Sidebar

04
Wed, Jun
12 New Articles

இக்கருத்தை இதற்கு முன் யாரும் சொன்னதுண்டா என்ற வாதம்

மத்ஹப் - தக்லீத் - தரீக்கா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

இக்கருத்தை இதற்கு முன் யாரும் சொன்னதுண்டா என்ற வாதம்

ஒரு செல்வத்துக்கு உரிய ஜகாத்தை ஒருவர் கொடுத்து விட்டால் அதன் பின்னர் அதே செல்வத்துக்காக மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பது கடமையில்லை. ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்டவுடன் அப்பொருளுக்கான ஜகாத் கடமை நீங்கி விடுகிறது என்ற கருத்தை நாம் முன் வைக்கிறோம்.

ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத் கொடுத்தாலும் அதே பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் மிக மிக அதிகமான அறிஞர்களும் மக்களும் உள்ளனர்.

நமது கருத்தை அதிகமான மக்கள் எதிர்க்கிறார்கள் என்றாலும் அவர்களின் எதிர்ப்பில் ஏற்கத்தக்க ஆதாரங்கள் இல்லை. நியாயமான வாதங்கள் இல்லை.

இதைப் பற்றி நாம் விரிவாக அறிந்து கொள்வோம்.

நமது இக்கருத்தை எதிர்ப்பவர்கள் முக்கியமான வைக்கும் வாதம் என்னவென்றால் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவை இல்லை என்ற கருத்து இதற்கு முன் யாராலும் சொல்லப்படாத புது கருத்தாக உள்ளது. உலகில் ஒருவரும் சொல்லாத கருத்தாக உள்ளதால் இது தவறான கருத்தாகும் என்ற வாதத்தை வைக்கிறார்கள்.

இந்தக் கருத்தை இதற்கு முன் ஒருவரும் சொன்னதில்லை; இப்போது தான் முதன் முதலாகச் சொல்லப்படுகிறது என்று மக்கள் கருதுவதால் இதைப் பாரதூரமான விஷயமாகக் கருதுகிறார்கள்.

இதற்கு முன்னால் யாராவது சொன்னதுண்டா என்ற கேள்விக்கு இஸ்லாத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை.

கடந்த காலத்தில் யாராவது சொன்னார்களா என்பதை வைத்தோ, சொல்லவில்லை என்பதை வைத்தோ இஸ்லாத்தின் சட்டங்களை முடிவு செய்ய முடியாது.

அல்லாஹ் கூறியுள்ளானா? அல்லாஹ்வின் தூதர் கூறியுள்ளார்களா? என்பதை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மறுபடியும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ கூறப்படவில்லை. இதுவே நமக்குப் போதுமாகும். - இதை ஆதாரங்களுடன் பின்னர் எடுத்துக் காட்டவுள்ளோம்-

யாராவது கூறியுள்ளார்களா என்பதைக் கவனிக்கத் தேவை இல்லை என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இருந்தாலும் ஒருவருமே இப்படிச் சொல்லவில்லை என்ற வாதம் பலவீனமான நம்பிக்கை உள்ளவர்களுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் இதை முக்கிய ஆதாரம் போல் முன்வைக்கிறார்கள்.

ஆனால் இந்தக் கேள்விக்குள் ஏராளமான அபத்தங்கள் அடங்கியுள்ளன,

எந்த ஒரு விஷயத்தைக் குறித்தும் முந்தைய காலத்தில் இக்கருத்தை யாரும் சொல்லவில்லை என்று யாராலும் கூறவே முடியாது.

முந்தைய காலத்தில் வாழ்ந்த ஒவ்வொருவரின் வரலாறையும் அவர்களின் ஒவ்வொரு கருத்துக்களையும் தேடிப்பார்த்து அவர் சொன்னாரா இல்லையா என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது..

அப்படி தேடிப்பார்க்கும் போது சில அறிஞர்கள் அவர் அப்படிச் சொல்லி இருந்தது தெரிய வந்தால் அந்த அறிஞர்  சொன்னார் என்று உறுதிபடக் கூறலாம்.

எந்த அறிஞரும் இக்கருத்தைக் கூறியதாக ஆதாரம் கிடைக்காவிட்டால் அப்போது கூட எந்த அறிஞரும் இக்கருத்தைக் கூறவில்லை என்று சொல்ல முடியாது. இதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்று தான் கூறலாம்.

ஏனெனில் சில அறிஞர்கள் அக்கருத்தைக் கூறி இருந்து அது எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாததால் அது நமக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். அல்லது காலத்தால் அழிந்து போனதால் நமக்குக் கிடைக்காமல் போகலாம். எனவே ஒருவரும் குறிப்பிட்ட கருத்தைச் சொல்லவில்லை என்று கூறுவது அறிவீனமான வாதமாகும்.

உலகில் வாழ்ந்த அனைத்து அறிஞர்களின் அனைத்து கருத்துக்களையும் திரட்ட முடியுமா? எத்தனையோ அறிஞர்கள் தமது கருத்துக்களை எழுத்து வடிவமாக்காமல் சென்றுள்ளனர். எத்தனையோ அறிஞர்களின் எழுத்துக்கள் பாதுகாக்கப்படாமல அழிந்துள்ளன.

எனவே யாருமே கூறவில்லை என்ற வாதம் பொய்யை அடிப்படையாகக் கொண்டதாகும்.

யாராவது இப்படிக் கூறினார்கள் என்று ஆதாரம் கிடைக்காவிட்டால் இந்தக் கருத்தை யாரும் கூறியுள்ளார்களா என்ற தகவல் கிடைக்கவில்லை என்று தான் கூறமுடியும். இக்கருத்தை யாரேனும் கூறியும் இருக்கலாம்; கூறாமலும் இருக்கலாம் என்று தான் சொல்ல முடியும்.

ஒருவரும் கூறவே இல்லை என்று அல்லாஹ்வால் மட்டுமே சொல்ல முடியும். அவன் தான் ஒவ்வொருவரின் அனைத்துக் கருத்துக்களையும் அறிந்தவன். அல்லாஹ் மட்டுமே அறிந்துள்ள விஷயத்துக்கு உரிமை கொண்டாடும் ஆபத்தான வாதமாக இது அமைந்துள்ளது.

மேலும் இக்கேள்வியைக் கேட்பவர்கள் இதில் உண்மையாளர்களாக இல்லை. முன்னர் சொல்லப்படாத பல கருத்துக்களை பல அறிஞர்கள் பல்வேறு கால கட்டங்களில் கூறியுள்ளனர். அந்த அறிஞர்களை இவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அவர்களின் கருத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

பல அறிஞர்கள் தமக்கு முன்னர் சொல்லப்பட்ட பல கருத்துக்களை மறுத்துள்ளனர். மறுக்கப்பட்ட அந்தக் கருத்துக்களும் காலப்போக்கில் அங்கீகாரம் பெற்றுவிட்டன.

ஆனால் முன்பு இருந்த கருத்துக்கு மாற்றுக் கருத்துச் சொன்ன அறிஞர் மாற்றுக் கருத்து கூறும் காலத்தில் நாம் இருந்து கவனித்தால் அதற்கு முன் யாரும் சொல்லாத கருத்தைச் சொல்கிறார் என்று தான் அறிந்து கொள்வோம்.

மாற்றுக் கருத்து சொன்ன ஒவ்வொரு அறிஞரும் அதற்கு முன் யாரும் சொல்லாத ஒன்றைத் தான் சொல்கிறார் என்பதற்காக அறிவுடைய மக்கள் அதனைப் புறக்கணிக்கவில்லை. இதை ஏற்கத்தக்க வழிமுறையாகவும் மக்கள் கருதியதில்லை. மற்ற பல விஷயங்களில் இக்கேள்வியைக் கேட்காமல் ஏற்றுக் கொண்டு இருக்கும் மக்கள் ஜகாத் விஷயத்தில் மட்டும் தான் இக்கேள்வியைப் பெரிய ஆதாரமாகக் காண்கிறார்கள்.

ஹதீஸ் கலை விதி என்று ஒவ்வொரு ஹதீஸ் கலை மேதையும் சொன்ன எல்லா விதிகளும் அதற்கு முன் சென்ற நபித்தோழர்களால் சொல்லப்பட்டதாக இருக்கவில்லை. ஆனாலும் அது சரியானதாக இருந்ததால் சமுதாயம் ஏற்றுக் கொண்டது. ஒருவரும் சொல்லாத கருத்து என்று புறம் தள்ளவில்லை.

சொல்லும் கருத்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் அமைந்துள்ளது என்று நமது நேர்மையான பார்வைக்குத் தெரியுமானால் அதை ஏற்றுக் கொள்ளும் கடமை நமக்கு வந்து விடும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account