Sidebar

25
Sat, Jul

இறந்த பெற்றோர்களுக்காக தர்மம் செய்தால் அவர்களுக்கு நன்மை கிடைக்குமா?

சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்வி பதில் 18/07/2021

பருவமடையாத சிறுவர்களுக்கும், குறை மாதத்தில் பிறந்த கட்டிகளுக்கும் தொழுகை நடத்துதல்

سنن الترمذي

‎1031 - ‎حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ ابْنُ بِنْتِ أَزْهَرَ السَّمَّانِ البَصْرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ سَعِيدِ بْنِ عُبَيْدِ اللهِ، قَالَ: حَدَّثَنَا ‏أَبِي، عَنْ زِيَادِ بْنِ جُبَيْرِ بْنِ حَيَّةَ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: الرَّاكِبُ خَلْفَ ‏الجَنَازَةِ، وَالمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا، وَالطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ‎.‎

சிறுவர்களுக்கும் தொழுகை நடத்தப்படும்  என்று நபிகள் நாயகம் ‎‎(ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)‎

நூல்கள்: திர்மிதீ, நஸாயீ, இப்னு மாஜா, அஹ்மத்

سنن أبي داود

‎3180 - ‎حدَّثنا وهْبُ بن بقيّةَ، عن خالد، عن يونسَ، عن زيادِ بن جُبيرٍ، عن أبيه عن المغيرةِ بن شُعبةَ -قال: وأحسب ‏أن أهل زياد أخبروني أنه رفعه إلى النبي-صلَّى الله عليه وسلم- قال: "الراكبُ يَسيرُ خلفَ الجنازة، والماشي يمشي ‏خلفَها وأمامَها، وعن يمييها وعن يسارِها، قريباً منها، والسَّقطُ يُصَلَّى عليه، ويُدْعَى لِوالدَيه بالمغفرةِ والرحمةِ‎"‎

விழுகட்டிகளுக்குத் தொழுகை நடத்தப்பட்டு, அதன் ‎பெற்றோர்களின் பாவமன்னிப்புக்காகவும், அவர்களுக்காகவும் ‎துஆச் செய்ய வேண்டும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)‎

நூல்கள்: அபூ தாவூத், அஹ்மத்

سنن النسائي

‎1947 - ‎أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى، عَنْ عَمَّتِهِ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ ‏خَالَتِهَا أُمِّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ قَالَتْ: أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَبِيٍّ مِنْ صِبْيَانِ الْأَنْصَارِ، فَصَلَّى عَلَيْهِ، قَالَتْ ‏عَائِشَةُ: فَقُلْتُ: طُوبَى لِهَذَا عُصْفُورٌ مِنْ عَصَافِيرِ الْجَنَّةِ، لَمْ يَعْمَلْ سُوءًا وَلَمْ يُدْرِكْهُ، قَالَ: «أَوَ غَيْرُ ذَلِكَ يَا عَائِشَةُ، خَلَقَ ‏اللَّهُ عَزَّ وَجَلَّ الْجَنَّةَ وَخَلَقَ لَهَا أَهْلًا، وَخَلَقَهُمْ فِي أَصْلَابِ آبَائِهِمْ، وَخَلَقَ النَّارَ وَخَلَقَ لَهَا أَهْلًا، وَخَلَقَهُمْ فِي أَصْلَابِ آبَائِهِمْ‎»‎

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு சிறுவர் (உடல்) ‎கொண்டு வரப்பட்டது. அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.‎

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)‎

நூல்: நஸாயீ 1921‎

சிறுவர்களுக்காகவும், முழு வடிவம் பெறாத கட்டிகளுக்காகவும் ‎ஜனாஸா தொழுகை உண்டு என்பதை மேற்கண்ட ஹதீஸ்களில் ‎இருந்து அறியலாம்.‎

ஆயினும் பெரியவர்களைப் போல் இது கட்டாயம் இல்லை. ‎சிறுவர்களுக்குத் தொழுகை நடத்தாமல் விட்டு விட்டால் அது ‎குற்றமாகாது.‎

سنن أبي داود

‎3187 - ‎حدَّثنا محمدُ بن يحيى بن فارسِ، حدَّثنا يعقوبُ بن إبراهيمَ بن سعْدٍ، حدَّثنا أبي، عن ابن إسحاقَ، حدَّثني عَبدُ ‏الله بن أبي بكر، عن عَمرةَ بنتِ عبد الرحمن عن عائشةَ، قالت: مات إبراهيمُ بنُ النبي -صلَّى الله عليه وسلم- وهو ابنُ ‏ثمانيةَ عشرَ شهراً، فلم يصلِّ عليه رسولُ الله -صلَّى الله عليه وسلم

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் 18 ‎மாதத்தில் மரணித்த போது அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் தொழுகை நடத்தவில்லை.‎

அறிவிப்பவர்: ஆயிஷா ரலி)‎

நூல்: அபூ தாவூத் 2772, அஹ்மத் 25101‎

சிறுவர்களுக்கு ஜனாஸா தொழுகை கட்டாயக் கடமை என்றால் ‎தமது மகனுக்கு அதைச் செய்யாமல் நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் விட்டிருக்க மாட்டார்கள்.‎

ஜனாஸா தொழுகை தொழ வைக்கும் உரிமை யாருக்கு ? அப்பாஸ் அலி மறுப்புக்கு மறுப்பு

சமகால நிகழ்வுகள் 21/06/2021

பித்அத்துடன் நடத்தப்பட்ட ஜனாஸா தொழுகைக்கு பதிலாக காயிப் ஜனாஸா தொழுகை நடத்தலாம் என்று சொன்னது சரியா?

சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்விகள் 20/06/2021

ஜனாஸா அடக்கும் உரிமை யாருக்கு ?

ஜனாஸா தொழுகை தொழவைக்கும் உரிமை யாருக்கு ? குடும்பத்தினருக்கா பள்ளி இமாமுக்கா?

சமகால நிகழ்வுகள் 13/06/2021

ஜனாஸா உரிமை யாருக்கு அப்பாஸ் அலிக்கு மறுப்பு

இதை டவுன் லோடு செய்ய

ஜனாஸா தொழுவிக்கும் உரிமை யாருக்கு அப்பாஸ் அலியின் மறுப்புக்கு மறுப்பு

இதை டவுன்லோடு செய்ய

வெளியூரில் மரணிப்பதற்கு சிறப்பு உண்டா?

கேள்வி:

வெளியூரில் மரணிப்பது சிறப்பு என்று பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.

மதினாவில் மரணித்த ஒருவருக்குத் தொழ வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவர் பிறந்த ஊர் அல்லாத அந்நிய ஊரில் மரணித்திருக்கக் கூடாதா! என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எதனால்? என்று பொதுமக்களில் ஒருவர் கேட்டார். அதற்கவர்கள், அன்னிய ஊரில் மரணித்தவருக்கு அவர் பிறந்த ஊரிலிருந்து அவர் கடந்த சென்ற தூரம் வரை அளக்கப்பட்டு – அந்தளவு இடம் – அவருக்கு சொர்க்கத்தில் வழங்கப்படுகிறது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)

நூற்கள் : அஹ்மத் 6369, நஸாயீ, இப்னுமாஜா

இது ஆதாரப்பூர்வமான ஹதீஸா?

-முஹம்மது அலி ஜின்னாஹ், கூத்தாநல்லூர்.

பதில்:

நீங்கள் குறிப்பிடுவது போல் ஹதீஸ் உள்ளது.

مسند أحمد

6656 – حدثنا حسن حدثنا ابن لَهِيعة حدثني حُييُّ بن عبد الله عن أبي عبد الرحمن الحُبُلِّي عن عبد الله بن عمرو، قال تُوّفيِ رجل بالمدينة، فصلى عليه رسول الله -صلي الله عليه وسلم -، فقال: "يا ليته مات في غير مولده"، فقال رجل من الِناس: لِمَ يا رسوِل الله؟، فقال رسول الله -صلي الله عليه وسلم -: "إِن الرجل إذا تُوفي في غير موْلده قِيس له مِنْ موْلده إلى مُنْقَطَعِ أثَرِه، في الجنة".

மேற்கண்ட ஹதீஸில் மூன்றாவது அறிவிப்பாளராக ஹுயை பின் அப்துல்லாஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார்.

இவர் நம்பகமானவர் அல்ல. இவரைப் பற்றி தஹ்தீபுத் தஹ்தீப் நூலில் உள்ள விமர்சனத்தைக் கீழே தருகிறோம்.

تهذيب التهذيب

140 – الأربعة حيي بن عبد الله بن شريح المعافري الحبلي أبو عبد الله المصري روى عن أبي عبد الرحمن الحبلي وغيره وعنه الليث وابن لهيعة وابن وهب وهو آخر من حدث عنه وغيرهم قال أحمد أحاديثه مناكير وقال البخاري فيه نظر وقال النسائي ليس بالقوي وقال بن معين ليس به بأس وقال بن عدي أرجو أنه لا بأس به إذا روى عنه ثقة وقال بن يونس توفي سنة 143 قلت وذكره بن حبان في الثقات

இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை என அஹ்மத் பின் ஹம்பல் கூறுகிறார். இவர் விஷயத்தில் விமர்சனம் உள்ளது என்று புகாரி கூறுகிறார். இவர் பலமான அறிவிப்பாளர் அல்லர் என்று நஸாயீ கூறுகிறார். இவர் மீது குற்றம் இல்லை என்று இப்னு மயீன் கூறுகிறார். இப்னு அதீயும் இவ்வாறே கூறுகிறார்.

தஹ்தீபுத் தஹ்தீப்

ஒரு அறிவிப்பாளர் பற்றி குறையும், நிறையும் சொல்லப்பட்டால் குறையைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இவர் மீது குறை சொல்லாதவர்கள் கூட இவரது நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தவில்லை. ஓரளவு பரவாயில்லை என்ற கருத்தைத் தரும் வாசகத்தையே பயன்படுத்தியுள்ளனர். இந்த அறிவிப்பாளர் காரணமாக இது பலவீனமான ஹதீஸாகி விடுகிறது.

மேலும் இவரிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கும் இப்னு லஹீஆ என்பாரும் பலவீனமானவர் ஆவார்.

இது தவிர இதன் கருத்து இஸ்லாத்தின் அடிப்படைக்கும், குர்ஆனுக்கும் மாற்றமாக இருப்பதால் இது இட்டுக்கப்பட்ட செய்தி என்ற நிலைக்கு இறங்கி விடுகிறது.

ஒருவர் எங்கே மரணிப்பார் என்பது அவரது கையில் உள்ள விஷயம் அல்ல. ஒரு இடத்தில் மரணித்தால் அதில் அவரது பங்கு எதுவும் இல்லை.

மனிதனின் கைவசத்தில் இல்லாத ஒன்றை அல்லாஹ்வின் தூதர் ஆர்வமூட்ட மாட்டார்கள்.

மரணம் நேரம் குறிக்கப்பட்டதாக உள்ளது. ஒரு வினாடி முந்தவோ, பிந்தவோ முடியாது.

இது போன்ற இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு மாற்றமாக உள்ளதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்லி இருக்க மாட்டார்கள் என்று தான் நாம் கருத வேண்டும்.

மரணம் குறித்த இஸ்லாத்தின் அடிப்படைகளை ஜனாசாவின் சட்டங்கள் என்ற நூலில் விளக்கியுள்ளோம். அதையும் உங்கள் கவனத்துக்காக கீழே தந்துள்ளோம்.

More Articles …