Sidebar

22
Mon, Jun
சமீபத்திய செய்திகள்

குழந்தைப் பருவத்தில் பேசிய மாஷிதா சம்பவம் உண்மையா?

கேள்வி:

கீழ்க்காணும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா என்பதற்கு விளக்கம் தரவும்!

மிஹ்ராஜ் பயணத்தின் போது ஒரு இடத்தில், கஸ்தூரியை விட மிக்க வாசனையைக் கொண்ட அதிசயமான மணமொன்றினை நுகர்ந்த. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.  ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் அதைப் பற்றி கேட்டார்கள். அதற்கு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் "இந்த வாசனை 'மாஷித்தா'வும் அவருடைய குடும்பத்தினர்களும் இருக்கக் கூடிய (கப்ர் அல்லது சுவர்க்க மாளிகை) இடத்திலிருந்து வருகின்ற வாசனை" என்று கூறினார்கள்.

தொடர்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாஷித்தாவின் வரலாறை விவரிக்கும் படி கேட்க, ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

"மாஷிதா பிர்அவ்னின் குடும்பத்துப் பெண்களுக்கு தலை வாரி விட்ட பெண். ஒரு நாள் அவர் பிர்அவ்னின் மகளுக்கு தலை வாரிக் கொண்டிருந்த போது தற்செயலாக சீப்பு கீழே விழுகிறது. உடனே மாஷிதா "பிஸ்மில்லாஹ்- அல்லாஹ்வின் திருநாமம் கொண்டு" என்று கூறினார். அப்போது அந்தப் பிள்ளை "நீ அல்லாஹ் என்று கூறியது என் தந்தை பிர்அவ்னைத் தானே?" என்று வினவினாள். அதற்கு மாஷிதா "இல்லை! என்னையும், உன் தந்தையையும் படைத்து பரிபாலிக்கும் இறைவன் அல்லாஹ்வை" என்று கூறினார்.

மாஷிதா, வணக்கத்திற்குரிய நாயனாக அல்லாஹ்வையும், இறைத்தூதராக நபி மூஸா (அலை) அவர்களையும் ஈமான் கொண்டு அதை மனதில் மறைத்து வைத்திருந்த பெண்ணாவார்.

உடனே அந்தப் பிள்ளை போய் தன் தந்தை பிர்அவ்னிடம் குற்றஞ் சொல்ல அவன் மாஷிதாவை சபைக்கு அழைத்து முழு விஷயத்தையும் வினவினான். பிர்அவ்ன் கேட்டான் "என்னைத் தவிர உனக்கு வேறு யாரும் கடவுள் உண்டோ?" என்று. அதற்கு மாஷிதா "ஆம்! நிச்சயமாக என்னையும் உன்னையும் படைத்து பரிபாலிக்கும் அந்த அல்லாஹ் தான் என் இறைவன்" என்றார் உறுதியோடு.

கோபங்கொண்ட பிர்அவன் நெருப்பை மூட்டி செம்பால் ஆன பெரும் பாத்திரத்தில் எண்ணையைக் கொதிக்க வைத்து மாஷிதாவுடைய கணவனிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு பிள்ளைகளாக நெருப்பில் எரிந்து கொண்டிருந்த எண்ணெய் பாத்திரத்தில் எறிந்தான். ஆனால் மாஷிதா மனந்தளறவுமில்லை, அவருடைய ஈமானில் சற்றேனும் உறுதி குறையவுமில்லை.

கடைசியாக பிர்அவன் மாஷிதாவையும் அவருடைய மார்பில் பால் குடித்ததுக் கொண்டிருந்த கைக் குழந்தையையும் தூக்கி எறியும்படி கூறினான். அப்போது மாஷிதா "எனது கடைசி ஆசை ஒன்று இருக்கிறது" என்று கூறினார். பிர்அவ்ன் "என்ன, சொல்?" என்று கேட்டான். மாஷிதா "என்னையும் என் கைக்குழந்தையையும் எண்ணையில் தூக்கி எறிந்த பின் கடைசியாக எமது எலும்புகள் எதுவெல்லாம் மிச்சமாகுமோ அவற்றையெல்லாம் ஒன்றாக ஒரு புடவையினுள் சுற்றி ஒரே கப்றில் அடக்கஞ் செய்ய வேண்டும்" என்று.

கொடிய பிர்அவ்ன் மாஷிதாவுடைய வேண்டுகோளிற்கு இணக்கம் தெரிவித்தான். அப்போது மாஷிதா தன் மார்பில் பால் குடித்ததுக் கொண்டிருந்த கைக் குழந்தையைப் பார்த்து "ஒரு பாவமும் அறியாத இந்தப் பிஞ்சும் சேர்ந்து எண்ணையில் கருகப் போகிறதே" என்று தயங்கினார். அப்போது வல்ல அல்லாஹ் அந்தக் குழந்தைக்கு பேசும் சக்தியைக் கொடுத்தான். அக்குழந்தை "கவலைப்படாதே தாயே! நீ சத்தியத்தில் இருக்கிறாய், பொறுமை கொண்டு முன்னேறிச் செல், மறுமையுடைய வேதனைகளும் தண்டனைகளும் இதை விடக் கொடியது" என்று ஆறுதல் கூறியது. கடைசியில் மாஷிதாவும் அவரது கைக் குழந்தையுடன் எண்ணைப் பாத்திரத்தில் எறியப்பட்டார்கள்.

வல்லவன் அல்லாஹ் மாஷிதாவையும் அவருடைய குடும்பத்தையும் பொருந்திக் கொண்டு வாக்களித்த உயர்ந்த சுவர்க்கத்தை அளித்து விட்டான்.

அறிவிப்பவர்:- இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: முஸ்னத் அஹ்மத், தபறானி, இப்னு ஹிப்பான், ஹாகிம்.

நாகை ஹுஸைன்

பதில் :

நீங்கள் குறிப்பிட்ட ஹதீஸ் நீங்கள் குறிப்பிட்ட நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ் இதுதான்.

مسند أحمد بن حنبل 

 2822 – حدثنا عبد الله حدثني أبي ثنا أبو عمر الضرير أنا حماد بن سلمة عن عطاء بن السائب عن سعيد بن جبير عن بن عباس قال قال رسول الله صلى الله عليه و سلم : لما كانت الليلة التي أسرى بي فيها أتت علي رائحة طيبة فقلت يا جبريل ما هذه الرائحة الطيبة فقال هذه رائحة ماشطة ابنة فرعون وأولادها قال قلت وما شأنها قال بينا هي تمشط ابنة فرعون ذات يوم إذ سقطت المدري من يديها فقالت بسم الله فقالت لها ابنة فرعون أبي قالت لا ولكن ربي ورب أبيك الله قالت أخبره بذلك قالت نعم فأخبرته فدعاها فقال يا فلانة وان لك ربا غيري قالت نعم ربي وربك الله فأمر ببقرة من نحاس فأحميت ثم أمر بها ان تلقى هي وأولادها فيها قالت له ان لي إليك حاجة قال وما حاجتك قالت أحب ان تجمع عظامي وعظام ولدي في ثوب واحد وتدفننا قال ذلك لك علينا من الحق قال فأمر بأولادها فألقوا بين يديها واحدا واحدا إلى ان انتهى ذلك إلى صبي لها مرضع وكأنها تقاعست من أجله قال يا أمه اقتحمي فإن عذاب الدنيا أهون من عذاب الآخرة فاقتحمت قال قال بن عباس تكلم أربعة صغار عيسى بن مريم عليه السلام وصاحب جريج وشاهد يوسف وبن ماشطة ابنة فرعون

இந்த ஹதீஸின் இறுதியில்

قال بن عباس تكلم أربعة صغار عيسى بن مريم عليه السلام وصاحب جريج وشاهد يوسف وبن ماشطة ابنة فرعون

குழந்தைப் பருவத்தில் நால்வர் பேசியுள்ளனர். 1 ஈஸா நபி, 2 ஜுரைஜ் என்பாரின் தோழர், 3 யூசுஃப் நபிக்கு ஆதரவாக சாட்சி சொன்னவர், ஃபிர் அவ்னின் மகளாகிய மாஷிதாவின் மகன் என்று இப்னு அப்பாஸ் கூறினார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

அறிவிப்பாளர் குறித்த விமர்சனம்

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களைப் பொருத்தவரை அதா பின் ஸாயிப் என்பார் வழியாக ஹம்மாத் பின் ஸலமா அறிவிப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதா பின் ஸாயிப் என்பவர் இறுதிக் காலத்தில் மூளை குழம்பி விட்டார். அவர் வழியாக இந்த அறிவிக்கப்படுவதால் இது பலவீனமான ஹதீஸ் என்று அல்பானி கூறுகிறார்.

ஆனால் இக்கூற்று சரியானதல்ல.

அதா பின் ஸாயிப் வழியாக ஹம்மாத் பின் ஸலமா அறிவிக்கும் ஹதீஸ்களில் வேறு குறை இல்லாவிட்டால் அது ஆதாரப்பூர்வமான செய்தி என்பதே சரியான கருத்தாகும்.

இது குறித்து விரிவாக அறிய

அதா பின் ஸாயிப் பலவீனமானவரா

என்ற ஆக்கத்தை வாசிக்கவும்.

அல்பானி அவர்கள் சொன்ன காரணத்துக்காக இது பலவீனமானதல்ல என்றாலும் வேறு காரணங்களால் இதில் பலவீனம் உள்ளது.

அதா பின் ஸாயிப் என்பார் இதை ஸயீத் பின் ஜுபைர் என்பார் வழியாக அறிவிக்கிறார்.

இது பற்றி ஒரு விமர்சனம் உள்ளது.

அந்த விமர்சனம் இதுதான்.

منهج الإمام أحمد في إعلال الأحاديث

 فكان يرفع عن سعيد بن جبير أشياء لم يكن يرفعها،

ஸயீத் பின் ஜுபைர் அவர்கள் நபியின் கூற்றாகச் சொல்லாமல் நபித்தோழரின் கூற்றாகச் சொன்ன பல செய்திகளை நபியின் கூற்றாக அதா பின் ஸாயிப் அறிவித்துள்ளார் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறுகிறார்கள்.

நூல் மன்ஹஜுல் இமாம் அஹ்மத்

மேற்கண்ட ஹதீஸை ஸயீத் பின் ஜுபைர் வழியாகவே அதா பின் ஸாயிப் அறிவித்துள்ளதால் இது நபித்தோழரின் கூற்றாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

கருத்துக் குழப்பங்கள்

இந்த ஹதீஸில் கருத்துக் குழப்பங்களும் உள்ளன.

நீங்கள் எடுத்துக் காட்டிய ஹதீஸில்

அதற்கு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் "இந்த வாசனை 'மாஷிதா'வும் அவருடைய குடும்பத்தினர்களும் இருக்கக் கூடிய

என்ற வாசகம் உள்ளது. ஆனால் மூலத்தில் வாசகம் இப்படி இல்லை.

இந்த வாசனை பிர்அவ்னின் மகளாகிய மாஷிதா மற்றும் அவரது குழந்தைகளின் வாசனை

என்று உள்ளது.

இந்த ஹதீஸ் இடம்பெற்ற எல்லா நூல்களிலும் மாஷிதா என்பவர் பிர்அவ்னின் மகள் என்று தான் ஆரம்பிக்கின்றது.

مسند أحمد

هذه رائحة ماشطةِ ابنةِ فرعون وأولادها، قال: قلت: وما شأنها؟، قال: بينا هي تمشط ابنةَ فرعون ذات يوم

المستدرك على الصحيحين للحاكم

هَذِهِ رَائِحَةُ مَاشِطَةِ ابْنَةِ فِرْعَوْنَ وَأَوْلَادِهَا كَانَتْ تَمْشِطُهَا فَوَقَعَ الْمُشْطُ مِنْ يَدِهَا، فَقَالَتْ: بِسْمِ اللَّهِ. فَقَالَتِ ابْنَتُهُ: أَبِي

شعب الإيمان للبيهقي

ما هذه الرائحة ؟ قالوا : هذه رائحة ماشطة ابنة فرعون وأولادها كانت تمشطها فوقع المشط من يدها ، فقالت : بسم الله ، فقالت ابنته : أبي

பிர்அவ்னின் மகளான மாஷிதாவின் மகளுடைய நறுமணம் என்று ஆரம்பிக்கும் இந்த ஹதீஸ் உடனே ஆள் மாறாட்டம் செய்கிறது. அதாவது மாஷிதா என்பார் பிர்அவ்னின் மகளுக்கு தலை வாரும் வேலைக்காரப் பெண் என்று ஆள் மாறாட்டம் செய்யப்படுகிறது. இதன் பின்னர் முழு ஹதீஸும் மாஷிதா என்பார் பிர்அவ்னின் மகள் அல்ல என்று தொடர்கிறது.

ஆரம்பம் பிர்அவ்னின் மகள் என்று துவங்கி சம்பவத்தைச் சொல்லும் போது வேறு பெண்ணுடைய சம்பவமாக மாறுகிறது.

இதன் அறிவிப்பாளர் குழப்பத்தில் இருந்துள்ளார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

ஆரம்பத்தில் தவறாகச் சொல்லி விட்டார்; பின்னர் சம்பவத்தை சரியாகச் சொல்லி இருக்கலாம் அல்லவா என்றும் கருத முடியாது. ஏனெனில் ஹதீஸை முடிக்கும் போது குழந்தைப் பருவத்தில் பேசிய நால்வரில்

وبن ماشطة ابنة فرعون

பிர்அவ்னின் மகளாகிய மாஷிதாவின் மகன் என்று கூறப்படுகிறது.

அதாவது பிர்அவ்னின் பேரன் தான் பேசியவர் என்று ஹதீஸ் முடிகிறது என்றால் மாஷிதா தலை வாரி விட்டதில் இருந்து நடந்த எல்லா உரையாடலும் பொய்யாகிப் போகிறது. அதாவது முதல் வாக்கியம் நடுவில் உள்ளதை மறுக்கிறது. நடுவில் உள்ள வாக்கியம் கடைசியில் உள்ளதை மறுக்கிறது.

இந்த வகையில் இந்த ஹதீஸ் தெளிவாக செய்தியைச் சொல்லவில்லை என்பது உறுதியாகிறது.

மற்றொரு கருத்துக் குழப்பம்

குழந்தைப் பருவத்தில் பேசிய நால்வரைப் பற்றிக் கூறும்போது யூசுப் நபியின் தோழர் என்பதும் சேர்க்கப்பட்டுள்ளது. இப்னு அப்பாஸ் அவர்களின் கூற்றாக சொல்லப்பட்டதிலும், நபிகள் நாயகத்தின் கூற்றாக சொல்லப்பட்டதிலும் இந்தக் குழந்தை பற்றி கூறப்படுகிறது.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " تَكَلَّمَ أَرْبَعَةٌ وَهُمْ صِغَارٌ: هَذَا وَشَاهِدُ يُوسُفَ، وَصَاحِبُ جُرَيْجٍ وَعِيسَى ابْنُ مَرْيَمَ عَلَيْهِ السَّلَامُ

இதன் விபரம் என்னவென்றால் யூசுப் நபி மீது அவரது எஜமானி பழி சுமத்திய போது, ஒருவர் சாட்சி சொன்னார் என்று 12:26 வசனம் சொல்கிறது.

யூசுப் நபிக்கு சாதகமாக சாட்சி சொன்னது ஒரு குழந்தை தான். அந்தக் குழந்தையைப் பற்றித் தான் இங்கே கூறப்படுகிறது என்பது இதன் விளக்கம். அதாவது குழந்தையைப் பேச வைத்து யூசுப் நபியின் மீது களங்கத்தை அல்லாஹ் நீக்கி அவரைக் காப்பாற்றினான்.

திருக்குர்ஆனை வாசிக்கும் போது குழந்தை சாட்சியம் கூறியது என்று கருத முடியாது.

"அவரது சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறுகிறாள்; அவர் பொய்யர். அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் பொய் கூறுகிறாள்; அவர் உண்மையாளர்'' என்று அவளது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சான்றுரைத்தார். அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டதை அவ(ளது கணவ)ர் கண்டபோது, "இது உனது சூழ்ச்சியே. பெண்களாகிய உங்களின் சூழ்ச்சி மிகப் பெரியது'' என்றார்.

திருக்குர் ஆன் 12:27,28

குழந்தை சாட்சியம் சொன்னால் குழந்தைப் பருவத்தில் பேசுவதே யூசுப் நபியின் உண்மைக்கு ஆதாரமாகி விடும்.

ஆனால் சாட்சி கூறியவர் இவரது சட்டை முன் புறம் கிழிக்கப்பட்டு இருந்தால் இவர் தான் குற்றவாளி; பின்பக்கம் கிழிக்கப்பட்டு இருந்தால் அவள் தான் குற்றவாளி என்றார். சட்டை பின்பக்கம் கிழிக்கப்பட்டதைப் பார்த்து விட்டு அவள் தான் குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்டதாக இந்த வசனம் கூறுகிறது

சட்டை எவ்வாறு கிழிக்கப்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில் தான் யார் மீது குற்றம் என முடிவு செய்யப்பட்டிருக்கும் போது குழந்தை பேச வேண்டிய அற்புதம் தேவையற்றதாக உள்ளது. குழந்தையைப் பேசவைத்து யூசுப் நபியின் தூய்மையை அல்லாஹ் நிரூபிக்க விரும்பினால் எவ்வித ஆதாரத்தையும் காட்டத் தேவையில்லை. குழந்தை பேசியதையே ஆதாரமாகக் கொண்டு யூசுஃப் நபி குற்றமற்றவர் என முடிவு செய்திருப்பார்கள்.

குழந்தையைப் பேச வைப்பது அதன் மூலம் உண்மையை வெளிக்கொண்டு வருவதாக இருக்க வேண்டும். இங்கே குழந்தை பேசியது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சட்டை கிழிந்த விதம் தான் ஆதாரமாக அமைந்துள்ளது.

எனவே சாட்சி சொன்னவர் குழந்தை அல்ல; தர்க்கரீதியாக அணுகும் அறிவு படைத்த ஒருவர் என்பதே அவ்வசனத்தில் இருந்து பெறப்படும் உண்மையாகும். இந்த உண்மைக்கு மாற்றமாக மேற்கண்ட குழப்பமான ஹதீஸ் அமைந்துள்ளது.

இரவில் உணவைத் தவிர்த்தால் சீக்கிரம் முதுமை வருமா?

இரவு உணவைத் தவிர்த்தால் சீக்கிரம் முதுமை வரும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன.

3355 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقِّيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ السَّلَامِ ابْنِ عَبْدِ اللَّهِ بْنِ بَابَاهُ الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَيْمُونٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: "لَا تَدَعُوا الْعَشَاءَ وَلَوْ بِكَفٍّ مِنْ تَمْرٍ، فَإِنَّ تَرْكَهُ يُهْرِمُ

இரவு உணவைத் தவிர்க்காதீர்கள். ஒரு கைப்பிடி பேரீச்சம்பழத்தையாவது எடுத்துக் கொள்ளுங்கள். இரவு உணவைத் தவிர்ப்பது முதுமையை ஏற்படுத்தும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் இப்னுமாஜா

இதன் அறிவிப்பாளரான இப்ராஹீம் பின் அப்துஸ்ஸலாம் பொய்யர் என சந்தேகிக்கப்பட்டவர் ஆவார். மேலும் மற்றொரு அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் மைமூன் என்பார் பலவீனமானவர் ஆவார்.

எனவே இது இடுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

இதே கருத்தில் திர்மிதியிலும் ஹதீஸ் உள்ளது.

سنن الترمذي

1856 - حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَعْلَى الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا عَنْبَسَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ القُرَشِيُّ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عَلَّاقٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَعَشَّوْا وَلَوْ بِكَفٍّ مِنْ حَشَفٍ، فَإِنَّ تَرْكَ العَشَاءِ مَهْرَمَةٌ»: هَذَا حَدِيثٌ مُنْكَرٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ وَعَنْبَسَةُ يُضَعَّفُ فِي الحَدِيثِ وَعَبْدُ المَلِكِ بْنِ عَلَّاقٍ مَجْهُولٌ

இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள திர்மிதி அவர்கள்  இது பொய்யென சந்தேகிக்கப்பட்ட ஹதீஸாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதன் அறிவிப்பாளரான அன்பஸா என்பார் ஹதீஸ் விஷயத்தில் பலவீனமானவர் என்றும் மற்றொரு அறிவிப்பாளரான அப்துல் மலிக் பின் அல்லாக் என்பார் யாரென அறியப்படாதவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதலாமா?

தினசரி வாகிஆ அத்தியாயம் ஓதினால் வறுமை நீங்கும் என்கிறார்கள். அது சரியா? சரி இல்லை என்றால் இரவில் எதை ஓதுவது?

காஜா மைதீன்

பதில் :

வாகிஆ சூராவை ஓதுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்துமே பலவீனமானவையாக உள்ளன.

شعب الإيمان للبيهقي

 أخبرنا أبو طاهر الفقيه ، أخبرنا أبو حامد بن بلال ، حدثنا أبو الأحوص إسماعيل بن إبراهيم الإسفراييني ، حدثنا العباس بن الفضل البصري ، حدثنا السري بن يحيى ، حدثناابو شجاع ، عن أبي ظبية ، عن ابن مسعود ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا " " وكان ابن مسعود يأمر بناته يقرأن بها كل ليلة " وكذا رواه يونس بن بكير ، عن السري *

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல் : பைஹகீ ஷுஅபுல் ஈமான்

இச்செய்தியில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெறுவதால் இது பலவீனமான செய்தியாகும்.

இந்த செய்தியை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து

அபூ ளப்யா என்பவரும்

அபூ ளப்யாவிடமிருந்து அபூ ஷுஜாஉ என்பவரும்

அறிவிக்கின்றனர்.

இவ்விரு அறிவிப்பாளர்களும் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படாத முகவரி அற்றவர்கள் என்று அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

ميزان الإعتدال في نقد الرجال ج: 7 ص: 380

  10292   أبو شجاع  نكرة لا يعرف عن أبي ظبية ومن أبو ظبية عن ابن مسعود عن النبي  صلى الله عليه وسلم قال من قرأ الواقعة كل ليلة لم تصبه فاقة أبدا رواه الربيع بن طارق وابن وهب عن السري بن يحيى أن هذا حدثه أخرجه ابن وهب في جامعه وأبو عبيد في فضائل القرآن والسري ثقة وأما

لسان الميزان ج: 7 ص: 60

583   أبو شجاع  نكرة لا يعرف عن أبي طيبة عن بن مسعود في قراءة سورة الواقعة

அபூ ளப்யாவிடமிருந்து அறிவிக்கும் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை என்று மேற்கண்ட இரு அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

நூல்கள் : மீஸானுல் இஃதிதால், லிசானுல் மீஸான்

العلل المتناهية - (1 / 112)

 151 - اخبرنا المبارك بن خيرون قال اخبرنا احمد بن الحسن قال انا ابو طاهر بن العلاف قال انا عثمان بن محمد قال انا ابو بكر بن ابي داؤد قال انا محمد بن احمد بن المثنى قال انا خالد بن خداش قال حدثني عبدالله بن وهب قال حدثني السري بن يحيى ان شجاعا حدثه عن ابي ظبية عن ابن مسعود قال سمعت رسول الله صلى الله عليه و سلم يقول من قرأ سورة القارعة في كل ليلة لم تصبه فاقه قال احمد بن حنبل هذا حديث منكر وشجاع والسري لا أعرفهما

அஹ்மது பின் ஹம்பல் அவர்கள் இந்த ஹதீஸ் மறுக்கப்பட வேண்டியது என்றும் இதில் இடம்பெறும் அறிவிப்பாளர் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்பகத்தன்மை தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்கள். இதை இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தமது நூலில் எடுத்தெழுதியுள்ளார்கள்.

நூல் : அல்இலலுல் முதனாஹியா

எனவே ஒவ்வொரு இரவிலும் அல்வாகிஆ அத்தியாயத்தை ஓதினால் வறுமை நீங்கும் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

வாகிஆ அத்தியாயம் திருக்குர்ஆனின் ஒரு அத்தியாயம் என்பதால் அதை நாம் எப்போது வேண்டுமானாலும் ஓதலாம். தொழுகையில் ஓதலாம். தொழுகைக்கு வெளியில் ஓதலாம், ஒரு எழுத்துக்கு பத்து நன்மைகள் கிடைக்கும்.  ஒவ்வொரு இரவிலும் ஓதினால் வறுமை நீங்கும் என்ற அடிப்படையில் ஓதுவது கூடாது.

தினமும் இரவில் ஓதுவதற்கு பல துஆக்கள் உள்ளன. அவற்றை அறிய துஆக்களின் தொகுப்பு நூலை வாசிக்கவும்