Sidebar

21
Sat, Sep
4 New Articles

சிக்கனமான திருமணம் குறித்த ஹதீஸ் பலவீனமானதா?

ஹதீஸ் ஆய்வு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

சிக்கனமான திருமணம் குறித்த ஹதீஸ் பலவீனமானதா?

பி. ஜைனுல் ஆபிதீன்

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழியையும் அடிக்கடி மேற்கோள் காட்டி வருகிறோம்.

இந்த ஹதீஸ் குறித்து கடந்த காலங்களில் அறிஞர்கள் செய்துள்ள விமர்சனங்களின் அடிப்படையில் தற்போது சில அறிஞர்கள், இது பலவீனமான ஹதீஸ் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

திருமணம் எளிமையாகவும், சிக்கனமாகவும் தான் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படை விஷயத்தில் அவர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆடம்பரத்தையும்,  வீண் விரயத்தையும் கண்டிக்கின்ற எண்ணற்ற சான்றுகள் உள்ளதால் அவர்களும் சிக்கனமான திருமணத்தையே வலியுறுத்துகின்றனர்.

ஆனால் மேற்கண்ட நபிமொழி பலவீனமானதாக உள்ளதால் அதை ஆதாரமாகக் காட்டக் கூடாது என்பது தான் அவர்களது விமர்சனம்.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே பரகத் நிறைந்தது என்ற நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரில் குறைபாடு உள்ளதால் இது பலவீனமான ஹதீஸாகும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

முஸ்னத் அஹ்மத், முஸ்னத் இஸ்ஹாக், முஸ்னத் தயாலிஸி ஆகிய நூல்களில் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. அந்த ஹதீஸ் இவை தான்:

مسند أحمد بن حنبل

24573 حدثنا عبد اللَّهِ حدثني أبي ثنا عَفَّانُ قال ثنا حَمَّادُ بن سَلَمَةَ قال أخبرني بن الطُّفَيْلِ بن سَخْبَرَةَ عَنِ الْقَاسِمِ بن مُحَمَّدٍ عن عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قال إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مُؤْنَةً

مسند إسحاق بن راهويه

[946] أخبرنا وكيع نا أبو عيسى موسى بن بكر الأنصاري عن القاسم بن محمد عن عائشة قالت أعظم النكاح بركة أيسره مؤنة فقال له أبي أسمعته من رسول الله e فقال نعم هكذا أخبرت قال إسحاق قلت للملائي هو أبو عيسى الأنصاري فقال نعم

مسند الطيالسي

 [1427] حدثنا أبو داود قال حدثنا موسى بن تليد ان من آل أبي بكر الصديق قال سمعت القاسم بن محمد يحدث عن عائشة قالت أعظم النكاح بركة أيسره مؤنة فقال لي أبى عائشة اخبرتك عن رسول الله e فقال هكذا حدثت وهكذا حفظت

இன்ன அஃலமன் நிகாஹி பரக(த்)தன் அய்ஸருஹூ முஃனதன் (குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே பரகத் நிறைந்தது)

என்ற நபிமொழி குறித்து அவர்கள் செய்யும் விமர்சனங்களைப் பார்த்து விட்டு அவை சரியானவையா என்பதை ஆய்வு செய்வோம்.

 முஸ்னத் அஹ்மத், முஸ்னத் இஸ்ஹாக், முஸ்னத் தயாலிஸி  ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஹதீஸ் குறித்த விமர்சனத்தைப் பார்ப்போம்.

விமர்சனங்கள்

மேற்கண்ட மூன்று நூற்களிலும் கீழ்க்கண்ட அறிவிப்பாளர்கள் வழியாக இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முஸ்னத் அஹ்மத் நூலின் அறிவிப்பாளர் தொடர்

மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். ஆயிஷா (ரலி) கூறியதாக காஸிம் பின் முஹம்மத் அறிவிக்கிறார். காஸிம் பின் முஹம்மத் கூறியதாக இப்னுத் துபைல் பின் ஸக்பரா அறிவிக்கிறார். இப்னுத் துபைல் பின் ஸக்பரா கூறியதாக ஹம்மாத் பின் ஸலமா அறிவிக்கிறார். ஹம்மாத் பின் ஸலமா கூறியதாக அஃப்பான் அறிவிக்கிறார். அஃப்பானிடம் நேரில் செவியுற்று அஹ்மத் பின் ஹம்பல் தமது நூலில் பதிவு செய்துள்ளார்.

முஸ்னத் அஹ்மதின் அறிவிப்பாளர்களில் இப்னுத் துபைல் பின் ஸக்பரா என்பவரைத் தவிர மற்ற அனைவரும் நம்பகமானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

முஸ்னத் இஸ்ஹாக் அறிவிப்பாளர் தொடர்

மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். ஆயிஷா (ரலி) கூறியதாக காஸிம் பின் முஹம்மத் அறிவிக்கிறார். காஸிம் பின் முஹம்மத் கூறியதாக மூஸா பின் பக்ர் அறிவிக்கிறார். மூஸா பின் பக்ர் கூறியதாக வகீவு அறிவிக்கிறார். வகீவு கூறியதாக நூலாசிரியர் தமது நூலில் பதிவு செய்துள்ளார்.

முஸ்னத் இஸ்ஹாக்கின் அறிவிப்பாளர்களில் மூஸா பின் பக்ர் என்பவர் தவிர மற்ற அனைவரும் நம்பகமானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

முஸ்னத் தயாலிஸி அறிவிப்பாளர் தொடர்

மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். ஆயிஷா (ரலி) கூறியதாக காஸிம் பின் முஹம்மத் அறிவிக்கிறார். காஸிம் பின் முஹம்மத் கூறியதாக மூஸா பின் தலீதான் அறிவிக்கிறார் மூஸா பின் தலீதான் கூறியதாக அபூதாவூத் அறிவிக்கிறார் அபூதாவூத் கூறியதாக நூலாசிரியர் தமது நூலில் பதிவு செய்துள்ளார். முஸ்னத் தயாலிஸியின் அறிவிப்பாளர்களில் மூஸா பின் தலீதான் என்பவர் தவிர மற்ற அனைவரும் நம்பகமானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

மூன்று ஹதீஸ்களிலும் விமர்சனத்துக்குரிய மூவர் காரணமாகவே பலவீனமானது என்று விமர்சனம் செய்யப்படுகிறது. ஆனால் இம்மூவரும் உண்மையில் மூன்று நபர்கள் அல்லர். ஒரே நபர் தான் இம்மூன்று பெயர்களால் குறிப்பிடப்படுகிறார். மேற்கண்ட அந்த அறிவிப்பாளர் ஈஸா பின் மைமூன் என்ற பெயராலும் குறிப்பிடப்படுகின்றார்.

மூஸா பின் பக்ர் என்றும்,

மூஸா பின் தலீதான் என்றும்

இப்னுத் துபைல் பின் ஸக்பரா என்றும்

ஈஸா பின் மைமூன் என்றும்

இப்படி நான்கு பெயர்களால் இவர் குறிப்பிடப்படுகிறார்.

ஈஸா பின் மைமூன் பற்றிய விமர்சனம்

இவரைப் பற்றி புகாரி அவர்கள் முன்கருல் ஹதீஸ் (இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்படும்) என்று விமர்சனம் செய்துள்ளார்கள்.

திர்மிதீ அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

இவர் நம்பகமானவர் இல்லை என்று நஸாயீ கூறுகிறார்.

அம்ரு பின் அலீ, அபூஹாதம் ஆகியோர், மத்ரூகுல் ஹதீஸ் (இவரது ஹதீஸ்கள் விடப்பட வேண்டியவை) என்று கூறியுள்ளனர்.

இவர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர் என்று யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.

இவர் ஹதீஸ் கலையில் பலவீனமானவர் என்று அபூஸுர்ஆ கூறுகிறார்.

இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறத்தக்க பல ஹதீஸ்களை நம்பகமானவை என்ற பெயரில் இவர் அறிவித்துள்ளார் என்று இப்னு ஹிப்பான் கூறுகின்றார்கள்.

இவரது ஹதீஸ்களை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று யஃகூப் கூறுகிறார்.

இவரை அனைவரும் பலவீனராகக் கருதியுள்ளனர் என்று தஹபீ கூறுகிறார்.

மூஸா பின் பக்ர் என்றும்,

மூஸா பின் தலீதான் என்றும்

இப்னுத் துபைல் பின் ஸக்பரா என்றும்

ஈஸா பின் மைமூன் என்றும்

குறிப்பிடப்படும் இவரைப் பற்றி மேற்கண்டவாறு அறிஞர்கள் செய்துள்ள விமர்சனங்களின் அடிப்படையில் தற்கால அறிஞர்கள் அல்பானி, ஷுஐப் அல்அர்னாவூத் ஆகியோரும், இன்னும் பலரும் மேற்கண்ட ஹதீஸைப் பலவீனமானது என்று கூறியுள்ளனர்.

ஒரு அறிவிப்பாளரைப் பற்றி மேற்கூறப்பட்ட விமர்சனங்கள் இருக்குமானால் அவர் நிச்சயம் பலவீனமானவர் என்பதிலும், அவர் மூலம் அறிவிக்கப்படும் ஹதீஸ் பலவீனமானது என்பதிலும் இரண்டாம் கருத்துக்கு இடமிருக்க முடியாது.

ஆனால் ஆழமாக நாம் ஆய்வு செய்த போது இந்த விமர்சனங்களுக்கும், இந்த ஹதீஸுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று தெரிய வருகிறது.

விமர்சனங்கள் மறு ஆய்வு

ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் இரண்டு அறிவிப்பாளர்கள் சமகாலத்தில் இருந்துள்ளனர். இருவருமே திருமணம் தொடர்பான ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்தது என்ற நபிமொழியை ஒரு ஈஸா பின் மைமூன் அறிவிக்கிறார்.

திருமணத்தைப் பிரகடனம் செய்யுங்கள்! திருமணத்தில் முரசு கொட்டுங்கள்! என்ற ஹதீஸை மற்றொரு ஈஸா பின் மைமூன் அறிவித்துள்ளார்.

இருவருமே ஈஸா பின் மைமூன் என்றே குறிப்பிடப்படுகின்றனர்.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் பற்றிய ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் நம்பகமானவர்.

திருமணத்தைப் பிரகடனம் செய்யுங்கள்! திருமணத்தில் முரசு கொட்டுங்கள் என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் பலவீனமானவர்.

இந்த இரண்டாமவரைப் பற்றித் தான் மேலே நாம் சுட்டிக் காட்டிய அறிஞர்கள் மேற்கண்ட கடுமையான விமர்சனங்களைச் செய்துள்ளனர். மேற்கண்ட விமர்சனம் எதுவும் முதலாவதாகக் குறிப்பிட்ட ஈஸா பின் மைமூனைப் பற்றியது அல்ல என்பது நமக்குத் தெரிய வருகிறது.

இவ்விருவரின் பெயரும் ஈஸா,

இவ்விருவரின் தந்தையர் பெயரும் மைமூன்

என்று அமைந்தது போல் இவ்விருவரும் யாரிடம் கேட்டு திருமணம் தொடர்பான ஹதீஸ்களை அறிவிக்கிறார்களோ

அவர் பெயர் காஸிம் ஆகும்.

காஸிம் என்பவரின் தந்தை முஹம்மத் ஆகும்.

ஆனால் இரண்டு காஸிம்களும் வெவ்வேறு நபர்களாவர்.

திருமணத்தைப் பிரகடனம் செய்யுங்கள்! திருமணத்தில் முரசு கொட்டுங்கள் என்ற ஹதீஸை அறிவிக்கும் காஸிம் என்பவர் கஅப் என்பவரின் பேரனும், முஹம்மத் என்பவரின் மகனுமாவார்.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் பற்றிய ஹதீஸை அறிவிக்கும் காஸிம் என்பவர் அபூபக்கர் (அலி) (இஸ்லாத்தின் முதல் கலீஃபா) அவர்களின் பேரனும் முஹம்மத் அவர்களின் மகனுமாவார்.

இவ்விருவர் பெயரும் ஈஸா பின் மைமூன் என்று இருப்பதாலும் இவ்விருவரின் ஆசிரியர்களின் பெயர்கள் காஸிம் பின் முஹம்மத் என்று இருப்பதாலும் பல அறிஞர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு தவறான முடிவுக்கு வந்துள்ளனர்.

இவ்விருவரின் பெயரும், இவ்விருவரின் ஆசிரியர்கள் பெயரும், இவ்விருவரின் தந்தையர் பெயரும் ஒன்றுபட்டதால் குழப்பம் ஏற்பட்டாலும் வேறு சான்றுகள் மூலம் இவ்விருவரையும் வேறுபடுத்தி நாம் அறிய முடியும்.

ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் இருவர் என்பதற்கான ஆதாரங்கள்

تاريخ أسماء الثقات

1062 وعيسى بن ميمون الذي يروي أعظم النكاح بركة ايسره مؤونة يقال له بن تليدان وهو من ولد أبي قحافة ويروي عنه حماد بن سلمة يقول بن سخبرة وهو هذا الذي روى عنه وكيع وأبو نعيم وليس به بأس وعيسى الذي يروي أعلنوا النكاح ويروي حديث محمد بن كعب ضعيف ليس بشيء

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் அதிக பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன், (மூஸா) இப்னு தலீதான் என்றும் குறிப்பிடப்படுவார். இவர் அபூகுஹாஃபாவின் வழித்தோன்றல் ஆவார். இவர் வழியாக ஹம்மாத் பின் ஸலமா அறிவிக்கும் போது இப்னு ஸக்பரா என்று இவரைக் கூறுவார். வகீவு, அபூநயீம் ஆகியோர் யார் வழியாக அறிவிக்கிறார்களோ அந்த ஈஸா தான் இவர். இவரிடம் குறைபாடு இல்லை. திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள் என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பலவீனமானவர்; கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர். இவர் முஹம்மத் பின் கஅபு என்பவர் வழியாக ஹதீஸை அறிவிக்கும் ஈஸா ஆவார்.

நூல்: தாரீகு அஸ்மாயிஸ் ஸிகாத்

تهذيب الكمال

ت ق عيسى بن ميمون المدني المعروف بالواسطي مولى القاسم بن محمد بن أبي بكر الصديق يقال له بن تليدان ويقال إنه الذي يحدث عنه حماد بن سلمة ويسميه الطفيل بن سخبرة روى محمد بن أبي بكر الصديق ت ق ومحمد بن كعب القرظي ونافع مولى بن عمر وهشام بن عروة ويزيد بن ذكوان وأبي الزبير المكي روى عنه إبراهيم بن الحسن العلاف وأحمد بن بشير الكوفي ت وآدم بن أبي إياس ق وأبو خزيمة أسلم بن أبي شيبة الهاشمي البصري وحاتم بن عبيد الله النمري وحجاج بن محمد المصيصي وحجاج بن نصير الفساطيطي وحفص بن الجارود قاضي هراة وحماد بن سلمة وسماه الطفيل بن سخبرة فيما قيل وخالد بن عبد الرحمن وسعيد بن سليمان الواسطي وشيبان بن فروخ وصالح بن بيان الأنباري وعبد الصمد بن النعمان وعبد الكريم بن روح بن عنبسة وعثمان بن عمر بن فارس فصحف في اسمه فقال أبو عيسى المدني وعمر بن علي بن مقدم وأبو نعيم الفضل بن دكين ومحمد بن جعفر المدائني ومحمد بن مصعب القرقساني ووكيع بن الجراح ويحيى بن سعيد العطار الحمصي ويزيد بن هارون ت قال أحمد بن سنان القطان عن عبد الرحمن بن مهدي تهذيب الكمال استعديت على عيسى بن ميمون في هذه الأحاديث عن القاسم بن محمد في النكاح وغيره فقال لا أعود وقال إبراهيم بن عبد الله بن الجنيد سمعت يحيى بن معين يقول عيسى بن ميمون الذي يحدث عن القاسم عن عائشة عن النبي صلى الله عليه وسلم أعظم النكاح بركة أيسره مؤونة يقال له بن تليدان وهو من آل أبي قحافة ليس به بأس وهو الذي حدث عنه حماد بن سلمة قال حدثني بن سخبرة هو هذا ولم يرو هذا عن محمد بن كعب شيئا والذي يحدث عن محمد بن كعب ليس بشيء يعني إن الذي يحدث عن محمد بن كعب آخر وقال عباس الدوري عن يحيى بن معين عيسى بن ميمون صاحب القاسم عن عائشة ليس بشيء وقال في موضع آخر عيسى الذي يروي أعلنوا النكاح ويروي حديث محمد بن كعب القرظي هو الضعيف وليس بشيء

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து காஸிம் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்பார், இப்னு தலீதான் என்றும் கூறப்படுவார். இவர் அபூகுஹாஃபாவின் வழித் தோன்றலாவார். இவரிடம் தவறு இல்லை. இப்னு ஸக்பரா எனக்கு அறிவித்தார் என்று ஹம்மாத் பின் ஸலமா கூறுவது இவரைத் தான். இவர் முஹம்மத் பின் கஅப் வழியாக எதையும் அறிவித்ததில்லை.

முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர். இவர் வேறொரு ஈஸா ஆவார் என்று யஹ்யா பின் மயீன் கூறியதாக இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் அறிவிக்கின்றார்.

ஆயிஷா, காஸிம் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர் என்று யஹ்யா பின் மயீன் கூறியதாக அப்பாஸ் அத்தவ்ரீ கூறிவிட்டு மற்றொரு இடத்தில் இந்த ஈஸா என்பவர் திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவரும், முஹம்மத் பின் கஅப் வழியாக ஹதீஸை அறிவிப்பவருமான ஈஸா தான் இவர். இவர் தான் பலவீனமானவர்; கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர் என்று தெளிவுபடுத்துகிறார்.

நூல்: தஹ்தீபுல் கமால்

ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் இருவர் இருந்ததையும், அதில் ஒருவர் தான் பலவீனமானவர் என்பதையும் யஹ்யா பின் மயீன் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். மேலும் பலவீனமானவர் யார் என்பதற்கு மூன்று அடையாளங்களையும் கூறுகிறார்கள்.

திருமணத்தைப் பிரகடம் செய்யுங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவர். முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிப்பவர். குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை அறிவிப்பவர் அல்ல.

இந்த மூன்று அம்சம் உள்ள ஈஸா தான் பலவீனமானவர்.

மற்றொரு ஈஸா பலவீனமானவர் அல்லர் என்பதையும் யஹ்யா பின் மயீன் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். இதற்கும் மூன்று அடையாளங்களைக் கூறுகிறார்கள்.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் அதிக பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை அறிவிப்பவர் இவருடைய மாணவர் ஹம்மாத் பின் ஸலமா வகீவு, அபூநயீம் ஆகியோர் இவர் வழியாக அறிவித்திருப்பார்கள்.

அம்ரு பின் அலீ, புகாரி, நஸாயீ உள்ளிட்டோர் செய்த விமர்சனங்கள் இவரைப் பற்றியதல்ல என்பதைப் பின்வரும் கூற்றுக்களிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

الكامل في ضعفاء الرجال

[1388] عيسى بن ميمون الجرشي مديني يكنى أبا يحيى حدثنا بن أبي بكر قال ثنا عباس قال سمعت يحيى وسئل عن عيسى بن ميمون من هو قال يقال له عيسى الجرشي حدثنا بن حماد وابن أبي بكر قالا حدثنا عباس عن يحيى قال عيسى بن ميمون ليس بشيء وقال الدولابي وفي موضع آخر عيسى بن ميمون المدني يروي أعلنوا النكاح ويروي عن محمد بن كعب ضعيف الحديث ليس بشيء حدثنا الجنيدي ثنا البخاري قال عيسى بن ميمون المدني مولى القاسم بن محمد القرشي صاحب مناكير عن محمد بن كعب هو أبو عبيدة وفي موضع آخر التيمي البصري منكر الحديث وقال عمرو بن علي عيسى بن ميمون المديني يروي عن محمد بن كعب متروك الحديث وقال النسائي عيسى بن ميمون المديني يروي عن محمد بن كعب القرظي متروك الحديث حدثنا سعيد بن عثمان الحراني ثنا عبد الرحمن بن عبيد الله بن أخي الامام قال ثنا محمد بن يزيد الواسطي عن عيسى بن ميمون عن القاسم عن عائشة قالت قال رسول الله e أعلنوا النكاح واجعلوه في المساجد واضربوا عليه بالدف وليولم أحدكم ولو بشاة ثنا عمر بن سنان ثنا نصر بن عبد الرحمن الوشاء قال ثنا أحمد بن بشير عن عيسى بن ميمون عن القاسم عن عائشة قالت قال رسول الله e لا ينبغي لقوم فيهم أبو بكر يؤمهم غيره

திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவரும், முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிப்பவருமான ஈஸா பின் மைமூன் அல்மதனீ என்பவர் பலவீனமானவர்; கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர் என்று தவ்லாபீ கூறுகிறார். 

முஹம்மத் பின் கஅப் வழியாக நிராகரிக்கத்தக்க ஹதீஸ்களை அறிவித்துள்ள ஈஸா பின் மைமூன் அல்மதனீ, முன்கருல் ஹதீஸ் (இவரது ஹதீஸ்கள் நிரகாரிக்கப்படும்) என்று புகாரி கூறினார். முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் அல்மதனீ என்பவரின் ஹதீஸ்கள் விடப்படுவதற்குத் தகுதியானவை என்று அம்ரு பின் அலீ கூறுகிறார். முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் அல்மதனீ என்பவரின் ஹதீஸ்கள் விடப்படுவதற்குத் தகுதியானவை என்று நஸாயீ கூறுகிறார்.

நூல்: அல்காமில் ஃபில்லுஅஃபா

முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிக்கும் ஈஸாவையே புகாரி, அம்ரு பின் அலீ, நஸாயீ உள்ளிட்டோர் விமர்சனம் செய்துள்ளனர் என்பது இந்த விமர்சனங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் புகாரி அவர்கள் எந்த ஈஸாவை விமர்சனம் செய்தார்கள் என்பதைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

التاريخ الكبير

[2781] عيسى بن ميمون المديني عن محمد بن كعب منكر الحديث مولى القاسم بن محمد القرشي

முஹம்மத் பின் கஅப் மூலம் அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் அல்மதனீ என்பாரின் ஹதீஸ்கள் நிராகரிக்கப்படும்.

நூல்: புகாரியின் தாரீகுல் கபீர்

الضعفاء الصغير

[266] عيسى بن ميمون المدني عن محمد بن كعب منكر الحديث

முஹம்மத் பின் கஅப் வழியாக அரிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்பாரின் ஹதீஸ்கள் நிகாரிக்கத்தக்கவை.

நூல்: புகாரியின் லுஅஃபாவுஸ் ஸகீர்

ஈஸா பின் மைமூன் என்பவரின் ஹதீஸ்கள் விடப்படுவதற்குத் தகுதியானவை என்று நஸாயீ அவர்கள் யாரைக் குறிப்பிடுகிறார்கள் என்பதைப் பின்வரும் ஆதாரத்திலிருந்து அறியலாம்.

الضعفاء والمتروكين

[425] عيسى بن ميمون المدني يروي عن محمد بن كعب القرظي متروك الحديث

முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்பவரின் ஹதீஸ்கள் விடப்படுவதற்குத் தகுதியானவை.

நூல்: நஸாயீயின் அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன்

மேற்கண்ட விமர்சனங்களில் பலவீனமான ஈஸா யார் என்பதைத் தெளிவுபடுத்தும் போது முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிப்பவர் என்று குறிப்பிட்டுள்ளதைக் கவனத்தில் கொள்க!

இப்னு ஹஜர், திர்மிதீ உள்ளிட்டோர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டதும் இரண்டாவது ஈஸாவைப் பற்றித் தான் என்பதைப் பின்வரும் ஆதாரத்திலிருந்து அறியலாம்.

تلخيص الحبير

[2122] قوله روي أنه صلى الله عليه وسلم قال أعلنوا النكاح واضربوا عليه بالغربال أي الدف الترمذي وابن ماجة والبيهقي عن عائشة وفي إسناده خالد بن الياس وهو منكر الحديث قاله أحمد وفي رواية الترمذي عيسى بن ميمون وهو يضعف قاله الترمذي وضعفه بن الجوزي من الوجهين نعم روى أحمد وابن حبان والحاكم من حديث عبد الله بن الزبير أعلنوا النكاح وروى أحمد والنسائي والترمذي وابن ماجة

திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்! அதற்காக தஃப் என்னும் முரசு கொட்டுங்கள் என்ற ஹதீஸை திர்மிதீ, பைஹகீ ஆகியோர் பதிவு செய்துள்ளனர். திர்மிதீயின் அறிவிப்பில் ஈஸா பின் மைமூன் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று திர்மிதியே குறிப்பிட்டுள்ளார்.

நூல்: இப்னு ஹஜரின் தல்கீஸ்

திருமணத்தைப் பகிரங்கப்படுத்தி, முரசு கொட்ட வேண்டும் என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்பவரைத் தான் திர்மிதீ பலவீனப்படுத்தியுள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

திர்மிதி அவர்கள் ஈஸா பின் மைமூன் பலவீனமானவர் என்று கூறுவதுடன் திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்! அதற்காக தஃப் என்னும் முரசு கொட்டுங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவர் என்பதையும் இணைத்துக் கூறுகிறார்கள்.

இவரை அனைவரும் பலவீனப்படுத்தியுள்ளனர் என்று தஹபீ கூறியதும் இரண்டாவது ஈஸாவைப் பற்றியது தான்.

இதைப் பின்வரும் அறிஞர்கள் கூற்றிலிருந்து அறியலாம்.

الكاشف

[4403] عيسى بن ميمون المدني عن القاسم وسالم وعنه حجاج بن محمد وآدم وشيبان بن فروخ ضعفوه ت ق

ஈஸா பின் மைமூன் அல்மதனி என்பாரை அறிஞர்கள் பலவீனமாக்கியுள்ளனர்.

நூல்: அல்காஷிஃப்

ஈஸா பின் மைமூன் என்ற பெயருடன் அல்மதனீ என்ற அடைமொழியையும் தஹபீ இனைத்துக் கூறுகிறார். இவர் திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்! அதற்காக தஃப் என்னும் முரசு கொட்டுங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவர்.

ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் இருவர் இருந்துள்ளனர் என்பதும், ஒருவர் பலவீனமானவர்; மற்றவர் நம்பகமானவர் என்பதும், சிக்கனமான திருமணம் பற்றிய ஹதீஸை நம்பகமான ஈஸா பின் மைமூன் அறிவித்துள்ளதால் இது சரியான ஹதீஸ் என்பதில் சந்தேகம் இல்லை.

ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் உள்ள இருவரை அவர்களின் ஆசிரியர் யார் என்பதை வைத்தும் வேறுபடுத்தி அறியலாம்.

ஈஸா பின் மைமூன் என்ற பெயரைக் கொண்ட இருவரின்  ஆசிரியர் காசிம் பின் முஹம்மத் ஆவார். ஆனால் இருவரும் வேறு வேறு நபர்களாவர்.

ஒரு காசிம் பின் முஹம்மத் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் நம்பகமானவர்; மற்றொரு காசிம் பின் முஹம்மத் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் பலவீனமானவர்.

இந்த அடையாளத்தை வைத்தும் சிக்கனமான திருமணம் குறித்த ஹதீஸை அறிவித்த ஈஸா நம்பகமானவர் என்று மேலும் உறுதி செய்யலாம்.

காஸிம் பின் முஹம்மத் என்ற பெயரில் இருவர் என்பதற்கான ஆதாரம்

تهذيب الكمال

ت ق عيسى بن ميمون المدني المعروف بالواسطي مولى القاسم بن محمد بن أبي بكر الصديق يقال له بن تليدان ويقال إنه الذي يحدث عنه حماد بن سلمة ويسميه الطفيل بن سخبرة روى محمد بن أبي بكر الصديق ت ق ومحمد بن كعب القرظي ونافع مولى بن عمر وهشام بن عروة ويزيد بن ذكوان وأبي الزبير المكي روى عنه إبراهيم بن الحسن العلاف وأحمد بن بشير الكوفي ت وآدم بن أبي إياس ق وأبو خزيمة أسلم بن أبي شيبة الهاشمي البصري وحاتم بن عبيد الله النمري وحجاج بن محمد المصيصي وحجاج بن نصير الفساطيطي وحفص بن الجارود قاضي هراة وحماد بن سلمة وسماه الطفيل بن سخبرة فيما قيل وخالد بن عبد الرحمن وسعيد بن سليمان الواسطي وشيبان بن فروخ وصالح بن بيان الأنباري وعبد الصمد بن النعمان وعبد الكريم بن روح بن عنبسة وعثمان بن عمر بن فارس فصحف في اسمه فقال أبو عيسى المدني وعمر بن علي بن مقدم وأبو نعيم الفضل بن دكين ومحمد بن جعفر المدائني ومحمد بن مصعب القرقساني ووكيع بن الجراح ويحيى بن سعيد العطار الحمصي ويزيد بن هارون ت قال أحمد بن سنان القطان عن عبد الرحمن بن مهدي تهذيب الكمال استعديت على عيسى بن ميمون في هذه الأحاديث عن القاسم بن محمد في النكاح وغيره فقال لا أعود وقال إبراهيم بن عبد الله بن الجنيد سمعت يحيى بن معين يقول عيسى بن ميمون الذي يحدث عن القاسم عن عائشة عن النبي صلى الله عليه وسلم أعظم النكاح بركة أيسره مؤونة يقال له بن تليدان وهو من آل أبي قحافة ليس به بأس وهو الذي حدث عنه حماد بن سلمة قال حدثني بن سخبرة هو هذا ولم يرو هذا عن محمد بن كعب شيئا والذي يحدث عن محمد بن كعب ليس بشيء يعني إن الذي يحدث عن محمد بن كعب آخر وقال عباس الدوري عن يحيى بن معين عيسى بن ميمون صاحب القاسم عن عائشة ليس بشيء وقال في موضع آخر عيسى الذي يروي أعلنوا النكاح ويروي حديث محمد بن كعب القرظي هو الضعيف وليس بشيء

ஹம்மாத் பின் ஸலமாவின் ஆசிரியரும், இப்னு தலீதான் என்றும், துஃபைல் பின் ஸக்பரா என்றும் அழைக்கப்படுபவருமான ஈஸா பின் மைமூன் என்பார், அபூபக்ர் ஸித்தீக் அவர்களின் பேரனும் முஹம்மதின் மகனுமான காஸிமின் அடிமையாவார்.

நூல்: தஹ்தீபுல் கமால்

الضعفاء الكبير للعقيلي

عيسى بن ميمون عن القاسم بن محمد بن كعب القرظي . حدثنا زكريا بن يحيى الساجي قال : حدثنا أحمد بن سنان قال : سمعت عبد الرحمن بن مهدي ، قال استعديت على عيسى بن ميمون فقلت : هذه الأحاديث التي يحدث بها عن القاسم بن محمد عن عائشة ، فقال : لا أعود . حدثنا محمد بن عيسى قال : حدثنا عباس قال : قلت ليحيى : عيسى بن ميمون ؟ قال : ليس حديثه بشيء . وحدثني آدم بن موسى قال : سمعت البخاري قال : عيسى بن ميمون عن محمد بن كعب القرظي ، منكر الحديث

கஅப் என்பாரின் பேரனும் முஹம்மத் என்பாரின் மகனுமாகிய காஸிம் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்பவரே பலவீனமானவர்.

நூல்: லுஅஃபாவுல் உகைலீ

تاريخ ابن معين

3950 قال يحيى عيسى بن ميمون الذي يروي أعظم النكاح بركة أيسره مؤنة يقال له بن تليدان وهو من ولد أبي قحافة ويروى عن حماد بن سلمة يقول بن سخبرة وهو هذا قال يحيى وابن سخبرة هذا يروي عنه وكيع وأبو نعيم وليس به بأس 3951 وعيسى الذي يروي أعلنوا النكاح ويروي حديث محمد بن كعب القرظي هو الضعيف ليس بشيء)

تاريخ ابن معين

3833 وعيسى بن ميمون صاحب القاسم عن عائشة ليس بشيء

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே பரக்கத் மிகுந்ததாகும் என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்பார் இப்னு தலீதான் என்றும் குறிப்பிடப்படுவார். இவர் அபூகுஹாஃப்ஃஃவின் பேரனாவார். ஹம்மாத் பின் ஸலமா வழியாகவும் இவர் அறிவித்துள்ளார். இப்னு ஸக்பரா என்பவரும் இவர் தான். இவர் வழியாக வகீவு என்பாரும், அபூ நுஐம் என்பாரும் அறிவித்துள்ளனர். இந்த ஈஸாவிடம் குறை இல்லை. திருமணத்தைப் பிரகடனம் செய்யுங்கள் என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா முஹம்மத் பின் க் அப் வழியாக அறிவிப்பவர். இவர் பலவீனமானவர்; கணக்கில் கொள்ளப்படாதவர்

நூல் : தாரீக் இப்னு மயீன்

ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் இருவர் இருந்துள்ளனர் என்பதைக் கவனிக்காமல் பிற்கால அறிஞர்கள் இருவரையும் ஒரே நபராகக் கருதி விமர்சனம் செய்துள்ளனர்.

யஹ்யா பின் மயீன் அவர்கள் கவனத்தில் கொண்ட நுணுக்கமான வேறுபாட்டை சிலர் கவனத்தில் கொள்ளாத காரணத்தால் ஆள் மாறாட்டம் நடைபெற்று மேற்கண்ட ஹதீஸை பலவீனமானது என்று கூறுகின்றனர் என்றே நமக்குத் தோன்றுகிறது.

யஹ்யா பின் மயீன் அவர்களின் அவர்களின் அறிவிப்பாளர் குறித்த ஆய்வுக்கு முன் பிற்காலத்தில் வந்தவர்கள் செய்யும் விமர்சனம் நிற்காது.

அறிவிப்பாளர் குறித்து யஹ்யா பின் மயீன் அவர்கள் கூறும் எந்த விமர்சனத்தையும் மறுப்பது என்றால் அவரை விட பலமானவர்களின் மேற்கோளுடன் இருக்க வேண்டும்.

அறிவிப்பாளர்களை எடை போடும் எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதிகமான அறிவிப்பாளர்களை எடைபோடுவதில் யஹ்யா பின் மயீன் அவர்கள் தான் முதலிடத்தில் இருப்பதைக் காணலாம். மிகப் பெரும்பாலான நூலாசிரியர்கள் அறிவிப்பாளர்கள் குறித்து விமர்சிக்கும் போது யஹ்யா பின் மயீன் என்ன சொல்லி இருக்கிறார் என்று எடுத்துக் காட்டுவதை அதிகமாகக் காண முடியும். மற்ற எந்த அறிஞரின் விமர்சனமும் இவரது விமர்சனத்தின்  அளவை எட்டியதில்லை.

இந்தக் கலையை உலகுக்கு சொன்ன பேரறிஞர் யஹ்யா பின் சயீத் அல்கத்தான் ஆவார். அவருடைய மாணவர்களில் முதன்மையானவரும் அவரையும் இத்துறையில் மிஞ்சியவரும் ஹதீஸ் கலையின் இமாமுமானவர் தான் யஹ்யா பின் மயீன் ஆவார். இவரைப் பற்றிய சில குறிப்புகளை முதலில் அறிந்து கொள்வோம்.

تهذيب التهذيب – ابن حجر

وقال العجلي ما خلق الله تعالى أحدا كان أعرف بالحديث من يحيى بن معين ولقد كان يجتمع مع أحمد وابن المديني ونظرائهم فكان هو الذي ينتخب لهم الأحاديث لا يتقدمه منهم أحد ولقد كان يؤتى بالأحاديث قد خلطت وتلبست فيقول هذا الحديث كذا وهذا كذا فيكون كما قال

ஹதீஸ் கலை பற்றி யஹ்யா பின் மயீனை விட அதிகம் அறிந்தவரை அல்லாஹ் படைக்கவில்லை. இவர் அஹ்மத் பின் ஹம்பல், அலீ பின் மதீனீ, மற்றும் இது போன்ற தரத்தில் உள்ளவர்களின் காலத்தில் வாழ்ந்தவர். இவர்களுக்குச் சரியான ஹதீஸ்களைக் கண்டறிந்து சொல்பவராக இருந்தார். மேற்கண்டவர்களில் யாரும் இவரை முந்தியதில்லை. ஹதீஸ்களைக் குழப்பி அவர் முன்னால் சொல்லப்பட்டால் இந்த ஹதீஸ் இப்படித்தான் என்று சொல்லி விடுவார், அவர் சொன்னது போலவே இருக்கும் என்று அஜலீ கூறுகிறார்.

ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப்

அஹ்மத் பின் ஹம்பல், இப்னுல் மதீனி ஆகியோரின் காலத்தில் வாழ்ந்த யஹ்யா பின் மயீனிடம் தான் அவர்கள் கேட்டு தெரிந்து கொள்ளும் அளவுக்கு மாமேதையாகத் திகழ்ந்தார். ஒரு ஹதீஸை அறிவிப்பாளர்க்ளின் பெயர்களை அனைத்தையும் மாற்றி கூறினாலும் இது இப்படி அல்ல என்று சொல்லும் அளவுக்கு மாமேதையாக யஹ்யா பின் மயீன் திகழ்ந்தவர்.

تهذيب التهذيب

وقال محمد بن رافع سمعت أحمد بن حنبل يقول كل حديث لا يعرفه بن معين فليس هو بحديث وفي رواية فليس هو ثابتا

யஹ்யா பின் மயீனுக்குத் தெரியாத எந்த ஹதீஸும் ஹதீஸாக இருக்க முடியாது என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறினார்கள்.

ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப்

تهذيب التهذيب

قال بن الرومي وكنت عند أحمد فجاء رجل فقال يا أبا عبد الله انظر في هذه الأحاديث فإن فيها خطأ قال عليك بأبي زكريا فإنه يعرف الخطأ

நான் அஹ்மத் பின் ஹம்பலுடன் இருந்த போது ஒரு மனிதர் வந்தார். இதோ சில ஹதீஸ்கள் உள்ளன. இவற்றில் பல தவறுகள் உள்ளன. அதை உங்களால் கூற முடியுமா என்று கேட்டார். அதற்கு அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் அபூ ஜக்கரியா (எனும் யஹ்யா பின் மயீன்) அவர்களிடம் செல். அவர் தவறுகளைக் கண்டுபிடித்து விடுவார் என்றார்கள் என இப்னுர் ரூமி சொன்னார்.

ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப்

تهذيب التهذيب

 وقال عبد الخالق بن منصور قلت لابن الرومي سمعت بعض أصحاب الحديث يحدث بأحاديث يحيى ويقول حدثني من لم تطلع الشمس على أكبر منه فقال وما يعجب سمعت بن المديني يقول ما رأيت في الناس مثله وقال أيضا قلت لابن الرومي سمعت أبا سعيد الحداد يقول الناس كلهم عيال على يحيى بن معين فقال صدق ما في الدنيا مثله قال وسمعت بن الرومي يقول ما رأيت أحدا قط يقول الحق في المشايخ غير يحيى

மனிதர்களில் இவருக்கு நிகரானவர் யாரையும் நான் காணவில்லை என்று இப்னுல் மதீனி கூறினார். தமது ஆசிரியர்களானாலும் தாட்சண்யமில்லாமல் அவர்கள் குறித்து உண்மையைச் சொன்னதில் யஹ்யா பின் மயீனைத் தவிர வேறு எவரையும் காணவில்லை என்று இப்னுர் ரூமி கூறினார்.

ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப்

تهذيب التهذيب

وقال الإسماعيلي سئل الفرهياني عن يحيى وأحمد وعلي وأبي خيثمة قال أما علي فأعلمهم بالعلل وأما يحيى فأعلمهم بالرجال وأحمد بالفقه وأبو خيثمة من النبلاء وقال حنبل عن أحمد كان بن معين أعلمنا بالرجال

யஹ்யா பின் மயீன், அஹ்மத் பின் ஹம்பல், அலீ பின் மதீனி, அபூ ஹைஸமா ஆகியோர் குறித்து ஃபர்ஹியானியிடம் கேட்கப்பட்டது. அலீ பின் மதீனி அவர்கள் நுணுக்கமான குறைபாடுகளை நன்கு அறிந்தவர். யஹ்யா பின் மயீன் அறிவிப்பாளர்கள் பற்றி நன்கு அறிந்தவர். அஹ்மத் பின் ஹம்பல் ஃபிக்ஹ் எனும் சட்டங்களை நன்கு அறிந்தவர். அபூ ஹைசமா கூர்மையான புத்தி உள்ளவர் என்றார். எங்களில் யஹ்யா பின் மயீன் தான் அறிவிப்பாளர்களை நன்கு அறிந்தவர் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறினார்.

ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப்

تهذيب التهذيب

وقال أبو عبيد القاسم بن سلام قال انتهى العلم إلى أربعة أبو بكر بن أبي شيبة أسردهم له وأحمد أفقههم فيه وعلي بن المديني أعلمهم به ويحيى بن معين أكتبهم له وفي رواية عنه أعلمهم بصحيحه وسقيمه بن معين وقال صالح بن محمد أعلم من أدركت بعلل الحديث بن المديني وبفقهه أحمد بن حنبل وأحفظهم عند المذاكرة أبو بكر بن أبي شيبة وأعلمهم بتصحيف المشائخ يحيى بن معين وفي رواية عنه يحيى أعلم بالرجال والكني وقال الآجري قلت لأبي داود أيما أعلم بالرجال علي أو يحيى قال يحيى عالم بالرجال وليس عند علي من خبر أهل الشام شيء

ஹதீஸ்களில் சரியானதையும், பலவீனமானதையும் நன்கு அறிந்தவர் யஹ்யா பின் மயீன் ஆவார். கல்வி நான்கு பேருக்குள் அடக்கம்., அபூபக்ர் பின் ஷைபா நன்கு மனனம் செய்தவர். அஹ்மத் பின் ஹம்பல் நன்கு சட்டம் அறிந்தவர். அலீ பின் மதீனி அவர்களில் அறிஞர். யஹ்யா பின் மயீன் சரியான ஹதீஸையும், தவறான ஹதீஸையும் நன்கு அறிந்தவர் என்று காசிம் பின் சலாம் கூறினார். தனக்கு அறிவித்தவர்களின் பெயர்க் குழப்பங்களை நன்கு அறிந்தவர் யஹ்யா பின் மயீன் ஆவார். அறிவிப்பாளர்கள் பற்றி நன்கு அறிந்தவர் யஹ்யா பின் மயீன் ஆவார் என்று சாலிஹ் பின் முஹம்மத் கூறுகிறார். அறிவிப்பாளர்கள் குறித்து நன்கு அறிந்தவர் யஹ்யா பின் மயீனா? அலீ பின் மதீனியா என்று அபூதாவூத் இடம் கேட்டேன். அதற்கவர்கள் யஹ்யா பின் மயீன் தான் அறிவிப்பாளர் பற்றி அதிகம் அறிந்தவர். அலீ பின் மதீனிக்கு சிரியாவாசிகளான அறிவிப்பாளர் பற்றி எதுவும் தெரியாது என்று கூறியதாக ஆஜுர்ரீ கூறுகிறார்.

அது மட்டுமின்றி அறிவிப்பாளர்களை எடைபோடும் அறிஞர்களில் இரு சாரார் உள்ளனர். பெரிய குறைபாடுகள் இருந்தால் மட்டுமே அறிவிப்பாளரைப் பலவீனமாக்கும் அறிஞர்கள் ஒரு வகையினர். சின்னக் குறைபாடுகள் இருந்தால் அதன் காரணமாக பலவீனம் என்று சொல்ல மாட்டார்கள். ஹாகிம் போன்றவர்கள் இந்த வகையில் சேருவார்கள்.

சின்னக் குறை இருந்தால் கூட பலவீனமாக்கும் அறிஞர்களும் இருந்துள்ளனர். இப்படி அற்ப குறைபாடுகள் இருந்தால் கூட அவரைப் பலவீனப்படுத்தும் அறிஞர்களில் முதன்மையானவர் யஹ்யா பின் மயீன்.

ஒருவரைப் பலமானவர் என்று சொல்வதற்கு அதிகத் தயக்கம் காட்டக் கூடிய அளவுக்கு கடும் போக்குடையவராகவும் அறிவிப்பாளர்களைப் பிரித்து மேய்வதில் மாபெரும் விற்பன்னராகவும், இவரது சொல்லையே அனைவரும் மேற்கோள் காட்டும் அளவுக்கு மாமேதையாகவும், ஹதீஸ்களை எப்படித் தான் மாற்றிப் போட்டாலும் அதைக் கண்டு பிடிக்கும் ஞானமுள்ளவருமான யஹ்யா பின் மயீன் அவர்கள் ஈஸா என்ற பெயரில் இருவர் இருந்துள்ளதாகவும் சிக்கனமான திருமணத்தை அறிவிப்பவர் பலவீனமானவர் அல்ல என்றும் கூறுகிறார்.

யஹ்யா பின் மயீன் அவர்கள் ஈஸா என்ற பெயரில் இருவர் இருந்த்தாகச் சொல்லி இருக்கிறார்.

இப்படி அவர் சொன்னதை எடுத்து எழுதும் அறிஞர்கள் இதில் யஹ்யா பின் மயீன் தவறாகக் கூறிவிட்டார் என்று சொல்லவில்லை. இன்னின்ன காரணத்தால் அது பிழை எனவும் சொல்லவில்லை.

எனவே சிக்கனமான திருமணம் பரகத் நிறைந்த்து என்ற ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்பது தான் சரியான கருத்தாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account