Sidebar

18
Thu, Jun
சமீபத்திய செய்திகள்

இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்?

ஷாகுல் ஹமீது

பதில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களின் மகனும், அலீ (ரலி) அவர்களின் சகோதரருமாகிய ஜஃபர் பின் அபீதாலிப் இப்பெயரால் குறிப்பிடப்படுகிறார்.

முஅத்தா எனும் போரில் இவர்களின் இரு கைகள் வெட்டப்பட்டன.

فتح الباري لابن حجر

وَالطَّبَرَانِيُّ عَنِ بن عَبَّاسٍ مَرْفُوعًا دَخَلْتُ الْبَارِحَةَ الْجَنَّةَ فَرَأَيْتُ فِيهَا جَعْفَرًا يَطِيرُ مَعَ الْمَلَائِكَةِ وَفِي طَرِيقٍ أُخْرَى عَنْهُ أَنَّ جَعْفَرًا يَطِيرُ مَعَ جِبْرِيلَ وَمِيكَائِيلَ لَهُ جَنَاحَانِ عَوَّضَهُ اللَّهُ مِنْ يَدَيْهِ وَإِسْنَادُ هَذِهِ جَيِّدٌ

இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது ஜஃபர் அவர்களுக்கு இரு கைகளுக்குப் பகரமாக இரு சிறகுகளை அல்லாஹ் கொடுத்து வானவர்களுடன் அவர் பறந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன் என்று குறிப்பிட்டார்கள். (தப்ரானி)

இதுபோல் இன்னும் பல ஹதீஸ்கள் உள்ளன. இரு கைகளை அல்லாஹ்வின் பாதையில் இழந்து அதற்குப் பகரமாக இரு சிறகுகளைப் பெற்றதால் இவர் துல் ஜனாஹைன் - இரு சிறகுகள் உடையவர் என்று அழைக்கப்பட்டார்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஜஃபரைச் சந்தித்தால் இரு சிறகுகள் கொண்டவரே உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் எனக் கூறுவார்கள்.

நூல் புகாரி 3709, 4264

24.09.2014. 23:58 PM

முதலில் இஸ்லாத்தை ஏற்ற மதீனாவாசி யார்?

ஜாபர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரம் செய்த துவக்க காலத்தில் மதீனாவைச் சேர்ந்த யாரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. பின்னர் ஹஜ் செய்ய வரும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு ஹிஜ்ரத்துக்கு ஒரு ஆண்டுக்கு முன்னர் பன்னிரண்டு பேர் கொண்ட குழுவினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இரகசியமாகச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.

நீங்கள் மதீனா வந்தால் எங்கள் மனைவி மக்களைக் காப்பது போல் உங்களைக் காப்போம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி கொடுத்தனர். இந்தப் பன்னிரண்டு பேர் தான் மதீனாவாசிகளில் இஸ்லாத்தை முதலில் ஏற்றவர்களாவர்.

அவர்கள் விபரம் வருமாறு:

அஸ் அத் பின் சுராரா (ரலி)

உசைத் பின் ஹுலைர் (ரலி)

அபுல் ஹைஸன் (ரலி)

சஅது பின் கைஸமா (ரலி)

சஅது பின் அர்ரபீவு (ரலி)

அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி)

அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஹராம் (ரலி)

சஅது பின் உபாதா (ரலி)

முந்திர் பின் அம்ரு (ரலி)

பரா பின் மஃரூர் (ரலி)

உபாதா பின் சாமித் (ரலி)

ராஃபிவு பின் மாலிக் (ரலி)

14.08.2011. 16:18 PM

ஒட்டகப்போரின் பின்னணி என்ன?

அலீ (ரலி) அவர்களுக்கும், ஆயிஷா (ரலி) அவர்களுக்குமிடையே நடந்த போருக்கு என்ன காரணம்?

ஸயீம் அலி

பதில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு மூன்றாவது ஆட்சித் தலைவராக இருந்த உஸ்மான் (ரலி) அவர்களைக் கயவர்கள் கொலை செய்தனர். உஸ்மான் (ரலி) அவர்களுக்குப் பிறகு அலீ (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக வருகிறார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், உடனே அவர்களுக்கான தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் வலியுறுத்தினார்கள்.

ஆனால் அலீ (ரலி) அவர்கள், இந்தக் கோரிக்கையின் நியாயத்தை நான் நன்றாக உணர்வேன். ஆனால் அதற்குரிய தருணம் இதுவல்ல! குற்றவாளிகள் நம்மை விட அதிக வலிமையுடன் மதீனாவில் உள்ளனர். நிலைமை சற்று நமக்கு சாதகமாக அமைந்தவுடன் நாம் நடவடிக்கையில் இறங்குவோம் என்று கூறினார்கள்.

இருவருக்கும் இடையில் சரியான புரிந்துணர்வு ஏற்படாத காரணத்தால் போர் மூண்டது.

முழுமையாக அறிய அந்த 72 கூட்டத்தினர் யார் என்ற தொடர் உரையைக் கேட்கவும்

03.08.2011. 15:56 PM

ஹுசைன் என்னைச் சேர்ந்தவர் என்பதன் பொருள் என்ன?

கேள்வி:

ஹுசைன் என்னைச் சேர்ந்தவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாகவும் அதனால் தான் ஷியா கொள்கையில் தான் இருப்பதாகவும் ஒரு ஷியா பிரிவைச் சேர்ந்தவர் கூறுகிறார். இதற்கு என்ன விளக்கம்?

முகவை சம்சுத்தீன்

பதில்

ஹுசைன் என்னைச் சார்ந்தவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் நூற்களில் ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது.

ஹுசைன் எனக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது இதன் பொருள். நபியவர்கள் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு மட்டும் இவ்வாறு கூறவில்லை. பல நபித்தோழர்களுக்கும் இவ்வாறு கூறியுள்ளார்கள்.

2486حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ أُسَامَةَ عَنْ بُرَيْدٍ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْأَشْعَرِيِّينَ إِذَا أَرْمَلُوا فِي الْغَزْوِ أَوْ قَلَّ طَعَامُ عِيَالِهِمْ بِالْمَدِينَةِ جَمَعُوا مَا كَانَ عِنْدَهُمْ فِي ثَوْبٍ وَاحِدٍ ثُمَّ اقْتَسَمُوهُ بَيْنَهُمْ فِي إِنَاءٍ وَاحِدٍ بِالسَّوِيَّةِ فَهُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அஷ்அரீ குலத்தினர் போரின் போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய் விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன்.

இதை அபூமூசா அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நூல் : புகாரி 2486

இப்படி பலரைக் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் எனக் கூறியுள்ளார்கள். எனவே இது ஷியா கொள்கை சரியானது என்பதற்கு ஆதாரமாகாது.

ஷியாக்கள் செய்து கொண்டிருக்கும் காரியத்துக்கும் அவர்கள் குறிப்பிடும் மேற்கண்ட ஹதீஸிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நபித்தோழர்களை ஏசுவது, பல ஹதீஸ்களைக் காரணமின்றி மறுப்பது, தங்களுடைய கொள்கைக்கு மாற்றமாக இருந்தால் அது குர்ஆனாக இருந்தாலும் ஏற்க மறுப்பது, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு காட்டி இஸ்லாமிய வட்டத்தை விட்டும் வெளியேறி தனி மதமாகக் காட்சி தருவது ஆகிய விஷயங்களை இவர்களிடம் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மகள் ஃபாத்திமா (ரலி), மருமகன் அலீ (ரலி), பேரக் குழந்தைகள் ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) ஆகியோரின் பெயரில் இணைவைப்புக் காரியங்களையும், அநாச்சாரங்களையும் இவர்கள் அரங்கேற்றி வருகிறார்கள்.

இவர்களின் தொழுகை, நோன்பு, வணக்க வழிபாடுகள், சட்ட திட்டங்கள் ஆகியவை அனைத்தும் முற்றிலும் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான முறையிலேயே அமைந்திருக்கும்.

இப்படி இஸ்லாத்தின் அடிப்படையை விட்டும் வெளியே நிற்கும் இவர்கள் தாங்களுடைய அனைத்து செயல்பாடும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் அமைந்துள்ளது என்பதை இவர்களால் நிரூபிக்க முடியாது. இதை நிரூபிக்க இவர்களை அழைத்தாலும் அதற்கு ஒத்து வரமாட்டார்கள். காரணம் குர்ஆன் ஹதீஸின் மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லை.

12.08.2011. 16:51 PM

நபியின் மரணத்திற்கு பின் ஆயிஷா ரலி யார் பொறுப்பில் இருந்தார்கள்?

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 30-09-2020

More Articles …