Sidebar

28
Tue, Jul

இந்தியா டுடே'யைப் பாதுகாத்த சிகரம் 15'' விருது

குஷ்பு விவகாரம் :

அறிவியல்பூர்வமான (!) சர்வே என்ற பெயரில் சமூக அவலங்களுக்கு வித்திடும் வேலையை சென்ற செப்டம்பர் 22-28-ந் தேதிய தனது இதழில் இந்தியா டுடே' செய்தது. இந்தியா டுடே'யின் வக்கிர புத்திக்கு சினிமா நடிகை குஷ்பு பலியாகி இருக்கிறார்.

அந்த இதழுக்கு அவர் அளித்த பேட்டி இந்தியப் பண்பாட்டிற்கும், தமிழ்க் கலாச்சாரத்திற்கும் சாவு மணி அடிக்கக் கூடியது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.

பெண் விடுதலை என்ற பெயரில் பெண்ணியத்திற்கே எதிராக அவர் தெரிவித்த கருத்து பூமராங்காக அவரையே திருப்பித் தாக்கி, தமிழகம் முழுவதும் அவருக்கு எதிராகப் போராட்டங்களும், கருத்துக் கணைகளும், வழக்குகளும் வெடித்து வருகின்றன.

பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்பினரும், சன் டிவியும் நடிகை குஷ்புவுக்கு எதிராகக் களமிறங்கியுள்ள வேளையில், தங்களைப் பெண்ணுரிமைப் போராளிகள், மனித உரிமைக் காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய அறிவு ஜீவிகளான (?) ஜனநாயக மாதர் சங்கத் தலைவி வாசுகி, வாஸந்தி போன்றவர்கள் குஷ்புவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளனர்.

இதே வட்டத்தைச் சேர்ந்த சிந்தனையாளர் என்ற பெயர் பெற்ற பேராசிரியர் அ. மார்க்ஸ் ஒரு படி மேலே போய், குஷ்பு இந்தியா டுடே இதழுக்குத் தெரிவித்த கருத்தின் ஒவ்வொரு வரியிலும் எனக்கு உடன்பாடு உண்டு; தேர்ந்த சமூகவியலாளரைப் போன்று அவர் கருத்துக் கூறியிருக்கிறார்'' என்று சிலாகித்துப் பேசியுள்ளார். அத்துடன் குஷ்புவின் கருத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரம் அச்சடித்தும் வெளியிட்டுள்ளார். மேலும் 1970-ல் சேலத்தில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் பெரியார் நிறைவேற்றிய ஆணாதிக்கத்திற்கு எதிரான தீர்மானத்தையும் அவர் தனது குஷ்பு ஆதரவுப் போக்கிற்கு மேற்கோள் காட்டியிருக்கிறார்.

மதுரையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான பெண் வழக்கறிஞர் ரஜினி இன்னும் ஒரு படி மேலே போய், குஷ்புவுக்கு எதிராக வழக்குப் போடத் தூண்டிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர ஒத்தக் கருத்துள்ள பெண் வழக்கறிஞர்களை அணி திரட்டி வருகிறார்.

இவ்வாறாக குஷ்புவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் இரு வேறு அணிகள் களமிறங்கி இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், சமூக அக்கறையும், நியாயமும் யார் பக்கம் உள்ளது? என்ற குழப்பம் உண்மையான சிந்தனையாளர்களுக்கும் கூட இப்போது ஏற்பட்டுள்ளது. இது பற்றி நாம் முழுமையாக அலசினால் அனைவருமே குற்றவாளிகளாகத் தான் தோன்றுவார்கள்.

இவை அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் ஒன்று உள்ளது. அது என்னவெனில் ஆணாதிக்கச் சிந்தனை.

ஆணாதிக்கத்தின் எதிர்விளைவாகத் தான் பெண்ணுரிமை இயக்கங்கள் தோன்றின. அடிப்படையில் இந்த இரண்டு சித்தாந்தங்களும் தவறானவை.

பெண்களை வெறும் போகப் பொருளாகக் கருதுவதும், அவர்களுக்கும் ஆன்மா' உண்டு; அபிலாஷைகள் உண்டு; உரிமைகள் உண்டு என்பதை ஏற்க மறுப்பதும் ஆணாதிக்கச் சிந்தனையாகும். இந்தச் சிந்தனையின் வெளிப்பாடு தான் கற்பை'யும் தனி உடமை ஆக்கியது. கற்பு' என்றால் அது பெண்கள் மட்டுமே பேணக்கூடிய கட்டாயக் கடமை. ஆண்களுக்கு அது கட்டாயமில்லை என்ற நம்பிக்கை. அதனால் தான் காப்பியங்கள் எல்லாமே கற்பையும், பெண்ணையும் மட்டுமே ஒரு சேரப் பார்க்கின்றன. கற்புக்கு இலக்கணமாக பெண்ணினம் மட்டுமே போற்றப்படுகிறது.

பெண் என்றால் அவள் கற்பைப் பேணிக் கொள்ள வேண்டும். ஆண் எப்படிப் போனாலும் பரவாயில்லை என்று கற்பு விஷயத்தில் பெண்ணுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் சமூகம், ஆண்களை அறவே கண்டு கொள்வதில்லை.

சினிமாவிலும் கூட ஆணும் பெண்ணும் சேர்ந்து படுக்கையறைக் காட்சிகளில் அல்லது நீச்சல் குளக் காட்சிகளில் அரை நிர்வாணமாகப் பின்னிப் பிணையும் போது, ஆணை விட, பெண் (நடிகை) தான் கேவலமாகப் பார்க்கப்படுகிறாள். ஒரு பெண் இப்படி மோசமாக நடிக்கும் போது (லட்சக்கணக்கானோர் பார்க்கும் வகையில்) அவள் எப்படி உத்தமியாக இருப்பாள்? அவள் நிச்சயம் விபச்சாரியாகத் தான் இருக்க முடியும்'' என்று நல்ல குடும்பத்துப் பெண்கள் கூட விமர்சிக்கிறார்கள்.

அதே சமயம் அவளுடன் நெருங்கி அவளை விடக் குறைவான (ஒரே ஒரு ஒட்டு ஜட்டியுடன்) ஆடையுடன் நடிக்கும் நடிகன் இப்படி விமர்சிக்கப்படுவதில்லை. அதற்குக் காரணம் கற்பு, மானம் இவையெல்லாம் பெண்ணிற்கு மட்டுமே சொந்தம் என்ற தவறான புரிதலே. இது ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடே!

ஆனால், உண்மையில் கற்பு, மானம் என்பதெல்லாம் இரு பாலருக்கும் இருக்க வேண்டிய பொதுவான அம்சம். இது சமூகத்தில் மறக்கடிக்கப்பட்டு வருகிறது. தனக்கு வரவேண்டிய மனைவி கன்னித்தன்மையுடன் - கற்பு நெறியுடையவளாக இருக்க வேண்டும் என்று தான் ஒரு ஆண் விரும்புவான். இதே விருப்பம் பெண்ணுக்கும் இருக்கும். அவளது இந்த விருப்பம் தவறு என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

அதே போல் மணமுடித்த பிறகும் இரு பாலருக்கும் இந்த எண்ணம் இருக்கும். இதற்கு மாற்றமாக இருவரோ அல்லது ஒருவரோ தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கும் போது பிரச்சனைகள் வெடிக்கின்றன. இந்த விஷயத்தில் பெண் மட்டும் தவறிழைக்கும் போது ஆண் வர்க்கம் கொதித்தெழுகிறது. இது தான் ஆணாதிக்கம்.

ஆக, கற்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான ஒன்று என்ற கருத்து ஏற்கப்படாமல் போவதால் தான் இத்தகைய ஆணாதிக்கப் போக்கிற்கு எதிராகப் பெண்ணுரிமை இயக்கங்கள் போர்க்கொடி தூக்குகின்றன.

ஒரு தவறான போக்கிற்கு எதிராகத் தோன்றுகின்ற பெண்ணுரிமை சிந்தனை சரியான கோணத்தில் இருக்கின்றதா? என்றால், நிச்சயமாக இல்லை! என்று தான் சொல்ல வேண்டும்.

அதற்கு உதாரணம் தான் குஷ்பு போன்றவர்களின் குருட்டுத் தனமான கருத்துக்களும் அதை ஆதரிக்கும் பெண்ணுரிமைப் போராளி(?)களின் நடவடிக்கைகளும். ஒரு தவறுக்கு மற்றொரு தவறு ஒரு போதும் பரிகாரமாக முடியாது.

ஆண்கள் தங்களின் கற்பைப் பற்றி கவலைப்படுவதில்லை என்பதற்காக - அவர்கள் ஒழுக்கச் சீர்கேட்டில் வீழ்ந்து கிடக்கிறார்கள் என்பதற்காக பெண்களும் அதே வழியில் பயணிக்க வேண்டும் என்று சொல்வதும், அதை ஆதரிப்பதும் கொள்ளிக் கட்டையை எடுத்து தலையில் சொரிவது போன்றதாகும்.

இன்றைய சமூக அமைப்பில் ஒழுக்கச் சீர்கேட்டில் மூழ்கிக் கிடக்கும் ஒருவனுக்கு, ஒழுக்கம் மிக்க மனைவி அமைந்து விடுகிறாள். ஆனால், ஒழுக்கம் மிக்க ஒரு பெண்ணுக்கு, ஒழுக்கங்கெட்ட கணவன் கூட கிடைப்பது சிரமமாக உள்ளது.

குஷ்புவுக்கு வேண்டுமானால் சுந்தர். சி. கணவனாகக் கிடைத்திருக்கலாம். அல்லது சினிமா என்னும் வானில் நட்சத்திரங்களாக (போலியாக) ஜொலிக்கக் கூடியவர்களுக்கு சில தறுதலைகள் கிடைத்து விடலாம். ஆனால் சராசரி வாழ்க்கையில் இது சாத்தியமா? என்பதைச் சிந்தனையாளர்களான(?) வாசுகியும், வாஸந்தியும், ரஜினி (வழக்கறிஞர்)யும், அ. மார்க்சும் இன்னும் இவர்களைப் போன்று இந்தக் கருத்தை ஆமோதிப்பவர்களும் சிந்திக்க வேண்டும்.

இவர்கள் தங்கள் மகள்களைக் குஷ்பு சொன்ன ஆலோசனையின் படி வாழ அனுமதிப்பார்களா? அல்லது இவர்களின் மகன்களுக்கு இத்தகைய ஒழுக்கங்கெட்டவர்களை மனைவியாக்க சம்மதிப்பார்களா? என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

ஆக, இந்தப் பிரச்சனையின் அடிப்படை ஆணாதிக்கச் சிந்தனையிலிருந்து தோன்றுகிறது. இது முதல் தவறு. ஆணாதிக்கத்தின் தவறான சிந்தனைக்கு எதிராக அதே பாணியில் பெண்கள் தவறிழைப்பது என்பது இரண்டாவது தவறு. மூன்றாவதாக இப்போது இந்த ஒழுக்கம் பற்றிய சர்ச்சை கிளம்புவதற்கு முக்கியக் காரணமான இந்தியா டுடேயின் வக்கிரம்.

பத்திரிகைத் துறை என்பது ஒரு புனிதமானது. இந்திய ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களில் அது ஒன்று. சமூகப் பொறுப்புமிக்க துறையும் கூட அது. வாளின் முனையை விட பேனாவின் முனை வலிமையானது'' என்றெல்லாம் பத்திரிகைத் துறையைப் பற்றி சிலாகித்துச் சொல்லப்படுகிறது. அத்தகைய பத்திரிகைகளில் இந்தியா டுடே' தனது சர்வேக்கு எடுத்துக் கொண்ட தலைப்பு கொஞ்சமும் சமூக அக்கறை கொண்டதல்ல.

எதிர்காலத் தலைமுறையினருக்கும், நிகழ்கால இளைய சமுதாயத்திற்கும் அறிவு, ஆற்றல், சமூகப் பொறுப்பு, வாழ்க்கையில் முன்னேற்றம் போன்ற ஆக்கப்பூர்வமான வழிகாட்டல்களுக்கு தனது ஆற்றலை வெளிப்படுத்தக் கடமைப்பட்டுள்ள பத்திரிகை - அதற்கு நேர்மாற்றமாக நிகழ்கால இளைய சமுதாயத்தையும், எதிர்கால சந்ததிகளையும் ஒழுக்கச் சீர்கேட்டில் வீழச் செய்வதற்கான கருப்பொருளைக் கொண்டு தனது சர்வேயைத் துவக்கி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குஷ்பு சம்பந்தமான தற்போதைய சர்ச்சைக்கு மூல காரணம் இந்தியா டுடே' தான்.

இந்தியப் பண்பாடு, நாகரீகம், ஒழுக்க மாண்புகள் இவற்றை அழிப்பதற்காக இந்தியா டுடே' வைத்த நெருப்புக்கு குஷ்பு எண்ணெய் ஊற்றி இருக்கிறார். அவரை ஆதரிப்போர் அந்தத் தீயை விசிறி விட்டு பரவச் செய்கின்றனர்.

அடுத்து நான்காவதாக மற்றொரு சாராரின் தவறையும் நாம் இங்கு சுட்டிக்காட்டியாக வேண்டும். அவர்கள் யாரென்றால் குஷ்புவுக்கு எதிராகக் களம் இறங்கி இருப்பவர்கள்.

குஷ்பு தெரிவித்த கருத்துக்கள் தமிழ்ப் பெண்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த பெண்ணினத்திற்குமே! ஏன்? மனித குலத்திற்கே எதிரான கருத்து என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.

குஷ்புவுக்கு எதிராகத் துடைப்பம், செருப்பு சகிதமாகப் போராட்டத்தில் இறங்கியதும், அவருக்கு எதிராக வழக்குத் தொடர நீதிமன்றப் படிகளில் ஏறியதும் சரியான நடவடிக்கை தான். ஆனால், நம்முடைய கேள்வி என்னவென்றால், இந்த அசிங்கத்தில் அங்கம் வகிப்பவர்களில் முக்கியமானவர்களை விட்டுவிட்டு அதில் ஒரு அங்கமான குஷ்புவை மட்டும் குறி வைப்பது சரியான நடவடிக்கை தானா?

உண்மையிலேயே கலாச்சாரச் சீரழிவுக்கு எதிராக இவர்கள் களமிறங்கி இருக்கிறார்கள் என்றால் அந்தச் சீரழிவிற்கு மூல காரணமான - முக்கிய கர்த்தாவான இந்தியா டுடே'யை ஏன் இவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டார்கள்? இவர்களின் துடைப்பக் கட்டைகள், காலணிகள், கையிலேந்தப்பட்ட ஊர்வலமும், வழக்குகளும் இந்தியா டுடே' அலுவலகத்தை நோக்காமல் போனதற்கு என்ன காரணம்? குறைந்த பட்சம் தங்களது கண்டனத்தைக் கூட தெரிவிக்காமல் போனதற்கு என்ன காரணம்? ஒரேயொரு காரணம் தான். அது சிகரம் 15'' தான்.

போராட்டத்தில் முன்னணி வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சின்ன ஐயா அன்புமணியும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளரான திருமாவளவனும், சன் டிவியின் தயாநிதி மாறனும் இந்தியா டுடே'யை கண்டுகொள்ளாமல் பாதுகாத்தது சிகரம் 15' என்னும் விருது கேடயம்தான் தடுத்து வருகிறது என்ற நடுநிலையாளர்களின் கூற்றைப் புறக்கணிக்க முடியாது.

எனவே, இது போன்ற சர்ச்சைகள் மீண்டும் தொடராமல் இருக்க வேண்டுமென்றால் நாம் மேலே சுட்டிக்காட்டிய தவறுகளுக்கு சமூக அக்கறையுடையவர்கள் பரிகாரம் காண வேண்டும். இல்லையென்றால் கலாச்சாரச் சீரழிவை யாராலும் தடுக்க முடியாது.

தமது கற்பைக் காத்துக்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.''

திருக்குர்ஆன் 33 : 35

குறிப்பு: இந்தியா டுடே பத்திரிகை சில பிரமுகர்களைத் தேர்வு செய்து சிகரம் 15 என்ற பெயரில் விருது வழங்கி கவுரவித்தது. அது தான் சிகரம் 16 என்று தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விருது பெற்றவர்கள் தான் குஷ்பூவை எதிர்த்து இந்தியாடுடே யைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.

உணர்வு 10:5

27.02.2012. 12:45 PM

எல்லாப் பெண்களும் ஒழுக்கம் கெட்டவர்கள் தானே?

உலகில் உள்ள எல்லாப் பெண்களும் திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொண்டவர்கள் தான். இப்படியிருக்க இவர்களுடன் எப்படி வாழ்வது? உடற்கூறு அடிப்படையே இதை உறுதி செய்கிறதே?

ஹஜ்ஜூல் அக்பர்

இது போல் நீங்கள் உண்மையாகவே நினைத்துக் கொண்டு கேள்வி கேட்டால் உங்களுக்கு மனநோய் குறித்த சிகிச்சை அவசியமாகும்.

தக்க ஆதாரமில்லாமல் கற்பனை செய்து அதை உண்மை என்று நம்புவது தான் மனநோயின் முக்கிய விளைவாகும்.

ஒவ்வொரு பெண்ணாக சோதனை நடத்தி அவர்கள் திருமணத்துக்கு முன்பு கற்பிழந்துள்ளார்கள் என்று முடிவு செய்திருந்தால் இப்படிக் கூற முடியும்.

அல்லது ஒவ்வொரு பெண்ணும் இன்னொரு ஆணுடன் தொடர்பு கொண்டு இருந்ததைக் கண்ணால் பார்த்து விட்டு இப்படிக் கூறலாம்.

இவ்விரண்டும் சாத்தியமற்றதாகும். பெண்களின் உடற்கூறு அடிப்படையில் அவர்களின் உடல் ஆண் துணையைத் தேடுவார்கள் என்று நீங்கள் கருதி இப்படிக் கூறினால் ஆண்களுக்கும் இது பொருந்தும்.

நீங்கள் உட்பட எல்லா ஆண்களும் பெண்ணிடம் விபச்சாரம் செய்தவர்கள் என்றும் நீங்கள் சொல்ல வேண்டும். அப்படி நீங்கள் சொன்னால் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும் தகுதி அற்றவராகிறீர். உங்களுக்குப் பொருத்தமாகத் தான் உங்களுக்கு மனைவி அமைந்துள்ளார் என்று எடுத்துக் கொள்வது தான் உங்கள் நிலைபாட்டுக்கு ஏற்ற முடிவாகும்.

நீங்களே ஒழுக்கம் கெட்டவர் என ஆகும் போது ஒழுக்கம் கெட்ட பெண்ணை மணப்பதுதான் உங்களுக்கு பொருத்தமாகும். நல்ல பெண்ணை எப்படி மணப்பது என்று கேள்வி கேட்க முடியாது?

மேலும் நீங்கள் கூறும் இந்தக் குற்றச்சாட்டு குா்ஆன் மற்றும் நபிவழிக்கு எதிரானதாகும். ஏனெனில் பெண்களில் கற்பொழுக்கமுள்ள நல்ல பெண்களும் இருக்கிறார்கள் என்றே குா்ஆனும் நபிமொழிகளும் எடுத்துரைக்கின்றன.

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது வீண்பழி சுமத்துவோருக்கு எண்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என குா்ஆன் கூறுவதன் மூலம் நல்ல பெண்களும் உலகில் உள்ளனர் என்று குா்ஆன் தெளிவாகக் கூறுகிறது.

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.

திருக்குா்ஆன் 24:4

நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.

திருக்குா்ஆன் 24:23

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). இவர்கள் கூறுவதை விட்டும் அவர்கள் சம்பந்தமில்லாதவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.

திருக்குர்ஆன் 24:26

உலகில் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் திருமணம் செய்யப்படுகிறார்கள் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்கப் பற்றுக்காகவும் பெண்கள் திருமணம் முடிக்கப்படுகிறார்கள் என்று கூறுவதிலிருந்து நல்லொழுக்கமுள்ள மார்க்கப்பற்று நிறைந்த பெண்களும் உலகில் உள்ளனர் என்பது உறுதியாகிறது.

5090 حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا يَحْيَى ، عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ : حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ : لِمَالِهَا، وَلِحَسَبِهَا، وَجَمَالِهَا، وَلِدِينِهَا، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ ".

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:

  1. அவளது செல்வத்திற்காக.
  2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
  3. அவளது அழகிற்காக.
  4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த் திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 5090

இவ்வுலகில் பயனளிக்கும் செல்வங்கள் ஏராளம் இருந்தாலும் நல்லொழுக்கமுள்ள பெண் தான் மிக மேலான செல்வம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதும் இந்தக் கருத்தை வலுப்படுத்துகிறது.

1467 ( 64 ) حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِيُّ ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ ، حَدَّثَنَا حَيْوَةُ ، أَخْبَرَنِي شُرَحْبِيلُ بْنُ شَرِيكٍ ، أَنَّهُ سَمِعَ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " الدُّنْيَا مَتَاعٌ، وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا ؛ الْمَرْأَةُ الصَّالِحَةُ ".

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல் : முஸ்லிம்

உலகில் நல்ல பெண்கள் கெட்ட பெண்கள் என இரு வகையினரும் கலந்தே இருக்கின்றனர் என்பதே சரியான குா்ஆன் மற்றும் நபிவழிக்கு ஏற்ற கருத்தாகும்.

உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் ஷைத்தானுடைய ஊசலாட்டத்தால் ஏற்பட்ட வீணான சந்தேகமாகும். இது உங்கள் பிறப்பிலேயே சந்தேகத்தை உண்டாக்கும்.

இந்த தீய சிந்தனையிலிருந்து விலக ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் கோருங்கள். இல்லையேல் விளைவுகள் விபரீதமாகும்.

22.08.2013. 13:10 PM

அஸ்மா (ரலி) அவர்களை நபிகளார் தமது ஒட்டகத்தில் ஏறி கொள்ள செய்தது சரியா?

11/05/2020 ரமலான் மாத வாட்ஸ் அப் கேள்வி பதில்

ஆபாசப் படத்தால் சீரழியும் குடும்ப வாழ்க்கை

இன்டர்நெட் ஆபாசங்களால் சிறார்கள் சீரழிவது போதாதென்று பலரது குடும்ப வாழ்வும் சீரழிந்து வருகின்றது.

ஆபாசப் படங்களைப் பார்ப்போரால் படுக்கையறையில் சிறப்பாகச் செயல்பட முடியாது என்று ஒரு ஆய்வு எச்சரிக்கிறது. ஆண்கள் தான் பெருமளவில் ஆபாசப் படங்களை அதிகம் பார்க்கின்றனர். பெண்களிலும் ஆபாசப் படம் பார்ப்போர் உண்டு. அவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.

இப்படி ஆபாசப் படம் பார்க்கும், குறிப்பாக இன்டர்நெட்டில் ஆபாசப் படங்களை அடிக்கடி பார்ப்போரால், படுக்கை அறையில் நிஜமான உடலுறவு நடவடிக்கையில் முழுமையாக செயல்பட முடியாமல் போகின்றது என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர். ஆபாசப் படங்களை பார்ப்போர் பல பிரச்சினைகளுக்கு ஆளாவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

வீடியோவில் ஆபாசப் படங்களை பார்ப்பதில் இருக்கும் ஆர்வத்தில் பாதியளவு கூட ஆண்களால் படுக்கை அறையில் காட்ட முடிவதில்லை.

இதற்கு முக்கியக் காரணம், மூளையின் உற்சாக மையத்தை தூண்டி விடக் கூடிய ஹார்மோனான, டோபமைன் அபரிமிதமான அளவில் சுரப்பதே ஆகும் என்று கண்டுபிடித்துள்ளனர். அடிக்கடி ஆபாசப் படங்களைப் பார்த்து உணர்ச்சி வசப்படுவோருக்கு டோபமைன் அதிக அளவில் சுரந்து, சுரந்து கடைசியில், உண்மையான இன்பத்தை அனுபவிக்க நேரிடும்போது அதனால் பலன் இல்லாமல் போய் விடுகிறது என்று அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

இப்படி ஆபாசப் படம் பார்த்து உண்மையான உற்சாகத்தையும், இன்பத்தையும் தொலைத்து நிற்கும் பலரும் தற்போது இது குறித்த கவுன்சிலிங்கிற்கு அதிக அளவில் வர ஆரம்பித்துள்ளனர் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து செக்ஸாலஜிஸ்ட் ஒருவர் கூறுகையில், ஆபாசப் படம் பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி தான் உள்ளது. இன்டர்நெட் மூலம் ஆபாசப் படம் பார்ப்போர் பெருமளவில் பெருகி விட்டனர். இதனால் உண்மையான செக்ஸ் நடவடிக்கைகளில் இவர்களால் ஈடுபடுவதில் பல சிரமங்களைச் சந்திக்கின்றனர்.

அதிக அளவிலான செக்ஸ் நடவடிக்கைகளைப் பார்த்துப் பார்த்து இவர்கள் மன ரீதியாக களைத்துப் போய் விடுகின்றனர். அதில் ஒரு சலிப்பும், அலுப்பும் வந்து விடுகிறது. டோபமைன் தான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்.

இப்படிப்பட்ட செக்ஸ் பட அடிமைகள், படிப்படியாக ஆபாசப் படம் பார்ப்பதை நிறுத்திக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் இல்லற வாழ்வை இழந்து தவிக்க நேரிடும் என்று அவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

மேற்கண்ட ஆய்வு முடிவை உண்மைப்படுத்தும் விதமான ஒரு வழக்கு சென்ற மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்தது. அந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விபரம் பின்வருமாறு :

ஆபாசப் படம் பார்த்ததால் வந்த கேடு!

எழும்பூரைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியர் ஒருவருக்கு 25 வயதுப் பெண்ணுடன் திருமணம் செய்துவிக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு இந்தத் திருமணம் நடைபெற்றது.

2 ஆண்டுகள் குடும்பம் நடத்திய பிறகு 2009 ஆம் ஆண்டு கணவர் சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் தன் மனைவிக்கு உடலுறவில் நாட்டம் இல்லை; எனவே எனக்கு அவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று மனு செய்திருந்தார்.

ஆனால் மனைவியும் ஒரு விவாகரத்து மனு செய்தார். அதில் அவர், தன் கணவர் ஆண்மையற்றவர்; தங்கள் இருவருக்கும் உடலுறவே நடக்கவில்லை; எனவே தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் தனியாக மனுச் செய்தார்.

பிறகு நீதிபதி தம்பதியினரை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இருவரும் உறவு வைத்துக் கொள்ள உடல் ரீதியாக எந்த விதத் தடையுமில்லை என்று மருத்துவர்கள் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதைத் தொடர்ந்து கவுன்சிலிங் முறையில் பிரச்சனையை அறிய தம்பதியினர் உளவியல் நிபுணரிடம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

உளவியல் நிபுணர்கள் இருவரையும் தனித்தனியாக, சேர்ந்து என்று பலநாட்கள் கவுன்சிலிங் நடத்தியதில் தெரியவந்த உண்மை வேறுவிதமாக இருந்துள்ளது.

கணவர் இயற்கைக்கு மாறாக நடந்துகொள்ள வற்புறுத்துவதாகவும், ஆபாச வீடியோக்களை தினமும் பார்ப்பதாகவும் மனைவி கூறினார்.

இதனையடுத்து கணவரும் தனது ஆபாசப் பட ஆர்வத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் தன் மனைவியிடம் இயற்கையான முறையில் உறவுகொள்ள நாட்டமில்லை என்றும், தன்னால் உறவு கொள்ள இயலவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார் கணவர்.

இதையே உளவியல் நிபுணர்கள் அறிக்கையாகத் தயாரித்து, இப்படி ஒருவர் ஆபாசப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தால் இயற்கையான உறவில் அவர்களுக்கு நாட்டமில்லாது போய்விடும்; இந்தக் கேசிலும் இதுதான் நிலைமை என்று அறிக்கை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து கணவர் தொடர்ந்த விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்த குடும்ப நல கோர்ட், மனைவியின் விவாகரத்து மனுவை ஏற்று விவாகரத்து வழங்கியது.

ஆபாசப் படங்களைப் பார்ப்பதால் இத்தகைய விளைவுகள் ஏற்பட்டு கடைசியில் உடலுறவிலேயே நாட்டமில்லாத அளவிற்குச் சென்று ஆண்மையை இழந்து நிற்கும் இந்த இழிநிலை தேவைதானா என்பதை ஆபாசப் படம் பார்ப்போர் சிந்திக்க வேண்டும்.

இப்படி ஆண்மையற்ற கணவன்கள் அதிகரிக்கும்போது அவர்களது மனைவிமார்கள் தங்களுக்கு வேறு வடிகாலின்றி விபச்சாரத்தின் பக்கம் தள்ளப்படுகின்றனர். விபச்சாரத்தின் பக்கம் செல்ல வழியில்லாத பெண்கள் தங்களது கணவனின் கதையை முடிப்பதற்கும் இதுதான் காரணமாக உள்ளது. இதனால் விபச்சாரமும், கொலைகளும் பெருகுகின்றன.

கள்ளக்காதல்களும், அதனால் ஏற்படும் கொலைகளுக்கும் இந்த ஆபாசப் படங்கள்தான் காரணமாக உள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆபாசப் படம் பார்த்தால் மட்டுமல்ல; அறைகுறை ஆடை அணிந்த பெண்களைப் பார்ப்பதும் ஆபத்து!

ஆபாசப் படங்களை பார்ப்பது மட்டும் தான் ஆண்மைக் குறைவுக்கு காரணம் என்று நாம் விளங்கிக் கொள்ளக் கூடாது. அறைகுறையாக கவர்ச்சியாக ஆடை அணிந்து செல்லும் பெண்களைப் பார்ப்பதும் கூட ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டு உடலுறவில் நாட்டமில்லாமல் செய்துவிடும் என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது.

அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்தப் புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.

இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம்.

அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு.

முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை. இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்தக் குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது.

உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.

அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும், ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்தத் தொடர்பு தெரிய வந்திருக்கிறது.

தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் உடைகள் மறைக்காத உடலின் பாகங்களால் ஆண்களின் தூண்டப்படும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக் குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது.

முக்கால்வாசி ஆண்மைக் குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.

நாங்கள் ஆபாச ஆடை அணிந்தால் உங்களுக்கென்ன? என்று வெட்டி நியாயம் பேசும் பெண்கள் மேற்கண்ட செய்தியைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிற பெண்கள் அணிந்து செல்லும் ஆபாச ஆடைகளையும், கவர்ச்சிக் காட்சிகளையும் உங்கள் வீட்டு ஆண்கள் உற்று நோக்கினால் அதனால் ஆண்மைக் குறைவு ஏற்பட்டு, இல்லற வாழ்வை இழந்து அவதிப்பட்டு, அதனால் பாதிக்கப்படுபவர்கள் வெட்டி நியாயம் பேசும் இந்தப் பெண்கள் தான் என்பதை இவர்களுக்கு நினைவுபடுத்திக் கொள்கின்றோம்.

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர் ஆன் 24 : 30

செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.

அல்குர் ஆன் 17 : 36

ஆபாச இணையதளங்கள் தடை செய்யப்படுமா? :

- சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை!

ஆபாச இணையதளங்கள் அதிகரித்துள்ளது குறித்து, கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட், அவற்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கமலேஷ் வஸ்வானி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், பொதுநலன் கோரும் மனு, தாக்கல் செய்திருந்தார். அதில், ஆபாச இணையதளங்கள் ஏராளமாக பெருகியுள்ளன. அவற்றைத் தடை செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.

அந்த மனு, தலைமை நீதிபதி, அல்டமாஸ் கபீர் தலைமையிலான, டிவிஷன் பெஞ்ச்' முன், 15.04.13 அன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கருத்தை ஏற்றுக் கொண்டனர்.

இணையதளங்களில், ஆபாச இணையதளங்கள் ஏராளமாக உள்ளன; அவற்றில், குழந்தைகளை நிர்வாணமாக காட்டும் இணையதளங்கள் பெருகியுள்ளன; அத்தகைய இணைய தளங்களைப் பார்க்கும் சிறுவர் சிறுமியர், அது போன்ற குற்றங்களில் ஈடுபட, வாய்ப்பு இருக்கிறது' என, கவலை தெரிவித்தனர்.

மேலும், ஆபாச இணையதளங்களைக் கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்ட நீதிபதிகள், அவற்றை முழுவதும் தடை செய்ய என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை விளக்கம் அளிக்க வேண்டும்' என்றும் தெரிவித்தனர்.

மத்திய அரசாங்கம் நினைத்தால் ஆபாச இணையதளங்களை ஒரே நிமிடத்தில் தடை செய்துவிடலாம். ஆபாச இணையதளங்களால் ஏற்படும் கேடுகளை மத்திய அரசாங்கம் அறியாமலில்லை. மத்திய அரசாங்கத்தின் ஆசியோடுதான் அவை அரங்கேறி வருகின்றது என்பதுதான் உண்மை.

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இவைகளை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்பதுதான் ஒழுக்க சீலர்களின் எதிர்ப்பார்ப்பு.

ஆபாசப்படம் பார்ப்போருக்கு மன அழுத்தம் :

லண்டன் ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

பிரிட்டன் ஆண்கள் அதிக அளவில் ஆபாச படங்களை பார்ப்பதால், அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, பணியிடங்கள், கணவன்-மனைவி உறவு உள்ளிட்டவற்றில் பிரச்னைகள் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அண்மையில், பிரிட்டனில் ஆபாசப்படம் பார்ப்பவர்கள் குறித்து, ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், 18 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிட்டன் இளைஞர்களில் நான்கில் ஒரு பங்கு இளைஞர்கள் ஆபாசப்படம் பார்க்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது. இதனால் அதிக நேரம் தொடர்ந்து ஆபாசப்படம் பார்ப்பதால், மன அழுத்தம் ஏற்பட்டு வேலையில் கவனமின்மை, உறவுகள், தாம்பத்ய வாழ்க்கை போன்றவற்றில் பிரச்னை எழுவது தெரியவந்துள்ளது.

23.04.2013. 2:02 AM

Page 2 of 2