Sidebar

28
Fri, Aug

பாங்கு சப்தம் கேட்கும் பெண்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா?

கேள்வி :

பாங்கு சப்தம் காதில் விழுந்தால் குருடராக இருந்தால் கூட பள்ளியை நோக்கி வர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். அப்படியானால் பெண்களும் பள்ளிக்குச் சென்று தான் ஆக வேண்டுமா? அல்லது வீட்டில் தொழலாமா?

ஏ. ஸபுருன்னிஸா, நாகூர்

பதில் :

ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வது ஆண்களுக்கு மட்டும் தான் கட்டாயம். பெண்களுக்கு கட்டாயமில்லை.

பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுவதற்கு அனுமதியிருந்தாலும், அவர்கள் வீட்டில் தொழுவதே சிறந்ததாகும்.

سنن أبي داود

567 حدثنا عثمان بن أبي شيبة حدثنا يزيد بن هارون أخبرنا العوام بن حوشب حدثني حبيب بن أبي ثابت عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم لا تمنعوا نساءكم المساجد وبيوتهن خير لهن .

உங்களுடைய பெண்களை பள்ளிகளுக்கு வருவதை விட்டும் தடுக்காதீர்கள்.  (எனினும்) அவர்களுடைய வீடுகளில் தொழுவது அவர்களுக்கு சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: அபூதாவூத்

பெண்கள் தலைமுடியை பெற்றோரின் முன்பு மறைக்க வேண்டுமா?

நின்று கொண்டு தலை வாரக்கூடாதா?

உரை: பீ.ஜைனுல் ஆபிதீன்

சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்வி பதில்கள் 10/10/21

سنن أبي داود (4/ 62)

4106 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا أَبُو جُمَيْعٍ سَالِمُ بْنُ دِينَارٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى فَاطِمَةَ بِعَبْدٍ كَانَ قَدْ وَهَبَهُ لَهَا، قَالَ: وَعَلَى فَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ثَوْبٌ، إِذَا قَنَّعَتْ بِهِ رَأْسَهَا لَمْ يَبْلُغْ رِجْلَيْهَا، وَإِذَا غَطَّتْ بِهِ رِجْلَيْهَا لَمْ يَبْلُغْ رَأْسَهَا، فَلَمَّا رَأَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا تَلْقَى قَالَ: «إِنَّهُ لَيْسَ عَلَيْكِ بَأْسٌ، إِنَّمَا هُوَ أَبُوكِ وَغُلَامُكِ»

 

நபி (ﷺ) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களுக்கு ஒரு அடிமையைக் கொண்டு வந்தார்கள். பாத்திமா (ரலி) அவர்கள் ஒரு ஆடை அணிந்து இருந்தார்கள். (பாத்திமா (ரலி)) அவர்கள் (அந்த ஆடையைக் கொண்டு) தலையை மறைத்தபோது, அவர்களின் கால்களை (அந்த ஆடை) அடையவில்லை; அவர்கள் கால்களை மூடியபோது, அந்த ஆடை அவர்களின் தலையை எட்டவில்லை. (பாத்திமா (ரலி)) அவர்களுடைய (இந்த) கஷ்டத்தை நபி (ﷺ) அவர்கள் பார்த்தபோது, "உனக்கு எந்தத் தீங்கும் இல்லை. இங்கே உங்கள் தந்தையும் அடிமையும் மட்டுமே (இருக்கிறோம்" என்று கூறினார்கள்.

[அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), நூல்: சுனன் அபூதாவூத் 4106]

 

பெண்கள் பள்ளியில் சென்று தொழுவது குறித்து இஸ்லாம் சொல்வதென்ன?

உரை: பீ ஜைனுல் ஆபிதீன்
சமகால நிகழ்வுகளும் வாட்ஸ் அப் கேள்வி பதில்களும் 05/09/21

More Articles …