254. பிறரது சுமையைச் சுமக்க முடியுமா?
கியாமத் நாளில் முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) என்று இவ்வசனங்களில் (16:25, 29:13) கூறப்படுகிறது.
ஆனால் ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்று 2:134, 2:141, 2:281, 2:286, 3:25, 3:161, 4:111, 6:31, 6:164, 7:39, 7:96, 9:82, 9:95, 10:8, 10:52, 17:15, 35:18, 39:7, 39:24, 39:48, 39:51, 40:17, 45:22, 52:21, 53:38, 74:38 ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
ஒருவர், மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட வசனம் இந்த அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்று கருத முடியாது.
ஏனெனில் ஒருவன் பிறரை வழிகெடுத்தால் வழிகெடுக்கப்பட்டவனின் சுமையைச் சுமந்து தான் ஆக வேண்டும். இது பிறர் பாவத்தைச் சுமப்பதல்ல. வழிகெடுத்த பாவத்தைச் சுமப்பது தான். எனவே ஒருவனின் சுமையை மற்றவன் சுமக்க மாட்டான் என்ற வசனங்களுக்கு இது முரணானதல்ல.
265வது குறிப்பையும் காண்க!
254. பிறரது சுமையைச் சுமக்க முடியுமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode