன்று மக்களின் உணர்ச்சிகளை மட்டும் தூண்டி விடாமல், மக்களை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைத்தது. விடிவு காலம் இல்லை என்று விரக்தியில் வீழ்ந்திருந்தவர்களை வீறு கொண்டு எழ வைத்தது. அத்துடன், சமுதாய வெற்றி என்பது சத்தியக் கொள்கை மூலமே சாத்தியம் என்பதை உணர்த்தி, மக்களை அசத்தியத்திலிருந்து சத்தியப் பாதைக்கு கொண்டு வந்தது.

சத்தியப் பேச்சுடன் சமுதாயப் பேச்சையும் கலந்து கொடுக்க ஆரம்பித்த மாத்திரத்தில் ஜாக் இயக்கம் பல பரிமாணங்களில் வளர்ச்சி கண்டது. இதனால் சமுதாய மக்கள் நம் மீது கொண்டிருந்த வெறுப்பின் அளவு மிகப் பெரிய அளவில் சரிந்தது.

ஆடியோ, வீடியோ அணிவகுப்பு

அந்தக் கட்டத்தில் வெளிநாடுகளில் இளைஞர் வட்டாரங்களில் மிக வேகமாக வலம் வந்தவை பழனிபாபா அவர்களின் ஒலி நாடாக்கள் தான். அந்த இடத்தை பி.ஜேயின் ஒலி நாடாக்கள் பிடித்தன. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! ஆடியோ,வீடியோ கேஸட்டுகள் வளைகுடா நாடுகளில் சமுதாய உணர்வுள்ள மக்களிடம் அணிவகுத்தன.

பி.ஜேயின் இந்த சத்தியப் பேச்சு அரசியல்வாதிகளையும், அதிகாரவர்க்கத்தினரையும் ஓர் உலுக்கு உலுக்கியது. தமிழகத்தையே குலுக்கியது.

யாரையும் தடாவில் கைது செய்யலாம் என்ற ஒரு குட்டி அவசரநிலைப் பிரகடன நிலை மத்தியிலும் மாநிலத்திலும் இருந்த கால கட்டத்தில் பி.ஜே பேசிய பேச்சுக்கள் ஓர் அக்னிப் பிரவேசமாகும்.

சத்தியப் பிரச்சாரத்துடன் சமுதாயப் பிரச்சனையையும் கையில் எடுத்ததால் மத்திய, மாநில அரசுகளின் கழுகுப் பார்வைக்கும் பி.ஜே ஆளானார். அதனால் தான் இதை ஓர் அக்னிப் பிரவேசம் என்று குறிப்பிட வேண்டியுள்ளது.

ஆனால் அதுவும் அழைப்புப் பணிக்கு அடுக்கடுக்கான பலன்களைத் தந்தது. அதிகமான ஆட்களை சத்தியத்தில் கொண்டு வந்து சேர்த்தது. இது, சத்தியப் பேச்சு என்ற ஆயுதத்தால் கிடைத்த வெற்றியாகும். அடுத்தது எழுத்துப் பணி!

மாத இதழ் அல்ல! மந்திர இதழ்!

தவ்ஹீத் ஜமாஅத்தினரின் கையில் இருந்த ஒரே ஒரு மாத இதழ் அல்ஜன்னத் தான். அன்று அது மந்திர இதழாக இருந்தது. அரசியல், சமுதாயப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு, அதில் பி.ஜே தீட்டிய நுழைவாயில் (தலையங்கம்) பகுதி வாசகர்களின் உள்ளங்களை சத்தியத்தின் பக்கம் வளைத்துப் போட்டது.

சமுதாய மாற்றத்திற்கு தவ்ஹீத் கொள்கை தான் அவசியம் தேவை என்ற சிந்தனையை அவர்களின் உள்ளங்களில் பதிவு செய்தது. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற அவ்விதழ், அவர்களைச் சத்தியத்தின் பக்கம் வரவழைத்தது.

(இன்று இவ்விதழ் குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு அடிப்படைகளை விட்டு விட்டு, அதற்கு எதிரான திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பது வேறு விஷயம்.)

தவ்ஹீத்வாதிகளின் தடா எதிர்ப்புப் பேரணி

பேச்சு, எழுத்து என்ற இவ்விரு ஆயுதங்களைக் கொண்டு அல்லாஹ்வின் அருளால் நடத்திய அக்னிப் பிரவேசத்தின் உச்சக்கட்டம் தான், தடா எதிர்ப்புப் பேரணி! இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற அடிப்படையில் இந்தியாவில் பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சில சம்பவங்களுக்குப் பின்னால் முஸ்லிம்கள் சரமாரியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.

தமிழகத்தில் ஒரு குட்டி அவசர நிலைப் பிரகடனம் தான் அப்போதைய ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்றது என்று உறுதியாகக் குறிப்பிடலாம்.

ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து சமுதாயமே குரல் கொடுப்பதற்கு அஞ்சிய காலம் அது! அடங்கிப் போன காலம் அது! காவல் துறையின் கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த காட்டு தர்பார் அது!

குரல் கொடுப்பவரின் குரல்வளை நெறிக்கப்படும். கூட்டம் சேர்ப்பவரின் குறுக்கு உடைக்கப்படும். இக்கால கட்டத்தில் தான் மேலைப்பாளையத்தில் திருக்குர்ஆன் மாநாட்டைத் தொடர்ந்து நடைபெற்ற தடா எதிர்ப்புப் பேரணி!

அனுமதி மறுத்த அன்றைய தலைமை

இந்தப் பேரணி நடத்துவதற்கு அன்றைய தலைமையிடம் அனுமதி கோரிய போது கமாலுத்தீன் மதனி அனுமதி தர மறுத்தார். நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு அனுமதி கிடைத்தது.

மேலப்பாளையம் ஃப்ழ்லுல் இலாஹி அவர்கள் இதை முன்னின்று நடத்தினார்.

2-4-1994 அன்று நடைபெற்ற தடா எதிர்ப்பு பேரணியும் உரையும்

சமுதாய இயக்கங்கள் சமாதி ஆன பின், சத்திய இயக்கமான தவ்ஹீத் ஜமாஅத் (ஜாக்) நடத்திய இந்தப் பேரணியில் இளைஞர் பட்டாளம் குவிந்தது.

நஜாத்காரன், நஜாத்காரன் என்று நம்மைத் தூரவைத்த, தூக்கி எறிந்த, தூற்றி எறிந்த சுன்னத் வல்ஜமாஅத்தினர் சாரை சாரையாக அணிவகுத்தனர். சிறைக் கைதிகளை விடுவிக்கக் சொல்லி சிங்கங்களாய் கர்ஜித்தனர். பெண்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டது அந்தப் புது அத்தியாயமாகும்.

தமிழகத்தில் தடாவை எதிர்த்து யாரும் குரல் உயர்த்தாத கால கட்டத்தில், இந்தத் தாடா எதிர்ப்புப் பேரணியில் தங்கள் குழந்தை குட்டிகளுடன் தாய்மார்கள் கலந்து கொண்டது அதிகார வர்க்கத்திற்கு ஓர் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் அமைந்தது.

தமிழகம் எங்கும் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், போராட்டங்களில் பெருமளவு பெண்கள் பங்கேற்பதற்கு அடிப்படையாகவும், அஸ்திவாரமாகவும் அமைந்தது இந்த தடா எதிர்ப்புப் பேரணி தான்.

அல்லாஹ்வின் அருளால் அன்று தடா எதிர்ப்புப் பேரணியில் அடியெடுத்து வைத்த தாய்மார்கள் குடந்தை இட ஒதுக்கீட்டுப் பேரணி, சிறை நிரப்பும் போராட்டம் வரை பங்கெடுத்து, தமிழகத்தை கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முஸ்லிம் இயக்கங்களில் தாய்மார்களை அதிகமாகக் கொண்டிருக்கும் அமைப்பு தவ்ஹீத் ஜமாஅத் தான் என்ற தனிப் பெயரைப் பதிவு செய்வதற்கு அவர்கள் காரணமாக அமைந்திருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள்புரிவானாக!

பொதுசிவில் சட்டம் என்ற புது சதித்திட்டம்

இப்படி தடாவை எதிர்த்து ஒரு போர் நடந்து கொண்டிருக்கும் போதே மீண்டும் ஒரு போர் முழக்கம் செய்ய வேண்டிய புது சோதனை உருவெடுத்தது.

பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்ட பின், உடைந்து கிடந்த சமுதாயத்தை மேலும் உடைப்பதற்கு ஒரு புதுப்பிரச்சனை பூதகாரமாகக் கிளம்பியது. புயலாகப் புறப்பட்டது. அது தான் பொது சிவில் சட்டம்.

சமுதாயம் மரண மவுனத்தில் கிடந்த சந்தர்ப்பத்தில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும்படி சுப்ரீம் கோர்ட், மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.

இப்படி ஒரு உத்தரவை உச்ச நீதிமன்றம் வெளியிட்ட மாத்திரத்திலேயே அதைச் சமுதாயம் மிருக பலம் கொண்டு எதிர்த்தாக வேண்டும். அவ்வாறு எதிர்க்க வேண்டுமென்றால் சமுதாயம் அதன் தீமையை நன்றாக விளங்கியிருக்க வேண்டும்.

பொது சிவில் சட்டத்தின் பூதாகரமான பாதகங்களை சமுதாயத்திற்குப் புரிய வைக்கும் பணியை யாரும் செய்யவில்லை. இந்த சமயத்தில் தமிழகத்தில் இந்தப் பணியை தவ்ஹீத் ஜமாஅத் தான் செய்தாக வேண்டிய நிலை.

அரசியல் பண்டிதர்கள், அரசியல் ஞானம் பெற்றவர்கள், அரசியல் சட்ட மேதைகள் என்று யாரும் அன்று தவ்ஹீத் ஜமாஅத்தில் இல்லை. அதிலும் பி.ஜே களமிறங்கினார்.

பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு

என்ற கட்டுரை தனியாக வெளியிடப்பட்டுள்ளது.

சட்டம் படித்த வழக்கிறஞர்களும் விளக்குவதற்குத் தாளம் போடும் இந்தப் பொது சிவில் சட்டத்தைப் பாமரனுக்கும் விளங்கும் வகையில் மிக எளிய பரிமாணத்தில் சகோதரர் பி.ஜே அளித்திருந்தார்.

எழுத்தளவில், ஏட்டளவில் நின்று விடாமல் பொதுக் கூட்டங்களிலும் பி.ஜே உரை நிகழ்த்தினார். பொது சிவில் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டங்களில் கலந்து கொண்ட மக்கள் வியக்கின்ற அளவில் அவரது உரை அமைந்திருந்தது. இந்த உரை ஒளி. ஒலி நாடாக்களில் பதிவு செய்யப்பட்டு உலகெங்கும் வாழும் தமிழ் முஸ்லிம்களைச் சென்றடைந்தது.

https://onlinepj.in/index.php/videos/online-videos/kadanthu-vantha-paathai/pothu_civil_sattam_trichi

வீடியோ வடிவிலும் வெளியிடப்பட்டது.

இந்தப் பணியை அன்று எந்த இயக்கமும் செய்யவில்லை. தமிழக மக்களிடம் கொண்டு செல்லவில்லை. 

பொது சிவில் சட்டம் என்பது முஸ்லிம்களின் பிணத்தின் மீது தான் அமலாகும் என்ற பேச்சு மத்திய அரசின் காதில் விழுந்தது. அதனால் உச்ச நீதிமன்றத்தில் உத்தரவுக்கு அது செவிசாய்க்கவில்லை.

இப்படிப் பொது சிவில் சட்டத்தைப் பற்றிய ஒரு பொது விழிப்புணர்வை அன்று மக்களிடம் ஊட்டியதும் உணர்த்தியதும் பீஜே அவர்கள் தான்.

இது போன்ற குழல்கள் தான் நம்மை சமுதாயப் பிரச்சனைகளைக் கையில் எடுப்பதற்குத் தள்ளியது என்பதற்கு இது மற்றோர் எடுத்துக்காட்டு!

ஜெயலலிதா ஆட்சியின் போது, ஒரு கால கட்டத்தில் தமிழகத்தில் இந்துத்துவா சக்திகளின் இஸ்லாமிய விரோதப் போக்கு ஓர் எல்லையைக் கடந்து சென்றது. காமத்தில் மிஞ்சியது கன்னி மேரியா? கதீஜாவா? மணியம்மையா? என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு அந்தத் தீய சக்திகள் விஷம் கக்க ஆரம்பித்தன. அப்போது சமுதாயம் மயான அமைதியில் தான் இருந்தது. அதற்கும் ஆக்கப்பூர்வமான எதிர்ப்புக்களைத் தெரிவிக்க வேண்டியவர்கள் தவ்ஹீத்வாதிகள் தான் என்ற நிலை ஏற்பட்டது.

ராஜகோபாலன் கொலை

இப்படிப்பட்ட அக்கினிப் பிரவேசத்தின் போது மதுரையில் இந்து முன்னணி தலைவராக இருந்த ராஜகோபாலன் என்பவர் கொலை செய்யப்படுகின்றார். அதில் ஜாக் இயக்கத்தைத் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியானது. அதற்கு மறுப்பும் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாகத் தான் எஸ்.எம்.பாக்கர் தடாவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் அமைப்பு ரீதியாக ஜாக்கில் இல்லாவிட்டாலும் சமுதாயப் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுத்து வந்ததால் பி.ஜே யுடன் சேர்ந்து சமுதாயக் களப்பணியாற்றினார்.

பாக்கர் தடாவில் கைது செய்யப்பட்டது தவ்ஹீத்வாதிகளுக்கு ஓர் எச்சரிக்கை மணியானது. அப்போது தான் ஓர் ஆழமான சிந்தனை தோன்றுகிறது. இன்று பாக்கர் நாளை பி.ஜே என்று இந்தக் கைதுப் படலம் தொடரும். எனவே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதை முளையிலேயே கிள்ளி விட வேண்டும். அதற்கு வழி என்ன?

அப்போது வலிமையாக இருந்த ஜமாஅத் அமைப்பு ஜாக் தான். ஆனால் ஜாக்கின் தலைவர் கமாலுத்தீன் மதனி, இன்னும் சில செல்வந்தர்கள் இது போன்ற விஷப் பரீட்சைக்கு வர மாட்டார்கள்.

மதுரை ராஜகோபாலன் கொலையில் ஜாக் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் ஜாக்கில் நிதி வசூலிப்பவராக இருந்த சீனி நெய்னா முகம்மது விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி கிடைத்ததும் பீஜேயைத் தவிர அனைத்து நிர்வாகிகளும் பல மாதங்கள் அல்ஜன்னத் அலுவகத்தின் பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை.

அதில் ஒரு போதும் ஓட்டமெடுக்காத, ஆட்டம் காணாத செல்வந்தர் அன்வர் பாய் மட்டுமே!

தமுமுக உதயம்

இவரைத் தவிர்த்து கமாலுத்தீன் மதனி உட்பட செல்வந்தர்கள் இதற்கு இசைய மாட்டார்கள். இதற்கு என்ன செய்வது? இதற்கான ஆலோசனை அல்ஜன்னத் அலுவலகத்தில் தான் நடைபெற்றது. விடை கிடைத்தது. விடிய விடியப் பேசி ஒரு விடை கிடைத்தது.

பின்னர் விஞ்ஞானி அப்துல் ஜலீல் வீட்டில் மீண்டும் ஆலோசனை நடந்தது. கூட இருந்தவர் குணங்குடி ஹனீபா அவர்கள். அவர் தான் நமக்கு அரசியல் குரு என்ற உண்மையை இங்கு ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அவர் ஆலோசனை மட்டும் தரவில்லை. ஒரு அமைப்பையும் சேர்த்தே தந்தார். அதுதான் தமுமுக.

தமுமுக என்ற பெயரில் பதிவு செய்யப்படாத ஒரு இயக்கத்தை அவர் நடத்தி வந்தார். அதற்கு கொடி கூட இருக்கவில்லை. பீஜே தான் கறுப்பு வெள்ளைக் கொடியை வடிவமைத்தார். இந்த இரண்டு வண்ணங்களையும் தேர்வு செய்யக் காரணத்தையும் விளக்கினார். இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு என்பது கருப்பு வெள்ளையின் கருத்தாகும்.

இப்போது தமுமுகவின் தலைவர்களாக வலம் வரக்கூடியவர்களுக்கு இந்த அமைப்பை உருவாக்குவதில் பெரிய பங்களிப்பு ஏதும் இல்லை. தமுமுக முதலில் வெளியிட்ட பைலாவின் முதல் பக்கத்தைதக் காணுங்கள்! இப்போதைய பொதுச் செயலாளர் 6 வது இடத்திலும், இப்போதைய தலைவர் 7 வது இடத்திலும் இருப்பதைக் காண்க.

ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட தமுமுக பைளாவின் முதல் பக்கம்

TMMK bylaw

தமுமுக துவங்கும் போது ஜவாஹிருல்லாவோ, ஹைதர் அலியோ மக்களால் அறியப்பட்டவர்களாக இருக்கவில்லை. இவர்களது அழைப்பை ஏற்று வரக்கூடிய ஐம்பது பேர் கூட தமிழகத்தில் இருக்கவில்லை. மக்களை ஈர்க்கக் கூடிய சொல்லாற்றலும் இவர்களிடம் இருக்கவில்லை. கடந்த காலங்களில் சமுதாயத்துக்குத் தியாகம் செய்த வரலாறும் இவர்களுக்கு இருக்கவில்லை.

பீ.ஜே அவர்கள் பதினைந்து ஆண்டுகள் அடி உதைபட்டு கொள்கைச் சகோதரர்களையும், பிரச்சாரகர்களையும் உருவாக்கியிருந்ததால் - அவரே தமுமுகவின் தூணாகவும், முதல்நிலை தகுதியுடையவராகவும் இருந்தார். நெருக்கடியான காலங்களில் எந்தப் போராட்டத்திலும் அதன் தற்போதைய தலைவர் கலந்து கொண்டதில்லை. பின்வாங்கி விடுவார். இப்போது கருணாநிதியின் சிறுபான்மைப் பிரிவாக ஆன பின்பு போராட்டத்தில் கலந்து கொள்ளும் துணிவு (?) அவருக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமுமுக வரலாறை விளக்கும் சி.டியை தமுமுக வெளியிட்டது. அதில் பி.ஜேயை இருட்டடிப்பு செய்து விட்டு தாங்களே தமுமுகவை உருவாக்கியது போல் புளுகியதால் இதைக் குறிப்பிடுகிறோம்.

பாக்கரைக் கைது செய்த காவல்துறை, மற்றவர்களையும் வேறு ஏதேனும் வழக்கில் தூக்கிப்போட்டு விடக்கூடாது. அதற்கு உடனே ஒரு தற்காப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாக்கரின் கைதைக் கண்டித்தாக வேண்டும். அதற்கு மக்கள் கூட்டம் திரள வேண்டும். 50 பேர் திரண்டால் காவல் துறையிடம் அதற்கு ஒரு பார்வை! 100 பேர் திரண்டால் அதற்கு ஒரு பார்வை! 200 பேர் என்றால் காவல்துறையின் பார்வையில் ஒரு மாற்றமிருக்கும். 500 பேர் என்றால் அதற்கு ஒரு மரியாதை! மக்கள் நினைத்ததைச் சாதிக்கலாம். நாம் நான்கு பேர் கூடிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் என்ன பேசினாலும் அது காவல்துறையிடம் எடுபடாது. நமது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை தான் பேசும். அந்தப் பேச்சு தான் எடுபடும் என்ற அரசியல் அடிச்சுவட்டைப் போதித்தவர் குணங்குடி ஹனீபா அவர்கள்.

இப்பேரணிக்காக தமுமுகவில் இப்போது ஆதாயம் அடைந்து வருபவர்கள் ஒரு துரும்பை எடுத்துப் போடக் கூட இயலாதவர்களாக இருந்தனர். காரைக்கால் அப்துல் ரஜாக் என்பவரை பி.ஜே தனது பிரதிநிதியாக தமிழகமெங்கும் அனுப்பி தவ்ஹீத்வாதிகளைத் திரட்டியதால் தான் அப்பேரணி சாத்தியமானது.

அவரது ஆலோசனைப்படி அந்தப் பேரணி சென்னை மன்றோ சிலைக்கருகில் திரண்டது. அங்கிருந்து கிளம்பி தலைமைச் செயலகம் நோக்கிப் புறப்பட்டது. இடையில் பாரிமுனை சிக்னலில் நிறுத்தப்பட்டது. தமுமுகவின் முதல் பொதுச் செயலாளர் பொறியாளர் அப்துஸ்ஸமது, தலைவர் குணங்குடி ஹனீபா மற்றும் சிலர் தலைமைச் செயலாளரிடம் மனு அளித்து விட்டு வந்தனர்.

இது தான் தமுமுகவின் முதல் பேரணி! இப்பேரணியில் மக்கள், வெள்ளம் போல் குவிந்தனர். தவ்ஹீத் மக்கள் தான் இதில் வந்து குவிந்தனர். அவர்களைப் பார்த்து மற்ற பொதுமக்களும் வந்து கலந்து கொண்டனர்.

குணங்குடி ஹனீபா அவர்கள் கூறியது போன்று இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை, காவல்துறையின் பார்வையில் கண்ணியத்தை மட்டுமல்ல! ஒரு கலக்கத்தையும் ஏற்படுத்தியது.

இங்கு உறுதியாக ஒரு கருத்தைப் பதிவு செய்து கொள்கிறோம். அன்று தமிழகத்தில் வலிமை பெற்ற அமைப்பு, இன்னும் சொல்லப் போனால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருகின்ற மக்கள் சக்தி கொண்ட அமைப்பாக ஜாக் என்ற தவ்ஹீத் அமைப்பு தான் இருந்தது. அந்த தவ்ஹீத் மக்களை முதலீடாக, மூலதனமாகக் கொண்டு தான் தமுமுக என்ற அமைப்பு துவங்கியது என்பதை அழுத்தமாக மீண்டும் பதிவு செய்ய விரும்புகிறோம்.

காவல் துறையின் அடுத்தக்கட்ட சுழி, அக்னிப் பிரவேசம் மேற்கொண்டிருக்கும் பி.ஜேவை நோக்கித் தானே என்ற கவலை தான் அந்த தவ்ஹீத் மக்களை இயக்கியது. அது தான் அவர்களை அங்கு வந்து குவித்தது.

பாக்கருக்காக இப்படியொரு ஆர்ப்பாட்டத்தைச் செய்து முடித்த பின்னர் சில மாத இடைவெளியில் அடுத்தக்கட்ட நடவடிக்கை ஆரம்பித்தது. காரைக்காலில் ஜாக்கின் கட்டுப்பாட்டில் இருந்த ஜாமிஆ புஷ்ரா பெண்கள் மதரஸாவில் பணியாற்றிக் கொண்டிருந்த ஜே.எஸ். ரிபாயி பார்சல் குண்டு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

முதல் மற்றும் கடைசி உண்ணாவிரதப் போர்

மீண்டும் மக்கள் சக்தியைத் திரட்டி ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தும் நிர்பந்தம் ஏற்பட்டது. ஜாக் தலைமையிடம் இது தொடர்பாக பி.ஜே தொடர்பு கொண்டார். கலந்து பேசினார்.

ரிபாயீயைக் கைது செய்ததைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும், நாகூர் காவல்துறை அதிகாரி இந்திரஜித் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உண்ணாவிரதம் நடத்துவதற்கு தலைவர் என்ற முறையில் தவ்ஹீத் மக்களைத் திரளுமாறு அழைப்பு விடுங்கள். தமுமுக என்ற பெயரில் அழைத்தால் மக்கள் வர மாட்டார்கள் என்று பி.ஜே வலியுறுத்தினார். ஆனால் கமாலுத்தீன் மதனி அதற்கு உடன்படவில்லை.

எனது தலைமையில் உள்ள மக்களை ஹனீபாவின் பின்னால் திரளுமாறு நான் அறிவிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்தார். இரண்டு தலைமை ஏற்படுவதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டார். அப்பாவிகள் கைது செய்யப்பட்டதும் அவரது மதரஸாவில் பணியாற்றிய ஆசிரியர் கைது செய்யப்பட்டதும் அவரை எந்த விதத்திலும் பாதிக்கவேயில்லை.

நீங்கள் அழைப்பு விடுக்காவிட்டடால், பி.ஜே என்ற என் பெயரிலேயே மக்களை அழைப்பேன். நீங்கள் அழைப்பு விடுக்காமலே தவ்ஹீத் சகோதரர்கள் நிச்சம் திரளுவார்கள் என்று பீஜே எச்சரிக்கை விடுத்தார். தனது தலைமைப் பீடம் டம்மியாகி விடும் என்று அவர் அஞ்சியதால் கீழிறங்கி வந்து, ஜாக் தலைவர் என்ற பெயரில் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். அதைப் பிரசுரங்களாக நாம் வெளியிட்டோம்.

கமாலுத்தீன் மதனியின் பதவி ஆசை இப்போது தான் தெளிவாக அனைவருக்கும் தெரிந்தது. தமுமுக என்பதற்கு தவ்ஹீத் மக்களைத் தவிர அன்றைக்கு கடுகளவு ஆதரவும் இருக்கவில்லை என்பதும் இதிலிருந்தும் தெளிவாகும்.

உண்ணாவிரதம் சென்னை குறளகத்திற்கு எதிரில் நடைபெறுகின்றது. மக்கள் அந்தப் போராட்டத்திற்கும் வந்து கலந்து கொண்டனர். காவல் துறையின் கண்களை மிரளச் செய்யும் அளவுக்கு மக்கள் கூட்டம், ஆம்! தவ்ஹீத்வாதிகளின் கூட்டம் வந்து குவிந்தது. குறளகத்திற்கு எதிரில் குரல் கொடுத்தோம்; கைதுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இவர்களில் யார் மீது கை வைத்தாலும் மக்கள் சக்தி திரளும் என்பதை ஒரு முறை அல்ல! இரண்டாவது முறையாக, வலிமையாக எடுத்துக் காட்டினோம்.

(உண்ணாவிரதம் நடத்துவது மார்க்க அடிப்படையில் கூடுமா? என்பது விவாதப் பொருளாகி, இறுதியில் கூடாது என்று முடிவானது. இதனால் அன்றிலிருந்து உண்ணாவிரதத்தைக் கை கழுவிவிட்டோம்.)

தவ்ஹீத்வாதிகளின் தலைமையாக இருந்த ஜாக்குக்கும், தமுமுகவுக்கும் பிரச்சனைகள் ஏற்படாமல் செயல்பட வேண்டும் என்று தமுமுக நிர்வாகிகள் முடிவு செய்து இது குறித்து கமாலுத்தீன் மதனியிடம் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஏனெனில் அப்போது தமுமுகவுக்கு என தனியாக எந்த ஆள் பலமும் இல்லாமல் இருந்தது. அதனடைப்படையில் பீஜெ சென்னை புதுப்பேட்டைக்கு வந்திருந்த கமாலுத்தீன் மதனியை சந்தித்து தமுமுகவுக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும். இரண்டு தலைமை வேண்டாம் என்று நீங்கள் கருதினால் இரண்டுக்கும் நீங்களே தலைமை ஏற்பதற்கு தமுமுக நிர்வாகிகள் உடன்படுகிறார்கள் என்று எவ்வளவோ பீஜே எடுத்துச் சொன்னார். ஆனால் கொள்கயற்றவர்களுடன் சேர்ந்து செயல்பட முடியாது என்று கமாலுத்தீன் மறுத்து விட்டார். மேலும் இந்த தமுமுக ஒரு காலத்தில் தவ்ஹீதை ஒழிக்க பாடுபடும் எனவும் கமாலுத்தின் மதனி சொன்னார். அதற்கு பீஜே அப்படி ஒரு நிலை வந்தால் நான் தமுமுகவை தூக்கி எறிந்து விட்டு தவ்ஹீதின் பக்கம் நிற்பேன் எனக் கூறி விட்டு பீஜே வெளியேறினார்.

அந்த நிலை வந்த போது பீஜெ சொன்ன படி தமுமுகவை கை கழுவினார், ஆனால் அந்த நிலை வந்த பின்னர் கமாலுத்தீன் மதனி தமுமுகவுடன் ஒட்டிக் கொண்டார்.

 

தன் பின்னர் தவ்ஹீத்வாதிகளின் எழுச்சிமிகு உரையில் ஊர்கள் தோறும் தமுமுக கிளைகள் வேரூன்றின. இத்துடன் தவ்ஹீத் கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர்களும் இயக்கத்தில் இணைந்தனர்.

இயக்கம் வளர்ந்து விட்ட பின் இனிமேல் இயக்கம் தடை செய்யப்பட முடியாது என்ற நிலை ஏற்பட்டு, தமுமுகவுக்கு ஒரு மரியாதை ஏற்றப்பட்ட பின் பி.ஜே அமைப்பாளர் பொறுப்பிலிருந்து விலகினார்.

இப்போது இருப்பவர்கள் நல்ல தலைவர்கள்; இந்த இயக்கத்தை கஷ்டமான காலத்தில் நான் விட்டு விட்டு ஓடவில்லை. இனி மேல் நான் இல்லாவிட்டாலும் சிறப்பாக நடத்துவார்கள் என்று மனம் திறந்து மடல் எழுதி, பீஜே பொறுப்பிலிருந்து விலகினார்.

மாபெரும் மக்கள் இயக்கமாக ஒரு இயக்கத்தை வளர்த்துவிட்டு, அதன் முதல்நிலைத் தலைவராக இருக்கும் ஒருவர் மன நிறைவோடு ஒதுங்குவது எங்குமே நடந்திராத ஒன்று. இவர்கள் நன்றாக இயக்கத்தைக் கொண்டு செல்வார்கள் என்று பீ.ஜேயை இவர்கள் நம்ப வைத்திருந்தார்கள்.

ஆனால் பீ.ஜே முழுமையாக இயக்கத்தை இவர்கள் கையில் ஒப்படைத்த பிறகு தான் இவர்கள் நயவஞ்சக வேடம் போட்டது ஒவ்வொன்றாக அம்பலமானது.

பீ.ஜே பொறுப்பிலிருந்து விலகியது முதல், பிஞ்சிலே பழுத்த ஒருவரை ஊர்கள் தோறும் அனுப்பி, நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து, தவ்ஹீத்வாதிகளைக் களையெடுத்தனர்.

தவ்ஹீத்வாதிகளுக்கும், மற்றவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு நியாயம் கேட்டு தலைமையை அனுகினால் தமுமுக பொறுப்பில் இருப்பது என்றால் பிரச்சனைக்குரியவற்றை விட்டு விலக வேண்டும் என்று இப்போதைய தலைவரும், செயலாளரும் எச்சரிக்கும் நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தன.

பொறுப்பில் இருந்து பீ.ஜே விலகினாலும் அமைப்புக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. ஆலோசனை கேட்கும் போதெல்லாம் ஆலோசனை வழங்கத் தவறவில்லை. அதே சமயம் இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலை போவதைக் கவனித்துக் கவலைப்பட்டார். இந்த அளவுக்கு கீழ்த்தரமாகச் செல்வார்கள் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்று நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கவலைப்பட்டார்.

ஜாக்கில் இருந்து கொண்டே, கமாலுத்தீனின் பணத்தாசை, பதவி வெறியைக் கண்டு புளுங்கியது போன்ற நிலை ஏற்பட்டது. தவ்ஹீத் தாயிகள் மத்தியில் அதிருப்தியும், கொந்தளிப்பும் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட தவ்ஹீத்வாதிகளுக்கு உதவ முடியாத நிலையில் இருக்கிறோமே என்று வேதனைப்படும் அளவுக்கு தமுமுக தவ்ஹீதுக்கு எதிராகக் காய்களைத் திட்டுமிட்டு நகர்த்தி வந்தது.

ஜாக் தமுமுக உரசலும் விரிசலும்

தான் தடை செய்யப்படலாம் என்ற கவலை ஜாக்கிற்கு இருந்தது. இந்த தயக்கத்தை பி.ஜே நன்கு புரிந்து வைத்திருந்தார். அதனால் தான், தன்னால் ஜாக்கிற்கு எந்தவொரு ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஜாக்கின் தலைமை நிர்வாகக் குழு பொறுப்பிலிருந்து விலகினார்.

(இதுவே அவருக்குப் பின்னர் பாதகமானது. அவர் வளர்த்த அந்த ஜாக் இயக்கத்தில் உறுப்பினர் உரிமை கூட இல்லாமல் பறிக்கப்பட்டது.)

இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஜாக்கின் அரசியல், சமுதாயப் பிரிவாக தமுமுகவைச் செயல்படுத்திக் கொள்ளலாம். இதை வெளிப்படையாகக் கூட கமாலுத்தீன் மதனி செய்ய வேண்டியதில்லை, மறைமுகமாக அனுமதி தந்தால் போதும் , அதற்காக பொறியாளர் அப்துஸ்ஸமது, குணங்குடி ஹனீபா ஆகியோர் கமாலுத்தீன் மதனியிடம் பைஅத் செய்வதற்குக் கூடத் தயாராக இருந்தார்கள். (அப்போது நாம் அமீர் சித்தாந்தத்தை ஆதரித்த காலம் அது)

பி.ஜே உட்பட பலர் மாநில அமீரிடம் ஒரு மன்றாட்டத்தையே நடத்தினார்கள். பலப்பல அமர்வுகள்! பலப்பல கலந்தாலோசனைகள்! பல்வேறு கட்ட முயற்சிகள்! இத்தனையும் எதற்கு? இவ்வளவு நாள் வியர்வை அல்ல! இரத்தத் துளிகளால் வளர்த்த ஓர் இயக்கத்தை விட்டுப் பிரிந்து விடக் கூடாது என்பதற்காகவே!

ஜாக் என்ற கட்டமைப்பு வருவதற்கு முன்பே சகோதரர் கலீல் ரசூல் அவர்களும், நானும் தனிப்பட்ட முறையில் கமாலுத்தீன் மதனியை நாகர்கோவிலில் போய்ச் சந்தித்தோம். நீண்ட நேரம் உரையாடினோம்; கெஞ்சினோம். கல்லும் கரையும் என்பார்கள். ஆனால் கல்மனம் கொண்ட கமாலுத்தீன் மதனி கரையவில்லை.

இதன் பின்னர் திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழகம் முழுவதிலும் உள்ள தாயீக்கள் கலந்து கொண்டனர். அதில் தமுமுகவின் அப்போதைய செயல்பாடுகள் குர்ஆன், ஹதீசுக்கு உட்பட்டவை தான் என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகளை குர்ஆன், ஹதீஸ் ஒளியிலிருந்து பி.ஜே எடுத்து வைத்தார். நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு கமாலுத்தீன் மதனி, நான் பரிசீலித்து விட்டுச் சொல்கிறேன் என்று இறுதியில் சொல்லி விட்டுப் போனார். பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அதன் பிறகு அவர் பேசுகின்ற மேடை தோறும் தமுமுகவை விமர்சிக்கலானார்.

கமாலுத்தீன் மதனி, தமுமுகவை அடாது விமர்சித்தாலும், விடாது நமது தரப்பில் சமரச முயற்சிகளை மேற்கொண்டோம். ஜாக் உருவாக்கத்தில் ஆரம்ப காலகட்டத்தில் பங்கெடுத்து, உழைப்பு தியாகங்கள் செய்த சகோதரர்களைத் திரட்டி மீண்டும் அதே அரிஸ்டோ ஹோட்டலில் ஒரு சமரசக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த மக்களைத் திரட்டும் பணியில் நானும், ஸைபுல்லாஹ் ஹாஜா, அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி ஆகியோரும் ஈடுபட்டிருந்தோம்.

ஊர் ஊராகச் சென்று ஆட்களை அழைத்தோம். அதன் பின்னர் 31.08.1997 அன்று இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள இயலாமல் போனது. காரணம், அப்போது மேலப்பாளையத்தில் நடைபெற்ற சில அசம்பாவித சம்பவங்களில், சம்பந்தமில்லாமலேயே நானும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தேன்.

இந்தக் கூட்டத்திற்குப் பின் ஓர் இணக்கம் ஏற்பட்டது. ஜாக்கின் வேனை எடுத்துக் கொண்டு பி.ஜே திருச்சியில் நடைபெற்ற தமுமுக கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட அந்த இணக்கம் அற்ப ஆயுளிலேயே முடிந்து விட்டது. அந்த வருடம் ரமளான் பிறை விஷயத்தில் கமாலுத்தீன் தான்தோன்றித் தனமாக ஓர் அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் ஜாக் - தமுமுக உறவில் உரசல் அல்ல! விரிசல் ஏற்பட்டது.

தவ்ஹீத் பிரச்சாரக் குழு உதயம்

துளைத்தெடுத்த துரோகங்கள், வரம்பு மீறிய வாக்குமீறல்கள், அடுக்கடுக்கான அவமானங்கள் இவ்வுளவுக்குப் பிறகும் இவருடன் இருக்க இயலாது என்பதை விட இவர் நம்முடன் இருக்க விரும்பவில்லை, நம்மை வெளியேற்ற விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொண்டோம்.

வெளிநாட்டுத் தொடர்புகள், தொடர் வரவுகள் இவையெல்லாம் அவருக்குத் தன்னிறைவையும், தலைக்கனத்தையும் ஏற்படுத்தியிருந்தன. அதனால் ஜாக்கிலிருந்து வெளியேறி தவ்ஹீத் பிரச்சாரக் குழு என்ற இயக்கத்தைக கண்டோம். தமுமுக என்ற அமைப்பு நம்மிடம் இருந்தாலும் தவ்ஹீதுக்கு என்று தனி அமைப்பு இருக்கட்டும் என்றெண்ணி இந்த அமைப்பைத் துவக்கினோம். அதற்கு ஹாமித் பக்ரி தலைவராக இருந்தார். அதன் பிறகு நான் தலைவராக நியமிக்கப்பட்டேன்.

இந்த அமைப்பின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது, செய்யது முஹம்மது மதனீ, ஆர்.டி.ஓவில் பணிபுரிந்த பஷீர் ஆகியோரின் முயற்சியில், நாகர்கோவில் ஹனீபா நகர் பள்ளிவாசலில் ஒரு சமரசக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதை சகோதரர் எம்.எஸ். சுலைமான் முன்னின்று ஏற்பாடு செய்தார்.

இந்த சமரசக் கூட்டத்திற்கு வரமாட்டேன் என்று கமாலுத்தீன் முரண்டுபிடித்தார். கடைசியில் ஒருவாறாக அவரைப் பள்ளியில் கொண்டு வந்து சேர்த்தனர்.

வாதப்பிரதிவாதங்கள்! இறுதியில் பீ.ஜே இரண்டு கோரிக்கைகளை அல்லது நிபந்தனைகளை முன்வைத்தார்.

  1. ஜாக்கில் உள்ள கொள்கைவாதிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும். (நாங்கள் ஜாக் என்று சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை நிலை இருந்தது. பி.ஜே உட்பட அனைவருக்கும் இந்தக் கதி! எனவே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது)
  1. நிர்வாகச் சீரமைப்பு

இன்னும் இது போன்ற சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன.

இதற்குப் பதிலளித்த எஸ்.கமாலுத்தீன் நான் இதை ஏற்றுக் கொள்கிறேன்; ஆனால் அவர்கள் தவ்ஹீத் பிரச்சாரக் குழுவை உடனே கலைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதற்கு பி.ஜே நாங்கள் தவ்ஹீத் பிரச்சாரக் குழுவைக் கலைக்க மாட்டோம். ஆனால் மூன்று மாதங்களுக்கு இந்தப் பெயரில் செயல்பட மாட்டோம். அதற்குள் எங்கள் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும். காரணம், அடிக்கடி எஸ்.கமாலுத்தீன் இப்படி வாக்குறுதி கொடுத்துவிட்டு மாறு செய்வார். வாக்குறுதியை மீறுவார். எனவே தவ்ஹீத் பிரச்சாரக் குழுவைக் கலைக்க மாட்டோம். இந்த மூன்று மாதங்களுக்குள் நாங்கள் வைத்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பி.ஜே கேட்டுக் கொண்டார். அதற்கு நாங்கள் பொறுப்பு என்று சமரசக் குழுவினர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஆறப்போட்டு நாறடித்தல்

ஆறப்பட்டு நாறடிக்கும் கலையில் வல்லவர் நரசிம்மராவ். ஆனால் அவரை மிஞ்சிய ஒருவர் இருக்கிறார் என்றால் அது எஸ் எஸ்.கமாலுத்தீன் மதனி தான். காலை வாருவதில் கை தேர்ந்த கமாலுத்தீன் மதனி வழக்கம் போல் இந்த சமரச முயற்சியிலும் காலை வாரினார். இம்முயற்சியில் இறங்கியவர்களின் முகத்தில் கரியைப் பூசினார்.

இனிமேல் நாம் நமது வழியில் தவ்ஹீதைச் சொல்வோம் என்று பிரச்சாரக் குழு என்ற பெயரிலேயே தவ்ஹீத் பணி தொடர்ந்தது. தவ்ஹீத் இயக்கத்தில் இருந்து கொண்டே சத்தியப் பணியையும் சமுதாயப் பணியையும் சேர்த்து செய்ய வேண்டும் என்று எங்கள் முயற்சி, கமாலுத்தீனின் வறட்டுப் பிடிவாதத்தாலும் வாக்குமீறல்களாலும் தோற்றுப் போயிற்று! நாங்கள் வளர்த்த ஜாக்கை விட்டு விட வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்பதை எடுத்துக் காட்டவே இந்தச் சுருக்க வரலாறு. இப்போது சமுதாயப் பணிக்காகத் தொடங்கிய தமுமுகவின் வரலாற்றைப் பார்ப்போம்.

அவரசப் பிரசவம்

தமுமுக ஓர் அவசரப் பிரசவம் எனினும் அது அரைகுறைப் பிரசவமல்ல! முழுமையாகப் பிறந்த குழந்தை! ஏற்கனவே இருந்த சமுதாய இயக்கங்கள் அழிந்ததற்கான காரணங்களைக் கண்டறிந்து, அது போன்ற காரணங்கள், கரையான்கள் இதை அண்டக் கூடாது, அணுகக் கூடாது என்பதில் முழுக் கவனம் செலுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தான் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கொள்கையாகக் கொள்ளப்பட்டது.

இதனால் தமுமுகவின் ஒவ்வொரு அறிமுகக் கூட்டங்களிலும் அடுத்த கட்டக் கூட்டங்களிலும், நாங்கள் உங்களிடம் ஒரு போதும் எங்களுக்காக ஓட்டுக் கேட்டு வர மாட்டோம் என்று வாக்குறுதி அளித்தனர். எங்களுக்கு வாக்குக் கேட்டால் எங்களைச் செருப்பால் அடியுங்கள் என்று கூடப் பேசியதுண்டு. இப்படி ஓர் உறுதியான குரலில், உச்சஸ்தாயியில் பேசியது மக்களுடைய உள்ளங்களில் ஊடுருவியது.

தவ்ஹீத் ஒரு தடைக்கல்லா?

வெகு வேகமாக இந்த இயக்கம் மக்களிடம் வளர்ச்சி கண்டது. இத்தனைக்கும் பி.ஜே ஒரு பக்கா தவ்ஹீத்வாதியாக இருந்தும் (தமுமுக வளாச்சிக்கு தவ்ஹீத் ஒரு போதும் தடைக்கல்லாக இருக்கவில்லை) தமுமுக மேடையில் சமுதாயப் பிரச்சனைகளை மட்டும் பேசுவோம்; அங்கு தவ்ஹீதைப் பேச மாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்கினார். அதன்படி அந்த இயக்கம் பெருவளர்ச்சி கண்டது.

தனிஇட ஒதுக்கீடும் தவ்ஹீத் ஜமாஅத்தும்

தமுமுக என்ற இந்த சமுதாய இயக்கத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், ஆணிவேராகவும் அமைந்தது இடஒதுக்கீடு கொள்கை தான். பாபரி மஸ்ஜித் முதல் அனைத்துப் பிரச்சனைகளுக்கும், முஸ்லிம்கள் கிள்ளுக்கீரைகளாக நடத்தப்படுவதற்கும் காரணம் சுதந்திரத்திற்குப் பிறகு, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு பறிக்கப்பட்டது தான் என்பதைக் கருத்தில் கொண்டு இடஒதுக்கீடு கோரிக்கையைக் கையில் எடுத்தது. இட ஒதுக்கீடு கிடைத்துவிட்டால் தமுமுகவைக் கலைத்து விடுவோம் என்று கூட மக்களிடம் அறிவிக்கப்பட்டது.

இந்த இட ஒதுக்கீட்டைக் கையில் எடுத்ததும், ஏற்கனவே சரிந்து விழுந்த சமுதாயம், இது சாத்தியமா? என்ற கேள்வியை எழுப்பினார்கள். சாத்தியமே என்று கூறி அதை மூலை முடுக்குகளுக்கு அதன் பேச்சாளர்கள் எடுத்துச் சென்றார்கள்.

தவ்ஹீத் தாயீக்கள்தான் தமுமுக பேச்சாளர்கள்

இடஒதுக்கீட்டுக் கொள்கையை மக்களிடம் எடுத்துச் சென்றவர்கள் யார்? அவ்வியக்கத்திற்கென்று பேச்சாளர்கள் கிடையாது. நாவலர், பாவலர் கிடையாது. வாணியம்பாடி வாத்தியார் மட்டும் பாடம் நடத்துவார். அதுவும் இந்தியாவைத் தாண்டி, செசன்யா, கஜகஸ்தான் என்று தான்.

இந்த இயக்கம் மக்களிடம் போய்ச் சேருவதற்கு தவ்ஹீத் தாயீக்கள் தான் முதலீடானார்கள். அவர்கள் தான் இந்த இடஒதுக்கீடு கொள்கையை எட்டுத் திக்குகளுக்கும் எடுத்துச் சென்றார்கள்.

விழிப்புணர்வை ஏற்படுத்திய விஜய் டிவி பேட்டி

இடஒதுக்கீடு என்றால் என்ன? அதன் பயன் என்ன? என்ற விளக்கங்கள் கூட சமுதாயத்திற்குத் தெரியாமல் இருந்தது. காயிதேமில்லத்திற்கு மணிமண்டபம் கட்டுவதையும், மீலாது நபிக்கு விடுமுறை அறிவிப்பதையும் முஸ்லிம் சமுதாயத்திற்குச் செய்த மிகப்பெரிய சாதனைகளாகக் கருதப்பட்ட காலம் அது.

இப்படிப்பட்ட காலத்தில் தான் விஜய் டி.வியில் பி.ஜேயின் பேட்டி ஒளிபரப்பானது. மணி மண்டபங்கள் கட்டுவதால், காயிதே மில்லத் சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைப்பதால் முஸ்லிம்களுக்கு என்ன பயன்? முஸ்லிம்கள் வாழ்வுரிமை இழந்து நிற்கிறார்கள். வயிற்றுக்கு உணவில்லாமல் நிற்கிறார்கள். மண்டபம் கட்டினால் முஸ்லிம்களின் பசி போய்விடுமா? எங்களுக்குத் தேவை இடஒதுக்கீடு தான் என்று ஆணியடித்தாற்போல் பி.ஜே கூறிய போது, அவரைப் பேட்டி கண்ட ரபி பெர்ணாட் என்பவர் அதிர்ந்து போனார்.

முஸ்லிம்களிடம் இப்படி ஒரு கோரிக்கை இருப்பதே அப்போது தான் உலகுக்குத் தெரிய வந்தது. அந்தப் பேட்டி ஒளிபரப்பானவுடன் சட்டசபையில் கருணாநிதி அதற்குப் பதிலளித்துப் பேசினார். நாங்கள் தான் முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் என்று வழக்கம் போல் பல்லவி பாடினார். அதன் பிறகு இந்தத் தீ தமிழகமெங்கும் பற்றிக் கொண்டது.

தவ்ஹீத் பள்ளிவாசல்களின் ஜும்ஆ மேடைகளில் இடஒதுக்கீடு பற்றிப் பேசப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இதற்குப் பிறகு எல்லா அரசியல் கட்சிகளும் இந்தக் கருத்தை எதிரொலிக்க ஆரம்பித்தன.

பாபரி மஸ்ஜித் மீட்புக் கோரிக்கை

இடஒதுக்கீட்டிற்கான குரல் ஒரு பக்கம் ஒலித்துக் கொண்டிருந்த போது, இன்னொரு பக்கத்தில் பாபரி மஸ்ஜித் மீட்புக்கான போராட்டங்களை தமுமுக தொடர்ந்து நடத்தியது.

பாபரி மஸ்ஜித் இடிந்து விழுந்தது போலவே, அதை மீண்டும் எழுப்ப வேண்டும் என்ற எண்ணமும் இடிந்து விழுந்திருந்தது. அதை மறக்க முற்பட்டனர்.

அப்போது தான் தவ்ஹீத் பேச்சாளர்கள் வெள்ளி மேடைகளிலும், இதர சொற்பொழிவு மேடைகளிலும், யார் தனது பொருளைப் பாதுகாப்பதற்காக போரிட்டுக் கொல்லப்படுகின்றானோ அவன் ஷஹீத் ஆவான் என்ற ஹதீஸையெல்லாம் ஆதாரமாகக் காட்டி, பாபரி மஸ்ஜிதை மீட்பதற்காகப் போராட வேண்டும்; அதற்காகப் போர்க்குரல் கொடுக்க வேண்டும் என்று தூண்டினர். மஸ்ஜிதை மீட்பதற்கு முன்பாக மக்களை மறதியிலிருந்து மீட்டனர்.

இதன் விளைவாய் மக்கள் கடல் கடந்து அலை போல் டிசம்பர் 6ம் தேதி நடைபெறும் போராட்டங்களில் திரண்டனர். இந்தப் போராட்டங்கள் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

முதல்வர் வீட்டு முற்றுகை

ஒரு டிசம்பர் 6 அன்று அப்போதைய முதல்வர் கருணாநிதி வீட்டை முற்றுகையிட வேண்டும் என்று தமுமுக அறிவித்தது. அதற்கும் தவ்ஹீத்வாதிகள் தயாரானார்கள். அந்த அளவுக்கு தர்பியாக்கள் நடத்தப்பட்டன.

அந்த தர்பியாக்களில் மரணத்திற்கு அஞ்சாத தியாகிகள் பற்றிப் போதிக்கப்பட்டன. குறிப்பாக மூஸா நபியவர்களிடத்தில் போட்டிக்கு வந்த மந்திரவாதிகள் ஈமான் கொண்டு, ஃபிர்அவ்னால் தண்டிக்கப்பட்ட வரலாறு பற்றிப் போதிக்கப்பட்டது. அதனால் தான் முறுக்கேறிய நரம்புகளுடன் முதல்வர் வீட்டு முற்றுகைக்கு தவ்ஹீத்வாதிகள் தயாரானார்கள். காக்கிச் சட்டை பயம் கழற்றி எறியப்பட்டது. இதற்கான அடிப்படையே தவ்ஹீத்தான். தவ்ஹீத் இல்லையேல் இந்தத் தெம்பு, திராணி, துணிச்சல் அவர்களுக்கு ஒரு போதும் ஏற்பட்டிருக்காது.

முதல்வராயிருந்தும் தன் வீட்டை முற்றுகையிடுவதைக் கருணாநிதியால் தடுக்க முடியவில்லை. கடுமையான கைது நடவடிக்கைகள், தடுப்புச் சுவர்கள், துப்பாக்கிச் சூடு நடக்கும் என்ற மிரட்டல்கள் இவையனைத்தையும் மிஞ்சி குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கொள்கைவாதிகள் குவிந்தனர்; கைது செய்யப்பட்டனர். இப்படிப் பாபரி மஸ்ஜித் மீட்புப் போர் மக்களிடம் துவக்கி வைக்கப்பட்டது.

இதன் மாபெரும் பயன், பாபரி மஸ்ஜித் மீட்கப்பட்டதோ இல்லையோ ஆனால் சங்பரிவாரங்களின் பட்டியலில் இருந்த காசி, மதுரா போன்ற பள்ளிவாசல்கள் மீது அவர்கள் கை வைக்க அஞ்சினர்.

இதர பிரச்சனைகளுக்காக எழுச்சிப் போராட்டங்கள்

கடந்த காலத்தைப் போன்றில்லாமல் சமுதாயத்தில் யார் அநியாயமாகக் கைது செய்யப்பட்டாலும் வீதியில் இறங்கும் வீரத்தைத் தந்தது தவ்ஹீத் கொள்கை. வீறு கொண்டு எழ வைத்தது. முஸ்லிம்களின் சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளில் அநீதி, அக்கிரமம் இழைக்கப்பட்ட போது ஆர்த்தெழும் போர்க்குணத்தை ஊட்டியது தவ்ஹீத் கொள்கை தான்.

தடையைத் தாண்டிய தமுமுக

இக்கட்டத்தில் தான் வாழ்வுரிமை மாநாடு! இதன் பயனாய் தடையிலிருந்து தப்பியது. தமிழக வட்டத்தில் மட்டுமின்றி டெல்லியிலும் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை எதிரொலிக்கச் செய்தது.

இதன் பின்பு அவ்வப்போது தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் தமுமுக நிர்வாகிகளுக்கும் அவ்வப்போது உரசல் ஏற்பட்டது. இந்தக் கட்டத்தில் தான் மதுரை தமுக்கம் மைதானத்தில் தவ்ஹீதுக்கான ஒரு மாநாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு உதயமாகின்றது.

நஞ்சைக் கலக்கிய தஞ்சை பேரணி

இதன் பின்பு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தஞ்சையில் இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி தமுமுக ஒரு பேரணியை நடத்தியது. இந்தத் தஞ்சை பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கூட்டம் அந்த இயக்கத்தின் நிர்வாகிகளின் உள்ளத்தில் நஞ்சைக் கலக்கியது. இந்தக் கூட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தவ்ஹீத்வாதிகளை வெளியேற்ற வேண்டும் என்று தப்புக் கணக்குப் போட ஆரம்பித்தனர். அரசியல் கட்சிகளின் சகவாசங்கள் அவர்களின் உள்ளங்களில் மாற்றத்தைக் கொண்டு வந்தன. அரசியல் கட்சியினர் காணும் கனவுகளை இவர்களும் காணத் துவங்கினர்.

இதற்கு முந்தைய இயக்கங்கள் நீர்த்துப் போவதற்கும் நிர்மூலமானதற்கும் அடிப்படைக் காரணம் தேர்தலில் போட்டி என்ற நிலைபாடு தான். அதனால் தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற நிலைபாட்டை தமுமுக அடிப்படைக் கொள்கையாகக் கொண்டது. அந்த நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதில் பி.ஜே கண்ணும் கருத்துமாக இருந்தார்.

  1. தேர்தலில் பங்கெடுப்பதைத் தடுக்கும் பி.ஜேயின் நடவடிக்கைகள்.

2 தமுமுகவின் தனித்தன்மையைத் தக்க வைப்பதிலும், பிற இயக்கங்களுடன் கலந்து விடாமல் அதைத் தடுக்க பி.ஜே கொண்டிருந்த கரிசனம், காட்டிய கண்டிப்பு

  1. தமுமுக தலைவர்களிடம் நாள்பட நாள்பட தலைதூக்கிய தவ்ஹீத் கொள்கையிலேயே சமரசம் செய்யும் உணர்வு, இன்னும் சொல்லப் போனால் தவ்ஹீத் எதிர்ப்புணர்வு

ஆகியவை ஏற்கனவே உரசலில் இருந்ததை விரிசலாக்கியது. விளைவு! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உதயமானது.

தவ்ஹீத் கொள்கை தான் தமுமுக வளர்ச்சிக்குத் தடை என்று எழுதியே கொடுத்தனர்.

அந்தக் கடிதத்தை பார்க்க

pj tmmk

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உதயம்

அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! தவ்ஹீத்வாதிகளுக்கு, குறிப்பாக தவ்ஹீத் தாயீக்களுக்கு இது உண்மையில் ஒரு விடுதலை உணர்வை அளித்தது.

தவ்ஹீத்வாதிகளை மூலதனமாகக் கொண்டு வளர்க்கப்பட்ட ஒரு இயக்கத்தில் சமுதாய நலனுக்காக தவ்ஹீதை இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும் அநியாயத்திலிருந்து விடுதலை! அதாவது கண்ணை விற்று ஓவியம் வாங்கும் அக்கிரமத்திலிருந்து ஒரு விடுதலை! இந்த அநியாயங்களுக்கு விடுதலை இயக்கமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உதயமானது. அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் என்பது பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தாக உருவெடுத்தது.

இந்த இயக்கத்தில் கண் தான் பிரதானமானது. சித்திரம் இரண்டாவது என்றானது. தவ்ஹீத் என்ற கண்ணுக்குத் தான் இங்கு முன்னுரிமை! முதலுரிமை! மற்றவை பின்னுக்கு!

எந்தச் சமுதாய நலனுக்கு தவ்ஹீத் கொள்கை பாதகமாக உள்ளது என்று நம்மை வெளியே தள்ளினார்களோ அந்த சமுதாயப் பணிகளுக்குத் தவ்ஹீத் ஒரு தடைக்கல் அல்ல என்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துவங்கிய இரண்டாண்டு காலத்தில் கும்பகோணத்தில் நிரூபித்தோம்.

இது குறித்து முழு உண்மை அறிய

தமுமுகவில் இருந்து விலகியது ஏன்

https://onlinepj.in/index.php/videos/online-videos/kadanthu-vantha-paathai/tmmkyil_irinthu_vilakal_en

தமுமுகவின் கேள்விகளும் பதில்களும்

https://onlinepj.in/index.php/videos/online-videos/kadanthu-vantha-paathai/tmmk_therthal_nilaipatu

குலுங்கியது கும்பகோணம்

இது பற்றி விபரமறிய

மேலும் அறிய

குடந்தை குலுங்கட்டும் என்று சொன்னோம். தவ்ஹீதை இந்த இயக்கம் முன்வைத்த காரணத்தால், நாம் இரண்டாவதாகக் கொண்ட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டான். குடந்தை குலுங்கட்டும் என்ற வார்த்தையை அவன் ஒப்புக் கொண்டான். இல்லையெனில் இவ்வளவு கூட்டத்தைக் கொண்டு வந்து குவித்திருப்பானா?

தவ்ஹீத் என்ற பெயரை நமது இயக்கத்தின் பெயரிலேயே தாங்கிக் கொண்டு, சமுதாயப் பிரச்சனைகளுக்காக அழைத்தால் மக்கள் வருவார்களா? என்ற ஐயம் தவ்ஹீத்வாதிகளிடம் இருந்தது. ஆனால் அந்த ஐயத்தை உடைக்கும் விதமாக, மக்களைக் கொண்டு வந்து கொட்டுகிறேன் என்று அல்லாஹ், குடந்தையைக் குலுங்க வைத்தான்.

தேர்தல் நேரத்தில் எங்களுக்காக வாக்குக் கேட்டு உங்களிடம் வர மாட்டோம் என்று சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுபவர்கள் இவர்கள் தான் என்று நம்மை நம்பி மக்கள் பெருக்கெடுத்தார்கள். காவிரியைத் தாங்க முடியாத குடந்தை இந்த மக்கள் கடலைத் தாங்குமா? என்ற கேள்வி எழுமளவுக்கு கும்பகோணத்தில் மக்கள் குழுமினார்கள்.

எதற்கு வாரியம் வாங்குவதற்காகவா? இலட்சக்கணக்கில் பணத்தை வாரிச் சுருட்டவா? இல்லை, தமுமுக மறந்துவிட்ட இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடந்த இந்தப் பேரணியில் கடலாய்ப் பெருக்கடுத்தனர்.

முதலில் ஒரு கட்சியில் கள்ளக் காதல் வைத்துக் கொண்டு குடந்தை பேரணியைக் கூட்டவில்லை.

கையிலே காசு வாயிலே தோசை

இன்றைய ஆளும் திமுக, அன்றைய ஆளும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளில் இடஒதுக்கீட்டை அறிவிக்கிறார்களோ அவர்களுக்குத் தான் எங்கள் ஆதரவு என்று இரு கட்சிகளையும் சம தூரத்தில் வைத்திருந்தோம்.

அதிமுக முதலில் பதிலளித்தது. ஆந்திர மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை நீதிமன்றம் நிறுத்தி வைத்த கசப்பான அனுபவத்தையெல்லாம் கருத்தில் கொண்டு, இடஒதுக்கீடு கோரிக்கையைப் பரிசீலிப்பதற்கான ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் நீதிமன்றம் தலையிடாது. மேலும் இந்த ஆணையம் பரிந்துரைத்தால் அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இட ஒதுக்கீடு அளித்தே தீரவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். எனவே இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கருதப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். கும்பகோணம் பேரணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக இது அமைந்தது.

இதன் அடிப்படையில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்காக உழைத்தோம். தேர்தலில் அதிமுக தோற்றாலும், திமுகவுக்குப் பெரும்பான்மை பலமில்லாத வெற்றி கிடைத்தது.

திமுகவின் கோட்டை என்று கருதப்பட்ட சென்னையை தனது பிரச்சாரத்தின் மூலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தகர்த்தெறிந்தது. முஸ்லிம்களின் வாக்கு அதிகம் உள்ள பகுதிகளில் போட்டியிட்ட கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் ஆகியோர் கூட இழுபறி வெற்றியைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இப்படி ஒரு தொங்கல் வெற்றி கிடைப்பதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் வலிமையான பிரச்சாரம் தான் காரணம் என்பதை திமுகவே உணர்ந்தது.

திமுக ஆட்சியும் இட ஒதுக்கீடும்

ஆட்சிக்கு வந்தாலும் இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்தோம். தானைத் தலைவர் கருணாநிதியும் ஆணையத்தைத் தான் அறிவித்தார். அன்றைய முதல்வர் ஜெயலலிதா இந்தப் பணியைச் செய்த போது, வெற்றுப் பேப்பர் என்று கேலியும் கிண்டலும் செய்த தமுமுக, இப்போது அதை வரவேற்றது.

மேற்படி ஆணையத்தில் ஜெயலலிதா ஒரு முஸ்லிம் நீதிபதியை நியமித்திருந்தார். ஆனால் கருணாநிதி அறிவித்த ஆணையத்தில் முஸ்லிம்கள் யாரும் இடம்பெறவில்லை.

மேலும் இந்த ஆணையம் தனது அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான காலக் கெடுவை ஓராண்டு என்று நிர்ணயித்திருந்தார். ஆனால் கருணாநிதி ஆணையத்தின் காலக் கெடுவை இரண்டு ஆண்டுகளாக மாற்றினார். இதை எதிர்த்து களத்தில் குதித்தது தவ்ஹீத் ஜமாஅத் தான்.

கருணாநிதியின் இந்தக் காலம் தாழ்த்தும் முயற்சியைக் கண்டித்து தமிழகமெங்கும் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பெரும் மக்கள் கூட்டம் திரண்டது.

இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக ஆணையத்தின் அறிக்கை தாக்கல் பணி நடைபெற்றது. அதில் கூறப்பட்ட பரிந்துரையின் படி இடஒதுக்கீடு அறிவிக்கப்படும் என்று காத்திருந்தோம். கண்கள் பூத்துப் போகும் வரை காத்திருந்தோம்.

கருணாநிதி காக்க வைத்து கழுத்தறுப்பதில் வல்லவர். அதனால் இவரிடம் அமைதி காத்தால், இஸ்லாமியர்களுக்கு இதயத்தில் இடஒதுக்கீடு எப்போதும் உண்டு என்று வசனம் பேசியே ஆட்சிக் காலத்தைக் கடத்தி விடுவார். அதனால் இவரிடம் போராடித்தான் பெற வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதன்படி 2007 ஜனவரி 29 அன்று குடந்தைப் பேரணியை நினைவூட்டும் விதமாக, தமிழகமெங்கும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினோம்.

அந்தப் போராட்டத்திலேயே அடுத்தக் கட்டமாக சிறை நிரப்பும் போராட்டம் என்று அறிவித்தோம். அதன் பிறகும் இடஒதுக்கீடு என்பது கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.

சிறை நிரப்பும் போராட்டம்

மூச்சும் இல்லாமல், பேச்சும் இல்லாமல் கிடந்த இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு உயிர் கொடுக்கும் விதமாக, வாழ்வுரிமை மாநாடு நடைபெற்ற தினமான ஜூலை 4ம் தேதியைத் தேர்ந்தெடுத்து அன்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினோம். ஆண்களும் பெண்களும் வந்து குவிந்தனர். தாங்கள் பெற்ற பச்சிளம் குழந்தைகளுடன் வந்து குவிந்தனர்.

காவல்துறை வேனில் தொட்டில் கட்டித் தங்கள் குழந்தைகளைத் தூங்க வைத்த வரலாறு தமிழகத்தில் இதுவரை எந்தவொரு இயக்கமோ கழகமோ கண்டதில்லை. இனி காணப் போவதும் இல்லை. சுதந்திர இந்தியாவில் இப்படியொரு சிறை நிரப்பும் போராட்டத்தை எந் அரசியல் கட்சியும் நடத்தியதில்லை என்று உளவுத் துறையினர் வியக்கும் அளவுக்கு மக்கள் சிறை செல்லத் துணிந்தனர்.

டெல்லி சுற்றுலா

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதே வீரியத்துடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் திமுகவின் சிறுபான்மைப் பிரிவாக மாறிவிட்ட தமுமுக, திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் விழித்துக் கொண்டிருந்தது.

திமுக ஆட்சியை எதிர்த்துப் போராட்டம் நடத்தினால் வாரியப் பதவிகள் வாய்க்காமல் போய்விடும். ஆளும் கட்சியின் கூட்டணி என்ற பெயரில் நடத்தும் அடாவடிகளுக்கு ஆப்பு வந்துவிடும் என்று பயந்த தமுமுக, தனது சுய லாபங்களுக்காக சமுதாயத்திற்குக் குழிபறிக்கும் காரியங்களில் இறங்கியது.

இடஒதுக்கீடு அளிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத் தான் உண்டு. மாநில அரசுகளுக்கு அதிகாரமே இல்லை என்று மனசாட்சியை விற்று மடமை வாதம் பேசியது தமுமுக.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் படிப்பறிவில்லாமல் மாநில அரசிடம் போய் இடஒதுக்கீடு கேட்கிறார்கள் என்ற நம்மைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தது. கருணாநிதி அரசைக் காப்பாற்றுவதற்காக, நாங்கள் டெல்லியில் போய் இட ஒதுக்கீடு கேட்கப் போகிறோம் என்று மாய்மாலம் செய்தது தமுமுக.

ஊரான் வீட்டுப் பணத்தில் டெல்லிக்கு உல்லாசப் பயணம் சென்றது. டெல்லி சுற்றுலா சென்று மத்திய அரசை ஏதாவது அறிவிக்கச் செய்ததா? என்றால் ஒன்றுமில்லை. அழைத்த பிரமுகர்கள் கூட கல்தா கொடுத்தார்கள். ஒரு குட்டி அணி வகுப்பை நடத்தி விட்டு, டெல்லியில் பேரணி நடத்தியதாக பீற்றிக் கொண்டது.

ஏற்கனவே உள்ள சமுதாய இயக்கங்கள் ஆளுங்கட்சியிடம் ஒரு சில சீட்டுக்களை வாங்கி விட்டு, தன்மானத்தை இழந்து பிணமானார்கள் அல்லவா? அது போன்று இவர்களும் வாரியத்தை வாங்கி விட்டு வாய் பொத்திக் கிடக்கின்றார்கள். இவர்கள் வாய் பொத்திக் கிடந்தால் கூடப் பரவாயில்லை. வாரியப் பதவியைப் பெறுவதற்காக சமுதாயத்தின் வாழ்வாதாரக் கோரிக்கையான இடஒதுக்கீட்டையே பலி கொடுக்கத் துணிந்து விட்டார்கள்.

இடஒதுக்கீட்டிற்கான இறுதி யுத்தம் - சட்டமன்ற முற்றுகை

பதவிக்காக யாரிடமும் கையேந்துவதில்லை என்ற கொள்கையில் அன்றிலிருந்து இன்றுவரை உறுதியாக இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இடஒதுக்கீட்டிற்காக இறுதிவரை போராட முன்வந்தது. அதன் உச்சக்கட்டமாகத் தான் சட்டமன்ற முற்றுகையை அறிவித்தது.

சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடருக்குள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்படா விட்டால் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் சமயத்தில் சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது. இனியும் தாமதிக்க முடியாது என்று தமிழக முதல்வர் கருணாநிதி உணர்ந்து இடஒதுக்கீட்டை அறிவிக்க முன்வந்தார். கனிமொழி மூலமாக இட ஒதுக்கீட்டிற்கான சாத்தியக் கூறுகளை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்தது. அதன்படி மூன்றரை சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்க முன் வந்தார் கருணாநிதி. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

நன்றி அறிவிப்புக் கூட்டம்

இதனிடையே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வீரியமிக்க போராட்டங்களால் இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகி விடும் என்ற செய்தி கசிய ஆரம்பித்தவுடன், டிசம்பருக்குள் இட ஒதுக்கீட்டை அறிவிக்கவில்லையென்றால் போராட்டம் என்ற கேலிக் கூத்தான அறிவிப்பை தமுமுக வெளியிட்டது.

அது வரை மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறிக் கொண்டிருந்த திமுகவின் சிறுபான்மைப் பிரிவினர் தமுமுக, இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியிடப்பட்டால் அதன் கிரடிட் தவ்ஹீத் ஜமாஅத்திற்குச் சென்று விடும் என்று பயந்து இப்படியொரு அறிவிப்பைச் செய்துள்ளனர் என்று மக்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தனர்.

இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியானவுடன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது ஆதரவை திமுகவுக்கு அளிப்பதாக வாக்குறுதியும் கொடுத்து விட்டு வந்தனர். இதிலும் தங்களின் கேடுகெட்ட அரசியலை நடத்த தமுமுக முன்வந்தனர்.

தவ்ஹீத்வாதிகள் இருந்த வரை தான் தமுமுக சார்பில் இடஒதுக்கீட்டுப் போராட்டங்கள் நடைபெற்றன. தவ்ஹீத்வாதிகளைக் கழற்றிவிட்ட பின் இடஒதுக்கீட்டிற்காக உருப்படியான எந்தப் பேராட்டத்தையும் நடத்தவில்லை என்பதை மக்கள் அறிவார்கள். அத்துடன் திமுக ஆட்சிக்கு வந்த பின் வாரியப் பதவி பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததால், சிறுபான்மைப் பிரிவின் இடஒதுக்கீட்டுக் கோரிக்கை சுத்தமாக வீரியமிழந்தது. இதையெல்லாம் மக்களுக்கு மறக்கடிக்க வேண்டும் என்பதற்காக கருணாநிதி நன்றி அறிவிப்பு கூட்டத்தை மானங்கெட்டுப் போய் நடத்தினார்கள்.

மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்றார்கள். ஜெயலலிதா ஒரு ஆணையத்தை அமைத்த போது வெற்றுப் பேப்பர் என்றார்கள். கருணாநிதி அந்த ஆணையத்தை மாற்றியமைத்த போதும் இதற்கும் இட ஒதுக்கீட்டிற்கும் சம்பந்தமில்லை என்றார்கள்.

அந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மாநில அரசு இடஒதுக்கீட்டை வழங்கிய போது, கருணாநிதியின் அறிவிப்பு செல்லாது என்று அறிக்கை விட்டு விட்டு ஒதுங்க வேண்டியது தானே? அவ்வாறு செய்யாமல் கோடிக்கணக்கில் செலவு செய்து நன்றி அறிவுப்புக் கூட்டம் எதற்காக நடத்த வேண்டும்? அப்போது அதிகாரமில்லை என்று சொன்னது, வாரியம் தந்த வள்ளலைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவா?

இப்போது நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்துவது, நாங்கள் தான் வாங்கித் தந்தோம் என்று கூறி மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவதற்காக!

ஏமாற்றமளித்த இடஒதுக்கீடு

இப்படிப்பட்ட துரோகங்களையெல்லாம் தாண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது. அத்துடன் காரியம் முடிந்து விடவில்லை. கருணாநிதி அறிவித்த இடஒதுக்கீட்டில் குளறுபடிகள் இருப்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. தமிழக அரசுத் தேர்வாணையம் வெளியிட்ட விளம்பரத்தில் முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவிகித இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படவில்லை என்பதைக் கண்டு தவ்ஹீத் ஜமாஅத் கொதித்தெழுந்தது.

மூன்றரை சதவிகிதம் வழங்கப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்து, சென்னையில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது. கண்டனப் பொதுக் கூட்டங்களை நடத்தி சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

ஆனால் ஏற்கனவே இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் துரோகமிழைத்த தமுமுக இந்த விஷயத்திலும் தனது சமுதாய விரோதப் போக்கைத் தொடர்ந்தது. பதவியையும், பதவி தந்தவர்களையும் காப்பாற்றுவதற்காக வாரியடித்துக் கொண்டு, வரிந்து கட்டிக் கொண்டு, இந்தக் குளறுபடிகளை நியாயப்படுத்தினார்கள்.

ரோஸ்டர் முறை, புரோட்டா மாஸ்டர் முறை என்று வியாக்கியானம் கொடுத்தார்கள். படிப்பறிவில்லாததால் இதுவெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்குத் தெரியவில்லை என்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நையாண்டி பேசினார்கள். ஆனால் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இடஒதுக்கீட்டில் குளறுபடிகள் நடந்திருப்பது உண்மைதான் என்று கருணாநிதியே முரசொலியில் எழுதி, இவர்களின் முகத்தில் கரியைப் பூசினர். இவர்களது சமுதாய துரோகங்களைத் தோலுரித்துக் காட்டினர்.

ஆள்பவரே சொல்லி விட்ட பிறகு இந்த அடிமைகள் என்ன செய்ய முடியும்? படிப்பறிவில்லாதவர்கள் சொன்ன அதே குற்றச்சாட்டை, முதல்வரிடம் சென்று கோரிக்கையாக வைத்துவிட்டு, மானங்கெட்டுப்போய் அதைப் பத்திரிகைச் செய்தியாகவும் அளித்தார்கள்.

இடஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளைச் சரி செய்ய வேண்டும் என்று இந்த படித்த (?) அறிவாளிகள் கருணாநிதியிடம் சொல்லிவிட்டு வந்தார்கள். இவர்களது அடிமைத்தனத்தையும், பதவிக்காக சமுதாயத்தை அடகு வைக்கும் போங்கையும் பார்த்து, நாங்க எவ்வளவோ பரவாயில்லையப்பா! என்று ஒரு லீக் பிரமுகர் சொன்னது தான் இதில் வேடிக்கை!

உண்மையில் ஏனைய அரசியல்வாதிகள் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும். அந்த அரசியல்வாதிகள் இவர்களிடம் தோற்றுப் போய்விட்டார்கள் என்றே கூற வேண்டும்.

ஆனால் மக்கள் உண்மை நிலையைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். இடஒதுக்கீட்டில் தவ்ஹீத் ஜமாஅத்தைத் தவிர்த்து வேறு யாரும் உரிய முறையில் குரல் கொடுக்கவில்லை என்பதை நன்றாக விளங்கி வைத்திருக்கிறார்கள்.

இடஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இந்த குளறுபடிகள் களையப்படுவதற்காக தவ்ஹீத் ஜமாஅத் காத்திருக்கின்றது. தவ்ஹீத் எழுச்சி மாநாட்டிற்குள் அவ்வாறு களையப்படவில்லை எனில், சட்டமன்ற முற்றுகைக்கான தேதி மாநாட்டில் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு, வல்ல ரஹ்மான் ஏற்படுத்திய நிர்பந்தத்தால் சமுதாயப் பணிக்காகக் களமிறங்கிய தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு துரோகங்களை, குழி பறிப்புகளைத் தாண்டி இன்று வரை களத்தில் நிற்கின்றது. இவ்வாறு நிற்பதற்குக் காரணம், நீர்த்துப் போகாத அதன் நிலைபாடு! நிறம் மாறாத நெருப்புக் கொள்கை!

இத்தனையும் எதற்கு? நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தேர்தலில் சீட் வாங்கவா? இல்லை இந்தச் சமுதாயப் பணிகளைக் கண்டு யாராவது தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பில் தான்.

இனி ஈரமைப்பில்லை! ஓரமைப்பு தான்!

உலகாதாயத்தை மட்டும் லட்சியமாகக் கொண்ட இவர்களிடம் மறுமை லாபத்தை எதிர்பார்ப்பது இலவு காத்த கிளி கதை தான் என்றெண்ணி, சமுதாயப் பாதைக்கு ஓர் அமைப்பு, சத்தியப் பாதைக்கு அதாவது ஏகத்துவ அழைப்புப் பணிக்கு ஓர் அமைப்பு என்று கண்டோம்.

சமுதாயப் பணிக்காகக் கண்ட இயக்கம் காலப்போக்கில் தவ்ஹீத் பணியை ஜீரணிக்கவில்லை. சத்தியத்திற்குக் கிடைத்த கிரெடிட்டை, பலனை மட்டும் அனுபவித்து விட்டு, சாறை உறிஞ்சி விட்டு நம்மை சக்கையாக வெளியே தள்ளியது. முகத்துக்கு நேராகப் புகழ்ந்து தள்ளிய அந்த முனாஃபிக்குகள் முதுகில் குத்தினார்கள். ஏகத்துவம் எனும் வட்டத்திற்குள் நாங்கள் வரமாட்டோம்; நாங்கள் வகுக்கும் வட்டத்திற்குள் தான் ஏகத்துவம் வர வேண்டும் என்ற நிலைபாட்டை நிறுவினர்.

இது தான் நம்மைச் சிந்திக்க வைத்தது.

சத்தியத்திற்கென்று ஒரு அமைப்பைக் கண்டோம். அதில் மதனிகள் சம்பளத்தைக் கவனத்தில் கொண்டு சமுதாயப் பிரச்சனைகளை மறுத்தார்கள்.

சமுதாயத்திற்கென்று ஒரு அமைப்பைக் கண்டோம். அவர்கள் சத்தியத்திற்குக் கதவைத் சாத்துகிறார்கள்.

இனிமேல் நமக்கு முன் இருப்பது, சத்தியத்திற்கு ஓரமைப்பு, சமுதாயத்திற்கு வேறமைப்பு என்ற அத்தியாயத்திற்கு முடிவுரை எழுதிவிட்டு, இரண்டிற்கும் ஒரே அமைப்பு என்ற புதிய அத்தியாயத்தைத் துவங்க வேண்டியது தான் என்று முடிவெடுத்தோம்.

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அது தான் இன்று நம்மை அரவணைத்துக் கொண்டிருக்கின்ற ஓர் இயக்கம், அந்தப் பேரியக்கம் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!

இப்போது சத்தியம், சமுதாயம் என்ற இரு சக்கரங்களுடன் இந்த இயக்கம் தமிழகத்தில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வேளையில் ஒரு வேதனையையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

சமுதாயப் பிரச்சனையை நாங்கள் கையில் எடுக்க மாட்டோம் என்று கூறிய அந்த இயக்கமும், ஏகத்துவம் எங்களுக்கு இரண்டாம் பட்சம் என்று நம்மை வெளியே அனுப்பிய பங்காளி இயக்கமும் நாம் வெளியே வந்த பிறகு, பக்காவாகக் கூட்டாளிகளாகிக் கொண்டன. எதற்கு? நம்மை எதிர்ப்பதற்கு!

முற்றும்

06.11.2011. 10:31 AM

ஜாக் இயக்கத்துடன் என்ன பிரச்சனை

பாகம் ஒன்று

இதை டவுன்லோடு செய்ய

 

பாகம் இரண்டு

இதை டவுன்லோடு செய்ய

 

 

பாகம் மூன்று

இதை டவுன்லோடு செய்ய

 

 

பாகம் நான்கு

இதை டவுன்லோடு செய்ய

பாகம் ஐந்து

இதை டவுன்லோடு செய்ய

 

 

பத்து வயது கைக்குழந்தை! இஸ்மயீல் சலஃபியின் உளறல்

ஸாலிம் என்ற இளைஞருக்குப் பாலூட்டுமாறு ஸஹ்லா என்ற பெண்மணிக்கு நபிகள் கட்டளையிட்டதாக வரும் ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது. அது குர்ஆனுக்கு முரணானது என்று கூறி வருகிறீர்கள். பாலூட்டுவது என்றால் ஸஹ்லாவுக்கு அந்த நேரத்தில் கைக்குழந்தை இருக்க வேண்டும். கைக்குழந்தை இருந்ததற்கு ஆதாரம் உண்டா என்று நீங்கள் கேட்கின்றீர்கள். ஆனால் ஸாலிமுக்கு பாலூட்டச் சொன்ன நேரத்தில் ஸஹ்லாவுக்கு கைக்குழந்தை இருந்ததற்கு ஆதாரம் உண்டு என்று இஸ்மாயீல் சலபி என்பவர் கட்டுரை எழுதியுள்ளாரே? இதன் உண்மை நிலை என்ன?இஹ்ஸாஸ், இலங்கை

அவருக்கு கைக்குழந்தை இருந்ததா என்பது அடிப்படையான கேள்வி அல்ல. அந்த நேரத்தில் அவருக்கு கைக்குழந்தை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இளைஞருக்குப் பாலூட்டுமாறு நபியவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள். இது தான் அடிப்படையான கேள்வியாகும்.

உங்கள் கேள்விக்கான பதிலை அறிவதற்கு முன் இந்த ஹதீஸ் குறித்து நாம் எழுப்பிய கேள்விகளையும், வாதங்களையும் பார்க்கவும். அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் இதுவரை பதில் சொல்லி இருக்கிறார்களா என்று நீங்களே அறிந்து கொள்வீர்கள்.

அந்த ஹதீஸை நம்பி செயல்படுத்தலாம் என்று சொல்ல அவர்களே வெட்கப்பட்டு வேறு வகையில் மறுப்பதையும் நீங்கள் அறியலாம்.

கீழ்க்காணும் நூலில்

ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

பாலூட்டுமாறு ஸஹ்லாவுக்கு நபியவர்கள் கட்டளையிட்டதைச் செயல்படுத்துவதாக இருந்தால் அவருக்கு அந்த நேரத்தில் கைக்குழந்தை இருக்க வேண்டும். அதை நிரூபிக்க முடியுமா என்று துணைக் கேள்வியாகக் கேட்டுள்ளோம். கேட்டு பல வருடங்கள் ஓடி விட்டன. அவருக்கு அந்த நேரத்தில் கைக்குழந்தை இல்லை என்பதற்கான ஆதாரம் இருந்ததால் அப்படி கேள்வி கேட்டோம்.

அவருக்கு அந்த நேரத்தில் கைக்குழந்தை இல்லை என்பதற்கு எது ஆதாரமாக உள்ளதோ அதையே அறைகுறையாக விளங்கிக் கொண்டும் இருட்டடிப்பு செய்தும் ஸஹ்லாவுக்கு கைக்குழந்தை இருந்தது என்று இஸ்மாயீல் சலபி என்பவர் எழுதியுள்ளார்.

ஸஹ்லா அவர்களுக்கு முஹம்மத் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தது நமக்குத் தெரியும். அந்த நேரத்தில் அவர் கைக்குழந்தை இல்லை என்பதும் நமக்குத் தெரியும்.

முஹம்மத் என்ற பெயரில் அவருக்கு ஒரு குழந்தை இருந்தது குறித்த விபரத்தை விரிவாக அறியத் தருகிறோம்.

ஸஹ்லாவும் அபூ ஹுதைபாவும் அபீசீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்ற போது அபீசீனியாவில் தான் முஹம்மத் பிறக்கிறார்.

الإستيعاب في معرفة الأصحاب ابن عبد البر

أبو حذيفة بن عتبة بن ربيعة بن عبد شمس بن عبد مناف القرشي العبشمي كان من فضلاء الصحابة من المهاجرين الأولين، جمع الله له الشرف والفضل صلى القبلتين وهاجر الهجرتين جميعاً وكان إسلامه قبل دخول رسول الله صلى الله عليه وسلم دار الأرقم للدعاء فيها إلى الإسلام هاجر مع امرأته سهلة بنت سهيل بن عمرو إلى أرض الحبشة وولدت له هناك محمد بن أبي حذيفة

அபூஹுதைபா தன் மனைவியுடன் அபீசீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்ற போது அபீசீனியவில் தான் முஹம்மதைப் பெற்றார்கள்.

நூல் : இப்னு அப்துல் பர் அவர்களின் இஸ்தீஆப்

அபூஹுதைபாவும், ஸஹ்லாவும் எந்த ஆண்டு அபீசீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்தனர்?

الكامل في التاريخ

فخرج المسلمون إلى أرض الحبشة مخافة الفتنة وفراراً إلى الله بدينهم، فكانت أول هجرة في الإسلام، فخرج عثمان بن عفان وزوجته رقية ابنة النبي، صلى الله عليه وسلم، معه، وأبو حذيفة بن عتبة بن ربيعة ومعه امرأته سهلة بنت سهيل بن عمرو، والزبير العوام، وغيرهم تمام عشرة رجال، وقيل: أحد عشر رجلاً وأربع نسوة، وكان مسيرهم في رجب سنة خمس من النبوة، وهي السنة الثانية من إظهار الدعوة، فأقاموا شعبان وشهر رمضان.

நபிப்பட்டம் கிடைக்கப்பெற்ற ஐந்தாவது ஆண்டில் ரஜப் மாதத்தில் இருவரும் உஸ்மான் (ரலி) தலைமையில் அபீசீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்றனர்.

நூல் : இப்னுல் அஸீர் அவர்களின் அல்காமில்

அவர்கள் இருவரும் அபீசீனியாவில் அதிக காலம் தங்கவில்லை. நபியவர்கள் மக்காவில் இருந்த போதே மக்காவுக்கு திரும்பி விட்டார்கள்.

الإستيعاب في معرفة الأصحاب ابن عبد البر

أبو حذيفة بن عتبة بن ربيعة بن عبد شمس بن عبد مناف القرشي العبشمي كان من فضلاء الصحابة من المهاجرين الأولين، جمع الله له الشرف والفضل صلى القبلتين وهاجر الهجرتين جميعاً وكان إسلامه قبل دخول رسول الله صلى الله عليه وسلم دار الأرقم للدعاء فيها إلى الإسلام هاجر مع امرأته سهلة بنت سهيل بن عمرو إلى أرض الحبشة وولدت له هناك محمد بن أبي حذيفة، ثم قدم على رسول الله صلى الله عليه وسلم وهو بمكة فأقام بها حتى هاجر إلى المدينة وشهد بدراً وأحداً والخندق والحديبية والمشاهد كلها وقتل يوم اليمامة شهيداً وهو ابن ثلاث أو أربع وخمسين سنة

நபியவர்கள் மக்காவில் இருந்த போதே மக்காவுக்கு திரும்பி அங்கேயே தங்கி விட்டு பின்னர் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தனர்.

நூல் ; இப்னு அப்துல் பர் அவர்களின் இஸ்தீ ஆப்

அபீசீனியாவில் குழந்தை முஹம்மதைப் பெற்று மக்காவுக்கு திரும்பி விட்டார்கள்.

குரைஷிகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டனர். மக்காவில் எந்த எதிர்ப்பும் இல்லை என்ற தவறான தகவலை நம்பி இருவரும் மக்காவுக்குத் திரும்பி விட்டார்கள்.

الكامل في التاريخ

وقدموا في شوال سنة خمس من النبوة، وكان سبب قدومهم إلى النبي، صلى الله عليه وسلم، أنه لما رأى مباعدة قومه له شق عليه وتمنى أن يأتيه الله بشيء يقاربهم به، وحدث نفسه بذلك، فأنزل الله: (وَالنَّجْمِ إذَا هَوَى) النجم: 20؛ فلما وصل إلى قوله: (أفَرَأيْتُمُ اللاّتَ والعُزّى وَمَنَاةَ الثّالِثَةَ الأخْرَى)؛

அபீசீனியாவுக்குப் போனவர்கள் பொய்யான வதந்தியைக் கேள்விப்பட்டு நபிப்பட்டம் கிடைத்த அதே ஐந்தாம் ஆண்டில் ஷவ்வால் மாதம் திரும்பி விட்டார்கள்.

நூல் : இப்னுல் அஸீரின் அல்காமில்

அதாவது நபிப்பட்டம் கிடைத்த ஐந்தாம் ஆண்டு ரஜப் மாதம் ஹிஜ்ரத் சென்று மூன்று மாதம் கழித்து ஷவ்வாலில் மக்காவுக்குத் திரும்பினார்கள்.

மக்காவில் மாற்றம் ஏற்பட்டது என்று கேள்விப்பட்டு சிலர் மக்காவுக்கு திரும்பினார்கள். சிலர் அபீசீனியாவில் தங்கி விட்டனர். மக்காவுக்கு திரும்பியவர்களில் அபூஹுதைபாவும் அடங்குவார்.

الكامل في التاريخ

واشتدت قريش على المسلمين، فلما قرب المسلمون الذين كانوا بالحبشة من مكة بلغهم أن إسلام أهل مكة باطل، فلم يدخل أحد منهم إلا بجوار أو مستخفياً، فدخل عثمان في جوار أبي أحيحة سعيد بن العاص بن أمية، فأمن بذلك، ودخل أبو حذيفة بن عتبة بجوار أبيه، ودخل عثمان بن مظعون بجوار الوليد بن المغيرة،

உள்ளூரில் உள்ளவர்களிடம் அடைக்கலம் பெற்றவர்கள் மட்டும் தான் மக்காவுக்குள் குரைஷிகளால் அனுமதிக்கப்பட்டனர். அபூஹுதைபாவுக்கு அவரது தந்தை உத்பா அடைக்கலம் கொடுத்தார். அதன் அடிப்படையில் அபூ ஹுதைபா மக்காவில் அனுமதிக்கப்பட்டார்.

நூல் : இப்னுல் அஸீர் அவர்களில் அல்காமில்

மேற்கண்ட குறிப்புகளில் இருந்து தெரிவது என்ன? ஸஹ்லாவுக்கு முஹம்மத் பிறந்தது அபீசீனியாவில். அபீசீனியாவில் இருந்தது ரஜப் ஷஃபான், ரமலான் ஆகிய மூன்று மாதங்கள் தான். ஹிஜ்ரத்துக்கு ஐந்து ஆண்டுக்கு முன்னர் இந்த மூன்று மாதங்களில் தான் முஹம்மத் பிறந்தார்.

அப்படியானால் நபியவர்கள் ஹிஜ்ரத் செய்த போது முஹம்மதின் வயது ஐந்தாகும்.

அதாவது ஸஹ்லா அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த போது முஹம்மதின் வயது ஐந்தாகும்.

வளர்ப்பு மகன் கிடையாது என்ற சட்டம் அருளப்பட்டது ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டில் தான்.

فتح الباري - ابن حجر

ثم تزوج زينب بنت جحش في الخامسة

வளர்ப்பு மகன் என்பது கிடையாது என்ற சட்டம் அருளப்படும் போது தான் ஸைனப் அவர்களை நபியவர்களுக்கு அல்லாஹ் மணமுடித்து தந்தான். இது நடந்தது ஐந்தாம் ஆண்டில் தான்.

நூல் ; பத்ஹுல் பாரி

இந்தச் சட்டம் அருளப்பட்ட பிறகு தான் ஸாலிம் சம்மந்தமான பிரச்சனை வருகிறது. அதாவது ஸஹ்லா அவர்கள் மதீனா வந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகன் முஹம்மதுக்கு பத்து வயது ஆகும் போது தான் இந்தச் சம்பவம் நடந்திருக்க வேண்டும்.

பத்து வயது சிறுவனைத் தான் இஸ்மாயீல் சலபி என்பவர் கைக்குழந்தை என்கிறார்.

ஸஹ்லா அவர்களுக்கு முஹம்மத் என்ற பெயரில் ஒரு கைக்குழந்தை இருந்தது என்ற செய்தி மிகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

என்று அப்பட்டமாகப் புளுகியுள்ளார். இவர் மார்க்கத்தில் எந்த அளவுக்கு துணிந்து பொய் சொல்பவர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

எல்லோரும் ஒரு காலத்தில் கைக்குழந்தையாக இருந்தவர்கள் தான். ஆனால் மேற்படி சம்பவம் நடக்கும் போது ஸஹ்லாவுக்கு கைக்குழந்தை இருந்தது என்று ஒரு ஆதாரமும் இல்லை. தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதை அவர் எடுத்துக் காட்ட வேண்டும்.

ஸாலிம் சம்மந்தமாக அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டும் அதற்கு இன்று வரை பதில் இல்லை.

பத்து வயதுப் பையனைக் கைக்குழந்தை என்று சொல்லும் அளவுக்கு இவர்களுக்கு மூளைக்குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது ஒருவரும் சொல்லாதது மட்டுமின்றி கேட்பவர்கள் எள்ளி நகையாடும் கருத்தாகும்.

பத்து வயது கைக்குழந்தை என்று சொன்னால் அவரை எந்த லிஸ்டில் சேர்ப்பார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

கூடுதல் தகவலுக்காக ஒரு செய்தியை எடுத்துக் காட்டுகிறோம்.

மக்தபதுஷ் ஷாமிலா எனும் ஹதீஸ் கலைக்களஞ்சியத்தில் ஷுப்கதுல் இஸ்லாமியா என்ற தளத்தில் பத்வாக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் ஒருவர் பின்வருமாறு கேட்கிறார்.

فتاوى الشبكة الإسلامية عنوان الفتوى : شبهتان وجوابهما حول رضاع الكبير تاريخ الفتوى : 26 رجب 1426

السؤال

يثير النصاري مسألة حساسة نوعا ما ويتشدقون بها وهي (رضاعة الكبير) الحديث الذي ورد وهو حديث سهلة بنت سهيل زوجة أبي حذيفة بن عتبة، قد تثار بعض الأسئلة من النصارى منها أنه لا يوجد حليب أبدا في صدر أم حذيفة لأن ابنها (الوحيد من أبي حذيفة) - محمد بن أبي حذيفة - كانت قد ولدته أيام الهجرة الأولى للحبشة وحادثة إرضاع سالم كانت في المدينة؟! لا يوجد حليب في صدر سهلة بنت سهيل؟ فكيف أمر الرسول سهلة بأن ترضعه؟

அபூஹுதைபா, ஸஹலாவுக்கு ஒரே மகன் தான் இருந்தார். அந்த மகன் ஆபீசீனிய ஹிஜ்ரத்தின் போது பிறந்தார். இந்த அடிப்படையில் பார்க்கும் போது பால் கொடுக்குமாறு ஸஹ்லாவுக்கு நபியவர்கள் கட்டளையிட்ட போது நிச்சயம் அவரது மார்பில் பால் சுரந்திருக்க முடியாது என்று கிறித்தவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்குப் பதில் என்ன?

இது தான் கேள்வி

فتاوى الشبكة الإسلامية

الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه، أما بعد فإن قصة رضاعة سهلة لسالم قصة صحيحة رواها مسلم وغيره. وقد قال بعدم ثبوت الحرمة لمن رضع بعد الكبر جمهور أهل العلم ومنهم الأئمة الأربعة، وجمهور أئمة المحدثين، ولم يطعن أحد منهم في سند الحديث ولم يضعفه فيما نعلم، وإنما احتجوا باحتجاجات أخرى منها أنه منسوخ أو مخصوص بسهلة أو مخصوص بمن تحتاج لمخالطة الرضيع مثل حاجة سهلة إلى غير ذلك كما ذكره ابن القيم في إعلام الموقعين وابن قدامة في المغني. وقد روى ابن سعد في الطبقات بسنده أنها كانت تحلب في مسعط أوإناء قدر رضعته، فيشربه سالم في كل يوم حتى مضت خمسة أيام، فعلى المسلم أن يثق بما ورد في الصحيحين أو أحدهما، فقد ذكر أهل المصطلح أن ما أسنداه يقطع أو يظن بصحته. وأما استشكال أهل الضلال من النصارى أو غيرهم وزعمهم أنه لا يوجد حليب أبداً في صدر سهلة فهو زعم لا يؤيده وحي ولا تجربة، ولا يسوغ أن يشكك فيما ثبت في الصحيحين، فلم يرد في الوحي أنها لا يوجد بها بعد فطام ولدها محمد بن أبي حذيفة لبن، وقد شهت التجربة قديماً وحديثاً أن بعض النساء يبقى فيها اللبن بعد فطام ولدها. وقد ذكر المزي في تهذيب الكمال أن أم سلمة رضي الله عنها أرضعت الحسن البصري ودر عليه ثديها فشرب منه، ومن المعلوم أن الحسن ولد بعد وفاة النبي صلى الله عليه وسلم وأن أم سلمة لم تلد بعد زواجها من النبي صلى الله عليه وسلم. والله أعلم

இஸ்மாயீல் சலபி சொல்வது போல் பத்து வயது கைக்குழந்தை என்று அவர்கள் சொல்லாமல் குழந்தை பெற்று பத்து ஆண்டுக்குப் பிறகும் பால் சுரக்கலாம். அதற்குத் தடை இல்லை என்று தான் சொன்னார்களே தவிர கைக்குழந்தை இருந்தது என்று சொல்லவில்லை.

இதுவும் உளறல் தான் என்றாலும் முஹம்மத் அப்போது கைக்குழந்தையாக இருந்தார் என்று அவர்களால் சொல்ல முடியவில்லை.

இவ்வளவு தெளிவான விஷயம் என்பதற்காக இதை கூடுதல் தகவலுக்காக தெரிவிக்கிறோம்.

19.07.2013. 15:24 PM

More Articles …