Sidebar

30
Mon, Jun
0 New Articles

தூக்கம் உளூவை முறிக்குமா?

உளூ, குளிப்பு, தூய்மை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

தூக்கம் உளூவை முறிக்குமா?

தூக்கம் உளூவை முறிக்குமா?

அஷ்ரப் அலி

பதில்

தூங்குவதால் உளூ நீங்குமா? என்பதில் அறிஞர்களிடம் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

சில ஹதீஸ்கள் தூங்கினால் உளூ நீங்கி விடும் என்றும், சில ஹதீஸ்கள் நீங்காது என்றும் தெரிவிக்கின்றன.

سنن النسائي

127 – أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ الرُّهَاوِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ وَمَالِكُ بْنُ مِغْوَلٍ وَزُهَيْرٌ وَأَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ وَسُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ قَالَ: سَأَلْتُ صَفْوَانَ بْنَ عَسَّالٍ عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ فَقَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَأْمُرُنَا إِذَا كُنَّا مُسَافِرِينَ أَنْ نَمْسَحَ عَلَى خِفَافِنَا وَلَا نَنْزِعَهَا ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ غَائِطٍ وَبَوْلٍ وَنَوْمٍ إِلَّا مِنْ جَنَابَةٍ»

காலுறை அணிந்தவர்கள் மலஜலம் கழித்தாலோ, தூங்கினாலோ அவர்கள் மீண்டும் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்கள்: நஸாயீ 127, அஹ்மத் 17396, 17401, திர்மிதீ 89, 3458, 3459, இப்னுமாஜா 471

மலஜலம் கழிப்பது எவ்வாறு உளூவை நீக்குமோ அவ்வாறே தூக்கமும் உளூவை நீக்கும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. இது ஆழ்ந்த தூக்கத்தையே குறிக்கும். அரைகுறை தூக்கத்தைக் குறிக்காது என்பதை பின்வரும் ஹதீஸ்களில் இருந்து அறியலாம். ந்துள்ளது.

سنن أبي داود

200 - حَدَّثَنَا شَاذُّ بْنُ فَيَّاضٍ، حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: «كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْتَظِرُونَ الْعِشَاءَ الْآخِرَةَ حَتَّى تَخْفِقَ رُءُوسُهُمْ، ثُمَّ يُصَلُّونَ وَلَا يَتَوَضَّئُونَ»، قَالَ أَبُو دَاوُدَ: زَادَ فِيهِ شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ: كُنَّا نَخْفِقُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَوَاهُ ابْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ بِلَفْظٍ آخَرَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நபித்தோழர்கள் இஷா தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். தூக்கத்தால் தலை சாய்ந்து விடும். ஆனால் உளூ செய்யாமல் தொழுவார்கள்.

அறிவிப்பவர் :அனஸ் (ரலி)

நூல் : அபூதாவூத்

ஆழ்ந்த தூக்கம் தான் உளூவை முறிக்கும். அரைகுறை தூக்கம் உளுவை முறிக்காது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். 

மேலும் தொழுகையில் இருக்கும் போது அரைகுறை தூக்கம் வந்தால் தொழுகையும் உளூவும் முறியாது என்பதை பின்வரும் ஹதீஸ் மூலம் அறிஅலாம்

 مسلم 

1828 – وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا ابْنُ أَبِى فُدَيْكٍ أَخْبَرَنَا الضَّحَّاكُ عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ بِتُّ لَيْلَةً عِنْدَ خَالَتِى مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ فَقُلْتُ لَهَا إِذَا قَامَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَأَيْقِظِينِى. فَقَامَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَقُمْتُ إِلَى جَنْبِهِ الأَيْسَرِ فَأَخَذَ بِيَدِى فَجَعَلَنِى مِنْ شِقِّهِ الأَيْمَنِ فَجَعَلْتُ إِذَا أَغْفَيْتُ يَأْخُذُ بِشَحْمَةِ أُذُنِى – قَالَ – فَصَلَّى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً ثُمَّ احْتَبَى حَتَّى إِنِّى لأَسْمَعُ نَفَسَهُ رَاقِدًا فَلَمَّا تَبَيَّنَ لَهُ الْفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ.

எனது சிறிய தாயாரான (நபிகள் நாயகத்தின் மனைவி) மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஓர் இரவு நான் தங்கினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இடது புறத்தில் நான் நின்று கொண்டேன். என் கையைப் பிடித்து தமது வலப்புறத்தில் என்னை நிறுத்தினார்கள். நான் தூங்கி வழியும் போது என் காது சோனையைப் பிடிப்பார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1828

இந்த ஹதீஸில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நின்று கொண்டு தொழுகையில் தூங்கியதாகக் கூறப்படுகிறது. நபிகள் நாயகத்தின் முன்னிலையில் அவர்களுக்குத் தெரியும் விதத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) தூங்கியுள்ளார்கள். இது ஆழ்ந்த தூக்கம் அல்ல. இந்தத் தூக்கத்தால் உளூவும் நீங்காது. தொழுகையும் முறியாது

தொழுது கொண்டு இருக்கும் போது ஆழ்ந்த தூக்கம் வருவதை நாம் உணர்ந்தால் உடனே தொழுகையை முறித்து விட்டு நன்றாகத் தூங்கி விட்டு பிறகு தொழ வேண்டும். இதை பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம்

صحيح البخاري 
212 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا نَعَسَ أَحَدُكُمْ وَهُوَ يُصَلِّي فَلْيَرْقُدْ، حَتَّى يَذْهَبَ عَنْهُ النَّوْمُ، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا صَلَّى وَهُوَ نَاعِسٌ، لاَ يَدْرِي لَعَلَّهُ يَسْتَغْفِرُ فَيَسُبُّ نَفْسَهُ»

212. உங்களில் எவரேனும் தொழுது கொண்டிருக்கும் போது கண் அயர்ந்தால் அவரை விட்டும் உறக்கக் கலக்கம் விலகும் வரை அவர் உறங்கட்டும்! ஏனெனில், உங்களில் ஒருவர் உறங்கியவாறே தொழுவாரானால் அவர் தம்மையும் அறியாமல் பாவ மன்னிப்புக் கோர அது அவருக்கு எதிரான பிரார்த்தனையாக ஆகிவிடலாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் புகாரி 212, 213

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account