Sidebar

28
Tue, Nov
0 New Articles

விவசாயச் செலவைக் கழித்து விட்டு ஜகாத் கொடுக்கலாமா?

ஜகாத்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

விவசாயச் செலவைக் கழித்து விட்டு ஜகாத் கொடுக்கலாமா?

விவசாயத்துக்காக செலவிட்டதைக் கழித்துவிட்டு விளைச்சலுக்கு ஜகாத் கொடுத்தால் போதுமா?

பதில் :

இன்றைய நவீன காலத்தில் விவசாயத்துக்காக கணிசமான தொகை செலவாகுவதைப் போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் இதற்காக செலவு செய்ய வேண்டி இருந்தது. இதைப் பின்வரும் செய்தியிலிருந்து அறியலாம்.

2898و حَدَّثَنَا ابْنُ رُمْحٍ أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ دَفَعَ إِلَى يَهُودِ خَيْبَرَ نَخْلَ خَيْبَرَ وَأَرْضَهَا عَلَى أَنْ يَعْتَمِلُوهَا مِنْ أَمْوَالِهِمْ وَلِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَطْرُ ثَمَرِهَا رواه مسلم

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(கைபர் வெற்றிக்குப் பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கைபர் வாழ் யூதர்களிடம் “அவர்கள் தம் நிலங்களில் தமது சொந்தச் செலவில் பயிரிட்டு உழைக்க வேண்டும்; விளையும் கனிகளில் பாதியை அல்லாஹ்வின் தூதரிடம் வழங்க வேண்டும்” எனும் நிபந்தனையின் பேரில் கைபரின் பேரீச்சை மரங்களையும், நிலங்களையும் ஒப்படைத்தார்கள்.

நூல் : முஸ்லிம்

நமது காலத்தில் விவசாயத்துக்குச் செலவிடுவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும் விவசாயத்துக்காகச் செலவிடப்பட்டுள்ளது. நபியவர்கள் இந்தச் செலவை மொத்த விளைச்சலில் கழிக்கச் சொன்னதாகவோ, இவ்வாறு செய்ய பிறருக்கு அனுமதியளித்ததாகவோ எந்தச் செய்தியும் இல்லை.

மேலும் செலவு செய்து உற்ப்த்தி செய்யப்பய்யால் அதன் ஜகாத் ஐந்து சதவிதம் என குறைந்த அளவு ஜகாத்தை நபிகள் நிர்ணயித்துள்ளனர். செலவு இல்லாமல் உற்பத்தியானால் அதில் பத்து சதவிகிதம் என நிர்ணயம் செய்துள்ளனர்.

1483حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِيمَا سَقَتْ السَّمَاءُ وَالْعُيُونُ أَوْ كَانَ عَثَرِيًّا الْعُشْرُ وَمَا سُقِيَ بِالنَّضْحِ نِصْفُ الْعُشْرِ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மழை நீராலோ, ஊற்று நீராலோ அல்லது தானாகப் பாயும் தண்ணீராலோ விளைபவற்றில் பத்தில் ஒரு பங்கு ஸகாத் உண்டு. ஏற்றம், கமலை கொண்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டால் இருபதில் ஒரு பங்கு ஸகாத் கொடுக்க வேண்டும்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி 1483

செலவுகளை கவனத்தில் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜகாத் அளவை குறைத்துள்ளதால் நாம் குறைக்க முடியாது.

நபியவர்கள் காலத்தில் செலவினங்கள் குறைவாக இருந்தன; இன்றைய காலத்தில் செலவினங்கள் அதிகரித்துள்ளன; எனவே தற்போது செலவினங்களைக் கழித்து எஞ்சியதில் ஸகாத் கொடுக்க வேண்டும் என்று சிலர் கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

இது தவறான வாதமாகும். ஏனென்றால் இன்றைக்குச் செலவினங்கள் அதிகரித்திருப்பதுடன் பயிர்களின் விளைச்சலும் அதிகரித்துள்ளன. மேலும் குறுகிய காலத்தில் அறுவடை செய்யப்படுகின்றன. விளைச்சலை அதிகரிப்பதற்கு இன்றைக்குக் கையாளப்படும் நவீன யுக்திகள் நபியவர்கள் காலத்தில் இல்லை.

எனவே இன்றைக்கு ஆகும் செலவை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் கிடைக்கும் வருமானத்தையும் சேர்த்துக் கவனித்தால் செலவை மொத்த விளைச்சலில் கழிக்கக் கூடாது என்ற கருத்தே சரியானது என்பதை அறியலாம்.

மேலும் விளைச்சல் குறிப்பிட்ட அளவு இருந்தால் தான் அவற்றில் ஸகாத் கடமையாகும் என மார்க்கம் கூறுகின்றது. மார்க்கம் நிர்ணயித்துள்ள இந்த அளவை விடக் குறைவாக விளைச்சல் இருந்தால் அதில் ஸகாத் இல்லை.

1405حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يَزِيدَ أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ أَخْبَرَنَا الْأَوْزَاعِيُّ أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ أَنَّ عَمْرَو بْنَ يَحْيَى بْنِ عُمَارَةَ أَخْبَرَهُ عَنْ أَبِيهِ يَحْيَى بْنِ عُمَارَةَ بْنِ أَبِي الْحَسَنِ أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ صَدَقَةٌ وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ صَدَقَةٌ وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوْسُقٍ صَدَقَةٌ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் :

“ஐந்து ஊக்கியாவுக்குக் குறைந்த அளவு (வெள்ளியில்) ஸகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அவற்றில் ஸகாத் இல்லை. ஐந்து வஸக்குக்குக் குறைவான தானியத்தில் ஸகாத் இல்லை.

அறிவிப்பவர் : அபூஸயீத் (ரலி)

நூல் : புகாரி 1405

ஒரு வசக் என்பது தற்கால அளவீட்டின் படி 129 கிலோ கிராம் ஆகும். ஐந்து வஸக்குக்கு 645 கிலோ கிராம் ஆகும். இதை விட குறைவான விளைச்சலுக்கு ஜகாத் கடமை இல்லை.

எனவே விளைச்சலில் விவசாயத்துக்காக செலவிட்ட தொகையைக் கழிக்காமல் மொத்தத்திலிருந்து ஸகாத்தைக் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பதே சரியானது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account