Sidebar

18
Thu, Jun
சமீபத்திய செய்திகள்

இருட்டு அறையில் படுத்தால் அறிவு குறையுமா?

கேள்வி :

இருட்டு அறையில் படுத்தால் அறிவு குறையும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களா?

இஹ்ஸாஸ் இலங்கை.

பதில்:

இருட்டு அறையில் படுத்தால் அறிவு குறையும் என்ற கருத்து தவறானது. இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை.

ஹதீஸ்களை ஆராயும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து நபித்தோழர்களும் இருட்டில் தான் உறங்கினார்கள் என்பதை அறியலாம்.

صحيح البخاري

6295 - حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ كَثِيرٍ هُوَ ابْنُ شِنْظِيرٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَمِّرُوا الآنِيَةَ، وَأَجِيفُوا الأَبْوَابَ، وَأَطْفِئُوا المَصَابِيحَ، فَإِنَّ الفُوَيْسِقَةَ رُبَّمَا جَرَّتِ الفَتِيلَةَ فَأَحْرَقَتْ أَهْلَ البَيْتِ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இரவில் உறங்கச் செல்லும் போது) பாத்திரங்களை மூடிவையுங்கள். கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள். விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய(எலியான)து (விளக்கின்) திரியை (வாயால்) கவ்வி இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்துவிடக் கூடும்

புகாரி : 6295

எரியும் விளக்குகளை எலிகள் இழுத்துச் சென்று வீட்டை எரித்து விடும் என்பதால் விளக்கை அணைக்குமாறு நபியவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

அன்றைய காலத்தில் இன்றைக்கு இருப்பது போல் மின் விளக்குகள், விடி பல்புகள் இருக்கவில்லை. எண்ணெய் ஊற்றி பற்ற வைக்கப்படும் விளக்குகளே இருந்தன.

விளக்குகளை அணைத்துவிட்டால் எந்த வெளிச்சமும் இன்றி இருட்டு அறையில் தான் உறங்க வேண்டிவரும். இருட்டு அறையில் உறங்குவதால் அறிவு குறையும் என்றால் இவ்வாறு நபியவர்கள் உத்தரவிட்டிருக்க மாட்டார்கள். எனவே இருட்டில் உறங்குவதற்கும், அறிவு குறைவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறிய முடிகின்றது. விஞ்ஞான ரீதியிலும் இக்கருத்து சரியானதல்ல.

07.08.2010. 14:25 PM

கியாம நாளில்தான் ஹஜ் செய்வது நிறுத்தப்படும் என்று இஸ்லாம் சொல்கிறதே? உலகம் அழியப்போகிறதா?

22/03/2020 சமகால நிகழ்வுகள்

சூனியக்காரர்களுக்கு ஆற்றல் உண்டு என்று முஸ்லிம் நூலில் ஹதீஸ் உள்ளதா?

கேள்வி: ஏகத்துவம் மாத இதழில் பின்வரும் ஹதீஸ் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆனை ஓதி வருபவர்களுக்கு அது மறுமையில் (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான அல்பகரா மற்றும் ஆலு இம்ரான் ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதி வாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல் தரும் மேகங்களைப் போன்றோ, அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். அல்பகரா அத்தியாயத்தை ஓதி வாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்து போவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி)

நூல்: முஸ்லிம் 1470

இந்தச் செய்தி தொடர்பாக தற்போது முகநூலில் பித்னா பரப்பப்பட்டு வருகிறது. இந்தச் செய்தியில் சூனியக்காரர்களுக்கு சக்தி இருப்பதாகவும், அது பகரா ஓதுவதன் மூலம் அற்றுப் போவதாகவும் வந்துள்ளது.

இந்தச் செய்தியின் உண்மை நிலை என்ன? என்பதைத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இஹ்சாஸ், இலங்கை. பதில்

இந்த அத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்து போவார்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளதால் சூனியக்காரர்களுக்கு ஆற்றல் உண்டு என்ற கருத்தைத் தருவதாக நீங்கள் கேட்டுள்ளீர்கள்.

இந்த வாசகத்தில் இருந்து இவ்வாறு வாதிட முகாந்திரம் உண்டு.

ஆனால் அரபு மூலத்தில் சூனியக்காரர்கள் என்ற சொல் இல்லை. வீனர்கள் – பதலத் - என்ற சொல் தான் உள்ளது. இடையில் ஒரு அறிவிப்பாளர் பதலத் என்பது சூனியக்காரர்களைக் குறிக்கும் என்று தன் கருத்தைக் கூறியுள்ளார். அதை அடிப்படையாகக் கொண்டு மொழிபெயர்த்த ரஹ்மத் ட்ரஸ்ட் நிறுவனத்தார் சூனியக்காரர்கள் என்று மொழிபெயர்த்து விட்டனர்.

புகாரி, முஸ்லிம் நூல்களை நாம் மேற்கோள் காட்டும் போது ஏற்கனவே தமிழில் வெளியிடப்பட்ட மொழிபெயர்ப்புகளில் இருந்து தான் நமது கட்டுரையாளர்கள் எடுத்துக் காட்டுவார்கள். அந்த அடிப்படையில் ஏற்கனவே வெளியிடப்பட்ட தமிழாக்கத்தில் உள்ளதை கட்டுரையாளர் அப்படியே எடுத்து எழுதியதால் நீங்கள் சுட்டிக் காட்டுவது போன்ற கருத்து ஏற்பட்டு விட்டது.

மேலும் தமிழில் வெளியிடப்பட்ட அந்த ஹதீஸை முழுமையாக வெளியிட்டு இருந்தால் இந்தச் சந்தேகத்தை நீக்கும் சொற்கள் அதில் இடம் பெற்றுள்ளதை மக்கள் அறிந்திருப்பார்கள்.

கட்டுரையாளரும் அதைக் கவனிக்கவில்லை. நாமும் கவனிக்கவில்லை. அந்த ஹதீஸின் அரபு மூலம் இதுதான்:

صحيح مسلم

1910 – حدثنى الحسن بن على الحلوانى حدثنا أبو توبة – وهو الربيع بن نافع – حدثنا معاوية – يعنى ابن سلام – عن زيد أنه سمع أبا سلام يقول حدثنى أبو أمامة الباهلى قال سمعت رسول الله -صلى الله عليه وسلم- يقولاقرءوا القرآن فإنه يأتى يوم القيامة شفيعا لأصحابه اقرءوا الزهراوين البقرة وسورة آل عمران فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان أو كأنهما غيايتان أو كأنهما فرقان من طير صواف تحاجان عن أصحابهما اقرءوا سورة البقرة فإن أخذها بركة وتركها حسرة ولا تستطيعهاالبطلة قال معاوية بلغنى أن البطلة السحرة.

صحيح مسلم

1911 – وحدثنا عبد الله بن عبد الرحمن الدارمى أخبرنا يحيى – يعنى ابن حسان – حدثنا معاوية بهذا الإسناد. مثله غير أنه قال وكأنهما  فى كليهما ولم يذكر قول معاوية بلغنى.

இந்த ஹதீஸுக்கு வெளியிடப்பட்ட தமிழாக்கத்தை முதலில் பாருங்கள்!

1470 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதி வருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான அல்பகரா மற்றும் ஆலு இம்ரான் ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதி வாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல் தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். அல்பகரா அத்தியாயத்தை ஓதிவாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கை விடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்து போவார்கள்.

இதை அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஆவியா பின் சல்லாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) அல் பத்தலா எனும் சொல்லுக்கு சூனியக்காரர்கள் என்று பொருள் என எனக்குத் தகவல் கிட்டியது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் (அவை மேகங்களைப் போன்று அல்லது பறவைக் கூட்டங்களைப் போன்று என்பதற்கு பதிலாக) அவை மேகங்களைப் போன்றும் பறவைக் கூட்டங்களைப் போன்றும் வந்து வாதாடும் என்று இடம் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் முஆவியா பின் சல்லாம் (ரஹ்) அவர்கள் தமக்குக் கிட்டியதாகக் கூறிய சொற்பொருள் இடம்பெறவில்லை.

இதிலிருந்து கிடைக்கும் கருத்துக்களைப் பாருங்கள்!

சூனியக்காரர்கள் என்று தமிழாக்கம் செய்யப்பட்ட இடத்தில் அல் பதலத் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இதன் நேரடிப் பொருள் வீனர்கள் என்பதாகும்.

இது பாத்தில் என்ற சொல்லின் பன்மைச் சொல்லாகும். தவறானது, அசத்தியம் என்பதைக் குறிக்க பாத்தில் என்ற சொல் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

8:8, 17:81, 21:18, 22:62, 31:30, 34:49, 41:42, 42:24, 47:3 ஆகிய வசனங்களில் பாத்தில் என்ற சொல் இக்கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் சூனியம் என்ற பொருளில் இந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை. அதன் பன்மைச் சொல்லாகிய பத்தலத் என்பதற்கு நேரடிப் பொருள் வீனர்கள், பொய்யர்கள் என்பது தான். சூனியக்காரர்கள் என்பதல்ல.

நேரடிப் பொருள் இது தான் என்ற போதும் இது சூனியக்காரர்களைக் குறித்தே சொல்லப்பட்டுள்ளது என்பது முஆவியா என்ற மூன்றாவது அறிவிப்பாளரின் கருத்தாகத் தான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதன் நேரடிப் பொருள் சூனியக்காரர்கள் என்பது கிடையாது.

பொய்யர்கள் என்று பொதுவாகச் சொல்லப்பட்டு இருக்கும் போது அது சூனியக்காரர்களைத் தான் குறிக்கிறது என்று எனக்குத் தகவல் கிடைத்தது என்று தான் அவர் கூறுகிறார். இப்படி அல்லாஹ்வின் தூதர் சொன்னதாக அவர் கூறவில்லை.

பொய்யர்கள் என்பது சூனியக்காரர்களைத் தான் குறிக்கிறது என்பது யாரெனத் தெரியாத ஒருவரின் கருத்தாகும். அந்தக் கருத்தை முஆவியா என்பவர் எடுத்துச் சொல்கிறார்.

வீனர்கள் என்று தான் அதற்கு மொழி பெயர்த்திருக்க வேண்டும். வீனர்கள் என்பதன் கருத்து சூனியக்காரர்கள் என்று முஆவியா என்பவர் கூறுகிறார் என்று சொல்வது அப்போது தான் பொருத்தமாக அமையும்.

பாத்தில் என்ற சொல் குர்ஆனில் பொதுவாக பொய்யையும், வீனானதையும் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு பொருள் செய்வது முஆவியா என்ற அறிவிப்பாளர் ஆதாரமில்லாமல் சொன்ன கருத்தை விட சரியானது.

ஒரு அறிவிப்பில் இவ்வாறு சொல்லப்பட்டு உள்ளது. மற்றொரு அறிவிப்பில் இதன் பொருள் சூனியக்காரர்கள் என்று சொல்லாமல் உள்ளது. அதன்படி வீனர்கள் என்றுதான் பொருள் கொள்ள முடியும்.

இதை நாம் இந்த ஹதீஸை ஒட்டி விளக்கி இருக்க வேண்டும். கவனக்குறைவை ஒப்புக் கொள்கிறோம்.

12.09.2014. 1:49 AM

அவ்வாபீன் என்ற ஒரு தொழுகை உண்டா?

அவ்வாபீன் தொழுகை என்ற பெயரில் தப்லீக் ஜமாஅத்தினர் மக்ரிப் இஷாவுக்கு இடையில் ஆறு ரக்அத்களைத் தொழுகிறார்கள்.

இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ்களை எடுத்துக் காட்டுகிறார்கள்.

ஆதாரம் ஒன்று

سنن الترمذي 

435 - حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ يَعْنِي مُحَمَّدَ بْنَ الْعَلاَءِ الْهَمْدَانِيَّ الْكُوفِيَّ، قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الحُبَابِ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ أَبِي خَثْعَمٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ لَمْ يَتَكَلَّمْ فِيمَا بَيْنَهُنَّ بِسُوءٍ عُدِلْنَ لَهُ بِعِبَادَةِ ثِنْتَيْ عَشْرَةَ سَنَةً.

மக்ரிப் தொழுகைக்குப் பின் ஒருவர் தீயவற்றைப் பேசாமல் ஆறு ரக்அத்கள் தொழுதால் அது பன்னிரண்டு ஆண்டுகள் வணக்கத்துக்கு நிகராக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்கள் : திர்மிதி, இப்னுமாஜா, இப்னு குஸைமா, தப்ரானி, முஸ்னத் அபீ யஃலா,

இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதி அவர்களே இது சரியான செய்தி அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

وَقَدْ رُوِيَ عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ عِشْرِينَ رَكْعَةً بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الجَنَّةِ. حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ غَرِيبٌ، لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ زَيْدِ بْنِ الحُبَابِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي خَثْعَمٍ.  وَسَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ: يَقُولُ: عُمَرُ بْنُ عَبْدِ اللهِ بْنِ أَبِي خَثْعَمٍ مُنْكَرُ الحَدِيثِ وَضَعَّفَهُ جِدًّا.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் உமர் பின் அப்துல்லாஹ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர்  என்று புகாரி கூறியதாக திர்மிதி எடுத்துக்காட்டுகிறார்கள்.

نقد المنقول والمحك المميز بين المردود والمقبول

 ومن ذلك حديث يرويه عمر بن راشد عن يحيى بن أبي كثير عن أبي سلمة عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب ست ركعات لم يتكلم بينهن بشيء عدلن له عبادة اثنتي عشرة سنة وعمر هذا قال فيه الإمام أحمد ويحيى بن معين والدارقطني ضعيف وقال أحمد أيضا لا يساوي حديثه شيئا وقال البخاري منكر الحديث وضعفه جدا وقال ابن حبان لا يحل ذكره إلا على سبيل القدح فيه فإنه يضع الحديث على مالك وابن أبي ذئب وغيرهما من الثقات

அஹ்மத் பின் ஹம்பல், யஹ்யா பின் மயீன், தாரகுத்னீ, ஆகியோர் இந்த உமர் என்பவரை பலவீனர் என்று குறிப்பிட்டுள்ளனர். இவரது ஹதீஸ்கள் ஒரு மதிப்பும் இல்லாதவை என்றும் அஹ்மத் பின் ஹம்பல் கூறியுள்ளனர். இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட்டவை என்று புகாரி கூறுகிறார். இவரது குறையை அம்பலப்படுத்துவதற்காகவே தவிர இவரைப் பற்றி பேசுவது கூடாது. இமாம் மாலிக், இப்னு அபீ திஅப் உள்ளிட்ட பல நம்பகமானவர்கள் பெயரில் ஹதீஸ்களை இட்டுக்கட்டியவர் என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார்.

எனவே இது அறவே ஆதாரமாகக் கொள்ளத் தக்கதல்ல.

ஆதாரம் இரண்டு

பின்வரும் ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

تاريخ دمشق لابن عساكر

6891 - محمد بن غزوان (1) روى عن الوضين بن عطاء وعلي بن محمد والأوزاعي روى عنه سليمان بن عبد الرحمن أخبرنا أبو الحسن علي بن المسلم الفرضي أنبأنا أبو عبد الله بن أبي الحديد أنبأنا أبو الحسن بن السمسار أنبأنا أبو عبد الله بن مروان أنبأنا أبو عبد الملك أحمد بن إبراهيم ابن بسر (2) القرشي ثنا سليمان بن عبد الرحمن ثنا محمد بن غزوان الدمشقي حدثنا علي ابن محمد عن سالم عن ابن عمر قال سمعت رسول الله (صلى الله عليه وسلم) يقول " من صلى ست ركعات بعد المغرب غفر له بها ذنوب خمسين سنة "

மக்ரிபுக்குப் பின் யார் ஆறு ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்கு ஐம்பது ஆண்டுகளின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:  இப்னு உமர் (ரலி)

இதன் அறிவிப்பாளர் தொடரில் முஹம்மத் பின் கஸ்வான் என்பார் இடம் பெறுகிறார்.

وذكره ابن أبي حاتم في " العلل " (1 / 78) من هذا الوجه ثم قال: قال أبو زرعة: اضربوا على هذا الحديث فإنه شبه موضوع، ومحمد بن غزوان الدمشقي منكر الحديث.

இது இட்டுக்கட்டப்பட்ட செய்திக்கு ஒப்பானதாகும் என்று இப்னு அபூ ஹாதம் கூறுகிறார்கள். முஹம்மத் பின் கஸ்வான் இட்டுக்கட்டுபவர் என்று சந்தேகிக்கப்பட்டவர் ஆவார் என்றும் கூறுகிறார்கள்.

எனவே இதையும் ஆதாரமாகக் கொள்ள  முடியாது.

ஆதாரம் மூன்று

المعجم الأوسط 

 7245 - حدثنا محمد بن يحيى ثنا صالح بن قطن البخاري نا محمد بن عمار بن محمد بن عمار بن ياسر حدثني أبي عن جدي قال رأيت عمار بن ياسر صلى بعد المغرب ست ركعات فقلت يا ابه ما هذه الصلاة قال رأيت حبيبي رسول الله صلى الله عليه و سلم صلى بعد المغرب ست ركعات وقال من صلى بعد المغرب ست ركعات غفرت له ذنوبه وإن كانت مثل زبد البحر لايروى هذا الحديث عن عمار إلا بهذا الإسناد تفرد به صالح بن قطن

யார் மஃரிப் தொழுகைக்கு பின் ஆறு ரக்அத்கள் தொழுவாரோ அவருடைய பாவங்கள் கடல் நுரை அளவு இருந்தாலும்  மன்னிக்கப்படும்.

அறிவிப்பாளர் : அம்மார் (ரலீ)

நூல் : தப்ரானி அவ்ஸத், சகீர்

இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் ஸாலிஹ் பின் கதன் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவர். எனவே இந்த செய்தியையும் ஏற்றுக் கொள்ளமுடியாது.

ஆதாரம் நான்கு

இஹ்யா எனும் நூலில் கஸ்ஸாலி பின்வரும் செய்தியைப் பதிவு செய்துள்ளார்.

حديث أم سلمة عن أبي هريرة مرفوعا من صلى ست ركعات بعد المغرب عدلت له عبادة سنة أو كأنه صلى ليلة القدر

மக்ரிபுக்குப் பின் யார் ஆறு ரக்அத்கள் தொழுகிறாரோ அது ஒரு வருட வணக்கத்துக்குச் சமமாக ஆக்கப்படும். அல்லது லைலதுல் கத்ர் இரவில் தொழுதது போல் ஆக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்படி கஸ்ஸாலி குறிப்பிட்டுள்ளார்.

கஸ்ஸாலி மிகவும் பிற்காலத்தவர். ஹிஜ்ரி 505ல் மரணித்தவர். இவர் ஒரு ஹதீஸைச் சொல்வதாக இருந்தால் ஹதீஸ் நூல்களில் இருந்து எடுத்துக்காட்டித் தான் ஹதீஸ் என்று சொல்ல வேண்டும். ஆனால் இவர் ஹதீஸ் என்ற பெயரில் எந்த நூலிலும் இல்லாத பல பொய்களை ஹதீஸ் என்று அவிழ்த்து விட்டுள்ளார்.

أحاديث الإحياء التي لا أصل لها للسبكي   இஹ்யாவில் பதிவு செய்யப்பட்ட ஆதரமற்ற ஹதீஸ்கள் என்று சுப்கி அவர்கள் ஒரு நூல் எழுதி அவற்றைப் பட்டியலிட்டுள்ளார் என்றால் கஸ்ஸாலி ஹதீஸ்களில் எந்த அளவு விளையாடி உள்ளார் என்று அறியலாம்.

எந்த ஹதீஸ் நூலிலும் இல்லாத ஹதீஸ்கள் என்ற பட்டியலில் இந்தப் பொய்யான ஹதீஸையும் சுப்கி அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

கணிணி யுகத்தில் நாம் தேடிப் பார்க்கும் போதும் இப்படி ஒரு ஹதீஸை நாம் காண முடியவில்லை. எனவே இது கஸ்ஸாலி இட்டுக்கட்டிய ஹதீஸாகும்.

(இவரை அறிவுக்கடல் என்று உலமாக்கள் புகழ்ந்து போற்றுவது வேதனையாகும்)

எனவே மக்ரிபிற்குப் பிறகு அவ்வாபீன் என்ற பெயரில் ஆறு ரக்அத்கள் தொழுவது பித்அத் ஆகும். இதை தவிர்க்க வேண்டும்.

தவ்ஹீத்வாதி என்ற சொல் ஹதீஸில் உள்ளதா?

கேள்வி: தவ்ஹீத்வாதி என்ற சொல்லைப் பயன்படுத்தலாமா?அபூபக்கர் சித்தீக்

பதில்

தவ்ஹீத்வாதி என்ற சொல் குர்ஆன் ஹதீஸில் இல்லை. எனவே இவ்வாறு அடையாளப் பெயர் இடுவது கூடாது என்று சிலர் கூறி வருகின்றனர். அரபு மொழியைப் பற்றியும், குர்ஆன் ஹதீஸைப் பற்றியும் ஞானம் இல்லாதவர்கள் தான் இப்படிப்பட்ட தவறான வாதத்தை வைத்து வருகின்றனர்.

குர்ஆனையும், நபிமொழிகளையும் படிக்கும் ஒருவர் தவ்ஹீத் என்ற சொல் அவ்விரண்டிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிந்து கொள்வார்.

அல்லாஹ் தன்னைப் பற்றி குர்ஆனில் வாஹித் (ஒருவன்) என்றும் வஹ்தஹு (அவன் தனித்தவன்) என்றும் பல இடங்களில் கூறுகின்றான்.

وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا إِلَهًا وَاحِدًا لَا إِلَهَ إِلَّا هُوَ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ(31)9

ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.

திருக்குர்ஆன் 9 : 31

இந்த வசனத்தில் ஒரே என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் வாஹித் என்ற அரபுச் சொல் இடம்பெற்றுள்ளது. வஹ்த் என்ற சொல்லிருந்து பிரிந்து வந்தவை தான் வாஹித், தவ்ஹீத் என்ற வார்த்தைகள்.

தவ்ஹீத் என்றால் இறைவன் ஒருவன் எனக் கூறுதல் என்பது பொருள். தவ்ஹீத்வாதி என்றால் ஒரே இறைவனை நம்பக்கூடியவன் என்பது பொருள். லாயிலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்ற கலிமாவின் சுருக்கமாகவும், இஸ்லாம் என்ற வார்த்தையின் மாற்றுச் சொல்லாகவும் தவ்ஹீத் என்ற சொல் உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லாயிலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்ற இஸ்லாமியக் கொள்கையை குறிக்க தவ்ஹீத் என்ற சொல்லிலிருந்து பிரிந்து வரும் யுவஹ்ஹிது என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள். இதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றன.

7372 و حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الْأَسْوَدِ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ عَنْ يَحْيَى بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ أَنَّهُ سَمِعَ أَبَا مَعْبَدٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ يَقُولُ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ لَمَّا بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعَاذَ بْنَ جَبَلٍ إِلَى نَحْوِ أَهْلِ الْيَمَنِ قَالَ لَهُ إِنَّكَ تَقْدَمُ عَلَى قَوْمٍ مِنْ أَهْلِ الْكِتَابِ فَلْيَكُنْ أَوَّلَ مَا تَدْعُوهُمْ إِلَى أَنْ يُوَحِّدُوا اللَّهَ تَعَالَى فَإِذَا عَرَفُوا ذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ فَإِذَا صَلَّوْا فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ زَكَاةً فِي أَمْوَالِهِمْ تُؤْخَذُ مِنْ غَنِيِّهِمْ فَتُرَدُّ عَلَى فَقِيرِهِمْ فَإِذَا أَقَرُّوا بِذَلِكَ فَخُذْ مِنْهُمْ وَتَوَقَّ كَرَائِمَ أَمْوَالِ النَّاسِ رواه البخاري

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பிய போது அவர்களிடம், நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். ஆகவே, அவர்களுக்கு முதலாவதாக, (அல்லாஹ் ஒருவன் எனும்) ஓரிறைக் கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து (ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐந்து நேரத் தொழுகைகளை அவர்கள் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள்.

நூல் : புகாரி 7372

19 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا أَبُو خَالِدٍ يَعْنِي سُلَيْمَانَ بْنَ حَيَّانَ الْأَحْمَرَ عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسَةٍ عَلَى أَنْ يُوَحَّدَ اللَّهُ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَصِيَامِ رَمَضَانَ وَالْحَجِّ فَقَالَ رَجُلٌ الْحَجُّ وَصِيَامُ رَمَضَانَ قَالَ لَا صِيَامُ رَمَضَانَ وَالْحَجُّ هَكَذَا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه مسلم

இஸ்லாம் (எனும் மாளிகை) ஐந்து (தூண்கள்) மீது எழுப்பப்பட்டுள்ளது. அவை: 1. (இறைவன் ஒருவன் எனும்) ஓரிறைக் கொள்கை. 2. தொழுகையைக் கடைப் பிடிப்பது. 3. ஸகாத் வழங்குவது. 4. ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது. 5. ஹஜ் செய்வது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : முஸ்லிம்

 

ஓரிறைக் கொள்அகை என்று தமிழாக்கம் செய்துள்ள இடத்தில் யுவஹ்ஹிதூ என்ற மூலச் சொல் உள்ளது. இதன் வேர்ச்சொல் தவ்ஹீத் ஆகும். 

கோபித்துக் கொண்டான் என்று ஒரு நூலில் பயன்படுத்தப்பட்டால் கோபம் என்பது அந்த நூலில் இல்லை எனக் கூற முடியாது. கோபித்துக் கொண்டான் என்பதில் கோபம் அடங்கியுள்ளது. அது போல் தான் யுவஹ்ஹிது என்ற சொல்லுக்குள்ளும், யுவஹ்ஹிதூ என்ற சொல்லுக்கு உள்ளேயும் தவ்ஹீத் எனும் சொல் அடங்கியுள்ளது என்பதை அறிவு படைத்த மக்கள் அறிந்து கொள்வார்கள்.

தவ்ஹீத் என்ற சொல் நேரடியாகவும் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

2137 وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَظْهُرِنَا وَعَلَيْهِ يَنْزِلُ الْقُرْآنُ وَهُوَ يَعْرِفُ تَأْوِيلَهُ وَمَا عَمِلَ بِهِ مِنْ شَيْءٍ عَمِلْنَا بِهِ فَأَهَلَّ بِالتَّوْحِيدِ لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ وَأَهَلَّ النَّاسُ بِهَذَا الَّذِي يُهِلُّونَ بِهِ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில்) லப்பைக். அல்லாஹும்ம லப்பைக். லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக். வல்முல்க லா ஷரீக்க லக் (இதோ, உன் அழைப்பேற்று வந்து விட்டேன் இறைவா! உன் அழைப்பேற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகிறேன். உனக்கு இணை யாருமில்லை. உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையாளர் எவருமில்லை) என்று தவ்ஹீதுடன் தல்பியாச் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் (2334)

தவ்ஹீதுடன் தல்பியா சொன்னார்கள் என்பதில் இருந்து ஏகத்துவக் கொள்கைக்கு தவ்ஹீத் என்ற பெயரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திட்யுள்ளார்கள் என்பதை அறியலாம்.

பின்வரும் ஹதீஸில் அஹ்ல் அத்தவ்ஹீத் என்ற சொல்லை முஸ்லிம்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

உரியவன் என்பதற்கு அஹ்ல் என்ற சொல் அரபு மொழியில் பயன்படுத்தப்படும். அஹ்ல் அஷ்ஷிர்க் என்றால் ஷிர்க் வாதி அஹ்ல் அல் கிதாப் வேதமுடையோர் என்று பொருள். அஹ்ல் அத்தவ்ஹீத் என்றால் தவ்ஹீத்வாதி எனப் பொருள். அந்தச் சொல்லையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

حدثنا هناد حدثنا أبو معاوية عن الأعمش عن أبي سفيان عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم يعذب ناس من أهل التوحيد في النار حتى يكونوا فيها حمما ثم تدركهم الرحمة فيخرجون ويطرحون على أبواب الجنة قال فيرش عليهم أهل الجنة الماء فينبتون كما ينبت الغثاء في حمالة السيل ثم يدخلون الجنة قال هذا حديث حسن صحيح وقد روي من غير وجه عن جابر

தவ்ஹீத்வாதிகளில் சிலர் (வேறு பாவங்கள் காரணமாக) நரகில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்கள் கரிக்கட்டை போல் ஆவார்கள். பின்னர் அவர்களுக்கு இறையருள் கிடைக்கும். நரகில் இருந்து வெளியேற்றப்பட்டு சொர்க்கத்தின் வாசலில் போடப்படுவார்கள். சொர்க்கவாசிகள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். இதனால் அவர்கள் கரையோரத்தில் புல் முளைப்பது போல் பசுமையாவர்கள். பின்னர் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர் :  ஜாபிர் (ரலி)

நூல்கள் : திர்மிதி 2522, அஹ்மத் 14665

தவ்ஹீத்வாதியாக இருப்பவர் தனது பாவங்களுக்காகத் தண்டிக்கப்பட்டால் கூட அவர் கடைசியில் சொர்க்கம் செல்வார் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

எனவே தவ்ஹீத் வாதி என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய சொல்லாகும். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை உள்ளடக்கிய சொல்லாகும்.

24.10.2011. 13:22 PM

More Articles …